சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்
சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செயற்கைக்கோளின் துணைகொண்டு சுங்கக்கட்டணம் வசூல்: இனி, விண்ணை முட்டப்போகும் சுங்கக்கட்டணம்!
பாஸ்டேக்கு பதிலாக இந்த புதிய முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிலைநாட்டப்படும்போது, நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை ஒழித்துக்கட்டப்பட்டு, கிலோமீட்டர் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை நிறுவப்படும்.
அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!
தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய மாதபி செபியில் பணியமர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அம்பானி-அதானி கும்பலின் நலனுக்காகத்தான்.
மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்
மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.
புதுடெல்லி: குந்த குடிசை இல்லாதோரின் தலைநகரம்
ஏழை மக்களின் குடிசைப்புறக் குடியிருப்புகள் பலவற்றை கார்ப்பரேட் தேவைகளுக்காக அரசே இடித்துத்தள்ளி அகற்றிவிட்டு அம்மக்களுக்கு மாற்று குடியிருப்புக்கு வழி சொல்லாமல் நிற்கதியாக விரட்டிவிட்டுள்ளது.
மணிப்பூர்: வன்முறையைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகும் காவிக் கும்பல்
மணிப்பூர் போலீசு ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலிருந்து 7.62 மி.மீ. எம்.எம்.ஜி. (Medium Machine Guns) வாங்கியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த 21 நாள் பயிற்சி அளிக்குமாறு இந்திய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் போன்ற நாட்டின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்திக் கொண்டு காவிக் குண்டர்கள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்
"இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பல்லிளிக்கும் பா.ஜ.க-வின் நெருக்கடி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 19 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பதானது அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளதையே காட்டுகிறது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை!
மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.
“அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?
அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!
துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 6,654-லிருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது.

























