Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 196

அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!

மெரிக்க தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் சட்ட உரிமைகள் கிடைத்து நூற்றாண்டுக்கும் மேல் ஆனாலும் தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. 2020-இல் 10.8 சதவிகிதமாக இருந்த தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2021-இல் 10.3 சதவிகிதமாகக் குறைந்தது. அதாவது, 2௦21-ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர்களில் நூற்றுக்கு பத்து பேர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
எனவே, அமேசான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் அமைத்துள்ள புதிய சங்கம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. பழமையான மையப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வரும் வேளையில், அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட இந்த சங்கம் புதிய முறையில் புதிய ஊக்கத்துடன் ஜனநாயக முறைப்படி பெருவாரியான தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் அமைத்துள்ளது.
உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வணிகம் செய்யும் அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனாலும் எங்குமே இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் பணக்கார நகரான நியூயார்க் நகரில் உள்ள அமேசான் கிடங்கில் (warehouse) வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சங்கம் அமைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இந்நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய பலம் வாய்ந்த எதிர்ப் பிரச்சாரத்தை முறியடித்து சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அமெரிக்க தேசிய தொழிலாளர் வாரியம் (NLRB) ஏற்பாடு செய்து நடத்தியது. “சங்கமே தேவையில்லை”, “இங்கே அமைக்கக் கூடாது” என்று பெரும் முயற்சி செய்து வந்த அமேசான் நிறுவன அதிகாரிகள் மண்ணை கவ்வியுள்ளனர். தொழிலாளர் வாரியம் நடத்திய இந்த தேர்தலில் சங்கம் அமைப்பதைத் தடுக்கும் முயற்சியில் பல கோடி பணம் செலவு செய்தும் அமேசான் நிறுவனம் சங்கம் அமைப்பதைத் தடுக்க முடியவில்லை. முயற்சியில் தோல்வியுற்ற நிறுவனம், தொழிலாளர்களுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்து சங்கத்தினர் வெற்றிப் பெற்றதாகப் பொய் குற்றச்சாட்டைப் பரப்பியது.
படிக்க :
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
இந்தச் சங்கத் தேர்தல் குறித்து, அமெரிக்காவில் வெளியாகும் பிரபலமான இடதுசாரி பத்திரிகையான ஜேகொபின்மாக் இதழ் (Jacobinmag) அமேசான் தொழிற்சங்கத் தலைவர் பிரிமா சில்லா (Bryma Sylla) அவர்களுடன் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்துள்ளோம்.
அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம்
நியூயார்க் நகரிலுள்ள ஸ்டேட்டன் தீவில் புதியதாக அமேசான் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் வெற்றி அமெரிக்கா முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இங்கே சங்கம் அமைத்து வெற்றிபெற்றதென்பது, கிறித்தவ வேதத்தில் வரும் ‘கோலியாத் என்ற பலம் வாய்ந்த கொடியவனை, சிறுவன் தாவீது கவண் கொண்டு கல் எறிந்து வீழ்த்தியது போன்ற வெற்றி’ என்று நியூயார்க் தொழிலாளர்கள் வியக்கிறார்கள்.
நியூயார்க் நகரமானது பெரும்பகுதி புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டதைப் போல, நகரின் மையப் பகுதியான ஸ்டேட்டன் தீவில் (Staten Island) உள்ள ஜே.எஃப்.கே-8 (JFK-8) அமேசான் பொருள் சேமிப்புக் கிடங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தொழிற்சங்கங்களில் சேர்ந்து இயங்குவது என்பது அனைவருக்கும் அச்சம் அளிக்கக்கூடிய ஒன்றே. அதிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது இரட்டிப்பு பயம் தரக்கூடியதாகும். அவர்களது துணிச்சலும் புத்திக் கூர்மையும் அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியும், ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் மயிர்க்கூச்செறியும் காட்சியைப் போன்றது.
அமேசான் தொழிற்சங்க முன்னணியாளர் பிரிமா சில்லா (வலது), தனது சக தொழிற்சங்க தோழருடன்.
இந்த முயற்சியின் நாயகமாக இருப்பவர் காலை ஷிப்டில் சரக்குகளைப் பொட்டலம் கட்டும் வேலை செய்யும் ஐம்பத்தைந்து லைபீரியக் குடியேறியான பிரிமா சில்லா. இவர் அமேசான் தொழிலாளர் சங்கத்தின்கீழ் (Amazon Labour Union – ALU) அர்ப்பணிப்புமிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சேர்ப்பதற்காக, அனைவரது முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர். தமது அனுபவத்திலிருந்து அமெரிக்கா முழுவதும் உள்ள அமேசான் தொழிலாளர்கள் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஜேக்கபின் பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அவரது பேட்டி கீழே:
000
பத்திரிகையாளர் எரிக் : அமேசானில் நீங்கள் எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள்?
பிரிமா: நான் ஸ்டேட்டன் தீவில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியில் பத்து வருடங்களாக உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்தேன். ஆனால் கோவிட் பெருந்தொற்று தொடங்கியவுடன் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு, நியூயார்க் வாசிகளுக்கு கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளும் டெஸ்ட் அண்ட் ட்ரேஸிங் (Test and Tracing) நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். நான் வால்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முனைவர் பட்டம் ( Ph.D in Public Policy) பெற்றுள்ளேன். வேலை தேடி என்னுடைய விண்ணப்பங்களைத் தொடர்ந்து அனுப்பி வந்தேன். ஆனால் தொற்றுநோய் பரவலின்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. அதனால் நான் அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: அமேசான் நிறுவனத்தில் வேலை நிலைமைகள் எப்படி இருக்கும்?
பிரிமா: அமேசான் எங்களை மனிதர்களைப் போல நடத்துவதில்லை; இயந்திரங்களைப் போலவே நடத்துகிறது. ஷிப்ட் நேரம் பன்னிரெண்டு மணிநேரம் என்பதால், நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும் – இது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது. ஒரு ஷிப்ட் முடித்து வெளியே வருகையில், யாரோ நம்மை அடித்துப் போட்டதுபோல இருக்கும். மீண்டும் அந்த வேலைக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலே காலையில் எழுந்திருக்கும் நினைப்பே நமக்கு வராது.
வேலையின்பொழுது, கழிப்பறைக்குச் செல்லும் இடைவேளை போன்ற அடிப்படை விசயங்களில்கூட நிர்வாகத்தினால் மோசமாக நடத்தப்படுகிறோம். நீங்கள் பணியில் இருக்கும்போது உங்களது நேரத்தையும் உங்களது உழைப்பையும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதில் மட்டும்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்; புகார் செய்தால் அதனைக் கண்டுகொள்வதில்லை. இது மனிதாபிமானம் அல்ல – உண்மையைச் சொல்வதானால், இது ஒரு உண்மையான மலைத்தோட்ட வேலையைப் போன்றது.
இங்கு கொடுக்கப்படும் ஊதியமும் போதுமானதாக இல்லை. என் மனைவி ஒரு முதியோர் இல்லத்தில் வேலை செய்கிறார். எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். உலகிலேயே மிகுந்த செலவு பிடிக்கும் நகரமான நியூயார்க்கில் ஒரு குடும்பம் ஒரு மணி நேரத்திற்கு 18 டாலர் சம்பாதிக்கும் எங்களைப் போன்றவர்களால் வாழவே முடியாது.
பத்திரிகையாளர் எரிக் : தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் நீங்கள் எப்படி இறங்கினீர்கள்?
பிரிமா: தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட நிர்வாகத்தின் எடுபிடிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் எங்களிடம் கூறிய பொய்களை அமேசான் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான காசியோ அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். அதற்காக அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு நான் அவருடன் பேசினேன். தொழிற்சங்கம் அமைப்பதைப் பற்றியும் அதன் பலன்கள் என்ன என்றும் அவர் நிறைய விசயங்களைச் சொன்னார். “இது சரியான போராட்டம்தான். நான் ஒரு பார்வையாளராக வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. இதில் நான் பங்கேற்க விரும்புகிறேன்” என்று அப்போது எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
நியூயார்க்கில் வசிப்பதால், தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கருவிகள் என்பதை நான் அறிவேன். நியூயார்க் நகரச் சுரங்க ரயில்வே தொழிலாளர்கள், நியூயார்க் நகர தீயணைப்பு படை வீரர்கள், துப்புரவுத் பணியாளர்கள் மற்றும் நியூயார்க் நகர காவல்துறை பணியாளர்களைப் பாருங்கள். அவர்கள் அமைப்பாக்கப்பட்டவர்கள். எனவே அமைப்பாளர் காசியோ அவர்களிடம், இந்தப் பணிகளில் நானும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினேன்.
வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர் என்னை அழைத்துச் செல்வார். அங்கு நான் நிறையக் கற்றுக்கொள்ளவும், சங்கம் அமைப்பது பற்றிய நூல்களைப் பெறவும் முடிந்தது. அந்தக் கமிட்டிக் கூட்டங்களில், நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினோம். நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள “உள்ளூர் தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்” [UNITE HERE Local 100] என்ற சங்கத் தலைமையகத்திற்கு நான் செல்ல ஆரம்பித்தேன்.
நவீன கொத்தடிமைகளைப் போல, பன்னிரண்டு மணிநேரம் நின்று கொண்டே வேலைபார்க்கும் அமேசான் தொழிலாளர்கள்.
தொழிற்சங்கம் தொடங்கும் முயற்சியில் இறங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இதற்கு முன்பு நான் ஒருபோதும் தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டது இல்லை. இருந்தாலும் ஸ்டேட்டன் தீவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் நலனுக்காகச் செயல்படும் ஆப்பிரிக்கச் சமூகக் கூட்டணியின் (ACASI) பொதுச் செயலாளராக இருப்பதால் மக்களை அமைப்பாக்குவதில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தது.
நான் சமூக ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் திறன் பெற்றுள்ளேன். எனக்கு பிரெஞ்சு, அரபு, ஆங்கிலம் மற்றும் மூன்று ஆப்பிரிக்க மொழிகள் பேசத் தெரியும். அதனால் அமேசான் கட்டிடத்தில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அமேசான் நிறுவனத்தில் செனகல், நைஜீரியா, லைபீரியா, கானா, அல்ஜீரியா, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அல்பேனியா, போலந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தென் அமெரிக்கர்கள் என பல நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை செய்கிறோம்.
நாங்கள் மதிய உணவு நேரத்திலோ அல்லது பிற இடைவேளைகளிலோ, அல்லது சில சமயங்களில் வேலையை விட்டு வெளியேறும் நேரத்திலோ ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துப் பேசிக்கொள்வோம். வேலைக்கு வருபவர்கள் நிறைய புகார் செய்வதுடன் நின்றுகொண்டார்கள். ஆனால் அதைத் தீர்க்கும் வழியில் அவர்கள் ஈடுபடவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், தொழிற்சங்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இங்குள்ள நிறைய தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஈடுபாடுகாட்டவில்லை. அவர்கள் வேலை முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லவே விரும்பினர்.
பத்திரிகையாளர் எரிக்: அதற்கு காரணம் பயமா?
பிரிமா: நிச்சயமாக பயம்தான். பலர் பழிவாங்கப்படுவோம் என்று பயந்தார்கள். ஏன் நானேகூட பயந்தேன். புலம்பெயர்ந்தவர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதற்காக மிகக் கடினமாக உழைக்கிறோம். எங்கள் பிழைப்பை நாங்கள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நானும் ஆரம்பத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். அமேசான் தொழிற்சங்கம் பெயர் பதித்த சட்டையைக்கூட அணியலாமா வேண்டாமா என்பது எனக்கு யோசனையாகத்தான் இருந்தது. பிறகுதான், ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியதும் நான் அந்தச் சட்டையை அணிய ஆரம்பித்தேன்.
இறுதியில் நான் மிகவும் தைரியமாக மாறிவிட்டேன். எனக்கு நேரும் அபாயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். சங்கம் அமைக்கப்பட வேண்டுமானால், நம்மில் சிலர் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: உங்கள் சங்கத்தவர்கள் வெற்றிபெற என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?
பிரிமா: கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் ஓய்வு அறையில் நான் நிறைய தொழிலாளர்களைச் சந்துத்து பேசினேன். பல சமயங்களில் ஆப்பிரிக்கத் தொழிலாளர்களைக் கூட்டமாகப் பார்ப்பேன், எப்போதும் அவர்களிடம் நானாகவே சென்றுப் பேசுவேன். “பார் தம்பி, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் வேலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அமேசான் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்படித்தான் அமெரிக்க கனவை நாம் வெல்ல முடியும். அமேசானில் பணிபுரிபவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. உழைக்கும் வர்க்கம்” என்பேன், “நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முப்பது டாலர்கள் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?” என்று நான் கேட்டால் அவர்கள் நிச்சயமாக ஆம் என்றுதான் கூறுவார்கள்.
நான் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், போலந்து என அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுடனும் பேசினேன். ஒரு போலந்துத் தொழிலாளியிடம், அவருக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு நான் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். நாங்கள் உரையாடினோம், இறுதியில் அமேசானில் வேலை செய்வதுப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்: சம்பளம் மிகக் குறைவாக இருப்பதாகவும், வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது பெறும் 18 டாலரில் இதையெல்லாம் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் அவர் தொழிற்சங்கத்திற்கு வாக்களிப்பேன் என என்னிடம் சொன்னபோது, எல்லோரும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்தேன்.
இந்த மாதிரியான உரையாடல்கள் பயனுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். எங்களிடம் மறைப்பதற்குரிய விஷயம் எதுவும் இல்லை என்று தொழிலாளர்களும் புரிந்து கொள்ளத் தொடங்கினர். தேர்தல் நெருங்கிய நேரத்தில், இங்கு பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் சங்கத்தின் பெயர் தாங்கிய சட்டைகளை அணியத் தொடங்கிவிட்டனர். இதில் வெள்ளையினத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருந்தனர்.
பத்திரிகையாளர் எரிக்: இதன் தொடர்ச்சியாக, நீங்கள் மற்ற ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை எடுத்தீர்களா?
பிரிமா: என்னுடைய ஒரு முன்முயற்சி என்னவென்றால், அனைவரின் கைகளிலும் அதிகமான விபரங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். இதுகுறித்து காசியோ மற்றும் இதர முன்னணியாளர்களிடம் பேசினேன். எங்கள் கட்டிடத்தில் நான்கு ஷிப்டுகள் வேலை நடக்கும். ஒவ்வொரு ஷிப்ட் முடியும்போதும், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அப்போது கட்டிடத்தின் நுழைவாயிலில் இருமொழிகளில் அச்சிடப்பட்ட தொழிற்சங்கத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, அவர்களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால் நானும், கேசியோ, டிரிஸ்டன் போன்ற முன்னணியாளர்களும் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கினோம். பிற முன்னணி ஊழியர்களும் இதைச் செய்யத் தொடங்கினர்.
தொழிற்சங்கம் அமைக்கும் பணியை சீர்குலைக்க முற்படும், நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து பிரச்சாரம் செய்யும் அமேசான் தொழிற்சங்க உறுப்பினர்கள்.
அமேசானில் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. எனவே, நாங்கள் சங்கத்திற்காக அதிக நேரம் செலவிட்டோம். இந்த முறை தொழிற்சங்கப் பிரச்சாரம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம், எங்கள் செயலில் முழு நம்பிக்கை கொண்ட, சிறந்த, கடினமாக உழைக்கக்கூடிய ஒருங்கிணைப்புக் குழு இருந்ததுதான் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் செய்தியைக் கொண்டு செல்ல, இங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு வாட்ஸ்அப் குழுக்களை அமைத்தேன். சமூக ஊடகங்கள் எனக்குப் புதிதல்ல; ஆப்பிரிக்கச் சமூக அமைப்பின் பொதுச் செயலாளராக என் பணிகளில் ஒன்று, வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி நடத்தி வருவதும்கூட. அதனால் அதில் எனக்கு அனுபவம் உள்ளது. எனவே நான் “ஆப்பிரிக்கர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – African votes 4 ALU ” என்ற குழுவையும், “புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – Immigrants 4 ALU ” குழுவையும் உருவாக்கினேன். விரைவில் கரீபியன், லத்தீன் மற்றும் ஆசிய இனத்தவர்களுக்கான தனித்தனியான வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கினேன்.
கேசியோ மற்றும் கரேன் ஆகியோர் தென் அமெரிக்கர்களுடன் வேலை செய்ய முன்வந்தனர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இங்கு பணிபுரியும் பல தொழிலாளர்கள் ஸ்பானிஷ் மொழி மட்டுமே பேசக்கூடியவர்கள். அமேசானில், இந்த வாட்ஸ்அப் குழுக்கள் தொழிலாளர்களுடன் சங்கம் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியாக மாறியது. அனைவரும் கேள்விகளைக் கேட்கலாம், கருத்துத் தெரிவிக்கலாம். சங்கத்தின் அறிவிப்புகளைத் தொழிலாளர்களிடம் கொண்டுசெல்ல இம்முறை எளிதாக இருந்தது.
நான் யாரைச் சந்தித்தாலும், அவர்களிடம் செல்பேசி எண்களைக் கேட்பேன். அவர்களும் நம்பி எண்களைக் கொடுப்பார்கள். அவர்களை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, அவர்களது நண்பர்களுக்கும் செய்திகளைப் பரப்பும்படி சொல்வேன். சில நேரங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களை நேரடியாகவே வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து விடுவார்கள்.
என் அண்ணியின் மகளும் இங்கு வேலை செய்கிறார் என்று தெரிந்தவுடன், அவரை சந்தித்துப் பேசி, வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தேன். அவருடன் பணிபுரியும் சுமார் இருபது நண்பர்களின் செல்பேசி எங்களைக் கொடுத்தார். அவர்களில் ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, வெள்ளையர்களும்கூட இருந்தார்கள்.
சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் பேட்டியளிக்கும் தொழிற்சங்க அமைப்பாளர் கிரிஸ்டின் ஸ்மால்ஸ்.
தொழிற்சங்கத்திற்காக நான் செய்த மிகச் சமீபத்திய விசயம், வாக்கு எண்ணும் பணியில் ஒரு பார்வையாளராகச் செயல்பட்டதுதான். நான் ஒரு ஆப்பிரிக்கன். அதிகாரத்தில் இருப்பவர்கள் வாக்குகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்வார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அது மீண்டும் இங்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள விரும்பினேன்.
பத்திரிகையாளர் எரிக்: நீங்கள் சங்கத் தேர்தலில் வென்றுவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
பிரிமா: ‘என்னால் நம்பவே முடியவில்லை’ – அதை விவரிப்பதே மிகவும் கடினம். இதோ நாங்கள் வெற்றி பெற்ற நாளில், என் சகதொழிலாளிக்கு “அதிகாரம் மக்களுக்கே” (Power to People) என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்:
நான் எனது தொழிற்சங்க உடுப்பை அணிந்திருந்தேன். ஜும்மா தொழுகைக்கு முடித்துவிட்டு மசூதிக்கு வெளியே வந்தவர்கள் என்னைப் பார்த்து கை அசைப்பதைக் கவனித்தேன். அதில் ஒருவர் “ஆக, நீங்கள் வெற்றிப் பெற்றுவிட்டீர்களல்லவா“ என்று கூறினார். அனைவரது பார்வைகளும் என்மீது விழுந்தன. இவ்வெற்றி எப்படி சாத்தியமானதென அனைவரும் அறிய விரும்புவதை எண்ணி நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். நமக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவி பிரிமா; அமேசானின் அனைத்து கிளைகளின் பணிச்சூழலும் மேம்படுத்துவதை நாம் எதிர்நோக்குகிறோம்.
படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !
பத்திரிகையாளர் எரிக்: இத்தகைய வெற்றியால் ஈர்க்கப்பட்ட, நாடுமுழுவதும் உள்ள மற்ற அமேசான் தொழிலாளர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
பிரிமா: நாங்கள் அவர்களுக்கு நிச்சயமாக உதவப் போகிறோம். இம்மாத இறுதியில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற ஸ்டேட்டன் தீவின் மற்றொரு சரக்குக் கிடங்கு, அதைத்தொடர்ந்து புரூக்ளின், மான்ஹாட்டனில் உள்ள கிடங்குகள் மற்றும் நாட்டின் அனைத்து முனைகளில் உள்ள தொழிலாளர்களிடமும் எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் வெற்றிக்கு உதவப் போகிறோம்.
பிரிமா பராமரிக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாட்சப் குழு. அத்தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே தொழிற்சங்கத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
நாங்கள் மற்ற தொழிற்சங்கங்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டோம், அனுபவம் வாய்ந்த தொழிற்சங்க அமைப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். எங்களுக்கு ஆதரவளிக்க ஒரு தொழிற்சங்கம் தங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதி தந்தது. இப்போது எல்லா இடங்களிலும் உள்ள அமேசான் தொழிலாளர்களுக்கும் இதைப் போன்ற உதவிகளைச் செய்வது எங்கள் கடமையாகும்.
நமது வாழ்வை மேம்படுத்தும் சக்தி நம்மிடம் உள்ளது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். தொழிற்சங்கம் நிறுவப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தை முன்புபோல ஷிப்ட் முடிந்தவுடனே பூச்சாண்டி துரத்துவதைப் போல தப்பியோடும் நிலைமை இல்லாத – வேலை செய்ய உகந்ததும் வசதியானதுமான இடமாக மாறும். இக்கணத்தில் நீங்கள் வேலைசெய்தால்தான் பிழைக்க (Survive) முடியும் என்ற இடமாகவே அமேசான் உள்ளது. ஆனால் நம்மால் அதை மாற்ற முடியும்.

