Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 157

1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்

1970-களின் இறுதியில், உலக வங்கி நகர கட்டமைப்புகளுக்காக நிதி அளிக்கத் தொடங்கியிருந்தது. உலக வங்கி தேர்ந்தெடுத்திருந்த நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருந்தது. 1973-ம் ஆண்டு, உலக வங்கியின் ஒரு குழு, சென்னை, கல்கத்தா முதலான இந்திய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக சென்னை இருக்கும் எனத் தேர்வு செய்திருந்தது.

முதல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (Madras Urban Development Project – I) என்ற பெயரில் உலக வங்கியின் நிதியுதவி சென்னையை வந்தடையத் தொடங்கியது. 1977-ம் ஆண்டு, 62 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்தது உலக வங்கி. இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1980 முதல் 1988 வரை, உலக வங்கியால் தமிழ்நாடு அரசுக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் சென்னை முழுவதும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காலிசெய்யப்பட்டு, நகரத்துக்கு வெளியே குடி வைக்கப்பட்டனர். 1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அரசின் மொழியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு, பாரம்பர்ய மீனவர்களைக் கடற்கரையைவிட்டு அப்புறப்படுவது என்று பொருள்.

நன்றி: விகடன்

***

எம்.ஜி.ஆர் அரசாங்கம் எவ்வாறு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்த முயன்றது என்பது குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் விரிவாக அளித்த நேர்காணலை வினவு செய்திப்பிரிவின் சார்பாக தொகுத்து வெளியிடுகிறோம். (வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்!, மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் முதலான மீனவர் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்)

மெரினா கடற்கரையை அழகு படுத்துவதாக 1985-ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அண்ணா சதுக்கம் முதல் கலங்கரைவிளக்கம் வரையுள்ள பகுதிகளில் கட்டுமரங்களை நிறுத்தவோ வலைகளை காய வைக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தது.

1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் படகுகளை கடற்கரையில் நிறுத்தக்கூடாது, வலைகளை உலரவைக்கக்கூடாது என்று அரசாங்கம் திடீரென்று அறிவிக்கின்றது. இந்த முடிவின் அடிப்படையில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 3-அன்று கட்டுமரங்களை, வலைகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஒரு  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அப்போதைய தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கட்டுமரங்களையும் வலைகளையும் எப்படி அப்புறப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது.

மறுநாள் காலை நவம்பர் 4-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில்  சீரணி அரங்குக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் இடையே உள்ள கட்டுமரங்களை அப்புறப்படுத்தினர். சீரணி, ஓளவையார் சிலை, ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம்,  அயோத்தியா குப்பம்  முதலிய பகுதிகளைச் சேர்ந்த கட்டுமரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அங்கு இருந்த படகுகளை அப்புறப்படுத்த 10,000 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீசு மூலம் 150 லாரிகளின் உதவியோடு கட்டுமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அன்று மாலை 4 மணிக்கு அயோத்தியா குப்பத்தில் மீனவர்கள் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதற்கு மறுநாள், அதாவது நவம்பர் 5-ஆம் தேதியன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சென்னை எழிலகத்தில் மீனவர்கள் கட்டுமரத்தை திருப்பி தர வேண்டியும், மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டியும் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம்  நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மீனவர் சார்பாக மண்டல் குழுவில் தலைவர் சி.சுப்ரமணியம் ரிட் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அவ்வழக்கை நீதிபதி  மோகனுக்கு ஒதுக்கினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு வழக்கை நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.


படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?


நவம்பர் 6-ஆம் தேதி அன்று சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக மீனவர்கள் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனையெடுத்து, காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அன்னம்மாள் என்ற பெண்மணி உயிரிழக்கிறார். அந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி கலந்துகொள்கிறார். படகுகளைத் திருப்பித்தரவில்லை என்றால் நவம்பர் 8-அன்று எதிர்க்கட்சிகளோடு கூட்டம் நடத்தி போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 7-ஆம் தேதி அயோத்தியாகுப்பத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காவல்துறை தடுக்கிறது. தடுப்பை மீறி வழக்கு விசாரணை நடத்த தாமதம் செய்யும் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு மதியம் 12 மணிவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்கான காரணமாக விசாரிக்க வேண்டிய தலைமை நீதிபதி விடுமுறை மற்றும் அரசு எதிர் மனுத்தாக்கல் செய்ததுள்ளது ஆகியவை முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் கோட்டையை நோக்கி திரும்பியபோது மீனவர் கோதண்டராமன் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 9-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

சுமார் நான்கு மணி நேரம் கொட்டும் மழையில் கட்டுமரத்தை திருப்பி தரக்கோரியும்,கோதாண்டராமன் மறைவுக்காகவும்  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமையேற்று நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு இடையில், மீனவர் சார்பாக நவம்பர் 13-ஆம் தேதியன்று  பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொது செயலாளர் காளப்பன் தந்தியின் மூலம் ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


படிக்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்


நவம்பர் 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நவம்பர் 14-அன்று நீதிபதிகள் டி.என் தங்கவேலு மற்றும் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீனவர் சார்பாக வழக்கறிஞர் பி.ஆர்.செல்வராஜ் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.காந்தியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர்; ஆனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில் இரண்டு வாரம் அமைதியாக இருந்த சூழலில்  டிசம்பர் 4-ஆவது தேதி புதன்கிழமை நடுக்குப்பம், மெரினா காவல்நிலையம், காமராஜர் சாலை, குடிசை மாற்று வாரியம் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. போலீசார் 17 ரவுண்டு சுட்டனர். அதில் சேகர், அயோத்திக்குப்பத்தை சேர்ந்த துலுக்காணம், சேகர், மனோகர், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என ஐந்து மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். மீனவர்கள் மீது 8 வழக்குகள் பதியப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில்தான் உச்சநீதிமன்றத்தில் சின்னப்ப ரெட்டி-பாலகிருஷ்ண ஏராடி-காலித் அடங்கிய அமர்வு கட்டுமரங்களை மீனவர்களிடம் ஓப்படைப்பதற்கும், முன்பு போல் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கும் இடைக்கால உத்தரவை வழங்கியது.

டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் மீனவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள், வலைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற துணைபதிவளாரின் மேற்பார்வையில் அது நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற துணைபதிவளார் முன்னிலையில் மீனவர்களிடம் அவர்களுடைய வலைகள், வல்லங்கள், கட்டுமரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

டிசம்பர் 6 அன்று துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆரம்பாக்கம், எண்ணூர், பழவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மக்கள் கறுப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். டிசம்பர் 7 அன்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை மாட்டுவண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தஞ்சை, நாகை மாவட்டங்களில் துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில்  திருவல்லிக்கேணியில் தோழமை கட்சிகளுடன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 10 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை நீட்டித்தது.

கலங்கரைவிளக்கம் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி புறக்காவல் நிலையம் (outpost) அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு காவல் நிலையமே (police station) அமைக்கப்படுகிறது. துணை ஆணையராக இருந்த தேவாரம் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆணையராக நியமிக்கப்படுகிறார். மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. துப்பாக்கி சூடு மீனவர்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தியது.

