வண்டாரி தமிழ்மணி என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர். இவரது மனைவி ஜான்சி ராணி கடந்த ஜூலை 29-ம் தேதி (திங்கள்கிழமை) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த முயற்சியில் 63 சதவீத தீக்காயங்களுடன் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, வண்டாரி தமிழ்மணியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தனது கணவரின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஜான்சி ராணி தானே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தீக்குளித்தார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி இறந்து விட்டார்.)இது குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர்.
வண்டாரி தமிழ்மணி
நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களில் வண்டாரி தமிழ்மணி முக்கியமான பிரமுகராக செயல்பட்டு வந்துள்ளார். அதனடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராகவும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளார். அரசியல் ஈடுபாட்டுடன் கூடவே சுமார் எட்டாண்டுகளுக்கு முன் கட்சி சார்ந்த நண்பர்களோடு கூட்டு சேர்ந்து “தமிழ் நகை கடை” ஒன்றை நடத்தி வந்துள்ளார். கட்சியின் மீதுள்ள ஈர்ப்பால் ஏராளமாக செலவும் செய்துள்ளார். அவரது கடையில் நாம் தமிழர் தம்பிமார்கள் நகை வாங்குவது விற்பது என நடந்துள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துரை முருகனின் அறிமுகம் வண்டாரி தமிழ்மணிக்கு கிடைத்துள்ளது. மேற்படி ஆசாமி யூட்யூபில் சாட்டை என்கிற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பொது மேடைகளிலும், தனது யூட்யூப் சேனலிலும் அரசியலில் எதிர்தரப்பில் இருப்பவர்களை – குறிப்பாக பெரியார் – திராவிட அரசியலை – தரகுறைவான ஆபாச வார்த்தைகளில் பேசுவதன் மூலமே தம்பிமார்களிடம் புகழ் பெற்றவர் துரை முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இவருக்கும் சீமானுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பின் உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் துரை முருகன். தற்போது மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார்.
வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார். இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை. இதற்கிடையே கட்சிக்காக செலவழித்த வகையில் தொழில் முடக்கம் ஏற்பட்டு நகை கடையை மூடும் நிலைக்கு வந்துள்ளார் தமிழ்மணி. டாடா ஏஸ் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
பெரியண்ணன் சீமான் மற்றும் துரைமுருகன்
தமிழ்மணியின் டாடா ஏஸ் வண்டிக்கு மாதம் சுமார் 11 ஆயிரம் வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணை கட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக இவரது டாடா ஏஸ் வண்டியை கட்சி நிர்வாகிகள் கேட்டு வாங்கியுள்ளனர். அப்போது வண்டி வாடகைக்கு ஓடினால் தினமும் 1500 ரூபாய் கிடைக்கும், ஆனால் அந்த தொகை கூட வேண்டாம்; ஒரு மாதம் வண்டியைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பதிலாக மாதாந்திர தவணைத் தொகையை கொடுத்தால் போதும் என தமிழ்மணி நிர்வாகிகளிடம் பேசி அதனடிப்படையில் வண்டியைக் கொடுத்துள்ளார். வண்டியை எடுத்துச் சென்ற நிர்வாகிகள் அந்த பணத்தையும் கொடுக்கவில்லை.
வறுமை ஒருபக்கம் வாட்ட; கடன் இன்னொரு பக்கம் கழுத்தை நெறிக்க என்ன செய்வதெனத் தெரியாத தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன் ஒரு ஹுண்டாய் க்ரேட்டா காரும் 1,60,000 ரூபாய் விலையில் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டும் வாங்கியுள்ளார் என்கின்றன தம்பிமார்கள் இடும் முகநூல் பதிவுகள். பணம் திரும்பக் கிடைக்காத நிலையில் விசயத்தை கட்சியின் பிற நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி.
வேறு வழியின்றி தமிழ்மணிக்குச் சேர வேண்டிய கடன் நிலுவைத் தொகையைத் திரும்பச் செலுத்தியுள்ளார் துரைமுருகன். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் தமிழ்மணி மற்றும் அவரது மனைவியின் கைபேசி எண்களை தனக்கு விசுவாசமான தம்பிமார்களிடம் கொடுத்துள்ளார். துரைமுருகனின் திட்டப்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாம் தமிழர் ஆதரவு கும்பல் தமிழ்மணியையும் அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டித் தீர்த்துள்ளனர். குறிப்பாக எட்டு வயதே ஆன தமிழ்மணியின் பெண் குழந்தையையும் தம்பிமார்கள் விட்டு வைக்காமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தமிழ்மணி நேரடியாக துரைமுருகனிடமே தொலைபேசி இது குறித்து கேட்டுள்ளார் (அந்த உரையாடலின் ஆடியோ பதிவு முகநூலில் பகிரப்பட்டு வருகின்றது). தமிழ்மணியிடம் திமிராக பேசும் துரை முருகன், தன் மீது அன்பு கொண்ட தம்பிகள் ஏதும் செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்கிறார்.
பின் விசயத்தை சீமானிடமே கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி. அதற்கு நீ என்ன வேண்டுமானும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ… ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்துதான் கட்சியை வளர்த்து வருகிறேன்… என துரைமுருகனுக்கே ஆதரவாக பேசியுள்ளார். இந்த விவகாரங்கள் மொத்தமும் தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் தமிழ்மணி பேசியுள்ளார். அந்த உரையாடல்கள் முகநூலில் ஆடியோ பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. ஒரு சில ஆடியோ பதிவுகளை கேட்டபோது மனம் கனத்துப் போனது.
கட்சிக்காக தனது வாழ்கையையே பணயம் வைத்து எல்லா வகைகளிலும் தோற்றுப் போன ஒரு மனிதனின் புலம்பல்களாக இருந்தன அந்த உரையாடல்கள். தனது கட்சி வாழ்க்கையைக் குறித்து ஓரிடத்தில் தமிழ்மணி இவ்வாறு சொல்கிறார் : “இதே ஒரு வாழ்க்கை முறையா இருந்திச்சி அண்ணே. காலைல பல் விளக்குவதைப் போல. இப்போ எல்லாம் வெறுத்துப் போச்சு. இனி என்ன இந்தக் கடனில் இருந்து வெளி வர வேண்டும். ஏதோ தொழில் நடந்தால் போதும். ஊரில் விவசாயம் இருக்கு; வருசத்துக்கு நாலு மூடை நெல்லு வரும். எனக்கென்ன சிகரெட்டு தண்ணி பழக்கம் கூட இல்லை. எப்படியாவது பிழைச்சி மேல வந்துடுவேன்”.
இதற்கிடையே நாம் தமிழர் தம்பிமார்களின் ஆபாச தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளன. இந்நிலையில் மனம் நொந்து போன தமிழ்மணி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தனது கணவனின் நிலை கண்டு விரக்தியடைந்த தமிழ்மணியின் மனைவி ஜான்சி ராணி தீக்குளித்துள்ளார். தற்போது 63% தீக்காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி பரிதாபமாய் இறந்து விட்டார்.)
தமிழ்மணியின் நிலையறிந்த அவரக்கு நெருக்கமான நாம் தமிழர் தம்பிமார்கள் இந்த விவரங்களை முகநூலில் பதிவிட்டு துரைமுருகனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். எனினும், தமிழ்மணி மனைவியின் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்சினையின் காரணமாகவே நடந்தது என அவரே போலீசாரிடம் தெரிவித்ததாகவும், இதை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் விலகி நிற்பவர்களுமே பெரிதுபடுத்துகிறார்கள் எனவும் நாம் தமிழர் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகிறது.
மழுப்பலான கட்சியின் அறிக்கையை தமிழ்மணியை அறிந்த நாம் தமிழர் தம்பிமார்கள் ஏற்காமல் தொடர்ந்து துரைமுருகனை நீக்குமாறு குரல் கொடுக்கவே அடுத்ததாக மருத்துவமனையின் முன் சோகமாக அமர்ந்திருக்கும் தமிழ்மணியை பேசச் சொல்லி 15 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை பதிவு செய்து பரப்பி வருகின்றனர் துரைமுருகன் ஆதரவு தம்பிமார்கள். அதில், இது குடும்ப பிரச்சினை என்றும், தான் உயிராக நேசித்த கட்சிக்கு எந்த தொந்திரவும் செய்ய வேண்டாம் எனவும் தமிழ் மணி கேட்கிறார்.
ஆனால் சம்பவங்களின் கோர்வையை மிக கவனமாக பார்ப்பவர்கள் எவருக்கும் இதில் உண்மை என்னவென்பதை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது. பொருளாதார ரீதியில் ஏற்கனவே நலிவடைந்து வறுமையில் வாடும் நிலை மனைவியின் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை துரைமுருகனின் ஆதரவாளர்கள் இந்த சூழலிலும் கேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை அந்த காணொளியே அப்பட்டமாக உணர்த்துகின்றது.
சொல்லப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, சொல்லாத வார்த்தைகளிலும் உண்மை புதைந்து கிடக்கிறது. தமிழ்மணிக்கு நெருக்கமான தம்பிமார்கள் அவரது மனைவியின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு வேண்டி வங்கி கணக்கு விவரங்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக நாம் தமிழர் தலைமை அந்த கோரிக்கை அதிகாரப்பூர்வமற்றது எனவும், அந்த பதிவுகளை கட்சித் தொண்டர்கள் பகிரக் கூடாது எனவும் அறிக்கைவிட்டுள்ளது.
மேற்படி விவகாரங்கள் அனைத்தும் முகநூலில் பதிவு செய்யப்பட்ட நாம் தமிழர் ஆதரவாளர்களின் பதிவுகளில் பகிரங்கமாக உள்ளது. குற்றவாளி துரைமுருகனை நாம் தமிழர் கட்சி காப்பாற்றும் நடவடிக்கை மிக மோசமாக அம்பலமாகி உள்ளது.
சில முகநூல் பதிவுகள் மற்றும் ஆதாரங்களுக்கு பின் வரும் இணைப்புகளில் பார்க்கவும்.
*****
தமிழ்மணிக்கு நிகழ்ந்த அநீதிக்கு யார் பொறுப்பு ?
நாம் தமிழர் என்கிற கட்சியே கீழிருந்து மேல் வரை எவ்வித ஜனநாயகமும் இல்லாது கட்டப்பட்டிருக்கும் ஒரு இனவாத அமைப்பு. வெளிப்படையாக ஹிட்லரைப் போற்றுவது, சாதியின் அடிப்படையில் இனத்தை தீர்மானிப்பது, இனத் தூய்மைவாதம் பேசுவது என இவையெல்லாம் அந்தக் கட்சி அடிப்படையிலேயே ஒரு வலதுசாரி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுகள். திருச்சி சங்கர் அய்யர் என்பவரே தனது அரசியல் குரு என சீமான் பல பேட்டிகளில் குறிப்பிடுகிறார். மேற்படி அய்யர் மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுத்த தத்துவத்தின் படி பார்ப்பனர்கள் தமிழர்கள், ஆனால் தமிழகத்திலேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் நாயக்கர்களும், நாயுடுகளும், அருந்ததி இன மக்களும் வந்தேறிகள்.
எப்படி இந்துத்துவ அரசியல் இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்துகிறதோ அதே போல் நாம் தமிழர் ‘வடுகர்களை’ எதிர்நிலையில் நிறுத்துகிறது. எப்படி இந்துத்துவம் லிபரல் ஜனநாயகம் பேசுபவர்களை ஆண்டி இந்தியன்களாக அறிவிக்கிறதோ அதே போல் பெரியாரிய திராவிட அரசியல் பேசுகிறவர்களை இனத்துரோகிகளாக அறிவிக்கின்றனர் நாம் தமிழர் தம்பிமார்கள்.
அங்கே ராமன் என்றால் இங்கே முருகன். அங்கே சர்வாதிகாரம் என்றால் இங்கே “அன்பான” சர்வாதிகாரம். அவர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்றால் இங்கே பார்ப்பன நேசன் ராஜராஜனின் ராஜ்ஜியம். சீமான் தனது அரசியலைக் கொண்டு அதிகாரத்தை வென்றெடுப்பது குறித்துப் பேசுவதில்லை “அதிகாரத்தைக் என்னிடம் கொடுத்து விடுங்கள்” என மக்களை எச்சரிக்கிறார்.
வலதுசாரி அரசியலின் இலக்கு சமூகத்தின் லும்பன் பிரிவினர். பாரதிய ஜனதா யாரை நோக்கி, யாருக்காக பேசுகிறதோ அதே லும்பன் பிரிவினரை நோக்கித்தான் சீமானும் பேசுகிறார். இந்துத்துவத்தின் பார்ப்பன சாதிவெறி தன்னை மதவெறியாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்றால், தமிழ் ஆண்ட சாதிகளின் வெறி இனவெறியாக நாம் தமிழர் அரசியலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
சரியாகச் சொல்லப்போனால் எதிர்காலத்தில் இந்துத்துவ அரசியலின் தமிழக நுழைவுக்கு பாதை போட்டுக் கொடுக்கிறது நாம் தமிழர் கட்சி. முந்தைய காலங்களில் பார்ப்பனர்கள் பல்லக்குகளில் வருவர்; பல்லக்குத் தூக்கிகள் இருப்பார்கள். அவர்களுக்கு முன் “முள் பொறுக்கிகள்” என சிலரை வைத்திருப்பார்கள். இந்த முள் பொறுக்கிகளின் வேலை பல்லக்கு வருவதற்கு முன் பாதையில் உள்ள முட்களை அப்புறப்படுத்துவது. இந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.
இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும் ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மணியையும் அவரது மனைவியையும் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக ஏசியவர்கள் இவர்கள்தான். இவர்கள் கட்சியின் உத்தரவைப் பெற்றுத்தான் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதில்லை – குறிப்பான சந்தர்ப்பங்களில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை சாராயம் அருந்திய பைத்தியக்கார குரங்குகள் தாமே தீர்மானித்துக் கொள்ளும். ஆதாரம் வேண்டுமா? இந்தப் பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் தமிழர் என்கிற இந்துத்துவ கும்பலின் முள்பொறுக்கிகளை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதோடு தனிமைப்படுத்த வேண்டிய தருணம் இது.
அண்மையில் பன்னிரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் தமிழைவிடத் தொன்மையான மொழி சமற்கிரதம் (தமிழ் 2300 ஆண்டுகள், சமற்கிரதம் 4000 ஆண்டுகள்- தொன்மை) எனக் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து எது தொன்மையானது என்ற வழக்காடல் இடம்பெற்றுவருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரே சமற்கிரதத்திற்காக பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டிருப்பதேயாகும்.
சமற்கிரதத்தின் தொன்மைக்காக வழக்காடுபவர்கள் எல்லோருமே அறிவியலிற்குப் புறம்பாக வெறும் புராணங்களையும், கட்டுக்கதைகளையும், புரட்டல்களையுமே சான்றாகக் கொண்டுள்ளார்கள். இவை பற்றிய ஒரு விளக்கமாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. முடியுமானவரை நான் எனது ஆய்வுகளைக் குறித்த பெயரிலிருந்தே தொடங்குவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையிலேயே இதனையும் அணுகுவோம்.
தமிழ் – சமற்கிரதம் ஆகியவற்றுக்கான பெயர்க் காரணம் :
முதலில் தமிழைப் பார்த்தால், தமிழின் பெயர் இயற்கையாகவே அமைந்துள்ளது. “தமிழிற்கு அமிழ்து என்று பெயர்” என்று பாரதிதாசன் பாடியிருப்பார். இந்த ‘அமிழ்து’ என்ற சொல்தான் தமிழிற்கு அடிப்படை. இதனை விளக்கிய புலவர் இரா.இளங்குமரனார் பின்வருமாறு விளக்கியிருப்பார்.
“ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது அம்மு, அம்மு என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது . அமிழ்வதால் (உள்ளிறங்கி சுவையீட்டுவதால்) அமிழ்தம் எனப்படும்”. இச் சொல்லானது வடமொழியிலுள்ள அ+மிர்த் என்பதிலிருந்து வேறுபட்டது {அமிர்த்= சாவற்ற வாழ்வு என்ற பாற்கடல் கடைந்த கற்பனைக்கதை, இரண்டிற்குமுள்ள பலுக்கல் (ஒலிப்பு) ஒற்றுமையினைக் கொண்டு, இரண்டும் ஒன்றல்ல}. அமிழ்து என்ற சொல் தோன்றியதனை மேலே பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
அமிழ்து,அமிழ்து……. தமிழ், தமிழ் ‘தமிழ்’என்ற சொல் வந்துவிட்டதா!
அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ்(து) ஆகின்றதோ {அம்+இழ் = அமிழ், இழ்-இதழ்}, அதே போன்று தம்மிலிருந்து மலர்வது தமிழ் {தம்+இழ்=தமிழ்} ஆகின்றது. இவ்வாறு இயற்கையாக வாழ்வியலோடு இணைந்து தமிழ் மொழிக்கான பெயர்க் காரணம் காணப்படுகின்றது.
அடுத்து சமற்கிரதத்தினைப் பார்ப்போம். சமற்கிரதம் என்பதற்குச் செயற்கையாக நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதே பொருள் {‘Sanskrit’ is derived from the conjoining of the prefix ‘Sam’ meaning ‘samyak’ which indicates ‘entirely’, and ‘krit’ that indicates ‘done’}. எவ்வாறு நன்றாகச் செய்யப்பட்டது?
ஏற்கெனவே இருந்த மொழிகளிலிருந்து சொற்களை (Raw Form) எடுத்து, நன்றாக முழுமையாகச் செய்யப்பட்ட சொற்களே சமற்கிரத மொழிச் சொற்கள் (Refined Form). இன்னமும் விரிவாகச் சொன்னால், இங்கு ஏற்கெனவேயிருந்த பிராகிருதம், பாலி, தமிழ் போன்ற மொழிகளிலிருந்து எடுத்த சொற்களையும், தாம் ஏற்கனவே கொண்டு வந்த ஐரோப்பிய மொழிச் சொற்களையும் (இவை எல்லாமே பேச்சு வழக்கிலான சொற்களே) இணைத்து நன்றாகச் செய்யப்பட்ட மொழியே சமற்கிரதமாகும்.
இவ்வாறு ஐரோப்பிய மொழிச் சொற்களையும், இங்கிருந்த மொழிச் சொற்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட மொழியாதலாலேயே, சமற்கிரதத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு மொழி எனப் பல அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.
இப்போது சொல்லுங்கள், சமைக்கப்பட்ட மொழி தொன்மையானதா? அல்லது அந்தச் சமையலிற்கே மூலப்பொருளான மொழி தொன்மயானதா?
பேச்சுமொழி :
மொழிப் பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம், இப்போது பேச்சு வழக்கில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்போம். பேச்சு வழக்கில் எந்தமொழி தொன்மையானது எனக் கண்டறிவது இலகுவானதல்ல, ஏனெனில் சைகை மொழியானது (அசைவு மொழி) சில வகையான ஒலிக்கோவைகளாக மாறிப் பின்னரே பேச்சுமொழியாகப் படிமலர்ச்சி பெறும். மேலும், பேச்சுமொழிக்கான தொல்லியல் சான்றுகளும் காணப்படமாட்டாது. எனவேதான் பேச்சு வழக்கிலான மொழிகளில் எது தொன்மையானது எனக் கண்டறிவது கடினமானது.
இங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த 16 அறிவியலாளர்கள் (16 scientists led by Prof. Martin P. Richards of the University of Huddersfield, U.K.) மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பு ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அரியானாவின் ராகிகடி ஆய்வும் இதனையே வலியுறுத்தியிருந்தது(“An Inconvenient Truth” என்ற தலைப்பில் இந்தியா டுடே’ 2018 செப்.10-ல் வெளிவந்தது).
இவ்வாறான ஆரியர் வருகைக்கு முன்னரே சிந்துவெளி நாகரிகத்தில் தமிழ் இருந்தமைக்குமான சான்றுகளும் இன்று பெருமளவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிக எழுத்துகளிற்கும் (தொல் தமிழி) தமிழிற்குமுள்ள தொடர்புகளும் வெளிவந்துவிட்டன. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே பேச்சு வழக்கில் தமிழ் இருந்தது என்பது உறுதியாகிவிட்டது. சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிகளில் இன்றைக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் (கொற்கை, வஞ்சி, தொண்டை…. ) இருக்கின்றன.
இவ்வாறு ஏற்கனவே செழிப்புற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தினை அப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஆரியர்களே அழித்தாக ஒரு கருத்து உள்ளது. இதனை ரிக் வேதம் (Rig vedda 1.51.11) ‘அசுரன் பிப்ருவின் கோட்டைகளை (Pur) இந்திரா ஆரியர்களிற்காக அழித்தார்’ எனச் சுட்டுவதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசம்பி ‘இந்திய வரலாறு ஒரு அறிமுகம்’ எனும் நூலில் (தமிழாக்கம் பக்கம் 150) குறிப்பிடுவார். இதனையே க.கைலாசபதி தனது ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ எனும் நூலில் “வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் மட்பாண்டங்களை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடுவது சிந்துவெளி நாகரிகத்தை அழித்தான் என்பதனையே குறிக்கும்” என்கின்றார் (பக்கம் 6).
