என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தின் சார்பாக, கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரை !
தோழர் இராஜு பேசுகையில், இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது எவ்வாறு திட்டமிட்டு ஸ்டெர்லைட்டால் அரங்கேற்றப்பட்டது என்பதையும், அரசின் அத்தனை உறுப்புகளும் எவ்வாறு கார்ப்பரேட் சேவை செய்கின்றன என்பதையும் விவரித்துப் பேசினார். இதனை எதிர்கொள்வதற்கான அவசியம் குறித்தும் அதற்கான புதிய உத்திகளை வகுத்துக் கொள்வது குறித்தும் உரையாற்றினார்.
அவரது உரையின் காணொளி:
உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு பேசுகையில், போலீசு எவ்வாறு மக்கள் விரோதமாக மாறியிருக்கிறது என்பதை விவரித்துப் பேசினார். மேலும் இதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கவிடாமல் தடுக்க வேண்டுமெனில், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தமிழகத்தின் பொதுக்கருத்தாக மாற்றப்பட வேண்டும் என்றார்.
உலகமயச் சூழலில் பெரியவர்களுக்கே வாழ்க்கை என்பது எந்திரம் போல ஆன பிறகு குழந்தைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் விளையாட்டு உலகம், மழலையர் உலகம் அனைத்தும் சுருங்கி வருகிறது. குழந்தைகளின் உலகில் முக்கியமான குதூகலம் சர்க்கஸ். நேற்றைய தலைமுறையினர் பார்த்துக் களித்த சர்க்கஸ் உலகம் இன்று இல்லை. அவ்வப்போது வரும் இன்றைய சர்க்கஸில் பழைய சர்க்கஸின் பிரம்மாண்டம் இல்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ,மூர்மார்க்கெட் பின்புறம் கண்ணப்பர் திடலில் ஜம்போ சர்க்கஸ் நடைபெறுகிறது. சென்னை மக்களை மகிழ்விக்க வந்துள்ள ஜம்போ சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய அங்கு சென்றோம்.
சர்க்கஸ் திடலினுள் நுழைந்த போது, தமிழக மற்றும் வட இந்திய கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரும தங்கள் காலை வேலைகளில் மும்முரமாக இருந்தனர். ஒருவர் பல் துலக்கிக்கொண்டிருந்தார். மற்றொருவர் இடுப்புத் துண்டுடன் குளிக்க சென்றார். சிலர் சமையல் கட்டில், காலை சாப்பாட்டுக்கு கோதுமை மாவு பிசைந்து கொண்டிருந்தனர். சிலர், குதிரைகளுக்கும் நாய்களுக்கும் தீனியை தயார் செய்து கொண்டிருந்தனர். வளையத்துக்குள் கலைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பெண் கலைஞர்கள் குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
சிலர் கூடாரம் அமைக்க உதவும் படுதாக்காளை விரித்து வெயிலில் உலர்த்தினர். சிலர் கிழிந்த படுதாக்காளை ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டிருந்தனர். முதியோர் சிலர் காலை வெயிலில் வெறுமனே உட்கார்த்து கொண்டிருந்தனர். ஊழியர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்களோ வேலை மும்முரத்தில் எங்களிடம் ஈடுபாடு காட்டவில்லை.
சர்க்கஸ் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றோம். அவர்கள் வேண்டா வெறுப்புடன், “பேட்டி எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஏற்கனவே வந்து பார்த்தவர்கள் செய்தது போதும்” என்றனர். விளக்கங்களை எவற்றையும் அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் வலியுறுத்திக் கேட்ட பின்னர், “பலமுறை நாங்கள் மனு கொடுத்தும் எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. இனி எங்களுக்கு எதுவும் நடக்காது. நாங்கள்தான் இந்த வேலையை விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கும் இதை விட்டால் வேறு வேலை எதுவும் தெரியாது. அதனால்தான் இதில் கிடந்து உழல்கிறோம். நீங்கள் ஓனரிடம் பேசிக் கொள்ளுங்கள். அவர் பொங்கல் தினத்தில் இங்கு வருவார்” என்றனர்.
ஒரு தொழிலாளி, என்ன விசயமென்று விசாரிக்க நம் அருகே வந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் தமிழன்தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனது 40 ஆண்டுகால சர்க்கஸ் பணியை ஒரு துயரக் கதை போல் விவரித்தார்.
சர்க்கஸ் தொழிலாளி
“நான் கள்ளக்குறிச்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவன். பத்து வயதிலேயே சர்க்கஸில் சேர்ந்து விட்டேன். அதுமுதல் இப்போது 54 வயது வரை இங்கேயே என் காலம் ஓடுகிறது. நான் சர்க்கஸுக்கு விரும்பி வரவில்லை. என்னுடைய போதாத காலம், என்னை இங்கு தள்ளிவிட்டது. எனக்கு சிறுவயதிலேயே அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். பெங்களூரில் இருந்த என் அண்ணன் என்னை அங்கு அழைத்துச் சென்றார். என் அண்ணியோ எனக்கு சோறு போட மறுத்தார். நான் பொறுக்க முடியாமல் கால்போன போக்கில் நடந்து, கடைசியில் சென்னை வந்தேன். இங்கு சோத்துக்கு ஹோட்டலில் பிளேட் கழுவினேன். அங்கு என்னை பார்த்த ஒருவர் பக்கத்தில் நடக்கும் சர்க்கஸுக்கு வேலைக்கு வருகிறாயா என்று கூப்பிட்ட, நானும் சர்க்கஸ் பார்க்கும் ஆசையில் வந்தேன். இங்கும் எனக்கு முதலில் பாத்திரம் கழுவும் வேலையை தான் கொடுத்தார்கள். அப்போது மாதம் 60 ரூபாய் சம்பளம். ஆனால் ஓட்டலில் மாதம் ரூபாய் 10 தான். தொடர்ச்சியாக இங்கே பல வேலைகளை கற்றுக் கொண்டேன்.
அதுமுதல் சில ஆண்டுகள் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருப்பது திரும்பவும் இன்னொரு சர்க்கஸ் கம்பெனிக்கு மாறுவது என்று இதுவரை 40 ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகளில் வேலை பார்த்துள்ளேன். நியூ கிராண்ட் சர்க்கஸ் – கேரளா, பாரத் சர்க்கஸ் – கர்நாடகா, ஜியோ சர்க்கஸ் – மேற்கு வங்கம், எஸ்.எம். சர்க்கஸ் – ஆந்திரா, வீனஸ் சர்க்கஸ் – தமிழ்நாடு, என்று ஏராளமான சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து விட்டேன். இந்த ஜம்போ சர்க்கஸில்தான் நீண்ட நாட்களாக இருக்கிறேன்.” என்றார்.
இன்றளவும் வாகனம் மூலம் விளம்பரம் செய்யும் ஜம்போ சர்கஸ் நிறுவனம்.
சர்க்கஸ் தொழில் பற்றி கேட்ட பொழுது, “சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய் விட்டார்கள் ! போக முடியாதவர்கள்தான் இன்னும் இருக்கிறார்கள். விலங்குகள் எப்போது எங்களை விட்டு போனதோ அப்போதே எங்கள் உயிரும் போய்விட்டது. விலங்குகளை வதை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களிடமிருந்து விலங்குகளை ஓட்டிக் கொண்டு சென்றவர்கள் அவற்றையும் கவனிக்காமல் கொன்று விட்டார்கள். அதன் பிறகு நாங்களும இங்கு செத்துக் கொண்டிருக்கிறோம். சர்க்கஸ் என்றாலே விலங்குகள்தான். இப்போது விலங்குகள் இல்லாததால் கலைஞர்கள் ஒவ்வொரு நொடியும் தங்கள் உயிரை கொடுத்து புதுபுது வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். அதை ரசிக்க ஏதோ கொஞ்சம் பேர் வருகிறார்கள்.” என்றார்.
“இப்போது கொடுக்க வேண்டிய கூலியை கூட முதலாளியால் ஒழுங்காக கொடுக்க முடியவில்லை. நாங்களும் அவரை நெருக்கி கேட்பதில்லை. எங்கள் முதலாளிகளுக்கு எங்களை ஏமாற்றும் எண்ணம் ஏதும் இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது வருமானம் இல்லை என்றாலும் எங்களுடைய சாப்பாட்டுக்கு அவர்கள் எந்த ஓரவஞ்சனையும் செய்வதில்லை. இன்னமும் காலையில் டிபன் உப்புமா, பூரி, சப்பாத்தி என்று அவரவர்களுக்கு விருப்பமானதை தேவையான அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதியம் குழம்பு சாம்பார் கூட்டு,பொறியல் முட்டையுடன் சாப்பாடு கிடைக்கும். இன்றளவும் எங்கள் சாப்பாட்டுக்கு மட்டும் முதலாளி எந்த குறையும் வைத்தது இல்லை. கம்பெனிக்கு போதுமான வருமானம் வரவில்லையே என்று எங்களுக்குத்தான் மனசு வருத்தமாக இருக்கிறது..” என்று தனது முதலாளியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
தொடர்ந்து ஜம்போ சர்க்கசின் வரலாற்றைப் பற்றி கூறத் தொடங்கினார். “ஜம்போ சர்க்கஸ் தொடங்கிய முதலாளி எம்.வி. சங்கரன், கேரளத்துக்காரர். இவர் விலங்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர். ஜம்போ என்ற பெயர் கொண்ட யானை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் பல லட்சம் குழந்தைகளின் செல்லப்பிராணியாக வலம் வந்தது. இது பதினாறு அடி உயரமும் 7 டன் எடையும் கொண்ட பலசாலி. ஆனால் சிறு குழந்தைகளும் அணுகும் மெல்லிய மனம் படைத்தது. அது இறந்த பிறகும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இன்றளவும் அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் எலும்புக்கூடாக பராமரிக்கப்படுகிறது. இதன் நினைவாகத்தான் தன்னுடைய சர்க்கஸ் நிறுவனத்துக்கு ஜம்போ சர்க்கஸ் என்று பெயர் வைத்தார்.”
முன்னாட்களில் சர்க்கசில் என்னென்ன வகையான மிருகங்கள், கலைஞர்கள், சர்க்கஸ் சாகசங்கள் இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து விளக்கினார். “ரசியாவின் கொசவ் பிரதேசத்திலிருந்து வந்த குதிரைகள், அரேபியாவின் ஒட்டகங்கள், உலகின் பல முனைகளிலிருந்தும் வந்த நாய் இனங்கள், பாமரனியன், டால்மியன், பாண்ட் மற்றும் கூர்வுணர்ள்ள ரசியன் பூடில், டாஷ், பாரசீக பூனைகள், ஓநாய்கள், நீர் யானை, வரி குதிரை, பிரேசிலிய காடுகளில் காணப்படும் மாஸா என்ற அரிய கிளி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் காக்டெயோஸ் என்ற அரிதான பறவை, கரும்புள்ளி பெக் இப்படி ஒவ்வொரு மிருகங்களையும் பறவைகளையும் பார்த்து பார்த்து வாங்கி அவற்றின் மீது தங்களது உயிரையே வைத்திருந்தனர் கலைஞர்கள்.
இந்த கலைஞர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்தான். ரசியா, ஆப்பிரிக்கா, நேபாளம், இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா என்று உலகே இந்த கூடாரத்தில் வசித்தது. அப்போது மக்களையும் மகிழ்வித்து மனநிறைவோடு வாழ்ந்தோம். அது ஒரு காலம்! அப்போது காட்சிக்கு காட்சி புதுமைகள் செய்வோம். 40-க்கும் மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தும். குழந்தைகளும் பெரியவர்களும் இளைஞர்களும் வைத்த கண் எடுக்காமல் மெய் மறந்து ரசிப்பார்கள். பஃபூன்களின் சேட்டை கண்டு குழந்தைகள் வயிறு நோக சிரிக்கும். அக்குழந்தைகளின் சிரிப்பை அடக்க முடியாமல் பெரியவர்கள் திண்டாடுவார்கள். அப்படி ஒரு சந்தோசம் அது.
எத்தனை எத்தனை விசித்திரங்கள்? க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாகிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப் அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், லெக் ஜங்லிங், ஆப்பிரிக்கன் பையர் டேன்ஸ், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு நீர் யானை, குதிரை, ஒட்டகம், யானை, நாய், கிளி, சிங்கம், புலி, வரி குதிரை, பூனை இவற்றின் சாகசங்கள் என ஆயிரம் கண்கொண்டு பார்த்தாலும் தீராத காட்சிகள். ஆனால் இப்போது நிலைமை சொல்ல முடியாத துயரமாகி விட்டது.” என்றார்.
“40 ஆண்டுகால கலைஞர்களுக்கும் மாஸ்டர்களுக்கும் தினக்கூலி ரூ 800 கொடுப்பதற்கு பெரும்பாடாக இருக்கிறது. இதற்கு அவர்கள் 12 மணி நேரம் உழைக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணத்தை ஏற்படுத்தும் சாகசங்கள் செய்ய வேண்டும். இந்த நிலையில் இங்கு யார் விரும்பி வேலை செய்ய முடியும்? உதவியாளர்களுக்கு, எலக்ட்ரிசின்களுக்கு, சமையல் செய்பவர்களுக்கு, வாகன ஓட்டுநர்களுக்கு, செக்ரூட்டிகளுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என ரூ 300-லிருந்து ரூ.700 வரைதான் தினக்கூலி.
அதற்கே இங்கு சர்க்கஸில் தினப்படி வசூல் வருவது பெரும்பாடாக இருக்கிறது. இதற்கே போலீசுக்கு ஓசி டிக்கெட், அதிகாரிகளுக்கு ஓசி டிக்கெட் தரவேண்டும். தற்போது சராசரியாக மொத்தத்தில் 20-லிருந்து 25 சதவீதம்தான் டிக்கெட் விற்கிறது. அதை வைத்து என்ன செய்வது? முதலாளி எங்களுக்கு இவ்வளவு செய்வதே பெரிய பாக்கியம். கேரளா அரசாங்கம் மட்டும்தான் பழைய உறுப்பினர்களுக்கு, நலிந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு மாதம் ரூ. 2000 பென்சன் தருகிறது. அதுவும்கூட இப்போது இருப்பவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைதான் ஒரே போக்கிடம்.
முன்பெல்லாம் எங்களுக்கு, விலங்களுக்கு என்று தனித்தனியாக மருத்துவர் இங்கேயே இருந்தார். அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கிறோம். இதற்கும் உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் ஏதாவது எழுதி வேட்டு வைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் உங்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. மற்றப்படி யார் மீதும் அவர்களுக்கு கோபம் இல்லை.” விரக்தியோடு பேசி முடித்தார்.
மக்களை மகிழ்விக்க மனித குலத்தின் ஆகத் திறமையான கலைஞர்களை உருவாக்கிய சர்க்கஸ் கலை இங்கே ஆதரவின்றி தவிக்கிறது. மனித உடல் எதையெல்லாம் செய்ய முடியாது என்பதை உடைத்து எதிர்கால தலைமுறையினருக்கு திறமைகளை கைமாற்றிக் கொடுத்த அந்த முதுபெரும் கலை இன்று சீண்டுவாரின்றி நலிகிறது.
நிற்கதியாய் இருக்கும் அந்த சர்க்கஸ் கூடாரத்தை பார்த்துக் கொண்டே கனத்த மனத்தோடு திரும்பினோம்.
2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 – உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்…
அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய போஸ்டரைக் கொடுத்தார். நாங்களும் மொழிக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறினார். அந்த போஸ்டரில் உலகத் தாய்மொழிகள் நாள் குறித்து ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாசகங்கள் இருந்தன.
அந்த டென்ட்டில் இருந்த ஒருவர் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னிடம் இந்தியில் என்னவோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று கேட்டேன்.
பிறகு நல்ல அழகான ஆங்கிலத்தில், இந்த போஸ்டரில் இருக்கும் “International Mother Languages Day” என்று ஆங்கிலத்தில் இருந்ததை குறிப்பிட்டு, இந்த ஆங்கிலத்தை எடுத்துவிடுங்கள், வேண்டும் என்றால் தமிழிலேயே போஸ்டரை போடுங்கள், நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்றார்கள். தமிழ் அழகான மொழி என்றார் அவர்களில் ஒருவர்.
நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆரிய எதிர்ப்பு தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தவன் என்பதால், அவர்களின் தமிழ்ப்பாசத்தைக் கண்டு நான் உருகவில்லை.
அந்த டென்ட் கொட்டாய் பேர்வழிகள் எந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிய அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. பிறகு இரண்டு மணி அவர்களோடு அங்கே விவாதம் நடந்திருக்கும்.
ஆங்கிலத்தை ஒழித்தே கட்டவேண்டும். அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்கள். அதற்கு நான், ஆங்கில ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் இந்தியாவிலுள்ள மொழிகள் என்ன உலகம் முழுக்கவே பல மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதெல்லாம் உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டேன்.
ஆனால் இந்தியாவில் ஒரு கூட்டுச் செயல்பாடு செய்வதென்றால், பல மொழியினர் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது, நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடுவது என்று கேட்டேன். ஆங்கிலம் வேண்டாம் என்றால், இந்தியில் உரையாடுங்கள் என்று கூறவருகிறீர்களா என்று கேட்டேன்.
