வீதிக்கு வாங்க ரஜினி
முதல் ஆளாக இல்லாவிட்டாலும்
கடைசி ஆளாகவாவது.
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்
கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்
தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்
ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன
இன்னும் நீங்கள்
அமைதியாக இருப்பது நல்லதல்ல
வீதிக்கு வாங்க ரஜினி
வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது
வீதிக்கு வாங்க ரஜினி
கதவைத்திற காற்றுவரட்டும்
என்றார் நித்தி
நீங்கள் ‘ கேட்’டைத்திறங்கள்
‘மைக்’குகள் ‘ கேட்’ டிற்கு வெளியே
உங்களுக்காக தவமிருக்கின்றன
இஸ்லாமியர்களுக்கு
நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல
நூறு அடிகள் விழுந்துவிட்டன
இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?
வீதிக்கு வாங்க ரஜினி
போராட்டக்காரர்களிடையே
சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்
என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?
அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?
ஆனால் அதை இந்த முறை
எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்
ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி
போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்
குல்லாபோட்ட தீவிரவாதிகள்
முக்காடிட்ட தீவிரவாதிகள்
வீதிக்கு வாங்க ரஜினி
நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக்காண
எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே
உங்கள் துடிப்பும்
இந்த வயதிலும் மாறாமல்
அப்படியேதான் இருக்கிறது
எதையாவது பேசுங்கள்
அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை
இன்னொருமுறை கழுவுங்கள்
நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை
விற்பவர் என்பதையும்
உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்
விற்றுக்கொள்பவர் என்பதையும
இன்னொருமுறை உலகிற்கு காட்டுங்கள்
வீதிக்கு வாங்க ரஜினி
வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
வீதியில்தான் நீதி இருக்கிறது
வீதியில்தான் அன்பு இருக்கிறது
வீதியில்தான் சத்தியம் இருக்கிறது
சிலவற்றைப் படித்து முடித்தவுடன் அவற்றைப்பற்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிராமல் இருக்க முடிவதில்லை. அப்படியொரு நுால் சிவா சின்னப்பொடி அவர்களின் நினைவழியா வடுக்கள்.
இதில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடந்தது மிகத் தொலைவான ஒரு காலத்திலல்ல. நாம் அறியாத ஓர் ஊரிலல்ல. நாகரிகமும் அறிவும் வளர்ந்ததாகவும் சொல்லி, பண்பும் கலாசாரமும் எனப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் சனங்களிடம் இருந்த அயோக்கியத்தனங்களை – அழுக்குகளை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.
1962-ம் ஆண்டு. எட்டு வயதான சிறுவன் தான் பள்ளிக்கூடம் போன நாளை நினைவுக்குக் கொண்டு வருவதோடு தொடங்குகிறது நினைவழியா வடுக்கள். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திரப்பாரம்பரியமும் அதையொட்டிய சாதியக் கட்டமைப்பும்… என்று முதற்பக்கத்திலேயே ஆரம்பமாகிறது இந்தத் தன்வரலாறு.
சாதியவெறி செய்த கொடுமைகள் ஒரு சிறுவனாக மனதைப் பாதித்தவை – அதை எதிர்கொண்ட துணிச்சல் என சிறுவயதின் சில ஆண்டுகளின் நினைவுப்பதிவு தான் இப்புத்தகம். அந்தச் சில ஆண்டுகளில் பட்ட துன்பங்களும் போராட்டங்களும் இன்றும் அவர் மனதை ரணப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தின் மந்திகை என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சாதி காரணமாக நிலத்தில் இருத்தப்பட்டுத்தான் படிக்கவேண்டியிருந்தது. புதிய சீருடைகளையணிந்து தான் நிலத்தில் இருத்தப்பட்டால் அழுக்காகக்கூடாது என கீழே விரித்து அமர்வதற்காக, வீட்டில் தந்தை படிக்க வாங்கிய நாளிதழான வீரகேசரியின் ஒரு பக்கத்தை தன் கையில் எடுத்துச்செல்கிறார். அதையும் அனுமதிக்க முடியாத கதிர்காமன் என்ற வாத்தியார் வாழைமட்டையால் அடித்துக் கறைபிடிக்கச் செய்ததை இவ்வாறாக எழுதியிருக்கிறார்…
‘நீங்களே ஊத்தையன்கள். நிலத்தில இருந்தா உங்கடை கால்சட்டை ஊத்தையாப்போயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம் தான்ரா ஊத்தையாப் போகுது’ என்றவர் விறுவிறென்று வெளியே போய் பாடசாலைக் கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடலொன்றை வெட்டிக்கொண்டு வந்தார். அந்த வாழைத்தடலால் எனது உடம்பில் பத்துப்பதினைந்து சாத்தல்கள் விழுந்த பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது’
அவர்களது உடைகள் அழுக்காக வேண்டுமென்று பள்ளிக்கூடப் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்ய வைக்கப்படுகின்றனர். ஏன் இப்படி என அச்சிறுவன் தனக்குள் பல கேள்விகளைக் கேட்கிறான். பதில் சாதி… பள்ளிக்கூடத்தில் சமமாக இருந்து படிக்கமுடியாது.
தண்ணீர் அள்ள முடியாது. சக மாணவர்கள் சாதிப்பெயர் சொல்லி ஏளனம் செய்வது என ஒரு குழந்தையைக் கூட வதைத்த சாதி, பெரியவர்களை என்ன செய்திருக்கும்?
இணுவில் உணவகமொன்றில் தந்தையாருடன் மேசையில் உணவருந்திய காரணத்தால் தந்தைக்கு விழுந்த அடிகளும் ஆடையவிழ்ப்பும் நாள் முழுதும் விறகு கொத்துவதுமாகத் தண்டனை கிடைக்கிறது. அதை உடனிருந்து பார்த்ததுமின்றி நீரின்றி உணவின்றி அந்த விறகுகளை இச்சிறுவன் ஓடியோடி அடுக்கவும் வேண்டும். இதைப் போல பல சம்பவங்களை வெள்ளாள ஆதிக்கசாதியின் வெறித்தனத்தை எதிர்கொண்ட சம்பவங்கள். சுயதொழிலும் பொருளாதாரமும் நிலமும் கொண்டவராக வாழ்ந்தாலும் சாதி என்பது அடங்கிப் போகச் சொல்கிறது.
தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி. பொருளாதார ரீதியாகவும் சொந்தக்காலில் நின்ற போதும் சாதி என்பது காரணமாக கோயிலில் நுழையவோ பொதுக்கிணற்றில் நீரள்ளவோ படிக்கவோ கல்வீடு கட்டவோ மேலாடை- காலணி- புதிய ஆடைகளை உடுத்தவோ கூடாது என மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் நடக்கிறது. சாதிய மனிதர்கள் எவ்வளவு குரூரமானவர்கள்!
தந்தையாரின் பெயர் தான் சின்னப்பொடியன். பிறப்புச் சான்றில் பெயர்களை எழுதுவதும் திட்டமிட்ட வகை. அதைப்போல சாதி என்ற இடத்தில் 1957-ல் பாராளுமன்றத்தில் சமூகக்குறைபாடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு அது இனம் என மாற்றப்படுகிறது. அப்போது இலங்கைத் தமிழர் எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆனால் சாதியப்படியைப் பொறுத்து இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ், இலங்கைத் தமிழன் என்று வேறுபடுத்தி எழுதி வித்தியாசப்படுத்தியதும் நடந்தது. பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இவ்வாறான இழிவுகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
நினைவழியா வடுக்கள் நூலின் ஆசிரியர் சிவா சின்னப்பொடி விடியல் பதிப்பக அரங்கில். (படம் : அவரது முகநூல் பக்கத்தில் இருந்து)
பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையாவின் தீண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளும் சமூக முன்னேற்ற வேலைகளும் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது இவர் போன்றவர்களை எமக்கு ஏன் யாரும் சொல்லித்தரவில்லை என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்நுாலாசிரியர் மூன்று மாதங்கள் பயின்ற திண்ணைப் பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர் கந்தமுருகேசனார் கற்பித்த முறையும் மிகுந்த ஈர்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. முதல் நாள் அழுத சிறுவனை துாக்கி மடியில் வைத்த காரணத்தால் வெள்ளாளர்கள் அடுத்த நாள் தங்களது பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்பவில்லை. ஆனால் இவருக்கு அடுத்த நாளும் தனியாக இருத்தி வைத்துக் கற்பிக்கிறார். கந்த முருகேசனாரின் கேள்விகளும் அணுகுமுறைகளும் இயற்கையோடிணைந்த வாழ்வு முறையும் தொடர்ந்து ஏன் நம்மிடமில்லாமல் போனது? இவரைப் போன்றவர்கள் பற்றிப் பரவலாக எம் காலத்தில் அறியமுடியவில்லை. யாழ்ப்பாணத்துப் புலவர்களையும் சைவப் சமயப்பெருமைகளையும் படிப்பித்தது போல, சமுதாய மாற்றத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய பாடங்கள் வேண்டும். இக்கொடுமைகளும் போராட்டங்களும் இலக்கியத்தின் வழியாகவே வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
நினைவழியா வடுக்கள், அகாலம் (சி.புஷ்பராணி), தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் (யோகரட்ணம்) போன்ற புத்தகங்களும் கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களது எழுத்துகளுமாக வரலாறில் பதிவாகின்றன.
யாழ்ப்பாணச் சாதியடுக்கு முறைகள், 1961 லிருந்து 1964 வரை இங்கு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களும் அவற்றின் பலன்களும் எனப் பல சம்பவங்களும் அவை தொடர்பான பெயர்களுமென ஒரு பதிவாக இதுவொரு கவனிக்கப்படவேண்டிய புத்தகம். மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுடன்; சிவா சின்னப்பொடியவர்களது அவதானிப்பில் அப்போதைய அரசியல் நிலமைகள், மொழிப்போராட்டங்கள், இனக்கலவரம், பற்றிய விடயங்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதங்களோடு துணிச்சலாக நின்று சண்டை போடுவதும் போராடுவதும் கல்வியில் கவனங்கொள்வதுமான அதே வேளையில் மெதுமெதுவாகச் சில சட்டங்களும் வருகின்றன. ஆனாலும் அவை இன்றுவரை வெவ்வேறு வடிவங்களாக மறைந்து கிடக்கின்றன. தீண்டாமை என்பது வேறுவேறு வழிகளாக; தேர் இழுக்கவும் காணி-நிலங்கள் வாங்கவும் கல்யாணத்திற்குமாக… எனப் பல விதமாகவும் தொடர்கின்றது.
கம்யூனிஸ்ட் தோழர்களும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்களும் ஏற்படுத்திய மாற்றங்களும் பொன்.கந்தையா பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகளும் ஓரளவுக்குச் சாதியக் கொடுமைகளை ஒழித்ததைப் பதிவு செய்துள்ளார். ஆனாலும் உண்மையாகவே மக்கள் மனந்திருந்தினார்களா? சாதிய ஏற்றத்தாழ்வின் அநாகரிகம் பற்றிய பிரக்ஞையுடன் தான் தமிழீழப்போராட்டத்தைச் செய்தனரா? சாதிப்பெயர் சொன்னாலே பச்சை மட்டையடி என்ற பயம் இருந்ததேயொழிய மனதளவில் அது உள்ளே பதுங்கியிருந்தது. இல்லையென்றால் இப்போது இன்னும் அது இளையவர்களிடம் கூட எப்படி நிலை கொண்டிருக்கிறது? புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த நாடுகளிலும் ஃபேஸ்புக்கில் கூட சாதிப்பெயர் சொல்லித் திட்ட எப்படி முடிகிறது? கேள்விகளுக்கும் சுயவிசாரணைகளுக்கும் நினைவழியா வடுக்கள் போன்ற புத்தகங்கள் இன்னுமின்னும் வரவேண்டும்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எதிர்வரும் பிப்ரவரி 23 அன்று திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெறவிருக்கும் “அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் !
பா.ஜ.க ஐடி செல் தலைவரான அமித் மால்வியா. அவர் இந்துத்துவா கட்சியின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் என்பதால், அவரது தவறான கூற்றுக்கள் ஆபத்தான விளைவுகளைக் கொண்டுள்ளன. அவரால் பரப்பப்பட்ட 16 தவறான தகவல்கள் (பொய் செய்திகள்) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்…
***
ஜனவரி 15ம் தேதி, பாரதீய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை நடத்தும் அதிகாரி அமித் மால்வியா, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் டெல்லியின் ஷாகீன் பாக் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஆல்ட் நியூஸ் – நியூஸ் லாண்ட்ரி விசாரணையால் கண்டறியப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, ஷாகீன் பாக் கில் ஒரு முதியவர் உணவு உண்ணும் புகைப்படத்தை அமித் மால்வியா ட்வீட் செய்தார். “ஷாகீன் பாக் நகரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம்!” என்று அவர் கூறினார், அந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரூ.500 வழங்கப்படுவதாகவும், இலவச உணவு வழங்கப்படுவதாகவும் வதந்தியைப் பரப்பினார். அவரது ட்வீட் ஆதாரமற்றது. ஒரு போராட்டக்களத்தில் உணவு உண்பது ஒரு குற்றமா அல்லது தார்மீகரீதியில் சந்தேகத்திற்குரியதா என்ன?
ஷாகீன் பாக் பற்றி மட்டும் மால்வியா தவறான ட்வீட்டுகள் பதிவிடவில்லை. அவரது சமூக ஊடக பதிவுகளை ஆல்ட் நியூஸ் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.
தனிநபர்கள், சமூகங்கள், எதிர்க்கட்சிகள், தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியில் அவர் பலமுறை தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்துள்ளது. அவர் பா.ஜ.கவின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரபூர்வ தலைவராக இருப்பதால், மால்வியா பரப்புகின்ற தவறான தகவல்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவரது தவறான கூற்றுக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.கவின் ஆதரவாளர்களால் எதிரொலிக்கப்படுகின்றன, இது மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கிறது.ஸ்
CAA எதிர்ப்பாளர்கள் பற்றிய தவறான தகவல்கள்
லக்னோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர்:
Since this is a season of pulling out old videos, here is one from Lucknow where anti-CAA protestors can be seen raising ‘Pakistan Zindabad’ slogans… Damn! Someone needs to have a samvaad with them and ask them to carry tricolour and Bapu’s picture for the cameras next time… pic.twitter.com/Lvg7sj2G9Z
டிசம்பர் 28 ம் தேதி, லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட வீடியோவை ட்வீட் செய்ததோடு, அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என முழக்கமிட்டதாக கூறினார்.
இந்த கூற்று தவறானது என ஆல்ட் நியூஸ் கண்டறிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பவில்லை, மாறாக, “காஷிஃப் சாப் ஜிந்தாபாத்” என முழக்கமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிகாட்-உல்-முஸ்லிமின் கட்சியின் லக்னோ தலைவர் காஷிஃப் அகமதுவைக் குறிப்பிடுகிறார்கள். அக்கட்சியின் உத்தரபிரதேச தலைவர் ஹாஜி சவுக்கத் அலி ஆல்ட் நியூசிடம் கூறியபோது டிசம்பர் 13 அன்று மாநில தலைநகரில் காஷிஃப் அகமது ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்றார்.
AMU மாணவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர்:
AMU students are chanting ‘हिंदुओ की कब्र खुदेगी, AMU की धरती पर…’
Chaps at Jamia want ‘हिंदुओं से आज़ादी…’
If this is the mindset that pervades in these ‘minority’ institutions, imagine the plight of Hindus and other minorities in Pakistan, Bangladesh and Afghanistan… pic.twitter.com/VRNeOyhaHY
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முசுலீம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வீடியோ பரப்பப்பட்டது. டிசம்பர் 16 அன்று, வீடியோ கிளிப்பைப் பகிர்ந்தவர்களில் மால்வியாவும் ஒருவர்.
உண்மையில் மாணவர்கள் இந்துத்துவா, சாவர்க்கர், பா.ஜ.க, பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்துத்துவாவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், சாவர்க்கரின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பாஜகவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு கல்லறை AMU -வில் தோண்டப்படும் என முழக்கமிட்டுள்ளனர்.
CAA குறித்த பத்திரிக்கையாளரின் பேச்சு திரித்துக் கூறப்பட்டது:
The Islamists want CAA protests to be ‘inclusive’ only till the time you, the non Muslims, start accepting their religious identity, beliefs and supremacist slogans as gospel… Long live the dream of ‘Ghazwae-Hind’! pic.twitter.com/va564eghL8
“முசுலீமல்லாதவர்கள், முசுலீம்களின் மத அடையாளம், நம்பிக்கைகள் மற்றும் மேலாதிக்க முழக்கங்களை நற்செய்தியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் வரை CAA எதிர்ப்பு என்பது ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முசுலீம்கள் விரும்புவதாக அமித் மால்வியா ஜனவரி 26 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் தி வயர் தளத்தைத் சார்ந்த பத்திரிக்கையாளர் அர்பா கானும் ஆற்றிய உரை, கிளிப் செய்யப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை ஸ்தாபிப்பதை ஊக்குவித்து வருவதாகவும், அத்தகைய சமூகம் உருவாகும் வரை முசுலீமல்லாதவர்களுக்கு ஆதரவளிக்கும் பாசாங்கைப் பேணுமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்துவதாகவும் மால்வியா கூறினார்.