வேறு சில ஆய்வாளர்கள் வறட்சியால் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பின்பே ஆரியர் வந்தாகக் கூறுவார்கள். எது எவ்வாறாயினும் ஆரியர்கள் வரும்போதே இங்குள்ள மக்கள் மொழி அறிவுடனேயே இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது. எனவே பேச்சு வடிவத்திலும் தமிழ் மொழியானது சமற்கிரதத்தை விடத் தொன்மையானது என்பது தெளிவாகின்றது.
எழுத்து வடிவம் :
எழுத்து வடிவில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்பதே அறிவியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இலகுவானதும், நடைமுறை வாய்ப்பு உள்ளாதுமான ஒரு முறையாகும். ஆனால் இந்த முறையான ஒப்பீட்டிற்கு, வட மொழித் தாங்கலாளர்கள் வரவே மாட்டார்கள். ‘பல்லில்லாதவன் தனக்கு பக்கோடா பிடிக்காது’ என்ற மாதிரி தமது வேதங்கள் ‘எழுதாக் கிளவி’ / ‘எழுதா மறை’ என்பார்கள். (உண்மையில் அவை எழுத்து வடிவம் இல்லாத மறைகளே).
ஏற்கெனவே இருந்த சிந்துவெளி (தொல் தமிழி) எழுத்து வடிவம், பிராகிரத பிராமி (அசோகர் கல்வெட்டு வடிவம்), தமிழி போன்ற வரி வடிவங்களிலிருந்து தமக்கு என ஒரு எழுத்து வடிவத்தினை (Sanskrit Nagari ) CE 1ம் – 4ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் தேவநாகரி வரிவடிவம் CE 4ம் நூற்றாண்டிலேயே உருவானது {சான்று- Gazetteer of the Bombay Presidency at Google Books, Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30–45, particularly Devanagari inscription on Jayadaman’s coins pages 33–34}} . தமக்கு என ஒரு சொந்த எழுத்து வடிவம் இல்லாது இன்றும் தேவநாகரி எழுத்துவடிவினையே பயன்படுத்திவருகின்றார்கள்.
இந்த `தேவநாகரி` என்ற சொல்லே தே+நகர் (Devanagari=Deva+Nagari) என்ற இரு சொற்களையே அடிப்படையாகக் கொண்டவை. இவையிரண்டுமே தமிழ்ச் சொற்களையே அடியாகக் கொண்டவை என்பது தெரிந்தால் நீங்கள் வியப்படையக் கூடும். தே என்ற சொல் தெய்வம் என்பதனைத் தமிழில் குறிக்கும். அதே போன்று மக்கள் நகர்ந்து சென்று (move ) உருவாகும் இடமே நகர் {ஊர்ந்து சென்று உருவான ‘ஊர்’ என்பது போல}. இவ்வாறு உருவான தேவநாகரி வடிவமானது வடமொழியில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே பொதுப் பயன்பாட்டிற்கு வருகின்றது (சான்று- Oxford University Press, ISBN 978-0195356663, pages 40–42). 12-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் மிகப் பெருமளவில் எழுதிக் குவித்த அவர்களின் திறமையினை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும், ஆனால் அவற்றினைக் காலத்தால் முன் கொண்டு செல்ல முயல்வது நேர்மையற்ற செயலேயாகும்.
அவர்களின் எழுத்து வடிவத்திற்கு பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்ட தமிழி எழுத்து வடிவங்களிற்கான பல சான்றுகள் {அறிவியல்ரீதியில் சான்றுப்படுத்தப்பட்ட பல சான்றுகள்} எமக்கு இன்று கிடைத்துள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு. (ஜம்பை)
1. 1970-ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE (கி.மு).850 முதல் BCE(கி.மு)660 வரை) என கணிக்கப்பட்டது. அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் BCE755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் BCE 8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
(SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).
2. கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் BCE 400
(SOURCE: முனைவர் கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக்: 66)
3. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் BCE 450 என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். அந்த மட்பாண்டங்களிலும் தமிழி எழுத்துக்கள் காணப்பட்டன. இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழி காலம் BCE 5-ம் நூற்றாண்டு என்பது ஐயத்திற்கு இடமின்றி சான்றுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், தமிழ் எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் BCE 3-ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழி உருவாகவில்லை என்பதும் திண்ணம் என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.
(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)
4. வடஇலங்கையில் (ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் BCE 4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.
(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)
இவ்வாறு சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு University of Cambridge இனைச் சேர்ந்த பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட An Oxford Companion to Indian Archaeology, Indian Archaeological History ஆகிய இரு நூல்களிலும் தமிழி ஆனது அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே தமிழியே எழுத்து வடிவில் தொன்மையானது என்பது யாருமே மறுக்கமுடியாது. இந்தியாவில் கிடைத்த பழங்கல்வெட்டுகளில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழிலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் கீழடி அகழ்வாய்விலும் பல தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சான்றுகள் பெருமளவிற்கு கிடைத்துவருகின்ற போதும், அவற்றினை உரியமுறையில் ஆய்வுகளிற்கு உட்படுத்த நடுவண் அரசு முட்டுக்கட்டை போட்டுவருவது தெரிந்ததே.
மொழியின் சிறப்பு :
தொன்மை மட்டுமல்ல, மொழியின் சிறப்பிலும் தமிழே உயர்ந்தது. தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியோ, தமிழ்மொழியிலுள்ள வேர்ச்சொல் விளக்கங்களையோ சமற்கிரதத்தில் எண்ணிப் பார்க்கவே முடியாது.
எடுத்துக்காட்டாக Planet எனும் ஆங்கிலச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் (கோள்) – சமற்கிரதச்சொல் (கிரகம்) என்பவற்றினையே எடுப்போம். இங்கு கிரகம் என்பது ஆளுகைக்காரர் என்ற பொருளில் சோதிட நம்பிக்கையினையும், கோள் என்ற அறிவியற்சொல் தாமாக ஒளிராமல் விண்மீன்களிலிருந்து ஒளியினைக் கொள்வதால் {மின்னுவதால் ஏற்பட்ட மின்- ‘மீன்’ ஆனது போல, கொள்வதால் ஏற்பட்ட கொள் – ‘கோள்’} கோள் என அறிவியலையும் (சங்க காலத்திலேயே) பேசியுள்ளது. ஒரு புறத்தில் ‘பிறப்பொக்கும்’ என சம-அறம் பேசும் தமிழ் எங்கே? ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என சாதி முறையினைக் கடவுளே படைத்தாகக் கூறும் வடமொழி எங்கே?. மொழியின் பெருமை பேசினால் பதிவு நீளும் என்பதால் இத்துடன் முடிப்போம்.
தமிழும் சமற்கிரதமும் இரண்டு கண்களா?
இரண்டு கண்களேயானாலும் ஒரே நேரத்தில் இரு காட்சிகள் காண முடியாது. பிற மொழிகளை அழிப்பதனையே தொழிலாகக் கொண்ட சமற்கிரதம் (மொழி பேசுவோர்), எவ்வாறு அழிக்க முயற்சிக்கப்படும் மொழியான தமிழுடன் ஒன்றாக முடியும். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் வரை ஒன்றாகத் தமிழாகவிருந்த மலையாளம் இன்று எவ்வாறு பிரிந்துபோனது?
சிலப்பதிகாரத்தில் காணப்படும் தமிழர் இசை வடிவங்கள், நடன வடிவங்கள் எல்லாம் இன்று எமது கையினை விட்டுப்போனது எவ்வாறு? மேற்கூறியனவற்றுக்கு எல்லாம் ஒரே காரணம் ஆதிக்க மொழியான சமற்கிரதமே (உண்மையில் அம்மொழித் தாங்கலாளர்களே). ஆதிக்க மொழியும், அற மொழியும் ஒருபோதும் ஒன்றாகமுடியாது. அவ்வாறு பேசுவோர்கள் ஒரு மறைமுகத் திட்டத்தினூடாக தமிழை அழிக்க / சிதைக்கவே முனைவார்கள்.
பாடநூல் குழப்பம் :
இறுதியாக, மீண்டும் பாடப் புத்தகத்திற்கு வந்து, ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டது எனப் பார்ப்போம். உண்மையில் இது அறிஞர் George L. Hart என்பவரின் கருத்தாகும். அவர் சமற்கிரதத்தின் தொன்மையினைக் கணிக்கும்போது ஆரியர்களின் படையெடுப்பின் முதல் அலையான 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினையும் (BCE 2000) , தமிழின் தொன்மையினை தமிழி எழுத்துகளின் முந்திய கண்டுபிடிப்புக் காலத்தையும் (BCE 300 ) {உண்மையில் அதனையும் தாண்டிய பல தமிழி எழுத்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றினை BCE 300 இற்குள் அடக்கும் முயற்சி ஒன்று இந்திய நடுவண் அரசால் அசோகரின் கல்வெட்டினையே முந்தியதாகக் காட்ட மேற்கொள்ளும் முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது} கவனத்திற்கொண்டுள்ளார்.
அதாவது சமற்கிரத்தின் பேச்சு வடிவத் தொடக்க காலத்தையும் (BCE 2000 ), தமிழ் மொழியின் எழுத்துவடிவம் கிடைத்துள்ள காலத்தையும் (BCE 300) ஒப்பிட்டுத் தொன்மையினைக் கணித்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஒன்றில் இரு மொழிகளின் பேச்சுத் தொன்மையினை ஒப்பிட்டிருக்கவேண்டும் அல்லது சான்றுகள் அடிப்படையிலான எழுத்து வடிவத்தினையே ஒப்பிட்டிருக்க வேண்டும். தமிழ் – சமற்கிரத பேராசிரியரான அவர் இன்னொரு இடத்தில் புத்தகம் என்ற சொல்லைச் சமற்கிரதச் சொல்லாகவே கூறுகின்றார். உண்மையில் அது ஒரு தமிழ்ச்சொல். பழங்காலத்தில் ஓலைச் சுவடிகளைப் பழுதடையாமல் காப்பதற்காக பொத்தி வைப்பதால் ஏற்பட்ட பொத்தகம் என்ற சொல்லே மருவி புத்தகம் ஆகியது. அதனை எடுத்து ‘ஸ்’ என்ற எழுத்தை நுழைத்து ‘புஸ்தகம்’ என வடமொழியாக்கிக் கொண்டார்கள். அச் சொல்லினைத் தவறாகக் கருதியது போன்றே, இந்த ஒப்பீட்டினையும் தவறாகவே அணுகியுள்ளார்.
அவரின் பிழையான ஒப்பீட்டினை அப்படியே பாடநூலில் உள்வாங்கியிருப்பதனை என்ன சொல்வது! முன்பொருமுறை மோடியே ‘தமிழே சமற்கிரதத்தை விடத் தொன்மையானது’ எனக் கூறியிருக்க, மோடியின் அடிமையான தமிழக அரசு இவ்வாறு பாடப்புத்தகத்தை வெளியிடுவதனை என்ன சொல்வது? ‘More loyal than the king’ என்பதுதானே நினைவிற்கு வந்துதொலைக்கின்றது.
சுருக்கமாகக் கூறினால், மேலே தமிழே சமற்கிரதத்தைவிடத் தொன்மையானது என மொழிப்பெயர், பேச்சு வடிவம், எழுத்து வடிவம் என்பவற்றைக் கொண்டு நிறுவினோம். மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே நாம் அதில் கவனம் செலுத்தி, தமிழை அறிவியல்- வாழ்வியல் முறைகளில் பயன்படுத்துவோம். அதுவே இப்போது எமது மொழிக்கு நாம் செய்யக்கூடிய ஒன்றாகும்.
தேசியப் புலனாய்வு முகமைக்குக் (NIA)கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனுடன் அமைப்பு சாராத தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வகை செய்யும் திருத்தமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கொண்டுவரப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை கமிசனின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, எல்லா ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் நியமிப்பதற்கும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மனித உரிமை கமிசனில் நுழைப்பதற்கும் ஏற்ற திருத்தங்களும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
என்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநிலக் காவல்துறையின் அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநிலக் காவல்துறையின் அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.
பிரிவினைவாதத் தடைச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட உபா (UAPA) சட்டத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இப்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாநில அரசின் அனுமதியில்லாமல், என்.ஐ.ஏ. நேரடியாகவே முடக்குவதற்கான திருத்தமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இசுலாமியக் கட்சிகளைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. மற்ற 278 எம்.பிக்கள் – தி.மு.க. உள்ளிட்டு இதனை ஆதரித்தே வாக்களித்திருக்கின்றனர்.
இந்தத் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும், அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்தப்படும், முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தையும் நிராகரித்த அமித் ஷா, பொடா சட்டம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஓட்டு வங்கி அரசியலுக்காகத்தான் காங்கிரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதாகவும், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கே ஆதாரமற்ற பொய்வழக்கு என்றும் குற்றஞ்சாட்டினார்.
அமித் ஷா பேசிய அனைத்தும் பொய். என்.ஐ.ஏ. மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது என்றும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், வேறு யாருமல்ல, பிரக்யா சிங் தாக்குர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ப.சிதம்பரமே, இது நீதிமன்றத்தில் நிற்குமா என்று தெரியவில்லை எனக்கூறியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்குக் கணக்கிலடங்காத எடுத்துக்காட்டுகள் உள்ளன. சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான மறுக்கமுடியாத மின்னணு (எலக்ட்ரானிக்) ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை. என்.ஐ.ஏ.-வின் யோக்கியதையைக் காறி உமிழ்ந்து விட்டுத்தான் அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியான் பதவி விலகினார். என்.ஐ.ஏ. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஹாதியாவின் திருமணம் மதமாற்ற சதியா என்று விசாரிப்பதற்கு என்.ஐ.ஏ. வை நியமித்தது உச்ச நீதிமன்றம்.
இன்னும் சொல்வதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், ஆதரித்து வாக்களிப்பது என்று முடிவு செய்தபின், எப்படி எதிர்த்துப் பேச முடியும்? இவர்கள்தான் மதச்சார்பின்மையையும் மக்களின் உரிமைகளையும் காப்பாற்றக் களம் புகுந்திருக்கும் மாவீரர்களாம்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையை ஒட்டியிருக்கும் சிமெண்ட் ஜாலி தயாரிக்கும் தொழிலகம். கோடை மழையால் வேலை தடைபட்ட கவலையில் இருந்தனர். அத்தொழிலாளிகளிடம் தற்போதைய தொழில் நிலைமையை கேட்டோம்.
“நாங்கள் கிணற்று உறை, ஜாலி தயாரிக்கும் வேலையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எங்கள் பொழப்பு நாறிவிடும். சிமெண்ட் உறை சம்பந்தமாக எல்லா வேலைகளையும் செய்வோம். புது வீடுகளுக்கு கிணறு தோண்டுவது; பழைய கிணறுகளில் தூர் வாறி அதில் புது உறை இறக்குவது; பில்டர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை செய்து கொடுப்போம். பழைய கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, நாள்பட்ட அத்தொட்டிகளில் உப்புநீரால் இற்றுப்போன பழைய உறைகளுக்குப் பதில் புதிய உறைகள் போடுவது என்று கிணறு சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்வோம். எல்லாமே எங்கள் கை உழைப்புதான். இதற்கென எந்த இயந்திரமும் கிடையாது. பல சமயங்களில் இவ்வேலை எங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
வெங்கடேசன் – கிணற்றுக்கு உறை போடும் தொழிலாளி.
புது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.
கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி விஷவாயுவுக்கு பலியானவர்கள் பலபேர். ஆனாலும் இத்தொழிலை விட்டால் எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அனுபவத்தை வைத்து உசாராக ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வேலைகளை முடிப்போம். அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்று துணிந்தால்தான் பொழப்பு ஓடும்.
கிணறு உள்ள பகுதி மணல் பூமியாக இருந்தால் 10 அடிக்குக் கீழ் கால் சேறுமாதிரி புதையும். அப்போதே உசாராவோம். உடனே உறைகளை சுற்றி இறக்கி கரைகளை பலப்படுத்திவிடுவோம். அதற்கு மேல் உறைகளுக்கு உள்ளிருந்து மணலை எடுப்போம். அது மிகவும் கஷ்டமான பணி. இருந்தாலும் உயிர் முக்கியமில்லையா. அதிகபட்சம் 40 அடி ஆழம் மேல் போனால் ரிஸ்க்தான். எனவே அதோடு வேலையை முடித்து வெளியே வர முயற்சிப்போம். புறநகர் என்பதால் பெரும்பாலும் அதற்குள் தண்ணீர் கிடைக்கும். 50 அடி கிணற்றில் 5 அடி ஆழம் தண்ணீர் ஊறினால் போதும். வீட்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். அதற்கே உறை, கூலி என 60 ஆயிரம் ரூபா செலவாகும்.
வீட்டோட காலி இடத்தின் வசதிக்கு ஏற்ப கிணற்றின் அகலம் 3 அடியிலிருந்து 6 அடி வரை இருக்கும். இதற்கு 7 பேரிலிருந்து 9 பேர் வரை 3 நாள் தொடர்ந்து வேலை செய்வோம். ஒரு கிணறு தோண்டினால் ஒருவருக்கு 3 நாள் கூலியாக குறைந்தது ரூபா 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை கிடைக்கும். இப்படி மாதத்திற்கு ஒரு வேலை வருவதே கஷ்டம்.
புதுக்கிணறு வேலை இல்லாதபோது கழிவுநீர் சம்ப் தூர்வாருவது, சுத்தம் செய்வது என்று ஏதாவது ஒரு வேலையைத் தேடுவோம். சமயத்தில் மலத்தொட்டி, கழிவுநீர்த் தொட்டி என்று வித்தியாசம் இல்லாமல் கலந்திருக்கும். இந்த வேலையே எப்போதும் உயிருக்கு உலைதான். எனவே முடிந்தவரை எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்.
கழிவுநீர்த் தொட்டியில் விசவாயு இருக்கிறதா என்று பார்க்க, பக்கெட்டில் கற்பூரத்தை கொளுத்தி வைத்து குழியில் இறக்குவோம். நீர்மட்டம் வரை கற்பூரம் அணையாமல் இருந்தால் விஷவாயு இல்லையென தைரியமாக இறங்குவோம். நீர் மட்டத்திற்கு மேல் கற்பூரம் அணைந்துபோனால் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். அதுக்கும் ஒரு வைத்தியம் செய்வோம். 10, 20 எலுமிச்சை பழங்களை அறுத்து அதன் சாறை தொட்டியில் ஊற்றுவோம். அதில் கேஸ் பொங்கி வெளியேறும். அதற்குமேல் மரக்கிளையை ஒடித்து சம்ப் முழுவதுமாக குத்தி குத்தி கேஸை வெளியேத்துவோம். இப்படி உயிரை பணயம் வைத்தால்தான் ஏதாவது கிடைக்கும்.
சிமெண்ட் கலவைபோடும் குழி.
இந்த வேலை செய்யும் எங்களை வீட்டுக்காரர் பெரும்பாலோர் வீட்டினுள்ளே பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வீட்டின் பக்க வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இடம் இல்லையென்றால் பின்பக்க மதில்சுவரை தாண்டி உள்ளே வரச்சொல்வார்கள். கிணற்றுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அந்த வழியில்தான் சிரமப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும். அய்யர் வீடு என்றால் இன்னும் சுத்தம். அவசரத்திற்கு எந்தப் பொருளையும் அவர்களிடம் கேட்க முடியாது, தப்பித்தவறி கேட்டுவிட்டால் இன்னொருமுறை கூப்பிடமாட்டார்கள். மிகவும் உசாராக இருப்போம்.
விஜயகாந்த் – டாட்டா ஏஸ் ஓட்டுனர்.
இன்னும் சில பணக்காரர்கள் தங்கள் பங்களாக்களில் அழகுக்கு கிணறு தோண்டுகிறார்கள். அது 20 அடி அகலத்திற்கு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் பெரும் கிணற்றோடு தோட்டம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை. இப்படியே எங்கள் பொழப்பு போகிறது.
பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் படலம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது காவிக் கும்பல்.
அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 01.08.2019 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுக்கழிவு, எட்டு வழிச்சாலை போன்ற அபாயகரமான திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய பிஜேபியை கேள்வி எழுப்புவோம் ! தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
1 of 3
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
மாணவர் அமைப்பினரின் இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களை நின்று கவனித்துக் கேட்கச் செய்தது.
தகவல்: புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. கடலூர், தொடர்புக்கு : 97888 08110.
ஹைட்ரோகார்பன் கண்டறிதலுக்கான (Exploration) ஆய்வும், எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டவுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதனை வெளிக்கொண்டுவரும் துரப்பணப் பணியும் (Production) உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான தொழில், வர்த்தகப் பணியாகும். இன்றைய உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு இன்றுவரை பெரும் ஆதாரமாக இருப்பது ஹைட்ரோகார்பன் எனும் நீர்மக் கரிமத்தில் இருந்து எடுக்கப்படும் கச்சாவும், அதனைச் சுத்திகரிப்பதன் மூலம் பிரிக்கப்படும் பெட்ரோலியம், டீசல், இயந்திர எண்ணெய், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், வாகன இயக்கத்திற்கு அவசியமான வழுக்கெண்ணை ஆகியனவும், அடுப்பங்கரையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது வரை தேவைப்படும் எரிவாயு என உலக மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத அத்தியாவசிய எரிபொருட்களின் மூலப் பொருளாக ஹைட்ரோகார்பன் இருக்கின்றது.
