Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 447

எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !

1

நிர்மலா தேவி ஒரு பார்ப்பனப் பெண் என்று யாரும் பேசவில்லை, நினைக்கவில்லை. அவர் உதவிப் பேராசிரியர் வேலையில் வேலை பார்த்த ஒரு புரோக்கர், அதன் வழியில் பின்னாளில் துணை வேந்தராக மாறிவிடலாம் என்று பிளான் போட்ட ஒரு ஜன்மம். ஆனால் பா.ஜ.க-வின் எச்.ராஜாவிற்கு ஒரு பார்ப்பனப் பெண் இப்படி ரவுண்டு கட்டி அடிக்கப்படுகிறாரே, அதை வைத்து ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவிற்கு கொள்ளுத் தாத்தா வயதிலும் தீயாய் வேலை பார்க்கும் கவர்னரை வெளுத்து வாங்குகிறார்களே என்று பார்ப்பனக் கோபம் வந்திருக்கும் போல.

எஸ்.வி.சேகர்

இடையில் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டிய கொள்ளுத் தாத்தாவின் அநாகரிமான நடத்தையை ஊரே காறித் துப்பியது. போதாதா எச்ச ராஜாவுககு…. திரும்பவும் நரகலை மென்று வாயில் துப்ப ஆரம்பித்துவிட்டார்.

கனிமொழியை கீழ்த்தரமாக சித்தரித்து அவர் போட்ட டிவிட், நிர்மலா தேவியின் விவகாரத்திலிருந்து திசைதிருப்பிவிடும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் இப்போது பாஜக கும்பல் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களிடமிருந்து மட்டுமல்ல, தமிழக பத்திரிகையாளர்களிடமிருந்தும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் நிலை உருவாகி விட்டது!

கிளைமாக்சாக மைலாப்பூர் மாஃபியாவின் டார்க் காமடி பீசான எஸ்.வி.சேகர் ஒரு அசிங்கத்தை பகிர்ந்திருந்தார். அதில் பெண் பத்திரிகையாளர்களெல்லாம் படுக்கையை விரித்துத்தான் வேலை வாங்குகிறார்கள் என்று இடம் பெற்றிருந்தது. இது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே மடக்கி கேள்வி கேட்ட செய்தியாளரை “ஆன்டி இன்டியன்” என்று சாபம் விட்டவர்தான் இந்த எச்.ராஜா. சேகரோ தன்னை சங்கர மடத்தின் அடியாளாக கருதிக் கொள்வதால் நரகலை மென்று துப்புவதில் ராஜாவை விட வேகம் காண்பிக்க இந்த இழிவான பதிவை பகிர்ந்திருந்தார்.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த பார்ப்பனத் திமிர்.

வெளியில் கவர்னரின் வண்டவாளங்களை நக்கீரன் எனும் சூத்திர ஏடு தோலுரித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏட்டில் வரவில்லை என்பதால் நக்கீரனின் அம்பலம் தாமதமாகவே வெளி உலகை தொட்டது. அதன் பிறகு கவர்னர் புரோகித் அவரது முன்னோடியான திவாரி, சண்முகநாதன் என ஆபாச அத்தியாங்கள் வரிசையாக செய்திகளில் வந்து குவிவதால் சங்க பரிவாரம் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றது.

கவர்னர் தொட்ட முகத்தை எத்தனை முறை கழுவினாலும் அந்த அருவெறுப்பு போகவில்லை என்று லஷ்மி சுப்ரமணியம் எனும் அந்த பத்திரிகையாளர் சொன்ன விதம் பா.ஜ.க பரிவாரங்களுக்கு கடும் எரிச்சலை தோற்றுவித்தது. ஆகவே என்ன செய்யலாம் என்று யோசித்து மத்திய அமைச்சர் பொன்னார் என்ன சொன்னார் என்றால், சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி மோடி மற்றும் தலைவர்களை கேவலமாக பேசுகிறார்கள் என்று அறிக்கை விட்டார்.

ஆனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதிலும், பதட்டத்தை தோற்றுவிப்பதிலும் எச்ச ராஜாவோடு யாரும் போட்டி போட முடியாது என்பதைத்தான் நேற்றைய ஊடக விவாதங்கள் அம்பலப்படுத்தின. தற்போது எஸ்.வி.சேகர் தான் பகிர்ந்த நண்பரின் பதிவை நீக்கிவிட்டதாகவும், அதை படிக்காமல் பகிர்ந்ததாகவும் தப்பிக்க பார்க்கிறார். நன்றாக கவனியுங்கள், நண்பரின கருத்தை அவர் மறுக்கவில்லை, கண்டிக்கவில்லை,  படிக்கவில்லை என்றுதான் சமாளிக்கிறார்.

கோபுர முத்திரையுடன் மன்னிப்புக் கடிதம்

ஆனால் ஊடகவியலாளர்கள் விடுவதாக இல்லை.

சில பத்திரிகையாளர்கள் தி.நகரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கப் போவதாகவும், பா.ஜ.க தலைமை எச் ராஜா மற்றும் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள்.

ஐயா நெல்சன் சேவியர் அவர்களே, யாராவது கொலைகாரனிடம் போய் கருணை மனு போடுவார்களா? கவுரி லங்கேஷ், கல்பர்கி, தபோல்கர் போன்றோரை சுட்டுக் கொன்ற கூட்டம் பத்திரிகையாளர்களை எப்படி நடத்தும் என்பது உலகறியும். அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்று நேரடியாக பா.ஜ.கவிற்கு ஜால்ராவும், டோலக்கும் அடிப்போருக்குத்தான் ராஜ உபசாரம் என்பதையும் உலகறியும்.

இப்படி கருத்துரிமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க கும்பல்தான் எச்.ராஜா, எஸ்.வி.சேகரின் பார்ப்பனக் கொழுப்பிற்கு பவரை சப்ளை செய்கிறது. கதுவா, உன்னாவாவில் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து நாசமாக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.கவிடம் போய் அசீபாவிற்கு நீதி கேட்டு நெல்சன் சேவியரோ, கவிதா  முரளிதரனோ கேட்க முடியுமா?

எச்.ராஜா.வின் வக்கிரம்

மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய நேரத்தில், சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டிய காலத்தில் இந்த குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் தலைமை குற்ற அலுவலகத்தில் போய் மனு கொடுத்தால் அந்த மனுவிற்கு என்ன கிடைக்கும்? ரேப்பை போய் அரசியலாக்காதீர்கள் என்று அமெரிக்காவில் போய்ஃ பேசுகிறாரே மோடி அவரது திமிரை அடக்குவது என்பது மக்கள் வெளியில் சங்க பரிவார  கும்பலை முடக்குவதோடு தொடர்புடையது.

‘பார்ப்பன’ சேகர்

ஒரு டிப்ளமசி என்ற முறையில் இப்படியாவது ராஜா மீது நடவடிக்கை எடுக்க வைப்போம் என அவர்கள் அப்பாவித்தனமாக யோசித்திருக்கலாம். ஆனால் மக்கள் வெளியில் ஏற்பட்ட நெருக்குதால் காரணமாகவே சென்ற முறை ராஜா அட்மின் பெயரில் தப்பித்தார். அதை மனு கொடுத்து கேட்டால் ஏதோ கம்யூட்டரே தானாக செய்தி போட்டுக் கொண்டது என்று சொன்னாலும் சொல்வார்! தற்போது எஸ்.வி. சேகரும் அப்படித்தான் நண்பனது சேதி என்று சதித்தனமாக சமாளிக்கிறார்.

90க்கும் மேற்பட்ட முசுலீம் மக்களைக் கொன்று குவித்த நரோடா பாட்டியாவின் சதிகாரத் தலைவியும், முன்னாள் அமைச்சருமான பாஜகவின் மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்ட நாள் இது. இனி இந்தியாவில் இந்துமதவெறியர்கள் எவரும் சட்டரீதியாக தண்டிக்கப்பட முடியாது என்று காட்டிவிட்ட நாளும் இதுதான்.

இந்நாளில் அந்த கொலைகாரர்களின் அலுவலகத்திற்கு போய் நியாயம் கேட்பதற்கு பதில் முற்றுகைப் போராட்டம் நடத்தி கமலாலயத்தை பூட்டுவதுதான் சரியான போராட்டமாக இருக்கும்.எனினும் இன்று பத்திரிகையாளர்கள் பலர் பா.ஜ.க. அலுவலகம் சென்று முழக்கமிட்டு சேகர் – ராஜா படங்களைக் கிழித்து காறித் துப்பியது காவிக் கும்பலுக்கு கடும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கும். பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். காவல் துறை ஆணையரிடமும் இந்த இரட்டையர்களை கைது செய்யமாறு மனு கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் வாழ்த்துக்கள்!

(கடைசிச் செய்தி: எஸ்.வி.சேகர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்களை போலீஸ் கைது செய்து மண்டபத்தில் வைத்திருக்கிறது. அவர்கள் மீது வழக்கு போட பா.ஜ.க. உத்தரவிட்டிருக்கிறது.)

– வினவு

**

எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு “குரல்” (பத்திரிகையாளர்கள் அமைப்பு) அறிக்கை வெளியிட்டிருக்கிறது:

Kural
எஸ்.வி.சேகரை கைது செய்!

வணக்கம்.

த்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் சித்தரித்து எழுதப்பட்ட அவதூறு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். ’ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்’ என வக்கிரமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததை அடுத்து, உடனே அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறார்.

அத்துடன், ‘நான் படிக்காமல் அதை ஷேர் செய்துவிட்டேன். என் நண்பர் சுட்டிக்காட்டியதால் திருத்திவிட்டேன்’ என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார். படிக்காமல் பகிர்ந்தேன் என்பது பச்சைப் பொய் என்று, எஸ்.வி.சேகரின் அண்ணியும், தமிழகத் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதனுக்குக் கூட தெரியும்.

நேற்று சொன்ன கருத்தை இன்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குக் கூட துணிச்சலோ, நேர்மையோ இல்லாத இந்த ஜந்துக்கள் தங்களை ஆகப்பெரிய அறிவுஜீவிகளாக கருதிக்கொள்கின்றன. இவர்கள் எழுதும் குப்பை ட்விட்டுகளையும், ஸ்டேட்டஸ்களையும் ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டால் மயிலாப்பூர் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் கூட இவர்களை மதிக்கமாட்டான்.

