Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 180

பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

மகாலத்தில் அரிதினும் அரிதாகவே இந்திய உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த காலத்தில், இந்திய விவசாய வர்க்கத்தைப் பற்றியும் விதர்பா விவசாயிகள் குறித்தும் பி.சாய்நாத்தின் ஆய்வுகள் முதன்மையானவையாக இருந்துள்ளன. விவசாயம் தொடர்பாகவும், பழங்குடி மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வு சூறையாடப்படுவது தொடர்பாகவும் பெருநகரமயமாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் கோடிக்கணக்கான உதிரித் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களது நிலைமைகள் குறித்தும் அவ்வப்போது சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

ஆளும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நிலைமை, அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது சமூகத்தின் 99 சதவிகிதமான உழைக்கும் வர்க்கங்கள் குறித்து வந்த இந்த ஆய்வுகள் மிகமிகக் குறைவானவையே.

இருப்பினும், உழைக்கும் வர்க்கத்தின் பிற பிரிவுகளான இந்த வர்க்கங்கள் குறித்து வந்த அளவிற்குக் கூட தொழிலாளி வர்க்கம் தொடர்பாக ஆய்வுகள் வெளிவந்ததில்லை என்பதுதான் அவலமான எதார்த்த நிலைமையாகும். அமைப்புசார்ந்த தொழிற்சங்கங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும், தொழிலாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அமைப்பாக்குவதில் கிடைத்த அனுபவங்கள் குறித்த ஆய்வுகள் மிகமிகக் குறைவாக வெளிவந்திருப்பது, மார்க்சிய, கம்யூனிச இயக்கங்கள் திசைவிலகிச் செல்லும் போக்கினை நமக்கு உணர்த்துகின்றன.

தேர்தல் அரசியல் வரம்பிற்குள் இருக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அவ்வப்போது அடிப்படை உழைக்கும் வர்க்கப் பிரிவினர் மத்தியில் செயல்பட்டாலும் அவர்களை அரசியல்படுத்தும் போராட்டம் மிகக் குறைவே. பொதுத்துறைகள் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுகின்ற அல்லது பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்ற ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அப்போராட்டங்களில் ஈடுபட்டதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தொழிற்சங்கங்களே மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் அவலநிலைமையை நாம் பரவலாகக் காண்கிறோம்.

இன்னொருபுறம், ‘அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்று கருதிக்கொண்டு, தான் அன்றாடம் சந்திக்கின்ற தொழிலாளர்கள் குறித்துகூட அக்கறை கொள்ளாத மனோபாவம் சிறிய இயக்கங்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க : நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்


இவை எதுவாக இருந்தாலும் மேற்கண்ட நிலைமைகள் மார்க்சிய இயக்கங்கள் அடிப்படை உழைக்கும் வர்க்கங்களிடமிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன.

எம்மை உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக இதழ்களும், இயக்கங்களும் இவ்வர்க்கங்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகள், இவ்வர்க்கங்களை அமைப்பாக்குவது தொடர்பாகப் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், மேற்கொண்ட ஆய்வுகள் சொற்பமானவையே என்பது சுயபரிசீலனைக்கு உரியவையாகும்.

***

சத்தீஷ்கர் மாநிலத்தின் சங்கர் குஹா நியோகி, மும்பையின் தத்தா சமந்த் போன்ற மாபெரும் தொழிற்சங்கத் தலைவர்களை இன்று இந்தியாவில் எந்த மூலையிலும் பார்க்க இயலவில்லை. நீண்டகாலமாக தொழிற்சங்க இயக்கத்தில் இருக்கும் இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, என்.ஜி.ஓ.க்கள் தொழிலாளர் வர்க்கத்தை முனைமழுங்கச் செய்துவந்தன. இன்று, அந்த இடத்தை பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவை இரண்டும் தொழிலாளர் வர்க்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தை நிரந்தர அடிமைத்தனத்தில் வீழ்த்தும் ஆபத்தானவை.

மற்றொருபுறம், விவசாயப் பண்ணைகளில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள், செங்கற் சூளைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பல்வேறு வகையான பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மால்கள், துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஓலா, உபேர் போன்றவற்றின் வாகன ஓட்டுனர்கள், ஃபிலிப்கார்ட், அமேசான், ஸ்வக்கி, செமேட்டோ போன்றவற்றில் பணிபுரியும் டெலிவரி பாய்கள், நகராட்சி, மாநகராட்சிகளின் துப்புரவுத் தொழிலாளர்கள், நகர வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், மருத்துவ செவிலியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் அமைப்பாக்கப்படாமல் சிதறிக்கிடக்கின்றனர்.

இப்பிரிவினரை அமைப்பாக்கும் சிரமமான பணியைக் கண்டு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுபவர்களே அஞ்சுகின்றனர்.

இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றால் அவர்கள்பால் உள்ளூர் தொழிலாளர்கள் மத்தியில் சிறு முதலாளிகள் உருவாக்கியிருக்கும் அச்சம் தனிவகையானது. வர்க்கப் பார்வையை மறுத்து முன்வைக்கப்படும் மத, மொழி, இனவாத அரசியலுக்கு இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைமையைப் பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலாளர்களை அமைப்பாக்கத் தவிர்ப்பதன் மூலம், வர்க்க ஒற்றுமையைப் பேசுகின்ற தொழிற்சங்கங்கள் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு அந்நியமாவதும், இதன் வாயிலாக வர்க்க வேறுபாடு நிலைநிறுத்தப்படுவதும் நடக்கிறது. இந்த வெற்றிடத்தைத்தான் சங்கப் பரிவாரங்கள் கைப்பற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. அதிகாரத்தைக் கையிலெடுக்கும் ஒரு வர்க்கம், அடியாள் படையாக்கப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் முறியடித்து தொழிலாளர் வர்க்கப் பிரிவினரை அமைப்பாக்கி அரசியல் அதிகாரத்தை நோக்கி உயர்த்துவதற்கு இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் அதன் தன்மை, அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனை அமைப்பாக்குவதற்குரிய வாய்ப்புகள், அதில் கிடைத்த அனுபவங்கள் போன்றவை குறித்து விரிவான பரிசீலனை அவசியமாக இருக்கிறது.

