கருக்கலைப்பு செய்து லேப்ரோஸ்கோப்பி குடும்பக் கட்டுப்பாடு செய்ய அனுமதிக்கப்பட்டார் ஒரு பெண். கருக்கலைப்புக்கான மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் அவரைத் தவிர வேறு அவர் உறவினர்கள் யாருமே மருத்துவமனையில் இல்லை.
சட்டப்படி கருக்கலைப்பு செய்யவோ குடும்பக் கட்டுப்பாடு செய்யவோ கணவரின் அனுமதி தேவையில்லை. அது எங்கள் செவிலியர்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் சில நேரங்களில் வடிவேலு மாதிரி (எங்கே என் உறவினர் என்று சுடுகாட்டில் வந்து சத்தம் போட்டு சாம்பல் அள்ளி பூசுவாரே) எல்லாம் முடிந்த பிறகு கணவர் வந்து சண்டைக்கு வருவார். அதனால் உறவினரின் கையொப்பம் வாங்கி வைக்கிறார்கள் செவிலியர்கள். நான் அவ்விடத்தில் இருந்தால் உறவினர் கையொப்பம் எல்லாம் வாங்கவே மாட்டேன்.
இப்பெண்ணிற்கான அறுவைச் சிகிச்சைக்காக நான் அறுவை அரங்கம் சென்றதும் ஒரு செவிலியர் பதறிக்கொண்டு ஓடிவந்தார் என்னிடம். “மேடம் அவர் கணவர் இப்பவரை வரல மேடம்” என்றார். ”கணவர் எதுக்கு இதுக்கு, சட்டமே கணவர் தேவையில்லை எனும் போது நீங்கள் ஏன் அந்த கணவருக்காக காத்து இருக்கீங்க, அதுவும் மனைவிக்கு இன்று அறுவைச் சிகிச்சை எனத் தெரிந்தும் மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்க்காத கணவரெல்லாம் ஒரு ஆளா, யாரும் தேவையில்லை எனக்கு, அப்பெண் மட்டும் கையொப்பம் போட்டால் போதும், நான் அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து நுண்துளை (laparoscopic sterilisation) குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வேன்” என்று சொல்லி அப்பெண் போட்ட ஒற்றைக் கையெழுத்து கொண்டு கருக்கலைப்பும் நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தேன்.
சட்டமே கணவர் தேவையில்லை என்ற பின்னும் நாம் ஏன் கணவருக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கனும்? இப்படி கொடுக்கும் முக்கியத்துவங்களால் நாளடைவில் ஆம்பள கையெழுத்து போட்டால்தான் பொம்பள அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை வந்துவிடும். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.
பெண்களே… தேவையற்ற கர்ப்பம் எனில் அரசு மருத்துவமனையை நாடவும். கருக்கலைப்பும் குடும்பக் கட்டுப்பாடும் இலவசமாக செய்யப்படுகிறது. இரகசியம் காக்கப்படுகிறது.
ஆண்களே…. பெண்களை மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்ய நிர்பந்திக்க கூடாது. நீங்களும் முன்வர வேண்டும். ஆண்களும் வாசக்டமி செய்ய முன்வர வேண்டும். அம்பேத்கரையும் பெரியாரையும் பேசிக்கொண்டே பெண்ணுரிமை பேசும் ஆண்கள் கூட வாசக்டமி செய்ய முன்வருவதில்லை. எவ்வித தயக்கமும் இதில் தேவையில்லை. வாசக்டமி செய்வதற்கு உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வாசக்டமி செய்வதால் கணவன் மனைவி உறவிலும் பாதிப்பு வராது.
நம் பகுதியில் வாசக்டமி செய்யவோ, பெண்களுக்கான நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவோ விரும்புகிறவர்கள் நமது பொன்னேரி அரசு மருத்துவமனையில் வந்து தலைமை மருத்துவரையோ அல்லது பிரசவ பகுதியில் உள்ள மருத்துவர்களையோ நாடவும்.
ஃபேஸ்புக்கில் 25.11.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.
♦ ♦ ♦
வாசக்டமி
கத்தியின்றி இரத்தமின்றி ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை (நிரந்தர) செய்யமுடியுமென்றால் அது ஆண்களுக்கு செய்யப்படும் வாசக்டமி தான். கத்தியில்லாமல் இரத்தம் இல்லாமல் பெண்களுக்கு இதை செய்ய முடியாது. பெண்கள் ஏதோ பயந்து நடுங்குபவர்கள் போலவும் ஆண்கள்தான் ஏதோ தைரியசாலிகள் போலவும் கட்டுக்கதைகள் நிறைய இருக்கிறது நம் சமூகத்தில். தைரியசாலி என்பான், முற்போக்குவாதி என்பான், ஆனால் மனைவியை அனுப்புவான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு. ஆனால் தான் வரமாட்டான்.
இன்று மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நபர்களுக்கு வாசக்டமி செய்யப்பட்டது. அனைவருமே தன்னார்வத்தோடு வந்தவர்கள். காலையில் வந்தார்கள். வாசக்டமி முடித்து மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கே போய்விட்டார்கள். அவ்வளவு எளிதான ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை தான் வாசக்டமி. இன்று நான் மற்றும் இரு ஆண் மருத்துவர்கள் (Dr.Maheswar, Dr.Madhan) மூவரும் இணைந்து இந்த 15 நபர்களுக்கும் இச்சிகிச்சை அளித்தோம்.
முகநூலைத் திறந்தாலே முற்போக்கு சிந்தனைகள்தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இதில் மட்டும் தொய்வு ஏன்? வாசக்டமி செய்தால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது என்று நினைப்பதும் ஓர் மூடநம்பிக்கை தான். வெற்றிகரமாக இன்றைய பணியினை நிறைவு செய்த போது குரூப் போட்டோ எடுக்கலாம் வாங்க என மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்கள் அழைத்தனர். அருமையான புகைப்படம் இது. மருத்துவமனையின் வெளித் தோற்றம் மட்டுமல்ல மருத்துவமனையின் உள் தோற்றமும் அவ்வளவு சுத்தமாக பசுமையாக பராமரிக்கப்படுகிறது. உள்ளே அப்பல்லோ ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு என சிலர் சொல்வதையும் இன்று கேட்டேன். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடரட்டும்.
அனு நீ DGO தானே, உனக்கு எதுக்கு வாசக்டமி, நீ சிசேரியன் பண்ணு, பெண்களுக்கு கு.க. பண்ணு, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய், லேப்ராஸ்கோபி கு.க. செய் பெண்களுக்கு, இதையெல்லாம் நீ செய்கிறாய், இதுவே போதும் என்று என்னை ஒதுக்காமல் வாசக்டமி செய்யவும் என்னை தயார்படுத்திய எங்கள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஃபேஸ்புக்கில் 04.12.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.
ஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது.
ஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை பின்பற்றப்பட்டது; இயற்கையாகவே அவருடைய மதிப்புத் தத்துவம் அதற்கு முதல் பலியாயிற்று. ஆனால் இது உடனே நடந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் பாதியில் பிரபலமான முதலாளித்துவப் பொருளியலாளராக இருந்த அ. மார்ஷல் ரிக்கார்டோவின் போதனையுடன் ஒரு இணைப்பை நீடித்து வைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் புதிய அகநிலைக் கருத்துக்களோடு சமரசப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளைச் செய்த வராவார். அவர் ஸ்மித்தைப் பற்றி, “மதிப்பைப் பற்றி அவருடைய சமகாலத்தவர்களான பிரெஞ்சு, ஆங்கில சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் ஊகங்களை இணைத்தும் வளர்த்தும் கொண்டு சென்றதே அவர் செய்த முக்கியமான பணி”(1) என்று எழுதினார்.
இதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல அமெரிக்கப் பொருளியலாளரான பால் டக்ளஸ் வேறுவிதமாக எழுதினார். ஸ்மித்துக்கு முன்பிருந்தவர்களின் எழுத்துக்களில் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருந்தவற்றை அவர் நிராகரித்துவிட்டாரென்றும் தம்முடைய மதிப்புத் தத்துவத்தின் மூலம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் செலுத்திவிட்டாரென்றும் அதிலிருந்து அது வெளியே வருவதற்கு முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டதென்றும் குற்றம் சாட்டினார். ஷம்பீட்டர் தம்முடைய பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் ஸ்மித்தைப் பற்றி வெளிப்பார்வைக்கு மரியாதையும் ஆனால் அடிப்படையில் அதிகமான அவநம்பிக்கையும் கொண்ட அணுகுமுறையை வலுப்படுத்துகிறார்.
ஷம்பீட்டர்
ஸ்மித் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதரிப்பதாகச் சொல்ல முடியுமா என்று கூட அவர் உண்மையிலேயே சந்தேகப்படுகிறார். கடைசியாக, பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சாதாரணமான புத்தகத்தில் (ஜே. பெல் என்பவர் எழுதிய புத்தகம்) பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “மதிப்புத் தத்துவம் சம்பந்தமாக ஸ்மித்தின் கருத்துரைகள் அறிவை வளர்ப்பதைக் காட்டிலும் குழப்பத்தையே அதிகமாக ஏற்படுத்துகின்றன. அவருடைய எழுத்தில் பிழைகள், தவறுகள், முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன.”(2)
இவற்றிலிருந்து ஒரு விஷயம் சந்தேகத்துக்கு இடமில் லாதபடி நிச்சயமாகத் தெரிகிறது. ஸ்மித்தின் மதிப்புத் தத்துவத்தில் மோசமான குறைகள் உள்ளன என்பதே அது. ஆனால் மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல, இந்தத் தவறுகளும் முரண்பாடுகளும் தர்க்க ரீதியானவையாகவும் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்குத் தமக்கே உரிய வழியில் பயனுள்ளவையாகவும் இருந்தன.
உழைப்பளவை மதிப்புத் தத்துவம் பற்றிய தொடக்க நிலையான, மிகச் சாதாரணமான விதிமுறையிலிருந்து (அது வெறுமே பொருளற்ற வழக்காக மட்டுமே அந்த நிலையில் தோன்றுகிறது) முதலாளித்துவத்தின் கீழ் சுதந்திரமான போட்டி நிலைமைகளில் பண்ட – பணப் பரிவர்த்தனை மற்றும் விலையின் உருவாக்கம் என்ற உண்மையான அமைப்பை நோக்கி முன்னேறுவதற்கு ஸ்மித் முயற்சி செய்தார். இந்த ஆராய்ச்சியின்போது சில தீர்க்க முடியாத முரண்பாடுகளை அவர் சந்தித்தார். இதன் கடைசிக் காரணம் ஸ்மித்திடம் (மற்றும் ரிக்கார்டோவிடமும்) முதலாளித்துவத்தைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்து இல்லாததும் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலுள்ள உறவுகளை அவர்கள் சாத்தியமான ஒரே உறவுகளாக, எக்காலத்துக்கும் உரிய உறவுகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதே என்று மார்க்ஸ் கருதினார். இவைகளைத் தவிர ”சமூகத்தின் பூர்விக நிலை” மட்டுமே ஸ்மித்துக்குத் தெரிந்திருந்தது, அவர் அதை ஒரு கட்டுக்கதை என்றே கருதினார். எனினும் அவர் மதிப்புப் பிரச்சினையை அதிகமான விஞ்ஞானச் செறிவோடு அணுகினார்.
ஸ்மித் நுகர்வு மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற கருதுகோள்களை தனக்கு முன்பிருந்த வேறு எவரையும் காட்டிலும் அதிகமான துல்லியத்தோடு வரையறுத்து விளக்கினார். பிஸியோகிராட்டுகளின் வறட்டுத்தனமான கோட்பாட்டுவாதத்தைக் கைவிட்டு உழைப்புப் பிரிவினை பற்றிய தமது சொந்தத் தத்துவத்தை தமது வாதத்துக்கு ஆதாரமாக வைத்து மதிப்பைப் படைப்பதென்ற கருத்து நிலையில் பார்க்கும் பொழுது பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமதிப்புடையவை என்பதை அவர் அங்கீகரித்தார். அவ்வாறு செய்யும் பொழுது, பரிவர்த்தனை மதிப்பு என்பது (மார்க்சின் மேற்கோளில் கூறுகிறபடி) மதிப்பின் உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது, அதாவது எல்லாவிதமான மனித நடவடிக்கையுமான உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர் அறிந்து கொண்டார்.
டேவிட் ரிக்கார்டோ.
உழைப்பு என்பது சூக்கும், ஸ்தூலமான உழைப்பு என்ற இரண்டு தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்புக்கு இது இட்டுச் சென்றது. நுட்பமில்லாத, சாதாரண உழைப்பைக் காட்டிலும் நுட்பமுள்ள, சிக்கலான உழைப்பு ஒவ்வொரு கால அளவுக்கும் அதிகமான மதிப்பைப் படைக்கிறது, சில குணங்களை உதவியாகக் கொண்டு அதை முதலில் சொல்லப்பட்டதாக வகைப்படுத்த முடியும் என்பதை ஸ்மித் உணர்ந்து கொண்டார். ஒரு பண்டத்தின் மதிப்பின் அளவு ஒரு தனிப்பட்ட உற்பத்தியாளர் அதில் செலவிட்ட உழைப்பைக் கொண்டு உண்மையில் நிர்ணயிக்கப்படுவதில்லை, எடுத்துக் கொள்ளப்பட்ட சமூகத்தின் நிலையில் சராசரியாக அவசியமான உழைப்புச் செலவைக் கொண்டு தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை அவர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்.
ஒரு பண்டத்தின் இயற்கையான விலையையும் சந்தை விலையையும் ஸ்மித் வேறுபடுத்திக் காட்டியது பயனுள்ளதாக இருந்தது. இயற்கையான விலை என்பது அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பின் பணத் தோற்றம் என்று அவர் புரிந்து கொண்டார்; நெடுங்கால அளவில் சந்தை விலைகள் அதை நோக்கி ஒரு வகையான ஊசலாட்ட மையத்தைப் போல ஈர்க்கப்படுகின்றன என்று நம்பினார். சுதந்திரமான போட்டியில் தேவையும் அளிப்பும் சமநிலையில் இருக்கு மானால், சந்தை விலைகள் இயற்கையான விலைகளோடு பொருந்தி வருகின்றன. மேலும் நீண்ட காலப் பகுதியில் விலைகள் மதிப்பிலிருந்து வேற்றுமைப்படுவதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் அடித்தளம் அமைத்தார்; ஏகபோகமே மிக முக்கியமானதென்று அவர் கருதினார்.
வரப்போகின்ற நூற்றாண்டு முழுவதிலும் மதிப்பு மற்றும் விலை உருவாக்கத் தத்துவத்தின் மையத்தில் இருந்த பிரச்சினையை முன்வைத்திருப்பதில் ஸ்மித்தின் ஆழமான நுண்ணறிவைக் காண முடியும். மார்க்சிய இனங்களில் இதை மதிப்பு உற்பத்தியின் விலையாக உருமாற்றமடைவதென்று சொல்கிறோம். லாபம் மூலதனத்துக்கு விகிதாச்சார அளவில் இருக்க முற்படும் என்பதையும் லாபத்தின் சராசரி விகிதத்தின் தன்மையையும் ஸ்மித் புரிந்து கொண்டிருந்தார். தன்னுடைய இயற்கையான விலைக்கு அதை ஆதாரமாகக் கொண்டார். இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துடன் அவரால் தொடர்புபடுத்த முடியவில்லை, இணைக்க முடியவில்லை என்பதில் அவருடைய பலவீனம் அடங்கியிருக்கிறது.
எங்கெல்ஸ் எழுதியது போல, ஸ்மித்திடம் ”மதிப்பு பற்றி இரண்டு மட்டுமல்ல, மூன்று அபிப்பிராயங்கள் கூட இருக்கின்றன; இன்னும் சரியாகச் சொல்வதென்றால் கூர்மையான வேறுபாடுகளைக் கொண்ட நான்கு அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இவை அதிகமான குதூகலத்தோடு பக்கத்தில் போவது மட்டுமல்ல ஒன்றோடொன்று இணைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன.”(3) அந்தக் காலத்தில் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்டு ஸ்மித்தினால் பதிவு செய்யப்பட்ட உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை கொண்ட, ஸ்தூலமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இடையே போதுமான அளவுக்கு விஞ்ஞான, தர்க்கரீதியான இணைப்புகளைக் கண்டுபிடிக்க அவரால் முடியவில்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் என்பது தெளிவு. எனவே அவர் தனது ஆரம்பக் கருதுகோளைத் திருத்தி வகைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
முதலாவதாக, ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் அவசியமான உழைப்பின் அளவின் மூலமாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது (இது தான் முதலாவது கருத்து, முக்கியமானதும் கூட). இதனோடு அந்தக் குறிப்பிட்ட பண்டத்துக்கு வாங்கக் கூடிய உழைப்பின் அளவினால் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்ற இரண்டாவது கருதுகோளை நுழைத்தார். சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில், கூலி உழைப்பு என்பது இல்லாமலும் பண்ட உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு பாடுபடுகின்ற பொருளாதாரத்தில் இது அளவைப் பொறுத்த வரையிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு நெசவாளி துணியைக் கொடுத்து ஒரு ஜோடி காலணிகளை வாங்குகிறார். அந்தத் துணி ஒரு ஜோடி காலணிகளின் மதிப்புக்குச் சமம் என்று சொல்லலாம். அல்லது காலணிகள் தயாரிப்பாளர் ஒரு ஜோடி காலணிகளைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்திலுள்ள உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால் அளவு ரீதியான பொருத்தம் அதன் முற்றொருமைக்கு நிரூபணம் அல்ல; ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் மதிப்பை அளவு ரீதியாக ஒரே ஒரு வழியைக் கொண்டு அடுத்த பண்டத்தின் தெரிந்த அளவைக் கொண்டு – மட்டுமே நிர்ணயிக்கலாம்.
