Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 106

குஷ்புவும் செருப்பும் | கவிதை

குஷ்புவும் செருப்பும்

வந்தாரை எல்லாம் வாழ வைத்ததா சென்னை?
இல்லை
சேரிகள் தான்
வாழ வைத்தன

வைகையின்
காவிரியின்
தாமிரபரணியின்
பெருமையை பேசுவோர்க்கு
கூவத்தின் பண்பாடு
அறிவது கடினமே

சேரி என்றால் அன்பு
அதை நீ சொல்லி
நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை

சாதி கேட்காத ஊர்
சொர்க்கம் என்றால்
சேரி தான் சொர்க்கம்

சேரியின் அன்பும்
அரவணைப்பும்
அக்கிரகாரத்தில் தேடினாலும் கிடைக்காது

துரத்தியடிக்கப்பட்டவர்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கும்
இல்லாதவர்களுக்கும்
மறு வீடு சேரிதான்

கேட்டாலும் தண்ணீர் கொடுக்காத ஊரும்
கேட்காமலே சோற்றை போடும் சேரியும் ஒன்றல்ல
எப்போதும் ஒன்றல்ல
அதனால்தான் ஊரும் சேரியும் எப்போதும் பிரிந்து இருக்கிறது

இங்கு இருந்தால்
பெண் கிடைக்காது
மாப்பிள்ளை கிடைக்காது
வேலை கிடைக்காது
தண்ணீர் கிடைக்காது
எதுவும் கிடைக்காமல் போனாலும்
சேரிதான் சொர்க்கம்

எல்லோருக்கும் இங்கு
இடமுண்டு

கர்த்தரை நம்பி கைவிடப்படாமலிருப்போரின் எண்ணிக்கை தெரியாது

ஒன்று மட்டும் உண்மை
சேரியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்

இழிவுபடுத்த நீ சேரியை உவமையாக காட்டினால்
நான் உன்னை என்னவென்று சொல்வேன்

நாய், பூனை, எலி, பன்றி
என எல்லாம் நாங்கள் நேசிப்பவைத்தானே!

சக மனிதனை
தீண்டப்படாதவன் ஆகவும்
சூத்திரன் ஆகவும் பிரித்து வைக்கும் உங்கள் வேதத்துக்கு சேரி எப்போதும் கசக்கத்தான் செய்யும்

குஷ்பூ

உன் பெயரை விட இழிவான ஒரு சொல் கிடைக்குமா என்ன?

இனியும் சேரியை இழிவாகப் பேசினால்
குஷ்பூவுக்கு
கவிதைகள் பதில் சொல்லப் போவதில்லை
சேரியின் செருப்புகளே
பதில் சொல்லும்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்

மிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒரே ஆயுதம் தி.மு.க. தான் என்று ஜனநாயக சக்திகள் பலரும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள். அந்த நம்பிக்கையை நாம் குற்றம் கூற வரவில்லை. வெறும் நம்பிக்கை மட்டும் பா.ஜ.க.யை வீழ்த்தி விடாதல்லவா?

ஆனால், பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதுதான் விவாதிக்க வேண்டிய விடயமாக உள்ளது.

அண்மையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில், “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது” என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது காவி கும்பலால் பேசுபொருளாக்கப்பட்டது. சங்கப்பரிவாரங்கள் உதயநிதி பேசியதைத் திரித்து வெறுப்பு அரசியல் செய்ய முயன்றனர். குறிப்பாக, “இந்துக்களை இனப்படுகொலை செய்வோம்” என்று உதயநிதி பேசியதாகத் திரித்து, சங்கிகள் வடமாநிலங்களில் பொய் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், உதயநிதி தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல், தான் சொன்னதில் தவறில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். இதன் காரணமாக, இந்திய அளவில் சனாதனம் விவாதப்பொருள் ஆனது. பெரியாரும், அம்பேத்கரும் சொன்ன கருத்துகளைப் பலரும் படிக்கத் தொடங்கினர்; தேசிய அளவில் ஊடகங்களில் பெரியார், அண்ணா, தி.மு.க.வின் வரலாறு, சமூக நீதி தொடர்பான கருத்துகள் பரப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றையும் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

ஆனால், இந்த விசயத்தில் தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டை எடுத்து உதயநிதியை ஆதரிக்கவில்லை.  மாறாக, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “உதயநிதி கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும்” என்று கூறினார்.


படிக்க: விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன்


தி.மு.க.வின் தலைவர்  மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில், “உதயநிதியின் கருத்து திரித்துப் பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்றார். ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து, “சி.ஏ.ஜி. அறிக்கை குறித்துப் பேச வேண்டிய நேரம், சனாதனம் குறித்த விவாதத்தில் நம்மை மடைமாற்றுகிறார்கள்” என்று நிகழ்ச்சிநிரலை மாற்ற முயன்றார். ஆ.ராசா தவிர வேறு எந்த தி.மு.க. தலைவரும் உதயநிதி கருத்தை ஆதரித்துப் பேசவில்லை.

அடுத்து, “நீட்” தேர்வு தொடர்பான விசயத்திலும் தி.மு.க.வின் நிலைப்பாடு அடையாளப் போராட்டங்கள் என்ற வரம்பைத் தாண்டிச் செல்லவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வால் மாணவர் ஜெகதீஸ்வரனும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து ஜெகதீஸ்வரனின் நண்பரும் மருத்துவ மாணவருமான ஃபயாஸ்தின் நீட் தேர்வைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி பேசியதும் ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நெருக்கடியின் விளைவாக அந்த சமயத்தில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி” அடையாளப் போராட்டங்களை நடத்தியது, தி.மு.க.

எடப்பாடி ஆட்சியில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பி வைத்து, நீட்டுக்கு எதிராக குரல்கொடுப்பதுபோல பாசாங்கு செய்து வந்தது, அ.தி.மு.க. ஒன்றிய அரசோ, தமிழ்நாட்டின் சட்டமன்றத் தீர்மானத்தை ஒரு துரும்பாகக் கருதி ஒதுக்கிவிட்டது. ஆனால், “நீட்டை ரத்து செய்வோம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இருந்து தி.மு.க.வை நோக்கி கேள்விகள் எழுவதால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, தி.மு.க.

தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கோரிக்கை, நீட் தேர்வை ரத்து செய்வதாகும். அந்த கோரிக்கைக்காகத் தன்னளவில் போராட்டம் நடத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை நிர்பந்திக்கவோ, மாணவர்கள் போராடுவதை ஆதரிக்கவோ தி.மு.க. தயாராக இல்லை.

தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் பா.ஜ.க. அரசைப் பணிய வைக்க ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகச்சிறந்த சான்றாகும்; மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராக நடந்த ஹரியானா-பஞ்சாப் விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் மற்றொரு சான்றாகும். ஆனால், பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுக்காமல் நீட்டிற்கு எதிராகப் போராடுவது போல நாடகமாடுகிறது தி.மு.க. மேலும், நீட் தீர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதைவிட, நீட்டுக்கு எதிரான மக்களின் உணர்வை அறுவடை செய்து கொள்ளும் தேர்தல் கணக்குகளை மனதில் வைத்தே தி.மு.க.வின் அடையாள எதிர்ப்புகளும் உள்ளன.

அடுத்து, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசாங்கம் அக்டோபர் 2-ஆம் தேதி சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டது. இந்த விசயம் ஆளும் பா.ஜ.க. கும்பலுக்கும் பார்ப்பன சங்கப் பரிவார கும்பலுக்கும் நெருக்கடியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. “சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தும் செயல்” என பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தார்.

பீகாரைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. பீகார் மாநில அரசாங்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னரும், “ஒன்றிய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை” என்று கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்.

சாதிவாரி இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சமான சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகநீதி வழங்குவதற்கு அடிப்படையானதாகும் என்பதுதான், சமூக நீதி பேசும் கட்சிகளின் நிலைப்பாடாகும். இதனை பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியுமா? தனது அதிகாரத்தில் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவதைவிடுத்து, அப்பட்டமாக சந்தர்ப்பவாத நிலையெடுத்து செயல்படுகிறது, தி.மு.க.


படிக்க: செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!


ஒன்றிய அரசை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி கேட்டதன் மூலம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் ஆர்வமாக இருப்பது போலவும், பா.ஜ.க.விற்கு எதிராக கம்பு வீசுவதாகவும் காட்டிக்கொள்ள இந்த நாடகத்தை நடத்தி வருகிறது, தி.மு.க.

சமூகநீதி அரசியலின் முன்னோடியாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.வின் நிலை இதுதான்.

தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன், கடந்த ஜூன் மாதத்தில் அக்குழுவிலிருந்து விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கை, அக்குழுவில் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களையும் புதிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க. அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தியது.

தமிழ்நாட்டு மக்களின் உயிர்த் தியாகத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில், “சிறப்புச் சட்டம் இயற்றப்படும்” என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசாங்கம் தற்போது வரை நிறைவேற்றாமல் மௌனம் காத்து வருகிறது.

தி.மு.க.வின் இப்படிப்பட்ட செயல்பாடுகள், பா.ஜ.க. எதிர்ப்பு என்பதில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதப் போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பவாத நடவடிக்கையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவே செய்யும். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தவே செய்யும். இந்த வாய்ப்பை பா.ஜ.க. கும்பலும், தி.மு.க., பா.ஜ.க. இரண்டையும் எதிர்ப்பதாக சவடால் அடித்துத் திரியும், பா.ஜ.க.யின் பினாமிகளான எடப்பாடி, சீமான் கும்பல்களும்தான் அறுவடை செய்துகொள்ளும்.

பத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்கள், ஊழல், அராஜகம், அடக்குமுறைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான பா.ஜ.க.வின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடம் தீராத மோடி எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாகத்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.

தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் எனக் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது சங்கப் பரிவார கும்பல். அதற்காக நாள்தோறும் அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி தி.மு.க.வையும் தி.மு.க. அரசாங்கத்தையும் தாக்கி வருகிறது. ஆனால், தனது ஆட்சிக்கு எந்தவித ‘கெட்ட’ப் பெயரும் வந்துவிடக் கூடாது என்று தற்காப்பு நிலையில் இருந்து கொண்டு பா.ஜ.க.வை சந்தர்ப்பவாதமாக அணுகுகிறது தி.மு.க.

“தி.மு.க.வை விமர்சித்தாலே பாசிசம் வந்துவிடும்” என்று தி.மு.க. ஆதரவு ஜனநாயக சக்திகள் கருதுவது தவறான விளைவுகளுக்கே வழிவகுக்கும். நாம் மக்கள் நலனில் ஊன்றி நின்று தி.மு.க.வின் ஒவ்வொரு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும் உறுதியாக விமர்சிக்க வேண்டும். அதுதான் தி.மு.க.வை சரியான நிலைப்பாடு எடுப்பதை நோக்கி நிர்பந்தப்படுத்தும். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் மற்றும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக, “12 மணிநேர வேலை” குறித்த முன்மொழிவை தி.மு.க. அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டது அதற்கு ஒரு சான்றாகும். தி.மு.க.வை நிபந்தனையற்ற முறையில் ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள் இது குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது.


இனியன்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பரந்தூர்: நிலம் கையகப்படுத்த ஒப்புதல்! திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!

24.11.2023

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை
கையகப்படுத்த தமிழ்நாடு அரசு  ஒப்புதல்!
திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!

பத்திரிகைச் செய்தி

நேற்றைய தினம் (23.11.2023) பரந்தூர் விமான நிலையத்திற்காக 20 கிராமங்களில் உள்ள 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், கையகப்படுத்துவதற்கு ரூ19.24 கோடியை ஒதுக்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக தங்களது நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்திப்பதற்கு பலருக்கும் அனுமதியை மறுத்து ஆயிரக்கணக்கில் போலீஸை குவித்து மக்களை அச்சுறுத்தி வந்தது தமிழ்நாடு அரசு.

படிக்க : எமிஸ் தகவல் சேகரிப்பு: பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மற்றொரு நடவடிக்கை!

விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பதற்கான அவசியம் என்ன? அதற்கு மாற்றாக இராணுவத்துக்கு சொந்தமான நிலம் அதே அளவில் இருப்பதையும் அதை கையகப்படுத்தலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்தபோதும் அதை கொஞ்சமும் கேட்காமல் மக்கள் நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் திராவிட மாடலும் கார்ப்பரேட் மாடலே என்பதை நிரூபித்துள்ளது திமுக அரசு.

தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்களது நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்ததை எதிர்த்து கோரிக்கை மனு அளிக்க சென்றவர்களையும் போலீசு கைது செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தங்களுக்கு வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்ட திமுக, அதே கார்ப்பரேட் வழியில் சென்று தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.

படிக்க : வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் ஒப்புதலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவளிப்பதுடன் தமிழ்நாடு மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு:- 9962366321.

காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி

காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

எமிஸ் தகவல் சேகரிப்பு: பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மற்றொரு நடவடிக்கை!

ன்றிய அரசின் உத்தரவின் பேரில் அனைத்து மாநில அரசுகளும், “கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு” (EMIS – எமிஸ்) என்ற செயலியில் (ஆப்) அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரங்களை ஆசிரியர்களைக் கொண்டு பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், “எமிஸ்” பணிகளில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக “டிட்டோஜாக்” ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எமிஸ் பணிகளில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற பகுதி நேர, இடைநிலை, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தாலும் போலீசைக் கொண்டு போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவி போராட்டத்தைக் கலைத்ததாலும் தி.மு.க. அரசின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், “டிட்டோஜாக்” அமைப்பினரின் போராட்டம் அதிருப்தியை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதால், போராட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே, அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார்.

எனினும், மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது, கற்பிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை அப்புறப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்த எமிஸ் செயலி உருவாக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் விரிந்த சிலந்திவலை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும். அந்தவகையில், எமிஸ் பதிவேற்றம் குறித்து அறிந்து கொள்வதும், அதற்கு எதிராக எச்சரிக்கையாக இருந்து போராடுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

பிரம்மாண்ட தகவல் சேகரிப்பு

2010-களிலேயே வெவ்வேறு வடிவங்களில் தொடங்கப்பட்ட மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் முறையானது, புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான “எமிஸ்” ஆக முழுவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில், இத்திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் இது மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விரிவான அளவில் தகவல் சேகரிக்கப்படுகின்றது.

தொடக்கத்தில், மாணவர்கள் படிக்கும் பாடம், அவர்களது மதிப்பெண்கள் போன்றவை மட்டுமே பதிவேற்றப்பட்டு வந்த இந்த முறையில், தற்போது மாணவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தகவல்களாக சேகரிக்கப்படுகின்றன.


படிக்க: தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!


ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கப்பட்ட எண்ணில் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், நூலகப் பயன்பாடு, மாணவர்கள் படிக்கின்ற புத்தகங்களின் தலைப்பு, அதை அவர்கள் பயன்படுத்திய விதம், மாணவர்களின் பார்வைக் குறைபாடு, எடை, உயரம் போன்ற உடல்நலம் சார்ந்த விவரங்கள் என ஏறக்குறைய மாணவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

மாதந்தோறும் மாணவர்கள் பங்கேற்கும் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளையும், கவிதை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விவரங்களும், வெற்றி-தோல்விகள், வாங்கிய புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் இச்செயலியில் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தொலைபேசி செயலிகளில் மாணவர்கள் குறித்த விவரங்களை அரசு சேகரிப்பதற்கான காரணங்கள் என்ன? இவை கல்வியை மேம்படுத்துவதில் என்ன பங்களிப்பு செலுத்துகிறது? என்ற எந்த கேள்விகளையும் இன்றைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள் எழுப்பவில்லை என்பது கவலைக்குரிய விசயமாகும்.

பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்குவது என்பது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். அந்தவகையில், வானவில் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டம், மணற்கேனி செயலி, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவை அனைத்தும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையின் அங்கங்களாகும். அந்த வரிசையில்தான், மாணவர்களின் தகவல்களைச் சேகரிக்கும் அயோக்கியத்தனமான இந்த எமிஸ் செயலி முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து அகற்றும் சதித்திட்டம்

பள்ளிக் கல்வியைக் கார்ப்பரேட்மயமாக்கும் மேற்கண்ட பெரும்பாலான நடவடிக்கைகள் ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளோம். தனியார் பள்ளிகளிலும் எமிஸ் செயலியில் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டாலும் அவை மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே; அப்பதிவேற்றத்தை செய்வதற்கும் தனியார் பள்ளிகளில் தனியாக ஊழியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அரசுப் பள்ளிகளில் பதிவேற்றப்படும் விவரங்கள் மிகமிக அதிகமானவை; இப்பணி முழுவதும் ஆசிரியர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அதையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்யவேண்டும். இந்தப் பதிவேற்றப் பணியை ஆசிரியர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறி கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றனர்.

இதன் விளைவாக ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை விட எமிஸ் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்; ஏற்கெனவே, ஆசிரியர்கள் தங்களுடைய வேலைநேரத்தில் கற்பித்தல் சாராத பிற பணிகளுக்கே (வாக்காளர் கணக்கெடுப்பு உள்ளிட்டவை) அதிகப்படியான நேரத்தை செலவழிக்கிறார்கள்; இந்நிலையில், இது போன்ற திட்டங்களின் மூலம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் உரையாடி அன்பு செலுத்தி  கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு நல்லதொரு கல்வியை வழங்க வேண்டிய ஆசிரியர்கள், கற்பித்தல் பணியிலிருந்து படிப்படியாக விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

“தங்கள் 99 சதவிகித நேரத்தை தொலைபேசிகளுடனேயே, எமிஸ் செயலியைப் பயன்படுத்துவதிலேயே, ஆசிரியர்கள் கழிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என்று தன்னுடைய பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது, அகில இந்தியக் கல்வி பாதுகாப்புக் கமிட்டி.

எமிஸ் பதிவேற்றம் போன்ற கற்பித்தல் சாராத பணிகளாலும் அதிகாரிகளின் அழுத்தத்தாலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு அதிகப்படியான நேரம் ஒதுக்க முடியவில்லையே என்ற வேதனையாலும் ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் பணியாற்றிய அன்னாள் ஜெயமேரி என்ற ஆசிரியை, எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்வதில் இருந்த சிக்கலால் ஏற்பட்ட மன உளைச்சலில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே உயிரிழந்தது அதற்குச் சான்றாகும்.

பள்ளிக் கல்வித்துறை கார்ப்பரேட்மயம்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய இத்தரவுகள் எந்த பாதுகாப்புமற்ற வகையிலேயே பராமரிக்கப்படுகின்றன. இந்தாண்டு மார்ச் மாதத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களின் தகவல்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது, பள்ளிக் கல்வித்துறை. அதைப்போல, கடந்த 2021-ஆம் ஆண்டு, மாணவர்களின் எமிஸ் தரவுகள் அடிக்கடி திருடப்படுவதாக தனியார் பள்ளிகள் குற்றஞ்சாட்டின.

ஒருபக்கம், எமிஸ் பதிவேற்றம், மன்ற போட்டிகள் போன்ற பணிகள் மூலம் ஆசிரியர்களை கற்பித்தல் பணியிலிருந்து அப்புறப்படுத்தும் தி.மு.க. அரசானது, மறுபக்கத்தில், தன்னார்வலர்கள் மற்றும் டிஜிட்டல் கல்விமுறையின் மூலம் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இவ்விரு முறைகளும் பள்ளிக் கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் நடவடிக்கைகளாகும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 420 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்துவது என்ற பெயரில் 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதும், ‘வளர்ச்சி’ திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட வானவில் மன்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கற்பித்தல் பணிகளைத் தன்னார்வலர்களை வைத்து மேற்கொண்டு வருவதும் அதற்குச் சான்றுகளாகும்.

இந்தத் தன்னார்வலர்கள் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் பின்னணி கொண்டவர்கள் என்பது பற்றிய விவரங்களையும் அரசு வெளியிடுவதில்லை. “ஆஹா குரு”, “பரிஷன்”, “எய்ட் இந்தியா” மற்றும் “சுடர்” போன்ற அமைப்புகளின் அடையாளக் குறிகள் (லோகோ) தான் வானவில் மன்ற செயல்திட்ட முகப்பில் இடம்பெற்றுள்ளதாக திட்டம் தொடங்கப்பட்டபோதே குற்றஞ்சாட்டினார், “அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்” கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் உமாமகேஸ்வரி.

மாணவர்களுக்கு, காணொளி வடிவில் பாடங்களை வழங்கும் செயலிகளை அறிமுகப்படுத்துவது, திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளை இணையவழியில் நடத்துவது, கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் போன்ற பல வழிமுறைகளில் ஆசிரியர்-மாணவர்கள் இடையிலான நேரடிக் கற்பித்தல் முறையை ஒழித்துக்கட்டி மாணவர்கள் மத்தியில் டிஜிட்டல் கல்விமுறையை ஊக்குவிப்பதுப் போன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, தி.மு.க அரசு.

கடந்த ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களைக் காணொளி வடிவில் வழங்கும் “மணற்கேணி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது, தி.மு.க. அரசு. மணற்கேணி செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம் எனக் கவர்ச்சிகரமாக தெரிவித்துள்ளது. இச்செயலியில் 12-ஆம் வகுப்பின் முதல் பருவப் பாடங்கள் மற்றும் 6 முதல் 11-ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இச்செயலி தொடக்கக்கல்வி வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.

மாணவர்கள் மணற்கேணி செயலியை தங்களுடைய அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) உள்ள கூகுள் ப்ளே-ஸ்டோரிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன்விளைவாக, ஆசிரியர்கள் கற்பித்தல் சாராத பணிகளால் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலையில், வீடுகளில் மணற்கேணி செயலியில் பாடங்களைப் பயின்று கொள்ளுமாறு வழிகாட்டுதல்களை வழங்கி, டிஜிட்டல் கல்விமுறையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, தி.மு.க. அரசு.


படிக்க: பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!


