Tuesday, June 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 215

பிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள் அதிகாரம் ஆதரவு

PP Letter headபத்திரிகைச் செய்தி

25.02.2021

ரக்கு மற்றும் சேவை வரி (GST) யை கண்டித்தும் மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருட்கள் எடுத்து செல்லும் போது மின்னணு முறையில் செலுத்தவேண்டிய இ-வே பில்லை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும் நாளை பிப்ரவரி 26 தேதியன்று (26.2.2021) அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பாக. ஏறத்தாழ 40,000 வர்த்தக அமைப்புக்களும் எட்டு கோடி வர்த்தகர்களும் பங்கேற்க உள்ள அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.

தொடர்ச்சியாக பெட்ரோல்- டீசல் – சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.25 விலை உயர்ந்து ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வால் போக்குவரத்திற்கான செலவு அதிகளவில் அதிகரித்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வயிற்றைச் சுருக்கி வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரூ. 30-க்கும் குறைவாக அடக்கவிலை உள்ள பெட்ரோல் கிட்டத்தட்ட நூறு ரூபாய் வரை விற்கப்படுவது அம்பானிக்காக பொதுமக்கள் மீது மோடி அரசு நடத்தும் போர். கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடி வரி சலுகைகளை வாரி வழங்கும் மோடி-அமித்ஷா கும்பல் மக்களின் மீது வரி சுமையை மட்டுமே ஏற்றுகிறது.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ மோடியின் நா தழுதழுத்தது ஏன் ? || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” !

விவசாயிகளின் வேளாண் சட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக தீஷா ரவி என்ற இளம் பெண் கைது செய்யப்படுகிறார். மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் ஊபா போன்ற தடுப்பு சட்டங்களால் கைது செய்யப்படுகிறார்கள் . மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி கைது, சிறை என அடக்குமுறையை ஏவி விடுகிறது மோடி, எடப்பாடி கும்பல்.

கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக மக்களை வாழ விடாமல் செய்யும் இந்த அரசு மக்களுக்காக போராடுகின்றவர்களை கருப்பு சட்டங்களால் வதைக்கிறது. இந்த அநியாய, அக்கிரமத்துக்கு முடிவு கட்டியாக வேண்டும் எனில் மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு வணிகர்களையும் பொதுமக்களையும் ஒழித்துக்கட்டும் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வர்த்தக சங்கங்கள் ஒருங்கிணைக்கக் கூடிய இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் அனைத்து பிரிவு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குச் செல்ல தயாராகிறோமா ? – பாகம் 2

பாகம் 1: விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள்: பின்னணி என்ன?

லகளாவிய அளவில் நடைபெறும் நில கையகப்படுத்துதல் பன்னாட்டு கார்ப்பரேட்களின் லாப நோக்கத்தை முன்வைத்தே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உணவு சங்கிலியையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் நீண்டகால லாபத்தை அறுவடை செய்ய முடியுமென்று நினைக்கிறார்கள் கார்ப்பரேட்கள்.

இன்று உலகளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள் வர்த்தகத்தில் வெறும் நான்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஏகபோகமாக ஆதிக்கம் செய்கிறது. அவை, Archer-Daniels-Midland, Burge, Cargill, Louis Dreyfus ஆகியவைதான். இவற்றை ABCD நிறுவனங்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இனிமேலும் விவசாய நிலங்களுக்கு தூரமாக இருக்கப்போவதில்லை. விவசாயிகளின் விளைச்சலை வெறுமனே சந்தைப்படுத்தும் நிறுவனங்களாக இல்லாமல், இனி ஒட்டுமொத்த விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த விவசாய உற்பத்திப் பண்டங்களும் இணைக்கப்பட உள்ளன.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

நிலத்தின் மீதான சொத்துரிமை, விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை, இவையனைத்திற்கும் தேவையாக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் கட்டுமானப் பொறுப்பு என பல்வேறு வகைகளில் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் கைபற்றிக் கொள்வதுதான் இவர்கள் இலக்கு.

இன்றைய காலத்தின் முக்கியமான குணாம்சங்களில் ஒன்று, ஒழுங்கமைப்பட்ட சில்லறை விற்பனை சந்தை (Organised Retail Market). இதுபோன்ற ஒழுங்கமைப்பட்ட கார்ப்பரேட் சில்லறை விற்பனை முதலைகள் ஒரு நாட்டின் மேட்டுக்குடி மக்களின் உணவு சந்தையை குறிவைத்து இதை முன்னெடுத்தார்கள். ஆனால், தற்போது பெரும்பான்மையான மக்களையும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைக்குள் கொண்டு வருவதை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் Reliance, சிறு நகரங்களில் கூட தங்களின் சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். இதன் மூலம் உயர்நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் கீழ்நடுத்தர வர்க்கத்தையும் தங்களது சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

2008-ஆம் ஆண்டின் உலக வளர்ச்சி அறிக்கையின்படி, பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், பூக்கள் போன்றவைதான் வளரும் நாடுகள் செய்யும் ஏற்றுமதியில் 47 சதவீதமாக இருக்கிறது. வளரும் நாடுகள் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதை, “உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான ஒழுங்கமைப்பு” கண்டிக்கிறது. வளரும் நாடுகள் தங்கள் உணவு தானிய தேவையை இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்ய வேண்டுமென்று நிர்பந்திக்கிறது.

இப்படி, உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை, ஏற்றுமதி சார்ந்த விவசாயமாக மாற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை கணக்கில் கொண்டு இந்தியாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் பார்க்கப்பட வேண்டும்.

2021 செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு பற்றிய மாநாடை Food Systems Summit என்னும் பெயரில் நடத்த விருக்கிறது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான இலக்கான “நிலையான விவசாயம்” என்பதற்கு முக்கியத்தும் கொடுக்கப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்கு ஒத்திசைவது போலவும், கடந்த 12 ஆண்டுகளாக உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) நிர்பந்தித்து வரும் விவசாய சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் இந்தியாவின் வேளாண் சட்டத் திருத்தங்கள் அமைந்திருக்கிறது.

இந்த விவசாய சீர்திருத்தங்களை செயல்படுத்தும் விதமாக New Vision for Agriculture India Business Council என்ற அமைப்பு சர்வதேச ரீதியில் வேலை செய்து வந்துள்ளது. இதில் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் அதானி குழுமமும் அடங்கும்.

Klaus Schwab என்னும் உலகப் பொருளாதார மன்ற குழுவின் இயக்குனர்களில் அம்பானியும் ஒருவர். இப்படி உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் திட்டமிட்டுள்ள வகையில் விவசாயத்தையும், ஒட்டுமொத்த உணவு உற்பத்தி வலைப்பின்னலையும் தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதற்காகதான் இந்த சீர்த்திருத்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

தற்போது இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் வேளாண் சட்டங்களால்,

  • வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் (Agricultural Produce Market Committee) மண்டிகளை மூடுவதன் மூலம், உணவு தானியத்தில் அரசு கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சியடையும். உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க முடியாமல் போகும். இதனால், அவர்கள் உணவு தானிய உற்பத்தியில் இருந்து வெளியேறுவார்கள்.
  • இதனால், இந்தியாவின் உணவு தானிய தேவைக்காக பன்னாட்டு கார்ப்பரேட்களிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையேற்படும். இவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்து விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவதை உறுதிபடுத்தும் விதமாக, உணவு பொருட்களை பதுக்குவதை, அதிக விலைக்கு விற்பதை தடைசெய்யும் “அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை” திருத்தியிருக்கிறார்கள்.
  • உணவு தானிய உற்பத்தி சிதைந்துபோனதால், விவசாயிகள் ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்கள், காய்கறி, பழங்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய நிலையேற்படும். இந்த வகையில் ஏற்றுமதிக்கான பணப்பயிர்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் முன் அனுபவமில்லாத விவசாயிகளை ஒப்பந்த விவசாயத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகள்  சுரண்ட அனுமதி வழங்கும் விதமாக ஒப்பந்த விவசாயச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
  • கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயமும், உணவு தானியக் கொள்முதலும் சென்றால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதோடு, பணம் உள்ளவன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உண்டாகும்.

இந்தச் சட்டங்களின் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் நலனைப் பார்க்கலாம். விவசாயம் கார்ப்பரேட்டுகளுக்கு நல்ல வருவாய் அளிக்கக் கூடிய துறை. ஏனெனில் நாம் இருசக்கர வாகனத்தில் போகாமலோ, வங்கியைப் பயன்படுத்தாமலோ கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் உணவின்றி உயிர்வாழ முடியாது.

“விவசாயம் என்பது மிகக்குறைந்த வருமானம் தரக்கூடிய தொழில் என்ற நிலை சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளது. விவசாயம், உணவுத்துறை ஆகியவை நீண்டகால வளர்ச்சியளிக்கக் கூடிய துறையாக பார்க்கப்படுகிறது”, என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் நிலங்களை வாங்குகிறார்கள். ஒரு தனிநபர் என்ற வரையறையில் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காராக இருப்பவர் பில் கேட்ஸ் (Bill Gates) தான் என்றால் நம்ப முடிகிறதா ?

சில்லறை விற்பனை சந்தையை கார்ப்பரேட்கள் கைபற்றிக் கொள்வதால், உற்பத்தி பொருட்களின் தரத்தை கார்ப்பரேட்கள்தான் தீர்மானிப்பார்கள். கார்ப்பரேட்கள் நிர்ணயிக்கும் தரத்திலான உற்பத்தியை செய்ய விதை, பாசனவசதி, சேமிப்பு கிடங்கு என நிறைய வசதிகள் தேவைப்படும். இது இயல்பிலே சிறு, குறு விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டியடிக்கும். இப்போது, அவர்களின் நிலங்களை குறைவான விலைக்கு கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வது எளிதாக இருக்கும்.

இந்தியாவில் விவசாயம் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயத்தின் மூலம் வரும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுக்கே போதுமானதாக இல்லை; தேசிய மாதிரி கணக்கெடுப்பு (2012-2013)-ன் படி, ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூபாய் 6,400 மட்டுமே. ஒரு குடும்பத்திற்கு நான்கு நபர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு நபரின் சராசரி மாத வருமானம், ரூபாய் 1,600 மட்டுமே. 2016-2017-ஆண்டு கணக்கெடுப்பின்படி, 53 சதவீத விவசாய குடும்பங்கள் கடன்பட்டிருக்கிறார்கள். இதுவுமே ஒரு குறைமதிப்பீடுதான் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

விவசாயிகளின் நிலை இப்படியிருக்கையில், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அமலுக்கு வந்தால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வெளிவேறும்படி நிர்பந்திக்கப்படுவார்கள். கார்ப்பரேட் பிடியில் ஒட்டுமொத்த உணவுப் பொருள் உற்பத்தியும் செல்கையில் பசியும் பட்டினியும் மீண்டும் தலைவிரித்தாடும்

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

உள்ளூர் முதல் உலக அளவிலான கார்ப்பரேட் எஜமானர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் இந்த வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்ற பாஜக-வின் ஆணவ பேச்சுக்குப் பின்னால் இந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு கார்ப்பரேட்டுகளின் நலன் ஒழிந்துள்ளது. இந்தக் கார்ப்பரேட் கும்பலை புறக்கணித்து அடி பணியச் செய்வதுதான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்ய முடியும்.


ராஜேஷ்

உதவிய கட்டுரைகள்:
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 1)
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 2)
♦ The WEF Agenda behind modi farm reform

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட் ஜின்

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாகம் 1

லக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை, அட்டூழியங்களை, ஆக்கிரமிப்புகளை, ஈவு இரக்கமற்ற கொடுங்கோன்மைகளை, பச்சைப் படுகொலைகளை நடத்தி வருவது நாம் அறிந்ததே.

அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளையும், அந்நாட்டு உழைக்கும் மக்களையும் நாம் வேறுபடுத்திப்  பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வரலாறு என்பது அங்கு நடந்த வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தின் வரலாறுதான். நாம் அமெரிக்க மக்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. “ஏடறிந்த காலம் தொட்டு இதுவரையான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே” என்றார் மாமேதை கார்ல் மார்க்ஸ்.

படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

அடிமை மக்களின் துயரம் மிகுந்த வரலாறு, கருப்பின உழைக்கும் மக்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு, வெள்ளைப் பணியாளர்களின் உரிமைப் போராட்ட வரலாறு என்று உழைக்கும் மக்களின் தரப்பிலிருந்து, அவர்களின் சார்பில் நின்று, அமெரிக்காவின் வரலாற்றை இந்த வரலாற்று நூல் விவரித்து சொல்கிறது.

“அமெரிக்க மக்கள் வரலாறு” என்ற இந்த நூல் 25 தலைப்புகளில் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முழுமையான வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எண்ணற்ற தரவுகள் ஏராளமான சான்றாதாரங்களை முன்வைத்து மிகச்சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

“கொலம்பஸ் – இந்தியர்கள் – மனித முன்னேற்றம்”

அமெரிக்க மக்களின் வரலாற்றுப் பயணம் அடுக்கடுக்கான சோகங்கள் நிறைந்தது. ஏதுமறியாத அப்பாவி உழைக்கும் மக்களின் ரத்தமும் சதையும் அமெரிக்காவை நிர்மாணித்து உள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டு மன்னனிடமும் மகாராணியிடமும் தங்கத்தை கொண்டு வருவதாகப் பேராசைக் காட்டி தங்கத்தைக் கண்டறிய தனது கடல்வழிப் பயணத்தை துவக்கினான்.

