பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
மார்க்சிய பேராசான் எங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர்.
மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் பங்களிப்புகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கவொன்னாதவை !
மார்க்சின் மேதைமை, விசயங்களை ஆழமாகவும் இலக்கியச் செறிவுடனும் ஆய்ந்தறியும் திறன் ஆகியவற்றோடு, எங்கெல்சின் கூருணர்வும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் அகழ்ந்து ஆய்ந்தறியும் அவரது அறிவுத்திறனும் இணைந்ததன் விளைபொருள்தான் மார்க்சியத் தத்துவம். இதில் எந்த ஒரு அம்சம் குறைந்திருந்தாலும், மார்க்சியம் ஆழமானதாகவும் செறிவுமிக்கதாகவும் இருந்திருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
“மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.
இது மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்குமே பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் எதிர்கொண்ட மற்றும் அவர்களது கடந்த காலத்திலிருந்து அவர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கபட்ட சமூகச் சூழலிலிருந்துதான் அவர்கள் இருவருமே “மார்க்சியவாதிகளாக” பரிணமிக்கிறார்கள்.
“மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வளர்ந்த ஜெர்மானிய சூழல் குறித்த தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறார் அதன் ஆசிரியர் ஹென்றி வால்கோவ்.
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பிறந்த ரைன் பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கு சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்று தீவிரவாதக் கருத்துக்களை இயல்பாகப் பேசுவது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். அண்டை நாடான பிரான்சை உலுக்கிய புரட்சிப் புயல்களின் தாக்கம், ரைன் பிரதேசத்திலும் இருந்தது. பிரெஞ்சு பொருள்முதல்வாத, அறிவியக்கக் கருத்துக்கள் ஜெர்மனிக்குள் நுழையும் நுழைவாயிலாக ரைன் பிரதேசம் இருந்தது. மேலும் ரைன் பிரதேசம் ஜெர்மனியிலேயே தொழிற்துறையில் முன்னேறிய பிரதேசமாகவும் இருந்தது.
இத்தகைய சூழலில் வளர்ந்த எங்கெல்ஸ், தனது தந்தையின் நெருக்குதல் காரணமாக 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, பிரெமென் நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிரெமென் நகரம் எங்கெல்சுக்கு ஹெகலின் தத்துவத்தை அறிமுகம் செய்தது. அங்கு பல்வேறு தத்துவவியல் மாணவர்களுடனும் ஹெகலியவாதிகளுடனும் விவாதிக்கிறார் எங்கெல்ஸ்.
ஹெகலிய தத்துவங்களை நடைமுறையோடு பொருத்திப் பார்த்து படிப்படியாக பொருள்முதல்வாதக் கருத்துக்களை முன்னெடுக்கிறார். கடவுள் மறுப்பு உள்ளிட்ட சமூகத்திற்கு ‘அன்னியப்பட்ட’ கொள்கைகளைப் பேசும் எங்கெல்சைக் கண்டு அஞ்சியது அவரது குடும்பம்.
1842-ம் ஆண்டில் 22 வயதான எங்கெல்சை மான்செஸ்டருக்கு அனுப்புகிறது அவரது குடும்பம். தங்களது மகன், தொழிற்சாலைகள் நிரம்பிய மான்செஸ்டர் நகருக்குச் சென்றால் ‘வழி’க்கு வந்துவிடுவார் என்று எண்ணினார்கள். ஆனால் நேரெதிராக மான்செஸ்டர் எங்கெல்சை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்தெடுத்தது.
தொழிற்துறை வளர்ச்சியடைந்த இங்கிலாந்தில் எங்கெல்ஸ் தங்கியிருந்தபோது அவர் மீது அங்கிருந்த தொழிலாளர்களின் இயக்கமான சார்ட்டிஸ்ட் இயக்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதில் உத்வேகத்துடன், பகிரங்கமாகவே செயல்பட்ட எங்கெல்ஸ், அந்த இயக்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. சட்டப்பூர்வமாக புரட்சியைக் கொண்டுவர விரும்புகின்றனர் என்று அவர்களை விமர்சித்தார்.
