காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
பத்திரிகைச் செய்தி
06.08.2019
காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து, பள்ளி கல்லூரி, விடுதிகள் அனைத்தையும் மூடி, தகவல் தொடர்பை முற்றாக முடக்கி முழு ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அரசியல் சட்டப்பிரிவு 35A, 370 ஆகியவற்றை நீக்கி காஷ்மீர் மக்களின் எஞ்சி இருந்த உரிமைகளையும் பறித்திருக்கிறது மோடி அரசு.
காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதன் மாநிலத் தகுதியை ஒழித்து மத்திய அரசின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருப்பதன் மூலம் மோசமான விளைவுகளுக்கு வித்திட்டிருக்கிறது மோடி அரசு.
அரசியல் சட்டத்தை திருத்தியது சரியா? தவறா?, அதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்கிற விவாதத்தில் பொருளில்லை. 1947-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் நாள் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்கும், அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் இடையே ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தம்தான் இன்றளவும் செல்லத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் படி ராணுவம், வெளியுறவு, நாணயம், தகவல் தொடர்பு தவிர வேறு எது குறித்தும் காஷ்மீர் அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு எந்தச்சட்டமும் இயற்ற முடியாது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஐ.நா-வில் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத சிக்கலாக நீடிக்கிறது. ஐ.நா உட்பட எந்த நாடும் காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
1971-ல் நிகழ்ந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்குப் பின் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் (இந்திராகாந்தி – புட்டோ) இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனாலும் இரு நாடுகளுமே உள்நாட்டு பிரச்சினைகளைத் திசை திருப்ப காஷ்மீரை மையமாக வைத்து பகை உணர்வையும், போலி தேச வெறியையும் கிளப்பி வருகின்றன.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் சமரசத்திற்கே இடமில்லை எனப் பேசி வந்தது மோடி அரசு. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சமரசம் செய்து வைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டதை ட்ரம்ப் அம்பலப்படுத்தி விட்டார். இதனை மூடி மறைக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எனப் பேசப்படுவதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு பொருளாதார நிலை, முன் எப்போதும் கண்டிராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வாகன தயாரிப்புத்துறையில் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கட்டுமானத்துறையில் 8 லட்சம் கோடி முதலீடு முடங்கிக் கிடக்கிறது. பெரும் முதலாளிகள் தற்கொலை, நாட்டை விட்டு ஓடுவது என தொழில்துறை நிலை குலைந்து விட்டது. வரி பயங்கரவாதம் என கார்ப்பரேட் முதலாளிகளே அலறுகின்றனர்.
வருவாய் பற்றாக் குறையை ஈடுகட்ட ரயில்வே, விமான நிலையங்கள் சேலம் உருக்காலை ஆகியவற்றை தனியாருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாசிச பாஜக அரசு. ஆனாலும் வாங்குவாரில்லை. அகண்ட பாரதக் கனவோடு ஆட்டம் போடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக, காஷ்மீர் மக்களின் உரிமைகளை நசுக்குவதை வெறியோடு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த ஆக்கிரமிப்பை அரங்கேற்றியிருக்கிறது.
ஜி.எஸ்.டி, நீட், தேசிய கல்விக் கொள்கை, அணை பாதுகாப்பு மசோதா என மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்றவற்றை மேலும் கடுமையாக்கி பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது மோடி அரசு.
வருங்காலத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு 371 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் பறிபோகலாம். நாடு முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைப் பறிப்பு என்பது காஷ்மீர் மக்களின் பிரச்சனையோ, அல்லது இஸ்லாமிய சிறுபான்மையினரின் பிரச்சினையோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமான பிரச்சனை.
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மக்கள் விரோத பாசிச பாஜக கும்பலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரலெழுப்புவதோடு பாசிசத்தை வீழ்த்துவதற்கும் அணி திரளவேண்டும்.
1720 ஜனவரி மாதத்தில் லோ அதிகாரபூர்வமாக நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளரானார். அவர் நெடுங்காலமாகவே நாட்டின் நிதிப் பொறுப்பை கவனித்து வந்தார் என்பது உண்மையானது. ஆனால் இந்த நேரத்தில்தான் அவருடைய மாளிகையின் கீழ் நிலநடுக்கங்கள் ஏற்படுவது முதன் முதலாகத் தெரியவந்தது.
புதிய பங்குகளை விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டிய பெரும் பணங்களைக் கம்பெனி எப்படி முதலீடு செய்தது?
அதில் சிறு தொகை கப்பல்கள் வாங்குவதிலும் பண்டங்களிலும் செலவழிக்கப்பட்டது; பெரும் பகுதி தேசியக் கடன் பத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கியதன் மூலம் ஏராளமாக இருந்த மொத்த தேசியக் கடன் முழுவதையும் (2,000 மில்லியன் லிவர் வரை) கம்பெனியே சமாளித்தது. நிதித்துறையில் ஒழுங்கைக் கொண்டுவரப்போவதாக லோ உறுதி கூறினாரே, அது இதுதான் போலும். பங்குகளை மேலும் மேலும் வெளியிடுவது எப்படி முடிந்தது? லோவின் வங்கி மில்லியன் கணக்கில் புதிய நோட்டுகளை அச்சடித்து அவற்றைச் செலாவணியில் ஈடுபடுத்திய வண்ணமிருந்தது .
இந்த நிலை அதிக காலத்துக்கு நீடிக்க முடியாது. லோ இதைப் பார்க்க மறுத்தார்; ஆனால் அவருடைய எதிரிகள், அவர் கெட்டுப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் -இவர்களுடைய எண்ணிக்கை ஏராளம்- இதை முன்பே பார்த்தனர். ஊக வாணிகத்தில் ஈடுபட்டவர்களில் தொலை நோக்குடையவர்களும் இதை முன்பே பார்த்தனர். அவர்கள் தங்களிடமிருந்த பங்குகளையும் வங்கி நோட்டுகளையும் தள்ளிவிடப் பார்த்தது இயற்கையே. இதற்கு எதிர் நடவடிக்கையாக லோ பங்குகளுக்கு நிலையான விலை இருக்குமாறு பின்பலம் கொடுத்தார்; நோட்டுகளைக் கொடுத்து உலோகம் பெறுவதைக் கட்டுப்படுத்தினார். ஆனால் பங்குகளுக்குப் பின்பலம் கொடுப்பதற்குப் பணம் தேவைப்பட்டபடியால் அவர் மேலும் மேலும் நோட்டுகளை அச்சடித்தார். இந்த மாதங்களின் போது அவர் வெளியிட்ட எண்ணற்ற உத்தரவுகள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டதென்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன.
லோ போராடிக் கொண்டுதானிருந்தார், ஆனால் யுத்தம் தோல்வி அடைந்து வந்தது; அவருடைய அமைப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. 1720-ம் வருடத்தின் இலையுதிர் பருவத்தின் போதே நோட்டுகளின் மதிப்புக் குறைந்து பண வீக்க காலத்துக் காகிதப் பணமாகி விட்டன; இப்பொழுது அவற்றின் அறிவிக்கப்பட்ட மதிப்பில் கால் பங்கு வெள்ளியின் மதிப்பைக் கொண்டிருந்தன. எல்லாப் பண்டங்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பொது மக்களின் அதிருப்தி பெருகியது. நவம்பர் மாதத்தில் இந்த நோட்டுகள் சட்டபூர்வமான நாணயம் அல்ல என ஆயிற்று: லோவின் திட்டத்தை ஒழித்துக் கட்டுவது ஆரம்பமாகிவிட்டது .
ஜான் லோ
லோ கடைசிக் கட்டம் வரை உறுதியாகப் போராடினார். ஜூலை மாதத்தில் ஆத்திரமடைந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மதிப்பில்லாத நோட்டுகளுக்குப் பதிலாக சட்ட பூர்வமான நாணயத்தைக் கொடுக்குமாறு அவரை மிரட்டினார்கள். அவர் உயிர் தப்பியது ஆச்சரியமே. பொறுப்பு அரசரின் அரண்மனைக்குள் அவர் ஒளிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவர் களைத்துச் சோர்ந்துவிட்டாரென்றும் அவருக்கு வழக்கமான தன்னம்பிக்கையையும் நாகரிகப் பண்பையும் இழந்து விட்டாரென்றும் எல்லோரும் குறிப்பிட்டார்கள். அவருடைய நாடி நரம்புகள் வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.
லோவையும் பொறுப்பு அரசரையும் ஏளனம் செய்து பாட்டுக்களும் கற்பனைக் கதைகளும் கேலிச் சித்திரங்களும் பாரிஸ் நகரத்தில் சுற்றி வந்தன. பூர்போன் கோமகன் பங்கு ஊக வணிகத்தில் மட்டும் 25 மில்லியன் லிவர் லாபமடைந்ததாக வதந்தி; அவர் அவ்வளவு பணத்தையும் ஸ்திரமான பொருள்களில் முதலீடு செய்திருந்தார். அவர் லோவைப் பார்த்து இனி உமக்கு ஆபத்து ஏற்படாது; ஏனென்றால் பாரிஸ்வாசிகள் யாரை ஏளனம் செய்கிறார்களோ அவரைக் கொல்ல மாட்டார்கள் என்றாராம். ஆனால் லோ அப்படி நினைக்க முடியவில்லை. இதற்குக் காரணமும் இருந்தது. அமைச்சர் பொறுப்பிலிருந்து முன்பே விலக்கப்பட்டிருந்த போதிலும் பலமான பாதுகாப்பு இல்லாமல் அவர் வெளியே வருவதில்லை.
லோவை எப்பொழுதுமே எதிர்த்து வந்திருந்த பாரிஸ் நாடாளுமன்றம் லோவின் மீது விசாரணை நடைபெற வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரியது, பொறுப்பு அரசருடைய ஆலோசகர்கள் குறைந்த பட்சமாக லோவை பாஸ்டிலி சிறையில் கொஞ்ச காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். மக்களுடைய கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டுமானால் தனது அன்புக்குரிய நண்பரைக் கைவிட வேண்டும் என்பதை ஃபிலீப் உணரத் தொடங்கினார். லோ பிரான்சை விட்டுப் போக அனுமதித்தார்; அது அவர் கடைசியாகச் செய்த உதவி.
1720 டிசம்பரில் ஜான் லோ இரகசியமாக பிரஸ்ஸெல்ஸ் நகரத்துக்குத் தன் மகனோடு சென்றார்; அவர் மனைவி, மகள், சகோதரன் ஆகியோரைப் பாரிசிலேயே விட்டுவிட்டுப் போனார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுக் கடன் காரர்களுக்குக் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டன.
சமூகக் கருத்து நிலையில் லோவின் திட்டமும் அதன் வீழ்ச்சியும் எதைக் குறிக்கின்றன? இந்தப் பிரச்சினையைப் பற்றி சுமார் இருநூற்றைம்பது வருடங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.
18-ம் நூற்றாண்டில் பொதுவாக லோவைத் தீவிரமாகக் கண்டனம் செய்தார்கள். ஆனால் இதில் அறநெறியின் அடிப்படையில் ஒரு ஆணவமான போக்கு அதிகமாக இருந்ததே தவிர நிதானமான மதிப்பீடு இல்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் லூயீ பிளாங் (அவருடைய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு என்ற புத்தகத்தில்) மற்றும் அதே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட இதர சோஷலிஸ்டுகளும் லோ ”இழந்த பெயரை மீட்டுக் கொடுத்தார்கள்”; அவரை சோஷலிசத்தின் முன்னோடி என்று காட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். லோ தங்கத்தையும் வெள்ளியையும் “பணக் காரர்களின் பணம்” என்று கண்டித்தார்; ”ஏழைகளின் பணமான” காகிதப் பணத்தைக் கொண்டு செலாவணியை நடத்த விரும்பினார் என்று லுயீ பிளாங் கூறினார்.
எல்லாவற்றையும் கொண்டிருந்த வங்கி, வர்த்தக ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக லோ, கொலைகாரத்தனமான முதலாளித்துவப் போட்டிக்குப் பதிலாக சோஷலிசத்தின் இணைப்புக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார் என்று சொல்லப்படுகிறது. லோவின் பொருளாதார நடவடிக்கைகளில் சில உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் துன்பத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்று லூயீ பிளாங் விளக்குகிறார்.
இது உண்மையிலிருந்து ஓரளவுக்கு மாறானதாகும். லோ எந்த வடிவத்தில் இணைப்புக் கோட்பாட்டைக் கையாள முயன்றாரோ அது கலப்பற்ற முதலாளித்துவக் கோட்பாடாகும். அது முதலாளித்துவத்துக்கு எதிரிடையாக நிற்கவில்லை, ஆனால் சமூகத்தைச் செயலற்றுப் போகும் வகையில் தனிப் பகுதிகளாகப் பிரித்து சமூக மேனிலையாக்கத்தை இல்லாமற் செய்த நிலப்பிரபுத்துவத்துக்கு அது எதிரிடையாக நிற்கிறது. அவர் தன்னுடைய கம்பெனியின் எல்லாப் பங்குதாரர்களையும் வங்கியின் வாடிக்கையாளர்களையும் – பிரபுவையும் முதலாளியையும், கைவினைஞரையும் வணிகரையும் – ஒன்று சேர்த்துச் சமம் என்று ஆக்க விரும்பினார்; ஆனால் அவர்களை முதலாளிகளாகவே ஒன்று சேர்க்க விரும்பினார்.
லோ தன்னுடைய முறையின் மூலம் தயாரிப்பு வேலையைச் செய்தார்; பிற்காலத்தில் முதலாளித்துவம் இதை முழுமையாகச் சாதித்தது: சரித்திர ரீதியாகப் பார்க்கும் பொழுது, முதலாளி வர்க்கம் மிகப் புரட்சிகரமான ஒரு பாத்திரத்தை வகித்துச் செயலாற்றியிருக்கிறது.
”எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்தின் கை ஓங்கிற்றோ, அங்கெல்லாம் அது சகல நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழி உறவுகளுக்கும் சம்பிரதாய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. தன்னை ”இயற்கையாகவே மேம்பட்டவர்” என்போரிடம் மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த பல்வகை நிலப்பிரபுத்துவத் தளைகளை அது தயவு தாட்சணியமில்லாமல் அறுத்தெறிந்தது. அப்பட்டமான சுயநலத்தைத் தவிர, உணர்ச்சியற்ற “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர,” மனிதர்களுக்கிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் அது செய்துவிட்டது” (1) என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் எழுதியிருக்கின்றனர்.
புவாகில்பேர் அளவுக்குக் குறைவான அர்த்தத்தில் கூட லோ ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஆதரவாளராக இருக்கவில்லை. ருவான் நீதிபதி மக்களிடம், விவசாயிகளிடம் காட்டினாரே உண்மையான பரிவு, அதை லோவின் புத்தகங்களில் சிறிது கூடப் பார்க்க முடியாது. மேலும், வீர சாகஸக்காரர், சூதாடி, லாபவேட்டைக்காரர் என்ற வகையில் லோவின் இயல்புக்கு அது முற்றிலும் பொருந்தாததாகும்.
லோ பெரிய, பணக்கார முதலாளிகளின் நலன்களை எடுத்துரைத்தார், அவர்களின் தொழிலூக்கத் திறமையில் அவர் நம்பிக்கை வைத்தார். அதுவே அவருடைய கொள்கை. அவருடைய கம்பெனியின் பங்குகளைப் பெரிய முதலாளிகள் வாங்கியிருந்தார்கள்; அவர் கடைசி வரை அந்தப் பங்குகளைத் தூக்கிப் பிடித்தார். அவருடைய வங்கி வெளியிட்ட காகித நோட்டுகள் இன்னும் விரிவான அடிப்படையில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டிருந்தன; அந்த நோட்டுகளின் கதியை விதி எழுதியபடி விட்டுவிட்டார்.
அவருடைய திட்டமும் அதன் வீழ்ச்சியும் செல்வம், வருமானம் ஆகியவற்றைக் கணிசமான அளவுக்கு மறுவினியோகம் செய்தது. அது பிரபுக்களுடைய நிலையை ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அரித்து வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பண்ணைகளையும் மாளிகைகளையும் விற்று இந்த ஊக வாணிகத்தில் கலந்து கொண்டனர். பொறுப்பு அரசர் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முடியாட்சி, பிரபுக்கள் ஆகியோருடைய நிலையை பலவீனப்படுத்தின.
மறுபக்கத்தில், லோ நிதித்துறையில் செய்த மாயவித்தை நகரங்களிலிருந்த ஏழைகளை அதிகமாக பாதித்தது. விலைகள் அதிகரித்த பொழுது அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள், காகிதப் பணம் செல்லாது என அறிவித்த பொழுது கைவினைஞர்கள், சிறு கடைக்காரர்கள், வேலைக்காரர்கள் – விவசாயிகளும் கூட – சிறு தொகைகளாகக் கணிசமான அளவுக்குக் காகிதப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர்கள் இழந்தார்கள்.
லோவின் திட்டத்தினாலேற்பட்ட முக்கியமான சமூக விளைவு திடீர்ப் பணக்காரர்கள் முன்னுக்கு வந்ததாகும். இவர்கள் வரைமுறையற்ற ஊக வாணிகத்தின் மூலம் தாங்களுடைந்த செல்வத்தை எப்படியோ காப்பாற்றித் தக்கவைத்துக் கொண்டனர்.
