Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 205

பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !

ந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சென்ற மாதம் இறுதி நாளான 31-ம் தேதியோடு, மொத்தம் பத்து நாட்களில் ஒன்பதுமுறை விலை உயர்ந்துவிட்டது.
31-ம் தேதிவரை சென்னை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.5 காசுகளும், டீசல் விலை ரூ.6.9 காசுகளும் உயர்ந்துள்ளன. இனியும் இவ்வாறே விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது. சுமார் ரூ.20 வரை உயரும் என்று ஊடக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை கடந்த மாதம் 22-ம் தேதி ஒரே நாளில் ரூ.50-யும், வணிக எரிவாயு உருளை விலை இம்மாதம் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதி, ஒரே நாளில் ரூ.250-யும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை ரூ.540 வரை சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்துள்ளதாக கே.எஸ். அழகிரி கூறுகிறார்.

படிக்க :

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?

உக்ரைன் – இரசியா இடையிலான போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கான காரணமாக மோடி அரசு கூறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியே போர் தொடங்கிவிட்டது; ஆனால், தேர்தல் காரணமாக 137 நாட்களாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் தன் குரூர புத்தியைக் காட்டிவிட்டது மோடி அரசு.
ஏழை எளிய மக்களைப் பொருத்தவரை, அதிகரித்துவரும் இந்த விலை உயர்வு பெரும் தாக்குதலாகவே அமையும். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட கூலி ஏழை மக்களை இது பெரிய அளவில் பாதிக்கும். டீசல் விலையுயர்வு காரணமாக பல சரக்கு லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், அதாவது ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு முன்பு, ‘பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய அரசின் வரியைக் குறைத்துவிட்டோம்’ என தம்பட்டம் அடித்தார்கள் பா.ஜ.க.வினர். ஆனால், வரிக் குறைப்புக்கு பின்பு கூட அரசு வசூலிக்கும் மொத்த வரிவிகிதம் சராசரியாக பெட்ரோல் விலையில் 50 சதவிகிதமும், டீசல் விலையில் 40 சதவிகிதமும் இருந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றத்திற்கு ஏற்ப, இந்த வரி விகிதத்தைக் குறைத்துக் கொண்டால் கூட எரிபொருட்களின் விலை இவ்வாறு உயருவதைத் தடுத்து சீராக வைத்திருக்க முடியும். ஆனால், முதலாளிகளுக்கு சலுகை காட்டக் கூடிய மோடி அரசு, சாமானிய மக்களுக்கு கருணை காட்டப் போவதில்லை.
‘வரி’ என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டி கொள்ளையடிக்கும் நிதி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மூலதனக்கடன் என்ற பெயர்களில் வாரியிறைக்கப்பட இருக்கிறது. இப்படி சமூகத்தில் ஒருபக்கம் தரித்திர நிலையையும் மற்றொரு பக்கம் சொர்க்கப் புரியையும் உருவாக்கி வருகிறது மோடி அரசு.
மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் கிளப்பிவிடப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், மதவெறிக் கலவரங்கள் ஆகியவை நமது பிரச்சினைகளிலிருந்து நம்மையே திசைதிருப்புகிறது. விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வேண்டிய உழைக்கும் மக்கள், “இலாவண்யாவை மதமாற்றம் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா, இந்தமுறை சிவராத்திரிக்கு என்ன விசேசம், முசுலீம் மாணவிகள் ஹிஜாப் அணிவது சரியா” என்று பேசிக் கொண்டிருக்கிறோம். பேச வைத்திருக்கிறார்கள் காவிகள்.

படிக்க :

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

இதோ, ‘கோயில் திருவிழாக்களில் முசுலீம்களை அனுமதிக் கூடாது, முசுலீம் கடையில் கறி வாங்கக் கூடாது’ என அடுத்தடுத்த அவல்களை நமது வாயில்போட தயாராக வைத்திருக்கிறது சங்கிக் கூட்டம். மாறாக காவிக் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியும் எந்த காலிப்பயலும் நமது பட்டினித் திண்டாட்டத்திற்கு வழிசொல்வான் இல்லை.
இவர்களது பிரச்சாரத்திற்கு பலியாகிக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், தனது அன்றாடப் பிரச்சினைகளை எல்லாம் உணர்ந்தால் கூட வீதிக்கு வந்து உரிமைக் குரல் எழுப்பாமல், ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று கிடக்கும் போக்கு மற்றொருபுறம். குட்டக் குட்ட குனிந்துகொள்வது குட்டுபவனை மேலும் ஊக்கப்படுத்தவே செய்யும். அமைதியைக் களைத்துவிட்டு அமைப்பாய் திரண்டு போராடாமல் தீர்வில்லை மக்களே !

புதிய ஜனநாயகம்

Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array

Last year, in July, “We will build a dam across the Cauvery at Mekedatu; it does not require the approval of the Tamil Nadu government,” said the Eduyurappa-led BJP government and also its Construction began as planned. The Union Modi government showed its antagonism against Tamil Nadu by ordering the Karnataka government to file a detailed project report on the construction of the dam, without stopping the Karnataka government’s illegal activities.
All political parties in Tamil Nadu except BJP, have spoken out in parliament, saying, ” This is an act of lawlessness, and the dam across the river Cauvery cannot be built without the consent of Tamil Nadu.” Many people including farmer’s unions, protested against the Karnataka government and the central government. On behalf of the People’s Power Organization, Dharmapuri zone cadres mobilise mass and marched towards Mekedatu and also besieged. Following this, the Mekedatu Dam project has been suspended temporarily due to strong protests in Tamil Nadu.
In this situation, Karnataka’s Congress party has taken up the issue of the Mekedatu Dam for the vote-bank politics. It also claiming that congress party will be the only alternative to fascist BJP in India. Then the Karnataka Congress party planned to go on a padayatra for ten days under the slogan “Our water, our rights” from Mekedatu towards Bengaluru to demand the completion of the construction of the Mekedatu Reservoir across the Cauvery River.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
On the ninth of January, in Kanagapura taluk- Ramanagara district, with the thousands of Congress volunteers, opposition parliamentary leader Mallikarjun Kharge started the padayatra at the confluence of the Kari and Argavathi rivers. The Congress party leader, D.K. Shivakumar, Opposition leader Siddaramaiah, former Deputy Chief Minister Parameswar and a number of film personalities, including former ministers, were present. “This project is actually designed to useful for both states,” Mallikarjun Kharge said after launching the padayatra. “However, due to Tamil Nadu’s opposition, it has sparked unnecessary controversy.”
Former Water Resources Minister K Sivakumar and also Kanagapura’s MLA, said, “This padayatra is for the people neither for Congress party nor for the opposition and also he added that, in the past Congress had fought for national independence, likewise, in present the same Congress fighting for water against BJP which shows that he combined the pseudo-independent struggle with their own despicable racism.
siddharamaiah claimed that the Mekedatu dam project was initiated by his own Congress-led government, and he accused the BJP of betraying its own people in Karnataka and also formed an alliance with Tamil Nadu. Through this, he claimed that the Karnataka Congress was a pioneer than the BJP in betraying Tamil Nadu.
Karnataka-BJP Chief Minister Basavaraj Bommai denied all the allegations and accused that, “Congress only betrayed the people of Karnataka by not implementing the Mekedatu project during this tenure”. In addition to that, he said, Congress allotted Rs. 10,000 crores for the Krishna River water project but only spent Rs. 7,000 crores, and the Congress party was not standing firm on any irrigation project. He added, “The ruling BJP party is actually carrying out the Mekedatu project. After I became the chief minister, the full report on the project was sent to the Central Water Commission and the Cauvery Monitoring Board for approval. A meeting on this project will be held this month and decisions will be taken.
The purpose of constructing a dam across the Cauvery River at a cost of Rs.9,000 crores is to set up a drinking water reservoir which helps to store surplus water and is used for supplying drinking water and generating electricity to Bangalore and its surrounding districts, according to the Karnataka government. However, this is directly showing the racialist plan of the Karnataka parties to usurp the water rights of Tamil Nadu and a new dam is being built at Mekedatu for the benefit of hotel and real estate owners in Bangalore. The Karnataka racialist parties have been touting the plan to divert Karnataka’s water resources to corporates and making a story which is benefit for the people and farmers of Karnataka.
In Karnataka, four major dams and more than five smaller dams have already been built across the tributaries of the Cauvery. With the help of major dams, nearly 104.55 TMC of water is stored. Firstly, the needs of Karnataka are fulfilled, and then the rest of the water is supplied to Tamil Nadu. In this case, if the dam is built in Mekedatu, the surplus water will not come to Tamil Nadu. There are 26 lakh acres of irrigated land in Tamil Nadu, which depends on the Cauvery River for agriculture, and will become a desert. Drinking water will not be available in 25 districts, including Chennai, Ramanathapuram, Vellore, and Tirupur. Already, the Karnataka government is not giving Tamil Nadu’s own share of the Cauvery River if this dam is built on Mekedatu, which would lead to burying Tamil Nadu’s rights permanently.
Read :
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
In many respects, the Congress party, which pretends to be at odds with the BJP, is competing with the BJP in inciting Kannada racism against Tamil Nadu. We also have to look at one thing: even though the Congress party is the weaker one at the national level, it will be the only alternative to the RSS-BJP and also be a secularist and liberalistic Democratic Party. As a result, as progressive-thinking democrats and intellectuals have stated, we can support Congress in its efforts to dethrone the BJP in the upcoming elections. They also never opened their mouths regarding the activities carried out by the Karnataka Congress on the Mekedatu dam construction.
If inciting racism induces people to vote for the Congress party, they will use it. They do have principles and theories solely based on obtaining votes. The Congress Party is not only racism, but also religious fanaticism, as evidenced by its collaboration with the RSS-BJP on the issue of Kerala’s Sabarimala Temple. Unlike the RSS-BJP, the Congress can be said to be ‘soft’ if you will. But we point out that this ‘softness’ is subject to the ‘violence’ of saffron fascism.
The politicization of the masses and the ground struggles of democratic alliances are the only answers to fascism and the demand for basic democratic rights. Polling votes will not be an alternative, and it is just absurd, as we saw in the Mekedatu dam issue.

Venba

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தலையங்கம் பெட்ரோல் – டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்ட குட்ட குனியாதே !
♦ இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு, சித்தரவதை செய்யும் போலீசு !
♦ குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு! சாதிவெறியை இனப் பகையாக சித்தரிக்கும் தமிழ்த்தேசிய துரோகிகள்!
♦ வேலையில்லா திண்டாட்டம், தாளாத கடன்சுமைகளால் பெருகிவரும் தற்கொலைகள் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள்!
♦ குற்றவாளிகளை உருவாக்கும் மோடி அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?
♦ ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!
♦ மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள்!
♦ பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் கார்ப்பரேட் நலனும்!
♦ காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை!
♦ நீட் தேர்வின் தரா’தரம்’ என்ன?
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !

னிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம்.
அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது.
இத்தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு ஜவுளி ரகங்கள் நாளொன்றுக்கு 20 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம், உடையாப்பட்டி பகுதியில் அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலை 31 ஏக்கரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கியது. இதில் 14 ஏக்கரில் நூற்பாலை கட்டிடம் கட்டப்பட்டு, தரமான நூல்கள் உற்பத்தி செய்து லாபத்தில் இயங்கிய ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த 1,100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
படிக்க :
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !
நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நூற்பாலை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்தான் இருக்கிறது. தற்போது, இந்த இடத்தில் 17 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு அடுக்குமாடி தொழிற்கூடம் உருவாக்கி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் தொடங்கி ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது.
நெசவாளர்-வாழ்க்கை
அச்சில் பிணைப்பது
சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, தானியங்கி தறிகள் மூலம் துணி நெய்யப்படுகிறது. வேட்டி, சேலை, லுங்கி ஆகிய துணிகள் நெய்யப்படுகின்றன. குறிப்பாக செயற்கை இழையால் நெய்யப்பட்ட மலிவு விலை பட்டுச் சேலைகள் இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் பிரபலமானவை.
கைத்தறிகளின் எண்ணிக்கை குறைவு. விசைத்தறிகள் பிரதானமாக பங்காற்றுகின்றன. மாறி வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கடந்த இருபது வருடங்களில் தானியங்கி தறிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. தானியங்கி தறிகள் மூலம் நெய்யப்பட்ட துணிகள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கைத்தறி, விசைத்தறியில் நெய்யப்பட்ட துணிகள் நமது தேவை மற்றும் ஏற்றுமதி என்ற அடிப்படையில் கொண்டு செல்லப்படுகின்றன.
தறி உரிமையாளர்கள் :
இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்கள், தானியங்கி தறி உரிமையாளர்கள் என்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் தறிகளை வைத்துக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகள் வேலை செய்யும் தொழிற்கூடங்கள் அல்ல. 5 முதல் அதிகபட்சம் 15 தறிகள் உள்ள சிறுமுதலாளிகள்தான் அதிகம். 60 தறிகள் வரை வைத்துள்ள பெரிய முதலாளிகள் சிலர் உள்ளனர்.
யாரும் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கியவர்கள் அல்லர். சொத்துக்களை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன், நுண்கடன் பெற்றோ தான் தறிகளை வாங்கியுள்ளனர். இதனால் உரிமையாளர்கள் என்பவர்கள் தொழிலாளிகளோடு தொழிலாளிகளாக உழைத்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதே யதார்த்த நிலை. தொடர்ச்சியாக தறி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலில் நிற்க முடியாது.
மேலும் நெய்த துணிக்கு கூலியை இவர்கள் நிர்ணயிக்க முடியாது. ஜவுளி உற்பத்தியாளர்கள்தான் நியமிப்பார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் கூலி குறைக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த கூலியை விட தற்போது குறைவான கூலி கிடைப்பதாக கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கோவை பல்லடம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளிகளும் கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிவோம். சேலம் பகுதிகளில் போராட்டம் நடைபெறவில்லையென்றாலும் இங்கும் கூலி உயர்வு பிரச்சினை பிரதானமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கூலியைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர்கள் உடனே கொடுப்பதில்லை என்கின்றனர். இரண்டு மாதம் வரை தாமதப்படுத்தித்தான் கொடுக்கின்றனர். இதனால் கைகாசைப் போட்டுத்தான் தொழிலாளிகளுக்கான கூலியும், GST உள்ளிட்ட மற்ற அவசியமான செலவுகளை ஈடுகட்டுகின்றனர். GST ஒவ்வொரு மாதமும் 10 ந்தேதி பில் முடித்து, 20 ந் தேதிக்குள் வரி கட்டிவிட வேண்டும்.
கூலியை உடனே கொடுக்கும்படி உற்பத்தியாளர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் நெய்வதற்கான ஆர்டரை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர், தறி உரிமையாளர்கள்.
கடைசியாக நடந்த GST கூட்டத்தில் காட்டன் துணிகளுக்கு 5% ல் இருந்து 12% மாக GST உயர்த்தப்பட்டதானது மிகக் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகையை வாரி வழங்கும் மோடி அரசு சிறு தொழில் செய்வோரை வரியை உயர்த்தி அழிக்கிறது. GST வரியால் தொழில் நட்டமடைந்து விட்டது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் மேலும் கூலியை குறைக்கின்றனர். ஒரு சேலை நெய்தால் ரூ.280 கிடைத்த இடத்தில் தற்போது ரூ.220 தான் கிடைக்கிறது என்பது நிலைமை.
நூலின் விலையும் ஓராண்டில் 50% வரை உயர்ந்துள்ளது. மாதம், 50 கிலோ கொண்ட 40ம் நெம்பர் நூல், ஒரு சிப்பம் ரூ.9,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ. 14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 நாட்களில் ஒரு சிப்பத்திற்கு ரூ.5.000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. இதைக் கண்டித்து சேலம் வெண்ணந்தூர் பகுதியைச் சார்ந்த விசைத்தறி நெசவாளர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
பணமதிப்பழிப்பு, GST, கொரோனா ஊரடங்கு போன்றவை கடுமையான பாதிப்பை நெசவுத் தொழிலுக்கு ஏற்படுத்தியுள்ளன. தறிக்கு உரிமையாளராக இருந்த பலர் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். ஊரடங்கு காலங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பை நடத்த வேண்டிய நிலைக்கு விசைத்தறி நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குறைவான தறி வைத்திருப்பவர்கள் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கி கட்டமுடியாமல் அந் நிறுவனங்களால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு பக்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் நீர், மின்சாரம், நிலம் அனைத்தையும் சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் அரசோ சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. தறித் தொழில்களுக்கான அதிகப்படியான மின்சார கட்டணமும் இவர்களை பதம் பார்க்கிறது. மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
இவர்கள் முக்கியமாக வைக்கும் கோரிக்கைகளாவன; ஜவுளித் தொழிலுக்கான GST ரத்து செய்ய வேண்டும். பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பருத்திக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், இதன் மூலம் கூலியை அதிகப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பனவாகும்.
தொழிலாளர் நிலைமை :
நெசவுக் கூடங்களில் உழைப்பை மட்டும் செலுத்தும் தொழிலாளர் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. பெரும்பாலும் வேலை நேரம் 12 மணி நேரமாக உள்ளது. 12 மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளிக்கு கிடைக்கும் ஊதியம் ரூ.500 மட்டுமே. 8மணி நேர வேலைக்கு ரூ.350 மட்டுமே. இத்தொழிலில் நீண்ட காலம் வேலை செய்ததும் மாற்றுத் தொழில்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லாமல் வேறு வழியின்றி இதே தொழிலில் நீடிப்பது என்கிற நிலைமையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்காக குறைவான கூலியாக இருந்தாலும் உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
8 மணி நேர வேலை செய்யும் தொழிலாளிகள் சம்பளம் போதாமையால் நெசவு வேலையை முடித்து விட்டு, கூடுதலாக கிடைக்கும் வேலைகளுக்கும் செல்கின்றனர். விலைவாசி உயர்வு தங்களை கடுமையாக பாதிப்பதாக கூறுகின்றனர்.
தானியங்கி தறிகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கு 12 மணி நேரம் வேலை. இங்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. விசைத்தறிக் கூடங்களில் தினசரி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.
1970 – 80 களில் கம்யூனிச இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறித் தொழிலாளர்கள் மத்தியில் வீச்சோடு செயல்பட்டன. குறிப்பாக அன்றைய ஒன்றிணைந்த சேலம் மாவட்டத்தின் பகுதியாக (தற்போது நாமக்கல் மாவட்டம்) இருந்த குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம், ஜலகண்டாபுரம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக பல போர்க்குணமிக்க போராட்டங்களை விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்போது இந்த இயக்கங்கள் ஒருங்கிணைத்து நடத்திய பேரணியில் 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.
1990 களுக்குப் பிறகு தொழிற்சங்கங்கள் வலுவிழந்துள்ளன. நெசவுத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களின் தலையீடு என்பது மிக குறைவாகவே உள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக (குறிப்பாக தானியங்கி தறிகள்) தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது நெசவுத் தொழிலாளர்களாக வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்யும் நிலை உள்ளது. இது மேலும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. சிறு தொழிலகங்களிலான உற்பத்தி நிலைமைகள், கிடைக்கின்ற குறைவான பொருளாதார ஆதாயம், புதிய தாராளவாதக் கொள்கை தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள பொருளாதார, பண்பாட்டு தாக்கங்களும், தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் அணுகுமுறைகளும், கொள்கைகளும் வலுவான தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன.
மேற்கண்ட நிலைதான் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பிரதானமாக மேற்கொள்ளும் மாவட்டங்களிலும் உள்ளது.
பிரச்சினைக்கான தீர்வு என்ன?
இப்பிரச்சினைக்கான தீர்வை நாம் நெசவுத் தொழிலுக்கு உட்பட்டு மட்டும் பார்க்க முடியாது. இதை நெசவுத் தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடாக மட்டுமோ, தறிக்கு உரிமையாளராக இருக்கும் நெசவாளருக்கும், அங்கு கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிக்குமான முரண்பாடாக மட்டும் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. தறியை உடைமையாக வைத்து கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களும், அந்த தறிக்கூடங்களில் வேலை செய்யும் உடமையற்ற தொழிலாளர்களும் தங்களின் தற்காலிகத் தீர்வுக்கு போராடுவது சரிதான் என்றாலும் இதை ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்குமான பிரச்சினையாக பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஜவுளித் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்றுவது முதன்மையானது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு மட்டுமின்றி, பல லட்சம் பருத்தி விவசாயிகளுக்கும், வாழ்வாதாரமாகத் திகழும் ஜவுளித்துறையை தனியார்மயக் கொள்கையின் காரணமாக அரசு கைவிட்டுவிட்டது என்பதுதான் அடிப்படையான பிரச்சினை.
தமிழகத்தை பொறுத்த அளவில் ஜவுளி தொழிலில் மிக முன்னணியில் உள்ள மாநிலம் என்றாலும், ஜவுளிக்குத் தேவையான பருத்தி உற்பத்தியில் மிகவும் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும்! தமிழகத்திற்கு மட்டுமே 108 லட்சம் பேல்கள் தேவைப்படுகின்றன! இதில் கால்வாசி கூட இங்கு உற்பத்தி ஆவதில்லை! நாம் மற்ற மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம்!
நூல் விலை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்களுக்கு கூலியைக் குறைக்கின்றனர். இது கூலிக்கு நெய்து தரும் நெசவாளர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டுகிறது.
பருத்தி விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க சொன்னாலும், பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் சாதாரண விவசாயிகளைச் சென்றடையவில்லை. பருத்தி பயிரிடும் விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளே இதற்கு உதாரணம். பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளது. இதேதான் மற்ற பிரதான விவசாய விளைபொருட்களுக்கும் பொருந்தும். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
தனியார்மயத்தின் விளைவாக பருத்தி ஏற்றுமதியின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டது. பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
நம் நாட்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகிறது. அதில் உள் நாட்டின் தேவை எவ்வளவு? அது போக உபரி எவ்வளவு? அல்லது பற்றாக்குறை எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட்டு, ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் அரசுக்கு கிடையாது. பன்னாட்டு ஏகபோகங்களுக்கும், இங்கிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இலாபம் தரும் விசயம் என்னவோ அதைத்தான் அரசு முடிவெடுக்கும். இதுதான் தனியார்மயக் கொள்கை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்தி கழகமும் (சி.சி.ஐ.,) மேற்சொன்ன விசயத்தைத்தான் நடைமுறைப்படுத்த முடியும். பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போது, விவசாயிகளிடம் வாங்கி அதிக அளவு இருப்பு வைத்து, தட்டுப்பாடு ஏற்படும் போது விலையை உயர்த்தி விற்கிறார்கள்!
படிக்க :
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காமல் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதன் மூலம் 355 லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தியாகிறது. நமது உள் நாட்டு சந்தைக்கு 375 லட்சம் பேல்கள் தேவைப்படுகிறது. ஆக, நமக்கே பற்றாகுறை 20 லட்சம் பேல்கள்!
பற்றாக்குறை அதிகமாவதால் எந்த அளவுக்கு ஏற்றுமதி ஆனதோ, அந்த அளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அப்படி தடாலடியாக அதிகமாக இறக்குமதியாகும் போது, உள் நாட்டு பஞ்சின் விலை அடிவாங்கிறது! அதனால், இறக்குமதி பஞ்சின் மீது அதிகம் வரி விதிக்க வேண்டும் என்ற குரல்களும் விவசாயிகள் தரப்பில் எழுகிறது! ஆனால் நெசவாளர்களோ இறக்குமதி பஞ்சின் மீது வரியை குறைக்கச் சொல்லிப் போராடுகிறார்கள்.
இதன் மூலம் உண்மையை மறைத்து விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்குமான முரண்பாடாக மாற்றி வேடிக்கை பார்க்கிறது அரசு .
ஒருபுறம் நெசவாளர்களையும், மறுபுறம் விவசாயிகளையும் ஒரு சேர பாதிப்படைய வைத்து ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் உள்ள கார்ப்பரேட்டுகளை வாழவைக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையைத்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது என்பதை நெசவாளர்களும், தறித்தொழிலாளர்களும், விவசாயிகளும் உணர வேண்டியுள்ளது. அக் கொள்கையை வீழ்த்துவதற்கும், நம்நாட்டிற்கான தேவையை அடிப்படையாக கொண்ட சுயசார்பான கொள்கை மாற்றத்திற்காகவும் தங்களுக்குள்ளும், அனைத்து தரப்பு மக்களோடும் ஒற்றுமையைக் கட்டியமைத்து போராடும்போதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை நோக்கி செல்ல முடியும்.
வினவு செய்தியாளர்

R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion

When R.N. Ravi was the Governor of Nagaland, he disrupted the administration of the state government and caught fishes for the BJP’s allies. He filled the state administration with RSS cadres. As an Intelligence Officer, he approached Naga militant groups, degenerate it and announce a ceasefire. People celebrated the day when Governor Ravi left Nagaland. The press boycotted Ravi’s parting treat. Such a notorious and fascist stooge, R.N. Ravi has been duly performing his job as a henchman since he assumed office in Tamilnadu.

There were reports in the media that, Governor Ravi, on September 21, summoned Tamilnadu Law and Order DGP Sylendra Babu and Intelligence Bureau ADGP Davidson Devasirvatham and inquired about the protests against the Union Government in Tamilnadu and about the black flag protest by the DMK and its allies against the former Governor Purohit. The Governor used to summon the Chief Secretary if he needed any information about the government. But the new Governor unusually summoned the police officers. The DMK, which swung its horn against Banwarilal Purohit during the last ADMK’S Palanisamy regime, is now remaining mute.

Media reported about the Chief Secretary Irai Anbu’s circular to the heads of departments to keep ready the information regarding welfare schemes to be conveyed to the Governor. Following the media reports, the Chief Secretary claimed that it was a ‘normal practice’.

Read :

War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !

Kashmir: Saffronisation obliterating constitutional freedom

Article 167 of the Constitution permits the Governor to ask the State Government for certain details. But it is up to the Chief Minister of the state to provide the details the Governor asks for. The Governor’s direct call to the Secretaries of the state denotes interference in the functioning of the State Government. The Constitution of India does not allow this. The Governor’s subsequent actions have lamented and angered even the DMK allies.

In a statement, Thirumavalavan, President of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), said, “Meeting officials directly would call into question the credibility of the government elected by the people”. But the DMK is remaining silent.

A student of Chinmaya Vidyalaya School in Coimbatore committed suicide due to sexual exploitation by a school teacher. The people of that area continued to protest to arrest the school teacher and the Principal. The police threatened the parents of the deceased girl to receive the body while on the other hand gave the Principal time to escape by not arresting her. Due to continuous protest by the people, the police arrested the school Principal Meera Jackson, but released her within days. The police filed a case against the people who protested against this. Moreover, the police rolled out the red carpet for Arjun Sampath of the Hindu Makkal Katchi, who had come to disrupt the protest.

Police have registered two cases against Thirumurugan Gandhi of the May 17 movement, who participated in a protest against the shooting of fisherman named Rajkiran of Kottaipattinam, Pudukottai district by the Sri Lankan military in the sea. But the police were not bothered by the BJP’s protest against the same issue. Thirumurugan Gandhi openly said “In the current circumstances, the DMK government is being silent. State autonomy is questioning when the rights of the state government are being taken away. But the DMK doesn’t seem to be paying any attention. The Tamilnadu Police Department doesn’t seem to be in the hands of the TN Government. It is directly in the hands of the Union Government or its affiliates”.

This time, the police had put severe curbs on Muslim organisations that observe the day of Babri Masjid demolition as Black Day.

The police banned the hoisting of the Viduthalai Chiruthaigal Katchi flag at Morur in Salem district and instigated the dominant castes against the VCK cadres. The police later registered a case against the VCK party cadres who protested against it. Thirumavalavan alleged, “Only the regime has changed but not the scenes. Even though the DMK assumed power, the police is still in ADMK mentality”.

Police have registered a case under two sections against Tamizhaga Vazhvurimai Katchi chief Velmurugan for celebrating the birth anniversary of LTTE leader Prabhakaran by cutting cakes. Criticising this, he said, “The regime has changed but the scenes haven’t. Though the DMK assumed power, the situation continues as it did in the ADMK regime. The Tamilnadu police is pressing charges even against the leaders of the DMK allies”.

Various movements in TN, including farmers’ unions, protested against the Modi government over the killing of farmers by the son of the Union Minister of State in Uttar Pradesh. When Modi’s effigy was burnt in Mayiladuthurai, the BJP men said, “If Modi’s effigy is burnt, we will burn Lenin’s effigy in return”. But they were not arrested. Similarly, the BJP had a dispute in Tanjore in a event offering salute to the farmers. The police politely bid them farewell and suppressed the protesting farmers.

The invitation for the Bharathidasan University convocation ceremony carried the words “Azadi Ka Amrit Mahotsav”, to mark the 75th Independence Day. “The Tamilnadu government has dubbed these Hindi words as Suthanthira Thirunaal Amudha Peruvizha (STAP) in Tamil and has also advised that the Tamil phrase should be used. However, Bharathidasan university has violated it,” PMK Anbumani stated. “The use of Hindi slogan by the Bharathidasan University amounts to Hindi imposition. Who is controlling Bharatidasan University which does not respect the order of government of Tamilnadu”, he questioned.

In last October, Governor Ravi convened a meeting of Vice-Chancellors of the Universities and Deemed Universities and said that the New Education Policy should be implemented immediately. In reply to Tamilnadu Minister Ponmudi, who criticised the Three Language policy, the Governor highlighted the ‘special features’ of the New Education Policy at the stage of the convocation. He also challengingly spoke that the New Education Policy would make India an equitable and vibrant knowledge society.

There is a secret order from the ‘High Command’ to prepare a list of students who align with left-wing politics from all Government Colleges & Universities, especially from educational institutions in the metropolitan areas. While student organisations have been wiped out by years of systematic pressure in most educational institutions in Tamilnadu, they have now focused on targeting and suppressing a few unorganised frontline student activists.

The Governor, henchman of the Central Government, “has the power only to aid and advice the elected Government and not to change the decisions of the elected government or to take decisions on his own,” the court observed. R.N. Ravi is laying the foundation for a fascist regime in Tamilnadu by breaking all the rules and laws.

“As long as MK Stalin is there, the BJP won’t be able to enter TN; The RSS’s dream won’t be fulfilled,” some people are saying like that. This ostentatious empty talk is not new. During the 1999 parliamentary elections in which the DMK allied with the BJP, they said on the dais that “even if the DMK forms an alliance with the BJP, there will be no communalism in Tamilnadu as long as Kalaignar Karunanidhi is there”. It was the same Karunanidhi who called the RSS, the culprit behind Gujarat pogrom, as ‘social organization’ inorder to retain power and the post of ministers at the Centre. He called the organization a ‘social organisation’. He laid the foundation for the RSS-BJP. When it comes to position and power politics there exists only opportunism; and not ideology.

Read :

New Democracy – March 2022 | Magazine

Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!

A spy’s job is to penetrate the enemy country and create the foundation for his master, and then bring down the enemy State! That’s what R.N. Ravi is doing in Tamilnadu effectively. But many of us are in the day dream that this fascist invasion could be brought down with the cardboard knife called ‘election’.

The RSS – Hindutva (Brahminical) clique is waging a proxy war against Tamilnadu to establish a saffron-corporate fascist regime. The Intelligence Chief of this clique, R.N. Ravi, is trampling on all the values of the Government of Tamilnadu and creating a fifth army for themselves.

Therefore, the democratic forces and intellectuals of TN must get rid of the tendencies like ‘the DMK will take care of the BJP’, ‘Fascism can be prevented by bringing down the BJP in the upcoming parliamentary elections’. Even R.N. Ravi can be sent home only through the working class’s ground battle to bring down the Brahminical fascists.


Marudhu

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கியின் உதவி மேலாளர் மணிகண்டன் என்பவர் ஆண்டுக்கு இருபத்தி எட்டு லட்ச ரூபாய்வரை ஊதியமாக பெற்றவர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்துவிட்டு, தொடர்ந்து விளையாட நண்பர்கள், உறவினர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்தில் மோதல் அதிகரிக்கவே, மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றுவிட்டு, தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை திருவான்மியூரில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த டீக்காராம், அதிகாலையில் மூன்று பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப் போட்டு 1.25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியதைத்தொடர்ந்து விசாரணை செய்தது  போலீசு. அதில் டீக்காராமே தன் மனைவியுடன் சேர்ந்து பணத்தை திருடிவிட்டு, கொள்ளையர்கள் வந்து திருடிச் சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகப்படியான பணத்தை இழந்ததால், கடனை அடைப்பதற்காக இப்படியொரு வழியை தேர்வு செய்ததாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களுமே இந்த ஆண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே  நடைபெற்றவை. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் (2020), தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 30 பேர் வரை தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றது சென்னை உயர்நீதிமன்றம்.

