Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 176

The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!

God chooses certain people to do the difficult work. I believe god has chosen me for this work. Now I only need your blessings. Give BJP 60 months to change India’s future”: Modi demagogued in 2014. But eight years of BJP rule was over. What has changed in India?

Modi, who came to power by unleashing jumlas such as abolishing black money, $ 5 trillion economy, 2 crore jobs and doubling farmers’ income, has left the working people of this country without any means to survive. Today, the country understands the true meaning of his statement ‘I will change India’.

Every family in the country struggles to make their ends meet. The price of petrol, which was Rs. 66 in 2014, is now approaching Rs. 110; the price of LPG cylinder, which was Rs. 400, is now nearing Rs. 1,100. The prices of essential commodities are rising exorbitantly due to increase in petrol-diesel prices and increase in GST.

Also Read : Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

The Modi government has hiked the taxes on packaged food items, including milk, curd and rice, to 5%. The prices of oils and pulses are already bad. After increase in GST, tea which was sold at Rs. 10 had now increased to Rs. 12. Even idlis and dosas which are sold at push carts for Rs. 5 & Rs. 10 have increased by a rupee or two. The BJP has made us strive hard even to half fill our stomachs.

Modi said that he would eradicate poverty. But, it is in the Modi-led BJP regime that poverty is thriving. According to a 2019 report published by the World Poverty Clock, India ranks third in the list of countries with extreme poverty. India is also ranked second among the countries with the highest number of poor people. 68.8% of India’s population lives on an income of less than Rs. 160 a day.

According to a study by the Hindrise Foundation, more than 20 crore Indians go to bed hungry every night. More than 7,000 people die of hunger every day, the report said.

In the last eight years, 12.5 crore people lost their jobs. According to a report by the Centre for Monitoring the Indian Economy and the Azim Premji University, 57% of the workers have lost their jobs in rural areas and 80% in urban areas. In the last May-June, within a one-month span, 1.6 crore people lost their jobs. This did not happen just because of corona. This is the result of Modi’s anti-people policies.

An example for this is demonetization in the name of curbing black money. Soon after the announcement of demonetization, the wholesale market was closed for about 20 days and the sales had stopped. This forced the factories to stop production. Many micro-small scale industries which incurred losses were closed down. 35 lakh people lost their jobs. There was a loss of Rs. 2.25 lakh crore in the value of GDP.

Moreover, after this move, 99.3% of the demonetized money had returned to the banks. But, as many as 140 people died while standing in queues to exchange the demonetized money.

Introduction of GST taxation was the next attack. According to a survey conducted by the All India Trade Union Congress (AITUC) in July 2018, one-fifth of the 6.3 crore micro-small scale enterprises saw a decline in their profits by 20% after the implementation of GST. It is to be noted that thousands of workers had to be laid off.

Similarly, according to an estimate by the Centre for Monitoring Indian Economy, 50 lakh workers had lost their jobs in the year of implementation of GST. As a result, India’s unemployment rate rose from 4.1% in July 2017 to 6.4% in August, i.e. within a single month.

These micro-small scale industries account for 32% of the Indian economy. While agriculture is being destroyed, the organized industrial sector provides less than 10% employment. This is how the micro-small scale industries, which provided job to about 40% of the population, were systematically eliminated under the Modi regime.

Unemployment is rampant. It has risen to 7.83%. The rate of unemployment among the younger generation between the ages 15 and 19 is over 50%.

In the two years between 2018 and 2020, 25,000 people committed suicide due to debt crisis, unemployment and business crisis. Instead of calling it as suicide, we can call it as genocide perpetrated by Modi’s pro-corporate policies.

The magnitude of labourers migrating within the country from their home states without adequate employment and the failure of agriculture is increasing day by day. Without any rights, these workers who work as wage labourers live like refugees within their country. In March, the Modi government itself told in the Parliament that there were 10 crore inter-state migrant workers.

During the CoViD-19 pandemic, migrant labourers were the worst sufferers of the lockdown announced by Modi without any prior notice. Hundreds of thousands of migrant labourers walked hundreds of miles across the country with no food and money. Many died on the way, because of starvation. The news of the unjust death of starved workers lying on the rails shook our hearts. In 2020 alone, 8,733 people died.

As a result of privatization policies, all the public sector undertakings are being handed over to the private sector. Even those who work in the government jobs also live in fear of their jobs being taken away. Moreover, in the name of amendments to the Labour laws, the entire rights, including the rights of the workers to join unions, are being taken away. Contractualisation takes place even in the army in the name of ‘Agnipath’. This is a prelude to the fact that from now on, all the government jobs will be turned into contracted bonded labour.

The Modi government is pursuing the task of destroying the farmers in many ways. Funds for agriculture are being cut off in the budget every year. Food, fertilizer and petroleum subsidies continue to be cut. Lakhs of farmers have committed suicide in the last eight years due to continuous deception by the Modi government. In 2014-2020 alone, 9.5 lakh farmers committed suicide.

The Modi government, which had said it would double farmers’ income, amended the farm laws to eliminate the minimum support price (MSP) and allow corporates to take over agricultural land and agriculture. The farmers laid siege to Delhi and protested for nearly two years and made Modi bow down. More than 500 farmers lost their lives in this struggle.

Also Read : Saffron-Corporate coalition regime looting the country!

The Modi government gave a written assurance while repealing the farm laws that they would fulfill the farmers’ demand for a legal guarantee of minimum support price. But following the months of no action, the Modi government has now set up a committee consisting of those who supported the farm laws.

The fascist devilish rule is attacking the country and the working people with innumerable anti-people and corporate welfare policies including the farm laws, labour law amendments, NEEM-FTE schemes, Marine Fisheries Bill, allowing 100% foreign direct investment (FDI) in retail, GST, Environment Impact Assessment Act, tariff for groundwater, Electricity Amendment Act, New Education Policy, NEET and many more.

BJP is waging a proxy war against farmers, labourers, fishermen, small and marginal traders, students and youth from all walks of life during every moment of its rule. Working people cannot live in peace without putting an end to this fascist regime.


Thulipa

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

29.09.2022

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பாசிச சக்திகளை தடை செய்!

பத்திரிகை செய்தி

எங்கு சென்றாலும் சாதி – மத வெறி கருத்துக்களை பரப்பிவரும் பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத், குலசை தசரா திருவிழாவிற்கு சென்று அங்கே மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனே திறக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் நிறுவனம் மூடுவதற்கு காரணமாக இருந்த மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகியவற்றை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, குஜராத்தில் முஸ்லீம் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கலவரம், ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் இப்படி பல்வேறு பயங்கரவாத செயல்களை நாடுமுழுவதும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல்தான் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்புகளின் பயங்கரவாதிகள் சட்டத்தால் தண்டிக்கப்படும் இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள்.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இந்து மக்கள் கட்சியின் தலைவரும், பயங்கரவாதியுமான அர்ஜுன் சம்பத், தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார். மக்களுக்காக போராடக் கூடிய அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக சித்தரித்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் கூறிவருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகின்ற அமைப்பு எமது மக்கள் அதிகாரம். இதனால் தமிழ்நாடு முழுவதும் எமது தோழர்கள் போலீசால் கடும் அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும் இந்த நாட்டின் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறது எமது அமைப்பு. எமது அமைப்பின் மீது பாசிச பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் மூச்சுக் காற்றையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை நீத்த, தங்கள் அங்கங்களை இழந்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்துமதவெறி பயங்கரவாதியும் தேசவிரோதியும் ஸ்டெர்லைட் கம்பெனியின் கைக்கூலியுமான அர்ஜுன் சம்பத்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சுமந்த மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்த பயங்கரவாதி.

இப்படிப்பட்ட பயங்கரவாத சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி – மதவெறி கருத்துக்களையும் மக்கள் விரோத கருத்துக்களையும் தேசவிரோத கருத்துக்களையும் கூறிவருகின்ற பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென்றும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற பயங்கரவாத பாசிச அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

பாசிசத்தை முறியடிக்கும் ஒரே ஆயுதம் மக்கள் தான் | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய போது, சமூகத்தில் பாசிசம் ஊடுருவியிருக்கிறது. பாசிசம் நம்மை சுற்றி பற்றி பரவியிருக்கிறது. தொழிலாளர் இடம்பெயர்ந்து வேலை செய்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நாடுவிட்டு நாடு, மாநிலம் மாநிலம் இடம்பெயர்ந்து வேலை செய்கிறார்கள். வட மாநிலங்களிலிருந்து இங்கே வருகிறார்கள். தொழிலாளர்களை நாம் குற்றம் சாட்டவில்லை. வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தமிழகம் சொர்க்கமாக இருக்கிறது. எல்லா தொழில் நிறுவனங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கிராமப்புறங்களில் ஒரு 20 தொழிலாளர்கள் காவி உடைப்போட்டிருக்கிறார்கள் என்றால் அவர் பலியாகியிருக்கிறார்கள் என்றுதான் யோசிக்க வேண்டிருக்கிறது. காளியம்மன் கோயிலில் ஸ்ரீராம் ஜெயம் என்று எழுதுகிறார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அரசியல் தெரியாது. நாட்டார் தெய்வ வழிப்பாட்டு முறைகளில் இன்றைக்கு பார்ப்பனிய கருத்துகள், இந்து மதவெறி கருத்துகள் ஊடுருவியிருக்கிறது.

கல்வி என்பது தனியார்மயமாக்கப் பட்டிருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் சாகா பயிற்சி நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஒரு மாணவி இறந்த பிறகுதான் அந்த பள்ளியில் சாகா பயிற்சி நடந்தது நமக்கு தெரிந்தது.

ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் எங்கே இருக்கிறார்கள். மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து கூட ABVP-யில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். இங்கு இருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் யோசிக்க வேண்டும். இந்து மதவெறி பயங்கரவாதிற்கு சாதகமாக இருக்கிறது. இந்த அரசு இயந்திரம் என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வழிநடத்துவது என்ற நிலையில் இருக்கிறது.

தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்த முடியாது. இந்தியாவில் உள்ள கட்சிகள் எல்லாரும் சேர்ந்து வீழ்த்தினாலும் நிலையாக ஆட்சி நடத்த முடியாது. இந்த அரசு என்பது எவ்வளவு கார்ப்பரேட் நலன் கொண்ட அரசாக இருக்கிறது. இவர்களை களத்தில் நின்று முறியடிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டி இவர்களை முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

Saffron-Corporate coalition regime looting the country!

The BJP rule is hostile to all sections of the people. But it has been the golden age for the corporates. Its patrons are bourgeois from the Brahmin-Baniya, Sindhi and Marwari castes of Gujarat, including Ambani and Adani. These corporates and the saffrons are inseparable two sides of the same coin and are looting the country and its people.

Bank frauds of Rs. 5.35 lakh crore occurred under the Modi regime in the last eight years. Of these, 23 persons fled the country after indulging in frauds worth Rs. 53,000 crore. Majority of the 23 persons including Nirav Modi, Mehul Choksi and Vijay Mallaya were close to Modi.