ஆடம் ஸ்மித்
இந்தக் கருத்தை, மதிப்பைப் பற்றிய தமது இரண்டாவது பொருள் விளக்கத்தை முதலாளித்துவ உற்பத்திக்குப் பயன்படுத்த முயற்சித்த பொழுது ஸ்மித் முற்றிலும் கீழே விழுந்தார். காலணிகள் தயாரிக்கும் தொழிலாளி ஒரு முதலாளியிடம் வேலை செய்கின்றாரென்றால் அவரால் தயாரிக்கப்பட்ட காலணிகளின் மதிப்பும் அவருடைய “உழைப்பின் மதிப்பும்”, அதாவது அவருடைய உழைப்புக்காக அவர் பெறுகின்றதும் முற்றிலும் வெவ்வேறானவையாகும். தொழிலாளியின் உழைப்பை வாங்குகின்ற முதலாளி (அவர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான ஆற்றலை வாங்குகிறார் என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்) அந்த உழைப்புக்குத் தான் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெறுகிறார் என்பதே இதன் பொருள்.
இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதற்கு ஸ்மித்தினால் முடியவில்லை. எனவே “பூர்வீக சமுதாய நிலையில்”, முதலாளிகளும் கூலி உழைப்பாளிகளும் இல்லாத சமுதாயத்தில், அதாவது மார்க்சிய வர்ணனைப்படி சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில் மட்டுமே மதிப்பு உழைப்பினால் நிர்ண யிக்கப்படுகிறது என்று தவறாக முடிவு செய்தார்.
முதலாளித்துவ நிலைமைகளுக்கென்று ஸ்மித் மதிப்புத் தத்துவத்தின் மூன்றாவது பதிப்புருவத்தை அமைத்தார். ஒரு பண்டத்தின் மதிப்பு தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் முதலாளியின் லாபம் (சில துறைகளில் நில வாரம் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய செலவுகளைக் கொண்டிருக்கிறது என்று முடிவு செய்தார். மதிப்பைப் பற்றிய இந்தத் தத்துவம் மூலதனத்தின் சராசரி லாபம் அல்லது அவர் எழுதியது போல “லாபத்தின் இயற்கையான விகிதம்” என்ற நிகழ்வை விளக்குவதாகத் தோன்றியது அவருடைய நம்பிக்கையை மறுபடியும் உறுதி செய்தது. ஸ்மித் மதிப்பை உற்பத்தி விலைக்குச் சாதாரணமாகச் சமப்படுத்திவிட்டார்; அவற்றுக்கு இடையேயிருந்த சிக்கலான இடைநிலை இணைப்புக்களை அவர் கவனிக்கவில்லை.
அடுத்த வரப்போகும் நூற்றாண்டில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போகின்ற “உற்பத்திச் செலவுகளின் தத்துவம்” இதுவே. தன்னுடைய பண்டத்தின் விலை பிரதானமாக செலவுகள் மற்றும் சராசரியான லாபத்தைக் கொண்டும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உள்ள தேவை, அளிப்பைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது என்று நினைக்கின்ற முதலாளியின் செய்முறையான கருத்து நிலையை ஸ்மித் மேற்கொண்டார். உழைப்பு, மூலதனம், நிலவுடைமை ஆகியவை மதிப்பை உருவாக்கும் சமமதிப்புக்கள் என்று காட்டுவதற்கு மதிப்பைப் பற்றிய இந்தக் கருத்து அதிகமான இடமளித்தது. முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பொருளாதாரத்தை உபயோகிக்க முயற்சி செய்த ஸேயும் இதர பொருளியலாளர்களும் வெகு சீக்கிரத்தில் இதை ஸ்மித்திடமிருந்து அறிந்து கொண்டார்கள்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) J. Schumpeter, History of Economic Analysis (p. 307) என்ற புத்தகத்தில் தரப்படுகிற மேற்கோள்.
(2) J. Bell, A History of Economic Thought, p. 188.
(3) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 402 பார்க்க .
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பெண்கள் தலைமையேற்று 55 நாட்களாக நடத்தும் ஒரு தொடர்ப் போராட்டம்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம். அதற்காக தானாகவே முன்வந்து (suo moto) அது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 25 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
குழந்தையின் தாய் நாசீயா.
போராட்டக்காரர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தயாரில்லை. கர்நாடகா மாநிலம், பிதாரில், நரேந்திர மோடியை விமர்சிக்கும் நாடகம் ஒன்றில் பள்ளிச் சிறுவர்கள் நடித்ததற்காக அவர்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் போது உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.
வழக்கும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் பற்றி விசாரிக்கத் உச்ச நீதிமன்றம் தயாரில்லை. காஷ்மீர் மக்கள் இணையத்ததைப் பயன்படுத்தவதற்கான உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுக்கிறது. CAA -வுக்கு எதிராக அமைதியின்மையும், கொந்தளிப்பான சூழலும் நிலவுவதாக நீதிபதிகள் கருதினாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறது.
எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள், தங்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அசாம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 பேருக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்கவில்லை. “முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; இஸ்லாமியர்கள் மட்டுமே முகாம்களில் இருப்பார்கள்” என்று இந்த வாரம் மோடி அறிவித்த போதும், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாத 19 லட்சம் பேரில், முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வாய்ப்பு குறித்த பிரச்சனையை உச்நீதிமன்றம் காது கொடுத்துக் கேட்கத் தயாரில்லை. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதில் நடைபெற்ற கடுமையான முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் அது தயாரில்லை. லட்சக் கணக்கானவர்களை சட்ட விரோதிகளக அறிவிக்கக் காரணமாக இருந்த, NRC தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்த நீட்டிப்பு செய்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. ஆவணங்களில் உள்ள சில எழுத்துப் பிழைகள் மற்றும் மாறுபட்ட தேதிகள் உள்ளிட்ட அற்பக் காரணங்களுக்காக பலர் ‘வெளிநாட்டினராக’ அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த பிரச்சனை மீதும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.
பாபர் மசூதி எழுப்பப்பட்டிருந்த நிலத்தைப் பறித்து, மசூதியை இடித்தக் கயவர்களிடமே ஒப்படைத்துள்ளது உச்ச நீதிமன்றம். மசூதியை இடித்தக் குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வற்புறுத்தவில்லை. எல்.கே அத்வானி மீதான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளைக் கடந்த இந்த வழக்கில் அவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள, முக்கியத்துவம் வாய்ந்த NPR மற்றும் NRC குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மாற்றாந்தாய் மனப் போக்கு குறித்து இப்படி நிறைய சொல்ல முடியும்.
சொல்வதற்கு கசப்பானதாக இருந்தாலும், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சமானப் போக்கையே உச்ச நீதிமன்றம் கடைபிடிக்கிறது என்பதுதான் உண்மை. எதை விசாரிக்க வேண்டும்? எதை விசாரிக்கக் கூடாது? என்பதை தீர்மானிக்கும் அதன் போக்கே இதை நிரூபிக்கிறது. சாதாரண காலங்களில் இந்த நடை முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் ஒரு அசாதாரமான சூழல் நிலவும் போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய ஒன்று.
இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக வீதியில் இறங்கிப் போரடிக் கொண்டிருக்கும் போது, இந்தியா தனது சொந்த நாட்டு மக்குளுக்கு என்ன செய்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களை பாரபட்சமாக நடத்துகிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் பெரும்பான்மைவாதத்தில் சிக்குண்டு உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் அபாயகரமானது.
சட்டத்தின ஆட்சி மூலம் இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் பேணப்படும் என்கிற நற்பெயரை மோடியும் இந்த அரசும் களங்கப்படுத்திவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான பாராளுமன்னற உறுப்பினர்கள் இந்தச் சட்டத் திருத்ததிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர உள்ளனர். இன்னும் சில நாட்களில் பிரசல்சுக்குச் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை விடுவிக்க வேண்டும், காஷ்மீரிகளுக்கு இணைய வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை 59 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. அதுவும்கூட நடந்து விட்டது.
அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். 1950 -இல் 8 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 2008 இல் 31 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்குப் பதிலாக இன்று 33 ஆக உயர்த்திக் கொண்டனர். மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வு ஒன்று மற்றும் அன்றாட வழக்குகளை விசாரிப்பதற்கான 2 நீதிபதிகளைக் கொண்ட 13 அல்லது 14 அமர்வுகள் உச்ச நீதிமன்றத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ளது போன்று 2 நீதிபதிகளைக் கொண்ட 14 அமர்வுகள் உலகில் வேறு எங்கேனும் உண்டா? நாம் வடிவமைத்திருக்கும் உச்ச நீதிமன்ற வடிவம் அமெரிக்க மாதிரியிலானது. ஆனால் அங்கு இருப்பதோ 12 நீதிபதிகள் கொண்ட ஒரே ஒரு அமர்வு மட்டுமே.
ஆனால் இத்தனை அமர்வுகள் இருந்தும் ஏதாதவது நீதி கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில் மக்களிடமிருந்து வர வேண்டும். இன்று அரசு மிருகத்தனமாக நடந்து கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது நாட்டிலிருந்து குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கிறது என்று இந்த நாட்டு முஸ்லீம்கள் கருதுகிறார்களா? அவர்கள் சார்பாக என்னால் பேச முடியாது என்றாலும் என்னிடம் அதற்கான உறுதியான பதில் ஏதும் கிடையாது.
(டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஆகர் படேல் அவர்கள் எழுதிய கட்டுரையின் சாரம்.)
குறிப்பு : மேலும் போராட்டக்காரர்களால் போக்கவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான வழக்கு ஒன்றும் தனியாக பிப்ரவரி 10 அன்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி 55 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடை செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் 10.02.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகம்,வட்டார போக்குவரத்து அலுவலகம்… தொழிலாளர் நலத்துறை அலுவலகம், பட்டுவளர்சித்துறை என அரசு அலுவலகங்கள் நிரம்பிய பாலசுந்தரம் சாலையில் வழக்கத்துக்கும் மாறாக, நேற்று (09.02.2020) உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
சாதி ஒழிப்பு மாநாடும் பேரணியும் நடத்த அனுமதி கொடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடத்தப்பட்ட மாநாடு இது. ‘இதுதான் இடம்’ என்று சனி காலைதான் காவல்துறை இந்த இடத்தை ஒதுக்கிக்கொடுத்தது.
அந்த தகவல் எல்லா அமைப்புகளுக்கும் செல்லும்முன்பாகவே மாநாட்டுக்கான நேரம் வந்துவிட்டது. சோடை போகவில்லை. முதன் முதலாக கூட்டம் நடத்த கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் ஆட்டம், பாட்டம் முழக்கம் என இயக்கங்கள் களைகட்டி தெறிக்கவிட்டார்கள்.
ஆனால் பேரணியாக செல்வதற்கென்று அனுமதிக்கப்பட்ட இடம்தான் மிக மிக குறைந்த தூரமாக இருந்தது. 950 மீட்டர் அதிகபட்சமாக அவ்வளவுதான் இருக்கும். பாலசுந்தரம் சாலையின் ஒரு மருங்கில் தொடங்கி, இன்னொரு மருங்கில் முடிக்கவேண்டியிருந்தது. வந்தவர்கள் நெருக்கி நிற்கத்தான் இடம் சரியாக இருந்தது, அட்ஜஸ் செய்து நடந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தின் சராசரி வயது 35 தானிருக்கும் என நினைக்கிறேன். இது ஒரு நல்ல சமிங்கை…
‘இன்னும் கொஞ்சம் ஷார்ப் பிளான் செய்திருக்கலாமோ’ என்கிற எண்ணங்கள் இருந்தாலும், குறுகிய காலத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்.
ஒருங்கிணைத்த அமைப்புகள் இந்த மாநாட்டையும் பேரணியையும் அர்ப்பணிப்போடு திறம்பட நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.
பேரணியின் முக்கியமான சில அம்சங்களாக.
1. பேரணியில் அமைப்பில் இல்லாத பொதுமக்களும் கணிசமான அளவு கலந்துகொண்டார்கள்.
2. அழைப்பிதழ் கொடுக்கப்படாத சில நற்பணி இயக்க நண்பர்களையும் பேரணியில் காண முடிந்தது.
3. அம்பேத்கரை கடுமையாக விமர்சிக்கும் நண்பர்களையும் கூட்டத்தில் காணமுடிந்தது.
இனி பேரணியில் ஆங்காங்கே கிடைத்த கேள்விகளையும், விவாதங்களையும் தொகுத்துப்பார்க்கலாம் :
1. கட்சிகளை புறக்கணித்து இயக்கங்கள் மட்டுமே கலந்துகொள்கிற கூட்டமைப்பாக இதனை தொடர்ந்து வைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்கிறதா?
2. ஆம் எனில் இயக்கமாக இல்லாமல் கட்சியாக. இயங்கும் வாழ்வுரிமை கட்சியின் வேல் முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனித நேயமக்கள் கட்சியின் ஜவஹருல்லா ஆகியோர் ஏன் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
3. ‘பேச்சாளர்களாகத்தானே அழைத்திருக்கிறோம். கூட்டமைப்பில் இல்லைதானே’ என்றால் பேச்சாளர்களாக, ஏன் இடதுசாரிகளையும் இதர கட்சிகளையும் அழைத்திருக்கக்கூடாது.
4. கருப்பு – நீலத்தை அடுத்து, இன்னும் சிலமாதங்களில் நடக்க இருக்கும் செஞ்சட்டைப்பேரணியை இடதுசாரிகள் இல்லாமல் எப்படி நடத்தமுடியும்.
ஒரே உணர்வாளர்கள் அல்லது ஒரேமாதிரியான அமைப்புகள் மாறி மாறி சட்டையைப் போட்டுக்கொண்டு (இப்படி நடப்பது Cross learning & Cross feelings க்கு
ஒருவகையில் உதவிகரமாக இருக்கும் என்றாலும்) எல்லாப்பேரணியிலும் நடப்பதற்கு மாறாக எல்லா சட்டைக்காரர்களையும் உள்ளடக்கிய முழுமையான கூட்டமைப்பாக இதை மாற்ற ஏதேனும் செய்தாகவேண்டும்.
சில சிக்கல்களிருந்தாலும் இதைச்செய்வதில்தான் முற்போக்கு அமைப்புகளின் வெற்றி இருக்கிறது.
சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
வீரவணக்க தீர்மானங்கள்
1. சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய – கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில் ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.
2. தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய சாதிய வெறிகளுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அறிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர், வெகு மக்கள் என அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.
3. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னுயிர் ஈந்த எண்ணற்ற போராளிகளுக்கும் ஈகம் செய்திருக்கின்ற தமிழீழ மக்களுக்கும் ஆதரவு தெரிவித்து உயிரை ஈந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல் ரகூப், முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.
4. சாதிவெறி மதவெறியைத் தூண்டி மக்களிடையே ஒரு பக்கம் பகை உணர்வுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதோடு ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அடையாளங்களையும் மறுக்கிறது. தமிழ் ஈழ ஏதிலியர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பதோடு, மதச் சிறுபான்மை மக்களுக்கும் குடியுரிமை வழங்க மறுத்து இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுகிற முயற்சி செய்கிற நோக்கில் உள்ள இந்திய அரசை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் இன அடையாள உரிமைகளையும், மொழித் தேச அளவில் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்ளவும், தமிழக மக்களைக் குடியுரிமையோடு இங்கு வாழ வைக்கவும், மதச் சிறுபான்மையினருக்கு எவ்வகை இடர்களும் ஏற்படாத வகையில் குடியுரிமை வழங்கவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
5. தமிழகத்தில், சாதி ஆணவப் படுகொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே வலியுறுத்தி உள்ளது. தவிரவும் இந்தியச் சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியவையும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளன. இந்நிலையில் சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து இதுவரையில் தமிழகஅரசு ஏதும் கருத்தறிவக்காமல் இருப்பது சரியன்று. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும், நடப்பு நிலையைக் கருத்தில் கொண்டும் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், சாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைக்கவும், சாதிமறுப்புத் தம்பதிகளுக்குச் சட்ட, சமூகப்பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் வாரிசுகளைச் சாதியற்றவர்களாகப் பதிவுசெய்து அவர்களுக்குச் சிறப்புரிமை வழங்கவும் சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு ஆணையம் என்கிற பெயரில், ஒரு தனி ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
6. சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தால், அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தி உள்ளன. எனவே சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் அம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
7. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குக் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பு வழங்கப் பாதுகாப்பு இல்லங்களைப் பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. அதைப் போன்ற பாதுகாப்பு இல்லங்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என இம்மாநாடு பரிந்துரைக்கிறது.
8. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களில் அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் செய்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை மற்றும் உடலியல் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
9. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009, அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் திருமணம் நடந்த இடத்தில்தான் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சலுகையையும் அது வழங்கி உள்ளது. அச்சட்டப்படி சாதி குறித்து எதுவும் கேட்கப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது அச் சட்டத்தின் கீழ்த் திருமணம் செய்ய இருப்பவர்களின் மதம் பற்றிக் கேட்கப்படுகிறது. சாதி / மதம் குறித்து எவரும் தெரிவிக்க வேண்டியதில்லை என 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தில் மதம் பற்றிக் கேட்கக் கூடாது என்பதோடு, எந்தவகைக் கால வரையறையும் இருக்கக்கூடாது என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
10. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குச் சிறுதொழில் நடத்த வட்டியில்லாக் கடன், தொழில் நடத்த அனுமதி வழங்குவதில் முன்னுரிமை, இலவச வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு போன்றவை அனைத்துப் பிரிவு சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையரின் குழந்தைகளுக்கு அனைத்து நிலைகளிலும் கட்டணமில்லாக் கல்வியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் எனவும் இம்மாநாடு வேண்டுகிறது.
