Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 312

இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

சிய சோசலிச புரட்சியின் 102-ம் ஆண்டை ஒட்டி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மொத்த இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் லதா.

“மூனு ரூபா பார்லே ஜி வாங்க முடியல …
முப்பது ரூபா பனியன் ஜட்டி போணி ஆகல …”
– பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தும் கோவனின் பாடல்.

“எழில்மிகு காஷ்மீரிலே என்ன நடக்குது தெரியல …
மண்ணின் சொர்க்கமே இருண்டு கெடக்கு .. மர்மம் விலகல …”
– காஷ்மீர் மக்கள் வாழ்வின் சோகத்தை பாடலாக வெளிப்படுத்துகிறார் தோழர் லதா…

“இரும்பு குழம்பாகி பாய்லரிலே கொதித்திடும் ..
கை உரையும் தாண்டி சூடு விரலெல்லாம் வெந்திடும் …”
தொழிலாளர்களின் வேலைநிலை அவலத்தை பாடலால் விவரிக்கிறார் தோழர் கோவன்..

பாருங்கள் ! பகிருங்கள் !

ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

ரசியல் சாசன நிபுணரும் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரனி எழுதியுள்ள இந்தப் புத்தகம் உண்மையிலேயே அட்டகாசமான தொகுப்பு.

இந்தியாவில் தற்போது மிகச் சக்திவாய்ந்த அமைப்பாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் துவக்கம் முதல் தற்போது வரையிலான வளர்ச்சியை படிப்படியாக விளக்குகிறார் நூரனி.

இந்தியாவின் கடந்த கால வரலாற்றை, அதிலிருந்த மகத்தான மனிதர்களான புத்தர், அசோகர், அக்பர், நேரு, காந்தி போன்ற மகத்தான மனிதர்களை அழிக்க முயல்வது ஏன் என விளக்குகிறார் நூரனி.

ஆர்.எஸ்.எஸ். ஏன் ஏற்படுத்தப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்.-ன் 19-ம் நூற்றாண்டுப் பாரம்பரியம், பிரிட்டிஷாருடன் இணக்கம், ஐரோப்பிய பாசிஸ்டுகளுடன் ஈர்ப்பு, இந்து மகாசபாவைக் கைப்பற்றும் சாவர்க்கர், சுதந்திரத்தின் போது அந்த அமைப்பு என்ன செய்தது, காந்தி கொலையில் பங்கு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடைகள், ஜனசங்கத்தின் உருவாக்கம், நெருக்கடி நிலை காலகட்டத்தில் அதன் செயல்பாடு, அதன் வன்முறை, அதன் துணை அமைப்புகள் என விரிவாக விவரிக்கிறார் நூரனி.

“தற்போது அபாயத்தில் இருப்பது இந்தியக் கனவல்ல; இந்தியாவின் ஆன்மா” என்று குறிப்பிடும் ஏ.ஜி. நூரனியின் இந்தப் புத்தகம் சமகால இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள முக்கியமான ஒரு கருவி.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

ஏகப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் 547 பக்கங்களைக் கொண்டது. லெஃப்ட் வேர்ட் வெளியீடு.

1500 ரூபாய்க்கு முதலில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது 521 ரூபாய்க்கு அமெஸானில் கிடைக்கிறது. Don’t miss it!!

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?

லகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல ‘இந்து’ என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. (நூலின் முன்னுரையிலிருந்து)

‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

இந்து என்ற சொல், இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான ”மரியாதை’ என்ன என்று கேட்டால். ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே “வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார். ‘இந்து’ என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும் தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள். 1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ் – காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu என்ற சொல் முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது. (நூலிலிருந்து பக்.5)

பகுத்தறிவு வாதத்தால் தான் கோயில்கள் பாழடைந்து போய்விட்டன என்று சொல்கிறார்களே?

பகுத்தறிவு வாதத்தால் என்றல்ல. அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது திராவிட இயக்கம் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்ற குற்றச்சாட்டைத்தான். நாத்திகத்தோடு திராவிட இயக்கம் வந்தது 1925-க்குப் பிறகுதான். அதற்கு முன்னாலே பாழ்பட்ட கோயில்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இரண்டாவது. பார்ப்பனர் கையில் இருந்த – பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்கள் எல்லாம் பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருந்த – கோயில்கள்தானே தவிர எந்த ஊரிலாவது சாதாரண அம்மன் கோயில், சுடலை கோயில், இசக்கி கோயில் காத்தவராயன் கோயில் பாழ்பட்டுப் போகிறதா? எனில் எந்த ஆன்மீகம் பாழ்பட்டுப் போயிருக்கிறது? யாருடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறது?

பெருவாரியான மக்களுடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறதனால் தானே காத்தவராயன் கோயிலோ, சுடலை கோயிலோ, பொன்னியம்மன் கோயிலோ அழியாமல் அப்படியே இருக்கிறது. சுஜாதாகூட ஒருமுறை எழுதியிருந்தார்,  நவதிருப்பதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து,  அவை வாழ்ந்த காலத்தை நினைத்துப்பார்த்து விட்டு ‘அப்பொழுதெல்லாம் திராவிட இயக்கம் இல்லை’ என்று. திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெரும்பாலான கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதற்கான காரணம், பிராமணர்கள் புதிய அதிகார மையத்தைத் தேடி அந்தக் கோயில்களை எல்லாம் கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். 19-ம் நூற்றாண்டில் நீதிபதி முத்துச்சாமி ஐயரோ, எஸ்.எஸ். வாசனோ தங்கள் கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்ததற்கு திராவிட இயக்கமா காரணம்? திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னாலேயே இவர்கள் நகரத்திற்கு புதிய அதிகாரங்களையும், பொருள் வளத்தையும் தேடித்தான் கோயில்களைக் கைவிட்டு விட்டு வந்தார்கள். (நூலிலிருந்து பக்.17)

இந்துத் தலைவர்களிடையே ‘தலித்’ பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ?

இல்லை. அவர்கள் மாறியதாகக் காட்டுகிறார்கள். இன்னும் இந்துத் தலைவர்களிடையே கூட சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார், ‘அம்பேத்காரை பின்பற்றும் மக்கள்’ என்கிறார். வெளிப்படையாகப் பெயர் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. இவர்கள் சுத்தமாக இல்லையென்று ஒரு காலத்திலே சொன்னார்கள். இப்பொழுது எதிர்ப்பு வந்துவிட்டதால் அதை விட்டுவிட்டார்கள். யாருடைய சுத்தம் பற்றி யார் பேசுவது? அழுக்குகளை உரமாக்கி அழகான பயிர்களை உருவாக்கும் மனிதன் அசுத்தமானவன். மடாதிபதி சுத்தமானவரா? அசுத்தம் என்பது உடல்  உழைப்பை மதிக்காத அதை சுரண்டி வாழுபவரின் பேச்சாகும். ‘திரௌபதி சுத்தமாக இருந்தா ஆபத்திலே கிருஷ்ணனைக் கூப்பிட்டாள். கூப்பிட்டவுடன் உதவிக்கு அவர் வரவில்லையா’ என்று கேட்கிறார்களே வைணவர்கள். இந்தக் கேள்விக்கு சங்கராச்சாரியார் பதில் சொல்வாரா? நூற்றுக்கு இருபது பேராக இருக்கிற தலித் மக்கள் மதம் மாறிப்போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலே ‘இந்து’ என்ற பெயரோடு தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காரு அடிகளார் போலப் புதிய நெறிகளைக் கண்டுபிடிக்கக் கூடாது. இதுதான் அவரது எண்ணமாகும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களுடைய ஆன்மீக அதிகாரத்தையும் மறைமுகமான அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதுமட்டுமல்ல. இப்பொழுது அந்த ‘கிறிஸ்தவர் இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தையை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’ என்னும், பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும், மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். (நூலிலிருந்து பக்.20)

நூல் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
ஆசிரியர் : தொ. பரமசிவன்

வெளியீடு : மணி பதிப்பகம்,
29-ஏ, யாதவர் கிழக்குத் தெரு,
பாளையங்கோட்டை.

பக்கங்கள்: 20
விலை: ரூ 11.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | sixthsense publications | periyarbooks

குழந்தைகளை மதிப்பிட மதிப்பெண் அட்டவணைகளா தேவை ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 10

பெற்றோர்களுக்கு பாக்கெட்டுகள்

னால் தம் குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கு உரிமையுண்டு. குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு உதவி புரிவது பற்றி நாம் அவர்களுக்கு உபயோகரமான ஆலோசனைகளைத் தர வேண்டும். எங்களுடைய பாக்கெட்டுகளின் நோக்கம் இதுதான், இவற்றை ஒட்டுவதில்தான் குழந்தைகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். “லாலி, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

லாலி என்னருகே வந்து பாக்கெட்டின் உள்ளே இருப்பதை எடுக்கிறாள் (மொத்தம் 23 தாள்கள்): இரண்டு கையெழுத்து மாதிரிகள், அவளே உருவாக்கிய இரண்டு கதைகள், வாசகத்தில் சேர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அடங்கிய மூன்று பயிற்சிகள், அவளே உருவாக்கிய கணக்குகள், வரைகணிதப் படங்கள், ஐந்து ஓவியங்கள், இரண்டு ஒட்டுப் படங்கள், “தாய் மொழிப் பாடங்களில் நான் என்ன கற்றுக் கொண்டேன்”, “எனக்குக் கணிதத்தில் என்ன தெரியும்” என்ற தலைப்புகளில் நான்கு பக்கங்களில் குறிப்புகள்.

பார்த்து விட்டு ஆமோதிக்கிறேன்.

“இதோ உன் சான்றிதழ்!” என்று டைப் செய்யப்பட்டு நானும், பாடப் பிரிவுத் தலைமையாளரும் கையொப்பமிட்ட தாளைத் தருகிறேன். அதில் பின்வருமாறு எழுதப் பட்டுள்ளது:

“லாலி அன்பான, உழைப்பார்வமுள்ள சிறுமி. நண்பர்கள் இவளை விரும்புகின்றனர். இவள்தான் வகுப்பில் மருத்துவத் தாதி. நீக்கா விரலை அறுத்துக் கொண்ட போது லாலிதான் அயோடின் தடவிக் கட்டுப் போட்டாள்.

லாலி சுவாரசியமாகப் பேசுவாள். இவளால் கோர்வையாகப் பேச முடியும் என்றாலும் வார்த்தைகள், வாக்கியங்களுக்கு இடையில் “ஆஆஆ” என்று கூறுவதைத் தவிர்த்தால் நன்றாயிருக்கும்.

பல கவிதைகள் இவளுக்குத் தெரியும். பாவனை நயத்தோடு இவள் கவிதை வாசிப்பது நண்பர்களுக்குப் பிடிக்கும்.

முழு வார்த்தைகளாகப் படிக்கிறாள், படிப்பதைப் புரிந்து கொள்கிறாள். இவள் ஏற்கெனவே நான்கு புத்தகங்களைப் படித்து முடித்துள்ளது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி.

அழகாக எழுதுகிறாள், எழுத்துகளுக்கு இடையில் சீரான இடைவெளி விட்டால் இன்னமும் சிறப்பாயிருக்கும்.

எழுத்து மூலம் தன் எண்ணங்களை வெளியிட இவளுக்குத் தெரியும். “வசந்தம் அழைக்கிறது” எனும் இவளுடைய கதையை வகுப்பில் வாசித்தோம். நண்பர்கள் கூறிய ஆலோசனைகள் லாலிக்கு நினைவில் இருக்கின்றன.

கணக்குகளைப் போடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வரை கணித வடிவங்களை நன்கு வரைகிறாள்.

ருஷ்ய மொழி இவளுக்குப் பிடித்துள்ளது. வாக்கியங்களை அமைக்க இவளால் முடியும், கவிதைகள், பழமொழிகள், விடுகதைகள் மீது விருப்பம் உண்டு. ருஷ்ய மொழி உச்சரிப்பின் மீது கவனம் செலுத்தினால் நல்லது.

இவள் வரைந்த ஓவியங்களும் உழைப்புப் பாடத்தில் செய்த பொருட்களும் வகுப்புக் கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ளன; இவை அனைவருக்கும் பிடிக்கும். லாலி இசை நாடகத்தில் பங்கேற்பவள்.

அவள் விரைவாகப் படிக்க கற்றுக் கொண்டால் நன்றாயிருக்கும். கோடை விடுமுறையில் 6-7 குழந்தை நூல்களைப் படிக்க வேண்டும். எழுதிப் பழகினால் நேர்த்தியாக எழுதவரும்.

லாலி! நீ முதல் வகுப்பிற்கு மாறிச் செல்வது குறித்து பாராட்டுதல்கள்! முக்கிய விஷயங்கள் உன்னை எதிர் நோக்கியுள்ளன!”

இந்த விவரங்களடங்கிய தாளை பாக்கெட்டில் போடுகிறேன். இது அழகாகக் காட்சி தருகிறது: மேலே மலர்களும், சிரிக்கும் சூரியனும் வரையப்பட்டுள்ளன, “அன்புப் பெற்றோர்களுக்கு – லாலியிடமிருந்து” என்று வண்ணப் பேனாக்களால் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டை ஒட்டலாம்… வாஹ்தாங், உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

வாஹ்தாங்கின் பாக்கெட்டில் 19 தாள்கள் உள்ளன. உள்ளேயுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

“நான் உன்னிடத்தில் இருந்தால் இந்த எழுத்துகளை மாற்றி எழுதுவேன். உன்னால் அழகாக எழுத முடியுமே.”

அவனைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைத் தருகிறேன். இதில் ஆலோசனைகள் உள்ளன: முழு வார்த்தைகளாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும், எழுத்துகளை விட்டு விடக் கூடாது, நண்பர்களுடன் வாய்ச் சண்டை போடக் கூடாது.

“தாம்ரோ, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!” அவளுடைய பாக்கெட்டில் 26 தாள்கள் உள்ளன.

நர்சரிப் பள்ளியிலுள்ள குழந்தைகளின்பால் இவள் எவ்வளவு அக்கறை காட்டினாள் என்று நன்னடத்தைச் சான்றிதழில் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டின் மீது எழுதப்பட்டுள்ளதில் பிழையைப் பார்க்கிறேன். இதைக் கண்டுபிடித்து, திருத்து!”