***

மும்பையைச் சேர்ந்த, “அரசியல் பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி அலகு” என்ற ஆய்வு மையத்தின் சார்பாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்பட்ட “இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும்” என்ற நூலை “அலைகள் வெளியீட்டகம்” தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்திருப்பது, மேலே குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றுவதற்கான, குறிப்பிடத்தக்க, முக்கியத்துவமுடைய பணியாகும்.

 

உலகம் பன்முகமாக இருந்தாலும் நாமறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே காண்கிறோம். இன்று நாம் காணும் உலகத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் உற்பத்தி உறவுகளின் நீட்சியின் காரணமாக நிலவும் வர்க்க வேறுபாடுகளுடன் ஏகபோக முதலாளித்துவக் காலகட்டம், காலனியாதிக்க, நவீன காலனியாதிக்கக் காலகட்டங்களைக் கடந்து இன்றைய மறுகாலனியாக்கக் காலகட்டம் நிலவுகின்ற சூழலில், வர்க்க வேறுபாடுகள் மென்மேலும் சிக்கலான வகையில் வளர்ந்தும் கூர்மையடைந்தும் வருகின்றன.

‘சுரண்டுபவர்கள் – சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி – தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.

அன்றாடம் அல்லலுறும் இந்த வர்க்கம் குறித்து குட்டிமுதலாளிய பிரிவினர் இன்றைக்கும் ஒரு அசட்டைப்போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் உருவான அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் உற்பத்தி முறை போன்றவை காரணமாக, அற்ப ஊதியத்திற்கு எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல், பணிப்பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்யும் இந்த தினக்கூலித் தொழிலாளர்கள், நவீன கொத்தடிமைகளாகக் காட்சியளிக்கின்றனர்.

ஒரே வார்ப்பான தன்மையில் தொழிலாளர் வர்க்கத்தை எளிதில் வகைப்படுத்திவிட முடியாத நிலைமை இன்று நிலவுகிறது. இது இந்த வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளை அமைப்பாக்குவதிலும் பிரதிபலிக்கிறது. பாட்டாளி வர்க்கம் குறித்த மார்க்ஸின் வரையறை, ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை, இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை குறித்து ஒரு தொகுப்பான சித்திரத்தை இந்நூல் வழங்குவது மற்றொருமொரு சிறப்பாகும்.


படிக்க : பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்


பல்வேறு வகைகளாகப் பிரிந்து கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற உணர்வைப் பெறுவதற்கு அதனை அமைப்பாக்கும் இந்த நடவடிக்கைதான் முதல்படி. அதற்கு உதவும் வகையில், பாட்டாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், உரிமைகளை அடைவதற்கான போராட்டங்கள், அனுபவங்கள் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மேலும், பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கும் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற வகையில், அதனை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்குமானக் கடமையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியவாதிகளுக்கே உரிய இந்தக் கடமையை மேற்கொள்ள இந்த நூல் பெரும் உந்துதலை வழங்குகிறது. அமைப்பாக உள்ள தொழிலாளர்கள், தோழர்கள் தங்களது வட்டங்களில் இந்த நூல் மீதான விவாதங்கள், வகுப்புகளை நடத்துவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பாக்கும் முதன்மையான கடமையை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற வேண்டும்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
கைபேசி: 9841775112
விலை: ரூ.330.00

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

செப்டம்பர்-2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம்! தமிழக மாணவர் – இளைஞர்களின் பக்கம் நிற்போம்!
  • கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?
  • ஹர் கர் திரங்கா: பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!
  • பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!
  • பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை: ‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!
  • இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
  • காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள்!
  • நூல் அறிமுகம்: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்!
  • இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!
  • மின்சார சட்டத் திருத்தம் 2022: மின்துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
  • செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ள அதானி குழுமம் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. துறைமுகத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கூறும் 40 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேறும்வரை போராட்டம் ஓயாது என்றும் உறுதியாக நிற்கின்றனர்.

போராட்டத்தின்போது துறைமுக வாயிலில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு துறைமுகத்தை நோக்கி அணிவகுத்து சென்ற மீனவர்கள், கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் சிலர் தங்களின் மீன்பிடி படகுகளைக் கொண்டு கடலுக்குள் இறங்கி கடல்வழியாகவும் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.

கடல் – தரை மார்க்கமாக முற்றுகையிட்டதன் விளைவாக துறைமுகத்திற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தனது கட்டுமானப் பணியினை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது அதானி குழுமம் என்கிறது டௌன் டூ எர்த் (Down to earth) இணையதளம்.

போராட்டக்காரர்களால் தனது துறைமுக ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே துறைமுகக் கட்டுமானப் பணியினை முடிக்க துறைமுகத்திற்கு தடையின்றி சென்றுவர சி.ஆர்.பி.எஃப் (CRPF) பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேரள நீதிமன்றத்தை நாடியது அதானி குழுமம். “கேரள அரசு நாடினால் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (CISF) அனுப்ப தயார்” என்று நீதிமன்றம் மனு குறித்தான விசாரணையை கையெடுப்பதற்கு முன்பே, மத்திய அரசு ஆலோசகரிடம் இருந்து அழைப்பு வருகிறது என்றால் எந்தளவு முக்கியமான திட்டம் என்று புரிந்துகொள்ள முடியும்.

விழிஞ்சம் துறைமுகத் திட்டம் மீனவர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கே பேராபத்து:

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதானி குழுமத்துடன் போடப்பட்ட சலுகை ஒப்பந்தத்தின்படி (Concession Agreement) விழிஞ்சம் துறைமுகத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சலுகை திட்டம் என்பது, தனியாரால் தொடங்கப்படும் திட்டத்திற்கு சில ஆண்டுகள் அரசு உதவிகளும்(நிதி), உரிமைகளும் வழங்குவதாகும்.

விழிஞ்சம் துறைமுகம் என்பது இந்தியாவின் முதல் மெகா டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாக (Mega Transshipment Container Terminal) இருக்கும். ரூ.7,525 கோடி செலவில் கட்டப்படும் இது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகம் என்கிறது அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் இணையதளம்.