The total NPAs (Non-Performing Assets) in the nationalized banks were Rs. 2.83 lakh crore in 2014. It has now risen to Rs. 13 lakh crore. These bank frauds are concrete examples of how the corporates are poaching people’s money.

Also Read : Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

It is for these corporates, who are indulging in bank frauds, that the Modi government is providing various concessions under the name of ‘promotion of business growth’ in every budget. Modi government reduced the corporate tax from 30% to 22%. The government suffered a revenue loss of Rs. 1.20 lakh crore in a single year between 2019-20 and 2020-21.

On the other hand, there is looting of the public sector. The Modi government, which is actively implementing the recolonizational policies of liberalization-privatization-globalization, is selling the public sector to nurture the corporates close to it. They have created a separate department under the Ministry of Finance called the Disinvestment Department for the sale of public assets.

Between 2014-15 and 2020-21, assets worth Rs. 4.86 lakh crore of public sector stocks were sold to private players. The scheme that has been designed to sell off the entire country to the corporates by disinvestment of public sector stocks is called “Aatmanirbhar Bharat Abhiyan”. The BJP is saying that through the National Monetization Pipeline, which is a part of Aatmanirbhar Bharat, the assets held by the government can be sold to the big corporates to raise funds for infrastructure development.

Under this scheme, the Modi government has decided to lease out public assets worth Rs. 6 lakh crore – including railway lines and stations, telecom sector, power, oil and gas pipelines, roads and ports – to the corporates for 40 years. The BJP government is giving these precious assets created by decades of labour and people’s tax money in the name of ‘lease’. This leasing out of public assets is not so different from selling out; only the name differs.

Instead of saying corporates in general, the corporates that are dearest to Modi such as Ambani and Adani have grown exponentially under the Modi regime. In these eight years, Mukesh Ambani’s wealth has increased by 400% and Adani’s by 1830%.

Between 2014 and 2019, the assets of Ambani and Adani rose to an all-time high. Ambani’s net worth rose 118% to Rs. 3.65 lakh crore from Rs. 1.68 lakh crore. Adani’s net worth increased by 121% from Rs. 50.04 lakh crore to Rs. 1.1 lakh crore. Adani, who was ranked 313 in the list of world’s richest people, has risen to the 12th rank because of Modi’s favour.

Recently, it was revealed that Modi himself had bargained with the Gotabaya government to hand over the Sri Lankan power generation contract to Adani. It has to be noted that, when every time Modi goes abroad, Ambani and Adani are rewarded with various international contracts.

When Modi visited Australia in November 2014, Adani got a 200-km narrow-gauge rail line project from the Australian government. Following the aftermath of Modi’s Bangladesh visit in June 2015, the Reliance group and the Adani group signed an agreement to set up power plants in Bangladesh with an investment of $ 4.5 billion. As a result of Modi’s repeated visits to Japan in August 2014 and in September & November 2016, Adani Logistics along with Japan’s NYK Auto Logistics secured a contract to run automobile freight trains in 2018.

Following Modi’s visit to Russia in July 2015, Russian defence manufacturer Almaz-Antey signed an agreement with Anil Ambani’s Reliance Defence to jointly make missiles. Modi’s 2016 US trip, in turn, resulted in Reliance Defence receiving a contract to repair US warships. The 2015 trip to Malaysia and the port project that Adani received. The list goes on and on. Adani has finally acquired Haifa port, Israel’s second largest port, after the conference of the newly formed I2U2 grouping, which has been created by India, Israel, the United Arab Emirates and the United States.

The corporates have poured out hundreds of crores to the BJP as election donations, in return to the corporate services rendered. According to a report by the Association for Democratic Reforms (ADR), of the Rs. 258.43 crore donations received by political parties through seven electoral trusts from corporates and individuals during the financial year 2020-21, 82.05% of the funds (Rs. 212.05 crore) were received only by the BJP.

Also Read : NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

On seeing the monstrous growth of Ambani and Adani, a very reactionary section of the bourgeoisie is seeking the RSS’s favour to include them in the fascist camp.

Shiv Nadar, the owner of HCL and Azim Premji of Wipro have spoken to the RSS Chief Mohan Bhagwat. Rahul Bajaj went to the Smruti Mandir to pay tribute to the RSS founder Hedgewar.

Last April, Ratan Tata went to meet Mohan Bhagwat. In 2018, Tata trusts donated Rs. 100 crore to the RSS’s Dr Aabaji Thatte Seva Aur Anusandhan Sanstha, which had served in collaboration with the National Cancer Institute, Nagpur.

Thus, a saffron-corporate alliance has formed and is destroying our country. In order to exercise its control, it is resorting to fascist oppressions. To bring down this fascist alliance, which is acting against the people and against the country, all the people affected by this fascist mob must unite and come together as an Anti-Fascist People’s Front. There is no other choice.


Velmurugan

தமிழகத்தில் கலவரம் நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் ! | மருது வீடியோ

ர்.எஸ்.எஸ் என்பதை மற்ற அமைப்புகள் போலவே இதுவும் ஓர் அமைப்பு என்று பார்ப்பது தவறு. ஆர்.எஸ்.எஸ் ஏன் உறுவாக்கப்பட்டது என்ற பின்னணியுடன் தான் சேர்ந்து நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை ஒரு வழிமுறை இருக்கிறது.

திமுக திராவிட நாடு என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் தங்களுடைய கருத்துக்களை, தங்களுடைய சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சென்றார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள், காலம் முழுக்க பிரச்சாரம் செய்து, மக்களை நேரடியாக சந்தித்து பேசுவது மூலமாக தங்களது போராட்டங்களை நடத்தி பல்வேறு உரிமைகளை பெற்று தந்தார்கள்.

அப்படி ஆர்.எஸ்.எஸிற்கு என்னதான் கொள்கை என்றால், ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பாசிச அமைப்பு, அதாவது வழக்கம்போல இருக்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பா என்றால் அப்படி அல்ல. உலகத்திலேயே 100 ஆண்டுகள் நீடித்து நிற்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பு. அந்த அமைப்பு பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இருந்த பாசிச அமைப்புகள் எப்படி மக்களால் ஒழித்துக்கட்டப்பட்டது, எப்படி காலாவதியானது என்பதில் இருந்து பல்வேறு அனுபவங்களை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது.

குறிப்பாக அவர்கள் வழிமுறையே வன்முறைதான். கலவரம் செய்வதும் அதன்மூலமாக ஆட்சியை பிடிப்பதும்; முஸ்லீம்களையும், கிருத்துவர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்றொழிப்பதுதான் அவர்கள் இலக்கு. இப்படிபட்ட இலக்கை வைத்திருக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

வர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய போலி ஜனநாயகத் தேர்தலில் நெடுங்காலமாக ஓட்டுக் கட்சிகளால் புழுத்து நாற வைக்கப்பட்டுள்ளவை; இவற்றை மற்ற பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைக் காட்டிலும் பாசிஸ்டுகளால் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், அதிலுள்ள ஆபத்தையும் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்கள்.

இத்தேர்தல்களில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு எதிர்கட்சிகளின் நிலை வேறாக இருந்தது; பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்த பின் எதிர்கட்சிகள் நிலை தலைகீழாக மாறியது.

எதிர்கட்சிகளின் சார்பில், குடியரசுத் தலைவருக்கான பொதுவேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைமையில் 22 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஜூலை 15 ஆம் தேதி ஆலோசனை நடத்தின. அதே நாளில் காங்கிரஸுக்கு போட்டியாக எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் மம்தா. அவற்றிலும் எதிர்கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். இப்படியாக, எதிர்கட்சிகள் ‘ஒற்றுமையோடு’ யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தன.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்ததற்கு மறுநாளே, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக கூட்டணி. சொல்லிக் கொள்ளப்பட்ட எதிர்கட்சிகளின் ஒற்றுமை அப்போதே குடை சாய்ந்துவிட்டது. திரௌபதி முர்மு சந்தால் இனத்தைச் சேர்ந்த பழங்குடி என்பதை முன்னிறுத்தி, பாஜக சாதி அடையாள அரசியலில் இறங்கியதை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. திரௌபதி முர்முவை எதிர்த்தால் பழங்குடிகள் மத்தியில் தமக்குள்ள வாங்கு வங்கியை இழந்துவிடுவோமோ என அஞ்சி எதிர்கட்சிகளில் ஒரு பிரிவினர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று வாய்ச்சவடாலடித்த வீரமங்கை மம்தா, பா.ஜ.க ஒரு பழங்குடியை வேட்பாளராக அறிவிப்பதாக முன்பே சொல்லியிருந்தால் அவரை பாஜக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம் என்று பேசினார். தனது ஆட்சிக்கே உலைவைத்துக் கொண்டிருந்தபோதும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பழங்குடி என்பதால் பாஜக வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்கிறோம் என்றார். ஜார்கண்டில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, முர்முவை ஆதரித்தது.

மேலும் சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.ஜு. ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் திரௌபதி முர்முவை ஆதரித்தன.

வாக்கெடுப்பின்போது, முர்முவை வெளிப்படையாக ஆதரிக்காத எதிர்கட்சிகளின் வரிசையிலிருந்து பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது முகீம், தாம் ‘ஒடிசாவின் புதல்விக்கு’ (முர்மு) வாக்களித்ததாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 11-லிருந்து 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அசாமில் 15-லிருந்து 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தரவுகளிலிருந்து அம்பலமாகியுள்ளது. பீகார், குஜராத் உள்ளிட்டு பல மாநிலங்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். கேரளாவில் பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் முர்முவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு விழுந்துள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்தும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 64 சதவிகிதம் வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு மகத்தான வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மட்டுமே 38 சதவிகிதம் வாக்குகள் இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், 36 சதவிகிதம் வாக்குகளே பெற்று யஷ்வந்த் சின்ஹா படுதோல்வியடைந்தார்.

திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தாவிட்டாலும் பாஜக கூட்டணியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றிருக்க முடியும் என்றாலும், எதிர்கட்சிகளை நிலைகுலையச் செய்வது, அடுத்தடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் பழங்குடி வாக்குவங்கிகளை தமக்குச் சாதகமாக ஈர்ப்பது என்ற இரண்டு மாங்காய்களை ‘சாதிய அடையாள அரசியல்’ என்ற ஒரே கல்லால் வீழ்த்தியுள்ளது பாஜக. குறிப்பாக, இத்தேர்தல் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியின் மீது பெரிய அளவிலான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் (2011 கணக்கெடுப்பின் படி) 5.8 ஆகும். இப்பழங்குடிகள் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். இம்மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ‘ஜங்கல் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. சந்தால் மற்றும் குர்மி இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜங்கல் மஹால், 40 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். எனவே மேற்கு வங்கத் தேர்தல் அரசியலில் பழங்குடிகளின் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக வேலைசெய்துவருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜங்கல் மஹாலின் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பழங்குடிகள் மத்தியில் பாஜக செல்வாக்கு பெற்றுவருவதையும் தமது செல்வாக்கு சரிவதையும் உணர்ந்த மம்தா, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பழங்குடிகளுக்கு பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதன் மூலம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றினார்; பாஜக 15 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி வேட்பாளர் முர்முவை ஆதரிக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த உயர்சாதி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறார் மம்தா என்று பாஜக மேற்கு வங்க பழங்குடியினரிடையே பிரச்சாரம் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் இப்பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும் பழங்குடிகளிடையே தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மம்தாவும் கவர்ச்சிவாத, சாதி அடையாள அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில், மே.வங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ள மம்தா, தனது புதிய அமைச்சரவையில் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான பிர்பா ஹன்ஸடாவுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் பங்கா பூஷன் விருது, இந்த ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தரான மகேந்திரநாத் ராய், எழுத்தாளரான ரபிலால் துடு ஆகிய இரண்டு பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி சந்தால் பழங்குடிகள் கொண்டாடும் ஹூல் உற்சவ் எனப்படும் திருவிழாவிற்கு மம்தா அரசு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் போலி சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பழங்குடிகளுடன் சேர்ந்து நடனமும் ஆடினார் மம்தா.