11. சாதி மறுப்புத் திருமண இணையருக்கு இராசசுத்தான் அரசு ரூ.5 இலட்சம் உதவித் தொகை வழங்குகிறது. பல மாநிலங்கள் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய்வரை உதவித்தொகை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைந்த உதவித் தொகையைத்தான் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதிலும் பட்டம் பெற்ற பெண்களுக்கு அதிக உதவித்தொகையும், பட்டம் பெறாத பெண்களுக்குக் குறைவான உதவித்தொகையும் வழங்குகிறது. எனவே இந்தப் பாகுபாட்டைக் களைந்து, சாதிமறுப்பு இணையருக்கு இராசசுத்தான் அரசு வழங்குவதுபோல் ஐந்து இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.
12. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையரின் குழந்தைகளுக்கு மருத்துவம். மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு இடங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால் 69 விழுக்காட்டிற்குமேல் இந்த இட ஒதுக்கீடு வருவதால், அதை வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதிமறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையைப் பறிக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவுபடுத்தி நீதியை மீட்டுத்தருமாறு இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.
13. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து மீளாய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனும் சட்டப் பொறுப்பு இருந்தாலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெறுவதில்லை. எனவே இப்படிப்பட்ட மீளாய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
14. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில், அதே சாதியைச் சார்ந்தவர்களை அந்தக் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளாக எக்காரணம் கொண்டும் நியமிக்கக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
15. கல்வி நிலையங்களில் சாதியை வெளிப்படுத்தும்படி வண்ணக் கயிறுகளை அக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் கட்டி வரக் கூடாது என்ற தெளிவான ஆணையை வெளியிட வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.
16. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கான பள்ளிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், அப் பகுதியிலுள்ள கல்வி நிலையங்களின் அடிப்படைக் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.
17. கல்விநிலையங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும் எனவும், தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு குறித்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
18. அனைத்துப் பட்டியல்சாதி, பழங்குடியர்களின் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியர்களின் வீடு, நிலமற்றக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
19. நிலமற்ற பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்- இந்திய அரசால் பஞ்சமி நிலம் என்ற பெயரில் விவசாய நிலம் வழங்கப்பட்டது.
தற்போது அந்த நிலத்தின் பெரும்பகுதி வசதிபடைத்த பட்டியல் மற்றும் பழங்குடிகள் அல்லாதவர்கள் அரசியல் மற்றும் சாதி செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கொண்டனர். தொடர் பஞ்சமிநில மீட்புப் போராட்டங்களின் விளைவாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அனைத்து பஞ்சமி நிலங்களையும் மீட்டு உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களையும் உறுப்பினராகக் கொண்டு ஒரு மத்திய கமிட்டி அமைத்து ஆறு வார காலங்களுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டு அரசும், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மத்தியக் கமிட்டியும் எடுக்கவில்லை. இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
20. தீண்டாமைச் சுவர்கள் சாதிய வன்கொடுமைகளை அதிகப்படுத்தும் நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு இழப்புகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசே முழுப் பொறுப்பெடுத்து தமிழகமெங்கும் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவர்களைக் கணக்கெடுத்து அவற்றையெல்லாம் தரைமட்டமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
21. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நடைமுறையைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரைத் தமிழர்களின் சமய அறநிலையத் துறை என மாற்றிப் பெயரிட வேண்டும் எனவும், தமிழக ஆலயங்களில் சமசுக்கிருத பூசனை(அர்ச்சனை)க் கட்டணத்தில் பாதிக் கட்டணம் மட்டுமே தமிழ்ப் பூசனை (அர்ச்சனைக்கு)ப் பெறப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை இம் மாநாடு வேண்டுகிறது.
22. தமிழக உயர்நெறி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்று மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்ற வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை தமிழக உயர்நெறிமன்றம் சிறிதும் பொருட்படுத்தாமல் தட்டிக் கழிப்பதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மிக விரைவில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவில்லையென்றால் வெகுமக்களைத் திரட்டி அதற்கெனத் தனியே போராட வேண்டியிருக்குமென தொடர்புடைய துறையினருக்கு இம் மாநாடு வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறது.
22. தமிழகத்தில் செயல்படுகிற ஐஐடி உள்ளிட்ட இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என இம் மாநாடு கடுமையாக வலியுறுத்துகிறது.
23. கேரள மாநிலத்தைப் போல, பூசகர்(அர்ச்சகர்)களாகப் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களையும் கோயில்களில் பூசகர் (அர்ச்சகர்)களாகத் தமிழக அரசுப் பணி நியமனம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
24. திண்டுக்கல்லில் கடந்த இருபதாண்டுகளாக நிறுவ மறுக்கப்பட்டுவரும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்குத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. விரைந்து சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படாமல் போகுமானால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பே முன்னெடுத்துத் திருவள்ளுவர் சிலையை நிறுவும் என இம் மாநாட்டின் வழி அறிவிக்கிறது.
25. இந்திய அரசியல் சட்டத்தை யாத்தளித்த சிற்பி என்கிற பெருமைக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் குறியீடாகவும் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நிறுவ காவல்துறை தொடந்து மறுத்துவரும் நிலையில் தமிழகஅரசே பொறுப்பெடுத்துத் தமிழ்நாடின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிறுவ வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
26. அண்மைக் காலமாய்ச் சாதிவெறியோடும், மதவெறியோடும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் எனக் குமுகத் தலைவர்களின் சிலைகளை உடைத்திடும் கயவாளிகளின் போக்கை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அப்படியான குமுகப் பகைவர்களை அரசு கடுமையாக ஒடுக்கவேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.
27. கோவை மாவட்ட சிறுவாணி நீர்வளம் புகழ்பெற்ற நிலையிலிருக்க அதை இதுவரை கையாண்டு வந்த கோவை மாநகராட்சி கோவை மாநகருக்கும், கோவை மாவட்ட அளவில் பல ஊர்களுக்கும் தண்ணீரை நிறைவோடு வழங்கிவரும் நிலையில் பிரான்சு நாட்டைச் சார்ந்த சூயஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு அப்படியே அக் குடிநீர் உரிமையை விற்றுவிட்ட கொடுமையை தமிழக அரசு செய்திருக்கிறது. இதன்மூலம் இலவயமாகவும், மிகவும் மலிவான விலையிலும் தண்ணீரைப் பெற்றுவந்த கோவை மாநகர, மாவட்ட வெகுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகி அதிகப்படியான நீரைப் பெறக்கூடிய அவலமான சூழல் உருவாக இருக்கும் நிலையில், அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் உறவிற்கும், அதை ஏற்படுத்திய தமிழக அரசின் நடைமுறைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இவ் வொப்பந்தத்தை கைவிட்டுவிட்டு கோவை மாவட்டவாழ் மக்களுக்கு மாநகராட்சியின் பொறுப்பிலேயே தண்ணீரை வழங்க வலியுறுத்துகிறது.
28. தமிழக மக்களின் எவ்வகை உரிமைகளுக்கும் குரல்கொடுக்காத திரைப்பட நடிகர் இரஜினிகாந்து, அண்மைக் காலமாகத் தமிழகத்தின் உரிமைகளுக்குப் போராடுகிற மக்களின் போராட்டங்களையும், போராடுபவர்களையும் இழிவுபடுத்தித் திமிரோடு பேசிவருவதை இக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் போராடி வென்றெடுத்த பல உரிமைகளை ஏற்று மகிழ்கிற அவரின் திமிர்பிடித்த பேச்சுகள் இனி தொடரக்கூடாது என்றும், அவர் நாவடக்கிப் பேச வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்..
29. குடிமக்கள் திருத்தச் சட்டம், தேசியக்குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தனது மக்கள் பகை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியே தீருவோம் எனும் பாசிச பாரதீய ஜனதாக் கட்சிக்குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சாதி / மத வேறுபாடுகளை ஊக்குவிக்கும் பார்ப்பனிய பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகத் தமிழக மக்கள் சமரசமற்ற போராட்டங்களை எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இம் மாநாட்டின்மூலம் அறைகூவல் விடுக்கிறது.
30. பெரியார் மண் எனப்படும் தமிழகத்தில் பகுத்தறிவு மற்றும் அறிவியலுக்கு எதிரான பரப்புரை, பார்ப்பன இந்துத்துவ அமைப்புகளால், ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper ) ஒவ்வொருவரிடமும் பெருமளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
எனவே பெருகி வரும் சாதி / மதப்பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தமிழகம் எங்கும் தமிழ்ச் சான்றோர் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பேராசான் கார்ல் மார்க்சு போன்றோர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பெயர்களில் படிப்பகங்கள், நூலகங்கள் போன்றவற்றைப் பெரியாரிய உணர்வாளர்கள் ஒவ்வேர் ஊரிலும் தொடங்கவேண்டும்.
போராட்ட அறிவிப்புத் தீர்மானம் :
31. சாதி ஆணவ வெறிகளுக்கு அடித்தளமாகவும், பார்ப்பனியக் கருத்தாக்கங்களின் தொகு மொத்த வெளிப்பாடாகவுமே மனுதர்மம் எனும் பார்ப்பனிய, சாதிவெறி பிடித்த நூல் உள்ளது என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும், தந்தைபெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அடையாளப்படுத்தியும், அதை மறுத்த செயல்பாடுகளை முன்னெடுத்தும் இருக்கின்றனர். அம்பேத்கரும், பெரியாரும் அக் கருத்துக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னோட்டமாக மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்தியும் இருக்கின்றனர்.. அவர்களின் வழிகாட்டலில் வெறிபிடித்த பார்ப்பனிய சாதிய ஆணவ நூலான மனுநுாலை எதிர்வரும் மே 20-ஆம் நாள் அதாவது அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை முன்னெடுப்பது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு மாநாட்டின்வழி அறிவிக்கிறது.
கொல்கத்தா, பார்க் சர்க்கஸில் நடந்து வரும் போராட்டத்திற்காக திவிஜேந்திரலால் ராயின் (Dwijendralal Roy) புகழ்பெற்ற பாடலான “தனோ தன்யோ புஷ்போ போராவிலிருந்து – இது தான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்” என்ற வரியுடன் ஒரு சுவரொட்டியை ஒரு இளம்பெண் தயாரித்துக் கொண்டிருந்தார்.
வங்கத்தின் கலாச்சார எதிர்ப்பென்பது அன்றாட பாடல்களையும் எதிர்ப்பிற்கான தூண்டுதலாக மாற்றுகிறது. டி.எல். ராயின் கவிதைகள், பாடப்படாத தாகூரின் ஜன கண மன வரிகள் மற்றும் ரகுபதி ராகவ் ராஜா ராமின் மந்திரங்கள் தெருக்களிலும் கூட்டங்களிலும் கேட்கப்படுகின்றன. தேசியவாத அல்லது பக்தி பாடல்கள் போராட்டத்திற்கான வடிவமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க தருணமிது.
வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).
“போராட்டம் என்பது மக்களை நடவடிக்கைக்குத் தூண்டுவதோ அல்லது சில உயர்ந்த இலட்சியத்தை அடைவதோ மட்டுமல்ல கூட்டுப்பாடலைப் பற்றியதும் கூட. தற்போதைய தருணத்தில் உறுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். அன்பு ஒருபக்கமும் வெறுப்பு இன்னொரு பக்கமுமாக ஒன்றை மற்றொன்று தீவிரப்படுத்துகிறது” என்றார் வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).
ஜனவரி பிற்பகுதியில் மௌசுமியின் ஜாதவ்பூர் அடுக்குமாடி வீட்டில் நாங்கள் சந்தித்தோம். கொல்கத்தாவின் குளிர்கால சூழலில் நிலவும் சீற்றம், பதட்டம் ஆகியவற்றை தனிச்சிறப்பான இசை ஒன்றாக்குகிறது. நாங்கள் அப்போது விவாதித்த பாடலின் இரண்டு வரிகளை அவர் பாடினார். இசைக்கருவிகள் இல்லாமல் ஆழமான மெல்லிசை போன்ற அவரது குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. இது அவருடைய குரலை அறிந்த எவருக்கும் நன்றாகத் தெரியும்.
“நான் குறிப்பாக பாடல்களை மரபுரீதியானதாகவோ அல்லது அதற்கு மாறானதாகவோ அனுகவில்லை” என்று அப்போது அவர் கூறினார். “இசை இயல்பாக சேர்ந்து வருகிறது. நீங்கள் வளரும் பருவத்தில் இந்த பாடல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் அவற்றை (நீண்ட காலமாக) பாடாமல் இருந்திருக்கலாம். நீங்கள் யாரிடமிருந்தும் அவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை ஏராளம்.”
சில சூழ்நிலைகள், அந்த பாடல்களின் நினைவுகளைத் தூண்டும் என்று மௌசுமி விளக்கினார்.
குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவெட்டிற்கு எதிரான இயக்கம் அத்தகைய தூண்டுதலாக உள்ளது. மேலும் எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி மக்களைச் சென்றடைய செய்கிறது. ஜனவரி 18 அன்று பிலிப் மோரின் (Philip More) கலாச்சார நிகழ்ச்சியில் அவரது சொந்த வங்க பாடல் வரிகளையயும் ஜோன் பேஸின் (Joan Baez) ஒரு பாடலையும் இசைத்தார்.
பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் அனைவரும் இறுதியாக ஓய்வெடுக்கட்டும் நாம் அவர்களது குழந்தைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்
வயலில் சூரியன் மறையும் போது அன்பிற்கும் இசைக்கும் நாம் பலன் தருவோம் பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் ஓய்வெடுக்கட்டும்
“என்னுடைய தாயின் முகத்தில் நிழலொன்று ஆழமாக விழுகிறது – இது நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதிய முதல் பாடல்” என்று அவர் விளக்கினார்.
அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் ஒரு பாடலை அவர் நினைவு கூர்ந்தார். “அங்கே அமர்ந்திருக்கும் அனைத்து தாய்மார்களையும் நான் நினைத்தேன். நாம் மண்ணை தாயாக எப்படி கருதுகிறோம். மண்ணுடனான நம்முடைய சொந்தம் அது” என்று கூறினார்.
அரசின் குடியுரிமை பற்றிய வரையறையுடன் இந்த சொந்தம் என்ற கருத்து முரண்பட்டுள்ளது. மௌசுமியின் இந்த கருத்தாக்கத்தை அவரது உழைப்பு பெரும்பங்கு செழுமைப்படுத்தியுள்ளது. 2003 -ஆம் ஆண்டில் ஒலிப்பதிவாளார் சுகந்தா மஜும்தாருடன் இணைந்து அவர் உருவாக்கிய பயணக் காப்பகத் திட்டம் (The Travelling Archive project) வங்காள நாட்டுப்புற இசையின் களப்பதிவுகளை வங்கதேசம், மேற்கு வங்கம், அசாமிற்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் வங்கதேசத்தில் குடியேறிய கிழக்கு இலண்டன்வாசிகள் கேட்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாகும். “நான் தேசம் என்ற வரயறைக்கு அப்பால் பணியாற்றி வருகிறேன்” என்று அவர் கூறினார்.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்துள்ளார்: “இடம் பெயர்ந்து செல்வதும் தங்குவதற்காக ஒரு வீட்டைத் தேடுவதும் எப்போதும் எனது வேலைக்கு மையமாக இருந்தன. இந்த மண்ணிற்கு சொந்தம் என்ற உணர்விலிருந்து ஜன கண மன பாடலை நான் பார்க்கிறேன். அந்த மெல்லிசையும் பாடல் வரிகளும் நம்முடைய நினைவில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பாடல் நமக்கு சொந்தமானது.” என்றார்.
தேசிய கீதத்தின் பாடப்படாத வரிகளை கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுப்பித்தார். ஜனவரி 3 அன்று ஒரு முகநூல் பதிவில் மௌசிமி எழுதினார்: “நான் டி.எம். கிருஷ்ணாவின் ‘பாடப்படாத தேசிய கீதத்தை’ காலையிலிருந்து கேட்கிறேன். நான் உண்மையில் உட்கார்ந்து அந்த தேசிய கீதத்தைக் கேட்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை (இது தேசிய கீதம் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆனால் அவை நீண்ட கவிதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டடு பாடிய வரிகள்); கேளுங்கள், மீண்டும் கேளுங்கள், சிந்தியுங்கள்… ”
“நாங்கள் அந்த வரிகளை ஒன்றாகப் பாடினோம். பலரும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம், பழைய நண்பர்களைச் சந்தித்தோம், புதியவர்களை உருவாக்கினோம்” என்று அவர் விவரித்தார்.
ஒரு சமயத்தில், காவல்துறையின் பின்னால் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். “நாங்கள் பாடியபோது, காவல்துறை திரும்பிப்பார்த்தது – அநேகமாக பாடலை அவர்கள் விரும்பியிருக்கலாம். “நீங்களும் ஏன் இந்த பாடலைக் கற்றுக் கொண்டு எங்களுடன் பாடக்கூடாது?” என்று அவர்களில் ஒருவரிடம் கேட்டேன். உடனே போலீஸ்காரர்கள் நாங்கள் முன்னே போக வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.”
அடுத்ததாக பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பாடல் வரிகளைப் பாடினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து பாடினார்கள்.