லோ பாரிசை விட்டு ஓடிய பிறகு மேலும் எட்டு வருடங்கள் உயிரோடிருந்தார். அவர் ஏழையாகிவிட்டார். அதாவது பட்டினி கிடந்து மரணமடைகின்ற அளவுக்கு ஏழையல்ல; சொந்தத்தில் கோச் வண்டி வைத்துக்கொள்ள முடியாத ஏழையாக இருந்தார்; மாளிகையில் வசித்தவர் இப்பொழுது சிறு அறையொன்றில் வசித்தார். அவருக்குச் சொந்த நாடு இல்லை; ஆனால் அவர் எப்பொழுதுமே ஊர் ஊராகப் போய் நாடு கடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தவர். எனவே அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பிறகு அவர் தன்னுடைய மனைவியை (அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூற முடியாது) அல்லது மகளை மறுபடியும் சந்திக்க முடியவில்லை. அவர் பிரான்சிற்குள் நுழைய அனுமதி கிடையாது; அவர்கள் பிரான்சை விட்டுப் போகக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
முதலில் சில வருடகாலம் வரை, சீக்கிரமே பிரான்சுக்குத் திரும்ப முடியும், அங்கே தன்னுடைய நிலையைப் பற்றி விளக்கிக் கூறி தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். பொறுப்பு அரசருக்கு அடிக்கடி கடிதங்கள் அனுப்பினார்; இவற்றில் நடந்த எல்லாவற்றையும் பற்றித் திரும்பத் திரும்ப விளக்கினார்; தான் செய்தவை சரி என்று வாதாடினார். இந்தக் கடிதங்களிலும் அவருடைய பொருளாதாரக் கருத்துக்களின் சாராம்சம் பழைய விதமாகவே இருந்தது. இனிமேல் அதிகமான கவனத்தோடும் பொறுமையோடும் நடந்து கொள்வதாகச் சொன்னதுதான் அவற்றிலிருந்த வேறுபாடாகும்.
1723-ம் வருடத்தில் பொறுப்பு அரசராக இருந்த ஃபிலீப் திடீரென்று மரணமடைந்தார். தன்னுடைய பதவியையும் சொத்துக்களையும் திரும்பப் பெற முடியும் என்று லோ கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் உடனே வீழ்ச்சியடைந்தன. பொறுப்பு அரசர் அவருக்குக் கொடுக்கத் தொடங்கியிருந்த குறைவான ஓய்வூதியமும் நின்று விட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய பெயரைக் கூடக் கேட்பதற்கு விரும்பவில்லை. லோ இப்பொழுது லண்டனில் வசித்து வந்தார். ஆங்கில அரசாங்கம் அவரைப் போதுமான செல்வாக்கும் நுண்ணறிவுமுடையவராகக் கருதி அவரை இரகசியமான வேலைக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது. ஆஹென், மூனிக் ஆகிய ஜெர்மன் நகரங்களில் அவர் ஒரு வருட காலம் இருந்தார்.
ஒரு காலத்தில் மாபெரும் நிதித்துறை வல்லுநராக, எல்லா அதிகாரங்களுமுடைய அமைச்சராகத் திகழ்ந்த லோ. இப்பொழுது அந்தப் பெருமையின் நிழலுருவமாக மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய விவகாரங்களைப் பற்றி, தன்னைத் தற்காத்துக் கொண்டும் எதிரிகள் மீது குற்றம் சாட்டியும் எப்பொழுதும் தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தார், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் ஆட்களுக்குக் குறைச்சலில்லை.
அவர் காகிதத்தைத் தங்கமாக மாற்றக் கூடிய இரகசியம் தெரிந்தவர் என்று பலர் நினைத்தார்கள். அவர் முட்டாளல்ல, எனவே தம்முடைய திரண்ட செல்வத்தில் ஒரு பகுதியையாவது பிரான்சுக்கு வெளியே பத்திரப்படுத்தியிருப்பார் என்று இன்னும் பலர் நினைத்துக் கொண்டார்கள். அந்தப் பணம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தவர்களும் உண்டு. இவர்களைக் காட்டிலும் அதிகமான மூட நம்பிக்கை உள்ளவர்கள் அவரை ஒரு மந்திரவாதியென்றே நம்பினார்கள்.
லோ தன்னுடைய கடைசி வருடங்களை வெனிஸ் நகரத்தில் கழித்தார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தை சூதாட்டத்திலும் (அவரிடமிருந்த சூதாட்ட வெறியை மரணம்தான் குணப்படுத்தியது) இன்னும் ஏராளமாகத் தன்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பதிலும் பொறுப்பு அரசர் காலத்தில் நிதி விவகாரங்களின் வரலாறு என்ற பெரிய புத்தகத்தை எழுதுவதிலும் செலவிட்டார். பிற்காலத்தினருக்குத் தன்னுடைய நிலையை விளக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகுதான் அது முதன்முறையாக வெளியிடப்பட்டது.
புகழ் வாய்ந்த மொன்டெஸ்க்யூ ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் வந்தபொழுது 1728-ம் வருடத்தில் அவரைச் சந்தித்தார். லோ ஓரளவுக்கு முதுமையின் தளர்ச்சியை அடைந்துவிட்டதாக அவர் கருதினார். எனினும் தான் செய்தவை சரியானவை என்பதில் அவர் வெறிகொண்ட நம்பிக்கை வைத்திருந்ததோடு எப்பொழுதும் தன்னுடைய கருத்துக்களை ஆதரித்துப் பேசத் தயாராக இருந்தார் என்பதையும் கண்டார். ஜான் லோ 1729 மார்ச்சில் வெனிசில் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1)K. Marx, F, Engels, Selected Works, in three volumes, Vol. 1, Moscow, 1973, p. 111.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
மோடியின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், விவசாயிகள், தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், படித்து வேலைதேடும் இளைஞர்கள் என அனைவரும் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை சந்தித்தனர்.
இனி மோடி தலைகீழாய் நின்றாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஜனநாயகவாதிகள் பலரும் எண்ணியிருந்த நிலையில் சாதியக் கூட்டு, மதவெறிப் பேச்சுக்கள், புல்வாமா தாக்குதல், ஊடக – கார்ப்பரேட் ஆதரவு, தேர்தல் ஆணையத்தின் துணையோடு தேர்தல் விதிமீறல் என பல்வேறு வியூகங்களை திட்டமிட்டுச் செயல்படுத்தி, இந்தத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலைப் அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக.
தனது தேர்தல் வெற்றி உரையில் சம்பிரதாயப்படி நன்றி தெரிவித்து விட்டுப் போகாமல், மதச்சார்பின்மையை நேரடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் மோடி. அது மட்டுமல்லாமல், கார்ப்பரேட்டுகள்தான் இந்தியாவின் ஏழைகளைக் காக்க வந்த சேவகர்கள் என்றும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இனி வரப்போவது கார்ப்பரேட் காவிப் பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை முன்னறிவித்தார் மோடி.
முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் சுமார் ரூ. 4.3 லட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையாக அள்ளித்தந்த மோடி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்ற 100 நாட்களுக்குள் 46 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மற்றொரு புறத்தில் கார்ப்பரேட்டுகளின் இசைவோடு நாடெங்கும் மதவெறித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. ஜெய் ஸ்ரீராம் என முழங்கக் கூறி முசுலீம்களை நாடு முழுவதும் தாக்கத் தொடங்கியது காவிக் கும்பல். வழக்கம் போல கள்ளமவுனம் சாதித்தார் மோடி.
அதுபோக, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய் சிங், குரோவர், பேராசிரியர் ராம் புன்யானி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறது மோடி அரசு.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உகந்த வகையிலும், கார்ப்பரேட் கொள்ளைகளை சட்டப்பூர்வமாக்கும் வகையிலும், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம், மாநில உரிமைகள் பறிப்பு, தேசியக் கல்விக் கொள்கை எனப் பலவற்றையும் நாடாளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தால் சாதித்துக் கொண்டது பாஜக அரசு.
ஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
***
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
” போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்!
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்!
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது!
ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
ரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் “தொழிலாளர் சட்டம் ஒழிப்பு : கூட்டுப்பேர உரிமை, உயிர்வாழும் உரிமையும் பறிப்பு !” என்ற தலைப்பில் கடந்த 02.08.2019 அன்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனது தலைமையுரையில் “இரண்டாவது முறை ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் வெட்டி சுருக்கி 4 விதிமுறை தொகுப்புகளாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக (WAGE CODE BILL) சம்பளப்பட்டுவாடா சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சமவேலைக்கு சம ஊதிய சட்டம் 1976 ஆகியவற்றை உள்ளடக்கி ஊதிய மசோதா 2019 என்றும்.
(OCCUPATIONAL HEALTH, SAFETY AND WORKING CONDITION CODE 2019) தொழிற்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் 1995 உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கி பணியிட பாதுகாப்பு, உடல்நலன், சுகாதாரம் மற்றும் வேலைமுறைகள் குறித்த விதிமுறை தொகுப்பு என்ற பெயரில் இரண்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மக்களைவையில் 23.07.2019 தேதியில் நிறைவேற்றியுள்ளார்கள்.
மேற்கண்ட இரண்டு சட்ட மசோதாக்களும் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளையும் கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு பலியிடுகின்ற ‘திருப்பணியை’ மோடி, அமித்ஷா தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் நிறைவேற்றியுள்ளது. இதனை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராட வேண்டும்.” என கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் பேசும் போது:
“இரண்டு சட்ட மசோதாக்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான விதிகளை பட்டியலிட்டதுடன், காலனிய ஆதிக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் காலாவதியானது என்றும்; தொழிலை எளிமையாக்குவது என்றும்; புதிய தொழில் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும்; வேலைவாய்ப்பை பெருக்கவும் தான் இதை நிறைவேற்றுவதாக பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறது.
உண்மையில் மூலதனத்தின் லாபவேட்டைக்காக ஏட்டளவில் உள்ள சட்டங்களை கூட ஒழித்துக்கட்டி வருகிறது மோடி கும்பல், கடந்த ஆறு மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் தொழிற்பேட்டை பகுதியில் மட்டும் கடந்த மாதம் 20,000 பேர் வேலையிழந்துள்ளார்கள் என்றும், ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் தொழிற்சாலையில் 1,800 பேர் இந்த மாதத்தில் வேலையிழக்கும் அபாய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆட்டோமொபைல் தொழில் மட்டுமல்லாமல் அதற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் SRF, TPI போன்ற நிறுவனங்களும் தற்காலிக வேலைமுடக்கம் (LAY-OFF) அறிவித்துள்ளன.
இதன் மூலம் வரும் மாதங்களில் வேலைப்பறிப்பு, லேஆஃப் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏறக்குறைய 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, தொலைப்பேசி, மின்சாரம் மற்றும் உள்ளிட்ட 46 பொதுத்துறை நிறுவனங்களையும், ராணுவ தளவாட உற்பத்தியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆகவே ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரிகளாய் மாறிப்போன இந்த அரசு கட்டமைப்பை, கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.” இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற புரட்சிகர அமைப்புகளில் அணித்திரண்டு போராட வருமாறு அழைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 200 பேர் கலந்துக் கொண்டு விண்ணதிரும் முழக்கமிட்டனர். அப்பகுதி தொழிலாளர்களும், பாதசாரிகளும், சிறுகடை வணிகர்களும், வாகன ஓட்டிகளும் என மக்கள் ஆங்காங்கே நின்று நமது கருத்துக்களை கேட்டு ஆதரவளித்தனர். இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தோழர் மகேஷ்குமார் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்மேற்குமாவட்டம்
***
வேலூரிலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இதே முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூரில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்
***
கோவையில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்துகின்ற மத்திய அரசை கண்டித்து, துடியலூர் பேருந்து நிறுத்ததில், கடந்த 02.08.2019 அன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 of 2
கோவையில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோவையில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சமூக நீதி தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்கவே முடியாத சொல் இது. குறிப்பாக, பா.ஜ.க.வை எதிர்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுக்கட்சிகளுக்கு இந்தச் சொல்தான் பிரம்மாஸ்திரம். மண்டல் கமிசன் அமலாக்கத்திற்குப் பிறகு, கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக அரசியல் அரங்கில் இந்தச் சொல் வெகுவாகப் புழங்கி வந்தாலும், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பில் சமூக நீதி அரசியல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம் என்ன?
சமூக நீதி அரசியல், சாதி ஒழிப்புப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயும், அப்பிரிவுகளுக்குள் உள்ள உட்சாதிகளுக்கு இடையேயும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என நமக்கு உபதேசிக்கப்பட்டது. தேனொழுகக் கூறப்பட்ட இந்த அனுமானம் தோற்றுப்போய் விட்டதற்குத் தமிழகமே பெரும் சாட்சியமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கும் தீண்டாமைக் குற்றங்கள், தமிழகமும் வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகச் சமூக அநீதி கோலோச்சும் மாநிலம்தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
ஆதிக்கச் சாதிவெறியும் தீண்டாமை என்ற அருவருக்கத்தக்க உணர்வும் பிள்ளைப் பருவத்தைத் தாண்டாத சிறுவர்களிடமும் வேர் விட்டிருப்பதை எடுத்துக்காட்டிய சம்பவம் இசக்கி சங்கர் படுகொலை. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியரான இவரும், அதே பகுதியில் வசித்துவரும் “பிற்படுத்தப்பட்ட” சாதியைச் சேர்ந்த சத்யபாமா என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் திருமணத்திற்குப் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இசக்கி சங்கர் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தாமிரவருணி ஆற்றுக் கரையோரத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த மறுநாளே சத்யபாமாவும் இறந்து போனார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
சிறுவர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இசக்கி சங்கர். (கோப்புப் படம்)
இசக்கி சங்கர் படுகொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையையடுத்து சத்யபாமாவின் தம்பி ஐயப்பனும் அவனது ஐந்து நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். ஐயப்பனும், அவனது நண்பர்களும் பத்தாவது படித்துவரும் பதின்வயதைத் தாண்டாத பள்ளி மாணவர்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விடயம்.
இசக்கி சங்கர் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பினும், சத்யபாமாவின் அகால மரணத்திற்கு யாரும் குற்றவாளியாக்கப்படவில்லை. உண்மையில் அது தற்கொலைதானா? அப்படியே இருந்தாலும், சத்யபாமாவின் சாவு ஆணவப் படுகொலையின் இன்னொரு வடிவமல்லவா?
இசக்கி சங்கர் ஆணவப் படுகொலையைவிட அதிர்ச்சியூட்டக்கூடியது கனகராஜ் ஆணவப் படுகொலை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுமை தூக்கும் தொழிலாளியான கனகராஜை ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்தது, வேறு யாரோ அல்ல. அவரது சொந்த அண்ணன் வினோத்குமார்.
கனகராஜ், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணைக் காதலித்து வந்ததோடு, வினோத்குமாரின் எச்சரிக்கை, அச்சுறுத்தலையும் மீறி அப்பெண்ணோடு சேர்ந்த வாழத் தொடங்கியதுதான் இந்த ஆணவப் படுகொலைக்குப் பின்னுள்ள காரணம். வினோத்குமாரால் வெட்டப்பட்ட கனகராஜ் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்துவிட, துர்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்து போனார்.
இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்றாலும், சாதி அடுக்கில் தாழ்த்தப்பட்டவர். ஐயப்பனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இசக்கி சங்கரை வெட்டிப் படுகொலை செய்ய, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை.
வர்க்க நிலையில் வேறுபாடு இல்லாத கனகராஜ்-துர்கா தம்பதியினர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதற்கு சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அமைந்தது.
கனகராஜ் குடும்பத்திற்கும் துர்கா குடும்பத்திற்கும் வர்க்க நிலையில் எந்த வேறுபாடும் கிடையாது. சாதி அடுக்குதான் அக்குடும்பங்களை மேலே, கீழே எனப் பிரித்து வைத்திருக்கிறது. இந்த வேறுபாடைக் கடந்து வரமுடியாத அல்லது கடந்து வர விரும்பாத வினோத்குமார் தனது தம்பியையும் அவரது காதல் மனைவியையும் வெட்டிக் கொல்கிறார். சாதி இந்து மனோபாவம் என்பது வர்க்கத்தைக் காட்டிலும் சாதியையே முதன்மைப்படுத்திப் பார்க்கிறது என்பதை இப்படுகொலைகள் நிரூபிக்கின்றன.
கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்துள்ள கனகராஜ், துர்கா படுகொலைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ள “ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை 187- தொடுகிறது. ஆணவப் படுகொலைக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்கத் தனியாகச் சட்டமியற்ற வேண்டும்” எனச் சில ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், சமூக நீதிப் பேசப்படும் மாநிலமான தமிழகத்தில் இதுவரையிலும் அதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்படவில்லை. மேலும், வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போலத் “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளே நடப்பதில்லை” என்ற கேடுகெட்ட பொய்யைச் சட்டமன்றத்திலேயே துணிந்து சொன்னார், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., கவுண்டர், தேவர் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளின் கூடாரம் என்பதால், ஆணவப் படுகொலைகளை மறுக்கும் ஓ.பி.எஸ்.-இன் திமிர் வாதம் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல. மேலும், அக்கட்சியும், அ.தி.மு.க. அரசும் வெளிப்படையாகவே தீண்டாமை பாராட்டும் பிற்போக்குத்தனம் கொண்டவை என்பதை மதுரை எஸ்.வலையப்பட்டியில் நடந்த சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
அக்கிராமத்திலுள்ள சத்துணவுக் கூடத்தில் சமையல் செய்வதற்கும், சமையலுக்கு உதவுவதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டவுடனேயே, உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுத்தனர். சட்டப்படிப் பார்த்தால், இத்தீண்டாமைக் குற்றத்திற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக, அப்பெற்றோர்களை அழைத்து எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அரசோ அவ்விரு ஊழியர்களையும் பக்கத்து கிராமங்களுக்கு இடமாற்றம் செய்து, ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணத்தை ஈடேற்றிக் கொடுத்தது.
வலையப்பட்டி கிராம சத்துணவுக் கூடத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி (இடது) மற்றும் ஜோதிலெட்சுமி.
வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இந்து மதவெறிக் கும்பல் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
“தீண்டத்தகாதவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு ஆதிக்க சாதியினரைத் தீண்டிவிட்டது” என்ற அற்பமான காரணத்திற்காக, திருநெல்வேலி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் குரும்பபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் சுதாகரன், சுபாஷ். இவர்கள் இருவரும் திண்டுக்கல்- நத்தம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆதிக்க சாதியினர் ஓட்டிவந்த மற்றொரு இரு சக்கர வண்டியை முந்திச் சென்றார்கள் என்பதற்காக ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வம், பிரதீப் இருவரும் ஊர்ப் பொதுக்குளத்தில் குளித்துவிட்டு, குளத்துக்கு அருகே நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் முகம் பா ர்த்துத் தலை சீவியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் பொதுக் குளத்தில் குளித்ததோடு மட்டுமின்றி, ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான வண்டியின் கண்ணாடியில் முகம் பார்த்துத் தலை சீவிய குற்றத்திற்காக” அவ்விருவரும் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் பொது மைதானத்தில் கைப்பந்து விளையாடியதை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தடுத்ததையடுத்து, இரு சாதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் குச்சிப்பாளயம் தாழ்த்தப்பட்டோர் காலனிக்குள் புகுந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
*****
இத்தீண்டாமைக் குற்றங்களுள் இசக்கி சங்கர் படுகொலை தவிர்த்து, மற்றவையெல்லாம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடந்தவை. இவற்றுக்குத் தமிழக மக்களின் எதிர்வினை என்ன? ஈழப் பிரச்சினை, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணுக்கழிவு மையம், ஹைட்ரோ கார்பன் அகழாய்வுத் திட்டங்கள் போன்ற தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கருதும் தமிழக மக்கள், தீண்டாமைக் குற்றங்களைப் பெரும்பாலும் மௌனமாகவே கடந்து சென்றுவிடுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு தம் மீது உரசிவிட்டது என்பதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அசோக்.
பா.ஜ.க.- கும்பல் நாடு தழுவிய அளவில் தமது அரசியல் செல்வாக்கையும், அமைப்புப் பலத்தையும் அதிகரித்துவரும் வேளையில், தமிழக மக்கள் ஆதிக்க சாதிவெறித் -தீண்டாமை குறித்து மௌனம் காப்பது அபாயகரமானது.
சமூக நீதி பேசும் திராவிடக் கட்சிகள்கூட இச்சம்பவங்களைக் கண்டித்து அறிக்கைவிடுவதற்கு அப்பால், எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடுவது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதற்கு அப்பால் சென்றால், சாதி இந்துக்களின் ஓட்டுக்களை இழந்துவிடுவோம் என்ற அச்சம் மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளின் தலைமை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிடியில் இருப்பதால், அக்கட்சிகள் தமது இயல்பிலேயே தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்துக் காத்திரமான எதிர்வினையாற்றுவதை விரும்புவதில்லை.
அதேசமயம், தமிழகத்தில் இயங்கிவரும் ஆதிக்க சாதி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வெடிக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சாதி மோதலாக மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் முயலுகின்றன. தனிநபர் பிரச்சினைகளைக்கூட தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டிவிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகின்றன. குறிப்பாக, பா.ம.க. இராமதாசு எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிடும் வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார்.
நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்த ராதிகா என்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை பிரேம்குமார் என்ற இளைஞன் ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பா.ம.க. இராமதாசோ, பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன், ராதிகா வன்னிய சாதியைச் சேர்ந்த பெண் என்ற முகாந்திரத்தை வைத்துக்கொண்டு, இத்தனிநபர் பிரச்சினையை வன்னிய,- தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயான பிரச்சினையாக மாற்றும் தீயநோக்கில் அறிக்கை வெளியிட்டார்.
ஆதிக்க சாதியினர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற காரணத்திற்காகத் தாக்கப்பட்ட சுதாகரன் மற்றும் சுபாஷ்.
நெய்வேலி விவகாரத்தைவிடக் கேடுகெட்ட, வக்கிரமான பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் சாதியை இராமதாசோ, வேறு சாதி அமைப்புகளோ ஆராயவில்லை. காரணம், குற்றவாளிகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தனிநபர் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் குற்றமிழைத்தவர் தாழ்த்தப்பட்டவராக இருந்துவிட்டால், அதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்மமாகவும் சாதி மோதலாகவும் ஊதிப் பெருக்குவதற்கு இராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கட்சி மற்றும் சங்கத் தலைவர்கள் முயலுவதை இளவரசன் திவ்யா, சுவாதி விவகாரங்களில் தொடங்கித் தொடர்ச்சியாகத் தமிழகம் கண்டுவருகிறது.
*****
இந்து மதவெறி அமைப்புகள் தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற முடியாது எனப் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அதேசமயம், தமிழகத்தில் ஊருக்கு ஊர் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் காலூன்றி வருவதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு கடந்து போகிறோம். இந்து மதவெறி அமைப்புகளும் சாதிச் சங்கங்களும் வெளித் தோற்றத்தில்தான் வெவ்வேறானவை. ஆனால், சாதி சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பது என்ற இழை அவை இரண்டையும், ஈருடல் ஓர் உயிர் என்றவாறு பிணைத்தே வைத்திருக்கிறது.
சாதி சமூகக் கட்டமைப்பு இல்லாமல் இந்து மதம் இல்லை என்பதால், இந்து மதவெறியும் ஆதிக்கச் சாதிவெறியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைகின்றன. ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்பதை உ.பி. மாநிலத்தில் நடந்த முசாஃபர் நகர் கலவரத்தில் கண்டோம்.
அங்கே ஜாட் சாதியினர் மத்தியில் முசுலீம்களுக்கு எதிராக இந்து மதவெறியைத் தூண்டிவிட, ஜாட் சாதி பெண்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். முசுலீம் இளைஞர்கள் ஜாட் சாதிப் பெண்களைக் காதலிப்பது போல நடித்து, அவர்களை மதம் மாற்றுவதாகவும்; ஜாட் சாதியினர் தமது கௌவரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முசுலீம்களின் இந்த “லவ் ஜிகாத்” பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் எனப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்து முசாஃபர் நகர் கலவரத்தை நடத்தியது பா.ஜ.க.
பா.ம.க. இராமதாசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிட நாடகக் காதல் என்ற அவதூறைக் கட்டமைத்து வருகிறாரே, அதனின் இன்னொரு வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் லவ் ஜிகாத்.
தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே காணப்படும் சாதி உணர்வை, ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டியது ஜோதி – சோலைராஜா தம்பதியினர் ஆணவப் படுகொலை.
பசுக் குண்டர்கள் முசுலீம்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களையும் தமது இலக்காக வைத்துத் தாக்கியதை குஜராத் மாநிலம் -உனா நகரில் கண்டோம். தமிழகத்தின் பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பா.ம.க. நடத்திய கலவரத்தில் இந்து முன்னணியும் பங்கெடுத்தது. இவையெல்லாம் இந்து மதவெறிக்கும் ஆதிக்க சாதிவெறிக்கும் இடையேயான பிணைப்பு ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் காலக் கூட்டணி போல் அல்லாமல், வலுவான இயற்கையான கூட்டணியாகும் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த இயற்கையான கூட்டணி ஒருபுறமிருக்க, கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல்வேறு தாழ்த்தப்பட்ட கட்சிகள், சங்கங்களின் தலைவர்கள் பிழைப்புவாத நோக்கில் ஆர்.எஸ்.எஸ். காலடியில் வீழ்ந்துகிடக்கும் அரசியல் அசிங்கங்களும் காணக் கிடைக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியதை அளவுகோலாகக் கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க. ஒருக்காலும் காலூன்ற முடியாது என முடிவுரை எழுதிவிட முடியாது. இன்றில்லாவிட்டால் நாளை பா.ஜ.க. தமிழகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான வாய்ப்பைச் சாதிக் கட்டமைப்பும், சுயசாதி உணர்வும் வழங்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழகத்தின் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகளில் இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட பா.ஜ.க.- கூட்டணி, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததற்கு, வி.சி.க.வேட்பாளர் திருமாவளவனுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்கள் முனைவாக்கம் செய்யப்பட்டதுதான் காரணமாகும். மேலும், சுயசாதி உணர்வும், பெருமையும் தாழ்த்தப்பட்டவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதை சோலைராஜா- இணையர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எடுத்துக் காட்டுகிறது.
வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததற்குக் காரணம் , அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட சாதி முனைவாக்கம்.
தமிழகத்தில் இன்று நிலவும் பா.ஜ.க. மீதான வெறுப்பும் எதிர்ப்பும் பார்ப்பன எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எதிர்ப்பு என்ற அடிப்படைகளைக் கொண்டுதான் எழுந்து நிற்கிறது. அதேபொழுதில் மோடி அரசின் இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளான மாட்டுக் கறித் தடை, பசுக் குண்டர்கள் முசுலீம்கள் -தாழ்த்தப்பட்டோர் மீது நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். உயிர் நாடியான சாதிக் கட்டமைப்புக்கு எதிராகவும் தமிழக மக்கள் மத்தியில் காத்திரமான பிரச்சாரமோ அணி திரட்டலோ நடைபெறவில்லை.
ஒன்றுக்குக் கீழ் ஒன்று எனச் செங்குத்தான அடுக்குகளைக் கொண்டதுதான் சாதிக் கட்டமைப்பு என்பதால், சாதிகளுக்குள் சமத்துவத்தையோ நல்லிணக்கத்தையோ ஒருக்காலும் உருவாக்க முடியாது. மேலும், சமூக நீதி அரசியல் பா.ஜ.க.விடம் தோற்றுப் போய்விட்டதை நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டிவிட்டன.
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, விதவிதமான சாதிக் கூட்டணிகளை அமைத்தே சமூக நீதிக் கட்சிகளைத் தோற்கடித்துவிட்டது, பா.ஜ.க.
எனவே, ஆர்.எஸ்.எஸ். அதன் தொங்குதசைகளான சாதி அமைப்புகள், கட்சிகளையும் வீழ்த்த வேண்டுமென்றால் வர்க்க அரசியலை முன்னெடுப்பதுதான் ஒரே மாற்று.
தமிழகத்தை நாசமாக்கக்கூடிய பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டும் அதே சமயம், சுயசாதி உணர்வு, ஆதிக்க சாதிப் பெருமை, தீண்டாமை, மதவெறி-குறிப்பாக இந்து மதவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்களை அரசியல்ரீதியில் அணிதிரட்ட வேண்டும்.
இத்தகைய போராட்டங்களின் வழியாக சாதி, மதவெறிக்கு எதிரான ஜனநாயக உணர்வைத் தமிழக மக்களிடம் நாம் வளர்த்தெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகமும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் வேட்டைக்காடாக மாறிவிடும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு-வின் வெளியீடு !
2019-தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மோடி அரசு வெளியிட்டு கருத்துக்கேட்டு வருகிறது. இதுவே ஒரு நாடகம். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் மத்தியில் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் 100 நாட்களில் கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் செய்யப்போகிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஏற்கனவே, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டு ஜூன் 30-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்கள்.
தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், கால அவகாசத்தை ஜூலை-31 என்றும், அடுத்து 15 நாட்கள் நீட்டித்தும் அறிவித்து இருக்கிறார்கள். 484 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டால் எப்படி அனைத்து மக்களும் கருத்து சொல்ல முடியும்? யாரும் சொல்ல வேண்டாம் என்பதுதான் அவர்கள் எண்ணம்.
இது ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா- அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது.
அதன்பின் 2014-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ் சுரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-இல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.
அதுமட்டுமல்ல, இப்போது இந்த அறிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மத்திய பட்ஜெட்டில் அதில் உள்ள சில பரிந்துரைகளை குறிப்பாக, ‘இந்தியாவில் படியுங்கள் திட்டம்’, ‘தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் நாட்டு மக்களிடம் கருத்துக்கேட்டுத்தான் முடிவெடுக்கப்படப்போவதைப் போல் பேசுகிறார்கள். இது ஒரு நயவஞ்சக நாடகம். இதற்கு யாரும் பலியாகக் கூடாது. இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல, கார்ப்பரேட்டுகள், காவிகள் நலனுக்கான கல்விக் கொள்கை.
பல்தேசிய இனங்களின் மொழி, இனம், கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதப் பண்பாட்டை புகுத்தி, இந்து – இந்தி – இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.
இன்னொரு பக்கம் பலலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டுரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு –வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.
இந்த வரைவு அறிக்கை வெளிவந்தவுடன் அதற்கெதிராக பொதுக்கல்விக்கான ஒருங்கினைப்பு குழு நடத்திய கூட்டத்தில் பல்வேறு கல்வியாளர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பை கொடுத்து உதவிய பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புகுழு-வுக்கும், கல்வியாளர்களுக்கும் எமது நன்றி.
பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய்மொழிவழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.
போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். படியுங்கள்! பரப்புங்கள்! நன்றி!
வெளியீடு விவரம் :மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ?
விலை : ரூபாய் 25/-
வெளியீடு சென்னையில் கிடைக்குமிடம்:
எண்: 7, மாதா கோவில் நகர்,
முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 95.
தொடர்புக்கு : 9445112675.
பிற ஊர்களுக்கு :
கடலூர் : 97888 08110
திருச்சி : 99431 76246
மதுரை : 82200 60452
நெல்லை : 99448 99190
தருமபுரி : 63845 69228
கரூர் : 96298 86351
தோழமையுடன் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
மருத்துவத்துறையை முழுவதும் கார்ப்பரேட் – காவி மயமாக்கும் நோக்கில், இந்திய மருத்துவ ஆணையத்தைக் (MCI) கலைத்துவிட்டு மோடி அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் (NMC), நெக்ஸ்ட் தேர்வு (NEXT), இணைப்பு படிப்பு (BRIDGE COURSE) ஆகியவற்றை எதிர்த்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, தஞ்சை, திருவாரூர், தேனி, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர்.
மருத்துவத்துறையை முழுவதும் தனியார்மயமாக்கும் GATS ஒப்பந்தத்தின் படி மத்திய அரசு விரும்பும் மாற்றங்களைச் செய்ய MCI என்ற தன்னாட்சி அமைப்பு தடையாக உள்ளது. அதைக் கலைத்துவிட்டு நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய NMC என்ற அமைப்பை நிறுவுவதற்கான மசோதாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக (02-08-19) நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.
இந்திய மருத்துவ ஆணையம் ஊழல் மிகுந்த அமைப்பாக மாறிவிட்டதாம்; அதைப் போக்க, மாற்று அமைப்பைக் கொண்டுவருகிறார்களாம். இதையேதான் UGC -யைக் கலைப்பது முதற்கொண்டு அனைத்துத் தனியார்மய நடவடிக்கைகளிலும் கூறிவருகிறார்கள். ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் உள்ள ஊழல் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் காரணம்காட்டி தாங்கள் கொண்டுவரும் தனியார்மயத்துக்கு ஆதரவான சீர்திருத்தங்களைச் சரியென மக்களை நம்பவைப்பதைப் பாசிஸ்டுகள் ஒரு போக்காவே கடைபிடிக்கிறார்கள்.
MCI மொத்தம் 130 பேரைக் கொண்டது. அதில் 2/3 பங்கு பேர் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள். 8 பேர்தான் மத்திய அரசினால் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள். ஆனால், இப்போது புதிதாக அமையவுள்ள NMC மொத்தமே 25 பேரைக் கொண்டது. இதில் 80% பேர் மத்திய அரசின் நேரடி நியமன உறுப்பினர்கள். மாநில அரசுகளின் சார்பில் 6 பேர் மட்டுமே சுழற்சி முறையில் (அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை) பங்கேற்க முடியும். மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் மத்திய அரசு தான் விரும்பும் மாற்றங்களைச் செய்துகொள்ளும். இந்திய அரசியல் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் கழிவறைக் காகிதமாகக் கூட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் கருதவில்லை.
மேலும், மத்திய அரசு நேரடியாக நியமிக்கும் இந்த 14 பேரும் யார்..யார்? எந்த அடிப்படையில் அவர்களை நியமிப்போம் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர்கள் RSS ‘விஞ்ஞானிகளாகவும்’ கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகளாகவும்தான் இருக்கமுடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இதன்மூலம் மருத்துவத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் நேரடியாக கார்ப்பரேட்டுகள் காவிகளின் பிடியில் சிக்கிக்கொள்ளவிருக்கிறது. அவர்கள் தங்கள் விருப்பம்போல சந்தைக்கேற்ப பாடத்திட்டங்கள், விதிமுறைகள் முதற்கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பார்கள்.
மதுரை மருத்துவக்கல்லூரி மணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)
தனியார் தர நிர்ணய நிறுவனங்கள் கூறும் ஆய்வின்படி MARB என்ற புதிய அமைப்பு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கும். இதன்மூலம் சட்டவிரோதமாக இயங்கிவரும் SVS இரக மருத்துவக் கல்லூரிகள் நாளை சட்டப்பூர்வமாகும். மேலும், மருத்துவக் கல்லூரிகளே சீட்டுகளைத் தங்கள் விருப்பம்போல உயர்த்திக்கொள்ளலாம். 50% நிர்வாக (Management) சீட்டுகளுக்கு தாங்கள் விருப்பம்போலக் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். பட்டமேற்படிப்புப் (PG) படிப்புகளை கல்லூரிகளே தங்கள் விருப்பம்போல துவங்கி நடத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் கூறுவதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத பகற் கொள்ளையையும் ஊழலையும் சட்ட பூர்வமாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி கார்ப்பரேட்டுகள் தங்கள் இஷ்டம்போல மருத்துவத்துறையைச் சூறையாட வழிவகை செய்கிறது இம்மசோதா.
மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் குறைகள் மற்றும் தவறுகளுக்கு “அங்கீகாரத்தை இரத்து செய்வது” என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தகைய தவறாயினும் அதற்கு ஈடாக அபராதம் செலுத்தினால் போதும். இதுதான் இனி அதிகபட்ச தண்டனை.
மதுரை மருத்துவக்கல்லூரி மணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)
மருத்துவம் படித்த மாணவர்கள் ஏற்கனவே உள்ள முறைப்படி 4½ ஆண்டுகள் படிப்பும் ஓராண்டு மருத்துவராகப் பயிற்சியும் பெற வேண்டும். இம்மசோதாவின்படி இனி பட்டம் பெற வேண்டுமானால் “நெக்ஸ்ட்” (NEXT) என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இதை MBBS மாணவர்கள் மட்டுமின்றி பல்மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவத்துறைகளிலும் புகுத்துகிறார்கள். “மருத்துவத்தின் தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் இதைக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே “தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் +2 முடித்தவர்களுக்கு நீட் என்ற தேசிய அளவிலான தேர்வை நடத்தி நாடு முழுவதும் உள்ள ஏழைகள் / கிராமப்புற மக்களின் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் நுழைவதைத் தடுத்துநிறுத்தியது மோடி அரசு. இப்போது அதையும் தாண்டிப் படிக்க வருபவர்களை வடிகட்டி வெளியே எறியும் முயற்சியே இது. மருத்துவம் படிக்கும் ஏராளமான மாணவர்களின் கனவு இதன்மூலம் தகர்க்கப்படவிருக்கிறது. “சூத்திரனுக்குக் கல்வியில்லை என்ற பார்ப்பன நீதியும் காசில்லாதவனுக்குக் கல்வியில்லை என்ற கார்ப்பரேட்டு நீதியும்” ஒருங்கே இணைந்து ஏழைகளை மருத்துவப் படிப்பிலிருந்து வடிகட்டித் தள்ளவிருக்கிறது.
“ஆப்ஜெக்டிவ் முறையில் கொண்டுவரப்படவிருக்கும் நெக்ஸ்ட் தேர்வானது இவர்கள் சொல்வதுபோல தரத்தை உயர்த்தாது. மாறாக தாழ்த்தும். மருத்துவப் படிப்பில் செயல்முறைப் (Practical) படிப்புதான் முக்கியமானது. நோயாளிகளைத் தொட்டு சிகிச்சையளிப்பதில் மாணவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இனிமேல் முதலாமாண்டிலிருந்தே நெக்ஸ்ட் தேர்வுக்காகவே படிக்க மாணவர்கள் பழக்கப்படுத்தப்படுவர். செயல்முறை அறிவு துளியும் இல்லாமல் போகும். நெக்ஸ்ட் முறை அமல்படுத்தப்பட்டால் ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைவதோடு மருத்துவர்களாக வெளிவருபவர்களும் செயல்முறை அறிவற்றவர்களாகவே இருப்பார்கள்” என்கிறார்கள் மாணவர்கள்.
நவீன மருத்துவத்துக்கு முடிவு கட்டும் சதியை முறியடிப்போம். என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கான மாநில மருத்துவர்கள்.
இப்படி சாதாரணமானவர்கள் படித்து வரமுடியாது. கோச்சிங் செண்டரில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்க முடியக்கூடிய மாணவர்களே நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் அப்படி வெல்பவர்கள் நிச்சயமாக மருத்துவத்தை சேவையாகக் கருத மாட்டார்கள். மாறாக முதலீடாகவே கருதுவார்கள். இப்படி இலாபச் சிந்தனையோடு வெளிவரும் மருத்துவர்களால் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வரும் பெயரளவிலான மருத்துவமும் இல்லாமல் போகும்.
மசோதாவின் பிரிவு 32-வின்படி எம்.பி.பி.ஸ் படிக்காத, அலோபதி முறையில் மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவு இல்லாத ஆயுர்வேதா, சித்தா, யுனானி (AYUSH, LAB TECHNICIANS, BLOOD SAMPLE COLLECTORS) படித்தவர்களை கிராமப்புற மக்களின் மருத்துவ சேவைக்காக அனுப்பிவைப்போம் என்கிறது மோடி அரசு. அவர்களைக் கொண்டு கிராமப்புற மக்களைப் பாதுகாக்கிறார்களாம். பணமில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்களைத் தேவையற்றவர்கள் என்று பார்க்கும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பார்வையும் பார்ப்பனியத்தின் பார்வையுமே இணையும் புள்ளியே இது. இதன் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் போதிய மருத்துவமனைகளை உருவாக்கவோ மருத்துவர்களை நிரப்பவோ செய்யாமல் மருத்துவ சேவையை முற்றாகக் கைகழுவிவிடுவதுதான் அரசின் நோக்கம். இதற்காக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்பு செய்வதன் மூலம் இவர்களை 25,000 -க்கும் குறைவான ஊதியத்தில் பணிக்கு அமர்த்தப் போகிறார்கள். இனி மெல்லமெல்ல கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஒப்படைக்கப்போகிறார்கள்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மானவர்கள் நடத்திய போராட்டம் – கோப்புப் படம்.
இணைப்புப் படிப்பு (Bridge Course) மூலம் மேற்கண்ட மருத்துவத்துறைகளில் படித்த மாணவர்கள் MBBS படித்துப் பட்டம் பெற முடியும் என்கிறது மசோதா. இதன் மூலம் அந்தத் துறைகளில் (ஆயுர்வேதா, சித்தா, யுனானி, நர்ஸிங், பல் மருத்துவம்) இனி நிரந்தரமாக யாரையும் நியமிக்கப் போவதில்லை என்பதே இதன் பொருள். ஏற்கனவே பல்மருத்துவம், நர்ஸிங் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காண்ட்ராக்ட் முறையில் வெறும் 11 மாதப்பணிக்குத்தான் எடுத்துவருகிறார்கள். 11 மாதங்கள் கழித்து அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவர்கள் நிரந்தரப் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இன்றைய நிலையே இப்படி இருக்கையில் இணைப்புப் படிப்பைக் (Bridge Course) கொண்டுவருவதன் மூலம் மலிவான உழைப்புச் சந்தையில் MBBS படித்தவர்கள் கிடைப்பார்கள். அவர்களும் நாளை காண்ட்ராக்ட் முறையில் மாற்றப்படுவார்கள்.
இந்த தேர்வில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பணியாற்றலாம். இதனால் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும். இந்திய மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவில்லாத மருத்துவர்களை இது உருவாக்கும்.
இவற்றையெல்லாம் எதிர்த்துதான்,
NMC யைத் திரும்பப் பெறு!
நெக்ஸ்ட் தேர்வை இரத்து செய்!
இணைப்புப் படிப்பை இரத்து செய்!
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தைப் பறிக்காதே!
என்ற முழக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இது ஏதோ போராடுகிற மாணவர்களின் பிரச்சனையோ மருத்துவத்துறை சார்ந்தவர்களின் பிரச்சனையோ மட்டுமல்ல. நம் அனைவரின் பிரச்சனை. மருத்துவத்துறையை கார்ப்பரேட்டுகள் முற்றாக சூறையாட வழிவகுத்திருப்பதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்துவந்த பெயரளவிலான மருத்துவமும் நாளை இல்லாமல் போகும். இந்த அநீதியான NMC-யை எதிர்த்து போராடும் மாணவர்களுடன் நாமும் களத்தில் இறங்குவோம்!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ மானவர்கள் நடத்திய போராட்டம் :
அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுக’ இயக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான இச்சிறுநூல், வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் எவ்விதம் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளன, அவை தமது நெருக்கடியை அரசாங்கத்தின் மீது திணித்து, தம்மை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் எப்படி மக்களைத் தெருவுக்கு விரட்டப்படுகின்றன, மக்களின் வரிப்பணத்தில் பெரும் பகுதியை எப்படி அபகரித்துக் கொண்டு மக்களை ஓட்டாண்டி ஆக்குகின்றன என்பதை விளக்குகிறது.
கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும் எங்கெல்சும் எழுதி 165 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாறுதல் எந்தக் கட்டத்தில் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மார்க்சியத்தைப் பயில வேண்டியுள்ளது. பயில்வது என்பது பகிர்ந்து கொள்வதிலும் பயிற்றுவிப்பதிலும் அடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முதலாளிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள முதலாளிய நெருக்கடி மார்க்சை நோக்கி பலரின் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த நெருக்கடி வெறும் உற்பத்தித் துறை சார்ந்த, அதிகப்படியான உற்பத்தி தொடர்பான நெருக்கடி மட்டுமில்லை. நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான இலாபவெறியும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உலகமயமாக்கலுமே இதற்கு முக்கியமான காரணமாகும். உற்பத்தித் துறையின் மூலதனத்திற்கும் அதன் இலாப விகிதத்திற்கும் (விதிவிலக்காக, இயற்கை வளங்கள் சார்ந்த உற்பத்தித் துறை உள்ளது கவனத்திற்குரியது) இன்று உள்ள இடைவெளி / தொடர்பு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். முதலாளிய அமைப்பின் தவிர்க்க முடியாத ‘போட்டி’ முறை என்பது உற்பத்தித் துறையின் இலாபத்தைக் குறைத்துள்ளது. ஆனாலும் மக்களின் உழைப்பின் மூலம் தொடர்ந்து உருவாகும் / இலாபத்தை எந்தத் துறை கைப்பற்றுகிறது என்பது முக்கியமானதாகும்.
பல கோடி மதிப்பிலான நிரந்தர மூலதனத்தை உடைய உற்பத்தித்துறை ஒருபுறம்; சில இலட்சங்கள் மட்டுமே தேவைப்படும் சேவைத் துறைகள் (வங்கிகள், கணிணித்துறை போன்றவை) மற்றொரு புறம், இவை இரண்டிலும் உருவாகும் உபரி இலாப விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது இன்றுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முக்கியமானதாகும்.
அப்படிப்பார்த்தால்தான் கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு, நடுத்தர, குறுமுதலாளிகள்) – முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை, தங்களின் உபரியை, சேமிப்பை, உழைப்பை இழந்தது எவரிடம் என்பது தெரியவரும். வங்கிகள்தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதும், நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி என்பதும் புரிய வரும்.
அத்தகைய கொள்ளையின் அடுத்தகட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்காவில் நடந்த வங்கிகளின் வீழ்ச்சி (?) யைப் புரிந்து கொள்வது அவசியம். வால்ஸ்டிரீட் கொள்ளையர்களின் சதியை, ஆட்சியாளர்களின் பங்கை அம்பலப்படுத்தும் Inside Job என்னும் சிறந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியான நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறினாலும் கொள்ளையடிக்கப் போவது யார் என்பதைப் புரிந்து கொள்ள இச்சிறு நூல் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)
நிதி மூலதனத்தின் செயல்பாடுகளில் வங்கிகள் செலுத்தும் ஆதிக்கம் மிகப்பெரியதாகும். தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை இங்குள்ள தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளை விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அதன் விளைவாக இந்தியா அந்நிய வங்கிகளின் வேட்டைக்காடாக மாறும். உலகின் ஆகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவின் மக்களே இந்த வங்கிகளின் செயல்பாடுகளால் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றால், ஏற்கனவே பெரும்பான்மை மக்கள் தெருவில் வாழும் நிலையில் உள்ள இந்தியா என்ன ஆகும் என்றே தெரியவில்லை.
இந்த அபாய மணியை ஒலிக்கும் பணியை அமெரிக்காவின் சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி தனது சிறு வெளியீட்டின் மூலம் ஆற்றியுள்ளது. (மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து)
வங்கிகளைக் கைப்பற்றுவது அல்லது பறிமுதல் செய்வது என்ற நோக்கம் நேர்மையானது. தனி நபரின் வங்கி வைப்பு நிதிகளைப் பறிமுதல் செய்வது அதில் அடங்காது.
அனைத்துப் பெருங்குழுமங்களையும் போல, வங்கிகளும் மனிதர்கள் அல்ல. அவை தாள்களில் இருக்கும் உருப்படிகள். அவை இருப்பதற்குச் சட்டங்களும் சமுதாயமும் அனுமதிக்கிற ஒரே காரணத்தால் தான் அவை இருக்கின்றன. அவற்றுக்கு உள்ளார்ந்த அல்லது அப்புறப்படுத்தப்பட முடியாத உரிமைகள் எவையும் இல்லை, அவை நிலவுவதற்கான உரிமை கூட இல்லை.
நவீனப் பொருளாதாரத்தின் அத்தகைய முக்கியமான நெம்புகோல் ஏன் பெரும் பணக்காரர்களின் கரங்களில் இருக்கவேண்டும்? அளவற்ற லாபங்களையும், வரலாற்றின் மோசமான பேரரசர்களிடமும் மன்னர்களிடமும் இருந்ததை விட மிகப்பெரிய செல்வங்களையும் ஒரே அடியாகக் குவித்துக் கொள்வதற்கு விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில வங்கிகளை அனுமதிக்கிற ஒரு அமைப்பு முறையை நாம் ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்?
இன்று, ஒரு விழுக்காட்டினரின் செல்வங்களை அதிகபட்சமாக்குவதற்கு வங்கிகள் இருந்து வருகின்றன. வங்கிச் செயல்பாட்டு முறை சமுதாயத்தின் 100 விழுக்காடு மக்களின் நல்வாழ்வை அதிகபட்சமாக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கிகளுக்கு உரிமை இல்லை என்பதால் தவறொன்றும் இல்லை, உண்மையில், வங்கிச் செயல்பாட்டைக் கைப்பற்றி, அதை மக்களின் ஜனநாயக ரீதியான கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில், பரந்த பெரும்பான்மையினருக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பயன்கள் இருக்கின்றன.
வங்கியாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களுக்கான பெரும் லாபங்களைத் திரட்டும் முயற்சியில் தங்களுடைய மோசடி, வாழல், மட்டும் குற்றச் செயல்கள் மூலம் பொருளாதாரத்தை அழித்தனர்.
வங்கிகளின் பேராசை மற்றும் முதலாளித்துவத்தின் நெருக்கடியின் காரணமாகப் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்தனர். வேலையில்லாதோர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு விழுக்காட்டின் அதிகாரத்தினாலும், வங்கி முறையிலிருந்தும், மொத்தப் பொருளாதாரத்திலிருந்தும் லாபமடைதல் காரணமாக அவர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள்.
இன்று, ஒரு கோடி குடும்பங்களுக்கும் மேலாகத் தங்களுடைய வீடுகளை அடமானக் கைப்பற்றல்களில் இழந்து விட்டார்கள், அல்லது இழந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் வங்கிகளுக்கு அவர்களால் அடமானத் தவணைத் தொகையை வட்டியுடன் முறையாகச் செலுத்த முடியாத போது, அதே வங்கிகளால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
கல்லூரிப் பட்டதாரிகள் பல லட்சக்கணக்கானோர் அவர்களுடைய கல்விக் கடனைக் கட்ட முடியவில்லை, ஏனென்றால் வங்கியாளர்களின் செயல்களால் அவர்கள் நல்ல வேலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வங்கியாளர்கள் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். மாணவர் கல்விக் கடன் மொத்தம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் ஆகும், இது வங்கியாளர்களுக்கு அநீதியான இலாபத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.42-43)
நூல் : அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும் ஆசிரியர் (ஆங்கிலம்) : ரிச்சர்ட் பேக்கர் தமிழாக்கம் : நிழல்வண்ணன்
வெளியீடு : விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம்-அஞ்., கோவை – 641 015. தொலைபேசி எண் : 0422 – 2576772, 9789457941. மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 15
நீண்ட இடைவேளை. நாங்கள் உலாவத் தயாராகின்றோம்.
பள்ளிக்கு அருகே ஒரு பூங்கா உள்ளது. சாலையைக் கடக்கக் கூடத் தேவையில்லை. அங்கே ஓடியாடி விளையாடலாம், தூய காற்றை சுவாசிக்கலாம். நீண்ட இடைவேளை வரும் போதெல்லாம் நாங்கள் இங்கு செல்வோம், அற்புதமாக உலாவுவோம்.
நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள். சிலர் எறும்பும் புற்றை கவனித்துக் கொண்டிருப்பார்கள்; சிலர் மரக் கிளைகள், இலைகளைச் சேகரிப்பார்கள், சிறுமிகள் ஸ்கிப்பிங் கயிற்றை எடுத்து வந்து, களைப்பின்றி குதித்துக் கொண்டிருப்பார்கள்; இது என்ன?”, “ஏன்”, “நீங்கள் என்ன புத்தகத்தைப் படிக்கின்றீர்கள்?” என்று சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். நான் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பேன், என் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்ள முயலுவேன். – இன்றும் பூங்காவில் சுவாரசியமாக இருக்குமென நம்புகிறேன். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சிலர் கண்டிப்பாக எறும்புப் புற்றைக் கவனிப்பார்கள். ஆச்சரியக் குரல்கள் என் காதுகளை எட்டும்.
“பாருங்கள், இவை எப்படி வேகமாக ஓடுகின்றன?”
“இதோ… இந்த எறும்பு… எவ்வளவு பெரிய இரையை எடுத்துச் செல்கிறது!”
இவையெல்லாம் ஒரே கோட்டில் முன்னும் பின்னுமாகச் செல்வதைப் பார்த்தீர்களா!”
“இவை எங்கே போகின்றன என்று தேடுவோமா!”
“அவை மரத்தின் மீது ஏறுகின்றன!”
“இவை ஒன்றையொன்று சந்திக்கும் போது, நின்று, தம் தலைப்பகுதியை அசைப்பதைக் கவனித்தீர்களா!”
“இவை இப்படித் தான் முகமன் கூறிக்கொள்கின்றன!”
“இரை எங்குள்ளது என்று இவை ஒன்றிற்கொன்று சொல்லிக் கொள்கின்றன.”
“இவற்றால் பேச முடியாது!”
“இல்லை, முடியும்!”