இவ்வாறாக ஒவ்வொருவரும் தம் பாக்கெட்டுடன் என்னிடம் வருகின்றனர்.

“உங்களது பாக்கெட்டுகளை டெஸ்குகளின் மீது வைத்துச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர்களை உங்கள் இடங்களில் உட்கார வைப்பீர்கள். நீங்கள் தயாரித்துள்ள அதிசயங்களை அவர்களே பார்ப்பார்கள்.”

இந்தப் பாக்கெட்டுகளை குழந்தைகள் கடந்த இரண்டு வாரங்களாகத் தயாரித்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு தனிப் பாடவேளையின் போது இவர்கள் விசேஷமாக இதற்கென எழுதினார்கள், உருவாக்கினார்கள், படைத்தார்கள், வரைந்தார்கள், ஒட்டினார்கள், தேர்ந்தெடுத்தார்கள், இவற்றைத் தத்தம் பாக்கெட்டுகளில் போட்டார்கள். பல குழந்தைகள் இடைவேளையின் போது வெளியே கூடப் போகாமல் டெஸ்கிலிருந்து பாக்கெட்டை எடுத்து அதில் மூழ்கிப் போனதைப் பார்த்தேன். இதை அவர்கள் அக்கறையோடும் உற்சாகத்தோடும் செய்தார்கள். இது தம் பெற்றோர்களுக்கான பரிசு ஆயிற்றே: “எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்த்தீர்களா! நான் எப்படிப்பட்டவன் பார்த்தீர்களா!”

பாக்கெட்டுகள் ஏன் ரகசியமானவை தெரியுமா? ஏனெனில் பெற்றோர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைத் தர குழந்தைகளுக்குப் பிடிக்கும். எனவே தான் இவை ரகசியமானவை என்று வகுப்பில் கூறுகிறோம், ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளில் தலை சிறந்தவற்றையும் ஆசிரியர் தரும் சான்றிதழையும் இப்பாக்கெட்டுகளில் போட்டு ஒட்டுகின்றனர்.

பெற்றோர்கள் இந்தப் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?

இதைத் திறப்பார்கள். எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் பின்வருமாறு செய்ய வேண்டும்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி குழந்தை தயாரித்துள்ள ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும், சான்றிதழை யாராவது ஒருவர் எல்லோருக்கும் கேட்கும்படி படிக்க வேண்டும். பழைய பாக்கெட்டை பத்திரமாக வைத்து – இரண்டையும், இரண்டின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாயிருக்கும். பின் குழந்தை அவர்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தந்துள்ளான், எப்படி எழுதுகிறான், எந்த மாதிரியான கணக்குகளைப் போடுகிறான், எந்தக் கவிதைகள் தெரியும், எப்படி வரைகிறான், பொதுவில் எப்படி வளர்ந்து வருகிறான் என்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

அவன் இன்னமும் அதிகம் தெரிந்து கொள்ள, விரைவாக முன்னேறி, சிறப்பானவனாக இருக்க, உற்சாகமானவனாக, அன்பானவனாக, உழைப்பார்வம் உள்ளவனாக வளர அவனுக்கு எப்படி உதவுவது என்று பேச வேண்டும். குழந்தை ஏதாவது தப்பு செய்திருந்தால் இந்தக் குடும்ப ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு போதும் குழந்தையைத் திட்டக் கூடாது. இவையெல்லாவற்றையும் குழந்தை பெரும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தயாரித்திருக்கிறான், தற்போது தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று இவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறுநாள் தந்தை இந்த பாக்கெட்டை தன் வேலையிடத்திற்கு எடுத்துச் சென்று, “எனது மகன் எப்படிப்பட்டவன், பாருங்கள்” என்று தன் நண்பர்களிடம் கூற விரும்பலாம். தாயும் இதே மாதிரி ஆசைப்படலாம். வீட்டிற்கு யாராவது வரும் போதும், அண்டை அயலாருக்கும் பாக்கெட்டைக் காட்டி எங்கள் பள்ளிச் சிறுவன் எங்களை எப்படி சந்தோஷப்படுத்தியுள்ளான் பாருங்கள்” என்று பெற்றோர்கள் கூறலாம். பின்னர் முதல் பாக்கெட்டைப் போன்றே இதையும் ஒரு பத்திரமான இடத்தில் வைத்து பேணிக் காப்பார்கள். இவற்றோடு குழந்தையின் எதிர்காலப் பரிசுகளும் சேரும்.

பெற்றோர்களுக்கான வெளிப்படையான வகுப்புகள் பலவற்றை நான் நடத்தியிருக்கிறேன், குழந்தைகள் எப்படி, என்ன பயிலுகின்றனர் என்று இவர்கள் வந்து பார்த்துள்ளனர். தம் குழந்தையைப் பார்த்திருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் அடிக்கடி கூட்டாகக் கலந்தாலோசித்திருக்கிறோம். படிப்பு சொல்லித் தருவதிலும் குழந்தை வளர்ப்பிலும் கூட்டு முயற்சிகளைப் பற்றிப் பேசியிருக்கின்றோம். பெற்றோர்களுக்கான விரிவுரைகளில் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பைப் பற்றிய சிபாரிசுகளை வழங்கியிருக்கிறேன். குழந்தைகளுடன் கலந்து பழகுவதன் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறியிருக்கிறேன்.

இன்று பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தடிமனான பாக்கெட்டுகளும் சான்றிதழ்களும், நாங்கள் பள்ளியில் எப்படி வாழ்ந்தோம், குழந்தைகள் எப்படி வளர்ந்தனர், என்ன கற்றுக் கொண்டுள்ளனர், எதில் முன்னேறியுள்ளனர், எப்படிப்பட்ட விருப்பங்கள் தோன்றுகின்றன என்பதையெல்லாம் பற்றிய எங்களது அறிக்கையாகும்.

இன்று பெற்றோர்கள் கூட்டத்தில் “அன்புள்ள பெற்றோர்களே! ஒருவேளை இந்த பாக்கெட்டுகளைத் திறக்க வேண்டாமோ? மதிப்பெண் அட்டவணைகள் பெற விரும்புகின்றீர்களா? நான் இவற்றைத் தயார் செய்யட்டுமா?” என்று நான் கூறினால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று எனக்கு என் அனுபவத்திலிருந்து தெரியும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !

0

“சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை! ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் ப‌த்மநாபனை கைது செய்யாதது ஏன்? காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம்!” – என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் புரட்சிகர மாணவர்‍ இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் இணைந்து 25.11.2019 அன்று கண்டனத் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

அவர் தன்னுடைய தலைமையுரையில், “பாத்திமா ஒரு முஸ்லீம் மாணவி, இந்துக்களுக்கு பிரச்சினை எனும் போது மவுனமாக இருக்கும் தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் முஸ்லீம் என்றவுடன் ஓட்டு வங்கிக்காக எல்லோரும் இதை கையில் எடுத்து போராட ஆரம்பித்து விடுகின்றனர்” என்று இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் பாஜக பரிவாரங்கள் பேசுகின்றனர். இப்படி பேசும் இவர்கள் அனிதா மரணத்தின் போது எங்கே போயிருந்தனர். அனிதா ஒரு இந்து மாணவிதானே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் எத்தனையோ பேர் தொடர்ச்சியாக ஐஐடி-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் அதில் ஒரு பார்ப்பன உயர் சாதி மாணவரும் இல்லாததன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியதோடு ஐஐடி என்பது ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தை போல ‘அவாள்’ வைத்ததுதான் சட்டம் என்பதாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த கூட்டம்” என்று பேசினார்.

படிக்க:
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ராமலிங்கம் பேசும்போது “பாத்திமா மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி -யில் மட்டும் 58 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எல்லாரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்தான். ஒரு பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள் கூட கிடையாது. இது மட்டுமல்ல இம்மாணவியின் தற்கொலை குறிப்பில் சுதர்சன பத்மநாபன்தான் தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்று தெளிவாக உள்ள நிலையில் அவர் மேல் ஒரு வழ‌க்கு கூட பதிவு செய்து விசாரிக்கவில்லை எனும்போது, பார்ப்பன பாசிசம் எந்த அளவிற்கு நம் நாட்டில் ஊடுருவியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இது ஐஐடி-யில் மட்டுமல்ல இனி நாடு முழுவதும் நடைபெறப் போகிறது. புதிய கல்வி கொள்கை என்று இவர்கள் கொண்டுவருவதில் மூன்றாம் வகுப்பு முதல் பொது தேர்வு வைக்கும் முறையை கொண்டுவருகிறார்கள். ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட பொது தேர்வு தரும் மன‌ அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன நிலை வரும்? இனி நம் குழந்தைகள் பொது தேர்வில் தோல்வி அடைந்தோ அல்லது பயந்தோ படிப்பில் இருந்து விலகி விட வேண்டும். கல்வி மற்றும் நிர்வாக வேலையில் உயர்சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதற்கு நல்ல ஒரு உதாரணம் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உயர்சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதை சொல்லலாம்” என்று நடைபெறுவது பார்ப்பன பாசிசமே என்று உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் தன்னுடைய உரையில் “பாத்திமாவின் மரணம் தமிழ்நாட்டில் வாழும் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. அவருடைய தாய் “கும்பல் கொலைகள் நடக்கும் வட நாட்டிற்கு தன்னுடைய மகளை அனுப்புவதற்கு பயந்து தமிழ்நாடுதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது என்றுதான் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தோம்” என்கிறார்.

அதே போல் பார்ப்பன உயர்சாதினர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவர்கள் மீது வழக்கோ, விசாரணையோ இருக்காது என்பது சொல்லப்படாத நடைமுறையாக இருக்கிறது. எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் கைது செய்யப்படுவதில்லை. தற்போது சுதர்சன பத்மானாபனும் ஒரு விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை. ஆனால் நம்மை போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவிலுள்ள மக்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது?

சமீபத்தில் ஊமச்சிகுளத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட இளைஞர்களை கைது செய்ததோடு இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்ப பெண்களை எல்லாம் இரண்டு நாட்களாக எந்த ஆவணமும் இல்லாமல் லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. ஆனால் இவர்களுக்கு சுதர்சம் பத்மனாபனையோ அல்லது எச்.ராஜாவையோ கைது செய்ய தைரியமிருக்கா?” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
♦ காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
♦ முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

“இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சுதர்சன பத்மனாபனை நாம் பேராசிரியர் என்று அழைக்க கூடாது அவரை குற்றவாளி என்றுதான் அழைக்க வேண்டும். பாத்திமாவே கடைசியாக இருக்கட்டும். இன்னொரு பாத்திமாவை நாம் பறிகொடுத்து விடகூடாது. அதற்கான உத்திரவாதத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும் மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.” என அப்துல் கலாம் ஆட்டோ சங்க ஆலோச‌கர் திரு ராஜேஷ் கோரிக்கை வைத்தார்.

மதுரை காமராஜர் பல்கலையின் முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் தோழர் சீனிவாசன் பேசும்போது “பாத்திமா சாதாரணமான மாணவி கிடையாது. ஐஐடி -யில் சேர்வதற்காக நடைபெறும் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தளவிற்கு திறமை வாய்ந்த மாணவி ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? மேலும் அதில் சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரை ஏன் இதுவரை கைது செய்து விசாரணை செய்யவில்லை? மேலும், கல்வி நிலையங்களில் மதம் மற்றும் சாதி பாகுபாடு நிலவுவது பலதரப்பட்ட கலாச்சார மக்கள் வாழும் நாட்டிற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும். இந்தியா முழுவதும் அரசு கல்லூரி பேராசிரியர் அல்லது துணைவேந்தர் ஆக வேண்டும் என்றால் பல கோடிகள் கொடுத்துத்தான் அந்த பதவிக்கு வரமுடியும். இதுதான் நடைமுறையாக உள்ளது. இதை தடுக்காத வரை இப்படிப்பட்ட மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது” என்று பேசினார்.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில செயலாளர் தோழர் முரளி பேசும் போது ஐஐடி-யின் தரத்தை கேள்விக்குட்படுத்தினார். “ஐஐடி சில கண்டுபிடிப்புகளை செய்துள்ளது உண்மைதான். ஆனால் அவை பத்தாண்டுகளுக்கு முன்புதான். நேரு இத்தகைய தொழில் நுட்பக் கல்வி, எதிர்கால இந்தியா வல்லரசாவதற்குத் தேவை என்று கருதினார். ஆனால் அவர் தற்போதைய ஐஐடி-யின் போக்கை பார்த்தால் மிகவும் வருத்தப்படுவார். தொழில்நுட்ப திறமையை கற்றுக் கொடுக்கும் ஐஐடி ஒருபோதும் தம் மாணவர்களை சமூக பிரச்சினைகளை கையாளும் அளவிற்கு ஆளுமைகளாக உருவாக்குவதில்லை. அங்கே உள்ளே அவ்வளவு சாதாரணமாக யாரும் சென்று விட முடியாது. இரவு முழுவதும் ஏதாவது ஒரு தேர்வு என்று இயந்திரங்களை போல மாணவர்களை பிழிந்தெடுப்பதுதான் ஐஐடி-யின் போக்கு” எனவே இத்தகைய கல்வி முறையில் இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியாது. எனவே ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை சமூக நோக்க கல்வி நிறுவனங்களாக மாற்றுவதே தீர்வு என்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் காளிதாஸ் அவர்கள் பேசும் போது “உலகமெங்கும் வரலாறு சொல்வது என்னவென்றால் அறிவுஜீவிகள் அனைவரும் தங்கள் காலத்தின் ஆளும் வர்க்க தத்துவத்திற்கு முட்டு கொடுத்து பேசினார்கள் என்றால் அவர்கள் வானளாவ புகழப்படுவார்கள். இல்லையேல் அவர்கள் கொல்லப்படுவார்கள். கலிலியோ தொடங்கி கெப்ளர், புருனே, ஐன்ஸ்டீன் மற்றும் கல்புர்கி, பன்சாரே, ரோகித்வெமுலா, மாணவி அனிதா மற்றும் தற்போது பாத்திமா வரை இதுதான் நடக்கிறது” என்று நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ‌ வர்க்க சித்தாந்தத்தின் கொலை வரலாறுகளை பட்டியலிட்டு பொதுமக்களின் ஜனரஞ்சகமான மொழியில் தன்னுடைய அனுபவ செரிவோடு உரையாற்றினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஆசை “நாம் சாதரண வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பற்றியே எவ்வளவு நாள்தான் பேசிகொண்டிருப்பது. இதற்குத் தீர்வுதான் என்ன? அனைத்து வகுப்பை சேர்ந்தவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்தார்கள் ஆனால் அவாள்கள் மட்டுமே கோலோச்சும் ஐஐடி அக்கிரகாரங்களில் இட ஒதுக்கீடு முறையே அமுல்படுத்தப் படவில்லை என்பது தற்போதைய தகவல்களின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அதே சமயம் உயர்சாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, சிறு தடை கூட இல்லாமல் பின்பற்றப்படுகிறது. எனில் இந்த நாடும் அரசும் உயர் சாதியினருக்கானது மட்டும்தானா? இந்த நிலையை இந்த அரசுக்கட்டமைப்பில் மாற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பி, இத்தகைய சூழலை முறியடிக்க நாம் அனைவரும் சாதி கடந்து, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மக்கள் உணரும் விதத்தில் உரையாற்றினார்.

