- அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!!
- நீட் தேர்வு ரத்து செய்!!
- கல்லூரி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்!!
என்ற முழக்கங்களை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 04.09.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவி அவர்கள் தலைமை ஏற்றார்.
அதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் திலீபன் செந்தில் அவர்கள் பேசுகையில் “ஜனநாயகம் சமூக நீதியை அழித்து குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குலக்கல்வியை நடைமுறை படுத்தக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை அமுல் படுத்துகிறார்கள். நீதிமன்றம் திறக்காத சூழலில் கல்லூரியை திறந்து தேர்வை மட்டும் நடத்துவது எப்படி சரியாக அமையும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்தோடு “பெருந்தொற்று காலகட்டத்தில் இப்படி தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது இந்த நாட்டிற்கே எதிரியாகி உள்ள இந்துத்துவா- பாஜக கும்பலை, ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து விரட்டும் நாள் எந்நாளோ அதுவே விடுதலை நாள்!” என்று தனது கண்டன உரையை பதிவு செய்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் ராஜ்குமார் பேசுகையில் நீட், JEE தேர்வுகள் ஒத்தி வைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தவுடன் நீட் தற்கொலைகள் தொடர்கதையாகிறது மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது இது அனைத்திற்கும் என்ன செய்வது என்று கேட்கும் பட்சத்தில் மோடி ‘பொம்மைகள்’ குறித்து ஆங்கிலத்தில் பேசி வருகிறார், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.
கட்டணத்தை கட்ட சொல்லி அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக மிரட்டுகிறது. இது அநீதியானது அத்தோடு, இதற்குமுன் தேர்வு மறுகூட்டல் முறைகேடு நடந்துள்ளது. இது அனைத்தும் இந்த கல்வி கட்டமைப்பே எப்படி சிக்கலில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதனை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் துணைவேந்தர் நியமனம் அனைத்திலும் அரசின் கைக்கூலிகளை நியமிப்பது என்பது அபாயத்திற்கு உரியது. அத்தோடு பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அடித்தட்டு மாணவர்கள் எப்படி கல்வி கட்டணம் செலுத்த முடியும்? ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பயங்கரவாதிகளிடமிருந்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தலைமைக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கல்வியை மீட்டெடுக்க முடியும் என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் விஜயகுமார் பேசுகையில் “நீட் தேர்வு என்பதே ஏழை-எளிய மாணவர்களை மருத்துவ படிப்பில் இருந்து வெளியேற்றவும், CBSE பாடத்திட்டத்தை அனைத்து மாநிலத்திலும் அனைத்து மாணவர்களிடமும் பொதுத் தேர்வாக திணிக்கிறது. இதுவே அனிதாவின் இறப்புக்கு காரணம். திட்டமிட்டு கல்வியில் மாநில மொழியை அழிக்கிறது மத்திய அரசு. அதேபோல் வேலை இழப்பு, சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புவது என்று குலக் கல்வியை அமுல்படுத்துவதற்கு துடிக்கிறது. இதை அனைத்தையும் சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.” என்று வலியுறுத்தி கண்டன உரையை பதிவு செய்தார்.
படிக்க:
♦ நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
♦ கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி
அதனைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த் அவர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் அதில் “நீட் தேர்வின் தொடர் தற்கொலைகள், அத்தோடு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண கொள்ளை மாணவர்களை மிரட்டும் வகையில் உள்ளதை கண்டித்தும், இதற்கு முன்னதாக மறுகூட்டலில் நடந்த முறைகேடு பற்றியும் அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர்கள் மீதான நிலைப்பாடு என்ன..” என்பதை அம்பலப்படுத்தி பேட்டி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் RSS-னுடைய நீண்டகாலத் திட்டமான குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவர்களின் இந்துத்துவ கொள்கையை அமல்படுத்துவது, தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பொதுத்தேர்வு.. அதனூடாக விளைகின்ற தற்கொலைகள், இன்று கல்வி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் விளைவாக இந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டணக் கொள்ளையை தான் பார்க்கவேண்டும் என்றும், ஆன்லைன் கல்வி ஆண்ட்ராய்டு மொபைல், போன்ற பிரச்சனைகள் மாணவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தம், இந்த ஒட்டுமொத்த நெருக்கடி சூழலையும் அம்பலப்படுத்தி அத்தோடு இதை எதிர்த்து கேள்வி கேட்கின்ற அறிவுஜீவிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் தனது கண்டன உரையைப் பதிவு செய்தார்.
இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த், ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய தோழர்கள், தோழமை அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றி முடித்தார்.
தகவல் :
மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.