படிக்க :

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.
தெருக்களில் பணம் வைத்து சீட்டாடுபவர்களை, போலீசார் தேடிப்பிடித்துக் கைதுசெய்து அபராதம் விதிப்பதாக காட்டும் அதே தொலைக்காட்சி சேனலில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒருநாளில் மட்டுமே பலமுறை வந்து “ஈசியாக சம்பாதிக்கலாம்” என்று ஆசையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏழை மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் அரசு லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறி 2003-ஆம் ஆண்டு லாட்டரி விற்பனையை தடை செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால் இன்று, எதற்கும் கட்டுப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளால் தொடங்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களை மிகப்பெரிய போதையில் ஆழ்த்தி கொன்று கொண்டிருக்கின்றன. “2019-ம் ஆண்டு கணக்குப்படி தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவீதம் அதிரித்துள்ளது” என்று இந்து குழுமத்தின் காமதேனு இதழ் குறிப்பிடுகிறது.
சீட்டாட்ட சூதாட்டம் போலவே, நடப்பு ஐ.பி.எல்-ஐ வைத்து நடக்கும் வீரர்களை தேர்வு செய்யும் சூதாட்ட விளையாட்டும் உள்ளது. கிரிக்கெட் மோகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் எளிதில் பலரையும் வீழ்த்திவிடுகிறது. “வீரர்களை கணிப்பதுதான் பிரச்சினை, சொற்ப பணம்தான், ஒரு டைம் பாஸூக்குக்குதான்” என இளைஞர்கள் பல காரணங்களை ‘சாதகமாக’ சொன்னாலும் ஒரு சூதாட்ட மனநிலைக்கு படிப்படியாக இவ்விளையாட்டுகள் அவர்களை தயார் செய்துவிடுகின்றன.
ஆன்லைன் சூதாட்ட போதையைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் தரகு கும்பல்கள் பல முளைத்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த அரசு என்பவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்; அதில், தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது சில ஆட்டங்களில் வெல்ல வைத்து பின்னர் பல லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாகவும் இந்த மோசடி செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பெருங்கடியைச் சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன்.
ஆன்லைன் ரம்மி விளையாடும்போது தொடக்கத்தில் ஒருசில ஆட்டங்களில் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றிப் பெறலாம் என்று நம்பி அடுத்தடுத்து கூடுதலான பணத்தைக் கட்டி விளையாடுவார்கள். ஆனால் யாரேனும் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவதும் மற்றவர்கள் தோல்வியடைந்து பணத்தை இழப்பதும்தான் சூதாட்டத்தின் சிறப்பு. சூதாட்டப் போதை இதை பரிசீலிப்பது இல்லை. இதனால் அதிகப் பணத்தை கட்டி இழந்தவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
000
இந்தியாவில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தமிழக விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்துச் சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதே சூதாட்டம் ஆன்லைனில் நடைபெற்றால் அது குற்றமாக வரையறுக்கப்படுவதில்லை.
ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52, ‘கேஸ்டோ க்ளப்’, போக்கர், ஷீட்டிங் பைட்டர்ஸ்… இப்படி பல பெயர்களில் இந்தியாவில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளன. இவற்றை ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்ற சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
அக்டோபர் 2020-ஆம் ஆண்டு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தில், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு என்ற மிகக்கொடிய சமூகக் கொடுமையை கூடிய விரைவில் ஒழிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக குறுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியதோடு, தடை செய்யப்பட வேண்டிய 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணையதளங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலையும் தனது கடிதத்தில் இணைத்திருந்தார். அதற்கு மோடி அரசு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்காக சட்டமியற்றும் பாசிச மோடியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
000
ஒன்றிய அரசு, “ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்” கொண்டு வராதவரை மாநில அரசுகள் எப்படிப்பட்ட தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் செல்லாததாக்கப்படும்; ஆக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் ஆன்லைன்  சூதாட்ட கொலைகளை தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படவும் தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் வழிவகை செய்தது. அச்சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக அவற்றின் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஆன்லைன் கார்ப்பரேட் கம்பெனிகளின் தரப்பில் ஒருமுறை ஆஜராகுவதற்கே பல லட்சம் கட்டணம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகினர். தமிழக அரசின் தரப்பிலோ இரு வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டு அரசுக்கு மக்கள் மீது என்ன அக்கறை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந்த வழக்கினை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போடப்பட்ட தடையானது அரசியலைமைப்புச் சட்டம் 19(1)-G-க்கு எதிரானது என்ற ‘வரலாற்று சிறப்புமிக்க’ தீர்ப்பை வழங்கியது. அச்சட்டப் பிரிவானது தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தை செய்யும் சுதந்திரத்தின் மீதான நியாயமான கட்டுப்பாடுகளைப் பற்றிக் கூறுகிறது.
அப்படி என்றால் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்காக யாரும் கொல்லப்படலாம் என்பதே 19(1)-G குறித்து உயர் நீதிமன்றத்தின் புதிய சட்ட விளக்கமாக (interpretation) இருக்கிறது.
“ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல” என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் “ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்” என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
000
1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஒன்றிய அரசு மட்டுமின்றி எல்லா மாநில அரசுகளும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு போட்டிப் போட்டுக்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரிக்கொடுத்து வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு உகந்தவைகளே சட்டங்களாக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வாத சட்டங்களும் அரசின் வடிவங்களும் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன.
இதிலிருந்து நோக்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது என்பது சாதாரண விசயம் அல்ல. கடும் கட்டுப்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் சீனாவில் கூட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்படவில்லை; மாறாக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க முடியும் என்று ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் உலகுதழுவிய பலத்தை மட்டும் காட்டவில்லை; இதுபோன்ற விளையாட்டுகள் முதலாளித்துவ அரசுகளுக்கும் தேவை என்பதையே காட்டுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. “ஆன்லைன் பாலுறவு” (Online Sex) எனும் புதிய வக்கிரம், ஆபாச இணையதள முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ தங்களை ஒரு ஆபாச இணையதளத்தின் இணைப்பில் இணைத்துக் கொண்டு ஆன்லைனிலேயே “வீடியோ கால்” மூலம் மெய்நிகர் உறவுகொள்ளும் ஒரு குரூரம்; இதுவரை கேள்விப்பட்டிராத வக்கிரம்; இன்று இளைஞர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மியைப் போல இதிலும் மோசடி கும்பல்களின் கைவரிசையால் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் அசிங்கப்பட்டுப் போவோமோ என்று பலர் புகார் கொடுப்பதில்லை.

படிக்க :

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

இவ்வாறு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நுகர்வுவெறிப் பண்பாடு அனைத்து வகைகளிலும் திட்டமிட்டு பரப்பப்படுவதானது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு தீனிபோடுவதாக மட்டும் அமையவில்லை. முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்படும் மக்களை, தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி அவர்களது போராட்ட உணர்வை காயடிக்கிறது.
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் ! உசுரு இருக்கு வேறென்ன வேணும்.. உல்லாசமா இருப்பேன்” என்ற திரைப் பாடல் வெளிப்படுத்தும் உள்ளடக்கமும் இதிலுள்ள மிருகப் பண்பாட்டை, அடிமைத்தனத்தை உச்சுக்கொட்டி நம்மில் பலர் இரசிக்க முடிவதும் அதற்கு எடுப்பான உதாரணங்கள். இதைத்தான் எல்லா முதலாளித்துவ அரசுகளும் விரும்புகின்றன. அம்பானி-அதானி தாசர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன!
சீனாவின் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கப்பலில் டன் டன்னாக அபினை இறக்குமதி செய்து சீன இளைஞர்களை போதையில் ஆழ்த்தியது. அதற்கெதிராக சீனர்கள் நடத்திய போரே அவர்களின் புரட்சிக்கு வித்திட்டது. எனவே போதை, ஆபாச சீரழிவிற்கு எதிரான போராட்டமும் மக்கள் விடுதலைக்கான போராட்டமும் வேறுவேறல்ல.
இன்று “ஆன்லைன் மார்க்கமாக” முதலாளித்துவம் நம் மீது தொடுக்கும் சீரழிவுகளை – தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், இத்தகைய சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. மனிதனை அடிமையாக்கி மனிதனுக்கே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் அதற்கு அடிப்படையாக உள்ள ஏகாதிபத்திய பொருளாதாரத்தையும் ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட கம்யூனிச பண்பாட்டை மக்களிடம் கொண்டுசெல்லும்போதுதான் சமூகத்தை காப்பாற்ற முடியும்.


மருது

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

முதல் பாகம் : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
இரண்டாம் பாகம் :
பார்வையாளர்களைப் பற்றி இவர் என்ன கருதி, எந்த ஆதாரமுமின்றி படம் எடுத்துள்ளார் என ஆச்சரியமாக உள்ளது. விடுபட்ட புள்ளிகளை இணைத்து புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு முட்டாள்களா படம் பார்க்கும் அனைவரும்? ‘ஜேஎன்யூ பேராசிரியர்’, ‘ராதிகா மேனன்’, போன்றோர் தலைமறைவு பயங்கரவாதிகளுடன் ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்கள் என சித்தரிக்கிறார். படத்தில் தேசபக்தனாக காட்டப்படும் நபர் தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்றபோது அந்தப் பேராசிரியரும் ஒரு பயங்கரவாதியும் ஒன்றாக, நெருக்கமாக உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதாக காட்டப்படுகிறது, அதாவது, அவர்கள் காதலர்கள் !
இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள், படம் என்ன சொல்ல வருகிறதோ அதையே அதே அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும்! இதே போலத்தான், காஷ்மீரிலான அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் புறந்தள்ளப்படுகிறது! தேர்தலைப் பற்றி பேராசிரியர் பேசும்போது அரசியலை பாதிக்கின்ற சிக்கல்களை தேர்தல் பூதாகரமாக்கிக் காட்டுகிறது என்கிறார். ”நீங்கள் அரசாங்கத்தை வில்லனாக்கினால் தான் அதனுடனான பேச்சு வார்த்தைகளில் நீங்கள் கூடுதல் அதிகாரத்தைப் பெற முடியும்” என பேராசிரியர் சொல்கிறார். இதற்கு நமது தேசபக்தனாக காட்டப்படும் நாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதாகுமே” என பௌயமாகக் கேட்கிறார். அதற்கு, “அதுதான் அரசியல்” என பேராசிரியர் பதில் கூறுகிறார்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற பாணியில் இப்பட வசனங்கள் உள்ளன. ஆனால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அரசு தான் செய்கிற அரச பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையே ‘அரசாங்கத்தை வில்லனாக்க வேண்டும்’ என கேவலப்படுத்தும் வகையில் வசனம் அமைக்கப்படுகிறது. இது சொல்லவருவது என்ன வென்றால், அரசாங்கத்தை வில்லனாகப் பார்க்க வைக்கக் கூடாது என்றால், அரசு பயங்கரவாத செயலைச் செய்யும்போது எந்தத் தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே!

படிக்க :

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

எந்த ஒரு ஜனநாயகத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுத்தால்தான் அது ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால் கதாநாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதே” எனக் கூறும்போது மாற்றுக் கருத்துக் கூறுவதையே மிரட்டிப் பணிய வைப்பது என மக்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதற்கு பதில் கூறும் அக்னிகோத்ரியின் புனைவுப் பேராசிரியர், “அது தான் அரசியல்” என்பதன் மூலம் மாற்றுக் கருத்துக் கூறுவதோ அல்லது அரசாங்கத்தை அதனது செயலுக்கு பொறுப்பேற்கச் சொல்வதோ சொந்த ஆதாயத்துக்குதானே தவிர அது குடிமகனின் உரிமையல்ல என்பதையே இங்கு இயக்குனர் சொல்கிறார்.
அரசாங்கம் தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வது அருவமான கருத்தல்ல. காஷ்மீர பண்டிட்டுகளின் போராட்டத்தை அங்கீகரித்து அதற்கு அரசாங்கம் நீதி வழங்க வேண்டும் என்பதே மையமானது. இந்த 30 ஆண்டுகளில் பாஜக ஆட்சி 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. ஆனால் பண்டிட்டுகள் அகதிகளாக வெளியேற்றப்பட்டதை நிறுவும் வகையில் நீதித் துறை கமிசன் எதுவும் நிறுவப்படவில்லை. அகதிகள் மறுவாழ்வுத் திட்டம் காகிதத்தில் மட்டும் உள்ளதே தவிர நிஜ வாழ்க்கையில் இல்லை. 2020-ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர் மாநில தொழில் துறைக்கு 3000 ஏக்கர் நிலம் வழங்கிய அரசு, தங்களது மறு குடியமர்வுக்கு 300 ஏக்கர் நிலம் கூட வழங்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! ஏற்கனவே தங்களிடம் காஷ்மீர் மாநில நிரந்தரக் குடியுரிமைச் சான்று உள்ளதை யாரும் மறுக்க முடியாது என்ற நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு தனிச் சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியது தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என பண்டிட்டுகள் கூறுகின்றனர்.
பத்ரி ரெய்னா என்ற காஷ்மீர பண்டிட், இந்துத்துவ வலதுசாரியினருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளை மறுகுடியமர்த்தும் நோக்கம் அறவே இல்லை என்று கூறுகையில், செய்தியின் உயிராதாரத்தைப் பிளந்து காட்டுகிறார். பண்டிட்டுகளின் சிக்கல் தொடர்ந்து நீடிக்க வேண்டுமே தவிர, அவர்களை மறுகுடியமர்த்தி சிக்கலைத் தீர்த்து விட்டால் காஷ்மீர இசுலாமியர்களை வலதுசாரி இந்துத்துவ கும்பல் குற்றம் சாட்ட முடியாதல்லவா என மேலும் கூறுகிறார்.
எந்தக் கூச்சமுமின்றி மிக வெளிப்படையாக போராளிகள் நடத்திய கொடூரமான வன்முறைகளை மகிழ்வோடு காட்டிய இந்தப் படத்தில் அரசு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டது பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில தவிர்க்கவியலாத சூழலில் நடந்துவிட்ட துயர சம்பவம் என போகிற போக்கில் சொல்கிறது.
காட்சியாக்கப்படவில்லை! நடிமார்க் (Nadimarg) படுகொலைச் சம்பவம் படத்தின் இறுதிக் காட்சி! போராளிகளால் 24 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்! இயல்பாகவே இங்கு புரிந்து கொள்ள முடியாத புதிர் என்னவென்றால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் என சொல்லப்படும் இப்படத்தில் சோபோர் படுகொலை ஏன் காட்டப்படவில்லை என்பதே! இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இந்த சோபோர் படுகொலை சம்பவத்தில் 43 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வெறுமனே சுடப்பட்டு மட்டும் சாகவில்லை! மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல கடைகளுக்குள் விரட்டப்பட்டு, சுடப்பட்டு, அந்த உடல்களில் பாரஃபின் எண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டதோடு, அந்தக் கடைகளுமே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. (இப்படுகொலையாளிகள் அனைவரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது தனியே எழுதப்பட வேண்டியது)
அரைகுறை உண்மையோடு ஒரு பக்க சார்பான கதையாடலை மட்டும் காட்சிப் படுத்திய இந்த திரைப்படக் கதையாடலை இதுவே முழுக் கதையாடல் என்கிறது படம். இதில் முரண் நகை என்னவென்றால், ஒரு கட்டத்தில் அனுபம் கேர் (படத்தில் முக்கிய பாத்திரம்) “பொய்ச் செய்திகளைக் காட்டுவது உண்மையை மறைப்பது போல் மோசமானதல்ல” என உளரிக் கொட்டியதுதான்! (இதுவே படத்தின் யோக்கியதையைத் தோலுரிக்கவில்லையா?).
இதையெல்லாம் சொன்னாலும் நமக்கு விருப்பமில்லாத, இன்னும் அபாயகரமான ஒரு உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நடக்கும் உண்மை என்னவென்று தெரிந்தவர்களுக்கு இப்படம் மிக மோசமாக, வெளிப்படையாகவே ஒரு சார்பானது எனப் புரியும்தான். வன்முறையை மற்றும் எளிமையான பிரச்சாரத்தை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது பற்றி அக்னிகோத்ரி மிகத் துள்ளியமாக கணித்துள்ளார். பிரச்சாரம் என்பது ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு கலை. இதில் அக்னிகோத்ரி ஆற்றல் மிக்க கலைஞன்.
அக்னிகோத்ரியின் ஒளிப்பதிவு, காட்சிக் குறியீடுகளை ஒரு தார்மீக சாதனமாகப் பயன்படுத்துகிறது – வீட்டின் தரைகள், சாலைகள், மண் தரையில் இரத்தம் கசியும் நீண்ட, நீடித்த காட்சிகள் உள்ளன. ஒரு போராளியின் முகத்தில் அவரது செயல்களைப் போல கேமரா தங்கவில்லை. முகத்தில் துப்பாக்கியால் சுடப்படுவது மீண்டும் மீண்டும் வந்தாலும், ஒரு கட்டத்தில், அது சொல்ல வரும் செய்தியின் ஆற்றலை இழந்து விடுகின்றன. இது எதிர்பார்த்ததே! இதற்கு முரண்பாடாக பய பீதியூட்டப்பட்ட மக்களின் முகங்களில் கேமரா மிக நீண்ட நேரம் தங்குவது, எதிர்பார்த்த உணர்வைத் தூண்டுகிறது.
அனுபம் கேரின் பாத்திரம் கனமானதாக வடிவமைக்கப்பட்டாலும் பெரும்பாலும் கேலிக்குறியதான உணர்வே தோன்றுகிறது. பேராசிரியராக திறமையாக நடித்துள்ள பல்லவி ஜோஷியை ஒரு கனவுக் காட்சியில் சிவப்பு நிறத்தில் படம் பிடிக்கும் கேமரா அவரை மயக்கும் மோகினியாகவும் பேயாகவும் காட்டுகிறது.
24 பொதுமக்கள் கொல்லப்படும் கடைசிக் காட்சியை, ஒவ்வொரு தனி நபராக சுடப்பட்டு சாக்கடையில் விழுவதை ஒவ்வொன்றாகப் பார்க்க வைக்கும் அக்னிகோத்ரி, இறந்த உடல்களின் உச்சியில் சிவா என்ற குழந்தை இறந்து கிடப்பதைக் காட்டுகிறார். கேமரா குழந்தையின் முகத்தில் அப்படியே நிற்கிறது. ஒரு அசாத்தியமான காட்சிக் கதையை உருவாக்குகிறது – அது கேட்கிறது, ஒரு குழந்தை மிகவும் சர்வ சாதாரணமாக கொல்லப்பட்டது பற்றி யார் எதையும் கேள்வி கேட்கத் துணிவார்கள்?