சுற்றி இருந்த வணிகர்கள், மக்கள் என பலபேர் இந்க்த கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தது, அச்சுறுத்தும் பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

இறுதியாக பு.மா.இ.மு-வின் தோழர் ஆனந்த் நன்றியுரையாற்றினார். கூட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.

சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

18

நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.

அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.

தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.

***

வ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :

“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட  சம்பவம் அருமையானது.

தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்‌ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.

படிக்க:
♦ பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !

“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்  “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற  வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு  சுவாரசியமூட்டுகின்றன.

மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.

குறிப்பு: யாராது சம்பந்தப்பட்ட தம்பியிடம் பைக்குகளுக்கெல்லாம் சுங்கம் வசூலிப்பதில்லை என்பதைச் சொல்லி விரைப்பாய் உயர்த்தி வைத்துள்ள அவரது தோள்களை தளர்த்தச் சொல்வது நல்லது. தொடர்ந்து தோளை உயர்த்தியே வைப்பதால் ஸ்பாண்டிலிட்டிஸ் வர வாய்ப்புள்ளது.

***

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.

இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.

அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,

அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:

“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன். பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’. என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”

இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி  போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது. இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.

விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.

படிக்க:
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும். பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.

இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

அடுத்த கூட்டத்தில் அதை விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

– சாக்கியன்

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !

ர் எழுத்தாளர் எதிரெதிர் கருத்துகளைப் பேசுகிற இரண்டு புத்தகங்களை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதுகிறார். இரண்டுமே பெரிய அளவில் கவனம் ஈர்க்கின்றன. இப்படியெல்லாம் நடப்பது மிக அரிது. தமிழில் அரசியல் சார்பு எழுத்துகளில் இப்படி நிகழ்வது உண்டு. உதாரணங்கள் தேவையில்லை. ஆனால் இது ஆங்கில நூல். எழுத்தாளரின் பெயர் நிர் எயல் (Nir Eyal). தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துகளில் கில்லாடி. கேமிங் மற்றும் விளம்பரத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். கன்ஸ்யூமர் சைக்கலாஜி பயின்றவர். இவருடைய முதல் நூல் Hooked: How to Build Habit-Forming Products.

எப்படியெல்லாம் இணையத்தில் வித்தியாசமான வலைத்தளங்களை, சமூகவலைத்தள பக்கங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர்வது என்பதைப்பற்றிய கையேடுதான் இந்த நூல். நம் இணையதளத்துக்குள் வருகிற ஒருவரை எப்படி எல்லாம் தூண்டில் போட்டு பாயைப்போட்டுப் படுக்கவைக்கலாம் என்பதன் சூட்சமங்களை விரிவாகப் பேசும் நூல் இது. சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், எஸ்ஈஓ, இணையதள வடிவமைப்பாளர்களுக்கெல்லாம் மிகப்பிடித்த சூப்பர் ஹிட் இது. வெளியான ஆண்டு 2014.

நான்காண்டுகளுக்குப் பிறகு 2018ல் தன் அடுத்த நூலை எழுதினார் நிர். நூலின் பெயர் “Indistractable: How to Control Your Attention and Choose Your Life”. இது முந்தைய நூலுக்கு நேர் எதிரான கருத்துக்களை பேசுகிறது.

இணையதளங்களும் சமூகவலைத்தளங்களும் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் நாம் எந்த அளவுக்கு கவனச்சிதறலை எதிர்கொள்கிறோம் என்பதுதான் இந்த நூலின் கருத்து! நான் முதலில் வாசித்தது இன்டிஸ்ட்ராக்டிபிளைதான். அதற்குப்பிறகுதான் தேடிப்பிடித்து Hooked -ஐ வாசித்தேன். இரண்டுமே மிக எளிமையான அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூல்கள். வாய்ப்பிருப்பவர்கள் படிக்கலாம்.

ஏன் அப்படி ஒரு நூலை 2014-ல் எழுதிய நிர், அதற்கு நேர் எதிரான இன்னொரு நூலை நான்காண்டுகளுக்குப் பிறகு 2018-ல் எழுதவேண்டும்?

படிக்க:
♦ காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !
♦ பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

நிர்ரே சமூகவலைத்தளங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டார்.

ஒருநாள் நிர்ரின் சிறிய மகள் அவரோடு உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார். பேசும்போது அவ்வப்போது தன் மொபைலை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே உரையாடுகிறார் நிர். அவருடைய மகள் ஏதோ கதையை சொல்லிக்கொண்டிருக்க, அதில் கவனமில்லாமல் போனை பார்த்துக்கொண்டிருந்ததால், மகளுக்கு கோபம் வர ஆரம்பித்திருக்கிறது. மகள் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி எதையோ கேட்க இவர் எதையோ உளறியிருக்கிறார். மகளுக்கு கோபம் உச்சத்திற்கே சென்றுவிட்டது. இதனால் வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறார் மகள். நிர்ருக்கு அப்போதுதான் உரைத்திருக்கிறது தனக்கே இவர்கள் விபூதி அடித்தது. தானே சமூகவலைத்தளங்களுக்கும் மொபைலுக்கும் அடிமையாகிவிட்டோம் என்பது!

கொஞ்ச கொஞ்சமாக தன்னுடைய இந்த மோசமான பழக்கத்தை ஆராயத்தொடங்குகிறார். ஏன் உரையாடல்களின் போது போனை எடுத்து நோண்டுகிறோம்… ஏன் நம்மால் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களை, மெசேஞ்சர்களை பார்க்காமல் இருக்கமுடிவதில்லை என்கிற தேடலில் உருவானதுதான் நிர்ரின் இரண்டாவது நூலான இன்டிஸ்ட்ராக்டிபிள். இணையத்திற்கு அடிமைபட்டிருக்கிறோம் என நினைப்பவர்களுக்கு இந்த நூலை நிச்சயம் பரிந்துரைப்பேன். நிச்சயம் ஓரளவு உதவும்.

நிர் மட்டுமல்ல நம் எல்லோருக்குமே இது சகஜமாகிவிட்டது. உரையாடல்களின் போது எதிரில் இருப்பவரை அவமதிப்பதைப்போல மொபைலை எடுத்து விரல் தேய்த்துக்கொண்டிருப்பது இன்று வழக்கமாகிவிட்டது. நம்மிடம் பேசும்போது யாராவது அப்படி செய்தால்தான் நமக்கு கடுப்பாகும். ஆனால் நாமும் அதையே ஏன் செய்கிறோம்?

உரையாடல்களின் போது மட்டும் அல்ல, திரைப்படம் பார்க்கும்போது, புத்தகம் வாசிக்கும்போது, முக்கியமான சந்திப்புகளின் போது என அன்றாட வாழ்வில் இந்த இணைய இடையீடுகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்த இடையீடுகள் நம் வாழ்க்கையில் நேரடியாகவே பாதிப்புகளை உண்டாக்கவும் தொடங்கிவிட்டன. நமக்கு பிடித்தமானவர்களோடு பேசும்போது மட்டுமல்ல காதலிக்கும் போது, கலவியின் போது, படிக்கும்போது, எழுதும்போது, சாப்பிடும்போது என கவனச்சிதறல் நம் வாழ்வில் அங்கமாகிவிட்டத. எதையுமே முழுமையாக உணர்ந்து செய்கிற உணர்வுகளை இழந்துவிட்டோம்! அது தரும் மகிழ்ச்சியை மறந்துவிட்டோம்.

இடையீடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வோம். ‘ஆமாங்க பேஸ்புக்கால படிக்க முடியல, வாட்ஸப்பால சிந்திக்க முடியல’ என்பது சகஜமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நிர் இரண்டு விதமான மனிதர்களை பற்றிச் சொல்கிறார். Blamers and Shamers. ப்ளேமர்ஸ் என்பவர்கள் காலில் முள் குத்திவிட்டது என்பவர்கள். ஷேமர்ஸ் முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்பவர்கள்.

ப்ளேமர்ஸ் ‘சமூகவலைதளங்களால்தான் தனக்கு கவனச்சிதறல் உண்டாகிறது’ என மொத்த குற்றத்தையும் பேஸ்புக் மீது போடுகிறவர்கள். ஷேமர்ஸ் ”நான் சமூகவலைதளங்களுக்கு அடிமையாக இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படுகிறது” என அப்ரூவர் ஆகிறவர்கள். இதில் நாம் எல்லோருமே முதல்வகைதான் என்கிறார் நிர். முதலில் அந்த மனநிலையை உடைத்தெறியவும் சொல்கிறார். இதை உணர்ந்துவிட்டாலே நீங்கள் பாதி திருந்திவிட்டீர்கள் என்கிறார். காரணம் நம்மை உள்ளிருந்து ஊக்குவிக்கும் Internal Triggers எது என்பது தெரிந்தால்தான் இதை சரிசெய்ய முடியும். மேலும் நான்கு வழிகளை பரிந்துரைக்கிறார் நிர்.

வழி 1 – Mastering the internal triggers

நாம் ஒரு செயலை செய்யும்போது அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல், செல்போனை தேடுகிற உணர்வு ஏன் எழுகிறது? அந்த உணர்வுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது. தனிமை, சோகம், சோர்வு, ஊக்கத்திற்கான ஏக்கம், போர் அடிப்பது, FOMO (Fear of missing out) ­என இந்த உள்ளிருந்து தூண்டும் சாத்தானுக்கு பல பெயர்களைப் பட்டியலிடுகிறார் நிர். நூலில் Distraction Tracker என்கிற விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்தவும் செய்கிறார். எப்போதெல்லாம் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். போதைப்பழக்கத்திலிருந்து வெளியேறுதலுக்கு இணையான மிகுந்த உழைப்பையும் நீடித்த மனப்போராட்டங்களையும் கோரக்கூடியது இது!

நிர் எயல் (Nir Eyal)

வழி 2 – Make time for Traction

Distraction என்கிற சொல்லுக்கு எதிரான சொல் Traction என்கிறார் நிர். ட்ராக்‌ஷன் என்பது ஒரு செயலை செய்கிற உந்துவிசை. அதை கண்டறிவது முக்கியம் என்கிறார் நிர். அடுத்து எந்த செயல்களை எல்லாம் கவனச்சிதறல் இல்லாமல் செய்யவேண்டும் என்கிற பட்டியலையும் அதற்கென நேரத்தையும் திட்டமிடுவது முக்கியம் என்கிறார். நம்மிடம் அப்படிப்பட்ட பட்டியல் எதுவுமே எப்போதும் இருந்ததில்லை. வாழ்க்கையில் எதுவெல்லாம் கவனச்சிதறல் இன்றி செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் என்பது தெரியாமல் எதை கவனமாக செய்யப்போகிறோம்!

வழி 3 – Hack Back the external triggers

இணைய போதைக்கு தீர்வு சொல்கிற எல்லோருமே அதிலிருந்து மொத்தமாக வெளியேறவே சொல்வதை பார்த்திருக்கலாம். ஆனால் நிர் அதற்கு நேர்மாறாக… முள்ளை முள்ளால் எடுக்க வலியுறுத்துகிறார். இணையம் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காமல் இணையத்தை உங்களுக்கேற்றபடி மாற்றுங்கள் என்கிறார். சமூகவலைத்தளங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்துங்கள் என்கிறார். Extrenal triggers களை உங்களுக்கு ஏற்றபடி உருவாக்குதல் முக்கியம். செல்போனின் கின்கினி ஒலியோசை அடித்தால்தானே மூளை துடிக்கிறது. அந்த கின்கினியை ஜிம்முக்கு போகும் நேரம், புத்தகம் படிக்கும் நேரம், மீட்டிங் நேரம் என உங்களுடைய நல்ல வேலைகளை நினைவூட்டும் விஷயமாக மாற்றப் பரிந்துரைக்கிறார். இணையத்திற்கு நாம் சேவை செய்யாமல், நம் வேலைகளுக்கு உற்ற துணையாக இணையத்தை மாற்றுங்கள் என்கிறார்!

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

வழி 4 – Prevent Distraction with Pacts

நமக்குநாமே சில உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு செயலாற்ற வற்புறுத்துகிறார். இரவு பத்து மணிக்கு மேல் நிர் தன் வீட்டில் இன்டர்நெட் தானாகவே ஆப் ஆகிவிடும்படி செட் செய்து வைத்திருக்கிறார். அவர் நினைத்தால் ஆன் பண்ணிக்கொள்ள முடியும்தான் என்றாலும், வலிந்து சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அதை பின்பற்றுகிறார். இதை Effort pact என்கிறார், போலவே நண்பர்களோடு குடும்பத்தோடு பேசும்போது போனை எடுத்து நோண்டும் பழக்கத்தை தவிர்க்க தனக்குத்தானே அபராதம் விதிக்கிற முறையையும் பின்பற்றுகிறார். கடைசியாக Identity pact என்கிற விஷயத்தையும் சொல்கிறார். அது நம்மை நாமே இணைய அடிமைத்தனத்திற்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டு செயல்படுவது.