“உனக்கு அவை பேசுவது கேட்கிறதா?”
“கேட்கவில்லை அதனால் என்ன… அவை தலையால் பேசுவது தெரிகிறதே!”
”தலையால் எப்படிப் பேச முடியும்!”
“ஏன், நன்றாக முடியுமே!”
“இதோ ஷல்வா அலெக்சாந்தரவிச்சைக் கேட்போம், அவர் சொல்வார்.”
இந்த விவாதம் ஒரே இரைச்சலாக இருக்கும். எறும்புகளுக்கு மொழி உண்டா எனும் பிரச்சினைக்குத் தீர்வு காண குழந்தைகள் என்னிடம் வருவார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதாவது தெரிந்திருந்தால் நல்லது… இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று நான் யோசித்திருக்க வேண்டும்!” என்று நான் எண்ணுவேன்.
இம்முறை தீர்வு கண்டாகி விட்டது. “யார், என்ன” எனும் கலைக்களஞ்சியத்தை நாளை கண்டிப்பாக எடுத்து வந்து எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையை வாசிப்பதாக உறுதியளிப்பது சிறந்ததாயிருக்கும். “எறும்புகளின் வாழ்க்கை ஒரு சுவாரசியமான விஷயம் தெரியுமா, குழந்தைகளே! பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? சரி, உங்களுக்கு இவ்வளவு ஆர்வமிருப்பதால் நாளை நான் அந்தக் கட்டுரையைப் படிப்பேன், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்!”
சாஷா, மாயா அல்லது தேயா, நான் என்ன புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கண்டிப்பாகக் கேட்பார்கள், குலிவேர் பயணம் பற்றிய இந்நூலின் மீது குழந்தைகளுக்கு ஆர்வமேற்படுவதற்காக இதை பூங்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். லிலிபுட் என்ற குள்ளர்களின் நாட்டிலும், அசுரர்கள் நாட்டிலும் மற்ற கற்பனை நாடுகளிலும் குலிவேரின் வீர சாகசங்களைப் பற்றியும் இந்நாடுகளில் உள்ள மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் இதில் எழுதப்பட்டுள்ளதாக நான் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வேன்.
திடீரென யாராவது ஒரு சிறுவன் ஓடி வந்து “நாங்கள் ஒரு ஆமையைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று முழுக் குரலில் அறிவித்தால் இப்பேச்சு தடைப்படும்.
குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து துள்ளி எழுந்து இதை நோக்கி ஓடுவார்கள். விரைவிலேயே இரைச்சலிட்டுக் கொண்டு திரும்பி வருவார்கள்:
“பத்திரமாகப் பிடி!”
“பயப்படாதே, கடிக்காது!”
“சிறிய ஆமையா?”
“நம்மோடு ஆமையை எடுத்துச் செல்லலாம்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன். நாங்கள் ஆமையோடு பள்ளிக்குத் திரும்பி வருவோம்.
பூங்காவில் நாங்கள் உலாவும் இந்த 30 நிமிடங்களில் இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். எனவே தான் நானும் குழந்தைகளும் நீண்ட இடைவேளைகளை விரும்புகின்றோம்….
“தயாரா?” நாங்கள் மாடியிலிருந்து இறங்கி பள்ளி முற்றத்திற்கு வந்து பூங்காவை நோக்கி புறப்படுகிறோம். ஆனால் திடீரென…
“நில்லுங்கள்!” கோத்தே தனியாக வருகிறான், அவனருகே அவனுடைய நண்பனைக் காணோம்.
அவர்கள் சேர்ந்தல்லவா வந்து கொண்டிருந்தார்கள்.
அவன் நம்முடன் அல்லவா இருந்தான்? சிறுவன் எங்கே?
“கோத்தே, எங்கே அவன்?”
“அவனை ஒரு மாமா கூட்டிச் சென்று விட்டார்.”
“எந்த மாமா?”
“தெரியாது… உயரமாயிருந்தார்…”
“எப்போது?”
“நாம் படியில் இறங்கி வந்த போது!”
நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள்.
மற்ற குழந்தைகளும் பார்த்திருக்கின்றனர்: உயரமான ஒருவர் சிறுவனை நெருங்கி “என்னோடு போகலாம் வா” என்றார். அவர் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே கூட்டிச் சென்றார்.
யார் சிறுவனைக் கூட்டிச் சென்றிருக்க முடியும்? ஏன் அவர் என்னிடம் செல்லவில்லை? நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வேளை அவர்கள் அங்கு தாழ்வாரத்திலேயே தங்கி விட்டார்களோ, சிறுவன் இப்போது இறங்கி வந்து விடுவானோ?
“கோத்தே, மேலே ஏறிச் சென்று வகுப்பறையில் அவனைத் தேடு. நாங்கள் அவனுக்காகக் காத்திருப்பதைச் சொல்.”
கோத்தே விரைவாகத் திரும்பி வந்து அங்கு யாருமில்லை என்று சொன்னான்.”
ஆம், ஏதோ நடந்து விட்டது. அந்த “உயரமான மாமா” வேறொரு வாசல் வழியே வெளியேறியிருக்க வேண்டுமென்பது தெளிவு. அப்படியெனில், அவர் உண்மையிலேயே எனக்குச் சொல்லாமல் சிறுவனைக் கூட்டிச் செல்ல விரும்பியிருக்கின்றார்.
“குழந்தைகளே, இங்கேயே நில்லுங்கள்… நான் இதோ வருகிறேன்!…”
அவர்களைப் பிடிக்கும் பொருட்டு வேறு வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். அவர்கள் ஏற்கெனவே வீதியில் இருக்கின்றனர். சிறுவன் முரண்டு பிடிக்கிறான், பெரியவரோ கார் கதவைத் திறந்து “சீக்கிரமாக உட்கார், நமக்குத் தாமதமாகிறது” என்று குழந்தையைப் பார்த்து அதிகாரத் தொனியில் கூறுகிறார்.
“பொறுங்கள்!” என்று காரை நோக்கி விரைந்தபடியே நான் கத்துகிறேன்.
அந்த நபரோ ஏதோ என் குரலையே கேட்காதது! போல் அவசர அவசரமாகக் காரில் உட்காருகிறார். இப்படிப்பட்டவர்களின் கார் இயந்திரங்கள் உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்காதது எவ்வளவு நல்லது!
“ர்ர்ர்…” என்று என்ஜின் சத்தமிடுகிறது. இந்த நொடிப்பொழுதில் நான் காரை நெருங்குகிறேன்.
“உடனே குழந்தையை வெளியே விடுங்கள், நீங்களும் காரை விட்டு வெளியே வாருங்கள்.”
“வணக்கம்!” என்கிறார் அந்நபர். “ஏன் கோபப்படுகின்றீர்கள்? எனக்கு விருப்பமான போது என் மகனைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்ல முடியாதா என்ன!”
“இல்லை, முடியாது, காரை விட்டு வெளியே வாருங்கள்.”
“எங்களுக்கு அவசர வேலையுள்ளது, எங்களுக்குத் தாமதமாகிறது!” – பிள்ளைப் பாசமுள்ள தந்தைக்கு கோபம் வருகிறது.
“எனக்கு இப்போதுள்ள வேலையை விட அவசரமான வேலை இருக்க முடியாது. காரை விட்டு வெளியே வாருங்கள்!”
சிறுவன் கதவைத் திறந்து, காரிலிருந்து குதித்து என்னை நோக்கி ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான்.
“சரி பையா, நான் வகுப்புகள் முடிந்ததும் வந்து உன்னைக் கூட்டிச் செல்வேன்” என்று பாசமுள்ள தந்தை சொல்கிறார். அச்சிறுவனின் கைகள் நடுங்குவதை நான் நன்கு உணருகிறேன்.
“இல்லை, நீங்களும் வெளியே வாருங்கள், என்ன நடந்தது என்று பேசுவோம்.”
“பேச என்ன இருக்கிறது! நான் தந்தை, அவன் என் மகன்! அவசரமான ஒரு தனிப்பட்ட காரியத்திற்கு அவனைக் கூட்டிச் செல்ல விரும்பினேன். தனிப்பட்ட விஷயங்களே இருக்க முடியாதா என்ன! நீங்கள் எனக்கு இடையூறு செய்கின்றீர்கள், இன்னும் பேச வேறு வேண்டுமா!”
“காரை விட்டு வெளியே வாருங்கள், பள்ளி இயக்குநரிடம் செல்வோம்.”
வேறு வழியில்லை என்பது ஒருவழியாக பாசமுள்ள தந்தைக்கு புரிந்தது. அவர் காரை விட்டு வெளியே வந்து ரகசியக் குரலில் விளக்க முற்படுகிறார்:
“இன்று சிறுவனின் விதி முடிவு செய்யப்படுகிறது, புரிந்து கொள்ளுங்கள்.”
“பள்ளி இயக்குநரிடம் போகலாம் வாருங்கள்…”
“எதற்கு பள்ளி இயக்குநரிடம்?…”
“வேண்டும்! நீ நண்பர்களிடம் ஓடு, அவர்கள் பள்ளி முற்றத்தில் காத்திருக்கின்றனர்.”
சிறுவன் ஓடுகிறான். தந்தையைத் திரும்பிப் பாராமல் ஓடுவதிலிருந்து அவனுக்கு மகிழ்ச்சி எனத் தெரிகிறது.
பள்ளி இயக்குநரின் அறையில், என்ன நடந்தது என்று பேச நாங்கள் முற்படுகிறோம்.
பாசமுள்ள தந்தை ஏன் ஆசிரியருக்குத் தெரியாமல் தன் மகனைக் கூட்டிச் சென்றார்?
ஏன் அவர் தன் மகனை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்? ஏன் சிறுவன் தன் அன்புத் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை?
தன் மனைவியிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெறும் தந்தைக்கு யாருடைய விதியில் – தன் விதியிலா, தன் மகனின் விதியிலா – பெரும் அக்கறையிருக்கிறது?
ஏன் அவர் மகனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார்?
வழக்கு எப்போது ஆரம்பமாகப் போகிறது? மூன்று மணி நேரம் கழித்தா? அது வரை அவர் குழந்தையுடன் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்?
இப்பாசமுள்ள தந்தை தன் ஆறு வயது மகனை அச்சுறுத்தி, நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த விரும்பினாரோ?
தன் வகுப்பு குழந்தை காணவில்லை என்று ஆசிரியருக்குத் தெரிய வந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்பது இந்தப் பாசமுள்ள தந்தைக்கு, அதுவும் உயர்கல்விக்கூட ஆசிரியருக்கு விளங்கவில்லையா? மகனைக் கூப்பிடத் தாய் வந்தால் அவரிடம் ஆசிரியர் என்ன சொல்வார்?
ஆம், இதைப் பற்றியெல்லாம் உயர்கல்விக்கூட மேலாளருக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.
சரி, இப்போது போய் வாருங்கள். எங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தந்தையர்கள் பல்வேறு விதமானவர்கள், இவர்களில் சிலரிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது நன்கு புரிகிறது.
இப்படிப்பட்ட தந்தைக்கு நம் பாடங்கள், நாம் உலாவுவதன் மீது என்ன அக்கறை? நம் மகிழ்ச்சிகள், இன்ப துன்பங்கள் மீது என்ன அக்கறை? கோச்சா இன்று பூங்காவில் ஆமையைக் கண்டெடுக்காவிடில் இவருக்கு என்ன? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றி அங்கு பேசாவிடில் இவருக்கென்ன கவலை? புதிய நாடுகளைப் பற்றிய குலிவேரின் கதையைக் குழந்தைகள் கேட்காவிடில் இவருக்கென்ன கவலை? அடுத்த பாடங்களைச் சரிவர நடத்துவதே சந்தேகமாயிருக்கும் அளவிற்கு ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டிருப்பது குறித்து இப்படிப்பட்ட தந்தைக்குக் கவலையா என்ன?
நான் குழந்தைகளிடம் திரும்பி வருகிறேன். நான் வருவேன், சுவாரசியமாக உலாவலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் 30 நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.
“சிறுவனே, கெட்ட விஷயத்திலிருந்து நான் உன்னைக் காப்பாற்றினேனா? உனது துக்கம் பெரியது! இதனால் தான் உன் கண்கள் அவ்வளவு சோகமாக உள்ளனவா, நமது மினி-பாடவேளைகளில் எதைப் பற்றியோ அடிக்கடி சிந்தனையில் மூழ்குகின்றாயோ? “கவனக் குறைவானவன், மறதி மிக்கவன்” என்று உன்னைப் பற்றி என் நாட்குறிப்பில் எழுதினேன். இன்றுதான் எனது கவனக் குறைவு புரிந்தது. என்னை தயவு செய்து மன்னித்து விடு.”
“ஓ!” என்று என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் கத்தினார்கள் குழந்தைகள். கலைந்து நின்றவர்கள் மீண்டும் ஒழுங்காக நிற்க, “பூங்காவை நோக்கிச் செல்கிறோம்!” என்கின்றனர்.
ஆம், இப்போது மினி-பாடவேளைகளை நடத்த முடியாது. விரைவிலேயே இவற்றை ஈடு கட்ட நேரம் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது இவர்களைப் பூங்காவிற்கு அழைத்து செல்வேன். ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே ஆமையைக் கண்டு பிடிப்பார்களோ?
மும்பையை சேர்ந்த பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் கலந்து கொண்ட ஓர் அரங்கக் கூட்டம் சென்னையில் கடந்த 03-08-2019 அன்று நடைபெற்றது. “மதவாத தேசியம்” என்னும் தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ராம் புனியானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் குஜராத் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இந்துத்துவ கும்பலை அம்பலப்படுத்தியதில் முன்னிலையில் இருந்த ஓர் அறிவுஜீவி. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அவர் தொடர்ச்சியாக எழுதியும், செயல்பட்டும் வந்துள்ளார். அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.
மதவாதத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் communal என்ற வார்த்தையின் வேர்ச்சொல் community (சமுதாயம்) என்பதை நினைவுபடுத்திய பேராசிரியர் அவர்கள், அது communal ஆகும் போது குறிப்பிட்ட சில சமூகங்களை வேறுபடுத்துவது தொடங்குகிறது என்றார். தேசம் என்பது தொழில்மயமாக்கம், தொடர்பாடல் ஆகியவற்றோடு தொடர்புடையது; அந்த வகையில் ஒரு தேச உருவாக்கத்தை பற்றி தலைவர்கள் பேசிய போது ‘நாம் காலகாலமாக ஒரு தேசமாக இருந்து வருகிறோம்’ என்று ஆர்.எஸ்.எஸ் பேசியது. ஆர்.எஸ்.எஸ்.-ன் தேசியம், பழமை வழிபாடு என்றார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயர் ஆண்களை மட்டுமே குறிப்பது; பெண்களுக்கான ராஷ்ட்ரிய சேவிகா சமிதியில் அகம்பாவத்துடன் ஒலிக்கும் ‘தான்’ (ஸ்வயம்) என்ற வார்த்தை இல்லை. ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்பும் சமூக அமைப்பில் பெண்களின் அவல நிலையை குறிப்பிட்டார். Lynching என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான இந்தி சொல் இல்லை; நமது கலாச்சாரத்தில் அது ஆர்.எஸ்.எஸ். -ன் பாதிப்புக்கு பிறகு வந்தது. Lynching ஒரு காலத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமை என்றார்.
ஒரு கணக்கெடுப்பின் படி கடந்த பத்து வருட கால அளவில் 2014 -க்கு பிறகுதான் 90 சதவீத கும்பல் வன்முறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; 14 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்; பிற சதவீதத்தினர் தலித்கள் என்று குறிப்பிட்டார். ஜெ.என்.யூ.-வை நிந்திக்கும் இவர்களுக்கு அதன் பெருமை தெரியாது. அங்கு பல நேரங்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர்களால் உடனே பதில் சொல்லிவிட முடியாது. ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; நாளை சொல்கிறேன்’ என்று கூறுமளவுக்கு மாணவர்கள் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் அது மாசு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. வறுமை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும் என்ற கன்னையா குமாரின் முழக்கம் இந்தியாவிலிருந்து விடுதலை என்பதாக திரிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ் என்ற பார்வை சற்று மேலோட்டமானது தான்; பிறப்பின் அடிப்படையிலான அசமத்துவதை கட்டமைப்பதே அவர்கள் திட்டம். பேராசிரியர் ராம் புனியானி பேசியவை பெரும்பாலும் நாம் ஏற்கனவே அறிந்த தகவல்கள்தான் என்றாலும் ஒரு மெல்லிய பகடி இழையோட, பார்வையாளர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு ஒரு ஆசிரியத்தன்மையில் எளிய ஆங்கிலத்தில் அவர் உரை அமைந்தது சிறப்பு.
தமிழகம் பாலைவனச்சோலையாக இருப்பதை பேச்சினிடையே குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் பணிகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார். உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் அவரிடம் ஒரு கசப்பு வெளிப்பட்டது. பகத்சிங், மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்று அவர் பேசினாலும் அடிநாதமாக ஒரு தோல்வி மனப்பான்மையையும், விட்டுக் கொடுப்பையும் உணர முடிந்தது. அந்த உணர்வு பரவுவது நல்லதல்ல. அவரை தேற்ற கேள்வி — பதில் நிகழ்ச்சியின் போது பார்வையாளர் ஒருவர் பேச வேண்டியதாக இருந்தது. டில்லியில் கும்பல் வன்முறையில் கொல்லப்பட இருந்த ஓர் முஸ்லிம் இளைஞனை ஓர் பெண்மணி தனது காரை நிறுத்தி சத்தம் போட்டு பாசிஸ்ட்களை பின்வாங்க செய்ததை அந்த பார்வையாளர் பதிவு செய்தார். இந்த அணுகுமுறை ஒரு மோசமான சூழலுக்கு முக்கியமானது.