எனினும், ’திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழ்நாட்டில் பெரியார் சிலை அகற்றப்படும்’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதி, கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், ‘அதை நான் எழுதவில்லை. என்னுடைய அட்மின் எனக்குத் தெரியாமல் எழுதிவிட்டார்’ என்று சொன்னார் இதே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா. அவருடன் ஒப்பிடும்போது ’அதை ஷேர் செய்தது நான் அல்ல’ என மறுக்கவில்லை என்பதால், எஸ்.வி.சேகர் துணிச்சல் மிக்கவர்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த துணிச்சல் எஸ்.வி.சேகரின் சொந்த மனநிலையில் இருந்து வரவில்லை. ’வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று சொன்ன சங்கராச்சாரியின் மரபு அது. இப்படி எல்லாம் இவர்கள் பேசிவிட்டு; இன்னமும் பேசிக்கொண்டு, இங்கே உலவ முடிகிறது, உயிர்வாழ முடிகிறது என்பதுதான் தமிழ்மண்ணின் அவலம்; அவமானம்.

இப்போது எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள் திடீரென மேலெழுந்து வந்து, தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் சவுண்ட் விடுவதன் காரணம், தமிழகத்தில் எழுந்திருக்கும் மிக வலுவான பா.ஜ.க. எதிர்ப்பு; மத்திய அரசு எதிர்ப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்கு நோட்டாவைக் கூட தாண்ட முடியாத அளவுக்கு இங்கே தாமரையின் தண்டு அழுகிப்போய்விட்டது. அந்த துர்நாற்றத்தில் இருந்து பிறக்கிறது இவர்களின் ஊளைச் சத்தம்.

ஹெச்.ராஜா, எச்.ராஜா ஆகியோரை புறக்கணிப்பதாக காவேரி செய்தி சேனல் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே ஓரணியில் ஆர்ப்பரித்து எழுந்தது. தமிழகம் வந்த நரேந்திர மோடியை #Gobackmodi என ட்விட்டர் ஹேஸ்டேக்கில் உலக அளவில் அலறவிட்டார்கள் தமிழர்கள். ’எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓட்டு கேட்டு உள்ளே வர வேண்டாம்’ என வாசலில் எழுதி தொங்கவிடுகிறார்கள் மக்கள். இந்த அவமானம் பொறுக்க முடியாத பார்ப்பன கும்பல் உண்மைகளை வெளியில் கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறது. எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் பதிவை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று, ஊடகப் பணிக்கு வரும் பெண்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். சவால் நிறைந்த செய்திக் களம், பணி நேரத்தை நீட்டிக்கும் பிரேக்கிங் செய்திகள், இரவு நேர ஷிப்ட் என பெண்களுக்கு என தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இங்கே இல்லை. தங்கள் அறிவை, உழைப்பை அளித்துதான் ஒவ்வொரு படியும் முன் செல்கிறார்கள். இந்த உண்மையின் சிறுதுளியும் தெரிந்துகொள்ளாத எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன பொறுக்கி, தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களை character assassination செய்கிறார். இனியும் இதை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

இது ஊடகத்தில் பணிபுரியும் பெண்களின் பிரச்னை அல்ல. எஸ்.வி.சேகர், அவர்களை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. உடன்பணிபுரியும் ஆண்களையும் அவர் character assassination செய்திருக்கிறார். ஊடக முதலாளிகள் இந்த அடிப்படையில்தான் தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றனர் என அவர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார். எனவே இது நாம் அனைவரும் இணைந்து கூட்டுக்குரலில் கண்டிக்க வேண்டிய பிரச்னை.

இணைந்து நிற்போம். இன்று ஏப்ரல் 20, மாலை 4 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.சேகரை கைது செய்யக்கோரி புகார் கொடுக்க பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

– குரல்
Journo’s voices for the masses

________________________________________________

Barathi Thambi

கமலாலயம் முன்பு …பத்திரிகையாளர்கள் போராட்டம்!

ஸ்.வி.சேகர் கோமாளி அல்ல. கவுரி லங்கேஷை கொலை செய்த கொலைகார கூட்டத்தின் பிரதிநிதி. அவரு வக்கிரமா எழுதுவாராம், பிறகு மன்னிப்பு கேட்பாராம். எஸ்.வி.சேகரின் மன்னிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். தேவை, எஸ்.வி.சேகரின் கைது.

பா.ஜ.க. அலுவலகத்தில் புகார் கொடுத்து திரும்புவதும், பார்த்தசாரதி கோயிலில் உண்டகட்டி வாங்கி திண்றுவிட்டு வருவதும் ஒன்றுதான். வக்கிர கருத்துக்கு கைது செய். சட்டப்பூர்வமாக தண்டனை கொடு. இதுவே சரியான கோரிக்கை.

________________________________________________

Nelson XavierI strongly condemn the SVe Sekhar’s fb post on media. It is inappropriate and inhuman. The BJP headquarters have to take action against him.

________________________________________________

Kavitha Muralidharan

த்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச். ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். நமது கண்டனக் குரலை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் பதிவு செய்வோம். பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்துவோம்.

நேரம் – 3.00 மணி
நாள் – 20.04.18
இடம் – கமலாலயம்

________________________________________________

உலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின !

தொழிலாளிகள்
து
லங்கும் ஆயிரம் சொல்லெடுத்தாலும்
தொழிலாளி என்பதைப் போல்
விளங்கும் பொருள் தருவன வேறில்லை!
நெடிதுயர்ந்த மலைகளின் புதுவழி
உன் கண்களில் அடங்கின!
விரிந்த கானகத்தின் விளை பயன்
உனது கைகளில் தொடங்கின.
உலகின் ஒவ்வொரு அழகும்
உழைப்பாளியே உன்னிடம் மயங்கின!
– இது தொழிலாளர்களைப் பற்றி தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதையின் சில வரிகள்.

சென்னை தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வரும் சரக்கு ரயிலில் வேலை செய்யும் தொழிலாளிகள் இவர்கள். இரயிலில் வரும் சரக்கை இறக்க வேண்டிய பணி வெளியாட்கள் மூலமாக ஒப்பந்த முறைப்படி நடக்கிறது. அந்த ஒப்பந்தக்காரர்களிடம் தினக் கூலியாக வேலை செய்கின்றனர் இந்தத் தொழிலாளர்கள்.

இவர்களில் தமிழர்கள் குறைவாகவும் பீகார், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும் இருந்தனர். தமிழர்கள் யார் என்று முகத்தைக் கூட பார்த்து தெரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அன்று வந்த சரக்கு இரயில் சிமெண்ட் மூட்டைகளை சுமந்து வந்திருந்தது. அதனால் அங்கு பார்க்கும் முகமெல்லாம் சிமெண்டினால் அரிதாரம் பூசப்பட்டிருந்தது. ஒரு வேளை அந்த சிமெண்ட் பூச்சு இல்லையென்றாலும் தமிழர், பீகாரிகளுக்கு என்ன வேறுபாடு இருக்கப் போகிறது?

காலை பத்துமணிக்குக் கூட பசியறியாமல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் உணவுக்காக முகம் கழுவியிருந்தனர். அவர்கள் தூக்கும் சிமெண்டு மூட்டைகளால் அந்த இடமே புகை மண்டலமாக இருந்தது. அவர்களிடம் பேசும் போது பத்து நிமிடத்துக்கு ஒருமுறை அத்தனை அடுக்குத் தும்மல் எனக்கு. எனில் அவர்களின் நிலை…..?

இப்படித்தான் தொழிலாளிகள் ஒவ்வொரு வேலைகளிலும் உயிரைப் பணயம் வைத்து உலகை உருவாக்குகின்றனர்.

முத்துகிருஷ்ணன்.
ஒரு பெட்டிக்கு 2 ஆயிரம் மூட்ட வரும். ஒரு பெட்டி இறக்குனா 1200 ரூபா கூலி. அஞ்சு தொழிலாளிங்க சேந்து ரெண்டு பெட்டி எறக்குவோம். பணத்த பிரிச்சு எடுத்துக்குவோம். வர்ர சரக்குக்கு தகுந்தாப்போல கூலியும் மாறுபடும். தோராயமா ஒரு நாளைக்கி 800 இல்ல 1000 ரூபா கெடைக்கும்.

அன்பு
எங்களப்போல தொழிலாளிங்க கூட்டு சேந்து வேல செஞ்சாத்தான் இதுபோல வேலைங்க முழுசா செஞ்சு முடிக்க முடியும். ஒத்தாலா நின்னு ஏத்தவோ ஏறக்கவோ நாங்க என்ன சக்திமானா. உங்களப்போல சாதாரன மனுசந்தானங்க.

மூர்த்தி
ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 20000 ஆயிரத்துக்கு மேல சம்பாரிக்கிறோம். ஆனா நீங்க 10,000 ஆயிரம் குடுத்தா போதும் எந்த வேல குடுத்தாலும் செய்றேன். என்னால மூட்டைங்கள மூச்சுப் புடிச்சு தூக்க முடியல. சத்தியமா சொல்றேங்க உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க.
அன்பு
மூர்த்தியன்னே உங்களுக்கெல்லாம் அவங்க வேல குடுக்க மாட்டாங்க. படிச்சவங்களுக்கு தான் அங்க வேல.
மூர்த்தி
அது எப்புடி.. நாமமட்டும் படிச்சவங்களுக்கு மூட்ட தூக்குற வேல குடுத்துருக்கமில்ல. நீ குடுத்தான் பத்தாவுது படிச்சிருக்க. எனக்கு இல்லாட்டி ஒனக்கு குடுக்கட்டும்.

பாவாடசாமி.
நாங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்றோன்னு டி.வி.யில போடுறதோட விட்டுறாதிங்க. நாங்களும் ஒரு நல்ல நெலமைக்கி வர்ரதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க.

எங்கள படம் புடிக்கிறது இருக்கட்டும் மொதல்ல மூக்குல துணிய கட்டிக்கங்க. ரெண்டு நாளா ஒடம்புக்கு முடியாமெ வேலைக்கி வரல இன்னைக்காவது 1000 ரூவாய்க்கி மூட்ட தூக்கிய ஆகனும். மத்தவங்ககிட்ட பேசுங்க என்ன விட்டுருங்க.