***

மேற்கு வங்கம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலுமுள்ள பழங்குடி வாக்குகளைக் குறிவைத்தே பாஜக முர்முவைக் களமிறக்கியுள்ளது. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் 8.6 ஆகும். அதேநேரம் மாநிலங்கள் வாரியாகப் பார்க்கும்போது இதில் பாரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

சான்றாக வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக் கொண்டால், சிக்கிம் மாநிலத்தில் 33.8 சதவிகிதமும், மேகாலயாவில் 86.1 சதவிகிதமும், அருணாச்சலப் பிரதேசத்தில் 68.8 சதவிகிதமும், நாகாலாந்தில் 86.5 சதவிகிமுதம், மிசோராமில் 94.4 சதவிகிதமும், மணிப்பூரில் 35.1 சதவிகிதமும், திரிபுராவில் 31.8 சதவிகிதமும் பழங்குடிகள் உள்ளனர்.

இவையன்றி சதீஷ்கர் (30.6%), ஜார்கண்ட் (26.2%), ஒடிசா (22.8%), மத்தியப் பிரதேசம் (21.1%), குஜராத் (14.8%), ராஜஸ்தான் (13.5%) ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பழங்குடி மக்கள் வாழ்கின்றன.

குஜராத், ராஜஸ்தான், சதீஷ்கர், தெலுங்கானா – என அடுத்தடுத்த வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்களையும், தற்போது பாஜக காலூன்றி வளர்ந்துவருகின்ற வடகிழக்கு மாநிலங்களையும் குறிவைத்தே முர்மு என்ற அம்பு வீசப்பட்டுள்ளது.

***

குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்முவை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததைப் போலவே, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மே.வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரைத் தேர்ந்தெடுத்ததிற்குப் பின்னும் பாசிச பாஜகவுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

ஜெகதீப் தன்கர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் ஆதிக்க சாதிக்காரர் ஆவர். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதே ஜெகதீப் தன்கரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தற்கான நோக்கமாகும்.

ஜூலை 16 அன்று ஜெகதீப் தன்கரை வேட்பாளராக முன்மொழிந்தபோது, அவருக்கு ‘விவசாயி மகன்’ என்ற அடையாளத்தை வழங்கியது பாஜக. அன்றைய தினம் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார் :

“விவசாயி மகனான (கிசான் புத்ர) ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்குப் பெயர் பெற்றவர். சட்டம், சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாகத்தின் புகழ்மிக்க அனுபவங்களை அவர் தன்னோடு கொண்டுவருகிறார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது, ஆர்.எஸ்.எஸ்-பாஜக பல்லாண்டு காலமாக ஜாட்டுகள் மத்தியில் உருவாக்கியிருந்த சாதிய, மத முனைவாக்கத்தை உடைத்தது, வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போக்கைத் தடுப்பதற்காகவும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன்னிட்டும் மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

சட்டங்களைப் பின்வாங்கியது ஒருவகையில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் ஜாட்டுகள் மத்தியில் தனது இழந்த அடித்தளத்தை மீட்பதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் அன்றே தலையங்கம் (2021 டிசம்பர் இதழ்) எழுதினோம்; அதைப் போலவே பாஜகவின் செயல்பாடுகளும் அமைந்தன. ஒரு தொடர் நிகழ்வின் அங்கமாகத்தான் ஜகதீப் தன்கரை முன்னிறுத்தியிருக்கிறது பாஜக.

உ.பி சட்டமன்றத் தேர்தலின் போது, ஜாட்டுகள் அதிகமாக வசிக்கக் கூடிய மோடி நகர் தொகுதியில், ராஜ்நாத் பிரச்சாரம் செய்தார். அப்போது சீக்கியர்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவரும் முன்னாள் பிரதமருமான சவுத்ரி சரண் சிங்கை தனது அரசியல் ஆசானாகக் குறிப்பிட்டு பேசினார். மேலும் பாஜகதான் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாக அறிவித்ததாகவும் ஜாட்டுகள் பாஜக மீது கோபப்பட முடியாது என்றும் பேசினார்.

கடந்த ஏப்ரல் மாதம், சீக்கியர்களின் 10 குருமார்களில் 9வது குருவாகப் போற்றப்படும் குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாளை மோடி செங்கோட்டையில் கொண்டாடினார். ‘அவுரங்கசீபை எதிர்த்து நமது ஆன்மீக கலாச்சாரத்தைப் பாதுகாத்தவர்’ என்று புகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடு வாழ் சீக்கியர்களின் தூதுக் குழுவுடன் பேசிய மோடி, புதிய இந்தியாவைப் படைப்பதில் சீக்கியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனப் புகழ்ந்தார். மேலும் குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தைச் செலவிடுவது, சீக்கியக் குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும் என்று கூறினார்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் சீக்கியர்களின் தலைப்பாகையுடன் மோடி காட்சி தந்தார். இவையெல்லாம் ஜாட் விவசாயிகளை, சீக்கியர்களைக் கவருவதற்காக பாஜக மேற்கொண்ட கவர்ச்சிவாத, சாதிய அடையாள அரசியலின் பகுதிகளே.

வேளாண் சட்டங்களைத் திருப்பப் பெற்றபோது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு எழுத்துப் பூர்வமாக ஒப்புதலளித்த மோடி அரசு எட்டுமாதங்களாக அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது குடியரசுத் துணைத் தலைவராக தன்கரை அறிவித்து ஒருநாள் கழித்து, அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது மோடி அரசு. இதில் பங்குபெறச் சொல்லி சம்யுக்த கிசான் மோர்சா என்ற விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பை அழைத்துள்ளது. (இக்குழுவே ஒரு மோசடி என்று விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு அதைப் புறக்கணித்துள்ளது என்பது வேறு விசயம்)

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

***

கவர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய தேர்தல் அரசியலிலிருந்து பிரிக்க முடியாததாகும். குறிப்பாக சாதி அரசியல் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் புரையோடிப் போயிருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்காத கட்சி என்ற ஒன்று இல்லை. போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முறை கோடான கோடி வாக்காளர்களுக்குப் பயிற்றுவித்திருப்பது நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டு என்ற ஜனநாயக சிந்தனையைத்தான்.

படிக்க : காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

மாறாக, பெரும்பான்மை மக்கள் எந்த அரசியல் கட்சியின் கொள்கை தங்கள் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் என்று தெரிவுசெய்து வாக்களிப்பதில்லை. இத்தனைக் காலமும் கவர்ச்சிவாதத்தையும் அடையாள அரசியலையும் பிழைப்புவாதக் கட்சிகள் திறமையாகப் பயன்படுத்தி வந்தன. இன்று பாசிஸ்டுகள் அதை வீரியமாக முன்னெடுக்கிறார்கள். எனவே இத்தேர்தல் வரம்பிற்குள் நிற்கும் பிழைப்புவாத அரசியல் கட்சிகளால் பாசிஸ்டுகளின் அடையாள அரசியலை எதிர்கொள்ள முடிவில்லை. எதிர்கொள்ளவும் முடியாது!

வர்க்க அரசியலால் மட்டுமே இதை எதிர்கொண்டு முறியடிக்க முடியும். வேதாந்தாவுக்காகவும் ஜிண்டாலுக்காவும் பழங்குடிகள் வேட்டையாடப்படுவதையும், அம்பானி-அதானி கும்பலுக்காக பாரம்பரிய விவசாயம் அழிக்கப்பட்டு கார்ப்பரேட்மயமாக்கப்படுவதையும் வர்க்க அரசியலால் மட்டுமே எடுத்துக் காட்ட முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர் – இளைஞர்கள், சிறு – குறு வணிகர்கள் என அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது வர்க்க நலன்களை எடுத்துக் காட்டி அரசியல் உணர்வு ஊட்டுவதன் மூலம் மட்டுமே கவர்ச்சிவாத, அடையாள அரசியல் மாயைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்.

தேர்தல் பாதைக்கு வெளியே போராட்டப் பாதையில் மட்டுமே இத்தகைய அரசியல் உணர்வுக்கு உழைக்கும் மக்களைப் பயிற்றுவிக்க முடியும். இப்பாதை மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தும்!


பால்ராஜ்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

28.09.2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை !

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி – அதானி  பாசிசம் முறியடிப்போம் !

கண்டன அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தியது.

இச்சோதனை தொடர்பாக நாடு முழுவதும் அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது மோடியை கொலை செய்ய முயற்சி செய்வது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மக்கள் மீது மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச பார்ப்பன கும்பல் வைத்திருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை, கைதுகள் நடைபெற்றதாக ஏற்கனவே மக்கள் அதிகாரம் தெரிவித்தது.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

இன்று(28.09.20022) காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தடை செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இதன்மூலம் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக செயல்படக்கூடிய எந்த ஒரு அமைப்பின் மீதோ அல்லது எந்த ஒரு கட்சியின் மீதோ எப்போதும் எந்த நேரத்திலும்  தடை விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

வழக்கமான மோடியின் பாசிச நடவடிக்கைகளில் இது ஒன்று என்று கருதாமல் இதற்கெதிராக, அனைத்து முற்போக்கு, ஜனநாயக புரட்சிகர அமைப்புகளும் மக்களும் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321.

காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

ஞ்சாப், ஹரியானா, உ.பி மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக, சட்டத்தில் ஒரு புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம் என்று திமிர்த்தனமாகக் கூறிய மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது.

மேலும் ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருதிலேயே கவனம் செலுத்தியதால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டு விவசாயிகளின் இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளித்தது.

அவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றாததால், மோடி அரசைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் எட்டு மாதங்கள் கழித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிப்பதற்காக மோடி அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

இக்குழு தொடர்பாக மத்திய வேளாண்மை அமைச்சகம், ஜூலை 18 ஆம் தேதி அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலையை மேலும் சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவது குறித்து ஆராய 26 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இக்குழுவில் பங்கேற்க விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது; 3 இடங்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பானது இக்குழுவை நிராகரித்தது மட்டுமின்றி, தங்கள் சார்பாக எந்தப் பிரதிநிதிகளையும் பரிந்துரைக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் நிறைந்த இக்குழுவின் நிகழ்ச்சிநிரலில் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

***

மூன்று வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்த கன்வந்த் பாட்டீல், கிருஷ்ணவீர் சவுத்ரி, பிரமோத் குமார் சவுத்ரி, கனி பிரகாஷ் மற்றும் சையத் பாஷா படேல் ஆகியோர் விவசாய சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில், இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக உடன் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள். கிருஷ்ணவீர் சவுத்ரி பாஜகவின் தலைவராக உள்ளார்; சையத் பாஷா படேல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ; பிரமோத் குமார் சௌத்ரி ஆர்.எஸ்.எஸ்-இன் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்; கன்வந்த் பாட்டீல் சுதந்திர பாரத் பஷ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் வழக்கறிஞர்; கனி பிரகாஷ் விவசாயிகளின் இயக்கத்தை எதிர்த்ததில் முன்னோடியாக இருந்தவர்.

மேலும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் மற்ற உறுப்பினர்களும் அரசின் விசுவாசிகளே. முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் உருவாக்கியவர் இவரே. நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் மூன்று வேளாண் சட்டங்களின் முக்கிய வழக்கறிஞராக இருந்தவர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக இருந்தனர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஆதரிப்பவர்களைக் கொண்ட இக்குழுவானது விவசாயிகளின் கூற்றுப்படி, தங்களுடைய முதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவது பற்றி விவாதிக்கவில்லை. மாறாக, நான்கு துணைக் குழுக்களை அமைத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம், விவசாயிகளிடம் நுண்ணுயிர் பாசனத்தை மையப்படுத்துவது, பயிரிடும் முறை மற்றும் பயிர்களைப் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்ய இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம் என்றால், கனிம உரங்கள் உட்பட எந்தவித இடுபொருள்களும் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்வது. அதாவது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது நாள்தோறும் ஏறிக்கொண்டே போகிறது. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியிலிருந்து எந்த இடுபொருளும் வாங்கவேண்டியதில்லை. மாட்டு மூத்திரம், சாணி போன்றவற்றையே உரங்களாகப் பயன்படுத்திக் கொள்வது. அதே போல் நுண்ணுயிர் பாசனம் என்றால், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்வது.

இனி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் உள்ளிட்டு பல்வேறு இடுபொருட்களையும் வழங்குவதை ஒழித்துக் கட்டுவதே ஜீரோ பட்ஜெட் விவசாயம். சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதாரவிலையைப் பற்றி விவாதிப்பதாகச் சொல்லி அமைக்கப்பட்ட இக்குழு, விவசாயத் துறையை அரசானது முற்றிலுமாக கைக்கழுவி விட்டு, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ரத்துசெய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை இக்குழுவின் மூலம் வேறுவடிவத்தில் அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம் என்று விவசாயிகள் இதனை அம்பலப்படுத்தி உள்ளார்கள்.

***

குறைந்தபட்ச ஆதாரவிலைக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பின்புலத்தை ஆராய்வது, குழுவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது, மோடி அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆராய்வது போன்ற செயல்பாடுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளதையே காட்டுகின்றன.

மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், விவசாயிகளாகிய நாம் மட்டும் தனித்துநின்று போராடினால் போதாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும் மற்றும் பிற வர்க்கங்களின் கோரிக்கைக்காகவும் போராட வேண்டும் என்பதை உணர்ந்து தங்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதில் முன்னேறி வருகின்றனர் விவசாயிகள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து 2022 மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக பங்கேற்றுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 24 நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெய் ஜவான் ஜெய் கிசான் (வாழ்க இராணுவவீரர், வாழ்க விவசாயி) என்ற முழக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க : மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

ஆகஸ்ட் 8 அன்று மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பானது, மின்சாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களோடு இணைந்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

உபி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க பிரச்சாரம் செய்தது விவசாயிகள் சங்கங்களின் முக்கிய நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை முறியடிக்காமல் நாம் வாழ முடியாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராடும்போதே அக்கும்பலை முறியடிக்க முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

சரியான திசைவழியில் முன்னேறிச் செல்கிறார்கள் விவசாயிகள். இந்த திசையில் அவர்கள் தொடர்ச்சியாக முன்னேறி செல்வதும், பிற பகுதி விவசாயிகளும் மற்றும் பாசிசக் கும்பலின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பிற வர்க்கங்களும் அவர்களுடன் ஒன்றிணைவதும் பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் போக்காகும்.


அமீர்

ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ

ந்த ஃபோர்டு ஆலையை கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் மூடுவதாக சொன்னார்கள். ஆனால் மூடுவது பற்றி தமிழக அரசிடம் எந்த விதமான அறிவிப்பும் கொடுக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த வேலை நிச்சயம் எங்களுக்கு வேண்டும். நம் மக்களின் விவசாய நிலங்களின் ஆலை அமைத்துக்கொண்டு, 15 வருடம் மக்கள் வரிப்பணத்தில் வரி சலுகை பெற்றுக்கொண்டு செயல்படுகிறது இந்த ஆலை.

இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் 15 வருடம் முடிந்த பிறகு எங்களின் உழைப்பை சுரண்டி விட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதில் தமிழக அரசு தலையிடவேண்டும். என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

செப்டம்பர் 26 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ் மின்ட் செய்தி ஊடகம் பதிவு செய்து வெளியிட்டுள்ள காணொலியை இங்கு பகிர்கிறோம்.

ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

நன்றி : Tamilmint

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

1

ள்ளலாரின் 200 ஆம் ஆண்டை “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணை என அறிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அன்னதானங்கள் வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டு முழுவதும் 52 வாரங்களும் அன்னதானங்களும் சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படும் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்போது, வள்ளலார் – தனிப்பெரும் கருணை அதற்காக அன்னதானம் என பேசி முடித்துக் கொண்டனர் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள். தப்பி தவறி கூட வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றியும், சாதி, மதம், சமயங்களை விட்டொழிக்க வேண்டும்; அதுவே மேன்மை அடைய வழி என பேசியும் வாழ்ந்தும் வந்தார் என்பது பற்றியும் எங்கும் பேசவில்லை.

பல்லக்கு தூக்கும் பிரச்சினையிலும், சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையிலும்  இதுபோன்று பலவற்றிலும் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்ட திமுக எப்படி பார்ப்பனிய எதிர்ப்பு மரபினை உயர்த்தி பிடிக்கும்? எப்படி பேச முடியும்?

படிக்க : மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

வள்ளலார் பிறந்து 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பேச முடிந்த பார்ப்பனிய எதிர்ப்பை இவர்களால் இன்று பேச முடியவில்லை. காலம் மாறிவிட்டது என எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்றும் கூட இந்து ராஷ்டிரத்தையும் அதில் உள்ள சாதிய வருணாசிரமத்தையும் மீட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதற்கு சி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உயர்ந்தவன் – பிராமணன், தாழ்ந்தவன் – சூத்திரன் என்று கற்பித்து வருவது ஒரு மிக சிறந்த உதாரணம்.

இதுபோக, வேத கல்வி வாரியம் என வைத்துக்கொண்டு மனுஸ்மிருதி, வேதங்கள், உப நிடதங்கள் மற்றும் சாதிய வர்ணாசிரமத்தை முதன்மை பாடமாக கற்றுக் கொடுத்து அந்த மாணவர்களை இன்று பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இணைக்கப் போகிறார்கள்.

அப்படியானால் இந்த இந்துராஷ்ட்டிர பாசிச பேரபாயத்திற்கு எதிராக வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை முன்பை விட அதிகரித்துள்ளது.

வள்ளலார் ராமலிங்கர் 1823-இல் சிதம்பரம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் சைவ மத பற்றாளராக தமிழகம் முழுவதும் வளம் வந்துள்ளார். பின்பு அவரே கூறும் போது “சைவம், வைணவத்தை நம்பாதீர்கள். அது உண்மையை சொல்லாது. ஒரு காலத்தில் நானும் சைவத்தை நம்பினேன். எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால் அப்போது எனக்கு அறிவு கொஞ்சம் தான் இருந்தது” என்றார்.

வைதீக மரபின் முதன்மையான (பிரஸ்தான) மூன்று உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. இவை அனைத்துமே கொல்வதைத் தர்மமாக கூறியது; சூது சொல்லித் தந்தது  என அம்பலப்படுத்தினார்.

இதற்கு மாறாக, வள்ளலார் கொல்லாதே. உணவு ஊட்டுவதும், உயிர்காப்பதும்தான் கடமை என்கிறார். கொல்வதை தர்மமாக பேசும் பார்ப்பனியத்திற்கு எதிராக உயிர் காக்க வேண்டும், உணவளிக்க வேண்டும் என்று களமாடினார் வள்ளலார். திமுக அரசோ வள்ளலார் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி எல்லாம் பேசாமல் வள்ளலாரை  உணவு வழங்கும் பிதாவாக மட்டும் கட்டமைக்கும் வேலையை செய்கிறது.

வைதீகத்தை, பார்ப்பனியத்தை ஏந்தி வரும் சமஸ்கிருதம் போன்ற அனைத்து வாகனங்களின் கடையாணிகளையும் பிடுங்கி எறிந்தார். பகவத்கீதைக்கு மாற்றாக திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முன்வைத்தார்.

உயிரும், உள்ளமும் நோகும் வகையில் ஒற்றை கடுஞ்சொல் கூட பயன்படுத்தாத வள்ளலாரை ஒரு பார்ப்பனர் கூட ஆதரிக்கவில்லை. ஏனென்றால் அவர் பார்ப்பனிய கருத்தியலுக்கு -அமைப்பு முறைக்கு- எதிரான கருத்தியலையும் -அமைப்பு முறையையும்- முன் வைத்தார்.

பார்ப்பன கும்பல் மடத்தை கட்டி வைத்துக்கொண்டு அங்கு பெண்கள் வரக்கூடாது என்றது. வள்ளலார் சங்கத்தை நிறுவி அதில் ஆண் பெண் அனைவரும் சமம்; அனைவரும் பங்கேற்க வேண்டும்; விவாதிக்க வேண்டும் என பார்ப்பனியத்துக்கு எதிரான அமைப்பு முறையை முன் வைத்தார்.

வைதீகம் கேள்வி கேட்காதே நம்பிக்கைகொள் என்கிறது. வைதீக மரபிற்கு நேர் எதிராக வள்ளலார் இருந்தார். பகுத்தறிவு கேள்விகளை அன்றே எழுப்பினார். காது, மூக்கில் எதற்கு பொத்தல் போட்டு அணி கலன் அணிய வேண்டும்? பொத்தல் போடுவது அவசியம் என்றால் 9 ஓட்டைகளை வைத்த கடவுள் காதிலொன்றும், மூக்கிலொன்றும் போட்டிருக்கமாட்டானா? தலையில், கன்னத்தில் முளைக்கும் முடி ஏன் நெற்றியில் முளைப்ப தில்லை? என்று மக்களிடம் கேட்டவர் வள்ளலார். “கேட்டறியாத கேள்விகளை கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே” என்றார்.