பாசிச ஆபத்தை உள்ளது உள்ளபடியே நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்தான். அதே நேரம் சில பற்றுக்கோடுகளை நாம் — அது கற்பனையாக இருந்தாலும் கூட — ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. அது நம்மைச் சோர்ந்து போகாமல் செயல்பட வைக்கும்; நமது படகை செலுத்தும் துடுப்பு போன்றது.
“Enemy at the Gates” திரைப்படத்தில் ஓர் ஆடு மேய்ப்பன் தற்செயலாக ராணுவ வீரனாகி மறைந்து தாக்கும் போர்க்கலையில் திறம்பட செயல்பட்டு நாஜி ராணுவ தளபதிகளை ஒவ்வொருவராக அழித்து ஸ்டாலின்கிராட் வீழ்ச்சியை தடுப்பான். ஒரு கட்டத்தில் அவனை வைத்து ஸ்டாலின் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முனையும் போது தன்னால் அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்ய முடியாது என்று பின்வாங்க நினைப்பான். ஆனால் தொடர்ந்து கட்சி நம்பிக்கையை அளித்து அவனை செயல்பட தூண்டும். இறுதியில் எதிர்பார்த்த பலனை அது கொடுக்கும்.
எழுத்தாளர் அருந்ததி ராய் ஒரு பேட்டியில் கூறும்போது இந்து மதம் பற்றி அண்ணல் அம்பேத்கர் முன்பு கூறியதை கூட நம்மால் இன்று கூற முடியவில்லை. பொதுவெளியில் சற்று கவனத்துடன் பேச வேண்டிய அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கலாகாது என்று எச்சரிக்கை செய்கிறார். வடஇந்திய சூழல் எந்த வகையிலும் ஆறுதல் அளிக்கக் கூடியதில்லைதான். அதற்காக போராட்ட உணர்வை கைவிடுவது தீர்வாகாது. உளவியலாளர்கள் மொழியில் அச்சம் நாம் பெற வேண்டிய தைரியத்தின் மன உரமாக இருக்க வேண்டும். (Fear should be the father of courage.)
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்குப் போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்துப் பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது.
நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல. சினிமாவில் பார்த்ததுதான். ஆகையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று ஐயம் இருந்தது. மிகச் சாதாரண உடையில் மேக்கப் கூட இல்லாமல் இருந்தார். வரவேற்க வந்தவர்களும், இன்னும் ஏர்போட்டில் கண்டவர்களுமாக அவரைச் சூழ்ந்துவிட்டார்கள். அவருக்கு எழுபது பிராயம் என்று நம்பமுடிகிறதா, ஆனாலும் அவரைச் சுற்றி ஓர் ஒளி வீசியது. அவருக்கு கிடைத்த ‘உலக நாட்டியப் பேரொளி’ பட்டம் சரியானதுதான் என்று அந்தக் கணத்தில் எனக்கு உறுதியானது.
என் நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி என் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.
பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உலகத்திலேயே அகலமான 401 அதிவேக சாலையில், ஏர்போர்ட்டில் இருந்து இருபது மைல் தூரத்திலும், என் வீட்டில் இருந்து ஐம்பது மைல் தூரத்திலும் கார் பயணிக்கும்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. வெளியே பனிகொட்டுகிறது. அந்தப் பனிப் புதையலில் கார் சறுக்கியபடி அப்பவும் வேகம் குறையாமல் நகர்கிறது.
பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’
இதுதான் கேள்வி. மூடத்தனத்துக்கு சமமான பிடிவாதத்துடனும், பிடிவாதத்துக்கு சற்று கூடிய வெகுளித்தனத்துடனும் ஓர் ஐம்பது வயது அம்மையார் இந்தக் கேள்வியைக் கேட்டார். பத்மினி என்னைப் பார்க்கிறார் பிறகு கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார் பதில் பேசவில்லை. அந்தக் கேள்வியும் நாலு பக்கமும் கண்ணாடி ஏற்றிய காருக்குள் ஒரு வட்டம் சுற்றிவிட்டு கீழே விழுந்துவிடுகிறது. பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்கிறார்கள்.
இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? ஆனால் நான் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர் போல காணப்பட்டார்.
சிவாஜியை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் அவர் கண்களில் ஒரு சிறு மின்னல் புகுந்துவிடுவதை நான் கவனித்திருந்தேன். நீங்கள் சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா என்றார் ஒருவர்.
சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன், எம்.ஆர். ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு பார்ட்டே இல்லை. ஆனால் மேடையில் பின்னால் நின்று உதவி செய்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது என்னுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை ஒப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது, அவருக்கும் தெரியாது, நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பது.
அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. எட்டு மணிக்கு சூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துவிடுவார். நாங்கள் வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக ‘என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா?’ என்பார்.
ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலாக அசைந்துவரும் போது ‘என்னம்மா துணி காயவைக்கிறாயா?’ என்று கிண்டலடித்து, அந்த காட்சியை திருப்பி திருப்பி எடுக்க வைத்துவிடுவார். காதல் பாடல் வேளையின் போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பித் திரும்பிக்தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை’ என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா ரொம்ப நாழியாச்சு இருமி, ஒரு சிகரட் இருந்தாக் குடு’ என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். அடுத்ததாக அழுகை சீன் இருந்தால் வெகு கஷ்டம்தான்.
பத்மினியுடைய முதல் படம் மணமகள், என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்தது. அதில் மூன்று சகோதரிகளும் நடித்திருந்தார்கள். நான் அப்பொழுது போர்டிங்கில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார்கள். எப்படியும் பத்மினியை பார்த்துவிட வேண்டும் என்ற வெறி என்னிடம் பிறந்தது. என்னுடன் படித்த ‘சண்’ என்ற சண்முகரத்தினம் இந்த சதிக்கு உடன்படுவதாகக் கூறினான்.
சண் மெலிந்து போய், முதுகு தோள் எலும்புகள் பின்னுக்குத் தள்ள, நெடுப்பாக இருப்பான். திங்கள் காலை போட்ட உடுப்பை வெள்ளி இரவுதான் கழற்றுவான். ஒருநாள் இரவு களவாக செக்கண்ட் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் கேட் ஏறிப் பாய்ந்து அவனுடன் புறப்பட்டேன். அந்தப் படத்தில் பத்மினியின் அழகும், ஆட்டமும் நெருக்கமானது. ஓர் இடத்தில் கூந்தல் வழியாக என்னை மாத்திரம் பார்த்துச் சிரிப்பார். அதற்குப் பின்னர் எங்களுக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் ‘செறி எயிற்று அரிவை’ என்று சொல்லும் போதெல்லாம் பத்மினியின் நெருங்கிய பற்கள் என் கண் முன்னே தோன்றி இடர் செய்யும்.
திரும்பும்போது பஸ் தவறிவிட்டது. 12 மைல் தூரத்தையும் நடந்தே கடந்தோம். மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களை குறுக்கறுத்து, நட்சத்திரங்கள் வழிகாட்ட, சண் முன்னே நடந்தான். அங்குசக்காரன் போல நான் பின்னே தொடர்ந்தேன். வானத்திலே நட்சத்திரங்கள் இவ்வளவு கூட்டமாக இருக்கும்போது உற்சாகத்துக்கு குறைவேது. ‘தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ’ என்று சண் பெருங்குரல் எடுத்துப் பாடினான். சில தெரு நாய்கள் எங்களைத் திரும்பிப் பார்த்ததுமல்லாமல் எங்கள் பயணத்தை இன்னும் துரிதப்படுத்தின.
திரும்பி வந்த போதும் கேட் பூட்டியபடியே கிடந்தது. அதை வார்டனோ காவல்காரனோ, வேறு யாரோ ஞாபக மறதியாக எங்களுக்காகத் திறந்து வைத்திருக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு பௌதிகம் படிப்பித்த ஜோஸப் மாஸ்டர்தான் வார்டன். பெருவிரல்கள் மாத்திரம் தெரியும் பாதி சப்பாத்து அணிந்திருப்பார். மிகவும் கண்டிப்பானவர். கேட்ஏறி இருவரும் ‘தொம் தொம்’ என்று குதித்தோம். அன்று வார்டனிடம் பிடிபட்டிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்திருக்கமாட்டேன். சண்ணும் ஆழ்நீர் பாதைகள் பற்றி விரிவுரைகள் செய்துகொண்டிருக்கமாட்டான்.
இந்தக் கதையைக் கேட்டுவிட்டு பத்மினி கலகலவென்று சிரித்தார். இதுபோல இன்னும் எத்தனைக் கதைகளை அவர் கேட்டிருப்பாரோ!
முன்னூறு வருடங்களுக்கு முன் மாரிமுத்தாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் ‘காலைத் தூக்கியவர்’ அதற்கு பிறகு அதை கீழே இறக்கவே இல்லை. அங்கே பரதநாட்டியம் படித்த பெண்களின் எல்லை ‘காலைத் தூக்கி” ஆடும் நடனம்தான். அது 1959 -ம் ஆண்டு. பத்மினி ‘ராணி எலிஸபெத்’ கப்பலில் சிலோனுக்கு வந்து ஒரு நாட்டியக் கச்சேரி செய்தபோது மாறியது என்று சொல்லலாம். பரதநாட்டியம் கற்பதில் ஒர் ஆசையும், புது உத்வேகமும் அப்போது எங்கள் பெண்களிடம் பிறந்தது. மற்றவர்கள் விஷயம் எப்படியோ என்னுடைய தங்கை நடனம் கற்பதற்கு காரணமான குற்றவாளி அவர்தான் என்று சொன்னேன். நாற்பது வருடம் லேட்டாக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பத்மினியின் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் காதலியைக் கட்டிப்பிடிக்கும் போது காதலி தன் இரண்டு கைகளையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கோட்டையைப் போல காப்பாற்றி விடுவாள். பத்மினி நடிக்க வந்த சமயம் இந்த சம்பிரதாயம் உடைந்து போனது. வஞ்சிக்கோட்டை வாலிபனில் ‘கோட்டை கொத்தளத்தோடு’ பத்மினியைக் கட்டிப்பிடித்து ஜெமினி தன் ஆசையையும், ரசிகர்களின் ஆவலையும் தீர்த்து வைப்பார்.
பத்மினியை அழவைத்த சம்பவம் ஒன்றும் இந்தப் படப்பிடிப்பில்தான் நேர்ந்தது. இத்தனை வருடமாகியும் அதைச் சொல்லும்போது பத்மினியின் கண்கள் கலங்குகின்றன. வழக்கம்போல வாசன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்கத் தீர்மானித்தார். அப்போது பத்மினி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம். அதே சமயம் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் வைஜயந்திமாலா.
தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யாராயுக்கும் மாதுரி தீட்சித்துக்கும் இடையில் ஒரு போட்டி நடனம் இருக்கிறது அல்லவா? அதுபோல வஞ்சிக்கோட்டை வாலிபனிலும் மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும். ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார். வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.
படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார். தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.
‘எதிர்பாராதது’ படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகி விடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் வாங்கி சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.
பத்மினியின் ஞாபகசக்தி அசரவைக்கிறது. எந்த ஒரு சம்பவத்தையும் கூறமுன்பு அது நடந்த வருடத்தை கூறியபடிதான் பேச்சை ஆரம்பிக்கிறார். ‘1944-ல் உதயசங்கருடைய கல்பனா படத்தில் டான்ஸ் ஆடினேனா’ என்று தொடங்கி அந்த விவரங்கள் எல்லாவற்றையும் தருவார். சினிமா என்றால் தயாரிப்பாளர் பெயர், டைரக்டர் பெயர், நடிகர்கள் பட்டியல் எல்லாமே நினைவில் வைத்திருக்கிறார். அவர் மூளையில் பெரிய தரவுத்தளம் (database) ஒருவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இயங்குகிறது.
விழாவுக்கு பத்மினியின் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. இருட்டில் போத்தல் தேனை கவிழ்த்துக் குடித்ததுபோல இதழ்களில் உருகி வழியும் லிப்ஸ்டிக். அவருடைய எடைக்கு சரிசமமான எடையோடு இருக்கும் சரிகை நிறைந்த சேலை. இரண்டு கைகளிலும் எண்ணிக்கை சரி பார்த்து திருப்பி திருப்பி எண்ணி அணிந்த வளையல்கள். முகத்திலே விழுந்த சிறு சுருக்கத்தை தவிர, ஒரு சிறகு மட்டுமே உதிர்த்த தேவதை போல, அந்தக் காலத்து எ.பி நாகராஜனுடைய ‘விளையாட்டுப் பிள்ளை’ சினிமாவில் வந்த பத்மினியாக காட்சியளித்தார்.
நீண்ட வசனங்களை எல்லாம் பத்மினி மேக்கப் போடும்போதே பாடமாக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாட்கள் போல இல்லாமல் அந்தக் காலத்தில் நடிகைகள்தான் (கொடுமை) தங்கள் வசனங்களையும் பேசவேண்டும். ஆனால் விழாவில் மேடை ஏறியதும் அவர் புதிய பத்மினியாகிவிட்டார். கைதேர்ந்த பேச்சுக்காரி மாதிரி விழா சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் எல்லாவற்றையும் ஞாபத்தில் வைத்து சுருக்கமாகப் பேசிமுடித்தார். அந்தச் சில நிமிடங்கள் சபையோர்கள் அவருடைய பிரசன்னத்தில் மயங்கி ‘நலம்தானா? நலம்தானா?’ என்று கூக்குரலிட்டபடியே இருந்தார்கள்.
அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும், ஆகவே மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய் விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டுப் பிரியர், என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கௌதாரி, கோழி, ஆடு, மீன், இறால் என்று எனக்குப் பிடித்தமான அத்தனை கறி வகைளும் சமைத்திருந்தார்கள்.
அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ‘சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு’ என்றார். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்குப் பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.
அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
சாதி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் ‘பஞ்சமர்’ நாவலில் தொடங்கி மாதவய்யாவின் ‘கண்ணன் பெரும் தூது’ சிறுகதையில் இருந்து சமீபத்தில் ஜெயமோகனின் ‘கடைசி வரை’ சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.
மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து, காலுக்கு மேல் கால் போட்டு, சோபாவில் சாய்த்து அமைதியாக உட்காந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருந்துவதில்லை. ஒரு கிளாஸில் பழரசத்தை மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டுத் தொட்டுச் செல்கிறது. திடீரென்று சொன்னார், ‘நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி, நடக்கிற காரியமா?’
நான் திடுக்கிட்டுவிட்டேன். முதலில் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார். அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக் கொடுத்தன.
பத்மினி திரும்பிப்போன அன்று டெலிபோன் மணி ஒசை நின்றது. கதவு மணி ஒய்ந்தது. பத்திரிகை நிருபர்களின் தொல்லை விட்டது. சொல்லியும் சொல்லாமலும் வந்த விருந்தாளிகளின் ஆரவாரம் முடிந்தது. மாடிப்படிகளில் குடுகுடுவென்று ஒடிவரும் ஒலியும், கலகலவென்ற பத்மினியின் ஒயாத பேச்சும் மறைந்துபோனது. திடீரென்று வீட்டில் மறுபடியும் இருள் சூழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.
ஆனாலும் ஒரு லாபம் இருந்தது. நாட்டியப் பேரொளி போனபோது ஒரு சிறு ஒளியை எனக்காக விட்டுப் போய்விட்டார். ரோட்டிலே நடை செல்லும் போதும், உணவகத்தில் சாப்பிடப் போகும்போதும், வீடியோ நிலையத்திலும், சாமான் வாங்கும் கடைகளிலும் என்னைப் பார்த்து இப்போது ‘ஹாய்’ என்று சொல்கிறார்கள்.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு : இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் என்ற தலைப்பில் கடலூர் டவுன் ஹாலில் ஜூலை 30, 2019 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கல்விக் கொள்கை நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கை அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகார கொள்கை. அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டத்தால் இந்தி ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது.
இன்று கார்ப்பரேட்டுகள் – காவிகளின் நலனுக்காக “மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம்! வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம்! எந்த வடிவத்தில் இந்த கல்விக் கொள்கை வந்தாலும் மோதி வீழ்த்துவோம்! தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைப்பாய்த் திரள்வோம்!” என்பதை முன்வைத்து இந்த அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமை தாங்கினார். கருத்துரையாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முனைவர் ஜானகி.ராஜா உரையாற்றினார். அவர் பேசும்போது, “கல்வியில் புதிய மாற்றங்கள் தேவைதான். புதிய மாற்றங்கள் வரக்கூடாது என்பது நமது நிலைப்பாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு முன்பே அறிவுசார் தொடர்ச்சி இங்கு இருந்துவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சங்க காலத்திலேயே ஆணும் – பெண்ணும் சமமாக கல்விகற்று, அறிவியலில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். ஆக நாம் ஏதோ கல்வியறிவு அல்லது கல்விமுறை இல்லாது இருந்தோம் என்பதல்ல, நம்முடைய மரபிலேயே கல்வியானது இருந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் நம் கல்விமுறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, அப்போதுதான் குருகுலக் கல்வி முறை என்பது வந்தது. குருகுலக் கல்வி முறை என்பது மாணவர்கள் குருவின் வீட்டுக்குச் சென்று குருவிற்கு பணிவிடை செய்து; அவர் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து; குரு எப்போது ஓய்வாக இருக்கிறாரோ (எப்போது சொல்லிக் கொடுக்கிறாரோ) அந்த நேரத்தில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. குருகுல கல்வி என்பது சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமானதாக இருந்தது.
அதிலிருந்து மாறி திண்ணை பள்ளி உருவானது. குருவின் வீட்டிற்குள் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து படிப்பது, இதிலும் அனைவரும் செல்ல முடியாது. தெருவில் நடமாட வாய்ப்பு இல்லாதவர்கள் திண்ணையில் எப்படி உட்கார முடியும் ? இதுவும் சிலருக்கு மட்டும் வாய்ப்பளித்தது.