ஆனால் உண்மையில் கானும் இதற்கு முற்றிலும் நேர்மாறாக கூறினார், மத முழக்கங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இயக்கத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பேண வேண்டும் என்றும் அவர் எதிர்ப்பாளர்களை வலியுறுத்தினார்.
***
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய தவறான தகவல்கள்
நேருவை ஒழுக்கக்கேடானவராக சித்தரிக்க முயற்சி.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல பெண்களோடு இருக்கும் படங்களின் படத்தொகுப்பை நவம்பர் 2017ல் அமித் மால்வியா பகிர்ந்து கொண்டார். பெரும்பாலான புகைப்படங்கள் நேருவின் சகோதரி அல்லது மருமகளுடன் அல்லது ஜாக்குலின் கென்னடி போன்ற உலகநபர்களோடு இருக்கும் புகைப்படங்கள். மால்வியா பின்னர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் இது மற்றவர்கள் இப்படத் தொகுப்பைப் பகிர்வதைத் தடுக்கவில்லை.
மன்மோகன் சிங் குறித்த தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ
நவம்பர் 27, 2018 அன்று மன்மோகன் சிங் குறித்து ஒரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார், அதில் முன்னாள் பிரதம மந்திரி, “மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கங்கள் மிகச் சிறந்தவை” என்று சொல்வதைக் கேட்கலாம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மன்மோகன் சிங் பாராட்டு தெரிவிப்பதாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
Former Prime Minister Dr Manmohan Singh contradicts Rahul Gandhi, says governments of Madhya Pradesh and Chattisgarh were ‘very good’… Waters down everything Congress President has been saying over the last few days! pic.twitter.com/cLqCL0al7q
மன்மோகன்சிங் பேசிய வார்த்தைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் மால்வியா பகிர்ந்துள்ளார். சிங்கின் வார்த்தைகளின்படி, “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அரசாங்கத்துடனான எனது உறவுகள் நன்றாக இருந்தன. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நாங்கள் ஒரு போதும் பாகுபாடு காட்டவில்லை.” என்று அவர் பேசியுள்ளார்.
ராகுல் காந்தி சோம்நாத் கோயிலில் பதிவேட்டில் ‘இந்து அல்லாதவர்’ என்று கையெழுத்திட்டார்:
Ambassador Meera Shankar, UPA’s representative in US, had referred to Sonia Gandhi as a Christian leader. The reference was soon deleted. Now Rahul Gandhi declares he is a non-Hindu but their election affidavits claim that they are Hindus. Gandhis lying about their faith? pic.twitter.com/iFE4AhVnRM
நவம்பர் 2017ல் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, குஜராத்தின் சோம்நாத் கோவிலில் ‘இந்து அல்லாதவர்’ என்று பதிவேட்டில் கையெழுத்திட்டதாக மால்வியா கூறினார்.
இருப்பினும் கையெழுத்து பகுப்பாய்வு, பதிவேட்டில் உள்ள கையெழுத்து ராகுல் காந்தியின் பொதுவில் கிடைக்கக்கூடிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது.
உருளைக்கிழங்கு தங்க இயந்திரம்
அதே மாதத்தில் ராகுல் காந்தியின் வேறொரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். ஒரு உருளைக்கிழங்கு ஒரு முனையிலிருந்து செருகப்பட்டால், மறுமுனையில் தங்கம் வெளியே வரும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்படும் என ராகுல் கூறியதாக அந்த வீடியோவில் உள்ளது.
People are sending this to me and asking in disbelief if he actually said this.. Of course he did! pic.twitter.com/rgdTf26ARv
உண்மையில் நவம்பர் 12, 2017 அன்று குஜராத்தின் பதானில் ஒரு உரையின் போது ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துக் கொண்டிருந்த மிக நீண்ட உரையின் வீடியோ கிளிப் இது. இதன் முழுமையான வீடியோ கிளிப் காங்கிரசின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.
அதில் ராகுல் பேசும்போது, சில மாதங்களுக்கு முன்பு இங்கு வெள்ளம் வந்தபோது, மோடி ரூ.500 தருவேன் என்று அறிவித்தார், ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவர் உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் “ஒரு இயந்திரத்தை நிறுவுகிறேன், அதில் ஒரு முனையிலிருந்து உருளைக்கிழங்கு செருகப்பட்டால் மறுமுனையிலிருந்து தங்கம் வெளியே வரும் என்றார்”, இவை என் வார்த்தைகள் அல்ல, “நரேந்திர மோடியின் வார்த்தைகள்”.
ராகுல் காந்தி குர்மீத் ராம் ரஹிமின் தேரா சச்சா சவுதாவை பார்வையிட்டார்:
ஆகஸ்ட்2017ல், மால்வியா கூறுகையில், “ராகுல் காந்தி தேரா சச்சா சவுதாவிற்கு ஜனவரி 2017 வரை சென்று வந்தார்.” என்று குற்றம் சாட்டப்பட்டது.
மால்வியா வெளியிட்ட கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் முதலில் ஜனவரி 29, 2017 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி ஜலந்தரில் உள்ள தலித் சமூகத்தினரின் தேராசச் காண்ட் பல்லனைப் பார்வையிட்டார்.” என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது.
காந்தி தேரா சச்சா சவுதாவைப் பார்க்கவில்லை, தேரா சச் காண்ட் பல்லன் என்ற இடத்தைத் தான் பார்வையிட்டார், அதன் தலைவர் சாந்த் நிரஞ்சன் தாஸ், சர்ச்சைக்குரிய பாலியல் கொலை குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமைப் பார்க்கவில்லை என்பதே உண்மை.
***
தேர்தல் பிரச்சாரங்களின் போது தவறான தகவல்கள் பரப்புதல்
01.02.2019 டெல்லி தேர்தலுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்
டெல்லி மாநில தேர்தலுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவை ஜனவரி 31 அன்று மால்வியா ட்வீட் செய்துள்ளார். கெஜ்ரிவால் ‘ரோட் ஷோவில்’ ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இந்த சம்பவம் பொது தேர்தலுக்கு முன்னதாகவே நிகழ்ந்தது.
AAP workers indulge in brutality, lynch a man in Arvind Kejriwal’s road show, who remains a mute spectator, doesn’t intervene, goes around his program as if nothing is happening…
மால்வியா முழு படத்தையும் வெளியிடவில்லை. வீடியோவின் பிற கிளிப்புகளில் கெஜ்ரிவாலை ஒரு நபர் அறைந்தார், பின்னர் அவர் முதலமைச்சரின் ஆதரவாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். சமூக ஊடக கூற்றுகளின் படி அந்த மனிதன் கொலை செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
Arvind Kejriwal slapped by a man in west Delhi. Act caught on camera. The man, Suresh, was then assaulted by AAP volunteers.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்
2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் நடந்த கலவரம் குறித்து கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி மாணவர் ஒருவரின் பதிவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். அதில் வளாகத்தில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை அழிக்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரசை மாணவர் குற்றம் சாட்டியிருந்தார்.
First person account of a student from Vidyasagar College. Original post in Bangla and translation alongside. He recounts how TMC hooligans orchestrated vandalisation of Ishwar Chandra Vidyasagar’ bust inside the college for their petty politics. #SaveBengalSaveDemocracypic.twitter.com/OWA79RTjbw
வன்முறையின் காட்சிகளை ஆராய்ந்து அக்கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை விசாரித்த பின்னர் “மால்வியா பகிர்ந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என ஆல்ட் நியூஸ் ஒரு விசாரணை அறிக்கையை பின்னர் வெளியிட்டது.
2018 தெலுங்கானா தேர்தலுக்கு பிறகு தவறான தகவல்கள் பரப்புதல்
பா.ஜ.க -வுக்கு பின்னடைவு ஏற்பட்ட 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மால்வியா தரப்பில் “தெலுங்கானாவில் 7% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை பா.ஜ.க வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் வெறும் 2.7% வாக்குகளைப் பெற்று ஏழு இடங்களைப் பெற்றார்.” என ட்வீட் செய்யப்பட்டது.
In Telangana, AIMIM with just 2.7% vote share won 7 seats but BJP with 7% got just won. Let that sink in.
மால்வியா மேற்கோள் காட்டிய எண்கள் சரியானவை என்றாலும், அந்தக் கூற்று தவறானது. ஏனென்றால் வெறும் 8 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது AIMIM. மறுபுறம் மாநில சட்டசபையில் 119 இடங்களில் 118 இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் ஒரு இடம் மட்டுமே வென்றுள்ளது. பா.ஜ.கவுடன் ஒப்பிடும்போது AIMIM அதிக சதவீத வித்தியாசத்தில் வென்றுள்ளது. முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கின்றன.
***
மோடிக்கு ஆதரவான தகவல்கள் பரப்புதல்
கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் அரச தலைவர் மோடி
2019 ஜனவரி 24 ஆம் தேதி, நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கும்பமேளாவில் கங்கையில் நீராடினார். இது குறித்து உடனடியாக ட்வீட் செய்த மால்வியா, “இந்த ஆண்டில் கும்ப மேளாவிற்கு விஜயம் செய்த முதல் மாநிலத் தலைவர் மோடி” என்றார்.
இரண்டு வகையில் இக்கூற்று தவறானது, மோடி மாநிலத் தலைவர் அல்ல, அதே போல் கும்ப மேளாவைப் பார்வையிட்ட முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதே உண்மை.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் பணமதிப்பிழப்பை ஆதரித்தார்
2017ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் மோடியின் பணமதிப்பிழப்பை ஆதரித்தார் என மால்வியா ட்வீட் செய்தார்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தாலர் இது குறித்து கூறுகையில், “ஊழலை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்திற்காக பணமற்ற பரிவர்த்தனை என்பது சிறந்த வழி, ஆனால் 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியதால் இந்த நடவடிக்கையின் நோக்கத்தைக் குறித்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றே கூறியுள்ளார்.
யோகேந்திர யாதவ் குறித்த வீடியோ
ஏப்ரல் மாதத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் யோகேந்திர யாதவ் சாதி அரசியல் செய்வதாக மால்வியா குற்றம் சாட்டினார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் காட்டினால் தான் அரசியல் வாழ்விலிருந்தே விலகிவிடுவதாக யோகேந்திர யாதவ் கூறினார். பதிலடியாக, யோகேந்திர யாதவ் தனது முசுலீம் அடையாளத்தைக் கூறி முசுலீம் மக்கள் மத்தியில் பேசுகின்ற வீடியோவை மால்வியா பதிவிட்டார்.
4 things BJP's lie factory conceals:
1. Allegation by @amitmalviya to which I responded:in 2014 election I used Muslim name for votes
அந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் எப்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறீர்கள் என கேள்வியெழுப்பி இருந்தது. வாக்கு வங்கிக்காக தனது முசுலீம் அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக யோகேந்திர யாதவிற்கு வரும் ஆதரவைத் தடுக்கவே மால்வியா தேர்தல் பேரணியில் கூட வராத ஒரு வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.
காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும்.
ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும், மதமுமே முன் வந்து நிற்கிறது. அதிலும் இக்காலத்தில் சங்கிகளும், ‘திரௌபதியியர்களும்’ கங்கணம் கட்டிக் கொண்டி ‘நாடக காதல்’ கூத்தாடுவார்கள். ஆனாலும் கடற்கரையிலும், பூங்காக்களிலும் காதலர்கள் குவிவதை இவர்கள் யாராலும் தடுக்க இயலாது.
காதல் ஒரு மனித உணர்வு, அது முழுக்க முழுக்க தனிப்பட்ட அன்புணர்ச்சி என்பதெல்லாம் கதைகளிலும், புதினங்களிலும் மட்டுமே சாத்தியம். இன்றும் சரி என்றும் சரி காதல் இரு இதயங்களைத் தாண்டி சமூக நாடித்துடிப்புடன் சம்மந்தப்பட்டதே.
ஆணவக் கொலைகள் அரங்கேறும் இக்காலத்தில் “ஏன் காதல்?” என்று ஒரு பக்கத்திலும். ஆபாச நுகர்வு வெறி சதிராடும் இக்காலத்தில் “எது காதல்?” என்பது மறு புறமும் குத்தீட்டிகளாக நிற்கின்றன. இவற்றுக்கிடையில் காதல் குறித்த புரிதல்களை விவாதிக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். படியுங்கள்… காதலை பகிருங்கள்…
***
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி
காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா? …. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
***
காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
… தனது காதல்ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களைகாட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாகஇருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாகஇருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும்நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்தகாதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும்உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும்அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்குவழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?.. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
***
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
…… ‘முதல் காதல்’ கதைகளை பேசிக் ‘கொல்லும்’ பல ஆண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியான ‘முதல் காதல்’ அனுபவங்களை விதந்தோதும் ஒரு பெண்ணைக்கூட சந்திக்கவில்லை. பலருக்கு காதல் கைகூடாமல், வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தபோதும்கூட தங்கள் ‘முதல் காதலை’ தனிப்பட்ட பேச்சிலும்கூட நினைவு கூறியதில்லை. பெண்கள், ஆண்களைக்காட்டிலும் நிதர்சனத்தில் வாழ்கிறவர்களாக இருக்கலாம். அல்லது ஆண்களைப்போல தங்களுடைய காதல் பராக்கிரமங்களை சொல்லிக்கொள்ளும் ‘சுதந்திரம்’ பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண்கள் முதல் காதலை நினைப்பதால் உண்டாகும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலை அதற்கு இடம்கொடுக்காது. ஆனால், ஆண்கள் முதல் காதலைத் தொடர எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் சமூக வாழ்நிலையும் அவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது…முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
***
ஆதலினால் காதல் செய்வீர் !
காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.
பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
***
தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்…
…. லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.
காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
***
திரை விமர்சனம் : ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ?
எதார்த்தத்தில் “கலவி கொள்ளலாம் வா” என்று அழைக்கும் காதலனை மறுக்க முடியாத அளவுக்கு துணிவும், அதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு மகாபலிபுரம் கிளம்பும் அளவுக்கு தைரியமும் கொண்ட ஸ்வேதா ஆணுறையின் அவசியம் அறியாத அளவுக்கு அப்பாவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கதை நடப்பது எங்கோ குக்கிராமத்தில் அல்ல. கதையின் பின்னணியும் வயல்காடும் அல்ல, கதையின் நாயகி கொத்து வேலை செய்பவரும் அல்ல.
மேலும் படத்தில் காட்டப்படுவது போல கருக்கலைப்பு ஒன்றும் அவ்வளவு கடினமானதாக யதார்த்தத்தில் இல்லை. திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்யும் பெண்கள் பலர் இறந்து போகிறார்கள் என்ற அனுபவத்திற்கு பிறகு அரசே இப்போது கருக்கலைப்பை எளிதாக மாற்றியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் கூட பெரிய தடைகள் ஏதுமின்றி யாரும் கலைப்பு செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக உறவு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் கிடையாது என்று யாருடனும் உறவு வைக்கலாம் அளவுக்கு அரசு மாறியிருப்பது இயக்குநருக்கு தெரியாது போலும்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா!
உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா!
இவை அல்பேனியா பற்றி பெரும்பாலானோர் அறிந்திராத தகவல்கள். அந்த நாட்டில் எழுபது சதவீதமானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். குறைந்த பட்சம் பெயரளவிலாவது. ஐரோப்பாவில் பல நாடுகளில் மசூதிகள் இருந்த போதிலும், தொழுகை நேரம் ஒலிபெருக்கியில் குரான் ஓதி அழைப்பு விடுப்பதை அல்பேனியாவில் தான் கண்டேன். ஒவ்வொரு தடவையும் மசூதி ஒலிபெருக்கியின் ஊடாக காற்றில் தவழ்ந்து வரும் அரபி வசனங்களை கேட்கும் பொழுது மத்திய கிழக்கில் உள்ள அரபி- முஸ்லிம் நாடொன்றுக்கு வந்து விட்ட பிரமை உண்டாகிறது.
கவலைப்படாதீர்கள், இது ஐரோப்பா தான். நம்மைப் போலவே, பெரும்பாலான அல்பேனிய முஸ்லிம்களுக்கும் அரபி மொழி தெரியாது. அத்துடன் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு மசூதிக்கு விரையும் யாரையும் நான் காணவில்லை. பொது இடங்களில் எல்லோரும் தத்தமது வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர மதக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு மத நம்பிக்கை கொண்டவர்களை காண்பது அரிது.
அல்பேனியா குறைந்தது இரண்டு தசாப்த காலமாக உலகில் ஒரேயொரு நாத்திக நாடாக இருந்தது. கவனிக்கவும்: “ஒரேயொரு”. அதாவது உலகில் வேறெந்த நாட்டிலும் மதம் முற்றாகத் தடைசெய்யப் பட்டு, அனைத்து மத வழிபாட்டுஸ்தலங்களும் மூடப்படவில்லை. புரட்சி நடந்த காலங்கள் விதிவிலக்கு. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரையில் மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக உண்டான விளைவுகள் வேறு விடயம்.