***

ப்படி பலவழிகளை சொன்னாலும் அடிப்படையில் அவர் முன்வைப்பது, சுயக்கட்டுப்பாடுதான். “கடவுள் திடீரெனத் தோன்றி உனக்கு ஒரு சூப்பர் பவர் வழங்குகிறேன் என்று சொன்னால் நான் கவனசிதறல் இல்லாத மனிதனாக இருக்கவேண்டும் என்றுதான் கேட்பேன், காரணம் 21ம் நூற்றாண்டில் அதுதான் மிகக்கடினமான ஒன்று… அப்படி கவனச்சிதறல் இல்லாதவன்தான் சூப்பர்மேன்… ஏன் என்றால் கவனச்சிதறலை கவனிக்காமல் போனால் சீக்கிரமே நம்மை இணையம் முழுவதுமாக விழுங்கிவிடும், ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் தெரியுமா அதற்கென திட்டம் போட்டுக்கொடுத்தவனே நான்தான்” என்றும் எச்சரிக்கிறார்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Athisha Vinod. 

மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண ஏழைகளின் பிள்ளைகளை மருத்துவக் கல்வியில் நுழையவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்த மோடி அரசு, தற்போது மருத்துவ உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்ட இதர  பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாரிசுகள் நுழைய முடியாதபடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய  பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மட்டும் அனுமதிக்கிறது. இது அப்பட்டமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் மருத்துவ உயர்கல்வியைப் படிக்கச் செய்வதறகான சதியே என்பதை அம்பலப்படுத்தி பேசுகிறார் மருத்துவர் எழிலன்.

பாருங்கள் ! நண்பர்களுடன் பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்

காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !

0

“சென்னை ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலை!
RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்யாதது ஏன்?
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!”

என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கண்டனக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 26.11.2019 அன்று கடலூர், மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், மாலை 05:00 மணி அளவில் கண்டன தெருமுனைகூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புமாஇமு தோழர் பால்ராஜ் தலைமை வகித்தார், அவர் தனது தலைமையுரையில் ;

“இன்று உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு கீழே செயலாற்றி வருகிறது. இங்கே ஆர்.எஸ்.எஸ் சார்புடைய அதிகாரிகளை நியமித்து உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க கூடிய வேலைகளை முன்னெடுத்து வருகிறது மோடி கும்பல்.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை பாடமாக கொண்டுவரப்பட்டது. பகவத் கீதை என்பது நான்கு வர்ணம், நாலாயிரம் சாதி என்று கூறுவதும்; இந்த ஏற்றத்தாழ்வுகள் எந்த வகையிலுமே சமநிலைக்கு வரக் கூடாது என்பதை உயர்த்திப் பிடிப்பதும் தான் அதன் சாரம்.

தனது அண்ணன், தம்பி.., யாராக இருந்தாலும் கொலை செய்யலாம் என்பதை ஊக்குவிக்கும் பகவத்கீதையை; அறிவியலுக்கு எதிராக உள்ளதை பாடமாக திணிக்க ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி – சங்பரிவார் கும்பல் முயன்று வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தது. அப்போது தமிழகம் முழுக்க மாணவர்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடி மோடி கும்பலின் மூக்கை உடைத்தனர்.

மாணவன் தனது கல்வி உரிமை சார்ந்தும், சமூக அக்கறை என்ற அடிப்படையிலும் தனது போராட்டங்களை முன்னெடுத்து போராடியதால்; அம்பேத்கரிய – பெரியாரிய கருத்துக்களை மாணவர்களிடம் பேசுவதாலும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனிய அடிவருடி ஆளுநரின் நேரடி தலையிட்டால். சட்டவிதிகளை மீறி மாணவர் கிருபா மோகன் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்படி உயர்கல்வி நிறுவனங்களில் முற்போக்குக் கருத்துக்களை பேசுவதோ, மாணவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுப்புவதை, போராடுவதை கண்டு அஞ்சி நடுங்க கூடிய இந்த பார்ப்பன கும்பல் சதித்தனமாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் கண்டு அஞ்ச கூடிய அம்பேத்கர், பெரியார், மார்க்சியக் கருத்துக்களை இளந்தலைமுறையினர் நாம் படிக்க வேண்டும். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்…” என உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார். அதில்;

“ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு பெரும் கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய, பாலியல் குற்றவாளியை கைது செய்யக்கூடாது என்று தேசிய கொடியை தூக்கிக் கொண்டு போராடினார்கள். இவர்களிடம் எத்தகைய ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும்?

அதுதான் இன்று சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவிற்கு நடந்துள்ளது. தமிழகத்தில் பெரியார் – கடவுள் இல்லவே இல்லை என்ற எதிர்ப்பு இயக்கமானது – பகுத்தறிவு சிந்தனைகள் காவிகளிடமிருந்து தமிழக மக்களை பாதுகாத்து வந்தது. அதற்கு மாறாக தற்போது மக்களை காவு வாங்க துடிக்கும் சாதி, மத கருத்துக்களை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி கும்பல் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. தற்போது அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்லது. அத்தகைய போராட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் களத்தில் முன்நின்று போராட வேண்டும்.” என்று பேசினார்.

அதற்கடுத்தபடியாக அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பேசுகையில்;

“இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 71-வது ஆண்டு தினம், சுதந்திர நாடு என்று இவர்கள் சொல்வதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இன்று இருக்கிறதா?

இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான உழைக்கின்ற வர்க்க பின்னணியிலுள்ள குறிப்பாக தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படிக்கவே கூடாது என்று சொல்வதுதான் இவர்கள் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமாக உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் முதல் மதிப்பெண் எடுத்த பாத்திமா லத்தீப் என்ற மாணவியை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் “இன்டர்னல் மார்க் போட மாட்டேன்..” என்று மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டி உள்ளார். இந்திய நாட்டில் பாப்பானுக்கு ஒரு நீதியும், பொதுமக்களுக்கு ஒரு நீதியும் இங்கு நிலைநாட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக போக்குவரத்து காவல்துறை, தமிழக காவல்துறை ஹெல்மெட் போடவில்லை என்றால் நம்மளை விரட்டி விரட்டி பிடிக்கின்றனர். சில சமயங்களில் உயிரும் போகிறது ஆனால் அதே தமிழகத்தில் சட்டை இல்லை, தலையில் ஹெல்மெட் இல்லை, மண்டையில் ஒரு குடுமி மட்டும் இருக்கிறது. அவர்களைப் பார்த்து போலீஸ் கும்பிடு போடுகிறார்கள். இதுதான் இவர்கள் சொல்லக்கூடிய அரசியல் சட்டம், நீதி, ஜனநாயகம்.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், தினக்கூலிக்கு அன்றாடம் ஓடாய் தேய்ந்து உழைக்கின்ற மக்களுக்கு மதிப்பில்லாமல் உள்ளது. இங்கே அரசியல் சட்டம் என்பது பார்ப்பனியமும், மனுஸ்மிருதிதான். அண்ணாமலை பல்கலை கழகத்தை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் பின்னணியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு தரக்கூடிய சலுகைகள் அனைத்தும் இந்த ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திடீரென விடுதிக் கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வால் மாணவர்கள் அவதிப்படும் நிலையே உள்ளது.

இன்று மாணவர்களை திண்டாட்ட நிலைக்கு தள்ளுகிறார்கள் நிர்வாகத்தில் பேராசிரியர்களும் நிர்வாகமும் எக்ஸாம் பீஸ் கட்ட வக்கில்லை என்றால் ஏன் படிக்க வரீங்க என இழிவாக பேசுகிறார்கள். இதனை சகித்துக் கொண்டுதான் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்று வருகிறோம். இது என்னுடைய நேரடி அனுபவம். ஆளுகின்ற மோடி, எடப்பாடி அரசுகள் கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. நாம் வீதியில் இறங்காமல் தீர்வுகாண முடியாது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு அவரது கண்டன உரையில்;

“மோடி அரசு நீட் தேர்வு மூலம் மாணவி அனிதாவின் மருத்துவ கனவை அழித்தது மாணவி பாத்திமாவிற்கும் அதே நிலைதான். பாத்திமாவின் தாயார் கதறுகிறார் தமிழக மக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

தமிழக வரலாறு நெடுக்க பார்ப்பன எதிர்ப்பானது பெரியார், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் என போராட்டங்கள் நடத்தியதன் விளைவால் பகுத்தறிவு பூர்வமான சிந்தனை உருவாக்கியது. ஆனால் இன்று சிதம்பரத்தில் தன் மகனுக்கு பிறந்தநாள் என்பதால், அர்ச்சனை செய்யச் சொன்ன அரசு செவிலியரை கன்னத்தில் அறைந்திருக்கிறான் தீக்ஷிதர் தர்ஷன். இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை, ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பான்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் இந்துமத கோவில்களில் சிற்பக்கலை என்ற பெயரில் ஆபாசமாக உள்ள சிலைகளை அசிங்கம் என்று சொன்னதற்காக பிஜேபி அடிவருடி, சங்கப் பரிவார கும்பலால் நெருக்கடிகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார். இந்த நாட்டில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான பார்ப்பனர்கள்தான் நாட்டை ஆள வேண்டும். ஆனால் 98% உழைக்கின்ற வர்க்க பிள்ளைகளோ படிப்பதற்கு கூட உரிமை கிடையாது என்ற நிலையை நிறுவப் பார்க்கிறது பார்ப்பனியம். பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் மோடி அரசையும், இந்த அரசு கட்டமைப்பையும் எதிர்த்து போராடாமல் நமக்கான உரிமையை பெறமுடியாது.” என பேசினார்.

இவர்களைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் மா. மணியரசன் உரையாற்றினார் அதில்;

“ஐஐடி மாணவி பாத்திமாவை பார்ப்பனிய வெறி தான் கொலை செய்திருக்கிறது. ஐஐடி நிர்வாகம் அதற்கு காரணமான பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவை இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்கிறது. இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி? பொது மக்களுக்கு ஒரு நீதி? என்ற வகையில் தான் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஏனென்றால் எஸ்.வி. சேகர், பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய போதும், H. ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய போதும், சிதம்பரம் தீட்சிதர் தர்ஷன் கோவிலுக்கு வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தபோதும் இதில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்கள் இவர்களை பாதுகாத்து ஜாமினில் வெளியில் விடுகிறது. ஆனால் இதுபோன்ற தவறை சாமானியர் செய்திருந்தால் இந்த சட்டமும் நீதியும் என்ன செய்திருக்கும்.

இந்த படுகொலைகள் தமிழகத்திலுள்ள மட்டுமல்ல இந்திய முழுமைக்கும் உள்ள கான்பூர், கௌஹாத்தி, டெல்லி, கரக்பூர், ஹைதராபாத், மும்பை போன்று நாடெங்கும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிளும் நடைபெருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 53 மாணவர்களை கொலை செய்திருக்கிறது பார்ப்பனியம்.

சென்னை ஐஐடி நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் பேராசிரியர் நியமனம் கூட பார்ப்பனர்களை கூடுதலாக நியமித்து சட்டவிதிகளை மீறி இருக்கிறது. அதுகுறித்த அரசின் புள்ளி விவரம் பின்வருமாறு:

பேராசிரியர்கள் நியமனம்:
SC _ 03
ST _ 00
BC, MBC _ 00
FC _ 209

இணைப் பேராசிரியர்கள் நியமனம்:
SC – 03
ST – 00
BC, MBC – 00
FC – 88

துணைப் பேராசிரியர் நியமனம்:
SC – 04
ST – 01
BC, MBC – 07
FC – 165

மொத்த பணியிடம் = 480
பார்ப்பனர்கள் = 467

இவ்வாறு சென்னை ஐஐடி நிறுவனம் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு இயங்குகிறது, இதில் சமூகநீதி என்பது எந்தவகையிலும் நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இதன் விளைவுதான் பாத்திமா தற்கொலை, மாணவர் சுராஜ் மீது மத வெறி தாக்குதல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை என பல்வேறு பார்ப்பன அடக்குமுறைகள் தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமலல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இனி அனைத்தும் காசிருந்தால் பெறமுடியும் என்ற வகையில் மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் தேசிய கல்வி கொள்கை மீண்டும் மனு தர்மத்தை நிலை நிறுத்துவதாக இருக்கிறது.

உதாரணமாக மருத்துவத்துறையில் நீட் தேர்வை திணித்தனர், அதைக் கொடுவரும் போது அது ‘ஊழலை ஒழிக்கும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வாய்ப்பை உருவாக்கும்’, என்றெல்லாம் பேசினார்கள் பிஜேபி தலைவர்கள். ஆனால் நடந்தது என்ன ஏழை மற்றும் தமிழ்வழி படித்த மாணவர்கள் மருத்துவக் கனவை நினைத்துகூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கட்டணக் கொள்ளைக்கும் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. உதாரனமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிக்க ஆண்டுக் கட்டனம் ரூபாய் 13,640 மறும் BDS படிக்க ரூபாய் 11,640 என அறிவித்துள்ளது.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2014-ல் அரசு பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு தற்போது மருத்துவத்திற்கான ஆண்டு கட்டணம் 5 லட்சத்து 54 ஆயிரம். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் 50,000; ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 60,000; தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் 30,000 என மருத்துவக்கல்லூரிகள் தங்களது விருப்பத்திற்கு கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்கின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்த தாக்குதலாக, மோடியின் தேசிய கல்விக் கொள்கை ஏற்றத்தாழ்வான கல்வி முறையை உருவாக்க போகிறது. பார்ப்பனியம் சமநிலையை என்றுமே ஏற்காது. அதன் விளைவுகளாக தான் இன்று நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள். இது புதிது அல்ல ஆனால் தற்போது அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே மகாபாரதம், ராமாயணம் புராணக் கட்டுகதைகளில் ஏகலைவன், சம்புகன் போன்றவர்கள் அறிவுத்திறன், ஆற்றல் உள்ளவர்களை பார்ப்பனியம் எப்படி அன்று கொலை செய்ததோ? அதன் நீட்சிதான் இன்று ரோகித் வெமுலா, அனிதா, முத்துகிருஷ்ணன், பாத்திமா போன்றவர்கள்.

ஆகையால் இந்த பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்க பரிவார கும்பலை வீழ்த்த வேண்டும். இதனை தேர்தல் முறையில் நின்று நாம் வீழ்த்த முடியாது.

