Wednesday, June 17, 2026

தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்

இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!

மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!

மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!

0
இதில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் 32 சதவிகித (216) வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 46 சதவிகித (307) வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் சங்க பரிவார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

அசாம்: முஸ்லீம்கள் மீது சட்ட ரீதியான தாக்குதலைத் தொடுத்துள்ள பாசிச பாஜக

அசாமில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தான் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போராடும் விவசாயிகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிச மோடி அரசு!

விவசாயிகள் போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. இது தான் பாசிச கும்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான போராட்டமும் – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் இன்றியமையாத் தேவையும்

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்திலும் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும்போதுதான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி வீசும்.

பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!

பாசிச மோடி கும்பல், வேறு பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும். இதற்குத் தகுந்தாற்போலத்தான் முதுகெலும்பில்லாத கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது

மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகள் எல்லாம் விவசாயிகளை தடுத்துவிட போவதில்லை. நாளுக்கு நாள் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் போராட்டத்தின் வீரியமும் அதிகரித்துகொண்டு தான் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

அண்மை பதிவுகள்