Friday, July 17, 2026

பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!

பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜவ்வாது மலையை அச்சுறுத்தும் அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத் திட்டம்

வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின் வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

2
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்

தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!

சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க

மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்

டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!

10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.

கோழிப்பண்ணை விவசாயிகள் | போராட்ட வரலாறு | பகுதி 2

விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால், இன்று தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசு முழுவதுமாக கைகழுவியுள்ளது.

கோழிப்பண்ணை விவசாயிகள் |  வாழ்வியல் | பகுதி 1

பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள்.

மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்

மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி  மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.

ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!

ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.

அண்மை பதிவுகள்