“அது வந்து, அது வந்து… ”
என்னோடு இருந்த பிற மொழிக்காரர்களையும் சுட்டிக்காட்டி, “நான் தில்லிக்கு வந்தால் உங்களோடு இந்தியிலும் இதோ இவர் இருக்கிறாரே இவர் பெங்களூர், பெங்களூருக்கு போனால் இவரோடு கன்னடத்திலும், கொல்கத்தா போனால் இவரோடு பெங்காலியிலும் பேசவேண்டுமா? அல்லது இவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தால் என்னோடு தமிழில் பேசுவார்களா?” என்று கேட்டேன்.
ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, இந்த டென்ட் கொட்டாய்காரர்களோ இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழிப்பது என்று பேசுவது இந்திக்கு எந்தப் போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் நமது அரசியல் தலைவர்கள் இந்திக்கு எதிராக ஆங்கிலத்தையும் உறுதியாக பயன்படுத்தினார்கள்.
ரங்கராஜ் பாண்டே அந்த டென்ட் கொட்டாக்காரங்களுக்குச் சொந்தக்காரர்தான். அவங்களோட அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைத்தான் இங்கே வந்து கொட்டுகிறார் பாண்டே. தமிழை ஆதரித்து ஆங்கிலத்தை எதிர்ப்பது போல பாசாங்கு செய்கிறார் அவர்.
நம்மூர் முட்டாள்கள், “பாண்டே சொல்றது கரெக்ட்தான் இல்லே!”ன்னு கெக்கே பிக்கேன்னு சிரிப்பார்கள். ஆங்கிலம் வெளிநாட்டு மொழி, இந்தி நம்ம நாட்டு மொழி என்று குதர்க்கவாதம் புரிவார்கள்.
ஆர்.எஸ்.எஸ்-காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்.
‘யாதும்’ – ஆவணப்படம் மூலம் அறியப்பட்டவர் கோம்பை எஸ். அன்வர். வரலாற்று ஆய்வாளர், பத்திரிக்கையாளர் , புகைப்பட கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக அளித்த நேர்காணலில் இசுலாமியர்களின் கல்வி, அவர்களின் பன்மைத்துவம்,வியாபாரத்தால் இஸ்லாம் வளர்ந்த விதம், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போன்ற பல விஷயங்களை பேசுகிறார். சென்னையில் அவரது இல்லத்தில் நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.
***
கேள்வி : தமிழ் முஸ்லிமான நீங்கள் வளர்ந்த சூழல் பற்றி சொல்லுங்கள். உங்கள் எண்ணவோட்டத்தை எது உருவாக்கியது?
பதில் : எனக்கு தேனி மாவட்டத்திலுள்ள கோம்பைதான் சொந்த ஊர். என் அப்பா ஏலக்காய் வியாபாரி. திராவிட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். அப்பா மட்டுமல்ல உறவினர் அனைவரிடமும் தமிழர் என்பதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்பது எங்களுக்கு சிறு பிராயத்திலேயே இயல்பாக அமைந்த ஒன்று. ஊரில் மத வித்தியாசம் என்னவென்றே தெரியாது.
வெளியூரில் பள்ளியில் படிக்கும்போது மதம் குறித்த லேசான உராய்வுகள் வந்தன. தமிழ் முஸ்லிம்கள் பேசும் தமிழ்தான் அருமையான தமிழ் என்று என்னுடைய தமிழாசிரியராக இருந்த செல்வராஜ் வகுப்பறையில் பாராட்டுவார். அது உராய்வுகளுக்கு அருமருந்தாக அமைந்தது. அதே கால கட்டத்தில் நான் சந்தித்த பெரும்பாலான இஸ்லாமிய மதகுருமார்கள் (ஹஜ்ரத்மார்கள்) சற்று பிற்போக்காகவே எனக்கு தெரிந்தார்கள். பெண்கள் மேற்படிப்பில் ஆர்வமற்றவர்களாக, புகைப்படம் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், முஸ்லிம்களுக்கு சினிமா (ஹராம்) தடுக்கப்பட்டது என்றும் அவர்களில் பலர் உரக்கக் கூறிக் கொண்டிருந்த காலம். இது போல் இன்னும் பல. எனவே நான் மதத்திலிருந்து சற்று விலகியே இருந்தேன்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த சமயம் என்று நினைக்கிறேன், தாரிக் அலி (Tariq Ali) என்ற இடது சாரி சிந்தனையாளர் எழுதிய “Shadows of Pomegranate Tree” என்ற நாவலைப் படித்தேன். 15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் மூர்களின் (இஸ்லாமிய ஆட்சியாளர்களின்) இறுதி ஆட்சி காலத்தைப் பற்றிய கதை. அறிவைத் தேடுபவர்களாகவும், விஞ்ஞானத்தை போற்றுபவர்களாகவும், ஐரோப்பிய கிறித்துவ உலகம் வெறுத்து ஒதுக்கிய யூதர்களுக்கு பாதுகாப்பாக இஸ்லாமிய சமூகம் இருந்த வரலாற்றை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது அந்த நாவல். அந்நாவலைப் படித்த பின்னர்தான் இங்கிருக்கும் இன்றைய முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது, புரிந்து கொள்வது தவறு என்று முடிவுக்கு வந்தேன். குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எனது புரிதல் மாறுபடத் துவங்கியது.
கே : ’யாதும்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தீர்கள். அதை எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
பதில் : தமிழ் எனக்குத் தாய் மொழி. கல்லூரிக்காக சென்னைக்கு வந்த புதிதில் எனது பெயரைக் கேட்டவுடன் பலரும் இந்தியில் அல்லது உருதுவில் உரையாடத் துவங்குவார்கள். அவர்கள் பலருக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட கணிசமான முஸ்லிம்கள் தமிழகத்தில் வசிக்கின்றார்கள் என்பதே தெரியாது. தமிழகத்திற்கும் அரேபியாவிற்குமான நீண்ட கால வணிகத் தொடர்புகள் மூலமாக இஸ்லாம் இங்கு 7-ம் நூற்றாண்டிலேயே வந்தடைந்தது என்ற உண்மை நமது வரலாற்று புத்தகங்களில் சொல்லப்படுவது இல்லை. தப்பும் தவறுதலுமாக நம் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றை இந்து சகாப்தம் (Hindu Era) இஸ்லாமிய சகாப்தம் (Islamic Era) என்று ஆங்கிலேய காலனியம் தவறாக பிரித்துக் கையாண்டது. ஆனால் இப்படி தனித்த வரலாறாக இந்திய வரலாறு என்றுமே இருந்ததில்லை. அடிப்படையில் இஸ்லாம் பன்மைத்துவத்தை வலியுறுத்தி வருகிற மதம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்த ஒரு பன்மைத்துவமான சமுதாயமாகத்தான் நாம் வாழ்ந்துள்ளோம். மன்னரை வைத்து ஆட்சியை எடை போடுவது தவறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பொறுப்பில் இந்துக்களும், இந்து மன்னர்களின் ஆட்சியில் பெரும் பொறுப்பில் இஸ்லாமியர்களும் இருந்திருக்கின்றார்கள். இன்று பெரிதும் பழித்துச் சொல்லப்படும் அவுரங்கசீப்பின் படையில்தான் அதிகமான இந்துக்கள் இருந்திருக்கின்றார்கள். செஞ்சியை முகலாய படைகள் கைப்பற்றியவுடன், அது அவுரங்கசீப்பின் உத்தரவுப்படி சுவரன் சிங் என்ற ராஜபுத்திரனுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப் பட்டது. சுவரன் சிங் இஸ்லாமியரா?
அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியம் மட்டும் இதனால் மறுதலிக்கப்படவில்லை, போரோடு சம்பந்தப்பட்ட சகல கொடுஞ் செயல்களும் மதத்தோடு பின்னிப் பிணைக்கப் படுகின்றது. எனவே இது போன்ற தவறான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து எழுதினால் சரியாகிவிடும் என்று வெகுளித்தனமாக அப்போது நம்பினேன்.
பார்ப்பனிய எழுத்தாளர் சுஜாதா
ஆனந்த விகடனில் சுஜாதா தன்னுடைய ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் ஸ்ரீரங்கம் வரலாற்றைக் கூறும் “கோயில் ஒழுகு” வின் புதிய பதிப்பு குறித்து ஒருமுறை எழுதி இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் தேர்திருவிழாவின் போது பிராமணர்கள் நோஞ்சானாக இருந்ததால் விவசாயிகள் தேரை இழுப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் பாடும் நாட்டுப் புற பாடல்களை ஆய்வு செய்தால் 13000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் முகமதியர்களால் கொல்லப்பட்ட தகவல் குறித்து தகவல் தெரிய வரலாம் என்றும் எழுதி இருந்தார். அவர் குறிப்பிட்ட நூலை வாசித்தேன். நூல் ஆசிரியரே இதற்கு சான்றுகள் இல்லை என்று எழுதியிருந்தார். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை சுஜாதா போன்றவர்கள் முன்னிலைப்படுத்துவது தவறு என்று நானும் , Dr. ராஜா முகம்மது என்ற மூத்த ஆய்வாளரும் சில சான்றுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் “இனிமேல் இஸ்லாமியர்கள் பற்றி எழுதமாட்டேன்”; இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற ரீதியில் சுஜாதா விவாதத்தை முடித்துவிட்டார்.
சுஜாதாவுடனான இந்த விவாதங்கள் ‘காலச்சுவடு’ இதழில் வெளியானது. அதனடிப்படையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தேசிய அளவிலான ஆய்வரங்கம் ஒன்றில் பேச அழைத்தார்கள். இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து வந்திருந்த அறிஞர்களுக்கு தமிழ் இஸ்லாமியர் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து நான் எடுத்து வைத்த பல கருத்துக்கள் புதிதாக, ஆச்சரியமாக இருந்தன. உடனடியாக சென்னைப் பல்கலைக் கழகத்திலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் பேச அழைத்தார்கள். தொடர்ந்து மேலும் பல அழைப்புகள். பேசிய இடங்களிலெலலாம் இஸ்லாமியர் வரலாறு குறித்த தவறான கண்ணோட்டத்தை எனது உரை மாற்றியது என்று பாராட்டினர். இது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக ‘யாதும்’ ஆவணப்படத்தை எடுத்தேன்.
கே : ‘யாதும்’ ஆவணப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது ?
வலங்கை சாதியினரால் தமது பெண்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுத்த முஸ்லீம்களுக்கு நன்றி கூறும் இடங்கை சாதியினர் – கோம்பை தாமிர பட்டயம்
பதில் : நான்கு ஆண்டுகள் கடும் உழைப்பின் விளைவாக 2013-ல் “யாதும்” உருவானது. கிட்டத்தட்ட 15 இலட்ச ரூபாய் செலவானது. ஒரு ஆய்வுப் பட்டத்திற்கு உரிய விவரங்கள் இதில் உள்ளன. பொது சமூகத்தில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை அறிஞர்கள் மத்தியில், தமிழ் இஸ்லாமியர் குறித்த வரலாற்றுப் பார்வையில் ஒரு பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பேன். படத்தை தமுஎகச (தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) மற்றும் சில அமைப்புகள் பல இடங்களில் திரையிட்டன. இஸ்லாமியர்களிடமிருந்து பலதரப்பட்ட எதிர்வினைகள் ( mixed reactions) வந்தன. இஸ்லாமிய அறிஞர்கள், சில முஸ்லீம் ஜமாத்துகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இது திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது, இதுவரை அவ்வளவாக பேசப்படாத வரலாற்றை பேசுவதால், வெளிநாடுகளில் இருந்து கலாச்சாரம், பண்பாடு குறித்து ஆய்வு செய்ய வரும் பல அறிஞர்கள் சென்னை வரும்போது என்னிடம் விவாதிக்க விரும்புகிறார்கள்.
கே : நீங்கள் திராவிட இயக்கத்தின்பால் பற்று கொண்டவர். கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த முக்கியமான சாதனை என்று எதனைச் சொல்லுவீர்கள் ?
பதில் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சிகளில் இஸ்லாமியர்கள் பறிகொடுத்த பலவற்றை, உரிமைகளை மீட்டெடுக்க முடிந்தது. இஸ்லாமியர்களுக்காக கல்லூரி (காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி), அண்ணாநகரில் யுனானி படிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது விழாவிற்கு அரசு விடுமுறை. இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் கிடைத்தது, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ( 3.5 %) கொடுக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் காரணமாக அரசு இயந்திரத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து வருகின்றனர். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு தளங்களில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.
இவை அனைத்தையும் மீறி கலைஞர் செய்த சாதனை தமிழக இஸ்லாமியர்களுக்கு கொடுத்த பாதுகாப்பு உணர்வுதான். சமீபத்தில் டெல்லியைச் சார்ந்த ஒரு முஸ்லீம் பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.அவர் சொன்னார் “வீட்டிலிருந்து வெளியே போனால் திரும்பி பத்திரமாக வருவோமா என்ற கவலை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கிறது ” என்றார். அது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் கலைஞரின் தலையாய சாதனை என்பேன்.
கே : பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?
பதில் : எண்பதுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தபிறகு உலக அளவில் மேற்கத்திய உலகிற்கு பொது எதிரி தேவைப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மீண்டும் மேற்கத்திய உலகம் செயல்பட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்துத்துவத்திற்கும் மேற்கத்திய நவீன காலனியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கங்கள் பக்கம் திரும்பினர். சுதந்திர இந்தியா மத அடிப்படைவாதத்தை ஒழிக்க இன்னும் சிரத்தையுடன் செயல் பட்டிருந்தால் இன்று நாடு இந்த நிலையில் இருந்திருக்காது. அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். மத நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையும் சரிவர வித்தியாசப் படுத்திப் பார்க்க முந்தைய அரசாங்கங்கள் தவறி விட்டன. அதன் விளைவுதான் இது.
ஆனால் இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.
கே : பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
பதில் : இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு எந்த தடையும் இல்லை. மிகப் புனிதத் தலமான மக்காவில் உள்ள கவ்பாவில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. முன்பு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு போவதில்லை. எனவே வீட்டிலேயே தொழுது வந்தார்கள். இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். எனவே காலம் மாறி வருகிறது. சென்னையிலும் சில பள்ளிவாசல்களில் அண்மைக்காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கே : பத்திரிகைத்துறையில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
பதில் : தவறு. தமிழகத்தை பொறுத்த வரை நிச்சயமாக பத்திரிகை உலகில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்படுவதில்லை. பெரும்பாலான ஊடகங்களில் முஸ்லிம்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும் இஸ்லாமியர் குறித்து தவறான செய்திகளை சில பத்திரிக்கைகள் அவ்வப்போது உள்நோக்கத்தோடு வெளியிடுகின்றன. மறுப்பதற்கில்லை. அவர்களிடம் பத்திரிகை இருக்கிறது. எழுதுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர் பத்திரிகை நடத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதும் இல்லையே. அப்படியிருக்க பொது சமூகத்தை சென்றடையக் கூடிய வகையில் இஸ்லாமியர்கள் நடத்தும் பத்திரிகைகள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது சமூகத்தின் தவறு.
கே : சென்னை, அதனையொட்டிய சுற்றுப் பகுதிகளில் நீங்கள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய பயணங்கள் குறித்து.
பதில் : நான் ஒரு வரலாற்று ஆய்வாளன். நமது பல பிரச்சனைகளுக்கான தீர்வு வரலாற்றில் இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் வரலாறு நமக்கு முறையாக சொல்லித் தரப்படுவதில்லை. உதாரணமாக தமிழர்களுக்கு மிகப் பெரிய கடல் பாரம்பரியமுண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்து சென்று பொருளீட்டிய சமூகம் இது. அவ்வாறு சங்க காலத்திலிருந்து, கடல் கடந்து ஈட்டிய பொன்னும் பொருளும் தமிழகத்தை வளப்படுத்தியது. இன்று தமிழர்களுக்கு இந்த வரலாறு பெரும்பாலும் தெரியாது. பலவற்றை மறந்து விட்டோம், சில நம்மிடமிருந்து மறைக்கப் பட்டது. இவ்வாறு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, பேசப்படாத வரலாற்றை பேசுவதுதான் எனது பாரம்பரிய நடை பயணத்தின் நோக்கம். எனவே இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு செல்கிறோம்.
***
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை நேர்காணல் செய்து வருகிறார் பீட்டர் துரைராஜ்.
உங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம். சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டுள்ள யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்; இதுவரை மொத்தம் ஐநூற்றி சொச்சம் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் அவர் எடுத்துக் கொள்ளாத விசயங்களே கிடையாது என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வானத்திற்குக் கீழ் உள்ள அனைத்தைக் குறித்தும் – சில வேளைகளில் வானத்திற்கு அப்பாலும் பூமிக்கு கீழே உள்ளவைகளைக் குறித்தும் கூட – அவரிடம் சொல்வதற்கு ஏதாவது உள்ளது.
சிக்கல் என்னவென்றால் அப்படிச் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்று விக்கிபீடியாவில் சுட்டதாக இருக்கும் அல்லது வெறும் வாயில் சுட்டதாக இருக்கும். பெரும்பாலும் மேலோட்டமான, அறைகுறையான தகவல்களின் தொகுப்பு. இதேபோல் எண்ணற்ற தமிழ் சேனல்கள் யூ-டியூபில் உள்ளன. அந்தந்த சூழலில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள் குறித்து மேம்போக்காக அடித்து விட்டு ஹிட் தேத்துவதை நோக்கமாக கொண்டவை இந்த சேனல்கள். ஆனால், மக்கள் இதை விரும்புகின்றனர்.