நமது நாட்டின் பயன்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் தேவையோ அந்த அளவிற்கு நமது நாட்டில் அதன் உற்பத்தி இல்லாத காரணத்தால் கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காடும், எரிவாயு தேவையில் 20 விழுக்காடும் இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கிறது. இதன் இறக்குமதி செலவீனத்தை அந்நிய செலாவணியைக் கொண்டே தீர்க்க வேண்டியுள்ளதால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தின்மீது ஒரு பெரும் சுமையாக உள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை – அதாவது ஏற்றுமதி வருவாய்க்கும் இறக்குமதி செலவீனத்திற்கும் இடையிலானது – இந்திய ஒன்றிய அரசின் நிதி நிலை மேலாண்மையில் ஒரு பெரும் சவாலாக இன்றளவும் திகழ்கிறது.
… நாட்டிற்கும் வீட்டிற்கும் பயணத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவசியமான எரிசக்திகளின் மூலமாகத் திகழும் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டம் ஒன்றிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதேன்? இந்திய ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 700 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் நடைபெற்று வருகிறது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே இப்போது எழுந்துள்ள எதிர்ப்பு தவறான புரிதலில் ஏற்பட்டதுதான் என்று கூறியுள்ளது.
அப்படியானால் தமிழ்நாட்டில், அதுவும் விவசாயம் செழித்தோங்கும் காவிரி படுகைக் கிராமங்களில் எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தவறான புரிதலில் உருவானதா? அந்த போராட்டங்களில் எந்த நியாயமும் இல்லையா? பெட்ரோலிய அமைச்சக அறிக்கை கூறுவதுபோல் இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த போராட்டமோ, எதிர்ப்போ நடந்ததில்லையா? சிற்சில ஆங்கில செய்தித்தாள்களில் சொன்னது போல் இவையாவும் மக்களைத் தூண்டிவிட்டு பின்னின்று செயல்படும் சில சக்திகளின் செயல்தானா? என்கிற எண்ணிலடங்கா கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கெல்லாம் பதில் தேட வேண்டியது இந்தக் காலகட்டத்தின் அவசியமாகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டின் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வரும் கிராமத்தினர் எதிர்க்கின்றனர் அல்லது அவர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது என்பதை, வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்றோ அல்லது ஹைட்ரோகார்பன் தேவையின் அவசியத்தைப் புரியாத மக்களின் எதிர்ப்பு என்ற அளவில் மட்டுமே சுருக்கிப் பார்க்காமல், இது இயற்கை சார்ந்த வாழ்வியலிற்கும் தொழில் நுட்பம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையிலான மோதல் (conflict) என்று பார்ப்பதும் அணுகுவதும் பயனளிக்கும் என்பதே எனது எண்ணமாகும். இங்கு அரசினைக்கூட அரசியல் கண்கொண்டு பார்ப்பதல்ல நோக்கம். அதன் செயல்பாடுகள் எக்கோணத்திலிருந்து முடிவு செய்யப்படுகிறது என்பதையும், அதன் அணுகுமுறை இந்நாட்டின் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் உகந்ததுதானா? இச்சிக்கலுக்கு எது தீர்வு என்கிற இறுதி இலக்கை நோக்கி பயனிப்பதையும் அடிப்படையைக் கொண்டே பகுப்பாயப்பட்டுள்ளது. (நூலின் முகவுரையிலிருந்து…)
கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்
140 ஆண்டுகள் காணா அளவிற்கு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு 65 விழுக்காடு குறைந்ததே தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சிக்குக் காரணம் என்பதே நமக்கெல்லாம் தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் பயிர் வளச் செழிப்பால் நம்மைக் கவர்ந்த பசுமை இன்று நமது கண்ணிற்குக் கிட்டாமல் செய்யும் இந்த வறட்சிக்குப் பருவ மழைக் குறைவாகப் பெய்தது மட்டுமே காரணமா? சிறு பிள்ளைப் பருவம் முதல் எத்தனையோ ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தஞ்சைத் தரணியில் பயணித்திருக்கிறேன். ஆனால் ஹைட்ரோகார்பன் துரப்பணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர மேற்கொண்ட இந்தப் பயணத்தில் அனுபவித்த வெப்பமும், நிலங்கள் வறண்டு கிடந்த காட்சியும் இதுவரை கண்டிராத ஒன்று. அந்த அளவிற்குப் பயிர் வளத்திற்கும் பசுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இப்போது வறண்டுக் கிடக்கின்றன.
படம் : நன்றி – விகடன்
பேசத் தெரிந்த அம்மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் விவசாயத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களும் மட்டுமின்றி, அங்குள்ள இயற்கைச் சூழலும் எப்படிப்பட்ட பாதிப்பை அனுபவித்து வருகின்றன என்பதை அங்கு சென்று பார்ப்பவர்களால் உணரமுடியும். பசுமை வயல்களுக்கு இடையே நடந்து செல்லும்போது வீசும் காற்றும், மரங்களின் நிழல்களில் நின்று பார்க்கும் போது கண்ணிற்குக் கிடைக்கும் பசுமைக் காட்சிகளும் பழங்கதையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு இயற்கைச் சூழல் உயிரற்றுக் கிடக்கிறது.
மன்னார்குடியில் இருந்து நாகை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்கள் வரை மூன்று நாட்கள் பயணம் செய்து பார்த்தபோது, எங்கெல்லாம் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் / எரிவாயு துரப்பணக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளவோ அங்கெல்லாம் நிலவிய சூழலிற்கும், மற்ற இடங்களில் நிலவிய சூழலிற்கும் நன்கு உணரக்கூடிய வேறுபாடுகள் இருந்தன. வரலாற்றுக் காலம் முதல் வேளாண் மண்டலமாகத் திகழ்ந்த காவிரிப் படுகையில் ‘வளர்ச்சிக்கான’ எண்ணெய் துரப்பணத் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எவ்வளவு கூறினாலும் அது எழுத்தின் போதாமையை வெளிப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அந்த உன்னதமான இயற்கைச் சூழல் எப்படியெல்லாம் தன்னை இழந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். (நூலிலிருந்து பக்.95-96)
♦ காப்பதற்காகப் போராட்டம், எதிர் நிலை ஊடகங்கள்
♦ எண்ணெய் கண்டுபிடிப்புத் துரப்பணம் ஆபத்தின் உருவாக்கம்
♦ ஷேல் கேஸ் – விவசாயத்தை சாய்த்து தன்னிறைவா, தன் அழிவே
♦ புவி வெப்பமடைதல் – சொல்லில் தடுத்தல் செயலில் வளர்த்தல்
♦ கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்
♦ கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன்: எடுப்பும் எதிர்வினைகளும்
♦ மாற்று தொழில்நுட்பம் மாறும் உலகம்; யாருக்கான ஆட்சி? எது மெய் வளர்ச்சி?
♦ விவசாயத்தின் வீழ்ச்சியா நாட்டின் வளர்ச்சி?
♦ விதையாலும் வஞ்சம் விலையாலும் வஞ்சம்
♦ அரண்களைத் தகர்த்த தாராளமயமாக்கல்
♦ இந்நாடு மீள்வதும் மீட்பதும் தீர்வு …
– ஆகிய உட்தலைப்புகளில் விரிவான ஆதாரங்களைக் கொண்டும் பொருத்தமான படங்களை பின்னிணைப்பாகச் சேர்த்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
நூல் : ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்) ஆசிரியர் : கா. அய்யநாதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் கட்டடம், முதல்தளம்,
அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014. தொலைபேசி எண் : 044 – 4200 9603. மின்னஞ்சல் (பதிப்பகம்) : support@nhm.in மின்னஞ்சல் (ஆசிரியர்) : ayyanathan_2007@yahoo.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 14
“குழந்தைகளே, இன்று யாரை விண்வெளி வலவர்களாகத் தேர்ந்தெடுப்பது?”
ஆம், எப்போதுமே “யாரைத் தேர்ந்தெடுப்பது?”, “யாரை அனுப்புவது?”, “ நீங்களே சொல்லுங்கள்!” என்று தான் கேட்கின்றேனே தவிர “யார் விரும்புவது?” என்று எப்போதுமே கேட்பதில்லை. “என்னைத் தேர்ந்தெடுங்கள்!.. என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என்று குழந்தைகள் தம்மைத் தாமே முன்மொழிய, நான் அவர்கள் மத்தியிலிருந்து விண்வெளி வலவர்கள், கட்டமைப்பாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அவர்கள் தம்மைத் தாமே தேர்ந்தெடுப்பதையே நான் விரும்புகிறேன். யாராவது கவனிக்கப்படாமலிருந்தால் மட்டுமே நான் தலையிடுவேன். விண்வெளி வலவர் விளையாட்டு, எல்லைக் காவல் வீரர் விளையாட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளையாட்டு, எதுவாயிருந்தாலும் எங்கள் வகுப்பில் எல்லோரும் பங்கேற்பார்கள்.
இதோ குழந்தைகள் மூன்று விண்வெளி வலவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் விண்கப்பலில் அமர்கின்றனர்.
“பூமியில் சந்திப்போம்! போய் வருகிறோம்!” பூமியில் தங்குகின்ற நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்: “பயணம் சிறக்கட்டும்!… மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்!”
“ஊ ஊ ஊ ஊ…” ராக்கெட் பறந்து போய் விட்டது. பயணத்தில் முதல் நாள்… இரண்டாவது நாள்….
நாங்கள் வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்கின்றோம். நான் அறிவிப்பாளனாகிறேன்: “நமது வீரம் மிகு விண்வெளி வலவர்களாகிய சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் ஏற்கெனவே ஆறு நாட்களாக விண்வெளியில் பறக்கின்றனர். அவர்கள் அங்கு நிறைய ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு ஓய்வு நாள்.”
“விண்வெளியிலிருந்து நேரடியாக வரும் ஒலிபரப்பைப் பார்க்கின்றோம்: சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் தம் கரங்களில் அட்டைப்பெட்டியின் விளிம்பைப் பிடித்த படி (இது தான் தொலைக்காட்சிப் பெட்டியின் திரை) பேசுகின்றனர்.
சூரிக்கோ: “நிலம், கடல் தெரிகிறது… இதோ நம் பள்ளி…” (பார்வையாளர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.)
தேயா: “வானம் மிக அழகாக உள்ளது. பூமி மிக அழகாக இருக்கின்றது! நான் பயப்படவில்லை, இதோ போன்தோ தான் பயப்படுகிறான்.” (பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்.)
போன்தோ: “தேயா சும்மா சொல்கிறாள், நான் பயப்படவில்லை . இன்று நான்… நான்… அதாவது… ராக்கெட்டிலிருந்து விண்வெளிக்கு வெளியே வந்தேன்!…” (பார்வையாளர்கள் கை தட்டுகின்றனர்.)
இதோ தரையிறங்கும் நேரம் வந்து விட்டது.
விண்வெளி வலவர்கள் விண்கப்பலிலிருந்து வெளிவருகின்றனர். காத்திருந்தவர்கள் இவர்களை வரவேற்கின்றனர்.
“வணக்கம்!…”
“வணக்கம்…”
“உங்களை பூமியில் காண்பது குறித்து மகிழ்ச்சி…..”
“நன்றி.”
“களைப்பாய் உள்ளதா?”
“இல்லை!…”
“அப்படியெல்லாம் இல்லை!”
“மீண்டும் பறக்க விரும்புகின்றீர்களா?”
“ஆம், விரும்புகிறோம்!..”
“நீங்கள் வீரர்கள்!”
விண்வெளி வீரர்கள் வரிசைகளின் இடையே நடந்து செல்ல, இவர்களின் கரங்களைப் பிடித்துக் குலுக்குகின்றனர். அவர்கள் தம்மிடங்களில் அமர, விளையாட்டு முடிவடைகிறது. ஒவ்வொரு புதிய “பறத்தலின் போதும் ஒவ்வொரு முறை புதிதாக விளையாடும் போதும் ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை”.
இன்று எங்கள் பள்ளி வாழ்வின் இருபதாவது நாளன்று, நான் பதினைந்தாவது ருஷ்ய மொழிப் பாடத்தை நடத்துகிறேன். “இது என்ன” என்ற வழக்கமான கேள்வியை நான் இந்த வகுப்புகளில் கேட்பதுமில்லை, “இது நாற்காலி… இது மேசை. இது பெஞ்சு…” என்ற வழக்கமான பதில்களை அவர்கள் சொல்வதுமில்லை. குழந்தைக்கு மேன் மேலும் நிறைய சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
ஆனால் பேசுவதற்கு சொற்கள்தான் அடிப்படையா என்ன? ஒரு கட்டிட வேலை நடக்குமிடத்தில் கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் (செங்கற்கள், மணல், சிமெண்ட்) உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இவையின்றி, இன்னும் சில இன்றி நிச்சயமாக வீடு கட்ட முடியாது. ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? ஆம், இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும். நம் விஷயத்தில் இது வார்த்தைகளையும் மொழிச் சாதனங்களையும் பேச்சாக இணைக்கும் திறமையாகும். இது இல்லாவிடில் பேச முடியாது. இது மேசை, இது நாற்காலி” என்பதெல்லாம் கட்டிடம் கட்டுமிடத்தில் உலாவும் மனிதன் “இது செங்கல், இது மணல்” என்பதற்குச் சமம். ஆனால் அவன் இவற்றை எப்பெயரிட்டு அழைத்தாலும் எவ்வளவு முறை திரும்பச் சொன்னாலும் வீடு தானாக வராது. எனவேதான் பொருட்களைப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் வார்த்தைகளை சேமிக்கும் வழியை நான் நிராகரித்தேன்.
குழந்தை ருஷ்ய மொழியை தனித்தனியாகக் கேட்கக் கூடாது, மொத்தமாக, இதன் இயக்கத்தில், செழுமையில் கேட்க வேண்டும். இந்த முழுமையைத்தான் நான் மொழி நுட்பம் என்கிறேன். ஆசிரியருடனான உரையாடல், தம்மிடையே கலந்து பேசுவது, விசேஷ பேச்சுப் பயிற்சிகள் முதலியன குழந்தைகள் மிகச் சிறப்பாக ருஷ்யப் பேச்சைப் புரிந்து கொள்ள உதவுகின்றன…
...குழந்தைகள் தம் ருஷ்ய மொழி நோட்டுப் புத்தகங்களைத் திறந்தனர் (ஆம், எங்களிடம் இத்தகைய நோட்டுப் புத்தகங்கள் உள்ளன, இவற்றில் பல “குறிப்புகள்”, படங்கள், வரைபடங்கள் இருக்கின்றன.) பேனாக்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.
பேசுவதற்கு சொற்கள் தான் அடிப்படையா என்ன? … ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? … கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் … இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும்.
“இன்று நாம் நடத்தல் எனும் வார்த்தையைப் பார்போம், இந்த வார்த்தையை வைத்து வாக்கியங்களையும் சிறு கதையையும் உருவாக்குவோம்!” என்கிறேன் நான்.
எல்லோரும் சரிவர வாக்கியங்களை அமைக்கவில்லை, குறிப்பாகச் சரியாக உச்சரிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் உதவ நான் விரைகிறேன். இந்த உதவி பல்வேறு வகைப்பட்டது: சில சமயங்களில் இப்படிச் சொல்லத்தானே நீ விரும்பினாய்?” என்று கேட்டு உதவுகிறேன்; “இப்படிச் சொல்ல வேண்டும். எங்கே திரும்பச் சொல்!” என்று சில சமயங்களில் திருத்துகிறேன்; பல சமயங்களில் குழந்தைகளிலேயே யாரையாவது உதவும்படி வேண்டுகிறேன்: “இலிக்கோ, உனக்கு தான் ருஷ்ய மொழி நன்கு தெரியுமே! இதை எப்படி சரியாகச் சொல்வது?..” இலிக்கோ தன் நண்பர்களைத் திருத்துவான், வாக்கியங்களை எப்படி உருவாக்கி, உச்சரிப்பதென விளக்குவான்.
பின்னால் சிக்கலான வேலை உள்ளது: தாம் உருவாக்கிய வார்த்தைகளின் நுட்பமான உட்பொருள்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் இச்சொற்களில் எல்லாவற்றையும் பேச்சில் பயன்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.
நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தங்கு தடையின்றி உற்சாகமாக ருஷ்ய மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். உதாரணமாக, மார்ச், ஏப்ரலில் லேலா இடைவேளை சமயத்தில் என்னிடம் வந்து விலங்கியல் பூங்காவில் (அல்லது சர்க்கசில்) எவ்வளவு சுவாரசியமாக இருந்தது, சென்ற சனிக்கிழமையன்று எப்படிப்பட்ட சிரிப்பான சம்பவம் நடந்தது என்று சொல்வாள். அவள் ருஷ்ய மொழியில் பேசுவாள், சில சமயம் ஜார்ஜிய சொற்களைப் பயன்படுத்தினாலும் அவற்றைக் கவனிக்க மாட்டாள். எங்கள் வகுப்புகளில் இவர்கள் குறைகளற்று சரியான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசுவார்கள் என்றெல்லாம் நான் உறுதியளிக்கவில்லை. ஆனால், அவர்கள் ருஷ்ய மொழியைப் பயிலுவது குறித்து மகிழ்ச்சியடைவார்கள், இம்மொழியில் உரையாட முயலுவார்கள். இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
வில்லவன் நண்பர் ஒருவர் பள்ளியொன்றில் ஆற்றுப்படுத்துனராக நியமிக்கப்பட்டார். முதல்நாள் நியமனக் கடிதத்தை கொடுக்க சென்றபோது அந்தப் பள்ளி முதல்வர் சொன்னவை “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் அறிவுரை சொல்லி கேட்காதவர்கள், நீங்க சொல்லி மட்டும் கேட்டுடுவாங்களா?”.
எங்கள் மாணவர் ஒருவர் மிகையான மனக்கவலைக்காக என்னை சந்திக்க வந்திருந்தார். எப்போது நீங்கள் இந்த சிக்கல் குறித்து கவுன்சிலரிடம் பேச வேண்டும் என முடிவு செய்தீர்கள் என கேட்டேன். ஓராண்டுக்கு முன்பு என பதில் சொன்னார். தாமதமாக சந்திப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என கேட்டேன். எங்கம்மாகிட்ட அனுமதி கேட்டேன், அதெல்லாம் மெண்ட்டலா பிரச்சினை இருக்குறவங்களுக்குத்தான் தேவை. உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றார். (குறிப்பு: என்னை சந்தித்தபோது அவருக்கு மகிழ்ச்சியின்மையோடு மரண விருப்பமும் இருந்தது.)
பள்ளியொன்றில் பணியைத் துவங்கிய ஆறு மாதத்தில் ஒரு உயர்நிலை வகுப்பு ஆசிரியர் கேட்டார் “ ஆறு மாசமா வேலை செய்யிறீங்க, ஆனாலும் பசங்க பிஹேவியர்லயும் படிப்புலயும் எந்த முன்னேற்றமும் இல்லையே?”
இவை எல்லாமே சென்னையில் உள்ள பெயர்பெற்ற பள்ளி வளாகங்களில் கேட்ட குரல்கள். ஆகப்பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆற்றுப்படுத்துனர் எனும் பதமே அறிமுகமாகியிருக்காது. கவுன்சிலிங் / கவுன்சிலர் போன்ற வார்த்தைகளை அறிந்தவர்களுக்கும்கூட அவர்கள் பணி என்ன என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவில்லை. தெரியாதவர்களால் உருவாகும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் அரைகுறையாக தெரிந்தவர்களும் / தவறாக புரிந்தவர்களும் வேறு வகையான சிக்கல்களை உருவாக்குகிறார்கள். கவுன்சிலர் சமூகத்திற்குள்ளும் பல அதிர்ச்சிகளை காண முடிகிறது.
நான்-வெஜ் நெறைய சாப்பிடுறதால இப்போ பசங்களுக்கு அதிகமாக ஆத்திரம் வருகிறது என்றார் ஒரு பிரபல ஆற்றுப்படுத்துனர் மற்றும் பயிற்சியாளர். அவர் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசியவர் அச்சு ஊடகம் ஒன்றில் தொடர் எழுதியவர். சுய இன்ப பழக்கத்தை கைவிட ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என்றார் இன்னொரு இளம் ஆற்றுப்படுத்துனர் (கல்லூரியில் பணியாற்றுகிறார்). திகைத்துப்போய் சுயஇன்பம் தவறானதென்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என கேட்டோம். இதென்ன கேள்வி, அது தவறென்றுதானே நம் மதங்களும் ஆயுர்வேதமும் சொல்கிறது என பதில் கேள்வி கேட்டார். (ஆயுர்வேதம் அதனை தவறென்று சொல்கிறதா என்று எனக்கு தெரியாது).
பள்ளி வளாகங்களில் ஒரு மனநலப் பணியாளரின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம். இந்திய மக்கள்தொகையில் 31% பேர் 14 வயதுக்கு கீழானவர்கள். ஏறத்தாழ 50% தீவிர மனநல பிர்ச்சினைகள் (அதாவது வாழ்நாள் முழுக்க நீடிக்கவல்ல சிக்கல்கள்) 14 வயதுக்கு முன்பே ஆரம்பமாகிவிடுகின்றன. உலகம் முழுக்கவே 10 முதல் 20% விழுக்காடு சிறார்களுக்கு உளநல சிக்கல்கள் இருக்கக்கூடும் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய முதலாளித்துவ சூழல் இன்னும் தீவிரமாக மனநல சிக்கல்களை உருவாக்கவல்லது.
