கைத்தடி வீரனின் காலடி தொடர்வோம் | பெரியார் 146
ம.க.இ.க “சிவப்பு அலை” பாடல்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

கைத்தடி வீரனின் காலடி தொடர்வோம் | பெரியார் 146
ம.க.இ.க “சிவப்பு அலை” பாடல்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

தனது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாசிச மோடி கும்பல், அதன் ஒரு அங்கமாக ‘‘வக்ஃப் வாரிய திருத்த மசோதா 2024-ஐ’‘ கொண்டுவந்துள்ளது.
ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்’‘ (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் இம்மசோதாவை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க. கும்பல், வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கல்வியாளர்கள் என யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனக்கே உரிய பாசிச வழிமுறையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக, சட்டத்திருத்தங்களை செய்யும்போது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் ஒன்று முதல் பத்து திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்படும் நிலையில், பாசிச மோடி அரசோ இம்மசோதாவில் 44 திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளை பறித்து வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன.
இதனையடுத்து இம்மசோதாவிற்கு நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மசோதா இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையில் உள்ளதையும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 25, 26, 30-களுக்கு எதிராக உள்ளதையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தியின் எம்.பி-க்களும் வக்ஃப் மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்திற்கு பின்னாலிருக்கும் பாசிஸ்ட்டுகளின் சதித் திட்டம்
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் இறையருளை நாடி நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நேரு ஆட்சியில் வக்ஃப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு 2013-ஆம் ஆண்டில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. இவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் நிறுவனங்களிடம் 7.8 லட்சத்திற்கும் மேற்பட்ட அசையா சொத்துகளும் ஒன்பது லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளுக்கு அடுத்ததாக வக்ஃப் வாரியங்களிடமே அதிக சொத்துகள் இருக்கின்றன. இச்சொத்துகள் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளை இஸ்லாமிய மக்கள் பூர்த்தி செய்துகொள்வதோடு தங்களை தாங்களே சுயேட்சையாக நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாமல்தான் வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம், வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை பறித்து, பாசிசக் கும்பல் கட்டுப்படுத்தும் வகையில் அதன் நிர்வாகமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதாவில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
படிக்க: இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!
சான்றாக, வக்ஃப் சொத்துகளின் மீது அரசு அல்லது தனிநபர் உரிமை கோரினாலோ; அரசு அல்லது தனிநபர் சொத்துகளின் மீது வக்ஃப் உரிமை கோரினாலோ, அந்த கோரிக்கைகளின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுநாள்வரை வக்ஃப் வாரியத்திடம் உள்ள இந்த உச்சபட்ச அதிகாரத்தை வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் எந்த தொடர்பும் இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவதன் மூலம் வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து அதனை வெறுமனே அலங்கார அமைப்பாக்கத் துடிக்கிறது, பாசிசக் கும்பல். மேலும், வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சொத்துகளை கணக்கெடுக்கும் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது.
ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவு 40-இன் படி, ஒரு சொத்து வக்ஃபுக்கு சொந்தமானதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதில் “மாநில வக்ஃப் வாரியம்” தவறான தீர்ப்பு கொடுத்தால் வக்ஃப் வாரிய தீர்ப்பாணையத்திலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் எந்தவொரு நபரும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குவது என்பது மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.
அதேபோல், வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்ற திருத்தம் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. இதனை மோப்பம் பிடித்தே அச்சொத்துகளை அபகரிப்பதற்காக இத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது பாசிசக் கும்பல்.
மேலும், ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்குள் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மசோதாவில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், இஸ்லாமியர் அல்லாதோர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருங்காலிகளை வக்ஃப் வாரியத்திற்குள் நியமிப்பதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வக்ஃப் வாரிய சொத்துகளை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப் பார்க்கிறது, காவிக் கும்பல்.
ஒருபுறம், வக்ஃப் வாரியங்களிடம் ஏற்கெனவே உள்ள சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டும் பாசிசக் கும்பல் இன்னொருபுறம் வருங்காலங்களில் வக்ஃப் வாரியத்திற்கு சொத்து சேரவிடாமலும் ஒடுக்குகிறது. சான்றாக, எந்தவொரு நிலத்தையும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று அறிவிக்கும் முன், வருவாய், கிராம நிர்வாகம் போன்ற அரசுத்துறைகளுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே அந்த நிலங்களை வஃக்புக்கு வழங்கவேண்டும் என்ற திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பாசிசமயமாகியுள்ள அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி வருங்காலங்களில் வக்ஃபுகளுக்கு வழங்கப்படும் நிலங்களையும் அபகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாசிச நோக்கத்திலிருந்துதான் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துகளை வழங்க முடியும் என்றும் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.
இத்தகைய இஸ்லாமிய விரோத மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமிய பெண்கள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்ற திருத்தத்தையும் மேற்கொண்டு, இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக போராடுவதாக நாடகமாடுகிறது காவிக் கும்பல். ஆனால், வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் இஸ்லாமிய பெண்கள் ஏற்கெனவே இருப்பதை சுட்டிக்காட்டி, காவிக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்தை பலரும் முறியடித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களிடமுள்ள வக்ஃப் சொத்துகளை அவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் இஸ்லாமிய மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிப்பதுடன் அச்சொத்துக்களை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலாக்கவும் பாசிசக் கும்பல் திட்டமிட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளை சூறையாடத் துடிக்கும் காவி–கார்ப்பரேட் கும்பல்
நடைமுறையிலுள்ள வக்ஃப் வாரிய சட்டத்தின்படி, வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. மாறாக, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோதான் கொடுக்க முடியும். ஆனால் மோடி-அமித்ஷா கும்பலானது, ‘‘வக்ஃப் திருத்த மசோதாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை வைத்திருந்தால் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராக முடியும்’‘ என்ற திருத்தத்தை கொண்டுவந்துள்ளதன் மூலம் தனது நோக்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல், கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என பல கிரிமினல் கும்பல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. சான்றாக, அம்பானியின் அண்டிலியா வீட்டின் நிலமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு உள்ளது.
ஆகவே, அரசு சொத்துகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் துணையுடன் அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.
படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!
இன்னொருபுறம், பல ஆண்டுகளாகவே வக்ஃப் வாரியத்தின் மீது பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்-விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலின் பாசிச நோக்கமும் இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. வக்ஃப் வாரியத்தால் வெறுமனே நிலங்கள் மட்டுமின்றி மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள் என பல்வேறு அமைப்புகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருவேளை வக்ஃப் வாரிய திருத்த மசோதா சட்டமானால் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும், மாவட்ட ஆட்சியரின் துணையுடனும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது நடந்தேறும்.
ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் பசுவளைய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இச்சட்டத்தால் அது புதிய உச்சநிலைக்கு செல்லும். எனவே, பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த இந்துமுனைவாக்க நோக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்திருத்தமானது, மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.
இத்தகைய பாசிச நோக்கத்துடன் கொண்டுவரப்படும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பது இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும். ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பியதனாலேயே பாசிசக் கும்பல் பயந்துவிட்டது, பணிந்துவிட்டது, சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றெல்லாம் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்பாளர்கள் சிலரும் கருதுகின்றனர்.
ஆனால், கூட்டு குழுவால் மசோதாவின் மீது பரிந்துரைகள் வழங்க முடியுமே ஒழிய திருத்த முடியாது. எனவே, வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு துளியும் ஜனநாயகம் வழங்காத நாடாளுமன்ற மரபுகளை மதிக்காத பாசிசக் கும்பலுக்கு எதிராக இஸ்லாமிய மக்களுடன் இணைந்து களத்தில் போரட்டத்தை கட்டியமைப்பதன் மூலமே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முடியும்.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு
மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும்
மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
நேரில் சென்று ஆதரவு
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, மூன்று கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஒட்டு மொத்த பொட்டலூரணி மக்களும் 19.04.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக முறையாகத் தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் அறிவிக்கை செய்தனர்.
முறையான பேச்சுவார்த்தைக்கு உரிய அலுவலர்கள் முன்வராமல் போலீசை வைத்தே மிரட்டி வந்தனர். தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த பொதுமக்களே, தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், பொதுமக்களோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக அழைப்புவிடுத்தும் முன்வரவில்லை. தேர்தலன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுமக்களைத் தாக்கிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் போலீசின் துணையோடு, கூலிப்படையினரை அனுப்பினார். பொதுமக்கள் அதைக் கவனமாகக் கையாண்டு அமைதியை நிலை நாட்டினர். ஆளும் கட்சியினர், அரசு அதிகாரிகள், போலீசுத்துறையினர், கழிவு மீன் நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டுச் சதியால் தொடர்ந்து பொதுமக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து பொட்டலூரணிப் பொதுமக்கள், கழிவு மீன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளுடன், தேர்தல் முதல் பொதுமக்கள் பந்தல் அமைத்து நாள்தோறும் உணவுக் கூடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 5 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி, நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் பொட்டலூரணிப் போராட்டப் பந்தலுக்கு வருகைதந்து, போராட்டக்குழுவினரிடம் மக்கள் அதிகாரம் அமைப்பு கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்று கூறி ஆதரவு தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

இன்று (செப்டம்பர் 11) சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரன் தேவர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.
தனது கல்லூரி வாழ்க்கையில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற இவர் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1950 ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவர், தனது சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு இராணுவ வேலையைத் துறந்தார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் துவங்கினார்.
அக்காலகட்டத்தில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். 1957-களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்கச் சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.
இமானுவேல் சேகரன் தலைமையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த பள்ளர் மக்களிடையே, “தேவேந்திர குல வேளாளர்” என்ற பெயரில் ஆதிக்க சாதிவெறியை ஊட்டும் வேலையை ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் செய்து வருகிறது.
எனவே, இந்த பாசிசக் கும்பலைப் புறக்கணித்து சாதியத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுடன் பள்ளர் சமூக மக்கள் இணையவேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக கீழ்க்கண்ட கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.
***
இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி:
பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
அண்மைக்காலமாக, தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் ஒரு புதிய போக்கை வெளிப்படுத்துகின்றன. 90-களில் நடைபெற்றதைப் போல, மீண்டும் இப்பகுதிகளில் சாதிய மோதல்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் சாதி முனைவாக்கத்தை ஏற்படுத்துவதற்கும்; அதை தனது இந்துத்துவ பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சித்துவருகிறது.
இச்சாதிவெறித் தாக்குதல்களில் பெரும்பாலானவை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெற்றவை. கடந்த ஆகஸ்டு மாதத்தில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 14 சாதியப் படுகொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால், ஆளும் வர்க்க ஊடகங்கள் இவற்றில் பெரும்பாலானவற்றை, சாதியத் தாக்குதல்களாக பதிவு செய்யாமல் முன்விரோதம், தனிநபர் மோதல் என்ற வகைகளில் சித்தரித்தன.
இந்த சாதியத் தாக்குதல்கள் மீது தி.மு.க. அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் ஊடகங்களின் பாராமுகமும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழலை பொது விவாதத்திற்கு கொண்டுவந்துவிடாமல் தடுத்து வந்தன. ஆனால், அதையும் மீறி இப்பிரச்சினை குறித்து பேசியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளும் வகையில், சாதிவெறிப் படுகொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நெல்லை மணிமுத்தீஸ்வரத்தில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனோஜ், மாரியப்பன் என்ற இரண்டு இளைஞர்களை வழிமறித்து, அவர்களைத் தாக்கி, நகைகள், செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. மேலும், அவர்களது சாதியை விசாரித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிந்தவுடன், வெறிகொண்டு மீண்டும் அந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளது; அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இதே மணிமுத்தீஸ்வரத்தில், தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
படிக்க: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்
கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள மணக்கரையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க, மணி என்ற முதியவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அருகிலுள்ள வேப்பமரத்து அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை, எவ்வித முன்விரோதமும் இல்லாத நிலையில், இருசக்கர வாகனத்தில் திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றது.
தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் இதுபோன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் தேவர் சாதிவெறியர்களால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் கூட அவ்வாறானவையே.
தென்மாவட்டங்களில் தற்போதுள்ள சமூகச் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, இந்துமதவெறிக் கும்பல், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக மேற்கொள்ளும் சதிச் செயல்களுக்கு பலிகடாவாக்கப்படும் முக்கியமான சமூகமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் இருக்கும் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் இப்பிரச்சினையில், ஒருபக்கம் நிற்பது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல்களை ஏவிவரும், சில ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு – தேவர் சாதிவெறி அமைப்புகள்; மறுபக்கம் நிற்பது, இம்மக்களின் ‘காவலர்களாக’ தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், அதே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏஜெண்டுகளாக செயல்படக்கூடிய ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும். இந்த இருமுனைக் கத்தியால் குத்துப்பட்டுக் கொண்டிருப்பது, தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான்.