மொழியாக்கம்: புவனா

மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !

1
பாசிஸ்டுகள் எதிர்க் கருத்துகளுக்கு அஞ்சுபவர்கள் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபிக்கிறார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 26) ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள அக்கல்லூரியின் மாணவ, மாணவியர் 930 பேரின் பெயர் பட்டியல் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், உள்ள ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவினர், அக்கல்லூரியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இவர்களது அனுமதி இன்றி யாரும் இக்கல்லூரிக்குள் செல்லவும் முடியாது. வெளியே வரவும் முடியாது.
இந்தப் பாசிச கோமாளிகள் இவ்வளவு அடக்குமுறைகளை செலுத்திதான் தங்களது கருத்தை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
சமீபத்தில் வெளிநாட்டில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஓமைகாட்’ என்று சொல்லி தலைதெறிக்க ஓடினார் பிரதமர் நரேந்திர மோடி 56 இன்ச் மார்பு கொண்டவர் அல்லவா!
நாடு முழுவதும் பல்வேறு கலவரங்களையும் திட்டமிட்டு நடத்திவரும் காவிக் கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்தே வெளியேற்றும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறார்கள். கல்விக் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வருகிறார்கள். அப்படியானால் மாணவர்களுக்கு எதிராக செயல்படும் இந்த கும்பல் மாணவர்களை கண்டால் அச்சப்படத் தானே செய்வார்கள்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!
இதுபோக, CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்காக களத்தில் முன்னணியில் நின்றது, பல்வேறு உயர் கல்வி படிக்க கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்தான். இன்னும் இதுபோல, நீட் பிரச்சினையில் களத்தில் நின்றவர்கள் மாணவர்கள். இப்படி மக்களை பாதிக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளில் களத்தில் நிற்கக் கூடியவர்கள் மாணவர்கள்.
இது ஒருபக்கம் மாணவர்கள், இளைஞர்களிடம் உள்ள முற்போக்கான அம்சம் என்றாலும் இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த மாணவர்களையும் காவிமயப்படுத்த துடிக்கிறது இந்த காவிக்கும்பல்.
அதற்காக பள்ளிகளில் முதல் கல்லூரி வரை என எங்கும் ஜனநாயக ரீதியான கருத்துக்களை அழித்துவிட்டு பாசிச கருத்துக்களை கொண்ட பிற்போக்கு குப்பைகளையும், காவிக் கும்பலின் தலைவர்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறார்கள். இருக்கக் கூடிய எல்லா பல்கலைக்கழகங்களிலும் தங்களது காவிக் கும்பலை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதற்கு பலியானவர்கள் பிற்போக்கு குப்பையான சரக சப்த் உறுதிமொழியை மதுரை மருத்துவக் கல்லூரியில் வாசித்தார்கள். ஜனநாயக ரீதியான கருத்து கொண்ட பேராசிரியர்கள் தங்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கங்களிலும் பேசக் கூட அனுமதிப்பதில்லை.
சமீபத்தில் உத்தரப்பிரதேச பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவாபி பிரச்சினையை பற்றி கருத்து சொன்னார் என்பதற்காக அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது காவி கும்பலைச் சேர்ந்த மாணவர்கள்.
ஒரு பக்கம் மாணவர்களை தனது காவி பாசிச போதையேற்றும் அதேசமயம், ஒட்டு மொத்த மாணவர் இளைஞர்களையும் கல்வியில் இருந்தும், வேலையில் இருந்தும் துரத்தியடித்து நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூட்டி கொடுத்து வருகிறார்கள். இதற்காகத்தான் இன்று மிகவும் எச்சரிக்கையாக மாணவர்களை சோதிப்பது என்ற பெயரில் அடக்குமுறையை ஏவுகிறார்கள்.
மாணவர்கள் – இளைஞர்களின் சிந்தனையை மடைமாற்றியும், அவர்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்த்து முறியடிப்பதே நம் (மாணவர்கள், இளைஞரகள்) முன் இருக்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