மதன் கவுரி சர்வகலா வல்லுநராக வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் பாரிசாலன் என்பவர் (பஜாஜ் புகழ்) தமிழ்தேசியத்தின் சிந்தனைக் கிட்டங்கியாக (Think Tank) வளர்ந்துள்ளார் – ஹீலர் பாஸ்கர் என்பவர் யூ-டியூப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவராக வளர்ந்துள்ளார். சாராம்சத்திலும் தன்மை அளவிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் அல்ல; அரைவேக்காடுகள். இவ்வாறான அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி? இந்தப் போக்கின் அடிப்படை என்னவென்பதை தொட்டுக் காட்டுகின்றது ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரை.
இந்தப் போக்கைப் புரிந்து கொள்ள நாம் இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சுருக்கமாக பார்த்து விடுவது நல்லது.
உலகளாவிய வலைக்கான (World Wide Web) தரநிர்ணயத்தைச் செய்யும் உலகளாவிய வலைக்கான கூட்டமைப்பு (World Wide Web Consortium) தொன்னூறுகளின் இறுதியில் இருந்து உலகளாவிய இணையம் கைக்கொண்ட தொழில்நுட்பத்தை வெப் 2.0 என்றும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை வெப் 1.0 என்றும் பிரிக்கிறது. தற்போது வெப் 3.0 தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. வெப் 1.0, வெப் 2.0 மற்றும் வெப் 3.0 ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன – எனினும், இந்தப் பதிவின் வரம்பைக் கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு சாரமாக புரிந்து கொள்வோம்.
வெப் 1.0 வில் உள்ளடக்கம் (Content) என்பது பெரிதும் ஒருமுக திசை கொண்டதாக (Uni Directional) இருக்கும் – அதாவது ஒரு தளத்தின் உரிமையாளர் அல்லது ஒரு நிறுவனம் தான் முன்வைக்க நினைக்கும் கருத்தை நேயர்களுக்கு (வாசகர்கள் அல்லது இணைய பயனர்கள்) முன்வைக்கும். வெப் 2.0 வில் உள்ளடக்கம் என்பது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாசகர்கள் அல்லது இணையப் பயனர்களும் உள்ளடக்கத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் (இதன் ஒரு வெளிப்பாடு சமூக வலைத்தளங்களின் பெருக்கம்). இப்போது வளர்ந்து வரும் வெப் 3.0 வில் உள்ளடக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் – அதாவது உருவாக்கப்படும் கண்டெண்ட்டிற்கு பலவிதப் பயன்கள் இருக்கும்.
இனி ஸ்க்ரோல் கட்டுரை சொல்வதை சாரமாகப் பார்ப்போம்.
வெப் 2.0-வின் அடிப்படையில் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்களின் விளைவால் ஏராளமான கற்றுக்குட்டிகள் (Amateur) உருவாகி இருக்கின்றனர் என்கிறார் கட்டுரையாளர். இவர்கள் பெரும்பாலும் தங்களது அனுபவத்தையே பொதுவான உண்மைகளாக முன்வைக்கின்றனர். இது தவிர ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக நடிகர்கள் அல்லது பாடகர்கள்) பிரபலமடையும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில நுகர்பொருட்களுக்கு (ஆயத்த ஆடை போன்ற) விளம்பரத் தூதர்கள் ஆவதோடு சொந்த முறையிலும் நிறுவனங்களைத் துவக்குகின்றனர்.
வேய்நித் பால்த்ரோ.
வேய்நித் பால்த்ரோ (Gwyneth Paltrow) எனும் நடிகை ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். இதில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு அழகு சாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இந்நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் ’மருத்துவ’ குணாம்சங்கள் குறித்தும் பாடம் எடுக்கிறார். பால்த்ரோவின் நிறுவனம் முன்வைக்கும் போலி அறிவியல் (psuedo-science) குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.
சமூக வலைத்தளத்தின் கேடான விளைவுகளுக்கு இன்னொரு உதாரணம் டொனால்டு டிரம்ப். அரசியல் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத டிரம்ப், சமூக வலைத்தளத்தை ஒரு பரப்புரை சாதனமாக மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டார். வழமையான அரசியல்வாதிகள் போல் அல்லாமல் “எளிமையாக பேசக்கூடியவர்”, “மனதில் இருப்பதைப் பேசும் வெள்ளந்தி” என்பதைப் போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை அமெரிக்க வாக்காளர்களிடையே ஏற்படுத்த அவருக்கு சமூக வலைத்தளங்களும் அதில் அவரால் பணிக்கமர்த்திக் கொள்ளப்பட்ட இணையக்கூலிப் படையின் சேவையும் மிகப் பெரிய அளவுக்கு கைகொடுத்தது.
தகவல்களைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பாவிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கற்றுக்குட்டிகளால் உண்மையும் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களும் பிரித்தறிய முடியாதபடிக்கும் பிணைந்து கிடக்கின்றன. இதன் விளைவாக சமீப காலமாக போலி அறிவியல் கருத்துக்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களே இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் பல்கிப் பெருகுவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
இன்னொரு புறம், சமூக வலைத்தள பிரபலங்கள் உருவாக்கும் “கருத்துக்கள்” வணிக ரீதியில் ஆதாயமானதாக இருப்பதைக் காணும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தங்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு நமது சூழலில் யூ-டியூப் சினிமா விமர்சகர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் போக்குகளை 2007-ம் ஆண்டிலேயே ஓரளவு மிகச் சரியாக முன் அனுமானித்த ஆண்ட்ரூவ் கீன் என்பவர், அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒருகட்டத்தில் டிஜிட்டல் நார்சிசத்தை நோக்கிச் செல்லும் என்றார். அதாவது, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது பின்னுக்குப் போய் தன்னைத் தானே மிகையாய் மதிப்பிட்டு முன்னிறுத்திக் கொள்வதில் சென்று முடியும் என்பதை கீன் பத்தாண்டுகளுக்கு முன்னரே அனுமானித்தார்.
இதன் எதார்த்தமான விளைவுகளை நாம் தமிழ் சமூக வலைத்தள சூழலில் காண்கிறோம். பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோர் எந்த அடிப்படை அறிவோ, துறைசார்ந்த திறமைகளோ இன்றி போகிற போக்கில் அடித்து விடுவதை எல்லாம் “தத்துவங்களாக” ஏற்றுக் கொள்ள சில இலட்சக்கணக்கான இளைஞர்கள் “பக்குவம்” அடைந்துள்ளனர். வெறும் வாட்சப் வதந்திகளின் தொகுப்பாக நாம் தமிழர் என்கிற ஒரு அரசியல் கட்சியே செயல்பட்டு வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.
இயற்கை வைத்தியம், இயற்கை வேளாண்மை, இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள், யார் தமிழன் என்கிற ஆராய்ச்சி, தற்சார்பு வாழ்வியல் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது உயரங்களை எட்டி வருகின்றன. நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் இது போன்ற போலி வல்லுநர்கள் சொல்வதை நம்பி இயற்கை வேளாண்மையில் முதலீடு செய்து பணத்தை இழந்து விட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்று ஒரு பெண் அநியாயமாக இறந்தே போனார்.
இந்தப் போக்குகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு எனக் கண்களை மூடி வெறுமனே கடந்து செல்லலாம். பாரிசாலன் போன்ற பைத்தியங்களோடு விவாதித்து அவரது வெறிபிடித்த ”தமிழ்தேசிய” ட்ரோல்களிடம் ஏச்சு வாங்குவதற்கு பதில் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்லலாம். அல்லது இந்த சூழலை மாற்றப் போராடலாம். நம் முன் இருக்கும் தெரிவுகள் எளிமையானவை. அதில் சூழலை மாற்றப் போராடுவது என்கிற சரியான தெரிவோ மிகவும் சவாலானது. எப்போதும் சரியானவைகளின் பாதை கடுமையானது என்பதால் மாற்றத்துக்கான போராட்டம் கடுமையாகவும் நிறைய உழைப்பையும் நேரத்தையும் கோருவதாகவே இருக்கும்.
என்றாலும் அந்த நெடும் போராட்டத்திற்கு தயாராவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
பூமிப்பந்தை அழிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு 1983-ம் ஆண்டின் அதிகாலை பொழுதொன்றில் சோவியத் அதிகாரி ஒருவருக்கு வந்து சேர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் சோவியத் யூனியனை இன்னும் 25 நிமிடங்களில் தாக்கவிருப்பதாக அந்த அதிகாரியின் கணினிக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அந்த அதிகாரியின் பெயர் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்.
ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்
ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்று கருதியதால் மேலதிகாரிகளுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் அந்த கீழ்நிலை கடற்படை அதிகாரி தெரிவிக்காமல் இருந்துவிட்டார். அதன் மூலம் ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது. பின்னர், கணினியில் ஏற்பட்ட கோளாறுதான் அச்செய்திக்கான காரணமென உறுதியானது. இது போன்ற இன்றியமையாத தகவலை தெரிவிக்காததற்கு பெட்ரோவ் கண்டிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் பணியிலிருந்து அவரே விலகிவிட்டார்.
இரண்டு தலைமுறைகளாக அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தி வந்த ஒரு கட்டமைப்பு சரிந்து விழும் நிலையில் கடந்த ஆண்டு 77 வயதான அவர் இறந்து விட்டார். சாத்தியமான அணு ஆயுத மோதல்கள் என்பது பனிப்போரின் தொடர்ச்சியாக தோற்றமளிக்கலாம் ஆனால் அவற்றைத் தடுப்பதற்கான கட்டமைப்பு சமீபத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து அது பேராபத்தில் இருக்கிறது.
1987-ம் ஆண்டு போடப்பட்ட ”மிதமான தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை”-யிலிருந்து (Intermediate-Range Nuclear Forces Treaty) வெளியேறப்போவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் 2018-ம் ஆண்டு கூறினார். இந்த உடன்படிக்கை ஐரோப்பாவில் அணு ஆயுதம் பெருகாமல் இருப்பதற்கு பெரும்பங்கு வகித்தது. தரைதள சீர்வேக ஏவுகணையை ரசியா சோதனை செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் முன்னாள் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ்
அடுத்ததாக 2010-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ் இருவரும் கையெழுத்திட்ட போர்த் தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty) காலாவதியாகக் கூடிய நிலையில் இருக்கிறது. வரும் 2021-ம் ஆண்டில் காலாவதியாக இருக்கும் இந்த ஒப்பந்தத்தை “மோசமான ஒப்பந்தம்” என்று விளாதிமிர் புதினுடனான தொலைபேசி அழைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த உடன்பாட்டை தகர்ப்பதற்கான ஆயத்தங்களை அமெரிக்கா செய்து வருகிறது என்று நம்புவதாக இரசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும் உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்களை கடந்த ஆண்டு இரசியா தயாரித்திருக்கும் நிலையில் 1972-ம் ஆண்டின் நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறியதே தற்போது புதிய ஆயுத போட்டியை உருவாக்கியிருப்பதாக புதின் குற்றம் சாட்டியிருந்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலிலிருந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை கொம்பு முனையை (Cape Horn) சுற்றி காலிபோர்னியாவை நோக்கி வடக்கே செல்வது போன்ற ஒரு அனிமேசன் காணொளி இரசிய நாட்டு மக்களுக்கான அவரது உரையின் போது ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.
“எங்களது நாடு சொல்வதை நீங்கள் கேட்கவில்லை” என்று 2001-ம் ஆண்டு நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை கூறிய புதின் “இப்பொழுது நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறினார்.
பனிப் போரிலிருந்தும் பின்னரும் கிடைத்த படிப்பினைகளிலிலிருந்து ரசியாவும் அமெரிக்காவும் இது போன்ற பல்வேறு உடன்படிக்கைக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தன.
“இந்த உடன்படிக்கைகள் முழு நிறைவானது அல்ல” என்று இரு தரப்பு வல்லுனர்களும் கூறுகின்றனர். மேலும் இந்த உடன்படிக்கைகளை சமரசம் செய்வது முறித்து கொள்வதை விட மிகவும் கடினமானது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இடைப்பட்ட தூரம் பாயும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு (INF) உடன்படிக்கையை நீட்டிப்பதற்கான உண்மையான விவாதங்கள் நடக்காதததால் புதியதொரு கண்மூடித்தனமான ஆயுத போட்டியில் நம்மை தள்ளியிருக்கிறது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அட்லாண்டிக் மன்றத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் போர்த்தந்திர ஆயுத குறைப்பு உடன்படிக்கை தூதராக பணியாற்றிய ரிச்சார்டு பார்ட் கூறினார்.
இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாத சீனா மற்றும் இதர நாடுகளுடைய இராணுவ நடவடிக்கைகளை பார்த்தே இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறப் பார்க்கிறது என்று ரசிய கூட்டமைப்பின் போர்த்தந்திர ஏவுகணைப் படைப்பிரிவின் (Russian Federation Strategic Missile Force) முன்னாள் தலைவரான விக்டர் ஏசின் கூறியிருக்கிறார்.
இந்த அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால் தவிர்க்கவியலாமல் அதிகரித்திருக்கும் இந்த ஏவுகணை நெருக்கடியிலிருந்து அரசியல் ரீதியிலான முடிவுகள் மட்டுமே ரசியா மற்றும் ஐரோப்பாவை காப்பாற்றும் என்று அவர் மேலும் கூறினார்.
அந்த எச்சரிக்கைகள் சரியாக இருக்கின்றன. தரைவழி ஏவுகணைகளை கூடிய விரைவில் உருவாக்கி தயார்படுத்துமாறு பென்டகனுக்கு போல்டன் உத்தரவிடுவதை வாஷிங்டன் போஸ்ட் ஒரு பதிவில் அம்பலப்படுத்தி இருக்கிறது. உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறிய உடனேயே அதனை தடுக்க அதனுடைய ஐரோப்பிய கூட்டாளிகள் குறுக்கிட்டதற்கு பிறகே இந்த உத்தரவு வந்துள்ளது. இரசியாவிற்கு வாஷிங்டன் 60 நாட்கள் கெடு விதித்து உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாகவும் எச்சரித்துளளது. அதே நேரத்தில் உடன்படிக்கையை மீறியதாக ஒப்புக்கொள்ளாத இரசியா தன்னுடைய போக்கையும் மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறி விட்டது.
போல்டன்
இதற்கு பின்னணியில் போல்டன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆயுத தடுப்பு உடன்படிக்கைகளிலிருந்து வெளியேறுவதற்கு அவர் ஆர்வத்துடன் இருக்கிறார். 2001-ம் ஆண்டின் ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை மற்றும் தற்போது அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கை ஆகிய இரண்டும் முறியடிக்கப்பட்டதன் பின்னணியில் அவர் இருக்கிறார்.
உறுதிமிக்க தனிநபர்களால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியும். 1983-ம் ஆண்டில் தன்னுடைய உயரதிகாரிகளை எச்சரிக்கை செய்யாத பெட்ரோ அச்சூழல் தனது அடிவயிற்றில் புளியைக் கரைத்ததாக கூறுகிறார். இன்றோ போல்டனின் முடிவினால் ஏவுகணை உடன்படிக்கை மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா தன்னை துண்டித்துக் கொள்ளும்படி செய்துள்ளது.
கேள்வி: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? இவை 85-வது முறையாக உடைந்தது என்று ஒரு புள்ளி விவரம்? கட்டுமானம் சரி இல்லையா ? இல்லை அறிவியல் பூர்வமான காரணம் ஏதும் உண்டா?
– பா. அருண்
அன்புள்ள அருண், லண்டன் பாலம் உடைந்து விழுகிறது என்ற ஆங்கிலக் கவிதையை இனி சென்னை விமான நிலைய கண்ணாடி உடைகிறது என்று மாற்றி விடலாம். உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. சென்னையின் புதிய விமான நிலைய முனையத்தை 2013 ஆம் ஆண்டில் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவராக இருந்த அமீத் அன்சாரி திறந்து வைத்தார். ஆன செலவு 2,200 கோடி ரூபாய். இந்த புதிய முனையத்தில் செயற்கை கூரைகள், கண்ணாடிக் கதவுகள், கிரானைட் பலகைகள் என ஆடம்பரமாக கட்டியிருந்தார்கள்.
பிறகு முனையம் திறந்து வைத்த பிறகு மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடிக் கதவுகளும், கூரைகளும் விழுந்து உடைவது ஊடகங்களின் நிரந்த செய்தியாகி விட்டன. 2019-ம் ஆண்டு கணக்கை சில நாட்களுக்கு முன்பு விழுந்த கண்ணாடி கதவு துவங்கி வைத்திருக்கிறது. இதோடு உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
சூழலுக்கு பொருத்தமாக அக்கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை என்பதால் உடைந்து விழுகின்றன. இது அறிவியல். உடைபடும் அளவிற்கு கண்ணாடிகளும், கட்டுமானமும் மோசமாக இருப்பதால் உடைகின்றன. இது யதார்த்தம். இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையின் சர்வதேச நுழைவாயிலாக இவ்விமான நிலையம் இருக்கிறது. சமீப ஆண்டுகளாக விமானப் போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. அதற்காகத்தான் பல கோடி செலவழித்து பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கட்டுமானத்துறையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் ஒரு அழகியலாக அறிமுகமானது. அதற்கு முன் கட்டிடக் கலையில் இருந்த பயன்பாட்டுவாத அணுகுமுறையை அழகியல் முறையாக மாற்றியது பின் நவீனத்துவ கட்டிடக் கலை. அப்படித்தான் இன்று நாம் காணும் கண்ணாடி மாளிகை வகை கட்டுமானங்களும், விதவிதமான தோற்றமுள்ள கட்டிடங்களும் கட்டப்பட்டன.