***
நீட் தேர்வை ரத்து செய் ! என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு 4 தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
கரூரில் எமது அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தோம். கரூரில் ஊரடங்கு காலகட்டத்திலும் பிற அமைப்புகளுக்கு “ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் வழக்குப் போடுவோம்..!” என காவல்துறை பிற அமைப்புகளை ஆர்ப்பாட்டங்கள் நடத்த விடுகிறார்கள்.
ஆனால் தொடர்ச்சியாகவே எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கொடுப்பது கிடையாது. குறிப்பாக சென்ற ஆண்டு நவம்பர் 7 அன்று நமது அமைப்பு தாந்தோணி மலையில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு அனுமதி மறுத்து “திண்டுக்கல் மெயின் ரோடு என்பதாலும், நகராட்சி அலுவலகம் உள்ளது என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்…” என்று சொல்லிக்கொண்டு அனுமதி மறுத்தது.
ஆனால் ஒரு சில நாட்களிலேயே அதே இடத்தில் அதிமுகவுக்கு கொடிக்கம்பம் வைத்து பெரிய அளவில் எம்ஜிஆருக்கு மேடை போட்டு மைக்செட் வைத்து கூட்டம் நடத்தினார்கள் அதே இடத்தில் பல்வேறு கட்சிகள் கொடிக்கம்பம் வைத்துள்ளார்கள். இது எமது அமைப்பை ஒடுக்கும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை. எங்கு கூட்டம் நடத்த வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேச கூடாது, என்பதை தாந்தோணி மலை காவல் நிலையம் தான் முடிவு செய்வார்களாம் இதுதான் ஜனநாயகமா? இதனை கண்டித்து நேற்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 9 மாணவர்கள் முற்றுகையிட்டனர் !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அங்கேயும் உள்ளே செல்ல கூடாது, வாயிலேயே மனுவைக் கொடுத்து விட்டு செல்லுங்கள், என்று வரம்பு மீறி அதிகாரம் நீண்டது இரண்டு பேர் மட்டும் தான் செல்ல வேண்டும், முழக்கம் போடக்கூடாது என்று அடுக்கடுக்காக அடக்குமுறை செலுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை, கலெக்டர் பார்க்க அனுமதி இல்லை ரோட்டில் நிற்க நடக்க கூட அனுமதி இல்லையா?,என்று காவல்துறையை எதிர்த்து நின்று போராடி உள்ளே சென்று துணை ஆட்சியரிடம், மனு கொடுத்தோம்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாது! கட்டணத்தை உயர்த்தக்கூடாது!
என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நமது போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க காவல்துறை சொல்லும் காரணம், “நீங்கள் தனியான கண்காணிப்புக்குள் இருக்கக்கூடிய குழுக்கள்…” இதனால் உங்களுக்கு அனுமதி கிடையாது என்பதுதான்.
பாசிசம் நம்மைச் சூழும் போது அவ நம்பிக்கை நம்மை சூழும் போது அதையெல்லாம் கிழித்துக்கொண்டு, பற்றவைக்கும் நெருப்பாக என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த தயாராக இருக்கும் அவர்கள் எங்கு அனுமதி மறுத்தார்கள் அங்கேயே துளிர்விட்டு முளைப்போம்…
தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர்.



“பொருளாதாரவாதிகள்” என அழைக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் “விமரிசன சுதந்திரத்தை”க் கோரியும், லெனினுடையவை “குறுகிய அரசியல் பார்வை” எனத் தாக்கியும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். லெனின், அவர்கள் கோருகின்ற “விமரிசன சுதந்திரம்” உண்மையில் மார்க்சியத்திற்கு பதில் முதலாளித்துவக் கருத்துக்களைத் தழுவுவதற்கு வேண்டும் சுதந்திரம் என்பதையும், முதலாளித்துவ வாதிகளுடன் சமரசத்திற்கான பாதையைத் திறந்துவிடும் என்பதையும் காட்டுகிறார். 




அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வது அவருக்கு ஒரு அகத் தேவையாக, அங்ககத் தேவையாக இருந்தது; தற்சிந்தனையும் உயிர்க்களையும் நிறைந்த அவருடைய ஆளுமையை எடுத்துக் கூறக் கூடிய தர்க்கரீதியான வழியாக இருந்தது. ரிக்கார்டோ அடக்கமான பண்புகளைக் கொண்டவர்; அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத்தில் தன்னுடைய ஈடுபாடு பொழுது போக்கானதே என்று வாழ்நாள் முழுவதும் கருதினார். ஆனால் இந்தப் பொழுது போக்குவாதிதான் இங்கிலாந்தின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் படைக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.
மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.