ரவி

இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

0
டந்த 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். முன்னெப்போதும் விட இந்த பயணம் மிக முக்கியமானது என்று ஊடகங்களும், சங்கிகளும், வலது சாரி பொருளாதார வல்லுனர்களும் கூப்பாடுபோட்டு வருகின்றனர். ஆம்… இந்த பயணம் மிகவும் முக்கியமானதுதான் யாருக்கு? காவிகளுக்கும், அவர்களின் எஜமான் கார்ப்பரேடுகளுக்கும்.
அமெரிக்கா தலைமையில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இணைந்து “குவாட்” என்ற அமைப்பை கடந்த 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேல்நிலை வல்லாராசாகவும் உலகத்தில் பெரிய ஏகாதிபத்திய நாடாகவும் வளர்ந்துவரும் சீனாவின் வளர்ச்சியை தடுப்பதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இக்கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்பின் 3-வது கூட்டம் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன், நமது வளர்ச்சி நாயகன் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோர் ஜப்பான் சென்றனர். அவர்களுடன் அந்நாட்டு பிரதமர் பியூமியோ கிஷிடாவும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டும் நவ தாரளமயத்தினை இன்னும் வீச்சாக கொண்டு செல்வது, இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை கார்ப்பரேடுகளின் வேட்டைக்கு சுதந்திரமாக திறந்து விடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
படிக்க :
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
♦ தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !
மேலும், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து விதமான சலுகைகளும் உதவிகளும் செய்வதாக கூறி, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். ஏற்கனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்தியவில் தொழில் தொடங்கி, இந்திய உழைப்பாளர்களின் உழைப்பினை சுரண்டி இயற்கை வளங்களையும், மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளைடித்துச் சென்றுள்ளன. அப்பேர்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது என்பது இழிநிலையிலும் கீழ்நிலை செயல்.
குவாட் கூட்டமைப்பின் முதல்நாள் கூட்டத்தில் சுரண்டல் மிகுந்த ஒரு கள்ளக்குழந்தையை 14 நாட்டுகள் சேர்ந்து பிரசவித்தன. அதுதான் இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, புருனே, தென்கொரியா, பிலிப்பையன்ஸ், மலேசியா ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் முக்கிய நோக்கம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியாத்தில் சீனாவை செல்வாக்கு பரவுவதை தடுப்பதுதான்.
உலகத்தில் அண்ணணாக இருக்கும் அமெரிக்காவுக்கு சீனாவின் வளர்ச்சியாலும், பொருளாதார மந்த நிலையாலும் தற்போது சருக்கல் ஏற்பட்டுள்ளது. இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தவும், அதை மேலும் செலுமைப்பாடுத்தவும் இதுபோன்ற கூட்டமைப்புகள் தேவைபடுகிறது. இதற்கு முன்பு அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி வந்த ஐநா சபை, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுனங்களில் பலம் தற்போது குறைந்து வருதால், இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அதன் விளைவாகவே இந்த இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு.
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க சார்க் அமைப்பு, ஜி 20, காமன்வெல்த், தெற்காசிய கூட்டமைப்பு போன்ற பல கூட்டமைப்புகளில் இந்தியா பிரதிநியாக இருக்கிறது. இதனால் இந்திய முதலாளிகளுக்கும், பல்வேறு நாடுளை சார்ந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்தான் பல நன்மைகள் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு அல்ல. இதுபோன்ற புதிய புதிய ஒப்பந்தங்கள் இந்தியாவின் மறுகானியாக்கத்திற்கான பாதையை மட்டுமே வலுபெரும்.
இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஆசிய நாடுகள்தான். 10 ஆசிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருப்பதால் அமெரிக்க அதிகளவு செல்வாக்கும் செலுத்தும் பகுதியாக இந்திய பெருங்கடல் அமைந்துள்ளது. சீனாவின் ஆதிக்கம் ஆசியாவிலே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி இந்த கூட்டமைப்பின் மூலம் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.
இதற்கு எதிர்வினையாக சீனாவும், தனது அதிகார பலத்தை காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் இயற்கை வளவங்களை கார்ப்பரேட் முதாளிகள் கொள்ளையடிப்பதும், தொழிலார்களின் உழைப்பை சுரண்டுவதும் மேலும் தீவிரமடையும். உலகத்தின் ரவுடியாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கவும், ஆசியாவின் பேட்டை ரவுடியாக இந்தியா மாறவும் வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

வினோதன்

மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்

மடியாது… மறையாது நக்சல்பாரி!
நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல்பாரி இயக்கமும் தோன்றி 55 ஆண்டு கடந்துவிட்டன. இருந்தபோதும் இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிச தாக்குதலை உழைக்கும் மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தை உறுதிபடுத்தி, ஏழை உழைக்கும் மக்களை மேலும் வறுமையில் தள்ளிவருகிறது. இது ஒருபுறமிருக்க, தனது இந்து ராஷ்டிரா கனவை நிறைவேற்றும் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருகிறது காவிக் கும்பல். முஸ்லீம் – கிருத்துவ சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மசூதிகளை, இந்துக்கோயில் என்று பிம்பத்தை உருவாக்கி, பாபர் மசூதி இடிப்பைப் போன்ற ஒரு கரசேவைக்கு நாடு முழுவதும் காவி பயங்கரவாத அமைப்புகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
***
***
ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

 

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !

0
க்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் இந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.
நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும் வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.
“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.
– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.
“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.
“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.
ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.
ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.
ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?
படிக்க :
♦ மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
♦ நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
நக்சல்பாரி –
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.
ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.
நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.
பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.
ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,
– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.
– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.
– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.
– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.
– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.
– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.
நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.
அது இப்படித்தான் நிகழ்ந்தது.
1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.
அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.
அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.
நக்சல் பாரி கிராமம்
மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.
நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.
ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.
அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.
1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.
1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.
1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.
நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.
கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.
“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.
மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.
இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர்.
பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.
அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.
மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.
“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும்.
எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.
படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.
நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.
நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.
மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.
“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!
நக்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.
நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.
ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.
ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.
மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.
சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.
மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம்.
மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.
இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.
ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.
“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.
நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.
படிக்க :
♦ இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.
‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.
நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.
1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.
ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.
ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.
(நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் 1997, மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.)

 

சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!

சுடுகாட்டு ஜனநாயகம் ! உறுதியாய் நின்ற மக்கள் ! மக்களிடம் கற்போம் ! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம் !
யர் காவல்துறை அதிகாரிகள் மே-20 முதல் 22 காலை வரை “ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஏதாவது ஹால் மீட்டிங் நடத்துங்கள், 2 நாட்கள் கழித்து வெளிநிகழ்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். நமது கூட்டமைப்பினர் உடன்படவில்லை.
19-ம் தேதி நடந்த சந்திப்பில் நெல்லை மண்டல DIG அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் “கைது செய்யப்படுவீர்கள்” என்றார்.
ஆலை எதிர்ப்பு முன்னணியாளர்களின் நடமாட்டம் இரு நாட்களுக்கு முன்னரே தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 21-ம் தேதி இரவு தூத்துக்குடியின் பல பகுதிகளுக்கு சென்ற போலீஸார் “தெருக்கள் / ஊர்களுக்குள் மட்டுமே நடத்திக்கொள்ள வேண்டும், மெயின்ரோட்டில் அஞ்சலி நடந்த அனுமதி கிடையாது, மக்கள் கூட்டமைப்பு நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு யாரும் செல்லக்கூடாது” என்றும் வற்புறுத்தினர்.
மே 22, காலையில் நாம் அஞ்சலி செலுத்தப்போகும் சுடுகாட்டை போலீஸார் மறித்து காக்கி / கருப்பு உடையில் பயம் காட்டினர். அதைப் பார்த்த சாதாரண எந்த குடிமகனுக்கும் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த செல்லும் எண்ணமே வராது. இப்படித்தான் இருந்தது தமிழக அரசின் சமூக நீதி.
போலீஸார் அஞ்சலி செலுத்த வந்தவர்களை மிரட்டிக் கொண்டும், விரட்டிக்கொண்டும் இருந்தார்கள். தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் வட பக்கம் சுடுகாடு. தென்பக்கம் சிதம்பர நகர் ஆர்ப்பாட்ட திடல். ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டுமெனில் போலீஸார் ரோட்டின் தென்பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். ஆனால், பெரும் போலீஸ் படை கல்லறைக்கு சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையே தடுப்பது என்ற எண்ணத்தில் சுடுகாட்டை மறித்து நின்றது.

பிரதான ரோட்டில் செல்வோர், வருவோர் அஞ்சலி செலுத்த வந்த நம்மையும் பார்த்து விடாதபடி சுடுகாட்டிற்குள் தள்ளுவதையே குறியாக இருந்தனர். பின்னர் அங்கிருந்து முழக்கமிட்டவாரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பரத்ராஜ், கார்த்திக் கல்லறைகளுக்கு சென்று மாலை, மலர்தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி செலுத்தப்பட்டது. உறுதிமொழி என்றால் அத்தனை உணர்வு பூர்வமானது.
அடுத்த நொடியில் சுற்றி வளைத்த காவல்துறை சுடுகாட்டிலேயே கலைந்துபோக கூறியது. நமது தரப்பில் மறுத்து, முழக்கமிட்டு சுடுகாட்டு வாசலை தாண்டுவதற்குள், வழி மறித்தனர் இரண்டு SP-க்களும், அவர்கள் தலைமையிலான காவல் படையினரும். பாளையங்கோட்டை மெயின்ரோடு வரை தான், சுமார் 100 மீட்டர் வரை முழக்கமிட்டுச் செல்ல அனுமதி கேட்டோம். அனில் அகர்வாலின் குரல் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகளின் மூலம் கண்டம் விட்டு பாய்கிறது. ஆனால், எங்கள் குரல் சுடுகாட்டிற்குள் அடங்கி போகவேண்டும் என்றால் அதற்கு முடியாது. காவல் துறைக்கு அடிபணியப் போவதில்லை என்று மக்களும் உறுதியாக நின்றார்கள்.
CBI-க்கு எதிராகவும், கொல்லப்பட்டவர்களுக்கு எங்கே நீதி? என்ற மக்களின் குரலும் மெயின்ரோட்டின் காதில் விழக்கூட உரிமை இல்லை. கைது செய்யப்படுவது உறுதி என்றானதும் சுடுகாட்டு வாசலில் வைத்தே சி.பி.ஐ-ன் குற்ற அறிக்கையை மக்கள் ஊடகங்கள் முன்பு கிழித்தெறிந்து அம்பலப்படுத்தி முழுக்கமிட்டனர்.
அடுத்து நொடி சுடுகாட்டில் வைத்து மக்களை போலீஸார் கைது செய்தனர். முழக்கமிட்டவாறு இருந்த பெண்கள், ஆண்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிதம்பரநகர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மண்டபத்தில் ஒவ்வொருவராக ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்னரும் 4 ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தையும், தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்தனர். மகிழ்ச்சி-துக்கம்-கோபம்-கண்ணீர் என வெளிப்படுத்தினர்.
காலையில் கூட நிறைய பேர் சாப்பிடாமல் வந்திருந்து கைதாகி இருந்தனர். நேரம் 1.30-க்கு போலீஸார் சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம், கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், மக்கள் “போலீஸ் கையால் வாங்கி தரும் சாப்பாடும், தண்ணீரும் வேண்டாம்” என்றனர். இதை காவல்துறையினரிடம் தெரிவித்தோம். அவர்கள் “முதலில் நாங்கள் வாங்கி வருகிறோம், இல்லையென்றால் அது எங்கமேல தப்பாயிரும்” என்று கூறி சிறிது நேரத்தில் பெரிய அட்டை பெட்டியில் ஏற்பாடு செய்த சாப்பாட்டு மண்டபத்திற்குள் வாசனையோடு வந்தது. காய்கறி பிரியாணியாம். தரமான ஓட்டலில்தான் வாங்கி வந்ததுபோல தெரிந்தது.
மக்களின் முகத்தில் பசி படர்ந்து, உடல்சோர்வாகத்தான் இருந்தது. ஆனால் சாப்பிட மாட்டோம் என்பதில் உறுதியாய் இருந்தனர். போலீஸார் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் இசையவில்லை. இரண்டாவதாக மைக் ஸ்பீக்கரோடு வந்து DSP, ASP சாப்பிடும்படி அறிவித்தார்கள். “4 வருஷத்துக் முன்னாடி இதே தேதியில எங்க புள்ளிங்கள கொன்ன கொலைகாரர்கள் கையால் எதையும் திங்க மாட்டோம், குடிக்க மாட்டோம்” என்றபோது அவர்களில் ஒரு சிலர் துள்ளகத்துடிக்க படுகொலை செய்யப்பட்டதை கூறி அழுது கொண்டு இருந்தார்கள். பிரியாணியின் வாசனையும் காவல்துறையின் வேண்டுகோளும் மக்களின் பசியோடு மோதி தோற்றது. “வயசானவங்க இருக்குறீங்க, நீங்களாவது சாப்பிடுங்க” என்றனர். “வயசானவங்கன்னு அரெஸ்ட் பண்ணும்போது உங்களுக்கு தெரியலையா” என்றார்கள். கல்யாண மண்டபம் கலகலத்தது.
இந்த தகவல் வெளியில் தெரிந்து பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மாணவர்கள் உடனடியாக அன்பும், அக்கரையோடும் ஏற்பாடு செய்த உணவையும், தண்ணீரையும் குடித்தனர்.
போலீஸார் இரவு 7.00 மணியாகியும் மண்டபத்திலிருந்து கைது செய்தவர்களை வெளியேவிடவில்லை. கோபமடைந்த மக்கள் “6 மணிக்குள் விடுவார்கள், மணி இப்போது 7.00 ஆகிறது, 7.30-க்குள் விடவில்லை என்றால் வெளியேபோக மாட்டோம்” என்றார்கள். அழைத்துச் செல்ல பஸ் லேட்டாகிறது என்றதும், “அரெஸ்ட் செய்ய வண்டி உடனே வருது, இப்ப மட்டும் வண்டி வராதா..?, 5 நிமிஷத்தில் வண்டி வரலைனா நாங்க மண்டபத்தை விட்டு வெளியே போக மாட்டோம்” என்று கோபத்தை வெளிப்படுத்தினார்கள். 7.30-க்கு போலீஸ் வாகனம் வந்து கூட்டிச் சென்று அவரவர் பகுதிகளுக்கு சென்றனர்.
***
2018-ல் தேடித்தேடி பொதுமக்கள் / இளைஞர்களை வேட்டையாடிய போலீஸ், 2022-ல் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகள் ஒட்டிய நினைவஞ்சலி போஸ்டர்களை டவுன், கிராமம் என தேடித்தேடி கிழித்து ஆத்திரத்தை தணித்துள்ளனர். பண்டாரம் பட்டியில் இதை நேரில் பார்த்த மக்களின் கண்களில் தப்பிக்க பார்த்த போலீஸை மக்கள் விரட்டியுள்ளார். பின்னர் உயரதிகாரிகள் மக்களிடம் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.
மடத்தூர் மக்கள் கூடுதலாக ஒரு நினைவஞ்சலி பேனர் முக்கிய சந்திப்பில் வைத்ததை எடுக்க சொல்லி “விளம்பரத்துக்கு பேனர் வைக்கக் கூடாது” என்ற போலீஸை “நீங்கள் காக்கி உடுப்பு போட்டு நடமாடுவது கவுரத்திற்கும், உங்களை போலிஸுன்னு மக்கள் தெரிஞ்சுக்கிடனும்னு விளம்பரம் தானே, அதுபோல நாங்களும், இந்த போராளிங்க எங்களுக்காக செத்தாங்கன்னு உலகத்துக்கு தெரிய விளம்பரம் செய்றோம், வேலையை பாத்துட்டு போங்க சார்” என்று போலீஸை மக்கள் கையாண்டு கண்டித்துள்ளனர். இன்னும் ஒரு சில பகுதிகளில் நினைவேந்தல் பேனரை போலீயே மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்றுள்ளார்கள்.
மே 22, 2018-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கொலைவெறியில் சுட்டுக் கொன்ற போலீஸ் மே 22, 2022-ல் சுடுகாட்டின் உள்ளே அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கைது செய்துள்ளது.
அஞ்சலி செலுத்தவும், அரை மணிநேரம் பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீஸுக்கும், திமுக அரசுக்கும் என்ன இழப்பு?
15 உயிர்களையும், 100-க்கும் மேற்பட்டோர் கை, கால் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு எங்கே நீதி?
நீதியைப் பெறாமலும்,
ஆலையை மூடாமலும்,
தூத்துக்குடி தூங்காது….
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

 

Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !

The BJP in Uttar Pradesh, Haryana and Madhya Pradesh have enacted laws to recover for the damaged government or private property during protests, strikes, rallies, riots, etc from those who had organised the protests and strikes. In addition to the compensation (up to twice the damages), the police’s expenses are also included.
Tribunals headed by former judges appointed on behalf of the government and consisting of government and police officers will impose penalties. If failed to pay, the property of the convict will be confiscated & sold and will be converted into compensation.
UP’s Yogi Adityanath government has illegally put up banners with photographs of protestors and also tried to confiscate their properties to suppress protests against the Citizenship Amendment Act. It was heavily condemned. But in March 2020, an ordinance was promulgated and legal repression continued.
While the case against this was sleeping in the Allahabad High Court, it was enacted into a law in the Assembly in March 2021. A similar law was enacted by the BJP governments in Haryana in March 2021 and in Madhya Pradesh in January 2022.
Read :
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
♦ Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
Those who think what is wrong with punishing those who have damaged public property, should understand that the character of the government will be expressed in the provisions of the law it enacts. The saffron fascist clique is in power. They are implementing the political system of the RSS–Sangh Parivar, which is working with a plan to create a Hindu Rashtra.
They will use the state apparatus to suppress and won’t spare not only those who oppose their saffron terrorist activity, but also the struggles of working people against the exploitation of the corporate bourgeoisie, even other bourgeois political parties that are competing with them for power.
This is the time when judges, IAS and IPS officers are resigning from their posts and joining the BJP to take over the party and governance responsibilities. This is a period of hindutva dominance. It is not necessary to say with whom the damages recovery tribunals will be set up by the BJP governments and how it will function.
The protests against the Citizenship Amendment Act and the farm laws were going on peacefully. It was only after the police attack that the protests had turned into riots. The police themselves set fire to vehicles and opened fire on the people who went quietly to the Collectorate during the anti-Sterlite protests.
These laws are aimed at suppressing the rationale of the protests and covering up state terrorism by portraying the organisers of the protests as rioters and paralysing them.
Given the objectives of these laws, the main aim is to intimidate the organisers of the protest rather than the collection of compensation. The BJP is functioning with a plan to extend these laws to each and every state.
Yogi Adityanath had been charged with criminal cases for murder and rioting before becoming the Chief Minister. As soon as he assumed office, the cases were either withdrawn or closed by the government. It is the Sangh Parivar outfits that is continuing to carry out riots in order to capture and retain power.
They openly challenged Muslims at a conference to ethnically exterminate them and create a Hindutva state. We had to fight even to get a criminal case registered against this.
In such a scenario, if we fight against the saffron fascist schemes or fight against corporate exploitation or even if we speak or write against it, then we will be legally portrayed as ‘rioters’, ‘instigators of riots’ and our assets will be frozen by the government.
The protest of the Muslims to wear hijab is spreading all over the country. The saffron fascism is getting ready to legally attack them through State power.
Suresh Sakthi Murugan

மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?

