பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ?
நண்பர்களே…

உங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில்
தோழர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன். ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?
1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794) வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது.
வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் பற்றி ஐரோப்பியர்கள் தெரிந்துகொள்ள தொடங்கிய காலம் என்பது 1847 க்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஜோன்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட வடமொழிகள் நூல்கள் 3 மட்டுமே. அவை 1. காளிதாசரின் சாகுந்தலம். 2. கீத கோவிந்தம். 3. மாளவ தரும சாத்திரம் ஆகும். இவருக்கு வடமொழியைக் கற்றுக் கொடுத்த இவருடைய நண்பர் சார்லஸ் வில்கின்சன் “பகவத் கீதை“ மற்றும் “இதோபதேசம்“ என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல், அவுரங்கசீப்பின் அண்ணன் “தாராசுகோ”வின் முயற்சியால் வடமொழியில் இருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்ப்பட்ட 50 உபநிடதங்கள் ஆகும். இந்த உபநிடதங்கள் முழுமையும் 1801 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்றும் இதன் விளைவாக ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி பற்றிய ஆர்வம் உண்டானதாகவும் “வியத்தகு இந்தியா” (பக்.5 மற்றும் பக்.6) என்னும் நூலில் பேராசிரியர் A.L.பசாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நூலின் அந்தப் பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை.
திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,
“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?
படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !
3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும்.
தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன்.
நம்முடைய அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதற்காக இப்படி ஆதாரம் இல்லாமல் பிழையாகச் சிலர் பேசுவதைக் காண முடிகின்றது. ஆய்வின் அடிப்படையிலான பேச்சுகளை அவதூறுகளைக் கொண்டு நிரப்புவது என்பது தமிழ் ஆய்வுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கும் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா? என்பதைத் தோழர்கள் விவாதிக்க வேண்டும்.
***
04.05.2020 எனது பதிவில் தோழர் மே.து.ராசுகுமார் அவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு…
நண்பர்களே…
புறநானூறு 34 வது பாடலின் 3வது வரியாக “பார்ப்பார் தப்பிய” என்ற தொடர் வருகின்றது. இந்த வரியை பரிமேலழகர் 110 வது திருக்குறள் உரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகின்றார். பரிமேலழகர் உரையை 1861 இல் பதிப்பித்த ஆறுமுகநாவலர் இப்பாடலின் அடிக்குறிப்பில் “குரவர் தப்பிய” என்ற பாடபேதத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால் 1840 இல் துரு பாதிரியாரும் இராமானுஜகவிராயரும் இணைந்து முதன்முதலாக வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம் மட்டுமே உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் உ.வே.சாமிநாத அய்யர் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பே வந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் பார்ப்பார் தப்பிய என்ற திருத்தத்தை உ.வே.சா செய்தார் என்று சிலர் பல காலமாக சொல்லி வருவதன் மர்மம் என்ன?
படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
தெ.பொ.மீ., பேராசிரியர் துரை அரங்கனார் போன்ற பல பேராசிரியர்களுக்கு ஆசானாக விளங்கிய கோ.வடிவேல் செட்டியார் 1904 இல் திருக்குறள் பரிமேலழர் உரையை தன்னுடைய விளக்கத்துடன் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலிலும் பார்ப்பார் தப்பிய என்ற பாடம்தான் உள்ளது.
அடுத்த வந்த காலங்களில் 34 வது புறநானூற்றுப் பாடலை நாம் தொல்காப்பியம் புறத்திணையியல் இளம்பூரணர் உரையில் மேற்கோளாகக் காண்கிறோம். தொல்காப்பியம் அகத்திணையியல் புறத்திணையியல் ஆகிய இரண்டு பகுதிகளையும் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் 1920 லும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1921 லும் முதல்முதலாக அச்சில் கொண்டு வருகிறார்கள். அந்த நூல்களில் இந்தப் புறநானூற்றுப் பாடல் மேற்கோளாக வருகின்றது. பேராசிரியர் நமச்சிவாயர் பதிப்பிலும் தேசபக்தர் வ.உ.சி பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம்தான் உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச் சிறந்த பழந்தமிழ்நூல்கள் பலவற்றை, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டு அறிஞர்களால் மதிக்கப்பட்ட பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து வெளியிட்டதனால் புகழ்பெற்ற “மர்ரே” நிறுவனத்தார் வெளியிட்ட புறநானூற்றுப் பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடமே உள்ளது
இந்த செய்திகளுக்கு ஆதாரமான நூல்களின் பக்கங்களை இணைத்துள்ளேன்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்




மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.
ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

ஆனால் இவர்களின் மொய்க் கணக்கு பொய்க்கணக்காக போகும் விதமாக தாய்மார்கள் தயாராகினார்கள். தமிழகமே தயாரானது. தாய்மார்கள் தலைமையில் ஆங்காங்கே போராட்டம் தன்னெழுச்சியாக விழாக்கோலம் பூண்டது. அதில் மதுரை செல்லூர் பகுதி மக்களின் போராட்டம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.
இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஒரு தனியார் எஃகு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், மார்ச் 24 முதல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவர்களது சம்பளம் பெறப்படவில்லை. அவநம்பிக்கையான சூழ்நிலையையும், அவர்கள் எப்போது மீண்டும் வேலை செய்ய முடியும் என்று தெரியாமலும், தங்கள் குடும்பங்களுடன் இருக்க வீடு திரும்ப விரும்பினர். வீடு திரும்ப ஒரு ரயிலைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நடக்க முடிவு செய்தனர்.

பொருளாதார பின்னடவை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கையாளப்படும் என்றார் பிரதமர். இன்றுவரை அந்த குழு என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது… அதனால் விளைந்த பயன் என்ன யாருக்கும் தெரியாது. வீட்டிற்குள் இருந்து தன்னுடைய தட்டுகளால் சத்தமெழுப்பியதை தவிர நிதியமைச்சர் செய்த உருப்படியான காரியம் என்னவென்று யாருக்காவது தெரியுமா…
இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.


நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடலால் ஒரு நாளைக்கு 90 கோடி இழப்பு ஏற்பட்டு வருவது, உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மார்க்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.


விசாகப்பட்டிணத்தின் புறநகர்ப்பகுதியான கோபாலப்பட்டிணத்தில் இயங்கிவரும் LG பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விசவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விசவாயுக் கசிவில் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் இறந்துள்ளனர்.
ஆலைகளுக்கு அருகிலேயே குடியிருக்கும் நவீன் என்ற இளைஞர், நடந்த சம்பவங்களைக் கூறுகிறார். “அதிகாலை 2.30 மணியளவில், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து முழிப்பு தட்டியது. வீதிக்கு வந்து பார்த்த போது பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வீட்டிலிருக்கும் அனைவரும் முகக்கவசம் மாட்டிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பிச் செல்கையிலேயே பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்கள் பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். ஆலையின் அதிகாரிகள் தங்களது கார்களில் மக்களை மீட்டுச் செல்ல வாய்ப்பிருந்தும் அமைதி காத்தனர்” என்று கூறியிருக்கிறார்.
அறிவியல் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுற்றுச் சூழலியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த ஆலை போதுமான அனுமதியில்லாமல், போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயல்பட்டு வந்ததே 13 அப்பாவிகளின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாகும். விசவாயுக் கசிவு, விபத்து என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வை சரியாகக் குறிப்பிடவேண்டுமெனில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் இலாப வெறிக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றுதான் குறிப்பிட முடியும்.


பண்டாரம் பட்டியில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் அரசு அனுமதி வாங்காமல், சமூக இடைவெளியின்றி – முகக்கவசமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய சகாயம், சந்தோஷ் மற்றும் ஊர் நாட்டாமைகள் மீது ஸ்டெர்லைட்டின் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர் என்று அறியப்பட்ட தனலட்சுமி புகார் கொடுக்கிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்று ஏற்பட்ட பிரச்சனையில் மாரியம்மாள் என்பவர் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை மாரியம்மாளிடம் புகார் வாங்கவே இல்லை.


மேற்கு வங்கம் கே.ஆர். ஜாம்ஷெட்பூரின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் ஆய்வுகள் பேராசிரியர் சியாம் சுந்தர், இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் “19 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் சுரண்டல் மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றன” என்கிறார்.