வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பலவித திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசியல் கட்சிகளை வளைப்பது, இமேஜ் பில்டப் செய்வது, முக்கியமாக கலவரங்களை திட்டமிடுவது என பா.ஜ.க.வும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடுமையாக திட்டமிடுகின்றன. எந்தக் கட்சியை உடைக்கலாம், வளைக்கலாம் என்பதை நான்கைந்து மாநிலங்களில் செயல்படுத்திய அனுபவத்துடன் தமிழகத்திலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்து அறிவு தளத்தில் இவர்கள் செய்த சமீபத்திய பில்டப் ஒன்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் ஏ ஆண்டர்சன் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ‘ஆர்.எஸ்.எஸ்-இன் உள்ளே ஒரு பார்வை (The RSS: A View to the Inside) என்பது நூலில் பெயர். இந்த நூல் குறித்து அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் கட்டுரைகளும் பேட்டிகளும் வெளியாகின. இடதுசாரி, லிபரல் ஊடகங்களும்கூட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவருடைய நூல் என்கிற வகையில் நேர்காணல்களை வெளியிட்டிருந்தன. கேள்விகள் என்னவோ சூடாகத்தான் இருந்தன, ஆனால் ஆண்டர்சனின் பதிலோ ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பிரமோத் அதாவது ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளரைப் போல உள்ளன.
உதாரணத்துக்கு ஸ்க்ரால் இணையதளத்தில் வெளியான நேர்காணலில் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் உளவியல் எப்படிப்பட்டது என்கிற கேள்விக்கு ஆண்டர்சன் இப்படிச் சொல்கிறார், “நான் சந்தித்த அத்தனை பிரச்சாரக்குகளும் (ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியர்கள்) கல்லூரி படிப்பு முடித்தவர்கள். கல்வி மிக முக்கியமான தேவையாக உள்ள அவர்களுடைய திட்டங்களுக்கு அது பொருத்தமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் உயர்சாதியினர்; அனைவரும் அல்ல. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பிரச்சாரக்குகள் அதிக அளவில் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களுடைய ஆளுமை பற்றி சொல்வதென்றால், இளையவர்கள் தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சாதியற்ற இந்து மடம் என்பார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டுக்கொடுத்தவர்கள், சொத்துக்களை துறந்தவர்கள், அமைப்புதான் இவர்களை ஆதரிக்கிறது. கொள்கை பற்று இருந்தால் மட்டுமே முழு வாழ்வையும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக அர்ப்பணிக்க முடியும். ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்குகள், சமயத் தொண்டர்களைப் போல இந்த உலகத்துக்கு நல்லது செய்ய வந்தவர்கள். நான் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாக்கியத்தில் சொல்வதென்றால், அவர்கள் தர்மத்தின் தூதுவர்கள்” என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு கிறித்துவர்களுடன், இஸ்லாமியர்களுடன், இந்துக்களில் சில பிரிவினருடன் இடதுசாரிகளுடன் பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு இந்தியாவின் கடந்தகாலம் குறித்து குறைகள் உள்ளன இல்லையா? என்ற மற்றுமொரு கேள்விக்கு,
“இல்லையில்லை. 50 பிரச்சாரக்குகளை சந்தித்த பின்பே இந்த கருத்தாக்கத்துக்கு வந்துள்ளேன். வெளியிலிருந்து பார்க்கும்போது ஆர்.எஸ். எஸ். அப்படியான தோற்றத்தைத் தரலாம். சாதாரண உறுப்பினர்களிடம் இத்தகைய பண்புகள் இருக்கலாம். பிரச்சாரக்குகளிடம் அப்படியில்லை” என்கிறார் ஆண்டர்சன். பசுவின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் கும்பல் கொலைகளுக்கும் முஸ்லீம்கள்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பு செயல்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் ஆண்டர்சனின் பதில் ‘அவர்கள் அப்படியில்லை’ என்பதுதான்.