மேலும், தி.மு.க அரசானது, ஒன்றாம் வகுப்பில் இருந்தே மாணவர்களை டிஜிட்டல் கல்விமுறைக்கு பழக்கப்படுத்தி வருகிறது. அண்மையில், தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வை இணையவழியில் நடத்தியது. இணையவழியில் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்திய போதும் தேர்வை இணையவழியிலேயே நடத்தி முடித்தது.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்குத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது, தி.மு.க. அரசு. தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி, ஆசிரியர் சங்கங்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும் தி.மு.க. அரசு அவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதையும் சொற்ப அளவில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து வருவதையும் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கை என்ற கண்ணோட்டத்தில் இருந்தே நாம் பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட்மயமாக்கம் என்பதே பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் பயங்கரவாத நடவடிக்கையாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயம் மிக்கதாகும். எனவே, எமிஸ் பதிவேற்றம் போன்ற கற்பித்தல் சாராத பணிகளுக்கு எதிராக போராடிவரும் ஆசிரியர்களோடு மாணவர்கள், பெற்றோர்களாகிய நாமும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போராட்டங்களை, கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.

அதேவேளையில், எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்யும் வேலையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்துப் போராடும் ஆசிரியர் சங்கங்கள், எமிஸ் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று போராடுவதுதான் முதன்மையான விசயமாகும். மேலும், எமிஸ் செயலி மூலம் அரசுப் பள்ளிக் கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கத்திற்கான களம் செப்பனிடப்படும் அபாயத்தை, அநீதியை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

0

தேசபக்தியை வளர்க்க புராணக் குப்பைகளாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று சமூக அறிவியலுக்கான பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க அமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சின் (NCERT) உயர்மட்டக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இது குறித்த செய்தி நவம்பர் 21 அன்று வெளியாகியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) என்.சி.இ.ஆர்.டி பாடப் புத்தகங்களை புதுப்பிக்க அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு தான் தற்போது 7-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க வேண்டும் என்று ஒரு முட்டாள்தனமான பரிந்துரையை வழங்கியுள்ளது.

மேலும், வேதங்கள் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான பாடங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை ஆண்ட அனைத்து பேரரசுகள் குறித்த தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய என்.சி.இ.ஆர்.டி-யின் சமூக அறிவியல் குழுவின் தலைவர் பேராசிரியர் சி.ஐ.ஐசக், “தேசப்பற்று இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்வதற்கும், தங்கள் நாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் அன்பை வளர்ப்பதற்கும் இந்த மாற்றங்கள் அவசியம். இப்போது சில கல்வி வாரியங்கள் மாணவர்களுக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கற்பித்தாலும், அதை ஒரு கட்டுக்கதையாகவே அவர்கள் கற்பிக்கின்றனர். இந்தக் காவியங்களை மாணவர்களுக்குக் கற்பிக்காவிட்டால் கல்வி முறையே நோக்கமற்றதாகிவிடும்; அது தேசத்திற்கு சேவை செய்யாது” என்று கூறியுள்ளார்.

பேராசிரியர் சி.ஐ.ஐசக்-இன் கூற்று, என்.சி.இ.ஆர்.டி-யின் உயர்மட்ட குழுவானது ஆர்.எஸ்.எஸ்-இன் காவி பாசிச சித்தாந்தத்தில் ஊறிப்போனவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை கட்டுக்கதைகள் என்று சொல்லி கற்பிக்கிறார்கள் என்று இவர் வருத்தப்படுகிறார். அவற்றை வரலாறாக மாற்ற வேண்டும் என்றும் விரும்புகிறார். இது இவரது விருப்பம் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலின் விருப்பம்.

ஆனால், எதார்த்தத்தில் இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

இப்புராணங்கள் சாதியை – வர்ணாசிரம (அ)தர்மத்தை உயர்த்திப்பிடிப்பவை. பார்ப்பன மேன்மையையும், சக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையையும் நிலைநிறுத்தும் இவை, கட்டுக்கதைகளாகக் கூட பாடப்புத்தகங்களில் இடம்பெறத் தகுதியற்றவை ஆகும்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி குழுவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பாடப் புத்தகங்களில் ”இந்தியா” என்பதற்குப் பதிலாக ”பாரத்” என்று மாற்ற இக்குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக 25 நிபுணர் குழுக்களை என்.சி.இ.ஆர்.டி உருவாக்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் இந்த கேடுகெட்ட பரிந்துரையை வழங்கியுள்ள 7 நபர்களைக் கொண்டுள்ள சமூக அறிவியல் குழு.

இக்குழுக்களின் பரிந்துரைகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்ட 19 நபர் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்றல், கற்பித்தல் திட்டக்குழு (National Syllabus and Teaching Learning Material Committee – NSTC) பரிசீலித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டதிலிருந்து கல்வியைக் காவிமயமாக்கும் தங்களது நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றன.


படிக்க: காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!


என்.சி.இ.ஆர்.டி-யின் நிபுணர் குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதாகக் கூறி காவி கும்பல் விரும்பாத பல பாடங்கள் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

என்.சி.இ.ஆர்.டி-யின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம், மக்கள் இயக்கங்களின் எழுச்சி, ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டன. அதேபோல் 2002 குஜராத் கலவரம், காந்தியின் படுகொலை குறித்த குறிப்புகளும் நீக்கப்பட்டன.

மேலும், பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து இஸ்லாமியர்களின் எழுச்சி நீக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்திலிருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு, வேதியியல் பாடத்திட்டத்திலிருந்து பீரியாடிக் டேபிள் ஆகியன நீக்கப்பட்டன.

கல்வியைச் சீர்குலைக்கும், வரலாற்றைத் திரிக்கும் என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த நடவடிக்கைகளை கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். என்.சி.இ.ஆர்.டி ஆலோசகர்களாக இருந்த யோகேந்திர யாதவ், சுஹாஸ் பால்ஷிகர் போன்றோர் தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவிலிருந்தே விலகியுள்ளனர்.

கல்வியைக் காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிஸ்டுகளை தடுத்து நிறுத்த இந்த எதிர்ப்பினை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. நாடு தழுவிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது. அப்போது தான், கல்வியை இந்த அறிவியல் விரோத பாசிச கும்பலிடமிருந்து காப்பாற்ற முடியும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி

ரு ஊரில் கோவில் திருவிழா நடந்தால் அங்கு வாழும் அனைவரும் இணைந்து கோவிலுக்கு செல்வதும் மாணவர்கள் தங்களது குடும்ப முறையினால் பூசாரியாக மாறுவதும் ஆட்டம், பாட்டம், தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல் எல்லாம் நடக்கும். பார்த்திருப்போம். அங்கு மாணவர் என்ற அடையாளம் இருக்காது. ஆனால், இங்கு மாணவர்கள் பள்ளிச் சீருடையில் இப்படியான செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. அதையும் ஆசிரியர்களும் இணைந்து இவை நடக்கிறது என்பது செய்திகளில் பார்க்கும் போது?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிகளில் ஒரு சுற்றறிக்கை வாசிக்கப்பட்டு ஆசிரியர்களால் கையொப்பமிடப்பட்டது. பள்ளி நேரத்தில் மாணவர் சீருடையில் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றதன் நீட்சியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. ஆம், பள்ளிச் சீருடையில் மாணவர்கள் பள்ளியைத் தவிர வேறெங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கூடாது இப்படியான அறிவுறுத்தல்கள் வழிபாட்டுக் கூட்டத்திலும் சொல்லப்பட்டது.

படிக்க : கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!

ஆனால், இந்த கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏற்கனவே பாரம்பரியத்தையும் புராணங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாடத்திட்டத்தையே மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இங்கு மாணவர்கள் காவித்துண்டை தாங்கள் அணிந்துள்ள சீருடையின் மீது போட்டு தங்கள் இருப்பை நிலைநிறுத்தி உள்ளது என்பதைப் பார்க்கும் போது, நம் கல்வி முறையின் எதிர்காலம் எந்தவித நேர்மறையான சமூக மாற்றத்தையும் உருவாக்காது என்பதோடு சாதீய மதப் பிரிவினைகளை மாணவர் மனதில் தொடர்ந்து விதைக்கும் என்ற கவலையையே தருகிறது.

