Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 174

ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

முன்னாள் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபரான கோர்பி என்கிற மிகைல் கோர்பச்சேவ் தனது 91-வது வயதில் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு,  ஏகாதிபத்தியவாதிகள், மேற்கத்திய ஊடகங்கள் மிகுந்த நன்றி உணர்வுடன் அவருக்கு இரங்கல் தெரிவித்தன. மற்றொருபுறம், 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைவதற்குக் காரணமாக இவர் இருந்தார் என்பதால், ரஷ்ய அதிபர் புடின், கோர்பச்சேவ்-வின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதே காரணத்திற்காக சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் கோர்பச்சேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.

***

அன்றைய சோவியத் சோசலிச ரஷ்யாவின் உக்ரைன் குடியரசில் 1931-இல் பிறந்தவர் கோர்பச்சேவ். 1953-இல் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிச துரோகி குருஷேவ் கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றி, சோசலிசத்தைத் திரித்து, முதலாளித்துவப் பாதைக்கு ரஷ்யாவை இட்டுச் சென்றான். “அமைதி வழி மாற்றம்” என்ற திரிபுவாதப் பாதையை முன்வைத்தான். இதன் மூலம், உலகெங்கிலும் கம்யூனிச உலகத்தைப் பிளவுபடுத்தினான். சோசலிச ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியமாக சீரழித்தான். அமெரிக்காவுடன் உலக மேலாதிக்கப் போட்டியில் இறங்கினான்.

குருஷேவின் திரிபுவாதப் பாதையை அடுத்தடுத்து வளர்த்தெடுத்த துரோகிகளான பிரஷ்னேவ், ஆந்திரோபோவ், சேர்னன்கோவ் வரிசையில் கடைசியாக இடம்பெற்றவன்தான் கோர்பச்சேவ். ஏகாதிபத்தியவாதிகள் புகழாரம் சூட்டுவதைப் போல, கோர்பச்சேவ் சோசலிச ரஷ்யாவின் அதிபரல்ல, கம்யூனிசத் துரோகப் பாதையைப் பின்பற்றிய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபர்.

இவர் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரையில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் அதிபராக இருந்தார். இவரது கம்யூனிசத் துரோகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த துரோகிகளின் பரம்பரையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

1917-இல் உலகத்தில் முதல் சோசலிச அரசாக ரஷ்யா உதயமானது. ரஷ்யாவில் முதலாளித்துவ நாடாளுமன்றப் பாதைக்கு முடிவு கட்டி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஏகாதிபத்திய உலகத்தில் சிக்குண்ட பல நாடுகளுக்கு சோசலிச ரஷ்யா விடிவெள்ளியாகத் திகழ்ந்தது. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், அறிவாளிகள் சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். உலக முதலாளித்துவம் பிழைத்திருக்க வேண்டுமென்றால், சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஏகாதிபத்திய முதலாளிகள் பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகள், கலகங்களைத் தூண்டிவிட்டனர்; நேரடியாகவும் மறைமுகமாகவும் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தனர்; பொருளாதாரத் தடைகளை விதித்தனர். இருப்பினும், தோழர் லெனின் தலைமையிலும், அதனைத் தொடர்ந்து தோழர் ஸ்டாலின் தலைமையிலும் ரஷ்யா சோசலிசத்தை நோக்கிப் பீடுநடை போட்டு முன்னேறியது.

1930-களில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது, ரஷ்யா முன்னேற்றத்தில் இருந்தது. ஜெர்மனின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தலைமையிலான பாசிச ஆட்சிகளை வீழ்த்தி உலகத்தைக் காத்தது ரஷ்யா. இதற்காக அன்றைக்கு 2 கோடி ரஷ்யர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர்.

சோசலிச ரஷ்யாவில் விவசாயத்தில் இருந்த தனியுடைமை ஒழிக்கப்பட்டு கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தனியுடைமைகள் அனைத்துத் துறைகளிலும் ஒழிக்கப்பட்டு கூட்டுத்துவ சோசலிச உற்பத்தி முறை புகுத்தப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த சமூகமே மேற்கொண்ட இந்த பிரம்மாண்டமான உற்பத்தியால், முதலாளித்துவ உலகம் 150 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை பல நெருக்கடிகளுக்கும் இடையில் ரஷ்யா சில பத்தாண்டுகளில் அடைந்தது.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ரஷ்யாவில், இன அடையாளங்கள் மறைந்து மக்கள் ஐக்கியமடைந்தனர். “ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசுகளின் கூட்டமைப்பு” (USSR) என்று ரஷ்யா அழைக்கப்பட்டது. இது 21 குடியரசுகளும், ஒரு சுயாட்சிப் பிரதேசமும், பத்து சுயாட்சி மாவட்டங்களையும் கொண்டிருந்தது. இவை மட்டுமின்றி 2.5 கோடி பேர் பல தேசிய இனங்களாக இருந்தனர். அவர்கள் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களது மொழி, கல்வி, பண்பாடு, தனித்துவம், மத உரிமைகள் ஆகியவற்றை அவர்களே பாதுகாத்துக் கொண்டனர். பல தேசிய இனங்களைக் கொண்ட ஜனநாயகக் குடியரசாக ரஷ்யா திகழ்ந்தது. இந்தப் பாதையில் பல நாடுகள் தேசிய இன சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு சோசலிசப் பாதையில் முன்னேறின. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில், உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிசப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன.

உலகம் சிவப்பாக மாறி வருவதை ஏகாதிபத்திய முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்களது காலனி நாடுகளில் இருக்கும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், முதலாளித்துவத்திற்கு முந்தைய, அரை நிலவுடைமைத் தன்மை கொண்ட பிற்போக்காளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தமது காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கு ‘விடுதலையை’ வழங்கினர். ஏகாதிபத்தியங்களிலிருந்து ‘விடுதலை’யடைந்த நாடுகளில் ‘மக்கள் நல’ அரசுகள் உருவாகின. அந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில் ‘சோசலிசம்’ என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொது வினியோக முறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ‘ஜனநாயக’ ‘சோசலிச’ நாடுகளாகத் தங்களது நாடுகளைக் காட்டிக்கொண்டன. இதன் மூலம் தத்தமது நாடுகளில் புரட்சி வெடிக்காமல் தடுப்பதற்கான வேலையில் இறங்கின.

அந்த வரிசையில்தான், நமது நாடும், மதசார்பற்ற ஜனநாய சோசலிச இந்தியா என்று அறிவிக்கப்பட்டது; நேரு, இந்திரா ஆட்சி காலங்களில் மன்னர் மானிய ஒழிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொதுவினியோக முறையைக் கொண்டுவருதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன; இத்துடன், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய போலி கம்யூனிசக் கட்சிகள் நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் புரளத் தொடங்கியதும் நடந்தேறின.

***

சோசலிசத்தை வீழ்த்துவதற்கு இடைவிடாது சதிச் செயல்களை மேற்கொண்டுவந்த ஏகாதிபத்திய முதலாளிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கட்சியில் இருந்த முதலாளித்துவப் பாதையாளர்களான குருஷேவ்-பிரஷ்னேவ் கும்பல் மூலமாக ரஷ்யாவை முதலாளித்துவப் பாதைக்குத் திருப்பினர். புரட்சியின் மூலம் சோசலிசத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, ‘சமாதானம்’, ‘அமைதிவழி மாற்றம்’ என்ற திரிபுவாதப் பாதை முன்வைக்கப்பட்டது. உற்பத்தியில் முன்னேற்றத்தைக் காட்டுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலமாக, சோசலிச உடைமைக்குப் பதிலாக, அதிகார வர்க்க முதலாளித்துவம் புகுத்தப்பட்டது. இத்துடன் ஒற்றுமையாக இருந்த தேசிய இனங்களுக்கு இடையில் பகைமை உருவாக்கப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிகார வர்க்க முதலாளித்துவப் பாதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, புதிய ஏகபோக முதலாளித்துவத்தை நிலைநாட்டும் வகையில், சட்டப் பூர்வமாக முதலாளித்துவ தனியுடைமையை உருவாக்கி, சோசலிசம் என்பதை பெயரளவில் கூட இல்லாமல் ஒழிக்கும் வேலையைச் செய்தவர்கள்தான், இப்போது இறந்த போன கோர்பச்சேவும் அவருக்குப் பின்வந்த யெல்ட்சினும்.