சாதிவெறி இல்லையாம்! கஞ்சா போதையாம்!
தென்மாவட்டங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிவெறித் தாக்குதல்களை, ஆரம்பத்தில் கண்டும் காணாமல் விட்டுவந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும், தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல ஜனநாயகச் சக்திகளும் இப்பிரச்சினை தொடர்பாக எச்சரித்து ஆர்ப்பாட்டங்களையும் பிரச்சாரங்களையும் தொடர்ச்சியாக செய்துவருகின்றன. இந்நிலையில் இனிமேலும், இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்காமல் இருந்தால், தன் சாதி மக்களிடமே தாம் அம்பலப்பட்டு போய்விடுவோம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளே களமிறங்கியுள்ளார்கள்.
“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியை நடத்திவரக்கூடிய ஜான் பாண்டியன், தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, நவம்பர் 20-ஆம் தேதி நெல்லை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.
இவ்வன்முறைகள், ஆர்.எஸ்.எஸ்-ஆல் கட்டுப்படுத்தப்படும் ஒருசில தேவர் சாதிவெறி அமைப்புகளால், திட்டமிட்டே நடத்தப்படுபவை என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜான் பாண்டியன் கடந்த மாதம் 15-ஆம் தேதி இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?
“பட்டியலின மக்களைக் குழப்புவதற்காக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை மட்டும் குறிவைத்து, இளம் அப்பாவிகளை கொலை செய்வதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது”.
“தேவரும் தேவேந்திரரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றால் அப்படி இல்லை; அப்போ எப்படி இது சாதியாகும்?
கஞ்சா அதிகமாக நடமாடுகிறது; … .. கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். நத்தத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; மணிமுத்தீஸ்வரத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; இப்போ நடந்த மணக்கரை மணி, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். கஞ்சா போதையில் அதிகமாக கொல செஞ்சிருக்கான். அவ்வளவுதான்”
ஒரு பத்திரிகையாளர் இடைமறித்து கேட்கிறார்: “அப்போ ஏன் எல்லா இடங்களிலும் தேவேந்திரர்களே வெட்டப்படுகிறார்கள்?”
அதற்கு ஜான் பாண்டியன் அளித்த பதில்: “அந்தப் பகுதிகளில் தேவரும் தேவேந்திரரும் மட்டும்தான் இருக்காங்க; வேற சாதி கிடையாது. வடகரை, கீழநத்தம், ஒவ்வொரு பகுதியிலயும் நீங்க ஆராய்ஞ்சு பார்த்தீங்கன்னா, அப்படித்தான் இருக்காங்க… எதார்த்தம் என்னவோ அத பார்க்கனும்; சும்மா சித்தரிக்கக் கூடாது!”
“தேவேந்திர குல வேளார்களின் குலதெய்வமே”, “எங்களின் இதயமே” என்று ஜான் பாண்டியனுக்கு போஸ்டர் ஒட்டும் அச்சமுதாய மக்களுக்கு ஜான் பாண்டியன் அளிக்கும் பதில் இதுதான்!
இதனை சாதிவெறிப் படுகொலை என்று சித்தரிக்கக் கூடாது, வழக்கமாக நடக்கும் கஞ்சா போதைக் கொலைகள்தான் என்றால், பிறகு எதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்; அதில் எதற்கு, “தேவேந்திர குல வேளாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்” என்று தலைப்பு. இந்த சுயமுரண்பாட்டை எவன் கேள்வி எழுப்பப் போகிறான் என்ற திமிர்தானே!
கஞ்சா அதிகமாக நடமாடுகிறது என்கிறாரே, ஜான் பாண்டியன். அதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அந்த கஞ்சாவை சப்ளை செய்வது யார்; கஞ்சாவுக்கும் சாதிவெறிக்கும், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட படுகொலைக்கும் யார் காரணம் என்று ஜான் பாண்டியனுக்கு தெரியாதா? தெரியாதெனில், நாமே விளக்குகிறோம்; ஆனால், அதற்கு ஜான் பாண்டியனோ, அவரது த.ம.மு.க. கட்சியினரோ நடவடிக்கை எடுப்பார்களா?
நேராகப் போய், தேசிய அளவில் கஞ்சா ஒழிப்புப் போராட்டத்தை நடத்துவதாக இருந்தால், டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். தமிழ்நாடு அளவோடு போராட்டத்தை வரம்பிட்டுக் கொள்வதாக இருந்தால், கமலாலயத்தை முற்றுகையிடுங்கள்; உங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பா.ஜ.க.காரனையும் தூக்கிப்போட்டு மிதியுங்கள், கஞ்சா ஒழிந்துவிடும்!
உண்மையைத்தான் சொல்கிறோம்! கஞ்சா அனைத்துக் கட்சி கிரிமினல்களின் ‘பொதுத்தொழிலாக’ இருந்தது, பழைய காலம். இப்போது அது மாறிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால், இளைஞர்களை சீரழிப்பதற்கென்றே, கிராமங்களில் சாதிவெறி மோதல்களைத் தூண்டிவிடுவதற்கென்றே மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, கஞ்சா மாறிப்போய் இருக்கின்றது.
மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, நவம்பர் 13,14-ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மூன்று முக்கியமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவை, ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடமும் வெளிநாட்டு தரகர் ஒருவரிடமும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா தொழிலில் முதலீடு செய்வது தொடர்பாக, பேரத்தில் ஈடுபடுவது போன்ற உரையாடல்களுடனான வாட்சப் கால் வீடியோக்கள்.
இந்த உலக மகா மாஃபியா தொழில் வெளியே கசிந்தவுடன், அது போலி வீடியோ என்று தேவேந்திர சிங் தோமர் போலீசில் புகாரளித்தார். ஆனால், கனடாவில் உள்ள ஜெகம்தீப் சிங் என்ற நபர், தன்னிடம் முழு காணொளியும் உள்ளதாகவும், தேவேந்திர சிங் தோமரிடம் பேசியது நான்தான் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், இது 500 கோடி விவகாரம் கிடையாது; 10,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழில் என்றும்; நரேந்திர சிங் தோமர் குடும்பத்திற்கு தான் பினாமியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் அம்பலமாகி, பா.ஜ.க.வின் மாஃபியா வலைப்பின்னல் வெளியே வந்தது.