வெங்கடேஷ். சத்தியா.
காலையில ஒரு ஆஃப்பு, மத்தியானம் ஒரு ஆஃப்பு, ராத்திரிக்கி ஒரு குவாட்டரு சாப்பாடோட சேத்து சாராயத்தையும் சாப்பிட்டாதான் இந்த வேலையே செய்ய முடியுது. மீதி நானூறு ஐனூறு ரூவா வீட்டுக்கு. குடிக்கனுன்னு ஆசையில்ல, தேவையிருக்கு. இதுபோல வேலையெ ஈசியா செய்ய ஏதாவது மிசினு இருந்தா குடிக்க தோணாது.

கண்ணையன்
மூட்டைய தலையில தூக்கி அடுக்குற வேலை செய்ய முடியாது. மூனு பேரோட ஒருத்தனா நின்னு மூட்டைய தலையில தூக்கி விடுவேன். மத்தவங்களப்போல எனக்கும் சமமா சம்பளத்த பிரிச்சு குடுப்பாங்க. வித்தியாசம் பாக்க மாட்டாங்க.

“எங்களையும் போட்டா புடிங்க” என்று ஒரு தொழிலாளி சொன்னதும். அருகில் இருந்த மற்றவர்களும் கூடினர். நாம் எதிர் பார்க்காத நேரத்தில் கையில் இருந்த மூட்டை தூக்கும் கொக்கியை அருவா போல் தூக்கிப் பிடித்து தொழிலாளர்களின் சின்னமாக்கினர்.

ஆறு மாசத்துக்கு ஒருக்க ஊருக்கு போவோம். ஒரு மாசம் இருந்துட்டு வருவோம். தமிழ் நாட்டுக்கு வந்த பிறகுதான் எங்க குடும்பம் பசி இல்லாமெ கொஞ்சம் சாப்பிடுது. எங்களுக்கு அங்க வேலையில்ல.

கூட்சு வண்டியில படுப்போம் இல்லன்னா கூடாரத்துல படுத்துப்போம். படுக்க, குளிக்க, காலைகடன முடிக்க எல்லாத்துக்கும் இந்த ஊரு எங்களுக்கு வசதியா இருக்கு. இதவிட என்ன வேணும்.

ஆனா ஒரு வருத்தம். வாழ்றதுக்காகதான்  இங்க வந்தோம் பொண்டாட்டி பிள்ளைகள தூரத்துல விட்டுட்டு என்ன வாழ்க்கையின்னு தோனுது. பிள்ளைய பாக்கனுன்னு ஆச வரும் நேரத்துல போன்ல பேசிக்கிறோம். குடும்பத்தோட சேந்துருக்க முடியல.
தமிழ் நண்பர்கள் ரேசன் அரிசி வாங்கி குடுத்துருவாங்க. ராத்திரி சோறு சப்பாத்தி சிக்கனு எல்லாம் செஞ்சு அசத்திப் புடுவோம். பகல் பொழுது கெடைக்கிறத சாப்டுப்போம்.

ஆரம்பத்துல வந்த நான் இப்ப தமிழ் கொஞ்சம் பேசுவேன். பிறகு வந்தவங்க பேசுனா புரிஞ்சுப்பாங்க. மொழி பிரச்சனை இல்ல. நாங்க இப்ப நண்பேன்டா ஆயிட்டோம். (தமிழர் தோள் மீது கைப்போட்டு அனைத்தார்.)

நேர்காணல்-படங்கள்: வினவு புகைப்படச் செய்தியாளர்.

தண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்

1

க்கள் கலை இலக்கியக் கழகம் 1994-ம் ஆண்டு வெளியிட்ட “அடிமைச் சாசனம்” பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல் “தண்ணி வந்தது தஞ்சாவூரு”.

காட் ஒப்பந்தமும், டங்கல் திட்டமும் ஆதிக்கத்தை துவங்கியிருந்த 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த இசை அன்னியர்களின் சுரண்டலை இயல்பாய் எதிர்க்கும் விவசாயிகளின் நினைவை மீட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழகம் போராடுகிறது. ஓடம் போன காவிரியில் இனி ஒட்டகம் போகுமோ என்று நம் உழவர்கள் அச்சப்படுகிறார்கள். எதை இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.

பாடல் வரிகள்:

ஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..

ஏ….ஓடையில தண்ணி வந்தா…
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….

வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
காலு கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டு நிக்கும்…

(ஏ தண்ணி..)

ஏ…பொன்னுமணி நெல் வெளையும்…
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் நூறு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….

கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…

(ஏ தண்ணி..)

பொன்மலையா போர் உசரும்…
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…

மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…

(ஏ தண்ணி..)

நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !

1

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95. 9445112675

_______________________________________________________________

பத்திரிக்கைச் செய்தி!

தேதி: 19.4.2018

ருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளை பாலியல் முறைகேட்டிற்கு அழைத்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், யாருக்காக இந்த இழிசெயலை நிர்மலா தேவி செய்தாரோ அந்த உயர் அதிகாரிகள் யார் யார் என்று இன்னும் அடையாளப்படுத்தவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும்  தமிழ ஆளுநரும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதுரை கமாராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேந்தரான ஆளுநரும் அவசர அவசராம மாற்றி மாற்றி விசாரணைக்குழு அமைத்தார்கள்.

ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தார். அங்கேயும் பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறி நடத்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ள வேந்தரே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை வைத்து ஒரு நபர் விசாரணை குழு அமைத்துள்ளது அதிகார வரம்பை மீறிய செயல் மட்டுமல்ல, இது உண்மையை மூடிமறைப்பதற்கான முயற்சியாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எல்லா பிரச்சனைகளிலும் குற்றவாளிகளான உயர் அதிகாரிகள் தப்பி விடுகின்றனர். SVS மருத்துவக்கல்லூரி முறைகேடு – மூன்று மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அக்கல்லூரியின் தாளாளரும் தற்போது பிணையில் வந்துவிட்டார், கல்லூரியும் இயங்குகிறது.

பல்வேறு பிரச்சனைகளுக்காக அமைக்கப்பட்ட பல விசாரணைக் கமிட்டிகள், அதன் அறிக்கைகள் எல்லாம் என்ன ஆயின? எந்த உண்மையாவது வெளிவந்திருக்கிறதா? யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள உயரதிகாரிகள், அரசியல்வாதிகளே விசாரணைக் கமிட்டிகளை அமைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் அதன் தலைவர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். நிர்மலா தேவி வழக்கில் கூட கைது, விசாரணைக் குழு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது.

பல பல்கலைக்கழகங்களிலும், அரசு உதவிபெறும் கல்லுரிகளிலும் போராசிரியர்கள் நியமனங்களில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றது. அண்ணா, பாரதியார், பெரியார் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் பல கோடிகளை கொடுத்துத்தான் பதவி பெற்றுள்ளனர். பணம் கொடுத்து வேலைபெற்ற பேராசிரியர்கள் தண்டிக்கப்படாமல் பணியில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையுமே ஊழல்-லஞ்ச முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு என முடை நாற்றம் வீசுகிறது. நிழலுலக தாதாக்கள் போல செயல்படுட்டு வரும் உயர்கல்வித்துறைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் எப்போதும் கைது செய்யப்பட்டதில்லை.

இதனூடாகவே தமிழக பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடக்கிறது. சமீபத்தில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தர அடிப்படியிலான தன்னாட்சி (Graded Autonomy) வழங்கியுள்ளது. இத்தன்னாட்சி விதிகளின் படி UGC-ன் கட்டுப்பாட்டிலிருந்து இப்பல்கலைக்கழகங்கள் முழுமையாக விடுவிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகங்கள் புதிய பாடதிட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை ஆரம்பிப்பதற்கும் புதிய பட்டயப்படிப்புகளை வழங்குவதற்கும் பேராசிரியர் தேர்வுகள், மாணவர் சேர்க்கை ஆகியவற்றிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை.

வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். அம்மாணவார்களுக்கான கல்விகட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் இப்பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் வழங்கலாம். இதற்காக பல்கலைகழக மானிய குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. மேலும் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான செலவில் ஒரு பகுதியை தாங்களே உருவாக்கி கொள்ளவேண்டும் என இத்திட்டம் மறைமுகமாக நிர்பந்திக்கிறது.

இதனால் பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படும். கல்விக்கட்டணம் பலமடங்கு உயரும். அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பல்கலைக்கழகங்கள் விலக்கப்பட்டு லாபமீட்டக்கூடிய கல்வி தொழிற்சாலையாக இயக்கப்படும். கிராமப்புற மற்றும் ஏழைமாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும். ஏறத்தாழ அரசு பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான முயற்சியே தர அடிப்படையிலான தன்னாட்சியாகும்.

தமிழகம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உயர்கல்வியில் முன்னணியில் இருந்தாலும் இந்தியாவிலேயே இங்கு தான் அதிகமான தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. கல்வியானது வெளிப்படையாகவே ஒரு வியாபார பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. சிறிதளவேனும் வழங்குப்பட்டு வந்த கல்வி உதவித்தொகைகளும் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வந்த உயர்கல்விக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டதே இதன் வெளிப்பாடுதான்.