– வழக்குரைஞர் லிங்கன்

***

மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காவி கும்பல் தற்பொழுது நீதித்துறையும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரச்சனை என்பது என்ன விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அதற்கு எதிராக பேசமால்,பசு மாட்டை கட்டி பிடிக்க சொல்கிறார்கள். பசுமாட்டை மட்டும் கட்டி பிடிக்க சொல்லும் இவர்கள் எருமை மாட்டை கட்டிப்பிடிக்க சொல்வார்களா? எருமை மாடு மட்டும் என்ன கேவலமா? பசு மாட்டை எங்களுடைய பயன்பாட்டிற்கும் உணவுக்காகவும் பயன்படுத்துகிறோமே தவிர கடவுள் நம்பிகை,புனிதமாக கூறுகிற ஆரிய பார்ப்பணிய கலாச்சாரத்திற்காக நாங்கள் பின்பற்றுவது இல்லை. இந்துராஷ்டிரத்தை நிறுவ அதற்கேற்றார் போல் இன்னொரு மாற்று பண்பாட்டை நம் தலையில் கட்டுகிறார்கள்.சொல்லப்போனால் இடது பக்கம் இருந்த ஒன்றை வலது பக்கம் நோக்கி சுற்ற நினைக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றாக மாற்றி அவர்கள் நினைக்கும் இந்துராஷ்டிரம் அமைவதற்கு ஏதுவான எல்லா சித்தாந்தங்களையும் மாற்றி அமைப்பார்கள்.ஏற்கனவே கல்வியை காவிமயப்படுத்தி கொண்டிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தற்பொழுது நம்முடைய பண்பாட்டிலும் காவிமயத்தை பூசி வருகிறது. நம்முடைய பண்பாட்டிற்கு எதிரானது பார்ப்பனிய பண்பாடு. அப்படிப்பட்ட பிற்போக்கான பண்பாட்டை இங்கு விதைக்க துடிக்கிறார்கள் காவி கும்பல்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

காவி பாசிஸ்டுகளின் கார்ப்பரேட் சேவையையும், சங்கப் பரிவாரக் கும்பல் வன்முறைகளையும் அம்பலப்படுத்துகிற ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுதந்திர ஊடகங்கள்தான் (Freelance Media – சமூக அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படும் ஊடகங்கள்) காவி பாசிஸ்டுகளின் இலக்காகியிருக்கின்றன.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் இந்துராஷ்டிர மாடலாக உள்ள உத்தரப்பிரதேசம்தான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிறது “எல்லைகளில்லா பத்திரிகையாளர்கள்” (Reporters without Borders) என்ற அமைப்பின் அறிக்கை.

கொலைகள்… கைதுகள்… மிரட்டல்கள்

காவி பாசிஸ்ட்டுகளுக்கு  எதிராக போராடினால் ‘புல்டோசரை’யும், எழுதினால் கைதுகள்-வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை.

கடந்த 2020-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் தாக்கூர் ஆதிக்க சாதி குண்டர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நாக்கறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அப்பெண்ணின் உடலைக்கூட அப்பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், இரவோடு இரவாக போலீசே எரித்துக் கொன்ற கொடூரம் இந்தியாவையே உலுக்கியது. இக்கொலை குறித்து உண்மைகளை வெளிக்கொணர உ.பி.க்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்கிற மலையாள இணையதளப் பத்திரிகையாளரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறை வைத்தது யோகி ஆதித்யநாத் அரசு. நீண்ட சட்டப்போராட்டம் மற்றும் களப்போராட்டங்களுக்குப் பின்னர்தான் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹத்ராஸ் கொடூரம் நடந்த அதே நாளில், அப்பெண்ணின் உறவினர்களைப் பேட்டிக்கொண்டு கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் “இந்தியா டுடே” வார இதழின் பத்திரிகையாளர் தனுஸ்ரீ பாண்டே. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனிடம் உ.பி அரசு தங்களை அச்சுறுத்துவதாகக் கூறும்படி தனுஸ்ரீ பயிற்சியளித்தார் என்று பத்திரிகையாளர் தனுஸ்ரீக்கு எதிராக அவதூறைப் பரப்பியது, காவி கும்பல். இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து விலகிவிட்டார்.

தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையில் இருந்து விலகியது தொடர்பாக ஆங்கில மாத இதழான “தி கேரவன்” கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வுக்கு எதிராக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர், இறுதியில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்தியா டுடே பத்திரிகையே பா.ஜ.க. ஆதரவு பத்திரிகை என்றும், அந்தவகையில்தான் தனுஸ்ரீயும் அப்பத்திரிகையில் இருந்து ‘விலகும்’ நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


படிக்க: கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!


இவை மட்டுமல்ல, உ.பி.யில் காவி கும்பல்களின் ஊழல்களையும் அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசினால் நரவேட்டையாடப்பட்டுள்ளனர். உ.பி.யில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுக்கப்படும் அவலத்தை வெளியிட்டதற்காக பஸ்வான் ஜெய்ஸ்வால் என்ற உள்ளூர் பத்திரிகையாளரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறது உ.பி. போலீசு. சாராய மாஃபியா கும்பல்களின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்ற மற்றொரு பத்திரிக்கையாளர், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உ.பி. அரசின் நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தியத்திற்காக ஸ்க்ரோல் (Scroll) இணையதளத்தின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் சில சான்றுகளே. 2017 முதல் 2022 வரையிலான யோகியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; 66 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன என்கிறது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான குழுவின் அறிக்கை.

பெண் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால், பல பத்திரிகையாளர்கள் அவர்களது துறையைவிட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் படுகொலையே இதற்குச் சான்று.

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வது, கைது செய்வது ஒருபுறம் என்றால், சுதந்திர ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்பதும் சாதாரண நிகழ்வாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் “தி வயர்” இணையதளத்தில் அமெரிக்க “மெட்டா” நிறுவனத்திற்கும் பா.ஜ.க.விற்கும் தொடர்பு இருப்பதாக (பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாள்வியாவிக்கு ‘கிராஸ் செக்’ (Cross check) முறையின் மூலம் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் பா.ஜ.க-விற்கு எதிரான கருத்துகளை அமித் நீக்க முடியும் என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


“மெட்டா” குறித்து வெளியிடப்பட்ட இக்கட்டுரை உறுதியான தகவல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டது என்று முதலில் கூறினாலும், பிறகு அந்த ஆதாரம் உண்மையானதல்ல என்று அறிந்தவுடன் தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியது “தி வயர்” இணையதளம்.

எனினும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் அந்த இணையதளத்தின் ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே. வேணு, துணை ஆசிரியர் ஜான்வி சென் உள்ளிட்டோர் மீது புகாரளித்திருக்கிறார் அமித். இந்தப் புகாரை முகாந்திரமாகக் கொண்டு “தி வயர்” இணையதளப் பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது போலீசு.

இதுமட்டுமின்றி, அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து குவிப்பு குறித்து செய்தி வெளியிட்டதற்காகவும், டெல்லி விவசாயிகள் பேரணியின் போது உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரின் கருத்துகளை வெளியிட்டதற்காகவும் “தி வயர்” இணையதளத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காவி பாசிச கும்பல்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்களை முற்றிலுமாக முடக்கும் வகையில், பொய் வழக்குகளைப் போடுவது, சிறையில் அடைப்பது, காவி குண்டர்கள், போலீசை ஏவித் தாக்குவது, கொல்வது என பலவகைகளில் நெருக்கடிகள் கொடுத்து ஒடுக்கி வருகிறது காவி கும்பல்.

என்.டி.டிவி-யை விழுங்கிய அதானி

பத்திரிகை துறையில் காவி பாசிஸ்டுகளின் தாக்குதல் ஒரு முக்கியமான விசயம், என்.டி.டி.வி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை, அந்த நிறுவனத்திற்குத் தெரியாமலேயே சட்டவிரோதமாக அதானி கும்பல் வாங்கிய நிகழ்வாகும்.