இந்த கஞ்சா தொழிலைப் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? சரி, கனடா, டெல்லி என்று தூரமாக போக வேண்டாம் என்றுகூட கருதலாம். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு கார்களில் கஞ்சா கடத்தி வந்த ‘லோக்கல் செய்தி’யையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா! அதில் ஈடுபட்ட, தூத்துக்குடி பா.ம.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? கஞ்சா வியாபாரிகளும், கொலைகாரர்களும், ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வை தங்களது பாதுகாப்பான சரணாலயமாகக் கருதி தஞ்சம் புகுகிறார்களே; அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறதே தமிழ்நாடு பா.ஜ.க – அதைப் பற்றியேனும் ஏதாவது வாய்திறந்திருக்கிறாரா, இனிமேலாவது திறப்பாரா; ஒன்றுமில்லை!
‘இந்துக்களின் போர்வாள்’ குத்துவது யாரை?
அடுத்து இந்துக்களின் போர்வாள் கிருஷ்ணாசாமியைப் பார்க்க வேண்டும். “இந்து ஒற்றுமைக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் கடப்பாடு” என்று அறிவித்துக் கொண்ட இவர், இன்று “ஐயோ, தென் மாவட்டங்களில் தேவேந்திரர்களைக் குறிவைத்து ஒரு இனப்படுகொலையே நடத்தப்படுகிறது” என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: அதிகரித்துவரும் இப்படுகொலைகள் ஏதேச்சையானவை அல்ல என்றும்; ஒரு பயங்கரவாதக் கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும்; இஸ்ரேலில் யூதர்கள் எப்படி பாலஸ்தீன மக்களின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பதற்காக, அவர்கள் மீது இன அழிப்பை நடத்திவருகிறார்களோ, அதே போல தேவேந்திர குல வேளாளர்கள் மக்களுக்கு நடக்கின்றது என்றும் பேசியுள்ளார்.
நெல்லையில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி பேரணி ஒன்றையும் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.
இதைச் சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதக்கூடாது; இதற்கு பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னலே உள்ளது. போலீசு அதிகாரிகள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இவ்விசயத்தில் கூட்டணியாக உள்ளார்கள். இதை உடைக்க வேண்டும் – என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி, பல்வேறு லோக்கல் சேனல்கள், யூடியூப் சேனல்கள், பி.டி.ஐ. ஆங்கில ஊடகம் ஆகியவற்றுக்கெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பேட்டிகொடுத்துள்ளார்.
களத்திலோ, தூத்துக்குடி மணக்கரை கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளார். இப்பிரச்சினையை பேசுபொருளாக்குகிறாராம்; தேவேந்திர குல மக்களின் ‘காவலர்’ அல்லவா, அம்மக்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.
“மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”; “தென் மாவட்டங்களை சாதிரீதியாக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக முன்வைத்துள்ளார், கிருஷ்ணசாமி.
கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனைப் போலல்ல; இல்லையா!
ஆமாம், ஜான் பாண்டியனைவிட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு மிகமிக ஆபத்தான கோடாரிக் காம்பு!
சரி, இந்த சாதிவெறிக் கிரிமினல்களை ஏவுவது யாராய்யா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டால், தி.மு.க-வாம்! தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்துதான் இப்படியெல்லாம் நடக்கிறதாம். மேலும், தி.மு.க.தான் எல்லா ரவுடிகளும் கிரிமினல்களும் குடிபுகும் இடமாக இருக்கிறதாம். இவ்வாறு புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ளார்.
ஆனால், களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும்; தங்களது எதிரி யார் என்று! குறிப்பாக, கிருஷ்ணசாமியே கூட, பல்வேறு பேட்டிகளில் சூசகமாகவும் இலைமறை காய்மறையாகவும் மறவர் சாதியைச் சேர்ந்த ‘சில கூலிப்படை கும்பல்’தான் இதைச் செய்துள்ளது என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
14-11-2023 தேதியிட்டு, அவர் கட்சியின் சார்பாக விடுத்த அறிக்கையில், “மணக்கரை கிராமத்தைச் சார்ந்த சிலரது வன்முறைப் பின்புல வரலாறுகள் அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு வனக் காவலரையே வெட்டிக் கொன்றவர்களும் அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் அந்த ‘சிலர்’, ‘அவர்களுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன உறவு?’ கிருஷ்ணசாமிக்கு பெயரைச் சொல்ல தொடைநடுக்கம் என்றால், நாம் சொல்கிறோம்!
படிக்க: தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் டிரோஜன் அமைப்புகளாக பல்வேறு ஆதிக்கச்சாதிவெறி அமைப்புகள் செயல்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு அமைப்பு, “இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம்”. இந்த இயக்கத்தின் தலைவரும், அடிக்கடி தனது ‘சமூகத்துக்காக’ ஏதாவது கொலைசெய்துவிட்டு உள்ளே போகும் ‘முக்குலத்தோர் குல பாதுகாவலருமான’ “பேச்சிமுத்து தேவர்”, அவரது பட்டப் பெயர் “மணக்கரை பாயாசம்”. பச்சையான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு! இவர்களைப் போல ஆதிக்கச் சாதி வெறியர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர்.
சனாதனம் நமது வாழ்வியல் என்றும்; இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்தப் போவதாகவும் சொல்லும் அய்யா கிருஷ்ணசாமி அவர்களே, உங்கள் ‘இந்து’ உறவின் முறையுடன் அன்பாகப் போய் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியதுதானே. ‘இந்து ஒற்றுமை’யை உயர்த்திப் பிடிக்க வேண்டியதுதானே! என்ன தயக்கம்; ‘லஷ்மண ரேகை’யைத் தாண்டிப் பேசினால், சாயம்போய்விடுமா!
நெல்லையில் நடைபெற்ற புதிய தமிழகக் கட்சியின் பேரணியில், கிருஷ்ணசாமியின் மகன், ஷியாம் கிருஷ்ணசாமி நெஞ்சு புடைக்கப் பேசுகிறார். “அடித்துக் கொள்ளும் இரண்டும் திராவிட இனம்தானே! எந்த திராவிடக் கட்சி வந்தது, இந்த ஐம்பது ஆண்டுகளில்; “தமிழ்தேசியம்” என்று புதிதாக கிளம்பியுள்ளார்களே, தமிழ் சாதிகள் அடித்துக் கொள்வதை ஏன் தடுக்கவில்லை; இந்து, இந்தியன் என்று மட்டும் நம்மை சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால், ஓட்டுக்காக வருபவர்கள், தேவேந்திரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவதில்லை” என்று சீறியிருக்கிறார்.