கல்வி கொள்ளை, லஞ்ச – ஊழல் முறைகேடுகள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவைகளுக்கு கல்வி வியாபாரமானதுதான் முக்கிய காரணமாகிறது. இதை எதிர்த்துப்போராட மாணவர்களுக்கு வழியில்லை. கல்வி நிலையங்கள் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முழுவதுமாக பறித்துள்ளன. எனவே, மாணவர்களின் நலன்களை பாதுகாக்க, உயர்கல்வித்துறையை மீட்க கல்வியாளர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் கண்காணிப்பில் கல்வித்துறை இயங்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

கோரிக்கைகள் :

  • நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க ஆளுநருக்கு தார்மீக ரீதியாக எந்தவித உரிமையும் கிடையாது. இதன் மூலம் விசாரணை நியாயமாக, நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே ஆளுநர் அமைத்த குழுவை உடனே திரும்பப்பெற வேண்டும்.
  • பணியிலுள்ள மாவட்ட பெண் நீதிபதி தலைமையில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட நீதிவிசாரணைக்குழு அமைக்க வேண்டும். அதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மாணவிகளும் தங்கள் கருத்தை அச்சமின்றி தெரிவிக்க வழியேற்படும். சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டுவரவும் முடியும்.
  • இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நிர்மலா தேவி அடையாளம் காட்டியுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக இரண்டு பேராசிரியர்களும், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் உடனே கைது செய்யப்பட வேண்டும்.
  • ஆளுநரும், காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் அவர்கள் பதவியில் நீடிக்க தகுதியில்லை. பதவி விலக வேண்டும்.
  • ஆளுநரால் பன்வாரிலால் அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் சூரப்பா, திம்ம சூரிய நாராயண சாஸ்திரி, பிரமிளா தேவி ஆகியோர் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மாணவிகள் தங்களுடைய குறைகளை முறையிடுவதற்காக பல்கலைக்கழக நிர்ணய குழு பரிந்துரையின் படி கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தனி பிரிவுகள் எந்தக்கல்லூரிகளிலும் செயல்பாட்டில் இல்லை. அவைகளை முறையாக இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடுவதற்காக மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
  • அரசு பல்கலைக்கழகங்களை தரஅடிப்படையிலான தன்னாட்சியாக்குவது இவைகளை தனியார்மயமாக்கும் முயற்சியே. இதனை அரசு உடனே கைவிட வேண்டும்.

இவண்

த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.
பேரா. வீ. அரசு, தமிழ்த் துறை முன்னாள் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்.
பேரா. ப. சிவக்குமார், முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
பேரா. அ. கருனாணந்தம், வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி.
பேரா. ச. சாந்தி

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

திருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே ! ஆர்ப்பாட்டம் !

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி யில் கடந்த ஏப்ரல்-11 அன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடினர். அவர்களில் 20 பேரை கைது செய்தது போலீசு.

மேலும் மாணவர்கள் இது போன்று தன்னெழுச்சியாகத் திரளக்கூடாது என்பதற்காக  “போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது” என மிரட்டல்விடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் திருச்சி மாநகர கமிசனர் அமல்ராஜ்.

போராடும் மாணவர்களை மிரட்டும் கமிசனர் அமல்ராஜ்

இந்நிலையில் காவிரிக்காக போராடிய 20 மாணவர்களுக்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் பிணை வாங்கினர். அதனடிப்படையில் இன்று அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்தனர். அப்போது சிறை வளாகத்துக்குள்ளேயே வைத்து பீர் முகமது, முகமது ஆசிம் ஆகிய இரண்டு மாணவர்கள் மீது வேறொரு வழக்கைப் புனைந்து மீண்டும் கைது செய்தது, திருச்சி போலீசு. இது மாணவர்களை பிளவுபடுத்தும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து “மாணவர்களை இந்து – முசுலீம் என பிளவுபடுத்தாதே ! நாங்கள் காவிரியின் மைந்தர்கள்! கைது செய்த பீர் முகமது மற்றும் முகமது ஆசிமை விடுதலை செய் !” என்ற முழக்கத்தின் கீழ்  திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முன்பு 9.04.18 (இன்று) புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழகத்தைப் பிளவுபடுத்த நடக்கும் இந்த சூழ்ச்சியை மாணவர்கள் புரிந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென்றும்; போலீசின் சதித்தனத்தை ஜனநாயக சக்திகள்  கண்டிக்க வேண்டுமென்றும், அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!

பொதுக்கூட்டம்

நாள் : 28.04.2018, மாலை 5:30 மணி,
இடம் : தாம்பரம் மார்க்கெட்.                                                  #WeWantCMB

( பிரசுரத்தை பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே !

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைக் குறைத்து அநீதியான ஒரு தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்தத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கும் மோடி அரசுக்கு, மறுபடியும் கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

1924 இல் 575 டி.எம்.சி-யாக இருந்து இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி-யாக வீழ்ந்த பின்னரும், இந்த தண்ணீரைத் தருவதற்குக் கூட மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்கிறது கர்நாடக அரசு. ஆறு வாரகாலம் கமுக்கமாக இருந்துவிட்டு, காலக்கெடு முடிந்த பின்னர், “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுப்போட்டது மோடி அரசு. மீண்டும் “வாய்தா” வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். “இறுதித் தீர்ப்பு வந்து விட்டதால், இந்த தண்ணீராவது இனி முறையாக கிடைக்கும்” என்று சிலர் நம்பினார்கள். ஆனால் இத்தனை ஆண்டு காலமாக என்ன நாடகம் நடந்ததோ அதுதான் இப்போதும் தொடர்கிறது.

தொடரும் கர்நாடகாவின் அடாவடி!

”காவிரி எங்களுக்கு சொந்தமான ஆறு. அதில் நாங்கள் விரும்பியபடி அணை கட்டி நீரைத் தேக்குவோம். எங்களுக்குப் போக மிச்சமிருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு தருவோம்” என்பதுதான் கர்நாடகத்தின் அணுகுமுறை. “காவிரி கர்நாடகத்தின் சொத்து அல்ல, நான்கு மாநிலங்களுக்கும் அதில் உரிமை உண்டு. மழை பெய்தாலும், பொய்த்தாலும் இருக்கின்ற நீரை உரிய விகிதத்தில் நான்கு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்பதுதான் தமிழகத்தின் நிலை.

நியாயமான நீர்ப்பகிர்வு இருக்க வேண்டுமென்றால், அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை அளக்கவும், உரிய நாளில் அதை பகிர்ந்து கொடுக்கவும் அதிகாரம் படைத்த நடுநிலையான ஒரு வாரியம் வேண்டும். அப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், “மழை இல்லை, அணையில் தண்ணீர் இல்லை” என்று இனி ஏமாற்ற முடியாமல் போய் விடும் என்ற காரணத்தினால்தான் “வாரியம் கூடாது” என்கிறது கர்நாடக அரசு. மோடி அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கின்றன.

டெல்லியின் ஓரவஞ்சனை!

இப்படி ஒரு அநீதி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் நடக்கவில்லை. கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை ஆறுகளுக்கு தீர்ப்பாயங்களின் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, எல்லா மாநிலங்களுக்கும் நீர்ப்பங்கீடு நடந்து வருகிறது. ரபி, பியாஸ், சட்லெஜ் ஆறுகளின் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மேலாண்மை வாரியம், தண்ணீரை கால்வாய் வழியே பகிர்ந்தளிக்கிறது. பிரம்மபுத்திராவை இந்தியாவுக்கு வராமல் சீனா தடுக்கவில்லை. வங்கதேசத்துக்கு செல்லும் கங்கையை இந்தியா தடுக்கவில்லை . பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது கூட சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகளை இந்தியா தடுத்ததில்லை.

பிரம்மபுத்திரா நதி

“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத அநீதியை, ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழகத்துக்கு இழைத்து வருகிறது இந்திய அரசு. 1947 இல் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற இந்த நாடு. அப்புறம் நாடாளுமன்றம், சட்டமன்றம், உச்ச நீதிமன்ற மெல்லாம் உருவாகின. அதற்குமுன் இருந்தவை பிரிட்டிஷ் ஆட்சியும், எண்ணற்ற சமஸ்தானங்களும்தான். இவையெல்லாம் உருவாவதற்கு முன்னதாக, பல ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது காவிரி. காவிரி டெல்டாவை நெற்களஞ்சியமாக மாற்றியிருக்கிறார்கள் தமிழகத்தின் உழவர்கள். அதற்குச் சாட்சியமாய் பல நூற்றாண்டுகளாய் கம்பீரமாக நிற்கிறது கல்லணை.

கார்ப்பரேட் கொள்ளைக்கு தமிழகமே பலி!

இன்று வளைகுடா நாடுகளில் பாலைவனத்தை விளை நிலமாக மாற்றுவதற்கு வளமான மண்ணை இறக்குமதி செய்கின்றன அந்த நாடுகள். இங்கேயோ வளமான காவிரி டெல்டாவை திட்டமிட்டே பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குளத்தை வற்றவைத்து மீன் பிடிப்பது போல, காவிரியைத் தடுத்து, விவசாயிகளை விரட்டிவிட்டு, காவிரி டெல்டாவை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடத் திட்டம் போடுகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ், நிலக்கரி என காவிரி டெல்டாவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் வளங்கள் அம்பானிக்கும் அதானிக்கும் விலை பேசப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் கிராமத்து மக்கள் தேசவிரோதி, தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளப்படுகின்றனர். காவிரி மட்டுமா தமிழகத்தின் பிரச் சினை? இது ஒரு பலமுனைத்தாக்குதல். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், போடியில் நியூட்ரினோ திட்டம், கூடங்குளத்தில் அணு உலை பூங்கா, கிழக்கு கடற்கரையில் சாகர்மாலா, சரக்குப் பெட்டக முனையம், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை பெட்ரோகெமிக்கல் மண்டலம் என விவசாயிகளையும், மீனவர்களையும் அகதிகளாக விரட்டிவிட்டு ரசாயன குப்பைக் கிடங்காகத் தமிழகத்தை மாற்ற முனைந்திருக்கிறது மோடி அரசு. பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழகத்துக்கு எதிராகவே இருக்கின்றன. நீட் தேர்வை சட்டவிரோதமான முறையில் நீதிமன்றம் திணிக்கிறது. விவசாயிகள் எதிர்ப்பை மீறி விளை நிலத்துக்கு குறுக்கே கெயில் குழாயைப் பதிக்கச் சொல்கிறது. கூடங்குளம் அணு உலையையும் ஸ்டெர்லைட்டையும் அனுமதிக்கிறது. மோடி அரசோ, மரபுகள் விதிமுறைகள் அனைத்தையும் மீறி தமிழக மக்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. ஆளுநரின் அத்துமீறல்கள் அன்றாட நடவடிக்கைகள் ஆகிவிட்டன. இசைக்கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். சார்பு துணைவேந்தர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.

ஆற்றைப் பிரித்து தேசிய ஒருமைப்பாடு!