இந்திய அளவில் இந்தி மொழியில் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோலுரிக்கும் செய்தி நிறுவனம்தான் என்.டி.டி.வி. என்றழைக்கப்படும் “புதுடெல்லி  தொலைக்காட்சி” நிறுவனமாகும். பத்திரிகையாளர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகாராய் இருவரும் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் என்.டி.டிவியைத் துவங்கினர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ. 403 கோடி பத்தாண்டுகளில் திருப்பித் தருவதாக கடன்வாங்கியது ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ். ஆனால், கடனைக் கட்ட முடியாததால் என்.டி.டிவியின் 29.8 சதவீத பங்குகள் விஸ்வபிரதான் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

விஸ்வபிரதான் நிறுவனத்தை அதானி குழுமம் 2012-இல் வாங்கியது. இதனால், விஸ்வபிராதானுக்குச் சொந்தமான என்.டி.டிவியின் பங்குகள் அதானி குழுமத்திற்கு சொந்தமானது. ஆனால், ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனர்களோ, விஸ்வபிரதான் நிறுவனத்தின் பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பது குறித்து எவ்வித தகவல்களும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், இது முறைகேடான கையகப்படுத்துதல் என்றும் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு முறைகேடான முறையில் அதானி குழுமம் என்.டி.டிவி-யை கையகப்படுத்தியிருக்கும்போதே, திறந்த சந்தையில் என்.டி.டிவியின் இதர பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்கு அனுமதியளித்திருக்கிறது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி. நவம்பர் 23-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ஆம் தேதி வரை திறந்த சந்தையில் என்.டி.டிவி பங்குகளை வாங்கியதன் மூலம் 37.44 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. பிரனாய் மற்றும் ராதிகா ஆகியோர் தங்களிடமிருந்த பங்குகளில் 27.26 சதவீதத்தை விற்றதன் மூலம், என்.டி.டிவி நிறுவனத்தில் 55 சதவீதப் பங்குகளைப் பெற்று அதிக பங்குகளைக் கொண்ட தனி நிறுவனமாக மாறியிருக்கிறது அதானி குழுமம்.

என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி 24×7 ஆகிய நிறுவனங்கள் அதானி வசமாகியிருக்கின்றன. என்.டி.டிவி நிறுவனர்கள் மீது பண மோசடி விசாரணை, இந்தியாவிலிருந்து வெளியேற தடை போன்றவற்றின் மூலம் ஒன்றிய அரசு அச்சுறுத்தியே பங்குகளை விற்க வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது “அல் ஜசீரா” என்கிற சர்வதேச செய்தி நிறுவனம்.


படிக்க: டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


இதனால், என்.டி.டிவி இயக்குநர் குழுவிலிருந்து ராதிகா மற்றும் பிரனாய் விலகியிருக்கின்றனர். அதானி குழுமத்திற்கு என்.டி.டிவி கைமாறிய உடன் என்.டி.டிவியின் விவாத நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும், ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “‘ரமொன் மகசேசே” விருதைப் பெற்றவருமான ரவீஷ் குமார், என்.டி.டிவி-யிலிருந்து விலகியிருக்கிறார். தன்னுடைய விலகல் குறித்து “ஃபாரீன் பாலிசி” (Foreign Policy) என்கிற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல் விலை உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் சூழலில் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல் ஜெர்மனி அல்லது ஜப்பானில் என்ன நடக்கிறது என்று விவாதிக்க முடியுமா?” என்று கொந்தளித்திருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததால்தான் என்.டி.டிவியை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அதானி குழுமம்.

இந்தியாவில் உள்ள 400 செய்திச் சேனல்கள் மற்றும் 10,000 செய்தித்தாள்களில் பெரும்பாலானவை அரசு – ஆளும் வர்க்கங்கள் கக்குவதையே செய்தியாக வெளியிடுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவது பற்றியோ, சொந்த நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றியோ எவ்வித உறுத்தலுமின்றி போராடும் மக்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்ற ஊடகங்கள்தான் அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றன. ரவீஸ் வார்த்தையில் சொல்வதானால் “கோதி” (Godi- lapdog – வளர்ப்பு நாய்) மீடியாக்களாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், மக்கள் பிரச்சினை வெளிக்கொண்டுவருகிற, விவாதிக்கிற சுதந்திர ஊடகங்களின் முக்கியத்துவம் முன்பை விட அதிகரித்துள்ளது. காவி பாசிஸ்டுகளை சுதந்திர ஊடகங்கள் அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் தங்களை விமர்சிக்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்கின்றனர் பாசிஸ்டுகள்.

பல்வேறு வகைகளில் அடக்குமுறைகளைச் செலுத்துவதன் மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களை முடக்க எத்தனிக்கிறது பாசிச கும்பல். இதற்கெதிராக, ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துரிமை எழுத்துரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. இத்தகைய ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக சக்திகளும், மக்களும் கைகோர்க்க வேண்டிய தருணமிது.

அப்பு

அயலி (Ayali): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா வீடியோ

யலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்த பல சாஸ்திர,‌ சம்பிரதாயங்களை திணித்து வருகின்றனர். அண்மையில் கேரள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இன்றுவரை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போகமுடியாத சூழ்நிலையே உள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியது அது கடவுளால் உருவாக்கப்பட்டது இல்லை; ஆண் பெண் சமம் என்ற கருத்தை பொதுவெளியில் பேசினார். அதற்கு பிற்போக்கு சிந்தனை கொண்ட சங்கிகள் பலரும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆணும் பெண்ணும் சமமா நாங்கள் மேல் ஆடை இல்லாமல் வெளியே வருவோம் நீங்கள் அப்படி செய்வீர்களா என மிகவும் கீழ்த்தனமாக ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த காவி கும்பல் எப்படி பெண்களை இழிவா பார்க்கிறார்கள். சனாதனத்தை பெண்கள் மீது எப்படி திணிக்க முயல்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது அந்த நேரங்களில் இம் மாதிரி வலைத்தொடர்கள் வந்தது வரவேற்கத்தக்க விஷயம். சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய இந்த மாதிரியான பழைய பிற்போக்கான விஷயங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமாகிறது.

இந்த 21ம் நூற்றாண்டின் இன்றைக்கும் பெண்களை இரண்டாம் பட்சமாகவும் பெண் கல்வி பயில்வது சொந்தமாக வேலைக்கு செல்வதையோ ஆபாசமாக பேசக்கூடிய நபர்களான சங்கராச்சாரியாராக இருக்கட்டும் எஸ்.வி.சேகராக இருக்கட்டும் இந்த பார்ப்பன காவி கும்பல்கள்தான் இந்த 21ம் நூற்றாண்டில் நாம் பேசக்கூடிய குரங்கு கூட்டம். இந்த இணைய தொடர் என்பது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் திரையிட வேண்டியது சமகாலத்தைய அவசியமாகும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

0

நாகலாந்து மற்றும் மேகாலயாவில்  கிறித்துவர்களாக மதம் மாறிய   பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான ஜனஜாதி தர்ம-சம்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் (JDSSM) கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெரும்பான்மையாக பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். மேகாலயாவில்  32 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள். அவர்களில் 8.50 லட்சம் பேர் கத்தோலிக்கர்கள்.  நாகாலாந்தில்  20 லட்சம் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவத்தை  பின்பற்றுகின்றனர். இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான  ஜனஜாதி தர்ம சமஸ்கிருதி சுரசஷா மஞ்ச்  கிறித்துவராக மதம் மாறிய பட்டியல் பழங்குடியினருக்கு சலுகைகள் தரக்கூடாது என்றும் அவர்களை அப்பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், பிப்ரவரி 12-அன்று ஒரு லட்சம் பேரை திரட்டி  “சல்லோ டிஸ்பூர்” (Challo Dispur) என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 342 பிரிவு பட்டியலின மக்கள் பிரிவிலிருந்து பட்டியல் பழங்குடிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. எனவே கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை  ஜனாதிபதி முர்முவுக்கும், மோடிக்கும் அனுப்பி வைக்க இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!


இதுகுறித்து ஜே.டி.எஸ்.எஸ்.எம்-இன் உறுப்பினரான பினுத் கும்பங்  பேசுகையில், “கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினராக பலன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால் பட்டியலினத்தவருக்கான உதவித்தொகை, வேலைகள், பதவி உயர்வு போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.மேலும், “அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க கடுமையாகப் போராடும் பட்டியல் பழங்குடிகளின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர்” என்றவாறெல்லாம் கிறிஸ்துவ பழங்குடியினர் மீது மதவெறி வெறுப்பை கக்கினார்.