தன்னை மிகப்பெரும் சீர்திருத்தவாதி என சொல்லிக்கொண்ட கோர்பச்சேவ் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கப் போவதாகவும், அரசியலில் சீர்திருத்தம் செய்ய வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதாகவும் கூறிக் கொண்டார். மறுசீரமைப்பு (பிரஸ்ட்ரோய்க்கா), திறந்து விடுதல் (க்ளாஸ்னாட்ஸ்) என்ற பெயரில் அப்பட்டமான முதலாளித்துவத்தை முன்வைத்ததுதான் கோர்பி கும்பல் செய்தது. இதன் மூலம், கோடிக்கணக்கான ரஷ்ய உழைப்பாளிகள் ரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வங்களை எல்லாம், கையளவேயான ஏகபோக முதலாளிகள் சூறையாட அனுமதித்தது மட்டுமின்றி, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சூறையாட அனுமதித்தது.

இதன் விளைவு, நெருக்கடியில் இருந்த ரஷ்யப் பொருளாதாரம் சின்னாபின்னமாக்கப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் தலைத்தூக்கியது; சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் சுகபோகங்களை அனுபவிக்கும் வகையில் சந்தைப் பொருளாதாரம் கலைக்கட்டியது. வேலையிலிருந்து பெண்கள் துரத்தப்பட்டதால், பல ஆயிரக்கணக்கானோர் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். சிறுகுழந்தைகள் கூட விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். இதற்காக, ஆண், பெண் பிஞ்சுக் குழந்தைகளின் புகைப்பட ஆல்பங்கள் உலகம் முழுதும் மேட்டுக்குடி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்காக உலாவ விடப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.

படிக்க : உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி

தங்களது சதி, நாச வேலைத் திட்டங்களை ரஷ்யாவில் நடைமுறைப்படுத்திய காலத்தில், கோர்ப்பச்சேவை ஏகாதிபத்தியவாதிகள் கொண்டாடினர். அவருக்கு 1990-இல் அமைதிக்கான நோபல் பரிசையும் வழங்கினர். ஆனால், கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிப் கவிப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர்.

‘கம்யூனிஸ்ட்’ கட்சியின் பெயரால் ஏகாதிபத்திய சேவை செய்வதற்கு பதில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து விட்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தையும், ‘ஜனநாயக’த்தையும் கொண்டு வரவேண்டும் என ஏகாதிபத்தியங்கள் யெல்ட்சினை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டன.

அப்பட்டமாக அதிகாரப் போட்டி நடந்தது. இதுமட்டுமின்றி, தேசிய இனங்களுக்குள் சண்டை மூட்டி விடப்பட்டது. மிகப்பெரும் அளவில் இனக்கலப்பு நடந்த நாட்டில், இனவெறி தலைக்கேறி, கலவரங்களும் நாடு பிடிக்கும் போட்டியும் உருவானது.

1953-இல் சோசலிச ரஷ்யாவில் தொடங்கிய முதலாளித்துவ மீட்டுருவாக்கத்தின் விளைவாக, ரஷ்ய மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தனர். 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைந்ததை அடுத்து, “சோசலிசம் வீழ்ந்துவிட்டது”, “கம்யூனிசம் தோற்றுவிட்டது” என்று சொல்லி முதலாளித்துவத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் இன்று “முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்” என்று முழங்குகின்றனர். மீண்டும் கம்யூனிசத்தின் மீதான பார்வை உலகம் முழுவதும் திரும்பிக் கொண்டிருக்கிறது. இது அடுத்த சோசலிச அலையை உலகம் முழுவதும் உருவாக்கும்; மீண்டும் உலகம் செங்கொடிகளால் சிவக்கும்; முதலாளித்துவம் முடிவினும் முடிவாக சவக்குழிக்குத் தள்ளப்படும்; அத்துடன் கோர்ப்பசேவ் போன்ற கம்யூனிசத் துரோகிகளின் கணக்கும் முடிக்கப்படும்.

அந்த நாளுக்காகக் காத்திருப்போமாக!


தங்கம்

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினைபூரில் சுமார் ஐந்நூறு பேர் வாழ்கின்றனர். இதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமம். கிராமத்தில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் குஜ்ஜர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாலும் தியாகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி தாவூத் அலி தியாகி தனது வீட்டின் முன்பு கட்டிலில் ஃபோன் பேசிக்கொண்டு இருந்தபோது, இரவு பத்து மணிக்கு அங்கு தீடீரென ஏழு எட்டு பைக்குகளில் வந்த கும்பல் கத்தி, மண்வெட்டி ,உருட்டு கட்டையாலும், சைக்கிள் செயினாலும் எந்தவொரு வார்த்தையும் பேசாமல் அந்த முதியவரை சரமாரியாகத் தாக்கியது. அவர் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அந்த கையை உடைத்தனர். உடல் முழுவதும் சரமாரியாக அடித்த அந்தக் கும்பல், தூப்பாக்கியில் வானை நோக்கிச் சுட்டு ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டபடி அவரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கூட்டிச் சென்றாலும், தியாகியால் ஒரு  வார்த்தைக் கூட பேசமுடியவில்லை. மறுநாளே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்தத் தாக்குதலையொட்டி செப்டம்பர் 3ம் தேதி கெக்ரா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 5ம் தேதி தியாகி கொலை வழக்கில் நான்கு பேரைக் கைது செய்தது காவல்துறை. ஆனால் அந்த நான்கு பேரை விசாரித்த காவல்துறை தாக்கியவர்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.

இந்த சம்பவம் நடைப்பெற்ற கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதால் முஸ்லிம் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள இளைஞர்கள் ஒரு கோவிலில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அங்கு தாக்குதலில் பங்கேற்க பல இளைஞர்களை அழைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர், சமூக ஊடகங்களில் தாக்குதலைத் தூண்டும் வகையில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

ஒரு மாதம் ஆகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதால் தியாகியின் மகனான ஷாருக், ஒரு விதமான பதட்டத்துடன் இருக்கிறார். ஷாருக்கின் தம்பியும், அவரது மாமாவும் வயலுக்கு போகும் போது மிரட்டப்பட்டு இருக்கின்றனர். ”அந்த கும்பல்களால் நாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தோம். மீண்டும் எதுவும் நடந்தால் என்ன செய்வதென்று தெரியமால் நாங்கள் இருக்கிறோம்” என்றார் ஷாருக். தியாகியின் மகளான லூப்னா, ”என்னுடைய அப்பா யாரிடமும் சண்டை போட்டது இல்லை. வீட்டை விட்டு கூட வரமாட்டார். என்னுடைய அப்பா என்ன குற்றம் செய்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?அவருக்கு ஏன் இப்படி நேர்ந்தது!” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஷாருக்கின் அப்பாவை கொலை செய்த கும்பல் பாஜகவிடம் தொடர்பில் உள்ளவர்கள் தான் என்று அப்பகுதியில் உள்ள மக்கள்  கூறுகிறார்கள். அப்பகுதியில் உள்ள  போலீஸ் அதிகாரிகள் இக்கொலைக்கு மதம் காரணமில்லை என்று கூறினாலும் இது மத அடிப்படையில் நடந்த ஒரு கொலை தான்.

அந்த பகுதியில் உள்ள இந்துத்துவா தலைவர் அங்கித் படொலே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான  ரட்டால் கிராமத்தில் (Rataul) இந்து சிறுமிகள் மற்றும் அவர்களது சகோதரர்கள் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதாகவும், காவல்துறை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறுகிறார்.

படொலே கூறுவதைப் போல எந்தப் புகாரும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்காக பாஜக முன்னெப்பதையும் விட இன்னும் கூர்மையாக மக்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது.