சமத்துவமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கிய ரஷிய சோசலிசப் புரட்சியை போன்று இந்தியாவிற்கான ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும். இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான அதிகாரத்தையும்; சமத்துவமான வாழ்க்கையையும் கட்டியமைக்க முடியும்.” என்ற வகையில் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக புமாஇமு தோழர் பூங்குழலி தனது நன்றியுரையில்; “ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டுமானால், பார்ப்பன பேராசிரியரை கூண்டில் ஏற்ற தமிழ்மக்கள் பெரியார் வழியில் நின்று போராட வேண்டும். பெரியார் – அம்பேத்கரின் கருத்துகளை இளந்தலைமுறை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். பார்ப்பன மனுதர்மம் சொல்லக்கூடிய இந்துத்துவா கருத்துகளை தகர்த்தெறிய இதுதான் நம்மிடம் உள்ள ஆயுதம்” என நன்றி உரையாற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

ண்ணூர், சென்னை பெருநகருக்கு 20 கிலோமீட்டர் (12 மைல்) தூரத்தில், கொசஸ்தலையாறு, வங்காள விரிகுடா, சிற்றோடை சூழ அமைந்திருக்கிறது.
சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து, தண்ணீரையும் வழங்குவதால் எண்ணூர் சிற்றோடை மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. கடல் நீரில் இருந்து உள்ளூர் நீர்நிலைகளை இந்த சிற்றோடை பிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நல்ல நீரில், உப்பு நீர் புகாமல் இருக்க தடுப்பாகவும் செயல்படுகிறது.

எண்ணூர் கடல் அருகே காணப்படும் அனல்மின் நிலைய கோபுரங்கள். “முன்னொரு காலத்தில் ஏராளமான மீன்களைப் பிடிப்போம். வஞ்சரம், வவ்வால், தூண்டில், பாறை, காரை போன்ற பல வகையான மீன்கள் பிடிப்போம். ஆனால் அந்த நிலைமை இப்பொழுது இல்லை” என்கிறார் நெட்டுக்குப்பம் மீனவ நலவாரியத்தைச் சேர்ந்த ராஜி .

இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில்தான் கடந்த 20 ஆண்டுகளாக, வடசென்னை அனல்மின் நிலையம், இ.ஐ.டி பாரி (EID parry), கோரமண்டல் சிமெண்ட் மற்றும் கோத்தாரி உரக் கம்பெனி போன்ற தொழிற்சாலைகள் வேகமாக முளைத்தன. மேற்கூறிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளால் எண்ணூர் சிற்றோடை பெரிதும் நஞ்சாகியுள்ளது.

நிலக்கரி ஆலையிலிருந்து வெளியேறும் வெப்பமான, மாசுபட்ட நீரைப் போலவே, அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலும் சிற்றோடையில் கொட்டப்படுகிறது. இந்த தொழிற்சாலைகள், சிற்றோடையை சாம்பல் கொட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டதால், சுற்றுச்சூழலும் மீனவர்களின் வாழ்க்கையும் பெரிதும் பாதுப்பிற்குள்ளாகியுள்ளன.

சாம்பலை சட்டவிரோதமாக கொட்டுவதை அனல்மின் நிலையம் நிறுத்தாவிட்டால், மின் நிலையத்தை மூட வேண்டும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எண்ணூர் சிற்றோடையும், கடலும் சந்திக்கும் இடத்தில்தான் நிலக்கரி ஆலையிலிருந்து சாம்பல் கொட்டப்படுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் சுடுநீரால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், சுவாசிப்பதற்கும் தேவையான வெப்பநிலை மாற்றம் அடைகிறது.

தொழிற்சாலைகளால் பறிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. கடலுக்கு மிக அருகிலேயே வாழ்ந்தாலும் தங்களால் மீன் பிடி தொழிலை செய்ய முடிவதில்லை என்றும் தங்களது குடும்பத்தை பராமரிக்க முடிவதில்லை” என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுநீர், சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், எண்ணூர் மக்களின் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

“ஆண்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்புகையில் நாங்கள் வலையைப் பிரித்து மீன்களை வகைப் பிரிப்போம். பின்னர் கூட்டாக சேர்ந்து மீன்களை சுத்தம் செய்வோம். ஆனால், இன்று மீன்பிடி தொழில் இல்லை; எங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. முன்னெல்லாம், கடற்கரையிலேயே வலையை விரித்து மீன் பிடிப்போம். ஆனால் இப்பொழுது அப்படியில்லை” என்கிறார் வெண்ணிலா.

மீன்பிடி தொழிலை சார்ந்திருக்கும் சின்னராஜா (வயது 55), தனது குடும்பத்தின் பசியை போக்க முடியவில்லை என வருத்தப்படுகிறார். அவர், “நீங்களே பாருங்கள் அந்த ஆலையில் இருந்து அமோனியா வெளியாகி, நீரில் கலக்கிறது. இந்த நச்சுப்பட்ட நீரில் எப்படி மீன்கள் வளரும். அதையும் மீறி வளர்கின்ற மீன்களின் சுவையும் இந்த அமோனியாவால் மாறிபோய்விட்டது. இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் எங்கள் வாழ்வதாரத்தையே இழந்துவிட்டோம்” என்கிறார்.

“எங்கள் பகுதியில் முதல்முதலில் வந்த தொழிற்சாலையால் எங்கள் ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் தற்போது வேலை இல்லை. எங்கள் நெட்டுக்குப்பம் பகுதியில் 100 இளைஞர்களுக்கு மேல் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் வேலையில்லை” என்கிறார் ராஜி.

மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆலைகளில் இருந்து தீப்பொறி கலவை, காற்றோடு காற்றாக கலக்கிறது. “யாராலும் இங்கு வசிக்க முடியாது. இந்த நச்சு கலந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல் பிரச்சினை உள்ளது. மேலும், இந்த தண்ணீருக்குள் கால்களை வைத்து சிறிது நேரம் நின்றாலே, கால்கள் உப்பிவிடும். இப்படியிருக்கையில், மீன்கள் எப்படி வாழும்?” என்கிறார் ராஜி.

சிவப்புப் புழுக்களை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் ஒருவகையில் மீன்கள் வளருவதற்கு தடையாக உள்ளது. மீன்களுக்கு உணவாக இருக்கும் சிவப்புப் புழுக்கள், தினசரி 500 கிலோகிராம் வேட்டையாடப்பட்டு, இறால் வளர்ப்புப் பண்ணைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது என்கிறார் ராஜி. “இது குறித்து நாங்கள் வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு, இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்” என்கிறார் அவர்.

இப்பகுதியில் நில அரிப்பு பிரச்சினையால், மீனவர்களின் வீடுகள் இடிந்து விழுகின்ற சூழல் உள்ளது. “சுனாமியாலும், சமீபத்தில் வந்த சூறாவளியாலும் நாங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளானோம். கடற்கரையைச் சுற்றியிருப்பதால், எப்போது என்ன ஆகும் என்ற பயம் இருந்துக் கொண்டே இருக்கிறது” என்கிறார் வெண்ணிலா.

படிக்க:
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

“கார்ப்பரேட் சமூக கடமை என்ற பெயரில் மீனவர்களுக்கு பாத்திரங்கள், ஐஸ் பெட்டி, டீசல் படகுகளுக்கு இன்ஜின் முதலியவற்றைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவை எதும் மீனவர்களுக்கு வந்து சேருவதில்லை” என்கிறார் மகாலட்சுமி.

ராஜி, “அந்த நிதியும் மீன்வளத்துறையிடம் இருந்து வருவதுதான், ஆனால் எங்கள் கைகளுக்கு அந்த தொகை சேருவதில்லை.” என்கிறார்.

தனது சிறு வயதை நினைவுக்கூறும் மகாலட்சுமி, “முன்னெல்லாம், 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக சென்று மீன்பிடித்து வந்து, கைநிறைய மீன்களை கொடுப்பார்கள். இங்கு பக்கத்தில் வயதான பாட்டி ஒருவர் கடை வைத்திருப்பார். அவரிடம் நாங்கள் மீன்களை கொடுத்துவிட்டு, கொட்டாங்குச்சி அல்வாவும், வேகவைத்த மரவள்ளிக்கிழங்கும் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்பொழுது நாங்கள், 200 – 300 ரூபாய் கொடுத்து மீன் வாங்குகிறோம். நிலைமை பெரிதும் மாறிவிட்டது” என்கிறார் அவர்.

நிலக்கரி சாம்பலில் ஆர்செனிக், போரான், காட்மியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. அவை மீன்களுக்குள் செல்வதால், இனப்பெருக்கம் செய்யும் திறன் மீன்களுக்கு குன்றிவிடுகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆற்றின் வாயிலிலிருந்து சாம்பலை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூர்வாரும் இயந்திரம் வாங்கப்பட்டது. “தூர்வாருவதற்கு பத்து ஆட்கள் நியமிக்கப்பட்டனர். எங்களை சமாளிக்கும் பொருட்டு அந்த இயந்திரத்தை ஒருமுறை மட்டுமே இயக்கினார்கள். மறுநாளில் இருந்து அவர்கள் அங்கே எந்த வேலையையும் செய்யாமல் சிலைப் போல் அமர்ந்திருப்பார்கள்” என்கிறார் ராஜி.

சிமெண்ட் தொழிற்சாலைக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தார், பெயர் சொல்ல விரும்பாத 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர். அவர், “தொழிற்சாலைக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. அங்கு அவர்கள் தண்ணீர் குழாயையும், உள்ளூர் மக்களுக்காக சிறிய கிளீனிக் ஒன்றையும் கட்டியுள்ளனர். அந்த கிளீனிக்குக்கு சிகிச்சைக்காக வரும் உள்ளூர் மக்களிடமிருந்து பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுவார்கள். நாங்கள் அந்த மருத்துவரை பத்து ரூபாய் டாக்டர் என்றுதான் அழைப்போம்” என்கிறார்.

“ஆலையில் இருந்து வெளியாகும் அமோனியாவால், என் கணவர் கடுமையான மூச்சு திணறலாலும், என் பேரக்குழந்தை தோல் பிரச்சினையாலும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்பொழுது என்னுடன் இல்லை” என்கிறார் கண்ணில் பெருகும் கண்ணீரைத் துடைத்தபடியே.

“நாங்கள், ராயபுரம் சந்தையில் இருந்து மீன்களை வாங்கி வந்து அதன் விலையில் இருந்து மூன்று மடங்கு விலையை கூட்டி விற்கிறோம். எங்களது அவல நிலையை பாருங்கள். நாங்கள் மீனவர்கள் ஆனால் எங்களால் தினசரி மீன்கள் சாப்பிட முடிவதில்லை. அதேபோல், 15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த மீன்கள் தற்போது இல்லை. சில மீன் வகைகளை நாங்கள் மறந்தேவிட்டோம். முன்பு உப்பு தேய்த்த மீன்களே மிக சுவையாக இருக்கும். ஆனால், இப்பொழுது அப்படி இல்லை” என்கிறார் வெண்ணிலா.

நெட்டுக்குப்பம் பகுதி மீனவர்கள் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிறார்கள். “கழிவு நீரை திறந்துவிடுகின்ற இடத்தில் கருப்புக் கொடியை கட்ட திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு காவல்துறையினரின் அனுமதி வேண்டும். இதைமட்டும் செய்துவிட்டோமானால், அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்கிறார் ராஜி நம்பிக்கையுடன்.


கட்டுரை, படங்கள் : சாரதா பாலசுப்பிரமணியன்
தமிழில் : ஷர்மி
நன்றிஅல்ஜசீரா. 

ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே பறந்து வந்தேன் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08

ரெஜிமென்ட் கமாண்டர் சட்டைக்கையைத் தாழ்த்தி விட்டுக் கொண்டார். கடிகாரம் இனித் தேவையில்லை. இழைய வாரிவிடப்பட்டிருந்த தலை வகிட்டை இரு கைகளாலும் தடவி விட்டு உணர்ச்சியற்ற கட்டைக் குரலில், “இனி அவ்வளவு தான்” என்றார்.

“நம்பிக்கைக்கே இடமில்லையா?” என்று ஒருவன் கேட்டான்.

“அவ்வளவு தான். பெட்ரோல் தீர்ந்துவிட்டது. எங்காவது இறங்கியிருப்பான் அல்லது குதித்திருப்பான். ஒரு வேளை…. ஊம், ஸ்டிரெச்சரை எடுத்துப் போங்கள்!”

கமாண்டர் மறுபுறம் திரும்பி, மெட்டை இரக்கமின்றிச் சித்ரவதை செய்தவாறு ஏதோ பாட்டைச் சீழ்கை அடிக்கலானார். பெத்ரோவின் தொண்டையில் கொதிக்கும் இறுகிய கட்டி ஒன்று குமிழிப் போலே மேலே வந்து அடைத்துக் கொண்டது. அதனால் அவனுக்கு மூச்சு முட்டியது. விந்தையான இருமல் ஒலி கேட்டது. விமானத் திடலின் நடுவே இன்னும் மௌனமாக நின்று கொண்டிருந்த ஆட்கள் திரும்பிப் பார்த்தவர்கள் அக்கணமே முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள்: காயமடைந்த விமானி ஸ்டிரெச்சரில் கிடந்தவாறு விம்மி அழுதான்.

“இவனை எடுத்துக் கொண்டுபோய்த் தொலையுங்களேன்!” எள்று வேற்றுக் குரலில் கத்திவிட்டு, கூட்டத்திலிருந்து மறுபுறம் திரும்பி, வேகமான காற்றில் போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு அப்பால் போய்விட்டார் கமாண்டர்.

ஆட்கள் திடலில் மெதுவாகக் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அதே கணத்தில் ஒரு விமானம் நிழல் போன்ற நிசப்தத்துடன், சக்கரங்களால் பிர்ச் மர முடிகளின் மீது கோடிட்டவாறு காட்டோரத்தின் பின்னிருந்து வெளியே துள்ளி வந்தது. ஏதோ ஆவி போல ஆட்களின் தலைகளுக்கு உயரேயும் தரைக்கு மேலும் வழுகி, அதனால் ஈர்க்கப்பட்டது போன்று மூன்று சக்கரங்களும் ஒரே சமயத்தில் புல்லில் படும் படி இறங்கியது. மந்தமான ஒலியும் பரல்களின் நெறுநெறுப்பும் புற்களின் சரசரப்பும் கேட்டன. இந்த சத்தங்கள் அசாதாரணமாக இருந்தன, ஏனெனில் இயங்கும் எஞ்சினின் இரைச்சல் காரணமாக இந்த ஒலிகளை விமானிகள் ஒரு போதும் கேட்பதில்லை. இவை எல்லாம் சற்றும் எதிர்பாரா விதத்தில் நிகழ்ந்துவிட்டன. ஆதலால் என்ன நடந்தது என்று ஒருவருக்கும் நிச்சயமாகப் புரியக் கூட இல்லை. பார்க்கப் போனால் நடந்தது சர்வ சாதாரணமான விஷயம். ஒரு விமானம் வந்து இறங்கியது. அதாவது “பதினொன்றாவது”. எல்லோரும் அவ்வளவு ஆவலாக எதிர்பார்த்த அதே விமானம்.