இதற்கான பதிவை சற்று நேரத்திற்கு முன்புதான் Shahjahan R வாப்பா அவர்கள் பதிவில் பார்த்தேன். கல்வி அமைச்சர் அவர்கள் குறித்தும் சில கமெண்ட் பார்த்தேன். அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பாலசமுத்திரம் அருகே ஒரு சிற்றூர்) தனது பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது வெறும் 47 தான். காரணம் குழந்தைகள் அமர வகுப்பறையே இல்லை; அதைவிட முக்கியம் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுவெளியில் தான் போகின்றனர். அவர்கள் மட்டுமல்ல நாங்கள் மூன்று ஆசிரியர்கள் இருக்கிறோம். நாங்களும் பொதுவெளியில் போக வேண்டிய சூழல். எங்களுக்கும் கழிப்பறை இல்லை என்கிறார். இப்படித்தான் இருக்கிறது நம் கல்வித்துறை. இதற்கான ஒரு தீர்வைக் கூட எடுக்காத கல்வித்துறையை பாசிசத் துறை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

படிக்க : காவிமயமாக்கப்பட்டு வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்!

இத்தனை பிரச்சனை இருந்தாலும் மாணவர்கள் மனம் காவிக்கும் கயிறுகளுக்கும் மாற்றப்பட்டாலும் அறிவியல் மன்றங்கள் வெறும் பதிவேடுகளாக மட்டுமே இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வானவில் மன்றங்களும் இதன் மற்றொரு வடிவமே. நிதி ஒதுக்கீடு மட்டுமே முறையாக செய்யப்பட்டு திட்டங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தரமான நல்ல, அறிவியல் உணர்வை ஊட்டி சிந்திக்கும் கல்வியைக் கொடுத்திருந்தால் பள்ளிச் சீருடையுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டிருப்பார்களா?

முதலில் இந்தப் பணிகளுக்கு குழந்தைகளை ஈடுபடுத்தும் அறநிலையத்துறையின் மீது ஏன் குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு விசாரணை தொடங்கக் கூடாது?

இப்படி நம்மிடம் ஏராளமான கேள்விகள் இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே கடந்து போகும் அனைவரும் மனதில் நிறுத்தலாம்… இங்கே கல்வி காவிமயமாகி வருகிறது என்பதை.

வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

சு.உமா மகேஸ்வரி,
ஒருங்கிணைப்பாளர்,
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு.

disclaimer

ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!

0

வம்பர் 14 அன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பழங்குடிகளின் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒரிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர்) ஒழுங்குமுறை, 1956-யின் (Orissa Scheduled Areas Transfer of Immovable Property (By Scheduled Tribes) Regulation, 1956 – OSATIP) ஒழுங்குமுறை எண் 2-இல் திருத்தம் செய்வதன் மூலம் பழங்குடியினர் தங்கள் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதியளிக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. இதன் காரணமாக நவீன் பட்நாயக் அரசு தனது முடிவை நவம்பர் 16 அன்று, அதாவது முடிவெடுத்த இரண்டே நாட்களில், நிறுத்திவைத்துள்ளது.

அமைச்சரவையின் முடிவை நவீன் பட்நாயக் அரசு நிறுத்திவைத்துத் தான் உள்ளதே தவிர திரும்பப்பெறவில்லை!

நவம்பர் 14-ம் தேதி எடுக்கப்பட்ட முடிவில், ”ஒரு பழங்குடி தனது நிலத்தை, சப்-கலெக்டரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன், பொது நோக்கங்களுக்காக பரிசளிக்கலாம் (gift) அல்லது பரிமாற்றம் (exchange) செய்யலாம் அல்லது விவசாயம், வீடு கட்டுதல், குழந்தைகளின் உயர் படிப்பு, சுயதொழில், வணிகம் அல்லது சிறுதொழில்களை தொடங்குதல் ஆகியவற்றுக்காக பொதுத்துறை நிதி நிறுவனங்களில் அடைமானம் வைத்து கடன் பெறலாம் அல்லது மேற்கூறியவற்றிற்காக பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ”விற்பனைக்குப் பிறகு, நிலத்தை விற்ற பழங்குடியின நபர் நிலமற்றவராகவோ வீட்டு வசதி இல்லாதவராகவோ ஆகிவிடக்கூடாது. நிலத்தை விற்க சப் – கலெக்டர் அனுமதி வழங்காவிட்டால், ஆறு மாதங்களுக்குள் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம்; அவரது முடிவே இறுதியானது” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, பழங்குடி விவசாயி முற்றிலும் நிலமற்றவராக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உரியதாம். ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவலாம்!


படிக்க: கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!


ஒரு பழங்குடி வைத்திருக்க வேண்டிய நிலத்தின் குறைந்தபட்ச வரம்பு என்னவென்பதை வேண்டுமென்றே தெளிவாகக் குறிப்பிடாதது அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு விற்கலாம் என்பதைத்தான் ”பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்கலாம்” என்று கூறுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர் மூலம்) ஒழுங்குமுறை, 1956 ஒடிசா மாநிலத்தின் அட்டவணை பகுதிகளில் அமலில் உள்ளது. அப்பகுதிகளில் பழங்குடிகளின் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 2002-ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது அசையா சொத்துகளை பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த நபருக்கு மட்டுமே விற்க முடியும். பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை விவசாய நோக்கத்திற்காக மட்டுமே எந்தவொரு பொதுத்துறை நிதி நிறுவனத்திலும் அடைமானம் வைக்க முடியும்.

ஆனால், தற்போது நவீன் பட்நாயக் அரசு முன்வைத்துள்ள திருத்தமானது கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கும்.

பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களைப் பறித்ததற்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் உள்ளன. மேலும், இந்த சட்டத்திருத்தம் பழங்குடி மக்களின் நிலங்களை ஏற்கெனவே சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளவர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிவிடும்.

2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டுகளில் ஒடிசாவில் பழங்குடி மக்கள் வைத்திருக்கும் நிலம் 12 சதவிகிதம் குறைந்துள்ளதாக சிஏஜி வரைவு அறிக்கை ஒன்று கூறுகிறது. பழங்குடி மக்களின் நிலத்தை வாங்குவதோ ஆக்கிரமிப்பதோ தடை செய்யப்பட்டுள்ள போதே 12 சதவிகிதம் பழங்குடி நிலம் மாயமாய் மறைந்துள்ளது. இதற்கு சட்ட ரீதியாக வழிவகை செய்துவிட்டால், பழங்குடி மக்களின் நிலை என்னவாகும்.


படிக்க: ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்


2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகையில் 95.91 இலட்சம் பழங்குடிகள் உள்ளனர். மொத்த மாநில மக்கள் தொகையில் இது 22.85 சதவிகிதம் ஆகும். அங்கு, 13 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups) உட்பட 62 தனித்துவமான பழங்குடியின மக்கள் குழுக்கள் வாழ்கின்றனர். ஒடிசாவில் மொத்தமுள்ள 314 வட்டாரங்களில் 121 வட்டாரங்கள் பட்டியல் பகுதிகளாக (Scheduled Area) அறிவிக்கப்பட்டுள்ளன; மாநிலத்தின் புவியியல் பரப்பில் சுமார் 44.70 சதவிகிதம் பட்டியல் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒடிசாவின் 44.70 சதவிகித நிலம் பட்டியல் பகுதியாக இருப்பது கார்ப்பரேட்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு இடையூறாய் இருக்கிறது. அந்த இடையூற்றை நீக்கத்தான் நவீன் பட்நாயக் தற்போது முயற்சி செய்கிறார்.