ஆனால் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின் முழுமையே வழிகாட்டும் தத்துவமாகவும், பாட்டாளி வர்க்கத்தின் போரில், போர்த்தந்திர வரையறுப்பாகவும் அமைகின்றது.
இப்பகுதியின் கடலையொட்டிய நீர்ப்பாதையை வரையறுப்பதில் அப்போதையைப் பிரிட்டிஷ் காலனிய ஆளுகைக்குட்பட்ட சிந்து மாகாணத்துக்கும், பிரிட்டிஷ் காலனியாட்சிக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த கட்ச் மன்னராட்சிக்கும் இடையே தாவா ஏற்பட்டது. 1914-ஆம் ஆண்டில் சிந்து மாகாண அரசாங்கம், கட்ச் அரசர் ராவ் மகராஜ்-உடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் 9,10-வது அம்சங்களின்படி இப்பகுதிகள் மொத்தமும் பாகிஸ்தானுக்கே சொந்தமானது என்று பாகிஸ்தான் அரசு வாதிடுகிறது. ஆனால், 1908-இலிருந்து பிரிட்டிஷ் காலனியாட்சியின் கீழ் இருந்த சிந்து மாகாணத்துக்கும் கட்ச் அரசருக்கும் இடையே தாவா எழுந்தபோது, அன்றைய காலனிய பம்பாய் மாகாண நிர்வாகத்தின் கீழ்தான் இவ்விரு பகுதிகளும் இருந்துள்ளன. சிந்து மாகாணம் 1936-இல்தான் பம்பாய் மாகாணத்திலிருந்து தனியாகப் பிரிட்டிஷாரால் பிரிக்கப்பட்டது. எனவே, சிந்து மாகாணம் கட்ச் அரசருடன் 1914-இல் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்று இந்தியா வாதிடுகிறது.
பாகிஸ்தான், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு விசுவாசமான நாடுதான். இந்தியாவின் பிராந்திய மேலாத்திக்கத்தின் கீழுள்ள நாடுதான். இருப்பினும், அமெரிக்க வல்லரசுக்கும் சீனாவுக்குமிடையே நிலவும் பனிப்போர்ச் சூழலில், சீனாவுடன் பொருளாதாரக் கூட்டுக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, அரசியல் ரீதியில் இந்தியாவின் மேலாதிக்கத் திமிரை எதிர்க்க முனைந்துள்ளது. அந்நாடு, இப்போது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிச் சவடால் அடிக்கிறது. இந்தியா மீது தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு எமது நாடு பொறுப்பல்ல என்று இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது.
தாராளவாதத்தை, ஏதோ முழுநிறைவான ஒன்று என்றும் பகுக்கப்பட முடியாதது என்றும் கருதக்கூடாது. இது வெவ்வேறு முதலாளித்துவ தட்டுகளின் தேவைகளுக்குப் பொருந்தும்படி பல்வேறு போக்குளாக உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக அது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் ! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன் வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

பின்னர் இந்திய அரசின் ஏற்பாட்டின்படி, இந்த இடைக்கால அரசானது, ஜுனாகத் சமஸ்தானப் பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றிக் கொண்டு, சில இடங்களில் சூறையாடல் வன்முறைகளையும் ஏவியது. இத்தகைய அராஜகங்களைத் தடுத்து நிறுத்த நேரு அரசு முன்வரவேண்டும் என்று அப்போதைய பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும், இந்த இடைக்கால அரசுக்கு இந்திய அரசு எவ்வகையிலும் உதவிகள் செய்யவில்லை என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நேரு அரசு கூசாமல் புளுகியது.
பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே, இந்திய ஆளும் வர்க்கங்கள் அகண்ட பாரதக் கனவுடன், தெற்காசியாவில் ஏகாதிபத்திய விசுவாச துணை வல்லரசாக வளர்வது என்ற நோக்கத்துடன்தான் செயல்பட்டன. 1940-களிலிருந்தே பிரிட்டனுடன் சேர்ந்து காஷ்மீர், நேபாளம், பூடான், சிக்கிம், வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களைத் தமது பாரம்பரிய உரிமையாகக் காட்டி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் அகண்ட பாரத நோக்கத்துடன்தான் இயங்கின. 1947-க்குப் பின்னர், கம்யூனிச எதிர்ப்பும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்குத் தொண்டூழியம் செய்து தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக, புதிய இந்திய அரசினுடைய வெளியுறவுக் கொள்கை அமைந்தது. அதிகார மாற்றத்திற்குப் பின்னர், இந்தியாவில் பல்வேறு சமஸ்தானங்கள் எவ்வாறு நைச்சியமாகவும், அச்சுறுத்தியும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனவோ, அதேபோலத்தான் ஜுனாகத் சமஸ்தானமும் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது.