ஒரு தேசத்தின் அரசாங்கமே அரசமைப்பு சட்டம் மூலம் மதங்களை தடைசெய்தமை அல்பேனியாவில் மட்டுமே நடந்துள்ளது. சீனாவின் கலாச்சாரப் புரட்சி பாணியில் அல்பேனிய இளைஞர்கள் தான் தீவிரமான நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு தாராளமாக சுதந்திரம் வழங்கப்பட்டது. தேவாலயங்கள், மசூதிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. சில இடித்து நொறுக்கப்பட்டன. எஞ்சியவை மியூசியம், ஹோட்டல், ரெஸ்டாரன்ட், இளைஞர் விடுதி, உள்ளரங்க விளையாட்டுத் திடல் என பொது மக்களின் கேளிக்கை நிலையங்களாக மாற்றப் பட்டன. குறிப்பிட்ட அளவு பாதிரிகள், இமாம்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.
தொண்ணூறுகளுக்கு பிறகு அல்பேனியாவில் மீண்டும் மதச் சுதந்திரம் உள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. இருப்பினும் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அதற்குக் காரணம், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பொருளாதார குறிக்கோள் மட்டுமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதற்குக் காரணம் “என்வர் ஹோஷாவின் சர்வாதிகாரமா அல்லது அல்பேனியர்களின் அலட்சியமா?” என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் மாறி விட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சமுதாயம் இன்று இல்லை. அது காலவோட்டத்தில் பல்வேறு கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டு விட்டது.
அல்பேனியா ஏன், எவ்வாறு உலகின் ஒரேயொரு நாத்திக நாடானது?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக அறுபதுகளில் குருஷேவின் சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொண்ட அல்பேனியா, மாவோவின் சீனாவை மட்டும் நட்பு நாடாக்கிக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் அல்பேனியாவில் எதிரொலித்தது. இரண்டாவது காரணம் அன்னை தெரேசா!
உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க பெண் துறவியான தெரேசா மாசிடோனியாவில் பிறந்தவர். ஆனால் அவரது சிறுவயதில் பெற்றோருடன் அல்பேனியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். தெரேசா கன்னியாஸ்திரியான பின்னர் இந்தியா சென்று தங்கிவிட்ட போதிலும், அவரது தாயாரும் பிற குடும்ப உறுப்பினர்களும் அல்பேனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தாயார் மரணப் படுக்கையில் இருந்த நேரம் தெரேசா விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்தக் காலத்தில் எந்த நாட்டுடனும் சேராமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த அல்பேனியா யாரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அதே போல யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருந்தன.) அதனால் தெரேசா அம்மையாருக்கும் உள்நுழையும் விசா கிடைக்கவில்லை, அவரது அம்மாவுக்கும் வெளியேற அனுமதி கொடுக்கவில்லை.
இருந்தாலும் தெரேசா விவகாரம் என்வர் ஹோஷாவின் கவனத்தை திசைதிருப்பியது. அதுவரை காலமும் தெரேசா என்றால் யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் ஒரு “மேற்குலக ஏகாதித்திய ஏவலாளி” என்று சந்தேகப் பட வைத்தது. பாரிசில் இருந்த அல்பேனிய தூதரகத்தில் தெரெசாவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதில் பிரெஞ்சு ஜனாதிபதியின் அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டது. அதனால், மேற்குலக ஏகாதிபத்தியம் தெரேசாவை பகடைக் காயாக பயன்படுத்தி அல்பேனிய உள்விவகாரங்களில் தலையிட முனைவதாக சந்தேகிக்க வைத்தது.
அன்னை தெரேசா விசா பிரச்சினையின் எதிர்விளைவாக புதிய அரசமைப்பு சட்டம் மூலம் “நாத்திக நாடு” பிரகடனப் படுத்தப் பட்டிருக்கலாம். (சில வருடங்களின் பின்னர் போப்பாண்டவராக தெரிவான போலிஷ்காரர் ஜோன் போல் மூலம் போலந்து கம்யூனிச ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது.) மதம் என்பது மக்களின் உணர்வுபூர்வமான விடயம் தான். அந்தக் காலத்திலும் பெரும்பாலான அல்பேனியர்கள் தீவிர மத நம்பிக்கையாளர்கள் தான். ஆனால், அல்பேனியாவில் குறைந்தது இருபது வருட காலமாவது மதத்தை மக்களிடம் இருந்து பிரித்து வைத்திருந்தமை மிகப் பெரிய சாதனை தான்.
அல்பேனியா ஒரு “முஸ்லிம் நாடு” தான். ஆனால், தற்கால அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக இஸ்ரேலுடனும் நட்புறவு பேணத் தயங்கவில்லை. ஜனவரி (2020) மாதம் நான் அல்பேனியா பயணம் சென்றிருந்த சமயம், ஒரு சர்வதேச இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டிருந்தது. திரானாவில் இருந்த ஈரானிய தூதுவரலாயம் மூடப்பட்டு அதன் தூதுவரும் ஊழியர்களும் நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தனர். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் விளைவு என்பது தெளிவானது.
அந்த சம்பவத்தை அடுத்து, அமெரிக்காவுக்கு விசுவாசமான அல்பேனிய அரசு, பிற உலக நாடுகள் எதுவும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்தது. ஈரானுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவான முஜாஹிதீன் கால்க் (MEK) இயக்கம் தளம் அமைப்பதற்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆயுதபாணிகளான மூவாயிரம் முஜாஹிதீன் போராளிகள் இரகசிய தளம் ஒன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் முன்பு ஈராக்கில் முகாமிட்டு இருந்தனர். பின்னர் ஈராக் அரசின் நெருக்குவாரம் காரணமாக வெளியேற்றப் பட்டனர்.
அல்பேனிய தேசிய இனம் மொழி அடிப்படையில் உருவானது. ஒரே மொழி (அதிலும் இரண்டு பிரிவுகள்) மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கிறது. அல்பேனியர்களை மத அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மை. ஆனால், கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்கள், (கிரேக்க) ஒர்தொடக்ஸ் என இரண்டாகப் பிரிந்துள்ளனர். துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு முன்னர் அனைத்து அல்பேனியர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் பதவிகள், வசதி வாய்ப்புகள், மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.
ஓட்டோமான் ஆட்சியாளர்கள் மொழியையோ அல்லது இனத்தையோ அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் அல்பேனியாவில் மூன்று இனப் பிரிவுகள் (உண்மையில் மதப் பிரிவுகள்) இருந்தன. துருக்கியர்கள், இலத்தீனியர்கள், கிரேக்கர்கள். உண்மையில் அங்கு மிகச் சிறுபான்மையான துருக்கி மொழி பேசுவோர் இருந்த போதிலும், இஸ்லாமியர் அனைவரும் “துருக்கியர்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையினர் இன்னமும் அங்கிருந்த போதிலும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவத்தை பின்பற்றிய எல்லோரும் “கிரேக்கர்கள்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கத்தோலிக்கர்கள் லத்தீனியர்கள் (அல்லது இத்தாலியர்?) என அழைக்கப் பட்டனர்.
மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தரவு ஓர் உண்மையை உரைக்கிறது. உண்மையில் இன்றுள்ள தேசிய இனங்கள் யாவும் கலப்பினங்கள் தான். அன்று மதத்தை மட்டும் முக்கியமாகக் கருதிய காலத்தில் இருந்து இன்று மொழியை முக்கியமாகக் கருதும் காலத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், ஒரே மொழி பேசும் அனைவரும் ஒரே இனம் எனும் கோட்பாடு சரியானதா? நிச்சயமாக இல்லை. அல்பேனியா சுதந்திரம் அடைந்த காலத்திலும் துருக்கியர் என்ற சிறுபான்மை இனம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் இனத்தால் துருக்கியர் அல்ல. ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் பட்டம், பதவிகளுக்கு ஆசைப்பட்டு, துருக்கி மொழியை தாய்மொழியாக ஆக்கிக் கொண்ட அல்பேனியர் ஏராளம் பேர் இருந்தனர். தற்காலத்தில் தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை முதன் மொழியாக கொண்டிருக்கவில்லையா? அது போலத் தான் இதுவும்.
பயணத்தின் போது நான் நேரில் கண்ட அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜீரோகாஸ்டர் மாவட்டம் தெற்குப் பகுதியில் கிரேக்க நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது. ஒரு காலத்தில் கிரீஸ் அதற்கு உரிமை கோரியிருந்தது. அங்கு கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் வசிப்பது உண்மை தான். கிரேக்கர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள். ஆனால் அந்த மத நம்பிக்கை கொண்ட அனைவரும் கிரேக்கர்கள் அல்ல. அல்பேனிய மொழி பேசும் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களும் உண்டு.
நான் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரு குடும்பம் நடத்தும் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி என்பதால் காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது மகன் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த படியால், அந்தப் பகுதி மக்களின் இனம், மதம் பற்றி விசாரித்தேன். அந்தக் குடும்பத்தினர் மதத்தால் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், மொழியால் அல்பேனியர்கள். கிரேக்க மொழி பேசும் மக்களும் அங்கு வாழ்கிறார்களாம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அல்பேனியாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக சிலர் கிரேக்க பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிரார்களாம். அதன் மூலம் ஐரோப்பாவுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.
அது சரி, கத்தோலிக்கர்கள் எவ்வாறு இத்தாலியர் (லத்தீனியர்) ஆவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கத்தோலிக்க மதத்தவர்கள் கரையோரப் பகுதிகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு டூரேஸ் (Durres) பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது தலைநகர் திரானாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பட்டினம். எனது பயணத்தின் கடைசி நாள் அங்கு தங்கியிருந்து தான் விமான நிலையத்திற்கு சென்றேன்.
நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, திரானா இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய நகரம். ஆனால் டூரேஸ் இரண்டாயிரம் வருடங்களாக நகரமாக இருந்து வருகின்றது! இன்றைக்கும் அங்கே ரோமர் காலத்தில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானம் (Amphitheatre) உள்ளது. பெருமளவு இடிபாடடைந்து விட்டாலும் அதன் வடிவம் மாறாமல் உள்ளது. அதற்கு எதிர்ப் புறத்தில் பைசாந்தின் கிரேக்கர்கள் (அவர்களும் தம்மை ரோமர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.) கட்டிய Forum எனும் சந்தை மைதானம் உள்ளது. ஒன்றிரண்டு தூண்களும் பளிங்குக்கல் தரையும் இன்னமும் அங்குள்ளன.
இன்னும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் கடற்கரைப் பக்கம் சென்று பாருங்கள். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வெனிஸ் நாட்டவர் கட்டிய காவற்கோபுரம் இன்னமும் உருக்குலையாமல் அங்கே உள்ளது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் இத்தாலி என்ற தேசம் இருக்கவில்லை. ஆனால், வெனிஸ் என்ற நாடு இருந்தது. அதனை பிற்காலத்திய ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் முன்னோடி எனலாம். மத்தியக் கடல் கரையோரத்தில் பல பகுதிகளில் வெனிஸ் வணிகக் காலனிகள் இருந்தன. ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர் அவை மறைந்து விட்டன. இருப்பினும் பல நூறு வருடங்களாக அங்கு வாழ்ந்த மக்கள் இத்தாலிய(வெனிஸ்) வம்சாவளியினராக அல்லது இத்தாலிய கலப்பாக இருக்கலாம் அல்லவா?
இன்றைய டூரேஸ் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கினர் இத்தாலியர் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அங்குள்ள ரெஸ்டாரன்ட் வணிகம் பெரும்பாலும் இத்தாலிய பயணிகளை குறிவைத்தே இயங்கி வருகின்றது. காணும் இடமெங்கும் பீட்சா கடைகள். உண்மையில் அங்கே மிகவும் மலிவான, தரமான பீட்சா உணவு கிடைக்கிறது. நான் அங்கு சென்றிருந்த நேரம் கடற்கரையில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. புதிதாக நடைபாதைகள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தன. கடற்கரை மணல் கூட இனிமேல் தான் கொண்டு வந்து தான் கொட்டுவார்கள் போலிருந்தது. அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் அல்ல. அநேகமாக கடற்கரையில் பொழுதுபோக்க வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர் தான்.
டூரேஸ் கடற்கரையோரமாக அல்பேனிய விடுதலைப்போர் தியாகிகளை நினைவுகூரும் சிலை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கட்டியது என்பது வடிவத்தை பார்த்தாலே தெரிகிறது. அல்பேனியாவை தற்போது கம்யூனிச விரோத அரசியல்வாதிகள் ஆண்டு வந்தாலும், இது போன்ற நினைவுச்சின்னங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். லெனின், ஸ்டாலின், ஹோஷா சிலைகள் ஏற்கனவே அகற்றப் பட்டு விட்டன. அதனால், தற்போது அந்நாட்டுக்கு செல்லும் யாருக்கும் முன்னொரு காலத்தில் அது ஒரு கம்யூனிச நாடாக இருந்தது என்ற எண்ணம் தோன்றாது. ஆனாலும், அல்பேனிய விடுதலைப் போரில் கம்யூனிசப் போராளிகளின் பங்களிப்பை யாராலும் அழிக்க முடியவில்லை.
1 of 9
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
(தொடரும்)
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
கடற்கரைவாசிகள் – (மெரினா பீச்சில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை அனுபவம்)
சென்னை மெரினா கடற்கரை, காலை 6 மணி.
கண்களை போர்த்திய பனிமூட்டம், மயிர்க்கால்கள் விரைத்திடும் குளிர். வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்தோரும் இளைஞர்களும் செல்லும் நீளமான நடைப்பயிற்சி சாலை. சாலை ஓரங்களை ஆக்கிரமித்து நின்ற கார்கள், இருசக்கர வாகனங்கள். இந்தச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத இன்னுமொரு காட்சியும் நம்மை வரவேற்றது. கக்கத்தில் கிழிந்த போர்வை, வெற்றுடம்பு, கலைந்த தலை, தூக்கக் கலக்கம். இவற்றுடன் மணற்போர்வையை விலக்கி வெளிவரும் மக்கள்.
யார் இவர்கள்?
அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்று ஆயிரம் கேள்விகளுடன் விடிந்த பொழுதை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள், பிழைப்பு தேடி சென்னைக்கு வருபவர்கள், ஆதரவற்றோர்.
அவர்களிடம் நெருங்கிப் போவதே கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. யாரும் நம்மை சக மனிதனாகப் பார்க்கவில்லை. அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நம்மை நோக்கி இறுகிய பார்வை. “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்ற உடல்மொழிக்கு மேல் அவர்களிடம் எதிர்வினை இல்லை. இருந்தாலும் சிலரிடம் அணுகினோம்.
பக்கிரி
தனது மகளை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ள இவர், பூம்பூம் மாட்டுத் தொழிலிருந்து விடுபட்டு, தற்போது ஸ்டவ் பழுது பார்க்கும் வேலையை செய்து வருகிறார்.
“எங்கள பூம் பூம் மாட்டுக்காரன்னு கிராமத்துல கூப்பிடுவாங்க. வேளாங்கன்னி பக்கம் ஊரு. எங்க தாத்தா, அப்பன் காலத்துல காளைகளை வளர்த்து, அதை அலங்கரிச்சு கிராமம் கிராமமா போயி வாசல்ல நின்னு கையேந்துவாங்க. நெல்லோ, அரிசியோ, பழஞ்சோறா மடியில் விழுந்ததை எடுத்து வந்தாங்க.
இந்தக் காலத்துல அந்தப் பொழப்பு சரிப்படுமா? இப்ப காளைய வளர்க்க முடியுமா? கிராமமும் முன்ன மாதிரி செழுமையாவா இருக்கு! வயிறுன்னு ஒன்னு இருக்குதே, ஆளுக்கொரு புதுத் தொழில புடிச்சிகிட்டோம்.
ஸ்டவ் ரிப்பேர், குடை ரிப்பேர், பிளாஸ்டிக் தொழிலுன்னு (குடம், வாளி விற்பனை) இப்ப தெருத்தெருவா அலையுறோம். வருஷத்துக்கு ரெண்டு வாட்டி மெட்ராஸ் பக்கம் வருவோம். பொங்கல், தீபாவளின்னு வந்தா ஒருமாசம் இங்கேயே தங்கி பொழப்பப் பார்ப்போம். இந்த பீச்சுதான் எங்களோட வீடு. வெட்டவெளிதான் படுக்கை. குளிரு, வெயிலு எல்லாம் பழகிப்போச்சு. கீழே மேலேன்னு உடம்ப பிளாஸ்டிக் சீட்டுனால மூடிக்குவோம். தூங்கியும் தூங்காமலும் பல நாளு போகும். காலை விடிஞ்சதும் வேலைக்கு கௌம்பிடுவோம்.
தெரு மேல போகும்போது சிலபேரு காசு கொடுப்பாங்க; அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க சோறு, பழந்துணிகூட கொடுப்பாங்க. பசியெடுத்தா வாய்விட்டு கேப்போம். இப்படித்தான் எங்க பொழப்பு பிளாட்பாரம், பீச்சுன்னு கழியுது. இப்பெல்லாம் ஊருக்கு திரும்பும்போது 5000 ரூபாகூட தேற மாட்டேங்குது. இப்போ வந்து 10 நாளாகுது. கையில 300 ரூபாகூட இல்ல. தினமும் சாப்பாட்டுக்கே 150, 200-ன்னு ஆகுது. பல நாளு அதுவும் இருக்காது.
முன்ன மாதிரி சுத்த முடியல. எங்கள பொறுத்தவரைக்கும் காலு எந்தளவுக்கு சுத்துதோ அந்தளவுக்குத்தான் சம்பாத்தியம்.”
