ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!
வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.
நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.
கல்பாக்கம்: மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் வேக ஈனுலை திட்டம்!
அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான தொழில்நுட்பத்தையே பாசிச மோடி அரசு தற்போது கொண்டாடி வருகிறது. இது இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் திட்டமாகும்.
அம்பேத்கர் 135: பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!
ஏப்ரல் 14 - பார்ப்பனிய எதிர்ப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,...
சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!
கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.
வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மேட்டுப்பாளையம் | பிரசுரம்
2026 சட்டமன்றத் தேர்தல்:
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
வேண்டும் ஜனநாயகம்!
பரப்புரை இயக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களே!
தேர்தல் என்றால் ஓட்டுக் கட்சிகளுக்குத் தான் அது திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இத்தேர்தலில்...
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் தேவை மக்கள் போராட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி "வேண்டும் ஜனநாயகம்" என்ற முழக்கத்துடன் மக்களின் கோரிக்கைகளை பாசிச எதிர்ப்பு மாற்றுத் திட்டத்துடன் இணைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது தமிழ்நாட்டின் பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாக உள்ளது.
தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
கேரளா: பேராசிரியர்களின் சாதி வெறிக்கு பலியான தலித் மாணவன்!
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.
சாத்தான்குளம் தீர்ப்பு: நீதியை நிலைநாட்டியது நீதிமன்றமா? மக்கள் போராட்டமா?
மேல்முறையீடுகள் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர் என்பதை மனதில்கொண்டு, தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியோடு நாம் செயலாற்ற வேண்டும்.
சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!
நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தென்காசி மசூது கொட்டடி கொலைக் குற்றவாளிகள் விடுதலை!
சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரை தென்காசி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதான் இந்த கட்டமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி!
கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.
திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”
புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

