ந்தவொரு நிகழ்வையும் நினைவுகூர்வதென்பது அந்த நிகழ்வு சமகாலத்திற்கு எத்தனை பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதை பொருத்ததாகவே இருக்கிறது. அந்த நிகழ்வு எதைக் குறிக்கின்றதோ, அது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கும் பட்சத்தில், அது சமகாலத்திலும் அதிக முக்கியத்துவமுடையதாக உணரப்படுகிறது. அந்த வகையில் நக்சல்பாரி புரட்சி நாளான மே 25-ம் நாள் இந்திய கம்யூனிச வரலாற்றில் என்னென்றும் நினைவு கூரத்தக்கதாக இருக்கும். இமயமலை அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ள டெராய் பகுதியில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் தொடங்கிய அந்த புரட்சி வசந்தத்தின் இடிமுழக்கமாக இந்திய வானில் வெடித்தது.
நக்சல்பாரி என்னும் கிராமத்தின் பெயர் வெறுமனே இந்தியாவில் ஆயுதப் புரட்சியின் குறியீடாக மட்டும் இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பு தெலுங்கானா போராட்டம் போன்ற ஆயுதப் புரட்சியை இந்தியா சந்தித்திருக்கிறது. ஆனால், அவையாவும் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாக இருக்கவில்லை. திரிபுவாதத்திற்கு எதிரான போர்க்கொடியை அவை உயர்த்தவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்களின் துரோகத்தனமான நாடாளுமன்ற சமரச பாதையின் மாயையை துடைத்தெரிந்து, நவீன திரிபுவாதத்தின் பிடியிலிருந்து இந்திய புரட்சியை விடுவித்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைபற்றுவதற்கான வழிகாட்டியாக அமைந்தது என்ற வகையில்தான் நக்சல்பாரி புரட்சியின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அது நிலவும் சமூக கட்டமைப்புடன் சமரசம் செய்துகொள்ளும் திரிபுவாதத்தில் இருந்து முறித்துக் கொண்டு, புரட்சிகர மார்க்சிய – லெனினிய வழியை பின்பற்றியது. இந்தியாவில் அரசியல் புரட்சிக்கான பாதையை திறந்து வைத்தது.
நக்சல்பாரி புரட்சி வெடித்த 1967-ம் ஆண்டு ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில் இந்திய சமூக அரசியல் பொருளாதார நிலை என்னவாக இருந்தது? எத்தகைய முரண்பாடுகள் நக்சல்பாரி புரட்சியை கொண்டு வந்தது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அதன் வழியாகதான் இன்றைய நவ தாராளவாத மறுகாலனியாக்க இடைக்கட்டத்தில் இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி முன்வைத்த பாதையின் முக்கியத்துத்தையும், தேவையையும் விளங்கிக் கொள்ளமுடியும்.
000
முதலில் 1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக இருந்ததா? என்ற கேள்வி முக்கியமானது. அதை சுதந்திரம் என்று சொல்வதைவிட ஆட்சி மாற்றம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலேய அரசிடமிருந்து, இந்திய நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது. அது காலனிய ஆட்சிக் காலத்தில் நிலவிய அரசு இயந்திரத்தை அப்படியே வரித்துக் கொண்டது. அதிகார மாற்றத்திற்கு பிறகும் இந்தியா அந்நிய மூலதனத்தை சார்ந்தே இருந்தது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனத்தை சார்ந்து இருந்தது.
படிக்க :
♦ நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்
♦ நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
அதிகார மாற்றத்திற்கு பிறகு சில ஆண்டுகள் வரை இந்திய ரூபாயின் மதிப்பு பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பை சார்ந்திருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வயது வந்த அனைத்து இந்திய குடிமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. 1935-ம் ஆண்டு ஆங்கிலேய காலனிய அரசு கொண்டுவந்த இந்திய அரசியல் சட்டத்திலிருந்து ஏறக்குறைய 250 பிரிவுகள் (மொத்தமுள்ள 395 பிரிவுகளில்) அச்சுப் பிறழாமல் அல்லது சொற்தொடர்களில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அன்றைய தினத்தில் இந்தியா போன்ற அரைக்காலனிய நாடு பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்துதான் நின்றது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை சார்ந்து இருந்தது. 1960-களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து நின்றது. இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவோராய் இருந்த போதிலும் ஏகாதிபத்திய நாடுகள் மீதான சார்புநிலை என்ற சட்டகத்திற்கு உட்பட்டுதான் அதிகாரம் செலுத்த முடியும். இந்திய தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்புநிலை என்பது மிக முக்கியமாக ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலையாகும். அந்நிய மூலதனம், ஒருவகையில் தனியார் நேரடி முதலீடாகவும், மறுவகையில் “உதவி” என்ற சொல்லால் அழைக்கப்பட்ட கடன் மூலதனமாகவும் இருந்தது.
1957-ம் ஆண்டிற்கு பிறகு தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் அந்நிய மூலதனத்தின் உடனான கூட்டு நிறுவனமாக இருக்கும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலை என்பது நாணயத்தின் ஒருபக்கம் மட்டும்தான். இந்த அந்நிய கடன் உதவிகள், மூலதனப் பாய்ச்சல்கள் எல்லாம் இந்திய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் அந்நியர்களுக்கு பெரும் செல்வாக்கை வழங்கியது.
இதிலிருந்து சொல்லிக்கொள்ளப்படும் இறையாண்மை என்பது இந்திய அரசுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், நேருவால் சோசலிசத்தின் பெயரால் கட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தின் சார்பற்ற நிலையை, தனிச்சிறப்பை குறிக்கவில்லையா என்ற கேள்வியை ஒருவர் கேட்கலாம்? ஆனால், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அடிப்படை நோக்கத்திற்காக கட்டப்பட்டவை என்பதை பார்த்தால் இந்த நேருவிய மாயை கலைந்துவிடும். அதிகார மாற்றத்திற்கு பிறகு போதிய தொழிற்துறை வசதிகளும், தொழிற்துறை வளர்ச்சிக்கான கட்டுமானமும், பெரும் தொழிற்துறைகளும் இல்லாதது, தனியார் முதலாளிகளின் அதாவது ஏகாதிபத்தியத்தின் இந்திய கூட்டாளிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாகதான் கனரக தொழிற்துறை, தொலைதொடர்பு, போக்குவரத்து போன்ற வசதிகள் இந்திய அரசாங்கத்தால் செய்துதரப்பட்டது.
ஏனெனில் இந்திய தரகு முதலாளிகளுக்கு இதுபோன்ற அதிகம் மூலதனம் செலவாகும் துறைகளில் முதலீடு செய்யும் அளவுக்கு மூலதனமில்லை, மேலும் அது நீண்ட காலம் பிடிக்கும் லாபம் குறைவாக இருக்கும் துறைகள் என்பதால் அது தனியார் முதலாளிகளுக்கு தவிர்க்கப்பட்டது. இந்த தனியார் முதலாளிகளுக்கு மூலதனம் வழங்கதான் இந்திய பொதுத்துறை வங்கிகளும் உருவாக்கப்பட்டது. இந்த பொதுத்துறை நிறுவனங்களும் உள்கட்டுமானங்களும் கூட இந்திய மூலதனத்தால் அல்ல, மாறாக அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்தால், ஏகாதிபத்திய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது. இதுதான் நேருவிய பொதுத்துறையின் யோகிதை. அரசாகத்தால் கண்துடைப்புக்காக செய்யப்பட்ட நிலச் சீர்த்திருத்தங்கள் எந்த பயனையும் அளிக்கவில்லை என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டது.
இந்தியா பின்பற்றிய நிலவுடைமை மற்றும் தொழிற்துறை கொள்கை, ஒருபுறம், நிலமற்ற விவசாயக் கூலிகளையும், சிறு-குறு விவசாயிகவைளாயும் ஒட்டச் சுரண்ட நிலவுடைமையாளார்களுக்கு வசதி செய்துகொடுத்தது. மறுபுறம் நகரங்களால் மிகக்குறுகிய அளவிலான மேட்டுக்குடிகளை வளர்த்துவிட்டது. மீதமிருக்கும் 95% மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. 1962 இந்திய – சீனாப் போர்க்கு பின்பு பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது.
ஆனால், இதற்கு எதிராக மக்களை கிளார்ந்தெழவிடாமல் திசை திருப்ப கூட்டணி அரசாங்கங்களை அமைத்து சுரண்டல்காரர்களை பாதுகாத்தது திரிபுவாத, நவீன திரிபுவாத கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்). இந்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்கும், போராடும் மக்களை ஒடுக்கும் நாடாளுமன்ற சமரச பாதையின் துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி இந்திய புரட்சிக்கான உண்மையான பாதையா, விவசாயிகளின் தொழிலாளார்களின் எழுச்சிப் பாதையை முன்வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் தோன்றியது தான் நக்சல்பாரி புரட்சி.அன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில், இந்தியாவிற்கு இறையாண்மை என்பது மருந்துக்குகூட கிடையாது என்பதை கண்டோம். இன்றைய ஏகாதிபத்திய மறு காலனிய இடைக்கட்டத்தில் இந்தியா இறையாண்மையுள்ளா நாடாக இருக்கிறதா? என்றால். இல்லை என்றே சொல்லமுடியும்.
இந்தியா தற்போது பன்னாட்டு கார்ப்பரேட்களின் நிதிமூலதன ஆதிக்கத்தின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் இந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிதிமூலத சார்புநிலை என்பது, சில்லறை  வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது முதல் இராணுவ தளவாடங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் வரை சென்றுவிட்டது. இதைப்பற்றி விளக்க வேண்டுமென்றால், வால்யூம் புத்தகங்கள் எழுதவேண்டிருக்கும் என்பதால், சுறுக்கமாக ஒரு நிகழ்வை  மட்டும் வைத்து இந்தியாவின் பன்னாட்டு நிதி மூலதன சார்புநிலையை விளக்கமுற்படுகிறோம்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் உலக அளவில் மிகக்கடுமையான ஊரடங்கை பின்பற்றியது இந்தியாதான். அதனால், மக்கள் பட்டினியில் கிடந்ததையும், புலம்பெயர் தொழிலாளார்கள் வொறுங்கால்களுடன் வெயிலில் நடந்தே கிராமங்களுக்கு சென்றதையும் நாம் மறந்திருக்கமாட்டோம். ஆனால், அத்தகைய இக்கட்டான நிலையிலும் அரசாங்கம் பொது சுகாதாரத்திற்காகவும், மக்களின் அடிப்படை தேவைக்காவும் கூட செலவு செய்ய மறுத்தது ஏன்? உலக அளவில் கொரோனா காலத்தில் செலவு செய்தில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டதில் இந்தியாதான் முதலிடம். ஏன் அரசாங்கம் செலவு செய்ய மறுத்தது? அதன் உண்மையா பின்னணி என்ன?
இந்தியா அந்நிய பன்னாட்டு மூலதத்தின் பிடியில் இருக்கிறது என்பதை முன்னரே கண்டோம். ஆனால், எந்த ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமும் ஏதேனும் ஒரு நாட்டில் வேர் கொண்டுள்ளது என்பதை நாம் காணத் தவறக்கூடாது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க நாட்டில் வேர்கொண்டுள்ளது, அமெரிக்க அரசு அதன் நலன்களின் பாதுகாவலனாக செயல்படுகிறது. அந்த பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்ற, மக்கள் வரிப்பணங்கள் கொட்டிக்கொடுப்பது, அதன் நலன்களை வெளிநாடுகளில் உறுதிசெய்ய, மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது அடாவடித்தனமாக பொருளாதாரத் தடை விதிப்பது முதல் போர் தொடுப்பது தொடுப்பது வரை செய்கிறது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, எந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் சொந்த நாட்டில் வேர்கொண்டுள்ளது என்பதைத்தான். அதன் படி இந்தியா அமெரிக்க ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் மீதான இந்தப் பிடியை உறுதிசெய்ய சர்தேச முகமைகளின் தலையீடுகளும் உள்ளாது.
கொரோனா காலத்தில் இந்தியா அதன் செலவீனத்தை அதிகரித்தால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் சர்வதேச முகமைகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை இந்தியாவை எச்சரிக்கை செய்தது.
இந்தியா தனது செலவீனத்தை அதிகரிக்கும் போது சர்வதேச தயார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் மதிப்பீட்வை குறைத்துக்காட்டும் என்ற அச்சமும் இந்திய ஆளும் வர்க்கதிடம் உண்டு. அப்படி குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டல், இந்தியா சர்வதேச அளவில் முதலீடு செய்தற்கு தகுந்த நாடு இல்லை என்று பொருள். அதனால் அந்நிய முதலீடுகளின் வரத்து குறையும். இந்தியா அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் சார்ந்திருப்பதால், இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஏகாதிபத்திய அரசுகளுக்கு சேவை செய்யும் சர்வதேச முகமைகள் மட்டுமல்ல தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் (International Rating Agencies) கூட இந்திய பொருளாதார கொள்கையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்தியாவின் இறையாண்மை எங்கேயாவது தெரிகிறதா தோழர்களே?
இந்திய கொள்கை வகுப்பாளார்களின் சட்டகமே அந்நிய மூலதனவரத்தை ஈர்ப்பதையும் தக்கவைத்தலையும்  நோக்கியதாகவே அமைந்துள்ளது. நவ தாராளவாத காலத்தில், தேசிய அரசின் பாத்திரம் என்பது, அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பை பாதுகாப்பதும், அதன்மூலமாக அந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அந்நிய மூலதனத்திற்கு எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக்கொள்வதுதான் என்று சுறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கொரோனா காலத்தில் இந்தியா செலவீனத்தில் கடைபிடித்த கடும் கஞ்சத்தனத்திற்கு இவை மட்டுமே காரணமல்ல. மிக முக்கியமா காரணமாக இருப்பது, அரசாங்கம் செலவீனங்களை வலிந்து கட்டுப்படுத்திய வைக்கும் போது, அங்கே முதலீடுகளுக்கான ஒரே வாய்ப்பாக தனியார் மூலதனமே இருக்கிறது.
இத்தகைய தனியார் மூலதனமும் அதன் சொந்த மூலதனம் மட்டுமே அல்ல. மாறாக இந்திய அரசாங்கம் வழங்கும் கடன்கள், சலுகைகள்தான் அந்த மூலதன திரட்சிக்கு முக்கிய காரணம். ஒருபக்கம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் தரகு முதலாளிகளின் கைகளில் மூலதனம் குவிந்து கிடப்பதும், இந்திய அரசாங்கம் அவற்றிக்கு வழங்கும் சலுகைகளும், இன்னொரு பக்கம் மூலதனம் இல்லாமல், கடன் வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாடும் உள்நாட்டு நிறுவனங்கள். அரசாங்கம் செலவீனங்களை குறைப்பது உள்நாட்டு தேவையையும் அழுத்தும்.
அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பு சரியும். இதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்க அரசாங்கம் முன்வருகிறது. இதனால் பயனடைவது அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், அதனுடன் கூட்டு வைத்திருக்கும் இந்திய தரகு பெரும் முதலாளி வர்க்கமும்தான். இதுதான் இந்திய அரசாங்கம் தற்போது கடைபிடித்து வரும் தனியர்மயமாக்கல் கொள்கையின் சாரமும் கூட. இந்த பொருளாதார கொள்கையால் ஒட்டுமொத்த இந்திய சந்தை காரணிகளான நிலம், உழைப்பு சந்தை, கடன் வசதி ஆகிய அனைத்தும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தரகு பெருமுதலாளி வர்க்கத்திற்கும் ஏற்றாப்போல் மறுவார்ப்பு செய்யப்படும். அதனடிப்படையில்தான் இந்தியாவில் நிலம் மற்றும் தொழிலாளார் சட்ட சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்த பொருளாதார அடிமைத்தனம் ஒருபக்கம் என்றால், இந்துத்து பாசிச அபாயம் இன்வொரு பக்கம். மோடி – அமித்ஷா தலைமையிலான இந்துத்துவ கும்பல், அரசையும் சமூகத்தையும் பாசிசமயமாக்கும் பொருட்டு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தங்களது பாசிச கொள்கைக்கு ஏற்ப சமூகத்திலும் அரசு கட்டுமானத்திலும் ஒத்திசைவை ஏற்படுத்துவது, உடன்படாதவர்களை வழிக்கு கொண்டு வருவது, எதிர்ப்பாளார்களை அழித்தொழிப்பது, இவை  அனைத்தையும் சட்டபூர்வமாக ஜனநாயகத்தின் பெயரிலே செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
இதற்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றாப்போல் வெவ்வேறு வழிகளை கையாண்டு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசு இயந்திரம் முழுதும் இந்துத்து சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களால் இட்டு நிரப்பப்படுகிறது. அந்த கையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பாசிசமயமாக்கி வருகிறது இந்துத்து கும்பல்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்துப்பார்க்கும் போது, இந்த நிலவும் கட்டமைப்பிற்குள் மக்கள் விடுதலைக்கான தீர்வு இல்லை என்பது நிச்சயமாக புரிந்திருக்கும். ஆனால் தங்களை இதுநாள்வரை புரட்சியாளார்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர், தேர்தலில் ஓட்டுப்போடுவதன் மூலமாக பாசிச அபாயத்தை முறியடிக்க முடியும் என்று அறிவுரை முத்துக்களை சமீபத்தில் உதிர்த்தார்கள். ஒரு இக்கட்டான காலகட்டம்தான் ஒரு மனிதனின் உண்மையான பண்புகளை வெளிக்கொண்டு வரும் என்று சொல்வார்கள்.
அதன்படி பாசிசம் மக்கள் மீது ஏறித்தாக்கி வரும் இன்றைய சூழல் “போலிப் புரட்சியாளார்களின்” முகமூடிகளை கழற்றி எறிந்திருக்கிறது. இந்த பாசிச அபாய காலம், அவர்களை, அவர்களின் கொள்கைகளை மக்கள் முன்பு நிர்வாணமாக அம்பலப்படுத்திருக்கிறது.
நேற்று வரை புரட்சி பேசித் திரிந்தவர்கள், இன்று ஓட்டுப்போட்டால் “மூச்சுவிட அவகாசம்” கிடைக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் நாங்கள் “நக்சல்பாரிகள் அல்ல” என்று கூறி உண்மையான புரட்சியாளார்களை காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு எதை நினைவூட்டுகிறது. 1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது. இரவுகள் விடிந்தே தீரும். இந்திய வானில் மீண்டும் ஒருமுறை வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கும்.
குறிப்புகள்:
1.) நக்சல்பாரி – முன்பும் பின்பும் – சுனிதி குமார் கோஷ்
2.) கோவிட்-19 நெருக்கடியும் சூறையாலும்- Research Unit for Political Economy (RUPE). தமிழில்: பிரவீன்ராஜ்.பா