தாழ்வு மனப்பான்மை, பலவீனமான சுயமரியாதை, தவறான நம்பிக்கைகள் ஆகியவை பிற்காலத்தில் நடத்தை பிரச்சினைகளை உருவாக்கும். இவை எல்லாவற்றையும் அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே உரிய வழிகாட்டுதல்களை கொடுத்தால் அவை மாபெரும் பலன்களை கொடுக்கும். ஆனால் இவற்றை பெற்றோராலோ அல்லது ஆசிரியர்களாலோ செய்ய இயலாது. அந்த வேலையை செய்யத்தான் பள்ளிகளில் மனநலப்பணியாளர் (கவுன்சிலர் – ஆற்றுப்படுத்துனர்) அவசியப்படுகிறார்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதாரணங்கள் எல்லாவற்றிலும் உள்ள ஆற்றுப்படுத்துதல் பற்றிய புரிதல்கள் தவறானவையே. கவுன்சிலிங் என்பது அறிவுரை சொல்லும் வேலை அல்ல. இன்னும் சொல்வதானால் அதன் அடிப்படை விதியே கவுன்சிலர் மிக அரிதான சமயங்களைத் தவிர வேறெப்போதும் அறிவுரை சொல்லக்கூடாது என்பதுதான்.
தீவிர மனநல சிக்கல்களுக்குத்தான் கவுன்சிலிங் தேவை என்பது உண்மையல்ல. தீவிரமான பிரச்சினைகளை கொண்டிருப்பதாக கருதினால் அவரை ஆற்றுப்படுத்துனர்கள் மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைப்பார்கள். உளநலத்தில் ஏற்படும் சிறிய இடையூறுகள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், நடத்தை மாற்றம், உள (உடல்) நலம் பற்றிய சந்தேகங்கள் ஆகியவற்றை ஒரு ஆற்றுப்படுத்துனரால் சிறப்பாக கையாள இயலும்.
பாலியல் கல்வி, பதின் பருவ மாற்றங்கள், முடிவெடுத்தல், மாணவர்களின் கற்றல் திறனில் சரிவிகித உணவு – சுகாதாரம் பேணுதல் – உறக்கம் ஆகியவற்றின் பங்கு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் தலைப்புக்களை ஒரு கவுன்சிலரால் மேம்பட்ட வகையில் விளக்க முடியும். இப்போது மாணவர்களைக் காட்டிலும் அதிகமான உளவியல் விளக்கங்களும் பயிற்சிகளும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே தேவைப்படுகிறது, அதனைக் கொடுப்பதும் ஒரு பள்ளி உளவியலாளரின் கடமையே. இவற்றை முறையாக செய்தாலே பின்நாட்களில் வர சாத்தியம் உள்ள பல தீவிரமான சிக்கல்களை தவிர்க்க இயலும்.
பள்ளி ஆற்றுப்படுத்துனரின் தினசரி கடமைகளுக்கு கறாரான வரையறைகள் இல்லை. பள்ளியின் சூழல், மாணவர்களின் சமூக – பொருளாதார பின்புலம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அல்லது ஒத்துழையாமை (அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள நிரந்தர ஆசிரியர்கள் ஒத்துழைப்பதில்லை என்பது கவுன்சிலர்களின் பரவலான குற்றச்சாட்டு. எனக்கு நேரடி அனுபவம் இல்லை) இப்படி பல்வேறு அம்சங்களை பரிசீலித்து தங்கள் வேலைத்திட்டத்தை அந்த பள்ளி கவுன்சிலர் வடிவமைக்கலாம்.
எனக்குத் தெரிந்த சென்னை பள்ளியொன்றில் 9,10-ம் வகுப்பு மாணவர்களில் 50% பேர் புகையிலை அடிமைத்தனம் உள்ளவர்கள். வேறொரு பள்ளியில் ஒற்றைப் பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் முற்றிலும் வேறான வேலைத்திட்டங்களை ஆற்றுப்படுத்துனர் செயல்படுத்த வேண்டியிருக்கும்.
ஆயினும் சில அடிப்படையான செயல்பாடுகளை பட்டியலிட இயலும்.
நம்பிக்கையளித்தல் :
நம் பிரச்சினைகளை கேட்கவும் இங்கே ஆள் இருக்கிறது எனும் நம்பிக்கை மாணவர்களிடையே உருவாகும்போதே ஒரு கவுன்சிலரின் வெற்றி துவங்கிவிடுகிறது. பல தவறான முடிவுகளுக்கு பின்னால் இருப்பது பிரச்சினையை சொல்ல ஆளில்லை எனும் சூழல்தான். அப்பாவின் குடிப்பழக்கம் தொடங்கி ஆசிரியர் திட்டிவிட்டார் ஆகவே நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என்பதுவரை எண்ணற்ற காரணங்களுக்காக மாணவர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். உத்தேசமாக சரிபாதி பேருக்கு தங்கள் பிரச்சினைகளை ஒருவர் முறையாக கேட்டாலே போதும், அவர்கள் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.
முன்பு ஒரு 12 வயது மாணவி சந்திக்க வந்திருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்பவர்கள். காலை அவரே வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு வரவேண்டும். அவர் வீட்டுக்கு எதிரேயுள்ள கடையில் வேலைசெய்யும் இளைஞரிடம் காதல்வயப்பட்டிருக்கிறார். அந்த இளைஞன் இந்தப் பெண்ணை தமது ஊருக்கு வரும்படி அழைத்திருக்கிறார். சிறுமிக்கோ போகவேண்டும் எனும் விருப்பமும் செல்வது நல்லதில்லை எனும் எச்சரிக்கையுணர்வும் ஒருங்கே வந்திருக்கிறது. இதனை விவாதிக்க நம்பிக்கையான பெரியவர்கள் யாரும் இல்லை, நண்பர்களிடம் கேட்க பயம் (அவர்கள் பள்ளி ஆசிரியரிடம் சொல்லிவிடக்கூடும் இல்லையா?). ஆகவே அவர் கவுன்சிலரை சந்திக்க முடிவெடுத்தார். அந்த அமர்வுக்குப் பிறகு அவர் காதலரோடு செல்லும் முடிவை கைவிட்டார். நம்பகமான, ரகசியங்களை காப்பாற்றும் ஒரு மனிதர் பள்ளியில் இருப்பதன் அவசியத்தை உணர இந்த உதாரணம் போதுமானது என கருதுகிறேன்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரது தேவைகளும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறானவை. இது உருவாக்கும் முரண்பாடுகளே அனேக நடத்தை மற்றும் உணர்வுச் சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. தனித்தனியே கேட்கையில் ஒவ்வொருவரது குரலும் நியாயமானதாகவே இருக்கும். ஒன்றாக கேட்டால் அவ்விடம் ஒரு போர்க்களமாக மாறக்கூடும். ஆனாலும் கொஞ்சம் மெனக்கெட்டால் ஓரெல்லை வரைக்குமான இணக்கத்தை இவர்களிடையே கொண்டுவர இயலும். கற்றல் குறைபாடு கொண்ட சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அது குறித்த தெளிவு இல்லாமல் இருப்பதுதான். போதிய தயாரிப்புக்களோடும் பொறுமையுடனும் தரப்படும் விளக்கங்கள் அந்த மாணவர்களின் வாழ்வை முற்றிலுமாக மாற்றவல்லவை.
ஒருமுறை மூன்றாம் வகுப்பு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக சந்தேகித்து அவரது அம்மாவிடம் விளக்கினோம். அவர் கடுமையான ஆத்திரமடைந்து என்னை சகட்டுமேனிக்கு முக்கால் மணிநேரம் திட்டினார் (அதாவது என் வழியே பள்ளியை). அவரது நிலையும் புரிந்துகொள்ளக்கூடியதே, மகனுக்கு ஒரு குறைபாடு இருப்பதாக சொல்வதை ஏற்பது அத்தனை இலகுவானது அல்ல. இறுதியில், நான் சொன்ன கருத்தோ அல்லது சொன்ன விதமோ உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்க வேண்டியதாயிற்று.
மறுநாள் அவர் கணவர் வந்து கொஞ்சம் நயமாக திட்டினார் (நான் மீடியாவுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா என்றார்). இந்த கசப்பான அனுபவம் காரணமாக அடுத்த ஒரு மாதத்துக்கு ஆரம்ப வகுப்பு மாணவர்களை சந்திக்கவே பயந்துகொண்டு இருந்தேன். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்த அம்மா மட்டும் வந்தார், இப்பவெல்லாம் நான் பையனை அடிக்கிறதில்லைங்க.. பையனை ஆவரேஜாவாச்சும் படிக்கவைக்க நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க என்றார். ஒரு முறையான விளக்கம் தாமதமாகவேனும் வேலை செய்யும் என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது.
Psycho – education – உளவியல் ரீதியான அறிவூட்டல் :
கற்றல் குறைபாடுள்ள சிறார்கள் எதனால் வழக்கமான பாணி கற்பித்தலில் சிரமப்படுகிறார்கள், ஏன் பதின் வயது சிறார்கள் எதிர்வாதம் செய்கிறார்கள், எதனால் காதல் குறித்த அறிவுரைகள் மாணவர்களிடம் எடுபடாமல் போகின்றன, செல்போன் எப்படி கற்றல் திறனை பாதிக்கிறது போன்ற ஏராளமான விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இவை அனேகருக்கு தெரிவதில்லை. இதனால் பலர் இது தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தவறான முன்முடிவுகளுக்கு செல்கிறார்கள்.
ஒரு பதினோராம் வகுப்பு மாணவரை கவனமின்மை எனும் காரணத்துக்காக அவரது ஆசிரியர் பரிந்துரைத்தார். பேசுகையில் அவருக்கு சுய இன்ப பழக்கம் குறித்த கடுமையான குற்ற உணர்வு இருந்தது தெரியவந்தது. குற்ற உணர்வு கொள்ள காரணத்தை கேட்டப்போது “அது இறைவனுக்கு எதிரானது இல்லையா” என்றார். இறைவனுக்கு எதிரானது என்றால் அதனை தொடர காரணம் என்ன? என்று கேட்டேன். நான் சுய இன்ப பழக்கம் உள்ளவன் என்பதால் எனக்கு சொர்கத்தில் இடமிருக்கப்போவதில்லை, அதனால் நிறுத்தியும் பலன் இல்லை. ஆகவேதான் நிறுத்தவில்லை, ஆனாலும் அதன் அவமான உணர்வு தொடர்கிறது என்றார்.
அந்த அவமான /குற்ற உணர்வு அவரது பதட்டத்தை அதிகரிக்கிறது, சுய இன்பம் செய்தால் பதட்டம் குறைகிறது. அதிகமான சுய இன்பம் அவரது குற்ற உணர்வை இன்னும் மோசமாக்குகிறது. இந்த சுழல் நிகழ்வு மொத்தமும் சுய இன்பம் குறித்த தவறான மத நம்பிக்கை காரணமாக உருவாவதுதான். இப்படியான ஏராளமாக நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் உடைக்க தொடர்ச்சியான psycho-education அவசியம்.
தகவல்களை சேகரித்தல் மற்றும் சேமித்தல் :
போதுமான தகவல்கள் / தரவுகள் இல்லாமல் ஒரு உளநல பிரச்சினையை கையாள்வது என்பது முகவரி தெரியாதவர் முகவரி தெரியாத இன்னொருவருக்கு வழிகாட்டுவதைப் போன்றது. அதில் அதிருஷ்டவசமாக தீர்வு கிட்டலாம். ஆனால் தீர்வு கிட்டாமல் சிக்கல் மோசமாகவே வாய்ப்பு அதிகம். பணியாற்றும் இடம் சார்ந்த தரவுகள் மற்றும் பொதுவான தரவுகள் இரண்டுமே அவசியம். உலகலாவிய அளவில் பள்ளி கல்வியின் பெரும் சவால் போதுமான தரவுகள் இல்லாமையே, அதாவது தகவல்கள் திரட்டப்பட்டு பராமரிக்கப்படாமையே.
உதாரணமாக, எந்த வயதில் ஆபாசப்படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் எனும் தரவுகளோ எந்த வயதில் புகைப்பதற்கான ஆர்வம் வருகிறது எனும் தரவுகளோ அனேகமாக இருப்பதில்லை. இவற்றை பராமரிப்பது என்பது நாம் எந்த இடத்தில் எப்போது கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறியத்தரும்.
எங்களது முதலாம் ஆண்டு அறிக்கையின் மூலம் ஆற்றுப்படுத்துதலை நாடுவோரில் 35% பேர் எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் தடுப்பு நடவடிக்கைகளை முன் வகுப்புக்களில் துவக்க முடிந்தது. பிள்ளைகள் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பெற்றோர்களுக்கான வகுப்புக்கள், வகுப்பறையில் காதல் குறித்த அறிவியல்பூர்வமான உரையாடல்கள், தோல்வியின் நேர்மறையான அம்சங்கள் ஆகியவை குறித்த வகுப்பறை விவாதங்களை ஒழுங்கு செய்திருந்தோம். இவை குறிப்பிடத்தக்க அளவில் வேலை செய்தன. குறிப்பாக காதல் சண்டைகள், உடலை காயப்படுத்திக்கொள்வது (செல்ஃப் ஹார்ம்) ஆகியவை மிகக் கணிசமான அளவு குறைந்தது.
பிரச்சினைகளை உரிய இடத்திற்கு தெரியப்படுத்துதல் :
மனம் சார்ந்த எல்லா பிரச்சினைகளையும் ஒரு ஆற்றுப்படுத்துனரால் சரிசெய்ய இயலாது. ஆனால் அவற்றை சரிசெய்ய உகந்த நபருக்கு பரிந்துரை செய்ய இயலும். என் நண்பர் ஒருவர் தமது பள்ளியில் புகையிலை பயன்பாட்டின் விளைவுகளை விளக்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்கிறார். அதற்கான நிறுவனங்களை அணுகி துறைசார் வல்லுனர்களையும் வரவைக்கிறார். கற்றல் குறைபாடு குறித்த விளக்க வகுப்புக்களுக்குப் பிறகு குறைந்தது இரண்டு ஆசிரியர்களேனும் தாங்கள் தவறாக கையாண்ட சம்பவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். தீவிர உளநல சிக்கல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சிறார்களை மனநல மருத்துவருக்கு பரிந்துரைப்பது மற்றும் கற்றல் குறைபாடு கொண்ட சிறார்களை சிறப்பு ஆசிரியருக்கு பரிந்துரைப்பது ஆகியவை பள்ளி ஆற்றுப்படுத்துனரின் வழக்கமான வேலைகள். சென்னையில் ஒரு கவுன்சிலர் தமது பள்ளியில் கூல் லிப்ஸ் எனும் போதைப் பொருளை ஆறாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து பள்ளியை எச்சரித்திருக்கிறார் (அதனால் அவர் வேலையை இழந்தார் என்பது இதன் சோகமான பின்விளைவு).
மேலே சொல்லப்பட்டவற்றை தாண்டி இன்னும் பல வேலைகள் இருக்கின்றன. ஆனாலும் மேலேயுள்ள பணிகளை செய்தாலே (அல்லது செய்ய முடிந்தாலே) ஒரு ஆற்றுப்படுத்துனரால் பிரம்மிக்கத்தக்க நல்விளைவுகளை ஏற்படுத்த இயலும். ஆகவே அரசுப்பள்ளிகளுக்கு தேவையானவை எனும் பட்டியலில் ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக ஆற்றுப்படுத்துனரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களால் பேச முடிகிற பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனரை நியமிக்க பரிந்துரை செய்யுங்கள். ஒருவேளை அங்கே அப்படியொருவர் பணியாற்றினால் அவர் மேற்சொன்ன வேலைகளை செய்ய வலியுறுத்துங்கள்.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
பா.ஜ.க. தலைமையில் அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தின் மக்களவையில் 348 உறுப்பினர்களைக் கொண்டு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்குக் கொஞ்சம்தான் குறைவானது.
நாடாளுமன்றத்தின் மேலவையை எடுத்துக்கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 107-ஐத் தொட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் கணிசமான மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் சூழல் எழுந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக இருந்து பிரதமராகியிருக்கும் மோடி, தனது இரண்டாவது ஆட்டத்தில், மேற்கண்ட சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். -இன் முக்கியமான கோட்பாடுகளையும் திட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அதிலொன்றுதான் ஒரு நாடு ஒரு தேர்தல்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டுவரௌவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நட்ந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்.
ஒரே நாடு ஒரே பண்பாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் திட்டமல்ல என்பது மோடியின் முதல் தவணை ஆட்சியிலேயே அம்பலமாகிவிட்டது. நாடெங்கும் ஒரே வரி (ஜி.எஸ்.டி.), ஒரே நுழைவுத் தேர்வு (நீட்) ஆகியவை கடந்த ஆட்சியில் அமலுக்கு வந்தன. இந்தத் தவணை ஆட்சியில் ஒரே கல்விக் கொள்கை, கீழமை நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க நாடெங்கும் ஒரே தேர்வு, ஒரே மோட்டார் வாகனச் சட்டம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் ஆகியவற்றோடு 2024 -ஆம் ஆண்டிற்குள் ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதையும் அமலுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது, மோடி அரசு.
கார்ப்பரேட் – காவி பாசிசம் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று ஒன்றையொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதால், மேற்கண்ட “ஒரே” திட்டங்கள் அனைத்திலும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலன்களும் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஏக பாரத இலட்சியமும் இணைந்தே பயணம் செய்கின்றன.
மேலும், மோடி ஆட்சியில் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் இந்த “ஒரே” திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் இதுகாறும் நிலவிவந்த அரைகுறையான கூட்டாட்சி கொள்கையை அரித்துச் செல்லாக்காசாக்கியும் வருகின்றன.
மோடி அரசு 2024-ஆம் ஆண்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டமோ, இந்தியாவில் கூட்டாட்சி அமலில் இருப்பதாகத் தெரியும் தோற்றத்தைக்கூட ஒழித்துக்கட்டிவிடும் அபாயமிக்கது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தக்கூடிய ஒரு நாடு ஒரு தேர்தல் முறைக்கு மாறுவதன் மூலம், தேர்தல்களுக்காக அரசு செலவிடும் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம்; ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசின் கொள்கைகள், திட்டங்களைத் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தலாம்; அடிக்கடி வரும் தேர்தல்களால் சலிப்படைந்து போகும் மக்கள்திரளை வாக்குச்சாவடிகளை நோக்கி ஈர்க்கலாம் எனத் தேன்தடவிய வாதங்களை ஆளும் பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் அடுக்குகின்றன.
கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட நீட் தேர்வு கட்டணக் கொள்ளையை ஒழித்துவிட்டதா, சட்டபூர்வமாக்கியிருக்கிறதா? ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வரி ஏய்ப்பைத் தடுத்திருக்கிறதா, இல்லை மக்களின் மீது வரிச் சுமையை அதிகரித்திருக்கிறதா? அவையெல்லாம் சொல்லிக் கொள்ளப்பட்ட நியாயங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும்போது ஒரு நாடு ஒரு தேர்தல் மட்டும் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் வாரிவழங்கிவிடும் என நம்பமுடியுமா?
தற்போது உள்ள தேர்தல் முறையில் பாரிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிவரும் முதலாளித்துவ அறிவுத்துறையினர் அனைவரும் தேர்தல்களுக்குக் கட்சிகளும் வேட்பாளர்களும் செலவு செய்வதைத் தடை செய்து, அதற்கு மாறாக அரசு நிதி அளிக்க வேண்டும் எனும் மாற்றை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், மோடி அரசு அச்சீர்திருத்தத்துக்கு நேர்எதிராக அரசின் தேர்தல் செலவுகளைக் குறைக்கும் அபாயகரமான ஆலோசனையை முன்வைக்கிறது.
ஒரு நாடு ஒரு தேர்தல் முறை அமலுக்கு வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஐந்தாண்டுகள் பதவியில் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏதோவொரு காரணத்தால் அம்மாநில அரசுகள் கலைந்துபோனாலோ, கலைக்கப்பட்டாலோ, மீதமிருக்கும் காலத்திற்கு அம்மாநிலத்தில் அரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தும் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மைய அரசிற்கு அதிகாரம் தரும் 356-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என நீண்டகாலமாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கைக்கு நேர் எதிராக, 356 பிரிவைப் பயன்படுத்தாமலேயே மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமலுக்குக் கொண்டுவரும் அதிகாரத்தை மைய அரசிற்கு வழங்குகிறது, ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.
தற்போதுள்ள தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதி ஏதோவொரு காரணத்தால் காலியானாலும், மாநில அரசு கலைந்துபோனாலும் அல்லது கலைக்கப்பட்டாலும் அத்தொகுதிக்கு அல்லது அம்மாநிலச் சட்டமன்றத்திற்கு காலியான / கலைந்துபோன / கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஒரு நாடு ஒரு தேர்தல் முறை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ஜனநாயக உரிமையை ரத்து செய்கிறது.
இந்திய மக்களின் பெரும்பாலான அரசியல், பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், தேர்தல்களில் வாக்களிப்பது மட்டும்தான் மாபெரும் ஜனநாயகக் கடமையாகச் சோடித்துக் காட்டப்படுகிறது. அதனையும் நடைமுறையில் இல்லாமல் செய்வதுதான் ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுகள் தோற்று, இடைத் தேர்தல்கள் வராமல் தடுப்பதற்காக, “நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, மாற்று அரசு அமைப்பதற்கான வழிகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். இதற்கேற்ப கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்” என நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை கூறியிருக்கிறது. இந்த ஆலோசனை குதிரை பேரத்தைச் சட்டபூர்வமாக்கும் அயோக்கியத்தனம் தவிர வேறில்லை.