படிக்க : இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


இத்துறைமுகத் திட்டத்திற்கென கிட்டத்தட்ட 450 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது; 120 ஹெக்டேர் பரப்பளவு கடலின் அடிப்பகுதியை துளைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 அனுமதி வழங்கியபோதே, மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மேலும் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படும் என்கின்ற சுற்றுச்சூழல் நிபுணர்கள், துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களை, அலைகள் மற்றும் புயல்கள் தாக்காமல் இருக்க கடலலை வரும் திசைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்ஸ் (Breakwaters) கட்டப்படுகிறது. இப்பிரேக்வாட்டர்ஸால் கடல் நீரோட்டத்தின் திசையே மாறியுள்ளது. இதன்விளைவாக அடிக்கடி கடல் சீற்றம், கொந்தளிப்புகள் ஏற்படுவதால் கடலில் விபத்துகளும், சில நேரங்களில் உயிரழிப்புகளும் ஏற்படுகிறது என்கின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 2019 இல் வலியத்துறை மற்றும் முட்டத்தாரா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகளை இழந்த 143 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல சங்குமுகம் கடலில் ஏற்பட்ட கடல் அரிப்பால் கடற்கரையும் மக்கள் பயன்படுத்தமுடியாதளவு மோசமாகிவிட்டது என மோங்கபே இந்தியா (Mongabay-India) என்ற இணையதள தரவு கூறுகிறது.

இத்திட்டம் தொடர்ந்தால் மேலும் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை விவரிக்கிறார் கோஸ்டல் வாட்ச் (Coastal Watch) என்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரும் விழிஞ்சம் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவருமான ஏ.ஜெ.விஜயன். “திட்டத்தின்படி 3.2 கி.மீ. தூரம் கடற்கரைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது வெறும் 1 கி.மீ. தூர அளவிற்குதான் பணி முடிந்துள்ளது. இப்போது திட்டத்தை கைவிட வேண்டும். அப்படியின்றி மேலும் தொடர்ந்தால் அதிகளவு கற்கள் தேவைப்படும். கற்களை குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் இருந்துதான் எடுக்கமுடியும் என்பதால் சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

கடந்த மே மாதம், கற்களை எடுப்பதற்காக குவாரிகளை அமைக்க அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய வனவிலங்கு வாரியம். மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ள கேரளத்தில், அதிகளவில் மலைசரிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இங்கிருக்கும் 30-க்கும் மேற்பட்ட குவாரிகளால் மலைசரிவுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இதுபோன்று 2019 இல் ஏற்பட்ட மலைசரிவில் சிக்கி கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். மேலும் நெய்யாறு மற்றும் பெப்பரா பகுதிகள்தான் திருவனந்தபுரத்திற்கு நீராதாரமாக இருக்கிறது. இங்குள்ள குவாரிகளால் நிலத்தடி நீரும் பெரிதளவில் பாதிக்கப்படும்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

இவை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையோ, “சலுகை ஒப்பந்த காலம் முடிவடையும்போது திட்டத்தின் கட்டுமானத்தால் ரூ.5,608 கோடி வரை கேரள அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த ஒப்பந்த முறை கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக அதானி குழுமத்திற்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று எச்சரித்துள்ளது.

***

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் காலிஸ்தானியர்கள் புகுந்துவிட்டார்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்ததைபோல, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டம் இது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல” என விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக போராடுபவர்களை சாடுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநில சட்டமன்றத்தில் பேசிய துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், “பல பணிகள் முடிந்துவிட்டதால், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை தற்போது நிறுத்தமுடியாது. நிறுத்தினால் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும்” என்றார்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


ஆனால், “துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிக்கும் குறைவாகவும்; கடலுக்குள் துளையிடும் பணி 40 சதவிதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

ஆனால் மீனவர்கள், மக்கள் நலனில் துளியும் அக்கறைக் காட்டாத பினராயி விஜயன், “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவது குறித்து இப்போது பரிசீலிக்க முடியாது. இதுபோன்ற திட்டத்தில் பிரச்சினைகள் வருவது இயல்பே. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாடகை வீடு கொடுப்பதைப் பற்றி அரசு பரிசீலித்து வருகிறது” என்றும் “திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காது” என்றும் அதானிக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்.

ஆக, மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக விழிஞ்சம் துறைமுகத்திற்கு போலீசு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழிஞ்சம் அதானி துறைமுகம், சில்வர்லைன் திட்டம் போன்று அடுக்கடுக்காக மக்கள் விரோத, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் கொண்டுவந்து மக்களை வாட்டி வதைக்கிறது கேரள அரசு.


வேம்பு

ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!

narendra-modi-gst

யர் பணவீக்கம், வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை இன்று இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாகும். இதன் விளைவாக, மனித வளர்ச்சியானது இரத்த சோகை முற்றிய நோயாளியின் நிலைக்குச் சென்றுள்ளது. கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு சீர்குலைந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீளும் வழியில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திட்டம் ஏதும் மோடி அரசிடம் இல்லை. மாறாக, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அதிகரிப்பதன் மூலம், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒட்டச் சுரண்டுகிறது.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள், சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பட்டினியில் பரிதவிப்பவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடம் மிச்சம் மீதமிருக்கும் இரத்தத்தைக் கூட உறிஞ்சி எடுக்கிறது ஜி.எஸ்.டி வரி.

இதன் மூலமாவது பொருளாதாரம் முன்னேறுமா? மோடி அரசின் இந்த பாசிச பொருளாதார நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டை முன்னேற்றிவிடுமா? என்று சில முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை.

படிக்க : ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

“ஒரு தேசம், ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மோடி அரசின் திட்டம் என்பது பிராந்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவிலான பன்முகப் பொருளாதாரத் தன்மை கொண்ட நமது நாட்டின் பெரும் பொருளாதாரச் சூழலை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஏகபோகமாக்கல் திட்டமே. இந்த ஏகபோகங்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நிதி ஆதிக்கக் கும்பல்களாக குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளியக் கும்பல் இருக்கும்.

