பிரெஞ்சு புரட்சி தின விழாவில் பாசிஸ்டு மோடி!
தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது.
என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’
இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.
காசி தெலுங்கு சங்கமம் – தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் பாசிசப்படை!
வட மாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது.
வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!
போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!
NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.
பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!
பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே!
முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!
“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது.
தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!
ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ வழியற்று தற்கொலை செய்துகொள்வதும் மோடியை பொறுத்தவரை 'நகைச்சுவை' தான்.
உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!
அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே தனக்கேற்றார்போல் மாற்றும் வரலாற்று பிழையை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!
தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.
மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!
பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!
நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!
இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.
புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!
2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாகவும் இருக்கலாம்.
மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது இஸ்லாமிய வெறுப்பு ஒன்று தான்.
தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!
இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க - அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.
