1843-ம் ஆண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் உருவரை” என்ற தனது முதல் பொருளாதாரக் கட்டுரையை வெளியிடுகிறார் எங்கெல்ஸ். தனது மூலதனம் நூலில் பல இடங்களில் இதிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.
தனது தந்தை பங்குதாரராக இருந்த ஆலையில் பொறுப்புமிக்கப் பணியில் இருந்தாலும் தனது ஓய்வு நேரங்களை ”வியர்வைக் கூடங்கள்” என்றழைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் செலவிடுகிறார் எங்கெல்ஸ். தொழிலாளர்களின் வாழ்நிலைமை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் நடத்தி வந்த பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ்.
“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ?” என்று தனது பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.
1844-ம் ஆண்டில் மார்க்சை இரண்டாம் முறை சென்று சந்திக்கும் முன்னரே, எங்கெல்ஸ் ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான சோசலிஸ்டாக மாறியிருந்தார். தனது அயராத உழைப்பின் மூலம், “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற நூலை 1845-ம் ஆண்டில் வெளியிட்டார். தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பு என அதனைப் புகழ்ந்தார் மார்க்ஸ்.
அந்த சந்திப்பிலேயே மார்க்சும் எங்கெல்சும் இணைபிரியா நண்பர்களாகினர். ஒருவரை மற்றொருவர் கலந்தாலோசித்துவிட்டுதான் தங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றனர். ஜெர்மன் தத்துவஞானம், புனித குடும்பம் உள்ளிட்ட படைப்புகளை இருவரும் இணைந்து படைத்தனர்.
மார்க்சின் எழுத்துக்களின் முதல் விமர்சகராக எங்கெல்ஸ் இருந்தார். அதாவது மார்க்ஸ் எனும் மாமேதையின் எழுத்துக்கள் அனைத்துமே எங்கெல்சின் கரங்களால் செழுமைப்படுத்தப்பட்ட பின்னர்தான் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த அளவிற்கு மார்க்சிய சிந்தனையில் மார்க்சுடன் ஒன்றியவராக இருந்தார் எங்கெல்ஸ். ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.
எங்கெல்ஸ் பல்வேறு தனித்திறன்களை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். தத்துவத்தில் மட்டுமல்ல, வரலாறு, மொழி, இலக்கிய விமர்சனம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வல்லுனராக இருந்தார்.
அறிவியலின் மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் எங்கெல்ஸ். இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், புவியியல், மானுடவியல் என அனைத்துத் துறைகளிலும் பேரார்வம் கொண்டவராகவும், அறிவியலுலகின் கண்டுபிடிப்புகளைப் பொருத்திப் பார்த்து தனது தத்துவ அறிவை செழுமைப்படுத்துபவராகவும் இருந்தார்.
அறிவியலின் துணை கொண்டு கிடைக்கும் எதார்த்த உலகின் பருண்மையான, நுண்ணியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தினார் எங்கெல்ஸ்.
மார்க்சும் எங்கெல்சும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூகத்திற்குப் பொருத்தியதும் அறிவியலின் துணை கொண்டுதானே அன்றி, தங்களது மூளையில் தோன்றிய கற்பனைகளைக் கொண்டு அல்ல. மார்க்சும் எங்கெல்சும் மானுடவியலாளர் மார்கன் மற்றும் இயற்கை அறிவியலாளர் டார்வின் உள்ளிட்டவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்துதான் தனது தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
1849-ம் ஆண்டு மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்களது வாழ்க்கைக்கு உதவி புரிவதற்காகவே, தனது தந்தையின் மான்செஸ்டர் ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்கிறார்.
மார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.
இந்தக் காலகட்டத்தில் தான் முதலாளித்துவ மூலதனத்தின் சுரண்டலையும், குரூரத்தையும், கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தும் மாபெரும் படைப்பான மூலதனத்தை மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். பிற்போக்குத் தத்துவங்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மார்க்சின் பார்வையை, அரசியல் பொருளாதாரத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டவர் எங்கெல்ஸ். மார்க்ஸ் தனது நூலுக்கான தயாரிப்பின் போது சந்தித்த அனைத்து கடுமையான பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மார்க்சின் மனசாட்சியாக, மார்க்சின் எழுத்துக்களுக்கு கூரிய விமர்சகனாகத் திகழ்ந்தார் எங்கெல்ஸ்.