இது தமிழகத்தின் மீது டெல்லி தொடுத்திருக்கும் அறிவிக்கப்படாத போர். மன்னராட்சிக் காலத்தில் காவிரியை மீட்பதற்குப் பல போர்கள் நடந்திருக்கின்றன. அவை நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர்கள். இன்றோ நாம் இந்தியா என்ற ஒரு நாட்டிற்குள் வாழ்கிறோம். ஆனால் இந்த நாட்டின் அரசு தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறித்துக் கொண்டு, தமிழினத்தை வஞ்சிக்கிறது.
தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை ஆக்கிரமிக்கிறது. இந்த அநீதிகள் அனைத்தும் ஒருமைப்பாட்டின் பெயரால், நீதி மன்றத் தீர்ப்புகளின் பெயரால் நம் மீது திணிக்கிறது. இவற்றுக்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும் ? காவிரி தொடர்பான எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் கர்நாடகத்தை ஆண்ட பா.ஜ.க., காங்கிரசு அரசுகளோ, மத்திய அரசுகளோ இன்று வரை மதித்ததில்லை.

ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பகை நாடுகள் கூட ஆற்றைப் பிரித்ததில்லை. ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு ஆற்றைப் பிரித்துக்கொண்டே, இந்தப் பிரிவினைவாதிகள் நமக்கு ஒருமைப்பாட்டை உபதேசிக்கிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்துக்குரிய காவிரி நீர் மறுக்கப்பட்டதனால் டெல்டா உழவர்கள் இழந்த விளைச்சலின் மதிப்பு பல லட்சம் கோடி. உரிய காலத்தில் தண்ணீர் விடாததால் உழவர்கள் அடைந்த நட்டம் பல ஆயிரம் கோடி. இழந்த உயிர்களுக்கோ கணக்கில்லை. இந்த இரத்தப் பலிகளைப் பற்றி ஒருமைப்பாட்டு பஜனை பாடுவோர் என்றும் கவலைப்பட்டதில்லை. சமத்துவமும், சமநீதியும் மறுப்பதுதான் இந்திய ஒருமைப்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கோ, மைய அரசின் முடிவுக்கோ கட்டுப்படுமாறு கூறும் அருகதை இனிமேலும் இந்திய அரசுக்கு கிடையாது. போராடும் மக்களின் அதிகாரம், டில்லியின் அதிகாரத்தையும் அதன் எடுபிடியான எடப்பாடி அரசின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஐ.பி.எல். சூதாட் டத்தை விரட்ட முடிந்த தமிழகத்தால், சல்லிக்கட்டு தீர்ப்பை மாற்ற முடிந்த தமிழகத்தால், காவிரி உரிமையையும் வெல்ல முடியும்.

காவிரியில் புதுப்புனல் பொங்கி வரவேண்டுமென்றால், அத்தகையதொரு மக்கள் எழுச்சியை நாம் தோற்றுவிக்க வேண்டும்! தோற்றுவிப்போம்!!

தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

டந்த வாரம் (ஏப்ரல் 2018 முதல் வாரம்) ‘போர்ன்’ படங்கள் குறித்த துணுக்கு ஒன்று முகநூலில் பகிரப்பட்டிருந்தது. அந்த துணுக்கு சொன்ன சேதி இதுதான்:

“போர்ன் படங்கள்தான் பாஸிட்டிவான படங்கள்! கொலைகள் இல்லை; போர் இல்லை; சண்டை இல்லை; ஏமாற்று இல்லை; நிறவெறி இல்லை; மொழி பிரச்சினை இல்லை; நல்ல ஒத்துழைப்பு; நல்ல ஒருங்கிணைப்பு; யதார்த்தமான நடிப்பு. உச்சக் காட்சியை எல்லோரும் ரசிப்பார்கள். ஏராளமான அன்பு; அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இன்பமான முடிவு கிடைக்கும். முக்கியமான விஷயம்…படத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் படத்தின் கதை புரியும். (கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பை உதிர்க்கும் எமோஜிகளுடன் அந்த துணுக்கு முடிகிறது)”.

இந்தத் துணுக்கை பெரியாரிய – அம்பேத்கரிய – பெண்ணிய – தாராளவாத – முற்போக்கு ஆண்கள் பலர் பகிர்ந்திருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது. சினிமா செயல்பாட்டாளராக தன்னை அறிவித்துக் கொள்ளும் ‘செக்ஸி துர்கா’ என்கிற படத்தை இயக்கி ‘புகழ்’பெற்ற சனல்குமார் சசிதரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிரித்து ரசித்து இந்தத் துணுக்கை பகிர்ந்திருந்தார்.

சனல்குமார் சசிதரன்

இந்த முற்போக்குகளின் பகிர்தலில் கிடைத்த ஒரே ஆறுதல், இவர்களின் பக்கங்களில் இணைந்திருந்த பெண்கள் விருப்பக்குறி இடவில்லை என்பதுதான்.

போர்னோகிராபி எனப்படும் பாலியல் படங்களை ஆதரிக்கும் போக்கு நீண்ட காலமாகவே தாராளவாதிகளிடம் உண்டு. அவர்கள் பாலியல் தொழிலையும்கூட அங்கீகரிக்க வேண்டும் என குரல்கொடுக்கிறார்கள். பாலியல் தொழில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் படங்கள் பார்ப்பதும் நடிப்பதும் இங்கே குற்றமில்லை. பாலியல் படங்களுக்கு உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக இந்தியா இருப்பதும், அது வளர்ந்து முதல் இடத்தை வெகுவிரைவில் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் கூடுதல் ‘மதிப்பை’ உண்டாக்கலாம். பிரபல பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி, ‘‘பாலியல் படங்கள் பார்ப்பதில் தவறொன்றுமில்லை. இயல்பானதுதான்’’ என்கிறார். ‘‘சினிமாக்களில் இருக்கும் ஆபாசத்தை குறைத்தால் சமூகம் உருப்படும், பாலியல் படங்கள் தடை செய்யப்படவேண்டியதில்லை’’ என்கிறார் இவர். அதோடு, ‘‘பாலியல் படங்களை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பார்க்கிறார்கள்’’ என்கிறார் பி.பி.சி. தமிழ் இணையதளத்துக்கு கொடுத்த பேட்டியில்.

ஆமாம், முற்போக்காளர்கள் – மருத்துவர்கள் – அரசு சொல்வதைப் போல பாலியல் படங்களைப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? போர்னோகிராபியை ஏன் எதிர்க்க வேண்டும்? அதுவும் ஒருவகையில் நடிப்பு தானே?

“வளர்ந்துவரும் சிறுவர்களை வன்முறைமிக்கவர்களாக போர்னோகிராபி மாற்றுகிறது” என்கிறார் பெண்ணியலாளர் கெய்ல் டைன்ஸ்.

கெய்ல் டைன்ஸ்

போர்னோகிராபிக்கு எதிராகப் பரப்புரை செய்துவரும் கெய்ல் போர்னோகிராபி எப்படி பெண்ணுக்கு எதிரானது என பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘‘பாலியல் படங்கள் சிறுவர்களின் பால் தன்மையை பாதிப்பதோடு, பெண்கள் மீதான எதிர்மறை கண்ணோட்டத்தையும் ஏற்படுத்துகின்றன’’ என்கிறார். தொழிற்நுட்ப வளர்ச்சியின் விளைவாக சராசரியாக 13 வயதுள்ள சிறுவர்கள், பாலியல் படங்களை நுகர்வோராக மாறிவிடுகின்றனர் என்கிற புள்ளிவிவரத்தை சுட்டும் கெய்ல், பாலியல் படங்களின் தாக்கத்தில் வளரும் சிறுவர்கள் உண்மையான உறவுகளை இனம் காண்பதில் பிரச்னைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இந்தியாவில் 40 சதவீதம் பேர் செல்போன் வழியாக பாலியல் படங்களை பார்க்கிறார்கள் என்பதும் அவர்களில் கணிசமானோர் சிறுவர்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று.

கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டையில் 14 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறான். பாலியல் படங்களால் உந்தப்பட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுவனின் வாக்குமூலம் சொல்கிறது.

குழந்தைகளை ஈடுபடுத்தும் பாலியல் படங்கள் மீது தற்போது பலர் ஆர்வம் கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுகிறார் கெய்ல். குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி சிறையில் உள்ள சிலரை நேர்கண்ட கெய்ல், அவர்கள் குழந்தைகளை ஈடுபடுத்திய பாலியல் படங்களை நுகர்ந்ததன் விளைவாகவே இந்தக் குற்றச் செயல்களைச் செய்ததாக பதிவு செய்கிறார்.

“போர்னோகிராபி என்பது கோட்பாடு; வல்லுறவு என்பது நடைமுறைப்படுத்துதல்” என்கிறார் பத்திரிகையாளரும் பெண்ணியலாளருமான ராபின் மார்கன்.

ராபின் மார்கன்

போர்னோகிராபி படங்கள் வல்லுறவுகளை, வன்கொடுமைகளை ஊக்கப்படுத்துகின்றன, நியாயப்படுத்துகின்றன என்பது இவருடைய வாதம். பாலியல் படங்களின் பரவல் திருமண உறவில் உள்ள பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் 74 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. இறுக்கமான கலாச்சாரச் சூழல், தங்களுக்குள்ள உரிமைகள் குறித்து பெண்கள் அறியாமல் இருப்பது போன்ற காரணங்கள் இருந்தாலும் பாலியல் படங்களின் நுகர்வும் பெண்கள் மீது வன்முறை ஏவ முதன்மை காரணமாக இருக்கிறது.

“ஆணாதிக்கத்தின் ஆகச் சிறந்த பிரச்சார வடிவம் போர்னோகிராபி. போர்ன் படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன. பாலியல் வன்முறைகளை போர்ன் படங்கள் சாதாரணமானவையாக எண்ண வைக்கின்றன. பாலியல் படங்களை பார்த்து பாலியலை அறியும் ஆண்கள், பெண்ணை இழிபடுத்துவதையே செய்கிறார்கள்” என்கிறார் கெய்ல் டைன்ஸ். ஆயிரக்கணக்கான பாலியல் படங்களைப் பார்த்து ஆய்வு செய்திருக்கும் கெய்ல், மூன்று ஆண்கள் ஒரு பெண்ணைப் புணர்வது, மாற்றி அவர்களுடைய ஆணுறுப்பை ஒரு பெண் மீது திணிப்பது, பெண்ணின் முகத்தில், வாயில் ஆண் தன்னுடைய விந்தை பீய்ச்சி அடிப்பது என பெண்ணுடல் மிகக்கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கிறார். நாராயணரெட்டி போன்ற மருத்துவர்கள் இதையும் சாதாரணமானது என்கிறார்களா? அல்லது பெண்கள் மீதான வன்முறையை ஏற்றுக்கொண்ட ஆணாதிக்க சமூகத்தின் குரலாக நாராயணரெட்டி ஒலிக்கிறாரா? நாராயணரெட்டி பெண்களும்கூட பாலியல் படங்களைப் பார்ப்பதாக தனது கருத்தை நியாயப்படுத்துகிறார் இல்லையா?