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் பணக்காரர்கள் மேற்குலகின் கட்டிடக் கலையைப் பார்த்து காப்பி அடித்து கட்டுகிறார்கள். அந்த காப்பியோடு கமிஷனும் சேர்கிறது. எட்டுவழிச்சாலையில் எடப்பாடியின் மாமனார் இருக்கிறார். வேதாந்தா நன்கொடைப் பட்டியலில் பாஜக இருக்கிறது. ஆதலால் கமிஷன் பற்றிய விசாரணைகளை நாம் செய்ய முடியாது.
தனியார்மயத்தின் முக்கியமான அம்சமே பொறுப்புத் துறப்புதான். அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் படி இங்கே அணு உலைகளில் விபத்து நடந்தால் அதற்கு அமெரிக்க நிறுவனங்கள் நிவாரணம் அளிக்கத் தேவையில்லை. இதை போபாலில் நடந்த யூனியன் கார்பைடு கொலை விபத்திலேயே பார்த்திருக்கிறோம். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தின் நகரும் படிக்கட்டில் சிக்கி ஒருவர் இறந்து போக அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஏனெனில் ஒரு விமானநிலையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்று பணிபுரிகின்றன. தரையை பராமரிக்க ஒன்று, சாலையை பராமரிக்க ஒன்று, படிக்கட்டுகளுக்கு ஒன்று, பேருந்துகளுக்கு ஒன்று என பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால் இங்கிலாந்தில் யாரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலும் அந்த நிலைமை பரவிவருகிறது.
சென்னை விமான நிலைய கட்டுமானத்தில் யார் இருந்தார்கள் என்பது நமக்கு குறிப்பாகத் தெரியவில்லை. கண்ணாடிகளை கான்ட்ராக்டு எடுத்தவர்கள் யாரெனவும் தெரியவில்லை. அம்மா ஆட்சியின் ஆசீர்வாதத்தோடு கூட அது நடந்திருக்கலாம். புதிய முனையத்தில் இப்படி கண்ணாடிகள் விழுந்து உடைவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்திருக்கிறது. சில பல வழக்குகளும் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கின்றன. எனினும் இதுவரை ஏன் உடைகிறது, யார் காரணம் என்ற கேள்விகளுக்கு விடையில்லை. இது விபத்து நடப்பதை விட பயங்கரமானது. நாம் சாவது கூட பிரச்சினையில்லை. ஆனால் ஏன் செத்தோம் என்று கூட இந்தியாவில் தெரிந்து கொள்ள முடியாது, இதுதான் மீப்பெரும் சோகம்.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
அருண் கார்த்திக்மோடி அரசு ஏழைகளுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவருவதாக கூறி ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018-இல் கொண்டுவந்தது. இந்த திட்டத்தால் 10 கோடி குடும்பங்கள், அதாவது 50 கோடி மக்கள், பயன்பெறுவார்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் யார் பயன்பெறலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தால் தெளிவாக இல்லை.
சமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு, 2011-இன் (Socio-Economic Caste Census (SECC), 2011) அடிப்படையில் இந்த திட்டத்துக்கு தகுதியான ஏழைக் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. 10% இட ஒதுக்கீட்டு விசயத்தில் மட்டும் 8 லட்சத்திற்கு குறைவாக வருட வருமானம் இருப்பவர்கள் அனைவரும் ஏழைகள் என்று எளிமையான விளக்கம் தரப்படுகிறது. ஆனால் மருத்துவக் காப்பீட்டுக்கு அவ்வாறு எளிய விளக்கம் இல்லை. இன்னும் கொஞ்சம் இணையத்தில் தேடி பின்வரும் தகவல்களை திரட்ட முடிந்தது. திரட்ட தான் முடிந்தது, பாதி புரியவில்லை பாதி ஞாபகம் இல்லை.
ஒரு குடும்பம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை தொழில்சார்ந்த அளவுகோல்களை (occupational criteria) வைத்து முடிவு செயகிறார்கள். கிராமபுறத்திற்கும் நகர்புறத்திற்கும் வேறு வேறு அளவுகோல்கள் உள்ளன.
கிராமப்புறதில் தகுதி உடைய குடும்பங்கள்: 16 முதல் 59 வயது வரை உள்ள உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், பெண் குடும்ப தலைவியை கொண்ட 16 முதல் 59 வயது வரை உள்ள ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்கள், SC/ST குடும்பங்கள், சொந்தமாக நிலம் எதுவும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள்.
இதேபோல் நகர்ப்புறங்களுக்கு பிச்சைக்காரர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என மொத்தம் 11 வகையான தொழில்சார்ந்த அளவுகோல்கள் உள்ளன.
இந்த திட்டத்தில் குடும்பங்களை தேர்வு செய்வதில் இருந்து திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்வது வரை, இதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் செயல்பாட்டாளர்களின் விமர்சனங்களும் இணையத்தில் கிடைக்கும்.
இந்த கட்டுரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியது அல்ல. இந்த திட்டம் வந்தபொழுது ஏற்கனவே இது போன்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மாநில அரசுகள் இந்த திட்டத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் கிடைக்கும் பயனையும் பெறலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு இணைத்துக்கொண்டால் திட்டத்துக்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகமாவதற்கு முன்னரே தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. இந்த திட்டம் சுமார் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1 முதல் 2 லட்சம் வரை செலவாகும் 1,027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு தந்து வந்தது. டிசம்பர் 1 முதல் தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெயரும் தமிழ் நாடு முதல்வர் திட்டம் என்பதில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதற்க்கேற்ப அட்டைகளில் இருக்கும் புகைப்படங்களும் தமிழக முதல்வரின் படத்தில் இருந்து இந்திய பிரதமர் படத்துக்கு, அதாவது மோடி படத்துக்கு மாறியது.
இந்த மாற்றத்தில் பணம் யார் தருகிறார்கள், பெயரையும் புகழையும் யார் பெறுகிறார்கள் என்பது தான் சூட்சுமமே.
ஜனவரி 12 அன்று வந்த Business Line செய்தித்தாளில் இருந்த செய்தி – “Tamil Nadu tops the claims charts under Ayushman scheme”, அதாவது, ஆயுஷ்மான் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த செய்தியில் வந்த மற்ற தகவல்கள் பின்வருமாறு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விதிகளின்படி பார்த்தால் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் தான் பயனாளர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்த அனைவருக்கும், சுமார் 1.5 கோடி குடும்பங்களுக்கும், இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தமிழக அரசு விரிவு படுத்தியதால் தமிழகத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பயனாளர்களாக உள்ளனர். இதில், 77 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான நிதியை மட்டும் தான் மத்திய அரசு தரும், அதிலும் 60% மட்டும் தான் தரும், மீதி 40% மாநில அரசு தரவேண்டும்.
மருத்துவமனையில் கத்திருக்கும் மக்கள் (படம் – வினவு)
இதில் இன்னொரு செய்தியும் உண்டு. முன்பு இருந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance) நிறுவனத்துடன் இணைந்து நடத்திவந்தது; ஒப்பந்தப்படி 2 லட்சம் வரை செலவாகும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தர வேண்டும். இந்த ஒப்பந்தம் 2022 வரைக்குமான ஒப்பந்தம்.
இப்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்துள்ளதால் காப்பீட்டுத் தொகை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருப்பதால் 2 லட்சம் வரை மட்டும் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும், அதற்கு மேல் 5 லட்சம் வரை ஆகும் செலவை தமிழக அரசு தான் ஏற்க வேண்டும், அவ்வாறு தான் ஏற்று வருகிறது.
மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும். சமீபத்தில் சத்தீஸ்கரில் பதவியேற்ற காங்கிரஸ் அரசாங்கம் ஆயுஷ்மான் திட்டத்தில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ளது. “மருந்து கொள்முதல், ஆஷா ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முழு கட்டமைப்பும் இருக்கும்பொழுது நாங்கள் எதற்கு காப்பீட்டு திட்டங்களை நடத்த வேண்டும். அனைவருக்கும் பொதுவான சுகாதார சேவையை வழங்க தேவைப்படும் திறனும் மனிதவளமும் எங்களிடம் உள்ளது” என்று சத்திஸ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் TS சிங் தியோ தெரிவித்தார்.
“சுமார் 90 முதல் 95% நோயாளிகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ தேவைகளை அரசு அமைப்பு மூலமே நிவர்த்திசெய்துவிடலாம். சத்திஸ்கருக்கு தேவையானது பொதுவான சுகாதார சேவை தான்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் வேண்டாம் என்று சொல்வதில் சத்தீஸ்கர் ஐந்தாவது மாநிலம்.
மத்திய அரசு ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு மாதம் முன்பே ஓதிஸா பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்கவில்லை. ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு அனுப்பப்படும் கடிதங்களில் மோடியின் படம் இடம்பெறுவதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஏற்க மறுத்துவிட்டார். 40% நிதியை மாநில அரசு தருவதால் மாநில அரசுக்கும் கடிதங்களில் இடம் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.
மோடிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2009-இல் தமிழகத்தில் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஜூலை 23-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி 51 நோய்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இப்போதும் அமலில் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மத்திய அரசின் திட்டத்துடன் தமிழக அரசு இணைகிறது.
மேலே கூறியது போல, தமிழகத்தில் ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில், 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மத்திய அரசு இன்சூரன்ஸ் கட்டண தொகை செலுத்தும், அதுவும் 60% தான் செலுத்தும், மீதி 40%-யை தமிழக அரசு தான் செலுத்த வேண்டும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு முழு செலவும் தமிழக அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் மொத்த திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை திட்டத்தின் பெயரால் மத்திய அரசு தட்டி செல்கிறது.
வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் 1 கோடி குடும்பங்களுக்கு தமிழக அரசு தான் இன்சூரன்ஸ் கட்டண தொகையை செலுத்துகிறது. மத்திய அரசு வெறும் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் செலுத்துகிறது. இருந்தாலும், யாருடைய படம் முன்னிலைப்படுத்தப்படுகிறது? மோடியின் படம்! செய்திகள் என்ன சொல்கின்றன? ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்’! தமிழக அரசு செலவு செய்து மத்திய அரசு திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக காட்டுகிறது.
ஸ்டிக்கர் பாய்ஸ் என்று கிண்டல் செய்தொம். மக்கள் கொடுத்த பொருட்களில் அவர்களின் தலைவி ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இப்போது தமிழக அரசு நிதியில் மத்திய அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது, மோடியின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அப்போது அவர்களின் தலைவிக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது யாருக்கு என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதில்லை.
அதிமுக செய்து வரும் இந்த சேவையை ‘சொந்த கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று கூறலாம்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று !
நாசகார ஸ்டெர்லைட் ஆலையினைத் தமிழகத்தில் இருந்து அகற்ற தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகமே குரல் எழுப்புகிறது. தாமிர உருக்காலையினைத் தமிழகத்தில் தடைசெய்யும் சிறப்புச் சட்டத்தினைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றக் கோருகிறது, தமிழகம்.
மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இரண்டாவது ஆலையைத் தொடங்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வெற்றி பெற்றதையடுத்துதான், ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர், தூத்துக்குடி நகர மக்கள்.
இத்தொடர் போராட்டத்தால், ஆலை இயங்குவதற்கான அனுமதியினை நீட்டிக்க இயலாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. அதேசமயம், மின்சாரம் துண்டிக்கப்படாததால், இந்த உத்தரவு காகித உத்தரவாகவே இருந்தது.
இப்பித்தலாட்டத்தினை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் ஆலை மூடப்படும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராடுவது எனத் தீர்மானித்து, கடந்த மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது, தமிழக அரசு. இதன் காரணமாக ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது தமிழகமெங்கும் எழுந்த வெறுப்பையும் கோபத்தையும் தணிக்கும் முகமாக ஆலையை நிரந்தரமாக மூடும் பலவீனமான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணையை ரத்து செய்து, ஆலையினைத் திறக்கலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினைத் தமிழக மக்கள் ஏற்கவில்லை. கருப்புக் கொடி, சிறுவர்கள் பேரணி, மாவட்ட ஆட்சியரிடம் சென்று கேள்வி கேட்பது என தூத்துக்குடி மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறமோ தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே தூத்துக்குடியை போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.
கருப்புக் கொடி விற்கத் தடை, விற்பனை செய்த கடைக்காரர் மீது போலீசு தாக்குதல், போராட்ட முன்னணியாளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வேவு பார்ப்பது, மீனவர் அமைப்புகள், வணிகர் சங்கத்தினரைச் சந்தித்தால் கைது, சிறுவர்கள் பேரணியாகச் சென்றதற்கு வழக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது என அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது தமிழக அரசு.
இன்னொருபுறத்தில், வேதாந்தா நிர்வாகம் கோவில் நன்கொடை, கல்வி உதவித் தொகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் அடைப்பு எனப் பணத்தினை வாரியிறைத்து மக்களை ஊழல்படுத்தும், மக்களைப் பிளவுபடுத்தும் அதனின் சதிக்கு துணை போகிறது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த பசுமைத் தீர்ப்பாய ஆணையைக் கண்டித்து தூத்துக்குடி நகர மக்கள் தெருக்கள், வீடுகள் எங்கும் கருப்புக் கொடி கட்டி நடத்திய போராட்டம்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரசு தரப்பைத் தவிர, வேறு யாரையும் கேட்காமலேயே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆய்வுக் குழுவோ மக்கள் தரப்பு நியாயங்களை ஒப்புக்குக் கேட்டுவிட்டு, தன் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கும் பதிலளிக்காமலேயே ஆலையினைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்தது. தூத்துக்குடியின் நாலரை இலட்சம் மக்கள் ஆலையினைத் திறக்க வேண்டாம் என அளித்த மனுக்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.
ஸ்டெர்லைட் ஆலை தங்களது நலனுக்கு உகந்தது இல்லை என மக்கள் கூறும்போது கார்ப்பரேட் நலனைப் பற்றி பேசுகிறார்கள், நீதிபதிகள். கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக வெளியேற்று என்று மக்கள் காட்டும் வழியில் செல்ல மறுக்கிறது தமிழக அரசு.
மக்களின் போராட்டத்தினால் ஸ்டெர்லைட் மூடப்படுமானால், அது ஒட்டுமொத்த கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் விடப்படும் சவாலாக இருக்காதா என்ன? இதனால்தான் சற்று தள்ளிப்போட்டும், துப்பாக்கிச்சூட்டை நினைவுபடுத்தும் வகையில் மக்களை அச்சுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையினைத் திறக்க வன்மத்துடனும் சதித்தனத்தோடும் செயல்படுகிறது, அரசு-வேதாந்தா கூட்டணி.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாயக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் இன்று (23.01.2019) போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !
போராட்டம் நடைபெரும் இடங்கள் :
1. கேகாலை தெஹிஓவிட்ட
2. பதுளை நகர் காலை 10 மணிக்கு
3 ஹப்புதளை நகர் பகல் 12 மணிக்கு
4. தெமோதர பகல் 12 மணிக்கு
5. அட்டாம்பிட்டிய பகல் 12 மணிக்கு
6. யாழ்ப்பாணம் மாலை 3.00 மணிக்கு பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில்
7. கிளிநொச்சி காலை 10 மணிக்கு மார்கட்டுக் அருகில்
8. வவுனியா காலை 10.00 மணிக்கு பழைய பேருந்தி நிலையத்திற்கு அருகில்
9. மாத்தளை ரத்தோட்டை பகல் 12 மணிக்கு
10. பகவன்தலாவ காலை 8.00 மணிக்கு
11. ஹட்டன்
12. மத்துகம மாலை 3.00 மணிக்கு
13. பதுரலிய மாலை 3.00 மணிக்கு
14 தலாவக்கலை
15. ராகல
16. நூரளை
17. தெல்தொட்ட
18. இரத்தினபுரி மாலை 3.00 மணிக்கு
19. கொஸ்கம நகர் மாலை 3.00 மணிக்கு
அதே போல அனைத்து முக்கிய பல்கலைக் கழகங்களுக்கு முன்பாக பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் நடைபெரும் இடங்கள் :
20 ருஹுனு பல்கலைக் கழகம்
21. ஜயவர்தனபிர பல்கலைக் கழகம்
22. தென்கிழக்கு பல்கலைக் கழகம்
23. சபரகமுவ பல்கலைக் கழகம்
24. ரஜரட்ட பல்கலைக் கழகம்
25. களனி பல்கலைக் கழகம்
26 வயம்ப பல்கலைக் கழகம்
27. பேராதெனிய பல்கலைக் கழகம்
தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து ..
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 54 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிநீதிபதிகளின் நிலைகொள்ளாமல் தவித்துத் தத்தளித்துத் தமது ஆசனங்களில் நெளிந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பிரபு வம்சத் தலைவர், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நீதிபதியிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த நீதிபதி தலையை ஆட்டிவிட்டு, பிரதம நீதிபதியிடம் ஏதோ சொன்னார். அவருக்கு அடுத்தாற்போலிருந்த சீக்காளி நீதிபதி அவரது இன்னொரு காதில் ஏதோ ஓதினார். அந்தக் கிழ நீதிபதி வலது இடதுபுறமாக அசைந்து கொண்டே பாவெலின் பக்கமாகத் திரும்பி ஏதோ சொன்னார். ஆனால் அவரது வார்த்தைகளைப் பாவெலின் நிதானமான ஆற்றொழுக்குப் பேச்சு அமிழ்த்தி விழுங்கிவிட்டது.
”நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு – சொத்துரிமையின் பேரால் மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல் உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு – நாங்கள் எதிரிகள். இந்தச் சொத்துரிமைச் சமுதாய அமைப்பு இந்த வெறுப்புணர்ச்சியை மூடி மறைப்பதற்காக, அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்காக, பொய்மைக்கும், புனைசுருட்டுக்கும் ஆளாகி, மக்கள் அனைவரையும் பொய்களுக்கும், மாய்மாலத்துக்கும், தீய கிரியைகளுக்கும் ஆளாக்கிவிடுகிறது. தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, மனிதப் பிறவியை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனிதத் தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம்.
அந்தச் சமுதாயத்தின் பொய்யான, இரண்டுபட்ட ஒழுக்க நெறியை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. தனி மனிதனிடம் அந்தச் சமுதாயம் காட்டும் குரூரத்தையும் வக்கிர புத்தியையும் நாங்கள் வெறுத்துத் தள்ளுகிறோம். அந்த மாதிரியான சமுதாய அமைப்பு தனி மனிதனின் உடலின் மீதும் உள்ளத்தின்மீதும் சுமத்தியிருக்கும் சகலவிதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம், எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள். சிறு குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான யந்திர சாதனங்கள் வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். ஆனால், எங்களது மனித கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமையைக்கூடப் பறிகொடுத்தவர்களும் நாங்கள்தான்.
சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களைத் தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், தற்போது நாங்கள் எங்கள் கைகளிலேயே சகல அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதற்காக, இறுதியாய் அந்த அதிகாரத்தை அடையும் அளவுக்கு சுதந்திரம் பெற விரும்புகிறோம். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை. ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!’ ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’ ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!’ இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்!”
பாவெல் லேசாகச் சிரித்தான். தனது தலைமயிரை விரல்களால் மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது நீலக்கண்களின் ஒளி முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது.
“விஷயத்தைவிட்டுப் புறம்பாகப் பேசாதே!” என்று அந்தக் கிழட்டு நீதிபதி தெளிவாகவும் உரத்தும் எச்சரித்தார். அவர் பாவெலின் பக்கமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அவரது மங்கிய இடது கண்ணில் பொறாமையும் புகைச்சலும் நிறைந்த ஒரு ஒளி பளிச்சிட்டு மின்னுவதாகத் தாய்க்குத் தோன்றியது. எல்லா நீதிபதிகளும் அவளது மகனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எல்லோரது கண்களும் அவனது முகத்தையே பற்றிப்பிடித்து அவனது சக்தியை உறிஞ்சுவது போலவும், அவனது ரத்தத்துக்காக தாகம் கொண்டு தவிப்பது போலவும், அந்த ரத்த பானத்தால் உளுத்துக் கலகலத்துப்போன தங்கள் உடம்புகளுக்கு ஊட்டமளித்துத் தேற்றிக்கொள்ள நினைப்பது போலவும், தாய்க்குத் தோன்றியது. ஆனால், அவளது மகனோ உறுதியோடும் தைரியத்தோடும் நேராக நிமிர்ந்து நின்று தனது கையை எட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான்.
“நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம். யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள். அந்தச் சமுதாயத்துக்கும். உங்களுக்கும் எதிரிகள் நாங்கள். எங்களது போராட்டத்தில் நாங்கள் வெற்றி காணும் வரை நமக்குள் எந்தவிதமான சமாதானமும் ஏற்படப்போவதில்லை. தொழிலாளர்களாகிய நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்!
உங்கள் எஜமானர்களோ, அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போலப் பலசாலிகள் ஒன்றுமில்லை. தனிநபர் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், பெருக்கிக் காப்பதற்காகவும், பெருக்கிக் குவிப்பதற்காகவும் தங்களது அதிகாரத்தால், லட்சோப லட்ச மக்களை அடிமைப்படுத்தவும் கொன்று குவிப்பதற்காகவும் உதவிக்கொண்டிருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைதான் – எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர்களுக்குப் பலம் தரும் அந்தச் சக்திதான் – அவர்களுக்குள்ளாகவே தகராறுகளைக் கிளப்பிவிடுகிறது, அந்தச் சொத்துரிமை அவர்களை உடல்பூர்வமாகவும், உள்ளபூர்வமாகவும் சீர்குலைத்து வருகிறது. தனிச் சொத்துரிமையைக் காப்பது என்பது சாமான்யமான காரியம் அல்ல.
உண்மையைச் சொல்லப்போனால், எங்களது எஜமானர்களாயிருக்கும் நீங்கள் அனைவரும் எங்களையும்விட மோசமான அடிமைகளாயிருக்கிறீர்கள். நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம்; நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள்! உங்களை உள்ளபூர்வமாகக் கொன்றுவிட்ட நுகக்காலிலிருந்து, வெறுப்பு விருப்புப் பழக்கதோஷமென்னும் நுகத்தடியின் பளுவிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கு நீங்கள் சக்தியற்றுப் போய்விட்டீர்கள்.
ஆனால் நாங்கள் சுதந்திரமான உள்ளத்தோடிருப்பதை எந்த சக்தியுமே கட்டுப்படுத்தவில்லை. உங்களது இஷ்டத்துக்கு மாறாக, நீங்கள் எங்களது உணர்விலே பெய்து கொண்டிருக்கும் முறிவு மருந்துகளாலேயே, நீங்கள் எங்களுக்கு ஊட்டி வரும் விஷங்களெல்லாம் வலுவற்று முறிந்து போகின்றன. எங்களது சத்திய தரிசனம் எந்தவிதத் தடையுமின்றி, அசுர வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கிறது, மேலும் அந்த சத்தியம் நல்ல மனிதர்களை – உங்களது சமூகத்திலேயே மனத்தைப் பறிகொடுக்காது தப்பிப் பிழைத்த நல்லவர்களை – எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. உங்களது வர்க்கத்தை நேர்மையான ஒழுங்கு முறையோடு பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒருவரும் இல்லையென்பதை நீங்களே பாருங்கள்! சரித்திரபூர்வமான நியாயத்தின் அழுத்த சக்தியிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் கூறிய சகலவாதப் பிரதிவாதங்களும் வாய் சோர்ந்து வலுவிழந்து வாடி விழுந்ததை இப்போது நீங்கள் கண்டீர்கள். எந்தவிதமான புதிய சிந்தனைகளையும் உங்களால் படைக்க இயலாது. ஆத்மார்த்த விஷயத்தில் நீங்கள் ஆண்மையற்று மலடுதட்டிப் போய்விட்டீர்கள்.
ஆனால், எங்கள் கருத்துக்களோ என்றென்றும் வளர்ந்தோங்குகின்றன. என்றென்றும் அணையாத தூண்டா மணிவிளக்காய் பிரகாசமுற்றோங்குகின்றன. மக்கள் அனைவருக்கும் உணர்ச்சி ஊட்டி, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர்களை ஒன்றுபடுத்தி பலம் பெற்று விளங்கச் செய்கின்றன. தொழிலாளர் வர்க்கம் சாதிக்க வேண்டிய மகத்தான சாதனையின் ஞானபோதம், உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றுபட உருக்கி வார்த்து அவர்களை ஒரு மகத்தான ஏக சக்தியாக உருவாக்குகிறது. அவர்களைக் கலகலத்து உயிர்ப்பிக்கும் பெரும் சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு கொடுமையையும் வெடுவெடுப்பையும் தவிர உங்களிடம் எந்தவித ஆயுதமும் கிடையவே கிடையாது. ஆனால், உங்களது வக்கிர குணமோ வெளிப்படையானது. கொடுமையோ எரிச்சல் தருவது. இன்று எங்களது கழுத்தை நெரிக்கும் கைகளே நாளைக்கு எங்களைத் தோழமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்வதற்காகத் தாவி வரத்தான் போகின்றன. உங்களது சக்தியே செல்வத்தைப் பெருக்க உதவும் யந்திர சக்தி. அந்த சக்தி உங்களைத் துண்டுபடுத்தி, இரு கூறாக்கி, நீங்களே உங்களில் ஒருவரையொருவர் கொத்திக் குதறிக் குலைபிடுங்கிச் சாவதற்குத்தான் வழிகோலிக் கொடுக்கும்.
ஆனால், எங்களது சக்தியோ சகல தொழிலாளர் மக்களின் ஒன்றுபட்ட ஐக்கிய பலத்தால் என்றென்றும் ஜீவ வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கும், மனச்சாட்சியினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்வது அனைத்தும் படுமோசமான பாதகச் செயல்கள். ஏனெனில் உங்கள் செயல்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் முனைந்து நிற்கின்றன. உங்களது பொய்மையும், பேராசையும், குரோத வெறியும் உலகத்தில் எண்ணற்ற பிசாசுகளையும் பூதங்களையும்தான் படைத்திருக்கின்றன. அந்தப் பூதங்களும் பிசாசுகளும் மக்களை கோழையராக்கிவிட்டன. அந்தப் பிசாசு ஆதிக்கப் பிடிப்பிலிருந்து மக்களை விடுவித்துக் காப்பாற்றுவதே எங்கள் பணி. நீங்கள் மனிதனை வாழ்க்கையினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவனை அழித்துவிட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோஷலிசம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”
பாவெல் ஒருகணம் பேச்சை நிறுத்தினான். மீண்டும் அதே உறுதியோடு மெதுவாகக் கூறினான்.
”நிச்சயம் நிறைவேறத்தான் போகிறது!”
நீதிபதிகள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்; பாவெலின் மீது வைத்த பார்வையை விலக்காமலேயே முகத்தை எப்படியெல்லாமோ விகாரமாகச் சுழித்துக்கொண்டார்கள். அவனது துடிப்பையும் இளமையையும், பலத்தையும் கண்டு பொறாமை பொங்கி, தங்களது பார்வையாலேயே அவனை அவர்கள் நாசப்படுத்திவிட முயல்வதுபோல் தாய்க்குத் தோன்றியது. கைதிகள் அனைவரும் மகிழ்ச்சியினால் கண்கள் பிரகாசிக்க, முகம் வெளிற, பரிபூரண கவனத்தோடு தங்களது தோழனின் பேச்சைக் கூர்ந்து கேட்டார்கள். தாயோ தன் மகனின் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள். அந்த வார்த்தைகள் அனைத்தும் அவளது மனத் தகட்டில் வரிசை வரிசையாகப் பதிந்து நிலைத்தன. அந்தக் கிழ நீதிபதி எதையோ தெளிவுபடுத்திக்கொள்வதற்காக, பாவெலின் பேச்சில் எத்தனையோ முறை குறுக்கிட்டார். இடையே ஒருமுறை அவர் வருத்தத்தோடு புன்னகையும் புரிந்து கொண்டார். பாவெல், இடையிடையே பேச்சை நிறுத்தினாலும், மீண்டும் அதே அமைதி தோய்ந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்குவான். மீண்டும் ஜனங்கள் அவனது பேச்சை உள்ளமிழந்து கேட்கச் செய்வான். நீதிபதிகளின் விருப்பத்தையும், அவன் தன் விருப்பத்துக்கு ஆளாக்கிவிடுவான். கடைசியாக அந்தக் கிழ நீதிபதி வாய்விட்டுக் கையை நீட்டிக் கத்தினார். பதிலுக்குப் பாவெல் கேலி பாவத்தோடு தனது பேச்சைத் தொடங்கினான்.
”இதோ நான் என் பேச்சை முடித்துவிடப் போகிறேன். உங்களில் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. அதற்கு மாறாக, விசாரணை என்ற பெயரால் நீங்கள் நடத்தும் கேலிக்கூத்தை நான் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் மீது அனுதாப உணர்ச்சிதான் என் உள்ளத்தில் அநேகமாகப் பொங்கி வழிகிறது. என்ன இருந்தாலும் நீங்களும் மனிதப் பிறவிகள்தான். எங்களது இயக்கத்தின் எதிரிகளைக்கூட, மிருக சக்திக்கு ஊழியம் செய்வதற்காக கேவலமாக வெகு தாழ்ந்து கடை கெட்டுப்போனவர்களைக்கூட, மனித கெளரவத்தின் மான உணர்ச்சியையே முற்றிலும் இழந்துவிட்டவர்களைக் கூட, நாங்கள் மனிதப் பிறவிகளாக மதித்து அவர்களுக்காகத் துக்கப்படுகிறோம்………”
அவன் நீதிபதிகளைப் பார்க்காமலேயே தன் இடத்தில் அமர்ந்தான். தாயோ திக்குமுக்காடும் மூச்சோடு அந்த நீதிபதிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாவெலின் கையைப் பிடித்து அழுத்திய அந்திரேயின் முகமும் பிரகாசமடைந்தது. சமோய்லவ், மாசின் முதலியவர்களும் அவன் பக்கமாகக் குனிந்து இருந்தார்கள். தன்னுடைய தோழர்களின் உற்சாகத்தைக் கண்டு பாவெல் புன்னகை செய்து கொண்டான். அவன் தன் தாயின் பக்கமாகத் திரும்பி, ‘உனக்குத் திருப்திதானே!’ என்று கேட்கும் பாவனையில் தலையை ஆட்டினான்.
பதிலுக்கு அவள் மகிழ்வோடு பெருமூச்செறிந்தாள். அவளது முகத்திலே அன்புணர்ச்சி அலை பரவிச் சிலிர்த்துச் சிவந்தது.
”இப்போதுதான் உண்மையான விசாரணை ஆரம்பமாயிற்று!” என்று தாயிடம் மெதுவாகக் கூறினான் சிஸோவ். “அவன் அவர்களை வீசி விளாசித் தள்ளிவிட்டான், இல்லையா?”
அவள் பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள். தன் மகன் தைரியத்தோடு பேசியதைக் கேட்டு அவள் மகிழ்வுற்றாள். அவன் பேசி முடித்ததைக் கண்டு அந்த ஆனந்தம் பேரானந்தமாயிற்று. அவளது மனத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
”அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்?”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சென்னை லயோலா கல்லூரி அண்மையில் வீதி விருது விழாவை நடத்தியது. இதில் தோழர் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை வினவு தளத்தில் ஏற்கனவே வெளியானவைதான் என்றாலும் இந்துத்துவ கோஷ்டி, லயோலா என்ற கிறித்துவ கல்லூரி நிகழ்ச்சியில் பாரத் மாதாவை ‘இழிவாக’ சித்தரிப்பதாகக் கூறியது. குருமூர்த்தி, எச்.ராஜா, தமிழிசை போன்ற தமிழக காவிப்படையின் தலைகள் இந்து அடையாளங்களையும் பாரத் மாதாவையும் புண்படுத்தியதாக பேசினார்கள்.மத சிறுபான்மையினரை குறிவைத்து காத்திருக்கும் காவி கும்பல் இதுதான் வாய்ப்பென்று லயோலா கல்லூரிக்கு எதிராக களமாடத் தொடங்கியது. ஓவியங்களை காட்சிப் படுத்திய ஒரே காரணத்துக்காக கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றது. ட்விட்டரில் உள்ள அத்தனை காவிப் படையும் திட்டமிட்டதுபோல், இந்த விசயத்தை வைத்து நாள் முழுக்கவும் களமாடியது. இது சர்ச்சையாக்கப்பட்டு தேசிய ஊடகங்களில் செய்தி ஆனது.
1 of 3
மோடி ஆதரவு தளமான யாஹூ தளத்தின் முகப்பில் இந்த சர்ச்சை குறித்த செய்தி வெளியானது. த வயர், த வீக், இந்தியன் எக்ஸ்பிரஸ், த க்விண்ட் உள்ளிட்ட தளங்களில் காவி கும்பலின் கருத்துரிமை அத்துமீறல் செய்தியானது.
இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பலியாகக்கூடாது என்று லயோலா நிர்வாகம் மன்னிப்புக் கேட்டதோடு, தோழர் முகிலனின் ஓவியங்களை விலக்குவதாக அறிவித்தது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது வேறு விஷயம். அதோடு, ஓவியங்கள் விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் முகநூல் முகிலனின் ஓவியங்களை வைரலாக்கியது. ஒவ்வொரு ஓவியத்தை பகுப்பாய்வு செய்து பலர் எழுத ஆரம்பித்தனர். சமகால அரசியலின் நிலையை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது எனவும் தங்களுடைய எண்ணவோட்டத்தை இந்த ஓவியங்கள் பிரதிபலிப்பதாகவும் சிலாகித்து எழுதினர்.
வழக்கம்போல, சங்கிகளின் பிடியில் இருக்கும் அறிஞர்கள் – ஊடகவியலாளர்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்றார்கள். புதிய தலைமுறையில் பணியாற்றும் மனோஜ் பிரபாகர் என்ற ‘பத்திரிகையாளர்’, ‘லயோலாவின் செயலில் வெட்கமடைவதாகவும் மற்ற மதத்தினரின் சென்டிமெண்டை தாக்கக் கூடாது. ஒற்றுமையை குலைக்க வேண்டாம். கருத்துக்களை சொல்வது வேறு, வேண்டுமென்ற மற்ற மதத்தினரை புண்படுவது வேறு’ என தனது ட்விட்டரில் வியாக்கியானம் பேசி முற்போக்கு பிரிவினரிடமிருந்து செருப்படி வாங்கினார்.
அதில் ஒரு எதிர்ப்புக்குரல், “டேய் வெண்ணை, ஒட்டு மொத்த மதத்தையே ஒரு கும்பல் அரசியல் பெயரால் ஹைஜாக் செய்த போது நவ துவாரத்தையும் மூடிட்டுதானே இருந்தே. நீ யோக்கியசிகாமணி #NotinmyName நு ஒரு எதிர்குரல் கொடுத்து இருப்பியா.” எனக் கேட்டது.