தங்கத்தையும், வாசனைத் திரவியங்களையும் கொண்டு வருவதற்குப் பிரதிபலனாக லாபத்தில் பத்து விழுக்காட்டையும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலப் பகுதிகளில் கவர்னர் பதவியும் “அட்மிரல் ஆப் தி ஓசியன்” என்ற புகழ்மிக்க விருதையும் வழங்குவதற்கு, ஸ்பெயின் அரசு வாக்குறுதி வழங்கியது. மூன்று கப்பல்களில் 39 மாலுமிகளுடன் பயணத்தை மேற்கொண்டான்.

“பூர்வகுடி மக்களை கொன்றொழித்தக் கொடுங்கோலன் கொலம்பஸ்”

1492-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் கடல் பயணத்தைத் துவக்கிய 32-வது நாள் கடல் தண்ணீரில் மரக்கிளைகளும் பறவைகளின் இறகுகளும் மிதப்பதை கொலம்பஸ் குழுவினர் பார்த்தனர். இந்த அறிகுறிகள் அருகாமையில் நிலப்பரப்பு இருப்பதை தெரிவித்தன. அவர்கள் நிலப்பகுதியில் இறங்கியவுடன் அரவாக்குகள் என்ற பழங்குடியின மக்கள் அவர்களை வரவேற்றனர். அரவாக்குகள் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு இதர பயிர் வகைகளை விளைவிக்கும் ஒரு வளர்ச்சியடைந்த விவசாய முறையைக் கொண்டிருந்தனர்.

உணவும், தண்ணீரும், பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி உபசரித்த அரவாக்கு பழங்குடியின மக்களை முதுகில் குத்தி ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த கொலம்பஸ், அந்த அப்பாவி பழங்குடி மக்களை நர வேட்டையாடினான். 1495-ஆம் ஆண்டு மிகப்பெரிய அடிமை வேட்டைகள் நடந்தன. சுமார் 1500 அரவாக்குகளை (பழங்குடி இனமக்களை) பட்டியில் அடைத்து, ஸ்பானியர்களையும் நாய்களையும் கொண்டு காவல் காத்தான். நீண்ட தூர கடல் பயணத்தில் 500 பேரில் 200 பேர் வழியிலேயே இறந்து விட்டனர். உயிருடன் ஸ்பெயினை அடைந்த அடிமைகளை நகரத் தந்தை விற்பனைக்கு நிறுத்தினான்.

அடிமைகள் ஆடைகளின்றி நிறுத்தப்பட்டனர். “புனித கடவுளின் (Holy Trinity) பெயரால் நாம் அடிமைகளை மொத்தமாக அனுப்பி கொண்டே இருப்போம், அடிமைகள் அனைவரும் விற்பனை ஆகட்டும்” என்றான் கொலம்பஸ். “நான் திரும்பி வரும்போது தேவையான அளவு தங்கத்தையும் அடிமைகளையும் கொண்டு வருவேன் என்றென்றும் நிலை பெற்றிருக்கும்”, “நமது கர்த்தர் அவரது பாதையில் நாம் செல்ல நமக்கு வெற்றிகளை தருவார்”, தனது மனிதாபிமானமற்ற கொடுங்கோன்மைக்கு கடவுளைத் துணைக்கு அழைத்து கொலம்பஸ் செய்தி அனுப்பினான்.

தங்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்கின்ற அசாத்தியமான பணி செவ்விந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. நீரோடையில் உருளும் துகள்கள் மட்டும்தான் அங்கு இருந்த ஒரே தங்கம். அடிமைகளில் பலர் தப்பி ஓடினர். வேட்டை நாய்களின் துணையோடு அடிமைகளை வேட்டையாடிக் கொன்றனர்.

அடிமைகளை விற்கலாம் வாங்கலாம் கொலை செய்யலாம் என்ற முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தியவன் கொலம்பஸ். கொடுங்கோன்மையின் தீவிரம் தாங்க முடியாமல் அடிமை மக்கள் விஷத்தன்மை உள்ள கிழங்கு உட்கொண்டு கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர். “பரலோகத்துபிதா நமது கடவுள் அவருடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வெற்றியை தருவார்” என்று கொக்கரித்தான் கொலம்பஸ்.

தப்பிப் பிழைப்பதற்காக முயற்சி செய்த அரவாக்குகள் ஸ்பானியர்களின் ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கைதிகளாகப் பிடித்த அடிமைகளை தூக்கிலிட்டனர். உயிருடன் கொளுத்தினர். உடல் உறுப்புகளை துண்டித்தனர். இரண்டரை லட்சம் செவ்விந்தியர்களின் பாதிபேர், இதன் விளைவாக இறந்து விட்டனர்.

அடிமைகளின் உழைப்பை சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்த ஸ்பானியர்கள் ஆணவம் பிடித்தவர்களாக வளர்ந்தனர். சிறிது தூரம் நடக்கக் கூட மறுத்து அடிமைகளின் முதுகில் சவாரி செய்தனர். நாற்காலியில் அமர்ந்து கொண்டு அடிமைகளை சுமக்கச் செய்தனர். மனிதகுல வரலாற்றின் கண்டும் கேட்டிராத அக்கிரமச் செயல்களை அரங்கேற்றினர். சிறுவர்களின் தலையை வெட்டி வீசி விளையாடினார்கள். தங்களது கொலைவாள் கூர்மையானதாக இருக்கிறதா என்பதை சோதித்து அறிய அடிமைகளின் உடம்பில் பதம் பார்த்தனர். ஆயிரமாயிரம் அடிமைகள் சுரங்கங்களில் துன்புற்று இறந்தனர்.

“கொலம்பசின் அமெரிக்க கண்டுபிடிப்பு மாபெரும் வரலாற்றுப் புரட்டு”

அடிமைகளும் தங்கமும் என்ற இலக்கை நோக்கி பயணித்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்வதில் கூட சந்தேகத்துக்கு இடம் உண்டு. கொலம்பஸ் தரையிறங்குவதற்கு முன்பே நீக்ரோக்கள் அமெரிக்க மண்ணில் நுழைந்தவர்கள். வெள்ளையர்களின் வரலாறு இந்த வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்து விட்டது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர்.

நிறவெறியும் ஆதிக்க வெறியும் பண வெறியும் கொண்ட ஒரு கடல் கொள்ளைக்காரன்தான் கொலம்பஸ். அரவாக்குகள், செவ்விந்தியர்கள், கரீபியர்கள் போன்ற பழங்குடி மக்கள் தங்கள் மண்ணை இழந்து, பூர்வீகத்தை இழந்து, தங்கள் வரலாற்றை இழந்து விரட்டப்பட்டனர். அடிமை மக்களின் அவல வாழ்விலிருந்து நிர்மாணிக்கப்பட்டதுதான் இன்றைய அமெரிக்கா. 25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை அப்புறப்படுத்திவிட்டு அமெரிக்கா என பெயர் சூட்டி குடியேறினார்கள்.

அமெரிக்காவை நிர்மாணித்தவர் யார்? இந்த நாட்டை உயிர்த்துடிப்பு ஆக்கியவர் யார்? அமெரிக்க பேரரசை அட்லாண்டிக் துவங்கி பசிபிக் கடல் வரை விரிவு படுத்தியவர்கள் யார்? எல்லையற்ற வசதி வாய்ப்புகளை அங்கு உருவாக்கியவர்கள் யார்? “சபிக்கப்பட்ட அந்த தாழ்ந்த மனிதர்களால்தான் இந்த அமெரிக்கா உருவாக்கப்பட்டது என்ற அந்த ஒப்பற்ற உண்மையை உலகமெங்கும் பரப்புவோம்” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.

இதனை வரலாற்று வரிசைப்படி விவரிக்கிறது இந்நூல்.

“கப்பலில் வந்த மர்மமான சரக்கு”

அடிமைகள் பண்டங்கள் போலவும் ஆடு, மாடுகள் போலவும் விற்பனை செய்யப்பட்டனர். அடிமை விற்பனையில் திருடனும், மொழிபெயர்ப்பாளரும், விற்பனையாளரும் முக்கியமானவர்கள். 1619-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்கரையை வந்தடைந்த டச்சு கப்பலில் தொடங்கியது அடிமைகளின் வணிகம். வர்ஜினியாவின் ஜேம்ஸ் டவுன் என்னும் ஐரோப்பிய குடியிருப்பை எட்டியது டச்சு கப்பல். வந்தது-வணிகம்-செய்தது-திரும்பி சென்றது. அதுவரை எந்த கப்பலும் ஏற்றி வராத மர்மமான சரக்கை இந்தக் கப்பல்  ஏற்றி வந்தது. அது 20 அடிமைகள். இவ்வாறு முதல் அமெரிக்க அடிமை வியாபாரத்தை சாண்டர்ஸ் ரீடிங் வர்ணிக்கிறார்.

அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. “பணம் பிறவியிலேயே கண்ணத்தில் ரத்தக்கரை படிந்ததாய் உலகில் பிரவேசித்தது” என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். எல்லையற்ற லாப வெறி, நிற வேற்றுமை அடிப்படைகள், வெள்ளையன் எஜமானனாக கருப்பினத்தவர் அடிமையாக நடத்தும் கொடூரமான அமெரிக்க அடிமைமுறை உலகில் வேறு எங்கும் இல்லாதது.

ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கடல் பயணங்கள் சில நேரங்களில் ஆயிரம் மைல்கள் தூரம் கொண்டவையாக இருந்தன. கருப்பினத்தவர் கழுத்தில் சங்கிலிகளை மாட்டி துப்பாக்கி, சாட்டைகள் கொண்டு அடித்தபடி நடத்திக் கொண்டு செல்லப்படும் பயணங்கள் அவை. கப்பலில் சென்ற அடிமைகளில் ஐவருக்கு இருவர் பயணங்களில் இறந்துவிடுவர். தரையில் அவர்கள் விற்கப்படும் வரை கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

கப்பலில் அமைக்கப்பட்ட அந்த இருட்டு அறை திறக்கப்படும் போது, மல நாற்றமும் இறந்து கிடக்கும் அடிமைகளின் உடலின் அழுகல் வாடையும் மாலுமிகளை மூச்சுத்திணற செய்யும். கப்பலின் மேல் தளத்தில் வெள்ளை மனிதர்களின் குடியும் கேளிக்கையும் கர்த்தரின் ஆசி பெற்றவையாக தொடரும். அடிமைகளில் மூன்றில் ஒருவரே உயிர் தப்பி கரை இறங்கினர்.

அடிமைகள் மீது தொடுத்த கொடுங்கோன்மை, கொலைபாதக செயலை ஜான் பார்பட் என்பவர் இவ்வாறு வர்ணிக்கிறார் “அடிமைகள் கடற்கரை அருகில் உள்ள சிறைச்சாலை போன்ற பட்டியில் அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களை வாங்குவதற்கு அரேபியர்கள் வரும்போது விசாலமான திறந்த வெளிக்கு கொண்டு வரப்படுவார்கள். அங்கு, கப்பல் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பாக சோதனை செய்வார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் நிர்வாணமாக சோதனையிட்ட பின் நல்ல உடல் கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பவர்களை ஒருபக்கமாக ஒதுக்குவார்கள் அவர்கள் மார்பில் பிரஞ்சு இங்கிலீஷ் டச்சு என கம்பெனிகள் முத்திரைகளை பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவார்கள் முத்திரையிட்ட அடிமைகள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றும் வரை அடைத்து வைக்கப்படுவார்கள்.

கழுத்திலும் கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கப்பல் தளத்தில் பூட்டப்பட்டு இருப்பார்கள். மூத்திர நாத்தமும், மூச்சுத் திணறலும், துயரமும் தாங்க முடியாதது. அந்த நிலை நீக்ரோ அடிமைகளுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்தது”.

வர்ஜீனியார்களுக்கு உணவு தேவையை இருந்தது. அமெரிக்க இந்தியர்களை வேலை செய்யவைக்க முடியவில்லை. அவர்களை அடக்கவோ அழிக்கவோ முடியவில்லை. அவர்கள் மண்ணில் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல, என்ற நிலையில் வேலை செய்ய போதுமான வெள்ளை பணியாளர்கள் இல்லை. அதற்கு கருப்பர்களை இருந்தனர். 1619-ஆம் ஆண்டு 10 லட்சம் கருப்பர்கள் அடிமைகளாக அமெரிக்காவில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

அவர்கள் மண்ணிலிருந்து பண்பாட்டில் இருந்தும் பிரித்து எடுத்து வரப்பட்ட கறுப்பின மக்கள், தங்கள் மொழி-கலை-பண்பாடு-குடும்பம் என அனைத்தையும் இழந்து வேற்று மண்ணுக்கு அடிமைகளாகப் பெயர்த்து எடுத்து வரப்பட்டனர். இந்த கொடுங்கோன்மையின் வரலாற்றை ஈடு இணையற்ற நம் பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்கள் கீழ்கண்டவாறு தனது மூலதனம் நூலில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

படிக்க :
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

“அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்தது, அந்த கண்டத்து பூர்வகுடிமக்களை அழித்து, அடிமைப்படுத்தியது, சுரங்கங்களில் சமாதி செய்து, அவர்களை நாசமாக்கியது, கிழக்கிந்திய பகுதிகளைப் (East Indies) பிடித்து சூறையாடத் தொடங்கியது, கருப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்காக வேட்டைகாடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது, இவையெல்லாம் முதலாளித்துவ பொருளுற்பத்தி சகாப்தத்தின் அருணோதயக் காட்சிகளாய் அமைந்தன” என்று அன்றைய நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஒடுக்கப்படும் அடிமைகள் கிளந்தெழாமல் போய் விடுவார்களா என்ன ? ஐரோப்பியர்களின் ஒடுக்குமுறைக்கு அடிமைகளின் எதிர்வினை என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

(தொடரும்…)

 

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?

ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தயாராகிறோமா ? – பாகம் 1

ந்தியாவின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் கார்ப்ரேட்களின் கைகளில் தூக்கிக் கொடுக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று ஆணவமாக இருக்கிறது பாஜக அரசாங்கம்.

இப்படி விடாபிடியாக இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதை பாஜக ஏன் முன்னெடுக்க வேண்டும்? என்ற கேள்வி இயல்பாகவே எழும். காரணம் மிக எளிமையானது. தங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் எஜமானர்களின் நீண்டகால ஆசையான இந்திய விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் கைபற்றிக் கொள்வதற்கு சாதகமான சட்டங்களை பாஜக நிறைவேற்றிக் கொடுக்கிறது.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சர்வதேச நிதியாதிக்க கும்பல், மூன்றாம் உலகநாடுகளின் உணவு உற்பத்தியை கைபற்றிக் கொண்டு, நீண்ட கால இலாபம் ஈட்டுவதற்கு இந்த சட்டங்களை வழிவகை செய்து கொடுக்கிறது. இந்த சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் நிதியாதிக்க கும்பல்களின் நலன்களையும், இவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியையும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. ஏனெனில், இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வந்துள்ள இந்த நெருக்கடி ஒரு தனி நிகழ்வல்ல. இது அனைத்து வளரும் நாடுகளும் சந்தித்து வரும் சர்வதேச அளவிலான நிகழ்வுப்போக்கு.

“விவசாயிகள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்” என்று ஆளும் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், விவசாயிகள், தங்கள் நிலம் பறிக்கப்படும் அபாயத்தில் இருப்பதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், “எங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்பானி, அதானி போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும் தங்கள் நிலங்களை, வாழ்வாதாரத்தை கைபற்றிக் கொள்ள நினைக்கிறார்கள் என்ற புரிதல், போராடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பற்றி, மோடி பேசும் போது, “தன்னிறைவு பெற்ற இந்தியாவின் உறுதியை நிரூபிக்க, நிலம், தொழிலாளர்கள், பணம், சட்டம் என்ற அனைத்து மட்டத்திலும் திருத்தங்கள் வலியுறுத்தப்படும்” என்றார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, “நிலமும் தொழிலாளர்களும் தான் சந்தை சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகள். ஏனெனில், நிலமும் தொழிலாளர்கள் நலனும் தான் தொழில் சார்ந்த செலவுகளைப் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. சமீபத்தில், சில மாநிலங்களில் நிலம், தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும்.  கர்நாடகா ஒருபடி மேலே போய், தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தி இருக்கிறது. இந்த மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து முதலாளிகளால் நேரடியாக நிலங்களை வாங்க முடியும். மற்ற மாநிலங்களும் இந்த முறைக்குள் சிறிது சிறிதாக உள்ளிழுக்கப்படும்” என்றார்.

கர்நாடகாவில் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாகவும், ஏமாற்றியும் நிலத்தை தனியார் முதலாளிகள் பறிக்காமல் தடுக்கும் பொருட்டு நிலத்தை தனியார் நிறுவனங்கள் நேரடியாக கையகப்படுத்துக் கூடாது என்று சட்டமிருக்கிறது. அதை கடந்த டிசம்பர் 2020-ல் திருத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் சாதகமான இந்த சட்டத்தை பெருமுதலாளிகள் வரவேற்கிறார்கள்.

கொரோனா பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, மோடி அரசாங்கம் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒன்று, கிராமப்புறங்களில் இருக்கும் குடியிருப்பு நிலங்களை ட்ரோன்(Drone) மூலம் விவரணையாக்கம் (Mapping) செய்தது; இரண்டு, நிலங்களின் மீதான இறுதி சொத்துரிமை பத்திரத்தை (Conclusive Land Titling) தீர்மானிப்பது பற்றிய மாதிரி சட்டத்தை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச முகமைகளும், இந்திய அரசாங்கமும் ஏழை விவசாயிகளின் நிலங்களை முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுப்பதற்கான வேலைகளை வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், “தங்களின் வாழ்வாதாரத்தை சிறு துண்டுநிலத்தின் மூலமாக காப்பாற்றிக் கொள்ள சிரமப்படும்” விவசாயிகளின் நிலங்களை முன்வைத்து ”நல்லவொரு நில விற்பனை சந்தையை” உருவாக்க நினைத்தார்கள்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, நிலத்தின் மீதான தனிச்சொத்துடமையை (எவ்வித தடங்கலுமின்றி விற்பனை செய்வதை) உறுதிசெய்வதை அரசாங்கம் விரைவுபடுத்தியது. இதன் பொருட்டு, நிதி அயோக், நிலத்தில் தனிச்சொத்துரிமையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகிறது. நிலத்தின் மீதான தனிச்சொத்துரிமை நிலைநாட்டப்பட்டால்தான், நிலம் ஒரு விவகாரமில்லாத பண்டமாக மாறும். அப்போதுதான் நிலச் சந்தையில் நிறைய லாபம் பார்க்க முடியுமென்பது முதலாளிகளின் கணக்கு.

இந்தியாவில் நிலம்தான் பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால், நிலத்தின் மீதான உரிமைகள் சமூக ரீதியாகதான் பார்க்கப்பட வேண்டும். வெறுமனே நிர்வாக ரீதியாக நிலத்தின் சொத்துரிமைகள் தீர்மானிக்கப்படும் போது, இந்த நிலத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பெரும்பகுதி மக்களை நிலமற்றவர்களாக மாற்றப்படும் அபாயமிருக்கிறது. இந்த நிலம் சபந்தமான எந்த நடவடிக்கைகளும், சட்டங்களும் ஏழை விவசாயிகளின் தேவைகளுக்கானது அல்ல. கார்ப்ரேட் முதலாளிகளுக்கானது தான்.

உற்பத்தித் துறை, இயற்கை வளம், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் கபளீகரம் செய்த நிதியாதிக்கக் கும்பலின் அடுத்த இலக்காக விவசாயம் இருக்கிறது.  மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் கைபற்றுவதன் மூலம் தங்கள் லாபங்களை உறுதிபடுத்திக்கொள்ள கார்ப்பரேட்டுகள் முனைகிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் பன்னாட்டு மூலதனத்திற்கு எந்த தடையுமில்லாமல் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு மூலதனத்திற்கு கட்டுப்படத்தக்க வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை வியாபாரம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒரு நாட்டின் சில்லறை விற்பனை வெகுசில கார்ப்பரேட்களின் கைகளில் குவிக்கப்படுவது  உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவசாயமும் சில்லறை வர்த்தகமும் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிக்கப்படுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கார்ப்பரேட்களின் வியாபார நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கையால், இந்தியாவின் விவசாயம் சீரழிந்து போயிருக்கிறது. 1990-களில் இருந்து தற்போதுவரை ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருகிறார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் விவசாயம் என்பது அந்தந்த நாடுகளின் உள்நாட்டு தேவைக்கான தானிய உற்பத்தி என்ற நிலை மாறி, ஏகபோகங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உயர்தர காய்கறிகள், பழங்கள், பணப் பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்தியை நோக்கியதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி, மூன்றாம் உலக நாடுகளின் விவசாயமும் உணவு உற்பத்தியும் சிதைக்கப்பட்டு, அந்நாட்டு விவசாயிகளின் வாழ்வு ஏகபோகங்களின் நலன்களுக்குக் கீழானதாகக் கொண்டுவரப்பட்டது. அதற்கேற்றாற் போல சட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதோடு, விவசாயிகளுக்கான மானியங்கள் அனைத்தும் படிப்படியாக வெட்டப்பட்டன.

விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஆனாலும், தங்கள் நிலங்களை விட்டுப்போக விவசாயிகள் தயாராக இல்லை. ஏனெனில், மாற்று வாழ்வாதாரம் என்று எதுவுமே அவர்கள் முன்பு இல்லை. விவசாயத்தில் நசிந்துபோன விவசாய தொழிலாளர்களை, உள்ளிழுத்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அளிக்கும் அளவுக்கு இந்தியாவில் தொழிற்துறையின் வளர்ச்சியும் இல்லை. அதனால், தாம் உயிருடன் இருப்பதற்காவது, குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை அளிக்கும் நிலங்களை விட்டு வெளியேற விவசாயிகள் முன்வருவதில்லை.

புதிய தாராளவாத பொருளாதாரத்தில் நிலம் கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதை செய்து கொடுக்க மோடி அரசாங்கம்  முதலிலே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (2013) சரத்துகளை நீர்த்துப்போக அல்லது அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால், விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்திருத்தத்தை கைவிட்டது.

ஆனால், இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ”நவம்பர் 2020 ஆளும் கட்சிக்கு சாதகமான நிலையில் இருக்கும் என்பதால், இப்போது மீண்டும் நிலம் சம்பந்தமான மசோதாவை அறிமுகப்படுத்தலாம்” என்கிறார்.

இதுபோன்ற சட்டங்களின் வாயிலாக விவசாயிகளை நிலங்களை விட்டு விரட்டப்படுவதற்கான காரணம், தொழிற்சாலைகள், உள்கட்டுமானம், சுரங்கம் போன்றவைகள் மட்டுமல்ல; நிலங்களைக் கையகப்படுத்தி இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு ஏற்றாப்போல மறுகட்டமைப்பு செய்வதற்கும்தான்.

இதை செய்வதற்காக, நிலத்தின் மீதான உரிமை பற்றிய சமூகமயமான கேள்வியை, வெறும் நிலத்தை முறையாக நிர்வாகம் செய்வது பற்றிய கேள்வியாக சுருக்கியிருக்கிறார்கள். விவசாயத்தின் அவசியத்தை மனதிற் கொண்டு விவசாய நிலங்களை கொள்முதல் செய்வதற்கு அரசு ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் இந்தச் சட்டத் திருத்தங்களின் அடிப்படை. அதுமட்டுமின்றி, சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை பெரும் கார்ப்பரேட்களுக்கு குத்தகைக்கு விடுவது பற்றிய சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு McKinsey என்னும் சர்வதேச நிறுவனம் கொடுத்த அறிக்கையின் படி, “இந்தியாவில் 90% நிலச் சொத்துரிமை பற்றிய பத்திரங்கள் தெளிவற்றதாக இருக்கிறது”, என்று தெரிவிக்கிறது. இந்தியாவில் வரலாற்று ரீதியாக, நிலத்தில் உழைப்பவர்கள் ஒரு வர்க்கமாகவும், அதன் பலனை அனுபவிப்பவர்கள் மற்றொரு வர்க்கமாகவும் இருக்கிறார்கள். இதனால், “உழுபவர்களுக்கே நிலத்தின் மீதான உரிமை” என்ற சமூக உரிமையை ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மிகக்கடுமையான போராட்டத்தின் மூலமாகவே வென்றெடுத்தார்கள். இப்படி வரலாற்று ரீதியாக நிலத்தின் மீது நிலவும் சமூக உரிமையைதான் McKinsey நிறுவனம் “தெளிவற்ற சொத்துரிமை” என்று சொல்கிறது.

“நில உச்சவரம்பு போன்ற சீர்திருத்தங்கள் எல்லாம் தோற்றுவிட்டது என்றும், அதற்கு பதிலாக, நிலங்களை அளவீடு செய்து அதை ஒழுங்குபடுத்தி, கனிணிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் நிலப் பத்திரங்களை கொண்டுவருவது, இதை செய்ய தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது” என்ற பரிந்துரைகளை உலக வங்கி கொடுத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தி, நிலத்தை ஒரு சந்தை சரக்காக மாற்றி, நிலச் சந்தையில் (Land Market) இருக்கும் குறுக்கீடுகளை நீக்கி விவசாயமல்லாத காரணங்களுக்காக நிலத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

இதுதான் மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக வங்கி “பரிந்துரை” என்னும் பெயரில் விடுத்துள்ள கட்டளை. இதற்காக, 2008-ம் ஆண்டு நிலத்தின் மீதான சொத்துரிமையை அரசால் உறுதிபடுத்தப்பட்ட பத்திரமாக கொண்டுவருதற்கு, “தேசிய நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பெரும் பகுதி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது, “இந்த நெருக்கடியை வீணாக்க வேண்டாம்; இந்த நெருக்கடி அரசாங்கத்திற்கு நிலம், தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை திருத்த ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது”, என்றார் 2014-ம் ஆண்டு நிதி அயோக்கின் தலைவராக நியமிக்கப்பட்ட பனகாரியா. இதே கொரோனா ஊரடங்கு காலத்தில், SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) என்னும் திட்டத்தையும் கொண்டு வந்தது அரசாங்கம்.

இதன்படி, கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தொழில்நுட்பத்தை கொண்டு விவரணையாக்கம் (Mapping) செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது முடிவடைந்த உடன் குடும்பங்களுக்கு சொத்துரிமை அட்டைகள் வழங்கப்படும். வீடுகள் மட்டுமின்றி பஞ்சாயத்து மற்றும் சமூக சொத்துகளான சாலைகள், குளங்கள்,ஓடைகள், பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவற்றையும் விவரணையாக்கம் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் நிலத்தை சந்தை சரக்காக மாற்றுவதற்கான செயல்பாடுகள்தான் என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு செய்யப்பட்டது, விரைவில் விவசாய நிலங்களுக்கும் செய்யப்படும்.