படிக்க: உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

“அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த நிதியுதவியும் வரவில்லை. என்னுடைய வீட்டில்  என்னுடைய தம்பியும், தங்கையும் இன்னும் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், எனது தந்தையின் சொற்ப வருமானத்தை நம்பியிருந்தோம். எங்களுக்கு வயல்களை உழுவதற்கோ மண்வெட்டியைப் பிடிக்ககவோ கூட தெரியாது” என்று தியாகியின் மகனான ஷாருக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்திய பாராளுமன்றத்திலிருந்து  நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்பத்தின் வினைபூர் கிராமத்தில் நடந்ததுள்ளது. ஆனால், எந்த ஊடகமும் இச்செய்தியை வெளியிடவில்லை; யாரும் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; எங்கும் விவாதம் கூட நடைபெறவில்லை. நாட்டின் தலைச்சிறந்த ஆட்சி என்று யோகி ஆதித்யநாத் ஆட்சியை காவிகள் குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!


ரோகித் வெமுலா

முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

0

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உட்பட 5 பேரை மும்பை  உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அக்டோபர் 14 அன்று விடுதலை செய்தது.

இந்தத் தடையை எதிர்த்து மகாராஷ்டிர அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சனிக்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை நாளாக இருந்த போதிலும் நீதிபதிகள் எம்ஆர் ஷா, பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்த மனுவினை அவசரமானதாக எடுத்துக்கொண்டு காலை 11 மணிக்கு விசாரித்தது.

சாய்பாபா மற்றும் ஐவர் விடுதலைக்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 390-ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சாய்பாபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாசந்த், “சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

படிக்க : சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மே 2104-ல் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கத்தனமான உபா (UAPA) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு மார்ச் 2017-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்தே அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

கைதான 6 பேரில் Narote என்பவர் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபா உள்ளிட்ட 5 பேரும் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் குற்றம் சாட்டி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்வதானது தொடர்கதையாகி விட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமாக சிறையிலேயே அடைக்கப்படுகின்றனர். அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு நீதிமன்றங்களுக்கு துணை நிற்கின்றன. இந்த பாசிச மோடி அரசால் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது.


பொம்மி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

நமது ஆசானும் தலைவருமாகிய லெனினை நினைவிலேந்துவீர்; அவரை நேசிப்பீர்; அவரை கற்றறிவீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, உள்நாட்டு – வெளிநாட்டு எதிர்களை எதிர்த்துப் போராடி, அவர்களைத் தோற்கடிப்பீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, புதியதொரு வாழ்வை, புதிய வாழ்க்கை முறைகளை, புதிய கலாச்சாரத்தைக் கட்டியமைப்பீர்.

சிறிய காரியங்களைச் செய்ய ஒருபோதும் மறுக்காதீர்; ஏனெனில், சிறிய காரியங்களிலிருந்தே பெரிய காரியங்கள் கட்டியமைக்கப்படுகின்றன – இது லெனினுடைய முக்கிய ஆணைகளில் ஒன்று.

– ஸ்டாலின்

ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பாளரும் தலைவருமான லெனின்

மார்க்சியவாதிகள் இரு பிரிவினராக உள்ளனர். இரு பிரிவினருமே மார்க்சியக் கொடியின் கீழ்தான் வேலை செய்கின்றனர். இரு பிரிவினரும் தம்மையே “உண்மையான” மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் எந்த விதத்திலும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மேலும், அவர்களுக்கிடையில் மலைக்கும் மடுவுக்குமான பெருத்த வேறுபாடு உள்ளது. ஏனெனில், அவர்களது வேலைமுறைகள் ஒன்றுக் கொன்று நேரெதிரானவையாக உள்ளன.

முதல் பிரிவினர், வெளிப் பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்; இவர்கள் மார்க்சியத்தின் பெயரில் ஒப்புக்கு சூளுரைப்பவர்களாக உள்ளனர். மார்க்சியத்தின் சாரத்தை கிரகித்துக் கொள்ள இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர்; மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர். இதனால், மார்க்சியத்தின் உயிரோட்டமான – புரட்சிகரமான கோட்பாடுகளை, உயிரோட்டமற்ற – பொருளற்ற சூத்திரங்களாக அவர்கள் மாற்றி விடுகின்றனர்.

இவர்கள், தமது நடவடிக்கைக்ளுக்கு நடைமுறையை, நடைமுறை அனுபவத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொள்வதில்லை; மார்க்சின் மேற்கோள்களையே அடிப்படையாகக் கொள்கின்றனர். இவர்கள் உயிரோட்டமுள்ள யதார்த்த நிலையைப் பகுத்தாய்ந்து, தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைவதில்லை; ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகம்ச்சிகளிலிருந்தும் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைகின்றனர். இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாடே இவர்களைப் பீடித்துள்ள தலையாய நோயாகும். இதனால்தான் இவர்கள் என்றென்றும் விரக்தியுறுகின்றனர்.

விதிக்கு எதிராக அடிக்கடி நொந்து கொள்கின்றனர். விதியோ அவர்களை மீண்டும் மீண்டும் கைவிட்டு விடுகிறது; “ஏமாற்றி” விடுகிறது. ரஷ்யாவில் இவர்கள் பெயர் மென்ஷ்விக்குகள்; ஐரோப்பாவில் இவர்கள் பெயர் சந்தர்ப்பவாதிகள். இவர்களைப் பற்றி தோழர் டைஷ்கா (ஜோகி செஸ்), இலண்டனில் நடந்த கட்சியின் பேராயத்தில் மிகப் பொருத்தமாகவே வர்ணித்தார். இவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி நிற்பதற்கு பதிலாக, அதன் மீது படுத்துத் தூங்குகின்றனர் என்று அவர் வர்ணித்தார்.

இரண்டாவது பிரிவினர், இதற்கு நேர்மாறானவர்கள். இவர்களுக்குப் பிரச்சினையின் குவிமையம், வெளிப்பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதல்ல; மார்க்சியத்தை மெய்யாக்குவதும், அதை நடைமுறையில் பிரயோகிப்பதுமே இவர்களுக்கு குவிமையமானப் பிரச்சினையாக உள்ளது.

இவர்கள் தமது தலையாய கவனத்தை எதில் குவிக்கிறார்கள் என்றால், நிலைமைக்கு சாலப் பொருந்தும் வகையில் மார்க்சியத்தை நனவாக்கும் வழிவகைகளைத் தீர்மானிப்பதிலும், நிலைமை மாறுகையில் இந்த வழிவகைகளை மாற்றிக் கொள்வதிலும்தான். இவர்கள் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும், ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்தும் அல்லாமல் தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கற்றாய்வதிலிருந்துதான் வந்தடைகிறார்கள்.

மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள். நடைமுறை அனுபவத்தைக் கொண்டு தமது ஒவ்வொரு அடியையும் சோதிக்கிறார்கள்; தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்; இவற்றைக் கொண்டு, புதியதொரு வாழ்வை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இவர்களின் நடவடிக்கைகளில், சொல்லுக்கும் செயலுக்குமிடையில் முரண்பாடு ஏன் இல்லை என்பதற்கான உண்மைக் காரணத்தை இதுதான் விளக்குகிறது; இவர்களிடம், மார்க்சின் போதனைகள், ஏன் உயிரோட்டத்துடனும் புரட்சிகரமான ஆற்றலுடனும் இருக்கின்றன என்பதற்கான உண்மையான காரணத்தை இதுதான் விளக்குகிறது.

மார்க்சியவாதிகள், உலகைப் பற்றி கருத்துரைப்பதுடன் மனநிறைவு அடைந்து ஓய்ந்துவிட முடியாது; மேலும் முன்னேறிச் சென்று உலகை மாற்றியமைத்தாக வேண்டும். மார்க்சினுடைய இந்தக் கூற்று, இந்தப் பிரிவினருக்குத்தான் முழுமையாகப் பொருந்தக் கூடியதாகும். இந்தப் பிரிவினரின் பெயர்தான் போல்ஷ்விக்குகள், பொதுவுடைமையாளர்கள்.