வைதீகத்திற்கு எதிராக தோன்றிய தமிழ் சமயம் (எ) சைவ சமயம், ஆகம மரபு மக்களுக்கு என்ன செய்தது? வேதத்திற்கு பதிலாக ஆகமத்தை படிக்கச் சொன்னது. அது மட்டமானது எனது சமயம் உயர்வானது என்று வெறிபிடித்து பேசுகிறது. எனவே, வேதமும், ஆகமும் வேண்டாம். நிறுவனப்பட்ட சமயம் எதுவும் தேவையில்லை. பொதுநெறிக்கு வா என்றார் வள்ளலார்.

உலகில் எல்லோரும் சமம். உலகை பொதுவில் நடத்துகிற நிலை வர வேண்டும் என்றார். மேல்வருணம், தோல்வருணம் கண்டாரில்லை. நான் பேசுவது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றார்.

படிக்க : தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் உறுப்பினராக சேர ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவ ஒழுக்கம் என்றால் ஆண், பெண், சாதி, மத, சமய, ஆசிரம, சூத்திர, கோத்திர, குல, சாஸ்திர, சம்பந்த, தேச, மார்க்க வேறுபாடுக் கூடாது. ஆன்ம ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் தலைவன் ஆண்டவன் அருட்பெரும்ஜோதி. ஜீவன்களுக்குள் வேற்றுமை பார்க்கக்கூடாது. இவை இரண்டையும் கடைப்பிடித்தால் சங்க உறுப்பினராகலாம் என்றார். இப்படியாக சங்கம், சாலை (சோறு போடும் இடம்), சபை (கூடுகிற இடம்) என்ற அமைப்புகளை உருவாக்கினார்.

“சாதிமதம் சமயமெனும் சங்கடம் விட்டறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்…” (3319-வது பாடல்)

என சாதி மத சமயங்களைச் சங்கடமாகவும், சஞ்சலமாகவும் கருதுகின்றார்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளைய யாட்டே…” (4174-வது பாடல்)

என பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தியலை முன்வைக்கிறார்.

வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம். வள்ளலார் 200 இந்த அடிப்படையில் மக்களிடம் பறந்து விரிந்த அளவில் கொண்டு சென்று மக்களை அமைப்பாக்க வேண்டியது, காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக நிற்கக்கூடிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரின் கடமையாகும். அதுவே வள்ளலார் கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை அடைய தடைக்கல்லாக இருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்துவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.


ரவி

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

ந்து மத வேதம் மக்களை நான்கு வர்ணங்களாக்கி தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன், அழுக்கில் பிறந்தவன் பஞ்சமர் என்றும் மக்களை இழிவுபடுத்தி வைத்தது இந்து மத மனுவே, இதை அம்பலப்படுத்தியதில் என்ன தவறு?

ஆ.ராசா சொல்வது பொய் என்று கூறலாமே ஏன் இழிவுபடுத்தினர் என்று சொல்கிறார்கள்?

இப்போது கலவரத்தை தூண்டுகிற பாசிச சக்திகள் ஆ.ராசா சொல்வது பொய் இந்து மதம் இதைதான் சொல்கிறது இதோ ஆதாரம் என்று அவர்கள் ஆதாரப்பூர்வமாக உண்மையை கூறலாமே?

தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, தேவதாசி முறை, ஆணவப் படுகொலை இந்த குற்றங்களை எல்லாம் சரி என்று கூறுவதே மனு சாஸ்திரம். இதெல்லாம் மனு சாஸ்திரம் கூறவில்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்!

யூதர்களுக்கு எதிராக நாசிக் கோட்பாட்டை ஹிட்லர் அறிமுகப்படுத்தினார். அதுபோல இங்கிருக்கும் உழைக்கும் மக்கள் மீது இந்துத்துவ கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது இந்து மத மனுஸ்மிருதி.

படிக்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று ‘வேசி மகன்’. (source: மனுஷ்ரிமிதி அத்.8 சு.415)

சூத்திரர்கள் மற்ற மூன்று உயர் சாதிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் அவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் (source: Aitreya Brahmana of the Rig Veda 1992).

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும் தமிழகத்தில் எப்பொழுது பார்ப்பனியம் காலூன்றியதோ அப்போதிலிருந்தே அதை எதிர்ப்பது வழக்கமாக ஆரம்பித்தது அதற்கு சான்றுதான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறள்.

இந்து மத நூலான மனுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் முடிந்தால் அவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறுங்கள் பார்ப்போம்?

அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்புடையவர்கள் இவர்களெல்லாம் இந்துக்களின் விரோதியா?

இந்த பாசிச கும்பல்களின் கடையடைப்பு முதல், கலவரங்கள், கையெழுத்து இயக்கம் (அதாவது மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்) இப்பொழுது திருச்சியில் போடப்பட்டிருக்கும் தடை உத்தரவு வரை நமக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவது என்னவென்றால் இந்த பாசிச கும்பல் தமிழ்நாட்டிலும் காலூன்றியுள்ளது என்பதுதான்.

இவை அனைத்தும் நடைமுறையில் எங்கே இருக்கிறது ஏன் இவர்கள் இல்லாததை சொல்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நம் கண் முன்னே தினந்தினம் தீண்டாமை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் இரு பிள்ளைகளை கடைக்காரர் தின்பண்டங்களை தொடக்கூடாது என்று சொன்னது, கிராமங்களில் சேரி மக்களை கோவிலுக்கு உள்ளே விடாமல் தடுப்பது, இதெல்லாம் untouchability act-இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்! ஆனால் “கோவில் கருவறைக்குள்ளே நீங்கள் போகக்கூடாது பிராமணர்களை தொடக்கூடாது” இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் வரும்?

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

உழைக்கும் மக்களை நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், அவர்களின் பிள்ளைகள் தான் படிக்க வேண்டும் என மனு நீதி, ஆகம விதி என்று வரையறுத்து மக்களை இழிவு படுத்துவது நீ(மனு ஸ்மிருதி, பார்ப்பனியம்)! ஆ.ராசா அல்ல!!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

எனவே, இந்த பாசிச கும்பல்களை விரட்டியடிக்க நாமும் பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்க வேண்டியது அவசியமாகும்!!


ஆசாத்

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளே நடத்தி வந்த நிலையில், தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காகவும் கூடுதலாக ஒரு தொலைக்காட்சியை அமைப்பதற்காகவும் முதன்மை செயல் அலுவலரை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில், ஊரறிந்த சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனல் இணை நிறுவனரும் அவரது நண்பருமான சங்கி மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது திமுக ஆதரவாளர்கள் மத்தியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்தும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்ய கோரியும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்தே, தற்போது மணிகண்ட பூபதியின் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

***

கல்வித் தொலைக்காட்சிக்கான முதன்மை செயல் அலுவலரை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளைக் கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

70 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 16 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதி நேர்காணலில் பங்கேற்ற 3 பேரில், சங்கியான மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்நியமனத்திற்கு எதிர்ப்பு எழத் தொடங்கியது. நடிகர் கவிதா பாரதி உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் “ரிசைன் அன்பில் மகேஷ்” (#Resign_Anbil_Mahesh) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள்தான் என்றும், தீவிர திமுகவினர் இதில் பங்கேற்றனர் என்றும் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறினர். பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா; எஸ்.டி.பி,ஐ. கட்சியின் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் மூத்த பத்திரிகையாளரும் அரசு நடத்திய நேர்காணலில் பங்கேற்றவருமான திருஞானம் என்பவர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஸ்டாலினுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். “பல்வேறு முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும்; ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை போன்ற கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டுக் காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?” – என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை, இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்” என்றும் எழுதியுள்ளார்.

***

முதன்மை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த 70 பேரில், தேர்வு செய்யும் குழுவால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மணிகண்ட பூபதி பிரபல சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் மூளையாகச் செயல்பட்டவர். பல ஆண்டுகள் தினமல(ம்)ர் பத்திரிகையிலும், தந்தி, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளிலும் வேலை செய்தவர். குறிப்பாக ரங்கராஜ் பாண்டே தான் கூறிய பொய்யினால் அம்பலப்பட்டு மூலையில் ஒதுக்கப்படும் போதெல்லாம், மணிகண்ட பூபதி ஓர் மீட்பரைப் போல பாண்டே-வை காப்பாற்றி மறுவாழ்வு அளித்திருக்கிறார்.

தோழர் செங்கொடி ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்தபோது தினமலரில் வேலைப் பார்த்த பாண்டே, அவர் காதல் விவகாரத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தார். பின்னர் அது பொய் தகவல் என்று நிரூபிக்கப்படவே தினமலரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போது பாண்டே-வை தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தார் மணிகண்ட பூபதி. சமீபத்தில் தந்தியும் பாண்டே-வை ஓரங்கட்டிய போது அவருடன் சேர்ந்து யூடியூப்-இல் “சாணக்யா” சேனலை நடத்தி வந்தார்.

“சாணக்யா” என்பது மற்ற யூடியூப் சேனல்களைப் போன்றதல்ல. அது ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சார ஊடகம். இச்சேனலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு காணொளிகளின் தொடக்கத்திலும் திருவள்ளுவரின் சித்திரத்தைப் பட்டையும் கொட்டையும் அணிந்துகொண்டு காவி ஆடை உடுத்தியிருப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள்.

போலித் தகவல்களை அடுக்கிவைத்து, பொய் பிரச்சாரங்களை உண்மை போன்றே சித்தரிக்கும் வேலையை அச்சேனல் தொடர்ந்து செய்துவருகிறது. மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது, நம் பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்று நமக்கு தெரிய வேண்டாமா? என்றும் காஷ்மீரிகளுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கும் நமக்கு முகவட்டு வித்தியாசம் தெரியாது என்றும் அதற்காகத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்தது சாணக்யா.

நீட்-க்கு ஆதரவாக போலியான புள்ளிவிவரங்களை அடுக்கி பிரச்சாரம் செய்வது, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஆதரவாக கருத்து பிரச்சாரம் செய்வதையே முதன்மை கடமையாக ஏற்று செய்யும் சங்கி சேனல் சாணக்யா. ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தத்திற்கு சேவை செய்யும் சேனலின் இணை நிறுவனராக இருந்த மணிகண்ட பூபதியைத்தான் பள்ளி குழந்தைகள் படிக்கும் தொலைக்காட்சியில் அரியணையிட்டு அமரவைத்தது திமுக அரசு.