மார்க்சின் ஆய்வுக்காக தனது சொந்த ஆய்வுகளின் மீதான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை நினைத்து பலமுறை வருத்தமடைந்தார். 1867-ம் ஆண்டில் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளை திருத்திய பின்னர், மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடித்ததில், “ இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.” என்று எழுதுகிறார்.
சுமார் இருபதாண்டுகள் மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலைச் “சிறையில்” பணியாற்றிய பிறகு அங்கிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட எங்கெல்ஸ், லண்டனுக்குச் சென்று மார்க்ஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே குடியேறினார்.
இதற்குப் பின்னான காலகட்டத்தில் எங்கெல்ஸ் தமது இயற்கை குறித்த தமது அறிவியல் ஆய்வையும், மானுடவியல் குறித்த ஆய்வையும் தொடர்ந்தார். இயற்கையின் இயக்கவியல் என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்போதும் மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிவது குறையவில்லை. மாறாக அதிகரித்தது.
மார்க்சியத்தைத் திரித்தும், அதனை முழுமையாகப் படிக்காமல் அதன் மீது விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை அள்ளி வீசிய சமகாலத்தவர்களுக்கு எங்கெல்ஸ் மார்க்சியத்தின் உச்சிமுகட்டில் நின்று சம்மட்டியடி கொடுத்தார். அவரது அத்தகையதோர் ஆகச் சிறந்த படைப்புதான் “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல். மார்க்சியத் தத்துவத்தை சகல துறைகளுக்கும் பொருத்தி, அதனை விரிவாக விளக்கினார். மார்க்ஸ் கூறியபடி அவரது “Alter Ego” தான் எங்கெல்ஸ் என்பதை அந்த நூல் நிரூபிக்கிறது.
மார்க்சுக்கு சற்றும் குறையாத அளவிற்கு மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள எங்கெல்ஸ், மார்க்ஸ் இருக்கும்போதும் சரி , மறைந்த பின்னும் சரி எப்போதும் தன்னடக்கத்துடனேயே இருந்துவந்தார் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும்.
படிக்க :
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
எங்கெல்ஸ் மீதும் அவரது மேதைமை மீதும் மார்க்ஸ் பெருமதிப்புக் கொண்டிருந்தார். ஒருமுறை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார் வால்கோவ். அந்த அளவிற்கு எங்கெல்சின் அறிவுக்கூர்மையை மதித்திருக்கிறார் மார்க்ஸ்.
”அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில்” எங்கெல்சை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வேறு சில விசயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்களில் தனிச்சிறப்பானவர் எங்கெல்ஸ்.
மார்க்ஸ் மரணமடையும் முன்னர், மூலதனம் நூலின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார். மீதமுள்ள பகுதிகள் வெறும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. மார்க்சின் மரணத்திற்குப் பின்னர் அவற்றை நூலாகக் கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எங்கெல்ஸின் தோள்களின் மீது இறங்கியது. ‘மூலதனம்’ எனும் மனிதகுலத்தின் விடிவெள்ளியை நூல் வடிவில் வெளிக் கொண்டு வருவதற்காக தனது இறுதிக்காலம் வரை உழைத்தார் எங்கெல்ஸ்.
இதற்காக தனது இயற்கையின் இயக்கவியல் குறித்த ஆய்வைக் கைவிட்டார். தனது நண்பருக்காக அல்ல. மனித குலத்திற்கு மார்க்சியத்தின் மிகப்பெரும் கொடையான ‘மூலதனம்’ நூலை கொண்டு வருதற்காகவே தனது தனிப்பட்ட ஆய்வைக் கைவிட்டார் எங்கெல்ஸ்.
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ். மார்சியத்தைத் திரித்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மழுங்கடிக்கத் துடித்த பல்வேறு முதாலாளித்துவ – ’சோசலிச’ காளான்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தார் எங்கெல்ஸ்.
சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தில், அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராகவும், ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரைக் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது” என்றார் அடக்கத்துடன்.
மார்க்சும், எங்கெல்சும் சுட்டிக்காட்டிய, சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான முதலாளித்துவ சுரண்டல்கள் இன்றும் நீடிக்கின்றன. அவ்விருவரும் படைத்துத் தந்த மார்க்சியம் எனும் ஆய்வுமுறையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவல்லவர்களால் மட்டுமே இந்தச் சுரண்டலை ஒழிக்க ஒரு புரட்சியை நடத்த முடியும். அத்தகையதோர் பொன்னான கடமையை செய்துமுடிப்போமென தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உறுதியேற்போம்.
வினவு









இவ்வாறு கோட்பாடற்ற தகராறு, கோட்பாடுள்ள தகராறின் மட்டத்திற்கு உயர்த்தப்படும். அவர்களுக்கு கோட்பாடு சம்பந்தமாக தகராறு இல்லையென்றால் பின் அவர்கள் செய்த வேலை பற்றி தொகுத்துக் கூறியது, இந்த எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்று திரண்டு, எதிர்காலப் பாதையையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு ஒன்று கூடி போராடும்படியும், எல்லாவிதமான கோட்பாடற்ற தகராறுகளையும் கைவிடும்படியும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடந்தகால வேலையை தொகுப்பது, இன்றைய லட்சியங்களை வரையறுப்பது, நிகழ்கால வேலையை முன்னேற்றிக் கொண்டு செல்வது ஆகியவை மூலம்தான் கோட்பாடற்ற தகராறுகள் தீர்க்கப்பட வேண்டும். இதுவன்றி வேறு வழிகளில் கோட்பாடற்ற தகராறுகளை தீர்க்க இயலாது.
கோட்பாடுள்ள போராட்டங்களில், கோட்பாடற்ற அம்சங்களை தோழர்கள் புகுத்தினால், கோட்பாடுள்ள பிரச்சினையை விவாதிப்பதைத்தான் வலியுறுத்த வேண்டும்; கோட்பாடற்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது; இல்லாவிடில் கோட்பாடுள்ள பிரச்சினை பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போகும்.
கட்சிக்குள் பகுத்தறிவுக்குக் கட்டுப்படும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். இந்தக் காரணம் சரியானதா அல்லது அந்தக் காரணம் சரியானதா என்று நிர்ணயிக்கும் அளவுகோல், கட்சியின் நலனும் தொழிலாளி வர்க்கப் போராட்ட நலனுமாகும்; பகுதி நலனை முழுமைக்கு உட்படுத்துவதும், உடனடி நலன்களை நீண்டகால நலன்களுக்கு உட்படுத்துவதுமாகும். கட்சியின் நலனுக்கு, தொழிலாளி வர்க்க போராட்ட நலனுக்கு, கட்சி முழுமையின் நீண்டகால நலனுக்கு, தொழிலாளி வர்க்கப் போராட்ட முழுமையின் நீண்டகால நலனுக்கு, அனுகூலமானால் அக்காரணங்களும் கண்ணோட்டங்களும் சரியானவை; இல்லையெனில் அவை சரியானவையல்ல.
விசயங்களைப் பகுத்தாராய ஏதுவாக இருப்பதற்கு உட்கட்சி ஜனநாயகமும், பிரச்சினைகளின் சிக்கலைத் தீர்க்க சாந்தமான விருப்பு, வெறுப்பு இல்லாத விவாதமும் அத்தியாவசியமாகிறது. அடக்கத்துடன் கற்றறிவதும், தோழர்களின் தத்துவப் பயிற்சியை அதிகப்படுத்துவதும், நிலைமையைப் பற்றி தெளிவான போதம் பெறுவதும், சம்பந்தப்பட்ட விசயத்தை துருவித் துருவி ஆராய்வதும், பிரச்சினைகளை வெகு கவனமாக பரிசீலிப்பதும் மிகமிக அவசியம். கவனக் குறைவாகவும், தன் மனப்போக்குடனும், கிளிப்பிள்ளை போன்றும் , நடைமுறையோடு சம்பந்தப்படாமலும் விசயத்தை பரிபூரணமாக ஆராயாமலும், நாம் விசயங்களை என்றுமே பகுத்தாராய முடியாது.