அரசியலில் இந்துத்துவா (ஆர்.எஸ்.எஸ்-பாஜக) மேலாதிக்கம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் அம்பானி-அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலின் ஆதிக்கம் ஆகிய இரண்டும் மக்களின் வாழ்வாதாரங்கள், உற்பத்தி சக்திகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பிற வருமானம் உருவாக்கும் திறன்களின் அடிப்படையில் அனைத்து படைப்பு திறன்களையும் உழைப்பு சக்தியையும் பிழிந்தெடுக்கும் ஹைபிரிட் பாசிசமாகும்.

இந்துத்துவா என்பது முதன்மையாக இந்தியாவில் உள்ள உயர் வர்க்க மற்றும் உயர் சாதி மக்களின் பொருளாதார நலன்களை நிலைநிறுத்தும் ஒரு கலாச்சார திட்டமே. கலாச்சார தேசியம் என்ற பெயரில் மக்களை மத ரீதியாக அணிதிரட்டுவது, இந்தியர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பணயம் வைத்து அம்பானி, அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலுக்கு சேவை செய்யும் அரசியல் தந்திரமே.

புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் வளர்ச்சிகளை நாட்டின் கீழ்மட்டங்களில் சிறிய அளவில் கூட உருவாக்கவில்லை. இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிராக இளம் இந்தியா திரும்பிவிடாமல் இருப்பதற்கு அவர்களை தீராத போதை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டியுள்ளதை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மற்றும் அம்பானி-அதானி கும்பல் நன்குணர்ந்துள்ளது.

வேலையின்மை இல்லை என்று சங்கிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தாலும் வேலையின்மையால் உருவாகியிருக்கும் பெரும் அளவிலான ஒரு ரிசர்வ் பட்டாளத்தைக் கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், கள்ளக்குறிச்சியிலும் ஆயிரக்கணக்கில் திரண்ட இளம் பட்டாளமே அதற்கு சிறந்த சான்று. ஆங்காங்கே இந்த இளம் பட்டாளம் சங்கப் பரிவாரக் கும்பல்களால் அணிதிரட்டப்பட்டாலும், அவர்களிடம் வேலையின்மையால் ஏற்படும் குமுறலை அடக்கிவிட முடியவில்லை.

உழைக்கும் மக்களின் இளம் பிரிவான இந்த ரிசர்வ் பட்டாளம் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வகைகளில் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக திரள்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இந்தப் பட்டாளத்தை வேகமாக அடக்கி ஒடுக்க முயற்சின்றன. இந்த மக்கள் போராட்டங்கள் வெடித்த உடனே மிகப்பெரும் அளவில் போலீசை ஏவி கைது நடவடிக்கைகளை மோடி அரசு மட்டுமின்றி, இந்துத்துவ எதிர்ப்பு பேசும் அரசுகளும் மேற்கொள்கின்றன.

இதுமட்டுமின்றி, கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், அவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடையவே செய்கின்றன.

இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு மக்கள் மீதான வன்முறையை தீவிரப்படுத்துவது மட்டுமின்றி, ஒருபுறம் இந்துத்துவா என்ற மதவெறி போதையை ஏற்றி மக்களைப் பிளவுப்படுத்துகிறது. மற்றொருபுறம், கஞ்சா, அபின் போன்ற பல்வேறு வகையான போதைக் கலாச்சாரங்களை திட்டமிட்டு ஊக்குவிக்கிறது. இவை கீழ் மட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் சென்றடைந்துள்ளது. எந்த விழுமியங்களும் இல்லாத பொறுக்கி கும்பல் கலாச்சாரம் இவர்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

படிக்க : உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

கார்ப்பரேட் நலன்சாரந்த இந்துத்துவப் பொருளாதாரம் மக்கள் மீது ஒரு கொடிய வரி பயங்கரவாத ஆட்சியை உருவாக்குகிறது. பெயரளவிலான ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மக்கள் நல அரசைக் கூட’ ஒழித்து, உழைக்கும் மக்களால் நெருங்க முடியாத அரசாங்கத்தையும் (மாட்சிமை தாங்கிய மன்னராட்சியை), மக்கள் போராட்டங்களால் நெருங்க முடியாத வகையில் பாதுகாக்கப்பட்ட மற்றும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட அரசையும் உருவாக்குகிறது. பாலியல் ஒழுக்கக்கேடு, சுற்றுச்சுழல் அழிப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை போன்றவை ஆட்சிப்புரியும் ஒரு சமுதாயத்தையும், அதற்கு தலைமை தாங்கும் அரசையும் உருவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் “ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டம் என்பது உற்பத்தி மற்றும் நுகர்வு மீதான ஆதிக்க அரசியலாகும்; ஜி.எஸ்.டி. மற்றும் பிற வரிவிதிப்புகளின் உயர்வு இந்த திசையில் நாட்டை கொண்டு செல்லும் ஒரு வழிமுறையாகும். இது இந்தியாவின் கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டுவதன் மூலம் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதவர்களாக மாற்றி பட்டினிக் கொடுமைக்கோ, மதக் கலவரங்களுக்கோ, அரச வன்முறைக்கோ இறையாக்குகிறது.

அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!


பரமேஷ்
மூலக்கட்டுரை: frontierweekly

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :

ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம்! தமிழக மாணவர் – இளைஞர்களின் பக்கம் நிற்போம்!
  • கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?
  • ஹர் கர் திரங்கா: பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!
  • பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!
  • பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை: ‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!
  • இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
  • காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள்!
  • நூல் அறிமுகம்: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்!
  • இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!
  • மின்சார சட்டத் திருத்தம் 2022: மின்துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
  • செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!

ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் ஏன் வேறு வேறாக உள்ளது என்ற கேள்வியை கூட நீதிமன்றம் கேட்கவில்லை. இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; தலித் மக்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்; பொது மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அப்பாவிகள் தண்டிக்கப்படிருக்கிறார்கள்; அவர்களின் கை, கால் முறிக்கப்பட்டிருக்கிறது இவை எவற்றை பற்றியும் நீதிமன்றம் கேட்கவில்லை. மொத்தத்தில் நியாயமான எந்த கேள்வியையும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் ஜிப்மர் அறிக்கையை ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு கொடுக்கவில்லை. ஜனநாயகப் பூர்வமான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. வெறும் நீதிபதிக்கும் மட்டும் அறிக்கையை காண்பித்து பிணை வழங்குவது எந்த வகையில் நியாயம்?