ஒருவேளை மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், கல்வி தொலைக்காட்சியிலும் திருவள்ளுவர் காவியிலேயே காட்சி தந்திருக்கக் கூடும்; தமிழ் பாட வேளையில் ராமாயணமும் மகாபாரதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும், அறிவியல் பாடத்தில் விநாயகருக்கு யானை தலையை வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

***

இந்த ஆபத்துக்களுக்கு எதிராக தமிழக ஜனநாயக சக்திகள் குரல்கொடுத்து முறியடித்துள்ள போதும் திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் மணிகண்ட பூபதியின் நியமன விவகாரத்தில் கூட திமுகவை நோகாமல் விமர்சனம் செய்ய எண்ணுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் நகைக்கத் தக்கதாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்களே மணிகண்ட பூபதியை நியமித்திருப்பார்கள், எனவே இந்நியமனம் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது; திமுக எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்; இது குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும்; கல்வித்துறை அமைச்சர்தான் பிரச்சனை – என்று பேசுகின்றனர்.

திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போகிறது என்று முற்போக்காளர்களில் ஒரு பிரிவினரும் புரட்சிகர சக்திகளும் விமர்சனம் வைக்கும் போதெல்லாம் இதே வகையான வாதங்களே கிளப்பிவிடப்படுகின்றன. எனில் ஒரு கேள்வி எழுகிறது, ஸ்டாலினைத் தவிர திமுகவில் அனைவரும் சங்கிகளா, திராவிட உணர்வு ஒருவருக்குமே இல்லையே?

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், “ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் திமுக குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது” என்று கூறினார். ஆனால் மணிகண்ட பூபதியின் நியமனம் குறித்து திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன? “பாண்டே என்னுடனும்தான் வாட்சப் தொடர்பில் உள்ளார்; அதற்காக நான் என்ன அந்த சித்தாந்தம் உடையவனா? ஒருவருடைய செயல்பாடுதான் முக்கியம்” என்றார்.

இதுதான் சமரசமற்ற போக்கிற்கு சான்றா? கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகுதான், நான் பெரியாரின் வாரிசு.. கலைஞரின் வாரிசு! திமுக இவ்விசயத்தில் ஏமாறாது, மணிகண்ட பூபதி நியமனம் குறித்து விசாரணை நடத்துகிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.

நமக்கு வெளிப்படையாக தெரிந்தவகையில் மட்டும் திமுக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அரசுப் பொறுப்பில் அமர்த்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பச்சை சங்கி ராமசுப்ரமணியன் என்பவர் அறநிலையத் துறைக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கோவில்களை மேம்படுத்தவும் புனரமைக்கவும் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் தலைமைக்குழுவில் சங்கியான ராமசுப்ரமணியன் ஓர் உறுப்பினர்.

ராமசுப்பிரமணியன் முன்னாள் பாஜக ஆதரவாளர். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் கட்ட முதல் செங்கல் வாங்கி கொடுத்தவன் நான்” என்று தன்னை பெருமைக்குரிய சங்கியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மீது கருத்து முரண்பாடு கொண்டதாக காட்டிக்கொண்டு தனது பேட்டிகளில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று திமுக ஆதரவாளராக யூடியூப் சேனல்களில் பேட்டியளித்துவருகிறார்.

ஆனால் பாஜகவை விமர்சித்தாலும்கூட இன்றும் தன்னை பல்வேறு பேட்டிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராகவே கூறிக்கொள்கிறார். வீடு தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் சிறந்த முறையில் சேவையாற்றுவார்கள் என்று கூறியது, தில்லை சிற்றம்பல மேடையில் பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுத்த விவகாரத்தில், அப்பட்டமாக தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசியது ஆகியவற்றை முன்பே நாம் புதிய ஜனநாயகத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யாரும் ராமசுப்ரமணியன் விவகாரத்தைக் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் பாஜக எதிர்ப்பாளராகவும் திமுக ஆதரவாளராகவும் காட்சி தருகிறார். மணிகண்ட பூபதியும் அப்படி ஒரு மருவை வைத்துக் கொண்டு வந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளச் சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் விவகாரம், காந்தியைச் சுட்டது கோட்சே என்று சொல்லக்கூடாது என்று கோவை போலீசு மிரட்டிய விவகாரம், இந்து முன்னணி கோரிக்கையை ஏற்று வாணியம்பாடி உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை உள்ளிட்டு பல்வேறு விவகாரங்களில் அரசுக்கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் கூறிவந்தனர். அது உண்மைதான் என்றபோதும் தனது வாதங்களில் திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போவதை மறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!

தற்போது ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!

இந்த விசயத்தில் திமுக-வை இஸ்லாமியக் கட்சிகள் கண்டித்ததே தவிர வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கூட்டணிக் கட்சிகள் யாரும் கண்டிக்கவில்லை. எங்கு விமர்சனம் வைத்தால் கூட்டணிக்கு கேடு வந்துவிடுமோ, இல்லை ஆர்.எஸ்.எஸ்-பாஜக எதிர்ப்பின் பலம் குறைந்துவிடுமோ என்று கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற தருணங்களில், திமுக-வை விமர்சிக்காமல் போவதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு சாதகமாகப் போய்விடும். ஒருவேளை மணிகண்ட பூபதி நியமனத்தை எதிர்த்து புரட்சிகர-ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திமுக-வின் தவறுகளையும் சமரசங்களையும், எந்த அளவிற்கு அம்பலப்படுத்தி புரட்சிகர – ஜனநாயக சக்திகள் கேள்வி எழுப்புகின்றனவோ அந்த அளவிற்குதான் ஆர்.எஸ்,எஸ்-பாஜக-வின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். திமுக-வில் ஒரு பிரிவினரையும் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு செய்யத் தவறினால் அது ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் வெற்றிக்கே வழிவகுக்கும்.


துலிபா

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

26.09.2022

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும்
பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! முறியடிப்போம் !

பத்திரிகை செய்தி

டந்த சில தினங்களுக்கு முன் பி.ஜே.பி.யின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்த நாள் முதல் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பி.ஜே.பி பாசிச சக்திகளின் வீடுகள், அலுவலகங்கள் என சில இடங்களில் பெரிதும் சேதமுறாத வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதைக் காரணமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் குறிப்பாக எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்ட உடனேயே கோவையில் அதிரடிப்படை போலீசு உள்ளிட்ட 3000 பேர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் தீவிரப்படுத்தப் படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக இந்து மற்றும் இசுலாமிய தலைவர்களிடம்  பேசிக் கொண்டிருப்பதாகவும் சமுதாய நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இப்பிரச்சினை தொடர்பாக 250 பேரிடம் விசாரணை செய்வதாகவும் நேற்று மாலைக்குள் (25.09.2022) குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். அவர் கூறியபடியே  கோவையில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரும் சேலத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பேருமே எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நிர்வாகிகள்.

ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்து முன்னணி ஆகியோரது வீடுகளில் முசுலீம்கள்தான் பெட்ரோல் குண்டு வீசியிருப்பார்கள் என்று முன் முடிவின் அடிப்படையில் தொடங்கிய திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை என தமிழ்நாடு முழுவதுமே எஸ்.டி.பி.ஐ கட்சியினர், இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டும் போலீசால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் சுய விளம்பரத்துக்காக பெட்ரோல் குண்டுகளை தனக்குத்தானே வீசிக்கொண்டு பலமுறை அம்பலப்பட்டு இருக்கிறார்கள். இந்த கோணத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணியைச் சேர்ந்த எத்தனை பேரிடம் போலீசு விசாரணை செய்தது?

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களையும் எஸ்.டி.பி.ஐ மீது என்.ஐ.ஏ நடத்திய சோதனைகளையும் இணைத்து டிஜிபி சைலேந்திரபாபுவால் அளிக்கப்பட்ட அறிக்கையே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிச திட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றது.

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் இயேசு அல்ல ஓரளவுக்குத்தான் அமைதி காப்போம். பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் பி.ஜே.பி.யின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்கிறார் ஒன்றிய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அது குறித்து இன்று (26.09.2022) உளவாளி ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்பது தலைப்புச் செய்திகளில்  இடம்பெறுகின்றது. இவை அனைத்தும் எதேச்சையானவை அல்ல; மாறாக திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்றே வருகின்றன.

காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் கோட்ஸே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததும் தற்போதைய நடவடிக்கைகளும் வேறுவேறல்ல.

***

இப்பிரச்சினை தொடர்பாக இந்து – இசுலாமியர்கள் மத்தியில் மத நல்லிணக்கக் கூட்டம் நடத்துவதாக கோவை ஆட்சியர் சமீரன் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பெரும் சேதமுறாத பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் என்பதை இந்து மற்றும்  இசுலாமிய மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்ற முனைகிறார் மாவட்ட கலெக்டர். பெட்ரோல் குண்டு வீசியது இசுலாமியர்கள்தான் அவர்களுக்கு ஆதரவாக இசுலாமிய மக்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தையே இது உருவாக்குகிறது.

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பதே இதுவரை முடிவாகாத நிலையில்  திட்டமிட்டு இசுலாமியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகளின் திட்டத்தை நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது தமிழ்நாடு போலீசு.

எங்கள் கட்சியினர் மீது பெட்ரோல் குண்டு வீசியது எஸ்.டி.பி.ஐ.தான் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்வதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் போலீசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போலீசு நிலையத்தில் முறையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை போலீசு கைது செய்திருக்கிறது.

கோவையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட போலீசை குவிப்பதன் நோக்கம் என்ன? ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் கோவை உள்ளிட்ட இடங்களில் கலவரங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதையும் அதற்கு தடையாக எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்பினர் இருப்பார்கள். ஆகவே அவர்களை ஒடுக்கி அரசியலில் இருந்து அகற்றுவது என்ற நோக்கத்திற்காகவே என்.ஐ.ஏ சோதனை முதல் அக்கட்சி நிர்வாகிகள் கைது வரையிலான சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – தமிழ்நாடு போலீசின் கூட்டு நடவடிக்கைகளை 1998 கோவை குண்டு வெடிப்பு கலவரத்தின் போதே நாம் கண்டோம். மாமூல் பிரச்சினையில் கொல்லப்பட்ட போலீசின் பிணத்தை வைத்துக்கொண்டு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை குறிவைத்து தாக்கியதையும் அப்போது தமிழ்நாடு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை வேட்டையாடியதையும் யாரும் மறந்துவிடப் போவதில்லை.

“தமிழ்நாட்டில் தேசத்திற்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவர வெறும் அரை மணி நேரம் போதும். அடுத்த இரண்டு நாள் பார்ப்போம் போலீசுத்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம்” என்று கலவரம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று மிரட்டல் விடுத்த அண்ணாமலை இதுவரை கைது செய்யப்படவில்லை.

போலீசு பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் மீது கலவரம் நடத்துவதற்கான அனைத்துவித ஏற்பாட்டையும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்துவிட்டதையே அறிய முடிகிறது. அதற்கு தோதாக தமிழ்நாடு போலிசுத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இசுலாமியர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை ஏற்படுத்தி அதன்மூலம் கோவை போன்ற பகுதிகளில் தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த முடியும். இதை சாக்காக வைத்து திமுக ஆட்சியை கலைத்து தனது சொர்க்கத்தை மீட்டுவிட முடியும். கலவரம் நடைபெறவில்லை என்றாலும் இதை சாக்காக வைத்துக்கொண்டு ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தபடி இசுலாமிய, புரட்சிகர அமைப்புகளை கட்சிகளை தடை செய்ய வைப்பதும் அக்கட்சியினரை கைது செய்ய வைப்பதும் அதன் மூலம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் கலவரங்களுக்கு முன்தயாரிப்பு வேலை செய்ய முடியும். கலவரம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் வெற்றி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளுக்கே.