1854 -ல் மெக்காலே கல்வி வந்த பிறகுதான் வாய்ப்பு மறுக்கப்பட்ட அவர்களுக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோத்தாரி கமிஷன் வந்த பிறகுதான் திறந்தவெளி பல்கலைக்கழகம் வந்தது. இது கல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க முடியாதவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது கட்டமைப்பு செய்யப்பட்ட கஸ்தூரிரங்கன் அறிக்கை, மீண்டும் நம்மை பின்னோக்கி குருகுல கல்விக்கு இழுத்து செல்லும் முயற்சி. இந்தக் கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி இல்லை; சிலருக்கு மட்டுமே கல்வி என்பதாக மாற்றுகின்ற முயற்சி; கல்வி வசதி படைத்தவர்களுக்கானதாக மாற்றும் முயற்சி; ஆகவே நாம் இந்த கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.
இந்தக் கல்விக் கொள்கையில் இடம் பெற்று இருக்கக் கூடியவை பொது சமூகத்தின் கல்வி நலனுக்கு எதிரானது. இன்று இருக்கும் மத்திய அரசு வலிமையான கருத்தியலை கொண்ட அரசு, இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய அரசு. இந்த அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இதை நோக்கித்தான் இருக்கும். வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி இந்துத்துவ பாடங்களை பள்ளியில் புகுத்துவதை அன்றே துவங்கினார். பாடநூலில் தீவிரவாதத்தை புகுத்தியவர் முரளி மனோகர் ஜோஷி
இன்று வந்திருக்கும் கல்விக் கொள்கையானது கல்வியை வணிகப் பொருளாக மாற்றுகிறது. பல நாடுகளில் கல்வி என்பது ஏழு வயதில் துவங்குகிறது ஆனால் இந்த கல்விக் கொள்கையில் மாணவர்களின் கல்வி மூன்று வயதில் துவங்குகிறது. மூன்றாவது 5-ஆவது, எட்டாவது, பத்தாவது, பன்னிரண்டாவது என பொதுத் தேர்வுகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும். இதில் மாணவர்கள் வடிகட்ட படுவார்கள், பன்னிரண்டாவது முடிக்கும் போது சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இருப்பார்கள்
இந்தக் கல்விமுறை சமூகப் பணியாளர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, இந்த சமூகப் பணியாளர்கள் ஒரு மாணவனின் சாதியை அறிந்து, அவன் அப்பன் தொழிலை அறிந்து, ஒரு மாணவனுக்கு மதிப்பீடு அளிப்பார்கள். ஆக இது குலத்தொழிலை ஊக்குவிப்பதாகும்.
இந்தக் கல்விமுறை பள்ளி மாணவர்களுக்கு தச்சுத்தொழில், தோட்டக்கலை, மண்பாண்டம், கட்டிட வேலை ஆகியவை எப்படி செய்வது? என்பதை கற்றுத் தரப் போகிறது. ஆக இது முழுவதும் குல தொழிலுக்கு இட்டுச் செல்லும் முயற்சி.
இந்தக் கல்விக் கொள்கையில் இந்தி மயமாக்கப்பட்ட கல்வி முறை, இந்திய மயமாக்கப்பட்ட புராண இதிகாச கல்விமுறை இடம் பெற்றிருக்கிறது.
புராண இதிகாச குப்பைகளை ஆராய்ச்சி கட்டுரைகள் (ஆராய்ச்சியாளர்) என்ற போர்வையில் எழுதுகிறார்கள். இந்திய அறிவியல் மாநாடு மிகவும் முட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டு நடைபெற்றது. நமது பிரதமர் முதல் முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி விநாயகருக்கு செய்யப்பட்டது என பேசுகிறார். இதே அறிவியல் மாநாட்டில் ஒரு நீதிபதி மயில்கள் புணர்ச்சி செய்து பிறக்கவில்லை, ஆண் மயில் கண்ணீர் விடும் பெண் மையில் அதனை அருந்தும் இதன் மூலம் கர்ப்பம் அடைகிறது என பேசுகிறார்.
இன்று உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கல்வி அறிவற்ற மூடர்களை உருவாக்கும் கல்வியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இன்று அரசு, ஆட்சியாளர்கள், அறிஞர்கள், நீதிபதி அனைவரும் ஒரே கோட்டை வந்தடைகிறார்கள். மூன்று ஆண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் “அடுத்த தேர்தலில் நாம் தோற்றாலும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று பேசியுள்ளனர்.
ஏனென்றால் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் அவர்களுடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள், நீதித்துறை, கல்வி, ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் சில குறிப்பிட்ட பிரிவுகள் வந்திருக்கிறார்கள்.
ஆக இந்தக் கல்விக் கொள்கை என்பது திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்பப் பெற வேண்டியது. இதைத் திருத்த வேண்டும் என்றால் முதலில் இருந்து கடைசி எழுத்து வரை மாற்ற வேண்டும்” என்று உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் உரையாற்றினார். “இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள்; மாணவர் அமைப்புகள்; ஜனநாயக சக்திகள்; பேராசிரியர்கள் என பேசிவருகிறார்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீசு இதை கடுமையாக ஒடுக்கி வருகிறது ஆனால் மோடி அரசுக்கு இதைப் பற்றிக் கடுகளவும் அக்கறை இல்லை.
சமீபத்தில் டெல்லியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள், ஏனென்றால் மோடி அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இதனை கண்டித்து தான் மருத்துவர்கள் போராடினார்கள்.
மருத்துவர்கள் இதை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் : மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு வந்தபிறகு 2017-18-ம் ஆண்டில், மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில் CBSE-யில் படித்தவர்கள் 611 பேர். ஆனால் அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே.
இதற்கு முக்கிய காரணம் 2017-18 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2018-19-ல் தேர்ச்சி பெற்றவர்களில் 85% பேர் ஒரே ஒரு கோச்சிங்(ஆகாஷ் கோச்சிங் சென்டர்) சென்டரில் படித்தவர்கள். இந்த செண்டர்களில், ஒரு ஆண்டு நீட் கோச்சிங்குக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இரண்டு ஆண்டுகளுக்கு 3 லட்ச ரூபாய் செலவு செய்தால் மட்டுமே உங்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் மருத்துவ கல்வி பெற முடியும்.
தேசிய மருத்துவ ஆணையத்தில் மோடி அரசு முக்கிய மாற்றத்தைச் செய்திருக்கிறது. தனியார் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டா இருக்கிறது, அதில் நாம் போய் சேரலாம், அதற்கான கல்வி கட்டணத்தை அரசு தீர்மானிக்கும். இது பரவலாக அனைத்து மாநிலங்களிலும் இருக்கிற முறை. இதில் மோடி அரசு கொண்டுவந்த மாற்றம் 50% கட்டணம் மட்டும் அரசு தீர்மானிக்கும் மீதி உள்ள 50% கட்டணத்தை அந்த தனியார் நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்.
இப்பொழுது கொண்டு வந்த மாற்றத்தினால் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், மேனேஜ்மன்ட் கோட்டாவில் இணையலாம். ஆனால் கேட்கப்படும் கட்டணம் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதனால் இந்தியாவை விட்டு மாணவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். ரஷ்யாவில் ஒரு ஆண்டு படிப்பதற்கு 30 லட்சம் செலவாகிறது, இந்தியாவில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ஆண்டு கட்டணம் ஒரு கோடி ரூபாய்.
இனி எந்த உயர்கல்வி படிக்க வேண்டும் என்றாலும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு வைக்கப் போகிறார்கள். அந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்யப் போகிறோம் என்கிறார்கள். நீட் தேர்வு பெரும்பான்மை கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை மருத்துவ கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ளது, இதை யாராலும் மறுக்க முடியாது.
ஆக இதே தேர்வை எல்லா உயர்கல்வி படிப்புக்கும் கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும்? தேசிய அளவில் ஒரு தேர்வு எதிர் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கோச்சிங் சென்டர் போகாமல் தேர்ச்சி பெற முடியாது. 3, 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதேபோல் பன்னிரண்டாவது முடித்த பிறகும் கோச்சிங் சென்டர் செல்ல வேண்டும்.
இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் பெரும்பான்மை மக்களை கல்வியில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களை குலக்கல்வி வடிவத்தில் மாற்றுவது.
இந்தியாவில் 50% பேர் இளைஞர்கள், இவர்கள் எல்லோரும் படிக்க வேண்டும். ஆக இந்தக் கல்விச் சந்தையின் மதிப்பு பல லட்சம் கோடி. இதை எப்படி தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதுதான் முதலாளிகளின் திட்டம். இந்த அறிக்கையில் கல்லூரியை மூன்று விதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.
1. ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்.
2. பயிற்றுவிப்பதற்கான பல்கலைக்கழகங்கள்
3. இங்கு உள்ள கல்லூரிகள் என பிரித்து வைத்திருக்கிறார்கள்.
இதில் மையமாக கூறுவது இங்கு உள்ள முதல் பகுதியில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளுடன் சேர்ந்து இங்கு உயர் கல்வியை கொடுக்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் உள்ள பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 902 இதில் 399 மாநில அரசால் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் 40 மொத்தம் இருக்கக்கூடிய கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரம், உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 3.66 கோடி பேர்.
இதனை இரட்டிப்பாக்குவது எப்படி என்றால் அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் மாற்ற முடியாது, இந்திய அரசு இந்தியாவில் படிக்கும் 3.66 கோடி பேருக்கு ஒதுக்கும் நிதி 33 ஆயிரம் கோடி. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் பேர். அவர்கள் செலவு செய்யும் பணம் 50 ஆயிரம் கோடி.
இதை எப்படி இந்தியாவுக்கு கொண்டு வருவது, இந்தியாவில் ‘உலகின் தலைசிறந்த’ பல்கலைக்கழகங்களை உருவாக்குவது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களை அரசு அறிவித்துள்ளது. அதில் 10 அரசுப் பல்கலைக் கழகம், 20 தனியார் பல்கலைக்கழகம். அரசின் நோக்கம் வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் மாணவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதால் அதிக வருமானம் வரும் என்கிற முடிவு.
ஆனால் அந்த வருமானம் யாருக்கான வருமானம்? அம்பானி ஜியோ பல்கலைக் கழகத்தை ஆரம்பிப்பதாகக் கூறி ஒன்றரை வருடம் ஆகிறது. இன்றுவரை ஒரு செங்கல் கூட கிடையாது. அதற்குள் அதை இந்திய அரசு ‘தலைசிறந்த பல்கலைக் கழகமாக’ அறிவித்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து யார் யாரெல்லாம் ஆரம்பிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுங்கள் என்கிறது இந்த அறிக்கை. அந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டணத்தை அவர்களை தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது.
இந்த அறிக்கையின் பின்பக்கம் யாரிடம் கருத்து கேட்கப்பட்டது என்கிற விவரத்தை கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார். ஒன்று ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த 4 அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு இருக்கிறது. (அகில பாரதிய விஷ்வ பரிசத் போன்ற அமைப்புகள்) இரண்டாவதாக அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், மூன்றாவதாக இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகள் அவர்களின் கூட்டமைப்பிடம் கருத்து கேட்கிறார்கள். இங்குள்ள ஆசிரியரிடமோ, மாணவர்களிடமோ, மாணவர் அமைப்புகளிடமோ, பெரும்பான்மை மக்களிடமோ கருத்து கேட்கப்படவில்லை.
ஆக இந்த அறிக்கையை மாற்ற முடியாது, முற்றிலும் நிராகரிக்க வேண்டும்! இந்தக் கல்வி கொள்கை கருத்து கேட்கும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இதிலுள்ளவற்றை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சகம், இதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. கருத்து கணிப்பு என்பதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நாம் என்ன செய்யவேண்டும்?
பெரும்பான்மை மக்கள்; மாணவர்கள் பங்களிப்பு இல்லாமல் இதை தடுத்து நிறுத்த முடியாது இது அரங்கத்தில் மட்டும் பேசக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் போராட்டங்கள் மூலம் தான் இந்த மக்கள் விரோத கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த முடியும்” என பேசினார்.
அதன் பின்னர், நன்றியுரையுடன் கூட்டம் நிறைவேறியது.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், தொடர்புக்கு : 97888 08110
இலக்கியங்களிலே பற்பல மூட நம்பிக்கைகள் புகுந்து பொய்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன? தொல்காப்பியத்தில் சில இடைச் செருகல்; வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தைத் தழுவியவை. இவற்றின் உரைகளோ ஒப்பியல் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி வட மொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தவை. ஆனால் பிற்கால இலக்கணங்களில், ”ஐந்தெழுத்தால் ஒரு பாடையுண்டென அறையவும் நாணுவரே மக்கள்’’ என்று இலக்கணக் கொத்துச் சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் இழிந்தது எதனால், வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தைப் புறக்கணித்ததாலன்றோ?
இலக்கியத்துக்குக் கற்பனை துணையென்றாலும் இலக்கணத்துக்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ? வெண்பாப் பாட்டியல் (வச்சணந்தி மாலை) என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் ஆழ்ந்ததாகவும் கருத்திற் கொவ்வாததாகவும் அமைந் திருக்கிறது என்பதைப் புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த பட்டியல் ஏடு, பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? படிப்பதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்று ஆரியரைப் பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகைச் சாதியா? உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன் பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ் கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி வழங்கிடத் துணைபுரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும், ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.
பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திர என்ற சாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார். ‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?
ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால் இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.
பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப்பனருக்கு, பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா, வைசியருக்கு – வகை பல குறைந்த கலி. சூத்திரர் என்ற திராவிடருக்கு – ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா? இன்றும் கலம்பகத்தில் (பாக்களைக் கலந்து பாடும் முறை) தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 96-ம், அரசருக்கு 90-ம் அமைச்சருக்கு 70-ம், வணிகருக்கு 50-ம் மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டும் மென்பது பாட்டியல் விதிகளாம். ஆண்டவனின் அவதாரம் அரசன் என்று எண்ணியிருந்த நாட்டிலேயே, அரசனைவிடப் புரோகிதப் பார்ப்பான் உயர்வென்று கருதி அதிகமான செய்யுள் செய்வது முறை என்று எழுதிய நயவஞ்சகர், பிற மக்களை இழிவுபடுத்தும் முறையில் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ கூறியிருப்பது ஆச்சரியமன்று. ஆனால் இவற்றைப் புலவர்கள் தாங்கி நிற்பதுதான் நமக்கு வருத்தத்தைத் தருகின்றது.
மனுநீதியை விடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது? இது மக்கள் முன்னிலையில் பொசுக்கப்பட்டாலொழிய, திராவிட இன உணர்ச்சியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கருத்தும் மறுபடியும் நிலவிட முடியுமா? ஆரியக் கொள்கைகள் நூல் வடிவில் இருப்பினும், ஆரியர் கையாண்ட தீ வளர்க்கும் வேள்வி முறைக்கே இரையாகப் பலியிடும் நாளே நம்மை நாம் உணர்ந்த நாளாகும். இன்னும் பாட்டியல் வழங்கிடும் பொருத்தங்களையெல்லாம் பார்த்துத் தமிழ்ப்பா இயற்றுவதென்பது, பயனில்லாத செயலாகும்.
மங்கலப் பொருத்தம், முதற்சொல், எழுத்துத் தகனம், பால் உணர், வருணம், நாள், கதி, கணம் ஆகிய எல்லாப் பொருத்தங்களும், தமிழ் மொழியில் உள்ள எல்லா விழுமிய சொற்களையும் பயன்படுத்தி, அழகிய கருத்து நிறைந்த கவிகளை இயற்றும் இயற்கை முறையில் மட்டுப்படுத்தும் மாற்றுவகையில் அமைந்துள்ளது. இன்னும் பல சொற்களையும் பயன்படுத்த முடியாது இப்பொருத்தங்கள் தடை செய்வதனால், பல வடமொழிச் சொற்களையும் (பிறமொழி எனப் பாராது) புலவர்கள் கையாளும் நிலைமையை ஏற்படுத்தியது. தனித்தமிழ், உயர் தனிச் செம்மொழி , தன் இயல்பினை இழக்கவோ அன்றி இழந்த நிலையைக் காட்டவோ பாட்டியல் பயன்பட முடியுமேயன்றி, எந்த முறையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றதல்ல; பொருத்தமானதுமன்று என்பது எவரும் மறுக்க முடியாததாகும். ஆரியம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் இன்றியமையாதது. தன்னுணர்வு வளரத் தமிழ்க் கழனி திருத்தப்படுதல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும் இலக்கண விளை நிலமானாலும் ஆரியக் கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின், அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனைத் தீ வைத்தேனும் ஒழித்திடத்தயங்கார். ஆகவே தோழர்களே! மாணவர்களாகிய நாம் நமது கடமையை உணர்ந்து, ஒல்லும் வகையெல்லாம் திராவிடர் இனம் எழுச்சி பெறவும், வாகை சூடவும் முயல்வோமாக.
”ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைப் பற்றி A.K. Saunders C.S.I. I. C. S . என்கிற ஓர் ஆராய்ச்சிக்காரர் சுமார் 20 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் மதம் என்னும் ஆராய்ச்சி நூலில் எழுதியிருப்பதாவது:
சுமார் 5000 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் சீதோஷ்ண நிலை, இப்போது இருப்பதை விடச் சற்றுக் குறைந்த குணம் உள்ளதாக இருந்தது. இந்தியாவில் மக்கள் அநேகமாக எல்லோரும் திராவிடர்களாகவே இருந்தார்கள் என்றாலும், அவர்கள் பல பிரிவுகளாகவே ஆங்காங்கு இருந்து வந்தார்கள். அவர்கள் கறுப்பு நிறமுடையவர்கள்; சற்று உயரம் குறைந்தவர்கள். இப்போதைப்போலவே நல்ல கஷ்டப்படக் கூடியவர்களாகவும், நல்ல சுபாவமுள்ளவர்களாகவும், கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆரியர்கள் படையெடுப்பினால் நிலைகுலைந்தார்கள். ஆரியரின் ஆதிக்கத்தினால், அடிமை ஜாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள். ஆரியர்கள் தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததாலும் மங்கோலியர் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டு பிடிப்பதற்கென்றே சிறு சிறு கூட்டமாக வந்தார்கள்.