இந்தப் பிரிவினரின் அமைப்பாளர்தான், தலைவர்தான் லெனின்.

(ஜோசப் ஸ்டாலின் எழுதிய “லெனின்” என்ற நூலிலிருந்து…)

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

மீபத்தில் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த இணைக்கும் பணியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஆதார் எண்ணுடன் வாக்களர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறித்தியுள்ளனர். மேலும் இப்பணியைக் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இப்பணியைச் செய்து வருகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்ளில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று அங்கு இருப்பவர்களின் ஆதார் எண்ணுடன் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வருகிறார்கள்.

“குறிப்பாக சென்னை நகரப் பகுதிகளில் செல்லும்போது மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்று தேஞ்சி போன ரெக்கார்டர் மாதிரி ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று வேகாத வெயிலில் குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை. அவர்களின் நன்றியுள்ள ஜீவன்களான நாய்கள் எங்களை திருட வந்தவர்களென நினைத்து குரைத்து குரைத்து டையர்ட் ஆகிவிடுகிறது.


படிக்க : சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ


அப்படியே கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி, இல்லை நாங்க எப்பவோ இணைச்சாச்சு என்று கூறி நமது பதிலைக் கூட எதிர்பார்க்காமல், கதவை மூடி உள்ளே சென்றுவிடும் மனிதர்கள் மத்தியில் இல்லங்க நீங்கள் இணைத்தது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை தான்; இது வேறு என்று கூறிப் புரிய வைப்பதே பெறும் வேலையாக இருக்கிறது.

மேலும், ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவளர் பணி, அதாவது குறிப்பாக சொல்லப்போனால் நாட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது, இடை நீக்கம் செய்வது,  இறந்தவர்கள் கணக்கெடுப்பு, புதிய வாக்களர் சேர்ப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும்  இப்பொழுது புதிதாக பள்ளிகளில் தினந்தோறும் குழந்தைகளின் எல்லா தகவல்களையும் இணையதளத்தில் [online] பதிவேற்றம் செய்வது.

அதுமட்டுமல்லாமல் மேலும் இவர்கள் கல்வித் துறையில் மாற்றத்தை கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல திட்டங்களை கொண்டுவந்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களை  முடுக்கி விடுவதே இவர்களது வேலையாக மாறி விட்டது” என்று கூறுகிறார் இந்த வேலையில் ஈடுபட்ட கல்வியியலாளர் உமா மகேஷ்வரி.

இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற பணியில் ஈடுபடுவதால் என்னால் வேறெந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் “நாளை பள்ளிக்குச் செல்வதற்கு முன் ஏற்பாடு மேற்கொள்வதா? பாடக் குறிப்புகளை தயார் செய்வதா? சமையல் செய்வதா? துணிகளை துவைப்பதா? தாயை கவனிப்பதா?” என்று கண்ணீர் விட்டு தன் கஷ்டத்தை இணையதளத்தில் காணொளி  மூலம் வெளிப்படுத்தினார்.

இந்தக் காணொளி சமூகத்தில் பேசு பொருளானவுடன் நமது கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கடந்த செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பேசியபொழுது, ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்கள்; ஆதலால் ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிடுவதைப் பற்றி முதல்வர் கவனத்திற்குக் கொண்டுசென்று உரிய தீர்வு காணப்படும்” என்று கூறினார்.

அவர் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு கண்டதை, ஆசிரியர்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதைக் காண்பதன் மூலம் நம்மால் புறிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களும் இதுபோன்ற வேலைகள் செய்வதற்கு மதியம் 2 மணிக்குமேல் சென்றுவிடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போய்விடுகிறது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக்கொண்டதால் அவர்களுடைய கற்றல் திறன் என்பது குறைந்துபோனது. அதன் பிறகு இப்பொழுதுதான் பள்ளிகள் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களிடத்தில் நேரத்தைச் செலவிட்டு அவர்களுடைய கற்றல் திறனை வளர்த்தெடுத்து வரும் நிலையில், இப்பொழுது மீண்டும் ஆசிரியர்களை அரசாங்கத்திற்குத் தேவையான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் ஆசிரியர்கள் மீண்டும் மாணவர்களிடத்தில் செலவிடும் நேரம் என்பதும் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மீண்டும் கேள்விக்குறியாகிறது.

இங்கு ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி என்பது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் கேவலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவில் இருகிறது. ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சரியாகக் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கவைத்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெற்றோர்கள் மட்டும்தான் தனது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்கள்.

இப்போது அவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று இந்த அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து அதை ஒவ்வொன்றாக அரசு கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தி மாணவர்கள் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதே சமயத்தில்தான் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆண்டிற்கு 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறியது. அதற்குத் தேவையான நிதியையும் அரசாங்கம்தான் வழங்கி வருகிறது.


படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


குறிப்பாக அரசுக் கல்வி நிறுவனங்களிலே “இல்லம் தேடிக்கல்வி”, “எண்ணும் எழுத்தும்” இதுபோன்ற புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தச் செலவிடும் நிதிகளையும் தனியார் கல்வி நிறுவனத்தில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கச் செலவிடும் நிதிகளையும் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கி, ஆசிரியர் பற்றாக்குறையை ஏன் சரி செய்யக்கூடாது, சீர்குலைந்து இருக்கும் உள்கட்டமைப்பு வசதியை ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது, அரசுப் பள்ளிகளில் 5583 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன; அதை ஏன் சீரமைக்கக் கூடாது. இந்த அரசு நினைத்தால் இதையெல்லாம் செய்யலாம்; ஆனால் இந்த அரசு செய்யாது.

ஏனென்றால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பற்றியும் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு கொஞ்சம் கூட கவலை கிடையாது. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களிடம் சேரவிடாமல் இவர்களுடைய வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்களின் ஒரே நோக்கம், கல்வியைத் தனியார்மயமாக்குவதும், அதை பண்டப் பொருளாக மாற்றுவதும்தான்.

ஆகையால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தனியார்மய கொள்கையையும் இந்த கொள்கையை நிறைவேற்ற உதவி செய்யும் இந்த அரசாங்கத்தையும் தகர்த்தெறிந்தால் மட்டும்தான் இங்கு கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்.


செழியன்

பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !

2022 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலின பாகுபாட்டுக்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் புத்தகங்கள் மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு போன்றவற்றை பற்றியதாக இருப்பதாக பலரும் பெருமைபட கூறி வருகின்றனர். “எழுத்து என்பது ஓர் அரசியல், சமூக சமத்துவமின்மை பற்றிய ஒரு விழிப்புணர்வை அளிக்கிறது” என்று ஆனி எர்னாக்ஸ் கூறுகிறார்.

ஆனி எர்னாக்ஸ்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான குறிப்புகளை படிக்கும் போதோ அல்லது ஆனி எர்னாக்ஸ் எழுத்து பற்றி கூறுவதை கேட்கும் போதோ பலருக்கும் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருக்கப்போதில்லை. ஆனால் சமூக சமத்துவமின்மைக்கு அடிப்படை காரணங்களான சுரண்டல், செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுதல், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி, ஏகாதிபத்தியங்களுக்கான பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி ஆனி எழுதுவாரா அல்லது அவ்வாறு எழுதினால் நோபல் பரிசு கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது என்பதற்கான பதிலாகவே பொருளாதரத்துக்கான நோபல் பரிசு யாருக்கு, எதற்கு வழங்கினார்கள் என்பதில் இருக்கிறது.

***

அமெரிக்காவைச் சேர்ந்த பென்.எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக  இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!