ரேகா கண்ணதாசன் என்பவர், “இந்து மதத்தை ஏற்காத மற்ற மத பெண்களை கற்பழிக்கும் நல்வாய்ப்பை அருள கேட்கிறார் அப்பர் பெருமான். இது சரியா ? நீங்கள், நான் எல்லாம் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்ற கேவலமான இந்து மத கருத்துக்கு அவர்கள் என்றாவது வருத்தம் கோரியது உண்டா ?” என கேட்ட கேள்விக்கு சங்கி பத்திரிகையாளரிடமிருந்து பதில் இல்லை.
ஓவியர் முகிலன்.
அதுபோல முகநூலில் லிபரல் பார்ப்பனர்கள் சிலர், ‘கண்டீசன்ஸ் அப்ளை’யுடன் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எப்போதுமே சங்கிகளை ஓட ஓட விரட்டும் தமிழ் முகநூலில் தோழர் முகிலனின் ஓவியங்களுக்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
வி.உ. இளவேனில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தோழர் முகிலனின் சித்திரங்களை பகிர்ந்து ஒவ்வொன்றுக்கும் ஆழமான தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
ஒக்கி புயலின் போது தனது குடிமக்களை காக்க வராத இந்தியத்தை கேள்வி கேட்கும் விதமாக வரையப்பட்ட ஓவியத்தை பகிர்ந்து “பேருக்குத்தான் இந்தியா; கதறும்போது வந்தியா?” எனக் கேட்டிருக்கிறார் இவர். முகநூலில் ஒலித்த ஆதரவு குரல்கள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்…
சம்சுதீன் ஹீரா:
அதாகப்பட்டது கள நிலவரம் சொல்வது என்னவென்றால்…
உண்மையில் இந்துக்கள் எனப்படும் சாதாரன மக்கள், இந்த பாரத மாதா கோஷ்டி மீதுதான் கொலைவெறியில் இருக்கிறார்கள்…!! ‘இந்துக்கள் மனம் புண்படுகிறது’ என்று இவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் ஹிந்தி மாநிலங்களில் எடுபடலாம்.. இது கிழவன் கைத்தடியால் பக்குவமாக்கப்பட்ட மண்..!! எந்தப்பருப்பும் வேகாது..!!
முதலாளித்துவச் சார்பு படைப்பாளிகளே….கலைவழி அரசியல் பேசுதலே முதன்மை! ஓவியர் முகிலன் பேசியிருக்கிறார்! காவிக்கூடாரம் அலறுகிறது!
மாதவராஜ்:
இந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போவது பாரத மாதாவுக்கு நேர்ந்த அவமானமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் கடனை தாறுமாறாக அதிகரிக்கச் செய்தது பாரத மாதாவை படுத்திய கேவலமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் செய்தது பாரத மாதாவுக்கு ஏற்பட்ட அசிங்கமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் ஒரு சிலரே சுரண்ட அனுமதித்து அவர்களுக்கு பிரதம சேவகம் செய்தது பாரதமாதாவுக்கு செய்த அயோக்கியத்தனமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் சுயமரியாதையை, சயச்சார்பை அடகுவைத்து அமெரிக்காவிடம் வாலாட்டிக் கொண்டு நிற்க வைத்திருப்பது பாரத மாதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகத் தெரியவில்லை.
இதையெல்லாம் படமாக வரைந்தால் மட்டும் பாரதமாதாவுக்கு ஏற்பட்ட களங்கமாகத் தெரிகிறதாம். போங்கடா, நீங்களும் உங்கள் பாரத மாதாவும்!
#WeSupportLoyala #WeSupportFreedomofExpression
சதீஷ்செல்லதுரை:
நான் பார்த்தவரை எந்த சங்கியும் முகிலனின் ஓவியங்களுக்கு பதிலாக எந்த கருத்தும் தர்க்கரீதியான மறுப்பும் கூறியதாக தெரியவில்லை. லயோலா கிருத்துவ கல்லூரி என பாரத மாதாவை வைத்து இந்து கிருத்துவ அரசியல் செய்ய மட்டுமே முற்படுகின்றனர். வசை பாடியுள்ளனர். புண்பட்டதாக புலம்புகின்றனர். ஆனால் அதன் பின்னாலிருக்கும் உண்மையை மறுக்கவில்லை.அல்லது இயலவில்லை.
ஆதவன்தீட்சண்யா:
தோழர் முகிலனின் ஓவியங்களை பரவலாக்கும் பொறுப்பை திறம்பட நிறைவேற்றிவரும் சங்கிகளுக்கு பாராட்டுகள்.
கருப்புநீலகண்டன்:
சமூகப் பணியாளர்கள், பேராசிரியர் காளீஸ்வரனையும் ஓவியர் முகிலனையும், “வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள் ” என தொடர்ந்து தலித்துகளை போதிய அளவிற்கு தமது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளாத கல்வி நிறுவனமென்றபோதிலும் ஜனநாயக வெளியில் ஒரு சிறும்பான்மை சமூக கல்விநிறுவனத்தை பாதுகாப்பது பெரியார்- அம்பேத்கரியவாதிகளின் கடமை என்கிற பொறுப்பில் திறன்மிகு லொயோலா கல்லூரியையும் இந்துத்துவ ஆதிக்க ஜாதிவெறியர்களிடம் பாதுகாப்போம் நண்பர்களே!!
பிரபாகரன்அழகர்சாமி:
புரட்சிகர ஓவியர் தோழர் முகிலன் மிகவும் அற்புதமான ஒரு கலைஞர். அவருக்கான சரியான வெகுமக்கள் அங்கீகாரம் இன்றுதான் கிடைத்திருக்கிறது எனலாம். லயோலா வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அவருடைய ஓவியங்களை தொகுத்து சிறப்பான அச்சாக்கத்தில் ஒரு தனி நூலாக கொண்டுவரவேண்டும். அவை வரலாற்றின் சாட்சியங்கள் !
ஒடியன்லட்சுமணன்:
லயோலாவில் வைக்கப்பட்டிருந்த ஒவியங்கள் குறித்து கலையைப்போற்றும் முகாமுக்குள்ளேயே தவறு சரி என்று எதிரும் புதிருமாக எழுந்த கருத்துக்கள் அடிபடத்தொடங்கியிருக்கிறது. சிலர் அது சரி என்பதற்கான விமர்சனங்களை கூர்மையாக எழுப்புகிறார்கள். அது ஸ்பெசலிஸ்டுகளின் சிகிச்சை என்று எடுத்துக்கொள்கிறேன். சிலர் மட்டையடி அடிக்கிறார்கள் அதை முரட்டுவைத்தியம் என்று எடுத்துக்கொள்கிறேன். எல்லா நோயாளிகளும் ஒருவகையினர் அல்ல. சிலர் சிகிச்சை நடைபெற்ற இடத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை சொல்லியிருந்தார்கள் அது கவனிக்கப்படவேண்டியதே.
சிலர் சில மருந்துகள் ஓவர்டோஸ் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள். இதற்கு பதில் சொல்லும் செந்தில் அரசுவின் மூன்று நிலைத்தகவலைப்பார்க்கலாம்
இது முதல் நிலைத்தகவல்
உண்மையிலேயே உனக்கு உன் மதம் மேல் நம்பிக்கை இருந்தா, மரியாதை இருந்தா நீ என்ன செய்யணும்? பிஜேபி, சங்கிகள்ட்ட எங்க மத அடையாளங்கள் எங்களுக்கு முக்கியம். அவைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்யாதீங்க.
உங்களை எதிர்ப்பவர்கள் எங்கள் மத அடையாளங்களையும் சேர்த்து எதிர்த்து புண்படுத்துகிறார்கள். ஆகவே எங்கள் மதத்து திரிசூலம், காவி, ராமன், அனுமன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி இன்ன பிற நாங்கள் வணங்கும் கடவுள்களை, அதன் அடையாளங்களை வைத்து அரசியல் லாபத்திற்காக பொது சமூகத்திற்கு எதிரான வன்முறையை, கலவரத்தை, கொள்கைத் திணிப்புகளைச் செய்யாதீர்கள். என்று தான சொல்லணும்?
ஆனா நீ அத செய்யாம, அதற்கு எதிர்வினை செய்யுறவங்க கிட்ட வந்து “என் மதத்தை நீ புண்படுத்திட்டன்னு மட்டும்தான கூவுற’ அப்படீன்னா பிரச்சன யார் கிட்ட?…
இது செந்தில் அரசுவின் இரண்டாவது நிலைத்தகவல்
முதன் முதலாக தமிழகத்திலிருந்து சங்கிகளை இடுப்புக்குக் கீழாக இப்படி இறங்கி அடித்த ஓவியங்களை இப்போதுதான் பார்க்கிறேன். மதம் எல்லாம் அதில் ஒன்றும் இல்லை. இந்துத்துவ சக்திகளை சவட்டி எடுத்துருக்காப்ல.
மதம் புண்படுத்தப்பட்டது என்று கூறுபவர்கள் தம் இந்துத்துவ ஆதரவை நேரடியாக அல்லது மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். கேட்டால் பிஜெபியை ஆர்.எஸ்.எஸ் ஐ விமர்சியுங்கள், ஏன் எங்கள் மதத்தை என்று இழுக்கிறார்கள்.
நேரடியாக ஆதரிப்பவரை விட்டு விடலாம். மறைமுகமாக அல்லது அறியாமல் மதம் புண்பட்டதாக அரற்றுவோர்களுக்கு..ஒன்று சொல்லவேண்டும். நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.
இது செந்தில் அரசுவின் மூன்றாவது நிலைத்தகவல்
சிதறிய ரத்தத்தின் அடர் சிவப்பு நிற வண்ணம் எந்த ஓவியங்களிலும் காண முடியாதது.
தலையில் காவிப்பட்டை, கையில் சூலம் வாள் ஈட்டி ஏந்தித்தானே கலவரங்கள் செய்து உயிர்களைப் பறித்தார்கள்.
வெறும் கண்டன ஓவியங்களுக்காய் இப்போது புண்பட்டதாய் அரற்றும் உனக்கு அன்று நடந்த கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி இருக்கிறதா? ஆம் அது குறித்த குற்ற உணர்ச்சி இருந்தால். நீ ஏன் புண்படப் போகிறாய்?
கவிதாசொர்ணவல்லி:
on serious note…தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில், நிகழ்த்தப்பட்ட படைப்பு சுதந்திரத்திற்கு எதிரான காவிகளின் அராஜகத்திற்கு, நாம் பணிந்து போயிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் என்பது, மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லூரிக்கு ஆபத்து வருமோ என்று லயோலா நிர்வாகத்தை பீதியடைய வைக்கிற அளவிற்கு பலவீனமாக இருக்கிற அரசையும் சேர்த்துதான். அதே போல அரசின் கட்டுப்பாட்டில் வரும் பெரியார் பல்கலைகழகத்தில் வலதுசாரி சிந்தனையுடையோர் அனுமதிக்கப்படுவதும், இடதுசாரிகள் மறுக்கப்படுவதும், இந்த “நாமிற்குள்” அடக்கம். தாமரை மயிரில்தான் மலரும் என்று மிக அசட்டையாக கடந்து போகிறோம் நாம். ஆனால், காவிகள் அடிமட்டத்தில் இருந்து அமைப்பு ரீதியாக தங்களை பலமாக்குகிரார்கள். அலுவலக மனிதவளத்துறையில் கோலோச்சுகிறார்கள். ஊடகங்களில் குடியேறி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே விஷத்தை விதைக்கிறார்கள்.
எதையும் யாருக்கும் நிரூபிக்காமல் மெதுவாக, நிதானமாக வேலை பார்க்கிறார்கள். நாம் கோட்டைவிடுகிற இடங்களை சரிபார்த்து, அதை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பன்ரஹ்மான்
இந்து முன்னணி பயங்கரவாதிகளால் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாள் தலித் சிறுமி நந்தினி.
அப்போது “இந்து முன்னணி” என்று தங்கள் மத பெயரை அடையாளமாக வைத்துக்கொண்டு இவ்வாறு செய்ததால் தங்கள் மதம் அவமதிக்கப்பட்டதாக இந்துக்கள் யாரும் இந்து முன்னணியினரை எதிர்க்கவில்லை. இப்போது அதை சித்திரமாக வரைந்தவுடன் என்ன மத நம்பிக்கையை தூக்கிட்டு வர்றீங்க?
திரிசூலத்தை வைத்து குஜராத்தில் சங்கி பயங்கரவாத கூட்டம் கற்பினி பெண்ணின் மர்ம உறுப்பில் குத்தியது. அப்போது இந்து மத அடையாளமான திரிசூலம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக யாரும் சங்கிகளை கேள்வி கேட்கவில்லை.
நடந்த சம்பவத்தை ஓவியமாக வரைந்தவுடன் இதற்கு மட்டும் இந்து மத நம்பிக்கை என்று வருவது என்ன நியாயம்? உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
மகிழ்நன்பா.ம:
சங்கிகளை கதறவிட்ட ஓவியர் தோழர் முகிலனுக்கு தூரிகை வழங்கிய அரசியல் கோட்பாட்டின் பெயர்
#கம்யூனிசம் #Communism #பொதுவுடமை
வத்சலாநாகேந்திரன்:
தில்லைச் சமரில் தமிழ் வென்று, கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அறநிலையத் துறைக்கு மாறிய போது, சிற்றம்பல மேடையில் தமிழ் பாடிய தீட்டைக் கழிப்பது சிக்கலாக இருக்கவில்லை.மாறாக, உண்டியலை வைத்து அதற்குப் பூட்டும் போட்டது தான் ரொம்ப அன் ஈஈஈஈஈஸியா இருந்தது. அதே போல, இந்து(அ)தர்மம், நம்பிக்கை புண்படும் போன்ற ஈர வெங்காயங்களை விட, ஓவியங்களும்/அது பேசும் அரசியலும், உயர் நடுத்தர, நடுத்தர வர்க்க “முதல்” முறையாக வாக்களிக்கப் போகும் வயதை எட்டும் மாணவர்களை சென்றடைந்தது தான் கும்பி எரிவதற்கான உண்மைக் காரணம்.
கதிரவன்மாயவன்:
பெண் தீட்டு
கோவிலுக்குள்ளே அர்ச்சகர்களால் பல பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது, எந்தப் பார்ப்பானும் கோவிலுக்குள் தீட்டு கழிக்கவில்லை. ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழைந்த பின், கோவில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, தீட்டு கழிக்கும் சடங்கை செய்தனர் பார்ப்பன நம்பூதரிகள். இவர்கள் சொல்லும் வேத உபநிஷட ஆன்மீக லட்சணம் இது தான். பெண்கள் தீட்டல்ல… மூளை அழுகிய அர்ச்சக ஓசி சோறுகளே இந்த சமூகத்தின் தீட்டு..
பாரதிநாதன்:
பாரத மாதா ஓவியத்தில் மீ டூவா? ரத்தம் கொதிக்கிறது/// தமிழிசை.
அது சரிங்க. இந்துக் கோயிலில் பாலியல் வன்முறைக்கு அசிஃபா என்ற தளிர் உள்ளாக்கப்பட்ட சமயத்தில் உங்கள் ரத்தம் உறைநிலைக்கு போய் விட்டதே ஏன் மேடம்?
புலியூர்முருகேசன்:
எழுத்து, ஓவியம், இசை, பாடல், நாடகம்… என எதைக் கண்டெல்லாம் காவி பயங்கரவாதிகள் பயப்படுகின்றனரோ, அதுவே சிறந்த படைப்பு.
#லயோலா ஓவியங்கள் படைப்பின் உச்சம்.
மாதவராஜ்:
இந்த ஓவியங்களில் கிண்டல் இல்லை. கோபமும் வலியும்தான் மேலெழுந்து நிற்கிறது. அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா மிரட்டல்களுக்கு லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்கலாம். ஆனால், காலம் லயோலா ஓவியக் கண்காட்சியினை வாழ்த்துகிறது. திசையெல்லாம் கொண்டு செல்கிறது. #supportLoyala
கி. நடராசன்:
படைப்பு (ஓவியர்கள்) சுதந்திரத்தில் தலையிடும் பாஜக பாசிஸ்டுகளை வன்மையான கண்டங்கள் #supportLoyala
சுசீலா:
ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை … நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் உண்மைகளை அப்பழுக்கற்ற வகையில் அப்படியே சொல்கின்றன. அதனால் தான் காவித்துவம் பதறி போய் மிரட்டலாக வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டலினால் என்னவொரு பயன் என்றால், வழக்கம் போல் இலவச விளம்பரம் தான். பார்க்காதவர்களுக்கும் செய்தி போய் சென்றிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது என்பது மட்டும் தான். பிற மதத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரி என்பதால் , இதனை தவிர்க்க முடியாது என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை … இந்த ஹிந்துத்வா ஆட்சியில்!
வரைந்த ஒவியங்கள் மனதை புண்படுத்துகிறது என்றால், நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனதை என்ன பாடுபடுத்தும்???
கௌரிபால்சாத்திரி:
பாரத மாதா .. பாரத மாதா என்று புலம்புறாங்களே . பாரதமாதாவே இங்கிலாந்து காரன் பெத்துப்போட்டது தானே .. 😂
அருள்எழிலன்:
ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு ஹிட்லரை வரையமுடியுமா?