***
சுரேஷ்
மோளம் அடிச்சி காசு கேக்குறது என்னோட வேலை. பெரும்பாலும் பங்களா பக்கம் தலைவைக்கவே மாட்டோம். பகல்ல நோட்டமிட்டு நைட்ல திருடுற கும்பலான்னு கேட்டு திட்டி அசிங்கப்படுத்துவாங்க.
“தரங்கம்பாடி பக்கம் பொறக்குடி ஊரு. நாங்க கழைக்கூத்தாடி. இப்ப கம்பி மேலே நடந்தா யாரும் வேடிக்க பார்க்குறதில்லே. பொங்கல் முடிஞ்சதும் சென்னைக்கு வருவோம். எங்கே சுத்துனாலும் இங்கே வந்து படுத்துப்போம். இந்த இடம்தான் பாதுகாப்பு. ஒரு பக்கம் கடலு, மறுபக்கம் மீனவருங்க. எங்கள யாரும் தொந்தரவு பன்றதில்லே. ரோடு ரோடா போயி மோளம் அடிச்சி காசு கேப்போம். சிலபேரு கொடுப்பாங்க, யாரையும் தொந்தரவு பண்ண மாட்டோம். பெரும்பாலும் பங்களா பக்கம் தலைவைக்கவே மாட்டோம். பகல்ல நோட்டமிட்டு நைட்ல திருடுற கும்பலான்னு கேட்டு திட்டி அசிங்கப்படுத்துவாங்க.
நல்ல நாள்ல சில பேரு காருல வந்து சோத்து பொட்டலம், பிஸ்கட், துணின்னு கொடுப்பாங்க.
வெயில் காலத்துல மெட்ராஸ்ல இருக்க மாட்டோம். குடிக்க தண்ணிகூட கெடைக்காது. இப்பல்லாம் கிராமத்துப் பக்கம்கூட போக முடியல, கொழந்தைங்கள கடத்த வந்தீங்களான்னு தொறத்துறாங்க. பயமா இருக்கு.”
ரோடு மேல போன வீட்டுக்காரரு வந்தாத்தான் சோறு. அதுவரை இப்படியே கெடக்க வேண்டியதுதான்.
“சொந்த ஊரு சீர்காழி. ஏன் எங்கள பத்தி கேக்குற, ஏதாவது பணம் கொடுக்க போறீயா?
காலையிலேர்ந்து டீகூட குடிக்கல. பைசா இருந்தா ஏதாவது கொடு. எனக்கு ஒரே மண்ட வலி. பசி வேற…” என நம்மைப் பார்த்து நட்பாக சிரித்தார்.
“நீ சம்பாதிக்கிறத பேங்குல போட்டுடுறீயா?” என்று சீண்டினோம்.
“உடம்பு ஒரே காய்ச்சல், நடக்கக்கூட முடியல. ரோடு மேல போன வீட்டுக்காரரு வந்தாத்தான் சோறு. குழந்தைங்க இதுவரை எதுவும் சாப்பிடல. பையன் ஊருல எட்டாவது படிக்கிறான். அவனும் என்கூட வந்துட்டான். ஆனா, ரோட்டுக்குப் போகலாம் என்கூட வாடான்னா (பிச்சை எடுக்க), வரமாட்டேன்னு அடம்புடிச்சு அழுறான்” என்றார்.
நாம் பையனிடம், “மெட்ராஸ் பிடிச்சிருக்கா?” என்றோம்,
புடிச்சிருக்கு என்று தலையை ஆட்டினான்.
“பெரியவனானதும் என்ன செய்யப் போகிறாய்?” என்றோம்.
“பிளாஸ்டிக் வியாபாரத்துக்கு போவேன்” என்று மகிழ்ச்சி பொங்கினான்.
எட்டாவது படிக்கும் இந்தச் சிறுவனின் ஒரே ஆசை, பிளாஸ்டிக் கடை வைப்பதுதான். அவனுக்கு தெரிந்த கவுரவமான ஒரே தொழில் அதுதான்.
“ஏன் அம்மாகூட தெருவுக்கு போகமாட்டியா?” என்றதும் அவனது முகம் வாடியது; அந்தச் சிறுவனின் கண்களில் ததும்பிய நீர்த்திவளைகள் பீச்சிட்ட குண்டுகளாய் எமது நெஞ்சை உலுக்கியது.
***
சங்கீதா
சிறுவர்களின் குடை ராட்டினத்தின் அருகில் இரண்டு கைக்குழந்தகளுடன் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். “ஏம்மா” என்று குரல் கொடுத்த நம்மைப் பார்த்து மெல்ல எழுந்தார்.
அவர் மேலும், கீழும் நம்மைப் பார்த்து எடைபோட்டு “நீங்கள் யார்?” என்றார்.
அவர் அனுமதியுடன் மணலில் உட்கார்ந்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
வீட்டுல சமைச்சு சாப்பிட ஆசையா இருக்கு. எறாத் தொக்கு, மீன் குழம்புன்னு எல்லாம் வப்பேன்…. இங்கே என்னதான் செய்ய முடியும்?
“எனக்கு சொந்த ஊரு மாயவரம். கோயம்பேடு மேட்டுக்குப்பத்தில் சொந்தக்காரங்க இருக்குறாங்க. நாங்க பொலுவா (அம்மி குத்துதல்) வேலை செய்யிறவுங்க. வேலையில ஒருத்தர்கிட்டே நேசமாகி அவரை கல்யாணம் கட்டிக்கொண்டேன். என் கணவரோட சேர்ந்து பட்டினம்பாக்கம் பிளாட்பாரத்திற்கு வந்தேன். அங்கே பக்கத்தில் இருந்தவங்க சரியில்லை. அதனால, பீச்சுக்கு வந்துட்டோம். இதுதான் எங்களுக்கு வீடு, படுக்கை எல்லாமும்” என்றார்.
குழந்தைகள் வெற்றுடம்புடன் மூக்கில் ஒழுகியபடி மணலில் சோர்ந்து கிடந்தனர். நம் அருகில் வந்து தோளோடு தோள் சாய்ந்து ஒட்டிக்கொண்டனர்.
“ரெண்டாவது குழந்தை பொறக்குற வரைக்கும் முதல் குழந்தைய இடுப்புல சுமந்து தெருத்தெருவா அலைஞ்சேன். இப்போ ரெண்டு குழந்தைங்குறதுனால வெளிய போறது சிரமமாயிருக்கு.
எங்க வீட்டுக்காரரு ரோட்டோரமா காத்துகிடந்து, கெடச்ச வேலைய செய்வாரு. பெயின்ட் அடிக்கிறது, கொத்தனாரு, கல்யாண வேலை, கிளீனரு… இப்படி எதாவதொரு வேலைக்குப் போயி சம்பாதிச்சு வருவாரு. அந்த வேலைக்கும் இப்ப மேஸ்திரிங்க வந்துட்டாங்களாம். நேரடியா யாரும் கூப்பிடுறதில்லேன்னு கஷ்டப்படுறாரு. எனக்கும் வேலை இல்லை, காலையிலேருந்து குழந்தைகளுக்கு ஒன்னுகூட வாங்கிக் கொடுக்க முடியல” என்றார்.
“இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வீங்க?” என்றோம்.
தொடர்ந்தார், “அவசரத்துக்கு பக்கத்துல இருக்குற கக்கூசத்தான் நம்பியிருக்கோம். நான் குளிச்சு மூனு நாளாகுது. உடம்ப சுத்தம் பண்ணக்கூட முடியாது. குளிக்கணும், துணி துவைக்கனுமுன்னா, இங்கேயிருந்து ட்ரெயின் ஏறி வேளச்சேரி ஏரிப்பக்கம் போவோம். இப்போ, குழந்தைங்களயும் தூக்கிக்கிட்டு அலையவேண்டி இருக்கு.
முந்தானையில முடிச்சு போட்டுத்தான் நைட்ல தூங்க வைக்க வேண்டியிருக்கு. இங்கே குழந்தைங்க திருட்டு வேற அதிகம். அந்த பயத்தால ராவுல சரியாக்கூட தூங்குறதில்லை. அதான் பகல்ல கண்ணசந்துட்டேன். சொந்தக்காரங்ககிட்டே போகணுமுன்னாலும் அங்கேயும் பிளாட்பாரம்தான். என்ன பண்றது, சொந்தமா ஒரு வாடகை வீடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! வீட்டு சோறு சாப்பிட ஆசையா இருக்கு. எறாத் தொக்கு, மீன் குழம்புன்னு எல்லா குழம்பும் நல்லா வப்பேன்…. இங்கே என்னதான் செய்ய முடியும்?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார். வேதனையின் வெளிப்பாடாய் அந்தச் சிரிப்பு நமது நெஞ்சை இன்னமும் குத்திக்கொண்டே இருக்கிறது.
***
கனகவள்ளி
கண்டவனும் முறைச்சுப் பார்க்குறான். வண்ட வண்டயா பேசினாலும் போக மாட்டேங்குறாய்ங்க. கல்ல எடுத்து அடிச்சாத்தான் போவானுங்க போல. சீக்கிரம் ஊரு பக்கம் போயிடணும்.
பார்ப்பதற்கு சிறுமிபோல இருந்தாலும், பெரிய மனுஷிபோல உட்கார்ந்திருந்தார். தோரணை மட்டுமல்ல, பேச்சும் அப்படித்தான் இருந்தது.
“எங்களப் பத்தி கேட்டு என்ன பண்ணப் போறீங்க?” என்றார்.
சிறு அறிமுகத்துக்குப் பிறகு,
“எங்கள தப்பான எண்ணத்துல பாக்குறவுங்கதான் நிறைய பேரு இருக்காங்க. மெட்ராஸ்ல வீடு இல்லாதவுங்க பாடு ரொம்ப கஷ்டம். பாக்குறவுங்க மதிக்க மாட்டாங்க. அசிங்கம் பண்றாய்ங்க.
ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். என்னோட அப்பா அம்மா கூலிக்காரங்க. நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன். 7 மாசமாகுது. அவங்க வீட்டுல என்ன மதிக்கல. எப்பப் பார்த்தாலும் மூஞ்சிய காமிச்சிகிட்டே இருப்பாங்க. அதான் சரிப்படாம கௌம்பி வந்துட்டோம்.
அவன் (கணவன்) வேலைக்கு கௌம்பிட்டான். கொஞ்சம் பணம் சேர்ந்தா ஊருக்குப் (கடலூர்) போயிடுவோம். இப்ப கையில காசு பணம் எதுவுமில்ல. இந்த நெலமையில அங்கே போனா, மாசம் மாசம் வாடகை எப்படி கொடுக்குறது, எப்படி சாப்பிடுறதுன்னு ஒரே யோசனையா இருக்கு. இங்கேயும் (பீச்) நிம்மதியா இருக்க முடியல. கொஞ்சம்கூட மரியாதையாவும் வாழ முடியல. கண்டவனும் முறைச்சுப் பார்க்குறான். வண்ட வண்டயா பேசினாலும் போக மாட்டேங்குறாய்ங்க. கல்ல எடுத்து அடிச்சாத்தான் போவானுங்க போல. சீக்கிரம் ஊரு பக்கம் போயிடணும்.
இங்கே வீடு இல்லாதவனுக்கு வேல இல்லேங்குறாங்க; வேலை இல்லாம எப்படி வீடு புடிக்க முடியும்? வாடகை கொடுக்க முடியும்? அது இவங்களுக்குப் புரியாதா?” என்றார்.
அவருக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற யோசனையில் எழுந்தோம்,
உடற்பயிற்சி முடித்தவர்கள் களைப்பு நீங்க இளநீர், மூலிகைச்சாறு பருகினார்கள். சிலர், வாகனங்களில் வீட்டை நோக்கிப் பறந்தனர். டயர்களில் ஒட்டிக்கொண்டிருந்த மணற்துகள் பொளபொளவென சிதறி மீண்டும் கடற்கரை தழுவியது.
தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அறுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்நாளில் கதிரவனைத் தமிழ் மக்கள் வணங்குவதாக ‘கல்கி’ கூறுகிறது. ஏனெனில் கதிரவனே பூமியின் செழிப்புக்குக் காரணம் என்று ‘கல்கி’ கருதுகிறது. கல்கியின் கருத்து தற்கால விஞ்ஞானக் கருத்துக்கு ஒருவாறு ஒத்திருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கோ, வழக்கத்துக்கோ, மரபுக்கோ அது பொருந்துவதாக இல்லை. பொங்கல் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தது, இன்று பொங்கல் விழாக் கொண்டாடப்படும் முறையில் வரலாற்று எச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பொங்கல் விழாவின் உண்மையான தன்மை பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும்.
பொங்கல் விழாவிற்கும் பாவை நோன்பிற்கும் தொடர்பு உண்டு. பாவை நோன்பு மார்கழி மாதம் தொடங்கி தை மாதப் பிறப்பன்று முடிவது. ஏழாம் நூற்றாண்டில் பாவை நோன்பு கொண்டாடப்பட்ட விதத்தைக் குறித்து ‘திருப்பாவை’யினின்று நாம் அறியலாம்.
வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள்,
கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிப்பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
மார்கழி மாதம் முழுவதும் கன்னியர்கள் மேற்கண்ட முறையில் நோன்பு நோற்கிறார்கள்.
இந்நோன்பு யாரை மகிழ்விக்க ? கண்ணனை மகிழ்விக்கவா? இல்லை. அவன் அடிபாடி அவர்கள் நோன்பு நோற்றாலும் நோன்பு பாவை நோன்பே; பாவையை மகிழ்விக்கவே. பாவை யார்? பாவை மண்ணாலோ, சாணத்தாலோ, மணலாலோ செய்த படிமம். இது பூமியையே குறிக்கும். இந்நோன்பு பூமியை மகிழ்விக்கவே நோற்கப்படுகிறது. பூமி மகிழ்ந்தால் செழிப்பைத் தருவாள். ஆண்டாள் ஆயர் மகளிர் கொண்டாடும் பாவை நோன்பை வருணிக்கிறாள். ஆகையால் அவர்களுக்குச் செல்வச் செழிப்பு எதுவோ, அதனைப் பாவை அருளும் என்று பாடுகிறாள்.
திருப்பாவை.
‘ஓங்கி உலகளந்த
உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச்
சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல்
ஊடு கயல் உகள்
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேல் ஓர் எம்பாவாய்’
ஆயர் மகளிர் விரும்பும் செல்வம் எதுவென்று ஆண்டாள் மேற்கண்ட செய்யுளில் குறிப்பிடுகிறாள். இச்செல்வத்தைப் பாவை தருவாள். அவள் தருவதற்கு, ஆயர் மகளிர் தங்கள் உடல் வருந்த நோன்பு நோற்கிறார்கள். பூமி செழிப்பைத் தருவதற்கு இவர்கள் உடலை வருத்துவானேன்? இவ்வினாவிற்கு விடைகாண தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் இயக்க விதிகளைத் தொல்குடி மக்கள் அறிந்தவர்களல்லர். கூட்டுழைப்பினால் அவர்கள் இயற்கையோடு போராடினார்கள். போராட்டத்தின் முதல் வெற்றியே புன்செய்ப் பயிர்த்தொழில். அதற்கடுத்த வெற்றி ஆடு மாடுகளைப் பழக்கியது. மனிதன் தனது செயவால் இயற்கையினின்று தனக்குத் தேவையானவற்றைப் பெற முடியுமென்று கண்ட தொல்குடி மக்கள் இயற்கை விதிகளோடு எவ்விதத் தொடர்புமில்லாத தங்களது செயல்களால் இயற்கையை வசப்படுத்த முடியுமென்று நம்பினார்கள். இடி முழக்கம் போன்ற ஓசைகளை எழுப்பிக் கூத்தாடினால், தங்களைப் பார்த்து இயற்கையும் மழையைப் பொழியும் என்று எண்ணினார்கள். அதற்காக ஒரு கூத்தும் வகுத்துக் கொண்டார்கள்.
காற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்கக் காற்றில் அசைந்தாடுவதுபோல் நடனமாடி அதைப்போலப் பயிரையும் ஆடும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அசைந்தாடினால் காற்று பயிரை வேரோடு பிடுங்கி எறியாது என்பது அவர்கள் நம்பிக்கை. உலக முழுவதிலும் இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தொல்குடி மக்களினத்தவர் பலரிடம் இத்தகைய வழக்கங்களைக் காணலாம். இதனை நாம் (Magic) மந்திரம் என்றழைக்கிறோம்.
இம்மந்திரம்தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு. மனிதன் மந்திர முறைகளினால் இயற்கையை வசப்படுத்த முயன்றான். இயற்கையை அறிய புறவய முறைகள் தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்று விட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது. இம்மந்திரத்தின் எச்சமே பாவை நோன்பு. தங்கள் உடலை வருத்தித் தூய்மையாக இருந்தால் பாவையும் வரந்தரும் என்ற ஆயர் மகளிரது நம்பிக்கையே திருப்பாவையில் கவிதா ரூபத்தில் வெளிப்படுகிறது.