‘‘போர்ன் படங்கள் ஆண்களை மட்டும் பாதிப்பதில்லை. பெண்கள், சிறுமிகள் தங்கள் உடல் குறித்தும், பால்தன்மை குறித்தும், உறவுகள் குறித்தும் சிந்திப்பது மாற்றத்துக்கு உள்ளாகிறது’’ என்கிறார் கெய்ல். மனிதத் தன்மையிலிருந்து கீழிறக்கப்பட்டு வெறும் சதைப் பிண்டமாக பெண் மாற்றப்படுகிறாள். அவளுடைய விருப்பங்கள் இங்கே ஒருபோதும் மதிக்கப்படுவதில்லை என்பது கெய்லின் வாதம்.

கோயில்களில் ‘‘நம் முன்னோர்’ பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்களே? நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’’ என்கிறார் மருத்துவர் நாராயணரெட்டி. ஆம், கோயில்களில் யார் நுழைந்தார்கள், யாருக்காக கோயிலில் பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. அத்தனையும் அரசர்களுக்காகவும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகவுமே. அங்கேயும் பெண் ஒரு காட்சி பொருள். புணர்வதற்கென்றே பிறந்த உடல். விதவிதமாக புணர்வதற்குப் படைக்கப்பட்ட பண்டம். செக்ஸ் பொம்மைகளைக் காட்டிலும் பெண் உடல் மிகக் கீழாக மதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆண்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். அவர்களுக்கான தேவை எப்போதும் இருக்கிறது!

மேலே சொல்லப்பட்ட முகநூல் பகிர்வில் சொல்லப்பட்டதுபோல, இதை ஆண்கள் – பெண்கள் விரும்பி செய்கிறார்கள்; அதில் மகிழ்கிறார்கள் என்பதில் துளியும் உண்மை இருக்க முடியாது. பாலியல் படங்களில் நடிக்கும் பெண்கள் பல்வேறு பால்வினை நோய்களுக்கு உள்ளாவதும் வாழ்நாள் முழுக்க அவர்கள் நரக வேதனைக்கு உள்ளாவதும் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் படங்களில் நடிக்க வைக்கப்படும் பெண்கள், சினிமாக்களில் நடிக்க ஒரு வாய்ப்பாக அல்லது அதிக பணம் தரப்படும் என்கிற ஆசை வார்த்தை காட்டி நடிக்க வைக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் அடித்து துன்புறுத்துவதும் நடக்கிறது.

போர்னோகிராபிக்கு எதிரான பெண்ணியலாளர்களில் கேத்ரின் மெக்கினான் முக்கியமானவர். 90’களின் தொடக்கத்தில் நடந்த செர்பிய- போஸ்னிய போரின்போது, வல்லுறவுகள் பாலியல் படங்களாக பதிவு செய்யப்பட்டு போரில் பரப்புரைக்காக பயன்படுத்தப்பட்டது குறித்து இவர் எழுதிய TURNING RAPE INTO PORNOGRAPHY: POSTMODERN GENOCIDE முக்கியமான ஆவணம்.

கேத்ரின் மெக்கினான்

செர்பிய வதை முகாம்களில் போஸ்னிய – இஸ்லாமிய மத பெண்கள் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது, அவர்கள் செய்த வகை வகையான பாலியல் சித்திரவதைகள் வீடியோ படமாக்கப்பட்டு இனவாதிகளால் பரப்பப்பட்டதையும் சொல்லுகிறது இந்த ஆவணக் கட்டுரை. செர்பியர்களின் இன சுத்திகரிப்பு அட்டூழியங்களில் ஒவ்வொரு இரவும் அந்தப் பெண்களுக்கு உண்மையான நரகத்தைக் காட்டியதாக அந்த ஆவணம் பதிவு செய்துள்ளது. இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் செர்பிய இனவெறியர்கள் அந்தப் பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து, கூட்டத்தினர் பார்க்க அவர்களை வல்லுறவு செய்ததோடு, அதை படமாக்கி களித்திருக்கிறார்கள். ஒருவரின் வல்லுறவு படத்தை இன்னொருவர் பார்த்து குதூகலித்த விதத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கிறார்கள். ‘‘செர்பிய வீரர்களின் அறைகளின் சுவர்களில் ‘பிளே பாய்’ போன்ற பத்திரிகைகள் வெளியிட்ட பெண்களின் நிர்வாணப்படங்கள் நிரம்பி வழிந்தன’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

பெண்களை பண்டங்களாக்கி விற்கும் பிளே பாய் போன்ற பத்திரிகைகள் இனவெறுப்பின் உச்சத்தில் பெண் உடல்களை சிதைக்கப் பயன்பட்டன என்கிற உண்மையை வெளிக்கொணர்கிறார் கேத்ரின். தொழிற்நுட்பம் வளர்ந்த காலத்தில் வதைமுகாம்களில் பாலியல் வல்லுறவுகள் படங்களாக பதிவு செய்யப்பட்டு அவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. ஈழப்போரின் போது தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் சிதைந்த உருக்குலைந்த ஆடைகள் அற்ற உடல்கள் அந்த சிங்களர்களாலேயே செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளங்களில் பரப்பப்பட்டதை இங்கே நினைவு கூறலாம்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீரழிந்திருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய முக்கியமான பணி இருந்தது. நுகர்வை இரு மடங்காக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். தொலைக்காட்சிகளின் வழியாக பெண்களை பொருட்கள் வாங்க வைக்க முடிந்தது. ஆண்களுக்கு..? ‘பிளேபாய்’ இதழை தொடங்கிய ஹெஃபனர் அறிவாளி, 1953-ஆம் ஆண்டு போர்னோகிராபியை தொழிற்மயமாக்கினார். அதை ஒரு பண்டமாக மாற்றினார். ‘பிளேபாய்’ பத்திரிகையில் வந்த விளம்பரங்கள் இந்தப் பொருளை வாங்கினால் இதுபோன்ற பெண் கிடைப்பாள், அல்லது இதே பெண் கிடைப்பாள் என சொல்லப்பட்டது. அவர் பாலியலை மட்டும் பண்டமாக்கவில்லை. எல்லா பண்டங்களையும் பாலியல்மயப்படுத்தினார்” என்கிற கெயிலின் கூற்றை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக உறுதி செய்துகொள்ளலாம். லுங்கி விளம்பரத்திற்கு ஏன் பெண் தேவைப்படுகிறார்? கைக்குட்டைக்குக்கூடவா?

‘பிளேபாய்’ தொடங்கிவைத்த போர்னோகிராபி சந்தை இன்று உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டது. வயதுக்கேற்ற, நிறத்துக்கேற்ற, இனத்துக்கேற்ற, உடல்வாகுக்கேற்ற, குறிப்பாக ‘அவுஸ் வைஃப்’, ‘ஆண்டி’ என ஆப்சன் வைத்து தேடிக் கண்டுகளிக்க பாலியல் படங்கள் ஏராளமாக குவிந்துக்கிடக்கின்றன. தேடுபொறி சொற்கள் உள்ளிட்டு எல்லாமே ஆண்களின் நுகர்வுக்கேற்ப உருவாக்கப்படுபவையே. முட்டுச் சந்துகளில், இருட்டு அறைகளில், நுண் வெளிச்சம் பாய்ச்சும் ஸ்டுடியோ மெத்தைகளில், சிறைக்கூடங்களில், பாலியல் தொழில் நடக்கும் அழுக்கேறிய அறைகளில் அவதிப்படும் பெண்ணின் வலிகள் எப்போதும் ஆண்களுக்குப் புரியப்போவதில்லை. ஆண்கள் நுகரப் பிறந்தவர்கள். அவர்கள் ஒருபோதும் குற்றவுணர்ச்சி கொள்ளப்போவதில்லை.

– மு.வி.நந்தினி

தரவுகள்:

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார்.

குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சிய மாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.

2. முதலில் வாத்தியாரைப் போடு, மற்றதை அப்புறம் பேசு!
ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம். இன்னொருபுறமோ நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங் களை அமைத்தல், 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் திறன் வகுப்புகளைத் தொடங்குதல், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.-க்கு இணையான புதிய பாடத்திட்டம் என அதிரடியான அறிவிப்புகள்.

3. காவிரி : தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!
மேலாண்மை வாரியம் அமைக்காத மைய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது ? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது.

4. வேதங்கள் முதல் செல்லூர் ராஜு வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி!
இந்துக்கள்தான் இந்த நாட்டின் பூர்வ குடிகள், வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப் பதற்குப் பொருத்தமான வகையில் புதை பொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வு களையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.

5. மிஸ்டர் மோ(ச)டி!
பொதுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடுவதுதான் குஜராத் பாணி வளர்ச்சி.

6. இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை!
பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மட்டும் ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்ய வில்லை. 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

7. நேரடி மானியத் திட்டம்: ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து!
கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்குக் கோடிகோடியாய் வாரிக் கொடுக்கும் மோடி அரசு, ஆதார் இணைப்பு, நேரடி மானியத் திட்டம் என்ற போர்வையில் பொது மக்களின் வயிற்றில் அடிக்கிறது.

8. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட்-உடன் ஒரு நேர்காணல்
ஃபிரட் எங்ஸ்ட் (Fred Engst) (சீனப் பெயர் யாங் ஹெபிங் Yang Heping) உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் (Onurcan Ulker) 2017 ஏப்ரல் 7-ம் தேதி யன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார்.

9. ஹம் ஆப் கே ஹை கோன்?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு? நமோவுக்கும் அம்பானிக்கும் என்ன உறவு? அம்பானிக்கும் நிமோவுக்கும் என்ன உறவு? நிமோவுக்கும் அதானிக்கும் என்ன உறவு?