இந்தியா சுதந்திரமடைந்த பின் மொழிவாரி மாநிலங்களும் மாநில அரசுகளும் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். வலிமையான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மைய அரசு, கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் என்ற இரண்டு அடுக்கு அதிகார அமைப்புகளுக்கு அப்பால் மாநில அரசுகள் தேவையற்றது என ஆர்.எஸ்.எஸ். தீர்மானமே இயற்றியதாகக் கூறப்படுகிறது. மொழிவாரி மாநிலங்கள், மாநில அரசுகள் ஆகியவை இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருப்பதாலேயே, மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் பலம் வாய்ந்தவையாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்வதேயில்லை.
அரசியல் சாசனச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களையும் மாநில அரசுகளையும் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் கூட நினைத்த மாத்திரத்தில் ரத்து செய்துவிட முடியாது. அதற்கு மாறாக, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை அல்லது தமது கூட்டணியை ஆளுங்கட்சியாக அமரவைப்பதன் மூலம் தனது ஏக பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவ்விரண்டு தேர்தல்களிலும் ஒரே கட்சிக்கு மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்பதால் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டத்தை விவாதப் பொருளாக்கியிருக்கிறது.
ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார். அதுவரையிலும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை என்ன செய்வது? ஒன்று, தமிழக ஃபார்முலா, இல்லையென்றால் கர்நாடகா ஃபார்முலா என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. வின் திட்டம்.
மோடி இரண்டாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நான்கு மேலவை உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டு மேலவையில் தெலுங்கு தேசம் கட்சியைக் காலி செய்தார். அடுத்து கோவாவில் எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, காங்கிரசைக் காலிசெய்தார்.
கர்நாடகா காங்கிரசு அதிருப்தி எம்.எல்.ஏ. -களைச் ச்ந்திக்கச் சென்ற கர்நாடக மைச்சர் சிவக்குமாரைத் தடுத்து கைது செய்யும் மும்பை போலீசு.
கர்நாடகாவிலோ காங்கிரசு, ம.ஜ.த. மற்றும் சுயேச்சைகள் அடங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிவிலக வைத்து, அதன் மூலம் காங்கிரசு- ம.ஜ.த. கூட்டணி ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் செய்து, அக்கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து, அதன் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, பா.ஜ.க.
பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரசு, ம.ஜ.த. கட்சிகளின் கொறடா உத்தரவிட முடியாது என இடைக்கால உத்தரவிட்டிருப்பதன் மூலம், பா.ஜ.க.-வின் அதிகார வேட்டைக்கு உச்ச நீதிமன்றமும் ஒத்தூதியிருக்கிறது.
கர்நாடகாவில் பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தொழில் அதிபர்கள் எனக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட மேலவை உறுப்பினர்கள் நான்கு பேரின் மீதும் குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., பா.ஜ.க.வின் எடுபிடியாக நடந்துகொள்வதன் காரணம் ஊழல் தவிர வேறொன்றுமில்லை.
காங்கிரசு கட்சி நாடு தழுவிய நிலையில் மிகவும் பலவீனமடைந்திருக்கும் நிலை; மாநிலக் கட்சிகளின் பிழைப்புவாதம், ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்சமயம் ஓட்டுக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் தொடங்கி அனைத்து மட்டத்திலும் இருப்பவர்களும் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் வியாபாரம் எனப் பலவாறான தொழில்களை நடத்திவரும் தொழில் அதிபர்களாக இருப்பதால், அவர்களை விலை கொடுத்து வாங்குவதோ, அல்லது அவர்களே காற்று வீசும் பக்கம் ஓடுவதோ மிகச் சாதாரணமான நடைமுறை ஆகிவிட்டது. இப்படி ஓட்டுக்கட்சி அரசியல் சீரழிந்து போயிருப்பது ஆர்.எஸ்.எஸ். கூட்டணிக்குத் தனது கார்ப்பரேட் பாசிச திட்டங்களைச் செயல்படுத்துவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும். இந்து மதவெறி பாசிஸ்டுகள் முன்தள்ளும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டம் அத்தகைய ஒற்றைக் கட்சி ஒற்றை ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
காமிக்ஸ் நாயகர்களால் மயக்கப்படும் கண்களுக்கு போர்களின் விளைவுகள் தெரிவதில்லை
தமது இளம்பிஞ்சுகளின் வேதனைகளால் வெதும்பும் தாய்மார்களின் கண்ணீரை, மறைத்து விடுகின்றது லேடி காகா-க்களின் ஆனந்தக் கண்ணீர்.
தமது அழகின் அங்கீகாரத்துக்காக பூனை நடை நடக்கும் நுகர்வுப் பண்டங்களை (’அழகிகளை’) வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுக்கும் கருவிகள், தம்மை மனிதர்களாக அங்கீகரிக்கக் கோரி இடம்பெயரும் அகதிகளைச் சீண்டுவதில்லை.
பறவைகள் எட்டும் வானின் உச்சம் கண்டு மனம் கிளர்ச்சி அடையலாம். ஆனால், போர்வெறி கொண்ட இந்த இயந்திரப் பறவைகளின் வெடிகுண்டு எச்சங்கள், எளியோரின் வாழ்வை அழிக்கின்றன.
ஒருபாதி உலகம் போதைவெறியின் பிடியில் … மறுபாதி உலகம் போர்வெறியின் பிடியில் …
ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடுகளின் சரிவிலும் வீழ்ச்சியிலும்தான் ஏகாதிபத்தியங்களின் வளம் ஏற்றத்தில் ஒய்யாரமாய் வீற்றிருக்கிறது.
ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரக் குமிழ்கள் உடையும் ஒவ்வொரு தருணமும் பல நாடுகளின் அமைதி உடைக்கப்படுகிறது.
சிலரது ரம்மியமான மாலைப் பொழுதுகள், பலருக்கு தாக்குதல் அச்சமூட்டும் இரவுக்கான முன்னறிவிப்புகளாகின்றன.
“SBI வங்கியில் காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில் பொருளதாரத்தில் நலிந்த பிரிவினர், என 10% இடஒதுக்கிடுமுறை அமல்படுத்துவதை கண்டித்து திருச்சி ஜங்ஷன் தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் !”
10% இடஓதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக SBI வங்கி அதிகாரிகள், மோடி , பாஜக ஆட்சிக்கு, காவடி தூக்குகின்றனர். பார்ப்பனர்களுக்கு சேவை செய்து, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கீடு உரிமையை பறிக்கும் வகையிலும் சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையிலும் BC கட்-ஆப் 61.25, MBC கட்-ஆப் 61.25, ST கட்-ஆப் 53.75, EWS பார்ப்பனர் / உயர் சாதியினர் 28.5 – கட் -ஆப் என மதிப்பெண் மோசடியை செய்கின்றனர்.
சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்று மோடி அரசு வரையறை செய்து, உழைக்கும் மக்களுக்கு ஏதிரான பாசிசத்தை கட்டமைக்கின்றது.
இந்நிலையில் SBI வங்கியில் காலி பணியிடங்கள் நிரப்ப நடைபெறும் தேர்வில் பொருளாதார நலிந்த பிரிவினர் என 10% இடஒதுக்கீடுமுறையை அமல்படுத்துவதைக் கண்டித்து, 31.07.2019 அன்று திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலர் சீனி விடுதலை அரசு தலைமையில் நடைபெற்றது.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா, த.பெ.தி கழக உறுப்பினர்கள், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலர் தோழர் வை.சரவணன், மே 17 இயக்கம் திருச்சி பொறுப்பாளர் தோழர் பாலாஜி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் சம்சுதீன், உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் Ac ராமலிங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டணி நகர தலைவர் முகம்மது காசிம், நிர்வாகி ஜோசப், தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் ரகு, என பல அமைப்பு தோழர்கள், கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈட்பட்ட தோழர்கள் பேரணியாக சிறிது தூரம் முழக்கமிட்டு வந்து SBI வங்கியை முற்றுகையிட்டனர். போராட்டத்தை காண பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கூடினர். தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசு கைது செய்து வேனில் ஏற்றியது. தோழர்கள் முழக்கமிட்டவாறே கைதாகினர். மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த முற்றுகை போராட்டம், மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் நூற்றாண்டிலே (கி.பி. 114) சேர நன்னாட்டில் ஆண்ட சேரன் செங்குட்டுவன், வடநாட்டில் கனகன், விசயன் என்ற அரசரிருவர் விருந்திடைப் புகன்ற பொருந்தாமொழி கேட்டு, கண்ணகிக்குக் கற்சிலை எடுக்க எண்ணியதுடன், ஆரியர்க்கும் தம் வலிமை காட்டக் கருதி, வடநாடு சென்று வாகை சூடி வட இமயத்தில் கற்கொண்டு கனக விசயர் தலைமீது ஏற்றி கங்கை கடந்து கான் நடந்து, மலை பல கடந்து, தென்னாடு கொண்டு வந்த செய்தி, ஏன் வரலாற்றில் இடம் பெறவில்லை? வரலாற்றுக் காலத்தில் நடைபெற்ற செங்குட்டுவனின் உடன் பிறந்த இளவல் ‘இளங்கோ’ சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பிய காலத்தில் இட்டுத் தந்த உண்மை நிகழ்ச்சியன்றோ அஃது?
தமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா? திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்? என்ற வருத்தமும் உண்டு.
இராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படையெடுப்பும் கங்கை கொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள்! பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள்! ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம் பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும் – ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.
போர் முனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வன்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.
இனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு. இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பனுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றிச் சிறப்புக் காணப்படும் ஒரு புறம். பல யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல் மற்றொருபுறம். இன்னும் பற்பல காட்சிகள் உண்டு. அவற்றிலே பூஞ்சாற்றூர்க் கௌணியன் என்னும் பார்ப்பான் வேள்வியைச் சிறப்பிக்கும் காட்சியுமுண்டு. இவையன்றி வடநாடு வென்ற செங்குட்டுவனும், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன் சொல்லினை ஏற்று வேள்வி செய்துள்ளான் என்று சிலப்பதிகாரத்தில் (காதை 28) நடுகற்காதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி ஆரியர்க்குரியதென்பதும், அவர்கள் வாழ்வுக்குத் துணையென்பதும் உணருங்கால், ஆரியரை ஆரிய நாட்டில் வென்று, திராவிடத்தில் ஆரியத்துக்கு அடிமையாய் வாழ்ந்தான் சேரன் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது? ஆரிய ஆட்சி ஆட்டம் கொடுத்ததுதான் எதனால்?
திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந் நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பல பகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.
திராவிடத்தில் தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் 2 -ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு , சாதவாகனர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக் கொள்ள ஆரியத்திடை, அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்தமூலர் கி.பி. 200 – 218 வரை ஆண்ட போது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்துத் தானங்கள் பல புரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக்களமாக மாற்றினார். (P.44 Early Dynasties of Andra Desa By B.V. Krishna Row M.A., B.L.)
“His regin was responsible for a greatwave of a immigration particularly of Brahmana settlers in Andhra desa from the north and north west. The immigrants came in all probability, at the invitation of the Emperer Santamula who after a lapse of more than a century revived the Vedic sacrifices and particularly the celebrated Vajabeya and Aswamedhe… Thus new villages were founded and Brahmana settlements established.”
மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.
“The Ikshavahu king who was till then a follower of vedic Brahmanism and a worshipper of Siva in the form of linga renounced faith and became a true convert to Buddhism. (P.58)
In this panel there is a representation of monarch crushing with his right heel, a stone linga, which is encircled by many headed serpant. The linga and the serpent apparently symbolise Brahmanism and worship of Maheswara. The Brahamanism is denounced by the king in the presence of his ministers and hig diginitaries of State…
It is probable that “Sri Virapurushadatha” attempted to crush the tide of Brahmanism which received great impetus and revival under the aegis of his llustrious father Santhamula the great, only, two decades ago” (pages 59-60)
ஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-ல்தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11-அ
ஸ்த்ருச்கோவ் குதூகலமுள்ளவர், கலகலப்பாக பழகுபவர். வார்டு நிலைவாயிலில் புகுந்ததுமே இங்கே, மருத்துவமனையில் சாப்பாடு எப்படி, சிகிச்சை முறைகள் கண்டிப்பானவையோ, கண்ணுக்கு இலட்சணமான நர்ஸ்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் மற்ற நோயாளிகளிடம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர். காயங்களுக்குக் கட்டு மாற்றப்படுகையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவுக்கு ஒரு வேடிக்கைக் கதை சொன்னதுடன், இடையே அவளுடைய தோற்றக் கவர்ச்சி பற்றி வெகு துணிவுடன் பாராட்டுரையும் பகர்ந்து விட்டார். நர்ஸ் அறைக்கு வெளியே போனதும் ஸ்த்ருச்கோவ் அவள் பின்னே கண் சிமிட்டினார்.
“அழகானவள். கண்டிப்பு உள்ளவளோ? ஒருவேளை உங்களை நடுநடுங்க வைக்கிறாளோ? பரவாயில்லை, பயப்படாதீர்கள். உங்களுக்குச் செயல் தந்திரம் போதிக்கப்படவில்லை போலிருக்கிறது, ஊம்? கைப்பற்ற முடியாத அரண் எப்படிக் கிடையாதோ அப்படியோ அடைய முடியாத பெண்ணும் கிடையாது!” என்று கூறி உரக்க அதிர் வேட்டுச் சிரிப்பு சிரித்தார்.
ஸ்த்ருச்கோவ் வார்டுக்குக் களிபொங்கும் ஆரவாரத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இதற்காக ஒருவரும் தம்மீது மனத்தாங்கல் கொள்ளாத விதத்தில் அவர் ஆரவாரம் செய்தார். அவர் தங்களுக்கு வெகு நீண்ட காலமாகப் பழக்கமானவர் என்று எல்லோருக்கும் தோன்றியது. இந்தப் புதிய தோழரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. மேஜர் ஸ்த்ருச்கோவ் பெண்கள் விஷயத்தில் வெளிப்படையாகக் காட்டிய ஆர்வந்தான் மெரேஸ்யெவுக்குப் பிடிக்கவில்லை. ஸ்த்ருச்கோவோ இந்த ஆர்வத்தை மறைக்காதது மட்டும் அல்ல, உவப்புடன் பறைசாற்றவும் செய்தார்.
மறு நாள் கமிஸார் அடக்கம் செய்யப்பட்டார். பீரங்கிப் படைக் குதிரைகள் பீரங்கி வண்டியை முகப்பு வெளிக்கு இழுத்து வந்ததையும் இராணுவ இசைக் குழுவினர் வாத்தியங்கள் வெயிலில் மின்னக் குழுமியதையும், படைவீரர்கள் பிரிவு அணிவகுத்து வந்ததையும் ஜன்னல் குறட்டின்மேல் உட்கார்ந்து பார்த்தார்கள் மெரேஸ்யெவும் குக்கூஷ்கினும், க்யோஸ்தியேவும். க்ளாவதியா மிஹாய்லவ்னா அறைக்குள் வந்து நோயாளிகளை ஜன்னலிலிருந்து அகற்றினாள். அவள் எப்போதும் போலவே அமைதியுடனும் சுறுசுறுப்புடனும் விளங்கினாள். எனினும் அவள் குரல் மாறிவிட்டதையும் அது நடுங்குவதையும் தழுதழுப்பதையும் மெலேஸ்யெவ் கவனித்தான். புது நோயாளிகள் உடற்சூட்டை அளவெடுக்க அவள் வந்திருந்தாள். அந்தச் சமயத்தில் முகப்பு வெளியில் இசைக் குழு இறுதிச் சடங்கு அணிநடை இசையை வாசித்தது. நர்ஸ் வெளிறிப் போனாள். தெர்மாமீட்டர் அவள் கைகயிலிருந்து நழுவி விழுந்தது. பளிச்சிடும் பாதரசத் துளிகள் பிளாச்சுத் தரையில் சிதறியோடின. முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு க்ளாவ்தியா மிஹாய்லவ்னா வார்டுக்கு வெளியே ஓடி விட்டாள்.
“இவளுக்கு என்ன வந்துவிட்டது? அந்த ஆள் இவளுடைய அன்பரோ?” என்று சோக இசை வந்த ஜன்னல் பக்கம் தலையசைப்பால் ஜாடை காட்டி வினவினார் ஸ்த்ருச்கோவ்.
ஒருவரும் அவருக்குப் பதில் சொல்லவில்லை.
எல்லோரும் ஜன்னல் குறட்டின் வழியாக வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள். அங்கே, பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிவப்புச் சவப் பெட்டி வாயிலை கடந்து மெதுவாக வெளியே நகர்ந்தது. பசுந்தழைகளில், மலர்களில் கிடந்தது கமிஸாரின் உடல். அவருக்குப் பின்னே சிறு பஞ்சணையில் குத்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன் விருதுகள் – ஒன்று, இரண்டு, ஐந்து, எட்டு…. யாரோ ஜெனரல்கள் தலையைக் கவிழ்ந்தவாறு நடந்தார்கள். அவர்களுக்கு நடுவே, தாமும் ஜெனரலுக்கு உரிய மேல்கோட்டு அணிந்து, எதனாலோ தொப்பி இன்றி நடந்தார் வஸீலிய் வஸீலியெவிச். பின்னால், மற்றவர்களிலிருந்து தொலைவில் ஒதுங்கி, மெதுவாக அடி வைத்து நடந்த படைவீரர்களுக்கு முன், கால்கள் இடற, எதிரே எதையும் நோக்காமல் வெறுந்தலையும் வெள்ளை அங்கியும் தானுமாகச் சென்றாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா. வாயிலில் யாரோ ஒருவர் அவள் தோள்கள் மீது மேல்கோட்டைப் போர்த்தார். அவளோ தொடர்ந்து நடந்தாள், மேல்கோட்டு தோள்கள் மேலிருந்து நழுவி விழுந்தது. படைவீரர்கள் அணி இரு கூறுகளாகப் பிரித்து அதைச் சுற்றிக் கடந்து சென்றார்கள்.
“அன்பர்களே, அடக்கம் செய்யப்படுபவர் யார்?’ என்று கேட்டார் மேஜர். அவரும் ஜன்னல் புறம் எம்பிப் பார்க்க விரும்பினார். ஆனால் சிம்புகளால் இறுக்கப்பட்டுப் பிளாஸ்டரில் வைக்கப்பட்டிருந்த அவருடைய கால்கள் அவருக்கு தடையாக இருந்தன. அவரால் ஜன்னலை எட்ட முடியவில்லை.
ஊர்வலம் அப்பால் போய்விட்டது. சோக இசை ஒலிகள் வீடுகளின் சுவர்களில் எதிரொலித்து தொலைவிலிருந்து ஆற்றின் வழியே மந்தணமாகக் கேட்டன. நொண்டி முகப்புப் பணிமகள் வாயிலிலிருந்து வெளியே போய் இரும்புக் கதவுகளை ஒலிப்புடன் இழுத்து மூடிவிட்டாள். ஆனாலும் நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் கமிஸாரைக் கடைசிப் பயணத்தில் வழியனுப்பியவாறு இன்னும் ஜன்னல் அருகே நின்றார்கள்.
“யார் அடக்கம் செய்யப்படுகிறார்? சொல்லுங்களேன்? நீங்கள் என்ன இப்படி, மரங்களாக நிற்கிறீர்கள்?” என்று பொறுமை இழந்து வினவினார் மேஜர். ஜன்னல் குறட்டை எட்டும் முயற்சியை அவர் இன்னும் நிறுத்தவில்லை.
“அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர்… போல்ஷ்விக்…” என்று துயரந்தோய்ந்த தணிந்த குரலில் அவருக்கு விடையளித்தான் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின்.
“உண்மை மனிதர்” என்ற இந்தச் சொற்கள் மெரேஸ்யெவின் நினைவில் பதிந்து விட்டன. கமிஸாரை இன்னும் சிறந்த சொற்களில் குறிக்க முடியாது. இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று.
சிகிச்சையும் காலமும் பயன் விளைத்தன. எல்லோரும் விரைவில் குணம் அடைந்தார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்க நெருங்க, நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தங்கள் உடல்நலக் கேடு பற்றிக் குறைவாகவே எண்ணலானார்கள். வார்டுக்கு வெளியே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது, சொந்தப் படைப்பிரிவில் தங்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்படும், எத்தகைய காரியங்கள் தங்களை எதிர்நோக்கி இருக்கின்றன என்பவற்றைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். பழக்கமான இராணுவ வாழ்க்கைக்கு எல்லோருமே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். புதிய தாக்குதல் தொடங்குமுன் தாங்கள் உடல் நலம் அடைந்து படைப்பிரிவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் உள்ளங்களில் கிளர்ந்து எழுந்தது. இந்தத் தாக்குதல் பற்றி எதுவும் இன்னும் எழுதப்படவில்லை, அது பற்றிய பேச்சு கூட இல்லை, எனினும் சூழ்நிலையில் அதை உணர முடிந்தது மழைப் புயலுக்கு முன் நிலவும் அமைதியை போலப் போர் முனைகளில் திடீரெனக் குடிகொண்ட சந்தடியின்மையைக் கொண்டு அதை அனுமானிக்க முடிந்தது.