இதை உறுதிப்படுத்த ஒரே ஒரு சான்று காட்டுவோம். மந்திர முறையில், இயற்கைச் சக்திகளை அழைத்து மனிதன் கட்டளையிடுவது போல் சொற்களை மறுபடி உச்சரிப்பது வழக்கம். தெய்வத்தை வேண்டிக் கொள்வதென்பது மனிதன் தன் உடலில் சக்தியை வரவழைக்கவே; சக்தி பெற்றதாக அவனுக்குத் தோன்றியதும் இயற்கைச் சக்திகளை நோக்கி மனிதன் கட்டளைகளைப் பிறப்பிப்பான். இவ்வாறு ஆயர் மகளிர் மழையைப் பார்த்துக் கூறுவதைக் கேளுங்கள்;
‘தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழை போல்
வாழ உலகினில்
பெய்திடாய்; நாங்களும்;
மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்;
‘நாங்கள் வாழ நீ பெய்’
என்ற மந்திர மொழியாக அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
மழை பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் பாவைக்கு அவர்கள் செய்யப்போகும் விழாச் சிறப்புக்களைப் பற்றியும் முன்கூட்டியே ஆயர் மகளிர் சொல்லுகிறார்கள். அதுதான் அறுவடைத் தினத்தன்று அவர்கள் பாவைக்குச் செய்யப்போகும் சிறப்பான விழா.
கூடாரை வெல்லும் சீர்க்
கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு
யாம் பெறும் சம்மானம்
நாடும் புகழும்
பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே
தோடே, செவிப் பூவே
பாடகமே என்று அனைய
பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து
முழங்கை வழிவார
கூடி இருந்து
குளிர்ந்தேல் ஓர் எம்பாவாய்!
***
கறவைகள் பின் சென்று
காரனம் சேர்ந்துண்போம்.
அறுவடையின் பயனை அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியே பாவைக்குச் செய்யும் விழா.
இவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் பெண்கள். ஆரம்பத்தில் உழவுத் தொழிலைக் கண்டு பிடித்தவர்கள் பெண்களாதலால் அவர்களே அவ்விழாவிற்கு உரியவர்களாகிறார்கள். பாவையும் பெண் தெய்வம். அதன் பூமியின் படிமம். அவளை மந்திரம் மூலமும் பாட்டின் மூலமும் மகளிர் மகிழ்விக்கிறார்கள். மகளிர் கண்ணனை வழிபடுகிறார்கள் என்றாலும் கண்ணனிடம் பறை மட்டுமே கேட்கின்றார்கள். பறை எதற்கு? குரவைக் கூத்தாடப் பறையை முழக்க வேண்டி பறையைக் கண்ணனிடம் பெற்று அவர்கள் பாவைப் படிமம் செய்து அதன் முன் குரவையிடுவார்கள். அவர்கள் சம்மானம் பெறுவது கண்ணனிடமல்ல. பாவையிடமே. இன்றும் பொங்கல் பொங்கும் போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்.
இவ்விழா புறநானூற்றுக் காலத்தில் கொண்டாடப்பட்டது. நெல் களத்தைப் போர்க்களத்துக்கு உவமை கூறுவது பண்டைப் புலவர் மரபு. குறுங்கோழியூர் கிழாரென்னும் புலவர் நெல் களத்தை வருணித்து அதனைப் போர்க்களத்துக்கு உவமை கூறுகிறார். அன்று அறுவடை விழா ’சாறு கொண்ட களம்’ என்று புலவர் கூறுகிறார். சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச்செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது.
‘வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண்’
நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது.
அறுவடை விழா, அறுவடையன்று தான் நிகழும். அன்று உழவர் மனமகிழ்ச்சி கொள்வார்கள். அன்று போல் என்றும் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுகிறார். ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாகவும் வெளியிடுகிறார்.
‘உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு விற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும்’ என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்திரிக்கிறது.
பொங்கல் விழாவிலே பூமியை வாழ்த்தியது போலவே, மகளிர் நீர் தரும் ஆற்றையும் வாழ்த்தினார்கள். ஆறு பெண் பாலாகக் கருதப்பட்டது. தைந்நீராடல் என்பது பண்டைய வழக்கம். இவ்வழக்கத்தைப் பரிபாடல் வருணிக்கிறது. வையை நதிக்குப் பொங்கலிட்டுப் பூசனை புரிகின்றனர் மதுரை நகர மகளிர்; நாட்டுக்கு வளம் தர வேண்டுமென வையை நதியை வேண்டுகிறார்கள். பின்பு தங்கள் தாய்மாரருகில் நின்று நீராடுகிறார்கள். நீராடும் போது வையையை நோக்கிப் பாடுகிறார்கள்.
‘வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாடல் ஆடல் மழுபுலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பில் அவர், அவர்
தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
தாயருகா நின்று தவத்தை நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி!’
(பரிபாடல் -11)
அவர்கள் வையையை வாழ்த்தும்போது தங்கள் வேண்டுகோள்களையும் வையையிடம் சமர்ப்பிக்கிறார்கள்.
சிறந்த கணவனைப் பெறவேண்டுமென தை நீராடும் மகளிரின் வேண்டுகோள் வையையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
எனவே, பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவர்கள் வாழ்க்கை, விழாவன்று மட்டும் வளம் பெற்று விளங்காமல் என்றும் வளம் பெற வேண்டும் என்பதே அவர்கள் ஆர்வம். மந்திர மொழியின் மூலமும், வணக்கத்தின் மூலமும் இயற்கையை வசப்படுத்த அவர்கள் செய்த முயற்சி இன்று வேறு வழியில் நிறைவேறி வருகிறது. மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று வருகிறான். இயற்கையளிக்கும் சக்தியைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உழவர்களை அடிமைப்படுத்தும் சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்துத் திரளும் உழவர் பெருமக்கள் நாள்தோறும் பொங்கல் விழாக் கொண்டாடும் காலத்தை நோக்கி முன்னேறுகிறார்கள்.
சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் சார்பில், அதன் நான்காம் ஆண்டு விழாவையொட்டி சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் கடந்த 03.02.2020 அன்று சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அந்நிகழ்வில் பேராசிரியர் அ. கருணானந்தன் மற்றும் திரு ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அந்நிகழ்வின் காணொளி தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள்…
பாஜக பிடியில் உயர்கல்வி | பேராசிரியர் கருணானந்தன்
இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்களில் தனது ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது முதல் புதிய கல்விக் கொள்கை வகுத்து அதன் மூலம் கல்வியை காவிமயம் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கும் சதியை பாஜக எப்படி செய்து வருகிறது என்பதை உணர்த்திப் பேசுகிறார் பேராசிரியர் கருணானந்தன்.
இந்துக்களின் எதிரி பாஜக | ஆளூர் ஷாநவாஸ்
பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரமும் தாம் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் முசுலீம்களுக்கு மட்டுமே எதிரானவை என்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவையும், பெரும்பான்மை இந்துக்களையும் புதைகுழியில் தள்ளும் திட்டங்களை நிறைவேற்றிச் செல்வதை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், ஆளூர் ஷாநவாஸ்.
நீங்கும் நினைவுகள் எங்கோ போகுதே பாத்திமா.. | ஸ்ரீஜா – கிளாரா பாடல்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டும் வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவில் வழக்கறிஞர் ஸ்ரீஜா மற்றும் சிறுமி கிளாரா ஆகியோர் பாடிய பாடல்கள் !
“அன்னை தெரேசா விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!” அல்பேனியாவின் தலைநகர் திரானாவின் நவீன சர்வதேச விமான நிலையத்திற்கு அன்னை தெரேசா பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் அநாதை சிறுவர்களுக்கு தொண்டு செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா இனத்தால் அல்பேனியர். ஆனால் அவர் மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்யேவில் பிறந்து வளர்ந்தவர். இனத்தால் அல்பேனியர் என்றாலும் இன்றைய அல்பேனிய தேசத்துடன் சம்பந்தம் அற்றவர். ஆனாலும் என்ன? அல்பேனிய தேசியவாதிகள் போற்றுவதற்கு ஒரு பிரபலமான புள்ளி தேவை. அவ்வளவு தான்.
அல்பேனியாவின் உண்மையான பெயர் ஷ்கிபேரிசே (Shqipërisë)! அவர்கள் பேசும் மொழியும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. ஆனால் வெளியுலகில் பிற மொழியினர் அல்பேனியா என அழைத்து வந்தனர். ரோம சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இலிரியர் என அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய இலிரி மொழி அழிந்து விட்டது. இன்றைய அல்பேனியர் தாமே பண்டைய இலிரிய இனத்தின் வம்சாவளியினர் என உரிமை கோருகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், இன்றைய அல்பேனியர்கள் ஒரு கலப்பினமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
அல்பேனியா ஓர் ஐரோப்பிய நாடாக இருந்த போதிலும், வெளியுலகில் அதைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அது திரானா விமான நிலையத்தை பார்த்தாலே புரிந்து விடுகிறது. வான்வழிப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் அங்கு வரும் பயணிகளினதும், விமானங்களினதும் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால் ஓர் உள்ளூர் விமான நிலையம் போல காட்சியளிக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தில், லக்ஸம்பேர்க்கிற்கு அடுத்த படியாக அல்பேனியா தான் பரப்பளவில் சிறிய நாடு. (அதாவது சுயாதீனமாக இயங்கக் கூடிய இறைமையுள்ள நாடு. மொனாக்கோ, வாட்டிகன் போன்ற சிறிய “தேசங்கள்” பிற நாடுகளில் தங்கியுள்ளன.)
அல்பேனிய நாணயத்தின் பெயர் லெக் (Lek). அண்ணளவாக 1 யூரோவுக்கு 120 லெக் மாற்றிக் கொடுக்கிறார்கள். நாணய மாற்று சேவையில் யூரோ சில்லறையாக கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் ஜெர்மன், கிரேக்க வங்கிகளின் கிளைகள் உள்ளன. அவற்றின் ATM ல் ஐரோப்பிய வங்கி அட்டையை போட்டு பணம் எடுக்கலாம். அல்பேனியா இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. ஆனால், பல துறைகளில் ஐரோப்பிய முதலீடுகள் வந்து குவிகின்றன. விமான நிலையத்திற்கு அருகில் பன்னாட்டு நிறுவனங்களின் சுதந்திர வர்த்தக வலையம் உள்ளது.
அல்பேனியா ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி போன்று கருதப் பட்டது. முதலாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி அல்பேனியாவுக்கு உரிமை கோரினார். அதை செயலில் காட்டுவதற்காக இராணுவத்தை அனுப்பி அல்பேனியாவை ஆக்கிரமித்து இத்தாலியுடன் இணைத்துக் கொண்டார். அன்று எந்த நாடும் இத்தாலியின் அடாத்தான செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பனிப்போரின் முடிவில் அல்பேனியாவில் முதலிட்ட முதலாவது மேற்குலக நாடும் இத்தாலி தான். இத்தாலியின் வணிக நிறுவனங்கள் அல்பேனியாவின் மலிவு விலைக் கூலி உழைப்பை பயன்படுத்திக் கொண்டன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இத்தாலியர்கள்.
அல்பேனியாவில் சிறிய அளவில் எண்ணை வளம் உள்ளது! ஏற்கனவே பெட்ரோலிய தொழிற்துறை சிறப்பாக இயங்கி வருகின்றது. நெதர்லாந்தின் ஷெல் நிறுவனம் இன்னும் பல இடங்களில் எண்ணை எடுக்கலாமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அல்பேனியாவின் பொருளாதார முக்கியத்துவம், அதனால் ஏற்பட்டு வரும் அபிவிருத்தி பற்றி ஓரளவு புரிந்து கொள்ளலாம். அங்கு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை விட நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் என்ன? அல்பேனியா இன்னமும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக கணிப்பிடப் படுகின்றது. அத்துடன் கிரிமினல் குற்றங்கள் மலிந்த நாடாகவும் வெளியுலகில் கருதப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திரானா நகருக்கு செல்வதற்கு தனியார் மினி பஸ் சேவை உள்ளது. பயணக் கட்டணம் முன்னூறு லெக்(2,5 யூரோ) மட்டுமே. இந்த நாட்டில் யாருக்கும் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு இல்லைப் போலிருக்கிறது. போகும் வழி எங்கும் ஓடைகளிலும், ஆறுகளிலும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடந்தன. இதை நாடு முழுவதும் கண்டிருக்கிறேன்.
அதே போல இன்னொரு எதிர்மறையான அம்சத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். நகரத் தெருக்களில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் வாகனம் ஓட்டுகிறார்கள். இதை ஏற்கனவே சென்னைத் தெருக்களில் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். சென்னையில் பாதசாரிகள் பச்சை விளக்கில் பாதையை கடக்கும் நேரத்திலும் வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால் அல்பேனியாவில் பாதசாரிகளுக்கு வழிவிட்டு மெதுவாக ஓடுகிறார்கள். மற்றும்படி இரண்டு நாடுகளிலும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பண்பு ஒரே மாதிரியாக உள்ளது. திரானாவில் நிறையப் பேர் சைக்கிள் பாவிக்கிறார்கள். சைக்கிள் ஓடுவதற்கு தனியான பாதை ஒதுக்கி இருக்கிறார்கள்.
எயர்போர்ட் பஸ் நேராக திரானா நகர மத்திக்கு வருகின்றது. ஏற்கனவே இணையம் மூலம் அருகில் இருந்த ஹொஸ்டல் பதிவு செய்திருந்த படியால் அதிக தூரம் நடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களும் நகர மத்திக்கு அருகிலேயே உள்ளன. எல்லாவற்றையும் நடந்து சென்றே பார்க்கலாம். Google map பார்த்தே தெருக்களை கண்டுபிடிக்கலாம்.
அல்பேனிய மொழி லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துவதால் இடங்களின் பெயர்களை வாசித்து அறிவதில் சிரமம் இல்லை. (சில எழுத்துக்களின் உச்சரிப்பு வித்தியாசம்.) இடம் தெரியாவிட்டால் யாரையாவது கேட்கலாம். அல்பேனியாவில் பரவலாக ஆங்கிலம் பேசுகிறார்கள். எல்லோரும் அல்ல. பெரும்பாலும் இளைஞர்களுக்கு ஓரளவேனும் ஆங்கிலம் தெரிகிறது. வயதானவர்கள் அல்பேனிய மொழி மட்டுமே பேசுவார்கள். ஆனாலும், தம்மால் முடிந்த அளவுக்கு சைகை மொழியில் காட்டி உதவுகிறார்கள். தெருவில் போகும் போலீஸ்காரரை கேட்டாலும் உதவுவார்கள். அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களுக்கும் ஆங்கிலம் தெரியும்.
அல்பேனியா ஒரு செலவு குறைந்த நாடு. ஆகவே, நாடு முழுவதும் எட்டு யூரோவில் இருந்து இருபது யூரோக்குள் ஒரு ஹொஸ்டலில் தங்கலாம். அதை விட பணக்கார வாடிக்கையாளர்களுக்கான ஆடம்பர ஹோட்டல்கள் நிறைய உள்ளன. நாடு முழுவதும் சிறிய நகரங்களில் கூட புதிதாக ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. அதைத் தவிர கரையோர பகுதிகளில் நிறைய ரிசொர்ட்கள் முளைக்கின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்த அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அது மாறலாம்.
பிற ஐரோப்பிய நகரங்களை பார்த்தவர்களுக்கு திரானா ஏமாற்றம் அளிக்கலாம். அது மத்தியதரைக் கடலோர நகரங்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது. அங்கு குளிரை விட வெயில் கடுமையாக இருக்கும். அதனால் எல்லாக் கட்டிடங்களிலும் ஏசி பொருத்தி இருக்கிறார்கள். நான் தங்கியிருந்த எந்த விடுதியிலும் வெப்பமூட்டும் சாதனத்தைக் காணவில்லை. உண்மையில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியாவில் குளிர் குறைவு தான்.
திரானா இத்தாலிய காலனிய காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். அங்குள்ள அழகான கண்ணைக் கவரும் அமைச்சு அலுவலக கட்டிடங்களும் இத்தாலியர் கட்டியவை தான். நகர மத்தியில் ஸ்கந்தர்பேர்க் சதுக்கம் உள்ளது. அதன் தொடக்கத்தில் அல்பேனிய தேசிய நாயகன் ஸ்கந்தர்பேர்க் சிலை உள்ளது. அதன் அருகில் ஒரு பழைய மசூதி உள்ளது. அதற்கும் அருகில் ஒபெராவும், புத்தகக் கடையும் உள்ளது. அந்தக் கடையில் அல்பேனியா பற்றி எழுதப்பட்ட அனைத்து ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. அத்துடன் இத்தாலி மொழி நூல்களும் உள்ளன.
விசாலமான ஸ்கந்தர்பேக் (Skanderbeg) சதுக்கத்திற்கு அருகில் முன்பொரு காலத்தில் பெரியதொரு ஸ்டாலின் சிலை இருந்தது. அதை அகற்றி விட்டார்கள். அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் ஒன்றுகூடும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன.