நடப்பதோ திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியில் நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே திராவிட ஆட்சிக்கு எதிரானதாக மாறிவிடுமே என்று பலரும் எண்ணுகின்றனர். உலக அளவில் இருந்த பாசிச நிறுவனங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் என்பது மட்டும்தான் 100 ஆண்டுகள் அனுபவம் பெற்றது.

கடந்து நூறு ஆண்டுகளில் உலகில் உள்ள பல்வேறு பாசிச நிறுவனக்களின் அனுபவம் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, இந்தியாவில் நிலவும் அரசமைப்பில் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் போலீசு, ராணுவம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் தனது ஆட்களை நிரப்பி எவ்வித தடையுமின்றி இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அப்படிப்பட்ட அமைப்பு தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழ்நாட்டை இறுக்கக்கட்டி நெரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த அரசும் போலீசும் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. பெரியார் திடலில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சியின்போது, தோழர்கள் அனைவரும் சென்ற பிறகு போலீசின் வழிகாட்டுதலில் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கூட கருப்புச்சட்டை அணிந்தவர்கள் மீதுதான் போலீசு தாக்குதல் நடத்தியது; இந்து மதவெறி பாசிஸ்டுகள் மீதல்ல.

ஆளுனர் ஆர்.என்.ரவி என்ற உளவாளி மூலம் தமிழ்நாட்டின் போலீசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. யார் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சியே நிரலுக்கு வரும். அது இன்று ஒருவேளை தள்ளி போகலாம் என்றாலும் நாளை நிச்சயம் நடக்கும். ஒரு போதும் தவிர்க்க முடியாது, பாசிஸ்டுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழிஇல்லை.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

நாம் வீழ்த்த வேண்டிய இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசம்தான். அதை எப்போதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை முதலில் அடி என்றார் பெரியார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகள்தான் மக்களின் எதிரி, அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை மக்களின் இயல்பாக ஒன்றாக மாற்ற வேண்டும்.

ஆப்பரேசன் சவுத் என்ற திட்டத்தின் அடிப்படையில் தெலுங்கானாவும் தமிழ்நாடும்தான் முதற்கட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்குகள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிரான நடவடிக்கையை மக்களை திரட்டி மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!


தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

In the first round of the popular uprising (May 9), Mahinda Rajapaksa stepped down as the Prime Minister and hid himself secretly. The second wave of the uprising had hit exactly after two months. During the July 9 uprising, the mass took over the Presidential Palace and Gotabaya was driven out of the country. Gotabaya, who has been an international refugee with no country to seek refuge, has been facing people’s protests everywhere he goes including Maldives and Singapore. These protests had also frightened the fascists of other countries also.

On the other hand, the Western imperialists including the US, and the Indian ruling classes, which wanted to oust the Rajapaksa clique from power and install their puppet Ranil in that place, accomplished their goal against this backdrop of the uprising. Ranil crowned himself as the interim President.

Also Read : A few remarks on the attitude of the proletarian party in paying Salute and Tribute

But the people’s agitation did not subside. Although the struggle began with the demand “Gota Go Home”, it was guided to the next level by the political front-liners with demands such as “New Constitution”, “Government with people’s participation”. The protests began to turn towards Ranil. Following the Presidential Palace, the Prime Minister’s Office was also besieged by the people. Moreover, the people rushed towards the parliament with the intention of besieging it.

Within hours of the Prime Minister’s Office being attacked, Ranil described the popular uprising as follows:

“We must end this fascist threat to democracy. We can’t allow the destruction of State property. Those who are in my office want to stop me from discharging my responsibilities as acting President. We can’t let them tear up our Constitution”.

Ranil’s speech signals that the ruling class was fearful of the popular uprising advancing towards its next goal. So it had openly stepped out to suppress the uprising. The police and the military were given the ultimate power to forcibly suppress the uprising.

Sensing this, the front-liners of the protests asked the people who had taken over the President’s Office and other government buildings to leave. People left the Presidential Palace with discipline and order.

Meanwhile, for the first time in the history of Sri Lanka, Presidential election took place inside the parliament. People knew that Ranil negotiated a deal with the Rajapaksa gang and considered him as the protector of the corrupt assets of the Rajapaksa clique. Hence the people called upon the political parties to defeat him. But the parliamentary pigs endorsed the will of the ruling class.

As Ranil Wickremesinghe’s main rival Sajith Premadasa withdrew his presidential candidacy at the last minute, Ranil easily won the presidential elections by defeating Dullas Alahapperuma and Anura Kumara by securing 134 votes.

Ranil does not even win a single seat. But Rajapaksa’s Sri Lanka Podujana Peramuna (SLPP), which has the highest number of seats in the parliament, assisted the victory of Ranil. Moreover, Ceylon Workers’ Congress and a few Tamil groups including Tamil People’s National Alliance also supported Ranil Wickremesinghe.

The Tamil National Alliance (TNA), which had the largest number of seats among the Tamil parties, said that it will be supporting Dullas Alahapperuma. But later, it was reported that a faction of the party voted for Ranil. According to unconfirmed reports, the Deputy High Commissioner of the Indian High Commission had attended a meeting convened by the TNA on the night before the elections and requested it to support Ranil. Furthermore, it is to be noted that the Ceylon Workers’ Congress, which has the vote bank of Malaiyaha Tamils (Indian Tamils), also has close ties to the Indian ruling classes.

Ranil Wickremesinghe had sworn in as President on July 21. In the early morning of the very next day (July 22), the Galle Face protest camp was hunted down by the army. The army, which suddenly surrounded the ground in large numbers, smashed the camps. The protestors were indiscriminately attacked and driven away. The journalists gathered there also were not spared. The army even stopped an ambulance that had arrived to transport the injured. Ranil showed who he was within 24 hours.

When he took charge as Prime Minister under Gotabaya’s regime, Ranil expressed himself as a supporter of the Galle Face protest. But, it had now been exposed that his intention was to drive out the Rajapaksas and hold on to the throne.

A day before ransacking by the military, Ranil had announced that he would allot the Viharamahadevi Park to the protesters instead of the Galle Face ground, where the Presidential Secretariat is located. Moreover, a section of the protesters had formally announced that they would end the protest and leave. In this context, the Galle Face attack, which took place without prior notice, was a deliberately orchestrated fascist operation to intimidate the people.

The Ranil government not only suppressed the struggle but also demeaned the struggle with its filthy slanders. A rumour was spread that crores of rupees was suddenly credited to the bank accounts of some of the front-liners of the agitation by some people from outside to sustain the Galle Face protests. Sri Lankan intelligence itself had declared that it was fake information. However, slandering by the stooges continue.

Ranil is appointing many people under the name of all-party government. MP Dinesh Gunawardena, who was Ranil’s school friend, was appointed as the Prime Minister. He is known to be closely associated with the Rajapaksas. Ranil has re-appointed many persons who were part of the previous cabinet formed by Gotabaya Rajapaksa.

An all-party government is a government that is formed in consultation with all the political parties which have representation in the parliament and thereby ensuring equal participation of all the parties. But, Ranil is appointing the persons of his choice. Ranil is refusing to follow even the usual shams of the bourgeois democracy.

On one hand, the army and the police are hunting down the protesters. The Ranil government is engaged in the treacherous task of arresting the front-liners and suppressing the protests. On the other hand, Gotabaya had fled. And the ruling class is campaigning that continuing the protests will only intensify the economic crisis. The US had urged the Sri Lankan government to work quickly to achieve ‘political stability’.

Also Read : NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

What is Ranil really going to do? He is going to follow the same recolonizational path which led to the bankruptcy of Sri Lanka. He will travel on this path by actively carrying out the dictates laid down by the IMF and the World Bank. That is why, the US is keen on maintaining ‘political stability’ in Sri Lanka.

The uprising of the working people of Sri Lanka has to move forward without the fear of repression and without falling prey to the slander and diversion tactics.

Ranil’s anti-people arrangement of an ‘all-party government’ must be overthrown. And, as the Galle Face Declaration put forward, ‘a provisional government with the participation of the representatives of the protesting people’ must be established immediately. That will be the beginning of the path to dawn. The first two uprisings drove away the Rajapaksas. The international proletariat is looking forward for the third round of the uprising to drive Ranil out of the country.

Editorial Team,
New Democracy.
26.07.2022

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்காவிற்கு வெற்றியா?

இம்ரான் கான் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், அவர் தலைமையிலான ஆட்சியும் அமெரிக்காவின் முற்றுமுழுதான ஆதிக்கத்துக்கு தோதானது அல்ல. அதாவது இரஷ்ய-சீனக் கூட்டணிக்கு ஷெபாஸ் ஷெரீப் எதிரானவரல்ல.

இம்ரானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சி நீங்கலாக இருபெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளாக உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீம் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே சீனாவுடன் நல்லுறவைப் பேணும் கட்சிகளே. பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் நீண்டகால அரசியல்-பொருளாதார உறவுகள் இருந்துவருவதைப் போலவே, சீனாவுடனும் இருந்துவருகின்றன.

தற்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீஃப் முன்னர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்தவர். அவரது ஆட்சியில் அம்மாகாணத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனாவின் பொருளாதார உதவியைப் பெற்றே நிறைவேற்றினார். ஆட்சிக்கு வந்த பிறகு புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இம்ரான் கானை விட ஆர்வமாக செயல்படுகிறார் ஷெரீப்.

படிக்க : புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

பிறகு, இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் அமெரிக்க ஆதரவு ஆளும் வர்க்க கும்பல் சாதித்தது என்ன? இதற்கான பதிலை சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. “சீனாவுடனான நட்பிலோ, அதன் அனைத்துவகையான போர்தந்திர ஒத்துழைப்பிலோ பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருப்பின் அத்தகைய உறவுகளை எந்தக் கட்சி சிறப்பாக நிலைநிறுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது” – என்று குயென் ஃபெங் என்ற அரசியல் பகுப்பாய்வாளர் கூறுவதை எடுத்துக் காட்டுகிறது குளோபல் டைம்ஸ்.

குயென் ஃபெங் கூறுவதைப் போல, சீனாவுடனான போர்தந்திர ஒத்துழைப்பில் மற்ற கட்சிகளை விட அதிகம் சிறப்பாக செயல்பட்ட கட்சி இம்ரான் கானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சிதான். மேலும் இம்ரான் கான், தீவிர இரஷ்ய-சீன சார்பாளராக இருந்தார். அவர் வெளிப்படையாகவே அமெரிக்காவை விமர்சித்தார். ஆனால், மற்ற இரு ஆளும் வர்க்க கட்சிகளோ சீனாவுடன் ஒத்துழைத்த போதிலும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவில்லை; அந்நாட்டுடனான அரசியல்-பொருளாதார உறவுகளைத் தளர்த்திக் கொள்ளவில்லை; இரஷ்யாவுடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இதையெல்லாம் இம்ரான் கான் செய்தார். அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக இரஷ்யாவும் சீனாவும் கூட்டணிக் கட்டிக் கொண்டு முன்னேறும்போது, அக்கூட்டணியின் பொருத்தமான விசுவாசியாக இம்ரான் கான் இருந்தார். அவரது ஆட்சியை கவிழ்த்துள்ளதன் மூலம் சுவாசிப்பதற்கான அவகாசத்தைப் பெற்றுள்ளது அமெரிக்கா. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அமெரிக்காவையும் ‘அனுசரித்துப் போவார்’ என்று கூறப்படுகிறது.