படிக்க :

பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !

‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்

நாஜி காலகட்டத்தின்போது, அவர்களின் பிரச்சார அடிப்படையான ஒஸ்ஜெமைன்ஸ்சாஃப்ட் – அதாவது தேசிய அளவில் எல்லோரையும் ஒன்றாக்குவது – என்பதன் மீதான விமர்சனமே, அது சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரையும் ஒன்றாக்குகிறது என்பதே! இந்த திரைப்படத்தில் காஷ்மீர பண்டிட்டை ஒவ்வொரு இந்தியனுக்குமான குறியீடாக பயன்படுத்துகிறார் அக்னிகோத்ரி. இசுலாமியர்களை மற்றவர்கள் என்பதாக ஒன்றாக்கி, அவர்களால் இந்துவுக்கு ஆபத்து எனக் காட்டி, இந்துத்துவ மேலாதிக்கத்தை நிறுவும் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.
ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் உள்ள தீவிரவாதிகள் கும்பல், அக்கிரமிப்பும் வன்கொடுமையும் மிக்க இசுலாமியர்களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்து சமூகம் எப்படி ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது. இந்த நச்சுத் தன்மை கொண்ட கற்பனைக் கருத்துக்களை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.
அடிப்படையே இல்லாத ‘லவ் ஜிகாத்’ என்பது பற்றி பய பீதியூட்டி அதற்கு எதிரான சட்டத்தை இயற்றியது போல, பாதுகாப்பற்ற, பலவீனமான இந்துப் பெண் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என அக்னிகோத்ரி எடுத்துக் காட்டுகிறார். வலது சாரி ஊடகங்களால் தவறான கருத்துக்கள் மலிந்து கிடக்கையில், மிக சிக்கலான உண்மைகளை அக்னிகோத்ரி மிக கவனமாக சிதைத்து அழிக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்கு முன் எழுதும்போது, அடௌஸ் ஹக்ஸ்லி சொல்கிறர், “மிக பிரபலமான, வெற்றிகரமான மக்கள் திரள் இயக்கங்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் பிரச்சாரமானது ஆற்றலையும் திசைவழியையும் தரலாம். ஆனால் அப்படிப்பட்ட இயக்கங்களை பிரச்சாரத்தால் மட்டும் உருவாக்கிவிட முடியாது. ஏற்கனவே உள்ள நீர்நிலையிலிருந்து கால்வாய் மூலம் நீரைக் கொண்டு செல்பவன் தான் பிரச்சாரகன். நீர் இல்லாத வறண்ட நிலத்தில் அவன் தோண்டுவது வீண் வேலை”.
வட இந்தியப் பகுதியிலுள்ள திரையரங்குகளில் படத்தினை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொள்ளும் இந்து ஆண்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்வோம் என கூச்சலிடும், “முல்லெ காட்டெ ஜாயங்கே, ராம் ராம் சில்லயெங்கே” (“Mulle kaate jayenge, Ram Ram chillayenge,”) என கத்துகிறார்கள். அக்னிகோத்ரி வெறுப்பு என்னும் மிகப் பெரும் கால்வாய் வெட்டியுள்ளார் எனப் பார்க்கிறோம். இப்போது நமக்குத் தொந்தரவான கேள்வி என்னவென்றால், இந்த வெறுப்பு எவ்வளவு ஆழமாக ஊடுறுவப் போகிறது என்பதே!
(முற்றும்…)

கட்டுரையாளர் : நவோமி பார்டன்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

ந்திய அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைக்கெதிரான செய்திகளை தணிக்கை செய்வது; இணையத்தை மாதக்கணக்கில் முடக்கிவைப்பது; முற்போக்கு பத்திரிகையாளர்கள் மீது கடுமையான பிரிவில் வழக்குப் பதிவுசெய்வது; கைது செய்து சிறை – சித்திரவதைக்குட்படுத்துவது – என காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை இறுக நெறித்துக் கொண்டிருந்த மோடி அரசு, தனது அடியாட்படையை வைத்துக் கொண்டு தற்போது அடுத்தகட்ட தாக்குதலுக்குச் சென்றிருக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டுவரும், சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய பத்திரிகையாளர்கள் அமைப்பான காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை (Kashmir Press Club) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அடிவருடி பத்திரிகையாளர் குழுவொன்று நரித்தனத்தோடு “ஆட்சிக் கவிழ்ப்பு” பாணியில் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
000
ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையடுத்து, அம்மாநிலத்திலுள்ள அனைத்து சங்கங்களின் பதிவையும் இரத்து செய்த காஷ்மீர் நிர்வாகம், சொசைட்டி பதிவு சட்டம் 1860-ன் கீழ் மீண்டும் பதிவை புதுப்பிக்குமாறு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் மே முதல் வாரமே மறுபதிவிற்காக விண்ணப்பித்தது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். இதற்கிடையில், ஜூலை 14-ம் தேதியோடு தனது நிர்வாகக் குழுவிற்கான பொறுப்புக் காலம் முடிவடைந்துவிட்டதால், தேர்தலின் மூலம் புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
ஆனால், பதிவுரிமை வழங்கப்பட்டாத நிலையில், தேர்தல் நடத்துவது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதன்பிறகு நீண்ட நாட்கள் கழிந்த பின்னர்தான் டிசம்பர் 29-ம் தேதியன்று (2021) சங்கப் பதிவாளரிடமிருந்து தனது பதிவுரிமையைப் பெற்றது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். அத்தோடு சென்ற ஜனவரி 14-ம் தேதியன்று (2022) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேதியையும் (பிப்ரவரி 15) அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்திலேயே, மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பற்றி குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) அளிக்க வேண்டிய சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கை வரும்வரை மன்றத்தின் பதிவுரிமையை முடக்குவதாக தெரிவித்தது பதிவாளர் அலுவலகம்.
பதிவுரிமை கொடுத்துவிட்டு தற்போது இப்படி திடீரென முடக்குவது குறித்து, அவுட்லுக் பத்திரிகையிடம் பேசிய சங்கப் பதிவாளர் மெஹ்மூத் அஹ்மத் ஷா “காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கத்தின் மறுபதிவை நிறுத்துமாறு துணை ஆணையரிடமிருந்து தகவல் கிடைத்தது. அதன்படிதான் நான் செயல்பட்டேன்” என கூறினார்.
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் மட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு சிறப்புரிமை இரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் பார் கவுன்சில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகள் என பல்வேறு சிவில் அமைப்புகளுக்கு பதிவுரிமை வழங்காமல் இழுத்தடித்து வருவதும் அதற்கெல்லாம் ஒரு காரணம் சொல்லுவதும் தொடர்ந்து வருகிறது. பெயரளவிற்கான ஜனநாயக நிறுவனங்களும் ஒழித்துக் கட்டப்பட்டு முற்றுமுழுதாக இராணுவ சர்வாதிகாரத்தின்கீழ் காஷ்மீர் உள்ளது.
000
இந்நிலையில்தான், ஜனவரி 15-ம் நாள் காலை ஆயுதந்தாங்கிய போலீஸ்காரர்கள், துணை இராணுவப் படையினரின் உதவியுடன் ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு பத்திரிகையாளர் குழு அலுவலக நிர்வாகிகளை மிரட்டியது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள், அவர்களை யார் என கேட்டதற்கு மன்றத்தின் தேர்தலை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘இடைக்கால கமிட்டி’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
‘இடைக்கால கமிட்டி’ என இவர்கள் தங்களுக்குத் தாங்களே நாமகரணம் சூட்டிக் கொண்டார்களே ஒழிய, உண்மையில் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் இப்படியொரு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டு, போலீசு – துணை இராணுவப் படையின் உதவியோடு மன்றத்தின் அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டது சலீம் பண்டிட் என்பவரின் தலைமையில் வந்த ஒரு சிறுகும்பல்.
பின்னர் மன்ற அலுவலகத்தில் சலீம் பண்டிட் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பிறகு தன்னை தானே சங்கத்தின் “இடைக்காலத் தலைவர்” என அறிவித்துக் கொண்ட சலீம், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சங்க அலுவலகத்தை பலவந்தமாக நாங்கள் கைப்பற்றியதாக கருத வேண்டாம். நாங்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்கள். இடைக்காலத் தலைவராக நானும், பொதுச் செயலாளராக டெக்கான் ஹெரால்டின் (Deccan Herald) பணியக தலைவர் சுல்பிகர் மஜித்-உம், பொருளாளராக உள்ளூர் தினசரி நாளிதழ் கத்யாலின் (Gadyal) ஆசிரியர் அர்ஷித் ரசூல்-உம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்கள் தலைமையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்” என அறிவித்தார்.
மேலும், “காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக யார் இருக்க முடியும், அவர்கள் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க தகுதியானவர்களா, சங்கத்தில் உறுப்பினராக இருக்க என்ன தகுதிகள் இருக்க வேண்டும் போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க பல்வேறு குழுக்களை அமைப்போம்” என்றும் சொல்லி பல புதிய விதிகளையும் அறிவித்தது அக்கும்பல்.
யார் இந்த சலீம் பண்டிட்? ஜம்மு காஷ்மீர் சிறப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது, காஷ்மீரின் தன்னுரிமைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மீது மோடி அரசின் அடக்குமுறை மூர்க்கத்தனமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலத்தில், செல்லப் பிள்ளையாக அரவணைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுள் ஒருவர்தான் இந்த சலீம் பண்டிட்.
பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஒருவரை பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பாவுடன் (Lashkar-e-Taiba) தொடர்புப்படுத்தி, அவரது பத்திரிகையில் ஜிஹாதி பத்திரிகையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவதூறு செய்த சங்கிதான் இந்த சலீம் பண்டிட். ஊடக சகோதரத்துவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியதாக இந்த சலீம் பண்டிட்டை 2019-ம் ஆண்டே சங்க உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கிவிட்டது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
000
சிறப்புச் சட்ட ரத்துக்கு பின்பு, பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் மோடி அரசு தொடுத்துவரும் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் எழுப்பியது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
மேலும், இம்மன்றம் நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் (Freelance Journalists) மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கான புகலிடமாக இருப்பதோடு, இளம் பத்திரிகையாளர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் சந்தித்து அரசியல் விவாதத்தில் ஈடுபடும் இடமாகவும் விளங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் குழுக்களின் கூட்டங்களுக்கு இந்த மன்றத்தின் அரங்கம் பயன்பட்டது. எனவேதான், இம்மன்றத்தை தனது அல்லக்கை சலீம் பண்டிட் போன்றவர்களை வைத்து கைப்பற்றிக் கொண்டுவிட்டது சங்க பரிவாரக் கும்பல்.
ஆட்சிக் கவிழ்ப்பை ஒத்த இந்த சதியானது “ஊடக ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். இதுபோன்ற சம்பவங்களை தடுக்காமல் அனுமதித்தால், அது எதிர்காலத்தில் ஊடக ஜனநாயகத்துக்கே பெரும் ஆபத்து” என எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild Of India) என்ற பிரபல பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் மும்பை பத்திரிகையாளர் மன்றம்  (Mumbai Press Club), டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் (Delhi Union Of Journalist) உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன.
000
ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தின் ஆதரவுடன் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உட்பட காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவித்திருந்த நாளில், சில பத்திரிகையாளர்கள் மன்றத்துக்குள் நுழைந்து மன்ற உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக வைத்து மன்றத்தை வலுக் கட்டாயமாகக் கைப்பற்றினர். இந்த செயல் நடைபெறுவதற்கு முன்பே அங்கு ஏராளமான போலீசும், துணை இராணுவத்தினரும் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்” என பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
000
பாசிஸ்டுகள் ஒருபோதும் விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக் கொள்வதில்லை. காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என மோடி அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
அரசை விமர்சித்ததாக, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் (2021 விவரத்தின்படி) தேசப் பாதுகாப்புச் சட்டம், ஊஃபா போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களின் கீழ் 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 20 சதவிகிதம் வழக்குகள் 2020-ம் ஆண்டில் மட்டும் போடப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை பா.ஜ.க. ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்பது ஏதோ மக்களின் தனித்த ஒரு பகுதியினர் மேல் செலுத்தப்படுகின்ற அடக்குமுறை அல்ல. அது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.
காவி – கார்ப்பரேட் பாசிச இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பெரும்பாலான மைய ஊடகங்கள் பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாறிவிட்டன. அப்படியிருக்கையில், பாசிஸ்டுகளுக்கு விலைபோகாத, அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாத ஜனநாயக உணர்வுள்ள பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர். அவர்களுக்காக குரலெழுப்ப வேண்டியது ஜனநாயக சிந்தனை கொண்ட நம் அனைவரின் கடமையாகும்.