இங்கு நான் “பகுத்தாராய்தல்” என்று கூறுவதற்கு பொருள் என்ன என்றால், தோற்றத்திற்கு உண்மையான பகுத்தாராய்தல் போன்று காணப்படுகின்ற, வெற்று விசயங்களை அல்ல; நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட உண்மையான விசயங்கள், யதார்த்த உண்மைகள் என்பதே ஆகும். சில அறிவாளிகள் வீண் பேச்சுகளிலும் தவறான வாதங்களில் ஈடுபடுவதிலும் பழக்கப்பட்டுள்ளனர். விசயங்களை ஆதாரமாகக் கொள்ளாமல் அவர்களுக்கு நிறைய பேசமுடியும். இந்த பூலோகத்திலுள்ள எந்த விசயத்தைப் பற்றியும், அவர்களுக்குப் பேசமுடியும். அவர்களுடைய பேச்சு வெற்றுப் பேச்சு, கட்சியின் வறட்டுக் கோஷங்கள்; அதனால் எந்தவித பயனும் கிடையாது; கட்சிக்கும் புரட்சிக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. ஆதலின் பகுத்தறிவுக்கு உடன்பட்டு நடக்கும் நடைமுறையை வளர்ப்பதற்கு வெற்றுப் பேச்சு, வறட்டு கட்சி கோஷங்கள் முதலியவற்றை எதிர்ப்பதும், யதார்த்தத்திலிருந்து எழுகின்ற யதார்த்தமான பௌதீகப் பகுத்தறிவை ஆதரிப்பதும் அவசியமாகிறது. அதாவது “நமது தத்துவங்கள் பௌதீகவாதத்தின் அடிப்படையில் அமைந்தவை.”
போல்ஷ்விக்குகள் பகுத்தறிவுக்கு உடன்பாடுடையவர்கள்; உண்மையை ஆதரிப்பவர்கள்; பகுத்தறிவை தெளிவாக புரிந்து கொண்டிருக்கும் ஒருவித மனிதர்கள் இவர்கள்; பகுத்தறிவிற்கு இணங்க உண்மையான சிரத்தையுடன் மற்றவர்களுடன் பழகுகின்றனர். அவர்கள் பகுத்தறிவற்ற நியாயமற்ற போராட்ட ஸ்பெஷலிஸ்டுகள் அல்ல!




”என்னுடைய இணைப்பை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கையானது 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு செல்கிறது. நான் அம்பானியின் இரசிகனெல்லாம் கிடையாது, எம்.டி.எம்.எல் போன்ற அரசு நிறுவனங்களை ஆதரிப்பவன் . ஆனால் வேறு வழியில்லாமல் ஜியோ 4-ஜி இணைப்பை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்று குப்தா கூறுகிறார். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2016 ல் குறைந்த விலை 4-ஜி சேவையை தொடங்கி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆட்டங்காணச் செய்துள்ளார்.
அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே சம்பளம் சரியான நேரத்தில் வரவில்லை. ஜனவரி 31-க்குள் விருப்ப ஓய்வு எண்ணிக்கை எட்டப்படவில்லையெனில், பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்கப் போவதாக மும்பை எம்.டி.என்.எல் கூறியது. குடும்பம் முத்ராஸை மட்டுமே நம்பியிருந்ததால் தான் அச்சமடைந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
4ஜி-க்கான புதிய ஏலம் முடிவடையும் நேரத்தில், தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு சென்று விடுவார்கள் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. காலாவதியான தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான ஊழியர்கள் வழங்கும் சேவையானது வாடிக்கையாளர் எண்ணைக்கையின் வீழ்ச்சியையும் பெரிய வருவாய் இழப்புகளையும் ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. “தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது” என்று பி.எஸ்.என்.எல் தொழிலாளர்கள் தேசிய ஒன்றியத்தின் (National Union of BSNL Workers) உதவி பொதுச் செயலாளர் தினேஷ் மிஸ்திரி கூறுகினார்.