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!

0

ப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு எதிரான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற வகையில் கடுமையான சட்டங்களையும், கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றனர். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள், ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சகத்தை முற்றுகையிட முயன்றனர்.

“ஆகஸ்ட் 15 கறுப்பு நாள்” என்ற பேனரை ஏந்தியும், அரசியலில் பங்கேற்கவும், வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ரொட்டி, சுதந்திரம், கல்வி, வேலை வேண்டும் என்றும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. “நீதி வேண்டும், நீதி வேண்டும்; நாங்கள் அறியாமையால் சலிப்பு அடைந்துவிட்டோம்” எனவும் முழக்கமிட்டனர்.

படிக்க : ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

அப்போராட்டம் நடைபெற்றதை அறிந்த தலிபான்கள் அப்போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள்.  அப்பெண்களை அச்சுறுத்த  தலிபான்கள் வானத்தை நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பெண்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்த தலிபான்கள் துப்பாக்கியால் அடித்து துன்புறுத்தினார்கள்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வளவு அடக்குமுறையை ஏவினால் போராட்டத்தில் கலந்து கொண்ட முனிசா முபாரிஸ், “பெண்களுக்கான உரிமை பெறும் வரை போராட்டம் தொடரும்” என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் “தலிபான்கள் எங்கள் குரலை அடக்க நினைக்கிறார்கள், அது சாத்தியமில்லை. நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து போராட்டத்தை நடத்துவோம்”என்று கூறினார்.

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பள்ளி கல்வியை மறுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்க மறுத்துள்ளனர். பெண்களின் அரசு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான கொலை, பாலியல் வன்கொடுமைகள் என்பது அதிகரித்து இருக்கிறது. பெண் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பணியில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.

வேலை மற்றும் அரசியல் பங்கேற்புக்கான உரிமைகளை கோரி, ‘ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு நாள்’ என எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பொது இடங்களில்  ஆண், பெண் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது, பூங்காக்களுக்கு செல்லத் தடை, அரசியலில் பெண்கள் பங்கேற்கக் கூடாது, உச்சதலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் போன்ற கடும் கட்டுபாடுகளை எதிர்த்து பேரணியாக சென்றனர். ஆப்கான் பெண்களின் வாழ்க்கை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதுபோல உள்ளது என மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பத்திரிகை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என RSF இயக்குநர் கிறிஸ்டியன் மிர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. நூற்றூக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். ஆப்கானில் ஜனநாயக உரிமைகள் தலிபான்களால் அடக்கி ஒடுக்குப்படுகின்றன. தற்போதைய தலிபான்கள் ஆட்சி 1996 – 2001 வரையிலான தலிபான்களின் காட்டுமிராண்டிதனமான ஆட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். மதவாத பாசிஸ்ட்டுகள் தங்களது மரபு என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை  தீவிரமாக அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மதவாத பாசிஸ்டுகள்:

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய சிறுமி ஆசிஃபா, உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி போராடியது, இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பொது அழைப்பு விடுப்பது, பில்கிஸ் பானோ  கர்ப்பிணி பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்; அவரது குழந்தையையும் குடும்பத்தினரையும் கொலை செய்தவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள். தலிபான்களை விட ஒருபடி மேலான கொடூர எண்ணம் கொண்டவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

படிக்க : தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

மதவாத பாசிஸ்டுகள் பெண்களுக்கு எதிரானவர்கள் மட்டும் அல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள், மனித குலத்துக்கே எதிரானவர்கள். இம்மாதவாத பாசிஸ்டுகளை எதிர்த்து துணிச்சலோடு போராடுகின்ற ஆப்கான் பெண்களின் போராட்டத்தை நாம் ஆதாரிப்போம். நம் நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கும் காவி பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைகளுக்கு அமைதி காத்து நிற்காமல் ஆப்கானிஸ்தான் பெண்களின் போராட்ட உணர்வை வரித்து கொண்டு நாமும் பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக களமிறங்கிப் போராடுவோம்.

ராமசாமி

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! | மக்கள் அதிகாரம்

01.09.2022

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்!

ள்ளக்குறிச்சி சக்தி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போன மாணவியின் வழக்கை முறையாக விசாரிக்காமல் அரசும் போலீசும் செயல்பட்டதை வலைத்தள ஊடகவியலாளர்களும்  வழக்கறிஞர்களும்தான் அம்பலப்படுத்தினர்.

இதன் விளைவாகவே,  இறந்து போன அந்த மாணவி மட்டுமல்ல இதற்கு முன்பு பலர் அப்பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போனதும் அச்சம்பவங்களில் அடாவடியாக அப்பள்ளி நடந்துகொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும், அப்பள்ளி பிஜேபியின் பின்புலம் கொண்டது என்பதையும் ஜூலை 17 பள்ளியின் மீதான தாக்குதலுக்கு பிறகு அச்சம்பவத்தில் சிறிதும் தொடர்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு கைது செய்யப்பட்டதும் அதில் ஆதிக்க சாதி வெறியர்கள் ஈடுபட்டது விவாதங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட, இவ்வழக்கு குறித்து விவாதித்த ஊடகங்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் பேட்டி அளித்த,  விவாதித்த வழக்கறிஞர்கள் அனைவருமே இறந்துபோன மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நியாயத்திற்காகவே உரையாடினார்கள். அவ்வழக்குரைஞர்கள் அவர்களுடைய தனிப்பட்ட இலாபத்துக்காக எதையும் செய்யவில்லை.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பெருமை பொங்க ஒருபுறம் தேசியக்கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தனியார் பள்ளியில் இறந்துபோன ஒரு மாணவிக்கு நீதி வேண்டும் என்று உரைத்ததற்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஜனநாயக கேலிக்கூத்தாகும்.