ஆனந்த பஜார் செய்தித்தாளில் வந்திருந்த ஒரு புகைப்படத்தையும் தலைப்பையும் மௌஷுமி நினைவு கூர்ந்தார். அது இப்போதும் அவரது நினைவில் பதிந்துள்ளது:
“அது ஷாஹீன் பாக்கில் 20 நாள் குழந்தையை வைத்திருக்கும் ஒரு தாயின் புகைப்படம். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார். மேலும் கீதத்திலிருந்து பின்வரும் வரிகள் புகைப்படத்தின் கீழே இருந்தன: நாடு அழிந்துபோகும் இரவுகளின் இருண்ட காலங்களில் / இரக்கமுள்ள தாயே நீதான் அசையாமல் விழிப்புடன் அருள்கூர்ந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தாய்”… இது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் போன்றது. “
டி.எல். ராயின் “ஏராளமான தானியங்கள், பூக்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த எங்கள் மண்” பாடலில் மௌசுமி இந்தியாவை குறிக்கும் இரண்டு வரிகளை எடுத்து இந்தியாவை அன்பு மற்றும் பாசத்தின் மண்ணாகத் தேர்ந்தெடுத்தார்:
“தாய்மார்கள் மற்றும் சகோதரர்களிடமிருந்த இது போன்ற பாசத்தை நாம் எங்கே காண முடியும் நான் உங்களை என்னுடைய இதயத்தில் தாங்குகிறேன் இதுதான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்.”
“நாங்கள் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் பாடி அவர்களையும் பாடும்படி மாற்றினோம். இது தான் நாம் உண்மையாக நாம் விரும்பும் தன்மையான நாடு.”
தேசிய மேலாதிக்க கருத்தாக போராட்டக்காரார்கள் கருதிய “எங்கள் நாடு எல்லா நாடுகளின் ராணி” என்ற வரிகளைப் பாடுவதை பாடகர்கள் தவிர்த்தனர்.
ராகுபதி ராகவ் ராஜா ராம் போன்ற பாடல்வரிகளையும் மௌசுமி தனது போராட்ட இசை வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக காந்தியுடனான தொடர்புக்காக அறியப்பட்ட பாடல்கள் வழக்கத்திற்கு மாறான மற்றொரு தேர்வாகும். கபீரின் பாடலை பாடலாமா அல்லது பார்க் சர்க்கஸில் பார்வையாளர்களுக்கு சொந்தமான மற்றொரு பாடலை பாடலாமா என்று பாடகர்கள் குழு மௌசுமியின் வீட்டில் விவாதித்தது.
“ரகுபதி ராகவ் ராஜா ராம்… எங்களில் ஒருவர் பாட ஆரம்பித்தார். இந்த பாடலை நாங்கள் பாட வேண்டும் என்று நினைத்தோம். ஃபைஸைச் (ஃபைஸ் அகமது ஃபைஸ்) சுற்றியுள்ள சர்ச்சையும், அல்லாவைப் பற்றிய குறுகிய வாசிப்பும் இருந்த போதுதான் இது நடந்தது. ரகுபதி ராகவின் ஒரு வரி “ஈஸ்வர் அல்லா, எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்” என்று வரும். ‘பகவான்’ என்ற வார்த்தையில் எல்லாம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது உடைந்து போனதொரு தருணம். அது அழகானதாக இருந்தது” என்று மௌசுமி விளக்கினார்.
ஆனால் அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. சிலர் இராமனைப் பற்றிய புகழ்மாலையை போராட்டக்களத்திற்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “இஸ்லாமிய மத முழக்கங்களுடன் உங்களுக்கு சிக்கல்கள் உள்ளன என்று சிலர் வாதிட்டனர். இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப வேண்டாம் என்று போராட்டக்காரர்களிடம் சொன்னீர்கள். ஆனால் இப்போது மதச்சார்பற்ற மக்கள் ரகுபதி ராகத்தை புரிந்து கொண்டுள்ளனர்”.
ஜே.என்.யூ. -வில் நடந்த வன்முறையை எதிர்த்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேரணியில் மௌசுமி பாடப்படாத கவிதை வரிகளை முதன்முதலில் பாடினார்.
காந்தியின் இராமனை அடிப்படையாக வைத்தும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும், “இந்த பாடல் ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்தது. அந்த நேரத்தில் முதல் பதிப்பு மட்டுமே பாடப்பட்டது. நேரமும் முக்கியமானது” என்று மௌசுமி பதிலளித்தார். “என்னைப் பொறுத்தவரை இது ஒரு புரட்சிகரமான பாடல்” என்று மேலும் கூறினார்.
1946 -ஆம் ஆண்டு நவகாளி கலவரத்தின் போது, ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரோ நாம்’ என்ற வரிகளை காந்தியின் கொள்ளு மருமகள் மிருதுலா எழுதியுள்ளார் என்று அறிஞர் திரிதீப் சுஹ்ருத் கூறுகிறார்.
பயண காப்பகங்கள் திட்டத்தில் இருந்தபோது, வங்கதேசத்தின் கிஷோர் கஞ்சைச் சேர்ந்த சங்கர் தேவு-டன் நடந்த சந்திப்பைப் பற்றி மௌசுமி என்னிடம் கூறினார்: “லவ, குச, சீதா மற்றும் இராமன் ஆகியோரின் கதையை அதன் அனைத்து விதங்களிலும் சங்கர் பாடினார். பாடியபோது அவர் உடைந்து போனார். சில நேரங்களில் பார்வையாளர்களும் உடைந்து விடுவார்கள். எல்லோருக்கும் வீட்டில் வேதனையும் துன்பமும் இருக்கிறது. சங்கர் பாடியது போல அவர்கள் கதையையும் தொடர்புபடுத்தலாம். இராமன் என்ற சொல்லிற்குள் பல விடயங்கள் உள்ளன. ” என்றார்.
அவர்களது பாடல்களால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவை ஆதாயமடைவார்கள் என்று மக்கள் நினைத்தால் மன்னிப்பு கேட்பதாக பாடகி கூறினார். ஆனால் “நாங்கள் இன்னும் இந்த பாடலைப் பாடுவோம்” என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
கட்டுரையாளர் : மோனோபினா குப்தா
தமிழாக்கம் : சுகுமார் நன்றி :த வயர்.
‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை – எம். ரிஷான் ஷெரீப்
கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசகசாலைகள் அற்ற ஊர்களில் பேருந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த இடங்களின் மேலதிகாரிகளுக்கே பொறுப்பை வழங்கியிருப்பதால் அவை இப்போது பலரதும் கவனத்தைப் பெற்று சிறப்பாக இயங்கி வருவதோடு, புத்தக வாசிப்பாளர்களாக பலர் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரிலிருந்து ஜே.வி. விஜயகுமார் ஆகியோர் பெருந் தொகையான தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்ததால், அவற்றை கவிஞர் கருணாகரன் மூலமாக கிளிநொச்சியிலிருக்கும் வறிய கிராம நூலகங்களுக்கும், இன்னும் பிற நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது. இவ்வாறாக இலவச வாசிகசாலை விபரத்தை பலரதும் கவனத்துக்குக் கொண்டு சென்ற உங்களுக்கும், புத்தகங்களை அனுப்பி வைத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் என்றும் உரித்தாகும்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த ஒன்றரை வருட காலமாக எனது ஊர் அமைந்துள்ள மாவட்டத்தில் வாசிகசாலைகளற்ற மலைக் கிராமங்களுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள சிறுவர்களை புத்தகங்களை வாசிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெட்டிக்குள் புத்தகங்களை இட்டு சைக்கிளில் ஏற்றிச் சென்று கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் போயிருந்து, சைக்கிளையும் பெட்டியையும் கண்டு ஒன்று சேரும் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் புத்தகங்களிலுள்ள கதைகளையும், வாசிப்பின் பயன்களையும் எடுத்துரைத்து இலவசமாகப் புத்தகங்களை வழங்கி விட்டு வருதல், இரண்டு கிழமைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தை அடுத்து வரப் போகும் தினமாகக் கூறுதல், குறிப்பிட்ட அத் தினத்தில் போய் அந் நூல்களைத் திருப்பி வாங்கிக் கொண்டு வேறு நூல்களை வழங்கி வருதல் இப்படியாக பதினைந்து கிராமங்களுக்கு இந்த இலவச நடமாடும் நூலக சேவையைச் செய்ய முடிந்தது.
இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் வாசகர்களிடம் முன்பு வழங்கிய நூல்களைத் திரும்பப் பெறும்போது பெரியவர்களிடமும், சிறுவர்களிடமும் அவர்களது வாசிப்பனுபவம் மற்றும் நூல் குறித்த விமர்சனத்தை கூறுமாறு அல்லது எழுதித் தருமாறு கோரப்படும். அவர்களும் தம்மாலியன்ற விதத்தில் நூலைப் பற்றிக் கூறும்போது அல்லது எழுதித் தரும்போது இச் சேவையின் பயனை ஆத்மார்த்தமாக உணர முடிகிறது.
இந்த எண்ணக் கரு நண்பரும், சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தருமான திரு. மஹிந்த தசநாயக்கவுடையது. அவர் ஒரு வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டதாரியானவர். எனவே கிராமப்புறங்களில் வாசிக்கத் தேவையான புத்தகங்கள் கிடைப்பதிலுள்ள சிக்கல்களை அவர் நன்கு அறிவார். அவரது முயற்சியால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலைக் கிராமங்களில் இந்த இலவச நடமாடும் நூலக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகிறது.
திரு. மஹிந்த தசநாயக்கவுடன் எம். ரிஷான் ஷெரீப். (வலது)
இந்த வருடம், இந்தச் சேவையை எமது மாவட்டத்துக் கிராமங்களோடு மாத்திரம் நிறுத்தி விடாது, பிற மாவட்டங்களிலுள்ள வறிய கிராமங்களிலும் இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எனவே போரால் பாதிக்கப்பட்ட, பல வறிய கிராமங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்துக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத் தீர்மானித்தோம். நான் தயாரித்துக் கொடுத்த பெட்டியை, நண்பர் மஹிந்த தசநாயகவின் மனைவி வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பிணைத்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் அனுப்பியாயிற்று. ஆனால் ஏற்கெனவே தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் விநியோகித்து முடித்திருந்தோம். எனவே புதிதாக நூல்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.
வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்ற விடயத்தைக் கூறியதும் மஹிந்த தசநாயக்கவின் சிங்கள நண்பரொருவர் இருபதாயிரம் ரூபாயை இலவசமாக அனுப்பியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு நானும், மஹிந்தவும் விடிகாலையே புறப்பட்டு கொழும்பிலிருக்கும் குமரன் புத்தக நிலையத்துக்குப் போய் இருபதாயிரம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தோம். இலவச நடமாடும் நூலக விடயத்தைக் கூறியதும், புத்தக நிலைய உரிமையாளர் திரு. குமரன் அவர்கள் (எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களது மகன்) நாம் வாங்கிய நூல்களுக்கு தன்னாலியன்ற சிறந்த விலைக் கழிவினை வழங்கி உதவினார். அதனால் இலங்கை, இந்திய வெளியீடுகளான ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை வாங்க முடிந்தது.
அவற்றைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு நள்ளிரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு மறுநாள் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தோம். அங்கு, ஏற்கெனவே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டிய வறிய பிள்ளைகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவிகள் இனங் கண்டு அவர்களை கொக்குவில் கோயிலருகே ஒன்றிணைத்திருந்தார்கள். அப் பிள்ளைகள் கொக்குவில் புகையிரத நிலையத்தருகே குடிசைகளில் வசிக்கும் பிள்ளைகள். அப் பிள்ளைகள் அந்த மாணவிகளோடு நெருக்கமாக இருப்பதையும், மாணவிகள் அவர்களோடு தமிழில் கதைப்பதையும் காண முடிந்தது. இரண்டு வயது பெண் குழந்தையொன்று மாணவியின் கையிலேயே அமர்ந்து கொண்டு தனது தாயிடம் செல்ல மறுத்தது. கொக்குவிலைச் சேர்ந்த துவாரகாவும் இன்னும் இரண்டு இளைஞர்களும் கூட அங்கு வந்து சேர்ந்து நூல்களை விநியோகிக்க உதவினார்கள்.
காலையிலிருந்து கொக்குவிலில் சேர்ந்திருந்த சிறுவர்களுக்கு ஒரு தொகுதி நூல்களை விநியோகித்து விட்டிருந்தோம். எனினும் அங்கு இலவசமாக வழங்கப்படும் நல்ல நூல்களை எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கக் கூடிய பிள்ளைகளின் தட்டுப்பாடு நிலவியது. நாம் சென்றது வார இறுதி நாளில் என்பதால், பெருமளவான பிள்ளைகள் பிரத்தியேக (ட்யூஷன்) வகுப்புகளுக்குச் சென்றிருந்தமை எமக்கு ஆச்சரியமளித்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலையில் காலையிலிருந்து மாலை வரை படித்துக் களைத்துப் போன பிள்ளைகளை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் விடிகாலையிலிருந்து இரவு வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவது சரியா? அவர்களுக்கு விளையாடுவதற்கோ, வேறு தமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதற்கோ பெரியவர்கள் நேரம் கொடுப்பதே இல்லை. பாடசாலையில் ஒழுங்காகவும், முறையாகவும் கற்பித்தால் பிள்ளைகள் பணம் கொடுத்துக் கற்க வேண்டிய பிரத்தியேக வகுப்புகளுக்கான அவசியமே இல்லையே? தமிழ்ப் பிரதேசங்களில் ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது? இதைப் பற்றி மேலும் கூறினால் பிரத்தியேக வகுப்பாசிரியர்களும், சில பெற்றோர்களும் கோபிப்பார்கள். இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். விடயத்துக்கு வருவோம்.
யாழ்ப்பாணத்தில் தன் நண்பர்கலுடன் எம். ரிஷான் ஷெரீப்.
யாழ் சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தர் ராஜீவனைத் தொடர்பு கொண்டபோது சுன்னாகம், மானிப்பாய் வழியே சங்கிலிப்பாய் கிராமத்துக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அவரது முயற்சியின் கீழ், திரு. கஜரூபன் அவர்களது ஒருங்கிணைப்பில் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஐம்பது, அறுபது பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். நாட் கூலி வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்பதால் தனிப்பட்ட வாசிப்புத் தேவைகளுக்காக நூல்களை வாங்கி வாசிப்பதென்பது அவர்களுக்கு பெரும் கனவு. அவ்வாறானவர்களுக்கு புத்தகங்களை வழங்க முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தோம். எஞ்சிய நூல்களை கஜரூபனிடம் கொடுத்தோம். இரு கிழமைக்குப் பின்னர் அப் பிள்ளைகள் வாசித்து முடித்த நூல்களைக் கேட்டு வாங்கி எஞ்சிய நூல்களை விநியோகிக்குமாறு கூறி விட்டு அன்றிரவு புகையிரதத்தில் புறப்பட்டு மறுநாள் வீடு வந்து சேர்ந்தோம். புதிதாகச் சேரும் தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.
‘புத்தகங்களும் நானும்’ எனும் இந்த இலவச நடமாடும் நூலக சேவை குறித்து முன்பே நான் வெளிப்படையாக அறியத் தந்திருந்தால் நூல்களைப் பெற்றுக் கொள்வதிலும், நூல்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்களைக் கண்டடைவதிலும், ‘நீங்கள் NGO வா?’ ‘அரசாங்கம் உங்களை அனுப்பியதா?’ ‘உல்லாசமா ஊர் சுற்ற வேண்டிய வயதில, இந்த வெயிலில் ஏன் இதைச் செய்து திரியுறீர்?’ போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாதிருக்கவும் முடிந்திருக்கும். பல மாவட்டங்களிலுமிருக்கும் வறிய தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இதைத் தொடர்ந்தும் செய்யவிருப்பதால் இப்போதேனும் இதைப் பதிந்து வைப்பது தாமதமில்லை என்று தோன்றுகிறது.
பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் சிநேகபூர்வமான சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தகங்களும் நானும்’ எனும் இலவச நடமாடும் நூலக சேவை பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலத்தில் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளோடு ஓரிடத்துக்குள் அடைபட்டு, ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் நிலைமை காணப்படும் சூழலில் புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம் சுற்றுச் சூழலையும், சமூகத்தையும் நேசிக்கும் மனிதர்களாகி எதிர்காலத்தைச் சந்திப்பவர்களாக அப் பிள்ளைகளை மாற்ற முடியும். இதை இலக்காகக் கொண்டு நட்போடு கை கோர்ப்பதே ‘புத்தகங்களும் நானும்’ சேவையின் எதிர்பார்ப்பாகும்.
வாசகர்கள் தாம் வாசித்து முடித்த நூல்களை இலவசமாக அனுப்பி வைத்தால் அவற்றையும் சேகரித்து வறிய கிராமப்புறங்களுக்கு இவ்வாறு வழங்குவோம். எழுத்தாளர்களும் தாம் வெளியிட்ட நூல்களின் பிரதிகளை அனுப்பி வைக்கலாம். வாசகர்கள் அந் நூல்கள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்தால் அவை எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இச் சேவையை, தன்னலம் பாராது சேவை மனப்பான்மையோடு தமது பிரதேசங்களிலும் முன்னெடுக்க விரும்புகிறவர்களும் எம்மை அணுகலாம். தொடர்புக்கு mrishansh@gmail.com
பெரியவர்கள், பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது முன்னுதாரணங்களையேயன்றி, அறிவுரைகளை அல்ல. அத்தோடு உலகத்தை நேசத்தோடு ஒன்றிணைக்க நல்ல புத்தகங்களாலும், புத்தக வாசிப்பாளர்களாலும் முடியும், இல்லையா?
1 of 11
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
1962-ம் ஆண்டு சுழற்சிகள் நிறைந்த ஆண்டாகும். 1962-ல் தான் சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தோழர் பாலதண்டாயுதம் கட்சியின், சென்னை மாவட்டக் குழுச் செயலாளராக இருந்தார். மாநில மாநாட்டை சென்னையில் நடத்துகிற குமாரமங்கலம், ஏ.எஸ்.கே., கே.முருகேசன் போன்ற மூத்த தோழர்களுடன் அரிபட், பரமேஸ்வரன், கஜபதி, டி. பழனிச்சாமி, தா. பாண்டியன் என்று பலரும் இருந்தோம்.
