சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்
சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.
மணப்பாறை டி.என்.பி.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வாயிலில் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உட்பட அனைவரும் இரவிலும் தங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு: விஜய் அரசின் கார்ப்பரேட் சேவை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பெரம்பலூர் எம்.ஆர்.எஃப்: 30 மாதங்களாக மறுக்கப்படும் ஊதிய உயர்வு — போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் நிர்வாகம்!
பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு நிறுவனத்தின் ஊதிய பிரச்சினை மட்டுமல்ல; ஒப்பந்தமயம், சங்க விரோதம், கார்ப்பரேட் ஆதரவு அரசுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டமாகும். நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர், பயிற்சியாளர் என்ற நிர்வாகப் பிரிவுகளைத் தாண்டி அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைவதை நோக்கி இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிக்கும் திசைவழி இதுதான்.
காசா பயணத்தில் முதல் இந்தியர் | நேர்காணல்
நிகிதா நாயுடு நேரில் கண்ட சூழல்கள், இந்த முயற்சியில் பங்கேற்கத் தூண்டிய காரணங்கள் குறித்தும் உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ முன்வந்தவர்களின் பணியை உலக அரசுகள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பது குறித்தும் இந்நேர்காணலில் பேசியுள்ளார்.
கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!
கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!
https://youtu.be/LtcS8X1VPpI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல் – தமிழ்நாட்டில் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள்
இரண்டு கார்களில் வந்த கும்பல் அவர்களது ஆட்டோவை வழிமறித்து அஜித் குமாரை தாக்கியதுடன், அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!
விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.
ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்
இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு
இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் | தெருமுனைக் கூட்டம்
கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.
தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு
அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்
தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

