அவர்கள் வந்த சமயத்தில் இந்தியாவில் திராவிடர்கள் பல பிரிவுகளாக, ஆங்காங்கு தனித்தனியே சிறுசிறு பாகத்துக்கு அதிகாரிகளாக இருந்து ஆட்சி செலுத்தி வந்தனர். அதனால் அவர்களில் ஒருவருக்கொருவர் கலகம், சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் அப்போது இங்குப் பிழைக்க வந்த ஆரியர்கள், உள்நாட்டுக் கலகத்தில் கலந்து கொண்டு, தாங்கள் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கலகங்களையும் போர்களையும் பெருக்கி ஒருவரையொருவர் தாக்கி மடியும் படியும் இளைக்கும்படியும் செய்தனர்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12
குளுமையான, மஞ்சள் பாரித்த, ஒளி வீசிய ஒரு கோடைக் காலையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஒரு முதியவரை வார்டுக்கு உபசாரத்துடன் இட்டு வந்தாள். இரும்பு விளிம்பு கட்டிய, பழைய மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் அவர். மருத்துவமனைக்கு உரிய, கஞ்சி போட்டு முடமுடப்பான புதிய மேலங்கி கூட அனுபவசாலியான கைவினைஞரின் தோற்றத்தை மாற்றவில்லை. வெள்ளைத் துணி சுற்றிய ஏதோ ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார். மெரேஸ்யெவின் கட்டில் அருகே தரையில் அதை வைத்து ஏதோ செப்படி வித்தைக்காரர் போன்று பதபாகமாகவும் பெருமிதத்துடனும் முடிச்சை அவிழ்த்தார். அவர் கைகளுக்கு அடியில் தோல் கறகறத்தது. பதனிட்ட தோலின் சுள்ளேன்ற புளிப்பு மணம் வார்டில் பரவிற்று.
கிழவனார் கொண்டுவந்திருந்த பொட்டலத்தில் நெறு நெறுக்கும் இரு புதிய மஞ்சள் நிறப் பொய்க்கால்கள் இருந்தன. சரியாக அளவெடுத்துத் திறமையாகச் செய்யப்பட்டவை அவை. ஆனால் இந்த கைவினைஞரின் பெருமைக்குக் காரணமாக இருந்தவை பொய்க்கால்கள் அல்ல. புதிய மஞ்சள் நிற மாதிரிக் கட்டைகளில் அணியப்பட்டிருந்த பூட்சுகளும் இருந்தன. அந்தப் பூட்சுகள் அணிந்தால் உயிருள்ள கால்கள் போலத் தோன்றுமாறு திறமையுடன் செய்யப்பட்டிருந்தன அக்காலணிகள்.
தம் கைகளால் செய்த பொருள்களை மூக்குக் கண்ணாடி விளிம்புகளிகளுக்கு மேலாகப் பார்வையிட்டவாறே, “ரப்பர் மேல் ஜோடுகளைப் போட்டுக்கொண்டால் கலியாண மாப்பிள்ளை கெட்டான் கேடு! வஸீலிய் வஸீலியெவிச் தாமே எனக்கு உத்தரவிட்டார், ‘ஸ்யெவ், நிஜக் கால்களை விட மேலாக இருக்கும் படி பொய்க் கால்களைப் பாங்காகச் செய்து தா’ என்று. இதோ, பாருங்கள், ஸ்யெவ் செய்திருக்கிறான். ராஜ தோரணையானவை!” என்றார் தொழிற்கலைஞர்.
செயற்கைக் கால்களை கண்டதும் மெரேஸ்யெவின் நெஞ்சு சோம்பிப் குறுகியது. அது இறுகி உறைந்து விட்டது போல் ஆகிவிட்டது. எனினும் பொய்க்கால்களை விரைவில் அணிந்து பார்க்கவும், சுதந்திரமாக நடக்கவும் உண்டான வேட்கை மற்ற எல்லா உணர்ச்சிகளையும் மீறிக்கொண்டு மேலெழுந்தது. போர்வைக்கு அடியிலிருந்து நொண்டிக் கால்களை வெளியே எடுத்துச் சட்டென்று பொய்க்கால்களைப் போட்டுப் பார்க்கும் படி முதியவரை அவசரப்படுத்தினான். ஆனால் “சமாதானக் காலத்திலேயே” குதிரைப் பந்தயத்தில் காலை முறித்துக் கொண்ட யாரோ ”பெரிய சிற்றரசனுக்குப்” பொய்க்கால் செய்து கொடுத்ததாகச் சொல்லிக் கொண்ட அந்தக் கைதேர்ந்த பொய்க்கால் சிற்பிக்கு இந்த அவசரம் பிடிக்கவில்லை. தான் செய்த பொருள்கள் பற்றி அவர் மிகுந்த பெருமை கொண்டிருந்தார். அவற்றை ஒப்படைப்பதை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்க அவர் விரும்பினார்.
பொய்க்கால்களை அங்கிக் கையால் துடைத்தார், தோலின் மேலிருந்த கறையை நகத்தால் சுரண்டி, அந்த இடத்தில் ஊதி, பளிச்சிடும் வெண்ணிற அங்கி விளிம்பால் துடைத்து, பொய்க் கால்களைத் தரையில் வைத்தார். பிறகு துணியை நிதானமாக மடித்துச் சுருட்டிப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
“நல்லது பெரியவரே, போட்டுப் பார்க்கலாமே” என்று கட்டிலில் உட்கார்ந்து அவசரப்படுத்தினான் அலெக்ஸேய்.
வெட்டுண்ட வெறுங்கால்களை வேற்றாளின் கண்களால் இப்போது பார்வையிட்டு, அவற்றால் மனநிறைவு அடைந்தான் அலெக்ஸேய். அவை வலியவையாக, நரம்பு புடைத்திருந்தன. கட்டாயம் காரணமாக இயக்கம் இல்லாத நிலைமையில் வழக்கமாக ஏற்படுவது போன்று அவற்றில் கொழுப்பு சேரவில்லை. மாறாக, பழுப்பேறிய தோலுக்கு அடியில் தசைநார்கள் விறைத்து நின்றன. இவை வெட்டுண்ட கால்கள் அல்ல, நிறையவும் விரைவாகவும் நடக்கும் மனிதனின் முழுக்கால்கள் என்று தோன்றியது.
“என்னது, போட்டுப் பார்க்கலாமே, போட்டுப் பார்க்கலாமே?… ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காதா?” என்று முணுமுணுத்தார் கிழவர். ‘ஸயெவ், தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்தப் பொய்க்கால்களைத் தயாரி. லெப்டினன்ட் கால்கள் இல்லாமலே விமானம் ஓட்டத் திட்டம் இட்டிருக்கிறான்’ என்று வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார். ஆகா, அப்படியே செய்கிறேன் என்றேன். இதோ, பாருங்கள், எப்படிச் செய்திருக்கிறேன் என்று. இந்த மாதிரிப் பொய்க்கால்களைக் கொண்டு நடக்க மட்டுந்தானா முடியும், சைக்கிள் விடலாம், இளம் பெண்களுடன் நடனம் ஆடலாமே. எப்பேர்பட்ட வேலைப் பாடு!” என்று பீற்றிக்கொண்டார்.
பொய்க்காலின் மெத்தென்றிருந்த அலெக்ஸேயின் வலது வெட்டுக்காலை நுழைத்து, இறுக்கு வார்களால் வலிவாகப் பொருத்திக் கட்டினார் கிழவர். சற்று அப்பால் சென்று அதைப் பார்வையிட்டார். நாக்கைச் சப்புக் கொட்டினார்.
“ஜோடு பார்வையாக இருக்கிறது! … வலிக்கவில்லையே? அதுதானே! ஸ்யெவை விடத் தேர்ந்த கைவினைஞன் மாஸ்கோவில் கிடையாது, தெரிந்து கொள். ஸ்யெவுக்குத் தங்கக் கைகளாக்கும், தங்கக் கைகள்” என்றார்.
இன்னொரு பொய்க்காலையும் லாவகமாக அணிவித்து வார்களால் இறுக்கிக்கினாரோ இல்லையோ, மெரேஸ்யெவ் விற்கம்பி விசை போன்று சடக்கெனக் கட்டிலிலிருந்து தரையில் தாவிக் குதித்தான். சொத்தென்ற சத்தம் கேட்டது. மெரேஸ்யெவ் வலி தாளமாட்டாமல் வீரிட்டவன், அக்கணமே கட்டிலின் அருகே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விட்டான்.
முதிய தொழிற்சிற்பியின் மூக்குக் கண்ணாடி வியப்பால் நெற்றிமேல் ஏறிவிட்டது. தன் வாடிக்கைக்காரன் இப்படித் துள்ளப் போகிறான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மெரேஸ்யெவ் அதிர்ச்சியடைந்து, ஜோடுகள் பொருத்திய பொய்க் கால்களை அகலப் பரப்பியவாறு புகலின்றித் தரையில் கிடந்தான். விளங்காமையும் மனத்தாங்கலும் அச்சமும் அவன் விழிகளில் ததும்பின. அவன் எண்ணியதெல்லாம் வெறும் ஏமாற்றுதானா?
மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.
க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கைகளை உதறியவாறு அவனருகே பாய்ந்தாள். முதிய தொழிற்சிற்பியும் அவளும் சேர்ந்து அலெக்ஸேயைத் தூக்கிக் கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவன் துயரம் நெஞ்சை அழுத்த, துவண்டு போய் வருத்தம் ததும்பும் முகத் தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தான்.
“ஏ-ஏ-ஏ, அருமை மனிதா, இப்படிச் செய்வது சரியல்ல, கொஞ்சமும் சரியல்ல. ஏதோ உயிருள்ள கால்கள் திரும்ப வைக்கப்பட்டுவிட்டது போலத் துள்ளிப் பறந்தாயே. நல்ல ஆள் தான் போ. இதற்காக முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்ளத் தேவையில்லை, அருமை நண்பா. ஒன்றுமட்டும் தெரிந்து கொள். நீ எல்லாவற்றையும் அடியிலிருந்து தொடங்க வேண்டும். நீ படை வீரன் என்பதை மறந்து விடு. நீ சின்னக் குழந்தை இப்பொழுது ஓர் அடி, இன்னோர் அடி என்று எடுத்து வைத்து நடை பழகும் குழந்தை. முதலில் கவைக்கோலுடன், அப்புறம் சுவற்றைப் பிடித்துக் கொண்டு, பிறகு கைத்தடியை ஊன்றியபடி நடக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அல்ல, கொஞ்சங் கொஞ்சமாகப் பழக வேண்டும். இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. அருமைத் தம்பீ, அம்மாவும் அப்பாவும் உண்டாக்கியவை போன்ற கால்கள் யாராலும் உனக்குச் செய்து தர முடியாது” என்று முணுமுணுத்தார் கிழவர்.
இசைக் கேடாகக் குதித்ததனால் கால்களில் கொடிய வலி உண்டாயிற்று. ஆயினும் பொய்க்கால்களை உடனேயே சோதித்துப் பார்க்க மெரேஸ்யெவுக்கு ஆசையாயிருந்தது. லேசான அலுமினியக் கவைக்கோல்கள் அவனுக்குத் தரப்பட்டன. அவற்றைத் தரையில் ஊன்றிக்கொண்டு கக்கங்களுக்கு அடியில் கைத்திண்டுகளை அழுத்தியவாறு மெதுவாக, ஜாக்கிரதையாகக் கட்டிலிலிருந்து வழுகிப் பொய்க்கால்களில் நின்றான். மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.
தாயாரோ பாட்டியோ முதல் நடக்கக் கற்பிப்பது போலவே க்ளாவ்தியா மிஹாய்லவும் முதிய தொழிற்சிற்பியும் மெரேஸ்யெவைப் பரிவுடன் இரு புறங்களிலிலும் தாங்கிக் கொண்டார்கள். மெரேஸ்யெவ் ஓர் இடத்தில் நின்றான். பொய்க்கால்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில் பழக்கமின்மைக் காரணமாகக் கடும் வலி உண்டாயிற்று. அவன் தயக்கத்துடன் முதலில் ஒரு கவைக்கோலையும் பிறகு இரண்டாவதையும் முன்னே வைத்தான், உடல் பாரத்தை அவற்றின் மேல் போட்டவாறு ஒரு காலை எடுத்து வைத்து அப்புறம் மறு காலை வைத்தான். தோல் இறுக்கத்துடன் கறுமுறுத்தது. டொம் டொம் என்ற கனத்த ஓசைகள் தரையில் அதிர்ந்தன.
“ஊம், நல் அதிர்ஷ்டம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார் முதியவர்.
மெரேஸ்யெவ் பதபாகமாக இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தான். பொய்க்கால்களால் இந்த முதல் அடிகளை எடுத்து வைப்பது அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கதவு வரை போய் திரும்புவதற்குள் ஏதோ ஒரு மாவு மூட்டையை ஐந்தாவது மாடிக்குச் சுமந்து சென்றது போல அவனுக்கு அயர்வு உண்டாயிற்று. கட்டில் வரை சிரமப்பட்டு நடந்து பொத்தென்று அதில் சாய்ந்தான். உடம்பெல்லாம் வியர்த்தது. புரண்டு நிமிர்ந்து படுக்கக் கூடத் திராணி இல்லை .
“பொய்க்கால்கள் எப்படி? அதுதானே. ஆண்டவனுக்கு நன்றி செலுத்து, தொழிற்சிற்பி ஸ்யெவ் உலகில் இருப்பதற்கு!” என்று முதியவருக்கு இயல்பான தற்புகழ்ச்சியுடன் வார்களை அவிழ்த்து அலெக்ஸேயின் கால்களை விடுவித்தார் கிழவர். பழக்கம் இல்லாமையால் கால்கள் அதற்குள் கொஞ்சம் இரத்தம் கட்டி வீங்கியிருந்தன. “இந்த மாதிரிப் பொய்க்கால்களுடன் விமானந்தானா ஓட்டலாம், நேரே ஆண்டவனிடமே பறந்து போகலாமே. எப்பேர்பட்ட வேலைப்பாடு!” என்று தொடர்ந்தார் பெரியவர்.
“நன்றி, நன்றி, பெரியவரே, வேலை பிரமாதம்’ என்று தணிந்த குரலில் சொன்னான் மெரேஸ்யெவ்.
“வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார்: ‘ஸ்யெவ், அசாதாரணமான பொய்க்கால்கள் வேண்டும். மோசம் பண்ணிவிடாதே’ என்று. அட ஸ்யெவ் மோசம் பண்ணுவது எங்காவது உண்டா? சந்தர்ப்பம் நேரும் போது நீங்கள் வஸீலிய் வஸீலியெவிச்சிடம் சொல்லுங்கள், வேலை திருப்தியாக இருந்தது என்று” எனக் கூறினார் கிழவர்.
பின்பு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு அவர் போய்விட்டார். மெரேஸ்யெவ் கட்டில் அருகே கிடந்த தன் புதுக் கால்களைக் கவனமாகப் பார்த்தபடி படுத்திருந்தான். அவற்றைப் பார்க்க பார்க்க அவற்றின் அமைப்பில் காணப்பட்ட மதி நுட்பமும் திறமையான வேலைப்பாடும் அவை லேசாயிருந்ததும் அவனுக்கு உவப்பூட்டின. பொய்க்கால்கள் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டன.
அன்றே ஓல்காவுக்கு களிபொங்கும் விரிவான கடிதம் எழுதி அனுப்பினான் மெரேஸ்யெவ். விமானங்களைச் சோதித்துப் பார்க்கும் தனது வேலை முடியும் தறுவாயில் இருக்கிறது என்றும் தலைமை அதிகாரிகள் தனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாகவும் சலிப்பூட்டும் பின்புறத்தில் இந்த அலுப்புத்தரும் வேலையிலிருந்து தான் இலையுதிர் காலத்திலோ அல்லது அதிகமாய்ப் போனால் குளிர்காலத்திலோ போர்முனைக்கு, தன் ரெஜிமென்டுக்கு அனுப்பப் படலாம் என்றும் ரெஜிமேண்டில் தோழர்கள் தன்னை மறக்கவில்லை என்றும் கடிதத்தில் விவரித்திருந்தான் விபத்து நேர்ந்த நாளுக்குப் பின் அவன் எழுதிய முதலாவது மகிழ்ச்சிக் கடிதம் இதுவே.
தான் எப்போதும் அவளையே நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதாக இந்தக் கடிதத்தில்தான் அவன் தன் மணப்பெண்ணுக்கு முதல் தடவை தெரிவித்திருந்தான். ஒருவேளை தாங்கள் போருக்குப் பின் சந்திக்கலாம் என்றும் அவள் தன் கருத்தை மாற்றிக் கொள்ளா விட்டால் சேர்ந்து வாழலாம் என்றும் தன் நெஞ்சில் நெடுநாளாக வைத்திருந்த எண்ணத்தை – மிகுந்த கூச்சத்துடன்தான் என்றாலும் இதில்தான் அவன் வெளியிட்டிருந்தான். கடிதத்தை ஒரு சில தடவைகள் திரும்பிப் படித்தபின் பெருமூச்செறிந்து கடைசி வரிகளைக் கவனமாக அடித்துவிட்டான்.