இவர்களின் ஆராய்ச்சி என்பது நவீன வங்கிகள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் தொடர்பானதாகும். 1980-களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோரால் இந்த ஆராய்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

2020-இல் தொற்றுநோய் தாக்கியபோது, உலகளாவிய நிதி நெருக்கடியைத் தவிர்க்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த பிந்தைய நெருக்கடிகள் சமூகத்திற்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் புதிய மந்தநிலைகளாக உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ததில் இவர்களின் நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்தன என்கின்றன ஊடகங்கள். அதென்ன நுண்ணறிவு?

பென்.எஸ்.பெர்னான்கே அளித்துள்ள செய்திக் குறிப்பில், “இங்கே ஒரு முரண்பாடு உள்ளது எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால், சேமிப்பாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அணுக விரும்புகிறார்கள். இது ஒரு அடிப்படை சிக்கலை முன்வைக்கிறது, இது வங்கிகளையும் பணத்தையும் நிலையற்றதாக ஆக்குகிறது மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சிக்கு ஆளாகிறது” என்கிறார்.

மக்கள் தங்களுடைய சேமிப்பை திடீரென எடுப்பது என்பது ஏன் நடைபெறுகின்றது.  கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பல லட்சம் கோடிகளை வாரியிறைப்பதால் வங்கிகள் சரிகின்றன. அதனால் மக்கள் பீதியடைந்து தங்களின் முதலீடுகளை திரும்பப்பெறுகின்றனர். ஆனால் இந்த எளிய உண்மையை மறுத்து மக்கள் பணம் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற மக்களின் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதல்லவா இவர்களின் நுண்ணறிவு.

வங்கிகளின் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணமான வங்கிகளை சந்தைப்படுத்துவதை எதிர்க்காமல், வங்கிகள் சந்தைப்படுத்துவதை ஒழுங்கமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

டயமண்ட் மற்றும் பிலிப் இருவரும் இணைந்து ஏன் வங்கிகள் வெளியேறுகின்றன? வரவிருக்கும் சரிவு பற்றிய வதந்திகளின் பாதிப்பு, இந்தப் பாதிப்பை சமூகம் எப்படி குறைக்க முடியும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்களாம். இவர்களின் ஆராய்ச்சிகள் நவீன வங்கி ஒழுங்குமுறையின் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறதாம்.

வங்கிகள் மக்கள் பணத்தை சூறையாடி கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றுவதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற அரசு பெயில் அவுட் என்று அரசின் கஜானாவை காலி செய்வதும் வதந்தியாம். இந்த வதந்தியை நம்பக் கூடாது என்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற ஆய்வறிஞர்கள். ஆக 1% பேருக்காக 99% பேர் வறுமையில் உழல்வதும் கூட வதந்தியா?

***

அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதுமான பொருளாதார நெருக்கடிகடிக்கு மூலக்காரணமே சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய கொள்கைகளால் மூன்றாம் உலக நாடுகளும் ஏன் வளர்ந்த நாடுகளும் கூட திக்கித் திணறி மூச்சுவிட முடியாமல் இன்றைக்கோ நாளைக்கோ என்று சாகும் தருவாயில் இருக்கின்றன.


படிக்க : கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ


முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளேயே முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகள் மேலும் மக்களை புதைக்குழிக்குள்ளேயே தள்ளும். எத்தனை ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை சில ஆண்டுகளில் இன்னோர் பொருளாதார புதை குழிக்குள்ளே தள்ளும். ஏனெனில் முதலாளித்துவ – ஏகாதிபத்திய பொருளாதாரம் இயல்பிலேயே ஒருபுறம் முதலாளிகளுக்கு செல்வத்தையும் மறுபுறம் உழைக்கும் வறுமையையும் குவிக்கும்.

இப்படி ஒருபுறம் மென்மேலும் குவிக்கப்படும் செல்வமும் இன்னொருபுறம் தாங்கவொண்ணா வறுமையும் சுரண்டலும்தான் சமத்துவமின்மைக்கு அடிப்படை.. பெரும்பான்மை மக்களின் உழைப்பை உறிஞ்சுவதால் அல்லவா பணக்கார அட்டைகள் கொழுத்துப்போயிருக்கின்றன. இதை மாற்றியமைக்க வேண்டுமென்றால் சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை அல்லவா ஒழித்துக்கட்ட வேண்டும்.

மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு, சமத்துவமின்மை, பாகுபாடு போன்றவற்றை பற்றி எழுதும் ஆனி எர்னாக்ஸ்க்கு ஒரு நோபல் பரிசு, சமத்துவமில்லா உலகை தக்க வைக்க ஆய்வு செய்த அறிஞர்களுக்கும் நோபல் பரிசு. நோபல் பரிசுக்குழுவினரின் சமத்துவம்’ பல் இளிக்கிறது.


மருது

ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் மதவெறிக் கலவரங்களைத் தூண்டவும் தி.மு.க.வை ஒழித்துக் கட்டவும் என்னவெல்லாம் துருப்புச் சீட்டுகள் கிடைக்கின்றன என ஆராய்ந்து சொல்வதற்கே தனியாக ஒரு குழுவை அமைத்து வேலைசெய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வார்டு அளவில் தொடங்கி, வட்டாரம், மாவட்டம், மாநிலம் என பிரச்சினைகளை வகைபிரித்து உருவாக்கி, அதற்கு ஏற்றார் போல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது அக்கும்பல்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் பிணத்தை வைத்து தமிழகத்தில் மதமோதலை தூண்ட முயன்றது, தி.மு.க.விற்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் அங்கங்களே.

இவையெல்லாம் விவாதப் பொருளாக தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தைச் செலுத்தினாலும், எந்தவொரு குறித்த நடவடிக்கைகளிலும் காவிக் கும்பல் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. லாவண்யா விசயத்தில், பா.ஜ.க.வின் தகிடுதத்தங்கள் அம்பலப்பட்டு நாறிப் போயின.


படிக்க : கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!


அண்மையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டவையே. அதிலும், தற்போது மூக்குடைபட்டு போயுள்ளது.

***

செப்டம்பர் 6 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டமொன்றில் நிகழ்த்திய உரையில், “இந்துமதம் நம்மை சூத்திரர்களாக ஒதுக்கிவைத்துள்ளது; மனுதர்மம் சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்கள், வேசிமக்கள் என்கிறது. ஆகவே மானமுள்ள யாராவது இந்துவாக இருக்க முடியுமா?” – என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா. செப்டம்பர் 12ஆம் தேதி இவ்வுரையை அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிரச்சினையைத் தொடங்கி வைக்கிறார்.

மனு தர்மத்தை எடுத்துக் காட்டி பேசியதை மறைத்து, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் எனக் கூறிவிட்டார் என்று திரித்து பிரச்சாரம் செய்தது காவிக் கும்பல். “ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்”, “தி.மு.க. ஆ.ராசாவை பதவியிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” – போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது.

எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் மட்டுமல்லாது, மன்னார்குடி ஜீயர், பூசாரிகள் பேரவைத் தலைவர் என தமது ‘ஆன்மிகப் பெரியோர்கள்’ மூலமாகவும் இந்துக்களை வீதியில் திரட்டப் போராடியது. மனு கொடுக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், நீலகிரி, புதுவையில் கடையடைப்பு என முடிந்த அளவிற்கு மிரட்டிப் பார்த்தும் பயனில்லாமல் தோற்றுப்போனது பாசிசக் கும்பல்.

பௌத்த-சமணர்கள், திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என தொடர்ச்சியாக தமிழகத்திற்கே உரிய பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் ஆ.ராசாவுக்கு துணை நின்றது. “ஆ.ராசா பேசியதில் என்ன தப்பு?” – என தமிழகம் தாக்குதல் நிலையில் பேசும் என்று சங்கிக் கூட்டம் எதிர்பார்க்கவில்லை.

மனுதர்ம எரிப்பு போராட்டங்கள், மனுதர்ம விளக்கக் கூட்டங்கள் உள்ளிட்டு பல வடிவங்களில் ஜனநாயக அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். சமூக ஊடக விவாதங்களில், ஜனநாயக சக்திகள் அனைவரும் நிபந்தனையின்றி ஆ.ராசாவை ஆதரித்தும் மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும் பேசினார்கள். தான் பேசிய கருத்தில் உறுதியை வெளிப்படுத்திய ஆ.ராசா, “நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கனும் லூசு” என்றார்.