பாலன் விடுதலையான நாளில் இருந்தே திமுக எதிர்ப்பில் கூர்மையாக இருந்தார். மாநில மாநாட்டிற்காக சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கினோம். நிதி வசூலும் நடந்தது. தோழர்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் உற்சாகம் வீறிட்டுத் தெரிந்தது. ‘ஜனசக்தி’யில் பெட்டிச் செய்திகளையும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளினோம். தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் ‘ஜனசக்தி’யில் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு. அதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் எதிர்ப்பும் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது அவரது நிலை. அதுதான் அன்றைக்கும் சர்ச்சைக்குரியதாக இருந்த பிரச்சினை. (நூலிலிருந்து பக்.5)
… தேர்தல் வேலை தொடங்கிய சில நாட்களுக்குள் தோழர் அஜய்குமார் கோஷ் இறந்து விட்ட அதிர்ச்சிச் செய்தி வந்தது. தேர்தல் கூட்டம் அஞ்சலிக் கூட்டமாக மாற்றப்பட்டது.. அஞ்சலி உரை ஆற்றிய ஜீவா, பகத்சிங்கைப் பற்றித் தொடங்கி அவரது தியாக வரலாற்றைக் கூறியவர், தூக்குமேடை ஏறும் நேரத்தில் கூட ‘அரசும் புரட்சியும்” என்ற லெனினுடைய நூலை பகத்சிங் படித்துக் கொண்டிருந்தது பற்றியும், பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற புத்தகத்தை மொழிபெயர்த்ததற்காக தான் கைதான சம்பவங்ளையும் குறிப்பிட்டார்.
ஜீவாவை கால்களிலும், கைகளிலும் சங்கிலிகளால் கட்டி ஒரு சிங்கத்தை அழைத்துச் செல்வது மாதிரி இழுத்துச் சென்றதையும் வருணித்தார். “நாடு முழுவதிலும் பகத்சிங்கின் புகழ் பரவியது. பகத்சிங் ஏன் குண்டு வீசினான்?” வெள்ளையரை எதிர்த்து பல அதிதீவிரக் குழுக்கள் பல இடங்களில் போராடி வந்தனர். ஆனால் பகத்சிங் குண்டை மட்டும் நம்பியவனல்லன். அவன் இளமையிலேயே சோஷலிஸத்தை நாடியவன். அது எவ்வாறு உருவானது தெரியுமா?
பாலதண்டாயுதம்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததைக் கண்டித்து நாடெங்கிலும் கண்டனக் குரல் எழுந்தது. கல்கத்தாவில் நடந்த பெரிய கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய இயக்கத்தலைவர்களில் ஒருவராக பெர்தாபிரகன்சா என்ற அம்மையார், கடுங்கோபத்துடன் “இந்த நாட்டில் இளைஞர்களே இல்லையா? அவர்கள் உதடுகளில் இருப்பது மீசைதானா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பேச, அந்தச் செய்தி பரவ, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் “இருக்கிறோம் அம்மா. கேட்பாய் எங்கள் பதிலை சில நாட்களுக்குள்!”” என்று முழங்கி விட்டுத்தான், நாடாளுமன்ற மைய மண்டபத்தில், வெள்யைனை எச்சரிக்கும் முறையில் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். தலைமறைவாக இருந்தபோது வங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவர்களைச் சந்திக்க பகத்சிங் வந்தார். அங்கு தோழர்கள் டாங்கேயையும், பரத்வாஜையும் வேறு சிலரையும் சந்தித்தார். அவர்களுடன் மூன்று நாட்கள் தங்கி விவாதித்து விட்டுத்தான் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் அமைப்பு என்பதையும் உருவாக்கினர். ‘அரசும் புரட்சியும்’ என்ற புத்தகம் அப்பொழுது கடைகளில் கிடைக்காது. தடை செய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை இந்தத் தலைவர்களிடமிருந்து பெற்றுச் சென்றவர்தான் பகத்சிங். வங்கம் வந்திருந்த போது தீவிரவாத இளைஞர்களைச் சந்தித்தார். அவரைச் சந்தித்து, வெள்ளையரை எதிர்த்த இயக்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொண்டவர்தான் அஜய்குமார் கோஷ். (நூலிலிருந்து பக்.14-15)
… இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஏற்பட்ட பிளவு அதில் யார் யார், எந்தப் பக்கம் என்ன காரணங்களுக்காகச் சேர்ந்தார்கள் என்று காரணங்களை இங்கு விரிந்துரைக்காது விடுகிறோம். அது ஒரு தனி நூலில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.
இந்தக் கட்டத்தில் அந்தச் சோதனையை ஜீவா எவ்வாறு சந்தித்தார்? அது அவரை எவ்வாறு பாதித்தது?
ஜீவா.
அதுபற்றி அவர் கூறிய சில கருத்துக்களை மட்டும் எழுதுகிறேன். 1962 சிறப்பு மாநாட்டிற்குப் பின் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளராக தோழர் மணலி கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலச்செயற்குழுவில் தோழர்கள் மணலி கந்தசாமி, எம். கல்யாண சுந்தரம், என்.கே.கிருஷ்ணன், பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி இடம் பெற்றிருந்தனர். ஜீவாவும் செயற்குழுவில் இருந்தார். பி. ராமமூர்த்தியும் இருந்தார்.
என்னை சென்னை மாவட்டக் குழுச்செயலாளராகத் தேர்ந்து எடுத்தனர். ஓராண்டு மட்டுமே நான் செயலாளராக இருந்தேன். பின்னர் டி.பழனிச்சாமி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் பாலதண்டாயுதமும், நானும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜீவா யோசனை கூறுகிற நிலையோடு அலுவலகத்தில் தங்கி விட்டார். சில இடங்களுக்கு மட்டும் சென்று பேசினார். (நூலிலிருந்து பக்.21-22)
நூல் : 1962 அரசியல் நிகழ்வுகள் ஆசிரியர் : தா.பாண்டியன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098. தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410 மின்னஞ்சல் : info@ncbh.in
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 02
முதல் பாகம்.
நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும், தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று.
பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன, பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.
இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான, மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.
தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.
இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது: மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஓரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ்வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பௌத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.
நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், சுட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் ‘பெரு நிதியம்’ திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.
இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ் நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.
இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸீயவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன் முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.
அர்ஜுனன் போரில் அணுசக்தி கொண்ட அம்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்த மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தன்கர் முதல், விநாயகருக்கு யானைத்தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், ஆதிகாலத்திலும் இந்தியாவில் இருந்தது என்று உறுதிபடக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி வரை பாஜக-வின் அறிவியல் அறிஞர்கள் படை விரிவடைந்து செல்கிறது.
ஒவ்வொரு மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஏற்கெனவே வேதங்களிலோ அல்லது மகாபாரத்திலோ இருப்பதாக வலியுறுத்தும் தலைவர்களைக் கொண்டுள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இந்த தலைவர்களை இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.
முதல் வகையினர், காரண – காரியங்களை பரவவிடாமல் தடுப்பவர்களாகவும், அனைத்து அறிவியலையும் கைவிடுபவர்களாகவும் இருக்கின்றனர். அல்லது, அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவும் ஏற்கெனவே மகாபாரதத்திலும் வேதங்களிலும் அல்லது பண்டைய இந்தியாவில் அறியப்பட்டவை, நடைமுறைப்படுத்தப்பட்டவை என்று கூறுபவர்கள்.
இரண்டாவது வகையினர், தொடர்ந்து பசுக்களையும், அவற்றின் சிறுநீரையும் சாணியையும் போற்றிப் புகழந்து கொண்டிருப்பவர்கள்.
பாஜக அறிவியல் அறிஞர்கள் குறித்த டெலிகிராப்-ன் கையேடு :
இந்துத்துவ ‘விஞ்ஞானிகள்’ (கேலிப்படம் – தியாஸ் தாஸ். நன்றி : டெலிகிராப் இந்தியா)
ஜக்தீப் தன்கர் (மேற்குவங்க கவர்னர்) :
கடந்த ஜனவரி 14, 2020 அன்று 45-வது கிழக்கிந்திய அறிவியல் காட்சியில், “ராமாயண காலத்தில் பறக்கும் இயந்திரங்கள் இருந்ததாகவும், அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன என்றும் கூறி பார்வையாளர்களை திடுக்கிடச் செய்தார். “வானூர்திகள் 1910 அல்லது 1911-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. நாம் நமது இலக்கியங்களுல் நுழைந்தால் ராமாயணத்திலேயே நாம் விமானங்களைக் காணலாம். மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன”
பிப்லப் தேப் (திரிபுரா முதல்வர்) :
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மகாபாரதத்தைப் பற்றி பேசிய திரிபுரா முதல்வர், பாரதப் போர் நடந்திருக்கும் போது அங்கு நடப்பவை அனைத்தும் உடனுக்குடன் கண் இல்லாத மன்னனான திருதிராஷ்டிரனுக்கு தெரியவந்தது; இது அந்தக் காலத்திலேயே செயற்கைக் கோள் தொலைதொடர்பும், இணையமும் இருந்ததைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் சிவில் (குடிமையியல்) சேவகர்களாவதற்கு இயந்திரப் பொறியாளர் மாணவர்களை விட சிவில் (கட்டிடக்கலை) பொறியாளர் மாணவர்களே பொறுத்தமானவர்கள் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த்குமார் ஹெக்டே (முன்னாள் திறன் மேம்பாட்டு மத்திய அமைச்சர்) :
சமஸ்கிருதத்தின் தீவிர விசிறியான இவர் கடந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில்தான் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்-21 அன்று சமஸ்கிருத மொழியே வருங்காலத்தைய சூப்பர் கம்யூட்டர்களின் மொழியாக இருக்கும் என்ற பார்வைக்கு உலகம் முழுவதும் பல அறிஞர்கள் வந்தடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனால் தப்பித்தவறி கூட அந்த அறிஞர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.
நரேந்திர மோடி (இந்தியப் பிரதமர்) :
கடந்த அக்டோபர் 2014 அன்று மும்பை மருத்துவர்கள் முன்னிலையில் பண்டைய வேத காலத்துக்குப் பயணித்த மோடி, “நாம் வான்வெளி அறிவியலைப் பற்றி பேசுகையில், நமது முன்னோர்கள் வான்வெளி அறிவியலில் தங்களது பெரும் திறனைக் காட்டியுள்ளனர். ஆரியபட்டா சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லிச் சென்றதை அறிவியலாளர்கள் இன்று அங்கீகரித்துள்ளனர். நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் ஏற்கெனவே இத்தகைய திறனைக் கொண்டுள்ளோம்; அவற்றை நாம் மீண்டும்பெற வேண்டும்.” என்று பேசினார்.
திரிவேந்திர சிங் ராவத் (உத்தரகாண்ட் முதலமைச்சர்) :
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 27 அன்று, உலகிலுள்ள விலங்குகள் சாம்ராஜ்ஜியத்தில் ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியே விடும் ஒரே விலங்கின பசு மட்டுமே என்று புதிய திருப்புமுனைக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். மேலும் பசுவுக்கு அருகில் வாழ்ந்து வருவது காசநோயைக் குணப்படுத்தும் என்றும் தெரிவித்தார். என்ன…! சிறப்பாக குணமாக வேண்டுமெனில் பசுவுக்கு எவ்வளவு அருகில் வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. மற்றொரு நிகழ்வில் கர்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சை மகப்பேறைத் தடுக்க பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருட கங்கா-வில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ரஞ்சித் ஸ்ரீவத்சவா (உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்) :
பசுக்கள் அனைத்தும் இந்துக்கள் என்றும் அவை இறந்ததும் அவற்றை புதைக்கக் கூடாது. புதைத்தல் என்பது முசுலீம்களின் பண்பாடு. பசுக்கள் இறந்தால் அதன் உடலை வெந்நிறத் துணிகளால் சுற்றி, இந்து முறைப்படி தீயிட்டு எரிக்க வேண்டும் அல்லது மின் தகன மேடையில் இட்டு எரிக்கப்பட வேண்டும். அதற்காக தனியாக மயானங்கள் கட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சில் மறக்க முடியாத பகுதி எதுவெனில், “முசுலீம்களின் வீடுகளில் இருக்கும் பசுக்களை திரும்ப எடுத்துக் கொள்ளவேண்டும். நம் வீட்டுப் பெண்கள் முசுலீம்கள் வீட்டுக்குச் செல்வதை லவ் ஜிகாத் என்று நாம் பார்க்கும்போது, நாம் தாயாகக் கருதும் பசுக்கள் அவர்களது வீட்டில் இருப்பதையும் லவ் ஜிகாத் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும் ? பசுக்களுக்குப் பதில் அவர்கள் ஆடுகளை எடுத்துக் கொள்ளட்டும். ஆடுதான் அவர்களது தாய்” என்று பேசினார்.
கிரிராஜ் ஜிங் (மீன்வளம், கால்நடை – பால்வளத்துறை மத்திய அமைச்சர்) :
இவர் பேசியதைப் பற்றி பட்டியலிட இடம் பத்தாது. கடைசியாகக் கடந்த முறை (ஜனவரி14, 2020 அன்று) அறிவியலாளர்களிடம் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், இதன் மூலம் பசுக்கள் பால்தருவதை நிறுத்திய பின்னும் அவை கால்நடை விவசாயிகளுக்கு பணம் ஈட்டித் தரும் என்றும் அதனால் பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்களைக் கைவிடுதல் குறையும் என்றும் கூறியுள்ளார்.
மும்பையின் முன்னாள் போலிசு கமிசனரான சத்யபால் சிங், டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பலமுறை கையில் எடுத்திருக்கிறார். பார்லிமெண்டில் அவர் பேசுகையில், “நமது கலாச்சாரம் நம்மை ரிஷிகளின் குழந்தைகள் எனக் கூறுகிறது. நான் நாம் குரங்குகளின் குழந்தைகள் என நம்புபவர்களை புண்படுத்த விரும்பவில்லை; ஆனால் நமது கலாச்சாரத்தின்படிநாம் ரிஷிகளின் குழந்தைகள்” என்றார். இதற்கு பாராளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்தார். தான் ஒரு ஹோமோசேப்பியன் என்றும் தமது பெற்றோர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் பாராளுமன்றத்தில் சத்யபால் சிங்கின் படையினர் பரிணாமக் கொள்கை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றனர். அவரது முத்தாய்ப்பான வாதம் : குரங்கு மனிதனாக மாறியதற்கு எந்த ஒரு நேரடியான சாட்சியும் இல்லை.
பிரக்யா சிங் தாக்கூர் (போபால் எம்.பி – மாலேகான் குண்டுவெடுப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்) :
அனைத்து பாஜக தலைவர்களுமே பசுமாதாவின் முன் மண்டியிட்டு இருந்தார்கள் என்றாலும், பசு குறித்த விவாதத்தின் தலைசிறந்த நபர் பிரக்யாசிங் தாக்கூர் தான். மாட்டு மூத்திரத்தைக் குடித்ததால்தான் தனது புற்று நோய் குணமானதாகக் குறிப்பிட்டார். “நான் பசு மூத்திரம், பஞ்ச கவ்யம் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் ஆகியவற்றை உட்கொண்டதன் மூலம்தான் புற்றுநோயிலிருந்து தானாக குணமடைந்தேன்” என்றார்.
பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணமும், மூத்திரமும் பாலும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த கலவையாகும். அவரது மருத்துவர்கள் இதனை மறுத்து அறிக்கை விட்டனர். அவருக்கு புற்றுநோயைக் குணமாக்க, மார்பக நீக்கம் உட்பட சில அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் குறிப்பிட்டனர். பசுவுடன் நெருங்கியிருப்பதன் மூலம் பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பசுவை குறிப்பிட்ட வகையில் தேய்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சரி செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷ் வர்தன் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர்) :
அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் கூறியிருக்கிறார். “நமது அறிவியலாளர்கள் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தனர். நாம் அந்தப் பெருமையை கிரேக்கர்களுக்குக் கொடுத்துவிட்டோம். அதே போல, அல்ஜீப்ரா கண்டுபிடிப்பின் பெருமையை அரேபியர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.” என்றார்.
2018-ம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய ஹர்ஸ் வர்தன், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சக்தி வாய்ந்த அறிவியல் கொள்கைகளைப் பற்றிய அறிவு வேதங்களில் பொதிந்திருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்த விவரங்களை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதைக் கண்டுபிடிப்பது பத்திரிகையாளர்களின் பணி என்று கூறினார். கொடுமையென்னவென்றால், இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் பேசியுள்ளார் என்பதுதான்.
சங்க பரிவாரத்தால் உந்துதல் பெற்ற பரப்புரையாளர்கள் சிலர் :
பசுக்களின் பண்புகள் மற்றும் சக்திகள் குறித்து தொடர்ச்சியாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை பலரும் படைக்க, பாஜக தலைவர்கள் உந்துதலாக இருக்கின்றனர். அவ்வாறு உந்துதல் பெற்ற சிலர் பின்வருமாறு
நாகேஷ்வர ராவ் :
ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மகாபாரதத்தில் குதித்துள்ளார். இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய அவர் “மகாபாரதத்தில் 100 கவுரவர்கள் உருவானது ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தால் தான்” என்று பேசியுள்ளார். மேலும், “பகவான் விஷ்ணு ஏவுகணைகளை தனது விஷ்ணு சக்கரத்தின் மூலம் வழிநடத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜுனகத் விவசாய பல்கலைக்கழகம் :
இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த “அறிவியலாளர்கள்”, ஐந்தாண்டு ஆய்வுக்குப் பின்னர், தங்கத்தின் சுவடுகளை பசு மூத்திரத்தில் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். அதர்வண வேதக் குறிப்புகள் மூலம் தாம் இதனை அறிந்ததாகத் தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலத்தை விட வெயில் காலத்தில் அதிகமான தங்க சுவடு பசு மூத்திரத்தில் கிடைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். இவர்களின் இந்தக் கண்டுபிடிப்புகள், மேற் சரிபார்ப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த ஏழு மூடநம்பிக்கைகளும் ! ஏழு உண்மைகளும் !