இந்த வாதம், நூற்றுக்கு நூறு சரி என்கிறோம். முதல் இரண்டு கூற்றுகளில் நாமும் உடன்படுகிறோம். இக்கேள்விகளை ‘திராவிடம்’ பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளையும், தமிழ்தேசியம் பேசுபவர்களையும் பார்த்து நாமும் எழுப்புகிறோம். ஆனால், இந்துத்துவம் பற்றி பேசும் முன், அவரும் அவரது தகப்பனாரும் தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு, பின்னர் பேச வேண்டும்.
“நாங்கள் இந்துத்துவம் பேசியது தவறுதான்; சனாதனத்தை ஏற்றுக் கொண்டது தவறுதான்; இந்துத்துவம் நமக்கு எதிரி” என்று தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்பாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், அது வெறும் நடிப்புதான்!
“நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது! கொஞ்சம் இப்படியெல்லாம் பேசினால், தென் மாவட்டத்தில் பா.ஜ.க. நமக்கு ஒரு சீட்டாவது தருமா… இல்லை பேரம் படியாவிட்டால் சாதி கெத்தைக் காட்டி, அ.தி.மு.க.விடம் கேட்டுப்பார்க்கலாமா” என்ற கணக்கோடுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால்தான், ஜான் பாண்டியனைவிட, கிருஷ்ணசாமி அபாயமிக்க கோடாரிக்காம்பு என்கிறோம்.
இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள்தான் தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு உறுதுணையாக உள்ளார்கள். தங்களை தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர்களாக காட்டிக்கொண்டே அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான காரணங்களை மூடிமறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆதிக்கச் சாதி வெறியர்கள் நேரடியாக இம்மக்களை கொல்கிறார்கள் என்றால், இவர்கள் கூடவே இருந்து கழுத்தறுக்கின்றனர்.
“பள்ளர்”, “ஒடுக்கப்பட்ட மக்கள்”, “தலித்” என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; “இந்துக்களாக இணைய வேண்டும்” என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இன்னொருபக்கம், தேவர் சாதிவெறியர்களால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தாக்கப்படுவதும் தனித்த நிகழ்வல்ல; அதுவும் இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல்தான்!
எனவே, இந்த இருமுனை கத்திக்கு தேவேந்திர மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, புரட்சிகர சக்திகளோடு இணைந்து களமிறங்குவதே! அது ஒன்றுதான் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சாதி ஆதிக்க எதிர்ப்பு மரபின் இன்றைய வடிவம்.
![]()
பால்ராஜ்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

கடந்த ஆண்டு மே மாதத்தில் பற்றி எரியத் தொடங்கிய மணிப்பூர் தற்போது வரை அணையவில்லை. வன்முறைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி முரளீதரனின் நீர்ப்பு திரும்பப்பெறப் பட்டிருந்தாலும், வன்முறை சம்பவங்களும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களும் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் வன்முறையால், அரசின் புள்ளிவிவரப்படி இதுவரை 226 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் இன்றளவும் தங்களது வீடுகளுக்கு திரும்பவில்லை. சிறுவர். சிறுமிகள் பள்ளி படிப்பை இழந்து நிற்கின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் குக்கி இன மக்களே. கல்லூரிக்கு செல்ல வேண்டிய குக்கி இன இளைஞர்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்காக ஆயுதமேந்தியுள்ளனர். இந்த பேரழிவிலிருந்து எப்போது இயல்புநிலைக்கு திரும்புவோம் என்பதே ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களின் மனநிலையாக உள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடங்கியபோதே. இது மணிப்பூர் காடுகளை அம்பானி – அதானிகளுக்கு தாரைவார்ப்பதற்காகவும் மெய்தி இன மக்களை தங்களது அடித்தளமாக மாற்றிகொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் குக்கி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட இன அழிப்பு கலவரம் என்பதை “எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!” என்ற கட்டுரையில் புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் “மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான இனஅழிப்பை தொடங்கியது நான்தான்” என மணிப்பூர் மாநில பா.ஜ.க. முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஆடியோ (Audio) ஒன்று மணிப்பூர் மக்களிடையே பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, மெய்திலோன் ஆகிய இரு மொழிகளிலும் கலந்து பேசப்படும் 48 நிமிட முழு ஆடியோவையும் “தி வயர்” (The Wire) செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து காணொளியாகவும் தொடர் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோவில் பைரன் சிங், குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்காக செய்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களை யும் ‘பெருமையாக’ எடுத்துரைக்கிறார்.
பைரன் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபோது, பைரன் சிங் ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமித்ஷா மூன்று நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றிருந்தபோது, “பைரன் இனி குண்டுகளை உபயோகிக்கக் கூடாது” என உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர் வெளியேறிய பின் பைரன் சிங் அதிகாரிகளை அழைத்து “குண்டுகளை வெளிப்படையாக உபயோகிக்கக் கூடாது. ரகசியமாக உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. இதனை பைரன் சிங் சொல்லும்போது பின்னால் சிரிப்பு சத்தமும் கேட்கின்றன.
அதேபோல். “தற்போதுவரை 4000-5000 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. ஆனால், யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா? கைது செய்ய வேண்டுமெனில் அவர்கள் முதலில் முதல்வரைத்தான் கைது செய்ய வேண்டும். ஆனால், முதல்வரை கைது செய்ய முடியாது” என்று போலீசு நிலையங்களிலிருந்து மெய்தி இனவெறியர்கள் ஆயுதங்களை சூறையாடியதற்கு தான்தான் காரணம் என்பதை திமிர்த்தனமாக கூறியிருக்கிறார்.
இவற்றையெல்லாம் விட, இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. “இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் நாம் எவ்வளவு மோசமாக கேவலப்படுத்தப்பட்டோம். நாம்தான் அந்த பெண்களை காப்பாற்றினோம் என்று கூறியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் அண்ணனும் மாமாவும் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால், அவர்களால் உண்மையை நிரூபிக்க முடியாது. காணொளியில், பெண்கள் மீது கைகள் அங்கும் இங்கும் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அதை உண்மையில்லை என்று மறுத்திருக்க முடியும்” என்று துளியும் மனிதத்தன்மையே இல்லாத இனவெறிப்பிடித்த பைரன் சிங் பேசியிருப்பது கேட்போரின் ரத்தத்தை கொதிப்படையச் செய்கிறது.