விளைவு, “ஆ.ராசா மேற்கோள் காட்டியது, வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்த மனுதர்மம்”, “நாங்கள் சொல்கின்ற மனுதர்மத்தில் சில பிற்போக்கு கருத்துக்கள் இருந்தாலும் வேசிமக்கள் என்றெல்லாம் இல்லை”, “ஆ.ராசா கூறும் பொருளில் இல்லை”, “சூத்திரர்கள் என்றால் அதற்கு வேறு பொருள் உள்ளது”, “பல்வேறு மனுதர்மங்கள் உள்ளன, நாங்களே எல்லா மனுதர்மத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை”, “பழசெல்லாம் இப்போது எதற்கு” – என்று படுத்தே விட்டது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

***

அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றது காவிக் கும்பல். ஆனால், தமிழக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போலீசு அனுமதி மறுத்துள்ளது. இது சங்கிக் கும்பலுக்கு ஏற்பட்ட அடுத்த கால்முறிவு.

காஷ்மீர் முதல் கேரளா வரை, எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று புலம்பியது காவி கும்பல்.

காந்தி ஜெயந்தி, 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாள், விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தபோதே, அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் மனுதாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்தால், மதவெறிக் கலவரத்தில் ஈடுபடுவார்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று அவர் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், காந்தியைக் கொலைசெய்த அமைப்பே காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுவது அவரை இழிவுபடுத்துவது என்றும், அம்பேத்கரின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள், அவரது 130-வது பிறந்தநாளே முடிந்தபின்பு, நூற்றாண்டு கொண்டாடப் போகிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால், தமிழக போலீசுத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று மிரட்டியது. நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தமது பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டலாம் என்று கனவுடன் இருந்த ஆர்.எஸ்.எஸ் கண்களில், மண்ணைத் தூவியது திருமாவளவனின் மற்றொரு அறிவிப்பு.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தும் அதே அக்டோபர் 2 ஆம் தேதி, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தப்போவதாக அறிவித்தார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த அறிவிப்பை ஆமோதித்து, சி.பி.ஐ, சி.பி.எம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் உள்ளிட்டு 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள், தங்கள் கட்சிகளும் பேரணியில் பங்கேற்கும் என்று அறிவித்தன.

முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், நாம் தமிழர் கட்சியின் சீமானும் இப்பேரணியை ஆதரித்து பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். திராவிட எதிர்ப்பையே தன் மைய அரசியலாகக் கொண்டிருந்த சீமான், திடுமென இதுபோன்ற நிலையெடுக்கும் காரணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து ஜனநாயக சக்திகள் மேற்கொள்கின்ற கூட்டுப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்பது அக்கட்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலின் கொட்டம் தீவிரமடையத் தீவிரமடைய, மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகம் உறுதியாக அதை எதிர்த்து மோதுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளாக அறியப்படும் யாராக இருந்தாலும் ஒன்று அவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பு அணியில் நம்மோடு நிற்க வேண்டும், இல்லை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வோடு இணைந்துகொண்டு எதிரணியில் நிற்க வேண்டும் – இதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் போக்கு. சீமான் இதைப் புரிந்துகொண்டுவிட்டார் என்று சொல்லலாம்.


படிக்க : இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இது முழுமுதல் மாற்றம் இல்லை – திராவிட எதிர்ப்பை சீமான் கைவிட்டுவிடவில்லை – என்றாலும், இந்த மாற்றம் – ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பில் கைகோர்ப்பது – பாசிச எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான நகர்வு. இதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களின் மனிதச் சங்கிலிக்கும் அனுமதி மறுத்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேநேரம், மாற்று ஏற்பாடாக நவம்பர் 6-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் போலீசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

அரசுக் கட்டமைப்பு முழுவதும் பாசிசமயமாகிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பில் முதன்மைப் பங்காற்றுபவை களப் போராட்டங்களே. பார்ப்பனியம் இன்று பார்ப்பனிய பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர், தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ

ல்கி எந்த காலகட்டத்தில் எழுதினார்; ஏன் அதுவும் 1950லிருந்து1954 வரையிலான காலகட்டத்தில் இப்படியான வரலாற்றை எழுதினார்; அதற்கு பின்னனி என்ன? கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றிமைப்பது.

இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டகளின் வரலாறு தான். மன்னர்கள் வந்தார்கள், போனார்கள் என்பது தான் வரலாறா? தமிழின் பெருமையை பேசினால் தமிழன் மயங்கிவிடுவான் என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. தமிழ்நாட்டின் சினிமாவை ஆர்.எஸ்.எஸ் கவ்விவிட்டது.

மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை, தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

நன்றி : தமிழ் மின்ட்

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

11.10.2022

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு !
அமித்ஷா குழு பரிந்துரை !
தேவை மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் !

கண்டன அறிக்கை !

ன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் அலுவலகங்கள், இலாகாக்கள் அளிக்கும் கடிதங்கள், பதில்கள், மின்னஞ்சல்கள் ஆகிய அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; அரசின் விளம்பரங்கள், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் அக்குழு அளித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால் அதன் விளைவாக தாய்மொழி அழிக்கப்படும். ஒவ்வொரு இனத்தின் மொழியும் அழிக்கப்படும் போது அதன் பண்பாடும் வரலாறும் சேர்த்து அழிக்கப்படும்; அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்.


படிக்க : 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !


வட இந்தியாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு / அழித்துவிட்டு இந்திதான் அம்மக்களின் தாய்மொழி என்பது போன்ற ஒரு தோற்றத்தை பொய்யாக உருவாக்கியது போலவே இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட பொய்த் தோற்றத்தை உருவாக்க முயல்கிறது பாசிச மோடி அமித்ஷா கும்பல்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1935 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களே தாய்த்தமிழைக் காப்பாற்றியது.

1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி வைத்த கல்லூரி மாணவர்களின் எழுச்சியானது பள்ளி மாணவர்கள் இளைஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் என பற்றிப் பரவியது. இறுதியில், பொள்ளாச்சியில் இந்திய ராணுவம் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றதும் தமிழ்நாடு அரசின் போலீசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் முரண் ஏற்பட்டதும் தமிழ்நாடு மக்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு ஆகும்.

வேறுவழியின்றி அன்றையகாலக்கட்டத்தில் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி கட்டாய இந்தித் திணிப்பை திரும்பப் பெற்றார். கட்டாய இந்தித் திணிப்பை ஏற்காத மாநிலங்கள் இருக்கும் வரை அதை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார்.

ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக கடந்த 57 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் இந்தித்திணிப்பு படிப்படியாக கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஒரே சம்மட்டி அடியாக அடித்து அனைத்து தாய் மொழிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடி அமித்ஷா பாசிச கும்பல். அதனால்தான் அமித்ஷாவின் தலைமையில் இருக்கக் கூடிய நாடாளுமன்ற நிலைக் குழுவானது இப்படிப்பட்ட ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலம், தாய் மொழி என்று மூன்று மொழிகளிலும் அனைத்து பத்திரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை இன்னொரு நிலைக்குழு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையும் விரைவில் படிப்படியாக மாற்றி அனைத்து மாநிலங்களிலும் பத்திரப் பதிவுகள் மேற்கண்ட மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் என்பது இந்தியில் பத்திரப்பதிவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு வரலாம்.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறைகளிலும் திட்டமிட்டு வட நாட்டவர்களை நுழைத்து அதன் மூலம் தமிழர்களையும் தமிழையும் அரசுப்பணிகளில் இருந்து ஒழித்துக்கட்டும் வேலை தொடங்கி நடந்து வருகிறது.