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

தங்கம் வாங்கலையோ தங்கம் ! வீடியோ

1

ர் உலகில் பிரச்சினை எதுவாக இருந்தாலும், தங்க நகை விளம்பரங்களுக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை! தங்கம் விற்று காசாக்குவதை இவர்கள் ஏதோ மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையாக ஏமாற்றுவதை பகடி செய்கிறது இந்த ‘வெளம்பரப் படம்’!

 

நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?

ம் ஆப் கே ஹை கோன்? – இது 1994-இல் வெளிவந்த ஒரு இந்தித் திரைப்படத்தின் தலைப்பு. இதன் பொருள் – உனக்கு நான் என்ன உறவு முறை வேண்டும்?

நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு? நமோவுக்கும் அம்பானிக்கும் என்ன உறவு? அம்பானிக்கும் நிமோவுக்கும் என்ன உறவு? நிமோவுக்கும் அதானிக்கும் என்ன உறவு?

பஞ்சாப் நேஷனல் வங்கியை ஆட்டையைப் போட்ட அக்யூஸ்டு நிரவ் மோடியின் குருநாதரும், அவரது மாமாவுமான மெகுல் சோக்ஸியை, மெகுல் அண்ணாச்சி என்று பாசத்தோடு அழைக்கிறார் பிரதமர்.

நிரவ் மோடியின் எல்லாக் கம்பெனிகளுக்கும் நிதி ஆலோசகர், அதாவது வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் போட்டுக் கொடுப்பவர், முகேஷ் அம்பானியின் சித்தப்பா நாதுபாய் அம்பானியின் மகன் விபுல் அம்பானி.

நிரவ் மோடியின் தம்பி நீஷல் மோடிக்குத்தான், தன்னுடைய தங்கை மகள் இஷிதாவைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அம்பானியின் ஆன்டிலா அரண்மனையில்தான் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை மணக்கப்போகும் பெண் ஸ்லோகா மேத்தா. அவளுடைய தந்தை ரஸ்ஸல் மேத்தா பெரிய வைர வியாபாரி. ஸ்லோகாவின் அம்மா மோனா மேத்தா நிரவ் மோடிக்கு நெருங்கிய சொந்தம்.

நிரவ் மோடியின் 3 பிள்ளைகளும் சென்ற ஆண்டு வரை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்தவர்கள். இப்போது எல்லோரும் இருப்பது அமெரிக்காவில்.
அடுத்தபடியாக அதானி.

3,696 கோடி வங்கிப்பணத்தைச் சுருட்டிய ரோட்டோமேக் பேனா கம்பெனி அதிபர் விக்ரம் கோத்தாரியின் மகள் நம்ரதாவை மணந்திருப்பவர், கவுதம் அதானியின் மருமகன் பிரணவ் அதானி.

கவுதம் அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் அதானியின் மகள் கிருபாவை மணந்திருப்பவர், ஜதின் மேத்தா என்ற வைர வியாபாரியின் மகன் சூரஜ். ஜதின் மேத்தா 7,000 கோடி ரூபாய் வங்கிக்கடனை ஏமாற்றி இந்தியாவிலிருந்து தப்பி, செயின்ட் கிட்ஸ் தீவு என்ற வரியில்லா சொர்க்கத்தின் குடிமகன் ஆகிவிட்டவர்.

டாவோஸில் நடந்த மாநாட்டில் நமோவுடன் நிமோ ( வட்டத்திற்குள் )

நிரவ் மோடி – அம்பானி – அதானிகளுக்கு இடையிலான உறவு மண உறவு. டாவோசுக்கு வந்த பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோவில் உட்கார்ந்திருக்கிறார் நிரவ் மோடி. இது என்ன உறவு என்றுதான் விளங்கவில்லை.

– தொரட்டி
(புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018)

தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ ! செய்தி – படங்கள்

0

பிரதமர் மோடி தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் நேற்றைய (18.04.2018) பேட்டி அனைத்து ஆங்கில செய்தி சேனல்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. #GoBackModi

சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்கத் துப்பில்லாத சூரர் லண்டனில் முன்தயாரிக்கப்பட்ட திரைக்கதையில் டைமிங்கில் பதில்களை அள்ளிவீச அவருக்கு அப்ளாஸ்கள் குவிகின்றன.

ஆனால் கடந்த 12-ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாய் “காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !” என முழங்கியது. இதனை இருட்டடிப்பு செய்தன வட இந்திய ஊடகங்கள்.

உலகளவில் டிவிட்டரில் பலரால் பின்தொடரப்படும் நபர்களில் ஒருவர், சமூகவலைதளங்கள் மூலம் எப்போதும் இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்று மார்தட்டிய மோடியின் 56 இன்ச் பலூனை வெடிக்கச்செய்தது “#GoBackModi” எனும் குண்டூசி.

திருவிடந்தையில் நடந்த மொத்த நிகழ்ச்சியிலும் முகத்தில் ஈஆடாமல் சவக்களையுடன் தான் அமர்ந்திருந்தார் மோடி. மெய்நிகர் உலகில் மட்டுமல்ல மெய்யுலகிலும் அவருக்கு பாடம் கற்பித்தது தமிழகம். டெல்லியின் அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்பதை நிரூபித்தன தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறோம்.

*****

”காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !”
– தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சென்னையில்…

சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நடத்திய மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரத்தில்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கம்பத்தில்…

தேனி மாவட்டம் கம்பம் பகுதில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்டது மேலும் மோடியின் ‘திரு உருவத்திற்கு’ செருப்படி பூஜையும் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவையில்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்: மக்கள் அதிகாரம்.

**********

குடந்தை மாணவர்கள் போராட்டம் !

“காவிரியில் அநீதி ! துரோகி மோடியே வெளியேறு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 12.04.2018 அன்று குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பலரும் ஆர்வமாக தாங்களாகவே வந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை – 9790215184.

எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் ! படக் கட்டுரை

மீனவர்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு  கடந்த 2011-ஆம் ஆண்டு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தினை கொண்டு வந்தது மத்திய அரசு. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திற்கான வரைவு அறிக்கையை, சென்னையிலுள்ள நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) தயாரித்து உள்ளது. இந்த வரைவு அறிக்கை, பொது மக்கள் பார்வைக்காக, சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில், பிப்-9 இல் வெளியிடப்பட்டது. இதன்மீது பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் 45 தினங்களுக்குள் தெரிவிக்கக் கோரியிருந்தது.  இந்த கெடுவும் ஏப்.06-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அரசின் அறிக்கையும், கருத்துக் கேட்பு அறிவிப்பும் ஆங்கிலத்தில் இருந்ததோடு, இணையதளத்திலும் ஆங்கில செய்திதாள்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசின் நோக்கம் அம்மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பதல்ல; சம்பிரதாயமான சடங்கு ஒன்றை முடித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வனப் பாதுகாப்பு என்ற பெயரில், காடு மலைகளிலிருந்து பழங்குடி மக்களை விரட்டியடித்ததைப்போல… விவசாயத்திலிருந்து விவசாயிகள் படிப்படியாக வெளியேற்றப்படுவதைப்போல போல… கடற்கரையிலிருந்து மீனவர்களை விரட்டியடிப்பதற்கான திட்டம்தான் இது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மீனவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் அருகேயுள்ள ஆல்காட், ஆரூர் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கருப்புக்கொடி நிரந்தரமாகப் பறந்துகொண்டிருக்கிறது. கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

ராதாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர், மீனவ சங்க பிரதிநிதிகள்.

கடற்கரை மேலாண்மை வாரியம் என்ன சொல்லுது? கடற்கரை மீனவனுக்கு சொந்தம் இல்லை. கடல் தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து கி.மீ வரை கடலுக்கு சொந்தம். அங்கு அரசு என்னவேணாலும் செய்யலாமாம். கடலும் கடற்கரை பகுதியும் மீனவனுக்கு சொந்தம். மீனவனின் வாழ்வாதாரமே கடலை நம்பித்தான்.

சுரேஷ் .

எங்க குப்பத்துல 1500 குடும்பம் இருக்கிறது.  சில குடும்பங்கள் இந்த தொழிலை விட்டு வேறு பொழப்பை தேடி போய் விட்டார்கள்.  நாங்க காலையில ஆறு மணிக்கு கடலுக்கு போனா சிலநாள் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடுவோம். இல்லனா மறுநாள் காலையிலதான். சராசரியா ஒரு நாளைக்கு 35 கி.மீ. தூரம் வரைக்கும் போவோம்.  சீசன் என்றால் 70 கி.மீ. போவோம். நாங்க கூலி தொழிலாளி. எங்ககிட்ட போட் இல்லை. பைபர் போட், ஸ்டீமர் போட் இரண்டு வகை இங்க இருக்கு. ஒரு பைபர் போட் வாங்கி சொந்தமா தொழில் செய்ய நாலு லட்சம் செலவாகும். ஒன்னரை லட்சம் போட், ஒன்னரை லட்சம் வலை, நாற்பத்தி ஏழாயிரம் இஞ்சின் .

இந்த ஒரு போட் இருந்தா ஐந்து குடும்பம் பிழைக்கும். ஒருமுறை கடலுக்கு போனா 35 கிலோ மீட்டருக்கு  டீசல் செலவு 500 ஆகும்; 100 ரூபா மீனுக்கு இறை வாங்குவோம்.   எங்களுக்கு ஆயிரம் ரூபா மீன் கிடைத்தால் கூட செலவு போயி, கூலி ஒருத்தருக்கு 75 ரூபா கிடைக்கிறதே கஷ்டம்.

நிர்மலா.

வீட்டு பெண்கள் கூடையில் மீன் வாங்கி தெருவில் விற்று பிழைக்கிறோம். ஆயிரம் ரூபா சரக்கு எடுத்து போனா முன்னூறு ரூபா கூலியா கிடைகிறது கஷ்டம். இதுல புள்ளைங்களோட செலவயும் பாக்கணும். சொந்தம் பந்தம்னு யாராவது வந்தா கவனிக்கனும்.