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2

இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 1
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும்
உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2
அமெரிக்கப் பதிலிப்போரின் நோக்கம்
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் விநியோகத்திலும் மேலாதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவுக்குப் போட்டியாக இரஷ்யா வளர்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது எண்ணெய் இறக்குமதியில் கால்பங்கு அளவிற்கும் இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதம் அளவிற்கும் இரஷ்யாவை நம்பியே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரும் பொருளாதார பலத்தைக் கொண்ட ஜெர்மனி தனது இயற்கை எரிவாயுத் தேவையில் பாதிக்கு மேலானவற்றையும், கச்சா எண்ணெயில் 30 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
2020-ல் ஜெர்மனியின் இயற்கை எரிவாயுத் தேவை 75 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மின்சாரத் தேவையை அணு ஆற்றலின் மூலம் பூர்த்தி செய்து கொள்கிற பிரான்சும் தனக்குத் தேவையான பெட்ரோலுக்கும், நிலக்கரிக்கும், இயற்கை எரிவாயுவிற்கும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
மேலும், உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ ஏற்பட்ட காலத்திற்கு முன்பு வரை, இயற்கை எரிவாயுவை மானிய விலையில் இரஷ்யாவிடமிருந்தே உக்ரைன் பெற்றுக் கொண்டிருந்தது.
000
இரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிவாயுவானது உக்ரைன் மற்றும் போலந்து வழியாக குழாய்கள் மூலம் ஏற்றுமதியாகிறது. இது மட்டுமின்றி, வடக்கு இரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக, நேரடியாக ஜெர்மனிக்கு வடக்கு எரிவாயு குழாய் (Nord Stream pipeline) திட்டத்தின் மூலம் எரிவாயு அனுப்பப்படுகிறது.
படிக்க :
♦ உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
♦ உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
2018-ம் ஆண்டு வடக்கு எரிவாயு குழாய்-2 திட்டம் தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் உக்ரைன், போலந்து போன்ற நாடுகள் வழியாக தரை மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இரஷ்யா எரிவாயுவை அனுப்பத் தேவையில்லை. எரிவாயுவை ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்காக உக்ரைன், போலந்து நாடுகளுக்கு இரஷ்யா கப்பமும் கட்டத் தேவையில்லை.
இந்த எரிவாயுத் திட்டத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான 13,500 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இரஷ்யா அனுப்ப முடியும் என்பதோடு வர்த்தகத்தையும் வலுவாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
அதேவேளையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு சந்ததையை ஆக்கிரமிக்கத் துடிக்கிறது. உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைக் காரணம் காட்டி இரஷ்யா மீது அமெரிக்காவும், ஜரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இரஷ்ய எதிர்ப்பு : ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே முரண்பாடுகள்
அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து இரஷ்யா, சீனா தலைமையில் அணிதிரளும் நாடுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் உறுதியான அணியாய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது. உண்மை என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் கட்டற்ற ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அக்கூட்டணிக்குள்ளேயே முரண்பாடுகள் தீவிரமாகிவருகிறது.
ஆஸ்திரியா, ஜெர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரஷ்யா மீதான எரிவாயு தடையை ஆதரிக்கவில்லை. இவற்றுள் ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகியவை நேட்டோ கோரியபடி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்துவிட்டன. ஜெர்மனியும் தொடக்கத்தில் ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது. அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளின் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு பிறகே ஆயுதங்களை வழங்க சம்மதித்தது.
பெரும்பான்மையான நாடுகள் இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்தாலும் நீண்ட காலத்திற்கு அதைத் தொடர முடியாது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) “இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நல்லதல்ல” என்று விமர்சித்துள்ளது. உண்மையும் அதுதான். இரஷ்யாவின் எரிவாயுவிற்கு உறுதியான மாற்று எதுவும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளிடம் இல்லை.
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் (CREA – Center For Research on Energy and Clean Air) என்ற அமைப்பு கடந்த மாத இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உக்ரைன் போருக்கு பின்னரே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விற்றதன் மூலம், இரஷ்யாவுக்கு கிடைத்துள்ள இலாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாம். இதுவரை 4,600 கோடி ஈரோ இலாபம் ஈட்டியுள்ளது இரஷ்யா. இதுதான் சொல்லிக்கொள்ளப்படும் பொருளாதாரத் தடையின் இலட்சணம்.
இச்சூழலில் மற்றொரு புள்ளிவிவரமும் வெளியாகி நமக்கு நகைப்பை வழங்குகின்றது. 2014-ஆம் ஆண்டு இரஷ்யாவின் கிரிமிய இணைப்பு நடவடிக்கைக்காக ஐரோப்பிய யூனியன் இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க தடைவிதித்தது. ஆனால், இத்தடையை மதிக்காமல் அவ்வாண்டுக்குப் பிறகே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் 23 கோடி ஈரோ அளவிற்கு இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளனவாம். அது தற்போது உக்ரைனுக்கு எதிராக இரஷ்யாவால் பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலாவருகின்றன.
சரிந்துவரும் பெட்ரோ-டாலரின் மேலாதிக்கமும் இரஷ்ய-சீனக் கூட்டணியும்
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, உலகின் 88 சதவிகிதம் வர்த்தகம் டாலரிலேயே நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துள்ள இரஷ்யாவும் சீனாவும் டாலரின் இந்த மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட எத்தனிக்கின்றன. குறிப்பாக இரஷ்யா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் மேலாதிக்கத்திற்கு சாவால்விட்டுக் கொண்டிருக்கிறது.
1970-களின் முற்பகுதியில், அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவுடன் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. 50 ஆண்டுகாலம் பெட்ரோ-டாலரின் ஆதிக்கம் கேள்விக்கிடமற்ற முறையில் நிலைநாட்டப்பட்டது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்த பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டபோது, இந்நிலை இரஷ்யாவால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. டாலர் வர்த்தகம் மேலாண்மை செலுத்தும் சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பான ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக எஸ்.பி.எஃப்.எஸ். (SPFS – System for Transfrer of Financial Messages) எனும் அமைப்பை இரஷ்யா உருவாக்கியது. இது ரூபிளில் வர்த்தகம் செய்வதற்கு பிறநாடுகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதேபோல 2015-ஆம் ஆண்டு ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக சீனாவும் சி.ஐ.பி.எஸ் (CIPS – China’s Cross-Border Interbank Payment System) என்ற அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. இது சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய முன்வரும் பிறநாடுகளை ஒருங்கிணைக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி அந்நாட்டுடன் டாலர் அல்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இன்ஸ்டெக்ஸ் (INSTEX – Insrtument in Support of Trade Exchanges) என்ற பொறியமைவை உருவாக்கியுள்ளார்கள். 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாகிய இந்த அணியில், அவ்வாண்டின் இறுதிக்குள்ளாகவே பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன் ஆகிய இதர ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைய விரும்புவதாக கூட்டாக அறிவித்தன. இரஷ்யாவும் இம்முயற்சியை வரவேற்றிருந்தது.
இவையன்றி இரஷ்யா தலைமையில், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்த்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட யுரேசிய பொருளாதார ஒன்றியம் (EAEU – Eurasian Economic Union) என்ற கூட்டமைப்பு; பிரிட்டன், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு ஆகியவையும் டாலரின் மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளாக உள்ளன.
000
முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை டாலருக்கு மற்றாக இதர நாணயங்களிலும் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளன. குறிப்பாக சவூதி அரேபியா சீனாவின் யுவானை அங்கீகரிக்கவிருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. சமீபத்தில் இஸ்ரேலும் சீனாவின் யுவான் நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நாடுகளெல்லாம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், அந்நாட்டிடமிருந்து 30 சதவிகித தள்ளுபடியில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், பெட்ரோ-டாலரின் மேலாதிக்கம் எந்த அளவிற்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
இரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக, இனி ஐரோப்பிய நாடுகள் இரஷ்யாவிடமிருந்து பெறும் எண்ணெய், இயற்கை எரிவாயுவிற்கான தொகையை டாலருக்கு மாற்றாக ரூபிளில் செலுத்தும்படி கேட்கிறது இரஷ்யா.
ரூபிளில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால், அந்நாடுகளுக்கு ரூபிள் கையிருப்பில் இருக்க வேண்டும். அதற்கு இரஷ்யாவுடன் வர்த்தம் செய்ய வேண்டும். இரஷ்யாவின் இந்நிபந்தனை, ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தடைகளை தாங்களே கைவிடக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுவரை நான்கு ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களது கொள்முதலை ரூபிளில் செய்வதற்கு முன்வந்துள்ளன.
நேட்டோ: இரஷ்யா-சீனாவுக்கு எதிரான உலகு தழுவிய இராணுவக் கூட்டணி!
அமெரிக்காவானது சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை எப்படியாவது முட்டுக் கொடுத்து தக்கவைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது தோல்வியுற்று வீழப்போகிறதா என்பதை உக்ரைனில் நடக்கின்ற போரில், இரஷ்யாவின் வெற்றி-தோல்விதான் தீர்மானிக்கப்போகின்றது. அதனால்தான் “இரஷ்யாவை முடமாக்குவதே எங்கள் இலங்கு” என அறிவித்திருக்கிறது அமெரிக்கா.
இரஷ்யாவுக்கோ தனது எதிரியான அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தி தன் வளர்ச்சிக்கு சாதகமான உலக நிலைமையை உருவாக்கிக் கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பு. எனவே போர் உக்கிரமாக நடக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான அரசியல்-பொருளாதார மேலாதிக்கப் போட்டியில், இரஷ்யாவும் சீனாவும் கூட்டாகச் செயல்படுகின்றன. எனவே அமெரிக்கா இவ்விரு நாடுகளையும் ஒருசேர எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தற்போது அமெரிக்காவை மதிக்காமல் இந்தியா இரஷ்யாவுடன் நெருக்கம் பேணுவதால், சீனாவுக்கு எதிராக இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் இராணுவக் கூட்டணி பலவீனமாகிவிட்டது. ஆகவே இரஷ்யா மட்டுமல்லாது சீனாவையும் சுற்றி வளைத்து வீழ்த்துவதற்காக நேட்டோவை பேரளவில் விரிவுபடுத்தும் திட்டத்தை வைத்துள்ளது அமெரிக்கா.
நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் டெலிகிராப் இதழுக்கு அளித்த பேட்டியில், இரஷ்யா மட்டுமல்லாது சீனாவும் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் அதையும் கருத்தில் கொண்டு எங்கள் கொள்கையை வகுத்துக் கொள்ளவிருக்கிறோம் என்று கூறினார். இதுகுறித்து ஜீன் மாதம் நடக்கவுள்ள நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகவே முடிவுசெய்வோம் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போருக்கு உதவுவதற்காக ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில், நேட்டோ அல்லாத 13 நாடுகளை அழைத்திருந்தது அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்கத் திட்டத்திற்கு துலக்கமான சான்று.
அம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரிலேயா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேல், கத்தார், ஜோர்டன் ஆகிய நாடுகளும் ஆப்பிரிக்காவிலிருந்து கென்யா, லைபீரியா, மொரோக்கோ மற்று துனிசியா ஆகிய நாடுகளும் கலந்துகொண்டிருந்தன.
வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஐரோப்பய நாடுகள் வரை இணைத்துக் கொண்டு இரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நேட்டோ கூட்டணி, சீனாவையும் இரஷ்ய-சீன செல்வாக்கு மண்டலங்களையும் சுற்றுவளைப்பதற்காக உலகம் முழுக்க விரிவடைய இருக்கிறது.
மேலாதிக்கத்துக்கான இழுபறியில் நாம் அணிசேர முடியாது
பனிப்போர் தோல்விக்கு பின் மீண்டும் பழைய வகையில் இரஷ்யா அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. சீனா அரசியல், பொருளாதாரம், இராணுவம் ஆகிய அனைத்திலும் ஏகாதிபத்தியங்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
2008-இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு தளர்ந்துவரத் தொடங்கியது. அதற்கு மொத்தமாக முடிவுரை எழுதுவதற்கு இரஷ்யாவும் சீனாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு முன்னேறுகின்றன. இந்த இருபிரிவுகளுக்கு இடையிலான போராட்டம்தான் இன்றைய சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்காக உள்ளது.
இருபிரிவிலும் இல்லாமல் தாங்கள் நடுநிலைவகிப்பதாகவும் சுயேட்சையாக நிற்ப்பதாகவும் கதையளக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. மேற்ச்சொன்ன இழுபறியில் எந்த பிரிவு வலுப்பெறுகிறதோ அந்த கூட்டணியை தழுவிக்கொள்வதற்காக அவைகள் காத்துக்கிடக்கின்றன. முடிவான நிலை எதுவும் ஏற்பட்டுவிடாத காரணத்தால் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்க எந்த வழியும் தெரியாத அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், புரட்சியின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுப்பதற்கும், தமது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கடைசி ஆயுதங்களாக பாசிசத்தையும் உலகப் போரையும் கருதுகின்றன.
இந்த உலகச் சூழலின் பின்னணியிலிருந்துதான் உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைப் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடதுசாரி அணியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்க அடாவடிகளை மட்டுமே கண்டிப்பதைப் பார்கிறோம். இரஷ்யா குறித்து விமர்சிப்பதில்லை.
படிக்க :
♦ உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
♦ உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
இரஷ்யாவின் போரை ‘தற்காப்புப் போர்’ என்று அவர்கள் வரையறுக்கின்றனர். அது ஒருவகையில் உண்மைதான் எனினும் போரிடும் இரண்டு நாடுகளும் ஏகாதிபத்தியங்கள் என்பதை நாம் மறந்தவிடக்கூடாது.
இப்போரில் வெற்றி பெறுவதன் மூலம் தான் சுற்றி வளைக்கப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், அமெரிக்க மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாகுவதன் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் இப்போரைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது இரஷ்யா. இதைத்தான் கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரில், அவைகள் பலவீனமடைவதை பாட்டாளி வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு ஏகாதிபத்தியத்துக்கு (அமெரிக்கா) எதிராக மற்றொரு ஏகாதிபத்தியத்தை (இரஷ்யா) ஆதரிக்க முடியாது.
மாறாக ஆதிக்கத்துக்கான இப்போரில் ஏதோவொரு வகையில் தங்கள் நாடுகளையும் அணிசேர்க்க எண்ணி இரஷ்ய எதிர்ப்பு, நேட்டோ ஆதரவு, போர்வெறி-தேசவெறி பிரச்சாரத்தில் ஈடுபடும் மற்றும் போலியான நடுநிலை வகிக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களை புரட்சிகர சக்திகள் தோலுரிக்க வேண்டும்; உள்நாட்டுப் புரட்சிப் போருக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும்!

பால்ராஜ்

மதுரை : தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !

தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மே 23 அன்று காலை மதுரையில் நடைபெற்றது. முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அனுபவ உரையாக தோழர் கே.எஸ் அவர்கள் தோழர் திசை கர்ணனுடன் அமைப்பு வேலைகளில் பயனித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக புதிய ஜனநாயகம் புத்தகம் விற்பனை, கம்பம் – கூடலூர் பகுதியில் செய்யும்போது, CPI-க்கும் தங்களுக்கும் நடந்த மோதலை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் போட வேண்டும் என அவர் கூறியது, இன்னும் என் நெஞ்சிலே நிற்கிறது. தோழர் அந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் களத்தில் நின்று போராட கூடியவர் என்று கூறி முடித்தார்.
ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், “தோழர் திசை கர்ணனை பற்றி வெளியில் நாங்கள் பேசும்போது, ஒரு சில நபர்கள் எங்களை பார்த்து கேட்டார்கள் அந்த தோழர் அப்பகுதியில் முதலில் என்ன மாதிரியான அமைப்பு வேலை செய்தார் என்றனர். உரம் மற்றும் இறால் பண்ணை ஒழிப்பு மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றில் அவர் முதன்மையானவராக கலந்துகொண்டு களத்தில் தொடர்ச்சியாக போராடியவர் என்பதை கூறும்போது, அவர்கள் புரிந்து கொண்டனர்.
மருத்துவமனையில் அவருடன் இருக்கும்போது தன்னுடைய உள்ள உடல்நிலையை பற்றிகூட அவர் பேசியது இல்லை; மற்ற தோழர்களின் உடல்நிலை குறித்து அவர் விவாதிக்கும் தன்மை எங்களுக்கு ஆச்சரியத்தை காட்டியது. அவர் இறந்தபின்பும் நம்மில் வாழ்கிறார் என்றால் அவரின் சிறப்பு பன்புதான். தன்னலம் கருதாமல் உழைக்கின்ற மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த நம் தோழர் திசை கர்ணனனிடம் இடம் இருந்து இது போன்ற நற்பண்புகளை நினைவு கூறுவதுதான் இந்த நினைவு அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்கும்” என்பதோடு உரையை முடித்துக்கொண்டார்.
படிக்க :
♦ உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்
♦ தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை
பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி, “நாம் இந்த மண்ணில் ஒருமுறைதான் பிறக்கிறோம். நம் வாழ்க்கை என்பதும் ஒருமுறைதான். அப்படி இருக்கும்போது நாம் எவ்வாறு வாழவேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர் தான் தோழர் திசை கர்ணன். உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்காக அமைப்பு வேலைகளை அர்ப்பணிப்பாக செய்தவர். இன்று தமிழகத்தில் இந்து ராஷ்டிரா நிறுவுவதற்கு இந்த காவி கும்பல் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நச்சுக் கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கிறது; இதற்கு எதிராக நின்றவர்தான் தோழர் திசை கர்ணன். இந்த அடிப்படையில் தோழரின் செயல்பாடுகளை நாம் நெஞ்சிலேந்த வேண்டும் என கூறினார்.
மக்கள் அதிகாரம், மாநில இணைச்செயலாளர், தோழர் குருசாமி, “தோழர் திசை கர்ணன் என்னுடைய சிறுவயது நண்பர். அவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தாளராக வேலை செய்தார். பிறகு அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு அமைப்பு வேலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது ஆதிக்கச் சாதியினரின் கொடுங்கோன்மை மேலோங்கி இருந்தது அப்போது ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தோழரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய தேவையே இல்லை; ஆனாலும் அவரை கைது செய்ததின் நோக்கம் அமைப்பின் முன்னணியாளர்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் மேட்டிமைத்தனமான பண்புகள் இல்லை; ஒரு பாட்டாளி வர்க்க சிந்தனை உடையவராகவே திகழ்ந்தார்.
எந்த வர்க்கப் பின்னணியில் இருந்து வந்தாலும் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக பாட்டாளி வர்க்க பண்புகளை ஏற்றுக்கொண்டு எவரொருவர் செயல்படுபவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்ட். அந்த வகையில் தோழர் திசை கர்ணன் அவர்கள் ஒரு உண்மையான நக்சல்பாரி புரட்சியாளர். இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் தோழரின் நற்பண்புகளை அவரிடமிருந்து வரித்துக் கொள்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்” என கூறி முடித்தார்.
தொகுப்புரை மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள் பேசுகையில், “மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்துச் செல்வதற்கு எளிதாக – உதவியாக – இருந்தது இசை நாடகம், பாடல் போன்றவைதான். இதை தோழர் திசை கர்ணன் மிக நேர்த்தியாக கையாண்டார். குறவன் குறத்தி நாடகம் போட்டு மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்து சென்றார். ஒரு நாள் அவர் மாமியார் ஊரில் அவருடைய வீட்டில் குறவன் வேடம் போடும்போது எந்த ஒரு மன சங்கடமும் இல்லாமல் அவர் வேடமணிந்து நாடகம் நடத்தினார். யார் எதை சொன்னாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் ஏற்றுக்கொண்ட வேலைகளை முழுமையாக செய்து முடிப்பதில் முனைப்பாக இருந்தவர்தான் தோழர் திசை கர்ணன். அவர் ஒரு நக்சல்பாரி புரட்சியாளராகவே வாழ்ந்து வந்தவர். அவருடைய அளப்பரிய களப்பணிகளை நம் இளம் தோழர்களுக்கு ஒவ்வொருவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