மேற்கண்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
9962366321

மோடியின் இந்தியா: பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு!

1

ம் தேசம் வளரவேண்டும் என்றால் பெண்களை மதிக்க வேண்டும். பெண் சக்திக்கு துணையாக இருக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கு தூண் என்று போலி சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் மோடி.

தற்போது வெளிவந்திருக்கும் தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 31,677 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 87 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அறிக்கை மோடியின் இந்தியா மீது காறி உமிழ்ந்துள்ளது. உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் அறிக்கையும் எடுத்து கூறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதாவது பாலியல் வன்கொடுமை, ஆசீட் வீச்சு, கணவர்களால் கொடுமை, மேலும் குடும்ப வன்முறை போன்ற பிரிவின் கீழ் 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.

படிக்க : ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக நடந்துள்ளது என்பதை அறிக்கையின் விவரங்களில் இருந்தே நாம் பார்க்க முடியும். நாடு முழுவதும் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மொத்தம் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், ராஜஸ்தானில் 6337 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2947 வழக்குகளும் உத்திரப் பிரதேசத்தில் 2845 வழக்குகுகளும் பதிவாகியுள்ளன. அசாமில் 1835 வழக்குகளும், மற்ற வடகிழக்கு மாநிலங்களில் 100-க்கும் குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பெரும்பாலும் அவர்களின் உறவினர்கள், ஆன்லைன் நண்பர்கள், அவருகளுக்கு நெருக்கமானவர்களே அதிகம் என்கிறது. 89 சதவீதம் குடும்ப நண்பர்கள், பணியிடத்தில் வேலை செய்யும் முதலாளிகள், அறியப்பட்ட நபர்களால் நடந்தவை.

நாடு முழுவதும் பதியப்பட்ட வழக்குகளில் 10 சதவீதம் சிறுமிகள், 64 சதவீதம் பெண்கள் 16-30 வயது உடையவர்கள். நாட்டின் பெருநகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஜெய்பூர், சென்னை போன்ற நகரங்களில் அதிகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. தேசிய தலைநகரம் டெல்லியில் பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களில் அதிகமாக 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், என்.சி.பி.ஆர் அறிக்கை நாடு முழுவதும் 6589 வழக்குகள் வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை வரதட்சனை கொடுமை காரணமாக 6628 பேர் இறந்துள்ளனர் என கூறுகிறது.

தற்போது அரசால் கொடுக்கப்பட்ட விவரம் என்பது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அன்றாடம் செய்திதாள்களில் தினம்தினம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறதை பதிவு செய்கின்றன. பள்ளிக்கூட சிறுமிகள், கல்லூரி மாணவர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறுகின்றன.

அரசுகள், குற்றத்தை தடுப்பதற்கு ஏராளாமான கமிட்டிகள் அமைக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் விசாக கமிட்டி, போலீசுத்துறையில் புகார் அளிப்பதற்கு புகார் எண்கள், நிர்பயா பெண் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பேருந்துகளில் கேமாராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்த முயற்சிகள் எதுவும் குற்றங்களை தடுக்கபோவதில்லை. இந்த குற்றம் அதிகரிப்பதற்கு காரணமான அடிப்படையை மாற்றியமைக்கமால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைய போவதில்லை.

ஒருபுறம் காஷ்மீரீல் ஆசிஃபா என்ற சிறுமியை பாலியல் வன்கொலை, உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை, பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ததை வெடிவைத்து கொண்டாடுகிற நிகழ்வு போன்றவை அரங்கேறுகின்றன.

படிக்க: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: குற்றவாளிகளுக்கு வாதாடும் நீதிபதி! போராடினால்தான் நீதி கிடைக்கும்! | மருது வீடியோ

மறுபுறம் பெருகிவரும் நகரமயமாக்கம், அந்நகரங்களில் புகுத்தப்படும் மறுகாலணியாதிக்க பண்பாட்டு சீரழிகள், நுகர்வு கலாச்சாரம், பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்க கூடிய சிந்தனை ஆகியவை அதிகரிக்கின்றன.

இவையனைத்தும் குடும்ப உறவு, சமூக விழுமியங்கள், பெண்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வை சீரழித்து அடிமைகளாக பார்க்கும் – நுகர்வு பொருளாக பார்க்கும் மனநிலையை – கெட்டிப்படுத்துகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கின்ற பார்ப்பன ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும், பெண்களை முற்றிலும் நுகர்வு பொருளாக மாற்றி சீரழிக்கிற மறுகாலனியாதிக்க கலாச்சாரத்தையும் முறியடிக்கும் போராட்டதை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுத்த நிறுத்த முடியும்.


ராமசாமி

பிள்ளையார்-கலவரம்-மதம்-அரசியல் | தோழர் அமிர்தா வீடியோ

இந்த விநாயகர் சதுர்த்தி என்பது எதற்காக துவங்கப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். பால கங்காதர திலகர் எதற்காக இந்த விநாயகர் சதுர்த்தியை துவங்குகிறார் என்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து போராட கூடாது என்பதற்காகத்தான்; விநாயகர் சதுர்த்தி தோன்றுவதற்கான அடிப்படையே இதுதான்.

அது வடக்கில் துவங்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இதனை பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பல்வேறு சம்பவங்களில் நாம் பார்க்கிறோம்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் அஜெண்டா என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பது என்பதே!

பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

பாருங்கள்! பகிருங்கள்!

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: குற்றவாளிகளுக்கு வாதாடும் நீதிபதி! போராடினால்தான் நீதி கிடைக்கும்! | மருது வீடியோ

ந்த வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத பல்வேறு கருத்துக்களை உயர்நீதிமன்றம் பேச முடியும் என்று சொன்னால், அப்பாவிகளும் தலித் மக்களும் வன்னியர்களும் திட்டமிட்டு கைது செய்யப்பட்டர்கள் என்பதை பற்றி ஏன் பேச முடியவில்லை.