“அவன்!” என்று ஒருவன் இயல்புக்கு மாறான வெறித்த குரலில் கத்தினான். பிரமை பிடித்தவர்கள் போல நின்ற ஆட்களை இந்தக் கத்தல் சுயநிலைக்குக் கொண்டுவந்தது.

விமானம் ஓட்டுவதை முடித்து சக்கரங்கள் கிறீச்சிடும்படி பிரேக் போட்டு, விமானத் திடலின் கோடியில், மாலைக் கதிரவனின் இளஞ்செங்கிரணங்களால் ஒளியுறுத்தப்பட்டு வெண் தண்டுகளும் சுருட்டை முடிகளுமாக இளகிய இளம் பிர்ச் மரச் சுவருக்கு எதிரே நின்றது.

இம்முறையும் விமானி அறையிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. ஆட்கள் விமானத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறியது. ஏதோ அவலம் நேர்ந்துவிட்டதென்றே முன்னுணர்வு ஏற்பட்டது. ரெஜிமென்ட் கமாண்டர் எல்லோருக்கும் முன்னே ஓடி, இறக்கைமேல் துள்ளி அனாயசமாக ஏறி, வளைமுகட்டைத் திறந்து விமானி அறைக்குள் எட்டிப் பார்த்தார். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தலைகாப்பு இன்றி, மஞ்சு போன்று வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தான். இரத்தம் செத்துப் பசிய நிறங்கொண்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகை செய்தான். அழுத்தக் கடிக்கப்பட்ட கீழுதட்டிலிருந்து இரத்தம் இரண்டுத் தாரைகளாக மேவாயில் வழிந்தது.

“உயிரோடிருக்கிறாயா? காயம்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கர்னல்.

சோர்வுடன் முறுவலித்து, களைப்பினால் செத்துச் சாவடைந்த விழிகளால் அவன் கர்னலை நோக்கினான்.

“இல்லை. சௌக்கியமாயிருக்கிறேன். மட்டுமீறிக் கிலி கொண்டுவிட்டேன் … ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே வந்தேன்” என்றான்.

விமானிகள் ஆரவாரித்தார்கள், வாழ்த்தினார்கள், கைகுலுக்கினார்கள். அலெக்ஸேய் புன்னகையுடன் சொன்னான்:

“அண்ணன்மாரே, இறக்கைகளை முறித்துவிடாதீர்கள் இப்படிச் செய்யலாமா? எல்லோரும் மேலே ஏறி குந்தி விட்டீர்களே….. நான் இதோ இறங்குகிறேன்.”

அந்தச் சமயத்தில், தனக்கு மேலே கவிந்திருந்த இந்தத் தலைகளுக்கு அப்பாலிலிருந்து பழக்கமான, ஆனால் எங்கோ தொலைவிலிருந்து வருவது போல ஈனமாகக் குரல் ஒன்று அவனுக்கு கேட்டது.

“அலெக்ஸேய், அலெக்ஸேய்!” என்று அழைத்தது அது. அக்கணமே அலெக்ஸேய் புத்துயிர் பெற்றுவிட்டான். அவன் துள்ளி எழுந்து, கைகளால் விளிம்பைப் பற்றிக் கொண்டு கனத்த கால்களை வெளியே எடுத்துப் போட்டுத் தரையில் குதித்தவன், ஒருவனை இடித்துத் தள்ளத் தெரிந்தான்.

பெத்ரோவின் முகம் தலையணை போன்று வெளுத்திருந்தது. குழிந்து மங்கியிருந்த விழிகளில் இரண்டுப் பெரியக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன.

“தம்பீ! நீ உயிரோடிருக்கிறாயா? அட பயலே!” இவ்வாறு கூறி, அலெக்ஸேய் ஸ்டிரெச்சருக்கு முன்னே சிரமத்துடன் முழந்தாள் படியிட்டு, தோழனின் பலமற்றுத் துவண்டு கிடந்த தலையை அணைத்து அவனுடைய நீல விழிகளை விழி பொருந்த நோக்கினான். அவற்றில் துன்பம் படர்ந்திருந்தது, அதே சமயம் மகிழ்ச்சி சுடர்ந்தது.

“உயிரோடு இருக்கிறாயா?”

“நன்றி, அலெக்ஸேய், நீ என்னைக் காப்பாற்றினாய். அருமையானவன் நீ, அலெக்ஸேய், அருமையானவன்…….”

“காயமடைந்தவனை எடுத்துத்தான் போய்த் தொலையுங்களேன்! வாயை அங்காய்த்துக் கொண்டு நிற்கிறீர்களே!” என்று திடீரெனச் சீறினார் கர்னல்.

ரெஜிமென்ட் கமாண்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அவரது சிறுகூடான துடிதுடிப்புள்ள மேனி பளபளப்பான இறுகிய ஜொடுகள் அணிந்த கால்கள் மேல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீல விமானி உடைக்குக் கீழே தெரிந்தன காலணிகள்.

“சீனியர் லெப்டினன்ட் மேரெஸ்யெவ், பறப்பைப் பற்றி அறிக்கை செய்யுங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் உள்ளனவா?”

“உள்ளன, தோழர் கர்னல். இரண்டு ‘போக்கே-வுல்ப்’ விமானங்கள்.”

“சந்தர்ப்பச் சூழ்நிலை?”

“ஒன்று செங்குத்துத் தாக்கில். அது பெத்ரோவின் விமான வாலை ஒட்டிப் பறந்து கொண்டிருந்தது. இரண்டாவது பொதுச் சண்டையிடத்திற்கு வடக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தலைமோதல் தாக்கில் வீழ்த்தப்பட்டது.”

“தெரியும். தரை அவதானிக்கையாள் இப்போது தான் தகவல் தெரிவித்தான்….. நன்றி.”

“சோவியத் யூனியனுக்குத் தொண்டு செய்கிறேன்” என்ற வழக்கமான இராணுவப் பதில் வாக்கியத்தைச் சொல்ல வாயெடுத்தான் அலெக்ஸேய்.

ஆனால், வழக்கமாகக் குற்றங்கண்டு பிடிப்பவரும் விதிகளைக் கறாராக கடைப்பிடிப்பவருமான கமாண்டர் நட்புடன் அளவளாவும் குரலில் அவனை இடை முறித்தார்.

“அருமையான வேலை! நாளைக்கு ஸ்குவாட்ரன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்…. மூன்றாவது ஸ்குவாட்ரனின் கமாண்டர் இன்று தளத்துக்குத் திரும்பவில்லை. அவருக்கு மாற்றாக….” என்றார்.

தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் நடந்து சென்றார்கள். அவருடைய பறப்புகள் முடிந்துவிட்டபடியால் கூடியிருந்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். தலைமை அலுவலகமிருந்த பசிய மேடு நெருங்கிவிட்ட போது அங்கிருந்து அவர்களை எதிர் கொண்டு ஓடிவந்தான் முறை அதிகாரி. வெறுந்தலையும் களிபொங்கும் முகமாக அவன் எதையோ கத்துவதற்கு வாயெடுத்தான். ஆனால் கர்னால் அவனைத் தடுத்து, வறண்ட, கடுமையான குரலில், “தொப்பி இல்லாமல் ஏன் வந்தீர்கள்? நீர் என்ன, இடைவேளையில் பள்ளிப் பையனா?” என்றார்.

“தோழர் கமாண்டர், பேச அனுமதியுங்கள்!” என்று விரைப்பாக நின்று ஒரே மூச்சில் விண்ணப்பித்துக் கொண்டான் லெப்டினன்ட்.

“ஊம்?”

“நமது அருகாமையிலுள்ள “யாக்” விமான ரெஜிமென்ட் கமாண்டர் உங்களை டெலிபோனில் கூப்பிடுகிறார்.”

“ஏன், என்ன விஷயம்?”

கர்னல் விர்ட்டென்று நிலவறைக்குள் பாய்ந்து புகுந்தார்.

“அவர் உன்னைப் பற்றித்தான்…..” என்று அலெக்ஸேயிடம் சொல்லத் தொடங்கினான் முறை அதிகாரி.

ஆனால் கீழிருந்து முழங்கிற்று கமாண்டரின் குரல்: “மெரேஸ்யெவை என்னிடம் அனுப்புங்கள்!”

படிக்க :
மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !
சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !

மெரேஸ்யெவ் அவர் அருகே போய், இராணுவ முறைப்படி கைகளை உடையுடன் சேர்த்து வைத்தவாறு அசையாமல் நின்றான். கர்னல் டெலிபோன் குழாயை உள்ளங்கையால் முடிக் கொண்டு சீறி விழுந்தார்:

“என்ன நீங்கள் என்னைக் காலை வாரி விடுகிறீர்கள்? பக்கத்து ரெஜிமென்ட் கமாண்டர் டெலிபோனில் கேட்டார், ‘உம் பதினொன்றாம் எண் விமானத்தில் பறப்பது யார்?’ என்று. ‘சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்’ என்றேன். ‘அவன் கணக்கில் எத்தனை விமானங்கள் எழுதினாய்?’ என்று கேட்டார். ’இரண்டு’ என்று சொன்னேன். ‘இன்னும் ஒரு விமானம் அவன் கணக்கில் எழுது. என்னை நெருங்கித் துரத்திய ஜெர்மன் விமானத்தை சுட்டு வீழ்த்தினான் அவன். பகை விமானம் தரையில் விழுவதை நானே கண்டேன்’ என்றார். ஊம்? என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? அவரிடமே பேசிக் கொள்ளுங்கள், இந்தாருங்கள். ஹலோ, கேள். சீனியர் லெப்டினன்ட்! மெரேஸ்யெவ் போன் அருகே நிற்கிறார். போனை அவரிடம் கொடுக்கிறேன்.”

பழக்கமற்ற கம்மிய குரல் அலெக்ஸேயின் காதில் இரைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

10

“டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன. ஆண்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’

மேற்படி முத்தை உதிர்த்தவர் மார்க்கெட் போன பழைய காமெடி நடிகர் கே. பாக்கியராஜ்.

***

டாஸ்மாக் சரக்கால் குடலுக்கு என்ன நேர்கிறதோ அதே தான் நமது சினிமாக்காரர்களால் மூளைக்கும் நேர்கின்றது. கவனிக்க… நமக்கு சினிமாவின் மீது எந்த வாய்க்கா வரப்புத் தகறாரும் இல்லை – சினிமாக்காரர்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள்.

சினிமாவில் நடித்து விட்டோம்; திரையில் நமது முகம் தெரிந்து விட்டது; கோணங்கி சேட்டைகளுக்கு மக்களும் கை தட்டி விட்டார்கள்; நடித்ததில் நாலைந்து படம் வசூலித்தும் விட்டது – இவ்வளவு போதும். நமது நடிகர்களுக்கு தலையில் கொம்பு முளைத்து கொம்பைச் சுற்றி ஒளிவட்டமும் தோன்றி விடுகின்றது. அதன் பின் பூமிக்கு மேல் வானத்திற்கு கீழ் உள்ள சகலத்தைப் பற்றியும் கருத்து சொல்லும் துணிவு வந்து விடுகின்றது.

படிக்க:
பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி

அதில் மார்க்கெட் போன பழைய பூட்டகேசுகளின் இம்சை ஒரு தனி ரகம்; அதிலும் குறிப்பாக மார்க்கெட்டும் போய் தொழிலில் உருப்படாத வாரிசும் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அப்பேர்பட்ட ஆசாமிகளிடம் மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் விளைவு மேலே உள்ளதைப் போல் தான் இருக்கும்.

பெண்கள் தவறு செய்தால் அது தவறு – ஆண்கள் தவறு செய்தால் அது தவறல்ல என்கிற இந்த உயரிய கோட்பாட்டை பாக்கியராஜ் பேசும் போது யாரும் குறுக்கிடவில்லை. சொல்லப் போனால் பாக்கியராஜ் பொதுபுத்தியில் என்ன உள்ளதோ அதைத் தான் பேசியிருக்கிறார். மேலும், “கள்ளக்காதலால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி” குறித்த செய்திகளை தினத்தந்தியில் படித்து உள்ளபடியே அச்சமடைந்துள்ளார். எனவே தான் அந்த கொலைகளில் இன்னொரு “ஆண்” தொடர்பு இருப்பதை பார்க்க மறந்து விட்டிருக்கிறார்.

மேலும், இதே கள்ளக்காதல் விவகாரங்களுக்காக ஆண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் செய்திகளும் பாக்கியராஜ் படிக்கும் அதே தினத்தந்தியில் வரத்தான் செய்கின்றன. பிரச்சினை என்னவென்றால் அந்த செய்திகளையெல்லாம் அவரது கண்கள் பார்த்திருக்கும்; ஆனால், மூளை பார்க்க மறுக்கின்றது.

பாலியல் தொடர்பாக நடக்கும் குற்றங்களில் பெண்கள் ஈடுபட்டிருப்பதை பார்த்து கலவரமடையும் பாக்கியராஜ், அதே குற்றங்களில் ஈடுபடும் ஆண்களைப் பார்த்து ஏன் அச்சப்படவில்லை? அல்லது, ஆண்கள் பாலியல் ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது ஏன் அவருக்கு உறுத்தலாக இல்லை?