படிக்க :
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

இந்திய சமூக வரலாற்றில், நிலம் என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. அரசாங்கம் தற்போது செய்துவரும் சொத்துரிமையை இறுதிசெய்யும் திட்டத்தில் இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்களா? என்பதே கேள்வி. ஒடுக்கப்பட்ட மக்கள் நிலத்தில் உழைத்தாலும் நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை.

1970-களில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தம், அதாவது தனிநபர்கள், பண்ணையார்களிடம் ஏகபோகமாக இருந்த நிலங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், நிலத்தில் இல்லாத நபர்களின் சொத்துரிமையை பறித்தல் (Abolition of Absentee Land Lordism) போன்ற நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சொல்லப் போனால், பிரித்தளிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் வெறும் கண் துடைப்பாகத் தான் இருக்கிறது.

ஆனால், இன்றைய தேதியில் “சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் கொண்டுவரப்படுவது எதுவும், நிலங்களை பகிர்தளித்தல் என்னும் அர்த்தத்தில் கொண்டு வரப்படுவதில்லை. மாறாக, சர்வதேச அளவிலான நிதி ஆதிக்கத்தின் கீழ் விவசாய நிலங்களை கொண்டு சேர்ப்பது என்ற நோக்கத்தோடுதான் செய்யப்படுகிறது. இப்படி பிற நாடுகளின் வளங்களை சூறையாடுவது ஏகாதிபத்தியத்தின் உள்ளியல்புதான் என்றாலும், அது சமீபத்தில் புதிய நிலையை அடைந்திருக்கிறது.

சமூக அமைதியின்மை, எதிர்ப்புகள் இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிற நாடுகளின் காடு, நிலம், தண்ணீர் போன்ற வளங்களை ஏகபோக நிதியாதிக்கக் கும்பல்களின் கையில் ஒப்படைக்கும் வேலையை செய்ய அந்தந்த நாடுகளின் அரசுகளை நிர்பந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலைமைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன ? அடுத்த பகுதியில் (இறுதி) பார்க்கலாம்.

(தொடரும்)

பாகம் 2 : உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

ராஜேஷ்

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்

0

லங்கை சீனாவின் காலனி ஆகிறது” என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆப்பிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக ஆப்பிரிக்காவில், சீனாவின் நவகாலனித்துவப் பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாதப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில், சீனாவின் நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பப் பாடசாலைகளில் சீன மொழி கற்பிக்கப்படுகின்றது. அங்கு, சீன மொழிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு.

படிக்க :
♦ மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
♦ நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது, அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். “எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?” என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்துப் போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டாரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமானப் பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும், அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையைக் கூடப் பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரானப் போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாகப் பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததைத் தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாதப் பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக, சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இதுதான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை “காப்பிலிகள்” என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும், மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள்தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாதப் பாகுபாடும், அத்தகைய மனநிலையில் இருந்துதான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்களோ, அதையேதான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாகக் கண்டறிந்தார். அதாவது, எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால், சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன், முன்னாள் காலனியாதிக்கவாதிகளான மேற்கத்திய நாடுகளும், இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களைப் பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன.

முதலாவதாக, பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக, அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாகப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரானப் பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்கக் கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசிமெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆப்பிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை இருந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். “மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; ஜனநாயகம் பேணப்பட வேண்டும்” என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால், சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற்தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன. பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு.

கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவகாலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந்நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும், முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துக்கொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது.

இது போன்றுதான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள்தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமைதான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

படிக்க :
♦ சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

சீன மொழியை தாமாக விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்பப் பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று, இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

ழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்ப்பரேட்டுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம்.

அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார். மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?

படிக்க :
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

கனவு காண சொன்னார். 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப் பணத்தை எடுக்க ஏ.டி.எம் முன்னால் மணிக் கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1,000 – 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான், இந்த தேசம் கண்டது.

வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே.

சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்துக் கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று பேச வைத்தது.

வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான் சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கே.ஆர்.நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.

அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆகிவிடுமென்று கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்குறியதோ அதேபோல்தான் ‘ஊழலுக்கு எதிராக’ என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும், அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம் சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.

படிக்க :
♦ அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

♦ அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அன்னா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான’ போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

முகநூலிலிருந்து : Iqbal Ahamed

disclaimer

செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !

செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சிலேந்தி மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

டந்த பிப்ரவரி 04, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வான செளரி செளரா சம்பவத்தின் நூற்றாண்டு தொடக்கமாகும். செளரி சௌரா அமைந்துள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த வரலாற்று சம்பவத்தின் நூற்றாண்டை ஒட்டி ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்த மோடி-யோகி அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக தபால்தலை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் மோடி.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை பட்டா போட்டுக்கொடுக்கும் ஏகாதிபத்திய தாசர்கள், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைக் கொண்டாடுவதும் போற்றிப் பேசுவதும் ஏன்? என்பதை நாம் கவனிக்கவும், அதே நேரத்தில் இந்திய மக்களின் விடுதலையை நேசிப்போர் இந்த நூற்றாண்டை கொண்டாடவும் சௌரி சௌரா தியாகிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

இந்திய மக்களின் எழுச்சியும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும்

1920-களின் இந்தியா ஒரு கொந்தளிப்பான சூழலில் இருந்தது, ஏகாதிபத்திய நாடுகளின் உலக மறுபங்கீட்டுக்காக ஒரு யுத்தம் (முதல் உலகப்போர்) நடந்து முடிந்திருந்தது. பசி, பஞ்சம், நோய் என அவை தோற்றுவித்த நெருக்கடிகளின் சுமை தாளாமல் உலகம் முழுக்க மக்களின் போராட்டங்கள் அலையாய் எழும்பின. 1917-ல் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் தனது நாட்டில் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனக்கான சோசலிச அரசை கட்டி எழுப்பி உலக மக்களுக்கே கலங்கரை விளக்கமாக இருந்தது. இத்தகையதொரு சூழல் காலனி நாடுகளில் தேச விடுதலை போராட்டங்களை உக்கிரமடையச் செய்திருந்தது.

இந்தியாவில் வீச்சாக வெடித்துக் கிளம்பியிருந்த தேச விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க 1919-ல் ‘ரெளலட்’ எனும் அடக்குமுறை சட்டத்தை மக்கள் மீது ஏவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். விசாரணை இல்லாமலே ஒருவரை கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரத்தை இச்சட்டம் காலனி அரசுக்கு கொடுத்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்த சட்டத்துக்கு எதிராக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் மீது ஜனரல் டயர் என்ற இராணுவ அதிகாரி  துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 400 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளே தெரிவிக்கின்றன. உண்மையில் இதைக்காட்டிலும் அதிகமானவர்களே கொல்லப்பட்டிருந்தனர்.

இத்தகைய அடக்குமுறைகள் மூலம் இந்திய மக்களின் எழுச்சியை அடக்கிவிட முடியும் என நினைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஆனால், ஜாலியன் வாலாபாக் படுகொலையோ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் எண்ணெய் வார்த்தது. தேசவிடுதலைப் போராட்டத் தீ நாடெங்கும் பற்றி எரிந்தது.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் :

குமுறி எழுந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ‘ரௌலட்’ போன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு ஒடுக்க முடியவில்லை. மக்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் அரசாளும் உரிமையைக் கேள்விக்குட்படுத்திய சமயத்தில், ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு நோகாத வகையிலான போராட்ட வழிமுறைகளை காந்தி துவங்கி வைத்தார். அதுவே அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்.

அனைத்து தரப்பு மக்களும் இதில் தீவிரமாகப் பங்கெடுக்கத் தொடங்கினர். அரசுப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு துணிகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கும் செல்லாமல் புறக்கணித்தல், என நாட்டு மக்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்க மறுத்தார்கள்.

போராட்டங்கள் புரட்சிகர திசைவழியில் செல்லாமல், தங்களது இருப்புக்கு ஆபத்தற்ற காங்கிரசால் தலைமை தாங்கப்படாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றை நினைத்து கலங்காமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பிரிட்டிஷ் அரசை நிலைகுலையச் செய்த அந்தச் சம்பவம் சௌரி சௌராவில் நடந்தது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சௌரி சௌரா எனும் இடத்தில் அஹிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று பேர் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். ஆத்திரமடைந்த மக்கள் போலீசு குண்டர்களை துரத்தியடிக்கிறார்கள், திரண்டு நின்ற மக்களின் கோபாவேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீசு நிலையத்திற்குள் ஓடிய 22 போலீசுகளையும் தீ வைத்து கொளுத்துகிறார்கள் மக்கள்.

மக்களின் தியாக உணர்வுமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை காந்தி மற்றும் காங்கிரசின் அஹிம்சை போராட்ட வழிமுறைகள் மோசடி செய்தன. மக்களுக்கான நிரந்தரத் தீர்வை அவை வழங்கமறுத்ததோடு, மக்களின் இயல்பன போர்க்குணமிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தன. 2012க்குப் பின்னர் இந்தியாவில் ஆரம்பித்த அன்னா ஹசாரே போராட்டங்களைப் போல் வரம்புக்குட்பட்ட போராட்டங்களாகவும், அன்றைய ஆளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நோகாத போராட்டங்களாகவும் இருந்தன. அதை உடைத்தது சௌரி சௌரா.

சௌரி-சௌராவின் தீ இந்தியா முழுமைக்கும் பரவும் ஆபத்து இருந்ததை உணர்ந்த காந்தி, இதையே சாக்கிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். 22 போலீசாரை கொன்ற வழக்கில் ஒத்துழையாமை இயக்க போராளிகள் 228 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 19 பேருக்கு தூக்கு தண்டனையும் 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

சௌரி சௌரா நூற்றாண்டை ஏகாதிபத்திய தாசர்கள் கொண்டாடுவது ஏன்?

சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த மோடி, உரையாற்றுகையில் “நாடு சுயசார்பு அடைவதும், வளர்ச்சி அடைவதும் ஒவ்வொரு போராட்ட வீரருக்கும் நாடு செலுத்தும் அஞ்சலியாகும்”, “சௌரி சௌரா நூற்றாண்டை நாம் மக்களின் வளர்ச்சிக்காக நமது கனவுகளை நனவாக்குவதற்கு பல்வேறு உறுதிகளை மேற்கொள்ளும் ஆண்டாகக் கொள்ள வேண்டும்” என்றெல்லாம் பேசியுள்ளார்.

உண்மையில், ஏகாதிபத்தியங்களின்  நலனுக்காகவும்  அவர்களின் உள்ளூர் பாதந்தாங்கிகளான அம்பானி-அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகளின் நலனுக்காகவும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்தும் மோடி அரசு இதனை எதிர்த்துப் போராடும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் தீவிரமாக ஒடுக்கி வருகிறது.

உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்பேரில் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக, இந்திய விவசாயத்தின் சுயசார்பை அழிக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசு. அதை, எதிர்த்து போராடும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அணுகும் முறை இதற்கு எடுப்பான உதாரணம்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒடுக்க “ரௌலட் சட்டம்”, இன்றோ ‘சுதந்திர நாடான’ இந்தியாவில், கார்ப்பரேட்-காவி பாசிச கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க ஊஃபா சட்டம், என்.ஐ.ஏ, போன்ற பல கொடூர அடக்குமுறைக் கருவிகள். சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கான ஆலோசனைகளாக உருவாக்கப்பட்ட “டூல்கிட்”டை சமூக வலைதளங்களில் பகிர்ந்த திஷா ரவி எனும் 21 வயது இளம்பெண், தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். இப்படி மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்கள் போராட்டங்களை ஆதரித்தும் மூச்சுவிடுவதை கூட ‘தேச’ விரோதமாக்குகிறார்கள் பாசிஸ்டுகள்.

இப்படி மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு நிகராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் மோடி கும்பலால் சௌரி சௌரா நூற்றாண்டை ஏன் கொண்டாடுகிறது ? எப்படி கொண்டாட முடிகிறது ?

பகத் சிங் உள்ளிட்ட மக்களின் நெஞ்சில் நிறைந்த தவிர்க்க முடியாத விடுதலைப் போராட்ட வீரர்களின் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வர்க்கப் பார்வை ஆகிய உள்ளடக்கத்தை உருவி விட்டு அவர்களை வெறும் ‘தேச’பக்தர்களாகக் காட்டி தங்களோடு இணைத்துக் கொள்வதில் வல்லவர்கள்தான் இந்துமத வெறிப் பாசிஸ்ட்டுகள்.

சமீபத்தில் கூட மாவீரன் பகத் சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசும் வரிசையில் பச்சைத் துரோகி சாவர்க்கரையும் இணைத்துப் பேசியிருந்தார் மோடி. அதைப் போலவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமைப் போராட்டத்தில் நடந்த அரசு வன்முறைக்கு மக்கள் கொடுத்த தக்க பதிலடியை வெறும் தேசபக்தப் போராட்டமாகக் காட்டி, தங்களது ‘தேச’பக்தியோடு இணைத்துக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த சூழலில் சௌரி சௌரா தியாகிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி காவி பாசிஸ்டுகளின் ஏகாதிபத்திய ஆதரவு சட்டங்களுக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் மறுகாலனியாதிக்கத் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களை அமைப்பாக திரட்டி போராடுவதுதான் சௌரி சௌரா நூற்றாண்டு நிறைவை நாம் கொண்டாடுவதற்கான பொருள் !!


