நெல்லை மேலப்பாளையம்: நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் கார் ஏறி ஒன்றரை வயது குழந்தை பலி!
ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி குழந்தை ரஹீமா தனது தந்தையின் வலக்கை பக்கமாக சாலையில் தவறி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்கள் மீள்வதற்கு முன்னால், வேகமாக வந்த ஒரு கார் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள்!
கடந்த 2017 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ், தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய், நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி, தூத்துக்குடி கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி என நான்கு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.
சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு பிணை! | ம.அ.க. கண்டனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழ்நிலையில், இத்தீர்ப்பானது குற்றவாளிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்க வழிசெய்துள்ளது. ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்திற்கான தேவையை இந்த சூழல் மேலும் வலியுறுத்துகிறது. மக்களைத் திரட்டி போராடித்தான் இது போன்ற சட்டங்களின் வழியாகக் கூட நீதியைப் பெற முடியும்.
தூத்துக்குடி கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!
சிவமதி, அபிசெல்வி என இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோம்? காதலித்த காரணத்திற்காக சுபாஷினி, கனகலெட்சுமி போன்றவர்கள் இன்னும் எத்தனை காலம் நடைப்பிணமாக வாழ வேண்டும்?
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!
இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.
தருமபுரி: அடிப்படை வசதிகளே இல்லாத கரப்பாடி பழங்குடியின மாணவர் பள்ளி
அடிப்படையான குடிநீர் வசதி கூட இப்பள்ளியில் இல்லை. மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். முறையான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு மின்சார இணைப்பு இருந்தாலும், வகுப்பறைகளில் மின்விசிறி கிடையாது.
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.
அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!
அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.
நெல்லை: கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?
சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.
மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்!
சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி “இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் உள்ளது. இங்கு அனைவரும் சமம்" என்று பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதையே ஆகாஷின் லாக்கப் படுகொலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மருத்துவர் இல்லாததால் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!
மருத்துவ கட்டமைப்பில் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறோம் என வெற்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தலைநகரான சென்னையில் டாக்டர் இல்லாததால் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கிறது.
ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம் நீக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!
பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரைப்படங்கள் மீதான தணிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கையின் மூலம் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெறித்து வருகிறது, மோடி அரசு.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகள்: தேர்வு சந்தைமயமாக்கலின் விளைவு!
மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.
நாங்குநேரி – பெரும்பத்து சாதிவெறியாட்டம்: மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி - பெரும்பத்து, இந்திரா காலனியில் நடைபெற்ற சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

