இந்த சிந்தனைகள் எல்லாம் பெண்களை சக உயிர்களாக பார்க்காமல், வெறுமனே ஆண்டு அனுபவிக்கும் உடைமையாக, பொருளாக, சொத்தாக பார்க்க பயிற்றுவித்துள்ள பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இருந்தே எழுகின்றன. அதிலும், சினிமாக்காரன் என்பதால் இந்த திமிர் கொஞ்சம் தூக்கலாகத் தான் இருக்கும். இந்தியாவின் சினிமாத்துறை என்பது பாலியல் ரீதியிலான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கோலோச்சும் இடம். “பெண்களின் ஒழுங்கீனம்” தோற்றுவிக்கும் அச்சத்தை விட அவர்களும் தன்னைப் போன்றே (பல சந்தர்பங்களில் தன்னை விட மேம்பட்ட ரீதியிலும்) சிந்திக்கத் தெரிந்த ஒரு சக உயிரினம் என்பதே பாக்கியராஜைப் போல் சினிமாத்துறையில் குப்பை கொட்டிய பழம் பெருச்சாளிகளுக்கு உள்ளூர கலவரத்தை உண்டாக்க கூடியது.

பார்ப்பனியம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சித்தாந்தம் என்பது நமக்குத் தெரியும் – அது சாதி வாரியாக மட்டும் மனிதர்களை பிளவு படுத்தவில்லை, பாலியல் ரீதியாகவும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்றது. அதுவே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக உறைந்து கெட்டிதட்டிப் போயுள்ளது. பாக்கியராஜ் போன்ற தமிழ் சினிமா ‘படைப்பாளிகள்’ பார்ப்பனிய பொதுபுத்தி என்கிற நாட்டு சரக்கை ராவாக அடித்து விட்டு மேடையேறினால், இப்படி நாற்றமடிக்கும் வாந்தி தானே எடுத்தாக வேண்டும்?

***

தில்லி பெண் நிர்பயாவை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கபபட்டனர். குற்றவாளிகள் போலீசாரிடம் பிடிபட்ட போது இவ்வாறு சொன்னார்கள் : “ நாங்கள் முதலில் சீண்டினோம், அந்தப் பெண் முரண்டு பிடித்தாள். அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வன்புணர்வு செய்து கொன்று போட்டோம்”. பாலியல் தூண்டுதலை விட அந்த குற்றவாளிகளுக்கு தங்களுடைய “ஆண்” திமிரை ஒரு பெண் உரசி விட்டாள் என்பது பிரதானமாக இருந்திருக்கிறது.

அந்த குற்றவாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் அந்த குறிப்பிட்ட இரவு நிகழாமல் போயிருந்தால் ஒருவேளை அவர்கள் “படைப்பாளிகள்” ஆகியிருக்க கூடும்; யார் கண்டது, சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் ஆகியிருக்க கூடும்.

பெண்களை இழிவு படுத்துவது பார்ப்பனிய சித்தாந்தம் என்றால், அந்த மலத்தின் மேல் சீனி தூவி கடை விரிப்பதுதான் பாக்கியராஜ் போன்ற படைப்பாளிகளின் படைப்பியக்கத்தின் சாரம். தொடர்ந்து நாற்றமடிக்கும் இந்த அசிங்கத்தோடு புழங்கிக் கொண்டிருப்பதும், சினிமாக்காரன் என்றால் என்னத்தையும் பேசலாம் என்கிற ஒரு துர்பாக்கிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாலும் தான் இவ்வாறான மேடைப் பேச்சுகளை நாம் கேட்டுத் தொலைய வேண்டியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் தவறு நடக்க காரணம் என்று பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். பாக்கியராஜும் கோவை மாவட்டம்தான். நாளைப் பின்னே அங்கே போய் வரத் தானே வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் பாக்கியராஜின் இந்த தத்துவார்த்த கருத்தை குறித்து அவர் அடுத்த முறை கோவை செல்லும் போது நேரில் சந்தித்து ‘விளக்கம்’ கேட்க வேண்டும்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : நக்கீரன்

உடல் நல ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி ?

“கேன்சர் (புற்றுநோயை) 100% குணப்படுத்தலாம். யாராவது தேவையானவர்களுக்கு உதவும் அதிகம் ஷேர் செய்யவும்”.

வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.

“கேன்சர் என்பது நோயே இல்லை”

“சர்க்கரை வியாதி என்பது நோயே இல்லை”

“ரத்த அழுத்தம் என்பது நோயே இல்லை”

“பிராய்லர் கறி கோழி கறி சாப்பிட கூடாது. ஏனெனில் அவற்றுக்கு ஹார்மோன் ஊசிகள் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஹார்மோன் ஊசிகள் பெண் குழந்தைகளை சிறு வயதிலேயே பூப்படைய வைக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் அண்டிபயாடிக் ரேசிஸ்டன்ஸ் தீர்க்க முடியாத தொற்று நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.”

– என உடல் நலப் பிரச்சினைகள் அனைத்திற்குமான ஆய்வு முடிவுகளும் ஆலோசனைகளும் தினம்தினம் நம்மை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக வந்து சேர்கின்றன.

இன்றைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியிருக்கும் பணியிட நெருக்கடிகள், வாழ்வியல் நெருக்கடிகள், சூழலியல் நெருக்கடிகள் மற்றும் உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடல்நல பிரச்சினைகளும் குறைபாடுகளும் (தொற்றா நோய்கள்) அதிகரித்து வருகின்றன.

அதே முதலாளித்துவ சமூகத்தின் இலாப வெறியின் காரணமாக உடல்நலமும் ஆரோக்கியமான நல்வாழ்வும் பரந்துபட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அதில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மேற்சொன்ன வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.

இது ஒருபுறமென்றால் அறிவியல் ஆய்விதழ்களில் தினம்தினம் உடல்நலம் சார்ந்த அறிவியல் ஆய்வுகளும், ஆலோசனைகளும் வெளியாகி வருகின்றன.

நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது.

”முழு தானியங்களை உட்கொண்டு வந்தால் புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.”

”காபி குடிப்பது மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.” – என  வெளியாகும் அறிவியல் ஆய்வு முடிவுகளை நம்பலாமா?

அரைக்காணி (1/160) அளவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும், அறிவியல் அடிப்படையற்ற வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப முடியாது; சரிதான்.  அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளை முழுமையாக நம்பலாமா?

நம்பமுடியாது, அவையும் அரைக்கால் (1/8) அளவு உண்மைகளை கொண்டே எழுதப்படுகின்றன என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்கிறதா?

எல்லா அறிவியல் ஆய்வுகளும் சமமானவையோ சம நம்பகத்தன்மையை கொண்டவையோ அல்ல. ஒவ்வொரு ஆய்வையும் நூற்றுக்கணக்கான முறைகளில் வடிவமைக்க முடியும். ஒவ்வொரு ஆய்வு முறையும் தன்னளவிலான வெவ்வேறு வகையான வரம்புகளைக் கொண்டுள்ளன.

ஆய்வுமுறைகளின் முதன்மையான வகைகள் :

உடல்நல ஆய்வுகளை முதன்மையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் முதலாவது அவதானிப்பு முறை ஆய்வு (Observational Studies), இரண்டாவது பரிசோதனை முறையிலான ஆய்வு (Experimental Studies).

அவதானிப்பு முறை ஆய்வில் அறிவியலாளர்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை கண்காணித்து அதன் தரவுகளை சேகரிப்பார்கள்.

உதாரணமாக,

”சென்னை மக்களிடம் சுத்தரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யின் (Refined oil) நுகர்வுப் படிவம் / பாங்கு”

”யாரெல்லாம் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள விழைகின்றனர்”

ஆனால் இந்த அவதானிப்பு முறை ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்கில் எந்த இடையூறும் குறுக்கீடும் செய்வதில்லை.

அவதானிப்பு முறை ஆய்வு வகையை மேலும் நான்கு அடிப்படை வகைகளாக பிரிக்கலாம்.

1 குறுக்குவெட்டு கணக்கீடுகள் (Cross sectional survey)

ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பான பகுதியில் உள்ள மக்களில் இருந்து சீரற்ற முறையில் மாதிரிகளை தேர்ந்தெடுத்து தரவுகளை தொகுப்பது. வெவ்வேறு சமூகப் பின்னணி (வர்க்கப் பின்னணி) வெவ்வேறு உடல் பாங்கு (ஒல்லி-குண்டு) வெவ்வேறு சுகாதாரம் பற்றிய உணர்வு மட்டம் போன்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கி ஆய்வுக்கு மாதிரிகளை தெரிவு செய்வது சீரற்ற மாதிரிகள் (Randomised samples) எனப்படுகிறது.

உதாரணமாக தமிழகத்தில் எத்தனை சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதில் ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் என்ன, வயது வாரியாக விகிதம் எவ்வளவு என்று புள்ளியியல் முறையில் முடிவுக்கு வருவது.

2 மக்கட்தொகுதி ஆய்வு (Cohort studies)

இதுவும் குறுக்குவெட்டு கணக்கீடு போன்றதுதான். ஆனால் குறிப்பிட்ட பகுதி மக்களை குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பது.

உதாரணமாக சென்னையில் உள்ள மக்களிலிருந்து சீரற்ற முறையில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளை தொடர்ந்து 10 ஆண்டுகள் கண்காணித்து அவர்களது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பதிவு செய்வது. அதில் எத்தனை பேருக்கு சர்க்கரை வியாதி உருவாகியுள்ளது என்று கண்டறிவது.

நிகழ்விளைவு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு அல்லது பின்னோக்கிய ஆய்வு (Case control studies OR Retrospective studies)

இந்த ஆய்வுமுறையை முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு ஆய்வு செய்வது என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, இது ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வின் குறிப்பான விளைவில் இருந்து அதன் காரணத்தை பின்னோக்கி ஆய்வு செய்யும் முறையாகும்.

உதாரணமாக சென்னையில் உள்ள சீரற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் குழு, சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குழு ஆகிய இரண்டு குழுவினரிடையே  கடந்த பத்தாண்டுகளாக அவர்களுடைய வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் இன்னபிற தரவுகளை பெற்று ஆவணப்படுத்துவது. அதிலிருந்து ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் சர்க்கரை நோய் வந்தது என்ற முடிவுக்கு வருவது.

இதில் குறிப்பான உணவு (அ) வாழ்வியல் முறை சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கும் என்றோ அல்லது குறைக்கும் என்றோ, சர்க்கரை நோய் வராமலிருக்க உதவிபுரியும் என்றோ முடிவுகளை முன்வைப்பர்.

4 மருத்துவ அறிக்கைகள் உடல்நல அறிக்கைகள் (Case reports)

ஒரு குறிப்பிட்ட நோயாளி அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவருடைய நோயாளி தொகுப்பின் அல்லது ஒரு குறிப்பிட்ட நோயுடைய நோயாளி தொகுப்பின் மருத்துவ அறிக்கைகள் இதில் சேரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை தொடர்ந்து உட்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு முறையை (diet) தொடர்ந்து பின்பற்றும் ஒருவருடைய உடல்நல அறிக்கை.

அவதானிப்பு முறை ஆய்வுகளின் வரம்புகள் :

ஒரு அவதானிப்பு ஆய்வு முறையிலான ஆய்வு குறிப்பான வாழ்வியல் (அ) உணவு முறை, குறிப்பான நோய் (அ) உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது என்று மட்டுமே சொல்லும். காரணம் விளைவு என்ற முறையில் அது ஆய்வு முடிவை முன்வைப்பதில்லை. அதாவது அந்த குறிப்பான நோய் அல்லது உடல்நல குறைபாடு என்ற விளைவிற்கு குறிப்பான உணவு அல்லது வாழ்வியல் முறைதான் காரணி என்று திட்டவட்டமாக முன்வைக்காது.

அந்த குறிப்பான விளைவுகள் ஏற்படுவதற்கு மரபுத்தொடர்பு, சமூக பொருளாதார பண்பாடு கலாச்சாரம் சூழலியல் சார்ந்த பிற காரணிகளும் இருக்கக்கூடும். வறுமை, சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை, கலாச்சார நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமூக பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அழுத்தங்கள் போன்ற இன்ன பிற காரணிகளை அவதானிப்பு ஆய்வுகள் கணக்கில் கொள்வதில்லை. இவை குழப்பமான காரணிகள் (confounding factors) அல்லது  காரணம் விளைவு  இரண்டுடனும் தொடர்புடைய கணிப்பதற்கு கடினமான மாறிகள் (difficult to predict variables) எனப்படுகின்றன.

உதாரணமாக, 1991-ம் ஆண்டு புதிய இங்கிலாந்து மருத்துவ ஆய்விதழில் (New England journal of medicine) ஒரு ஆய்வு முடிவு வெளியானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் இறப்பு சான்றிதழ்களை கொண்டும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் ஆய்வு செய்யப்பட்டது. வலது கை பழக்கமுடையவர்களை விட இடது கை பழக்கம் உடையவர்களின் இறப்பு விகிதம் அதிகமென அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது. வலது கை பழக்கம் உடையோரின் சராசரி ஆயுள் 75 ஆண்டுகளாகவும், இடது கை பழக்கமுடையோரின் சராசரி ஆயுள் 66 ஆண்டுகளாகவும் இருந்ததுள்ளது. ஆனால் குறிப்பான சமூக கலாச்சார பின்னணியை இந்த ஆய்வு கணக்கில் கொள்ளத் தவறி விட்டது.

அமெரிக்காவில் இடது கை பழக்கமுடைய குழந்தைகளை வலுக்கட்டாயமாக வலதுகை பழக்கத்திற்கு மாற்றிய வழக்கம் இருந்துள்ளது (நமது நாட்டிலும் இப்பழக்கம் உள்ளது). அதனால் சிறு வயதில் இயற்கையாக இடது கை பழக்கமுடைய பலரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் வலதுகை பழக்கம் உடையவர்களாக இந்த ஆய்வின்போது ஆகிவிட்டிருந்தனர். அவர்களை வலது கை வழக்குடையோராக ஆய்வு கணக்கில் எடுத்து தவறிழைத்திருந்தது.

பரிசோதனை முறை ஆய்வுகள் :

பரிசோதனை முறையிலான ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ச்சிப் போக்கில் இடையீடும் குறுக்கீடும் செய்வதன் மூலம் அதன் விளைவுகளை தொகுத்துப் பரிசீலித்து முடிவுக்கு வருகின்றனர். இதற்கு அவர்கள் புள்ளியியல் முறையை பின்பற்றுகின்றனர்.