முகிலன் வரைந்த ஓவியங்கள் லயோலா கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது தொடர்பாக, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்து மதத்தை அவமதித்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து முகிலனுக்கும், லயோலாக் கல்லூரிக்கும், பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார்கள். முகிலனின் ஓவியங்கள் மிகத் தீர்க்கமாக பாஜகவை விமர்சிக்கிறது. இன்று தமிழினம் சந்திக்கும் உயிராதார பிரச்சனைகளை மையமாக வைத்து பாஜக அதில் செய்த துரோகங்களையும், நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களையும் அம்பலமாக்குகின்றன.
இந்த ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் குறியீடுகளாக வரையப்பட்டுள்ளன. தமிழ் ஓவிய மரபில் அதிலும் குறிப்பாக இந்துத்துவத்திற்கு எதிரான ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் பல நூறு ஓவியங்களாக இதற்கு முன்னர் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவிய மரபின் தொடர்ச்சிதான் முகிலனுடையது. மிகத்தீர்க்கமான அரசியல் படங்கள் அவை. நடைபெற்ற இடம் லயோலா என்ற கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பது பாஜகவுக்கு மட்டும் உறுத்தவில்லை. இங்கு அறிவுலகில் புரளும் பலருக்கும் அது உறுத்தலாகவே இருக்கிறது. ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அதன் பதட்டம் என அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். என்ற போதிலும் ஒரு கேள்வி உறுத்துகிறது.
பாஜகவை விமர்சிக்கும் போது இந்துத்துவத்தை தன் அரசியல் முகமாக வரித்துக் கொண்ட ஒரு அரசியல் பீடத்தை அதன் குறியீடுகளை தவிர்த்து விட்டு வரைவது ஹிட்லரை வரையும் போது அவரது தோள்பட்டை ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு வரைவது போன்றது. தமிழ் நிலத்தில், இந்தியாவில் இந்துத்துவத்திற்கெதிரான போராட்டத்தின் மரபை இடையில் ஒரு ஓவியன் நிறுத்திக் கொள்ளும் கருத்து அல்லது அது தொடர்பான ஊசலாட்டம் எங்கிருந்து வருகிறது. சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்ற கோஷத்தை இழந்து சிறுபான்மையினர் இறந்தால் மலர் வளையம் வைப்போம் என்கிற அளவுக்கு அது வலுவிழந்து விட்டதா?
முகிலனின் அரசியல் கோடுகளுக்கு வலுவான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர் பயணத்தில் அவர் தெளிவாக பயணிப்பார்!
ஆனந்தி:
பாரதமாதா தமிழர் சம்பளத்தை மாதம் ஒன்று ஆனவுடன் பிடுங்கிவிடுகிறாள். விவசாய, தொழிற்வளர்ச்சி தர மறுக்கிறாள். மருத்துவ சீட்டுகளை பிடுங்கி வடநாட்டவருக்கு கொடுத்தாள். TNPSC-ல் வடநாட்டவரை பணி அமர்த்துகிறாள். தமிழக அலுவலகங்களை இந்தி மொழியால் நிரப்புகிறாள். பாரதமாதாவால் என்ன பயன் நம் தலைமுறையினருக்கு??
ஓவியம் என்ன சொல்கிறது?
கார்ப்பரேட்டுகளால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #metoo சொல்கிறாள். பாரதமாதா பற்று இருப்பவர்கள் காப்பாற்றுங்கள், அவளை.
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகமே காறி உமிழ்கிறது. துப்பினா தொடச்சிக்குவேன்னு மானம் கெட்டு அலைவது. 😕
இந்தியன்களுக்கு பொழப்பு.
சங்கிகளின் கருத்துரிமை அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
“சென்னை இலயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மன்றமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஆறாம் ஆண்டு வீதி விருது விழாவை 2019 ஜனவரி 19, 20 தேதிகளில் நடத்தின. இவ்விழாவின் ஓரங்கமாக, சமகால நடப்புகளை துல்லியமாகவும் கலைநேர்த்தியுடனும் விமர்சிக்கும் ஓவியங்களின் கண்காட்சியும் நடந்தது. ஆனால் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஓவியங்கள் ஆட்சேபகரமாக இருப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட சில சங்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியதுடன், இதற்காக பகிரங்க மன்னிப்பையும் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் தாங்கள் பூதாகரப்படுத்த நினைத்த ஒரு விசயம் இப்படி உடனடியாக சுமூக முடிவை எட்டுவதை பொறுக்காத சங் பரிவாரத்தினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மட்டுமல்லாது, மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது வாழ்விணையர், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்பேசியில் அழைத்து கடுமையாக மிரட்டியும் அருவருப்பாக ஏசியும் வருகின்றனர்.
கல்விக்கூட வளாகச் செயல்பாடுகளையும் கலை இலக்கிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதன் மூலம் அவற்றின் சுதந்திரத்தன்மையை பறிப்பதுடன், தமக்கெதிரான விமர்சனங்களையும் தடுத்துவிட முடியுமென சங்பரிவாரத்தினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தங்களுக்கு தனிப்பெரும் அதிகாரம் இருப்பதாக அடாவடி செய்துவரும் சங் பரிவாரத்தினரின் இப்போக்கிற்கு எதிரான கண்டனத்தை எழுப்புமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. லயோலா கல்லூரி கல்விசார் பணிகளை இடையூறின்றி தொடரவும், முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
இதையும் பாருங்க …
வினவு தளத்தில் வெளியான முகிலனின் கேலிச்சித்திரங்களிலிருந்து சில பதிவுகள்.
நாவல்களை வாசிப்பதன் மீதான ஆர்வம் வற்றிப்போய் ஒரு தசாப்தம் ஆகிறது. விருப்பத்தெரிவின் பட்டியலில் இல்லாமல் போய் அதைவிடக் கூடுதலான காலம் ஆகிவிட்டது. இத்தகைய நிலையில்தான் தோழர் ஒருவர் நவல் எல் சாதவி எழுதிய ‘woman at point zero’ எனும் நூலைப் பரிந்துரைத்தார். தமிழில் சசிகலா பாபு மொழியாக்கத்தில் சூன்யப் புள்ளியில் பெண் எனும் தலைப்பில் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் சென்ற மாதம் வெளிவந்திருக்கிறது. தோழர் விவரித்ததை பகுதியளவாக புரிந்துகொண்டு இதனை ஒரு கட்டுரைத் தொகுப்பு என நினைத்து வாங்கினேன். சற்றே ஏமாற்றத்துடன் வாசிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் பிர்தவ்ஸ் வாழ்ந்த கொடிய உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன்.
நவல் எல் சாதவி
நாவலை எழுதிய நவல் எல் சாதவி 1931-ல் எகிப்தில் பிறந்து, மருத்துவம் படித்து மனநல மருத்துவராக பணியாற்றியவர். கெய்ரோ சிறைச்சாலையில் இருந்த தண்டனை பெற்ற பெண்களின் பண்புகளை ஆராய்ச்சி செய்தவர். அங்கே அவர் சந்திக்க விரும்பிய, பல நாட்கள் சந்திக்கவே ஒப்புக்கொள்ளாத, தூக்கு தண்டனைக்கு முதல்நாள் சந்திக்க ஒப்புக்கொண்ட பிர்தவுஸ் எனும் பெண்ணின் உண்மைக் கதையே இந்த நாவல். மதப் பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை எப்படியெல்லாம் நடத்தும் என்பதற்கான சாட்சியாக காட்சியளிக்கிறார் பிர்தவுஸ்.
சாதவி ஆராய்ச்சி செய்யும் சிறையில் பிர்தவுஸ் மட்டும் தனித்துத் தெரிகிறார். யாருடனும் பேசுவதில்லை. அவரைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வருவதும் இல்லை. தனக்கு தரப்பட்ட உணவைக்கூட காலை வரை சாப்பிடாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அந்தக் கைதி. அவரது நடவடிக்கைகள் அவரை சந்திக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது. சிறை மருத்துவரிடம் அவரை ஒரு சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியுமா என கேட்கிறார்.
(சிறை மருத்துவர்) “நான் முயற்சி செய்து பார்க்கிறேன், அவர் எனது கேள்விகளுக்கே பதில் சொல்வதில்லை. தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க எழுதப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அவர் கையெழுத்திடவும் மறுத்துவிட்டார். நீங்கள் ஒரு மனநல மருத்துவர் என்று அறிமுகப்படுத்துகிறேன். ஒருவேளை அப்போது அவர் உங்களை சந்திக்க ஒப்புக்கொள்ளக்கூடும்”
(சாதவி) “அவரது கருணை மனுவை யார் எழுதியது?”
”நான்தான் எழுதினேன். உண்மையில் அவரை கொலை செய்தவராக நான் கருதவில்லை. இத்தனை கனிவான பெண் கொலை செய்திருக்கக்கூடும் என உங்களால் நம்பவே முடியாது.”
”கனிவான நபர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என உங்களிடம் யார் சொன்னது?”
அன்று சிறை மருத்துவரின் கோரிக்கையை பிர்தவுஸ் நிராகரிக்கிறார். அப்போது துவங்கிய சாதவியின் ஏமாற்றம் பல நாட்களுக்கு தொடர்கிறது. இந்த ஏமாற்றத்தை அவர் தன் மீது நாட்டமில்லாத ஒருவரிடம் காதல்வயப்பட்ட தருணத்தோடு ஒத்திருந்ததாக குறிப்பிடுகிறார் சாதவி.
ஒரு நாள் அவர் பணி முடிந்து காரில் ஏறுகையில் பிர்தவுஸின் அறைக்காவலர் மூச்சிறைக்க ஓடி வருகிறார்.
”அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார்”
அதைக்கேட்ட சாதவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைப்போல சுவாசத்தின் வேகம் அதிகரித்தது. முன்னெப்போதையும்விட அவர் இதயம் வெகுவேகமாக துடித்தது. அவர் கால்கள் அவர் எடையை சுமக்காததைப்போன்ற இலகுவான நடையில் அதிவேகமாக பிர்தவுஸின் அறையை அடைகிறார். அங்கு உறைந்துபோனவராய் நிற்கையில் கத்தி போல ஊடுருவும் குரலில் பிர்தவுஸ் சொல்கிறார் “ஜன்னலை மூடுங்கள்!”
“நான் பேசவேண்டும்; இடையூறு செய்யாதீர்கள்; உங்கள் பேச்சை கேட்பதற்கு என்னிடம் நேரமில்லை. இன்று மாலை ஆறு மணிக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் (தூக்கிலிட). நாளை காலை நான் இங்கு இருக்க மாட்டேன்.” என்பதாக தொடங்கும் பேச்சு அவர் கைது செய்யப்படும் நிகழ்வை விவரிக்கும்வரை நீள்கிறது.
நாவலின் கதையை விவரிப்பதைவிட ஒரு கொலைக்குற்றவாளி, நீண்ட நாள் பாலியல் தொழில் செய்தவரின் கதை ஏன் உங்களுக்கும் எனக்கும் அவசியப்படுகிறது என்பதை பேசுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். ஆகவே நாவலில் இருக்கும் சில சம்பவங்களை மட்டும் பார்க்கலாம்.
சூனியப் புள்ளியில் பெண் (ஆங்கில நூல்)
தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக வைத்து பணம் ஈட்டிய பெண்ணிடம் இருந்து தப்பி, ஒரு போலீஸ்காரனால் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்டு பிறகு சாலையில் பசியோடு குளிரில் அலைகிறார். அப்போது ஒருவர் காரில் வந்து அவரை அழைத்துசெல்கிறார். அவர் வாழ்வில் பலமுறை எதிர்கொண்டதுதான் அப்போதும் நடக்கிறது. ஆனால் விதிவிலக்காக அவருக்கு அதற்காக பத்து பவுண்ட் பணம் கிடைக்கிறது. இருபத்தைந்து ஆண்டு கால வாழ்வில் அவர் முதல் முறையாக தொடும் பணம். அந்த பணத் தாள் கொடுக்கும் வினோத அனுபவத்தோடு வீதியில் நடக்கிறார். உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி வறுபடும் மணம் அவரை வந்தடைகிறது.
கடையில் நுழைந்து கோழி வறுவல் ஒன்றை ஆர்டர் செய்கிறார். மேசைக்கு வந்த கோழி வறுவலை நிதானமாக ஒவ்வொரு வாயாக முழுமையாக மென்று உண்கிறார். எவ்வளவு நேரம் ஒரு கவளம் உணவை (இறைச்சியை) வாயில் வைத்திருக்க இயலுமோ அவ்வளவு நேரம் வைத்திருந்து விழுங்குகிறார். அவருக்கு உணவை பரிமாறும் ஊழியர் அவர் சாப்பிடுவதை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொள்கிறார். தான் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை யாரும் கண்காணிக்காமல் இருக்கும் ஒரு தருனத்தை தன் வாழ்நாளில் அப்போதுதான் எதிர்கொள்கிறார் பிர்தவுஸ். அவர் குழந்தைப்பருவத்தில் இரவு உணவு இல்லாமல் தூங்கப்போவதே வழக்கமாக இருந்திருக்கிறது. பசியிலும் குளிரிலும் கோழிக்குஞ்சுகளைப்போல தம் சகோதர சகோதரிகள் சுருண்டு கிடந்து செத்துப்போனது அவருக்கு நினைவுக்கு வருகிறது. எப்போதும் அவர் அப்பா பசியோடு உறங்கப்போவதில்லை. ஆகவே அவருக்கு மட்டுமான உணவை பிர்தவுசின் தாய் வீட்டு சுவர் பொந்துகளில் ஒளித்து வைப்பார். அவர் அப்பா மீதம் வைத்த உணவுதான் அவருக்கும் ஏனையோருக்கும் கிடைக்கும்.
ஒரு பியஸ்தர் நாணயத்துக்காக அவர் சிறு வயதில் ஏராளமாக அடி வாங்கியிருக்கிறார். வேலை வாங்கப்பட்டிருக்கிறார், அழுதிருக்கிறார், ஏமாற்றப்பட்டிருக்கிறார். நூறு பவுண்ட் பணத்துக்காக ஒரு 60 வயது முதியவருக்கு மணம் முடித்துக்கொடுக்கப்படுகிறார் 19 வயது பிர்தவுஸ். அந்த கணவர் பிரார்த்தனை செய்யும்போதுகூட பிர்தவுஸ் சாப்பிடுவதை திருட்டுத்தனமாக கண்காணிக்கிறார்.
சிறுமியாக இருக்கையில் உடன் விளையாடிய இன்னொரு சிறுவனால் பாலியல்ரீதியாக (விளையாட்டாக) பயன்படுத்தப்பட்டதில் தொடங்கும் அவர் வாழ்வு இறுதியாக தன்னால் கொல்லவும் முடியும் என ஒரு ஆணிடம் விவரிக்கும்வரை ஒரு பாலியல் பண்டமாகவே நீள்கிறது. பெற்றோர்களை இழந்த பின் கெய்ரோவிற்கு அவரை அழைத்துச்செல்லும் அவர் மாமா, பிறகு 100 பவுண்ட் கொடுத்து அவரை மணமுடித்து செல்லும் அவரது முதிய கணவர், அவரிடமிருந்து தப்பி ஓடுகையில் அடைக்கலம் கொடுத்த ஒரு கடைக்காரர், அங்கிருந்து தப்பிச் செல்கையில் சந்தித்த ஒரு விபச்சார தரகுப் பெண், வழியில் விசாரணை செய்த போலீஸ்காரன் என அவர் எதிர்கொண்ட எல்லோரும் அவரை இரக்கமின்றி நுகர்கிறார்கள்.
பத்தொன்பது வயதில் திருமணம் எனும் பெயரில் அவரை வாங்கிய கணவர் வாயில் ஒரு விகாரமான ஒரு புண்ணோடு இருப்பவர். அதில் இருந்து வழியும் ரத்தத்தோடும் சீழோடும்தான் அவர் பிர்தவுஸுடன் உறவுகொள்கிறார். கணவர் உறங்கியபின் தன் முகத்தை பலமுறை சோப்பு போட்டு கழுவியதாக குறிப்பிடுகிறார் பிர்தவுஸ். அந்த வாழ்வை தொடர இயலாமல் தன் மாமா வீட்டுக்கு வந்தவருக்கு உணவுகூட கொடுக்காமல் திருப்பி கணவரிடம் சேர்க்கிறார்கள். அந்த நாள் முழுவதும் அவர் உணவில்லாமல் பசியோடிருக்கிறார், அந்த பசியின்போது அவர் கணவர் “உனக்கு சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை. நீ என்னை நம்பித்தான் பிழைத்தாக வேண்டும்” என்கிறார்.
நாவலின் எல்லா பக்கங்களிலும் அவர் எதிர்கொண்ட துயரங்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது. அப்படியான துயரங்களில் ஓரளவு சகிக்கக்கூடிய துயரங்கள்தான் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி தரும் அனுபவங்களாய் இருந்திருக்கின்றன. அடைக்கலமளித்த கடைக்காரர் அவரிடம் உனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்குமா தேன் நாரத்தைகள் பிடிக்குமா என கேட்கிறார். பிர்தவுஸுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என்ன வேண்டும் என்றோ என்ன பிடிக்கும் என்றோ யாரும் அவரிடம் கேட்டதில்லை.
முதல் பத்து பவுண்ட் சம்பாதித்த பிறகு நிமிர்ந்து சாலையில் நடக்கிறார். பலரும் அவரை “அழைக்கிறார்கள்”. முடியாது என மறுத்துவிட்டு நகர்கிறார். தன்னால் ஒருவனை நிராகரிக்கவும் முடியும் எனும் நம்பிக்கை அவரை பரவசமூட்டுகிறது. ஒருவன் அவரை அனுகும்போது அவனை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு முடியாதென்கிறார். அவன் ஏன் என கேட்கிறான்.