தகுதி இல்லாத ஒரு பெண்ணை கொண்டுபோய் தகுதி உள்ள ஓர் பள்ளியில் சேர்த்து விட்டீர்கள்; உங்கள் பொண்ணு செத்துவிட்டால் நான் பொறுப்பேற்க முடியாது; நீங்கள் தான் பொறுப்பேற்க முடியும். இப்படி, அந்த குற்றவாளிகளின் பிணை உத்தரவில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி ஸ்ரீமதியின் அம்மாவிடம் குற்றவாளிகளை தண்டிப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தற்போது பிணை கொடுக்கப்பட்டதில் இருந்து பார்க்கும் போது குற்றவாளிகள் யாரும் இல்லை; குற்றவாளிகள் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் என்றுதான் ஆகிவிட்டது. தற்போது ஸ்டாலின் யாரை தண்டிப்பார்?

இது ஒரு அதிகார வர்க்க பின்னணி கொண்ட ஒரு பள்ளி! ஓர் சாதி ஆதிக்கம் நிறைந்த ஒரு பள்ளி! ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ஒரு பள்ளி! அப்போ இந்த பள்ளியை யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த அரசு போலீசு நீதிமன்றம் எல்லோரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை பெற்றோர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், அவை மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆனால் நீதிபதி படித்துவிட்டு கருத்து சொல்கிறார். இது என்ன ஜனநாயகம்!

தனியார் கல்வி கொள்கையை ஆதாரிக்கும் இந்த அரசு, ஸ்ரீமதிக்கு நீதியை தராது என்பதே உண்மை!

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், பிணை ஆனையை பற்றியும் பல்வேறு கருத்துக்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!

ர்நாடகாவில் முனைவர் பட்டம் (Phd) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவி தொகையை 33 சதவிகிதம் முதல் 66 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு.

2022-23 கல்வியாண்டில் சேர்ந்த PhD மற்றும் MPhil மாணவர்களுக்கு உதவித்தொகை 66 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது; மேலும் 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டுகளில் சேர்ந்த PhD மாணவர்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2022 அன்று இந்த அறிவிப்பை கர்நாடக அரசின் சிறுபான்மை நலத் துறை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு குறித்து கர்நாடகா பகுதியைச் சேர்ந்த Phd பயிலும் மாணவர் கல்யாண் என்பவர் ஊடகத்திடம் கூறும்போது, “நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி, என் தந்தை விவசாயத் தொழில் செய்கிறார்; எனது கல்விக்கு நிதியளிக்க எனது குடும்பத்திற்கு நிதி வசதி இல்லை. எனது ஆராய்ச்சியை முடிக்க நான் முழுவதுமாகச் சார்ந்து இருப்பது அரசால் வழங்கப்படும் உதவி தொகையைதான். நான் 2020-21-இல் இத்திட்டத்தில் சேர்ந்தேன்; மண் ஆய்வுகளில் விஞ்ஞானியாக பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் எனது ஆராய்ச்சியைத் தொடர கடினமாக உள்ளது. முதல் ஆண்டுக்கான உதவித்தொகையை வழங்க முடியாது என்று அரசாங்கம் இப்போது கூறுகிறது; நான் ஏமற்றப்பட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

படிக்க : புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட நிதி நெறுக்கடியின் காரணமாக மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை குறைத்துவிட்டது. இதனால் சிறுபான்மை மாணவர்களுக்கு தரவேண்டிய உதவித்தொகைக் குறைக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கிறது.

ஆனால், இதே கோவிட்-19 காலகட்டத்தில்தான் பெரும் முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி இந்த அரசு செய்து கொடுத்துள்ளது.

கடந்த மார்ச் 2021-ஆம் நிதியாண்டில் மட்டும் 2.03 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 75 சதவிகிதம் கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். அதிலும் குறிப்பாக 2020-21-ஆம் நிதியாண்டில், ஸ்டேட் வங்கியின் கீழ் இயங்கும் ஐந்து வங்கிகள் மட்டும் ரூ. 89,686 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன.

இப்படி அரசுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, சிறுபான்மை மாணவர்கள் Phd. , M.Phil படிக்க உதவும் உதவித்தொகையை கோவிட்-19 பெருந்தொற்றின் பொழுது ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் குறைக்கப்படுகிறது என்று பாஜக அரசு வேசம் போடுகிறது.

இதையெல்லாம் பார்த்தால் அரசுக்கு நிதி நெருக்கடியெல்லாம் மாணவர்களுக்கு உதவி செய்யும்போது தான் வருகிறது அம்பானி அதானிகளுக்கு உதவி செய்யும்போது ஏற்படுவதில்லை என்று நமக்கு புரிகிறது. மேலும் இது சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக இந்த பாசிச அரசு திட்டமிட்டு நடத்தும் ஒரு தாக்குதல் ஆகும்.

இத்தாக்குதல் கர்நாடகா அரசுக்கு ஒன்றும் புதியது அல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடைக்கு துணை நின்றது.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

படிக்க : கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

இதையெல்லாம் பார்க்கும் பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் எப்படி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்ர கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஒரு சோதனை களமாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகா மாநிலத்தையும் மோடி அரசு மாற்றி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து நாம் நீதிமன்றங்ளுக்கு நீதிகேட்டு போனாலும் சிறுபான்மை மாணவர்களாகிய நமக்கு நீதி வழங்காது ஏன் என்றால் நீதிமன்றங்கள் நமக்கானது இல்லை.  இந்த நீதிமன்றங்கள் ஆளும் வர்க்கத்திற்கானது என்பதை நாம் ஹிஜாப் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கிய போது பார்த்தோம்.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் மீது இந்த பாசிச அரசு நடத்தும் அடக்குமுறைக்கு எதிராக ஹிஜப் பிரச்சினையின்போது எப்படி மாணவர்கள் போராடினார்களோ அதேபோன்று  மாணவர்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்றாய் திரண்டு நம்மை ஒடுக்கமுயற்சிக்கும் பாசிச சக்திகளை வெட்டி வீழ்த்தப் போராட வேண்டும்!

செழியன்

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

30.08.2022

கள்ளக்குறிச்சி; குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!
போராடியவர்களுக்கு குண்டாஸ்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!
பத்திரிகை செய்தி

டந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அவ்வாறு வழங்கப்பட்ட பிணைக்கான விரிவான உத்தரவு, நேற்றைய தினம் 29.08.2022 அன்று வெளியாகி உள்ளது.