பெரும்பான்மையாக உள்ள இந்துக்களில் பெரும்பான்மையினர் தங்களை ‘இந்து’க்களாக உணருவதில்லை. அதாவது, இந்து தேசியத்துக்கு அடித்தளம் போட்ட சாவர்க்கரின் இந்துக்களாக அவர்கள் இல்லை. எனவே அவர்களை ஒருங்கிணைக்க ‘இந்து தேசியம்’ மிகத் தேவையாக உள்ளது. அறிவு தளத்தில் தாக்கம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தை கவர, ஆண்டர்சன் போன்ற ‘அறிவுஜீவி’ பேராசிரியர்களின் துணை ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தேவைப்படுகிறது. அதை அவரும் ‘இந்துத்துவ’ அறிஞர் ஸ்ரீதர் டீ டம்ளே இந்நூலில் சேர்ந்து செய்திருக்கிறார்கள்.
ஆண்டர்சன் என்ற அமெரிக்க அறிவுஜீவி ஆர்.எஸ்.எஸ். உள்ளிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலை ஒலித்தார் அல்லவா, அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸின் உள்ளிருந்து அதன் உண்மையான குரலை ஒலிக்க வைத்திருக்கிறார் மேற்குவங்க சமூக செயல்பாட்டாளர் ஒருவர். சய்பால் தாஸ்குப்தா என்ற அவர், ஆர்.எஸ்.எஸ். கூடாரத்துக்குள் சென்று, ஆர்.எஸ். எஸ்.ஸின் பிரபலமான முகமான ‘கலவர’ முகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். சய்பால் வெளியிட்ட இந்தத் தகவல்கள் ஆண்டர்சனின் ‘தர்மத்தின் தூதுவர்கள்’ முகத்திரையை கிழிக்கப் போதுமானவை.
செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிற கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) விழாவில் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் சொல்கிறார் சய்பால். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக இணைந்து அதன் இணைய பிரிவில் பணியாற்றிய சய்பால், மேற்குவங்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பெரும்தலைகள், ஆண்டர்சன் எழுதியிருக்கும் படித்த பட்டதாரி பெரும்தலைகள் கலவரத்துக்காக திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி ராமநவமி ஊர்வலத்தின்போது மேற்குவங்கத்தின் அன்சோல், ராணிகன்ஞ், துர்காபூர் போன்ற இடங்களில் திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கியது இந்த கும்பல். இதில் மூவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கலவரங்களை முன்வைத்து மட்டுமே தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் ‘இந்து தேசிய’ திட்டத்தின் ஒரு பகுதி. எனவேதான், வரவிருக்கும் ஜென்மாஷ்டமியில் ஹவுரா மாவட்டத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருக்கிறது இந்தக் கும்பல்.
ஹவுரா மாவட்டத்தின் பா.ஜ.க. செயலாளர் நித்தீஷ் குமார் சிங் என்பவர் செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கிவிருக்கிற ஊர்வலத்தின் திட்டங்களை இமெயில் வழியாக ஆர்.எஸ்.எஸ்.காரராக நடித்துக் கொண்டிருக்கும் சய்பாலிடன் விவரிக்கிறார். ஊர்வலம் கிருஷ்ண மந்திரில் தொடங்கிய ஹவுரா நிலையத்தில் முடிவதாகவும் இடையே முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கோஷங்கள் போடுவதன் மூலமாக அவர்களைத் தூண்டி கலவரத்தை உண்டாக்குவதே திட்டம் எனவும் விவரிக்கிறார் நித்தீஷ் குமார்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி (படத்தில் கையில் வாள் ஏந்தியபடி உள்ளவர்) என்பவர் ஊர்வலம் எப்படி எந்த வழியாக செல்ல வேண்டும் என மிக விரிவாக சாய்பாலுக்கு விவரிக்கிறார். கண்டிப்பாக ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக செல்ல வேண்டும் என சொல்லும் அவர், “அவர்கள்(முஸ்லீம்கள்) எதுவும் செய்ய மாட்டார்கள். அப்படியும் எதிர்வினையாற்றினால் நாம் பலமாக திருப்பித் தாக்க வேண்டும். போலீஸ் மட்டும் அமைதியாக இருந்தால் இவர்களை காலி செய்துவிடலாம்” என அறைகூவல் விடுக்கிறார். இவர் கலவர கமிட்டியின் உறுப்பினர் என தன்னிடம் கூறியதாக சய்பால் தெரிவிக்கிறார். 50 மேற்பட்ட சங்கிகளிடம் ஒன்றரை மாதங்களாக ‘களப்பணி’ செய்து கலவர திட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் சய்பால்.
சங்பரிவாரத்தின் சூப்பர் ஹிட் திட்டமான ரத ராத்திரை ஊர்வலமும் பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய நீண்ட நெடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பிரிவினைக்கான சாத்தியங்கள் உண்டோ அங்கெல்லாம் இந்தத் திட்டத்தை மீள் உருவாக்கம் செய்து பலனடையப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மேற்கு வங்கம் அதன் சமீபத்திய களம். தர்மத்தின் தூதுவர்கள் இந்து தேசியத்தை அமைக்கும் பொருட்டு கைகளில் வால் ஏந்தி தலைகளை கொய்ய காத்திருக்கிறார்கள். ஆண்டர்சன் போன்ற அமெரிக்க கெட்டிக்காரன் சொன்ன புளுகு எட்டு நாள்கூட தாங்கவில்லை.
- கலைமதி
உதவியவை:



அதேவேளையில், மக்கள் மீது ஏவப்பட்ட இந்த அடக்குமுறையை எதிர்த்த, வழக்கறிஞர்களின் சட்டப்போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள், காவல்துறையின் சட்டவிரோத ‘முற்றுகையை’ தகர்த்ததில் துவங்கி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிறப்பு மருத்துவர் குழு மூலம் பரிசோதனை செய்வது, காவல்துறையால் பீதியூட்டும் வகையில் பதிவு செய்யப்பட்ட 200 மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு பெற்றது, சட்டவிரோத கைதுகள், மிரட்டல்களை முறியடித்தது, NSA, குண்டர்சட்டம் போன்ற தடுப்புக்காவல் அடைப்புகளை தகர்த்தது, கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கு துணைநின்றது, தமிழக காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது என வழக்கறிஞரின் பணி மக்கள் போராட்டத்தின் நிழல்போல் பின் தொடர்ந்தது என்றால் மிகையல்ல.

‘ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!’ என்ற தலைப்பில் அவுட்லுக் இதழ் ‘எஸ்ஸார் டேப்’ விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தது. ரிலையன்ஸால் ஆட்சியதிகாரத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடிகிறது என்பதையும் அவர்களால் அரசாங்கத்திலும் நாடாளுமன்ற குழுக்களிடையேயும் எப்படி செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதையும் யாரை அமைச்சராக்கலாம் என்பதையும் நீதித்துறையினருக்கு லஞ்சம் தருவதையும், மத்திய பட்ஜெட்டையும்கூட இந்நிறுவனம் தீர்மானிப்பதையும் எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தியது. அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுக்கும் அளவுக்கு ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனர் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் ஸ்பான்ஸரில் ஊர் முழுக்க பல்லிளித்த ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்கள் நினைவிருக்கிறதா? முந்தைய பிரதமர்கள் கார்ப்பரெட்டுகளுக்கு சாதகமாக இருந்தவர்கள்தான். ஆனால், கார்ப்பரேட்டுகளுக்காக குடியரசையே விற்ற பெருமை வாஜ்பாயியை சேரும். ஆக, ‘இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!’ என்று புகழுடன் இரங்கற்பாவை துவங்கலாம்.
பிரதமர் அப்பாவி, ஆனால் வாஜ்பாயி ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தினார் என்கிறது 2013-ஆம் ஆண்டு வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை. காங்கிரசின் 2ஜியை பேசி தேர்தலில் வெற்றி பெற்ற மோடியின் குரு வாஜ்பாயி அரசு செய்தது இது. வாஜ்பாயி அரசில் கொண்டு வரப்பட்ட புதிய டெலிகாம் பாலிசியால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூட்டுக்குழு அறிக்கை சொல்கிறது. இதையெல்லாம் தெரியாத அப்பாவி பிரதமராக வாஜ்பாயி இருந்திருக்கிறார். எனவே, அவரை அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக! என வாழ்த்தலாம்.
அதே கோவா உரையில் வாஜ்பாயி சொல்கிறார், “குஜராத்தில் என்ன நடந்தது? சபர்மதி எக்ஸ்பிரஸில் அப்பாவி மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது நடந்திருக்காவிட்டால், குஜராத்தில் அந்த சோக சம்பவம் (முசுலீம் படுகொலை) நடந்திருக்காது. ஆனால், மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இதை செய்த குற்றவாளிகள் யார்? அரசு வேகமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை வேகமாக தகவல்களை திரட்டி வருகிறது. ஆனால், குஜராத்தில் இந்த கொடுமை எப்படி தொடங்கியது என்பதை மறக்கக் கூடாது. அதன்பின் நிகழ்ந்த விளைவுகள் கண்டிக்கத் தக்கவைதான், ஆனால், கொளுத்தியவர்கள் யார்? எப்படி நெருப்பு பரவியது?” என வீரவேசம் பேசுகிறார் ஒரு சங்கியின் பாணியில். இதையேதான் குஜராத் படுகொலைகள் குறித்த டிவி பேட்டியில் மோடியும் சொன்னார். குருவின் பாணியில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்றார் மோடி. எனவே, நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம் என புகழஞ்சலி செலுத்தலாம்.