பால்ராஜ்

ஹிட்லரால் கொல்லப்பட்ட சோபி ஸ்காலும் மோடியால் கொல்லப்படும் ஜனநாயகமும் !

ழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (22-02-1943) ஹிட்லரின் ஜெர்மனியில் சோபி ஸ்கால் எனும் 23 வயது இளம்பெண் கில்லெட்டினில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா ? போரில் இருந்து ஜெர்மனி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு “டூல் கிட்”டை தயாரித்தது தான்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாடகர் ரிஹானா குரல் கொடுத்தத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். அச்சமயத்தில் இதனை அன்னிய சதி என்று கூறி ஒரு புரளியை சங்கிகள் கிளப்பிவிட்டனர்.

ஒன்றுமில்லாத விசயங்களையெல்லாம் பூதாகரமாக்கி கலவரம் நடத்துவதில் கைதேர்ந்தவர்களான சங்கிகள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சூழலியல் செயற்பாட்டாளர் “க்ரேட்டா தன்பர்க்” கூகுள் ட்ரைவில் பகிர்ந்த தரவுத் தொகுப்புகளையே (டூல் கிட்) பெரிய சதியாகக் காட்டி அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இங்கும் அதே “டூல் கிட்”தான் பிரச்சினை.

அதனைத் தொடர்ந்து அந்த கூகுள் தரவுத் தொகுப்புக்கு பங்களிப்பு செய்த இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரான திஷா ரவியை மோடி அரசு கைது செய்து சிறையிலடைத்தது நாம் அறிந்ததே.

தீஷா ரவி ஒரு சூழலியல் செயற்பாட்டாளர். “Fridays For Future” எனும் சூழலியல் அமைப்பின் இந்தியப் பிரிவின் துடிப்பான செயல்பாட்டாளர். 23 வயதான தீஷா ரவி பெங்களூருவில் படித்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

தேச விரோதிகள் பட்டியலில் பாஜக குறிப்பிடும் எந்தப் பிரிவுக்கும் இவர் துளியும் நெருக்கம் இல்லாதவர். இவர் இசுலாமியரோ, காஷ்மீரியோ, காட்டில் திரியும் மாவோயிஸ்ட்டோ, அர்பன் நக்சலோ இல்லை. அமைதியான முறையில் சூழலியல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியவர்.

விவசாயிகள் போராட்டத்தை நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ஆதரிப்பது போல அவரும் ஆதரித்திருக்கிறார். அதனை பரப்புரையாகக் கொண்டு செல்லும் தமது ஜனநாயக உரிமையின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் இருந்த தரவுத் தொகுப்பில் தமது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

இங்கு நன்கு குறித்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் தீஷா ரவி அறவழியில் மட்டுமே போராடியுள்ளார். அதுவும் பிரச்சாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளில் தமது சிறிய பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் எந்த ஒரு பொதுச் சொத்தையும் சேதப்படுத்தவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை . (அப்படி பிரச்சாரம் செய்தாலும் அதற்கான உரிமையையும் வழங்குகிறது இந்திய அரசியல் சட்டம்).

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துப் பிரச்சாரத்தை மட்டுமே செய்தார். ஒரு ஜனநாயக அரசு, ஆயுதங்களைக் கண்டு பயப்படலாம். கருத்துக்களைக் கண்டு அஞ்சி அதனை வெஞ்சினம் கொண்டு முடக்கினால் அது ஜனநாயக அரசாக இருக்க முடியுமா? அதிலும் தேசப் பற்றைக் காரணம் காட்டி ஜனநாயக உரிமையைப் பறிக்கிறது எனில் அது சந்தேகமின்றி ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும்.

இதற்கு அப்பட்டமான சாட்சியாக நிற்கிறது ஹிட்லரின் பாசிச ஆட்சி. ஜெர்மனியில் தேசிய சோசலிச அரசு என்ற பெயரில் இனரீதியிலான பாசிச அரசை நிலைநாட்டிய ஹிட்லரின் ஆட்சியின் இறுதிக் கட்டமான போர்க்காலச் சூழலில் இந்தியாவில் நிகழும் தற்போதைய அரசு ஒடுக்குமுறை சம்பவங்களை ஒத்த பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை இங்கு பார்ப்பதன்மூலம், நம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள அபாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

பாசிச வெறி தலைகேறிய நிலையில், இரண்டாம் உலகப் போரைத் துவக்கி ஹிட்லர் உலகம் முழுவதையும் கபளீகரம் செய்யத் துவங்கிய போது, அது ஜெர்மனிய முதலாளிகளின் விருப்பமாக மட்டுமே இருந்தது. அங்கிருக்கும் பெருவாரியான மக்கள் அதனை வெறுத்தனர். ஆனால் அரசின் உளவாளிகளும் கண்காணிப்பும் வீதிக்கு வீதி நிரம்பியிருந்த காலகட்டத்தில் யாரும் எவ்வித எதிர்ப்பையும் காட்டத் துணியவில்லை.

தீஷா ரவி (இடது) சோபி ஸ்கால் (வலது)

இளைஞர்கள் கட்டாய இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு லிபரல் அரசியல்வாதியான ராபர்ட் ஸ்கால் என்பவருக்கு மகளாகப் பிறந்த சோபி ஸ்கால் என்ற 22 வயது இளம்பெண் அச்சமயத்தில்தான் முனிச் பல்கலைக்கழகத்தில் படிப்பிற்காகச் சேர்கிறார். அங்கு ஏற்கெனவே பயின்று கொண்டிருந்த அவரது அண்ணன் ஹன்ஸ் ஸ்கால் படித்துக் கொண்டிருந்தார். தத்துவம் மற்றும் இறையியலின் மீது ஆர்வம் கொண்டிருந்த சோபி ஸ்கால் அது தொடர்பான நூல்களை வாசிப்பதோடு அதனை விவாதித்தும் வந்தார்.

சோபி ஸ்காலின் தந்தையான ராபர்ச் ஸ்கால், (ஒரு நகரின் கவர்னராகப் பணியாற்றியவர்) ஹிட்லர் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்ததன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்கலையில் தனது அண்ணனின் நண்பர்களுடன் கிடைத்த அறிமுகத்தின் அடிப்படையில் வெள்ளை ரோஜா எனும் அமைதியான இயக்கம் ஒன்றில் இணைந்து செயல்பட்டார். வெள்ளை ரோஜா அமைப்பின் கோரிக்கை ஹிட்லரையோ, பாசிசத்தையோ தூக்கியெறிய வேண்டும் என்பது அல்ல. அவர்களது கோரிக்கை எளிமையானது, ஜெர்மனி போரில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வளவுதான். ஆனால் இதனை வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர்.

https://youtu.be/baRvF6ZBK18

சோபி ஸ்காலின் இறுதி நாட்கள் குறித்து வெளிவந்த திரைப்படம்

அந்த வகையில் அங்கு அவர்கள் அனைவரும் இணைந்து போருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களை மக்கள் மத்தியில் இரகசியமாக விநியோகிப்பது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் அந்தப் பிரசுரங்கள் தான் அவர்களது ஆயுதக் கிடங்கு. அதாவது “டூல்கிட்”. அப்படி கிட்டத்தட்ட 5 பிரசுரங்கள் எழுதப்பட்டு விநியோகிகப்பட்டன. இரகசியமாக விநியோகிக்கபப்ட்ட அந்தப் பிரசுரங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆறாவது பிரசுரத்தை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு வகுப்புகளின் வாசலிலும் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு செல்வதுதான் வேலை. சோபி ஸ்காலும் வெள்ளை ரோஜா அமைப்பினரும் இந்த வேலையைச் செய்து முடித்த பின்னர், மீதமுள்ள சில பிரசுரங்களையும் வீணாக்காமல் அனைவரின் பார்வைக்கு கிட்டும்படி செய்ய வேண்டும் என்றெண்ணி சோபியும் அவரது அண்ணன் ஸ்காலும் மாடிக்குச் சென்று அங்கிருந்து மீதமுள்ள பிரசுரங்களை இறைந்துவிடும்போது பல்கலைக் கழக ஊழியனால் பிடிக்கப்பட்டு உடனடியாக ஹிட்லரின் ரகசிய போலீசின் வசம் ஒப்படைக்கப்படுகிறார்.

சோபி ஸ்காலின் சிலை

சோபி ஸ்கால் விநியோகித்த பிரசுரம் வெறுமனே போரில் இருந்து அரசு பின்வாங்க வேண்டும் என்பதைத்தான் கூறியதே தவிர நாட்டிற்கு எதிராகவோ ஹிட்லருக்கு எதிராகவோ எதுவும் இல்லை. ஆனால் அவர் மீதும் அவரது அண்ணன் ஸ்கால் மற்றும் மற்றொரு வெள்ளை ரோஜா உறுப்பினரான கிரிஸ்டோப் ப்ரோப்ஸ்ட் மீதும் தேச துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

இன்றைய மோடியின் இந்தியாவில் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டால், பல ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்து சிறையிலேயே வைத்து அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் கொடுக்காமல் இழுத்தடித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி படிப்படியாகக் கொலை செய்வதைப் போல் அல்லாமல், அன்றைய ஹிட்லரின் ஜெர்மனியில், சிரச் சேதம் தான் தண்டனை.

ஆம், கில்லெட்டினால் தலை வெட்டப்படும். விசாரணை நடந்தபோது, ஹன்ஸ் ஸ்கால் தமது ‘குற்றத்தை’ ஒத்துக் கொண்டதை ஒட்டி, சோபி ஸ்காலும் ‘குற்றத்தை’ ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தமது அமைப்பைச் சேர்ந்த பிறர் சிக்கக் கூடாது என்பதற்காக அனைத்துப் பொறுப்புகளையும் தாமே ஏற்றுக் கொண்டார் சோபி ஸ்கால்.

விசாரணையின் போது சோபி ஸ்கால் தீர்க்கமாக ஒன்றைச் சொல்கிறார், “ எல்லாவற்றுக்கும் மேலாக யாராவது ஒருவர் துவக்கிவைக்க வேண்டியது இருக்கிறது. நாங்கள் எழுதியதும் கூறியதும் இன்னும் பலரது எண்ணஓட்டமாகவும் இருக்கிறது. அவர்கள் நாங்கள் செய்ததைப் போல தங்களது எண்ணத்தை தெரிவிப்பதற்கு தைரியமாக இல்லை.” என்று குறிப்பிட்டார்.

தமிழிசையைப் பார்த்தால் “பாசிச பாஜக ஒழிக” என்று கூறுவதற்கு நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்று ஒரே ஒரு சோபியா தானே வானூர்தியில் வைத்து நேருக்கு நேர் தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார்.

படிக்க :
♦ தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !

இத்தகைய முதல் முன்னெடுப்பைத்தான் அன்று ஜெர்மனியில் சோபி ஸ்காலும் அவரது நண்பர்களும் செய்தனர். இறுதியில் அந்த மூவரும் குற்றவாளிகள், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி சிரச் சேத தண்டனை அறிவிக்கப்பட்டது.

சரியாக 78 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், அதாவது பிப்ரவரி 22, 1943, அன்று ஷோபியா ஸ்காலின் தலை கில்லெட்டினில் வெட்டப்பட்டது. சோபியின் மரணம் என்பது ஜெர்மனியில் இது போன்ற எதிர்க் கருத்தைத் தெரிவித்த ஆயிரக்கணக்கானவர்களின் மரணங்களுல் ஒன்றுதான்.

வெறுமனே போரில் இருந்து வெளியேறு என்று கூறிய – ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய – சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் கில்லெட்டினில் வெட்டினான். நமக்கு வாய்த்த ஹிட்லரான மோடியோ, திஷா ரவிக்களையும், நோதீப் கவுர்களையும், வரவர ராவ்களையும், ஆனந்த் தெல்தும்டேக்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் கொடுஞ்சிறை மூலம் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இது மிகச் சிறப்பான நாள்.. நான் செல்ல வேண்டும்.. எங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் விழித்தெழுந்து, நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் கிளர்ந்தெழுவார்கள் எனில், எனது மரணம் ஒரு பொருட்டல்ல” இவை அன்று கில்லெட்டினில் வெட்டப்படுவதற்கு முன்னர், சோபி ஸ்கால் கூறிய கடைசி வரிகள். கொடுஞ்சிறையில் தள்ளப்பட்ட நம் நாட்டுப் போராளிகளின் உள விருப்பமும் இதுதான். அதனை நிறைவேற்றுவது நமது கடமை !


கர்ணன்

செய்தி ஆதாரம் : Wikipedia

நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

தூப்புக்காரி என்ற இந்த நாவல், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் துயரம் நிறைந்த கதையைச் சொல்கிறது. ‘தூப்புக்காரி’யான கனகத்தின் மகள் பூவரசியும், சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ‘தூப்புக்காரி’யாகவே வாழ வேண்டிய சூழலை இந்தச்சமூகம் அவளுக்கு கொடுக்கிறது என்பதை இந்த நாவலில் மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் மலர்வதி.

கனகம், பூவரசி, ரோஸ்லின் மற்றும் மாரி ஆகிய பாத்திரப் படைப்புகளின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் துயர வாழ்க்கையை நம் மூளைக்குள் செலுத்தி விடுகிறார் மலர்வதி. குறிப்பாக, மாரி மலக்குழிகளுக்குள் இறங்கும் போதும், கழிவறைகளில் மலத்தை சுத்தப்படுத்தும் போதும் ஏற்படும் நாற்றம் நமது நாசித்துவாரத்திற்குள் நுழைந்து விடுகிறது. மலர்வதியின் வார்த்தைகளில் உயிர் இருப்பதை நாவலை வாசிக்கையில் உணரமுடியும்.