சிஜிமாலியில் (Sijimali) வேதாந்தா நிறுவனத்தின் சுரங்கம், குற்றாலியில் (Kutrumali) அதானி நிறுவனத்தின் சுரங்கம், பாப்ளிமாலியில் (Baphlimali) ஆதித்யா பிர்லா குழுமத்தின் சுரங்கம், கோடிங்கமாலியில் (Kodingamali) ஒடிசா சுரங்கக் கழகத்தின் (Odisha Mining Corporation) சுரங்கம் என பல சுரங்கங்கள் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இயங்கி வருகின்றன.

ஒடிசாவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய சுரங்கங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கிவரும் சுரங்களை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவான சூழலை உருவாக்கத்தான் நவீன் பட்நாயக் அரசு இந்த சட்டத்திருத்தத்தை முன்வைத்தது. ஆனால், பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால் தற்போது தற்காலிகமாக ஓரடி மட்டும் பின்வாங்கியுள்ளது.

ஒடிசாவின் இயற்கையையும் கனிமவளங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பழங்குடி மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்வதற்குத் தான் நவீன் பட்நாயக் அரசு மேற்கொள்ள முயலும் இந்த சட்டத்திருத்தம்.

எனவே, கொடிய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் நவீன் பட்நாயக் அரசிடமிருந்து இயற்கை மற்றும் கனிமவளங்களைப் பாதுகாத்து நிற்கும் போர்க்குணமிக்க ஒடிசாவின் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் களமிறங்க வேண்டியது அவசியம்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் – கைது செய்! | தோழர் அமிர்தா

துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் – கைது செய்! | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்

டந்த நவம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணியளவில், ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMC) ஊழியர்கள், இரண்டு போலீசு படை பிரிவுகள் ஆகிய கார்ப்பரேட் குண்டர் படைகள் இரண்டு ஜே.சி.பி வாகனங்களுடன், மஜிங்மாலி பாக்ஸைட் மலை உச்சியில் உள்ள மக்களை விரட்டி அடித்து இயற்கை வளங்களை ஒட்டச்சுரண்டி சூறையாடுவதற்காக வந்தன.

கலகான் மற்றும் அதன் பக்கத்து கிராமங்களான காடெல்ஜோலா, ருகபோதர் மற்றும் மஜிங்மாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள்  ஒன்றுகூடி, ஜே.சி.பி-களுக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கார்ப்பரேட் கைக்கூலி குண்டர் படைகளை விரட்டியடித்தனர். மண் பரிசோதனை மற்றும் பாக்சைட் ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், போலீசுத்துறை அடியாள்படையையும் மஜிங்மாலிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் கிராமவாசிகள் உறுதியாக இருந்தனர்.

படிக்க: நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! – 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா

கார்ப்பரேட்கள் ஒன்றிய பாசிச பாஜக அரசுடன் இணைந்து இந்தியா முழுவதும் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் ஒட்டச் சுரண்டி கொழுக்கின்றன. அரசின் ஒடுக்குமுறை கருவிகளான போலீசுத்துறையும் இராணுவமும் ஒருங்கிணைந்து மக்கள் மீது திட்டமிட்டு அனைத்து விதமான வன்முறைகளையும் ஏவுகின்றன.

ஒடிசாவில் உள்ள மாலிபர்பாத்தில் ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு ஆதரவாக பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நின்ற உள்ளூர் ஆதிவாசி பழங்குடியின மக்களை மிருகத்தனமாக போலீசு விரட்டி அடித்தது.

மாலி பர்பாத் சுரங்கத் திட்டத்திற்கு, ஒடிசா நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக அரசு‌ ஆயுதம் ஏந்திய போலீசு மற்றும் துணை இராணுவத்தின் துப்பாக்கி முனையில் கிராம சபைகளை கூட்டியது. பொய் வழக்குகள் சுரங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் (மாலி பர்பாத் சுரக்ஷா சமிதி) மீதும் மக்களின் மீதும் போட்டது. போலி என்கவுண்டர்கள் கூட மேற்கொள்ளப்பட்டன.

இதுபோன்று, தூத்துக்குடி ஸ்டெர்லைடின் தாய் நிறுவனமான “வேதாந்தா லிமிடெட்” மூலம் நியம்கிரி மலையின் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கு எதிராக அப்பகுதியில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களின் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். போராடியதின் விளைவாக சுரங்கத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கூட, நியம்கிரியில் சுரங்கத் திட்டத்தை மீண்டும் மேற்கொள்ளும் முயற்சியில் வேதாந்தா குழுமம் ஈடுபட்டு வருகிறது.

ஜார்கண்டில், கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் “விஸ்தாபன் விரோதி ஜான் விகாஸ் அந்தோலனின்” என்ற சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிராகவும் இது போன்ற பல்வேறு அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மஜிங்மாலியில் காணப்படுவது போல், ராணுவக் குவிப்பு மற்றும் இயற்கை வளங்களின் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு ஜார்க்கண்டிலும் தொடர்கிறது.

அக்டோபரில் சிஜிமாலியில், ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் இடைவிடாத போராட்டங்களை நடத்தினர். இதை தடுக்க வேதாந்தா நிறுவனம் தனது சிஜிமாலி சுரங்கத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு எதிராகப் போராடிய பல்வேறு ஆர்வலர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் தலைவர்களை போலீசு குண்டர் படையை வைத்து கைது செய்தது. ஆப்பரேஷன் சமதன் – பிரஹாரின் ஒரு பகுதியாக, பெரிய அளவிலான துணை ராணுவக் குண்டர் படையையும், போலீசுத் துறையின் மிருகத்தனமான படையையும் பயன்படுத்தி, பழங்குடிகளை அவர்களின் கிராமங்களை விட்டு விரட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, பாசிச அரசும் கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டங்களும் கைகோர்த்துக்கொண்டு பழங்குடி ஒடுக்கு முறைகளை கட்டவிழத்துள்ளனர்.

படிக்க : மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – குமுரும் திருவாரூர் விவசாயிகள்

மஜிங்மாலியில் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கக் கூடாது என்று ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் போலீசுத்துறையை கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் ராணுவ மையமாக்கலுக்கு எதிரான கூட்டமைப்பு (Forum Against Corporatization and Militarization – FACAM) கண்டிக்கிறது.

மஜிங்மாலியில் இருந்து அனைத்து போலீசு அடியாள் படைகளையும், துணை ராணுவக் குண்டர் படைகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் சேவையில் ராணுவத்தைக் குவிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் FACAM கோருகிறது.

கார்ப்பரேட் சுரண்டலுக்காக உழைக்கும் மக்கள் சொந்த இடத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கை, கால்கள் சிதைக்கப்படுகின்றன. பல நேரங்களில் போராட்டக்காரர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, நாம் நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் நின்று, உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து போராட‌ வேண்டும்.

தென்றல்

நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! – 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா

நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா!
– 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள! பகிருங்கள்!!

கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!

கோவை : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் வெறுப்பு பிரச்சாராத்திற்கு பலியாகும் பள்ளிக் கூடாரங்கள்: இஸ்லாமிய மாணவி மீது ஆசிரியர்கள் மதவெறுப்புணர்வு தாக்குதல்!

