ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!
புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.
வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்
2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !
கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.
குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இந்த (மோடி) அரசு பொதுத்துறைகள் உட்பட எல்லாவற்றையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருவதால், எங்கள் மண்ணில் அதானி நிறுவனம் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.
சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?
தி.மு.க-வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களை ஒரு சாதியவாதியாகவே காட்டிக்கொண்டு பல சாதி சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி !!
அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?
இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !
கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.
அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ராம்கோவிற்கு எதிரான மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமோ, ஆலை விரிவாக்கத்துக்காக கண்துடைப்பு கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறது.

