அதே போல், ஜே.டி.எஸ்.எஸ்.எம்  அமைப்பின் தலைவரான பாகிராம் போரோ கூறுகையில், “எங்களுடைய அமைப்பின் நோக்கம் இந்தியாவில்  இருக்கின்ற பழங்குடியின மக்களின்   கலாச்சாரத்தையும்,   பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் அவர்கள் பேசும் மொழியையும் பாதுகாக்க வேண்டியதாகிறது. பழங்குடியின மக்கள் அந்நிய மதங்களை நோக்கி நகரமால் தடுப்பதற்கும், மதம் மாறுவதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டங்களிலும்  கிருத்துவர்களுக்கு எதிராக  பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் மூலம்  பட்டியல் பழங்குடியின மக்களிடம் கிறித்துவ வெறுப்பை பேசுவதன் மூலம் நம்முடைய அமைப்பிற்கு  ஆதரவை நிலைநாட்ட முடியும்” என்று நேரடியாக பேசினார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தீஸ்கரில் கிறித்துவ பழங்குடியினரின் மதமாற்றத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தியதும் இதே ஜே.டி.எஸ்.எஸ்.எம் அமைப்பு தான்.

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் இந்தவகை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பெமா காண்டு முதல்வராக உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து அபோர் பழங்குடியினரை நீக்கிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !


சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்றுவதன் மூலம்  மக்களை பிளவு படுத்தி தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அது நாட்டில் இஸ்லாமியர்கள்-இந்துக்கள் என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது. அதையே காட்டி கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இதனை பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. எனவே, பழங்குடி மக்கள் மத்தியில் இவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

ரோகித் வெமுலா

‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும் ‘இளஞ்சிவப்பு அலை’யின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பு

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதிபர் பெட்ரோவுக்கு எதிராக ஊழல் புகார் குறித்து பெரு காங்கிரஸ் (நாடாளுமன்றம்) டிசம்பர் 7-ஆம் தேதி கூடி விவாதிக்க தீர்மானித்திருந்தது. பெட்ரோவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை என்பது முதல்முறை நடப்பதல்ல; இதற்கு முன்னர் இதே ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக்காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே, பெட்ரோவின் ஆட்சியைக் கலைக்க காத்துக்கொண்டிருந்த வலதுசாரிகள் பெரும்பான்மைக் கொண்ட பெரு காங்கிரசுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

சூழல் தனக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொண்ட பெட்ரோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மெக்சிகோ, அர்ஜென்டீனா நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.


படிக்க: சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


பெட்ரோவை அதிபர் பதவியில் இருந்து நீக்கிய உடன், அவரது அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக நிறுத்தியதன் மூலம் இதனை ‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பாக காட்டி, மக்களின் எதிர்ப்பினை திசைத்திருப்பலாம் என்று எண்ணிருந்தது பெரு காங்கிரஸ். ஆனால், தேர்ந்தெடுத்த அதிபரின் பதவியைப் பறித்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத புதிய அதிபரை நியமித்த பெரு காங்கிரஸ்மீது கடும் கோபமடைந்த மக்கள், “பெட்ரோவை விடுதலை செய்; புதிய அதிபரை பதவி நீக்கு. காங்கிரசைக் கலைக்கவேண்டும்; மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பெரு தலைநகர் லிமா, அரேகுய்பா, ட்ரூஜில்லோ உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலுவார்டேவுக்கு பெரு வலதுசாரிகள், அமெரிக்க ஆதரவு

பெட்ரோவின் அதிபர் பதவி பறிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்திற்குள்ளேயே, துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக்கியது பெரு காங்கிரஸ். ஊழலுக்கு எதிராகவும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பொலுவார்டே அழைப்பு விடுத்ததற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தேர்தலில் பெட்ரோவை எதிர்த்து நின்றவரும் “பாப்புலர் ஃபோர்ஸ்” என்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவருமான கெய்கோ புஜிமோரி.

டினா பொலுவார்டே அதிபரானதையும் தேசிய ஒற்றுமைக்கான அவர் விடுத்திருக்கும் அழைப்பையும் வரவேற்றுள்ளது அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organisation of American States (OAS)). “ஜனநாயகம், அமைதி, அமைப்புமுறைகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு அளிப்பதாக” தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேவையை குறிப்பறிந்து செய்து முடிக்கக்கூடிய இந்த ஓ.ஏ.எஸ். அமைப்பு அளித்திருக்கும் இத்தகைய ஆதரவு என்பது பெட்ரோ பதவி நீக்கப்பட்டத்தையும் பொலுவார்டே நியமிக்கப்பட்டதையும் அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதையே குறிக்கிறது.

பெட்ரோவின் சாயம் வெளுத்தது

பெட்ரோ அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் 79 இடங்களைப் பெற்ற வலதுசாரிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது பெரு காங்கிரஸ். தற்போது நடந்திருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரும் பெட்ரோ மீதும் அவரின் அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் முயன்றது.

பெரு காங்கிரசில் எதிர்ப்பு இருந்த அதேநேரம் சொந்த கட்சிக்குள்ளும் பெட்ரோவுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வந்தது. பெட்ரோ அதிபராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ஐந்து பிரதமர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர். அதேபோல், தான் நிராகரித்த பிரதமரை பெட்ரோ நியமித்ததால், தான் வகித்த கூடுதல் மந்திரி பதவியை இரண்டு வாரத்திலேயே ராஜினாமா செய்தவர்தான் தற்பொது அதிபராக பதவியேற்றிருக்கும் டினா பொலுவார்டே. காங்கிரசை கலைப்பது குறித்த பெட்ரோவின் அறிவிப்பு வெளியானதும் முற்றிலும் எதிரணியில் நின்றார் பொலுவார்டே.

அமைச்சரவையில் நிலவிய கருத்து முரண்பாடுகளாலும், வலதுசாரி மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக விலைபேசப்பட்ட சொந்த உறுப்பினர்களாலும் தனது அமைச்சரவையிலேயே எதிர்ப்பு வளர்ந்து, பலமிழந்து வந்த பெட்ரோ, மக்கள் மத்தியிலும் ஆதரவினை இழந்துவந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அதிபரான பின்னர் வாயே திறக்கவில்லை என்பது மக்களின் ஆதரவினை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

பெட்ரோவின் முகத்திரை கிழிய வெகு நாட்கள் பிடிக்கவில்லை. பெட்ரோவின் முதல் பிரதமர், எரிவாயு துறையை தேசியமயமாக்குவதாக உறுதியளித்தபோது, “அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என மறுத்தார் அதிபர் பெட்ரோ. இரண்டாவது, பிரதமர் மிர்தா வாஸ்குவஸ், “தனியாருக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் மூடப்படும்” என அறிவித்தவுடன் வட, தென் அமெரிக்க நாடுகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஹோச்ஸ்ஷைல்டு (Hochschild) என்ற தனியார் நிறுவனம் 25 சதவிகித பங்கு மதிப்பை இழந்தது.


படிக்க: சிலியின் வசந்தம் !


பிரதமரின் இத்தகைய அறிவிப்பு வெளியான ஒருசில நாட்களிலேயே, “சுரங்கங்களை மூடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை; சட்ட வழிகளில் நடத்தப்படும் சுரங்க நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்படும்” என தனது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டினார். இதன்மூலம் தனது ஆட்சியை தற்காலிகமாக தக்கவைக்கப் பயன்படுத்திக் கொண்டார். பெட்ரோவின் அறிவிப்புக்கு முன்னர்தான் “சுரங்கங்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தரத்தின் கீழ் செயல்படும்” என்று தெரிவித்திருந்தது ஹோச்ஷைல்டு நிறுவனம்.

