விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: லாபவெறியும் அரசின் மெத்தனமும்
தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.
விருதுநகர்: சாதிய வன்கொடுமைக்கு எதிராகத் தேர்தலைப் புறக்கணிக்கும் அச்சந்தவிழ்த்தான் மக்கள்
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!
அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள். இதில் அரசின் பங்குதான் முதன்மையானது.
2026 மே நாள் துண்டறிக்கை
1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
2026 மே நாளுக்கான அறைகூவல்
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும்.
ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!
வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.
நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.
கல்பாக்கம்: மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் வேக ஈனுலை திட்டம்!
அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான தொழில்நுட்பத்தையே பாசிச மோடி அரசு தற்போது கொண்டாடி வருகிறது. இது இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் திட்டமாகும்.
அம்பேத்கர் 135: பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!
ஏப்ரல் 14 - பார்ப்பனிய எதிர்ப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,...
சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!
கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.
வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மேட்டுப்பாளையம் | பிரசுரம்
2026 சட்டமன்றத் தேர்தல்:
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
வேண்டும் ஜனநாயகம்!
பரப்புரை இயக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களே!
தேர்தல் என்றால் ஓட்டுக் கட்சிகளுக்குத் தான் அது திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இத்தேர்தலில்...
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் தேவை மக்கள் போராட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி "வேண்டும் ஜனநாயகம்" என்ற முழக்கத்துடன் மக்களின் கோரிக்கைகளை பாசிச எதிர்ப்பு மாற்றுத் திட்டத்துடன் இணைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது தமிழ்நாட்டின் பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாக உள்ளது.
தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
கேரளா: பேராசிரியர்களின் சாதி வெறிக்கு பலியான தலித் மாணவன்!
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.
