மேலும், இவ்விவகாரத்தை மூடி மறைப்பதற்காக ஜூலை மாதத்தில் தொலைந்துபோன இரண்டு மெய்தி சிறுவன் சிறுமியின் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பியதும், அதற்காகவே செப்டம்பர் மாதத்தில் தற்காலிகமாக இணைய சேவை வழங்கப்பட்டதும் இந்த ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் அந்த ஆடியோவில், “குக்கி இன மக்கள் அதிக நிலம் வைத்துள்ளனர், அதிகளவில் படிக்கின்றனர், ஒதுக்கீட்டினால் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். பணிகளில் உள்ளனர். இவை அனைத்தையும் நான் பார்த்தேன், பார்த்ததும் செயல்பாடுகளைத் தொடங்கினேன். குக்கி இன மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வன நிலத்தில் அரசு நிலத்தை தேட ஆரம்பித்தேன்” என இந்த இன அழிப்பு கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்ததை பைரன் சிங் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ பைரன் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் விசாரித்து, இதனை பேசியது பைரன் சிங்தான் என்பதையும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்த ஆணையத்திடம் இந்த முழு ஆடியோ சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் “தி வயர்” இணைய தளம் உறுதி செய்துள்ளது. ஆனால், தற்போதுவரை பைரன் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பதே இந்த ஆணையம் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் காட்டுகிறது.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர். அதற்கு மோடி-அமித்ஷா தலைமை யிலான ஒன்றிய பாசிச அரசு துணை நிற்கிறது. எதிர்க்கட்சிகளும் இவ்வளவு பெரிய உண்மை வெளி வந்தும் அதுகுறித்து வாய்திறக்காமல் மணிப்பூர் மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.
எனவே, மணிப்பூர் மக்கள் வாழ்க்கையை நரவேட்டையாடிய, இக்கலவரத்தை முன்னின்று நடத்திய பைரன் சிங்கிற்கும் அதற்கு பக்கபலமாக நிற்கும் மோடி அமித்ஷா கும்பலுக்கும் எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது!
![]()
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram


06.09.2024
காலாவதியான சட்டவிரோத – சுங்கச் சாவடிகளை உடனே மூடு!
அதன் உரிமையாளர்களைக் கைது செய்!
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாட்டில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக மூன்று சுங்கச்சாவடிகளைத் திறக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருப்பதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகப்படியான அளவில் அதாவது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. நேற்றைய(05.09.2024) அறிவிப்பின்படி, இனி தமிழ்நாட்டில் 70 சுங்கச்சாவடிகள் செயல்படும்.
தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும் பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
படிக்க : தோழர் மாவோ நினைவை நெஞ்சிலேந்துவோம்!
தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக மாநில அமைச்சர் அறிவிக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடி உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சட்ட விரோதமாகச் செயல்பட்ட 30-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும் .
நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்கு 10 கிலோ மீட்டர் அப்பால் சுங்கச்சாவடி, நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி, திருமங்கலம் நகராட்சி எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
அப்பகுதி மக்கள் போராடும்போது மட்டும் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிப்பது, அடுத்த சில நாட்களில் அதை நீக்கி மீண்டும் உள்ளூர்ப் பகுதி மக்களிடம் கட்டணம் வசூல் செய்வது என்ற கொள்ளைக்கார வேலையைச் செய்து வருகிறது கிரிமினல் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம்.
சுங்கச் சாவடிகள் என்பவை தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார் உதவியுடன் அமைப்பதும் உரியக் காலத்தில் செய்த செலவினை சுங்கக் கட்டணத்தை ஈடு கட்டிவிட்டு, மீண்டும் அரசிடம் அளிப்பதுமே ஆகும்.
படிக்க : பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எதுவும் மேற்கண்ட விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எப்போது நிறுவப்பட்டன அவை செய்த செலவினத்தில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன போன்ற தகவல்கள் எதுவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஒன்றிய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும் சேர்ந்துகொண்டு கூட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.
நான்குவழிச் சாலைகளை எட்டு வழிச்சாலையாக மாற்றி முடிக்கும் வரை பழைய கட்டணத்தையே பெற வேண்டும் என்ற விதியையும் தகர்த்து எட்டு வழிச் சாலைக்கான சுங்க கட்டணத்தைச் சட்டவிரோதமாகப் பெற்று வருகின்றன சுங்கச்சாவடிகள்.
பரனூர் சுங்கச்சாவடி ஆனது காலாவதியான பின்னரும் கூட சட்டவிரோதமாகக் கூடுதலாக ரூ.28 கோடி வசூல் செய்திருப்பதாக ஒன்றிய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையை வெளியிட்டு ஓராண்டு ஆன பின்னரும் கூட அந்த சுங்கச்சாவடி அகற்றப்படவும் இல்லை. சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடியின் உரிமையாளரும் அது தொடர்பான அதிகாரிகளும் கைது செய்யப்படவும் இல்லை.
இப்படிப்பட்ட அநியாயமான- சட்டவிரோதமான- காலாவதியான சுங்கச்சாவடிகளுக்கு எதிராக மக்கள் போராடும் பொழுது, அவர்களை ஒடுக்குவதற்குத்தான் தமிழ்நாடு அரசின் போலீஸ் வேலை செய்கிறது.
மேலும், தனியார் பாதுகாவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் ரவுடிகளை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள். இந்த நிலையில்தான் செப்டம்பர் 2, 2024-ஆம் தேதி முதல் 36 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கூடுதல் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
படிக்க : மணிப்பூரில் தொடரும் வன்முறை!
காலாவதியான மற்றும் சட்டவிரோதமாகச் செயல்படும் பரனூர், கப்பலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக ஒன்றிய அரசு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் புதியதாகச் சுங்கச்சாவடிகளையும் அமைக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு:-9962366321
மெயில்:-ppchennaimu@gmail.com
செப்டம்பர் 9, 2024 – தோழர் மாவோவின் 48-வது நினைவு தினம்.
மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியைச் சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.
உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.
இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.
படிக்க : மாவோ 130 | தோழர் மாவோவிடமிருந்து படிப்பினை பெறுவோம்! | பு.மா.இ.மு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே புரட்சி பணிகளைச் செய்துவந்தார் தோழர் மாவோ. சீன புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்தினார். நீண்ட கால மக்கள் யுத்தப்பாதை எனும் கோட்பாட்டு முடிவிற்கு வந்து, பிற்போக்கு அம்சங்கள் நிறைந்த சீனாவில் ஓர் சோசலிச புரட்சியை நடத்தி முடித்தார்.
சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி நிறுவனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளைத் தோழர் மாவோ முன் வைத்தார்.
தோழர் மாவோ சிந்தனைகளை அவரது நினைவு தினத்தின் நினைவு கூர்வோம். நம் நாட்டில் பரவி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து ஓர் புரட்சியைச் சாதிக்கச் சபதமேற்போம்!