பெட்ரோ ஆட்சியிலும் தங்களது வாழ்வாதாரத்தில் ஏதும் மாற்ற மேற்படாமல் மேலும் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள் வீதியில் திரண்டனர். சென்ற ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பல நாட்கள் நடந்தப் போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஆம், “இளஞ்சிவப்பு அலை”யின் வெற்றியால் தனியார்மயக் கொள்கையை ஒழிக்கமுடியாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது மட்டுமல்ல, “இளஞ்சிவப்பு” வீரரான பெட்ரோ கேஸ்டிலோ அந்த நேர்மையுடையவரும் அல்ல என்பதைதான் அவரது நடவடிக்கைகளும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் உணர்த்துகின்றன.

அமெரிக்காவிடம் சரணடைந்த பிழைப்புவாதி பெட்ரோ

பொதுவாக, தான் வகுத்துக் கொண்ட கொள்கையையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிலவுகின்ற அரசு கட்டமைப்புக்குள் செயற்படுத்த முடியாமல் திணறும்; தாங்கள் ஏற்றுகொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக செயல்படுத்த முயன்று எதிரிகளால் கொல்லப்பட்ட தலைவர்கள் பலரை “இளஞ்சிவப்பு அலை” பார்த்துள்ளது. ஆனால், இத்தகைய பட்டியலில் பெட்ரோவின் பெயரை ஒருபோதும் சேர்க்க முடியாது.

தனக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஒருபக்கம். நிலைக்குலைந்திருக்கும் அமைச்சரவை, ஆட்சியைக் கவிழ்க்க கழுகுபோல் அமெரிக்க ஆதரவோடு காத்துக்கொண்டிருக்கும் பெரு காங்கிரஸ் ஆகியவை மற்றொரு பக்கம். இம்மூன்று கத்திகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் பெட்ரோ இறுதியாக தனது ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள புகலிடம் தேடி சென்றது அமெரிக்காவிடம்.

தனக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை எதிர்கொள்ளவும் பெரு ஜனநாயகத்தை பாதுகாக்கவும் தனக்கு உதவுமாறு கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க கட்டப் பஞ்சாயத்து அமைப்பான ஓ.ஏ.எஸ்-சை நாடினார் பிழைப்புவாதி பெட்ரோ. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஓ.ஏ.எஸ்-சை நாடிய போது, பெருவின் அரசியல் நிலைமையை ஆய்வு செய்ய தனது உயர்மட்டக் குழுவை பெருவுக்கு அனுப்பிய ஓ.ஏ.எஸ், பெருவின் ஜனநாயக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஸ்திரத்தன்மையின்மையால் பெரு நாட்டை நிர்வகிப்பதும் அவசர பிரச்சினையில் தலையிடுவதும் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்ததன் மூலம் பெட்ரோவை கைகழுவிவிட்டது.

அதன் பின்னர் நெருக்கடி முற்றி முட்டுசந்தில் நின்ற பெட்ரோ தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைதான் காங்கிரசை கலைத்து அவசர தேர்தலுக்கான அறைகூவலாகும்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தற்போது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டி போராடி வருகின்றனர். இதில் 34-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு பலர் படுகாயமுற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம், மக்களிடம் அடங்காது கொழுந்துவிட்டு எரியும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு – ஜனநாயக உணர்வின் வெளிப்பாடுகளாகும்.


படிக்க:பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லாதவர்தான் இந்த பெட்ரோ.

அதுதான் அமெரிக்காவிடம் பெட்ரோ சராணாகதியடைந்துவிட்டாரே பிறகு ஏன் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது என கேள்வி எழலாம். “தனியார்மயத்தை ஒழிப்பேன், அரசுடைமையாக்குவேன்” என்று பேச்சளவிலும்கூட இருக்கக்கூடாது என்பதே அமெரிக்க மேலாதிக்கத்தின் எண்ணம்.

டினா பொலுவார்டேவுக்கு பெருவின் வலதுசாரி கட்சிகளும் அமெரிக்காவும் ஆதரவு அளித்திருப்பதன் காரணம் என்னவென்றால், தான் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் தனது கைப்பாவையாக அரசை மாற்றுவதற்காகதான். தேவையில்லையென்றால் பொலுவார்டேவை மாற்றி தனது ஆதரவாளர்களை அதிபராக்கவும் சிறந்த வழி இதுவே. 2026-ஆம் ஆண்டு வரை இருந்த அதிபர் பதவி காலத்தை குறைத்து 2024 ஆண்டில் தேர்தல் நடத்தப்போவதாக பெரு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து வளர்ந்துவரும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தினை தணிக்கதான்.

எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

வெண்பா

மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி என்ன என்று மாற்றி பேசுவது, இதன் மூலமாக தன்னை தக்க வைத்துக் கொள்வது; இதுதான் மோடியின் வழக்கம். அதானியின் நண்பரா நீங்கள் என்று கேட்டால், தேசநலன் என்று பேசுவது; அல்லது பொதுவான ஒரு எதிரியை முன்னிறுத்தி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது அவருடைய நடைமுறை.

இந்த அரசியலமைப்பு சட்டத்திற்குள்ளேயே நின்று அதை பாதுகாப்பதன் மூலமாக பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பலை அழித்துவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த அரசியலமைப்பை வைத்துக்கொண்டே, சட்டத்தை வைத்துக் கொண்டே இந்திராஷ்டத்தை அமைத்துவிட முடியும் என்பதுதான் 8 ஆண்டுகால பி.ஜே.பி ஆட்சியின் அனுபவம். இதை பாதுகாப்பதன் மூலமாக அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

எதிர்க்கட்சிகளின் மௌனம் என்பதுதான் இன்று ஒரு அவலமாக இருக்கிறது. ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒரு அணியில் திரள வேண்டியிருக்கிறது. பாசிசத்திற்கு மாற்றாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான திட்டங்களை முன்வைப்பதன் மூலமே அவர்களை வீழ்த்த முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

0

டந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் வழக்கறிஞர் லெக்‌ஷ்மனா விக்டோரியா கௌரி என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. விக்டோரியா கௌரியின் பா.ஜ.க தொடர்பை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கொண்ட ஒருவரை கொலீஜியம் எவ்வாறு பரிந்துரைத்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விடோரியா கௌரி, செப்டம்பர் 2020 முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர். உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் பா.ஜ.க-வின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பா.ஜ.க-வில் இணைந்த விக்டோரியா கௌரி, சுமார் ஒரு வருட காலம் அக்கட்சி உறுப்பினராக இருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் “சௌகிதார் விக்டோரியா கௌரி” என தனது பெயரை வைத்திருந்தார். மேலும் அவர் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். அவரது ட்விட்டர் டைம்லைனில் (timeline) பெரும்பாலும் மோடி மற்றும் அமித் ஷாவின் பதிவுகளின் ரீடுவீட்கள் (retweets) இடம்பெற்றுள்ளன. மாணவப் பருவத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் “பச்சை பயங்கரவாதமாக இஸ்லாம் இருப்பதைப் போல, கிறிஸ்தவம் வெள்ளை பயங்கரவாதமாக இருக்கிறது” என்று கௌரி கூறியுள்ளார். மேலும், இந்த இரு சமூகங்களும் “லவ் ஜிஹாதில்” ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதற்காகத் தான் காதலிக்கிறார்கள் என்பது இந்துத்துவா குழுக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சதிக் கோட்பாடு. மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கிறிஸ்தவம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


அவரை நீதிபதியாக உயர்த்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 21 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு பிப்ரவரி 1-அன்று கடிதம் எழுதினர். ஆனால் அதே சமயத்தில், மதுரையை சேர்ந்த 50-ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கௌரிக்கு ஆதரவாக பிப்ரவரி 3-அன்று  குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய அவலமும் அரங்கேறியது.

