டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.
ஹோமியோபதியில் முதுநிலை பட்டப்படிப்பு வேண்டி மாணவர்கள் தொடர் போராட்டம்
ஹோமியோபதியில் அரசு கல்லூரியிலேயே முதுநிலை பட்டப்படிப்பு வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை ஹோமியோபதிக்கான உள்கட்டமைப்பு உருவாக்கி வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
நீட் மோசடி: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! | தோழர் ரவி
நீட் மோசடி: NTA-ஐ கலைத்திடு!
வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! | தோழர் ரவி
https://youtu.be/PLgZAe2pkmA
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!
மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர்.
ராஜஸ்தான் ‘சேட்டு’ ஆர்.பி. சவுத்ரியின் மரணத்திற்கு ‘செந்தமிழன்’ சீமான் புகழ் வணக்கம்!
வட இந்தியாவில் இருந்து தொழில் செய்ய வந்த ஒரு சேட்டை, வாழ வைத்த தெய்வம் என்று புகழும் சீமான், வட மாநில தொழிலாளர்கள் மீது இன வெறியைக் கக்குகிறார்; உழைத்து வாழும் அருந்ததியின மக்களை தெலுங்கர்கள், வந்தேறிகள் என்று கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 2
“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...
மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 1
“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...
கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பெண் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் இணையவழி வன்முறைகள்!
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
பென்னாகரம் – போடூர்: சந்துக்கடை சாராயக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!
நமது பிரச்சினையைச் சரிசெய்ய யாரும் வரப்போவதில்லை, நாம்தான் தீர்க்க வேண்டுமென முடிவெடுத்த போடூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு 27.04.2026 மதியம் 12.00 மணியளவில் போடூரில் இயங்கிவந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்; சந்துக்கடை நடத்தும் நபரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
