ஆதிரை

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ காஷ்மீரி பண்டிட்களை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகிறது,
முஸ்லிம்களை வெறுக்கிறது!
“ஒரு காட்சி கூட புனைவு அல்ல. எல்லாம் உண்மையானது. எந்த வர்ணனையும் இல்லை என்ற எளிய காரணத்தால் இங்கு எந்த முனைப்பான வர்ணனையும் இல்லை. இது வரலாறு – தூய வரலாறு.”
-லீனி ரெய்ஃபென்ஸ்டால் டிரையம்ப் ஆஃப் தி வில் படம் பற்றி.
“காஷ்மீரின் பண்டிட்டுகள் தங்கள் சேரி முகாம்களில் அழுகிப்போயிருந்தார்கள், இராணுவமும் விடுதலைக்கான கிளர்ச்சியாளரும் இரத்தம் தோய்ந்த மற்றும் நொறுங்கிப்போன பள்ளத்தாக்கில் போரிட்டபோது அழுகிப்போவதற்கும், திரும்பி வருவதைக் கனவு கண்டு இறப்பதற்கும், திரும்பி வர வேண்டும் என்ற கனவு கண்டபோது இறப்பதற்கும், திரும்பி வர வேண்டும் என்ற கனவு இறந்த பிறகு இறப்பதற்கும், அதனால் அவர்கள் ஏன் சாகக் கூட முடியவில்லை, அது ஏன் அது ஏன் அது ஏன் அது ஏன் அது ஏன்.”
– சல்மான் ருஷ்டி ஷாலிமர் கோமாளி நூலில்.
விவேக் அக்னிஹோத்ரி மற்றும் லெனி ரெய்ஃபென்ஸ்டால் இருவரும் பல பத்தாண்டுகள் மற்றும் விமர்சன பாராட்டுக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரச்சாரகரின் மிகவும் நயவஞ்சகமான உத்தியில் அவர்கள் பொதுவான தளத்தைக் காண்கிறார்கள் – இது உண்மையின் உள்ளடக்கத்தை மறைக்கும் விதமாக மிக கவனமாக அடுக்கப்பட்ட ஒரு பொய்.
ரெய்ஃபென்ஸ்டாலின் உண்மை என்னவென்றால், அவரது மிகவும் இழிபுகழ் பெற்ற திரைப்படம் நேரலையில் படமாக்கப்பட்டது. இதனால் நாஜி ஆட்சிக்கான பிரச்சாரமாக இருக்க முடியாது, ஆனால் யதார்த்தத்தில் ஒரு பத்திரிகை ஆவணமாக மட்டுமே இருந்தது.
அந்த உண்மையானது கேமராவுக்கு மட்டும் குறிப்பாக கட்டியமைக்கப்பட்ட பொய்யாகும் என்கிறார் சூசன் சண்டாக். சில தலைவர்களின் காட்சிகள் சரிவராதபோது, ஹிட்லரே நேரடியாக உத்தரவிட்டு மீண்டும் அக்காட்சிகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதாக சூசன் குறிப்பிடுகிறார்.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
அக்னிகோத்ரியின் படத்தில் உள்ள உண்மை என்பது, சிறுபான்மையான காஷ்மீர் பண்டிட்டுகள் மத்தியில் எல்லையற்ற வன்முறையைத் தூண்டி, பயத்தை போராளிகள் உருவாக்கினர். இதனால் பண்டிட்டுகள் பெருமளவு காஷ்மீரைவிட்டு வெளியேறினர் என்பது. இதில் பொய் என்பது, எல்லா இசுலாமியர்களையும் இதற்கு கூட்டுப் பொறுப்பாக்கி தண்டிக்கப்பட வேண்டும் என்பது. மேலும் இசுலாமியர் மீது எவ்வளவு வன்முறை நிகழ்ந்தாலும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான் எனப்படும் பொய்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் உள்ள தரவுகளிலான உண்மையற்ற தன்மை பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. அப்படம் புறக்கணித்துள்ள சங்கடம் தருகின்ற உண்மைகளைப் பற்றியும் நிறைய எழுதப்பட்டுவிட்டது. உதாரணமாக அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசாங்கம் பாஜக ஆதரவில்தான் இருந்தது. காஷ்மீர் மாநிலமே ஒன்றிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்தது.
அதிகாரப் பூர்வமான மற்றும் அதிகாரப் பூர்வமற்ற ஆவணங்கள் அனைத்தும் காஷ்மீர் பண்டிட்டுகள் மத்தியில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு, நூற்றுக்கணக்கில் தான், படத்தில் கூறப்படுவதுபோல ஆயிரக்கணக்கில் இல்லை. அதே சமயம், அதன் முக்கிய பாத்திரங்கள் போராளித் தலைவர்களான பிட்டா காரடே மற்றும் யாஷின் மாலிக்கை சித்தரிக்கின்றன.
காஷ்மீர் பண்டிட் பெண்ணை நிர்வாணமாக்கி, கொடூரமாக கொன்று கூறு போட்ட சம்பவம் உண்மையில் சர்லா பாட் என்ற பண்டிட் பெண் கும்பல் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதைக் குறிக்கும் உண்மை நிகழ்வைக் குறிப்பதுவே.
“இந்து ஆண்கள் இன்றி, இந்துப் பெண்களுடன்” என்ற சுதந்திர காஷ்மீரின் முழக்கங்கள் பற்றி அன்று காஷ்மீரில் இருந்த சிலர் தமது துயரங்களைப் பகிர்ந்து கொண்டபோது கூறியவைதான், ஆனால் அகதிகளாக வெளியேறிய உடனே கூறப்பட்டவையல்ல. சில ஆண்டுகள் கடந்தபின் சேர்த்துக் கொண்டவை. ஆங்குர் தத்தா-வின் ‘நிச்சயமற்ற நிலத்தின் மீது: புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளும் ஜம்மு முகாம்களும்’ என்ற நூல் பற்றிய தனது மதிப்புரையில் சஞ்சை காக் என்பவர் குறிப்பிடுகிறார்:
“ஒரு குறிப்பாக பாலியல் அச்சுறுத்தல் கிட்டத்தட்ட அனைத்து சமகால பண்டிட் கதையாடல்களிலும் தவறாத நிலைத்தன்மையுடன் மீண்டும் தோன்றுகிறது என தத்தா குறிப்பிடுகிறார். மேலும் இது 1990-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களைப் பற்றிய பண்டிட்டுகளின் நினைவுக் குறிப்புகளில் கிட்டத்தட்ட மையமாக குறிப்பிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். “பதவ் பகீர், பட்னேவ் சான்” என்ற இந்த முழக்கத்தின் பொருள் ஏறக்குறைய “பண்டிட் ஆண்கள் இல்லாமல், [ஆனால்] அவர்களின் பெண்களுடன்” காஷ்மீருக்கு விடுதலையை விரும்புகிறோம் என்பதாகும்.
பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இப்படிப்பட்ட மிகவும் புண்படுத்தும் முழக்கங்கள், அம்மக்களைப் பற்றி எப்படிப்பட்ட கருத்தை எற்படுத்தும்? ஆனால் ஆவணக் காப்பகத்தில் பழைய செய்தித்தாள்களைப் பார்க்கும் தத்தா, இந்த வெறுக்கத்தக்க முழக்கம் பற்றிய செய்தி அறிக்கைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிப்படுவதைக் காண்கிறார். “பண்டிட்டுகள் நினைவில் வைத்திருக்கும் இந்த முழக்கங்கள் அந்த நேரத்தில் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவங்கள் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் பதிவு செய்யப்பட்டதற்கும், அது பற்றி பண்டிட்டுகள் விவரிப்பதற்கும் இடையில் ஒரு நீண்ட கால இடைவெளி உள்ளது”.
அக்காலகட்டத்தின் செய்தித்தாள்களில் “கும்பல் வன்முறை”, போலீஸ் நடவடிக்கையினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பெருமளவிலான கைதுகள் ஆகியவை பற்றிய செய்திகளிலேயே கவனம் செலுத்துகின்றன.” பாலியல் அச்சுறுத்தல்கள் பற்றி செய்திகள் ஒன்றுகூட இல்லை.
இந்த திரைப்படத்தில் உள்ள உண்மைத் தன்மையைப் பற்றி, அது பற்றிய நினைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பண்டிட்டுகளுக்கு விட்டு விடுவதே நல்லது. காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை அறிவித்த கொடூரங்களின் உண்மையை வெளிப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி தவறானது; இந்தப் படத்தின் மீதான விமர்சனத்திற்கு இது தேவையுமற்றது.
தனது படத்தில், அக்னிஹோத்ரி காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகளின் தோளில் இருந்து அரசாங்கத்தின் துப்பாக்கியை சுடுகிறார். ஆனால் வழக்கமான பாகிஸ்தானியர்கள் மற்றும் வன்முறை பயங்கரவாதிகளுக்கு அப்பால், ஊடகங்கள், ஜே.என்.யூ போன்ற பல்கலைக்கழகங்களில் இடதுசாரி பேராசிரியர்கள் மற்றும் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்க்கும் எவரும் அவரது தாக்குதல் இலக்குகளாகும். நிச்சயமாக, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் அனைத்திலும் அவரது உண்மையான இலக்கு முஸ்லீம்கள் மட்டுமே.
பரந்த கோணங்களில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் முஸ்லீம்கள் சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுமிராண்டிகளாக அல்லது காட்டுமிராண்டித்தனமான காரணத்திற்காக அடிமைகளாகக் காட்டப்படுகிறார்கள்.
முக்கிய எதிரியான பிட்டா, மனசாட்சியின் மிக மோசமான கோடுகளால் வரையப்பட்டு, அவரது அட்டூழியங்களை அதிக அளவில் முரண்பாடு கொண்டதாகக் காட்டுகிறார். அவர் தனது பழைய ஆசிரியரான புஷ்கரின் மருமகளை ‘திருமணம்’ செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார் – இது கண்ணியத்தின் ஒரு அறிகுறியாகும்.
அதற்கு பதிலாக, அவர் அப்பெண்ணை தனது இறந்த கணவரின் இரத்தத்துடன் பிசையப்பட்டுள்ள சோற்றை சாப்பிட வைக்கிறார் – காட்டுமிராண்டித்தனமானது.
பின்னர், சமூகத்தால் நேசிக்கப்பட்ட ஒரு கவிஞருக்கு அவர் அடைக்கலம் தருகிறார் – கண்ணியமானது!
அடுத்ததாக, அந்தக் கவிஞரின் உடல் மிருகத்தனமாக தாக்கப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்துபோனதாக காட்டப்படுகிறது – காட்டுமிராண்டித்தனமானது.
இவை சொல்லும் செய்தி – கருணையில் கூட, முதுகில் கத்தி பாய்வதை எதிர்பார்க்கவும்.
இந்தக் கதையாடல் கட்டமைப்பு ஒரு பயங்கரவாதியின் கொடூரத்தை சித்தரிப்பதற்காக என வாதிட்டாலும், அது ஏறக்குறைய ஒவ்வொரு இசுலாமியனுடைய நடத்தையை சித்தரிப்பதாகவே சென்று சேர்கிறது.
ஒரு காட்சியில் சிவன் என்ற ஒரு குழந்தை கதாபாத்திரம் முகமற்ற குழந்தைகளுடன் ஒரு பள்ளத்தில் விளையாடுவதாக காட்டப்படுகிறது. அந்த முகமற்ற குழந்தைகள் தங்களுக்கு ஒரு மசூதி வேண்டும் என கோரிக்கை வைக்க, அந்த கோரிக்கையை மற்றவர்களோடு சேர்ந்து சிவனும் வைக்க வேண்டும் என அவரது தலையில் அடித்துக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
முக்கியமாக, காஷ்மீர பண்டிட் குடும்பத்தினரின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதாக காட்டப்படும் ஒரு முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர், அவர்கள் சில நாட்களுக்கு வேறு இடத்தில் தங்குவதே பாதுகாப்பு என்று அவர்களிடம் கூறுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் போராளிகளிடம் பண்டிட் குடும்பத்தினர் மறைந்திருக்கும் சரியான இருப்பிடத்தைக் கூறுவதாக காட்டப்படுகிறது.
சாரதா என்ற காஷ்மீர பண்டிட் பெண்ணின் பாதுகாப்பு பற்றி ஒரு வயதான, தோலெல்லாம் சுருங்கிப் போன ‘ஆசிரியர்’ அக்கறைப் படுவதாக ஒரு காட்சி. உடனே அடுத்த காட்சியில் அந்த அக்கறைக்காக தனது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறி மிக வக்கிரமாகப் பார்த்து அனுகுகிறார். அவரது வயது, அருவருக்கத்தக்க தோற்றம், கறை படிந்த பற்கள் எல்லாமே வெறுத்தொதுக்கும்படி உள்ளது. அப்பெண்ணை வல்லுறவுக்கு உள்ளாக்கி கொடூரமாக சிதைப்பதற்கு முன் அப்பெண் மீது காறித் துப்புகிறார். – காட்டுமிராண்டித்தனம்!
கவரிங் இஸ்லாம் (Covering Islam) என்ற நூலில் எட்வர்ட் சேத் கூறுகிறார், “இஸ்லாமும்  அடிப்படை வாதமும் ஒன்று என இரண்டையும் வலிந்து ஒன்றாக உருவாக்குவதால், சாதாரண மக்கள் இஸ்லாமும் அடிப்படை வாதமும் ஒன்று என்றுதான் பார்ப்பார்கள்.” இப்படி மூன்று தலைமுறை ’சாதாரண’ இசுலாமியரைப் பார்த்தால் இந்தப் பார்வை உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், அக்னிகோத்ரி அதற்கும் மேலே செல்கிறார். இங்கு அடிப்படைவாதம் என்றாலே அது வன்முறைதான் என ஒன்றாக்கப்பட்டுள்ளது. இதனால் இளமையிலிருந்தே இசுலாமியர் என்றாலே எவ்விதத்திலும் நம்பக் கூடாதவர்கள், கொடூரமானவர்கள் என்ற பார்வை உருவாக்கப்படுகிறது.
இதைச் செய்வதற்கு ‘முற்போக்குவாதம்’ அல்லது ‘தீவிரவாதம்’ என வரையறுத்து, அது எப்படி தவறு என புரிய வைக்க சிரமப்பட்டு செய்ய வேண்டியதெல்லாம் கிடையாது என சேத் மேலும் கூறிச் செல்கிறார். “உதாரணத்திற்கு எல்லா இசுலாமியர்களிலும் 5% பேர் அல்லது 10% பேர் அல்லது 50% பேர் அடிப்படைவாதிகள் என்று சொன்னாலே போதும்.” தமது காஷ்மீர பண்டிட் நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களைப் பாதுகாக்க தங்களையே ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொண்ட இசுலாமியர்கள் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான காஷ்மீர இசுலாமியர்கள் தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்ற செய்தியையே அக்னிகோத்ரி முற்றாக துடைத்தழித்து விட்டார். இதைச் செய்யும் போக்கிலே சிக்கலான, கடினமான, முரணான விசயங்களை தனது நோக்கத்திற்கு மிக கேடாகப் பயன்படுத்திக் கொண்டார்.
படிக்க :
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
அக்னிகோத்ரி போராளி குழுக்களின் பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்தையும் ஒன்றாக்கி விட்டார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜேஎன்யூ சிக்கல் பற்றிய காட்சி. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக நிகழ்வு ஒன்றில் ‘ஆசாதி’ முழக்கம் எழுப்பப்பட்டது. அந்தக் காட்சி அப்படியே மிக இயல்பாக எந்த நெருடலுமின்றி, யார் போடுவது என்றே தெரியாமல் “இந்திய நாடு துண்டு துண்டாகும்” என்ற முழக்கமாக மாற்றப்படுகிறது. இது பாஜக ஆதரவு ஊடகங்கள் மாணவர்களை தேசத் துரோகிகளாக்கி, ஒடுக்குவதற்காக புனைந்த மோசடிச் செய்தி. இதனடிப்படையில் அந்த மாணவர்கள் மீது 2016-ல் போட்ட தேசத் துரோக வழக்கு இன்று வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இங்கு உண்மைபோல ஒன்று உருவாக்கப்பட்டு அதன்மீது பொய் கவனமாக கட்டமைக்கப்படுகிறது.
படத்தில், ஒரு பேராசிரியரின் உத்தரவில், அவரது கண்காணிப்பில் எல்லா மாணவர்களும் இந்த முழக்கத்தைப் போடுவதுபோல காட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட மூன்றாம் ஆண்டு நிகழ்வையொட்டி ஒரு கவியரங்கம் நடத்தப்பட்டது. அந்த கவியரங்கத்தை சீர்குழைக்க வந்த ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் உருவாக்கியதுதான் இந்த தேசத் துரோக நாடகமும், அந்த முழக்கமும். ஆனால் படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.
ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிரான ’ஆதாரங்கள்’ என இவர்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் எல்லாம் மோசடியாக உல்ட்டா செய்யப்பட்டவை என அம்பலமானவை. ஜீ செய்தி மற்றும் ரிபப்ளிக் டிவி போன்ற வலது சாரி ஊடகங்கள் ‘துக்கடா துக்கடா கேங்’ என அவதூறு செய்திகளையே பிரபலமாக்கியுள்ளன. (தற்செயலாக குறிப்பான இந்தப் படம் கூட ஜீ ஸ்டுடியோஸ்-ன் தயாரிப்பே.) இந்த ’கேங்’ என்ற வார்த்தை, யார் ஒருவர் அரசின் கட்டளைகளை எதிர்க்கிறார்களோ அவர்களை இழிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. இப்படி அரசிற்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் அனைவரையும் இலக்கு வைத்துத் தாக்குகிறார் அக்னிகோத்ரி.
(தொடரும்…)


கட்டுரையாளர் : நவோமி பார்டன்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