இதற்கிடையில், கௌரியின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  உச்சநீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. குறிப்பாக நீதிபதி கவாய், “நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால், நீதி வழங்கும்போது சார்பு இருக்கக் கூடாது” என்று தனது கருத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7-அன்று விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதலில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்கள், அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் அந்நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு  பரிந்துரைக்கப்படும். அந்தப் பெயர்கள் மாநில முதல்வர் மற்றும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்தப் பெயர்களையும் முதலமைச்சரின் கருத்துக்களையும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். உளவுத்துறையை (Intelligence Bureau) பயன்படுத்தி அவர்களின் பின்னணி சரிபார்க்கப்படும். சட்ட அமைச்சகம் இந்தத் தகவலை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும். அவர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசித்து பரிந்துரையை முடிவு செய்வார். இவ்வாறு தான் கௌரியின் பரிந்துரையும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இவர்களில் யார் கண்களுக்குமே விக்டோரியா கௌரி ஆர்.எஸ்.எஸ்-பாஜக தொடர்பு கொண்டவர் என்பது புலப்படவில்லை போலும்! தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் அடுத்த 13 ஆண்டுகளுக்கு நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமனங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கான காரணத்தை ஜனவரி 19, 2023 அன்று கொலிஜியம் வெளியிட்டது.

அதில், சவுரப் கிர்பால் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் அவரது துணை சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று காரணம் கூறி அவரின் நியமனத்தை அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 16, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார் ஜான் சத்யன். அவர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இரண்டு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை அடுத்து ஜான் சத்தியனின் நியமனமும் திருப்பி அனுப்பப்பட்டது.

ஒரு பதிவில், சத்யன் மோடியை விமர்சித்து தி குவின்ட்-இல் (The Quint) வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இன்னொரு பதிவு, 2017-ல் நீட் (NEET) தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவைப் பற்றியது. அந்தப் பதிவில் “அரசியல் துரோகத்தால் செய்யப்பட்ட கொலை” என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் “தேசத்தின் அவமானம்” (shame of you India) என்ற டேக்-ஐ (tag) கொண்டிருந்ததாகவும் உளவுத்துறை கூறியது.


படிக்க: ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !


பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சுந்தரேசன் அரசின் முக்கியமான கொள்கைகள், முன்முயற்சிகள், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து கூறியிருப்பதால் அவர் ஒருபக்க சார்புடையவர் என்ற அடிப்படையில் அவரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியுள்ளதாக அரசு கூறியிருக்கிறது.

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. வழக்கறிஞர்களாக இருந்தபோது, மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்களாக பாசிச மோடி அரசின் கண்களுக்குத் தெரிகிறார்கள். எதிர் குரல்களை விரும்பாதது தான் இந்துராஷ்டிர நீதி என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

பொம்மி

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

ன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது.

எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள் ஊதிப் பெருக்கப்பட்டதாகவும், அதனுடைய நிறுவனங்கள் பல போலியானதாகவும், அவருடைய குடும்ப உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த பங்குச்சந்தை விதிகளுக்கு புறம்பாக பெருவாரியான பங்குகளை அவர்களே வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. 70 சதவிகித பங்குகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி 80 – 90 சதவிகித பங்குகளை அவர்களே வைத்துக்கொண்டு எஞ்சி இருக்கக்கூடிய 10 – 20 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி போன்ற அரசு நிறுவனங்களை வாங்க வைத்து ஊதிப் பெருக்கியிருக்கிறார்கள். ஹின்டன்பர்க் நிறுவனம் 88 கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

பிப்ரவரி – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

தூய்மை பணியாளர்கள் மீது கிரிஸ்டல் (Krystal) தனியார் நிறுவனம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்தும் உழைப்பு சுரண்டல்!

கோவை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கிரிஸ்டல் நிறுவனத்திற்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

9.02.2023 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மாநகராட்சி நிர்ணயித்த ஊதியத்தை வழங்கவும், பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் மூன்றாவது  நாளாக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூய்மை பணியாளர்களுக்கான புதிய ஊதிய பட்டியல் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தூய்மை பணியாளர்களுக்கு 721 ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பின் வழங்காமல் இருந்ததை அடுத்து, அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 721 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, அதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

ஆனால், பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 420 ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு 721 ரூபாய் வழங்கியுள்ளதாக அரசுக்கு கணக்கு காண்பித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை சமூக நீதி தூய்மை பணியாளர் சங்க தலைவர் கவிதா அவர்கள் கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் “எங்களுக்கு கொடுத்த ஆணையின்படி ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு, கல்லூரி முதல்வர் “நீங்கள் என்ன அரசு ஊழியர்களா உங்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க”, பின், மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆணையையும் கொடுத்துப் பேசும்போதும்  “அப்படியெல்லாம் கொடுக்க உங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

படிக்க: சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் “மருத்துவமனை முதல்வரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒன்றாக தான் இருந்தனர். இப்போது அந்த அரசாணை தெரியாதது போல் எங்களிடம் கேள்வி கேட்கிறார்” என்கிறார் கவிதா அவர்கள்.

இதனை ஒப்பந்த நிறுவனமான கிரிஸ்டல் (Krystal) நிறுவனத்திடம் கூறியதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. “இவர்கள் யாரும் நமக்காக குரல் கொடுக்க மாட்டார்கள், நமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரமாட்டார்கள் நாமே போராடி பெற்றுக் கொள்வோம் என்று இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்று கூறி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

***

தூய்மை பணியாளர்கள் பேசும் போது, “நாங்கள் பணிக்கு சேர்ந்தது இரண்டு வேலைகளுக்கு மட்டுமே, ஆனால் முதல்வரோ எங்களை பல்வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிறார். குறிப்பாக நாங்கள் ஹவுஸ் கீப்பிங் பணி செய்யவே வந்துள்ளோம். ஆனால், மருத்துவமனை முதல்வர் நிர்மலா எங்களை அசிஸ்டன்ட் வேலை, கழிவுகளை அல்லும் வேலை, வெவ்வேறு தளங்களில் உள்ள மருத்துவர்களிடம் கையெழுத்து வாங்குவது என எங்களது பணி நேரம் முடிந்த பின்பும் இந்த வேலைகளை செய்ய நிர்பந்திக்கிறார்” என்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “படித்த மருத்துவர்கள் பயோ மெடிக்கல் வேஷ்டை போடுவதில்லை. கையுறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் கழிவுகள் போடும் இடத்தில் ஊசிகளை ஒரே பெட்டியில் உடைத்துப் போட்டு விடுகின்றனர். நாங்கள் மறுநாள் அந்த குப்பைகளை கைகளால் சுத்தம் செய்யும்போது அது எங்கள் கைகளில் காயத்தை ஏற்படுத்துகிறது”. இதனால் கடந்த மாதம், “சாமிநாதன் என்ற தொழிலாளிக்கு விரலில் நீடில் குத்தியது அதை நீக்கும் போது அவருக்கு ஏற்பட்ட வலி எங்கள் கண்களால் காண முடிந்தது”.

இதனை முறையாக மருத்துவர்களிடம் சென்று கூறினால் “நீங்கள் அந்தப் பணிக்கு தானே வந்தீர்கள் என்று எங்களை இழிவாக பேசுகின்றனர்”.

படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

“உடல் உபாதைகள் மற்றும் குளிப்பதற்கு வழங்கியுள்ள அறையில் குடிநீர் குழாய் முறையாக இல்லை, அந்தக் கழிவறைக்கு நாங்கள் சென்று வந்தால் அனைத்து விதமான நோய்களும் வந்துவிடும்”.