ம.பி.யில் அதிகரிக்கும் ரத்த சோகை நோய் : உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நல அரசு !

0
பிறந்து 6 முதல் 59 மாதங்கள் ஆன குழந்தைகளில் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு !
சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் National Family and Health Survey (NFHS) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2019 முதல் 2021 வரையிலான  காலத்தில் பிறந்த 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது முன்பு நடந்த ஆய்வில் வந்த 69 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆய்வில் குறிப்பிடும்போது 27 சதவீதம் பேர் மிதமான பாதிப்புடனும் 42 சதவீதம் பேர் அதைவிட அதிகமாகவும் 3 சதவீதம் பேர் மிகவும் கடுமையாக ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விஷயங்களை பார்க்கும்போது, இந்திய குழந்தைகள் எந்த அளவுக்கு நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஆய்வைப் பற்றி குறிப்பிடும் மருத்துவர் ஹேமந்த் ஜெயின் (Dr Hemant Jain (retired professor), Mahatma Gandhi Memoria Medical College) பிறந்து 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆரம்பத்தில் தாய்ப்பால் குடித்து வளருகிறார்கள். அப்படி தாயிடமிருந்து குடிக்கும் பால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் மருத்துவர்.
படிக்க :
மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !
மேலும் அவர் குறிப்பிடும்போது, 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் பயிறு வகைகள் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் கொடுக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.
இது இரண்டு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒன்று பெண்களே ஆரோக்கியமாக இல்லை; மற்றொன்று குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிரச்சினை என்பது பார்த்தாலே நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.
உணவு தானியம், பால், பழங்கள், இறைச்சி, முட்டை உற்பத்தி என அனைத்திலும் உலகின் முதல் மூன்று இடங்களில் அல்லது ஐந்து இடங்களில் இருக்கும் இந்தியாவில் ஏன் இந்த நிலை? ஏனென்றால், உழைக்கும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை, வேலை இல்லை, வருமானம் இல்லை இது ஒருபுறம். இறைச்சி, முட்டை, மீன், கருவாடு போன்றவற்றை சாப்பிட விடாமல் தடுக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் மறுபுறம்.
பள்ளிகளில் உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் இஸ்கான் என்ற நிறுவனம் உணவு வகைகளில் முட்டை இறைச்சி உணவுகளை புறக்கணிக்கும் வேலையை செய்துள்ளது. இது பல்வேறு இடங்களிலும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதை நாமறிவோம். இந்த நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை நிறுவனம் என்பதும் கூடுதல் விஷயம்.
தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே கொள்கைகளை அமல்படுத்திய இலங்கைதான் இன்று மாபெரும் நெருக்கடியில் சிக்கி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.
படிக்க :
♦ குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !
♦ ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !
இந்த அரசு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளதாக பேசுகிறார்கள். நாம் இவர்களிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி; ஏன் போன ஆய்வை காட்டிலும் இந்த ஆய்வில் 73 சதவீதம் என உயர்ந்தது? அப்படியானால் உங்களுடைய திட்டங்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை. பிரச்சனையை மேலும் தீவிரமாகி உள்ளது. இந்த பிரச்சினையை அரசு சரி செய்யாது என்ற எதார்த்தம் நம் கண்முன்னால் நிற்கிறது.
இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை மானியங்களாக கொடுத்து – சலுகைகளாக  கொடுத்து – அதானி அம்பானிக்களை உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கிறார்கள் மோடி தலைமையிலான பாசிச கும்பல். மோடி அரசு கொடுக்கும் பணம் எல்லாம் அவருடைய அப்பன் வீட்டு சொத்தா? அது மக்கள் சொத்து அதைத்தான் இந்த கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தினால் என்ன கேடு  இந்த அரசுக்கு. கார்ப்பரேட் பாசம் தடுக்கிறது.
அப்படியானால் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது பெண்களின், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கூட காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

ரவி

ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்

24.05.2022
ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த
தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்!
பத்திரிகை செய்தி
2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிரான நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு மே17 இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை மீறிகூட்டம் நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
மே 22-ம் தேதி ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழித்த நாளை நினைவு கூரும் விதமாக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்த தமிழ்நாடு போலீஸ் துறையிடம் மே17 இயக்கம் அனுமதி கேட்டிருந்தது.
மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்க மறுத்த தமிழ்நாடு போலீஸ், இழுத்தடித்து பெசன்ட் நகர் கடற்கரையில் அனுமதி அளித்தது. அவ்வாறு அனுமதியளித்த பிறகு மே 22 காலையில் திடீரென அந்த அனுமதியை ரத்து செய்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்தும் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நினைவு கூரும் விதமாகவும் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு கூட இந்த அரசு அனுமதிக்காது என்றால் இதுதான் வாராது வந்த மாமணியான திராவிட மாடல் அரசா?
சென்ற  பழனிச்சாமி ஆட்சியில்  மெரினாவில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அன்றைய எம்.எல்.ஏ.க்கள், இன்றைய அமைச்சர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் மறந்து போனதா?
சில நாட்களுக்கு முன்பு நாடுகடந்த தமிழீழம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்திலும் உள்ளே புகுந்த போலீசு அதில் கலந்து கொண்டவர்களை கைது செய்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அவர்களுடைய உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கு உரிமையே இல்லை என்றால் இங்கு யார் ஆட்சி நடக்கிறது?
ஈழத் தமிழருக்காக போராட முடியாத நிலைதான் எடப்பாடி ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியிலும் என்றால் எங்கே இருக்கிறது சமூக நீதி?
ஆகவே, மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த, தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. உடனே அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எந்த கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்

0

24.05.2022

கல்வியில் இருந்தே ஏழை மாணவர்களை வெளியேற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பாசிச உத்தரவை வன்மையாக கண்டிக்கின்றோம் !

கண்டன அறிக்கை!

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிக்க :

♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு

3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 அதிகபட்சமாக ரூ.1,94,100-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இருந்த தொழில்நுட்ப கல்வி கட்டணங்களே சாதாரண உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து படிப்படியாக அகற்றி கொண்டிருந்தது.

அதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் இந்த உத்தரவு. அதாவது கல்வியிலிருந்து ஏழை மாணவர்களை  சுத்தமாக துடைப்பதொழிப்பது என்பதுதான் நோக்கம்.

மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ-ன் இந்த உத்தரவு என்பது பகிரங்கமாக உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து வெளியேறுங்கள் என்று அறிவிப்பதாக உள்ளது. அதற்கானதான் “மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது  என்றும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின் கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” என திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.

தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி என்பது படிப்படியாக தனியாரின் வசம் ஒப்படைக்கப்பட்டு இலாப நோக்கத்திற்காக கல்வி என்பது மாற்றியமைக்கப்பட்டது. இது படிப்படியாக மாணவர்களின் மக்களின் மீதான சுமையை மேலும் மேலும் தீவிரப்படுத்தியது. அதிலிருந்து உழைக்கும் வர்க்கத்து வீட்டு மாணவர்கள் கல்வியிலிருந்தே படிப்படியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாகத்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருகிறார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும்போதே இவ்வளவு கட்டண உயர்வு என்றால் புதிய கல்விக் கொள்கையின் படி பல்கலைக் கழகங்கள் படிப்படியாக கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்பட்டு அரசு, பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்தாது, கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும்போது எவ்வளவு கட்டணத்தை உயர்த்துவார்கள்?

கார்ப்பரேட்டுகளின் நோக்கம் சேவை செய்வதா? அல்லது கொள்ளையடிப்பதா?

ஒரு காலத்தில் அரசின் சேவைத் துறைகளால் மிகவும் குறைந்தபட்ச கட்டணங்களாக இருந்தவை இன்று கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிறகு கட்டண உயர்வு பல்வேறு துறைகளிலும் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, செல்போன் ரீசார்ஜ் தொடங்கி கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்களின் கழுத்தை நெரிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதிக்கம்.

காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை; காசு இருப்பவனே கல்வி போன்ற நவீன தீண்டாமையை கொண்டுள்ளது ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவிப்பு. அரசின் சுரண்டலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும் மலைப் பாம்பாக மாணவர்களையும் மக்களையும் நெறிக்கிறது.

படிக்க :

♦ சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு

♦ அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை

இதிலிருந்து விடுபட உழைக்கும் மக்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம். அதுவே நாம் வாழப்போகிறோமா? அல்லது சாகப்போகிறோமா? என்பதை தீர்மானிக்கும்.

மேலும், தொடர்ச்சியாக கல்வியில் காவிமயத்தையும் திணித்து வருகிறது மோடி அரசு. பிற்போக்கு குப்பைகளை பாடத்திட்டத்தில் திணித்து வருபவர்கள் நாட்டிற்காக தூக்கிலேறிய பகத்சிங் போன்றவர்களின் வரலாற்றை பாடத்திட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

உழைக்கும் மக்களாகிய நம்மையும், நமக்காக நின்ற பகத்சிங்கையும் அப்புறப் படுத்துகிறார்கள். பகத்சிங்கை நாம் எடுத்துக் கொண்டு அவர் வழியில் நின்று இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்.

♠ ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே இலவசமாக கல்வி வழங்க போராடுவோம்!
♠ மாணவர்கள் நாம் ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டியமைப்போம்!
♠ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!
♠ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !

0
ந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த டெய்சாங் ஹாங்காங் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.170 கோடி மதிப்பில் 39 ஆயிரம் சக்கரங்களை அந்த நிறுவனம் தயாரித்து இந்திய ரயில்வேயிடம் கொடுப்பது உறுதியாகிவிட்டது.
இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை சார்பாக ஒப்பந்த புள்ளி கோரபட்டபோது இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் ஒப்பந்தம் வாங்குவதற்கு விண்ணப்பித்தன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த உரிமை கொடுக்காமல் சீன நிறுவனத்திற்கு கொடுத்து, தான் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அடிமை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது இந்த ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்துடன் கடந்த காங்கிரஸ் அரசு ரஃபேல் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதில், இந்தியாவில் ரஃபேல் விமானம் தயாரிக்க, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு தயாரிக்கும் உரிமையை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி, டசால்ட் நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்த போட்டு ரஃபேல் விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதில், ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு பதிலாக தனது எஜமான் அனில் அம்பானியின் ரிலையன் டிபன்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கி தனது விஸ்வாசத்தை நிரூபித்துக் கொண்டார் மோடி. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அம்பானிக்கே, தனது அம்பானி டிபன்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறது என்று தெரியாது. அதிலும், மோடியின் ரஃபேல் ஊழல் என்பது தனிக்கதை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ராஷ்டிரீய இஸ்பத் நிகாம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமும் வந்தே பாரத் ரயில் சக்கரம் தயாரிப்பதற்கு விண்ணப்பித்து இருந்தது. மிகச் சிறந்த கட்டமைப்பும், நிர்வாக திறனும் உள்ள இந்த நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் ரயில் சக்கரம் தயாரிக்கம் திறனுடையது. அப்பேர்பட்ட இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்காமல் சீனா நிறுவனத்திற்கு மோடி அரசு ஒப்பந்தம் வழங்கி இருக்கிறது என்பது மோசடியின் உச்சம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வரும் மோடி அரசு, அனைத்து காப்பீடு ஒப்பந்தங்களையும் பொதுத்துறை நிறுவனத்திற்கு கொடுக்காமல் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தான் வழங்கி வருகிறது.
படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் இந்தியாவில் ஒட்டுமொத்த தேச பற்றை குத்தகைக்கு எடுத்து கொண்டு அதுகுறித்து தொடர்ச்சியாக பொய் பேசி வருகின்றனர். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா தற்சார்ப்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்கு வேண்டும் என்றும், அதுதான் இந்து ராஷ்டிரத்திற்கு பொருத்தமான பொருளாதார கொள்ளைகை என்றும் கூறி வருகிறார். அதுபோல் மோடி தொலைக்காட்சியில் பேசும்போது பெரும்பாலும் இந்தியா, தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் அனைவரும் அந்நியப் பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பாடம் எடுக்கிறார் கார்ப்பரேட் அடிமை மோடி.
தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கப்போவதாக கூறிக்கொண்ட ஒன்றிய பாஜக அரசு ”மேக் இன் இந்தியா” என்ற ஒரு கவர்ச்சிகர, வாய்ச்சவடாலான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தவே பல கோடி மக்கள் வரி பணத்தை வாரி இறைத்தது. இந்த திட்டத்தின் மூலம் ‘இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்’ என்று நாடு நாடாக சென்று பல்வேறு நாட்டு அரசுகளின் ஆதரவையும், கார்ப்பரேட் கம்பெனிகளை அழைத்தும் கூட பெரிய அளவிலான முதலீடுகள் வரவில்லை.
சீன நிறுவனத்திற்கு ரயில் சக்கரம் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கியது என்பது வெறும் தனியார்மய கொள்கையினால் மட்டும் அல்ல. பொதுமக்களுக்கு தேசவெறியுட்ட சீனாவை எதிரியாக காட்டவும், தனக்கு தேவையென்றால் அந்த நாட்டுடன் இணைந்து போவதும்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் அஜண்டா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியபோது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியாவை போர் மேகம் சூழ்ந்துள்ளதாகவும் சீனாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார போரை நடத்தபோவதாகவும் கூறியது. ஆனால் சீனவை சேர்ந்த சுமார் 20 செயலிகளுக்கு மட்டும் தடை விதித்து தனது வீரத்தை காட்டிக்கொண்டது. மேலும், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தடையும் விதித்து தேசபற்று என்றால் இதுதான் என்று பொது மக்களுக்கு பாடம் எடுத்தது பா.ஜ.க அரசு.
நிலைமை இப்படி இருக்க, 20 இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்த அதே சீனாவிடம் தற்போது 170 கோடி முதலீடு செய்து ரயில் சக்கரம் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஒன்றிய அரசு போட்டுள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற சங்கிகளின் தேசப்பற்று என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராடும்போதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதை திசை திருப்புவதற்காகவும் மூடி மறைப்பதற்காகவும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்றும் தீவிரவாத செயல் என்றும் மக்களை மடைமாற்றும் ஒரு தந்திரமாக செய்து வருகிறது மோடி அரசு. இந்தியாவில் தனக்கு பிரச்சினை என்றால் சீனாவை எதிரியாக காட்டுவதும் இல்லை என்றால் தனது அடிமை சேவகத்தை செய்வதும்தான் மோடி அரசின் நிலைப்பாடு. தான் செய்யும் அடிமை சேவகம் அமெரிக்காவிற்கு அடுத்து சீனாதான் என்று அவ்வபோது நிரூபித்து வருகிறது பாசிச மோடி அரசு. ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமை சேவகனாக மாறும் உத்தியை கையாளுகிறது இந்திய அரசு.

வினோதன்

Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!

In 2019, the then Erode District Collector Kathiravan imposed a night traffic ban to prevent wild animals from getting hit by vehicles on the Dhimbam ghat road, which passes through the forest where the Sathyamangalam Tiger Reserve is located. The ban was lifted after continuous mass struggle.
S.P.Chockalingam had filed a petition in the Madras High Court seeking the re-imposition of the night traffic ban imposed by the district collector in 2019, alleging that between 2012 and 2021, 155 wild animals had been killed after being hit by vehicles in the mountain tracks. Hearing the case, the High Court ordered the implementation of the night traffic ban on Dhimbam road from 2022 February 10. Accordingly, heavy vehicles will be banned from 6 pm onwards and light vehicles and passenger vehicles will be banned from 9 pm.
Due to this ban, the agricultural produce from the hills cannot be transported to Mettupalayam market and people of the surrounding areas can’t go out even for emergency needs. People from various walks of life including Thalavadi farmers, traders, Tamil Nadu Scheduled Tribes Association, van drivers and others protested against the ban. The court, however, refused to lift the ban.
An RTI reply received from the field director office of Sathyamangalam Tiger Reserve states that between 2012 and 2021 only 40 road kills happened on the road. Seven animals have died on Bannari road outside the prohibited forest area. Out of the remaining, 20 animals died during the day and 13 at night. This exposes that the litigant has given false information to the Court that 155 wild animals have been killed during this period, taking into account all the dead peacocks in the entire Erode district.
Read :
♦ Perarivalan released; Release all ! including Nalini, Murugan, Santhan ! | People’s power
♦ 18,850 Textile units go on strike to protest against rising yarn prices! People’s power support this !
The judges are shedding tears over the plight of wildlife due to vehicular traffic. What actions had they took on the hit and run of animals on the national highways that were laid by tearing the forests apart across Tamilnadu, or for the people who died in accidents?
According to the government, in 2021 alone, 14,912 people have died in 55,713 road accidents in Tamilnadu. Why is that a court that does not care about several thousands of people showing mercy when it comes to the fact that two animals die every year? What is hidden behind this clemency?
Malicious Forest Department Officials
The tribals living in this area cultivate millets like bajra, sorghum and ragi on the land for six months in a year to meet their food demands. For the remaining 6 months, they meet their economic needs by collecting 35 types of Minor Forest Produce (MFP) such as honey, shikakai, amla, broom grass, myrobalan, etc. from the forests in a sustainable way. The non-tribal forest dwellers live in the forest by tending cattle and working as labourers.
At present, tribals are often not allowed in forests to harvest Minor Forest Produce; They are only taking the broom grass. That too is being allowed for the corruption of forest officials, says tribals. A 10-member Village Forest Council (VFC) is formed by the people of the village. One member of the committee will be elected as the Chairman. The forest guard of the same forest will be the Secretary. The income from the minor forest produce will be saved by opening a bank account in the name of these two persons.
A village forest council leader from the Thalavadi hills says, “The wage to cut broom grass is ₹25 per kg. ₹5 each will be allocated for VFC and the tiger reserve. The VFC is not under the control of the people, it is under the control of the forest department. The money saved in the council is 8 lakh. But they don’t even utilize it to meet our basic needs. Salaries to the forest guards and  anti-poaching watchers are taken from this fund. They don’t return the money back. If a five ton load of broom grass is sold, whether profit or loss, ₹50,000 should be given to the forest department”.
Similarly, in the accounts of 28 village forest councils, about ₹1 crore of hard earned money of tribals is saved. With it, people can meet basic necessities like electricity, housing, water, etc. But the forest officials are deceiving the tribals by not allowing them to do so. People in the area are being threatened by the forest officials. They register false cases against tribals and beat them up in the name of calling for interrogation.
Sathyamangalam Tiger Reserve, which was set up illegally in 2013, is the root cause of the Dhimbam ghat road problem. It is only after its establishment that the forest department’s crackdown on tribals and blocking of traffic have been on the rise. The Forest Department has set up a collection centre in the name of ‘Sathyamangalam Tiger Reserve Trust’ to forcibly collect money from motorists going to Mysore. As a result, the tribals had to pay an entry fee of ₹50 at the checkpoint to get back to their native places.
The Madras High Court has struck another blow on these people who are already losing their livelihood. On March 4, it had issued a prohibitory order banning the grazing of cattle inside the forest. Against this, the forest dwellers of Tamilnadu, Kerala and Karnataka adjoining the tiger reserve had staged protests. In Tamilnadu, the people of Masinagudi have staged a protest and submitted petitions to the Collector. The people of Thalavadi hills are losing their livelihood on all fronts. Misfortunes never come singly as they say.
Forest Rights Act: An eye-piercing ‘golden’ needle!
What is the reason for such attacks on the innocent tribals and forest dwellers, who regard the mountain and the forest as gods? Some people have come out alleging that the tribals are destroying the forest, which is keeping them alive. They have maintained the forests for all these years. While tribals feel that the Forest Rights Act, 2006 will protect them, this pro-corporate clique is trying to use it as a weapon to exterminate innocents.
The Forest Rights Act was enacted in 2006 as a result of a series of struggles to protect the livelihoods of the tribal people. This law was relatively helpful to the oppressed people. It also gave certain powers to the gram sabhas of the tribals. The Act recognises land rights to the cultivating tribes, the right to collect and sell minor forest produce, the right to use traditionally used paths and water bodies, the right to graze sheep and cows, the right to protect and manage forest resources. While all of this is good to hear, practically there have been counter-reactions.
The Act has not come into force in many places and the state governments have mostly used it to deny the rights of the people in the areas where it has been implemented. Lakhs of individual claims have been rejected on the basis of this Act. As of November 2018, Chhattisgarh had rejected most individual claims (4,55,000), followed by Madhya Pradesh (3,50,000) and Maharashtra (1,20,000).
The Act recognises individual rights of tribals over forest areas, if they can prove occupation before December 13, 2005. Other traditional forest dwellers, those who do not belong to a scheduled tribe, need to prove “continuous existence” in the forest for 75 years (three generations). The bureaucracy has been harassing the ignorant – innocent tribals and forest dwellers with these conditions. All over India, it is this bureaucracy that dominates like kings and zamindars, and is intended on driving out the tribal people.
The forest department officials have been resorting to unfair rejection of applications seeking pattas. They do not respect the legal provisions which mandates them to provide reasons for the rejection in writing. This law is a proof that the word “sugar” written in a book won’t taste sweet.
In 2008, “Wildlife First”, an organisation that had filed a case in the Supreme Court seeking the eviction of tribals from forest areas, argued that land pattas should not be given through the Forest Rights Act. It absurdly argued that the tribals would destroy the forests. On the basis of the aforesaid rejections, it demanded that tribals without pattas be driven out of the forests. While the Centre did not respond to this, the Supreme Court, in 2019, passed an order evicting those who did not have a patta. The apex court then temporarily stayed its order after the Centre filed an appeal after widespread protests.
Is the intention of the government protecting forests or serving corporates?
“In those days the animals were in the forest, and we were here; From where did this new concern for animals came?”, “We and the animals live in harmony and there is no need for any reserve”, “the forest department has not planted a single plant since the tiger reserve was established”, “Even if the money comes from outside the tiger reserve, none of it is used to feed the tigers” says the adivasis.
The tribals of Ramaranai village of the Thalavadi hills engaging in making brooms.
None of the officials, commissions and NGOs, who are crying that the forest and wildlife are in danger because of the tribals, show any evidence of the same. The evidence they show is nothing but lies, such as those shown in connection with the Dhimbam ghat road. What is the purpose of blaming the tribals who have lived in the forests for thousands of years and have been making their livelihood by maintaining the forest? Why do you want to drive them away?
Between 2001 and 2006 alone, the government occupied more than 5 lakh hectares of forest area and drove away the tribals there. These lands were handed over to big corporates and industries. Notably, Chhattisgarh, where one-third of the population is tribal, rejected the land patta claims of 4,55,000 tribals. This is the highest in India. The government’s concern for the forest can be understood when we view Chhattisgarh government’s handing over of large areas of forest land to the big mining companies in tandem with their concern for the forests.
It is from this point of view that the amendments brought by the government have to be seen. In 2019, the Modi government introduced a Bill in the Parliament seeking an amendment to the Forest Conservation Act of 1980. The amendment provides for the privatisation of forests and hills and gives maximum powers to the District Forest Officer. The amendment shifts the burden of proving innocence to the accused. It allow forest bureaucracy to use fire arms and enter and search any premises on mere suspicion, just by informing Gram Sabha, to check forest offence.
Privately owned forests spread over several hectares in the middle of the sanctuaries are removed from the purview of the Forest Conservation Act and are allowed for commercial use. Moreover, it allows to extract natural gas and oil resources that are several thousand feet deep beneath the forests. By allowing wildlife parks, forest tours, etc., it is making forests fall prey to the profiteering frenzy of private companies.
Read :
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
♦ Sri Lankan people longing for a Revolutionary Party !
Mukesh Ambani’s son Anand Ambani is setting up a private zoo in Gujarat. By 2020, the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) has decided to enter into an agreement with private players for the development of 160 wildlife parks. The aforementioned two information exposes that corporate interest is responsible for the centre’s over-concern for the protection of forests and wild animals and driving away of tribals.
Not only this, the corporates are also showing interest in privately developing forests with the intention of carbon trading. The government’s plan is to hand over forest areas to corporates and allow thousands of crores of rupees to be pumped in every year. For this, the government needs masks like tiger reserves to drive tribals out of the forest areas.
In order to achieve these objectives, the traffic ban on the Dhimbam ghat road has now been imposed. Tribals and farmers who will lose their livelihood due to the ban will either leave the forests on their own or be evicted by the government.
It is the duty of each and everyone of us to expose this intention of the corporates among the people and stand with the tribals and forest dwellers who are fighting for their right to livelihood.

The Reporter, New Democracy