மருத்துவமனையிலிருந்து இராணுவ வேலைக்குத் திரும்புவது படைவீரனுக்குச் சர்வ சாதாரணமான காரியம். அலெக்ஸேய் மெரேஸ்யேவுக்கு மட்டுமே அது பிரச்சினையை முன் வைத்தது; சாமார்த்தியத்தாலும் பயிற்சியாலும் கால்கள் இல்லாக் குறையை நிறைவுபடுத்த அவனுக்கு இயலுமா? சண்டை விமான ஓட்டியாக மீண்டும் பணியாற்ற அவனால் முடியுமா? குறித்த நோக்கத்தை அடைவதற்கு மேலும் மேலும் விடாப்பிடியாக முயன்றான் அவன். பயிற்சி நேரத்தைப் படிப்படியாக அதிகப்படுத்தி, காலையிலும் மாலையிலும் கால்களைப் பழக்கப்படுத்துவதையும் பொது உடற்பயிற்சியையும் இரண்டு மணி நேரம் வரை செய்யலானான். ஆனால் இது கூட அவனுக்குக் குறைவாகப்பட்டது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான்.
கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியும் என்பதை வார்டில் ஒருவரும் நம்பவில்லை. ஆயினும் தோழனின் விடாப்பிடியான முயற்சியை எல்லோரும் மதித்தார்கள்.
மேஜர் ஸ்த்ருச்கோவ் முழங்கால் சில்லுகளில் ஏற்பட்டிருந்த பிளவுகள் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிக மோசமானவை எனத் தெரியவந்தது. அவை மெதுவாகவே ஆறின. கால்கள் இன்னும் சிம்புக் கட்டிலேயே இருந்தன. மேஜர் குணமடைவது பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லைதான். ஆயினும் தனக்கு இவ்வளவு தொல்லை விளைத்த “பாழாய்ப் போகிற முழங்கால் சில்லுகளை” வாய் ஓயாமல் திட்டி நொறுக்கினார் மேஜர். அவருடைய இந்தத் தொண தொணப்பு நிரந்தரமான சிடு சிடுப்பாக மாறத் தொடங்கிற்று. ஏதேனும் அற்ப விஷயத்துக்காக அவர் ஒரேயடியாக வெகுண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் வைது நொறுக்க ஆரம்பித்துவிடுவார்.
இரகசியமாகப் புகைபிடிப்பதற்குக் கூட தமக்கு வாய்ப்பு இல்லை என்றும், அறுவைக் கூடத்தைச் சேர்ந்த செம்பட்டை முடி நர்ஸை ஆளோடியில் கூடக் கண்டு பேசத் தமக்கு முடியவில்லை என்றும், வர வர அதிகரிக்கும் தமது பொறுமையின்மைக்கு இவையே காரணங்கள் என்றும் விளக்கினார் ஸ்த்ருச்கோவ். ஒருவேளை விஷயம் ஓரளவுக்கு இப்படி இருக்கலாம். ஆனால் மாஸ்கோவுக்கு மேலாகப் பறந்து செல்லும் விமானங்களை ஜன்னல் வழியே கண்டபோதும், அக்கறைக்குரிய புதிய விமானச் சண்டை பற்றியும் தமக்கு அறிமுகமான விமானியின் வெற்றி குறித்தும் வானொலி அல்லது செய்தித்தாள் வாயிலாக அறிந்த போதும் மேஜருக்கு எரிச்சல் பீறிடுவதையும் எள்ளும் கொள்ளும் வெடிப்பதையும் மெரேஸ்யெவ் கவனித்தான். ஸ்த்ருச்கோவ் போலவே மெரேஸ்யெவையும் இவை பொறுமை இழந்து சிடுசிடுக்க வைத்தன. ஆனால் அவன் அந்த சிடுசிடுப்பை வெளிக் காட்டுவதே இல்லை. இப்போது ஸ்த்ருச்கோவுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவன் உள்ளுற மகிழ்ச்சி அடைந்தான். தான் தெரிந்தெடுத்துக் கொண்ட “உண்மை மனிதனின்” பண்பை, ஓரளவு தான் எனினும், நெருங்கத் தொடங்கியிருப்பதாக அவனுக்குப் பட்டது.
கமிஸாரின் மரணத்துக்கு சில நாட்களுக்கொல்லாம் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினான். எவ்வத உணர்ச்சி வெளியீடும் இன்றி அவன் வெளியேறினான். மருத்துவம் தனக்கு ஒரேயடியாக அலுத்துப் போய்விட்டது என்று விடை பெறுகையில் பிரகடனம் செய்தான். அசட்டையாகவே பிரிவு சொல்லிக் கொண்டான். தாயாரிடமிருந்து தனக்குக் கடிதங்கள் வந்தால் அவற்றைத் தவற விட்டுவிடாமல் பத்திரமாக வைத்திருந்து தனது ரெஜிமெண்ட் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பும்படி மெரேஸ்யெவிடமும் நர்ஸினிடமும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.
“உன்னை அங்கே எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள், எப்படி வேலையில் மறுபடி சேர்கிறாய் என்பதை எல்லாம் எழுது” வழியனுப்புகையில் அவனிடம் சொன்னான் மெரேஸ்யேவ்.
“நான் உனக்கு எதற்காக எழுத வேண்டும்? உனக்கும் எனக்கும் என்ன உறவு பாழ்போகிறது? நான் உனக்கு எழுதிக் காகிதத்தை வீணாக்கப் போவதில்லை….”
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்துவிட்டதாகக் கூறியது போலீசு. அவர்களை வரிசையாக நிற்க வைத்து புகைப்படமும் எடுத்து வெளியிட்டது போலீசு. சட்டவிரோதமாக மாணவர்களின் கையை உடைத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காட்டி மற்றவர்களை மிரட்டுகிறார்களாம். அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்குள் சென்று மிரட்டுவது, பெற்றோர்களை வரவழைத்து மிரட்டுவது என போலீசு அராஜகம் தொடர்கிறது. மாணவர்களிடம் இனி ”சாப்ட் கார்னர்” அணுகுமுறையை கடைபிடிக்க மாட்டோம்; குற்றவாளிகளைப்போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்கிறார் போலீசு உயர் அதிகாரி.போலீசின் இந்த நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்படுகின்றன.
இவ்விவகாரம் குறித்து டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், சமச்சீர் கல்விப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் என்ன சொல்கிறார்? அவரிடம் நடத்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள் :
♦ சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நடுரோட்டில் வீச்சரிவாள்களுடன் மோதிக்கொண்ட சம்பவத்தை ஒரு மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
◊ ஒரு சில ரூட் மாணவர்கள் எந்த ரூட் பெரிது என்று கெத்து காட்டுவதற்காக வழமையாக ஒவ்வொரு ஆண்டும் இப்படி மோதிக் கொள்கிறார்கள். இப்படி மோதலில் ஈடுபடும் மாணவர்கள் படுகாயம் அடைவதோடு, படிப்பும் எதிர்காலமும்கூட பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனம். மாணவர்கள் இத்தகைய ரவுடித்தனத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எமது பு.மா.இ.மு. அமைப்பு இதை ஏற்கவில்லை. கண்டிக்கிறது. இது மக்களிடையே மாணவர்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல வெறுப்பையும் தோற்றுவிக்கிறது. அதே சமயம் இத்தகைய தவறான சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.
♦ ”பஸ் டே” – ”ரூட் தல” போன்றவை எல்லாம் சீரழிவுக் கலாச்சாரமாக பொதுமக்களிடையே பார்க்கப்படுகிறது அல்லவா? அதை எதிர்க்க வேண்டாமா?
◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை இயல்பாக கடந்து செல்லச் சொல்லவில்லை. இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை மாணவர்களிடம் இருந்து முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருசில மாணவர்களுடைய இத்தகைய ரவுடித்தனமான செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கவுமில்லை. ஆனால், இதை ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் செய்வதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும் அரசும் சித்தரிப்பதைதான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
அதேசமயம் மாணவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் பஸ்டே மற்றும் மாணவர்கள் தினந்தோறும் கல்லூரிக்கு வரும் ரூட் ஆகியவற்றையெல்லாம் சீரழிவு என்று யார் சொன்னது? நான் மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவன். அந்த கல்லூரியில் எம்.ஃபில் வரை ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் படித்து இருக்கிறேன். பஸ் டே, ரூட் போன்றவை எல்லாமே மாணவர்கள் தங்களுடைய ஒற்றுமையின், தங்களுடைய ஜனநாயக உரிமையின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள்.
♦ சமீப ஆண்டுகளாக சகிக்க முடியாத அளவிற்கு பேருந்துகளிலும் இரயில்களிலும் மாணவர்களின் ரவுடித்தனம் மக்கள் முகஞ்சுழிக்கும் வண்ணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே?
◊ ரவுடித்தனம் செய்யும் சில மாணவர்களும் கூட இப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு சமூக அடிப்படை இருப்பதை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் தாக்கம்தான் மாணவரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? சினிமாவும் தொலைக்காட்சி சீரியல்களில் மாணவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? மாணவ சமூகம் மூடித்தனமாக பொறுக்கித்தனமாக இருப்பதுதான் கெத்து என்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.
எத்தனையோ சினிமா படங்கள் ஹீரோ என்றால் இப்படி ரவுடியாக இருக்க வேண்டும் என்று சொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா? படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதையும் பட்டா கத்தியுடன் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வதையும் சினிமாக்கள்தானே மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தது? இது தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தெரிந்த உண்மை. சினிமா படங்களில் வந்தால் அதை ரசிக்கிறார்கள். அதனுடைய பிரதிபிம்பமாக அதற்கு ஆட்பட்ட மாணவர்கள் பேருந்தில் செய்தால் வெறுக்கிறார்கள். மக்களுடைய இந்த பத்தாம்பசலித்தனமான செயலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
♦ ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கையை உடைத்த போலீசின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் ”சரிதான்” என்றுதானே கூறுகின்றனர்?
◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை நாங்களும் ஏற்கவில்லை. யாரையும் ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் இப்படிப்பட்ட ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் நிரந்தரமான ரவுடிகளாக மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ? அல்லது இவர்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோமா? இதைப் புரிந்து கொள்வதில் தான் வேறுபாடு உள்ளது.
போலீசின் பொறுக்கித்தனம் : கை முறிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்.
பெற்றோர்கள், தமது சொந்த மகன் ஒரு தவறான செயலில் ஈடுபடும் பொழுது கூட அவனை ஆத்திரத்தில் அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் வீட்டை விட்டு வெளியே போ என்று அனுப்புகிறார்கள். ஆனால், அதை நிரந்தரமாக அவனை ஒரு எதிரியைப் போல நடத்துவதே இல்லை. இதையெல்லாம் அவர்கள் செய்வதற்கு காரணம் அந்த தவறின் மீது அவருடைய கோபம் ஆத்திரம் மட்டுமல்ல அவனை மாற்றியமைப்பதற்காக, திருத்தி அமைப்பதற்காக அந்த பெற்றோர்கள் எடுக்கின்ற முயற்சி என்ற வகையில் தான் பார்க்கவேண்டும். அப்படித்தான் சமுதாயத்தில் நடக்கிறது. ஆனால், இங்கு மட்டும் கல்லூரியில் ஒரு சில மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இதைப் போன்ற ரவுடித்தனத்தில் ஈடுபடும் பொழுது, அவனை எதிரியைப் போல சித்தரித்து நிரந்தரமாக குற்றவாளியாக மாற்றுவதற்கு போலீசுக்கு அதிகாரத்தை கொடுப்பதை எந்த வகையில் சரி என்று பார்க்க முடியும்?
இந்த அதிகாரத்தை எந்த சட்டம் போலீசுக்கு கொடுத்தது? குற்றம் செய்திருக்கிறார்கள் என்றால், கைது செய்யுங்கள். வழக்கு போடுங்கள். சிறையில் தள்ளுங்கள். நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள். தீர்ப்பு எழுதுங்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பிடித்த பொழுது அடித்து கையை காலை உடைப்பது, சுட்டுக் கொல்வது, என்பது எந்த வகையில் ஜனநாயகம்? இதுதான் சர்வாதிகாரம். இதுதான் போலீசின் ஆட்சி.
கல்லூரிக்கு வருகின்ற அனைத்து மாணவர்களும் ஏதோ ஒரு இலட்சியத்திற்காக அல்லது ஏதோ ஒரு பிழைப்பிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் படிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி ரவுடிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதையும் நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.
கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போலீசு.
ரவுடித்தனம் பொறுக்கித்தனம் கொலை கொள்ளை குடித்தனம் செய்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, முதல்வர்களாக, அதிகாரிகளாக, கௌரவமான மனிதர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் விஐபிகள் ஆக பார்க்கப்படுகிறார்கள். நல்லவன் ஒழுக்கமானவன் என்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதைத்தான் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் கற்றுத்தருகின்றது.
சகிக்க முடியாத குற்றங்களுக்கு எல்லாம் இது தான் தீர்வு என்று சொன்னால், இந்த மாநிலத்தின் முதல்வர் கொடநாடு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் முன்னாள் டிஜிபி குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தார். இன்னும் பல அமைச்சர்கள் பல்வேறு விதமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அனைத்தும் ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன.
அமைச்சர் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இன்னும் எத்தனை அமைச்சர்களை சொல்ல வேண்டும்? இன்றைய துணை முதலமைச்சர் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறார். மாணவர்களின் கை கால்களை உடைத்தது போலவே, இவர்கள் விசயத்திலும் செய்வார்களா?
♦ ஒருகாலத்தில் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களையும், அறிவுத்துறையினரையும் உருவாக்கிக் கொடுத்த பச்சையப்பன் கல்லூரி இன்று, ”பொறுக்கிகளையும், ரவுடிகளையும்” உருவாக்கிக் கொண்டிருக்கிறதா?
◊ நிச்சயமாக இல்லை. ”பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்; அந்தக் கல்லூரி இப்படிப்பட்டவர்களை மட்டும்தான் உருவாக்குகிறது” என்ற தோற்றத்தை போலீஸும், பத்திரிகைகளும் அரசும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றது. இன்றளவும் அந்தக் கல்லூரியில் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். சென்னை ஐஐடி போன்றவற்றில் நடக்கின்ற இன்டர்காம் பட்டியலில் இன்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நாடகம், பேச்சுப்போட்டி, உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அதே போல் கால்பந்து கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டிலும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக மாநில அளவில் விளையாடி பரிசுகளை வென்று வருகிறார்கள். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளை உருவாக்கும் இடமாக இன்றளவும் பச்சையப்பன் கல்லூரி திகழ்ந்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
♦ ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு எதிராக, டாஸ்மாக் சாராயக்கடைக்கு எதிராக முன்னுதாரணமான போராட்டங்கள் பல நடத்தியவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். சமீப ஆண்டுகளாக அதுபோன்ற சமூக அவலங்களுக்கு எதிராகவோ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டங்களோ எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லையே? காரணம் என்ன?
◊ இதையெல்லாம் நீங்கள் முன்னுதாரணமான போராட்டங்களாக குறிப்பிடுகிறீர்கள். ஆனால், இத்தகைய சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்த காரணத்தினால்தான் போலீசும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பலரை சஸ்பெண்ட் செய்தது. சில மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கியே தீருவோம் என்று பிடிவாதமாக நீக்கியது. குறிப்பாக, இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்த எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை கல்லூரியை விட்டு நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். ”அந்த மாணவர் எங்கள் கல்லூரியில் இருந்தால் அனைத்து மாணவர்களையும் அரசியல்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுத்தி விடுவார். இதனால் மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு விடுவார்கள். எனவே, இவரை எங்கள் கல்லூரியில் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம்” என்று நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவித்தார், கல்லூரி முதல்வர். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்த மாணவரை வேறொரு கல்லூரிக்கு மாற்றி சேர அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
ஈழத்தில் இன அழிப்புப் போருக்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை வேட்டையாடிய போலீசு....
1 of 3
சமூக அநீதிக்கு எதிராகப் போராட முன்வரும் மாணவர்கள் இத்தகைய சம்பவங்களை பார்க்கின்ற போது அவர்கள் எப்படி மேலும் மேலும் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள்? அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்? சமூக அக்கறை உள்ள மாணவர்களை கண்டறிந்து கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதற்கு என்றே 10-க்கும் மேற்பட்ட உளவு போலீசாரும் கியூ பிராஞ்ச் போலீசாரும் கல்லூரிக்குள் சுற்றி வருகிறார்கள். முதல்வருக்கு மாணவர்களை அடையாளம் காட்டி அவர்களை கல்லூரியைவிட்டு அனுப்புகின்ற வேலையை தினமும் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து வைத்து மாணவர்களை, குற்றவாளிகளைப் போல, முழுக்க சோதித்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். கிரவுண்டில் விளையாடக்கூடாது; ஐந்து ஆறு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொள்ளக் கூடாது; இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள். மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இப்படி தவறாக வழி நடத்தப்படுவதால்தான் மாணவர்கள் சமூக விஷயங்களில் தலையிட்டு போராடுவதற்கு பதிலாக சுயநலமாக காரியவாதமாக பிழைப்புவாதமாக சரியாக சொல்லப் போனால் தைரியமில்லாத கோழைகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள்.
♦ மாணவர் அமைப்புகள் போராட்டங்களுக்கு ”மாஸ்” காட்டத்தான் மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனவா? மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு மாணவர் அமைப்புகளுக்கு இல்லையா?
◊ போராட்டங்களுக்கு மாஸ் காட்ட மாணவர்களை திரட்டி செல்வதால் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன இலாபம்? கல்வி உரிமை பறிக்கப்படுகிறது; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் அழிக்கப்படுகிறது; இன்னும் பல்வேறு வகையில் இந்த மக்கள் பாதிக்கப்படும்போது, மாணவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக மாணவர்களை களத்தில் நிறுத்தி போராட வைப்பதுதான் ஒரு மாணவர் அமைப்பின் மிக முக்கியமான கடமையும் பொறுப்பும். இதனூடாகத்தான் கரடுமுரடாக வருகின்ற மாணவர்களை நெறிப்படுத்தி சமூக அக்கறையோடு பொறுப்புடன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்ற வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கித் தர முடியும். இதைத்தான் முற்போக்கு மாணவர் அமைப்புகள் செய்து வருகின்றன.
எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வந்த வரையில் மாணவர்களை அவர்களது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் களத்தில் முன்னிறுத்தி அவர்களை ஹீரோவாகக் காட்டியிருக்கிறோம்.
ஆனால், இப்பொழுது கல்லூரிக்குள் மாணவர் அமைப்புகள் செயல்பட நிர்வாகமும் போலீசும் அனுமதிப்பதே இல்லை. சரியாக சொல்வதென்றால் கல்லூரிகள் கல்லூரிகளாகவே இல்லை. சிறைச்சாலைகளை விட கொடுமையாக இருக்கின்றன. மாணவர்கள் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதைபோல் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் மாணவர் அமைப்புகள் கலந்து பேசுவதற்கான வாய்ப்பு அறவே ஒழிக்கப்பட்டது. ஒரு மாணவர் கல்லூரியில் மாணவர் அமைப்பில் இருக்கிறார் என்று தெரிந்தாலே அவர் உடனடியாக கல்லூரியை விட்டு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார் அல்லது நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது இரண்டாண்டுகளுக்கு முன்பு மாநிலக் கல்லூரியில் படித்த எமது மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கே நடந்தது. மீறி சட்டரீதியாகப் போராடி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தாலும் அவரை ஒதுக்கி வைப்பது, மற்ற மாணவர்களை அவர்களுடன் சேரவிடாமல் செய்வது என அந்த மாணவர்களை வதைக்கிறது நிர்வாகம். அதனூடாக போலீசுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்து கல்லூரி வாயிலில் நின்று மாணவர்களை நோட்டீஸ் கொண்டு வருகிறார்களா என்று சோதித்து அறிந்து அவர்களை சிறைப்படுத்துகின்ற வேலையை கல்லூரி நிர்வாகங்கள் செய்கின்றன. இப்படி இருக்கின்றபட்சத்தில் எப்படி மாணவர் அமைப்புகள் கல்லூரி மாணவர்களை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த முடியும்?
போலீஸும் கல்லூரி நிர்வாகமும் அரசும் மாணவர்கள் ஒழுங்கில்லாத நிலையில் இருக்கிறார்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், மாணவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவர்களாக நெறிப்படுத்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக உள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டுகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மாணவர்கள்தான் முயற்சியோடும் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் பொது விசயங்களுக்காக தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் முன் நின்று நடத்திய போராட்டம். ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராடிய போது அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் குரல் கொடுத்து போராடியவர்கள் யார் மாணவர்கள்தானே? தற்போது பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக களத்தில் நின்று போராடி அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க காரணமாக இருந்தவர்கள் யார்? மாணவர்கள்தானே? மறுக்க முடியுமா?
டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதோடு, மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் தான் அதிகப்படியான மாணவர் போராட்டங்கள் நடந்து இருக்கின்றது. இதைக்கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. இங்குள்ள எடப்பாடி அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் எதுவும் நடைபெறக்கூடாது அப்படி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மாணவர் அமைப்புகள் கல்லூரிக்குள் செயல்படக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜனநாயக உரிமைகள் இன்றி அடக்கி ஒடுக்கி சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதனால்தான் மாணவர் அமைப்புகளை தமிழக அரசும் மோடி அரசும் எதிரிகளாக பார்க்கிறது. இந்த மாணவர் அமைப்புகளை முதலில் களை எடுத்து விட்டால் பின்னர் மாணவர்களுடைய சமூகப்பற்றை நாட்டுப்பற்றை அறுத்தெறிந்து போர் முனை மழுங்கச் செய்து அவர்களை சீரழிவில் தள்ளி அந்த அரசை தாங்கள் விரும்புகின்ற படி நடத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த நிலைமையை மாற்றி அமைப்பது மாணவர்கள் அமைப்புடைய பொறுப்புகள் கடமைகள் தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. அதைத்தான் நாங்கள் தினந்தோறும் செய்ய முயற்சித்து வருகிறோம். அர்ப்பணிப்போடு தியாகத்தோடு இந்தப் பணியில் எங்களை ஈடுபடுத்தி இருக்கிறோம். எந்த சுயநலமும் இலாப நோக்கமும் இல்லாமல் பல்வேறு வழக்கு கைது சிறை அனைத்தையும் சந்தித்து இதற்காக மாணவர் மத்தியில் போராடி வருகிறோம்.
♦ இந்த சூழலை மாற்ற வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
◊ இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் மாணவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும். கல்லூரி சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கான, மாணவர்கள் ஜனநாயகத்தை உணர்வதற்கான சூழலாக மாற்றி அமைக்க வேண்டும். ஆண்டுதோறும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கலாச்சார நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஜனநாயகபூர்வமாக கலந்துரையாட வேண்டும். மாணவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தீர்வு சொல்ல வேண்டும். பேராசிரியர்கள் மாணவர்களின் சக நண்பனாக இருக்க வேண்டும். மாணவர் அமைப்புகள் செயல்படுவதை அனுமதிக்க வேண்டும். சமூக விஷயங்களில் மாணவர்கள் தலையிடுவதை ஊக்கப்படுத்தவேண்டும். சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு மாணவருடைய பங்களிப்பை கோரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்குவது தான் மாணவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதை தடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படவைக்க நிரந்தரவழி.
வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு!
– பேராசிரியர் கருணானந்தன் !
பேராசிரியர் கருணானந்தன், சென்னையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பணியில் இருந்த சமயத்தில் அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியபொழுது, சமச்சீர் பாடத் திட்ட நூல் ஆசிரியர் குழு தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார்.
பேராசிரியர் கருணானந்தன்.
கருணானந்தன் ஆசிரியர் பணியில் இருந்துதான் ஓய்வு பெற்றுவிட்டாரே தவிர, மக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. மக்கள் கல்வி மற்றும் ஆசிரியர், மாணவர் உரிமைகள் ஆகிய தளங்களில் இன்று வரையில் ஊக்கமுடன் பணியாற்றிவருகிறார். பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.
மைய அரசு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதை அடுத்து, அக்கொள்கையின் கார்ப்பரேட் காவி சார்பை அம்பலப்படுத்தி கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.
புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக, தேசியக் கல்விக் கொள்கை- வரைவு குறித்துப் பேராசிரியர் கருணானந்தன் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை ஒழுங்கு செய்தோம். அந்நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இவ்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் குழு.
♦ கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வரும் வேளையில் தேசியக் கல்விக் கொள்கை (வரைவு) 2019 வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கோரிக்கையை நிறைவுசெய்யும் விதத்தில் இந்த வரைவு அறிக்கை அமைந்திருக்கிறதா?
◊ இந்தக் கல்விக் கட்டமைப்பு மாற வேண்டும் என நாம் மட்டுமல்ல, வியாபார நோக்கில் கல்வியைப் பார்க்கிறவர்களும் விரும்புகிறார்கள். உலகத்திலேயே கல்வி பெற்ற நடுத்தர வர்க்கம் அல்லது கல்வி பெறுகிற நடுத்தர இளைஞர் சமுதாயம் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற நாடு இந்தியா. இந்நிலையில் அவர்கள் கண்ணோட்டத்தில் இலாபம் ஈட்டக்கூடிய கல்வி வியாபாரத்துக்கு பொருத்தமான இடமிது. தங்கள் இலாபத்தை உறுதிப்படுத்துகிற வகையில், அதிகப்படுத்துகிற வகையில் மாற்றங்களைக் கொண்டுவர (கல்வி வியாபாரிகள்) விரும்புகிறார்கள்.
நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது மக்கள் முன்னேற்றத்துக்கான ஒரு கருவி. சிந்தனை மற்றும் பொருளியல், சமூக முன்னேற்றத்துக்கான கருவி. அதை நோக்கிய பயணத்தில் இருக்கிற குறைகளைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது கல்வி வியாபாரத்துக்கு மிகப் பொருத்தமான சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. ஆனால், மக்கள் கல்விக்கு இது முரண்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையாக இருக்கிறது. ஆகவே, இந்தக் கல்விக் கொள்கை ஏமாற்றத்தை மட்டுமல்ல, எதிர்ப்பை விளைவிக்கக்கூடிய கல்விக் கொள்கை.
♦ பொதுவெளியில் பின்லாந்து மாதிரி பற்றிப் பேசப்படுகிறது. அந்நாட்டில் 6 வயதுக்கு மேல்தான் கல்விக்கூடங்களில் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆயின், தேசியக் கல்விக் கொள்கை மூன்றாவது வயதிலேயே இந்தியக் குழந்தைகளைக் கட்டாயக் கல்வி வளையத்திற்குள் கொண்டு வருகிறது. மேலும், அவ்விளம் பருவத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைப்பதோடு, இதற்கு அறிவியல் அடிப்படை இருப்பதாகவும் கூறுகிறது. இப்பரிந்துரையை நேர்மறையாகப் பார்க்க இயலுமா?
◊ அறிவுள்ள யாரும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனித வாழ்க்கையில் சில பருவங்கள் உண்டு. மழலைப் பருவம், குழந்தைப் பருவம், விடலைப் பருவம், அதன் பிறகு வாலிபப் பருவம் என்றவாறு… அந்தப் பருவத்துக்கு ஏற்பத்தான் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும். கல்விக்காக மனிதன் கிடையாது. மனிதனுக்காகத்தான் கல்வி.
மழலைப் பருவக் கல்வி (Pre Education) என்பது கார்ப்பரேட்டுகளின் சதி, கார்ப்பரேட்டுகளின் வியாபாரம். பிரீ பிரைமரி, பிரீ ஸ்கூல் என்பவையெல்லாம் வணிக நோக்கத்துக்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கியவை. சொல்லப்போனால், 1985 பிறகுதான் இவையெல்லாம் வருகின்றன.
இந்த கார்ப்பரேட் யுகம் வரவர, தனியார்மயம் (LPG) பெரிதாகப் பெரிதாகக் கல்வியை அதற்கு ஏற்றாற்போலக் கொண்டுவருகிறார்கள்.
உடல் பக்குவத்தோடுதான் அறிவுப் பக்குவம் வருகிறது. கையைச் சரியாக மடிக்க வராத குழந்தைக்கு, பேனாவைக்கூடப் பிடிக்க முடியாத குழந்தைக்கு முறைசார்ந்த கல்வியைத் தொடங்குவது எந்த விதத்தில் நியாயம்? எதைச் சொல்லியாவது குழந்தையை இந்த வணிகத்துக்குள் கொண்டு வந்துவிடப் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அது தேவையில்லை. மழலைப்பருவம் மகிழ்வான பருவம். அந்த மகிழ்வு உறுதியாக வேண்டுமென்றால், குடும்பப் பிணைப்புடன் பெற்றோர் பிணைப்புடன் அதை இணைத்துப் பார்க்க வேண்டும்.
அதனாலேயே முன்னேறிய நாடுகள் மழலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. குழந்தைக் கல்வியின் தொடக்கம் என்பது, முறைசார்ந்த கல்வியின் தொடக்கம் என்பது மழலைப் பருவம் கடந்த பிறகுதான் வரவேண்டும். இது உலகளாவிய உண்மை. இவன் வியாபாரத்துக்காக (அவ்வுண்மையை) மாற்ற முடியாது.
மழலைப் பருவத்திலேயே பல மொழிகளை கற்றுக்கொள்ளும் திறமை இருப்பதாகச் சொல்வது, இவர்களது வேறு உள்நோக்கத்துக்கு இசைவாகப் புதிய கற்பிதங்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கு எந்தவிதமான சயின்டிபிக் எவிடென்ஸ்” (அறிவியல் ஆதாரம்) கிடையாது.
♦ முந்தைய காங்கிரசு அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எட்டாவது வரையிலும் எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது எனக் கூறியது. பின்னர் வந்த மோடி அரசு அக்கொள்கை மாணவர்களின் கல்வித் திறனைப் பாதிப்பதாகக் கூறி ரத்து செய்தது. தேசியக் கல்விக் கொள்கையோ 3, 5, 8- வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப் பரிந்துரைப்பதோடு, ஒன்பதாம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலும் நான்கு ஆண்டுகளில் எட்டு பருவத் தேர்வுகளைப் பரிந்துரை செய்கிறது. இது பள்ளிக் கல்வியில் எந்தவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்?
◊ இடைநிற்றலுக்கான காரணங்கள் ஒன்று அல்ல, பல உண்டு. முக்கியமான காரணம் வறுமையாக இருந்தது. அதற்காகத்தான் மதிய உணவுத் திட்டத்தை காமராஜும், அதற்கு முன்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும் கொண்டுவந்தார்கள்.
இரண்டாவது, மனதில் ஏற்படக்கூடிய அழுத்தம். கூண்டுக்குள் இருப்பது போன்ற மனநிலை. அந்த மன அழுத்தத்தில் மாணவர்கள் வெளியேறுகிறார்கள்.
மூன்றாவதாக, இந்த வறுமைதான் அங்கேயும் வருகிறது. ஏதோ ஒன்று செய்து நமது குடும்பத்திற்கு உதவியாக இருப்போம், ஏதாவது ஒரு தொழில் செய்வோம் என எண்ணிப் படிப்பைக் கைவிட்டுச் சாதாரண பெட்டிக் கடைகளிலும் போய்ப் பணிபுரிகின்றனர். படிப்பைக் கைவிடும் மாணவனைப் பொருத்தவரை என்ன மனநிலை என்றால், ஏதாவது ஒரு வகையில் நமது பெற்றோருக்கு நாம் உதவியாக இருக்கிறோம் என்பதுதான். இப்படிப் பல காரணிகள் உண்டு.
மற்றொரு காரணி என்னவென்றால், சமூகத்தின் பன்முகத் தன்மை. அங்கே வரக்கூடிய குழந்தைகளின் சமூக, பொருளியல், பண்பாட்டுக் களங்கள் வேறுவேறானவை. குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்ற சமூக ஏற்றத்தாழ்வு நாம் வேறு எங்கும் காண முடியாது.
சாதி உணர்வோடு ஆசிரியர் இருந்தாலோ, பள்ளி நிர்வாகம் இருந்தாலோ நிச்சயமாக அதனுடைய விளைவுகள் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒற்றைச் சமூகமாக மாறுவதற்குப் பதிலாக சமூக இடைவெளிகள் நிலைப்படுத்தப்படுவதையும் இறுகிப்போவதையும் இந்தக் கல்விக்கூடங்களில் பார்க்கிறோம். இதன் விளைவாகவும் இந்த இடைநிற்றல் ஏற்படுகிறது.
நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி ஜார்கண்டு மாநிலத்தில் பள்ளிகளை இணத்ததால், புதிய பள்ளிகளுக்குச் செல்ல வழியின்றிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட பழங்குடியினக் குழந்தைகள் பூல்மதி (இடது படம்), சுமித் (வலது படத்தில் இடது ஓரம்) மற்றும் அவனது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்.
இந்த இடைநிற்றலை மாற்றுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்று மதிய உணவு. அடுத்து சீருடை போன்ற பல விடயங்கள். இவையெல்லாம் மருந்துதான். இறுதியாக கல்விச்சுமை. கல்வியைச் சுமையாக மாற்றக்கூடாது. இங்குதான் சீர்திருத்தம் வேண்டும் என்கிறோம். நிறைய பளுவைச் சேர்த்து எம்.எஸ்சி., படிக்கக்கூடிய பையனின் பளுவை மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு திணித்துவிட்டு, அதில் தேறி வந்தால் சிறப்பான கல்வியுடைய மாணவன் என்று சொல்வது, வயதுக்கு ஏற்ற கல்வி என்பதையும் மறந்துவிட்டார்கள். சமூகச் சூழலுக்கு ஏற்ற நிலைமை என்பதையும் மறந்துவிட்டார்கள். இதைச் சீர் செய்வதற்கு ஒற்றைக் கல்வி கொள்கையால் முடியாது. இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அமைப்புகள் மூலம்தான் சீர்செய்ய முடியும்.
ஒருமைப்படுத்தப்பட்ட கல்விமுறையில் இவையெல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே மாறிவிடும். இவர்களின் திட்டத்தில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு என்கிறார்கள். நாம் முன்னரே கூறியது போன்று பொதுத்தேர்வு என்று ஒன்று வந்தாலே, அதற்கான தயாரிப்பு முறை என்று வந்துவிடும். சிறு வயதில் பொதுத்தேர்வு என்பது பெரும் மனச்சுமை. அப்புறம் இதை வியாபாரமாக ஆக்குவார்கள். சாதாரண ஆசிரியராக இருந்தால், இதற்காக டியூசன் ஆரம்பிப்பார். பின்பு இது நிறுவனமயப்படும். இது கல்வியை வியாபாரம் ஆக்குவதற்கு மேலும் துணை செய்கின்ற அமைப்பு. இது மழலைக் கல்வியைக்கூட வியாபாரமாக ஆக்குவதற்குத் துணை செய்கின்ற அமைப்பு.
குழந்தைகளுக்குக் கல்வியை புகுத்துவது என்பது, தேனில் மருந்து கொடுக்கும்படிதான் இருக்க வேண்டும். அந்தச் சுமை தெரியக்கூடாது. இந்த இடத்தில்தான் ஆசிரியர் – விகிதம் என்பது மிக முக்கியமான விசயம். 40 மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு ஆசிரியர் தாக்குப் பிடிக்கணும் என்றால், அவரால் எப்படிச் சீர்படுத்த முடியும்? இவையெல்லாம் இப்புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படவில்லை. மாணவர் விகிதம் 1:30 என்ற அளவிலேயே நிற்கிறார்கள்.
இதைச் சரி செய்வதை விட்டுவிட்டு, மேலும் பளுவைச் சேர்ப்பதனால், இந்த இடைநிற்றல் அதிகமாகும். ஏற்கனவே இந்த இடைநிற்றல் படிப்படியாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மேலும், இந்த கல்விக் கொள்கையிலேயே வெளியேற்றம் – மல்டிபில் எக்சிட்” குறித்துப் பேசப்படுகிறது. இந்தத் தேர்வுகள் எல்லாமே வெளியேற்றத்திற்கான, இடைநிற்றலுக்கான கதவுகள்.
இதில் 9,10,11,12 வகுப்பை ஒரு யூனிட்டாக வைத்துவிட்டு, அதனை secondary education எனக் கூறுகிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செமஸ்டர்கள் (பருவத் தேர்வு); கிட்டத்தட்ட 8 செமஸ்டர்கள். இந்த எட்டு செமஸ்டரிலும் வொகேஷனல் (vocational)- தொழில் பாடமும் வருகிறது.
தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை குழுத்தலைவர் கஸ்தூரிரங்கன்.
ஐந்தாம் வகுப்பிலிருந்தே தொழில் பாடத்தைக் கொண்டுவருகிறது, வரைவு அறிக்கை. ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவன் பருவத் தேர்வுகளால் அயர்ச்சியுற்றோ, வேறு காரணங்களாலோ வெளியேறினால் (exit), அம்மாணவன் அதுவரை படித்துவந்த தொழில்கல்வியை அடிப்படையாக வைத்து, நல்லது செய்வதைப் போல ஒரு சான்றிதழை வழங்கி அனுப்பிவிடுவார்கள்.
எனில், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது என்ன ஆகிறது? இலவசப் பொதுக்கல்வி, கட்டாயக் கல்வி 18 வயது வரைக்கும் வந்திருக்க வேண்டும்; வரவில்லை. 13 வயதிலேயே வெளியே போய்விடுகிறோமே? அப்படியென்றால், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. அப்படியென்றால், மாணவர் சேர்க்கை விகிதம் General Enrollment ratio (GER)” என்பது குறையக்கூடிய வாய்ப்பு உள்ளதேயன்றி, கூடக்கூடிய வாய்ப்பு இல்லை.
♦ பள்ளிகளை ஒருங்கிணைத்துப் பள்ளி வளாகங்களை உருவாக்க வேண்டும் என்கிறது, வரைவு அறிக்கை. இப்பரிந்துரை, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளைப் பக்கத்திலுள்ள பள்ளிகளோடு இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக் ஆலோசனையின் நீட்சியா?
◊ இரண்டுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. நிதி ஆயோக் புதிய பள்ளிகளைத் திறப்பதற்கோ, மேம்படுத்துவதற்கோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லை.
இவர்கள் சொல்கிறபடி ஸ்கூல் காம்ப்ளக்ஸ்” (பள்ளி வளாகம்) என்பது செகண்டரி எஜூகேசன்” இருக்கின்ற பள்ளி. அந்தப் பள்ளியோடு, பிரைமரி மற்றும் பிரீ பிரைமரியை இணைக்கிறார்கள். வொகேஷனலைசேஷனைச் (Vocationalisation) சேர்க்கிறார்கள். பல்வேறு மொழிகள் கற்பதைத் திணிக்கிறார்கள்.
ஒரு தாலுக்காவில் 16 பள்ளிகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். 16 பள்ளிகளை பிசிக்கல்லா” – அப்படியே பெயர்த்து வேறொரு இடத்துக்குக் கொண்டுபோக முடியாது. ஆசிரியரை அங்கே, இங்கே எனச் சுழற்சி முறையில் அனுப்பப் போகிறார்களா? இல்லை, மாணவர்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? இல்லை, இந்தக் கல்விக்கான சாதனங்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? சாதனங்களையும் ஆசிரியர்களையும் உரிய அளவுக்குப் பெருக்குவதற்குப் பதிலாக, இருக்கின்ற ஆசிரியர்களை வைத்துக்கொண்டு மேனேஜ் செய்யப் போகிறார்கள். அதற்கு வசதியாகத்தான் ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சிஸ்டம்” இருக்கிறதே தவிர, மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல.
இந்த காம்ப்ளக்ஸ் ஸ்கூல் சிஸ்டம் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்ளும் ஏற்பாடு.
இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்துவது, சீர்படுத்துவது, வசதிகளைத் தருவது, அதன் தரத்தை மேம்படுத்துவது, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது – இவைதான் நமது தேவையே!
♦ தமிழகத்தில் மேநிலைப் பள்ளிக் கல்வியில் நடைமுறையில் இருக்கும் தொழிற்கல்விக் கட்டமைப்பும், வரைவுக் கொள்கை பரிந்துரைக்கின்ற பொதுக்கல்வியோடு தொழிற்கல்வி என்பதும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றனவா? அல்லது வேறுபட்ட பார்வையைக் கொண்டவையா?
◊ இந்த Vocationalization எத்தனை வொக்கேஷன்ஸ் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். நிச்சயமாகப் பாரம்பரியத் தொழில்களை இதில் கொண்டுவரக்கூடாது, முடியாது.
இந்த வொக்கேஷனலைசேஷனுக்கு இன்வெஸ்மென்ட் அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வகம் வேண்டும்; தொழிற்கூடம் வேண்டும்; தொழில்கருவிகள் வேண்டும்; தொழில்கல்வி ஆசிரியர் வேண்டும்; தொழில்படிப்புகளைப் பட்டியலிட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்தச் சுமையை மாணவர்கள் மேல் திணிக்கக்கூடாது. அரசு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், மாணவனுக்கு பொதுக்கல்வியோடு திறன் கல்வியும் கிடைத்துவிடும். நாம் விரும்புவது அதைத்தான். அத்தகைய எந்தவிதமான ஒரு அறிவியல்பூர்வமான திட்டத்தையும் கல்விக்கொள்கை தரவில்லை.
தொழில் கல்வியைப் பொதுப்படையாக வைத்துள்ளார்கள். மாணவனின் விருப்பம் எனப் பொதுவாகக் கூறுகிறார்கள். எட்டு வயது மாணவனுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? அறிதலுடன் கூடிய விருப்பமா? புரிதலுடன் கூடிய விருப்பமா? அந்த விருப்பம் மாயையின் அடிப்படையில்கூட வரலாம், இல்லையா? ஆடு-மாடு மேய்ப்பதுகூட அவனுடைய விருப்பத்தின் பேரில் வந்துவிடலாம். இதனால் வரைவு அறிக்கை கூறும் தொழில் கல்வி, திறன் கல்வி என்பதெல்லாம் ஏறக்குறைய ராஜாஜியின் (குலக்கல்வி) கொள்கையை வலியுறுத்துவது போலத்தான் இருக்கிறது.
♦ கல்விக்கொள்கை திறனை வளர்ப்பது பற்றிப் பேசுகிறது. தொழில்துறை முதலாளிகளின் தேவைகளை ஈடுசெய்யும் வண்ணம் மாணவர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது என்ற பரிந்துரைகள் கல்வி புலத்திலும், மாணவர்களின் அறிவுத் திறன், பண்பாடு ஆகியவற்றிலும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?