Kashmir: Saffronisation obliterating constitutional freedom

The RSS-BJP led government treacherously took over the KPC (Kashmir Press Club) which had 300 members, after collapsing the Jammu & Kashmir government.
After revoking the special status (Article 370) of Jammu and Kashmir, in April the government asked the registered societies to re-register under the Registration Act 1860 with the Registrar of Societies and Firms in Kashmir, following which the KPC applied for re-registration in the first week of May. On July 14th the tenure for KPC’s governing body(management and executive committee ) ended, calling to elect a new governing body. The election of the govern body was postponed due re-registration, on 29th December 2021 the KPC received it registration, and on 14th January announced the date for governing body elections as February 15th.
Read :
War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
New Democracy – March 2022 | Magazine
In few hours after the announcement of the date for the KPC governing body elections, the Registrar suspended the registration for KPC, quoting the reports from CID police J&K on the KPC members was pending, and that registration remains suspended until the reports arrive.
Speaking to the Outlook the Registrar Mehmood Ahmed Shah stated he suspended the registration for KPC as per directions from the Assistant Commissioner. After which on January 15th in the presence of police, paramilitary forces, a select group of journalists who were in no way connected to KPC under the leadership of Saleem pandit took over the KPC premises, announced themselves as the self appointed “interim body”. Later a meeting was convened under the leadership of Saleem Pandit after which he proclaimed himself as the interim chief of KPC.
Speaking to reporters Saleem Pandit stated: the KPC premises were not taken by force, that he was selected as the interim chief, Sulfikur Majit (Deccan Herald) the general secretary, the local daily Gadyal’s author Harshith Ragul treasurer, and under their leadership a fair election would be conducted. Further he also stated a committee would be formed to design a proforma for eligibility as members in the KPC.
The perplexing question is who is this Saleem Pandit? The Modi government had oppressed the reporters of J&K who voiced against revoking article 370 in J&K, amongst a select few reporters who were pro Modi government Saleem Pandit was their favorite. The author of a renowned english newspaper was maligned, on the basis of having contacts with Lashkar-e-Taiba (LeT) and employing Jihadi reporters, the reporter responsible for this bias was Saleem Pandit, he was stigma and expelled from the KPC membership in 2019.
After the revoking article 370, the Modi government throttled a democratic media body, since the KPC showed dissent towards the Modi government. The KPC was not just media body, it  was a place where reporters, journalists, freelance journalists, famed photographers, senior journalists, young budding journalists debated politics, and organized political gatherings. The sole reason this fascist government wanted the KPC torn down.
A democratic media was being strangled in addition to the treacherous collapse of a government. If such incidences are allowed to proliferate, it would be a serious threat to a democratic media. The Editors Guild of India, Mumbai Press Club and Delhi Union of Journalists condemned this act of the Modi government stating that: the sanctity of the club was violated and this was a manifestation to smother press freedom.
The former managing, executive body, members of the KPC and other press bodies unanimously condemned the J&K administration for treacherously taking over the KPC, their statement follows:
“It was a day in the COVID lockdown, there was an unusually large presence of visitors at the club, who made the KPC members hostages and forcefully took over the club, before all this happened there were policemen in large numbers enforcing SOPs and paramilitary forces barged into the club.”
The fascists never accept criticism and hate progressive ideologies, not only in Kashmir in the entirety of the country progressive journalists, reporters, writer’s, human rights activists are being oppressed.
In last ten years (as per 2021 statistics) more than 150 journalists have been charged with sedition and arrested under the UAPA, 20% of these charges have come in the year 2022, mostly from the states governed by BJP.
Violence against journalists isn’t violence against one sect; it is violence against democracy, the current scenario is the dark era of saffronised fascist corporate politics, where a majority of journalists have become puppets, the only voice being throttled are that of the democratic journalists, it is our ardent duty to raise our voices for our brethren.

Aathirai

விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி

பென்னாகரம் – நாகதாசம் பட்டி கிராமத்தின் வழியாக கடந்த 2019-ம் ஆண்டு பவர்கிரிட் நிறுவனம் மின் கோபுரம் அமைத்து உயர் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக, விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் சிறு, குறு விவசாயிகளின் நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
நாகதாசம் பட்டி கிராமத்தில் சுமார் 12 விவசாயிகள் நிலங்களில் வழியாக பவர்கிரிட் நிறுவனம் மின்சாரத்தை கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் தொடக்கம் முதலே தங்கள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முறையாக இழப்பீட்டுத் தொகையை கொடுத்து விடுகிறோம் என்று பவர் கிரிட் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் உறுதியளித்து விளைநிலங்களை கையகப்படுத்தினர். ஆனால், இன்று வரை இழப்பீட்டு தொகையை முறையாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு பிறகு, இதனையே சாக்காக வைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்தது மாவட்ட நிர்வாகம்; தற்போது இயல்புநிலை திரும்பியபோதும் விவசாயிகளுக்கு இழப்பீடு தர முன்வரவில்லை.

படிக்க :

மார்ச் 8 : மதுரை, தருமபுரி உழைக்கும் மகளிர் தினக் கூட்டம் !

தருமபுரி : நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

குறிப்பாக மரங்கள், வீடுகள், கிணறு, பயிர்கள் என பலவற்றை அழித்து நாசம் செய்துவிட்டு பொய் கணக்கு காட்டுவது; மரங்களின் எண்ணிக்கையை குறைத்து கணக்கு காட்டுவது; வீடுகள் இல்லை என காட்டுவது; இப்படி பொய் கணக்கைக் காட்டி இழப்பீட்டு தொகையை சொற்பமாக கொடுக்க முயற்சித்து வருகிறது பவர்கிரிட் நிறுவனம். இதற்கு துணையாக நிற்கிறது மாவட்ட நிர்வாகம்.
இதுகுறித்து வட்டாட்சியர் இடத்தில் முறையிட்டபோது, நிறுவன அதிகாரிகளை அழைத்து இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் நாங்கள் இழப்பீட்டு தொகையை கொடுத்து விடுகிறோம் என உறுதியளித்தார். ஆனால், இன்றுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூன்று விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவினை கூட மதித்து அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதில்லை. இந்த உத்தரவு பிறப்பித்து சுமார் எட்டு மாதங்கள் ஆகிறது; ஆனால், இன்றுவரை அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை. எனவே விவசாய நிலங்களை பரிகொடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் 4.4.2022 இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பவர்கிரிட் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் உடனடியாக மறுமதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.
தகவல் :

மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
9790138614.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! 
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ?
தமிழக அரசே !  சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி துறைமுகத்தின் கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதால் தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை. மீனவர்கள் வேலையில்லாமல் வறுமையிலும், கடனிலும் சிக்கி தவிக்கிறார்கள். இதை பயன்படுத்தி நாசகார ஸ்டெர்லைட்டுக்கு  எதிராகப் போராடாமால் இருக்க வீட்டுக்கு வீடு தலா ரூ.2000 பணம், பொருட்கள்  கொடுத்து மீனவர்களை பிளவுப்படுத்த முயற்சி செய்தனர் நாசகார ஸ்டெர்லைட் கைகூலிகள். இதை மீனவ மக்கள் அமைவரும் ஒன்றுகூடி முறியடித்தனர்.
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் கைக்கூலிகளை வைத்து பாத்திமா நகர் மக்களை பிளவுப்படுத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. மக்கள் ஒன்றுகூடி அந்த கைக்கூலிகளை கண்டித்து போலீசிடம் புகார் கொடுத்தனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தனி, தனியாக புகார் மனு கொடுத்தனர்.
மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆத்திரத்தை தூண்டும் இந்த நடவடிக்கை எதிராக எத்தனை முறையோ போலீசிடம் புகார் தெரிவித்தும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளுக்கு எதிராக வழக்குகள் பதியவில்லை. ஏன் என்று கேட்டால்  போலிசிடமிருந்து மழுப்பலான பதில்களே வருகின்றன.
படிக்க :
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
15 உயிர்கள் சுட்டு கொன்று பலர் தங்களது உடல் உறுப்புகளை இழந்து உள்ளார்கள். உலக நாடுகளே இந்த கொடூரக் கொலைகளை கண்டித்த பிறகும் கொலைகார ஸ்டெர்லைட்டுக்காக வேலை செய்த போலீசு அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை? ஏன் ஒரு வழக்கு கூட பதியவில்லை ?
ஏன் என்று கேட்டால் ? சட்டம் தன் கடமை செய்யும் ! மக்களே பொறுமையாக இருங்கள் !  அது கடந்த காலம், இப்போ நிலைமை வேறு தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் வந்தாச்சு, புதிய காவல் கண்காணிப்பாளர் வந்தாச்சு! ஏன் புதிய ஆட்சியே வந்தாச்சு என்று  வக்கலாத்து வாங்கும் நீதி அரசர்களே ? இதற்கு பதில் சொல்லுங்கள் ?

This slideshow requires JavaScript.

கொரோனா காலம் ஆக்சிஜன் பற்றாகுறை என்று நாடகமாடி உச்சநீதிமன்றத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி ஆலையை திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணிதான் என்பதை நிரூபித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்த  ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை செய்ய முடியவில்லை ! ஆனால் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு  ஒன்றிய அரசு புனிதர் பட்டம் கொடுக்கிறது. தினகரன் உட்பட அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் வந்தன.
இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தில் என்ன வேலை நடந்துகொண்டிருக்கிறது ? ஒரு வேலையும் கிடையாது! தினமும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் ஆட்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று வரை யார் அனுமதி கொடுத்தது ?
பணம் பலம் படைத்த ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் முறியடித்து வருகிறார்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தமாக மூட சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! துப்பாக்கிச்சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைப்பேன் ! 15 பேரை சுட்டு கொன்ற போலிசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்குறுதியளித்து வெற்றிபெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வரை ஒரு வழக்குகூட போடவில்லையே ஏன் ?
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ? தமிழக அரசே !  சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி மக்களின் மூன்று கோரிக்கைகள் :
1. சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்ற வேண்டும் !
2. 15 தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் !
3. மக்களை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்!
இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தூத்துக்குடி மக்கள் போராட்டம் ஓயாது !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த விடிவும்  இல்லை!


மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605

தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள் !