சந்துரு
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
அன்றைய நிலையில் 2 கப்பல்கள், 2 லாஞ்சுகள், வேலைக்கு மூலதனம் ஆகிய மூலதன செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய். கம்பெனியின் ஒரு பங்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையை ஒப்பீடு செய்தால்
புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கரையாபாலையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளை, கல்லுக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் விவசாய விளை நிலங்களில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ ஆகியோர் சிப்காட் அமையவிருக்கும் இடத்தைப் பார்வையிடச் சென்ற போதும் அவர்களின் வாகனத்தை வழிமறித்து கிராம மக்கள் சிப்காட் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம் என்று கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சிப்காட் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சரை அங்குள்ள மக்கள் கேள்வி கேட்ட போது மக்களைச் சமாளிப்பதற்காக தற்போது இந்த இடத்தில் சிப்காட் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் அதன் பிறகும் சிப்காட் அமைப்பதற்கான வேலைகளை அரசு அதிகாரிகள் மறைமுகமாகச் செய்து வந்ததை அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள், வியாழக்கிழமை (29-08-2024) அன்று அனைவரும் தங்கள் ஊருக்கு சிப்காட் தொழிற்சாலை வேண்டாம் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
சிப்காட் அமைய இருக்கும் இடமானது திருவாரூர் தியாகராஜ கோயில் மற்றும் தருமபுரம் ஆதீனம் ஆகிய இரு கோவில்களுக்கும் சொந்தமான இடமாகும். அந்த நிலத்தில் தான் 75 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து நேரடியாக ஆதினத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் எந்தவொரு அறிவிப்புமின்றியும், கிராமத்து மக்களிடம் கருத்துக் கேட்காமலும் திடீரென சிப்காட் வரப்போவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுவதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.
![]()
தோழர் லெனின்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

சென்ற மூன்று நாட்களுக்கு முன்னதாக, மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையின் மீது தொடுத்துள்ளது. இசுரேலின் இந்தத் தாக்குதலானது 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி தேடுதல் வேட்டையைத் தொடங்கியது முதலாக அன்றாடம் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்து வருகிறது. தேடுதலைத் தொடங்கிய அன்றே 10-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றது. ஒரு பள்ளியின் மீது தாக்குதலைத் தொடுத்து எட்டு பேரைக் கொன்றது.
ஜெட்டுகள், ட்ரோன்கள், டாங்கிகள் கொண்டு இந்தத் தக்குதலை நடத்தியது. ஒரே நேரத்தில் அருகருகே பல இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் மக்கள் எங்குமே தப்பித்துச் செல்ல இயலாத வகையில் இந்தத் தாக்குதல்கள் கொடூரமானவையாக இருந்தன.
மேற்குக் கரையின் ஜெனின், துல்கரெம், டுபாஸ் அருகில் இருக்கும் ஃபாரா அகதிகள் முகாம் ஆகியவற்றின் மீதான இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், “பாதுகாப்புப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை”க் குறிவைப்பதாகக் கூறி இஸ்ரேலால் நடத்தப்பட்டு வருகிறது.
படிக்க: காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை
அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தற்போதுவரை, காஸாவில் 40,534-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துள்ளது, இசுரேல். இஸ்ரேலின் தாக்குதலினால், 93,778 பாலஸ்தீனியர்கள் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்; உடலுறுப்புகளை இழந்துள்ளனர். இதே காலத்தில், மேற்குக் கரையில், 662 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 5,400 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஆனால், இஸ்ரேலின் இந்த கோழைத்தனமான போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸை ஒழித்துக் கட்டுவதற்காக இசுரேல் நடத்துவதாகப் கூறப்படும் இந்தப் போர் ஓராண்டை நெருங்கப் போகிறது. இஸ்ரேல் குறிப்பிட்டது போல இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை.
முடிவுறாத இந்தப் போரின் இன்றைய தருணம் நமக்கு உணர்த்துவதென்ன?
ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்த ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 19-ஆம் தேதி விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட இரானின் அதிபர் இம்ராஹிம் ரைசிக்குப் பிறகு புதிய அதிபராக மசூத் பெசஸ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
ஏறக்குறைய அதே நாளில்தான் லெபானான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஃபாக் ஷுக்ரியைப் படுகொலை செய்தது இஸ்ரேல்.
அதாவது, தற்போது நேரடியாக களத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஹமாஸின் தலைவரைக் கொன்றுவிட்டது; அதற்கு உதவியாக இருக்கும் ஹிஸ்புல்லாவின் முக்கிய இராணுவத் தளபதியைக் கொன்றுவிட்டது. இனி, வேகமான ஒரு தேடுதல் வேட்டையை நடத்துவதன் மூலம், ஹமாஸுக்கு இறுதி நெருக்கடியைக் கொடுத்துவிடலாம் என்பதற்காகத்தான் இஸ்ரேலின் ஆகஸ்டு 27-க்குப் பிந்தைய தாக்குதலா?
இல்லை, அப்படி நேர்க்கோட்டில் இந்தத் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியாது.
படிக்க: காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரானது, கடந்த 9 மாதங்களில் பல சிக்கலான வழியில் தான் நடந்து வந்துள்ளது. இன்று, இப்போரானது, மேலும் சிக்கலான, நெருக்கடியான தருணத்தை அடைந்துள்ளது.
ஜூலை மாத இறுதில் நடந்த மேற்கண்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையவை. போராளிக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டது, ஈரானின் அதிபரின் மரணம் போன்றவை, விடுதலைப் போராட்டத்திற்கு இழப்புகளை ஏற்படுத்துபவைதான். எனினும், இது பிரச்சினையின் ஒரு கூறு மற்றும் ஒரு கோணம் மட்டும்தான்.
உண்மையில், ஆகஸ்டு 19-ஆம் தேதி இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ்-வில் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தப்பட்டதானது இஸ்ரேலின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. இச்சம்பவம் வேறு கோணத்தில் பிரச்சினையைப் பார்க்க வலியுறுத்துகிறது.
இது குறித்து இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் ஒமரின் மொழிகளிலேயே பார்ப்போம்.
”இது, மேற்குக் கரையில் உள்ள பாஸ்தீனிய விடுதலைக் குழுக்கள் இரகசிய செல்களில் அதிக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கி நகர்வதற்கான வெளிப்பாடு” என்று ஒமர் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாலஸ்தீனத்தின் அதிகாரமானது, “சமூக வர்க்கங்களின் ஆதரவை இழந்து வந்தாலும், குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு கரையில் புதிய தலைமுறை பாலஸ்தீனர்களின் எழுச்சியுடன் இணைந்து போராட்டத்தை தங்களது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது” என்கிறார்.