அந்தக் காலத்தை நினைவுகூருவதற்கு எஞ்சியுள்ளது ஒரு மியூசியம் மட்டுமே. சதுக்கத்தின் மறு முனையில் தேசிய சரித்திர அருங்காட்சியகம் உள்ளது. அதில் சோஷலிச நாடாக இருந்த காலத்தில் எடுத்த படங்களும் வைக்கப் பட்டிருந்தன. நான் சென்றிருந்த நேரம் மியூசியத்தை பூட்டி திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். மியூசிய கட்டிடத்தின் முன்புற வாசலுக்கு மேலே ஒரு பிரமாண்டமான ஓவியம் வரையப் பட்டுள்ளது. சோஷலிச யதார்த்தவாத ஓவியம் என்று சொல்லும் தரத்தில், அல்பேனிய கலாச்சார உடையில் ஆயுதமேந்திய மனிதர்கள் காணப்படுகின்றனர். அது அல்பேனிய விடுதலைப் போராட்டத்தை குறிப்பதால் இன்னமும் அப்படியே அங்குள்ளது.
ஸ்கந்தர்பேக், ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஓட்டோமான் துருக்கியருக்கு எதிராக அல்பேனிய இனக்குழுக்களை ஒன்று திரட்டி போராடினார். ஸ்கந்தர்பேக் விடுதலை பெற்றுத் தந்த அல்பேனிய இராச்சியம் சில தசாப்த காலமே நீடித்தது. அதற்குப் பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்ய ஆளுகையின் கீழ் வந்து விட்டது. இருப்பினும், ஆயிரமாயிரம் வருடங்களாக அயலில் உள்ள வல்லரசுகளால் மாறி மாறி ஆளப் பட்டு வந்த அல்பேனியா, ஸ்கந்தர்பேக் காலத்தில் தான் தனித்துவமான தனிநாடாக அடையாளப் படுத்திக் கொண்டது. அதனால் இன்றைய அல்பேனிய தேசியவாதிகள் ஸ்கந்தர்பேக்கை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
சிவப்பு நிற பின்னணியில், இரட்டைத்தலைகளை உடைய கழுகு சின்னம் பொறித்த அல்பேனிய தேசியக் கொடி, முதன்முதலாக ஸ்கந்தர்பேக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. இடையில் நாற்பது வருட காலம் சோஷலிச நாடாக இருந்த போதும் இதே கொடியைத் தான் கழுகின் தலையில் மஞ்சள் நட்சத்திரத்தை சேர்த்து பயன்படுத்தி வந்தனர். தற்கால அரசு சின்னங்களில் மஞ்சள் நட்சத்திரத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக ஸ்கந்தர்பேர்க் முடியை சேர்த்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் அல்பேனியா முதலில் இத்தாலி பாசிசப் படைகளாலும், பிற்காலத்தில் ஜெர்மன் நாஸிப் படைகளாலும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவதற்காக பல ஆயுதபாணி இயக்கங்கள் போராடி வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது என்வர் ஹோஷா தலைமையிலான அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆரம்ப காலங்களில் அல்பேனிய கம்யூனிஸ்டுகள் தம்மை வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு பழமைவாத சமூகத்தில் பரந்தளவு ஆதரவை பெற்றுக் கொள்வது கடினம் என்பதால், மற்றைய ஆயுதக்குழுக்களையும் இணைத்து அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருந்தனர். இருப்பினும் அதில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருந்தது. இதைத்தவிர அல்பேனிய தேசியவாதிகளின் இயக்கம் தனியாக போராடிக் கொண்டிருந்தது.
1944 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத இயக்கத்தில் இருந்தவர்களை கைது செய்த படியால் அதன் முக்கிய தலைவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்று பிரிட்டிஷ்படையினருடன் சேர்ந்து கொண்டனர். பிற்காலத்தில், அதாவது பனிப்போர் காலத்தில், பிரிட்டனும், அமெரிக்காவும் புலம்பெயர்ந்த அல்பேனிய தேசியவாதிகளை ஊடுருவ விட்டு கிளர்ச்சியை உண்டாக்க நினைத்து தோற்றுப் போனமை வரலாறு.
அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதற்கு பல காரணிகள் சாதகமாக அமைந்திருந்தன. முதலாவதாக அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கியதால், நேச நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆதரவு கிடைத்து வந்தது. அதற்காக பிரிட்டிஷாருக்கு அல்பேனிய உள்விவகாரம் தெரியாது என்று அர்த்தம் அல்ல. என்வர் கோஷா ஒரு கம்யூனிஸ்ட் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் சோவியத் யூனியனுடன் தொடர்பில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அத்துடன் அவர் பிரான்சில் கல்வி கற்றவர் என்பதால் ஒரு இடதுசாரி ஜனநாயகவாதி என்று எடை போட்டிருக்கலாம். மறுபக்கத்தில் ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் அல்பேனியாவை முக்கியமாகக் கருதவில்லை. அவர்களது கவனம் முழுவதும் யூகோஸ்லேவிய யுத்தகளத்தில் இருந்தது. இந்த குழப்பரகமான சூழ்நிலையை பயன்படுத்தி என்வர் ஹோஷா தலைமையிலான கம்யூனிச போராளிகள் அல்பேனியா முழுவதையும் தமது சொந்த பலத்தில் விடுதலை செய்து விட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட திரானாவில் என்வர் ஹோஷாவும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்களும் வருகை தந்த நேரம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். இன்று வரையிலான அல்பேனிய வரலாற்றில் வேறெந்த அரசியல் தலைவருக்கும் அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை என்பதை ஹோஷாவின் எதிரிகளே ஒத்துக் கொள்கின்றனர். இத்தாலி, ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றுத் தந்த படியால் அன்றிருந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு (அப்படி காட்டிக் கொள்ளா விட்டாலும்) பெருமளவு ஆதரவு இருந்தமை புரிந்து கொள்ளத் தக்கதே.
அல்பேனியா நாற்பது வருட காலமாக ஹோஷாவின் ஆட்சியின் கீழ் ஒரு தீவிரமான கம்யூனிச நாடாக இருந்தது. அவரது மரணத்தின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டு வந்து விட்டனர். 1991 இல் இருந்து அல்பேனியா ஒரு முதலாளித்துவ நாடு. பல கட்சித் தேர்தல் முறை கொண்டு வரப் பட்டது. முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள், கட்சியை கலைத்து விட்டு சமூக ஜனநாயகக் கட்சி என்ற புதிய அவதாரம் எடுத்தனர். லிபரல்கள் ஒன்று சேர்ந்து ஜனநாயகக் கட்சி அமைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை நடக்கும் பொதுத் தேர்தல்களில் சோஷலிசக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அரசாங்கம் அமைத்த போதிலும் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை.
நான் தங்கியிருந்த ஹொஸ்டல் வரவேற்பாளரிடம் நாட்டு நடப்புகள் பற்றி விசாரித்தேன். அந்த இளைஞன் தான் தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்த படியால், முன்பிருந்த சோஷலிச ஆட்சி பற்றி எதுவும் தெரியாது என்றான். தற்போதைய காலத்தில் எந்தக் கட்சியிடமும் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை என்றான். அவை தங்களுக்குள் அடிபடுவதற்கே நேரம் சரியாக இருப்பதாகவும் நாட்டைக் கவனிப்பதில்லை என்றும் சொன்னான். அல்பேனியாவில் மிகக் குறைந்த சம்பளம் ஏறத்தாள இருநூறு யூரோக்கள். அதே நேரம் படித்த பட்டதாரிகள் கூட அதிகம் சம்பாதிக்க முடியாது. மாபியாக் கிரிமினல் கும்பல்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே பெருமளவு பணம் சம்பாதிக்க முடிகிறது.
அல்பேனியாவில் Tirana Times, Albanian Daily News என்று இரண்டு ஆங்கில வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டிலும் வரும் செய்திகளில் பெரியளவு வித்தியாசம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு மாபியா குழு செய்த கொலை பற்றிய செய்தி முக்கிய இடம் பிடித்திருந்தது.
Albanian Daily News இல் உள்நாட்டு அரசியல் பற்றிய கட்டுரை ஒன்று கவனத்தைக் கவர்ந்தது. 2008 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மீளுயிர்த்துள்ள கம்யூனிச அல்லது மார்க்சிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருவதாகவும், அதற்கு அல்பேனியாவும் தப்பவில்லை என்றும் எழுதியுள்ளது. குறிப்பாக இளைஞர் குழுக்கள், NGO க்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதாக “கவலைப்” படுகிறது. மேலும் அல்பேனியா முன்னொரு காலத்தில் கொடூரமான கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கீழ் துன்பப் பட்டதாகவும், எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டதுடன், தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டதாகவும் நினைவுகூருகின்றது.
கம்யூனிச கடந்த காலத்தில் நடந்த குற்றங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் பட்டு வருவதாகவும், அதையெல்லாம் நமது இளைய தலைமுறையினர் மறந்து விட்டார்களா என்றும் கேட்கிறது. கம்யூனிசகால குற்றங்கள் பற்றிய கற்கைகள் நிலையத்தின் தலைவரும், பிரபல இலக்கியவாதியுமான Agron Tufa, முன்னாள் இந்நாள் கம்யூனிச ஆதரவாளர்களின் மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டாராம். ஆகவே, “எப்படி அல்பேனியாவில் மீண்டும் அந்தக் கொடிய கம்யூனிசத்தை கொண்டு வர முடியும்?” என்று அந்தப் பத்திரிகை நீலிக்கண்ணீர் வடிக்கிறது. (Something in Common between Arben Kraja and Agron Tufa, Albanian Daily News, January 31, 2020)
அச்சச்ச்சோ!
(தொடரும்)
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா, இல்லையா என்பது குறித்த பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.
1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன் பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.
“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.
15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது.
தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.
ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்த கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். -க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.”
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.
நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்.
சிரியாவில் எந்தெந்த படைகள் எந்தெந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை விளக்கும் வரைபடம். (நன்றி : அல்ஜசீரா)
எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய போர் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
இதுவரை மேற்கு உலக லிபரல் பத்திரிகைகளால் போராளிகள் என அழைக்கப்பட்டு வந்த சிரிய அரசு எதிர்ப்பு ஆயுத குழுக்களை (free Syrian army) இன்று அதே பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றன.
அதே நேரம் துருக்கி அரசு குர்துகள் மீது படையெடுக்க வசதியாக அமெரிக்க துருப்புகளை விலக்கி கொண்ட டிரம்ப்; துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டுகிறார்.
மற்றொரு பக்கம் சிரிய அரசை இதுவரை எதிர்த்து போராடிய குர்துகள் தற்போது சிரிய அரசுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிரிய அரசு – ஜிகாதி பயங்கரவாதிகள் – குர்து தேசிய இன மக்கள் – துருக்கி – அமெரிக்க – ரஷ்யா என பல நலன்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சிரிய போரில் சமீபத்தில் அணிசேர்க்கை மாறியுள்ளது.
***
சன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் சிரியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. இரானைப்போல மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு சவாலாக இருந்து வந்தது சிரியா. அதன் சர்வாதிகார அதிபர் பஷாரை கவிழ்க்க விரும்பியது அமெரிக்கா. இந்நிலையில் அரபு வசந்தம் என்கிற பெயரில் துனிசியாவில் ஆரம்பித்த வண்ணப் புரட்சிகளின் பின்னணியில்; அதே போல சிரியாவிலும் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்த போராட்டத்தினை முகாந்திரமாக கொண்டு முன்னர் ஆப்கானில் செய்ததுபோல இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து பஷாருக்கு ஆதரவாக களம் இறங்கின அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்.
சுதந்திர சிரிய படைகள் என்கிற பெயரில் பல ஜிகாதி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயுதமளித்தன மேற்குலக நாடுகள். அதன் பத்திரிகைகளோ மேற்கண்ட அல்-கயிதா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை சிரிய போராளிகளாக சித்தரித்தன. சிரிய அதிபர் பஷார் ‘இப்போராளிகளுக்கு’ எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அதை தடுக்க அமெரிக்கா, சிரியாவின் மீது நேரடியாக படையெடுக்க வேண்டும் எனவும் மேற்குலகில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
சிரியா நாட்டு அதிபர் பஷார் அல் – ஆசாத்
இந்த சந்தர்பத்தில் ரக்கா நகரை தலைநகராகக் கொண்டு தங்களது கிலாபத்தை அமைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்ப்பதையே முகாந்திரமாக கூறி அமெரிக்கா சிரியாவிற்குள் நுழைந்தது. சிரிய அரசுக்கு எதிராக தனிநாடு கோரி போராடிவந்த குர்து தேசிய போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஈடுபடுத்தி வந்தது அமெரிக்கா.
சிரிய அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி கிட்டத்தட்ட உறுதியானது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிப்பார் என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. 2011-ல் ஆரம்பித்து 2015 வரை முக்கிய நகரங்கள் அலப்போ, ரக்கா, ஐடில்ப் உள்ளிட்ட நகரங்கள் கைப்பற்றப்பட்டு தலைநகர் டமாஸ்கஸ், அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குள் முடக்கப்பட்டது ஆசாத் அரசு.
மிக தாமதமாக 2015-ல் தனது ஆதரவு சிரிய அதிபரைக் காப்பாற்ற நேரடியாக களத்தில் குதித்தது ரஷ்யா-ஈரான் கூட்டணி. அதிபர் பஷாரை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து சிரிய படைகளுக்கு உதவின ரஷ்யா-ஈரான் நாடுகள். சிரிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இரஷ்ய படைகள் சிரிய படைகளுக்கு உதவி செய்தன. இரஷ்ய விமானங்கள் சிரிய படைகளுக்கு வான் பாதுகாப்பு வழங்கியது.
சிரியாவின் மொத்த நிலப்பரப்பு, 1. சிரிய அரசு மற்றும் அதன் ரஷ்ய – ஈரான் படைகள்; 2. குர்து படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, 3. அமெரிக்கா – சிரிய அரச எதிர்ப்புப் படைகள்; 4. ஐ.எஸ்.ஐ.எஸ் என நான்காக பிரிந்திருந்தது.
ரஷ்யா- அமெரிக்கா நேரடி மோதல் வராத வண்ணம் சிரிய அரச படை – சுதந்திர சிரிய எதிர்ப்பு படையை எதிர்த்தும், குர்துகள் படை – ஐ.எஸ்.ஐ.எஸ் படைகளை எதிர்த்தும் தாக்குதல் நடத்திவந்தன. ரஷ்ய படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் படையை எதிர்த்து தாக்குதல் நடத்திவந்தன. இப்படி சொல்லப்பட்டாலும் எண்ணெய் வயல்கள் நிரம்பிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர எல்லா தரப்பும் மோதிக்கொண்டன. 2016-ல் ரஷ்ய ஆதரவுடன் முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்ற ஆரம்பித்தது சிரிய அரசு.
இதே சமயத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாகவும் நேட்டோ நாடுகளில் ஒன்றாகவும் இருந்த துருக்கியின் அதிபர் எர்டோகன் அந்நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பிறகு இரஷ்யாவுடன் இணக்கமானார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பின் மேற்குலக நாடுகள் இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் அமெரிக்கவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் S-400 ராணுவ தளவாடங்களை வாங்கி ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமானார் எர்டோகன்.
டொனால்ட் ட்ரம்புடன் துருக்கி அதிபர் எர்டோகன்
ஆரம்பத்தில் மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து சிரியாவின் அதிபர் பஷார் பதவி விலகுவதுதான் சிரிய பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று முன்வைத்தது துருக்கி. பின்னர் அதை கைவிட்டதுடன் ரஷ்யா – ஈரான் ஆகிய நாடுகளுடன் சிரிய விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
அமெரிக்கா, சிரிய குர்துகளுடன் இணைந்து ஆசாத்துக்கு எதிராக உருவாக்கிய சிரிய ஜனநாயக படையை (Syrian democratic forces – SDF) தனது நலன்களுக்கு எதிரானது என்பதாகவே கருதியது துருக்கி.
துருக்கியில் தனிநாடு கேட்டு ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஒரு பகுதிதான் சிரிய ஜனநாயக படை (Syrian democratic forces – SDF) என்று துருக்கி குற்றம் சாட்டியது. இதன் மூலம் தனது நாட்டில் போராடும் குர்துகள் மேலும் வலிமையடைவார்கள் என அஞ்சியது.
ஆனால் சிரிய ஜனநாயக படை தான் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆசாத் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் துருப்பு சீட்டாக இருந்து வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஐ வீழ்த்தி சிரியாவின் ஒரு கணிசமான பகுதியை தனது கட்டுப்பட்டில் கொண்டு வந்தது SDF.
***
இந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வருமானம் வராத போர்களை தவிர்க்க விரும்பினார். “நேட்டோ படைகளுக்கு அமெரிக்காதான் அதிகம் செலவழிக்கிறது. மேற்குலக நாடுகள் அதிகம் செலவழிக்க முன்வரவேண்டும்,” “ சவுதி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அதிகம் செலவழிக்கிறது. ஆனால் அதற்கான நலன்கள் கிடைக்கவில்லை” என ஒரு பக்காவான முதலாளியாக கணக்கிட்டார்.
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு பிறகு முடிவில்லாத போர்களை முடிக்க போவதாகவும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை.
இரண்டாம் உலகப்போரில் அதிகம் ஈடுபடாமல் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய நாடு அமெரிக்கா. அது போல அமெரிக்கா தற்போது ஆப்கான், ஈராக், சிரியா என ஆக்கிரமிப்பு போர்களை ஆரம்பித்து செலவழித்து விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது சீனா அது போன்ற எந்த போர்களும் இல்லாமல் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது.