நாடார் சாதியைச் சேர்ந்த கனகம், தனது கணவனின் மருத்துவச் செலவிற்காக ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக அந்த மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக சேருவதும், அவளுடைய மருத்துவச் செலவினை அடைக்க பூவரசியும் துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதும் விளிம்புநிலை மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. சக்கிலிய சமூகத்தில் பிறந்த மாரி, தன் பெண்ணைக் கேட்டதற்காக வருந்தும் கனகம், பிறகு தங்களுக்கு அவனே துணை என்று புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது உயர்ந்து நிற்கிறாள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

மனோவிற்கும், பூவரசிக்குமான காதல் இயல்பாக வந்து, அவர்கள் இணைந்து, பின்பு உதிர்ந்து விடுகிறது. அழகான மனோவின் மீது ஏற்பட்ட காதலால் பூவரசிக்கு அழுக்கானவனாகத் தெரியும் மாரி, மனோ அவளைக் கைவிட்ட பின்னரும் அவளை ஏற்றுக்கொள்ளும் போது மனதிலும் செயலிலும் பேரழகனாக உயர்ந்து நிற்கிறான்.

இந்த நாவலுக்கு மாரியே உயிர் கொடுக்கிறான்.

காதலனால் கைவிடப்பட்டு கர்ப்பவதியாகி கலங்கி நிற்கும் பூவரசியின் குழந்தைக்கு தந்தையாகி, அவளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் நெகிழ்ந்து விடுகிறோம். அந்தக் குழந்தையை, நன்றாக படிக்க வைத்து கழிவுகளை நீக்கும் இயந்திரம் கண்டுபிடிக்க வைத்து, தம் போன்ற துப்புரவுத் தொழிலாளிகளின் இழிந்த வாழ்க்கையை போக்குவோம் என்று வைராக்கியம் கொள்வது அவனின் அழகான கனவு. ஆனால், கனவு நிறைவேறாமலே மரித்துப் போகிறான் மாரி.

மாரியின் இறப்பு பூவரசிக்கு துன்பத்தைத் தந்தாலும், அவனது தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளின் மூலம் அவள் வாழ்கிறாள்; அவனது கனவை நினைவாக்கும் விதமாக தமது மகளை வளர்க்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள்.

இந்த நாவல் என்னுள் மறைந்திருந்த பல நினைவுகளைக் கிளறிவிட்டு வேதனையை உருவாக்கிவிட்டது. 1985-ம் ஆண்டில், நான் பணிபுரிந்த ஒரு நடுத்தரமான கிராமத்தில் நவீன கழிப்பறைகள் கிடையாது; மலத்தை கையில் எடுத்து சுத்தப்படுத்தும் கழிப்பறைகளே இருந்தது. தினமும், காலை வேளையில், துப்புரவுப் பணியாளர்கள் வீட்டின் பின்புறமாக வந்து, “ஐயா, தோட்டி வந்திருக்கிறேன்” என்று சத்தம் கொடுத்து மலத்தைக் கூடைகளில் அள்ளிக் கொண்டு செல்வதும், சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கூக்குரலிட்டதும் ஞாபகம் வந்து என காதுகளுக்குள் இப்போது வலிகளைத் தருகிறது. அந்த குரல்கள் கனகத்தின் குரலாகவே எனக்குத் தெரிகிறது.

மனித மலத்தை கைகளால் அள்ளும் அவலம் இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது

இது ஒரு “காத்திரமான தலித் நாவல்” என்று எழுத்தாளர் பொன்னீலன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். இதை கடுமையாக மறுக்கிறேன். எழுத்தில், தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படி அழைப்பது அவர்களை தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக் காட்டுவதாகவே கருதுகிறேன்.

அப்படியென்றால், எழுத்தாளர்களின் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக இது பிராமணிய இலக்கியம்; இது முதலியார் இலக்கியம்; இது வேளாளர் இலக்கியம்; பிள்ளைமார் இலக்கியம் மற்றும் நாயக்கர் இலக்கியம் என்று பெயரிட்டு அளிப்பதில்லையே ஏன்?. தலித் இலக்கியம் என்று அழைப்பதும், ஒரு வகையில் சாதியத்தின் வெளிப்பாடுதான் என்று நம்புகிறேன்.

மலர்வதி, இந்த நாவலின் மூலம் “துப்புரவுத் தொழிலாளிகள்” என்ற விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் என்று உறுதியாக கூறலாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் இந்தத் துயர் துடைக்க மலம் அள்ளும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை மாரியின் மூலம் நேர்மறையாக பேசுகிறார் நாவலாசிரியர்.

அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்திலும் கழிவறையை சுத்தம் செய்வதற்கும் , மலக்குழியை அள்ளுவதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாமலும், நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமலும், நம் சகமனிதனின் உயிரை பணயம் வைப்பதற்குள் சாதீயம் ஒளிந்திருக்கிறது. தமது இழிநிலையைச் சுமந்து கொண்டும், உயிரைப் பணயம் வைத்தும் இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களை பலரும் மதிப்பது கூட இல்லை.

மலர்வதியின் வார்த்தையிலிருந்து சொல்வதென்றால், “இந்த ஒலகத்தைச் சுத்தப்படுத்துறதுனாலே தானே நீ அழுக்காகி போகிற. சாக்கடையில எறங்கி, எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே, ஓங்காலில் யாரங்கிலும் இன்னிக்கும் வரைக்கும் விழுந்துருப்பாங்களா மாரி. மதிப்புமிக்க ஒன் பாதங்களை யாராவது தொட்டாங்களா. இந்த ஒட்டு மொத்த ஒலகம் சார்பா ஓங்காலில் நான் விழுறேன்னு நினைச்சுக்க. ஒதுக்கி ஒதுக்கி அழுக்கன் அழுக்கன் என புறந்தள்ளி போட்டிருக்கே முழு உலகம் சார்பா ஒங்காலிலே விழுறேன்னு நினைச்சிக்க ..” என்று குறிப்பிடுகிறார். அவரின் வார்த்தைகளில் வசீகரம் இருக்கிறது; கவித்துவம் இருக்கிறது; போலித்தனம் இல்லை, சொல்வதை தெளிவாகச் சொல்கிறார். அதனால், தமிழ் இலக்கிய உலகில் இவருக்கான தனித்த இடம் காத்திருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தகழியின் “தோட்டியின் மகன்”, அறிவழகனின் “கழிசடை” ஆகிய நாவல்களின் தொடர்ச்சியாகவே இந்த நாவலைப் பார்க்கிறேன். ஆனால், அந்த நாவல்கள் சொல்லாத பெண் மனதின் வலியை இந்த நாவல் சொல்கிறது. நேசித்தவனை கரம்பிடிக்க முடியாமலும், அரவணைத்தவனை இழந்தும் வலிகளைச் சுமந்த பூவரசி, ஒரு வலிமையான பெண்ணாக உருமாறுகிறாள்.

தூப்புக்காரி.. உங்களை அழவைக்கிறாள்; சிந்திக்க வைக்கிறாள்; மனதை பக்குவப்படுத்துகிறாள்.

சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்ற நாவல்

நூல் : தூப்புக்காரி
நூல்ஆசிரியர் : மலர்வதி
வெளியீடு : மதி வெளியீடு
பக்கங்கள் :147
விலை : ரூ 120/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா 

 

disclaimer

திருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் வள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய இந்து மதவெறி பாசிஸ்டுகள் !

லித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படும் முருகனை வளைத்துக் கொண்டு வேல் நாடகம் ஆடினார்கள். இன்று வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள். வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார்கள்.

தமிழுக்கு பூணூல் போடும் இந்து மதவெறி பாசிஸ்டுகளை அடையாளம் கண்டு தமிழர்கள் அக்கும்பலைவிட்டு தள்ளி நிற்க வேண்டும் என்பதை அன்றே தமது குறளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

குறள் :

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூவும் இல்
குறள் – 460

பொருள் :

நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை ஏதுமில்லை; அதுபோல, தீய இனத்தைவிட நம்மை துன்புறுத்தும் பகையும் வேறொன்றும் இல்லை.

கருத்துப்படம் :

 

கருத்துப்படம் : மு. துரை

பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா

காவி என்பது நிறமல்ல எனும் நூலின் ஆசிரியர் மு. சங்கையா அவர்கள் தனது நூல் குறித்தும் இந்தியாவில் காவி பயங்கரவாதம் வளர்ந்ததன் வரலாறு குறித்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராசியர் இரா. முரளி அவர்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நூல் எழுதுவதற்கு முன்னரே இரண்டு நூல்களை எழுதியுள்ள மு. சங்கையா அவர்களின்பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா எனும் நூல் சர்வதேச அளவில் இந்தியா எப்படி சூறையாடப்படுகிறது என்பதை விளக்கும் விதமாக தமிழில் வெளிவந்த சிறப்பான நூல் ஆகும்.

காவி என்றால் சாதுக்களின் நிறம் என்ற நிலையில் இருந்து வெறுப்பரசியலின் நிறம் என்ற நிலைக்கு மாறியதன் பின்னணி குறித்து இந்த நேர்காணலில் விவரிக்கிறார் சங்கையா. இந்து என்ற சொல்லின் வரலாறு துவங்கி இன்று இந்துத்துவ அரசியலை முன் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-இன் செயல்திட்டம் வரை அனைத்தையும் வரலாற்றுப் போக்கில் விவரிக்கிறார்.

2000 ஆண்டுகள் ஆதிக்கம் செய்த பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியது குறித்தும் விவரிக்கும் சங்கையா, அம்பேத்கருக்கு முன்னர் இருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபைப் பற்றியும் இந்த நேர்காணலில் விவரித்துள்ளார்.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

குறிப்பாக கோல்காப்பூர் மன்னர் சாஹு மகராஜ் மற்றும் பரோடா மன்னர் கெய்க்வாட் ஆகியோர் பார்ப்பனியத்துக்கு எதிராக எவ்வகையில் எல்லாம் நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதை விவரிக்கிறார். இன்று ஜனநாயக ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படும் காலத்திலேயே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கையில், தனது அரசாட்சியில் தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றி, ஆறு ஆண்டுகளில் தீண்டாமையைக் கடைபிடித்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய வர்லாற்றையும் எடுத்துரைக்கிறார் சங்கையா.

மேலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றம் மற்றும் அதனைத் தோற்றுவித்தவர்களின் சாதிய அடிப்படையை விவரிக்கும் சங்கையா, இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி தனக்கான தத்துவமாக வாரி அணைத்துக் கொண்டது என்பதைப் பற்றியும் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் புகுந்து வரலாற்றைத் திரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்பதையும் தேர்தல் அரசியலைத் தாண்டி எப்படி மக்கள் மத்தியில் விரவி இருக்கிறது என்பதையும் இந்த நேர்காணலில் விவரிக்கிறார்.

நேர்காணல் காணொலி :

நன்றி : Socrates Studio

பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

ட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 1137 பள்ளிகளில் 2 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கின்ற 16067 மாணவர்களிடம் கொரானா ஊரடங்கின் விளைவாக மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

அதில்

1. 92% மாணவர்கள் முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களில் உள்ள வார்த்தைகளை படிக்க இயலவில்லை. அம்மாணவர்களால் வாசிக்கவும் இயலவில்லை. முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களை மறந்துவிட்டனர்.

2. 82% மணவர்கள் கூட்டல், கழித்தல் போன்ற எளிய கணித அடிப்படைகளையும் மறந்துள்ளனர். அம்மாணவர்களால் எளிய கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட செய்ய முடியவில்லை.

என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இது கடந்த 10 மாதகாலமாக அரசு பள்ளிகள் மூடியிருப்பதும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான மாற்று வழிகளை அமல்படுத்தாததும் தான் இதற்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்பிக்கும் முறையை மோடி அரசு மாற்றாக முன்வைத்தது. ஆளும்வர்க்க பிரதிநிதிகளோ இணையவழிக் கற்பித்தல் முறை கற்றல் திறனை அதிகரிக்கும் என பிரச்சாரம் செய்தனர்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் அரசு சொல்வதையே கிளிப் பிள்ளைப் போல நடைமுறையும் படுத்தினர். ஆனால் சமீபகாலமாக வரக்கூடிய செய்திகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளோ, மோடி அரசின் கூற்றுக்கு மாறாக, ஊரடங்கு மற்றும் இணையவழிக் கற்பித்தல் முறையினால் படிப்பிலிருந்தே மாணவர்கள் வெளியேறியுள்ளனர் என்ற கள உண்மையை ஆதாரத்துடன் முன்வைக்கின்றன. குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களே இதனால் மிக அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்கின்றன இவ்வறிக்கைகள்.

கடந்த வாரம் கூகுள் நிறுவனமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஏற்பாடு செய்திருந்த இந்திய கல்வி மாநாட்டில் (Indian Education Summit-2021) பல கல்வி தொழிட்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அம்மாநாட்டில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் “ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியும் தொழிற்பயிற்ச்சியும் வழங்குவதன் மூலம் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்க முடியும். உலக நாடுகளிலே இந்தியாவில் தான் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) பற்றிய பாடம் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது” என்றார்.