பரிசோதனை முறை ஆய்வுகள் இரண்டு அடிப்படை வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

1 சீரற்ற (தொடர்பின்றி எடுக்கப்பட்ட) கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (Randomized controlled trials)

சீரற்ற மாதிரிகளைக் கொண்டு இரண்டு குழுக்களை உருவாக்குவது. இரண்டு குழுக்களிலும் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் சமமட்டத்திலுள்ள மாதிரிகள் (மனிதர்கள்) குழுக்கள் அமைக்கப்படும். அதில் ஒரு குழுவினருக்கு ஆய்விற்கு உட்பட்ட மருந்தை அல்லது உணவுப் பொருளை கொடுப்பது. மற்றொரு குழுவிற்கு கொடுக்காமல் வைப்பது. இரு குழுவிலும் ஏற்படும் விளைவுகளை கண்காணித்து தரவுகளை சேகரிப்பது. இந்த முறை சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை எனப்படுகிறது (Randomised controlled trials). இதற்கு புள்ளியியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இதே சோதனையை யாருக்கு ஆய்வுக்கு உட்பட்ட மருந்து அல்லது உணவுப்பொருள் கொடுக்கப்பட்டது யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கே தெரியாமல் வைப்பது மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை (Blinded randomised controlled trials) எனப்படுகிறது.

இந்த முறை வேறெந்த புறக்காரணிகளின் தாக்கமும் இன்றி குறிப்பான ஆய்வுக்குரிய மருந்து அல்லது உணவுப் பொருளின் விளைவாக தான் குறிப்பான உடல்நலக் குறைபாடு அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. அதாவது காரணம் – விளைவுக்கிடையிலான தொடர்பை  சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. இதன் காரணமாக அவதானிப்பு முறை ஆய்வுகளை விட பரிசோதனை முறையான ஆய்வுகள் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும்.

இந்த மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளே (Blinded randomised controlled trials) நவீன மருத்துவத்தில் மருந்துகளை சோதிப்பதற்கு (Clinical Trails) பயன்படுத்தப்படுகின்றன.

2 குறையளவான சோதனைகள் (Quasi-experiment)

இந்த ஆய்வு முறை அவதானிப்பு மற்றும் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கக்கூடிய ஒருவகையான ஆய்வுமுறை குறையளவிலான சோதனை முறை என்று பெயர்.

ஒரு குறிப்பிட்ட மருந்தையோ உணவையோ, எடுத்துக் கொள்ளும் முன் எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்து ஆய்வு செய்வது.

ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட முன்னும் பின்னும் குடிப்பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். அதன் அருகாமையில் இருக்கக்கூடிய மதுவிலக்கு அமல்படுத்தப்படாத ஊர் அல்லது மாநிலத்துடன் ஒப்பீடு செய்வது. இவை குறையளவான ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இவற்றிலிருந்து சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால் சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் கூட அறுதியான இறுதியான முடிவுகள் அல்ல.

முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் அல்லது பகுப்பாய்வுகள் (systematic reviews)

ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது சமூக குழுவின் அனுபவம்,

ஒரு குறிப்பான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை முடிவு என்பதை தாண்டி ஒரு குறிப்பான கேள்விக்கு வெவ்வேறு சூழல்களில் அமைப்புகள், சோதனைகளில் இருந்து வரக்கூடிய தரவுகளை தொகுத்து ஆய்வு செய்யக் கூடிய முறை முறைப்படுத்தப்பட்ட மதிப்பாய்வு எனப்படுகிறது.

பல்வேறு வகையான ஆய்வுகளில் இருந்தும், அவதானிப்பு ஆய்வுகளிலிருந்து பரிசோதனை ஆய்வுகள் வரை தரவுகளை எடுத்து மதிப்பாய்வு செய்து அதிலிருந்து முடிவை எட்டுகிறது இந்த பகுப்பாய்வுமுறை. அதனால்ஆய்வுக்கட்டுரை முடிவுகளில் உயர்ந்த நம்பகத் தன்மை உடையதும் மதிப்புடையதும் முறைப்படுத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகளே ஆகும். மேற்சொன்ன ஆய்வு முறைகளில் ஆய்வுத் தரவுகள், சான்றாதாரங்கள் அனைத்திற்கும் தலையாயது முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் (The king of all evidence: systematic reviews) என்றால் அது மிகையல்ல.

எந்த ஆய்வாளருக்கும் பக்கச் சார்புகள், முன்முடிவுகள் இருக்கக்கூடும்.  மதிப்பாய்வுகள் செய்வோர் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதற்கு ஒரே பிரச்சினைக்குரிய கேள்வி – ஆய்வுத் தலைப்பு – வெவ்வேறு நபர்களால் மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு பரஸ்பர மற்றும் வெளிப்படையான குறுக்கு சரிபார்ப்புகள் செய்வதன் மூலம் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் மதிப்பாய்வு செய்பவர்களுக்கு உள்ள பக்கச் சார்புகள், முன்முடிவுகள் விலக்கம் செய்யப்படுகின்றன. இவ்வகையான மதிப்பாய்விற்குப் பின் வெளியாகும் முடிவுகளே மிகத் துல்லியமானவை.

எல்லா முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகளும் சமமானவையல்ல. அவற்றுக்கும் வெவ்வேறு முறையியல்கள் உள்ளன. (Not all the systematic reviews are created equally either). மேலும் மதிப்பாய்வுகள் என்பது துவக்கப் புள்ளி மட்டுமே. கிடைக்கப் பெறும் தரவுகள் நமது சூழலுக்கு பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். அதனால் அவற்றை நமது சொந்த சூழலுக்கு பொருத்திப் பகுப்பாய்வு செய்தே இறுதி முடிவுக்கு வரமுடியும்.

அதனால் இனி “……என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது” – என்ற செய்திப்பதத்தைக் கண்டால், பின்பற்றப்பட்ட குறிப்பான ஆய்வுமுறை என்ன, அதன் வரம்புகள் என்னென்ன என்பதையும் ஆய்வு முடிவுரையில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளையும் அதிக கவனம் கொடுத்து படிக்க வேண்டும், எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

படிக்க :
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !

மேலும், ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலமும், லாபியின் மூலமும் ஆய்வு முறையும், ஆய்வு முடிவுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். இல்லையெனில் அரைக்கால் அளவு உண்மை கொண்ட குறையளவான அறிவியல் (Quasi-Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.

மார்ட்டின்

மேலும் படிக்க : The one chart you need to understand any health study

காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !

0

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? “காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன கூட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரிக்கு அருகில் உள்ள கஜாமலை பேருந்து நிறுத்தத்தில் 26.11.2019 அன்று பு.மா.இ.மு மாவட்ட பொருளாளர் தோழர் சுரேஷ் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அவரது தலைமை உரையில் “இது தற்கொலை அல்ல கொலை எனவும் இதற்கு காரணமானவர்களை அரசு தண்டிக்காது நாம் தான் வீதியில் தண்டிக்க வேண்டும்” எனவும் கூறினார்.

தோழர் தமிழ் அருண்

மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாநில துணை செயலாளர் தோழர் தமிழ் அருண் பேசுகையில் “ஐ.ஐ.டி இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக மாறியுள்ளது. RSS, BJP இன்று எல்லா துறைகளிலும்; எல்லா கல்லூரிகளிலும் ஆட்டம் போடுகிறது. மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக பு.மா.இ.மு நடத்தும் போராட்டத்திற்கு எமது அமைப்பு துணை நிற்கும்” என்றார்.

தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர் தோழர் கபிலன் பேசுகையில் “பார்ப்பனர்களின் சதியினால்தான் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி நமக்கு தெரியபடுத்துவது என்னவென்றால் ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் படுகொலை… என எல்லாமே முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், சிறுபான்மையினர் யாரும் படிக்க கூடாது; அவ்வாறு படிக்க வந்தால் கொலை செய்யப்படுவார்கள் என்பதுதான்.

தோழர் கபிலன்

ஐ.ஐ.டி.-யில் மாட்டுகறி சாப்பிட்டதால் சூரஜ் என்கிற மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். அன்று “பார்ப்பனர்களை தவிர பிற சாதியினர் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்” எனும் மனுநீதி; இன்று அது நவீன முறையில் நடைமுறையாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையும் பார்ப்பன மனுநீதியைத்தான் அமல்படுத்துகிறது. இந்த மனுநீதிதான் மாணவர்களை படுகொலை செய்கிறது. இதனை எதிர்த்து நிற்கும் பு.மா.இ.மு அமைப்புடன் தமிழ் புலிகள் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என்றார்.

படிக்க:
♦ காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

இறுதியாக கண்டன உறையாற்றிய பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் “இந்தியாவிலேயே மிக பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் ஐ.ஐ.டி. அங்கு படிப்பவர்களுக்கு அரசு அதிக செலவு செய்கிறது. நமது கல்லூரிகளில் இல்லாத, நாம் பார்க்காத வசதிகள் பலவும் அங்கு உண்டு. படிப்பதற்கு உதவிதொகை உண்டு. அப்படிப்பட்ட ஐ.ஐ.டியில் படிப்பது, ஆசிரியர்களாக வேலைபார்ப்பது பார்ப்பனர்களே. இட ஒதுக்கீட்டை தாண்டி இன்று அங்கு 96% பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். நீண்ட காலமாக அதை அக்கிரகாரமாக, அவர்கள் மாற்றியுள்ள நிலையில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் உள்ளே சென்றால் வெறுப்பாக பார்க்கின்றனர்.

ஆனால் அங்கு படிக்கும் பார்ப்பனர்கள் பெரிய அறிவு படைத்தவர்கள் அல்ல. அவர்களை தவிர யாறு அங்கு சென்றாலும் தற்கொலை செய்வார்கள் என்று முன்னால் பேராசிரியர் வசந்தா கந்தசாமி சொல்கிறார். இந்த பார்ப்பன கூடாரத்தில் நுழைந்த பாத்திமாவை டார்ச்சர் பன்னி சாவடித்துள்ளனர். அவரது தாய், வட மாநிலங்களை விட தமிழகம்தான் பாதுகாப்பானது என்று எண்ணித்தான் சேர்த்தோம் என்கிறார். அந்த தாய்க்கு நாம் என்ன பதில் சொல்ல போகிறோம்.

ஹைதராபத்தில் ரோகித் வெமுலா, மும்பையிலே மருத்துவர் பாயல், டெல்லியிலே முத்துகிருஷ்ணன் என இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை நடந்துள்ளது. இதில் ஒரு பார்ப்பன மாணவர் கூட கிடையாது. உயர் கல்வி நிலையங்களை பார்ப்பன அக்கிரகாரமாக இந்தியா முழுவதும் மாற்றியுள்ளனர். அதன் வடிவம்தான் இன்று மோடி அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என ஏழை மாணவர்களை படிக்க விடாமல் செய்யப் போகிறது. நீட் தேர்வு அதைத்தான் உருவாக்கியுள்ளது. முழுக்க அரசு பள்ளிகளை அழித்து, தனியார் பள்ளிகளை உருவாக்கி கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி வகுக்கிறது. ஒரு பக்கம் கார்ப்பரேட் கொள்ளை. மற்றொரு பக்கம் திருவள்ளுவருக்கு காவி, பொறியியல் படிப்பில் பகவத்கீதை, கல்லூரியிலேயே சாகா பயிற்சி என காவிகளின் பிடி இருகுறுகிறது.

இன்று வரை பத்மநாபனை கைது செய்யாதது ஏன்? பார்ப்பான் என்பதை தவிர வேறென்ன. இந்த பார்ப்பன பாசிசத்தை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது. வாழ முடியாத சூழலில் நமக்கு ஏது வாழ்க்கை. போராட்டத்தினால்தான் இதனை மாற்றி அமைக்க முடியும். “4 மாடு தனித்தனியாக செல்லும்போது சிங்கம் மிரட்டும். ஒருநாள் 4 மாடு ஒன்றாய் சேரும். அன்று சிங்கத்தை விரட்டும்…” அமைப்பாய் திரண்டு போராடுவோம்” என்றார்.

படிக்க:
♦ மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !
♦ தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

இந்த கூட்டத்தில் தோழர் சுரேஷ், ம.க.இ.க கலைகுழு தோழர் லதா கல்வி, இடஒதுக்கீடு சம்மந்தமான பாடல்கள் பாடினர். இறுதியாக கல்லூரி மாணவர் தமிழ் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !

0

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை, கண்டனக் கூட்டம் நடத்த தர்மபுரி போலீசு தடை !

டந்த 8-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி.-யில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டார். இது அவருடைய பெற்றோர் மட்டுமல்ல அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தற்கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன்தான் காரணம் என்று தனது செல்போன் குறிப்பில் ஃபாத்திமா எழுதி வைத்துள்ளார். அப்படியிருக்க பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அதாவது, கடந்த எட்டாம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை ஏறக்குறைய 17 நாட்கள் கடந்தும் இன்று வரை சுதர்சனை போலீசு கைது செய்யவில்லை.

இதனைக் கண்டித்து, ஐ.ஐ.டி ஆசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் 26-11-2019 அன்று மாலை கண்டன கூட்டம் நடத்துவதற்கு தர்மபுரி B1 போலீசு நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் ஆய்வாளர் இல்லை என்று போலீசு நிலையத்தில், மனுவைக் கூட வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பின் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவரோ மீண்டும் B1 போலீசு நிலையத்திற்கே மனுவை அனுப்பினார். அங்கு போலீசு ஆய்வாளர் மனுவைக் கூட படிக்காமல், உங்களுக்கு அனுமதி கிடையாது என்று அராஜகமாகக் கூறி தெருமுனைக் கூட்டத்திற்கு தடை போட்டிருக்கிறார்.

தர்மபுரி போலீசு தொடர்ந்து பல போராட்டங்களுக்கு அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்குவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீசு, அதை காலில் போட்டு மிதிக்கிறது. குறிப்பாக தருமபுரி போலீசு ஆய்வாளர் திரு. ரத்தனகுமார்; “என்ன தொடர்ந்து மனு கொடுக்கிறீங்க… ரிமாண்ட் பண்ணிருவேன்.. பாக்குறியா.. ” என்று மிரட்டுகிறார்.

படிக்க:
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
♦ ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை – பேச்சுரிமையை மறுத்துவிட்டு போராடுபவர்களை ஒடுக்கும் தருமபுரி போலீசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த அடக்குமுறையை அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் கண்டிக்குமாறும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கோருகிறோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : 63845 69228.