❌ மூடநம்பிக்கை 1 ❌
நல்லெண்ணெயை கிருமி நாசினியாக பயன்படுத்தி உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டால் / உட்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.
தவறு
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவ நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்ப்பது பலனளிக்காது.
உண்மை
✅ அடிக்கடி கைகளை சோப் போட்டு அல்லது ஆல்கஹால் சானிடைசர் மூலம் கழுவிவருவது பலனளிக்கும்
✅ பொது இடமாக இருந்தால் கைகள் அதிகம் படும் இடத்தை க்ளோரின் சார்ந்த கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது பலனளிக்கும்
✅ தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை/ டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொண்டு வாயை மூடி தும்முவது பலனளிக்கும்
✅ சளி / இருமல் / தும்மல் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது பலன் தரும்
❌ மூடநம்பிக்கை 2 ❌
கொரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்ளலாமா ?
தவறு
கொரோனா என்பது ஒரு வைரஸ். வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன் தரும். ஆண்டிபயாடிக்குகள் என்பவை பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டவை எனவே, வைரஸ் தொற்றுக்கு ஆண்டிபயாடிக்குகள் பலனளிக்காது
உண்மை
✅ சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எச்.ஐ.வி. -க்கு எதிரான ப்ரோடியேஸ் நொதியை தடுக்கும் மருந்துகளை உபயோகித்து நோயாளிகளிடம் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த மருந்துகள் குறித்து இன்னும் தீவிர ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்துகளை அங்கீகரிக்க காலம் ஆகும்.
சீனாவில் இருந்து வரும் பார்சல்கள்/ கண்டெய்ணர்கள்/ கடிதங்கள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும்.
தவறு
கொரோனா வைரஸ் மனிதன் அல்லது அதற்குரிய வாழத்தகுந்த விலங்கு இவற்றின் உயிருள்ள உடல்களைத் தவிர வெளி சூழ்நிலையில் சில மணிநேரங்களுக்கு மேல் தாக்குபிடிக்க இயலாது.
உண்மை
✅ சீனாவில் இருந்து வரும் பார்சல்கள் யாவும் பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் கழித்து நம்மை வந்து சேருகின்றபடியால் கொரோனா வைரஸ் கட்டாயம் அந்த பார்சல்களில் தொற்று ஏற்படுத்தும் வண்ணம் உயிரோடு இருக்காது. ஆகவே டோண்ட் வொர்ரி..
❌ முடநம்பிக்கை 4 ❌
மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்துக்கொண்டே இருந்தால் / தொண்டையை உலராமல் பார்த்துக்கொண்டால் கொரோனா தொற்று ஏற்படாது .
தவறு
உண்மை
✅ மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்தாலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இயலாது. கொரோனா வைரஸ் சுவாசப்பாதை வழியாக பரவுவதே இதற்குக் காரணம். அடுத்தவர் இருமிய இடத்தில் அந்த கிருமிகள் சளியின் நுண்துகள்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதை மற்றவர் சுவாசத்தால் உள்ளே சென்று விடும்.
தண்ணீர் மூலம் பரவும் தொற்றுகள் பெரும்பாலும் தொற்று நிரம்பிய தண்ணீரை குடிப்பதால் வரும். கொரோனாவுக்கு இது பொருந்தாது. கொரோனா காற்றின் மூலம் பரவும் வைரஸ் தொற்றாகும்.
❌ மூடநம்பிக்கை 5 ❌
நி(யூ)மோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் நியூமோனியாவை தடுக்கும்.
தவறு
உண்மை
✅ கொரனா வைரஸ் என்பது புதிய வகை வைரஸாகும். மனிதர்கள் இதுவரை கண்டிராத வகை இது. அதற்காகவே இதற்கு “novel” என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது.
மற்ற நியுமோனியா உருவாக்கும் தொற்றுகளான, ஹீமோஃபிலஸ் இன்ப்ளூயன்சா பி , நியெமோகாக்கல் போன்ற தொற்றுகளுக்கு போடும் தடுப்பூசி கொரோனா வைரஸால் வரும் நியூமோனியாவை தடுக்காது.
❌ மூடநம்பிக்கை 6 ❌
மூக்கில் சலைன் சொட்டு மருந்து விட்டுக்கொண்டே இருந்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.
தவறு
உண்மை
✅ மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் ஏற்படாது என்று எந்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. எனவே , மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்துகளை வாங்கி நீங்களாகவே சுய மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
தேவைக்கு மீறி அதிகமாக மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்து உபயோகித்துக்கொண்டே இருந்தால் மருந்தின் தன்மையால் மூக்கடைப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதை Rhinitis Medicamentosa என்று அழைப்போம்.
மூக்கை சலைன் ஊற்றி நன்றாக க்ளியர் செய்து வைப்பது வைரஸ் தொற்று எளிதாக உள்ளே செல்ல வழிவகை செய்யும் என்பதையும் அடிக்கோடிடுகிறேன்
பூண்டு, மஞ்சள், கீழாநெல்லி போன்றவற்றை எடுப்பது கொரோனா தொற்று ஏற்படாமல் காக்கும்.
தவறு.
பூண்டு / மஞ்சள் போன்றவற்றிற்கு கிருமிகளை கொல்லும் தன்மை இருக்கிறது என்று அறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் வைரஸ்களை கொல்லும் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கின்றன
கீழாநெல்லி கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வேலை செய்யும் என்று ஆய்வு முடிவுகள் உள்ளன. இருப்பினும் அதை கொரோனா தொற்றுக்கு உபயோகிப்பதை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் ஆதரிக்கவில்லை.
பூண்டு/ மஞ்சள் போன்றவற்றை தினசரி அதன் நல்ல விஷயங்களுக்காக உணவில் சேர்த்து வருவது என்பது வேறு. அவற்றை உண்டால் கொரோனா வராது என்று நம்புவது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள கூடாது.
நாம் பரப்பும் இந்த மூட நம்பிக்கையை நம்பி ஒருவர் முக்கியமான நேரத்தில் மருத்துவமனையை நாடாமல் பூண்டு கஷாயம் குடித்து வீட்டிலேயே இருந்து விடும் வாய்ப்பு உண்டு.
கொரோனா குறித்த மூடநம்பிக்கைகளை அறிவியல் பார்வையில் தகர்ப்பது நமது முக்கிய குறிக்கோள்… தொடர்ந்திருப்போம்.
நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.
நிகழ்ச்சி நிரல் :
வரவேற்புரை :
தோழர் சூர்யா
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தலைமை :
தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
தொடக்க உரை :
நீதிபதி கோபால கவுடா மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
உரையாற்றுவோர் :
திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)
வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு
தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்
திரு. பாலாஜி
ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
கலை நிகழ்ச்சி : ம.க.இ.க. கலைக்குழு
நன்றியுரை :
தோழர் செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உரையாற்றுபவர்கள் பற்றிய குறிப்பு :
நீதிபதி கோபால கவுடா மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
நீதிபதி கோபால கவுடா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலை, மங்களூரில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு படுகொலை ஆகியவை குறித்த உண்மை அறியும் குழுவில் பங்கேற்று, தனது கண்டனத்தைப் பதிவு செய்தவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாடு முழுவதும் தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.
திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)
கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “பன்முகத் தன்மை கொண்ட நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. சமரசங்கள் அதிகரித்துள்ள இந்தக் காலச் சூழ்நிலையில், நான் ஐ.ஏ.எஸ் பணியில் இருப்பது தார்மீகரீதியாக சரியாக இருக்காது; எனவே, பதவியிலிருந்து நான் விலகுகிறேன்” என்று கூறி ராஜினாமா செய்துள்ளார்.
திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்
“மேற்கு தொடர்ச்சி மலை” படத்தின் இயக்குநர். “உலகமயமாக்கலுக்குப் பிறகு, 200 வருடங்களில் நடக்கும் மாற்றத்தை வெறும் 20 வருடங்களிலேயே சந்தித்துவிட்டோம். அடித்தட்டு மக்களுக்கு உடைமைதான் சொத்து. ஆனால், அதில்தான் மிகப்பெரிய அரசியலும் நடக்கிறது. நான் சிறுவயதில் பார்த்த சம்பவங்களும் மக்களின் வாழ்க்கையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது; அதுதான் இந்தப் படமெடுக்கக் காரணம்.”
வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு
பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலன் அவர்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மட்டுமல்லாமல் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகவும் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில், தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக தனது ஆழமான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்.
கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக உள்ளார்.
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை, தொடர்புக்கு : 99623 66321
தலைமை அலுவலகம்: 16, முல்லைநகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை -083. E-mail: ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn |
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 14
ஆக, முக்கிய நபர் நண்பர் வீட்டு மாடிப்படி இறங்கி வந்து, ஸ்லெட்ஜில் அமர்ந்து, “கரோலினா இவானொவ்னா வீட்டுக்கு விடு” என வண்டிக்காரனிடம் சொல்லி விட்டு, கதகதப்பான மேல்கோட்டால் உடம்பை இதமாகப் போர்த்திக்கொண்டு, இன்பமான மனநிலையில் திளைக்கலானார் (ருஷ்யனுக்கு இத்தகைய மனநிலையை விட மேலானது எதையும் கற்பனை செய்யவே இயலாது; அதாவது நாமாக எவ்விஷயத்தைப் பற்றியும் சிந்திக்காமல், ஒன்றை விட ஒன்று இன்பகரமான எண்ணங்கள் தாமே அகத்தில் எழுந்து விரைய, நாம் அவற்றைத் தொடரவோ தேடவோ கூடச் சிரமப்படத் தேவையற்ற நிலை இது). மிகுந்த மன நிறைவு கொண்டவராய், அன்று மாலையில் நடந்த களி தரும் நிகழ்ச்சிகள் அனைத்தையும், சிறிய நண்பர் குழாம் கொல்லெனச் சிரிக்கும்படி கூறப்பட்ட வேடிக்கைப் பேச்சுக்கள் எல்லாவற்றையும், எளிதில் நினைவு கூர்ந்து, அவற்றில் சிலவற்றை வாய்க்குள்ளாகவே திரும்பச் சொல்லிப் பார்த்து, அவை முன்போலவே நகைப்பூட்டுவதைக் கண்டு மகிழ்ந்தார்.
ஆகவே, அவர் வழிநெடுகப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்ததில் விந்தை எதுவும் இல்லை. சுழன்று சுழன்றடித்த காற்றுதான் எப்போதாவது அவரது களிப்பை இடை முறித்தது; எங்கிருந்தோ, என்ன காரணத்திற்கோ குப்பென்று வீசிய காற்று, அவர் முகத்தை வெட்டிச் செல்லும், அதன்மீது வெண்பனிச் சிதறல்களை அப்பும், அவரது கோட்டுக் காலரைக் கப்பற் பாய் போன்று உப்பச் செய்யும், அல்லது சட்டென இயற்கைக்கு மீறிய விறலுடன் அதைத் தூக்கி அவர் தலையை மூடுமாறு எறியும்; தலையைக் காலருக்குள்ளிருந்து விடுவிப்பதற்கு அவர் படாதபாடு படும்படிப் புரியும். தம் கோட்டுக் காலரை யாரோ மிக இறுகப் பற்றுவதைத் திடீரென உணர்ந்தார் முக்கிய நபர். திரும்பிப் பார்த்தவர், பழைய, நைந்த எழுத்தனது உடுப்பணிந்த குட்டையான ஆள் ஒருவனைக் கண்டார். அவன் அக்காக்கிய் என அடையாளந் தெரிந்துகொண்டதும் அவருக்குப் பெரும் பீதியுண்டாயிற்று.
அவனது முகம் வெண்பனி போன்று வெளேறென்று, பிரேதம் போலக் காணப்பட்டது. இறந்தவனின் முகம் விகாரமாகக் கோணுவதைப் பார்த்ததுமே முக்கிய நபரின் பீதி எல்லை கடந்து போயிற்று. அக்காக்கிய் அக்காக்கியெவிச்சின் பேய், சவக்குழியின் பயங்கரச் சுவாசத்தை அவர் மீது விட்டவாறு பேசியது: “ஓகோ! நீயா! அகப்பட்டுக் கொண்டாயா கடைசியில்! முடிவில் உன்னை வசமாகப் பிடித்துக்கொண்டு விட்டேன், அப்படித் தானே! உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும்! என் மேல்கோட்டைப் பற்றிக் கவலையெடுத்துக் கொள்ளாதது மட்டுமன்று, பிரமாதமாக அதட்டி உருட்ட வேறு செய்தாயே – கொடு இப்படி, உன்னுடைய மேல்கோட்டைக் கழற்றி!” என்றது.
பாவம் முக்கிய நபரின் உயிர் தொண்டைக்குழிக்கு வந்துவிட்டது. அலுவலகத்தில் பொதுவாகக் கீழ்நிலை ஊழியர்களுக்கு எதிரில் அவர் படுவிறைப்பாக இருப்பவர் தாம், அவருடைய ஆண்தகைமை வாய்ந்த தோற்றத்தையும் உடற்கட்டையும் ஒரு பார்வை பார்த்ததுமே “அடேயப்பா, என்ன மிடுக்கு!” என எல்லாருமே சொல்லுவார்கள் என்றாலும், வீர வடிவமைப்பு கொண்ட வேறு பலரைப் போன்றே அவரும் இப்போது ஒரே கிலியடித்துப்போய், மாரடைப்பு வந்துவிடுமோ எனக் காரணத்துடனேயே கலவரமடைந்தார். மேல் கோட்டைத் தாமாகவே கழற்றிக் கடாசிவிட்டு வண்டியோட்டியை விளித்து, “வீட்டுக்கு விடு, நாற்கால் பாய்ச்சலில்!” என உத்தரவிட்டார்.
வழக்கமாக அவர் நெருக்கடியான சமயங்களில் தான் இவ்வாறு கட்டளையிடுவார். ஆதலாலும் சொற்களைக் காட்டிலும் மிக வலிமை வாய்ந்த வேறு முறைகளைச் சில வேளைகளில் பயன்படுத்துவார் ஆதலாலும், வண்டிக்காரன் பாதுகாப்பின் பொருட்டுத் தலையைத் தோள்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, சாட்டையை வீசி, அம்புப் பாய்ச்சலில் குதிரைகளை விரட்டினான். ஆறே நிமிடங்களுக்குச் சற்றுக் கூடுதலான நேரத்திற்குள் முக்கிய நபர் தம் வீட்டுவாயில் போய்ச் சேர்ந்தார்.
வெளிறி, அரண்டு போய், மேல்கோட்டு இன்றி, கரோலினா இவானொவ்னாவிடம் செல்வதற்குப் பதில் தன் வீடு சேர்ந்து, எப்படியோ தட்டுத் தடுமாறி அறைக்குப் போனவர், இரவு முழுவதையும் நிம்மதியில்லாமல் கழித்தார். மறுநாள் காலையுணவு நேரத்தில் அவருடைய புதல்வி, “உங்கள் முகம் இன்று ஏனப்பா ஒரேயடியாக வெளுத்துப் போயிருக்கிறது?” என்று பச்சையாகவே கேட்டு விட்டாள். அவரோ, பேசாவாயராய், முந்திய நாள் தனக்கு என்ன நேர்ந்தது, தான் போயிருந்தது எங்கே, செல்ல விரும்பியது எங்கே என்பதையெல்லாம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறாமல் கம்மென்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சி அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்தது. இப்போதெல்லாம் அவர் தமது கீழ்நிலை ஊழியர்களிடம், “எப்படி ஐயா உமக்குத் துணிச்சல் வந்தது? யாரிடம் பேசுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு?” என்று சொல்வது அரிதாகவே தான். அப்படியே சொன்னாலுங்கூட விஷயம் என்ன என்று எதிராளி விளக்கிய பின்பே.
இதைவிட வியப்பளிக்கும் சேதி என்னவென்றால் எழுத்தனின் பேய் நடமாடுவது அத்துடன் முற்றிலும் நின்று போயிற்று என்பதுதான். ஜெனரலின் மேல்கோட்டு அதற்கு நன்கு இசைந்துவிட்டது போலும்; குறைந்தபட்சம் இதற்குப் பின் யாருடைய மேல்கோட்டும் பறிக்கப்பட்டதாகப் புகார் வரவில்லை. ஆம், துருதுருவென்று வம்புக்கு அலையும் சில உற்சாகப் பேர்வழிகள் மட்டும் நகரின் வெளிப்புறப் பகுதிகளில் எழுத்தனின் பேயினுடைய நடமாட்டம் இன்னும் இருந்து வருவதாகச் சாதித்தார்கள்.