”ஏனெனில் இங்கே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். நான் யாருடன் செல்வது என்பதை நான்தான் முடிவு செய்வேன்” என்கிறார் பிர்தவுஸ்.
அப்படியானால் என்னை ஏன் நீ தேர்வு செய்யவில்லை என அவன் கேட்க உன் நகங்கள் அழுக்காக இருக்கின்றன எனக்கு அவை சுத்தமாக இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார் அவர். முதல் முறையாக அவர் உடல் அவருக்கு சொந்தமாகிறது. ஒரு உயர்மதிப்பு கொண்ட விபச்சாரிக்கு கிடைத்த அந்த வாய்ப்புகூட மத கட்டுப்பெட்டித்தனம் கொண்ட சமூகத்தில் குடும்பப்பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பிறகும் அவர் விபச்சாரத்தை நியாயப்படுத்தி வாழவில்லை சில காலத்துக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த குறைவான சம்பளத்தில் கழிவறைகூட இல்லாத அறையில் வாழ்கிறார். அங்கே முதல் முறையாக காதல்வயப்பட்டு ஏமாற்றப்படுகிறார். பிறகு கடைசி துணுக்கு ஒழுக்கத்தை தூர எறிந்துவிட்டு மீண்டும் பாலியல் தொழிலுக்குப் போகிறார். அதிகாரிகள் இளவரசர்கள் என பலரும் நாடும் பெண்ணாகிறார்.
இறுதியில் ஒரு காவல்துறையில் செல்வாக்குள்ள விபச்சாரத் தரகனால் அச்சுறுத்தப்பட்டு அவன் கட்டுப்பாட்டில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார். ஒரு நாள் அவன் அழைப்பை நிராகரிக்கையில் ஏற்பட்ட சண்டையில் அவன் எடுத்த கத்தியை பிடுங்கி அவனைக் கொன்றுவிட்டு வெளியேறுகிறார்.
கதை முடியவில்லை. சாலையில் நடந்து போகும் பிர்தவுஸை பெரிய காரில் வந்த நபர் அழைக்கிறான். இவர் மறுக்க விலை ஆயிரம் பவுண்டாகிறது. மீண்டும் மறுக்க அது இரண்டாயிரமாகிறது. அவன் கண்களை உற்றுப்பார்த்து பிர்தவுஸ் சொல்கிறார் “மூன்றாயிரம்”. அதற்கும் ஒப்புக்கொள்கிறான் அந்த அரபிய இளவரசன். உறவுக்குப்பிறகு பெற்ற பணத்தை அவன் கண் முன்னாலேயே கிழித்து வீசுகிறார் அவர். தான் தொட்ட முதல் பியஸ்தர் கொடுத்த அதே உணர்வு அவருக்கு இப்போது தோன்றுகிறது. அந்த இளவரசன் சொல்கிறான் “உண்மையில் நீ ஒரு இளவரசிதான். நீ முதலில் சொன்னபோது ஏன் நான் நம்பாமல் போனேன்?”
அதனைத் தொடர்ந்து நீளும் அந்த சிறு உரையாடலில் அரபிய இளவரசன் கேட்கிறான் “நீ யாரையேனும் கொலை செய்திருக்கிறாயா?”
”ஆமாம் கொன்றிருக்கிறேன்.”
”இல்லை நீ மென்மையானவளாக இருக்கிறாய். ஒரு கொசுவைக்கூட கொல்வாயா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”
”கொசுவைக் கொல்ல மாட்டேன், ஆனால் ஒரு மனிதனைக் கொல்வேன்.”
”நான் இதை நம்ப மாட்டேன்.”
”நான் என்ன செய்தால் நம்புவாய்?”
”நீ அதை எப்படி செய்வாய் என எனக்கு புரியவில்லை.”
அப்போது கையை உயர்த்தி ஓங்கி அவனை அறைந்துவிட்டு “ நான் உன்னை அறைந்துவிட்டேன் என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும். அதேபோல எளிதானதுதான் உன் கழுத்தில் கத்தியை செருகுவதும், அதற்கும் இதே அசைவு போதுமானது. பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
மத அடிப்படைவாதிகள் வாழும் நாடு பெண்களுக்கு ஒரு கொடும் சிறையாகவே இருக்கும் என்பதை பிர்தவுஸ் வாழ்க்கை மட்டுமல்ல நாவலில் வரும் எல்லா பெண் பாத்திரங்களும் உணர்த்துகின்றன. கணக்கிலடங்காத பெண்கள் இப்போதும் பகுதியளவுக்கான பிர்தவுஸின் வாழ்வை வாழ்கிறார்கள். அடிப்படைவாதிகள் எழுச்சிபெறும் எல்லா இடங்களிலும் பிர்தவுஸ்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள். கொடுந்துயரமாக அவர்களுக்கு ஒரு விபச்சாரிக்கு கிடைக்கும் சுதந்திரம்கூட கிட்டுவதில்லை, குறைந்தபட்சம் அவர்களின் கதையை கேட்க சாதவியைப் போன்ற ஆட்களும் கிடைப்பதில்லை.
அவர் படித்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என உச்சுகொட்டும் கலாம் டைப் அறிவுரையாளர்களுக்கு ஒரு தகவல்.. பிர்தவுஸ் பள்ளி இறுதி வரை படித்தவர். தேசிய அளவில் ஏழாவது ரேங்க் எடுத்து தேறியவர். அவர் தப்பி ஓடிய தருணங்களில் எல்லாம் தமது பள்ளி சான்றிதழை மறக்காமல் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். ஒரு உயர் மதிப்பு கொண்ட விபச்சாரியான பிறகு தன் வீட்டில் நூலகத்தை அமைத்திருக்கிறார். தமது தனிமையை அனேகமாக அங்கேயே செலவிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். அதில் வந்து, அது நொட்டை இது நொள்ளை என குத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சரியா… பாஸிட்டிவான எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு போட்டு அடிக்கிறீர்கள் என்று சிலபேர் வருத்தப்பட்டார்கள்.
ஆமாம் சரிதான், புத்தகத்திருவிழா நிறைய மாறியிருக்கிறதுதான். நிறைய நல்ல விஷயங்களும் நடக்கிறதுதான். சிற்றரங்கு வைத்து இலக்கியத்துக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணப்படங்கள் திரையிடுகிறார்கள். ஓரளவு சுமாரான கேன்டீன் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்திருக்கிறார்கள்… ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் இல்லை புத்தகத் திருவிழா. சர்வாதிகாரர்களின் வதைமுகாம்களை போல மகா மோசமாக இருக்கும். சரியான காற்றோட்டமிருக்காது, உள்ளே நுழைந்து வெளியே வந்தால் கருகிப்போன சிக்கன் டிக்கா மாதிரி ஆகிவிடுவோம். தண்ணீர் இருக்காது. நாற்றமடிக்கும் மோசமான கழிப்பறைகள் வைத்திருப்பார்கள். குறுகலான பாதைகள் வைத்திருப்பார்கள், உள்ளே நுழைந்தாலே அடுத்தநாள் காய்ச்சலில் படுத்துவிடவேண்டியதுதான்.
இந்த சிக்கல்களை எல்லாம் ஆண்டுதோறும் யாராவது திட்டித்திட்டிதான் இப்போது இந்த அளவுக்கு நிலைமை சரியாகி இருக்கிறது. இல்லையென்றால் பபாஸியார்கள் இன்னும் இன்னும் நிலைமையை மோசாமாக்கிக்கொண்டே போவார்கள். இந்தமுறை பார்க்கிங்கில் அடித்து விரட்டுகிறார்கள் என எஸ்ரா தொடங்கி பத்துபேர் சொன்னால்தான் அடுத்தமுறை பார்க்கிங் கான்ட்ராக்டரிடம் கொஞ்சம் பார்த்து நடங்கப்பா என அறிவுறுத்துவார்கள். உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!
இந்த முறை கவனித்திருப்பீர்கள், ஒவ்வொரு சந்திலும் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். உள்ளேயே காபி கிடைக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. எல்லா கடைகளிலும் டெபிட்கார்ட் பில்லிங் இருக்கிறது. இதெல்லாம் சமீபத்திய மாற்றங்கள். ஆனாலும் அதிலும் சில பிரச்னைகள் இருக்கவே செய்தன. தண்ணீர் குண்டா வைத்தவர்கள் டம்ளர் வைக்க வேண்டுமில்லையா… அது எங்குமே இல்லை. இதுதான் அந்த பபாஸி மெத்தனம். இதெல்லாமா கவனிக்க முடியும் என்று கேட்டால்… இதையெல்லாம்தான் கவனிக்க வேண்டும். வாசகனின் காசு மட்டும் வேண்டும்… அவனுடைய கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா?
சிற்றரங்கு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். இங்குதான் தமிழின் முக்கியமான அத்தனை நிஜ எழுத்தாளர்களும் பேசுகிறார்கள். பெரிய அரங்கு என்பது சோக்கு சுந்தரன்களின் கோட்டை. அங்கே எப்போதாவதுதான் எழுத்தாளர்கள் மேடையேறுவார்கள். மற்றபடி அது இலக்கியத்துக்கு தொடர்பற்ற ஏரியா… இப்படிப்பட்ட சிற்றரங்கை ஏன் கழிப்பறையை போல யாருக்குமே தெரியாத ஒரு மர்மமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதை எல்லோருக்கும் தெரிகிற இடத்தில் வைத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இதை யாராவது கேட்க வேண்டும். இப்படி ஒரு சிற்றரங்கு கடந்த காலங்களில் கிடையாது. மனுஷ்யபுத்திரன் மாதிரி நிறையபேர் போராடிதான் அப்படி ஒன்றையே கொண்டுவந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
மொத்தம் எட்டு நீண்ட வரிசைகள் கொண்ட பெரிய பாதைகள் கொண்டது புத்தகத் திருவிழா அரங்கு. ஒவ்வொரு வரிசையும் அரைகிலோமீட்டருக்கு குறையாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு சுற்றுக்கு நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். அதுவும் மிதமான வேகத்தில்… வேக நடையைவிட மிதமான வேகத்தில் நடப்பதால் அதிக கால்வலி உண்டாகும். என்னதான் சுவாரஸ்யான நூல்களை பார்த்துக்கொண்டே நடந்தாலும்… வலி நிச்சயமாக இருக்கும். நல்ல உடல்வாகுள்ளவர்களுக்கு சிக்கலில்லை. பொதுவாக வாசிப்பாளர்கள் அத்தனை பலசாலிகளாக இருப்பதில்லை. எனவே அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து ரெஸ்ட் எடுக்க உட்கார ஏற்பாடுகள் செய்யலாம். பல ஆண்டுகளாக அப்படி ஒரு ஏற்பாடே அரங்கில் கிடையாது. எங்காவது ஸ்டாலில் காலி சேர்களில் உட்கார்ந்து பாருங்கள்… கடைக்காரர்கள் எல்லாம் பதறிப்போய் திருடர்களை போல டீல் பண்ணுவார்கள்.
ஒரு நூலை வாங்குபவர் அந்த நூலை பத்து பக்கங்களாவது படித்துவிட்டு வாங்குவதுதான் சரியாக இருக்கும். இது காய்கறியோ மொபைல் போனோ அல்ல… 200 ரூபாய் கொடுத்து வாங்குகிற நூலின் நான்கு பக்கங்களையாவது படிக்கிற அவகாசம் வேண்டும். அதற்கான வசதிகள் நம் கடைகளில் இருக்கிறதா? கிடையாது. அப்படியே நின்றுகொண்டே பார்த்து நின்றுகொண்டே நகரவேண்டியதுதான். சாப்ட்வேர் விற்கிறவன் சேர் போட்டு வைத்திருக்கிறான்… உங்களுக்கு என்ன?
அடுத்து நிறைய நூல்கள் வாங்குகிறவர்கள்… பல பத்து கிலோ எடையுள்ள நூல்களையும் கைகளில் சுமந்தபடியேதான் நடக்கவேண்டும். சாதாரண சிறிய சூப்பர் மார்க்கெட்டில் கூட சுமை வண்டிகள் தருகிறார்கள். இவ்வளவு செலவழித்து நூல்கள் வாங்குகிறவர்களுக்கு அப்படி ஒரு ஏற்பாடு வேண்டாமா… உள்ளேயே வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் சுற்றிப்பார்க்க வீல்சேர் வசதிகளும் கிடையாது. அப்படி வருகிறவர்களுக்கு உதவுகிற வாலண்டியர்களும் இல்லை.
இதையெல்லாம் இப்போதுதான் கேட்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் மாற்றம் வரலாம். என்ன, அதுவரை வாசகர்கள் மிச்சம் மீதியாவது இருக்கவேண்டும் !
அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் – வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ள, 10 சதவிகித இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை – இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி – எப்போது ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்தவாரியாக ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள்ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும்.
இந்த ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது?
உலகில் எங்குமில்லாத ஜாதி – வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு.
மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் அந்தப் பிரம்மாவானவர் “தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றுமுண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.”
இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். அதுமட்டுமா? அதனை மீறி கல்வி அக்காலத்தில் வேதம் கற்க மற்றவர்கள் முயன்றால், நாக்கை அறுக்க வேண்டும்; காதால் ஓதுவதைக் கேட்டால். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுதர்மம் (டாக்டர் அம்பேத்கர்).
இதனால், கீழ்ஜாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவு பெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத ‘மன ஊனம்” உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்! சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் – பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூகநீதி வேண்டும் என்று கேட்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே – இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளியேறினார்.
இவர்களுக்காகத்தான் 1920 இல் பதவியேற்ற நீதிக்கட்சி – திராவிடர் இயக்கம் – அதன் ஆட்சியின்போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த “இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து. 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இடம்பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ) அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் பார்ப்பனர்கள் உள்பட ஜனத்தொகையில் 3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 17 சதவிகிதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலில் வந்தது; அதனால், வகுப்புவாரி உரிமையில், பார்ப்பனரல்லாதாரில் ஆதிதிராவிடர், இசுலாமியர், கிறித்துவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு – இட ஒதுக்கீடு ஒரு சமுகநீதியைத் தந்தது!100சதவிகிதஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவிகிதத்தை ஏற்க மனமில்லை !!
“1950 இல் அமலான இந்திய கூறப்பட்டிருக்கும் இது சமத்துவத்திற்கு விரோதம்” என்று அடிப்படை அரசியல் சட்டத்தில் உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன) அம்மையார்”‘ போட்ட வழக்கு. கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது.
இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு அவர்கள், சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார்.
அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” ‘Socially and educationally’ என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அந்த அடையாளம் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலம் பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் உள்ள சொற்றொடர்களே).
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், ‘பொருளாதார ரீதியாக’ (Economically) என்பதையும் இணைக்கவேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார்.
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
“ஜாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டது பாரம்பரியமானது. தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக்கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ்ஜாதிக்காரன் ஒருபோதும் மேல்ஜாதிக்காரன் ஆக முடியாது: சுடுகாடுகூட தனித்தனிதான்! பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள்” என்ற கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள்!
எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்’ (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!
வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை, ஆனால், “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல” என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.(நூலிலிருந்து பக்.11-14)
இந்திரா – சகானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மண்டல் கமிசன் இடஒதுக்கீடு பற்றிய வழக்கு தீர்ப்பில் 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி (16.11.1992 மிகவும் தெளிவாகவே பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்துவிட்டது.
15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்தபோதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே – எந்தெந்த வரையறைச் சொற்கள் விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ அதே சொற்களைத்தான் “Socially and Educationally” என்று போடப்பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் கையாளப்பட்டது
அப்போது சில உறுப்பினர்கள் ‘Economically’ என்றும் இணைத்து. அந்த அளவுகோலையும் இணைக்கவேண்டும் என்று வாதாடியபோது, பிரதமர் நேரு பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாகும் என்று அரசியல் நிர்ணய சபை, முதலாவது அரசியல் திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களில் தெளிவாக்கப்பட்ட பிறகுதான், பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின), 340 பிரிவிலிருந்த “Socially and Educationally” ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ என்ற சொற்றொடர்களே போடப்பட்டது என்பது வரலாறு.
மேலும், நரசிம்மராவ் பிரதமரானபோது தனியே 10 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கியதும், அதனால்தான் 9 நீதிபதிகள் அமர்வால் செல்லாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டது!
ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ற உச்சநீதிமன்ற நீதிபதி மிக அழகான விளக்கத்தை ஒரு வழக்கில் கூறினார். ‘Reservation is not a poverty alleviation scheme’ இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் இதுவரை காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைக் கைதூக்கி விடுவது: கடந்த கால அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையே தவிர, வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: அதற்குப் பல வழிகள் தனியே காணவேண்டுமே தவிர, இதனை அதற்குப் பயன்படுத்துவது அரசியல் சட்ட விரோதம் என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்திரா – சகானி வழக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் இதே போன்று உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் அவசரச் சட்டம் (Ordinance) (1.5.2016) கொண்டு வரப்பட்டதை எதிர்த்து “தயாராம் வர்மா vs குஜராத் மாநில அரசு” என்ற வழக்கின் 104 ஆவது பக்கத் தீர்ப்பில் அதனை செல்லுபடியற்றது (Quashed) (4.8.2016) என்று அடிபட்டு விட்டது. (நூலிலிருந்து பக்.5-7)
நூல்: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான 10% இடஒதுக்கீடு கூடாது – ஏன்? ஆசிரியர்: கி.வீரமணி
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277