நெருங்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அணி திரள்வோம் !! மோதி வீழ்த்துவோம் !!
அன்பார்ந்த மக்களே !
கொரோனா பீதியூட்டி அனைவரும் வீட்டிலேயே இருங்கள், கையைக்கழுவுங்கள், வாயை மூடுங்கள் , கையைத்தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்று நம்மையெல்லாம் திசைத்திருப்பியது மோடி அரசு. இதன்மூலம் வேலையிழந்து தொழில்கள் அழிந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை? பல நூறு மைல்கள் நடந்தே சென்ற பல லட்சம் தொழிலாளர்கள், பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற தாய்மார்கள், இரயிலில் அடிபட்டு செத்துப்போன தொழிலாளர்கள் – குழந்தைகள் என நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்!
இந்த பெருந்தொற்றுச் சூழலை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும், தனது இந்துராட்டிர கனவை நிறைவேற்றவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு விவசாய சட்டத்திருத்தம் , தொழிலாளர் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் என இன்னும் பல கேடுகளை கடந்த 7 மாதங்களாக சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது பாசிச மோடி அரசு.
படிக்க :
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
மறுகாலனியாக்க கொள்கைகளால் ஏற்கெனவே அழிந்து வரும் விவசாயத்தை ஒரேயடியாக குழு தோண்டி புதைத்துவிடவே விவசாய சட்டத்திருத்தம். ஏற்கனவே தொழிற்துறையை சூறையாடி அழித்த கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம். தனது நிலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டுமென்பதை விவசாயி முடிவு செய்ய முடியாது. கார்ப்பரேட் முதலாளிதான் முடிவு செய்வான். இச்சட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த முடியும்.
உயிர்வாழ தேவையான நெல், கோதுமைக்கு ஆதார விலையை இனி அரசு தீர்மானிக்காது, கொள்முதலும் செய்யாது. இதனால் வேறு வழியின்றி அடிமாட்டுவிலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது விவசாயம் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் செல்லும்.
தொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அச்சட்டங்களை செல்லாக்காசாக்குவதே மோடி அரசின் திட்டம்.தொழிற்சாலை சார்ந்த தொழிலாளிகள் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்வாதார உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட உச்சக்கட்ட தாக்குதலாகும் இது. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது பணிக்காலத்திலும் பணி ஓய்வுக்குப் பின்னும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பலியாடுகளாக்கப்பட்டுள்ளது தொழிலாளிவர்க்கம்.
புதிய சட்டத்தொகுப்பின்படி காண்ட்ராக்டர், வேலையளிப்பவர் என்ற வரையறைக்குள் வந்துவிட்டதால் இனி காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஏற்படும் எவ்வித பாதிப்பிற்கும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி பொறுப்பேற்க வேண்டியதில்லை.காண்ட்ராக்ட் தொழிலாளியை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது முன்பு சட்டவிரோதம் . இந்த சட்ட விரோதத்தையே சட்டமாக்கிவிட்டது மோடி அரசு. வரும் காலத்தில் நிரந்தரத்தொழிலாளி என்ற வகையினமே இருக்காது என்றால் நிரந்தர வருமானமும் வாழ்க்கையும் இனி கனவுதான்.
கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இனி தேவையில்லை என திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் விவசாயிகளும் தங்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்படுவதுடன் நாம் உயிர் வாழ்வதற்கான இயற்கை சூழலே அழிக்கப்படவுள்ளது.
சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்கிறது. பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 10ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தனியார்மயத்தால் மின்கட்டணம் உயரப்போகிறது. இரயில்வே தனியார்மயம் மூலம் ரயில் கட்டணமும் உயரப்போகிறது.
ஏழை மாணவர்கள், பெண்கள், தலித்துகளின் கல்விகற்கும் உரிமையை பறிக்கும் வருணாசிரம வகையிலான, அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கல்வியை திணிப்பது, கல்வியில் புகுந்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வகைசெய்கிறது புதிய கல்விக்கொள்கை.
2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முசுலீம்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுக்குண்டர்களும் போலீசும் இணைந்து முசுலீம்களையும் தலித்துகளையும் ஊபா கொடுஞ்சட்டத்தில் தள்ளுகிறார்கள்.
காசுமீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாராளுமன்ற முடிவை அங்கீகரித்தது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி அளித்தது, பாபர் மசூதி இடிப்புக்குற்றவளிகளை விடுதலை செய்தது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த மறுப்பது, முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்கியது என ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கங்களை நிறைவேற்றும் இந்து ராட்டிரத்தின் அங்கமாகிப்போய்விட்டது நீதித்துறை.
நேற்று கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரு புறம் காவி பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்கின்றனர்.. ஸ்டேன்ஸ்சாமி, சாய்பாபா, ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ், பெண் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை கருப்புச்சட்டங்களில் கைது செய்கிறது மோடி அரசு.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆதிக்க சாதி வெறியர்களும் – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஊர்வலம் போவதும் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தலித்துக்களையும், இசுலாமியர்களையும் அடித்துக்கொல்வது குற்றமில்லை; இசுலாமியர்கள், தலித்துகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பது,பெண்களை வல்லுறவு கொள்வது போன்றவை குற்றமே இல்லை. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஆகியவற்றை சட்டமாக்குவதன் மூலம் இந்துராட்டிரத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் குற்றவியல் திருத்தச்சட்டம்.
இந்து ராட்டிரம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் ஹத்ராசில் ஏழை தலித் மாணவி மனிஷா தாக்கூர் சாதி வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதும் அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்று பிணத்தை பெற்றோர்களிடம் கூட தராமல் எரித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை பிடித்து கீழே தள்ளியதும் அடித்தும் சர்வாதிகாரமாக செயல்பட்ட போலீசின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.
படிக்க :
♦ மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
♦ விழித்தெழ வேண்டிய நேரமிது !
மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு மாநில அரசுகள் உலக வங்கியிடம் நேரடியாக பிச்சையெடுக்க தள்ளப்படுகின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக நீட் என்ற பெயரில் மாநிலஅரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை கைப்பற்றிய மோடி அரசு தமிழக அரசை ஒதுக்கி வைக்கிறது. எழுவர் விடுதலை, கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவற்றுக்காக தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு தீர்மானங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. இப்படி மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்றது மோடி அரசு. கார்ப்பரேட் – காவி திட்டங்களை எதிர்ப்பவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வழக்கு போடுகின்றது. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறோம் என்று கருதி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.
நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாசிஸ்டுகளோ செயலில் இருக்கிறார்கள் . நாமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக செயலில் இறங்கும் போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் , வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்துப்பிரிவு மக்களின் எழுச்சியை உருவாக்குவோம். அந்த எழுச்சிதான் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும்.
தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
ppchennaimu@gmail.com
FB: makkalathikaramtn






தொழிலாளர் வர்க்கம் தன்னைத்தானே எப்படி ஸ்தாபனரீதியாக ஒன்று திரட்டிக் கொள்வது என்பதையும்
ஆதலால் மார்க்ஸ்
அந்த சமயத்தில் ஒருபுறத்தில் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு செய்ய வேண்டிய போர்க்குணமிக்க கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பரந்த பொதுஜனங்களுக்கு தலைமை கொடுக்கவும் பலமாக போராடும் கட்சி அவசியமாயிருந்தது என்பதை அப்புரட்சிக் கடமைகளே வலியுறுத்தின. மறுபுறத்தில் இண்டாவது இண்ட
நமது கட்சி தொழிலாளி வர்க்க கட்சி, பரந்த பொதுஜனங்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தும் கட்சி, தனக்கு கடமையாக அமைந்துள்ள சரித்திரப்பூர்வமான பணிகளை கட்சி நிறைவேற்ற வேண்டுமானால் பல்வேறு காலகட்டங்களில் புரட்சிக்கு எதிராக வரும் விரோதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பல்வேறு புரட்சிகரமான ஜனப்பகுதிகள், வர்க்கங்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.
ஆதலால் அத்தகைய உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் அவசியம்; தவிர்க்க முடியாதது. உள்கட்சிப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு முயலுகின்ற எவ்வித எண்ணமானாலும் சரி அல்லது தன் குற்றத்தை பிறர் விமர்சிக்காமலிருக்கட்டும் என்பதற்காக மற்றவர்களின் குற்றங்களை விமர்சிக்காமல் ஒதுங்குவதானாலும் சரி, முற்றிலும் தவறானது.
ஆதலால் நமது உள்கட்சிப் போராட்டம் ஏககாலத்திலேயே வலதுசாரி சந்தர்ப்ப வாதத்தையும் இடதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து திருப்பிவிடப்பட வேண்டும்; இந்த இரண்டு அம்சங்களை எதிர்த்து திருப்பினால்தான் நமது கட்சி அதன் திட்டவட்டமான தொழிலாளி வர்க்க குணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை நாம் செய்யத் தவறினால், நாம் ஒருதலைப்பட்சமான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருப்போமேயானால், அல்லது நமது உஷார் உணர்வு தளர்த்தப்படுமேயானால், இரு பக்கத்தையும் எதிர்த்து நாம் நடத்தும் போராட்டம் தளருமேயானால் அப்பொழுது விரோதி தாக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, நாம் புறக்கணித்த பக்கத்திலிருந்து நிச்சயமாகத் தாக்குவான். அம்மாதிரி நிலைமையில் கட்சியின் பரிசுத்தத் தன்மையையும், சுயேட்சை தன்மையையும் பாதுகாப்பதும் கட்சியை ஒன்றுபடுத்துவதும் அசாத்தியமாகிவிடும். ஆதலால் இரு முனைகளில் ஓய்வு ஒழிச்சலின்றி நிகழ்த்தப்படும் உள்கட்சிப் போராட்டத்தின் மூலம்தான் நமது கட்சி பலம் பெற்று வளர்கிறது.
மேலும் அவர் கூறினார்: 
1. மூத்த ஊழியர்கள் தமது நீண்டகால அனுபவத்தை வைத்து காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களுடைய நீண்டகால சேவையைக் காட்டி தம்பட்டமடித்துக் கொள்வது அர்த்தமற்றது. கட்சி ஊழியர்களுக்கு மூன்று தகுதிகள் இருந்தாக வேண்டும் என்பதை மூத்த ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் நேர்மை, திறனாற்றல், அனுபவ மேம்பாடு ஆகியவையே இந்த மூன்று தகுதிகள். அவர்கள் தமது நீண்டகாலச் சேவையை மட்டும் வலியுறுத்தாமல் திறனாற்றலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அரசியல் நேர்மையை திறனாற்றலிலிருந்து பிரித்து விடக்கூடாது. புரட்சிகரக் கடமைகளை நிறைவு செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்கள் அரசியல் நேர்மை குறைபாடுடையதே. நீண்டகாலச் சேவை எனும் பெருமிதமானது, உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாவதை நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், ஒரு மூத்த புரட்சியாளராக இருப்பது பெருமைக்குரியதே.
3. தனித் தேர்ச்சிமிக்க ஊழியர்கள் பற்றி
நமது சொந்த திறனாற்றல்களின்பால் ஒரு விஞ்ஞானபூர்வமானப் போக்கை நாம் கைக்கொண்டாக வேண்டும். தவறவே தவறாதவர்களாக நம்மையே நாம் கருதக் கூடாது. ஆலோசனைக்காக பிற மருத்துவர்களை அழைப்பதை சில மருத்துவர்கள் விரும்புவதே இல்லை. நோயைக் குணப்படுத்துவதில் தாம் தவறும்பட்சத்தில், வேறு எவரும் நோயைக் குணப்படுத்தக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். சிலர், மற்றவர்களுடைய பலவீனங்களைப் பற்றிப் பேசுவதில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால், தமது சொந்த பல வீனங்களைப் பற்றி வேறு எவரும் பேசினால், அவர்கள் சீற்றமடைகின்றனர். இவர்கள், தம்மைத் தவறற்றவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணம் என்னவென்றால், அவர்கள் தமது புகழிலும் அந்தஸ்திலும் மெய்மறந்து உள்ளனர். ஆனால், பிறரிடமிருந்து அறிவுரை பெறுவதால், ஒருவர் தமது மதிப்பை இழந்து விடுவாரா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
3. பொருத்தமான பாராட்டுதல்களையும் அவசியமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தவறு செய்த ஊழியர்களை விமர்சிப்பதைப் பற்றி தலைமை ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதே இல்லை. இதன் மூலம், எதிர்காலத்தில் மேலும் சிறந்த வேலைகளைச் செய்யக் கற்றுக் கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து விடுகின்றனர். ஊழியர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது என்பதன் முதன்மையான பொருள், அவர்கள் அரசியல் ரீதியில் முன்னேறுமாறு கவனித்துக் கொள்வதாகும். ஓர் ஊழியரின் தவறுகளை மிகைப்படுத்துவது சரியல்ல. ஆனால், ஓர் ஊழியரை விமர்சிக்காமல், எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும் சரியல்ல. பாரதூரமான தவறுகளை இழைத்துள்ள ஓர் ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அனுபவத்திலிருந்து எந்த படிப்பினையையும் அவர் பெறமாட்டார். பிற தோழர்களும் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றாகச் செயல்பட்டுள்ள ஒருவர் பாராட்டப்படாமல் போனால், பெருமளவு முன்னேற்றம் அடைய அவருக்கு ஊக்கம் ஏதும் இராது. மேலும், இதிலிருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, அவரவர்க்குரிய பாராட்டுகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வழங்கப்படுவதில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்.



உண்மை என்னவென்றால், கட்சியின் இந்த எதிர்பார்ப்புகள் பற்றி ஊழியர்கள் அக்கறை கொள்ள வேண்டும்; அவை தம்மிடம் இருக்க வேண்டுமென்று அவர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாகக் கோரவேண்டும். ஆனால், இப்போது யேனானில் உள்ள சில ஊழியர்கள், கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி பேசும்போதெல்லாம் கட்சி தங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும், தம்மை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், தம்மைப் பேணி வளர்க்க வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய நான்கு எதிர்பார்ப்புகள் (கட்சிக்கு விசுவாசமாக இருத்தல், மக்களுடன் நெருங்கிய பிணைப்புகளைக் கொண்டிருத்தல், சுயேட்சையாக வேலை செய்யும் ஆற்றல் கொண்டிருத்தல் மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளுதல்) பற்றி அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அவற்றை இரண்டாந்தர முக்கியத்துவம் உடையவையாக அவர்கள் கருதுகின்றனர்; அல்லது அவற்றை அடியோடு அவர்கள் மறந்து விடுகின்றனர். இது தவறானது என்பது சொல்லாமலே விளங்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இயக்கங்களில் தாம் பெற்ற அனுபவத்திலிருந்து புரட்சியாளர் பற்றிய அவர்களது கருத்தாக்கம் பின்வருமாறு உள்ளது. ஒரு அரசியல்வாதிதான் புரட்சியாளர்; கூட்டங்களில் தங்குதடையின்றி மடைதிறந்த வெள்ளம் போலப் பேசுபவர் புரட்சியாளர்; ஆர்ப்பாட்டங்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்தான், புரட்சிக்காக கிளர்ச்சி வேலைகளில் பங்கேற்பவர்தான் புரட்சியாளர்; – இப்படித்தான் அவர்கள் கருதுகின்றனர்.
எல்லா தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளும் தமக்கே உரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. எல்லா அரசியல் வேலைகளும் தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளுடன் பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. இராணுவ நிர்வாக அமைப்பை எடுத்துக்கொண்டால், அதில் அரசியல் பிரிவு மட்டும் இல்லாமல் அதில் படையதிகாரிகள் பிரிவும் படைவீரர்களை அணிவகுத்து வழிநடத்தும் பிரிவும் இதுபோலவே இருக்கின்றன. பொதுமக்களிடையேயான வேலையிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. இது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழுவிலும், ஷான்க்ஸி – காங்சு – நிங்ஸியா எல்லைப் பிரதேச அரசாங்கத்திலும் பல்வேறு பணித்துறைகள் உள்ளன. வேறெந்த பணிகளுடனும் தொடர்பற்ற முழுமையான அரசியல் வேலை என்று எதுவுமே இல்லை.
முதலில் ”திறமையானவர்களை”ப் பற்றி பரிசீலிப்போம். பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் சீனா பின்தங்கியுள்ளது. இந்தக் காரணத்தால், அறிவாளிப் பிரிவினர் பெரும் பயனளிப்பவர்களாக உள்ளனர். எனவே, நடுத்தரப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நமக்கு மதிப்பு மிக்க செல்வங்களாவர். ஆனால், ஒப்பீட்டு ரீதியில் அவர்கள் சாதாரண மக்களை விட திறமையானவர்களாக இருக்கிறார்களே ஒழிய, புரட்சியாளர்கள் என்ற முறையில் அவர்கள் திறமை மிக்கவர்களாக இருப்பதில்லை. புரட்சிகர அணிகளில் சேர்ந்து வேலை செய்வதற்கு, நடுத்தரப் பள்ளி அல்லது கல்லூரி கல்வி கற்றவர்களாக இருப்பது போதுமானதாக இருக்காதா? சிலருக்கு இது பொருந்தலாம்; ஆனால், பிறருக்கு, இன்னும் பெரும்பாலானோரைப் பொருத்தவரை இது போதுமானதல்ல. ஏனெனில், புரட்சிகர வேலைக்குத் தேவைப்படுவது புத்தக அறிவு மட்டுமல்ல; மாறாக, இதற்குச் சமுதாயம் பற்றிய அறிவும் புரட்சிகர நடைமுறை வேலையினால் ஈட்டப்பட்ட அனுபவமும் தேவைப்படுகிறது.
சர்வசாதாரண கடமைகள் தரப்படுவது பற்றி இப்போது கவனிப்போம். ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி சரியான மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்; சிறுசிறு வேலைகளைச் செய்வது பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில், மகத்தான சாதனைகள் சிறுசிறு வேலைகளிலிருந்துதான் தொடங்குகின்றன.