உண்மையில் கலோம்னாவைச் சேர்ந்த போலீஸ்காரன் ஒருவன் அந்தப் பேய் ஒரு வீட்டின் பின்பக்கத்திலிருந்து வருவதைத் தன் கண்களாலேயே கண்டான்; ஆனால் அவன் பலவீனமான உடலினன் (ஒரு தடவை வீட்டுக்குள்ளிருந்து பாய்ந்து வந்த சாதாரணப் பன்றிக் குட்டியொன்று அவனைக் காலை வாரி விழத் தட்டிவிட்டது; சுற்றிலும் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர்கள் அதைப் பார்த்து வாய்விட்டுக் கெக்கலி கொட்டி நகைக்கவே அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரைக் கோப்பெக் அபராதம் – பொடி வாங்கும் பொருட்டு – விதித்தான்). ஆதலால் பேயைத் தடுத்து நிறுத்தத் துணியாமல், இருளில் அதைத் தொடர்ந்து சென்றான். கடைசியில் பேய் திரும்பிப் பார்த்து, சட்டென நின்று, “உனக்கு என்ன கேட்கிறது?” என்று வினவி, உயிருள்ளவர்களிடம் பார்க்கவே முடியாத அளவு பெரிய முட்டியைக் காட்டியது. போலீஸ்காரன், “ஒன்றுமில்லை” எனச் சொல்லிவிட்டு அக்கணமே திரும்பி நடையைக் கட்டினான். ஆனால் இந்தப் பேய் மிக மிக அதிக உயரமாக இருந்ததாம், அடர் மீசை வைத்திருந்ததாம்; ஒபுகோவ் பாலத்தின் பக்கமாகப் போய் இரவின் இருளில் மறைந்துவிட்டதாம்.
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவின் பாடலுக்கு ஏற்ப ஆடி வரும் நடனங்கள் நேயர்களுக்கு பெரும் கேளிக்கையாய் அமைந்துள்ளன. பாஜகவின் “ஆடுறா ராமா ஆடுறா” என்கிற கீர்த்தனையும், அதன் கையில் இருக்கும் வருமான வரித்துறை என்கிற குச்சியும் ரஜினியை ஆட்டுவிக்கும் அழகைப் பார்த்தால் குரங்காட்டிகளே பொறாமையில் வெந்து தான் போக வேண்டும். அனைத்து அசிங்கங்களும் ஆசன வாயில் ஊற்றெடுத்து மலத்தொட்டியில் சங்கமிக்கும் என்கிற இமயமலை பாபாவின் தத்துவத்திற்கேற்ப இதுவும் துக்ளக் விழாவில் இருந்தே துவங்கியது.
ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் – சீதை சிலைகளை அம்மணக்கட்டையாக தூக்கி வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்றும், செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனது என்றும் பேசினார். இந்த செய்தியை அப்போது எந்த பத்திரிகையும் பிரசுரிக்காத நிலையில் துக்ளக் சோ அட்டைப் படத்திலேயே தைரியமாக வெளியிட்டாராம். அப்போது நடந்த திமுக அரசு பத்திரிகையை கைப்பற்றியதாம். அந்த இதழ் மீண்டும் அச்சடிக்கப்பட்டு “பிளாக்கில்” விற்றதாம்.
துக்ளக் விழாவில் ரஜினி. (கோப்புப் படம்)
ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து இந்த விசயத்தில் நடந்த உண்மைகள் என்னவென்பதை பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் சொல்லத் தொடங்கினர். உண்மையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் புராணப் புளுகுகளை தோலுரிக்கும் வகையில் படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது சுமார் முப்பது பேர் கொண்ட ஜனசங்கிகள் (பாஜகவின் பழைய முக்காடின் பெயர்) கும்பல் ஒன்று பெரியாரை நோக்கி செருப்பை எறிந்துள்ளனர். அதில் ஒன்று ராமன் படத்தின் மீதும் விழுந்துள்ளது. ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ராமன் படத்தை அடித்து வந்துள்ளனர். இதை பின்னர் பெரியாரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் – அதன் ஒலிப்பதிவையும் பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், எந்தக் குடிகாரனும் குடித்து விட்டு பெண்டாட்டியைத் தான் அடிப்பானே தவிற போலீசை அடிக்கப் போக மாட்டான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குடிகாரனின் கோட்டிக்காரத்தனத்தில் ஒரு காரியம் இருக்கும்; ரஜினிகாந்த் அடிப்படையிலேயே எச்சில் கையில் காக்காய் ஓட்டாத கஞ்சப் பிசினாறி என்பதும் காரியவாதி என்பதும் திரையுலகம் அறிந்த உண்மைகள்.
என்றால் எந்தக் காரியத்திற்காக ரஜினி இப்படி பேசியிருப்பார்? அதை பின்னர் பார்க்கலாம், இப்போது ரஜினியின் பேச்சு உண்டாக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.
ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து ராமனை தமிழக அரசியலின் நிகழ்ச்சி நிரலில் ஏற்ற பகீரதப் பிரயத்தனம் செய்தனர் பாஜகவினர். இராமனை இழிவு படுத்தி ஐம்பதாண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து, பெரியாரைக் கண்டிக்க(!) அதே சேலத்தில், இராமன் செருப்பாலடிக்கப்பட்ட அதே இடத்தில் பேரணி ஒன்றை நடத்துவதாக அறிவித்தனர் இந்துத்துவவாதிகள். சொன்னபடி ஊர்வலமும் நடந்தது. சுமார் நாற்பது பேர் அந்த ‘பேரணி’யில் கலந்து கொண்டனர். ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.
போகட்டும். ஆனால், நம் சமூக வலைத்தளவாசிகள் வால்மீகி ராமாயண புத்தகத்தின் பக்கங்களுக்குள் பதுங்கிக் கிடந்த உண்மையான ராமனை கழுத்தில் துண்டைப் போட்டு மூத்திரச் சந்துக்கு இழுத்து வந்தனர். ராமன் ஒரு குடிகாரன் என்பதில் துவங்கி, அவன் பெண்டாட்டியை சந்தேகப்பட்டது, சம்பூகனை சதித்தனமாக கொன்றது வரை அலசி ஆராய்ந்தனர். சிலர் ராமனோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவனது அப்பன் தசரதனின் ஆண்மைக் குறைவு வரை பிரச்சினையை எடுத்துச் சென்று ராமனின் பிறப்பையே சந்தேகத்துக்குரியதாக்கி விட்டனர்.
இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுத ஆசைதான். ஆனால், பதிவு அடல்ட்ஸ் ஒன்லியாக மாறும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறோம்.
***
இதற்கிடையே துக்ளக்கில் தான் படித்ததாக சொன்னதற்கு ஆதாரத்தை “இந்து குழுமத்தை” சேர்ந்த அவுட்லுக்கில் கண்டுபிடித்த ரஜினி தரப்பு வழக்கம் போல் ஒரு தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது; அந்த அவுட்லுக் பத்திரிகையின் கட்டுரையை எழுதியவரே தான் கேள்விப்பட்டதை எழுதியதாகவும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என பின்னர் அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்தது போன்ற கூத்துகளும் நடந்து முடிந்தது. இதற்கிடையே துக்ளக் சோவே அப்போது (1971) நீதிமன்றத்தில் தனது “ராமன் கட்டுரைக்காக” மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பியது குறித்த தகவல்களும் வெளியானது.
சரி இப்போது காரியத்திற்கு வருவோம்.
2002 – 2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையாக வருமான வரியை சரியாகச் செலுத்தாதற்கு 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த, முன்பே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஆஜராஜ வருமான வரித்துறை வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை எனவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஒரு படத்திற்கு நூறு கோடிக்கும் மேல் வெள்ளையிலும், அதற்கும் மேல் கருப்பிலும் வாங்கும் ரஜினி வெறும் 66 லட்சம் ரூபாய்க்கு தன்னை நாக்பூர் சேட்டுக் கடையில் அடகு வைத்துக் கொள்வாரா? அந்தளவுக்கு அவர் பிசினாறித்தனம் கொண்டவரா என தமிழக மக்கள் வியந்து போனார்கள். சிவாஜி படத்தில் மூடப்பட்ட ‘ஆபீஸ் ரூமின்’ கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்த கருப்புப் பண முதலைகளில் ரஜினியும் ஒருவர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேக்கப் போட்ட ரஜினி கதாபாத்திரத்தை விட்டு மேக்கப் போடாத ரஜினியை கும்மாங்குத்தாக குத்த விட்ட இயக்குனர் சங்கருக்கு ஆஸ்கர் என்ன நோபல் பரிசே கொடுக்கலாம்.
ஆனால், மக்களை அதற்கு மேலும் வியப்பிலாழ்த்தும் தகவல்கள் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன. அதாவது, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் தான் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினருக்கு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சுமார் 2.63 கோடி ரூபாயை 18 சதவீத வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாகவும் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன.
ஆக விசயம் இதுதான் : வருமான வரித்துறையின் பழைய வழக்கில் இருந்து தப்பிக்கவும் புதிய வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் தன்னை இந்துத்துவ பாசிஸ்டுகளிடம் வாடகைக்கு விட்டுள்ளார் ரஜினிகாந்த். காசு வாங்கிக் கொண்டு உடலை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்கள் “விபச்சார அழகிகள்” என்பது தினத்தந்தி அகராதியின் விளக்கம்; இப்படி வழக்குக்காக தன்னையே வாடகைக்கு விடுவதற்கு அதே அகராதியில் வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா எனத் தேட வேண்டும்.
ஆனால், ரஜினிகாந்த் ஒரே குத்தில் இமயமலையை நிலாவுக்கு இடம் மாற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் என்பதை பரங்கிமலை ஜோதியில் படித்து பட்டம் பெற்ற ரஜினி ரசிகர்கள் உறுதி செய்து துண்டைப் போட்டுத் தாண்டுகிறார்கள். வயதான, அப்பாவி சுகர் பேசண்டுகள் பொய் பேச மாட்டார்கள் என்பதால் நாமும் அதை நம்புகிறோம். எனவே ரஜினி பயந்து கொண்டு மட்டும் தன்னை வாடகைக்கு விட்டிருக்க மாட்டார். ஒரு சுயவிருப்பத்தில் இருந்தே அப்படிச் செய்திருக்க வேண்டும்.
***
தான் சொந்த முறையிலேயே ஒரு சங்கி என்பதை ரஜினி தனது சமீபத்திய தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறிய ரஜினி, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும் என்றும் அன்பாக மிரட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட மூத்திரச் சந்தில் நின்று கூவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அப்படி இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்படி தான் பேசிய பின்னும் மத்திய அரசு மூஞ்சியில் அடிப்பது போல் அறிவிப்பதற்கு எதிராக ரஜினி கொந்தளிக்கவில்லை; ஏனெனில், மான ரோசம் பார்ப்பதன் விலை 66 லட்சம் என்பதை அறிந்தவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
முசுலீம்களுக்கு ஆபத்தென்றால் முதல் ஆளாக வருவேன் என்று ரஜினி பேட்டியளித்த அன்று மாலை நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், திரு கெய்க்வாட்டின் சொந்த ஊரான பெங்களூரில் பங்களாதேஷிகள் என வாட்சப்பில் பரப்பப்பட்ட வதந்தியை அரசே நம்பி இந்திய முசுலீம்களின் 300 வீடுகளை அரசே பொக்லைன் இயந்திரம் வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய போது எங்கே போனார் என்று கேள்வி எழுப்பினார் ஆளூர் ஷாநவாஸ்.
அப்போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் இசுலாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சொந்த நாட்டிலேயே திறந்த வெளிச் சிறைக்கூடமாக ஒரு மாநிலமே மாற்றப்பட்டு கோடிக்கணக்கான காஷ்மீரி முசுலீம்கள் (இந்தியர்கள்) வதைக்கப்பட்ட போதும் என்ன செய்தார் ரஜினி என பொதுமக்கள் “சும்மா கிழிக்கின்றனர்”.
ரஜினிகாந்த் ஒரு பசுத்தோல் போர்த்திய கழுதைப்புலி என்கின்றனர் சிலர். அது உண்மையல்ல. தன் நெற்றியில் “பசு” என எழுதி வைத்துக் கொண்டு அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் கூட்டத்திற்குள் நுழைந்த கிழட்டு நரிதான் ரஜினி.
ரஜினியின் நரை முடியில் தொங்கிக் கொண்டு நுழையப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.
அந்தளவுக்கு ரஜினி முட்டாளா என்று கேட்காதீர்கள். நாக்பூர் சேட்டுகள் அந்தளவுக்கு அறிவாளிகள்.
ரஜினியின் ஆட்டம் இந்த ஒரு தேர்தலோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். (சந்தேகம் இருப்பவர்கள் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு விழா மேடையில் பேசியதைக் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்) எனவே ரஜினி ஒரு குறுகிய கால திட்டம். ரஜினியின் அரசியல் நுழைவைக் கொண்டு இந்துத்துவத்தின் நீண்டகால நுழைவுக்கு ஆழம் பார்க்கிறார்கள்.
“குசு வரும் முன்னே, மலம் வரும் பின்னே” என்கிற பழமொழிக்கு ஏற்ப முதலில் ரஜினி, அவரைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் வருகை என்பதாக இருக்கும்.
மூக்கைப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய தயாராய் இருப்போம் மக்களே.
மலம் நாக்பூர் சேட்டுகளுக்கு சொந்தம் என்றாலும் இந்த ஊர் நமக்குச் சொந்தமல்லவா?
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadness of Geography. புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் நாவல் ஒன்றில் வரும் வரியை தலைப்பாக ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார். புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்கிடையில் அதன் ஆசிரியரைத் தேடி தொடர்பு கொண்டேன். ஓர் உணவகத்தில் சந்தித்தோம். முதல் ஐந்து நிமிடத்தில் நான் அவரிடம் கேட்ட கேள்வி ‘ஏன் நீங்கள் புத்தகத்தை தமிழில் எழுதவில்லை?’ அவர் திகைத்து விட்டார். ஒருவரும் அவரிடம் அப்படியான கேள்வியை கேட்டிருக்கமாட்டார்கள்.
அவர் சொன்னார், ‘நான் இங்கே ஆங்கிலத்தில்தான் படித்தேன். ஆங்கிலத்தில்தான் சிந்தித்தேன். ஆகவே அந்த மொழியில் எழுதினேன்.’
‘நீங்கள் கனடாவுக்கு வந்தபோது உங்கள் வயது 19. தமிழிலேயே படித்திருந்தபடியால் உங்களுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. எப்படி இது சாத்தியமாயிற்று?’
அவர் சொன்னார், ‘என்ன செய்வது? 32 வருடங்கள் தமிழ் பேசவும் இல்லை. படிக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. மறந்துவிட்டது, அதுதான் ஆங்கிலத்தில் எழுதினேன்.’
நூலை எழுதிய ஆசிரியருடைய பெயர் லோகதாசன் தர்மதுரை. வசதிக்காக இனிமேல் அவரை தாசன் என்றே அழைப்போம். அவர் எழுதிய புத்தகத்தின் பெயரை சிலர் ‘நிலவியலின் துயரம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ ‘நிலங்களின் துயரம்’ பொருத்தமானது போலத் தோன்றுகிறது.
இது நாவல் இல்லை; சுயசரிதையும் இல்லை. ஒருவரின் வாழ்க்கை குறிப்புகள் என்று வைத்துக்கொள்ளலாம். யுத்தகாலத்தில் ஓர் இளைஞன் யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டு பல நாடுகளில் அலைந்து, அல்லலுற்று இறுதியாக 16 மாதங்களுக்கு பின்னர் கனடா போய்ச் சேரும் கதை. இதில் கற்பனை கிடையாது. உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு. ஒரு யுத்த காலகட்டத்தை அப்படியே பதிவு செய்திருப்பதால் இதை ஒரு காலத்தின் வரலாறாகவும் பார்க்கலாம்.
இலங்கையில் போர் நடந்தபோதும், அது முடிந்த பின்னரும் பலர் ஆங்கிலத்திலும், தமிழிலும் போர் இலக்கியங்கள் படைத்தனர். சிலதை போராளிகளே எழுதினார்கள். சில நூல்கள் புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டன. ஆசிரியர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியை நினைவுக் குறிப்புகளாக பதிந்துள்ளார். இவருடைய பதின்ம வயதில் நடந்த சம்பவத்துடன் கதை தொடங்குகிறது. அவருடைய படிப்பு, போரினால் ஏற்பட்ட இன்னல்கள், வெளிநாட்டுப் பயணங்களில் சந்தித்த அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள் என கதை விரிந்து கனடா போய் சேர்வதுடன் முடிவுக்கு வருகிறது.
கனடாவில் தாசன் 32 வருடங்கள் வாழ்ந்தாலும் அவரால் பழைய வாழ்க்கையை மறக்கமுடியவில்லை. ராணுவம் சித்திரவதை செய்கிறது, சிறையில் அவதிப்படுகிறார், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். இப்படி கொடூரமான கனவுகள் தினம் அவரை துன்புறுத்தின. இறுதியில் பழைய ஞாபகங்களை எழுதுவதன் மூலம் இந்த இம்சையை கடக்கலாம் என முடிவு செய்கிறார். ஏதோ உந்துதலில் ஒரு வருடம் முழுவதும் வேலையை துறந்து வீட்டிலே உட்கார்ந்து நூலை எழுதி முடிக்கிறார். இவர் நாள் குறிப்பு எழுதுகிறவர் அல்ல. அபாரமான ஞாபக சக்தி உள்ளவர் என்பதால் அவரால் ஒவ்வொரு சிறு தகவலையும் மீட்க முடிகிறது. ஒரு சம்பவத்தை குறைத்தோ, கூட்டியோ, மறைத்தோ சொல்லவில்லை. வாசகர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் உள்ளதை உள்ளபடியே எழுதியதுதான் என்று நினைக்கிறேன்.
இந்த நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியதை ஆசிரியரிடம் கேட்டேன். ‘ஆங்கிலம் தெரியாமல் தனி ஆளாகப் படித்து, நாள்கூலியாக வேலை பார்த்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் பாதியை வீட்டுக்கு அனுப்பி, பரீட்சையில் வெற்றி பெற்று, வேலையில் படிப்படியாக உயர்ந்து, இன்று 32 வருடங்கள் கடந்து Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிப்பது எத்தனை பெருமைக்குரிய விசயம். உங்களுடைய கனடா வாழ்க்கை அனுபவத்தை எழுதினால் பலர் பயன்பெற வாய்ப்புண்டு. இந்த நூலும் முழுமை பெறும். எழுதுவீர்களா?’ புன்னகை செய்தார். அதன் பொருள் என்ன? எழுதுவார் என்றுதான் நினைக்கிறேன்.