கொடுக்கப்பட்ட அறை உணவு அருந்த முடியாத துர்நாற்றம் வீசும் நிலையிலே இருக்கிறது. ஆனால், “இன்று வரை நாங்கள் அங்கு தான் அமர்ந்து சாப்பிடுகிறோம். அப்படி ஒரு நாள் உணவு அருந்தி கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த  மூர்த்தி  (கல்லூரி நிர்வாகி) உங்களை யாரு இங்க உட்கார்ந்து சாப்பிட சொன்னது, நீங்கெல்லாம் ரோட்ல போய் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று கூறியுள்ளார். அதற்கு தூய்மை பணியாளர்கள் “நீங்கள் முதலில் அங்கு அமர்ந்து சாப்பிட்டு காமிங்க பின்பு நாங்கள் அங்கு சாப்பிடுகிறோம்” என்று கூறி அதிகார திமிருக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

“நாங்கள் பணிக்கு போகும் நேரம் காலை 7 மணி. ஆனால் பணி முடிந்து வீடு செல்வது என்பது எந்த ஒரு நேரம் வரம்பின்றி வேலையில் ஈடுபடுகிறோம்”.

“பலமுறை நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரர் நிறுவனத்திடமும் கூறியும் எந்தவொரு கோரிக்கையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இது எங்களை மனதளவில் பாதிப்படையை செய்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறுகின்றனர்.

***

இப்போராட்டத்தை, சீர்குலைக்கும் வகையில் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணியை தொடர கிரிஸ்டல் நிறுவனம் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதை கேள்விக்கேட்ட போராடும் தூய்மை பணியாளர்களை “நீங்கள் அனைவரும் சேர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியுள்ளீர்கள், உங்களை கைது செய்வோம் மண்டபம் தயாராக உள்ளது” என்று போராட்டத்தை கலைக்க முயற்சித்து போலீசை குவித்து மிரட்டியுள்ளனர்.

“மருத்துவமனைக்கு உள்ளே அமர்ந்து போராடக்கூடாது உங்கள் நிறுவனத்தில் போய் போராடுங்கள்” என்று பெண் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் இந்த மருத்துவமனையில் தான் வேலை செய்கிறோம். அப்படி சொல்லி தான் எங்களை Krystal நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. எனவே நாங்கள் இங்கு அமர்ந்து தான் போராடுவோம். மும்பைக்குச் சென்று அல்ல” என்று அனைவரும் கேள்வி கேட்டவுடன் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இப்படி அவர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டல் நிறுவனத்தின்  மேலாளர் தினேஷ், கவிதா அவர்களை “ஏ கவிதா இங்க வா” என்று ஒருமையில் அழைத்தார். அவர்களிடம் கேட்கும் போது “எப்போதும் இப்படித்தான் எங்களை அழைக்கின்றனர், இவர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் படித்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் எங்களை மனிதனாக கூட மதிப்பதில்லை” என்று வேதனையோடு கூறுகின்றனர்.

***

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான். இந்த அரசு தனியார்மய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதுதான் தூய்மை பணியாளர்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம்.

பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் தனியாருக்கே வழங்குவோம் என்று இந்த அரசு கட்டமைப்பு முதலாளித்துவ உழைப்பு சுரண்டலுக்கு ஆதராவாக நிற்கிறது.

உழைப்பு சுரண்டலுக்கு எதிராக அனைத்து தூய்மை பணியாளர்களையும் களப்போராட்டத்தில் ஒன்று சேர்க்கிறது முதலாளித்துவ விசக்கிருமி. அதை சுத்தம் செய்வது தான் நாம் அனைவரின் கடமையாகும்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

இணையவழி என்று மாணவர்களை வஞ்சிக்காமல் மாணவர்களிடம் விண்ணப்பத்தை நேரடியாக  பெற்று உதவி தொகையை வழங்கிடு!

ரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக  வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இந்த முறை இணையவழியில்  பூர்த்தி செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இணையவழியில் எப்படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை  இதுவரை அரசும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அதற்கான இணைய வசதிகளும் அரசு கல்லூரிகளில்  கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 4000 முதல் 8000 வரை கல்வி உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 முதல் 2000 வரை கல்வி உதவித் தொகையும்  அரசு சார்பில் மாணவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு அதற்கான விண்ணப்பத்தை ஜனவரி மாதம்   மாணவர்களிடம் கொடுத்து கைகளால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு துறையின் வகுப்பு  ஆசிரியரும் ஜனவரி இறுதியில் வாங்கி கொண்டனர்.

ஆனால் தீடிரென்று  பிப்ரவரி 1 தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  இதுவரை கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட  கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை இணைவழியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.  விண்ணப்பத்தை பதிவு செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவும், பிப்பிரவரி 1 முதல் 15 வரை, நிர்ணைத்துள்ளது அரசு.

ஆனால் இதுவரையிலும் இணைவழியில் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்த அனுபவம் இல்லாத மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அரசு சார்பில் இணையவழியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எண் போட்டவுடன் அந்த தொலைபேசி எண்ணிற்கு வரும்   OTP யை பயன்படுத்தி அடுத்தகட்ட  விண்ணப்பத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஆதார் கார்டு எடுத்த தருணத்தில் பெரும்பாலான மக்களிடம் தொலைபேசி கிடையாது. அப்பா இல்லையென்றால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தொலைபேசி எண் தான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் முதல் பக்கம் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அரசு வழங்கப்பட்ட‌ இணைப்பிற்குள் செல்வதால் தொடர்ச்சியாக இணையவழி பிரச்சினைகளும் வந்து கொண்டிகிறது. TN யுடன் தொடங்கும் புதிய  வருமானவரி சான்றிதழும், கணினி வழியாக பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்களும் அரசு வழங்கிய இணைப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியாக மாணவர்கள் அட்டை வடிவிலான சான்றிதழ் தான் வைத்துள்ளனர் இதனால் எதன் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறதோ அந்த முக்கிய ஆவணத்தை கூட  மாணவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லிய அரசை  கண்டித்தும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும் 6-2-2022 அன்று திருவாரூர் திரு.வி.க கலை கல்லூரியிலும், 7-2-2023 நன்னிலம் அரசு கல்லூரியிலும், 8-2-2023 திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த உதவித் தொகையை பெறக்கூடிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள், இவர்கள் இதுவரை  இதுபோன்ற இணையவழிகளை பயன்படுத்தியது கிடையாது அதை பற்றி வழிகாட்டுதலையும் அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த கல்வி உதவி தொகை மூலம் தான்  ஒரளவு தன்னுடைய கல்லூரி கட்டணத்தையும், தேர்வு செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் மாணவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு அரசு இணையவழி என்ற முறையை கொண்டுவந்துள்ளது.   100 ரூபாய் செலவு செய்து கணினி ‌மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அளவிற்கு மாணவர்கள் யாரும்  தயாராக இல்லை. 100 ரூபாய் செலவாகும் என்பதால் அந்த விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் மாணவர்கள் விட்டு விடுகின்றனர்.

படிக்க: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

முந்தைய ஆண்டுகளில் கைகளால்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாகத்தில் நேரடியாக கொடுத்திருந்த போதும் சில மாணவர்களுக்கு இன்றுவரை உதவி தொகை வராமல் இருக்கிறது.  இப்படி இருக்கையில் இணையவழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணையவில்லை, வாங்கி கணக்கோடு பயன்படுத்தும் தொலைபேசி எண் இணையவில்லை, வருமானவரி சான்றிதழில் சரியாக பதிவேறவில்லை என‌‌ நொண்டி சாக்கு களை எல்லாம் சொல்லி கல்வி உதவி தொகையை நிறுத்தும் வேலையில் இப்போது அரசு இறங்கியுள்ளது.

ஏன் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை என‌ கேள்வி எழுப்பி அதை அடுத்தகட்டமாக நகர்த்திச் செல்ல தொடர்ச்சியாக அலை‌ய வேண்டி‌ இருப்பதால்  கிராமப்புற மாணவர்களும் அதை விரும்புவதில்லை.