து பெரியார் மண். தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காலூன்ற முடியாது” என்று தமிழக அறிவுத்துறையினரும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனிய சித்தாந்தத்தை எதிர்த்து போராடிவந்த தமிழ்நாட்டைப் பற்றி, நாம் இவ்வாறு கருதிக் கொள்ள நியாயம் உண்டுதான்.
ஆனால், இவ்வாறு பேசுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளைப் பற்றி குறைமதிப்பிடவும் நமது செயலின்மையை மறைத்துக் கொள்ளவுமே பயன்பட்டு வருகிறது என்பது அபாயமான போக்கு. நமது அசட்டைத்தனத்தின் மீதுதான் பாசிசம் மெல்ல வளர்ந்து வருகிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழகத்தில், அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, சற்று பரிசீலனை உணர்ச்சியோடு மீள்பார்வை பார்ப்பது அவசியம்.
000
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்ட தருணம் பார்த்து கழுகு போல் காத்திருந்த பா.ஜ.க-விற்கு கிடைத்த அரிய வாய்ப்புதான் அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை. கடந்த ஜனவரி 19-ம் தேதியன்று, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்ற கிறித்துவ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார்.
படிக்க :
‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !
லாவண்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கட்டாய மதமாற்றத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தனது கேடான மதவெறி நோக்கத்திற்கு மாணவியின் மரணத்தை துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
தனது தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என லாவண்யா பேசுவதைப் போன்ற ஒரு காணொளியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பகிர்ந்ததும் விசயம் பற்றிக் கொள்கிறது. பா.ஜ.க உள்ளிட்டு விஷ்வ இந்து பரிஷித் (வி.எச்.பி), இந்து முன்னணி, அகில பாரதிய வித்யா பரிஷித் (ஏ.பி.வி.பி) போன்ற சங்க பரிவார அமைப்புகள் அனைத்தும் இணைந்துகொண்டு “கிறித்துவப் பள்ளியை மூடவேண்டும்; தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை, கோவை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஜெப வீடு மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மாணவி லாவண்யாவின் பெற்றோரை தங்களது நோக்கத்திற்கேற்றபடி வளைத்துக் கொண்டது காவி கும்பலுக்கு சாதகமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு அம்மாணவியின் பிணத்தைக் கூட மருத்துவமனையிலிருந்து வாங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேலும் லாவண்யாவின் அப்பா முருகானந்தம் தன் மகள் மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசு நிலையத்தில் புகாரளித்ததோடு, சிபிசிஐடி விசாரணைக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், இதற்கு முன்பு ஜனவரி 15-ம் தேதியன்று போலீசு நிலையத்தில் அளித்த புகாரில் “மதமாற்றம்” என்று குறிப்பிடப்படவில்லை என்பதிலிருந்து காவி கும்பலின் காய் நகர்த்தல்களை புரிந்துகொள்ள முடியும். அச்சாதாரண குடும்பத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுக்க வைக்க, காசை வாரியிறைத்துள்ளது பா.ஜ.க.
உண்மையில், தனது சித்திக் கொடுமையாலும் விடுதிக் காப்பாளர் கொடுத்த அதிகப்படியான வேலைச் சுமையாலுமே அம்மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பின்பு தெரியவந்தது. முன்னர் அண்ணாமலை பரப்பிய காணொளியில், “உன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்களா” என மாணவியை கேள்வி கேட்பவர் வி.எச்.பி-யைச் சேர்ந்த முத்துவேல் என்றும் அக்காணொளியை தங்கள் நோக்கத்திற்கேற்ப வெட்டி பரப்பியுள்ளார்கள் என்றும் அம்பலமாகியது. மேலும் மாவட்ட நீதிபதிக்கு மாணவி லாவண்யா கொடுத்த வாக்கு மூலத்திலும் மதமாற்றம் காரணமில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரங்களெல்லாம் கிடைத்த பின்னர் ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.
கோவையில், “காந்தி நினைவு நாளில் இந்துமதவெறியை முறியடிக்க சூளுரைப்போம்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி.
ஆனால், இம்முயற்சியில் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் முழு தோல்வியடைந்துவிட்டதாக கருத முடியாது. தமிழகத்தில் தங்கள் காவி பாசிச நிகழ்ச்சி நிரலை செயலாக்குவதற்கு வாய்த்த மிகச்சிறந்த கருவியாக மாணவி லாவண்யாவின் தற்கொலையை மாற்றப் பார்த்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அதற்காக அவர்களின் தேசிய தலைமைகளே நேரடியாக கவனம் கொடுத்தன.
மாணவி தற்கொலையை விசாரிக்க தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவே தலையிட்டு விசாரணைக் குழு அமைத்தார். “லாவண்யாவிற்கு நீதி வேண்டும் (Justice For Lavanya)” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நாடு முழுவதும் இச்சம்பவத்தை பேசு பொருளாக்கியது காவி கும்பல். டெல்லியில் பழைய தமிழ்நாடு இல்லம் ஏ.பி.வி.பியினரால் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லமும் முற்றுகைக்குள்ளானது. மேலும் சிம்லா, ஜம்மு, கோரக்பூர், போபால் என நாட்டின் பல இடங்களிலும் இதை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது ஏ.பி.வி.பி.
இச்சம்பவத்தை தேசிய அளவில் கொண்டு சென்று தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கப் பார்த்தனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம், மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை பாசிஸ்டுகள் விரும்பிய திசைக்கு இந்த வழக்கை கொண்டுசெல்ல உதவி செய்தன என்பதைத்தான். விளைவு, தங்களின் கைப்பாவையான சி.பி.ஐ விசாரணைக்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மாரிதாஸுக்கு தேச பக்தர் விருது கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணையின்போது அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது முக்கியமானது.
கட்டாய மதமாற்றம் என்ற பொய்ப் பிரச்சாரங்களோடு ஆர்ப்பாட்டம், தேவாலயங்கள் மீது தாக்குதல் என லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தை கலவரக்காடாக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. முயற்சி செய்ததைப் பற்றி கண்டிக்காத நீதிபதி, மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என்பதற்கான நிரூபணங்கள் இல்லை என்று பொதுவெளியில் பேட்டியளித்த தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிப் பிரியாவைக் கண்டித்தார். மாணவியின் மரணத்திற்கு அவரது சித்திக் கொடுமை காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில், முன்னர் லாவண்யா சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் குழந்தை பாதுகாப்பு மையத்தை தொடர்புகொண்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இது விசாரணையை சீர்குலைக்கும் நடவடிக்கை” என கண்டித்தார்.
ஆனால், வழக்கு விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என்பதுபோல – ஒரு சங்கபரிவார உறுப்பினரே பேசுவது போல – பேசினார். “சீரியஸ் மென்” என்ற இந்தி திரைப்படம், “கல்யாண அகதிகள்” என்ற தமிழ்த் திரைப்படம் ஆகியவற்றில் நடக்கும் கிறித்துவ மதமாற்றத்தைச் சுட்டிக்காட்டி, “இதுபோன்ற படங்கள், குறிப்பாக தமிழ் படங்கள் சற்று மிகைப்படுத்தலானவை என்றாலும் உண்மையில் சமூகத்தில் அவ்வாறு நிகழ்கின்றன” என்கிறார். மேலும் “மைக்கல்பட்டி” என்ற பெயர் அந்த ஊருக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் யாராவது ஆய்வு செய்யலாம் என்றும் பேசியிருக்கிறார்.
ஆபத்தை முன்னுணர்ந்த தி.மு.க அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. “மாணவியின் மரணத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள். தமிழக போலிசுத் துறைக்கு போதிய வாய்ப்புத் தராமல் சி.பி.ஐ-க்கு மாற்றுவது சரியில்லை என தமிழக போலீசுத்துறை தன் வாதத்தை முன்வைத்தது. “இதை கவுரவப் பிரச்சினையாக பார்க்காதீர்கள்” என்று வாயை அடைத்தது உச்சநீதிமன்றம்.
“வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதானது பா.ஜ.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என்று அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. வெளிப்படையாகவே மதமாற்றம் என்ற பொய் – நச்சுப் பிரச்சாரத்தை வைத்து தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருந்தாலும் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினரை கைதுசெய்து சிறையிலடைக்க தி.மு.க அரசு துணியவில்லை. நீதித்துறை காவிகளின் கைப்பாவையாக செயல்படுவதைப் பற்றி தவறியும் அறிவுத்துறையினரிடையே பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை.
000
நீதித்துறை மட்டுமல்ல, போலீசுத்துறையிலும் காவிகள் ஊடுருவியிருப்பதற்கு சமீபத்தில் கோவையில் நடைபெற்ற சம்பவம் சிறந்த சான்று. காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதியன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில், “கோவை மக்கள் ஒற்றுமை மேடை” என்ற அமைப்பின் சார்பில் சி.பி.எம், த.பெ.தி.க, வி.சி.க உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்போடு “இந்து மதவெறிக்கு எதிராக மக்களை திரட்ட உறுதியேற்போம்” என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புகுந்த கோவை போலீசார், “இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார்” என்ற வாசகம் பொறித்த பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றுள்ளனர். இவ்விசயத்தில் கூட்டத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் அவ்வாசகத்தில் ‘இந்து’ என்ற சொல்லை மட்டும் மறைத்துவிட்டு கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.பி.எம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் “கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி நினைவு நாளில்” என்று உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கியபோது ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, “கோட்சே” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று கலாட்டா செய்துள்ளார். நாடறிந்த உண்மை, காவிகளின் மனதை கலங்கடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக போலீசால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
ஆனால், இதே காலத்தில்தான் “கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்விட் குறித்து சிலிர்ப்போடு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
000
தாங்கள் அடித்தளம் கொண்டுள்ள இடங்களில் பாசிச ரவுடித்தனங்களில் ஈடுபடுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் வழமையான முறை. இப்பாசிச ரவுடித்தனத்தின் தீவர வடிவம்தான் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பல் படுகொலைகள். தமிழகத்தில் தற்போது கும்பல் படுகொலைகள் அளவுக்கு போகவில்லை என்றாலும் பாசிஸ்டு ரவுடித்தனம் புதிய இயல்பாக மாறி வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மோடி பஞ்சாப் சென்றபோது, ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ ஏற்பட்டுவிட்டதாக நாடெங்கும் பா.ஜ.க போராடியது. தமிழகத்தின் பல்லடம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது, மோடியை விமர்சித்ததாக கூறி தள்ளுவண்டி பழ வியாபாரியான முத்துசாமியை போலீசு கண்முன்னேயே மயங்கி சரியும்வரை பா.ஜ.க.வினர் கொடூரமாக தாக்கினர். இந்நிகழ்வை பாசிஸ்டு ரவுடித்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. லாவண்வா பிரச்சினையில் ராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் தேவாலாயங்களை சேதப்படுத்தியதும் அதையொத்ததுதான்.
லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றமே காரணம் என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த ஏ.பி.வி.பி. அமைப்பினர். தமிழக அரசுக்கு எதிராக உருவ பொம்மையை கொளுத்தும் காட்சி.
உ.பி லக்கிம்பூர் – கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மோடி உருவ பொம்மையை எரித்து விவசாய சங்கத்தினர் போராடியபோது மயிலாடுதுறையில், “மோடி உருவ பொம்மையை எரித்தால், பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை கொளுத்துவோம்” என்று பா.ஜ.க.வினர் தகராறு செய்ததை நாம் மறந்திருக்க முடியாது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலின்போது மதுரை மேலூர் பகுதியில் பர்தா அணிந்து வாக்கு செலுத்த வந்த முஸ்லீம் பெண்ணை, பர்தாவை கழட்டச் சொல்லி மிரட்டியிருக்கிறான் பா.ஜ.க பூத் ஏஜெண்ட் ஒருவன். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மட்டுமே.
000
காவி பாசிஸ்டுகள் தமிழகத்தில் காலூன்றுவதற்கான முயற்சிகளை முன்பைக் காட்டிலும் தீவிரமாக செய்து வருகிறார்கள்; மெல்ல மெல்ல வளர்ந்தும் வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான ஒரு சக்தி என்ற வகையில் ஜனநாயக சக்திகள் ஆதரித்த தி.மு.க, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் செயல்பாடுகளை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை; வாய்ப்பேச்சைத் தவிர.
தடுக்கவில்லை என்பதைத் தாண்டி, பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணை செய்துகொண்டிருக்கிறது தி.மு.க. இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகளே அதற்கு சிறந்த சான்று. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ராமசுப்ரமணியத்தை அறநிலையத்துறை உயர்நிலைக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக நியமித்துள்ளது தி.மு.க அரசு.
பொதுவெளியில் பா.ஜ.க என்ற கட்சியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தாலும் தன்னை எப்போதும் “ஆர்.எஸ்.எஸ்.காரன்” என்று பெருமையொடு சொல்லிக் கொள்பவர். ஊடக நேர்காணல் ஒன்றில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த தன்னார்வலர்கள்தான் தேவை” என்று பேசியவர். அறநிலையத்துறை பொறுப்பை வைத்துக் கொண்டிருக்கும் இவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். மேலும், தில்லைக் கோயில் பிரச்சினையில், “தில்லைக் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான், அப்பெண்ணை சிற்றம்பலத்திலிருந்து வெளியெற்றியது சரிதான்” என்றும் பேசி வருபவர். இவருக்குத்தான் திராவிடத்தை கொள்கையாக அறிவித்துக் கொண்ட தி.மு.க பொறுப்பு கொடுத்திருக்கிறது.
000
ஜக்கி வாசுதேவுக்கு போட்டியாக இந்த முறை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் விடிய விடிய கச்சேரி ஏற்பாடு செய்த சேகர் பாபுவின் நடவடிக்கை அடுத்த சமீபத்திய சான்று. காபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின். கலந்துகொண்ட பக்தர்களுக்கு ருத்ராட்சமும் தீர்த்தமும் இலவசமாம்.
படிக்க :
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
சேகர் பாபுவின் அறிவிப்பை கூட்டணியிலிருக்கும் வி.சி.க, சி.பி.எம். கட்சியினரே எதிர்த்தனர். “ஆன்மிகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது” என்று வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டித்தார். தி.க தலைவர் வீரமணி, சி.பி.எம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
000
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் இனி எதிர்கட்சி நாங்கள்தான். எதற்கெடுத்தாலும் தி.மு.க பா.ஜ.க.வை விமர்சித்து வருகிறது. நாங்களும் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். இது சித்தாந்த ரீதியான போராட்டம்” என்றார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
உண்மைதான். சித்தாந்த ரீதியாக பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வருகிறார்கள். தி.மு.க அதற்கு பலியாகிறதே தவிர, ஈடுகொடுக்கவில்லை. சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் காவி பாசிச அபாயம் வேர்விட்டு வளருவதை தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டுமானால் தமிழக புரட்சிகர – ஜனநாயக சக்திகளே தீவிரமாக செயல்பட வேண்டும். மாறாக, ‘பொற்கால ஆட்சி’ மயக்கத்தில் மிதந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை நக்கலடிப்பது அபாயமான போக்காகும்.

அப்பு

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கான ஒரு திரித்துப் புரட்டப்பட்ட பிரச்சார வாகனம் !
லீனி ரெய்ஃபென்ஸ்டால்-ன் ‘மன உறுதியின் வெற்றி’ (Triumph of the Will) (1935) என்ற ஆவணப்படம், நூரம்பெர்க்கில் நடந்த நாஜிக் கட்சியின் 7 லட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மாநாடு பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம். இது, இதுவரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்களிலேயே மிகச் சிறந்த ஒன்று என கூறப்படுகிறது. சினிமாவில் மட்டும் இது உயர்ந்த தரம் என்பதல்லாமல் பிரச்சாரத்திலும் உயர் தரம் மிக்கது என போற்றப்படுகிறது. ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம் என்ற நாஜிக் கொள்கைக்கேற்ப, ஜெர்மானிய ஆரிய இனமே உயர்ந்த இனம் என்கிற ஹிட்லரின் கருத்துக்கு ஏற்ப ஜெர்மானிய ஆரியன் அழகிய, நீல நிறக் கண்கள் கொண்ட, உயரமான வலுமிக்கவன் என சித்தரித்ததோடு, நாஜி ஜெர்மனியின் வெல்லப்பட முடியாத அமைப்பு ஆற்றலையும் படம் பிரச்சாரம் செய்தது.
அடால்ஃப் ஹிட்லர் படத்தைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமின்றி அதன் முழுத் தயாரிப்பாளரும் அவரே. அதுவரை வியாபார படங்களில் ஒரு நடிகையாக நடித்து வந்த ரெய்ஃபென்ஸ்டால், ஹிட்லரின் விருப்பமான இயக்குனர் ஆனதோடு, மூன்றாவது ரீச்சின் மிகப்பெரும் பிரச்சாரகராகவும் ஆகியிருந்தார். 1938-ம் ஆண்டில் 1936-ல் நடந்த ஒலிம்பிக் பற்றிய ஒலிம்பியா என்ற ஆவணப்படத்தை எடுத்திருந்தார். அந்த ஒலிம்பிக்கில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 4 தங்கப் பதக்கங்களை வென்று சர்வாதிகாரியின் ஆரிய மேலான்மை கருத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டார்.
ஆனால், இந்த ஆவணப்படமோ நாஜி ஜெர்மனியின் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்து, பெரும் வரவேற்புப் பெற்றது. இது ரெய்ஃபென்ஸ்டால்-ன் படம் எடுப்பதில் புதுப் புது தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தி, உலகம் முழுதும் நல்ல பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. இவரைப் படம் எடுப்பதில் ஆற்றல் மிக்க முன்னோடிகளில் ஒருவராக நிலைநிறுத்தியது. இதன்மூலம் ‘குற்றமற்ற’ பிரச்சாரகராக இதுவரை உள்ளார்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
ரெய்ஃபென்ஸ்டாலின் திரைப்படத் திறமையில் பலமடங்கு குறைந்திருப்பினும், பாஜக விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரியில் ஒரு ரெய்ஃபென்ஸ்டால்-ஐ பார்த்திருக்கலாம். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துடன் பாஜக-வின் விருப்பமான இயக்குனராக அக்னிகோத்ரி ஆகியுள்ளார். படம் கூறும் செய்தியும் அதன் ‘அழகு’ம் அப்படியே பாஜகவோடு ஒத்துப்போகிறது என்பதை மோடியும் அவரது ஆதரவாளர்களும் தரும் ஆதரவு ஆரவாரக் கூச்சலே வெளிப்படுத்துகிறது.
இதற்கு முன் எப்போது ஒரு பிரதமர் வெளிப்படையாக ஒரு திரைப்படத்தை ஆதரித்து, அதை விமர்சிப்பவர்கள்மீது பாய்ந்து குதறியுள்ளார்கள்? பாஜக ஆளும் பல மாநில முதல்வர்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளனர்.
இத்திரைப்படம் 1989-ல் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பண்டிட்டுகளைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியபோது அவர்கள் (பண்டிட்டுகள்) கூட்டங்கூட்டமாக காஷ்மீரிலிருந்து வெளியேறியது பற்றியது. இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். அப்போது கொல்லப்பட்ட பண்டிட்டுகளின் எண்ணிக்கை பற்றி பல்வேறு குழுவினரும் வெவ்வேறு எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், பண்டிட் சங்கர்ஷ் சமிதி என்கிற பதிக்கப்பட்டோர் சங்க கூற்றுப்படி, 1990 முதல் 2011 வரை கொல்லப்பட்ட பண்டிட்டுகள் 399 பேர்தான். இதில், முதல் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் 7% பேர் கொல்லப்பட்டனர் என்கிறார்கள். அது படிப்படியாகக் கூடி 655 ஆனது என்கிறார்கள். பிறர் கூறுவது 700-லிருந்து 1300-க்கு மேல்.
இந்தப் படம் மேலும் பலர் இறந்ததாகக் கூறி இதற்குக் காரணமானவர்கள் என காங்கிரசு, தாராளவாதிகள், மனித உரிமையாளர்கள், நக்சல் ஆதரவாளர்கள், இசுலாமியர்கள் என குற்றம் சாட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயிருந்தால் நாட்டின் நலிவுகளுக்கு காரணம் என வழமையாக யாரையெல்லாம் பொதுவில் குற்றம் சாட்டுகிறார்களோ அதே பட்டியலைத்தான் இவரும் கூறுகிறார். இவரைப் பொருத்து ஜேஎன்யூ என்றால் நாட்டின் எதிரிகளின் கூடாரம். இவையெல்லாம் எவ்வித தரவுகளும் ஆதாரங்களுமின்றி மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லப்படுகிறது. அக்னிகோத்ரி ராஜீவ் காந்தி மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், அன்று டில்லியில் பாஜக ஆதரவிலான வி.பி.சிங் அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது. பாஜக முழுமையாக ஆதரித்த எமர்ஜென்சி புகழ் ஜக்மோகன் தான் காஷ்மீரில் கவர்னராக இருந்தார். (1996-ல் இதே ஜக்மோகன் பாஜக-வில் இணைந்தார்.) ஜனவரி 1990 முதல் காஷ்மீரில் இவர் வைத்ததுதான் சட்டம் என ஆட்சி செய்தார். ஏனெனில் இவரைக் கேள்வி கேட்க அன்று காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என எதுவுமில்லை.
மேலும், இந்த திரைப்படம் எந்த வரலாற்றுப் பின்புலத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. தவிர பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள், தேசிய மாநாட்டுக் கட்சியினர் உட்பட, கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை முற்றாகப் புறக்கணித்துவிட்டது. அந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை அக்னிகோத்திரி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதற்கிடையே 2019-ல் மோடி 370–வது சட்டப் பிரிவுவை நீக்கியதுபோல, முதலிலேயே நீக்கியிருந்தால் இவ்வளவு கொலைகளும், வெளியேற்றமும் நடந்திருக்காது என ஆலோசனைகளையும் படம் முன்வைக்கிறது. எந்த உண்மைத் தரவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வாட்ஸ் ஆப்பில் கோபத்துடன் பதிவர்கள் பதிவு போடுவார்களே அதையே படம் வெள்ளித் திரையில் பேசுகிறது ! கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, இனப் படுகொலை என்றால் எண்ணிக்கை அதிகமிருக்க வேண்டும் என அக்னிகோத்ரி நினைத்திருப்பார் போலும் !
இது பாஜக-வின் சொந்த உலக கண்ணோட்டத்துடன், தேசத் துரோகிகள் பட்டியலுடன் மிகப் பொருத்தமாகப் பொருந்திப்போகிறது. தேசத் துரோகிகள் என்றால் வேறு யார்? நம்பிக்கைத் துரோகிகள் தான் !
இப்படம் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில், குறிப்பாக இந்திய இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளை ஒரு கடைக்கோடி எல்லைக்கு சென்று கேடாகப் பயன்படுத்துகிறது. இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி. அன்று ஒன்றிய அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையத்-தின் மகளான மெஹ்பூபா முஃப்தி, பண்டிட்டுகளின் துயரை பாஜக ஆயுதமாக்கியுள்ளது எனக் கூறியது வியப்புக்குறியதல்ல.
அக்னிகோத்ரிக்கு, அவர்மீது பொறாமை கொண்டோர், எதிரிகள் எண்ணிக்கை இத்துடன் நிற்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றி பெற்ற தனது படத்தை போதுமான அளவு அங்கீகரிக்காத திரைத்துறையினர், ஊடகம், குறிப்பாக திரை விமர்சகர்கள் என அவர் நினைக்கும் எல்லோரையும் போட்டுத் தாக்குகிறார். இதன் பொருள், அகநிலையாக இவர்கள் தன் (அக்னிகோத்ரி) மீது வெறுப்புக் கொண்டுள்ளனர் என்பதே !
அக்னிகோத்ரி தனது கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க உரிமையுண்டு ! ஆனால் அவர் எல்லைமீறி எதிர்க்கிறார். பல விமர்சகர்கள், படம் அதன் பார்வையாளர்களை தன் கருத்துக்கு ஈர்த்து, கட்டிப்போடுகிறது என பாராட்டியும் கூறியுள்ளனர். அதே நேரம் அந்த விமர்சகர்கள் படத்தில் உண்மைத் தன்மையில்லை என்ற குறையை சுட்டிக் காட்டவும் செய்கின்றனர். அக்னிகோத்ரி ஒருமுறை, “உண்மை, உண்மைதான் என யார் சொன்னது” எனக் கூறினார். எனவே அவரது படத்தைப் பற்றிய வம்பு எதைப் பற்றியது என்று அவர் ஆச்சரியப்படலாம். ஆனால் ஐயோ, நம்மில் மற்றவர்கள் உண்மைகள் போன்ற ‘அற்ப’ விஷயங்களைப் பற்றி கவலைப்படுபவர்களாக இருக்கிறோமே !
அக்னிகோத்ரியும் அவரது படமும் உருவாக்கிய சந்தடிகளைப் பற்றி – சில இயல்பானவை, சில செயற்கையாக உருவாக்கப்பட்டவை – சிறிது சொல்ல வேண்டியுள்ளது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மக்கள் மத்தியில் இடம் பெற அவர் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே உள்ளார். அவரது படம் காரணமாகவே அமெரிக்க, ரொடெ தீவு மாநிலம் “காஷ்மீர் இனப்படுகொலையை அங்கீகரித்ததாக” கூறிக் கொண்டார். இதுவே சந்தேகத்திற்குறியது.
இத்திரைப்படம் பார்வையாளர்களை மட்டும்கொண்டு வரவில்லை, தவறான நடத்தைகளையும் கொண்டு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசியவெறிக் கூச்சல்கள் எழுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.
பிரதமர் முதல் பல மாநில முதல்வர்கள் வரை படத்தை ஆதரிக்கின்றனர். இப்படி மேல்மட்ட ஆதரவு இல்லையென்றாலும் அக்னிகோத்ரி தனது மார்க்கெட்டிங் மற்றும் சுய ஊக்குவிப்பு திறன்களால் சமாளித்திருப்பார்.
படிக்க :
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
பாஜக ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’-க்கு என்ன மதிப்புள்ளதோ அதனை ஒட்டக் கறக்கப்போகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. டெல்லியில் இருந்த, இப்போதும் இருக்கிற பாஜக அரசாங்கமும் சரி, இப்போது காஷ்மீரில் நடக்கும் ஒன்றிய அரசின் ஆட்சியும் கூட ஏன் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கு ஒருவித நீதியைப் பெற உதவத் தவறிவிட்டன என்ற நியாயமான கேள்விகளை மூழ்கடிப்பதற்கும் இது அவர்களுக்கு உதவும். பெரும்பாலான பண்டிட்டுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலக அளவிலும் வெற்றிகரமாக, நன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஒருவித நீதியையும், சிக்கலை ஒருவிதமாக முடிவுக்குக் கொண்டு வரவும் விரும்பலாம். ஆனால் இதுவரை எந்த அரசாங்கமும் இந்த இரண்டையும் வழங்குவதற்கு எந்த விருப்பத்தையும் காட்டவில்லை.
சிக்கல்களின் இந்த நுணுக்கங்கள் அக்னிஹோத்ரிக்கானவை அல்ல. அவரது நோக்கம் ஒரு சில கருத்துக்கள் மற்றும் அவர் வெளிப்படையாக வைத்திருக்கும் பல தப்பெண்ணங்களை மக்கள் மனதில் ஆழப் பதிய வைப்பதாகும். இதில் அவர் வெற்றி பெறுகிறார். அவரது சிறந்தது இன்னும் வரவிருக்கிறது. ஊதிப் பெருக்கப்பட்ட தேசிய வெறித் திரைப்படங்களை உருவாக்கிய மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான விஷயம். இப்போதிலிருந்து, அது எல்லா வழிகளிலும் அக்னிஹோத்ரி ஆகும்.
கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