கடந்த ஒரு நுற்றாண்டாக இது போன்றதொரு கனமழை பெருவெள்ளத்தை கண்டதில்லை என்கிறார்கள் கேரள மக்கள். எதிர்காலத்தில் மழை என்றால் அச்சப்படவும் வாய்ப்புள்ளது என்கிற அளவிற்கு கடும்பாதிப்பு.
பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பு. கேரளாவில் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா முழுவதும் சேதாரம். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட படகுகளுக்கு அப்பகுதியில் இருந்த வீடுகள் தான் தடுப்புச் சுவராக இருந்தது என்றால் அந்த கோரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்பகுதிக்கு அருகே உள்ள ஒரு சிறிய நகரம் கொழஞ்சேரி. இதையொட்டிய பம்பை ஆறு. அதன் கீழ் பகுதியில் நெடும்பிரையார் என்கிற சிறிய ஊர். அதில் அப்பகுதியில் பிரபலமான ஒரு டென்டல் கிளினிக்.

படிப்படியாக முன்னேறி இந்த உயர்ந்த கட்டிடத்திற்கு வந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் சில புதிய தொழில்நுட்ப கருவிகளையும் வாங்கி போட்டிருந்தேன். இதுபோன்ற காட்டாற்று வெள்ளம் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய இத்தனை ஆண்டுகள் உழைப்பையும் இந்த மழை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.

உள்ளே பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையை இரண்டு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளேயும் வெளியேயும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆபர்கள் அறிவித்து தொங்க விடப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் நுகர்வோரை சுண்டி இழுக்கும் விதமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது. அவர்களை எல்லாம் வேலை வாங்கியபடி அதன் உரிமையாளர் ஸ்ரீகுமார் நின்றிருந்தார்.
வெள்ளத்தால் நான் தற்போது இழந்துள்ள பொருட்களின் மதிப்பு மட்டும் ஒரு கோடி இருக்கும். அரசாங்கம் வீடுகளுக்கு மட்டும்தான் இழப்பீடு கொடுப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அப்படி எதுவும் சொல்லவில்லை. இது ஒரு பெரும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார்.






















பயங்கரவாதத்தை அடக்குவதற்கு என்று சொல்லி கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் எப்படி ஜனநாயக உரிமைக்காகப் போராடுவோர் அனைவர் மீதும் ஏவப்பட்டதோ அவ்வாறே UAPA சட்டமும் தற்போது ஏவப்படுகிறது.