***

ஆப்கானிஸ்தான்

20 ஆண்டுகாலப் போரைவிடக் கொடுமையான துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது ஆப்கான். அமெரிக்க – நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது; வரலாறு காணாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுவதால் வறுமையும் பட்டினிச் சாவுகளும் கோரத்தாண்டவம் ஆடுகின்றன.

ஆப்கான் “பசி சுனாமி”யை சந்தித்து வருவதாக கூறுகிறது ஐ.நா. பெரும்பாலான குடும்பங்களில் உண்பதற்கோ, சமைப்பதற்கோ எதுவும் இல்லை. தன்னார்வக் குழுக்கள் அளிக்கும் ரொட்டியும், சர்க்கரை இல்லாத தேநீருமே அம்மக்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில், 13,700 பச்சிளங் குழந்தைகள் பட்டினியால் மடிந்திருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆப்கானில் 19.7 மில்லியன் மக்கள், அதாவது 50 சதவீத மக்கள் தொகையினர் பட்டினியால் வாடுகின்றனர். 95 சதவீத ஆப்கானியர்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர்.

கையில் பணம் இல்லாததால், பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்று குடும்பத்தின் உணவுக்கு பணம் திரட்டுகிறார்கள் ஆப்கான் மக்கள். வீதிக்கு வீதி சிறுநீரகத்தை விலைக்கு வாங்கும் மருத்துவக் கூடாரங்களை சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இதனோடு கூட தங்கள் குடும்பத்து பெண் குழந்தைகளை விற்கும் அவலமும் அரங்கேறுகிறது; “ஒரு குழந்தையை விற்றாவது, மற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்கள் தங்கள் குழுந்தைகளை விற்பனை செய்யும் பெற்றோர்கள்.

கடந்த ஆண்டின் மூன்றாவது கால்பகுதியில் மட்டும் சுமார் 5 லட்சம் ஆப்கானியர்கள் வேலையிழந்திருப்பதாகக் கூறுகிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. இந்த ஆண்டின் மத்தியில் அது 7 முதல் 9 இலட்சமாக உயரலாம் என்றும் பெண்களின் வேலைவாய்ப்பு 21 சதவிகிதம் குறையலாம் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இச்சூழல் ஒருபுறம் எனில், மதவாதக் கழிசடைகளான தாலிபான்களின் ஆட்சி பேயாட்சியாக இருக்கிறது. பெண் குழந்தைகள் கல்வி பயிலத் தடை, பெண்கள் கார் ஓட்டக் கூடாது, புர்கா அணியாமாலும் ஆணின் துணையில்லாமலும் வெளியே வரக்கூடாது – என 90களுக்கு பிறகு மீண்டும் கடும் பிற்போக்கு பேயாட்சி தலைவிரித்தாடுகிறது. ஆப்கானைப் பற்றி பேசும் எந்தவொரு முதலாளித்துவ ஊடகங்களும் தாலிபான்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ‘சுவாரசியமான’ பல கட்டுரைகளை எழுதித்தள்ளுகின்றன.

ஆனால், பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவிக்கும் ஆப்கானியர்களின் துயரத்தைப் பற்றியோ, அவர்களின் இந்நிலைக்கு யார் காரணம்? என்பது பற்றியான கேள்விகளுக்குள்ளோ அவர்கள் செல்வதில்லை. ஏனெனில் அதற்குள் சென்றால், இந்த துயரங்களுக்கு காரணமாக இருக்கிற அமெரிக்காவின் மேலாதிக்க வெறி அம்பலப்பட்டுவிடும்.

ஆம்! படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதும் 20 ஆண்டுகாலப் போரைவிட கொடுமையான மறைமுகப் போரை ஆப்கானுக்கு வெளியிலிருந்து நடத்திவருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

***

புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, ஆப்கான் மத்திய வங்கிக்குச் சொந்தமான 7 பில்லியன் டாலர்களை முடக்கி வைத்துள்ளது அமெரிக்கா. ஆப்கானில் பச்சிளங் குழந்தைகளும், சிறுவர்களும் பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் போதும் நிதியை விடுவிக்கவில்லை மேலாதிக்க வெறி கொண்ட பைடன் அரசு. சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளிடம் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 3.5 பில்லியன் டாலர்களை மட்டும் விடுவித்தது. இந்த சொற்ப நிதி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவவில்லை.

தொடர்ச்சியாக ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக இருந்த ஆப்கான், தனக்கென சுயேட்சையான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்ளாத நாடு. 20 ஆண்டுகால உள்நாட்டுப் போர் காலத்தில், அந்நிய நிதி உதவிகள் மட்டுமே ஆப்கான் பொருளாதாரத்தில் பெரும்பங்குவகித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாலிபான்கள் அரசமைப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்நிய நிதி உதவி மட்டுமே ஆப்கானின் ஜி.டி.பி.யில் 42.9 சதவிகிதமாக இருந்தது. அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகு இந்நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுதான் அனைத்து நெருக்கடிக்களுக்கும் அடிப்படை.

2021 – 2024 காலகட்டத்தில் ஆப்கானுக்கு வழங்குவதாக இருந்த 1.2 பில்லியன் யூரோ நிதி உதவியை நிறுத்திவிட்டது ஐரோப்பிய ஒன்றியம். 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை ஆப்கானுக்கு மேம்பாட்டு நிதியாக வழங்கி வந்தது உலக வங்கி, அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் சுமார் 65 பில்லியன் அந்நிய நாடுகளின் நிதி உதவியை பெற்றிருக்கிறது ஆப்கான். இதில் பெரும்பங்கு அமெரிக்காவினுடையது.

அமெரிக்கா உள்ளிட்ட நன்கொடை நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை ஆப்கானின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் பொது சேவைகளை பராமரிப்பதற்காகவும் கொடுத்துக் கொண்டிருந்த நிதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் திணறிவருகிறது தாலிபான் அரசு.

சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கானின் அவசரகால இருப்பாக உள்ள 460 மில்லியன் டாலரை விடுவிக்கக் கோரிய தாலிபான் அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது சர்வதேச நாணய நிதியம். “தாலிபான் அரசை சட்டப்பூர்வமாக அமைந்த அரசாகத் தாங்கள் கருதவில்லை” என்று அதற்கு காரணம் கூறுகிறது.

ஆப்கானிஸ்தான் மீதான அரசியல் – பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக இராணுவ ரீதியான நெருக்கடிகளையும் கொடுத்துவருகிறது அமெரிக்கா. ஆப்கானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில், கடந்த மே மாதத் தொடக்கத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front) என்ற ஆயுதக் குழுவினர் தாலிபான்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இவர்கள் வடக்கு கூட்டணி (Northern Alliance) என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமியக் குடியரசை நோக்கமாகக் கொண்ட பிற தாலிபான் எதிர்ப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய, அமெரிக்காவின் ஆசி பெற்ற புதிய ஆயுதக் குழுவாகும்.

***

ஆப்கானின் மெஸ் அய்னக் பகுதியில் சீன நிறுவனங்கள் அமைத்துள்ள தாமிரச் சுரங்கம்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, இரஷ்யாவும் சீனாவும் உள்நுழைவதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுடன் அரசியல் – பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொள்வதில் இரஷ்யாவும் சீனாவும் தீவிர கவனம் செலுத்துகின்றன.

கடந்த மார்ச் இறுதியில், காபூலில் தாலிபான்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் சீனா, இரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானின் தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கு இக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

மற்றொரு தருணத்தில், சீனாவின் புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை ஆப்கானிஸ்தான் வரை விரிவுப்படுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. தாலிபான் இடைக்கால அரசாங்கத்தின் துணை பிரதமர் முல்லா அப்துல் ஹானி பராதர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி ஆகியோர் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு சீனாவுடன் ஒத்துழைப்பு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கானில் மெஸ் அய்னக் (Mes Aynak) என்ற பகுதியில் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தாமிரத்தை வெட்டி எடுக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது தாலிபான் அரசு. 2008-ஆம் ஆண்டிலேயே அப்போதைய ஹர்மித் கர்சாய் தலைமையிலான அரசால் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாமிரச் சுரங்கம் அமைப்பதற்காக வேலைகளை விரைவுப்படுத்தியிருக்கின்றன சீன நிறுவனங்கள். இத்திட்டத்தின் நிறைவேற்றத்தை மேற்பார்வையிடுவதற்காக, ஷாபுதீன் தில்வார் என்பவரை சுரங்கம் மற்றும் பெட்ரோலியத் துறையின் பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளது, தாலிபான் அரசு.

மேலும் 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சுரங்கப் பணிகளைத் தொடங்குமாறு சீன நிறுவனங்களுடன் கடந்த ஆறு மாதங்களாக காணொளி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2008-இல் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்காக சீன நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு காபூல் வரவிருக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள 19.5 சதவிகித இராயல்டி விதிப்பை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது சீனாவின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இச்சுரங்கம் அமைப்பதன் மூலம் தாலிபான் அரசிற்கு ஆண்டிற்கு 250-300 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். எனவே இச்சுரங்கப் பணிக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதியளிப்பது தாலிபான்கள் தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வதற்கான பொருளாதார அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால், சீன நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

படிக்க : ஜார்க்கண்டில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த மகேந்திரா நிறுவனம்!

மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் நாடுகளும் தற்போதைய இரஷ்ய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலங்களுமான துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்காணிக்கவும் அச்சுறுத்தவும் ஆப்கானில் தனது பிடி தளராமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா. ஆனால், ஆப்கானில் இடைக்கால அரசமைத்துள்ள தாலிபான்கள் இரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்கள்.

இத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானில் இரஷ்யாவும் சீனாவும் மேலாதிக்கம் பெறுவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகும். ஆகவே, இதை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாகவே தாலிபான் அரசு மீது நேரடி மற்றும் மறைமுக நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது அமெரிக்கா.

***

அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது. இவர்களின் மேலாதிக்கப் போட்டிகளுக்கிடையில் பலியாகிக் கொண்டிருப்பதோ அப்பாவி உழைக்கும் மக்கள்தான். இந்தப் பின்னணியில் தங்கள் நாட்டு நெருக்கடிகளை புரிந்துகொள்வதானது, மேலாதிக்கங்களுக்கு எதிராக தெற்காசியப் பிராந்திய உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டியமைப்பதில் முக்கியமானது.

(முற்றும்)

அப்பு