கோடிக்கணக்கான மாணவர்கள் பல மாதங்களாக கல்விகற்க முடியாமலிருப்பதை பற்றியோ கல்வி இடைநிற்றல் பற்றியோ இதுவரை பேசாமல் அமைதி காக்கும் கல்வி அமைச்சர் அம்மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பற்றி பாடம் நடத்துகிறோம் எனப் பெருமை கொள்கிறார்.

#####

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. கூடவே இத்துறையில் ஏராளமான அந்நிய முதலீடுகள் குவிவதும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் நடந்துள்ளது.

உதாரணமாக பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பைஜுஸ் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (Byju’s edutech), ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தை ஒரு பில்லியன் டாலருக்கு (7260 கோடி ரூபாய்) வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆகாஷ் நிறுவனமானது நீட் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். இதில் Blackstone என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் 39% பங்குகளை வைத்துள்ளது.

பைஜுஸ் (Byju’s) நிறுவனத்திலோ பேஸ்புக்கினுடைய முதலீடு, டைகர் குளோபல், பாண்ட் கேப்பிடல் என்ற அமெரிக்க தனியார் நிறுவனங்களுடைய முதலீடுகள் அதிக அளவில் உள்ளன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவிலுள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளே உள்ளன. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்வியின் தரத்தினை மேம்படுத்துகிறோம் என்று கூறி இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக பல அறிவிப்புகளை மத்திய கல்வி அமைச்சகம் செய்துவருகிறது.

அனைத்து உயர்படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, உயர்/பள்ளிக் கல்வியில் இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கு முன்னுரிமை, அரசுப் பள்ளிகளை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு (PPP model) மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் இந்திய கல்வி சந்தையை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பது என்ற கொள்கை முடிவின் வெளிப்பாடேயாகும். இதற்கு ஒத்திசைவாகவே நடப்பு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொரானா ஊரடங்கை ஒட்டி தடைப்பட்டிருந்த கல்விச் செயல்பாடுகளை பழைய நிலைக்கு கொண்டுவர கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மோடி அரசோ கடந்த ஆண்டைவிட 6.13% குறைவாகவே ஒதுக்கியுள்ளது. மேலும் கல்வியில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான பல அறிவிப்புகளும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ரமேஷ் பெக்கிரியாலின் பேச்சோ தாங்கள் எந்த வர்க்கத்திற்கானவர்கள்? என்பதை நேரடியாகவே வெளிப்படுத்துகிறது !

ராஜன்
CCCE-TN

செய்தி ஆதாரம் :
1. The Indian Express, February 11, 2021
2. The Economic Times
3. Loss of Learning during the Pandemic, Field Studies in Education, February 2021.
4. The News Minute

இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

0

ந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து நெதர்லாந்தில் இயங்கும் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிடும் Rode Morgen மாதாந்த சஞ்சிகையில் பெப்ரவரி மாத இதழில் வந்த கட்டுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை அதை விட மிக வேகமாக வளர்கின்றது. ஏழைகளை மென்மேலும் ஏழைகளாக்கி கோடீஸ்வரர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். மோடி அரசாங்கம் பெரும் வணிக நிறுவனங்கள் சுரண்டலை நடத்துவதற்கு உதவுகின்றது.

2016-ம் ஆண்டு வங்கிகளுக்கு உதவும் நோக்கில், மோடி 1000, 500 ரூபாய் தாள்களை செல்லாததாக்கினார். அதே நேரம் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கும் இல்லை, வங்கி அட்டையும் இல்லை. பதினெட்டு மில்லியன் இந்தியர்கள் அதை எதிர்த்து போராடினார்கள்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

2019ம் ஆண்டு, முஸ்லிம்களை பாகுபடுத்தி பிளவை அதிகரிக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து பாசிச மோடி பெரிய அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கி உழைக்கும் வர்க்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். வேலை நேரம் அதிகரிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும், ஜனநாயக உரிமைகளும் குறைக்கப் பட்டன.

4 செப்டம்பர் 2020 நான்கு தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டன. அவற்றில் தொழில்முனைவோருக்கு நன்மையாகவும் தொழிலாளர்களுக்கு தீமையாகவும் பல அம்சங்கள் இருந்தன. நிரந்தர தொழில்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டன. நினைத்தபடி பணி நீக்கம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது. நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை ஆலோசிக்காமல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். சட்டரீதியான வேலைநிறுத்தங்கள் சாத்தியமில்லை. ஒரு கம்பனி ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான எல்லை 20 இலிருந்து 50 ஆக அதிகரிக்கப்பட்டது.

பாசிச மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்த அதே காலத்தில் இந்திய சனத்தொகையில் ஐம்பது சதவீதத்தை கொண்ட உழவர்களுக்கு எதிராகவும் மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அரிசி, தானியங்களை ஒரு நிச்சயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி வந்ததை நிறுத்தி விடும். நிலம் குத்தகைக்கு கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் நீக்கப்பட்டன.

இதன் மூலம் விவசாயிகள் தமது விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று அரசாங்கம் கூறுகின்றது. எழுபது சதவீதமான விவசாயிகள் ஒரு ஹெக்டேயரை விடக் குறைவான நிலத்தையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் உலகில் பெரிய தானிய வர்த்தகர்களுடன் பேரம் பேச முடியுமா?

Cargill, Walmart போன்ற பெரிய நிறுவனங்கள் தாம் விரும்பியவாறு விலையை குறைத்து விடலாம். அதனால் விவசாயிகள் தாம் செலவிட்ட பணத்தை கூட திரும்பப் பெற முடியாது. பெரும் நிறுவனங்களின் இலாபவேட்டையில் உழவர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரங்களில் சேரிகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

26 நவம்பர் 2020 அன்று, அரசு சட்டங்களுக்கு எதிராக 250 மில்லியன் அளவிலான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அது மனிதகுல வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம். ஆனால் நெதர்லாந்தில் அதைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.

27 நவம்பர் இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இருந்து விவசாயிகள் கால்நடையாகவும், டிராக்டர்கள், பேருந்து வண்டிகளிலும் தலைநகர் டெல்லியை நோக்கிச் சென்றனர். அவர்களது எண்ணிக்கை அரை மில்லியனாக வளர்ந்தது. நவம்பர் கடைசியில் இருந்து கடும் குளிரிலும், மழையிலும் நெடுஞ்சாலைகளை மறித்து நின்றனர். இந்த மறியல் போராட்டத்தின் போது 500 உழவர் அமைப்புகள் தற்காலிக சமையல் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், ஒரு பத்திரிகையும் கூட நடத்தினார்கள்.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

ICOR சர்வதேச அமைப்பில் நெதர்லாந்து Rode Morgen கட்சியுடன் அங்கம் வகிக்கும், CPI (ML) Red star மற்றும் பல மார்க்சிய லெனினிச அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்துள்ளன. போலிஸ் தடையரண்கள் போட்டு, கலவரத் தடுப்பு காவலர்களையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், வேறு பல தாக்குதல் உபகரணங்களையும் பயன்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்தியப் பிரதமர் மோடி பிற்போக்குவாத சட்டங்களை அமுல்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது அவரது அரசாங்கம் எதிர்க்க முடியாத விவசாயிகளுக்கு முகம் கொடுக்கிறது. அவர்கள் இதுவரை எட்டு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 20 ஜனவரி நடந்த பேச்சுவார்த்தையில் அரசு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை 18 மாதங்கள் பின்போடவும் ஓர் ஆணைக்குழு அமைக்கவும் சம்மதித்தது. உழவர் அமைப்புகள் அதை நிராகரித்ததுடன் சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென கோரின.

குடியரசு தினமான ஜனவரி 26 எப்போதும் பெரிய அணிவகுப்புகள் நடக்கும். இந்த வருடம் மில்லியன் கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் தமது அணிவகுப்பை நடத்தினார்கள். தடையை மீறி தலைநகருக்குள் நுழைந்தனர். அதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக 23 ஜனவரி மாநிலத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்தன. இந்து தேசியவாத பாஜக ஆதரவு தொழிற்சங்கம் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் பங்குபற்றி உள்ளனர். உழைக்கும் வர்க்க மக்களின் வர்க்க உணர்வானது மோடியின் பாஜக அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது.

கலையரசன்
கலையகம்

disclaimer

முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?

டந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வெயில் தகிக்கும் சாலைகளில் நடந்து சென்றதையும் உணவின்றி இறந்துபோனதையும் நாம், மறந்திருக்கமாட்டோம்.

ஊரடங்கு காலத்தில் நாட்டின் மக்கள் அனுபவித்த இன்னல்கள் யாவும், இந்த அரசுக் கட்டமைப்பு எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதற்கான சாட்சியாக இருந்தது. முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிலர், ”இந்த பெருந்தொற்று இந்த உலக கட்டமைப்பிற்கும் அடுத்த உலக கட்டமைப்பிற்கும் ஒரு வாயிலாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், பெருந்தொற்றால் இந்தக் கட்டமைப்பின் பிரச்சினைகள் மோசமாக வெளிப்பட்டதை இந்த உலகம் கண்டுணர்ந்தததன் காரணமாக இந்த உலகின் சமூக பொருளாதார நிலை மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அறிவுஜீவிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, உலகில் உள்ள பணக்காரர்கள் இந்த பெருந்தொற்றை பயன்படுத்தி மக்கள் பணத்தை அவர்களது மலிவு விலை உழைப்பாகவும், அரசாங்கத்தின் மூலமான சலுகைகளாகவும் பெற்று சுருட்டி தங்கள் நெருக்கடியை தீர்த்துக் கொண்டார்கள். நிலவும் இந்த சமூக பொருளாதார அமைப்பை பயன்படுத்தி தங்களின் நிலையை மேலும் உயர்த்திக்கொண்டார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சமீபத்தில் Oxfam நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் முதல் பத்து பணக்காரர்களின் செல்வம் ஒட்டுமொத்தமாக அரை டிரில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த பணம் வறுமையை ஒழிக்கவோ, தடுப்பூசி போடவோ பயன்படுத்தப்படவில்லை.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயரும் அதே சமயத்தில், இன்றைய பொருளாதார அமைப்பில் தனக்கு இருக்கும் வல்லமையை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதில்தான் கவனம் செலுத்தினவேயன்றி, கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் வளரும் நாடுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, சர்வதேச நிதி நிறுவனங்கள் வட்டியைக் குறைத்து, மீண்டும் கடன் வாங்கச் சொல்கின்றன.

பெரும் வட்டிக்கு கடன் கொடுத்து கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய பணத்தை வட்டிகட்ட நிர்பந்திக்கின்றன. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மொத்தம் 11 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும், உலகின் 64 நாடுகள் தங்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு செலவிட்டதைவிட அதிகமான தொகையை கடன்களை அடைக்க செலவிட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டுபிடிக்கும் தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வைத்துக் கொண்டு அதன் மூலமான சுரண்டலிலும் ஈடுபடுகின்றன. “தடுப்பூசிகள் மீதான காப்புரிமைகளை நீக்கிக் கொள்ளுமாறு” வளரும் நாடுகள் வைத்த கோரிக்கைகளை இந்த பணக்கார நாடுகள் அலட்சியம் செய்தன. இப்படிப்பட்ட மோசமான பெருந்தொற்று காலத்திலும் காப்புவாதம் அப்பட்டமாக பின்பற்றப்படுவதுதான் முதலாளித்துவக் கட்டமைப்பின் ‘சிறப்பியல்பு’.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் உணவு பாதுகாப்பின்மை பற்றிய 2020-ம் ஆண்டிற்கான அறிக்கை, “வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகில் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 840 மில்லியனாக அதிகரிக்கும்” என்று சுட்டிக் காட்டுகிறது. எதார்த்தத்தில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

உலகம் முழுவதும் சத்தான உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக உள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 26% ஆகும். இந்த மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழக்கமாக கிடைப்பதில்லை. பெருந்தொற்றுக்கு முந்திய நிலைதான் இது. “இந்த பெருந்தொற்று கட்டுக்குள் வைக்கப்படும் முன்பே, பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்” என உலக உணவு செயல்திட்டம் எனும் நிறுவனம் கணித்திருக்கிறது.

உலகளவில் பசிக் கொடுமை தலை விரித்தாடும் இப்போதைய நிலையில், பொருளாதார கொள்கை விவசாயிகளுக்கு சாதகமாக மாற்றுவதன் மூலம், பெருந்தொற்று காலத்தில் தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யமுடியும். உணவு மலிவாக கிடைக்க மானியங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், IMF போன்ற உலக நிறுவனங்கள் பொது உணவு விநியோகத்திற்கான மானியங்களை வழங்க முன்வருவதில்லை. இந்த நிறுவனம்தான் மானியங்களை ஒழிக்கச்சொல்லி மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் நிலைமை இப்படியெனில், இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றை பயன்படுத்தி விவசாயத்தை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் வேளாண் பொருட்கள் சந்தையை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுக்கவே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

ஒருபக்கம் இந்திய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு உயர்கிறது. இன்னொரு பக்கம் வேலையிழப்பும், கூலி குறைப்பும், வறுமையும், பட்டினியும் நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் வாழ்நிலைக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியாகக் காட்டப்படும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

உணவு, கல்வி, மருத்துவம் என முக்கிய ஆதாரங்களில், ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் வல்லாதிக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வளரும் நாடுகளை சுரண்டுகிறது. பணக்காரர்கள் ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருஞ்சுவதில் நுட்பமான செயல்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி உழைப்பாளர்களின் கூலியை குறைத்தனர். வருமானம், கூலி குறையும் போது அது தொழிலாளர்களின் வாழக்கைத்தரத்தை மேலும் பாதிக்கும். மீண்டும் சந்தையில் தேக்க நிலை உருவாகும்.

