Wednesday, June 10, 2026

நாமக்கல்: அங்கன்வாடியில் தீண்டாமை கொடூரம்!

0
புதுக்காலனி பகுதியில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

சேலம் தேக்கம்பட்டி: குடிநீர் கேட்டுப் போராடிய அருந்ததியர் மக்கள் மீது வழக்குப் பதிவு!

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை முற்றிலும் அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மக்களின் அடிப்படை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகளை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!

0
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.

செயற்பாட்டாளர்களை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டெல்லி போலீசு

0
கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

0
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

நாங்குநேரி வன்கொடுமை உண்மை அறியும் குழுவின் அறிக்கை | தலித் அறிவுஜீவிகள் குழுமம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 02/03/2026 அன்று இரவு அரங்கேறிய சாதி வெறியாட்டம் தொடர்பாக தலித் அறிவுஜீவிகள் குழுமம் (DIC) மற்றும் தமிழ்நாடு பறையர் பேரவை வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கை.

பாலஸ்தீன திரைப்படத்திற்குத் தடை: இன அழிப்பை மறைக்க நினைக்கும் மோடி அரசு | இ-போஸ்டர்

20.03.2026 ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட "தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்" (The Voice of Hind Rajab) எனும் பாலஸ்தீன திரைப்படத்தை வெளியிட பாசிச மோடி அரசு தடை விதித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின்...

கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்

நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில்...

ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”

0
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

நாமக்கல்: மின்சார இணைப்பின்றித் தவிக்கும் மக்கள் – ஏமாற்றும் தி.மு.க. அரசு

0
கர்ப்பிணிப் பெண்களும் முதியவர்களும் குழந்தைகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் விசப்பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்திலும், குழந்தைகள் விளக்கின் ஒளியில் படிக்கும் நிலையிலும் இருந்து வருகின்றனர். அதிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை! | இ-போஸ்டர்

குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை! குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவந்த ரத்தன் குமார் மேக்வால் (26) எனும் தலித் மாணவர் சக மாணவர்களின் சாதிய வன்கொடுமையால் மார்ச்...

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன் https://youtu.be/qLXs5Fwabn0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PdAgK3aL3G0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

‘சுதந்திர இந்தியாவில்’ புறக்கணிக்கப்படும் கிருஷ்ணகிரி மலை கிராமங்கள்!

அடிப்படையான குடிநீர் கூடக் கிடைக்காத நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடிப் பம்புகளின் மூலமே கிராம மக்கள் தங்களுக்கான குடிநீரை பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பம்புகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போயுள்ளன. ஓர் அடிப் பம்பில் கைப்பிடி கூட இல்லாததால் இரும்பு கம்பியை செருகி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறார்கள்.

அண்மை பதிவுகள்