
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14
முன்மொழிவுகள், கேள்விகள்
…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா? முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்கள் முன் வைத்தேன்.
அவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை?
முதலில் வாக்குறுதிகளைப் பார்ப்போம்,
“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.
2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே!
“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.
இது நல்லது! அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.
“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.
இந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.
“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.
பெரிதும் சுவாரசியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .
இதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.
ஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்தால் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.
“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.
குழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…
“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்காக சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.
சுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.
டேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.
அடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.
“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா? நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்?” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.
“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது!” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா?” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.
“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.
“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்!” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.
“பெற்றோர்கள் பாடங்களுக்கு வரலாமா?” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.
படிக்க:
♦ கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
♦ அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்
“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?”
மனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது? இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ?
குழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா? “சரி!” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!



சுயதொழில் தொடங்குவதாக இருந்தால் மக்களுக்கு முதலில் கை கொடுக்கும் தொழிலாக இக்கடைகள் விளங்குகின்றன. காலை உணவுக்காக மட்டும் செயல்படும் கடைகள், மதிய உணவுக்கான கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக இக்கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு வேலையளிக்க வழியற்றுப் போன இந்த அரசமைப்பில் இத்தகைய கடைகளே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.




அரியானா விவசாயிகள் கரீப் பருவத்திற்காக நெல் விதைப்பிற்கு தயாராகி வருகிறார்கள். அரியானா அரசு, ஏழு மாவட்டங்களில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தச் சொல்லி அறிவித்திருக்கிறது. இதற்கு அம்மாநில அரசு கூறும் காரணம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறதாம்.








இவற்றால் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சுற்றுச்சூழல் மாசடைந்து பேரழிவுதான் நடக்கும். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.
கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்த்து ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசா பழங்குடியின மக்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி துரத்தி அடித்துள்ளனர். நெடுவாசல் மக்கள் மீத்தேன் திட்டத்தை விரட்டி உள்ளனர். கதிராமங்கலம் பகுதி மக்கள் போராடி பல இடங்களில் ஓ.என்.ஜி.சியின் அத்துமீறலை தடுத்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளனர். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக, மக்கள் போலீசாரின் அடக்குமுறைகளை தன்னந்தனியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டு போராடியதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது தமிழகமே டெல்லிக்கு எதிராக எழுந்து நின்று உரிமையை நிலைநாட்டியது.







கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும்புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன், என்கிறார் இயக்குனர் ஜெகதீசன்.
இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்குத் தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வில் ஒருமுறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று, மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில், பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நக்சலைட்டுகள் பற்றிய கதையில் உருவாகும் அப்படத்தில் இளம் நக்சலைட்டாக சாய்பல்லவி நடிக்கிறாராம்.
கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், உள்ளிட்ட சிவாஜி நடித்த முக்கிய படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. “என்னைப்போல் சிவாஜியால் நடிக்க முடியும். என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது” என்று உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ சொன்னதும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக தமிழ் கற்று வரும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம். படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அப்போது சல்மான், திடீரென அவருடைய ஒரு செக்யூரிட்டியை அறைந்தார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
நேர்காணலில், எதிர்காலத்தில் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. நானும் என்னுடைய கணவரும் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். மாற்றத்தையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள். என்னுடைய கணிப்புப் படி, நானும், அவரும் விரைவில் தீவிர அரசியலில் இறங்குவோம். நான் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அவர், அமெரிக்க அதிபர் ஆவார். இது உறுதி. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்கள் இருவருக்கும் பெரிய ஆர்வம் உண்டு. என்றாலும், அதில் நேரடியாக தலையிட யோசித்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆந்திர பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேட்டபோது நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை. அப்படி நடிக்க கேட்டு யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. ஜெகன் அண்ணாவுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் வெற்றி பெற்று முதல்வராகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விரும்பம்தான் என்று கூறியிருக்கிறார் சூர்யா.
கல்வியில் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களில் இருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதில் பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

