21.11.2020
எனவே, எவ்வளவுக்குப் பூசி மெழுகிப் பொய் புளுகுகளைக் கூறிக்கொண்டாலும், இவ் வரவு செலவுத் திட்டமானது ஆளில்லா விமானங்கள் பத்தினை வைத்து வானத்திலிருந்து எமது வீடுகளை வேவு பார்க்கும் இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டமாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.

இந்த தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் யார் பொறுப்பாளி என்று கேட்டுக்கொண்டு ஆரம்பிக்கக்கூடாது; ஒரு தோழர் தெரியாமல் தவறு செய்கிறார், பரிபூரணமாக அந்தத் தவறை உணருகிறார், அதை திருத்திக் கொண்டும் வருகிறார் என்ற நிலைமை இருக்கும் வரையில் அத்தோழரை மனமார வரவேற்க வேண்டும். அதில் அதிநுட்பம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில் நமது கொள்கை ஊழியர்களுக்கும் தோழர்களுக்கும் அடி கொடுப்பது, மற்றவர்களைத் தாக்குவது, அவர்களுக்கு அடிகொடுப்பது அன்று. ஏனெனில் அத்தகைய கொள்கை சாராம்சத்தில், சவுக்கடி கொடுக்கும் கொள்கை, தொழிலாளர் மக்கள் விசயத்தில் சுரண்டும் வர்க்கங்கள் கையாளும் அடக்குமுறைக் கொள்கையேயாகும். நமது கொள்கை ஊழியர்களுக்குள் பரஸ்பர உதவி, பரஸ்பர பரிசீலனையாகும்.
சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் சம்பந்தப்பட்ட கட்சி அங்கத்தினர், நேரிடையாக ஒரு மேல் கட்சிக் கமிட்டிக்கு அல்லது மத்திய கமிட்டிக்கு அவர் அங்கம் வகிக்கும் கட்சி அமைப்பின் அனுமதி பெறாமலே மேல்முறையீடு செய்து கொள்ள முடியும். அம்மாதிரி மேல்முறையீடு செய்து கொள்ளும் அத்தோழர் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு முதலாவதாக தனது அபிப்பிராயத்தையும், காரணங்களையும் வேறுபாடுகளையும் பூரணமாக விளக்க வேண்டும்; இவையனைத்தையும் தனது கட்சி அமைப்பிற்கு தெளிவுபடுத்த வேண்டும்; தனது அமைப்பில் வாய் மூடிக்கொண்டு, மேலுள்ள கட்சி அமைப்பை ஏமாற்றும் நோக்கத்துடன், அத்துடன் பொறுப்பற்ற பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடாது. எப்பொழுது மேல்முறையீடு செய்கிறார்களோ, அப்பொழுது இறுதி முடிவு மேல்கட்சி அமைப்பைச் சேர்ந்து விடுகிறது. கீழ்மட்டத்திலுள்ள ஒரு கட்சிக் கமிட்டி ஒரு தோழர் மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை மேல்கமிட்டி ரத்து செய்யவோ, குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம்.
ஏழாவதாக, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளைத் தடுக்கும் பொருட்டு, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வரையறுத்து வைப்பது அவசியம்:
5. கட்சி அங்கத்தினர்கள் நேர்மையான வேலை முறையை வளர்க்க வேண்டும்; வஞ்சகத் தன்மை கொண்டது எதையும் எதிர்க்க வேண்டும்; எந்தவித வஞ்சகப் பேச்சானாலும் செயலானாலும் சரி, அதை எதிர்க்க வேண்டும்; வீண் பேச்சு, வம்பளப்பு, மற்றவர்களுடைய ரகசியங்களைக் துருவித் தெரிந்து கொள்ள முயலுவது, வதந்திகளை பரப்புவது முதலியவற்றில் ஈடுபடுகின்ற அனைவரையும் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும். கட்சியின் தலைமைக் கமிட்டிகள் அடிக்கடி சில குறிப்பான விசயங்களை பற்றி, கட்சி அங்கத்தினர்கள் பேசுவதற்கு தடையிட்டு கட்டளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்.