கோவை மாவட்டம், துடியலுர் பகுதி அசோகபுரத்தில் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் அபிநயா என்கிறப் பயிற்சி ஆசிரியை ஏழாம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவிக்கு வகுப்பெடுத்து வந்துள்ளார். அம்மாணவி குறிப்புகளை சக மாணவிகளிடம் நோட்டைப் பெற்று எழுதுவதைக் கண்டித்துள்ளார் அபிநயா. அம்மாணவியிடம் “உனது அப்பா என்ன வேலை செய்கிறார்” என்று கேட்டுள்ளார். அதற்கு,  “அப்பா மாட்டிறைச்சி கடையில் வேலை செய்கிறார்” என்று கூறியதற்கு “மாட்டுக்கறி தின்ற உனக்கெல்லாம் இந்த திமிரு இருக்கத்தான் செய்யும்” என்று மாணவியிடம் அபிநயா முஸ்லீம்வெறுப்பை கக்கியுள்ளார்.

இச்சம்வத்தை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதை அவர் பெரிதுபடுத்தாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளார். அதன்பிறகும் அபிநயா, அம்மாணவியிடம் தொடர்ந்து முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறைகளை செய்து வந்துள்ளார்.

தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காததால் போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பெற்றோர்கள். பின்னர், போலீசு அதிகாரி இருதரப்பிற்கும் சமரசம் செய்துவைத்துள்ளார். ஆனால், அப்பள்ளி தலைமையாசிரியை, பயிற்சி ஆசிரியை ஆகியோர் தனது முஸ்லீம் வெறுப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை.

படிக்க : கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

அதன்பிறகு, மாணவி பள்ளிக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். அடுத்த நாள், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமையாசிரியர் இராஜேஸ்வரி பேசியப் போது “இஸ்லாமிய பெண் ஒருவர் நமது பள்ளியின் பெயரைக் கெடுக்கும் விதமாக நடந்துள்ளார்” என முஸ்லீம் வெறுப்பு வன்மத்தைக் கக்கியுள்ளார். பேசி முடித்து வகுப்பறைக்கு சென்றவுடன், ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார் என்பவன் தேர்வு நடந்துக் கொண்டிருக்கும்போது ”திமிரு புடிச்சவளே இங்க வாடி” என்ற பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து வினாத்தாள்களை விநியோகிக்க செய்துள்ளான். வினாத்தாள் விநியோகிக்கும்போது “உன்னையெல்லாம் புர்கா போட அனுமதிப்பதே தவறு, புர்காவால எல்லாத்து சூவையும் தொட” என்று கூறியுள்ளான். அம்மாணவி புர்காவை கழட்டாமல் கைக்குட்டை வைத்து நான்கு மாணவிகளின் சூவைத் துடைத்துள்ளார். இச்சம்பவங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அம்மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

அதன்பின், மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் சாய்பாபா காலனி உதவி ஆணையாளர் சந்திரசேகர் முன்னிலையில் பள்ளியில் விசாரணை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, சம்பந்தபட்ட ஆசிரியர்கள் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று (22-11-2023) நடந்த விசாரணையின்போது எந்தவொரு மாணவியிடம் விசாரிக்காமல் வெறும் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், சக ஆசிரியர்களை மட்டும் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர் அதிகாரிகள். இந்த விசாரணை பெற்றோர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மாணவிகளிடமும் விசாரிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.  மீண்டும் நாளை(23.11.23) விசாரித்து முடிவு எடுக்கப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

விசாரணை மேற்கொண்டிருந்தப்போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கோட்ட பொறுப்பாளர் உரிவை பாலன், பொது செயலாளர் தியாகராஜன், கார்த்திக், சுதாகர் ஆகியோர் பள்ளியின் முன் கூடி “ஆசிரியர்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். மாணவியின் பொற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி புகார் கொடுக்க விரும்பினால் போலீசு நிலையத்தில் கொடுங்கள் என்று உதவி ஆணையாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவி மீதும், அவரது பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லும் இந்துமதவெறி பீடித்துள்ள இந்து முன்னணி அமைப்பை வன்மையாக கண்டிக்கிறோம். அப்பகுதியில் தீவிர மதவெறுப்புணர்வு பிரச்சாரம் செய்து சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் பாசிச இந்து முன்னணி கும்பல், அங்கு செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.யின் இந்து முன்னணி, வி.எச்.பி ஆகிய இந்துமதவெறி அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதிதான் துடியலூர். 2016-ஆம் ஆண்டு இந்து முன்னணியை சேர்ந்த சசிக்குமார் இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியிலுள்ள மாட்டிறைச்சி கடைகளும், இஸ்லாமியர்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. அதனால், அப்பகுதியில் இசுலாமிய மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஞாயிறு(19.11.23) அன்று துடியலூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைப்பெற்றுள்ளது. இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பல் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியை மையப்படுத்தி வேலைகளை செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை வைத்து தாக்க செய்தார். அதேபோல, கல்விநிலையங்கள் பாசிச கும்பலின் மதவெறுப்பு நிறைந்த இடமாக மாறி வருகின்றன.

கோவையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை எதிர்த்து யாரும் வாயை திறக்க முடியாத சூழலை உருவாக்கப்பட்டு வருகிறது.

படிக்க : சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!

உத்தரபிரதேசத்தை போன்று கோவையை மாற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டுமானால் இச்சம்பவத்தை எளிதாக கடந்து செல்ல கூடாது. இக்கும்பலின் தொடர்ச்சியான மதவெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக களத்தில் போராட வேண்டும். கோவையில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. அவற்றை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறையில் சம்பந்தப்பட்ட அபிநயா, இராஜேஸ்வரி, இராஜ்குமார் போன்ற மதவெறிப்பிடித்த ஆசிரியர்கள்  நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான மத வெறுப்புணர்வூட்டும் செயல்பாடுகள் அப்பள்ளியில் தொடர்ச்சியாக நடக்கிறதா எனும் நோக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பள்ளியில் ஆ.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் செயல்பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
9488902202

மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – குமுரும் திருவாரூர் விவசாயிகள்

மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – குமுரும் திருவாரூர் விவசாயிகள்

காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!

கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

0

க்நாத் ஷிண்டே – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசு நவம்பர் 20 அன்று கைது செய்தது. போலீசு தாக்கியதால் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தம்கோந்த்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி (Damkondwahi Bachao Sangharsh Samiti) என்ற பழங்குடி மக்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளவர்கள் என வழக்குப் பதிவு செய்து போலீசு மிரட்டிவருகிறது.

கைது செய்யப்பட்ட 21 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353-இன் கீழ் (அரசு அதிகாரியை கடமையாற்றவிடாமல் தாக்குவது) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தம்கொண்ட்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி நவம்பர் 22 தெரிவித்துள்ளது. அவர்கள் அருகிலுள்ள சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுர்ஜாகர் மலையில் (Surjagarh hills) ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.


படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !


கடந்த மே மாதம் நடைபெற்ற ஏலத்தில், ஓம்சைராம் ஸ்டீல்ஸ் அண்ட் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் (Omsairam Steels and Alloys Private Limited), ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட் (JSW Steels Limited), சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் (Sunflag Iron and Steel Company Limited), யுனிவர்சல் இண்டஸ்ட்ரியல் எக்யூப்மென்ட் அண்ட் டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Universal Industrial Equipment and Technical Services Private Limited) மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Natural Resources Energy Private Limited) ஆகிய ஐந்து நிறுவனங்கள் 4,684 ஹெக்டேர் பரப்பளவில் சுரங்கங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

இந்த நிலங்களைப் புனிதமானவை என்று கருதுவதாலும், சுரங்கங்கள் சுற்றுச்சூழலையும் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தையும் அழித்துவிடும் என்பதாலும் பழங்குடி மக்கள் நீண்ட காலமாக மலைகளில் சுரங்கங்கள் அமைப்பதை எதிர்த்து வருகின்றனர்.

ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் அங்கு கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. ஆறுகளும் விவசாய நிலங்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.