ர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 28 அன்று 20,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்ற செய்தியை சன் நியூஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மேலும், செய்முறை தேர்வுகளை புறக்கணித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று கர்நாடக கல்வித்துறை (Department for Pre University Education) தெரிவித்துள்ளது. அவர்கள் மற்றவர்களைப் போல Supplementary தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தங்களை “நடுநிலையாளர்கள்” என்று பொதுவில் முன்னிறுத்திக் கொள்ளும் நபர்கள் சிலர், “ஹிஜாப் விவகாரத்திற்காக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தங்கள் படிப்பை பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்” என்று அறிவுரை முத்துக்களை உதிர்த்துள்ளார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “நடுநிலை” ஊடகவியலாளர் திரு.நெல்சன் சேவியர், “இந்திய இஸ்லாமியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்து நீட் தேர்வு எழுதிய மண் இது. எல்லாவற்றையும்விட நம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் முக்கியம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் தங்கள் உரிமை என்று “பிடிவாதம்” பிடிப்பதன் மூலம் தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழித்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படும்படி இருக்கிறது அவரது கருத்து.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
இதை சற்று உற்றுப்பார்த்தால் இன்னொரு அர்த்தமும் இந்த கூற்றில் வெளிப்படுவதை கவனிக்க முடியும்‌. அதாவது, “ஒரு இந்து பெண் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து தாலியை கழற்றிவிட்டு தேர்வு எழுதுகிறார். ஆனால், இஸ்லாமியர்களுக்கு கல்வியின் மகத்துவம் உணர்ந்து ஹிஜாபை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை” என்று பொருள்படும் அர்த்தமும் உள்ளது.
ஆனால், திரு.நெல்சன் சேவியருக்கு நாம் ஒன்றை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நீட் தேர்வின்போது தாலியை மட்டுமல்ல, கம்மல், மூக்குத்தி உட்பட மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்ன கொடுமைகளும் நடந்தேறியது. ஆனால், பூநூலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதைத்தான் நாம் பார்ப்பன பாசிசம் என்கிறோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் குற்றம் சொல்வதன்மூலம் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்லவருவது ஒன்றுதான், “இன்று தேர்வெழுதுங்கள் நாளை போராடிக் கொள்ளலாம்” என்பதுதான்.
இதன்மூலம் ஹிஜாப் அணியும் உரிமையா? அல்லது கல்வியா? என்ற கேள்வியை இஸ்லாமிய மாணவர்கள் முன்னால் எழுப்பி, பிரச்சினையை திசை திருப்பும் போக்கை இந்த “நடுநிலையாளர்கள்” அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, நாம் ஆணித்தரமாக அறிவிக்க வேண்டியது என்னவென்றால், “பிரச்சினை ஹிஜாப் அணியும் உரிமையா அல்லது கல்வியா? என்பதல்ல. மாறாக பிரச்சினையின்  உண்மையான அம்சம் என்பது காவி – காரப்பரேட் பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் இன்றைய இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகள் வெட்டி சுருக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த காவி –  கார்ப்பரேட் பாசிச ஆட்சியில் இஸ்லாமியர்கள் எப்படி இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்”.
இந்துத்துவத்தின் நிகழ்ச்சிநிரலில் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு பயன்படும் வகையில் கர்நாடகாவில் மத துருவமுனைவாக்கம் (Religious Polarization) செய்ய இஸ்லாமியர்களின் மீதான வன்முறைகள் எந்தளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது விளங்கிவிடும்.
அதற்கு இந்த ஹிஜாப் விவகாரம் பற்றியும் கர்நாடகா மாநிலத்தில் தற்போது வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகள் பற்றியும் சுருக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
000
பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் முதல்வராக பாஜக அறிவித்த சில மாதங்களிலே கர்நாடகாவின் பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள், சாலையோரங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற ஆரம்பித்தன. கூடவே, “புதிய பாரதத்திற்கான புதிய கர்நாடகம்” என்ற வாசகமும் இடம்பெற ஆரம்பித்தது.
இந்த வாசகம் விளக்குவது என்னவென்றால், பாஜகவின் இந்து தேசியவெறிக்காக கர்நாடகா மாநிலத்தின் சுயாட்சி காவு கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.
இது 1970-களில் கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், பிறப்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணி, அதனால் நிலமுடைய ஆதிக்க சாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது போன்ற ஒப்பீட்டளவிலான முற்போக்கு அரசியல் பாதையிலிருந்து முறித்துக்கொண்டு கர்நாடகா இந்துத்துவ அரசியலுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்திருப்பதை எடுத்து காட்டுகிறது. இந்த இந்துத்துவ அரசியல் மிக வேகமாக நடைமுறையில் செயலுக்கு கொண்டுவரபடுவதையும் நாம் கவனிக்க தவறக் கூடாது.
2020-ம் ஆண்டு கர்நாடகாவில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தின் பிழைப்பாதாரமாக இருக்கும் தொழிலை இது “குற்றமயம்” (Criminalize) ஆக்குகிறது. இது இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் ஒடுக்க போலீசுத்துறைக்கும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கும் காவிக் குண்டர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
“மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு சட்டம்” என்ற சட்டத்தை கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன்மூலம்  குடிமக்களின் மதம் மாறுவதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. இது கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் மதமாற்றத்தை தொழிலாக செய்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் விளைவாக வந்த சட்டம்.
படிக்க :
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
கர்நாடக அரசு மேலும் ஒருபடி மேலே போய் சட்டத்தை மீறுவதற்காகவே தனிச் சட்டத்தை இயற்றுகிறது. பொது இடங்களில் இருக்கும் மதச் சின்னங்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் விதமாக, அந்த மதச் சின்னங்கள் இடிக்கப்படுவதில் இருந்து அதைப் பாதுகாக்கும் விதமாக சட்டம் இயற்றியுள்ளது.
ஒருபக்கம், சமூக ஊடகங்களில் பாஜக விமர்சிக்கப்படுவதை கூட சகித்துக் கொள்ள முடியாமல், விமர்சகர்களை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்வது, மற்றொரு பக்கம் கர்நாடகாவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மீதிருக்கும் குற்றவியல் வழக்குகளை வாபஸ் வாங்குவது என சட்டத்தை இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது கர்நாடக அரசு.
கர்நாடகாவில் பாஜக அரசு ஊழலுக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பொது கட்டமைப்புக்கான டென்டரில் 40% லஞ்சமாக கேட்கப்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த லஞ்ச ஊழல் பணம் எல்லாம் பாஜகவின் மத்திய மைய அதிகாரத்திற்குதான் போய் சேரும் என்று இந்த “அப்பாவிகளுக்கு” தெரியாதுபோலும். எல்லா அரசாங்கப் பதவிகளும் வேலைகளும் பணத்திற்கான விற்பனை சரக்காக மாற்றும் அளவுக்கு லஞ்ச ஊழல் மலிந்திருக்கிறது.
நிலச் சீர்திருத்த சட்டம் 2020-ன் மூலம் நிலத்தின்‌ மீதான ஊக வியாபாரத்தை பன்மடங்கு பொருக்கி புதிய பணக்காரர்கள் உருவாவதற்கு வழியை திறந்துவிட்டுள்ளது. இந்த புதிய பணக்காரர்கள்தான் கர்நாடகா தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தேர்தலை தாமதப்படுத்துவதன் மூலம் உள்ளாட்சி சனநாயகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டார்கள். கல்வி மருத்துவம் என எல்லாத் துறைகளையும் தீவிரமாக தனியார்மயப் படுத்துகிறார்கள்‌. புதிய கல்விக் கொள்கையை எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் அமல்படுத்துவதன் மூலம் கல்வியை காவிமயமாக்கி வருகிறார்கள்.
கீழ்மட்ட அளவில் வன்முறை கும்பலை வளர்த்துவிட்டு அந்த கும்பலை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது, சிறுபான்மையினரின் வியாபாரத்தைப் புறக்கணிக்க சொல்லி பிரச்சாரம் செய்வது, மேலும் இந்த கும்பலை போலீசுத்துறை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாமல் இருப்பது போன்ற போக்குகள் மாநில முழுவதும் தற்போது பரவி வருகிறது.
பள்ளி சத்துணவில் முட்டை போடுவது பற்றி கூட மதத் தலைவர்கள் முடிவெடுப்பது என மதவாதத்தின் வேர் ஆழமாக துளையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மதவாத நடவடிக்கைகளை எல்லாம் தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக இந்துராஷ்ட்ரத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் அரசியல் கலாச்சார வெளி இப்படி இந்துத்துவத்தின் பிடியில் பலமாக சிக்கியுள்ளது. தென்னிந்தியாவில் இந்துத்துவத்தின் சோதனை சாலையாக கர்நாடக மாநிலம் மாற்றப்பட்டு வருகிறது என்பதற்கான எல்லா ஆதாரங்களும் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஹிஜாப் விவகாரத்தை கர்நாடக அரசும் இந்துத்துவ சக்திகளும் மற்றொரு மத துருவமுனைவாக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடையப் பார்க்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து “ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை” என்று மனு தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து ஹிஜாப் அணிந்த பெண்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி வற்புறுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச் மாதம் 15-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடையை நிலைநிறுத்தியது.
இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு தாங்கள் புரிந்து கொண்டபடி தங்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை இல்லை என்பது மட்டுமல்ல, தங்கள் மதத்தின் அத்தியாவசிய நடைமுறை எது என்று தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்ற பொருளில்தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாம் வாசிக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு மேல்முறையீட்டு மனுவை  அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
ஒரு சிறுபான்மை மதச் சமூகத்தினரின் உரிமையை வெட்டி குறுக்குவதில் இந்த நாட்டின் எல்லா அரசமைப்பு நிறுவனங்களும் ஒத்திசைவாக செயல்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் இப்போது எந்தவித அமைப்பு துணையும் இல்லாமல் நிராதரவாக நிற்கிறார்கள். அவர்கள் இந்த நிறுவனங்கள்மீது நம்பிக்கை வைக்க எந்த நியாயமும் பிடிபடவில்லை. அதனால்தான் தேர்வைப் புறக்கணித்து தங்கள் உரிமையை பற்றி செய்தியை பொது சமூகத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
இந்த ஹிஜாப் விவகாரத்தை தனித்த ஒன்றாக பார்க்க எந்த அடிப்படையுமில்லை. 370 சட்டசரத்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் துண்டாடப்பட்டது; அங்கே இன்றும் துப்பாக்கி முனையில் மக்களை வைத்திருப்பது; பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் அன்றாடம் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது; குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முற்பட்டது; அதை எதிர்த்து போராடியவர்களை டெல்லி கலவரத்தை தூண்டிவிட்டு 50 இஸ்லாமியர்களை படுகொலை செய்தது;
படிக்க :
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
லவ் ஜிகாத்; கொரோனா ஜிகாத் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியது; இஸ்லாமியர்கள் சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் வியாபாரத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எச்சில் ஜிகாத்; புல்லி பாய் ஆப்பின்மூலம் இஸ்லாமிய பெண்களை பொது இணையவெளியில் ஏலம்விட்டது போன்ற எண்ணற்ற வன்முறைகளின் தொடர்ச்சிதான் இந்த ஹிஜாப் தடை.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைப் போல் ஹிஜாப் தடையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் நீண்ட கால அல்லது குறுகிய கால தேவையின் காரணமாக சங்க பரிவாரத்தால் உருவாக்கி வளர்க்கப்பட்டதுதான். இதன் முதன்மையான நோக்கம் இஸ்லாமியர்களின் மீதான வன்முறைதான். அதனால் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.
அதனை கணக்கில் கொண்டுதான் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துப் போராடுகிறார்கள். அதை ஒன்று திரட்டி இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டுப் போக எந்த இடதுசாரி அமைப்பும் இந்திய அளவில் வலிமையாக இல்லை. அதனால்தான் இது தன்னெழுச்சியானப் போராட்டமாக இருக்கிறது. அதற்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே பழியை போட்டு அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருப்பதுவே இந்த வரலாற்று கட்டத்தில் இந்த “நடுநிலையாளர்கள்” செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்.
செய்தி ஆதாரம் : thewire, theindiaforum, deccanherald