◊ முன்பு வேலைக்குச் சென்றவர்களெல்லாம் பொதுக்கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் தான். திறன் கல்வி அடிப்படையில் போகவில்லை. ஒருவருடைய திறன் எங்கே வளர்ச்சி பெறுகிறது? படிக்கும் இடத்தில் அல்ல, பயிற்சிகளின் மூலமாகத்தான் திறன் வளர்ச்சி பெறுகிறது.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான தொழிலாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் செலவையும் மிச்சம் பண்ண விரும்புகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில் ஆட்கள் தேவை என்றால், அதைக் கல்வி நிறுவனங்களையே தயார் செய்து கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். இன் சர்வீஸ் டிரைய்னிங்” கிடையாது. வேலையில் சேரும்போதே பயிற்சி கொடுக்கும் முறையெல்லாம் இப்போது கிடையாது. எல்லாச் செலவையும் செய்து கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் சில பேரை கார்ப்பரேட்டுகள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள், வேண்டாமென்றால், தூக்கியெறிந்துவிடுவார்கள். கார்ப்பரேட் இலாபத்திற்காக அளவுக்குமீறி வற்புறுத்தப்படுகின்ற ஒன்றுதான் திறன் மேம்பாடு.
♦ பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அப்பால் தன்னார்வலர்களை வகுப்பெடுக்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்தன்னார்வலர்களைப் பயிற்றுவிக்க தேசிய விரிவுரையாளர் திட்டம் என்றொரு அமைப்பை உருவாக்கக் கோருகிறது. இது ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பள்ளிக்குள் திணிக்கும் சதி என விமர்சிக்கப்படுவது குறித்துத் தங்களின் கருத்தென்ன?
◊ தன்னார்வலர்கள் என்பது கல்விக்குப் புறம்பான சக்திகளைக் கல்விக்கூடங்களில் நுழைய வைப்பது என்று அர்த்தம். கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதைத்தான் நாமும் விரும்புகிறோம். அந்நியர்கள் ஆசிரியர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழையும்போது எப்படிக் கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க முடியும்? அவர்களைக் கண்டு அஞ்சுகின்ற சூழல் தானே இருக்கும்.
அந்நிய சக்திகள், இன்னும் சொல்லப்போனால் உள்நோக்கம் கொண்டவர்கள் கல்விக்கூடங்களில் நுழைந்து மாணவர்களை மனமாற்றம் அல்லது மூளைச்சலவை செய்வதற்கு அல்லது முரட்டுத்தனமாகத் தங்கள் பால் இழுப்பதற்குமான வழி இது. கல்விக்கூடங்களை மோசமான சமூக அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான வேலை இது.
♦ கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கு கமிட்டிகள் அமைக்கப்படுவதைப் போல, இந்த வரைவு அறிக்கையில் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?
◊ இவர்கள் நேரடியாக அதில் வரவில்லை. கட்டணங்களைச் சீரமைப்பது என்றால், அதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படைகள் இருக்க வேண்டும், இல்லையா? இரண்டாவது, என்ன கட்டணம் வேண்டுமானாலும் சீரமைத்துக் கொள்ளட்டும். பத்து ரூபாய்கூட வைத்துக்கொள்ளட்டும். பத்து ரூபாய் கொடுக்கமுடியாத அளவிற்குக்கூடப் பையன் இருக்கிறான் என்றால், அவனுக்கு என்ன ரெமிடி- (தீர்வு)? இதில் சமூகநீதி பற்றி எதுவுமே பேசவில்லை. புறக்கணிக்கப்பட்ட, இயலாத வர்க்கத்தினர் கல்வியை எட்டுவதற்குக் கூடுதல் உதவி என்பதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் கிடையாது.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் மாணவர்களின் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.
தேசிய ஆராய்ச்சி அமைப்பு (நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன்) – குறித்துப் பேசப்படுகிறது. ஆய்வுகள் அதன் கீழே இருக்குமாம். அதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சி அமைப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தகுதி, திறமை பற்றிப் பேசுகிறார்களே தவிர, சமூக நீதி (இட ஒதுக்கீடு)பற்றிச் சொல்லவில்லை. இன்குளுசிவ் பற்றி, அனைவரையும் உள்ளடக்குவது பற்றிப் பேசாமால், அயல்நாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்வதற்கு இந்த நிதி பயன்படும் எனக் கூறப்படுகிறது.
ஸ்டடி இன் இந்தியா” இந்தியாவில் கல்வி பயிலுவோம் என ஆவணம் பேசுகிறது. அதற்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இயற்பியல் படிப்பதற்கோ, தொழில்நுட்பம் படிப்பதற்கோ எந்தவொரு அந்நிய மாணவனும் இந்தியாவிற்கு வரப்போவது இல்லை. இங்கே வருபவர்கள் பெரும்பாலும் சமூக அறிவியல் தொடர்பாக, மொழியியல் தொடர்பாக, பண்பாடு கல்வி தொடர்பாகத்தான் வருகிறார்கள்.
இவர்கள் சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், இந்திக்குக் கொடுக்கும் 50 கோடி வைத்துப் பார்த்தால், அயல்நாட்டிலிருக்கும் உயர் வர்க்க இந்தியர்கள் அல்லது இந்திய மாயைக்கு உட்பட்ட வெள்ளைக்காரர்களின் பிள்ளைகளை இந்திய மோகத்தில் ஈடுபடுத்துவதற்காக, இங்கே இண்டாலஜி படிங்க, சமஸ்கிருதம் படிங்க” எனத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த ரிசர்ச்சைக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் அடிமட்ட மக்கள் ஆய்வுப் படிப்பிற்கு வருவதைப் பற்றி அக்கறை கொள்ளவேயில்லை.
♦ டெல்லி பல்கலைக்கழகம் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்பு என்ற முறையைப் புகுத்த முயன்றபோது, அது மாணவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வரைவு அறிக்கை மீண்டும் அதனைப் பரிந்துரைப்பது ஏன்?
◊ முன்பு ஹானர்ஸ் என்று இருந்தது. பி.ஏ. (ஹானர்ஸ்) என்பார்கள். பி.ஏ. மூன்றாண்டுகள் படிப்பார்கள். ஒரு வருடம் கூடுதலாக ஒரு சப்ஜெக்டை எடுத்து படித்தால் ஹானர்ஸ் என்பார்கள். இந்த மூணு நாலு, அல்லது நாலு மைனஸ் ஒன்னு என்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கான தகிடுதத்தங்கள். நான்கு ஆண்டு பட்டப்படிப்பு என ஆண்டைக் கூட்டுகின்றபொழுது சாதாரண பொருளாதார வசதிகூட இல்லாத மாணவர்கள் அயர்ச்சி அடைந்து விடுவார்கள். இன்னொருபுறம் அவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறுவதற்காக எக்ஸிட்” என்ற வாய்ப்பு. ஆக, இறுதி நிலைக்குச் செல்பவர்கள், இவர்கள் விரும்புகின்ற, இவர்களுக்கு அக்கறையுள்ள சமூகப்பிரிவினராக மட்டுமே இருப்பார்கள். எனவே, இதுவொரு சதி.
மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவுகின்ற தீண்டாமைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவி மருத்துவர் பாயல் தாத்வி (இடது) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கல்வி மாணவ் செந்தில்குமார்.
◊ சமூக நீதி, இன்க்லுசிவ்னஸ் பற்றி இது பேசவில்லை. இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சில இடங்களில் சொல்கிறார்கள். மொழிச் சிறுபான்மையினர் பற்றி வரும் போது மாநில அரசு அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தச் சட்டவரைவில் சமூக இடைவெளிகள், சமூக மோதல்கள் இவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது குறித்து எந்தக் கருத்தும் வரவில்லை. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் குறிப்பிடும் இந்த ஆவணம், மைய அரசின் கல்வி நிறுவனங்களில் சமூக நீதி முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பவில்லை. சமூக நீதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத ஒரு ஆவணம் இது.
♦ தனியார் கல்லூரிகள், தமது நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. அனைத்துக் கல்லூரிகளையும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என வரைவு அறிக்கை பரிந்துரைத்திருக்கும் நிலையில் இட ஒதுக்கீடு கொள்கையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
◊ இப்போதைய சூழலில் தன்னாட்சி நிறுவனங்களுக்கும் சமூக நீதிச் சட்டங்கள் பொருந்தும். ஆனால், இதனை நெடுநாளாகவே நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கிறார்கள். (அரசு) உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி பெறாத பாடத்துறைகள் அல்லது மாலை நேர வகுப்புகளில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவது கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று 1993 கல்வித்துறையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஒரு நிதி உதவி பெறும் கல்லூரி நிதி உதவி பெறாத துறைகளுக்குக்கூட இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. யாரும் அது குறித்துக் கவலையே பட்டது கிடையாது. அரசுத்துறையும் அதில் தலையிட்டது கிடையாது.
இந்தச் சூழ்நிலையில்தான் அப்சொல்யூட்” – முற்றொருமை கொண்ட தன்னாட்சி எனக் கல்விக் கொள்கை கூறுகிறது. உங்களை மாநிலச் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று சொன்னால், என்ன அர்த்தம்? இனி, 42,000 கல்லூரிகள் என்பது 42,000 தனி நிறுவனங்கள். உங்களை எந்த ரெகுலேசனும் கட்டுப்படுத்தாது. நேரா” – உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறார்கள். இன்றைக்கும் கொஞ்சமாவது இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்கு யார் காரணம்? மாநிலச் சட்டங்கள்தான் காரணம். அந்த மாநிலச் சட்டங்களைக் காலி செய்து விட்டு, சமூக நீதியை எப்படிக் கொண்டு வர முடியும்? கிடைத்து வருகின்ற சமூக நீதிக்கான வாய்ப்புகளைக்கூட மறுக்கின்ற வரைவு இது.
♦ இந்த அறிக்கை Philanthropist கொடையாளர்கள் பற்றிப் பேசுகிறதே ….
◊ பச்சையப்பன் கல்லூரிகள் பச்சையப்பன் முதலியாருடைய கொடைத்தன்மையால் வந்தன. புதுக் கல்லூரியை இசுலாமியப் பெருமக்களில் வசதியானவர்கள் பணம் கொடுத்து ஆரம்பித்தார்கள். அந்த கல்வியெல்லாம் இலாப நோக்கமில்லாமல் தரப்பட்ட கல்வி. குறைந்த கட்டணம் அல்லது அரசு மானியத்தில் கட்டணமில்லாமல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் யுகத்தில் Philanthropy கிடையாது. Philanthropy is a business commodity. கொடை என்பது இன்று ஒரு வணிகச் சரக்கு. கொடை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் எல்லா வரியிலிருந்தும் விலக்குப் பெறுகிறார்கள். அண்ணாமலைச் செட்டியார், வேந்தர் என்ற முறையில் கார்ப்பரேட் வரிகூடக் கொடுக்கக்கூடாது என்று உட்கார்ந்திருந்தார். சொத்தைச் சம்பாதிக்க தான் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். அதை எப்படி நாம் Philanthropy கொடை என்று சொல்ல முடியும்? பண முதலைகளுக்குக் கொடையாளர்கள் என்று பேர் கொடுப்பதால், தேவனாகிவிட மாட்டார்கள். அம்பானியும் அதானியும் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கல்விக் கொடையாளர்கள் என்ற முகாந்திரத்தில் எல்லா வரிகளிலிருந்தும் அவர்களுக்கு விலக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
♦ அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழி வழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவரும் வேளையில், வரைவு அறிக்கை தாய்மொழி வழிக் கல்வி குறித்து என்ன பார்வையை, ஆலோசனைகளை முன்வைக்கிறது?
◊ எட்டாவது வரைக்கும் தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டுமென்றும், வட்டார மொழிகளிலும் வழங்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், தாய்மொழியோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மும்மொழி என்று கூறப்படுவதோடு, நான்காவது மொழியை வேறு வடிவில் திணிக்கிறார்கள். தாய்மொழியைப் பற்றி சொல்லும்போது பீடிகையில் ஆரம்பித்துவிட்டு, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது சமஸ்கிருதம் என்றும் இந்திய மொழிகளெல்லாம் சமஸ்கிருதத்தால் வளம் பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறான வரைவுக்கொள்கை எப்படி நியாயமான வரைவுக்கொள்கையாக இருக்க முடியும்?
எந்தவொரு இடத்திலும் தமிழின் சிறப்பைக் குறிப்பிட்டுப் பேசவில்லையே? கௌடில்யன் பற்றிப் பேசுபவன் திருவள்ளுவரைப் பற்றிப் பேசவில்லையே, ஏன்? அவர்களுக்கு முன்னோடிகளெல்லாம் அவர்கள் தான். இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், பண்பாட்டு மோதல்கள் நடந்து வருகின்றன. ஒரு பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்து மற்றொரு பண்பாடு போராடிக்கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் பிரதிபலிக்க வேண்டும் கல்விக்கொள்கை. அதைவிட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் பெருமைப்படுத்துவதென்பது பிறரைச் சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். எனவே, தாய்மொழியைப் பற்றிய விருப்பம் என்பது நியாயமான முறையில் அமையவில்லை, அறிவியல்பூர்வமாக அமையவில்லை. வட்டார மொழிகளை மேம்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் வரைவு அறிக்கையில் இல்லை.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை வளர்ப்பதெற்கென்று 50 கோடி கொடுத்தார்கள் அல்லவா? அதைப் போன்றே சமஸ்கிருதத்திற்கும் தனித்தொகையை ஒதுக்கியிருக்கிறார்கள் அல்லவா? ஆனால், வட்டார மொழிகளை நவீன பாடங்களுக்கு இசைவாக முன்னேற்றுவதற்காக ஒரு பைசாகூட ஒதுக்காத மைய அரசு, தாய்மொழியைப் பற்றி பேசவில்லை என்று நாம் வருத்தப்படுவதில் பொருள் கிடையாது. இதில் கொஞ்சம்கூட நேர்மையையும் பார்க்க முடியவில்லை.
♦ பிரதம மந்திரி தலைமையில் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக். அதனை மாதிரியாகக் கொண்டு மாநிலங்களில் முதலமைச்சர்கள் தலைமையில் மாநில சிக்ஷா ஆயோக்குகள் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது வரைவு அறிக்கை. கல்வி அமைச்சகங்களுக்கு மேலாக இத்தகைய அமைப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
◊ ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (தேசியக் கல்வி கமிசன்) தான் இனி கல்வி குறித்த கொள்கை முடிவெடுக்கும் ஒரே அமைப்பு. பிரதம அமைச்சர் மற்றும் சக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அமைப்பாக இது உருவாக்கப்படுகிறது.
நாடெங்கும் உள்ள 820 பல்கலைக்கழகங்கள் 42,000 கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஒற்றைக் கட்டுப்பாடு.
உயர்கல்வியை பொருத்தவரைக்கும் நேஷனல் ஹையர் எஜூகேஷன் ரெகுலேட்டரி அத்தாரிட்டி தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம். இது மைய அரசால் உருவாக்கப்படுகின்ற, அதிகாரிகளை அதிகமாகக் கொண்ட அமைப்பு. புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கவிருக்கும் தனியார்கள், இனி, பல்கலைக்கழக இணைப்புக்குப் போக வேண்டாம். மாநில அரசின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டாம். மாநில அரசு புதிய கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அதிகாரத்தை இழக்கிறது. அந்த அதிகாரத்தை நேரா என்கிற தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துக்கொள்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள அத்துணை கல்வி நிறுவனங்களையும் மைய அரசின் அதிகாரிகள் அமைப்பான நேராவுக்கு கொண்டு போவதால், மாநில அரசிற்கு உயர்கல்வி மீது எவ்வித உரிமையும் பொறுப்பும் இருக்காது.
இனி, ரெகுலேஷன்ஸ் இருக்காது, ஒழுங்காற்று விதிகள் இருக்காது. ஆனாலும், ஒழுங்கான ஒழுங்காற்றுதல் (light, but tight) இருக்கும் என்கிறார்கள். தனிநபர்கள்தான் ஒழுங்காற்றுதல் செய்வார்கள் என்கிறார்கள். ஆக, விதிகள் மூலமாகக் கட்டுப்படுத்துவதை விட்டுட்டுத் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இனி இது நடக்கும்.
♦ பாடத்திட்டங்களையாவது மாநில அரசுகள் வடிவமைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா?
◊ மாநிலத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படுகின்ற மாநிலக் கல்வி கமிசன் என்பது மைய அரசின் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் அமைப்பிற்குக் கட்டுப்பட்ட ஒன்றே தவிர, சுதந்திரமாக இயங்க முடியாது. மாநில அமைப்புக்கள் மத்திய அரசின் கிளை அங்கமாகும்போது பாடத்திட்டத்தை அவர்களின் வரையறைக்குட்பட்டு அமைக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆரம்பக்கல்வித் திட்டத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்று மைய அரசு சொல்கிறதோ, அதை மீறி மாநில அரசுகள் வேறெதுவும் சொல்லிக்கொடுக்க முடியுமா? செகண்டரி எஜுகேஷனைப் பொருத்தவரை
8 செமஸ்டர், 4 வருடங்கள் என்பதை மாநில அரசுகள் மாற்றமுடியுமா? கூடுதலாகத் தொழிற்கல்வி வரவேண்டுமென்பதை, மாநில அரசுகளால் மாற்றமுடியுமா? கூடுதல் மொழிப்பாடம் என்பதை மாநில அரசுகளால் நிராகரிக்க முடியுமா?
தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையின் கார்ப்பரேட் – காவி சார்பை அம்பலப்படுத்தி பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் ஜூலை-20 அன்று நடத்தப்பட்ட கருத்தரங்கம்.
இவையனைத்தையும் எதிர்க்கின்ற, மறுக்கின்ற மாநில அரசு ஒன்று இருந்தால்தான் நல்லது. துரதிருஷ்டவசமாக அப்படி ஒரு அரசை நாம் பார்க்கவில்லை. உரிமைகளை யாரும் நீங்கள் கேட்காமல் தருவதில்லை, நாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித் துணிச்சலில்லாத அரசுகள் எப்படி மாநில அமைப்புக்களைப் பாதுகாக்க முடியும்? எனவே, மாநில பாடத்திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா என்பது ஐயத்திற்குரியதாக அமைந்துள்ளது. ஏனென்றால் இது ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மேலும், இந்த வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே அதனின் ஆலோசனைகள் கொல்லைப்புற வழியில் நடைமுறைக்கு வந்துவிட்டன. உதாரணமாக, யு.ஜி.சி. அமைப்பு முன்பெல்லாம் தனது பரிந்துரைகளை மாநில அரசிற்குதான் அனுப்பி வைக்கும். இப்பொழுது ஒவ்வொரு கல்லூரியிலும் சமஸ்கிருத வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசிற்கு அனுப்பாமல், நேரடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது, யு.ஜி.சி.
♦ இந்தியாவைப் பொருத்தவரை பல்வேறு தேசிய இனங்கள், பண்பாடு எனப் பன்முகத்தன்மையுடையதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒற்றைக் கல்விக்கொள்கையை அறிவியல்பூர்வமானதாகப் பார்க்க முடியுமா?
◊ மத்திய அரசு சீரான ஒற்றைக் கல்விக்கொள்கை வேண்டும் எனச் சொல்கிறது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நம் போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்த தேசத்தின் மூத்த தலைவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால், மத்திய அரசின் கல்விக்கொள்கை இதை மறுத்துவிட்டு யூனிட்டி த்ரூ யூனிஃபார்மிட்டி” என்கிறார்கள். அதாவது ஒற்றைக் கல்வித்திட்டத்தின் மூலம் ஒற்றுமை! இதற்குத் திணிப்பு என்றுதானே அர்த்தம். இது தேசிய இனங்களின் உரிமை மறுப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை 1967- இருந்து அமல்படுத்தி வருகிறோம். இதனால் நமக்கு என்ன இழப்பு ஏற்பட்டது? வெளிநாடுகளில் ஆராய்ச்சித்துறை, உயர்பதவிகள் வகிப்போரில் பெரும்பாலானோர் இருமொழித் திட்டத்தில் பயின்றவர்கள்தான்.
மும்மொழி என்று வந்துவிட்டால் சமனற்ற தளம் உருவாக்கப்படுகிறது. இந்தி பேசுபவர்களுக்கு அதிக ஆதாயம், இந்தி தெரியாதவர்களுக்குச் சற்றுப் பின்னடைவு ஏற்படக்கூடிய சூழல். இது ஒரு சமனற்ற சூழல். மும்மொழி என்பது சமன் தன்மையைச் சமனற்றத் தன்மையாக மாற்றிவிடுகிறது. எனவே, ஒரே தேசியக் கல்விக் கொள்கை என்பது ஏற்கமுடியாதது, நடைமுறை சாத்தியமற்றது.
கல்விக்கொள்கையைப் பெரும்பாலும் மக்களுடன் நெருக்கமாக உள்ள மாநில அரசுகள் தான் உருவாக்க வேண்டும். மத்திய அரசின் பொறுப்பு ஒருங்கிணைப்பது, ஆலோசனைகள் தருவது, உதவி செய்வது என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இப்போது அப்படி கிடையாது. இப்பொழுது சோல் அத்தாரிட்டி.” அனைத்தையும் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றனர். இது வரம்பு மீறிய செயல், இந்தியாவையே சீரழிக்கக்கூடிய செயல்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024