மேலும், ஈரானில் இருந்த ஹமாஸ் தலைவர் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதனால், ஈரான் ஆதரவுக் குழுக்களுக்கும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என இஸ்ரேல் அஞ்சுகிறது என்கிறார்.
இவ்வாய்வாளர் குறிப்பிடும் இந்தக் கூறின் பொருள் என்ன?
இஸ்ரேல் நினைப்பது போல ஈரான் ஆதரவு குழுக்களுடன் ஹமாஸுக்கு தொடர்பு ஏற்படுகிறது என்பது உண்மையாக இருந்தால், அந்த அளவிற்கு ஹமாஸ் இன்னும் பலமாக இருப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பார்வை மிகவும் முக்கியமானதும் நம்பிக்கையளிப்பதுமாகும்.
எனினும், ஈரான் குழுக்களும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என்ற இஸ்ரேலின் எதிர்ப்பார்ப்பானது அடிப்படையற்றது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பீதியில் இருப்பவன் சிறு அசைவுகளையும் பார்த்து மேலும் பீதியடைவதைப் போலத்தான் இஸ்ரேலின் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது.
படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
உண்மையில், பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதற்கு ஹமாஸ் மட்டுமே காரணமல்ல. பல்வேறு இயக்கங்கள் இணைந்ததுதான் இன்றைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டமாகும்.
மேலும், பாலஸ்தீனர்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதானது பாலஸ்தீனியர்களை மேலும் போராட்டக் களத்திற்கு தள்ளியுள்ளது.
மற்றொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிவந்த துருக்கி போன்ற நாடுகள் தமது உதவிகளை நிறுத்திவிட்டன. இது இஸ்ரேல் மட்டுமல்ல, அதற்கு ஆயுத உதவிகளைச் செய்து, காஸா முனையில் இரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவையும் அச்சங்கொள்ளச் செய்கிறது.
ஜூலை மாதம் 19-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம், பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் மேற்கு கரை மற்றும் ஜெருசெலேமில் இருக்கும் அனைத்துக் குடியிருப்புகளையும் இஸ்ரேல் காலி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடக்கும் ஆகஸ்டு 19-22 தேதிகளில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதற்கு முன்னதாக, ஏப்ரல்-மே மாதங்களில் கலிஃபோர்னியா மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிவோம்.
மிகக் கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கு கரையில் தொடுத்திருக்கும் இன்றைய தருணத்தில், ஹமாஸ் தலைவர், உலகம் முழுவதும் இருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது இதன் தொடர்ச்சியாகும். இதுவும் உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அறைகூவலாகும்.
இன்னொரு பக்கம், இஸ்ரேலுக்கு இன்னொரு போர் முனை உருவாகியுள்ளது. கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 25) அன்று, ஹெஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களின் மீது 340 ராக்கேட்டுகளை ஏவி தாக்குதல்களை நடத்தியது.
இவற்றையும், இஸ்ரேலில் உள்ள தீவிர வலதுசாரிகளின் நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு, நெத்தன்யாகு கும்பல் போரைத் தீவிரப்படுத்தும் மேலும் சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறது.
தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம் பாலஸ்தீனர்கள் அனைவரையும் வெளியேற்றி, முழு பாலஸ்தீனத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என இஸ்ரேல் ஆளும் வர்க்கங்கள் கனவு காண்கின்றன. ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கம் போரைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.
மொத்தத்தில், இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரப் போவதில்லை. இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைவதும், இந்தியா போன்ற இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு எதிராக சொந்த நாட்டில் மக்கள் போராட்டங்கள் வளர்வதும்தான் பாலஸ்தீன மக்களுக்கு விடுதலை வாங்கித் தரும்.
கோழைகள் என்றைக்குமே தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை; வீரர்கள் என்றைக்குமே பணிந்து பின்வாங்கப் போவதுமில்லை.
தேச விடுதலை வேட்கை வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். உலகெங்கும் அளிக்கப்படும் ஆதரவுகள், அவர்களுக்கு உந்துதலைக் கொடுத்தே தீரும்.
சிக்கலான தருணம்தான், எனினும் போர் முடிவுக்கு வரும்!
சுதந்திர பாலஸ்தீனம் மலரும்!
![]()
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்:
அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை!
தோழர் மருது,
மாநில செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
99623 66321.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் மறைந்த நாள் 28 ஆகஸ்டு 1891.
இந்தியாவில் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, 2014-ஆம் ஆண்டு ஆட்சியமைத்திலிருந்து இன்று வரை இந்தி – சமஸ்கிருத மொழியையும் அதன் பார்ப்பனிய பண்பாட்டையும் நாடுமுழுவதும் திணித்து வருகிறது. பள்ளி-கல்லூரி பாடத்திட்டங்கள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வரை இந்துத்துவ சித்தாந்தத்தைத் திணித்து வருகிறது. இந்த பாசிச சூழலில் நாம், தமிழ் மொழியையும் பார்ப்பன எதிர்ப்பு மரபையும் உயர்த்தி பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கு முதன்மையானது என்ற பார்ப்பன கும்பலின் பிரச்சாரத்தை அடித்து நொறுக்கும் வகையில் தமிழ்மொழியே உயர்தனிச் செம்மொழி என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தார். தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் உருவாவதற்கு அது அடித்தளமாக இருந்தது.
படிக்க : நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
எனவே, கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடைபோடுவோம்.
***
தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். மூன்று ஆண்டுகள் மதராசப்பட்டினத்தில் தங்கியிருந்த கால்டுவெல், அதன்பிறகு நானூறு மையில்கல் தொலைவில் இருந்த திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியை அடைந்தார்.
தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை படித்தார். ஆங்கிலத்தில் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதி 1856-இல் வெளியிட்டார். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மை எனும் பொய்மூட்டைகளை அந்நூல் உடைத்து நொறுக்கியது.
அதாவது, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்கிற பார்ப்பனியப் பிரச்சாரத்திற்கு அனைவருமே பலியாகியிருந்த நேரத்தில் திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அதில் தமிழ் மொழி தொன்மையும் தனித்துவமும் வாய்ந்தது என்பதையும் கால்டுவெல் முதன் முதலில் ஆதாரப்பூர்வமாக நிறுவினார்.
படிக்க : மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! | பவானி பா.மோகன்
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.
சந்துரு
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்:
ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்!
பவானி பா.மோகன்,
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!