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  அதற்கான பயிற்சி இல்லாத மாணவர்களிடம் தீடீரென்று இப்படி இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லுவதானது மாணவர்களை வஞ்சிக்கும் போக்காகும். மாணவர்களிடமே கல்வி உதவி தொகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த ஆண்டு இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்; தற்போது விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது என்ற‌ மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது அரசு. இப்படி எல்லா மாணவர்களும் சோர்வுற்று யாரும் விண்ணப்பம் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கல்வி உதவி தொகை முழுவதும் நிறுத்தும் வேலையை அரசு திட்டம் போட்டு செய்து வருகிறது.

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பாவெல் கார்க்கி

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே!

திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர்மந்திரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்துத்துவ (காவி) அமைப்புகள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சுக்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் என்கிற கோவிலுடன் தொடர்புடைய திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்னும் சாமியாருக்கு ஆதரவாக டில்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காவி உடையணிந்த ஒருவர், “இந்தியாவை பிரிட்டிஷும், காங்கிரசும் பிரித்து ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். கிருத்துவர்களும் அப்படியே ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் கொன்றுவிட்டு ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். இந்துக்களாகிய நீங்கள் எப்போது கொல்வீர்கள்? நீங்கள் இறந்த பிறகா கொல்வீர்கள்? கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்?” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.

இந்துக்கள் தங்களது வீடுகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கையில் ஆயுதங்களையும் மற்றொரு கையில் மத நூலையும் வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த காவி சாமியார்.

படிக்க : மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இந்துக்களுக்கு எதிராக வேதங்களையும், தாய்மார்களையும், சகோதரிகளையும் தாக்குபவர்களை  தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், “இந்துக்களுக்கு எதிராக செயல்படும் நபர்களை எல்லையில் சுட்டுக் கொல்லுங்கள், சாலைகளில் கொல்லுங்கள்” என்று துளியும் அச்சமின்றி இஸ்லாமியர்களை கொன்று குவிக்க நேரடியாக அழைப்பு விடுத்தார்.

காவி குண்டர்களை தட்டி கேட்பவர்களே இங்கு குற்றவாளிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மற்றொரு கூட்டத்தில் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்கே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானாவில் உள்ள பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளரும், கர்னி சேனாவின் தலைவருமான சூரஜ் பால் அமு பேசினார்.

தீவிர வலதுசாரி கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் கலந்துக்கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடியவர் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே என்பவர். இவர் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற நாம் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டும் என 2021-ல் கூறினார்.

சுரேஷ் சாவாங்கே பற்றி சூரஜ் பால் அமு பேசுகையில், “சுரேஷ் சாவாங்கேவை யாராவது தொட்டால், நாங்கள் அவர்களை அனுமதிப்போமா? இந்துராஷ்டிரத்தை உருவாக்க விடாமல் யாராவது எங்களைத் தடுத்தால் அவரைக் காப்பாற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் “இல்லை” என்று அங்கிருந்த காவிக்குண்டர்கள் ஆக்ரோசமாக கத்தி கூச்சலிட்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி “மோல்டிக்ஸ்” என்ற செய்தி நிறுவனம் டெல்லி போலீசிடம் புகாராளித்தது. ஆனால், வெறுப்பு பேச்சுக்களை பேசிய காவிக் குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாராளித்த செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது போலீசு.

குற்றவியல் நடைமுறை சட்டம் 149-வது பிரிவின் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டதாகவும், பதிவுகளை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் பதிவுகள் எழுதுவதை நிறுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

போலீசு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் விதமாக மோல்டிக்ஸ் நிறுவனர் அனுதீப் ஜக்லன் தனது ட்விட்டரில் “நான் இன்னும் குழப்பத்தில் இருக்கிறேன். எதற்காக எங்களுக்கு போலீசுத்துறை இதை அனுப்பி இருக்கிறார்கள்? காவி உடையணிந்த குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் சென்றிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

வன்முறையை தூண்டுபவன் நிராபராதி. அதற்கு எதிராக புகார் அளிப்பவன் குற்றவாளி. இதுதான் இன்றைய இந்தியாவின் (மனு)நீதி!

ரோகித் வெமுலா

குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!

சாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மையினரை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது ஹிமந்த பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக அரசு. “2026 ஆம் ஆண்டிற்குள் பிற்போக்கு நடவடிக்கையான குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிப்பேன்” என கடந்த ஜனவரி மாத இறுதியில் தெரிவித்திருந்த ஹிமந்த பிஸ்வா அரசு, முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை ஒடுக்கும் கருவியாக இதனை பயன்படுத்திவருகிறது.

அரசு மேற்கொண்டுவரும் ‘குழந்தைத் திருமண ஒழிப்பு’ நடவடிக்கையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது; போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 2,442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடருமானால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.

தற்போது குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுவோரை மட்டுமின்றி, நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்களையும், திருமணங்களைச் செய்துவைத்த மதபோதகர்களையும் தேடி தேடி கைது செய்துவருகிறது பாஜக அரசு. கைதுசெய்யப்படுவோரில் பெரும்பான்மையானோர் முஸ்லீம் ஆண்கள்.

படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

கணவன்களை இழந்த பெண்களும், மகன்களை இழந்த தாய்மார்களும் வாழ வழியின்றி நிர்கதியாக்கப்பட்டிருகின்றனர். எங்கே தனது வீட்டிற்குள் போலீசு நுழைந்து தனது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துவிடுமோ என்ற பயத்தில், கணவனை இழந்த, 2 குழந்தையின் தாயான பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இனியும் பொறுத்துபோக முடியாது என, கடந்த 4 ஆம் தேதி மோரிகான் மாவட்டத்தில் உள்ள லஹரிகாட் போலீஸ் நிலையத்திற்கு முன்கூடிய பெண்கள், கைது செய்யப்பட்ட தனது கணவன்களையும் மகன்களையும் விடுவிக்கும்படி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் என்றும் பாராமல் அவர்கள்மீது காட்டுமிரண்டாண்டிதனமாக நடந்து கொண்டது போலீசு. அவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் – “திருமணம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்” என்பதுதான்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா, “குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்கப் போவதில்லை” என்று கூறியவர், “5 ஆண்டு நடவடிக்கையில் இதுவொரு பகுதி மட்டும்தான்” என திமிராக பதிலளித்துள்ளார். பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பாஜகவின் இத்தகைய நடவடிக்கையை விமர்சிப்பதால் குழந்தைத் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதல்ல. ஆனால் சாதிய வர்ணாசிரம பிற்போக்கில் மூழ்கித் திழைத்திருக்கும் பாசிச பாஜகவுக்கு இதில் பேசவேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. பெண்களை பாதுகாக்கவேண்டுமானால், கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்க வேண்டும். கல்விபயில உதவித் தொகை வழங்கியிருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பினை வழங்கியிருக்க வேண்டும். மாறாக, 2020 இல் முஸ்லீம் பிள்ளைகள் குறிப்பாக பெண்கள் பயிலும் அசாம் மாநில அரசு நடத்திவந்த பல மதராஸாக்கள் மூடப்பட்டன. இது நடந்தது பாஜக ஆட்சியில்தான்; அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் இதே ஹிமந்த பிஸ்வா தான்.

படிக்க : அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

பெண்கள் பாதுகாப்பு குறித்தோ பிற்போக்குதனம் குறித்து பேச முதலில் பாஜகவுக்கு யோக்கியதை இருக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கூடாரங்களாக இருக்கின்றன. பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. மத பண்பாடுகளைக் கடைப் பிடித்துவரும் முஸ்லீம், பழங்குடியின மக்களை ஒடுக்க பயன்படுத்த கையாண்டுவரும் ஓர் கருவியே இந்த நடவடிக்கை. பல்தேசிய கலாச்சாரம், பண்பாட்டை அழித்து ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான காவிகளின் நகர்வு இது.

ஆதினி