வருமானம் வராத போர்களை கைவிட்டு, வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பது அமெரிக்காவின் தேவையாக இருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு சீன செல்வாக்கு மண்டலங்களாக உருவாக வாய்ப்பிருக்கும் பகுதிகளை குறிவைப்பது தான் அமெரிக்காவின் நோக்கம். ஆனால் ஆரம்பித்த போரை முடிக்க முடியாமல் திணறுகிறது.
சிரியாவிலிருந்து அமெரிக்க வெளியேற்றத்திற்கு இதுதான் காரணம். இம்முறை பலிகடாவாக்கப்பட்டவர்கள் குர்துகள். அமெரிக்க உத்திரவாதத்தின்படி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொடுத்து பஷார் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என இரு முனைகளில் போராடிய குர்துகளை துருக்கியின் கொடும்கரங்களில் காட்டிகொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறது அமெரிக்க படைகள்.
இதை புரிந்துகொள்ள சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பேசியது உதவும். “ஆப்கானை சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்க உளவுத்துறைக்கு உதவியாக ஆப்கானில் தாங்கள் தான் ஜிகாதிகளை உருவாக்கியதாகவும், பின்னர் அமெரிக்கா வெளியேறிய பிறகு தாங்கள் உருவாக்கிய முஜாகிதீன்களால் தாங்களே பாதிக்கப்படுவதாகவும்” பேசியிருந்தார்.
இதே கருத்தை சவுதி இளவரசர் சல்மானும் கூறியிருந்தார். வஹாபியிசத்தை வளர்ப்பதாக மேற்குலக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அந்த வேலையை எங்களுக்கு கொடுத்ததே அமெரிக்காதான் என பதிலளித்திருந்தார்.
அக்டோபர் 2019, 7-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘அமெரிக்க கூட்டாளியான குர்துகளை’ துருக்கி தாக்குவதற்கு வசதியாக சிரியா – துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறின.
சவுதி இளவரசர்
மீண்டும் தனது துரோக வரலாறை நிரூபித்தது அமெரிக்கா. அக்டோபர் 9 முதல் துருக்கி நாட்டு துருப்புகள் குர்து பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குர்துகள் தங்கள் ஊரை விட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சாரை சாரையாக நகரங்களை காலிசெய்து அச்சத்தில் வெளியேறி வருகிறார்கள்.
தங்களை துருக்கியிடம் அடமானம் வைத்த அமெரிக்க துருப்புகளின் மீதும், அவர்களின் கவச வாகனங்கள் மீதும் அழுகிய பழங்களையும், கற்களையும் வீசி குர்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.
உலகின் யாருக்கும் ஈடு இணையில்லாத மகாகணம் பொருந்திய அமெரிக்க இராணுவம் அழுகிய பழங்களால் தாக்கப்படும் காட்சிகள் உலகம் முழுவதும் வெளியாகி அமெரிக்க மானத்தை கப்பலேற்றின.
இதையடுத்து தனது ஒளிவட்டத்தை காப்பாற்றிக் கொள்ள துருக்கி குர்துகள் மீது படையெடுக்கலாம், ஆனால் எல்லை மீறிப் போனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பாக ஒரு கடிதம் எர்டோகனுக்கு எழுதியதாக செய்தி வெளியாகியது. அதில் “துருக்கிய பொருளாதாரத்தை அழிக்கவும் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்…”
***
இப்போரை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை எர்டோகனுக்கு இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எர்டோகன் கட்சி படுதோல்வியடைந்தது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தேசிய வெறியை மக்களிடையே ஊட்டி இழந்த தன் செல்வாக்கை நிலைநாட்ட இந்தபோர் எர்டோகனுக்கு பயன்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுபட்டு எர்டோகன் கட்சியை வீழ்த்திய எதிர்கட்சிகள் குர்துகள் விசயத்தில் எர்டோகன் எதிர்பார்த்தபடியே பிளவுபட்டுள்ளனர். இதனால் இப்போரை எர்டோகன் உடனடியாக நிறுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.
டிரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அக்கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றடைந்ததாக அடுத்த நாளே மேற்குலக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது எதிர்பார்த்த ஒன்றுதான்.
சிதைந்து போயுள்ள சிரியா…
வேறுவழியில்லாமல் குர்துகள் முன்னர் தாங்கள் எதிர்த்த அதிபர் பஷாருடன், ரஷ்யா வழிகாட்டுதல்படி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி குர்துகள் தங்கள் கட்டுப்பட்டிற்குள் உள்ள பகுதிகளை சிரிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சிரிய ராணுவம் எல்லைக்கு விரைந்து துருக்கி படைகளை எதிர்கொள்ளும். சிரியாவிற்குள் குர்துகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
இதே போல அமெரிக்க படைகள் வெளியேறி செல்லும் இராணுவ முகாமிற்குள் இரஷ்ய படைகள் செல்வதும், அதை இரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அமெரிக்க செல்வாக்கு சரிகிறதா? என்கிற விவாதத்தை சி.என்.என் முதல் நம்மூர் நியூஸ்7 வரை ஆரம்பித்து வைத்தன.
அழுகிய பழங்களாலும், உலக பத்திரிகைகளாலும் அடிவாங்கி அவமானப்பட்ட அமெரிக்கா, அதன் துணை அதிபரை துருக்கிக்கு அனுப்பி இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி குர்துப் படைகள் பின்வாங்கி செல்ல வேண்டும். சிரிய துருக்கி எல்லையில் பாதுகாப்பட்ட பகுதிகளை துருக்கி உருவாக்கும். அது துருக்கியின் கண்காணிப்பில் இருக்கும். அதில் சிரிய போரின் அகதிகளை துருக்கி மீள்குடியேற்றம் செய்யும் என்பதாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக இரஷ்யா இதுவரை அதிகாரபூர்வமாக பெரிதும் எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த ஒப்பந்தம் என்ன ஆகும். துருக்கி எல்லைக்குள் நிற்குமா? குர்துகளின் எதிர்காலம் என்னவாகும்? போன்ற கேள்விகள் விடை தெரியாமலே இருக்கின்றன.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஐயா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும். சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம் தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது. என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.
தினமும் அதிகாலை சிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பது அவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றே அழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள் தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும். ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும் சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர் சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது.
ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று எங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாக வீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப் புத்தகம். குத்து விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில் தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.
மாதிரிப் படம்
ஐயாவுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம் சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும் அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்கு காசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார்.
ஐயாவுக்கு புத்தகங்கள் எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப் புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனே பஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்று நாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன. மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர் அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டை பின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன் இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும்.
நாவல்களையும், வாரப் பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம் என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும் புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான். அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும் படித்துவிட்டேன்.
பஞ்சாங்கத்தில் பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனான சம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது. அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்கு ஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார். சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில் ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில் ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்கு பசியில் கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம் போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார். திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம்.
மாதிரிப் படம்
அம்மா எப்படி 15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பது இன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்? பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே. மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்தது என்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர் கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன். அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.
ஐயாவுக்கும் எங்களுக்குமிடையே நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியது நினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக் குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டை உடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம் மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுளம்பு வலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்கு வளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது. ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்த கட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போது வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர், தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’
ஒரு தடவை எனக்கு ஒரு ரூபா கிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய காசு. நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபா கிடைத்திருந்தது. மூளையில் கனவு தொடங்கிவிட்டது. ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப் பார்ப்பேன். இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது.
ஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காட வைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும்? அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ‘இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு?’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா? அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள் பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது.
கொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்கு ஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார். ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள் முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மா பதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள் தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம் ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்கு தெரியாது. ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டு வழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்கு வந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை.
அபூர்வமாக ஐயா சந்தோசமாக இருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது. வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள் வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்கார்ந்து குடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார். எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோ என்று எங்களுக்குத் தோன்றும்.
ஒருவர் வாழ்ந்த மிக நீண்ட வாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும் புள்ளிகளை தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோல இந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறைய பலாமரங்கள் இருந்தன. அவற்றைக் கயிறு கட்டி இறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டு மரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில் பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்க அண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக் கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின. அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே. கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய். சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்கு பெரும் கோபம்.
ஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.
அன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை. மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில் இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ‘சப்பாத்தை தூக்கிக்கொண்டு ராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும் ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’
ஐயாவுக்கு வயதானபோது அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாக வாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். ஐயாவுக்கு வேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த பெரிய காணி ஒன்றை விற்று கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம் நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம் செய்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தை ஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும். வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது? வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும். அப்பொழுதுதானே மரியாதை.
ஐயாவுக்கு ஓர் அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது. எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிக உயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால் மரப்பட்டை போல இருக்கும். ஏதாவது உதவி கேட்டு வருவார். ஒரு நாள் இரவு சூள பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்த தீப்பந்தம் அது. ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டு யோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச் செய்தி சொன்னதுபோல பட்டது.
அடுத்தநாள் அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும் ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில் தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும் கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில் நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார். பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது.
ஒட்டுமாங்கன்று எப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடைய மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர், ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்து திடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31-ம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.
அப்பொழுது சாட்டர்ட் கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின் கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில் ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட கணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள், காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடைய கணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர் கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா?
ஒவ்வொரு மாதமுடிவிலும் கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பது புரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10 – 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள் கணக்கு. பெயர்களை வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர் – ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன்.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு : இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி சென்ற ஜாமியா மாணவர்களை கடுமையாக தாக்கிய டெல்லி போலீஸ் !
ஜாமியா நகரவாசிகள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் அடங்கிய நூற்றுக்கணக்கானவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணி மீது டெல்லி போலீசார் வன்முறையை ஏவி விட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மீது முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் அவர்களது ஆடைகளை பிடித்திழுத்தும் அந்தரங்க இடங்களில் அடித்தும் கொடூரமாக நடந்துகொண்டது போலீசு.
“என்னுடைய அந்தரங்க பகுதிகளை போலீஸார் பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள் மேலும் ஒரு பெண் போலீஸ் என்னுடைய புர்க்காவை இழுத்து என்னுடைய அந்தரங்க பகுதிகளை லத்தியால் அடித்தார்” என்று ஒரு மாணவப் போராட்டக்காரார் கூறினார். மேலும் குறைந்தது 40 பேர்களாவது போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்காக அன்சாரி சுகாதார மையம், புனித குடும்பம் மருத்துவமனை மற்றும் அல் ஷிஃபா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள கூறுகின்றன.
டெல்லி காவல்துறை மீண்டும் ஜாமியா மாணவர்கள் மீது கொடூரங்களை கட்டவிழ்த்து விடுகிறது. CAA, NRC, NPR -க்கு எதிராக போராடுவதற்கான எங்கள் உறுதியை உங்கள் தடிகளால் உடைக்க முடியாது – என்று உமர் காலித் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
காயமடைந்த / மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான ஜாமியா மாணவர்கள் அன்சாரி சுகாதார மையம் மற்றும் புனித குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் இப்போது அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஜாமியா மாணவர்களுக்கு உதவி தேவை. அவர்களுக்கு உதவ வேண்டிய நேரமிது என்று புஷ்ரா கானும் பகிர்ந்திருந்தார்.
ஜாமியா முன்னாள் மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜே.சி.சி) தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் வரவிருக்கும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த அவர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தெரிவித்தது. பல்கலையை சுற்றிலும் பலமாக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதாக ராஜ் சேகர் ஜா டிவிட்டரில் பதிந்துள்ளார்.
‘நாங்கள் ஆவணங்களைக் காட்ட மாட்டோம்’, ‘நாங்கள் ஆங்கிலேயர்களுக்கே அஞ்சாதபோது, மற்றவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும்’ போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். பெண்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆண்கள் சாலை இருபுறத்திலும் மனித சங்கிலி அமைத்து பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வழி செய்தனர்.
டெல்லி போலீசின் அராஜகம்.
“இரண்டு மாதங்களாக நாங்கள் போராடுகிறோம். அரசாங்கத்திலிருந்து யாரும் வந்து எங்களிடம் பேசவில்லை. எனவே நாங்கள் அவர்களிடம் சென்று பேசுவோம்” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட செபா அன்ஹாத் கூறினார்.
போலீஸ் தடியடியினால் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுடன் நிற்போம் என்று ஆல்வின் அபி டுவிட்டரில் பகிர்ந்தார்.
டெல்லியில் மற்றுமொரு போராட்டமும் நடந்தது. ஜாமியா மாணவர்களை போலவே முழக்கங்களை எழுப்பிக்கொண்டு குடிமை சமூக உறுப்பினர்கள் மத்திய டெல்லியின் தெருக்களில் நடந்து சென்றனர்.
போராட்டக்காரர்கள், பல்வேறு அளவிலும் வண்ணங்களிலும் பலகைகள் மற்றும் பதாகைகளை ஏந்தி காலை 11 மணியளவில் மண்டி மாளிகையில் ஒன்றுகூடி பின்னர் ஜந்தர் மந்தரை நோக்கி அணிவகுத்து சென்றனர். அங்கேயும் போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு அனுமதி வாங்கியிருப்பதாக கூறிய போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்வோம் என்று கூறினார்கள். இந்த போராட்டத்திற்கு இந்திய வெல்ஃபேர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
நமாஸ் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது தன்னுடைய மகன் முஹமத் ரியாஸ் (30) போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறிய முஹமத் ஷரீஃப் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டார். அவர் கான்பூரிலிருந்து போராட்டத்திற்கு வந்திருந்தார்.
“அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னுடைய மகனை என் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். நான் உடனே அவனை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஒரு நபர் கூட என் வீட்டிற்கு வந்து நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்கவில்லை. போலீசார் எங்களுடன் தவறாக நடந்து கொண்டனர். திருமண விழாவில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது ரியாஸ் போலீசாரால் கொல்லப்பட்டார்” என்றார் ஷரீஃப்.
போராட்டக்காரர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் மற்றும் சந்திர சேகர் ஆசாத் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு அரசாங்கம் “கறுப்புச் சட்டத்தை” நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த போரின் தலைவிதி எப்போதுவரை முடிவு செய்யப்படாமல் இருக்கும்? வெற்றியடையும் வரை தான். இறுதியாக முடிவு செய்யப்பட்டு தீர்க்கப்படும் போது தான் போரின் வெற்றி கிடைக்கிறது.
இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) 1940 முதல் 1973 வரை வழிநடத்திய கோல்வால்கர், முடிவில்லாத ஒரு இனப்போரைக் கனவு காண்கிறார். அவர் இன உணர்வை வரையறுப்பதற்காக ஒரு விலங்கியல் உருவகத்தை தன்னுடைய இந்து தேச கருத்தாக்கத்துடன் இணைக்கிறார். எதிரியை ஒழிப்பதற்கு இனத்தின் ஆன்மா தூக்கம் கலைய வேண்டும். தற்செயலாக, கடந்த ஆண்டு சிகாகோவில் மோகன் பகவத்தின் சர்ச்சைக்குரிய உரையில் அதே சிங்க உருவகம் மீண்டும் எழுந்தது.
இத்தகைய இனப்போரை நடத்துவதற்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை கோல்வால்கர் கையிலெடுக்கிறார். மக்களாட்சியின் கருத்தாக்கத்தை அவர் தாக்குகிறார்: “மக்களாட்சியின் தவறான கருத்துக்கள் எங்களுக்கு தவறான பார்வையை கொடுத்தன. முன்னால் படையெடுப்பாளர்களுடனும் எதிரிகளுடனும் சேர்ந்து அயல்நாட்டார் சூட்டிய இந்தியன் என்ற பெயரில் எங்களை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தி கைகோர்த்துக் கொண்டு அவர்களை வெல்ல முயற்சித்தோம். இந்த விஷத்தின் விளைவினால் எதிரிகளை கூட நண்பர்களாக நம்புகின்ற நிலைக்கு நாங்களாகவே தள்ளப்பட்டோம். எங்கள் சொந்த கைகளாளேயே உண்மையான தேசியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்”.
இந்தியராக இருப்பது – இந்த சொல் கிரேக்க சொற்பிறப்பியல் அடிப்படையிலானது, வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அன்னியராக இருப்பது தான். அதாவது ஒருவரின் இன அடையாளத்தை இழப்பது என்பதே இதன் பொருள். கோல்வால்கரைப் பொறுத்தவரை, நட்பு அரசியலை ஊக்குவிக்கும் வரை மக்களாட்சி என்பது தவறான கருத்தாகும். இந்த நட்பு ‘நச்சு’ போன்றது. ஏனெனில் இது போர் செய்வதற்கான வெறித்தனத்தை பலவீனப்படுத்துகிறது. போரை நம்புபவர்களுக்கு நண்பர்கள் கிடையாது.