2007-ஆம் ஆண்டில், பழங்குடி மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மும்பையை தளமாகக் கொண்ட லாயிட்ஸ் மெட்டல்ஸ் (Lloyds Metals) நிறுவனத்திற்கு சுர்ஜாகர் மலைகளில் 348.09 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் போராட்டங்கள் மூலம் இந்நிறுவனம் சில ஆண்டுக்காலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் சுரங்க அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

அன்று தொடங்கி இன்று வரை, சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சிவப்பு நிற தூசி சாலைகள், வயல்கள், வீடுகள் என சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் நிறைந்துவிடுகிறது. சுரங்கத்தின் கழிவுகள் மலைகளில் இருந்து வழிந்தோடி ஆற்று நீரையும், அருகில் உள்ள கிராமங்களின் வயல்களையும் மாசுபடுத்தி வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் மறைக்கும் விதமாக, போராடும் மக்கள் தங்களைக் கொல்ல முயன்றதாகவும், வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து நிதி பெறுவதாகவும் போலீசு பொய்யாகக் குற்றம் சாட்டுகிறது.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள வாங்கெதூரியில் திறக்கப்படவிருந்த போலீசு நிலையத்திற்குச் செல்லவிருந்த கட்டா (Gatta) கிராமத்தைச் சேர்ந்த போலீசு தரப்பினரையும், நக்சல் எதிர்ப்புப் படையான சி60-யையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் போலீசு பொய்யாகக் கூறியுள்ளது.

சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு மாவோயிஸ்டுகள் தங்களை கட்டாயப்படுத்தியதாக சிலர் கட்சிரோலி போலீசிடம் புகார் அளித்ததாகவும் அதில் பொய்யாகக் கூறியுள்ளது.

போலீசின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தம்கோந்த்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, போராட்டக்காரர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவதற்காகத் தான் போலீசு இவ்வாறு கதைகளை இட்டுக்கட்டுவதாக கூறியுள்ளது.

“கலெக்டரும் மாநிலத்தின் பிற பிரதிநிதிகளும் கார்ப்பரேட் நலன் விரும்பிகள். இவர்கள் வளங்கள் நிறைந்த பிராந்தியங்களையும் அதன் மக்களையும் தங்கள் இலாபத்திற்காக சுரண்ட விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்பவர்கள்” என்ற உண்மையை மறைப்பதற்காக இவ்வாறு கதைகளைப் புனைகின்றனர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் 20 அன்று, டோட்கட்டாவில் உள்ள குடிசைகளை போலீசு நாசம் செய்ததாகவும், போராட்டக்காரர்களின் ஃபோன்களை பறிமுதல் செய்ததாகவும் தம்கோண்ட்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி சமூக ஊடகங்களில் எழுதியது. கைது செய்யப்படுவதற்கு முன்பு, கண்காணிப்புக்காக ட்ரோன் கேமராக்களைப் போலீசு பயன்படுத்தியதாக அந்த அமைப்பு மேலும் கூறியது.

ஆனால் போலீசோ, 250 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்வதால் விரக்தியடைந்த மக்கள் தாங்களே குடிசைகளை அழித்துக் கொண்டுவிட்டதாக இழிவாகச் சித்தரிக்கிறது.

இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட வழிவகுப்பது தான் ’வளர்ச்சி’, ‘தேசபக்தி’. இயற்கை வளங்களைப் பாதுகாக்க நினைத்தாலோ சுரண்டலை கேள்விக்குட்படுத்தினாலோ அவர்கள் ‘தேசவிரோதிகள்’ என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்படுவர் என்பதைத் தான் கட்சிரோலி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!

டந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒன்றிய  அரசின் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது இந்திய தலைமை தணிக்கை அமைப்பு (சி.ஏ.ஜி).  இந்த அறிக்கைகளானது, பாசிச மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு நாடகத்தை நாடு தழுவிய அளவில் அம்பலப்படுத்தியது. “மக்கள்நலத் திட்டங்களா? ஊழலுக்கான திட்டங்களா?” என முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடும் அளவிற்கு, கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் மோடி தொடங்கி வைத்த  7 முக்கிய திட்டங்களில் 7.5 லட்சம் ரூபாய் அளவிற்கு  ஊழல் நடைபெற்றிருக்கிறது.

பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் மோடி அரசின் இந்த இமாலய ஊழல் அம்பலப்பட்டு, விவாதப் பொருளாகியவுடன், வெகுண்டெழுந்த மோடி அரசு, இந்த அறிக்கையை வெளியிட்ட மூன்று உயரதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது. குறிப்பாக, துவாரக எட்டுவழிச்சாலைத் திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட கி.மீ.க்கு 18.20 கோடி ரூபாய்க்குப் பதிலாக, கி.மீ.க்கு 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், மருத்துவமனையில் இருந்து குணமாகிச் சென்றவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லி ஊழல் செய்திருப்பதையும் அம்பலப்படுத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

படிக்க : திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

குறிப்பாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்த சி.ஏ.ஜி. உள்கட்டமைப்பு பிரிவின் முதன்மை இயக்குநர் அதுவா சின்ஹா, திருவனந்தபுரத்தின் அக்கவுண்ட்டெண்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொணர்ந்த சி.ஏ.ஜி.யின் மத்திய செலவினங்கள் பிரிவின் தலைமை இயக்குநர் சூர்யகாந்த சிர்ஷாத், சி.ஏ.ஜி.யின் சட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பதற்காக சி.ஏ.ஜி.யின் வடக்குமண்டல இயக்குநரான அசோக் சின்ஹா சி.ஏ.ஜி அலுவல் மொழி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. ஒன்றிய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி, மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு முகமூடியை கிழித்ததற்காகவே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. ‘ஊழலை ஒழித்த மோடி அரசு’ என்று கேலிசெய்து சமூக ஊடகங்களில் மீம்கள் பகிரப்பட்டன. அந்தளவிற்கு  இந்த விவகாரம் நாறியிருக்கிறது. ஆனால், சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியான விவகாரம். இதில் அரசியல் ரீதியான உள்நோக்கம் கற்பிப்பது தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சுயேச்சையான அமைப்புகள் என்று சொல்லப்படுகிற, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை அனைத்தும் பாசிச மோடி அரசின் அங்கமாகவே மாறியிருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் சி.ஏ.ஜி.யும் இணைந்திருக்கிறது. ஆனால், இதை வெறும் இடமாற்றம் என்றோ, மோடியின் ஆட்சியில் நடப்பது சகஜம்தான் என்றோ கடந்து சென்றுவிட முடியாது.

படிக்க : சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்

மற்ற ‘சுயேச்சையான’ அமைப்புகள் போலன்றி, சி.ஏ.ஜி. போன்ற அமைப்புகளோ அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களாகும். இந்த சி.ஏ.ஜி.யின் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பதானது, இனி, மோடி அரசை பரிசுத்த ஆவியாகக் காட்டுவதற்கான அடிப்படையை உருவாக்கியிருப்பது மட்டுமின்றி, அரசுக் கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ்.மயமாக்குவது ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை போன்றவை வெளியாகியே மோடி அரசை நாம் நெருக்கடிக்குள்ளாக்க முடியாமல் போயிருக்கும் சூழலில், இனி மோடி அரசின் ஊழல்களை சட்டபூர்வமாக அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிவிட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.மயமாக்கப்பட்டு வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பின் சந்து பொந்துகளில் நின்று கொண்டு, மோடி அரசை தேர்தலில் வீழ்த்திவிடலாம் என்று கருதுவது பகல்கனவே.

வாகைசூடி