முதலாளித்துவத்தின் இயல்பாகவே இருக்கின்ற நெருக்கடியை மக்களைச் சுரண்டிதான் முதலாளித்துவம் சரி செய்து கொள்ளும். இது போன்ற கொடுமையான பெருந்தொற்று காலத்திலும் இந்த அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது இலாபத்தை அதிகரிக்கவே அவர்கள் முயற்சி செய்து வருகிறது முதலாளித்துவம்.

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் ஆங்காங்கே போர்க் குணமிக்க போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், இவை எதுவும் மக்களைச் சுரண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பொருளாதாரக் கட்டமைப்பை நிகழ்ச்சிப் போக்கில் மாற்றிவிடப் போவதில்லை. மாற்றவும் முடியாது. சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

பெருந்தொற்றின் காரணமாக அரசே தனது சுரண்டலை குறைத்துக் கொள்ளும் என்றோ, கார்ப்பரேட்டுகளுக்குக் கடிவாளம் போடும் என்றும் நினைப்பது வெறும் பகல்கனவுதான்.


ராஜேஷ்
செய்தி ஆதாரம்:
Monthly Review Online

நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்

ந்திய வரலாற்றில், விடுதலைக்காகவும் ,சமத்துவத்துக்காகவும் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகள் பற்றிய செய்திகளை ஏடுகளில் காண்பது அரிதாக இருக்கிறது. காரணம் அவை முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. அதுவும் தமிழில் அது பற்றிய நூல்களும் அதிகளவு வெளிவரவில்லை. அப்படியே வந்தாலும் சிலவற்றைத் தவிர பலவும் அரைத்த மாவையே அரைத்தனவே தவிர மறைக்கப்பட்ட வரலாற்று சுரங்கங்களை தோண்டித் துருவிய சான்றுகளோடு வெளிவரவில்லை.

இந்த நிலையில் முனைவர் மு.இனியவன் எழுதிய ”பீமா கோரேகான் -பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு” என்ற வரலாற்று நூல், கள ஆய்வுகளோடும் வரலாற்றுத் தரவுகளோடும் வெளிவந்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

பதினோரு தலைப்புகளில் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலை கோவையைச் சேர்ந்த அறிவாயுதம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூல் சிறியதுதான். ஆனால் கனமானது. நூலாசிரியரின் கடின உழைப்பை ஓவ்வொரு பக்கத்திலும் உணரலாம். தொடக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் சரளமான நடையில் பயணிக்கிற இந்நூல் புதிய புதிய பல்வேறு வரலாற்று செய்திகளை நம் முன் பரிமாறிச் செல்கிறது.

படிக்க :
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
♦ வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்

மகாராஷ்டிரா மாநிலம் பூனா மாவட்டத்தில் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைத்துள்ள கோரேகான் என்ற சிற்றூர் பற்றி பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் 2018-ல் பீமா கோரேகானின் 200-வது ஆண்டு நினைவு தினத்தன்று (01-01-2018) லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் கோரேகானை நோக்கி அணி திரண்டபோது அதை தாங்கிக் கொள்ள முடியாத மதவெறியர்களான, சங் பரிவாரங்கள் நடத்திய திட்டமிட்ட வன்முறையைக் காரணம் காட்டி இடதுசாரிகள், முற்போக்காளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரின் மீதும் அரசின் தேசதுரோக வழக்கு பாய்ந்த பின் கோரேகான் எல்லோரும் அறிந்த பெயராக மாறியது மட்டுமல்ல அதன் வரலாறு என்ன என்கிற தேடுதலும் அதிகரித்தது. அந்த கோரேகான் வரலாற்று சுவடுகளை தேடியவர்களில் இந்நூலின் ஆசிரியரும் ஒருவர் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

மராட்டிய மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் காலம் காலமாக தொடுத்த தீண்டாமை கொடுமைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவம் ஆடினாலும், பேஷ்வாக்களின் தலைநகரான பூனாவில் அவர்களின் வாழ்வியலில் உளவியல் ரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் அடக்குமுறைகள் உச்சத்தைத் தொட்டன.

பூனாவின் தெருக்களில் தீண்டத்தகாதவர்களான மகர்கள் நடக்கும் போது அவர்களது காலடிப்பட்ட இடத்தின் தீட்டை பெருக்கி சுத்தப்படுத்த துடைப்பத்தை இடுப்பிலும்,, எச்சிலை துப்ப குவளையை கழுத்திலும் கட்டிக் கொண்டே செல்ல வேண்டும். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கையில் கருப்பு சரடு அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்கள் தெருக்களுக்குள் நுழைந்து விட முடியாது. காலையிலும் மாலையிலும், நீண்ட நிழல் ஏற்படும் நேரங்களில் அவர்கள் நடமாட முடியாது. ஏனெனில் அவர்களது நீண்ட நிழல்கள் தங்கள் மீது பட்டு தீட்டாகி விடும். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் நடமாட உரிமையில்லை.

பீமாகோரேகான் வெற்றித் தூண்.

புதிய கோட்டைகள் கட்ட மகர்களை உயிரோடு நரபலி இட்டனர். சிறு தவறுக்கும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை தலை மட்டும் மண்ணில் தெரிய புதைத்து யானையை கொண்டு தலையை இடரச் செய்யும் நிகழ்வின் கொலைக்களமாக பேஷ்வாக்களின் அரண்மனை முற்றம் திகழ்ந்தது.

இவ்வாறாக காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த மண்ணின் பூர்வக் குடிகளான மகர்கள், வீறுகொண்டு எழுந்து பேஷ்வாக்களை பீமா கோரேகான் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் வெற்றி கொண்டு பழி தீர்த்ததையும், அதன் பின்னே உள்ள வரலாற்றையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய படைப்பிரிவான மகர் படைப் பிரிவுக்கும், மராட்டிய பார்ப்பன பேஷ்வா படைக்கும் நடைபெற்ற யுத்தமே இந்நூலின் மையம் என்றாலும், மராட்டியத்தின் வரலாறு, சத்ரபதி சிவாஜியின் எழுச்சி, அதில் மகர்கள் வகித்த பங்கு, பின்னர் சிவாஜி பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு, பார்ப்பன பேஷ்வாக்களின் கொடுமையான ஆட்சி, அதில் ஒடுக்கப்பட்ட மக்களாகிய மகர், மாங், மாதாரி, மாதிகா, சாமர், ஆகியோர் அடைந்த இன்னல்கள், இழிவுகள் நிறைந்த துன்பியல் வாழ்நிலைகள் மற்றும் கோரேகானை வரலாற்றிலிருந்து தூக்கி எறியத்துடிக்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள், அதற்கு துணை நிற்கும் அரசின் வன்மங்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளுக்குள் இந்நூல் பயணிக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதித்த பின் நடந்த யுத்தங்கள் ஏராளம். அதன் 200 ஆண்டு கால வரலாறு முழுவதும் யுத்தங்களால் நிரம்பி வழிந்துள்ளன. ஆனால் 1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது. பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதும் அதுதான்.

பேஸ்வாக்களால் இழிவும் அவமானமும்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாகிய மகர்களை இந்த போர்க்களம் ஸ்பார்ட்டகஸ்களாக உருமாற்றியது. ஒரு சிறிய படை பல மடங்கு பலமுடைய பேஸ்வாக்களை வென்று புதிய வரலாறு படைத்தது. எப்பொழுதாவது நடக்கும் அரிதினும் அரிதான வரலாற்று நிகழ்வு இது.

பீமா கோரேகானின் போர்க்களக் காட்சிகளை நூலாசிரியர் விவரிக்கும் விதம் அழகும் சுவையும் நிரம்பியது. இரு படைப் பிரிவுகளின் தளபதிகளும், வகுக்கும் போர் உத்திகள், களநிலவரம், படைகளின் அணிவகுப்பு என ஓவ்வொரு காட்சியையும் ஆசிரியர் எழுத்தில் வடித்துக் காட்டி போர்க்களத்திற்குள் வாசகர்களையும் இழுத்து செல்கிறார். ஒரு போர் வீரனாக நம்மையும் நிறுத்துகிறார்.

படிக்க :
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !

கோரேகான் அருகே பீமா ஆற்றங்கரையை கிழக்கிந்திய கம்பெனியின் படை கடந்து விட்டால் அது நேராக பூனா சென்று நகர பாதுகாப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொள்ளும். எனவே அதை தடுத்து, தாக்கி அழிக்க வேண்டும் என்பது பேஸ்வாக்களின் திட்டமாக இருந்தது.

எனவே “பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 20,000 குதிரைப் படைப் பிரிவினரும், 8000 காலாட்படையினரும் பீமா கோரேகானிலிருந்து 2 கி.மீ. தூரம் தள்ளியிருந்த மலைக்குன்றில் முகாமிட்டிருந்தனர். மறுபுறத்தில் கிழக்கிந்திய படையணியின், சுமார் 500 காலட்படைப் பிரிவினரும், 300 குதிரைப்படை வீரர்களும் கேப்டன் ஸ்டாண்டன் தலைமையில் இருந்தனர்”. “காலட்படைப் பிரிவில் மகர்களே அதிகளவில் இருந்தனர்”

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபொழுது பேஷ்வா படை வீரர்கள், அதிக அளவில் இருந்ததால் சுழற்சி முறையில் அவர்களால் ஓய்வு எடுக்க முடிந்தது. படைகளுக்கு முறையான உணவும்,ஓய்வும் கிட்டியது. அதேவேளையில் ஆங்கிலேய படைப் பிரிவு எண்ணிக்கையில் மிகவும் சிறியதாக இருந்தது. ஏற்கெனவே ஒரு யுத்தக் களத்தில் வெற்றி பெற்று பூனாவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்ததால் உடலளவில் அது களைப்புற்றும் இருந்தது.

போர் உச்சத்தை தொட்ட நேரத்தில் ஓய்வின்றி போர்க்களத்தில் நின்ற அவர்களுக்கு போதுமான உணவும் நீரும் கிடைக்கவில்லை. தாகமும், பசியும் உயிரை வாட்ட தோல்வியின் விளிம்பில் நிற்கின்றனர். ஆங்கிலேய படையின் லெப்டினண்ட் சிஸ் ஹோம்மின் தலை பேஷ்வா படைகளால் துண்டிக்கப்பட்டவுடன், ஆங்கிலப்படையின் மனஉறுதி குலையத் தொடங்கியது.

…. சரணடைந்து விடலாம் என்ற முடிவை எடுக்க சொல்லி சில ஆங்கிலேய வீரர்கள் கேப்டன் ஸ்டாண்டனிடம் கோரிக்கை வைக்க, ஸ்டாண்டனும் மகர் படை வீரனான சித்நாக்கும், “எதிரிகளின் கைகளில் சிக்கினால் தலை துண்டாடப்படுவது உறுதி. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் சண்டையிட்ட தீர வேண்டும். நமது சக்தியை ஓன்று திரட்டி உயிர் உள்ள வரை போராடுவோம்; பேஸ்வா படையை வீழ்த்துவதே நமக்கு முக்கியம்” என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் ஆற்றிய உரை சோர்ந்திருத்த,நம்பிக்கை இழந்து கிடந்த படைப் பிரிவுகளுக்கு புத்துயிர் ஊட்டியது.

வீறு கொண்டெழுந்த மகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எதிரியின் குருதியில் கரைத்தனர் என்று அந்தக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் முனைவர் இனியவன்.

நூல் இத்துடன் நின்று விடவில்லை. பீமா கோரேகானின் வெற்றிகளை சீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பன இந்துத்துவவாதிகள் “அந்நியரான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையணியில் இணைந்து கொண்டு உள்நாட்டைச் சார்ந்த படையணியை [சாதி இந்துக்களின் பேஸ்வா படை] வீழ்த்தியதை எப்படி உள்நாட்டு மக்களின் வெற்றியாகக் கொண்டாடலாம். ஆங்கில ஆட்சி அமைய வழி வகுத்த ஆங்கிலோ மராட்டியப் போரை கொண்டாடுபவர்கள் எப்படி இந்தியர்கள் ஆவார்கள்?” என்று எழுப்பும் கேள்விகளுக்கு நெற்றியடி கொடுப்பதோடு பீமா கோரேகான் மீதான மோடி அரசின் வன்மத்தையும் தோலுரித்துக் காட்டுகிறார்.

இறுதியில் “ உங்களது பார்வையில், செயலில் சாதி தீண்டாமை இருக்கும் வரை சக மனிதனை சாதியின் பெயரால் நீங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் வரையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் வழியில், மார்க்சியப் பாதையில் விடுதலைக்கான ஆயிரம் ஆயிரம் பீமா கோரேகான் போரைச் சந்தித்து முழுமுனைப்போடு சாதியத்தை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று தனது நூலை நிறைவு செய்கிறார்.

ஒரு இலக்கோடு விரிந்த பார்வையோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல் முற்போக்கு தமிழர்கள் பலரையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

நூல் ஆசிரியர் : முனைவர் மு.இனியவன்
வெளியீடு : அறிவாயுதம் பதிப்பகம்
நூல் கிடைக்குமிடம் : 1, சாஸ்திரி வீதி எண்-4, கல்லுரிபுதூர், கோவை -41
தொடர்புக்கு : 9487412854, 93842 99877
விலை : ரூ 120
நூல் மதிப்புரை : முரா. மீனாட்சி சுந்தரம்

disclaimer