இந்நூலில் பல பகுதிகள் திகைப்பூட்டுவனவாகவும், இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்புவனவாகவும், நெஞ்சை துணுக்குற வைப்பனவாகவும் இருக்கின்றன. முழுநூலை இங்கே சொல்லப்போவதில்லை. ஒன்றிரண்டு இடங்களை சுவாரஸ்யம் கருதி சொல்லலாம் என நினைக்கிறேன்.
ஆரம்பமே திகிலுடன்தான் இருந்தது. அப்பொழுது தாசன் பதின்ம வயதுச் சிறுவன். அதிகாலை பெரும் கூக்குரல் கேட்டு சட்டென்று விழித்து திடீரென்று திசை தெரியாமல் ஒரு பக்கமாக ஓடுகிறான். ராணுவம் ஊரை சுற்றி வளைத்துவிட்டது. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. வயலில் அவன் உயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கும் நெற்கதிருக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறான். ராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்களும் ஆட்களை துரத்திப் பிடிக்கும் கூச்சலும், அதிகார கட்டளைகளும் கேட்கின்றன. ஒரு ஹெலிகொப்டர் இவனை நோக்கி மிகப் பதிவாக பறந்து வருகிறது. சேற்றுக்குள் போய் புதைந்து கொள்கிறான். இன்னொரு தடவை வட்டமடித்து வந்து ஹெலிகொப்டர் அவனை தேடிவிட்டு போகிறது. மாலையாகிறது. அன்று முழுக்க ஒன்றுமே உண்ணவில்லை, குடிக்கவும் இல்லை. இருட்டியதும் ராணுவம் போனபின்னர் வீட்டுக்கு திரும்புகிறான்,
மாதிரிப் படம்
ஒன்றிரண்டு சம்பவங்களை கடந்து போகவே முடியவில்லை. சிறுவனாயிருக்கும்போதே தாசனை பள்ளிக்கூட விடுதியில் பெற்றோர் சேர்த்துவிடுகிறார்கள். ஒரு முறை விடுமுறையை வீட்டிலே கழிப்பதற்காக தாசன் தனியாக விடுதியிலிருந்து புறப்படுகிறான். இவன் ஏறிய ரயில் வண்டியில் எதிர்பாராத விதமாக சிங்கள ராணுவக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். இவன் ஒதுங்கிப் போய் ஒரு மூலையில் அமர்ந்தான். ஒருத்தன் வந்து இவனை எதேச்சையாகத் இடிப்பதுபோல தொட்டான். இவன் உடல் சுருங்கி மறுபக்கம் திரும்பியது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் அதை அவமானமாக எடுத்துக்கொண்டான். ராணுவக்காரன் தன் கைகளை இவனுடைய கால் சட்டைக்குள் நுழைத்தான். அத்தனை ராணுவத்தினர் முன்னிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான். வெட்கம், கோபம், துயரம் ஆகிய உணர்ச்சிகள் மேலிட வீட்டுக்கு ஓடியவன் இந்த சம்பவம் பற்றி ஒருவருக்கும் மூச்சு விடவில்லை. முதன்முதலாக இந்தப் புத்தகத்தில் தான் அது பற்றி எழுதப்பட்டிருக்கிறது. வீட்டுக்குப் போனபின்னர் ஓர் எண்ணம் முளைவிட்டது. எப்படியும் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.
தாசனுடைய தகப்பன் நகைக்கடை உரிமையாளர். மிகப் பெரிய செல்வந்தர். கிராமத்திலே அவருக்குத்தான் முதல் மரியாதை. எந்தக் கடைக்குப் போய் என்ன பொருள் வாங்கினாலும் விலை கேட்கமாட்டார். கடைக்காரன் சொல்லும் விலைக்கு காசுத் தாள்களை நீட்டுவார். மீதிப்பணத்தை வாங்கமாட்டார்; வாங்கினால் அது கௌரவக் குறைச்சல் என்று நினைப்பவர். ஒருநாள் சிறுவன் தாசன் தரையில் படுத்திருக்கிறான். விடிந்துவிட்டது, யாரோ தரையை குனிந்து கூட்டும் சத்தம் கேட்டு விழிக்கிறான். ஓர் இளம் பெண் அவனை எழுப்பாமல் அவன் படுத்திருந்த இடத்தை சுற்றி விளக்குமாற்றால் கூட்டியபடி நகர்கிறாள். தாயாரிடம் ஓடிப்போய் யார் இது என்று சிறுவன் கேட்கிறான். தாயார் ‘நேற்று இரவு உன் அப்பா கூட்டி வந்தார்’ என்கிறார். சிறுவனுடைய இரண்டாவது அம்மா இப்படித்தான் அவனுக்கு அறிமுகமாகிறார். ‘ஏன் எனக்கு இன்னொரு அம்மா. ஒரு அம்மா போதுமே’ என்று சிறுவன் குழம்பிவிடுகிறான்.
இப்படி அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பல. தாசனின் அப்பாவுடைய நகைக்கடையில் வியாபாரம் நின்றுவிட்டது. போர் நடக்கும்போது யார் நகை வாங்க வருவார்கள்? வருமானம் இல்லை, கையில் காசு இல்லாததால் வீட்டில் எந்நேரமும் சண்டை. தாசனின் அப்பா காலை மாலை என்ற வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு வராததால் தாசன் அவரை தேடிப் போனான். பெரியம்மா முறையான ஒருவர் வீட்டில் அவனுடைய அப்பா குடிவெறியில் தரையில் கிடந்தார். அவரை தூக்கி வர முயன்றபோது கையை வீசி பலமாக முகத்தில் அடித்தார். தாசன் நிலைதடுமாறி நிலத்திலே விழுந்துவிட்டான். கிராமத்துப் பெரிய மனிதர் கிடந்த நிலையை பார்த்து தாசனுக்கு அவமானமாகப் போனது. பக்கத்தில் கிருமி நாசினி போத்தல் இருந்ததால் அதை எடுத்து அப்படியே குடித்துவிட்டான். மயங்கி கீழே விழும்போது அவன் சிந்தனை ‘அப்பாவுக்கு நல்ல பாடம் படிப்பித்துவிட்டேன்’ என்பதாகவே இருந்தது. உடனேயே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனதால் ஒருவாறு தாசன் உயிர் பிழைத்தான். இதன் பின்னர் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் பெரிய பிளவு ஏற்பட்டது.
தகப்பனைப் பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்றையும் தாசன் பதிவு செய்கிறார். தாசனுடைய அண்ணன் லண்டனிலிருந்து இந்தியா போயிருக்கும் செய்தி அவருடைய அப்பாவுக்கு கிடைக்கிறது. மகனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று தகப்பன் விருப்பப்படுகிறார். தாசன் அப்போது கனடாவில் இருக்கிறார். போர் மும்முரமாக நடந்த சமயம் என்றாலும் தகப்பன் இந்தியா போகவேண்டும் என அடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் ஒரு போராளிக்குழுவின் படகில் ஏறி இந்தியா போகிறார். அவருடைய கெட்ட காலம் இலங்கை கடல்படை படகை சுட்டு வீழ்த்துகிறது. தகப்பன் படு காயத்தோடு மன்னார் தீவு கடற்கரையில் அனாதரவாகக் கிடந்தபோது அந்த வழியால் போன பாதிரியார் ஒருவர் அவரை காப்பாற்றுகிறார்.
பயணத்தை மேலே தொடர்ந்து மகனைப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார் தகப்பன். இவருடைய கடைசி மகன் இவரை மறுபடியும் போராளிக் கப்பல் ஒன்றில் ஏற்றி அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் போய்ச் சேருகிறார். அங்கே உடல் நிலை மேலும் மோசமாகி தகப்பன் இறந்துவிடுகிறார். சிறுவன் உதவியில்லாமல் அந்நிய நாட்டில் தவித்துப்போகிறான். அவனிடம் பிணத்தை புதைக்கக்கூட காசு இல்லை. ஒரு காலத்தில் சாவகச்சேரியில் மிகப் பிரபலமான நகைக்கடையின் முதலாளியாக அறியப்பட்டவர் ராமேஸ்வரத்தில் அடையாளம் இல்லாத கிடங்கில் அனாதையாக அடக்கம் செய்யப்பட்டார்.
மாதிரிப் படம்
இங்கிலாந்திலிருந்து தாசன் புறப்பட்டு கனடாவின் மொன்ரியல் நகரத்தை அடைந்த சம்பவ வர்ணனை திகில் நிறைந்தது. இப்படியும் நடக்குமா என்று ஒவ்வொரு வரி படிக்கும்போதும் சந்தேகம் தோன்றிக்கொண்டே இருந்தது. பிரான்ஸ் நாட்டில் ஒரு கை மட்டுமே உள்ள தமிழர் ஒருவர் தாசனுக்கு கள்ள பாஸ்போர்ட் செய்து கொடுத்தார். களவாடிய பிரெஞ்சுக் கடவுச்சீட்டு ஒன்றில் பழைய படத்தை நீக்கிவிட்டு தாசனுடைய படத்தை கச்சிதமாகப் பொருத்தியிருந்தார். வித்தியாசம் ஒருவருமே கண்டுபிடிக்க முடியாது. அந்த பாஸ்போர்ட்டின் முடிவு தேதிக்கு இன்னும் 3 மாதம் மட்டுமே இருந்ததால் அது முடிவதற்கிடையில் எப்படியும் கனடா போய்ச் சேர்ந்துவிடவேண்டும். ஒரு அசட்டு துணிச்சலில் தாசன் மொன்ரியல் விமானச் சீட்டை வாங்கிவிட்டார். அவருடைய நண்பர் தாசனை ஹீத்ரோ விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பி பாராமல் போய்விட்டார். எல்லா பயணிகளும் போன பின்னர் கடைசி நேரத்தில் டிக்கட் கவுண்டருக்கு போய் டிக்கட்டை நீட்டினார். குடிவரவு அதிகாரிகள் அதிக நேரம் தன்னை விசாரிக்கமாட்டார்கள் என்று தாசன் கணக்குப் போட்டிருந்தார். டிக்கட் பெண் அவர் பெயரைக் கேட்டார். ’அந்தோனி பிரங்கோய்’ என்று சொன்னபோது தாசனுக்கே சிரிப்பு வந்தது. அவளுடைய கேள்விகளுக்கு பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலும் பதில் கூறினார். பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. இவரிடம் பிரான்ஸ் தேசத்து கடவுச்சீட்டு இருந்ததால் முழுக்க முழுக்க பிரெஞ்ச் பேசும் அதிகாரி வந்து இவரை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். முகத்தை கோபமாகவும், எரிச்சலாகவும், மன்றாட்டமாகவும் மாற்றி மாற்றி வைத்து உடைந்த பிரெஞ்சு மொழியில் தாசன் பதில் கூறினார். அதிகாரிக்கு திருப்தியில்லை. பிரெஞ்சு தூதரகத்தை அழைத்து கடவுச்சீட்டு நம்பரை கொடுத்து அது உண்மையான பாஸ்போர்ட்டா என்று விசாரித்தார். தாசனுக்கு நடுக்கம் பிடித்தது. ஏனென்றால் அது திருடிய பாஸ்போர்ட். திருட்டுக் கொடுத்தவன் முறைப்பாடு செய்திருப்பான். ஆகவே அவர் நேரே சிறைக்கு போவதற்கு தயாரானார். ஆனால் திருட்டுக் கொடுத்தவன் என்ன காரணமோ முறைப்பாடு செய்யாததால் தாசன் தப்பினார்.
எல்லா தடங்கல்களும் நீங்கிய நிலையில் விமானம் புறப்படத் தயாராக நின்ற வாசலுக்கு ஓட்டமாக ஓடிச்சென்று போர்டிங் அட்டையை நீட்டினார். அங்கேயும் ஒரு பெண் நின்றாள். நிதானமாக ‘உங்கள் பெயர் என்ன?’ என்று ஆரம்பித்தாள். இதற்கிடையில் விமானத்துக்குப் போகும் கதவை மூடிவிட்டார்கள். ‘பூட்டவேண்டாம், நான் இந்த விமானத்தை பிடிக்கவேண்டும்’ என்று தாசன் கத்தியும் பிரயோசனமில்லை. பதறியபடி நின்றதால் அவர் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது. பெண் அசரவில்லை. மிக அமைதியாக ‘நீங்கள் எதற்காக போகிறீர்கள்?’ ‘வேறு எதற்கு? நான் ஒரு சுற்றுலாப் பயணி.’ ‘மிக நல்லது. சுற்றுலா முடிந்த பின்னர் நீங்கள் திரும்புவதற்கான விமான டிக்கட்டை காட்டுங்கள்.’ தாசனிடம் திரும்புவதற்கான விமான டிக்கட் கிடையாது. பையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து லண்டன் திரும்புவதற்கான டிக்கட் ஒன்றை அங்கேயே வாங்கினார். பெண் தன் அதிகாரத்தை பாவித்து பூட்டிய கதவை திறந்தார். அரை மணிநேரம் தாமதமாக தாசன் விமானத்துக்குள் நுழைந்தபோது பயணிகளின் கண்கள் அவரை எரிப்பதுபோல பார்த்தன. இடப் பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நெஞ்சு படபடக்க நேரே போய் தன் ஆசனத்தில் அமர்ந்தார். விமானம் பறந்த முழுநேரமும் நெஞ்சு படபடப்பு அடங்கவே இல்லை.
மொன்ரியலில் விமானம் இறங்கியதும் பயணிகள் அவசரமாக வெளியேறினர். தாசன் பொறுமை காத்து கடைசி ஆளாக இறங்கி மெதுவாக நடந்தார். குடிவரவு அதிகாரியை நடுக்கத்துடன் அணுகி மனனம் செய்து வந்ததை சொன்னார். ‘நான் சிறீலங்காவை விட்டு வெளியேறிய தமிழன். கனடாவில் தஞ்சம் கோருகிறேன்.’ அதிகாரி வியப்புறவில்லை. ஒரு நிமிடம் கழித்து எழுந்து நின்று தாசனை அழைத்துப்போய் ஒரு சின்ன அறையில் உட்கார வைத்தார். ஒரு மேசை. இரண்டு நாற்காலிகள்; யன்னல்கூட இல்லை. சிறைதான் என்று தாசன் நினைத்தார். சிறிது நேரம் கழித்து ஓர் அலுவலர் உள்ளே நுழைந்தார். அவர் கையிலிருந்த தட்டத்தில் பலவிதமான உணவு வகைகளும், குளிர் பானமும் இருந்தன. உணவுத் தட்டை மேசையில் வைத்து ‘ ஐயா, கனடாவுக்கு நல்வரவு’ என்றார். தாசனுக்கு அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை உணர பல நிமிடங்கள் தேவைப்பட்டன.
வாழ்க்கை நினைவு நூல்கள் பல வந்திருக்கின்றன. இந்த நூல் அப்படி என்ன சிறப்பு பெற்றது? ரொறொன்ரோ பல்கலைக்கழக நூலகம் இதை ஆக விலைப்பட்ட நூல் (Best Seller) என்று அறிவித்திருக்கிறது. ஈழத்துப் போர் பின்னணியில் பல நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், சுயசரிதைகளாகவும் வெளியாகியுள்ளன. முன்னைநாள் போராளிகள், போரை நேரில் அனுபவித்தவர்கள், வெளிநாட்டில் இருந்து போரை அவதானித்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என எல்லோருமே எழுதியிருக்கிறார்கள். இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது. நூல் முழுக்க விறுவிறுப்புடன் நகர்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லை. செயற்கையான விவரிப்புகளோ, பூச்சுக்களோ கிடையாது. மொழிநடை வித்தை கிடையாது; உத்திகள் இல்லை. எளிமைதான் இதன் பலம். அடுத்து என்ன என்று மனம் துடிக்க சம்பவங்கள் தானாகவே நகர்கின்றன. இந்த நூல் ஒரு வரலாற்றை சொல்வதுடன் ஓர் இளைஞன் கொடியதில் இருந்து நல்லதை நோக்கி ஓடும் கதையை பதிவு செய்கிறது.
ரொறொன்ரோவில் அரசு அனுமதித்த ஆகக் குறைந்த கூலி ஒருவருக்கு மணித்தியாலத்துக்கு 14 டொலர். ஒருவர் ஆறுமாதம் ஓய்வெடுத்து ஒரு புத்தகத்தை எழுதிமுடித்தால் அந்தப் புத்தகத்தின் பெறுமதி ஏறக்குறைய 17,000 டொலர்களாக இருக்கும். இந்தக் கணக்கின்படி தாசன் ஒருவருட காலம் ஓய்வெடுத்து புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். இவர் Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகித்தவர். இவருடைய ஒரு வருட உழைப்பு 100,000 டொலர்கள் என்று பார்த்தால் இந்தப் புத்தகத்தின் உண்மையான பெறுமதி ஒரு லட்சம் டொலர்கள். கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது. ஆனால் வாசித்து முடிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு! அதற்கு விலையே இல்லை.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு : இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தேர்வாணைய மோசடிகள் லட்சக்கணக்கான இளைஞர்களின் வருங்காலக் கனவை சிதைத்துள்ளன. 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என அரை வயிற்று உணவுடன் கோவில்களிலும், நூலகங்களிலும் முழுநேரமாகப் படித்து பெரும் கனவுகளுடன் TNPSC தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் வாழ்க்கையை இருள் கவ்வச் செய்திருக்கின்றன, அதிகாரவர்க்க, அரசியல்வாதிகள் உள்ளடக்கிய ஒரு கும்பல் !
இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !