உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!
2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.
உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!
புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.
மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”
விதை மசோதா: இந்திய விதை சந்தையைக் கைப்பற்றும் கார்ப்பரேட்கள்
பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தை பாசிச பா.ஜ.க. அரசு மாற்றியமைக்க உள்ளது. அதன் பொருட்டு வரைவு விதைச் சட்ட மசோதா, 2025-ஐ...
ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.
உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.
உ.பி மதம் கடந்த காதல்: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளம் காதலர்கள்!
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!
பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.
கர்நாடகா: ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்ட மசோதா
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும்.
SIR: பா.ஜ.க.-வின் சதியை அம்பலப்படுத்தும் பா.ஜ.க. எம்.பி.!
மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.
தமிழ்நாடு பேரிடர் நிதியை முடக்கும் மோடி அரசு
தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.
Golden Jubilee Year of the State Organizing Committee (SOC) which upheld Mass Line
By observing our organization's Golden Jubilee, we aim to impart a historical consciousness — not only regarding our own organization but also regarding the contemporary Naxalbari movement — to our comrades and to revolutionary, democratic forces.

