சி.பி.எஸ்.இ என்று கூறப்படும் பள்ளிகளில் தமிழே தெரியாமல் எந்த ஒரு மாணவனும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

ஆக தமிழும் தமிழ்ப் பண்பாடும் தெரியாத தமிழர்களை உருவாக்கி அவர்களை தன்னுடைய இந்து ராஷ்டிரத்தை நோக்கிய பயணத்திற்கு ஆதரவாளர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.


படிக்க : “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?


ஆரிய – பார்ப்பன, வேத எதிர்ப்பே தமிழ் – திராவிட பண்பாட்டின் அடிநாதம். நான்கு வர்ண, சாதி போன்ற இழிவான பண்பாட்டுக்கு எதிராக பல்வேறு இலக்கியங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்தது திருவள்ளுவர், சித்தர் முதல் வள்ளலார், பெரியார் வரையிலான  தமிழ் – திராவிட பண்பாடு.

இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதில் அனைத்து தாய் மொழிகளையும் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு, உணர்வுகளையும் அழிப்பது என்பது ஒரு முக்கியமான மைல்கல். அதைக் கடப்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிச கும்பலின் இன்றைய முக்கியமான தலையாய கடமை.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக இந்தித்திணிப்பு என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசத்தை நிறுவும் முயற்சிகள் அனைத்தையும்  தூளாக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

அமித்ஷா குழுவின் இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

0

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக!

அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

தமிழகத்தில் சாதி, மத கலவரங்கள் மூலம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழ்நாட்டை கைப்பற்ற துடிக்குது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல்.

அந்த நாசகர நோக்கத்திற்காக பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

அந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், நாட்டின் உழைக்கும் மக்கள் ஆகியோருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் முற்றிலும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற இலக்கிலும்,
இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பார்ப்பன பாசிச கும்பலுக்கு எதிரான களம் தான் தமிழ்நாடு என்பதை அறிவிக்கும் விதமாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி – மனித சங்கிலியை தமிழகமெங்கும் நடத்தப்பட உள்ளன.

இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் என்பது தமிழகத்தில் உள்ள மற்ற அமைப்புகளைப் போன்றதல்ல! அது ஒரு பாசிச அமைப்பு. அதன் வழிமுறையே நாடு முழுவதும் குண்டு வைப்பதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்வதும், அச்சுறுத்துவதும் அதன் வழிமுறையாகும்.

இதன் நோக்கம் இந்து ராஷ்டிரமே. ஆர்.எஸ்.எஸ் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரம் என்பது மத சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்கு எதிரான ஒரு பாசிச அரசு தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசிச அரசை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.

உலகத்திலேயே தொடர்ச்சியாக 100 ஆண்டுகள் இயங்கிய ஒரே பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே. அந்த அளவுக்கு அதன் உள் கட்டமைப்பு இறுக்கமாகவும், நுணுக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவது நாட்டின் நலம் மீதும், மக்கள் நலன் மீதும் அக்கறை கொண்டவர்களது இயல்பான கோரிக்கையே. அது மட்டுமன்றி அந்த அமைப்பு முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அளவுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டின் மரபு என்பது பௌத்தம், சமணம் உள்ளிட்ட நெறிமுறைகளாலும், திருவள்ளுவர் சித்தர்கள் வள்ளலார், பெரியார் போன்றவர்களுடைய சிந்தனைகளையும் வரித்துக் கொண்ட சனாதன எதிர்ப்பு மரபாகும்.

வைதீக, வேத, பார்ப்பன, ஆரிய எதிர்ப்பு மரபே தமிழ்நாட்டின் மரபு. அந்த மரபின் தொடர்ச்சியாகவே, நாம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை முறியடிக்கும் பொறுப்பை உணர்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் வெறியனான கோட்சே காந்தியைக் கொன்றது அப்பட்டமான மதவெறியின் துவக்கமாகும். காமராசரைக் கொல்ல முயன்றது அதன் தொடர்ச்சியாகும்.

அம்பேத்கரது நூற்றாண்டு விழாவின்போது அவரது பெயர் சூட்டப்பட்ட மரத்வாடா பல்கலைக் கழகத்தை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ், இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல். ஒவ்வொரு இடஒதுக்கீடு பிரச்சினையின் போதும் மாணவர் அமைப்பான ABVP மூலம் கலவரங்களை முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி, அம்பேத்கர் ஆகியோரை முன்னிறுத்தி அவர்களின் நினைவாக பேரணி நடத்தவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பது கேலிக்கூத்தான விசயம்.

தமிழ்நாட்டில் சாதி மற்றும் மதக் கலவரங்களை உருவாக்கி இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் தயாராக இருக்கிறது.

இதன் மூலமாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டமும் இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனது கார் மீது செருப்பை வீசியது, முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவை சமீபத்திய உதாரணங்கள்.

இப்படிப்பட்ட நாசகர நோக்கமுடைய பாசிச ஆர்.எஸ்.எஸ், பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

அதுமட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி போன்ற பாசிச அமைப்புகள் தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடே ஒருமுகமாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிர்ப்பை பதியவைக்கும் விதமாக அக்டோபர் 11 ஆம் தேதி விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்திருக்கக் கூடிய சமூக நல்லிணக்கப் பேரணியை வரவேற்பதுடன் அப்பேரணியில் எமது அமைப்புகள் கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

அக்டோபர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

அக்டோபர் இதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கள்: ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

♦ காவி பயங்கரவாதமே அரசாளுகிறது!

♦ சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

♦ ‘வல்லரசு இந்தியா’ யாருக்காக?

♦ துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

♦ உ.பி உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்களே!

♦ மின் கட்டண உயர்வு: தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு!

♦ ஜி.பி.எஸ் சுங்கக் கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

♦ பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

♦ ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ

0

சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ

சின்மயா மிஷன் பள்ளி அம்பேத்கரும் அப்துல்கலாமும் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வியை வினாத்தாள்களில் கேட்டுள்ளது. இதை பற்றி விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இரண்டாம் எலிசபெத் மரணம்! வருந்துவதற்கு நம்மிடம் மீதம் ஒன்று உள்ளது.

ழுபது ஆண்டுகள், 214 நாட்கள் என்று மிக நீண்ட ஆட்சிகாலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சென்ற மாதம் 8 ஆம் தேதி இறந்தார். இறக்கும் வரை இங்கிலாந்து உட்பட காமன்வெல்த்தின் 15 நாடுகளுக்கு ராணியாக இருந்தார். இந்தியாவில் இருந்து திருடிக்கொண்டுப்போன கோஹினூர் வைரத்தை தன்னுடைய கிரீடத்தில் வைத்துக்கொண்டு எவ்வித மான ஈனமின்றி திரிந்த எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். ”மறைந்த மகாராணி 2 ஆம் எலிசெபத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 11 ஆம் தேதி ஒருநாள் இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

காலனிய கால மிச்ச சொச்சங்களை ஒழித்துக்கட்டுவோம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி ராஜ பாதையை கடமை பாதை என்று மாற்றினார் மோடி. மேலும் இராணுவத்தில் இருந்த காலனிய கால பழக்க வழக்கங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன என்று பெருமையாக பீற்றிக்கொள்ளப்பட்ட சூழலில்தான் எலிசபெத்தின் மறைவும் அதற்கு ஒன்றிய அரசின் ஒரு நாள் துக்க அறிவிப்பையும்  பார்க்க வேண்டும்.

படிக்க : கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

என்னதான் இருந்தாலும் இறந்துபோன ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது தவறா? என்னதான் ஊரில் ஒரு கெட்டவன் இறந்தாலும் அஞ்சலி செலுத்துவது மரபல்லவா என்று பலரும் வகைவகையாக பல வினாக்களை எழுப்புகிறார்கள். எல்லாவற்றிலும் அரசியல் பேசக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்துடன் பாருங்கள் என்கிறார்கள்.