ஒரு வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று முடிவதற்கு முன்னரே -குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னரே- அவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துக்கள், குற்ற புலன் விசாரணையையும் நீதிமன்ற விசாரணையையும் பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் அறியாத ஒன்று அல்ல. சட்டப்படியும் நியாயப்படியும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்பதை நீதிமன்றங்கள் தங்களுடைய பல்வேறு பரிபாலனங்கள் மூலம் நிரூபித்து வருகின்ற காலகட்டம் இது.

தமிழகமே ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் அராஜகத்துக்கும் எதிராக ஓரணியில் நிற்கின்ற இவ்வேளையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் பிணை உத்தரவில் குறிப்பான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

படிக்க : கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

நன்றாக படிக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்றதற்காகவே ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது; வேதனையானது. ஸ்ரீமதியின் மரணம் என்பது கொலையோ, பாலியல் பலாத்காரமோ அல்ல; ஸ்ரீமதியை தற்கொலைக்கு  தூண்டியதற்கும் சம்பந்தப்பட்ட இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேட்டது பிணை. ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கி இருப்பது விடுதலை. நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த கருத்துக்களிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குற்றவாளிகளை நிச்சயம் தண்டிப்போம்” என்று தெரிவித்தார். இப்பொழுது யார் குற்றவாளி என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும். பள்ளி நிர்வாகத்துக்கும் மாணவி இறப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. ஆகவே குற்றவாளி யாராக இருக்க முடியும்; ஸ்ரீமதி அல்லது ஸ்ரீமதி பெற்றோராக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள்தான் தன் பிள்ளையை அங்கே படிக்க வைத்தார்கள். மற்ற குழந்தைகள் தற்கொலை செய்யாதபோது உன் குழந்தை மட்டும் ஏன் தற்கொலை செய்து கொண்டது என்ற கேள்வியை வைத்து அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் நாளை தீர்ப்பும் வெளியாகலாம்.

இதேவேளையில் நேற்றைய தினம்(29.8.22), கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது மாடுகளை திருடியதாகவும் பள்ளியை சேதப்படுத்தியதாகவும் கூறி 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்  போடப்பட்டுள்ளது.

ஸ்ரீமதி படிப்பு சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார், பள்ளியை திட்டமிட்டு கலவரக்காரர்கள் தாக்கினார்கள் என்று இந்த அரசு நடத்திவரும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இந்தப் பிணை உத்தரவு.

பள்ளி நிர்வாகிகள் மீது காட்டப்பட்ட எவ்வித கரிசனையும் போராடிய மக்கள் மீது துளியும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள பள்ளி, தனியார்மயக் கல்விக் கொள்ளையை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நடத்தி வந்த பள்ளி, இந்த பள்ளியில் 7 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு எம்.எஸ் பிரகாஷ் என்று ஒரு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனது தொடர்பான வழக்கு இப்போது வரை விசாரணைக்கு வரவில்லை. அந்த வகையில் இந்த பள்ளி ஒரு தொடர் முறை குற்றவாளி என்பதை பற்றி எல்லாம் எவ்வித பரிசீலனையும் இன்றி, பிணை உத்தரவில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ

பல்வேறு மக்கள் பிரச்சினைகளிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மக்களுக்கு எதிராகவே நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் அனைத்து உறுப்புகளும் செயல்பட்டிருக்கின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம் அமைத்தது, ஜெயராஜ் கொலை வழக்ககில் குற்றவாளிகள் சிறையில் இருப்பது போன்றவை அரிதினும் அரிதே. அதற்கான காரணம் என்பது இந்த அரசும் நீதிமன்றமும் அல்ல. மாறாக மக்களின் கொந்தளிப்பான உணர்வும் அவர்களின் போராட்ட வழிமுறைகளும் மட்டுமே.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது அரசின் அரசியல் பொருளாதார சமூக கொள்கை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவது என்பதும் அரசின் இன்னொரு முக்கியமான கொள்கை. இந்த கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய எவ்விதமான அணுகுமுறையையும் எவ்விதமான தீர்ப்பையும் இந்த அரசு ஒருபோதும் கொடுக்காது. ஸ்ரீமதி மர்ம மரணம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

தொடர்ச்சியாக பல்வேறு பாசிச நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வாயிலாகவே இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி என்பது ஓர் குற்றகும்பல்! அதாவது ஆட்சியாளர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மத்தியிலும் செல்வாக்கு கொண்ட நபர்கள் இவர்கள். அந்த பள்ளியில் சாக நடக்கிறது; அந்த பள்ளி தாளாளர் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி கிட்ட பேசக்கூடிய நபர்; எப்படி பட்ட ஒரு செல்வாக்கு உடைய குற்றக்கும்பலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இப்படி பட்ட நபர்கள் வெளியே வந்தால் என்ன செய்வார்கள் என்பது நமக்கு தெரியும்.

போராடிய மக்களை தேடி தேடி கைது செய்கிறார்கள். ஸ்ரீமதியின் தாய் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்தவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். ஆக,, பள்ளியின் தாளாளர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பதை பட்டியலிட்டு அவர்களையெல்லாம் போலீசு கைதுசெய்திருக்கவேண்டுமல்லவா? ராஜசேகர் போன்ற ஆதிக்க சாதி கும்பல்களை ஏன் இன்னும் கைது பன்னவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்!

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் | செப் 17 மாநாடு அணிதிரள்வீர் | தோழர் சிவகாமு

ரும் செப்டம்பர் 17, 2022 அன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற தலைப்பில் புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஆகியோரை இணைந்த்துக்கொண்டு மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாட்டில் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்!

மாநாடு நிதி பிரச்சாரத்தின் போது வீட்டுபெண்கள் சிலிண்டர் விலைவாசி உயர்வை சொல்லி குமுறுகிறார்கள். மின்சார கட்டணம் உயர்வை பற்றி சொல்லி குமுறுகிறார்கள்.

விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்…

 

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!