திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !
தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும்.
பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.
மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!
ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?
கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்டு 15 அன்று, உரிமைக்காக போராடிய 150 தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை.
மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !
இருபதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான கள ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்டு மேலும் 15 உணவுப் பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.
அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு... மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை - பன்னாட்டு கம்பெனிகளுக்கு! - இதற்குப் பெயர் சமத்துவமாம்!
மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்
ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்? "ஏனப்பா விதியை மீறி விட்டாய்?" என்று கேட்டேன். "யார் போட்ட விதி?" என்று கேட்டான் அம்மாணவன்.
மீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி !
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!
தொலைந்த நிலம்
“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா?"
தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன.
பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்
ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.





