மக்களாட்சி குறித்த ஐயங்களை எழுப்பிய கோல்வால்கர் சிறுபான்மையினர் என்ற கருத்தை நோக்கி திரும்புகிறார். லீக் ஆஃப் நேஷனில் (League of Nations) இருந்து மேற்கோள் காட்டுகிறார்:
“குடிமகன்” என்ற சொல்லை நிராகரித்து, சிறுபான்மையினர் – வெளிநாட்டினர், அல்லது வெளியிலிருந்து வந்தவர்கள், தேசிய அரசியலில் அவர்கள் பங்கேற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள, “இணைக்கப்பட்ட” என்ற சொல்லில் கோல்வால்கர் கவனம் செலுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, தேசத்தின் மகத்தான, தனித்துவமான கருத்தாக்கத்தை சிறுபான்மையினர் பிளவுபடுத்துகிறார்கள்.
“ஜெர்மனியர்கள் பரம்பரையாக வைத்திருந்த, அரசியல் மோதல்களால் பிரிக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை ஒரு குடையின் கீழ் மீண்டும் கொண்டுவர நவீன ஜெர்மனி முயன்றது.” என்று நாஜி ஜெர்மனியை கோல்வால்கர் புகழ்ந்துரைக்கிறார்.
தேசிய நிலப்பகுதி என்பது இன பாரம்பரியம் குறித்த ஒரு விடயமாகும். பேரரசுக்கான ஒரு நவீனகால கருத்தாக்கத்தால் அதன் வரலாறு தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில், வரலாறு பற்றிய கருத்தாக்கமே ஒரு போலி வரலாறு. இங்கு வரலாறு என்பது இன வரலாற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. நவீன தேசிய அரசு என்கின்ற கருத்தாக்கத்திற்கு முன்னர் ஜெர்மனியாகவோ இந்தியாவாகவோ இருந்தவை தான் கோல்வால்கரின் கூற்றுப்படி உண்மையான தேசிய நிலப்பகுதி. “ஒரு தேசமாக இருக்கவோ வாழவோ மக்களுக்கு ஒரு பாரம்பரிய நிலப்பகுதி இருப்பது இன்றியமையாதது” என்று கோல்வால்கர் வலியுறுத்துகிறார்,
இன கருத்தாக்கத்தை சுற்றி பாரம்பரிய கருத்தாக்கம் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அவர் கூறும்போது இது மேலும் தெளிவாகிறது: “வேர்மட்ட அளவில் வேறுபாடுகள் கொண்ட இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுமையாய் ஒன்றிணைக்கப்படுவது சாத்தியமற்றது என்ற ஜெர்மனியின் அனுபவம் இந்துஸ்தானில் நாம் கற்றுக்கொண்டு ஆதாயமடைய ஒரு நல்ல பாடம். இனவெறி அடிப்படையில் கலாச்சாரம் புரிந்து கொள்ளப்படுகிறது. இனவெறி எல்லைகளுக்கு வெளியே கலாச்சார ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. கோல்வால்கரின் கலாச்சாரம் பற்றிய கருத்து கண்டிப்பாக பிரிவினைவாத அடிப்படையிலானது.
நேருமற்றும்தாகூரின்அணுகுமுறை:
இதற்கு மாறாக, டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:
“பவுத்தரோஅல்லதுசமணரோஇந்தியசிந்தனைமற்றும்கலாச்சாரத்தின்நூறுவிழுக்காட்டுபடைப்பாகும். இருப்பினும்நம்பிக்கைஅடிப்படையில்அவர்கள்இந்துகிடையாது. எனவே, இந்தியகலாச்சாரத்தைஇந்துகலாச்சாரம்என்றுகுறிப்பிடுவதுமுற்றிலும்தவறானது. பிற்காலத்தில்இந்தகலாச்சாரத்தின்மீதுஇஸ்லாம்பெரிதாகசெல்வாக்குசெலுத்தியஅதேசமயத்தில்இந்தியாவின்ஒருதனித்துவமாகஅடையாளமாகவும்அதுஇருந்தது ”.
இங்கே நேரு கலாச்சாரத்தையும் தேசத்தையும் தொடர்புபடுத்த முயற்சிக்கிறார். ஆனால் இது கோல்வால்கருக்கு முற்றிலும் எதிரானது. தேசிய கலாச்சாரத்தை வரையறுக்க இனம் அல்லது மதத்தை உருவாக்குவதற்கு பதிலாக, இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக பல்வேறு மதங்களின் வரலாறு மற்றும் இருப்பை நேரு பொருத்துகிறார். நேரு எளிமையான ஒரு வரலாற்று உண்மையை வரையறுக்கிறார்: இந்து என்பவர் ஒரு இந்தியர், ஆனால் இந்தியர் என்பவர் இந்து மட்டுமல்ல. பவுத்தமும், சமணமும், இஸ்லாத்தைப் போலவே இந்தியாவில் தனித்துவமாக உள்ளன.
இந்தியாவில் இஸ்லாத்தின் தனித்துவம் என்பது மற்ற மதங்களுடனான மோதல் காரணமாக உருவானதாகும். இந்த சந்திப்பு போர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தையும் உருவாக்கியது. கோல்வால்கர் போரில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு கலாச்சாரத்தை மறுக்கிறார்.
கோல்வால்கரிடமிருந்து வேறுபடும் இரவீந்திரநாத் தாகூரரையும் இங்கே எடுத்துக் கொள்வோம். ‘இந்திய கலாச்சாரத்தின் மையம் (The Centre of Indian Culture)’என்கின்ற தனது கட்டுரையில் அவர் எழுதுகிறார்:
“நவீனஐரோப்பியகலாச்சாரத்தின்உண்மையும்வலிமையும்அதன்நீரோட்டமானஇயக்கத்தில்உள்ளது. அது [தேசியம்குறித்த] அனைத்துசிக்கல்களும்கடுமையாகசரிசெய்யப்பட்டுநம்மிடம்வருகிறது. அவற்றின்தெய்வீகதோற்றம்காரணமாககிட்டத்தட்டநம்முடையசொந்தசாத்திரங்களைப்போலவேநம்மனம்எதிர்பில்லாதமுறையில்விமர்சனமின்றிஇருக்கவேண்டும்.”
பாரம்பரிய அறிவின் கெட்டித்தன்மைக்கு மாறாக, கலாச்சாரத்தின் இந்த இலகிய தன்மையை தாகூர் வரவேற்கிறார். அதே கட்டுரையில், அவர் கலாச்சாரத்தை “மனதின் வாழ்க்கை” என்று வரையறுக்கிறார்.
மனதுக்கும் இனத்துக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இனம் என்பது ஒரு உயிரியல் கருத்தாக்கம். இது நிறம் பற்றிய கருத்தாக்கமாகும். இது ஓரளவு மற்ற (இனரீதியாக வேறுபட்ட) மக்களின் நிற ரீதியிலான பாரபட்சமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. மனம் என்பது ஒருவரின் இன அடையாளத்துடன் முற்றிலும் அடையாளம் காண முடியாத – அல்லது தாழ்ந்து போகாத சிந்தனை மற்றும் அனுபவத்தின் கலவையாகும். உடல் அனுபவிப்பதை மனம் செயலாக்குகிறது, மேலும் அதைப் எதிரொளிக்கிறது. மனதின் வாழ்க்கை, பல வழிகளில், கலாச்சாரத்தின் வாழ்க்கையை குறிக்கிறது. மனமும் உடலும், எதிரொளிப்பு மற்றும் அனுபவமாக நமது கலாச்சார நினைவகத்தின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து தான் இனக் கோட்பாடுகள், வரலாற்று மற்றும் கலாச்சார மோதல்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகைப்படுத்தல்களின் அடிப்படையில் வேற்றுமையை உருவாக்கி, (மற்றவரின்) அறிவையே போராக மாற்றுகின்றன.
“நவீன கலாச்சாரம் குறித்த நம்முடைய கருத்து என்பது இலக்கண மற்றும் ஆய்வக எல்லைக் கோடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்ற புலனுணர்வு அல்லது பகுத்தறிவு அவதானிப்பை கட்டுரையில் தாகூர் உருவாக்குகிறார். இதற்கு நவீன இனவெறி மொழியைச் சுற்றியுள்ள இரண்டு முதன்மையான சொற்களை அவர் பயன்படுத்துகிறார்: இலக்கணம் மற்றும் ஆய்வகம். இலக்கணம் ஒரு மொழியின் விதிகளை வரையறுக்கிறது. ஆனால் மொழி குறித்தான ஒரு விஞ்ஞான கருத்தாக்கத்தை தூய்மை அடிப்படையில் உருவாக்க அதன் இலக்கணம் பயன்படுத்தப்படும்போது, மொழியின் திறந்த மற்றும் உயிர்ப்புத்தன்மை ஒரு குடுவையில் அடைபடுகிறது. ஒரு ஆய்வகத்தில், மொழியின் விஞ்ஞான விதிகள் ஒரு கோட்பாட்டை உருவாக்க பயன்படுத்தப்படும் போது தர்க்கம், இனமாக தாழ்த்தப்படுகிறது.
நேரு மற்றும் தாகூரைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்பது பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகிய இரண்டின் எல்லைகளை தாண்டுகிறது. கோல்வால்கரைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்பது மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை சேர்ந்தார் போல் குறிக்கும் ஒரு சொல். இது இன வேறுபாட்டை வரையறுக்கிறது. தாகூர் மற்றும் நேருவின் பார்வையில், கலாச்சாரம் என்பது போரை கடந்த ஒன்று. அதாவது, இரு தரப்பினரும் வன்முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்ட பிறகு, கலாச்சாரம் எஞ்சியிருக்கிறது. கலாச்சாரம் என்பது வன்முறை வரலாற்றில் எஞ்சியதாகும்.
வரலாற்றில் மிச்ச மீதி இருந்த வன்முறை பற்றிய கருத்தை தக்கவைத்துக்கொள்வதே கலாச்சாரத்தின் பணி என்று கோல்வால்கர் நம்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலாச்சாரத்தை எது அழித்ததோ அதற்கே மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறார். கோல்வால்கரின் பணி முரண்பாடானது, ஆபத்தானது மற்றும் துன்பமானது. அவர் போர் குறித்தான கருத்தால் கலாச்சாரத்தை வரையறுத்து பாதுகாக்கிறார்.
சிறுபான்மையினர்களுக்குஎதிரானநிரந்தரகலாச்சாரபோர்:
1975 மற்றும் 1976 க்கு இடையில், “கட்டாயமாக சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் (Society Must Be Defended)” என்ற தன்னுடைய கவர்ச்சிகரமான தொடர் சொற்பொழிவுகளின் மூலம் 17 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே போர் என்ற கருத்தானது அனைத்து அதிகார நிறுவனங்களையும் வரையறுப்பதாக பிரெஞ்சு சிந்தனையாளரான மைக்கேல் ஃபோக்கால்ட்(Michel Foucault) குறிப்பிடுகிறார். போரை உருவாக்கும் மனநிலையைப் பற்றிய ஃபோக்கோவின் விளக்கம் கோல்வால்கருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் காட்ட சில முதன்மையான பத்திகளை அவரது உரையிலிருந்து பார்க்கலாம்.
மைக்கேல் ஃபோக்கால்ட்
(ஒரு சமூகத்தின்) சட்டத்திற்கு எதிராக மத்தியக்காலத்தில் போருக்கு முன்னுரிமை அளித்த அதிகாரத்தின் இரு கட்டமைப்பு தோற்றம் பற்றி பேசுகையில், ஃபோக்கோ தன்னுடைய மனநிலையைத் திறக்கிறார்:
“வேறுவிதமாகக் கூறினால், எங்களை எதிர்கொள்ளும் எதிரிகள் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். மேலும் நல்லிணக்கமோ அல்லது சமாதானமோ எதுவும் போரை முடிவுக்கு கொண்டு வராது. நாங்கள் உண்மையில் வெற்றியாளர்களானால் மட்டுமே இது முடிவடையும். ”
இதேபோன்ற, 17 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய மனநிலையை கோல்வால்கரும் எதிரொலிக்கிறார். கலாச்சாரத்தின் இனரீதியான கருத்தை மத சிறுபான்மையினருக்கு எதிரான நிரந்தரப் போரில் ஈடுபடுவதாக மாற்றியுள்ளார். நீங்கள் போரை நம்பினால், அமைதி என்பது உண்மையற்றது மட்டுமல்ல, விரும்பத்தகாததும் கூட என்கிறார்.
போர் ஒரு கொள்கை என்பதால் அது அரசின் சித்தாந்தத்திலிருந்துதான் வர வேண்டும். போரை நம்பும் பாசிச அரசு, எதிரிகளாக கற்பனை செய்யும் அனைவருடனும் போரில் ஈடுபடும் ஒரு அரசாகும். சிறுபான்மையினர் அரசியல் உரிமைகளை கோரும் தகுதியுடையவர்களாக இருப்பதால் “சிறுபான்மையினர்” என்ற சொல்லை அத்தகைய ஒரு அரசு விரும்பவில்லை.
கோல்வால்கர் விளக்கியபடி, “நாங்கள் தேசிய மீளுருவாக்கம் செய்ய நிற்கிறோம், ஆனால் அரசியல் உரிமைகள் எனும் இடையூறுகளாலான அரசுக்கு அல்ல”. மறைமுகமான வாதம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகத்தின் மறுசீரமைக்கப்பட்ட பாரம்பரிய பெருமைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மீளுருவாக்கமானது சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் இதன் பொருள் இன்னும் அதிகமாக இருக்கும் .
“சமூகம் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்” சொற்பொழிவில் போர் சித்தாந்தவாதிகளை ஃபோக்கோ விளக்குகிறார் : தேசம் இனி காட்டுமிராண்டித்தனமான மற்றும் போர்க்குணமிக்க உறவுகளில் பங்காளியாக இருக்காது. தேசம் என்பது அரசின் செயல் வடிவமிக்க உறுதியான மையமாகும். தேசம் என்பதே அரசு, அல்லது குறைந்தபட்சம் அரசுக்கான வடிவமாக இருக்கும்”.
இந்து ராஷ்டிரம் என்பது அரசின் இடத்தில் தேசத்தை வைக்கும் இந்த கருத்துக்கு ஒப்பானது. ஒரு அரசாக அது மாற முற்படுகிறது. உறுதியான சொற்களில் சொல்வதானால், அரசை போன்ற செயல்பாடுகளை கொண்ட விழிப்புணர்வு படைத்த சமூகம் இது. இந்த இடத்தில் தான் சமூகம் என்ற கருத்திற்கு ஆபத்து வருகிறது. சமூகம் ஒரு நிறுவனமாக கருதப்பட்டால், அதன் முக்கிய வரலாற்று நோக்கம் அதனுள்ளேயே போர் நடத்துவதுதானென்றால் சமூகம் என்ற கருத்தே இங்கே அழிக்கப்படுகிறது.
மக்களாட்சி என்ற கருத்தின் மூலம் இந்து தேசத்திற்கான தேவையை நீர்த்துப்போகச் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர்களை கோல்வால்கர் கடிந்துகொள்கிறார்: “… இந்த நாட்டில் ஒரு “உண்மையான” மக்களாட்சியை உருவாக்குவதற்கான நம்முடைய காட்டு வாத்து துரத்தலில், [நாங்கள்] நமது உண்மையான இந்து தேசத்தின் பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டோம்”.
கோல்வால்கரைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது பிடிபடாமல் உள்ள அதே நேரத்தில் ஒரு இந்து தேசம் அவரை பொருத்த வரையில் சாத்தியமானது மற்றும் விரும்பத்தக்கதாக உள்ளது. ஒரு மக்களாட்சியை விட ஒரு மதவாத அரசு (இந்து ராஷ்டிரா) என்ற கருத்தை அவர் விரும்புகிறார். ஒரு மக்களாட்சியின் விருப்பம் ஏன் ஒரு காட்டு வாத்து துரத்தல் என்பதற்கான காரணங்களை அவர் முன்வைக்கவில்லை. ஆனால் இந்து ராஷ்டிரத்தை அடைவதில் இருந்து ஒரு மக்களாட்சி விலகுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். சமுதாயத்தின் (மக்களாட்சி) நிர்வாகத்தை விட அல்லது நமது சமூக மற்றும் மத வேறுபாடுகளை விட ஒரு நாடு போரை நிர்வகிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்கிறார்.
கோல்வால்கரைப் பொறுத்தவரை, எதிரியை பெயரிட்டு அழைக்க ஜனநாயக அரசுக்கு ஆண்மை இல்லை. “எங்களது இன ஆன்மாவை தூங்க விட்டதாக” இந்திய தேசிய காங்கிரஸை அவர் குற்றம் சாட்டினார். அவரைப் பொறுத்தவரை, இது “நம்முடைய தற்போதைய மகிழ்ச்சியற்ற நிலைக்கு மூலக்காரணியாக இருந்து வருகிறது…. நம்முடைய அக்கறையற்ற எதிரிகளை கட்டிப்பிடிப்பதன் மூலம், நம்முடைய இருப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் காரணம் இதுவே”. எதிரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற மக்களாட்சியை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசியல் தர்க்கமாக இருக்க வேண்டும்.
தேசத்தை தேடி: இந்தியாவின் மற்றொரு சிந்தனையை நோக்கி (Looking for the Nation: Towards Another Idea of India) என்ற நூலின் ஆசிரியர் எம் அ நாஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜி (Manash Firaq Bhattacharjee). இது Speaking Tiger Books வெளியீட்டாளர்களால் 2018, ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.
கட்டுரையாளர் : Manash Firaq Bhattacharjee தமிழாக்கம் :சுகுமார் நன்றி :தி வயர்.