வாழ்க்கை என்றால் சரி, தவறு என இரண்டுமேதான் இருக்கும் உங்களுக்கு தேவையான நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்கள் என்கிறார்கள். இப்படி பேசத் தொடங்கினால் முசோலினி, ஹிட்லர், இடி அமீன், எம்.ஜி.ஆர், ஜெயா, அத்வானி, மோடி உள்ளிட்ட அனைத்து பாசிஸ்டுகளுமே ஏதோ ஒரு வகையில் நல்லவர்களாகிவிடுவார்கள்.

மோடியின் காவி – கார்ப்பரேட் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை  ஈர்ப்பதற்காக 56 இன்ச் மார்பும் இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்ற சிறப்பும் பேசப்படுகின்றது. எம்.ஜி.ஆர் என்னதான் பாசிஸ்டாக இருந்தாலும் வெள்ளையாக, அழகாக இருக்கிறார் அல்லவா அதற்காகவே ரசித்துத்தான் தீர வேண்டும் என்று மறைமுகமாக பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதுநாள் வரை பாசிஸ்டுகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நியாப்படுத்துவதற்கு அவர்களின் மரணம் பயன்படுத்தப்படுகின்றது.

இது ஏதோ ஹிட்லர் முதல் மோடி வரையிலான பாசிஸ்டுகளை நியாயப்படுத்துவதற்காக மட்டுமல்ல; இப்படிப்பட்ட பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு சொல்லொண்ணா துயரங்களை உனக்கு தருவோம் நீ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் மறைமுக கட்டளை. ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதோ அல்லது அஞ்சலி செலுத்துவது என்பதோ அவர் இது நாள் வரை மேற்கொண்ட செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.

ஒரு நாட்டிடம் இத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்தோம் என்பதை  அவமானமாகக் கருதாமல் அதை பெருமையாகவும் நினைப்பதே எலிசபெத் மறைவுக்கான இரங்கலின் சாரம்சம். காலனிய மிச்ச சொச்சங்களை மாற்றுவது என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் நகரங்களின் முசுலீம் பெயர்களை ஒழிப்பதையே வேறு வெர்ஷனில் செய்யப்போகிறார் மோடி.

ஏனென்றால் மேக் இன் இந்தியா என்று அறிவித்த பின்னர்தான் உலகின் மிகப்பெரிய படேல் சிலையை சீனாவில் தயாரித்து கொண்டுவந்து நிறுவினார்கள். காலனிய மிச்சசொச்சங்களை ஒழிக்க வேண்டுமென்றால் தற்போது நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து கனவெல்லாம் இறுதி வரை பகற்கனவாக மட்டுமல்லவா இருக்க முடியும்?

இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்பட்ட எலிசபெத் அலெக்சாந்திரா மேரி தனது 94வது வயதில் இறந்து போனார். இங்கிலாந்தின் மக்கள் தொகையில் அல்லது உலக மக்கள் தொகையில் ஒன்று கழிந்தது என்பதைத்தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் இரண்டாம் எலிசபெத் பற்றிய பழைய தகவல்கள் எல்லாவற்றையும் விசிறியடித்து அவற்றுக்கு எல்லாம் மக்களை உச் கொட்ட வைத்திருக்கிறது.

இப்படி வயதான பெண்மணி இருந்தது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு தெரியாத அல்லது அவசியமில்லாத நிலைதான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் ஏன் எதற்காக மக்களின் சோகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

இருக்கும் வரை ஜெயலலிதாவை பாசிசப்பேய் என்று கூறிவிட்டு அவர் இறந்த பின்னர் இரும்பு மங்கை என்பதன் அர்த்தம் என்ன? இது வரை ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதுதானே. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தான் செலுத்திய அஞ்சலி பாடும் திறமைக்குத்தானே தவிர, தன்னுடைய வீட்டை சங்கர மடத்துக்கு எழுதி வைத்ததற்காக அல்ல என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமோ அதை விட மோசமானது எலிசபெத்துக்காக வருந்துவது.

எலிசபெத்தின் மரணத்தை மிகப்பெரிய செய்தியாக்கி உலகின் பெரும்பான்மை மக்களையும் அதைப்பற்றி பேச வைத்ததில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்? பிரிட்டனுக்கு சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்றிருந்த பெயருக்குப் பின்னால் சொல்லொண்ணா கொடூரங்கள் மறைந்திருக்கின்றன.

அவுரிச்செடியை பயிரிட மறுத்த இந்திய விவசாயிகளின் கட்டை விரலை வெட்டியெடுத்ததும், முதலாம் சுதந்திரப்போரான வேலூர் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட போராளிகளை புளியம் விளார்களால் அடித்தேக் கொன்றதும், பீரங்கி வாயிலில் கட்டிவைத்து சிதற வைத்ததும், ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான மக்களை துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை சுட்டுக்கொன்றதும், திப்புசுல்தான் முதல் தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் என அனைவரையும் பலியெடுத்ததும் எது?

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை தூக்கிலிட்டது எது? சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருக்கும் போது புல்புல் பறவையில் ஏறிப்போய் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததும் யாரிடம்? இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கனிம வளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் அல்லவா இப்போதும் இங்கிலாந்து பணக்கார நாடாக மிளிர்கிறது.

படிக்க : கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

இதற்கும் செத்துப்போன இரண்டாம் எலிசபெத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையா? மாட்சிமை தாங்கிய மன்னரின் பேரால் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களையும் இரங்கல் என்ற பெயரில் மன்னிப்பதற்கு மோடிக்கு யார் உரிமையை தந்தது?

இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அனைவரும் பேசும் பொருளாக்கி அதன்மூலம் ஏகாதிபத்தியம், இதுவரை தான் நடத்திய சுரண்டல், கொள்ளை, போர் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் மக்களை ஏற்க வைத்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.

செத்துப்போன இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னனுமான இரண்டாம் சார்லசின் மகனான ஹாரி, நிற வேறுபாட்டு இழிவை ஆதரிக்கும் மாட்சிமை தாங்கிய மன்னர்குல பாரம்பரியங்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டு இளவரசர் பட்டத்தை துறந்தோடினார். கருப்பர் இனப்பெண்ணை மணந்ததால் தன்னுடைய குடும்பம் மீது ஏவப்பட்ட நிறவெறியை, இராஜ குடும்பம் போற்றிப் பாதுகாப்பதை சொல்லி தூற்றினார். அவர் சொன்ன ராஜ குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத் வரமாட்டாரா?

இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார். பிரிட்டனின் காலனியாதிக்கப் போர்களால் கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியை தண்டிக்கப்பட முடியாமல், அந்த ராஜவம்சத்தை மக்களால் வீழ்த்த முடியாமல் போய்விட்டதே என்றெண்ணி மட்டுமே நாம் வருத்தமடைய முடியும்.


மருது

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் அக்டோபர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கள்: ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

♦ காவி பயங்கரவாதமே அரசாளுகிறது!

♦ சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

♦ ‘வல்லரசு இந்தியா’ யாருக்காக?

♦ துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

♦ உ.பி உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்களே!

♦ மின் கட்டண உயர்வு: தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு!

♦ ஜி.பி.எஸ் சுங்கக் கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

♦ பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

♦ ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

புதுச்சேரியில் வெடித்தது மின்துறை ஊழியர்கள் போராட்டம், துணை ராணுவத்தை ஏவிய தமிழிசை ! | ச.விஜி | வீடியோ

புதுச்சேரி மக்களை இந்த அரசு துணை ராணுவத்தை கொண்டு மிரட்டுகிறது. மின்சார தனியார் மயத்திற்கு எதிராக மின் ஊழயர்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டம் மக்கள் மத்தில் ஆதரவும் எதிர்ப்பும் என்ற இரண்டு கருத்துக்களாக வெளிபடுகிறது. ஆனால், பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் மீது நடத்தும் கொடூரமாக நடவடிக்கைகள்.. மக்கள் மின் ஊழியர்கள் போராட்டத்தை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றியிருக்கிறது.

புதுச்சேரியில் நடைபெறும் மின்சார தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றிய கள நிலவரங்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்தின் பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரியின் ச.விஜி அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நன்றி : தமிழ் குரல்