கலா

ஆண்டுக்கு நாற்பத்தி ஐந்து நாள் மீன்பிடி தடைக்காலம் வரும்போது அரசாங்கம் கொடுக்கிற பணம் நான்காயிரம் ரூபா. அதுல இருந்தே எங்களோட ஒருநாள் வருமானம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு எண்பது ரூபா கூட இல்ல எங்க வருமானம்.

மதுமிதா,அனுசியா.

அடையாறு அவ்வை இல்லத்தில் படிக்கும் மீனவக் குழந்தைகள். வக்கீலாக வேண்டுமென்று எதிர்கால ஆசை. “பிள்ளைங்க எல்லாம் கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல தான் படிக்க வைக்கிறோம். இங்க எல்லோரும் அதிகபட்சம் பத்தாவது, பன்னிரெண்டாவது தான் படிச்சிருக்காங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியல” என்கிறார்கள் பெற்றோர்கள்.

எங்க புள்ளைங்க பதினெட்டு வயசுல கடல்  வேலைக்கு வந்துடுவாங்க. ஒரு நாளைக்கு எங்களுக்கு 500 ரூபா கெடச்சா எங்க பிள்ளைங்களை எங்க விருப்பம் போல படிக்க வைப்போம். பெரிய படிப்பு படிக்க வச்சி நல்ல வாழ்க்கை கொடுக்கலாம். இப்ப மீனவ பசங்க தானேன்னு இளக்காரமா பாக்குறாங்க.

கந்தன், குழந்தை மிதுன்.

கடலுக்கும் போவேன், அங்கு வருமானம் இல்லனா பீச்சில பஜ்ஜி கடைபோடுவேன். இன்னா பண்றது பொழைக்கனும்ல. அதுக்கும் இப்ப வேட்டு வச்சிட்டானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு எப்பபாரு 144 தடையுத்தரவு. இப்ப காவிரி போராட்டத்த வச்சி  பீச்ச சுத்தமா மூடிட்டான்.

எங்களால் மீனவ  தொழிலை விட்டு போக முடியாது. எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும்.! – என்கிறார்கள், பகுதி வாழ் மீனவ மக்கள்!

– நேர்காணல், படங்கள்: வினவு புகைப்படச் செய்தியாளர்.

காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !

பத்திரிகைச் செய்தி

நாள் : 14.04.2018

14.04.18 முதல் வரை 29.04.2018 வரை கல்லணையில் தொடங்கி பூம்புகாரில் முடியும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாங்கள் நடத்த இருந்த பிரச்சார நடைபயனத்துக்கு ஒருநாள் முன்னதாக 13.04.2018 அன்று இறுதி நேரத்தில் காவல் துறை தடை விதித்துள்ளது.

திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டம் (கோப்புப் படம்)

அதேபோல சென்ற மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டத்தின்போது பாடிய ஒரு பாடல் பிரதமரையும் முதல்வரையும் தாக்குவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி நேற்று ம.க.இ.க.வின் பாடகர் கோவனை திருச்சி நகர காவல் துறை மிருகத்தனமான முறையில் கைது செய்து இழுத்துச் சென்றது.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுக்கிறது என்று சொன்னால் எடப்பாடி அரசின் அடக்குமுறை இவற்றை விட கொடியதாக இருக்கிறது. நாம் பிறந்து வளர்ந்த காவிரிக் கரை ஓரமாக நடந்து செல்வதே குற்றம் என்று அதற்கும் தடை விதிக்கின்றது இந்த அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே எழுந்து நின்று நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்திற்குப் பின் மோடி, எடப்பாடி அரசின் அடக்குமுறை வெறி அதிகரித்துள்ளது.

எமது அமைப்பினர் மீது டெல்டா மாவட்டங்களில் பல வழக்குகள் இருப்பதால் நடை பயணத்துக்கு தடை விதிப்பதாக தனது தடை உத்தரவில் காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அவை எல்லாம் காவிரி உரிமைக்கான போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளே அன்றி கொலை வழக்குகளோ பாலியல் வல்லுறவு வழக்குகளோ அல்லது ஊழல் வழக்குகளோ அல்ல. மேற்படி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மத்திய மாநில அரசுகள் எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பது நகைப்புக்கு உரியது.

இந்த சட்ட விரோத உத்தரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். எங்களுடைய காவிரி மண்ணில் நாங்கள் நடை பயணம் செல்வதை யாரும் தடுக்க முடியாது. தடைகளை மீறி மீண்டும் நடைபயணம் செல்வோம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சியில் கூட நடை பயணத்துக்கு தடை விதிக்கும் இத்தகைய அக்கிரமம் நடந்ததில்லை. இதனை முறியடிப்போம். கோவன் தொடர்ந்து பாடுவார். தொடர்ந்து போராடுவோம் – காவிரி உரிமையை மீட்கும் வரை.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றோர்:
வழக்கறிஞர் சி.ராஜூ, மக்கள் அதிகாரம்.
தோழர் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரம்.
தோழர் கற்பகவிநாயகம், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு – 99623 66321.

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !

தோழர் கோவனை கைது செய்ய போலீசு அத்துமீறல் ! மக்கள் மீது அதிரடி போலீசு தாக்குதல் !

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பாடகரான தோழர் கோவன் அவர்களை கடந்த 13.04.2018 அன்று காலை கைது செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு, சிலர் அவர் வசிக்கும் திருச்சி அரவானூர் பகுதிக்கு TN – 15 G – 1063 எனும் வேனில் வந்தனர்.

தோழர் கோவன் (கோப்புப் படம்)

வேனில் வந்த 15 பேரும் தங்களை போலீசு என கூறிக்கொண்டாலும் அதற்கான எந்த அடையாளத்தையும் காண்பிக்காமல் ஒரு கடத்தல் கும்பலைப் போல் செயல்பட்டனர். இந்த ஆள்கடத்தல் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவன் அவர்களின் துணைவியார் கோவன் அவர்களை காக்க முயற்சி செய்துள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டது அந்த கும்பல்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரண்டு வருவதைப்பார்த்த அந்த கும்பல் ஓடிவிட்டது. அதன்பின்னர் காவல்துறை வாகனத்தில் திருச்சி போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தோழர் கோவன் அவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் போலீசு கோவன் அவர்களை பலவந்தப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவன் அவர்களை காக்கும் பொருட்டு தோழர் கோவன் வீட்டினுல் போலீசு நுழையாதவாறு தடுப்பரணாக நின்றனர். இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு பத்திரிக்கையாளர்கள் குவியத்தொடங்கினர். தங்களின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அம்பலப்பட்டுபோய்விடும் என பதறிய போலீசு அதிரடிப் படைகளைக் கொண்டு அரணாக நின்ற பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியது.

மேலும் தோழர் கோவன் அவரது வீட்டுக் கதைவை உடைத்து அராஜகமாக கைது செய்தது. கைது செய்து அவரை அழைத்து (இழுத்து) சென்றபோதும் அவரை பத்திரிகையாளர்களிடம் பேசமுடியாதவாறு தடுத்தது போலீசு.

ஏற்கனவே ஜெயா உயிருடன் இருக்கும் போது டாஸ்மாக் பாடலுக்காக இதே போல சட்டவிரோதமாக கைது செய்து வழக்கு போட்டனர். தற்போதும் பாஜக ஆணையின் பேரில் தமிழக அரசும், போலீசும் தோழர் கோவனை கைது செய்து அவரது பாடலை முடக்கப் பார்த்தனர்.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் தோழர் கோவனை அன்று மாலையே பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தோழர் கோவன் தனது பேட்டியில் “ஏற்கனவே டாஸ்மாக் பாடலுக்காக என்னை கைது செய்து என் மனவலிமையை உடைக்கப் பார்த்தார்கள். அதே போல இப்போதும் செயல்பட்டுள்ளார்கள், உண்மையில் கைது நடவடிக்கைகளுக்கு நான் அஞ்சவில்லை. அதே போல் ஆட்சியாளர்களை விமரிசிப்பதை எனது நோக்கம், திட்டுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஒரு மனிதனாக எமது மக்களை அழிக்க நினைக்கும் அரசின் செயல்பாடுகளைக் கண்டு அமைதியாக இருக்கமுடியாது. அவர்களின் மொழியே எங்களது பாடல்கள்; அவர்களின் சொற்களை நாங்கள் பாடல்களில் சொல்கிறோம்.” எனக் கூறினார்.

துருக்கியின் மக்கள் கவிஞன் நசீம் இக்மத் அவர்கள் “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். அப்படி செயல்படும் ம.க.இ.க கலைக்குழுவை முடக்கவேண்டும் என்பதே அரசின் முடிவு. ஆனால் அவர்கள் இதற்கு அஞ்சப் போவதில்லை.

*****

 

மக்கள் பாடகர் கோவன் கைது – தாக்குதல் !
கருத்துரிமைக்கெதிரான அராஜகத்தை முறியடிப்போம் !

பத்திரிகைச் செய்தி

நாள் : 13/4/2018

க்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், கலைக்குழு பொறுப்பாளருமான தோழர் கோவனை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. சீருடை அணியாத காவல் துறை எந்த நாகரீக, சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாது அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டுக்கதவை உடைத்து கைது செய்துள்ளது. பாடல் மூலம் வன்முறையை தூண்டியதாக 153A,504,505 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அன்றாடம் சிறுபான்மை மக்களின் மீதும் பெரும்பான்மை மக்களின் மீதும் அவதூறுகளை பரப்புவதையே வேலையாகக்கொண்ட காவி பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசு , திருச்சியிலேயே தங்கி தொடர்ந்து ம.க.இ.க , மக்கள் அதிகாரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வரும் தோழர் கோவனை ஏதோ பயங்கரவாதியைப் பிடிப்பது போல அநாகரீகமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளது

ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையின் இந்த அராஜகத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக காவல்துறை கருத்துரிமையைப் பறித்து ஆட்டம் போடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ரத யாத்திரிக்கைக்கு முழு பாதுகாப்பளித்து எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்து ஒடுக்கியது மட்டுமின்றி 144 தடையுத்திரவே போட்டது.

பாஜக மோடி அரசின் துரோகத்தால் கொதித்துப்போயுள்ள தமிழக மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், காவிரிக்கான உரிமைப்போராட்டத்தை நசுக்கவும் அடிமை எடப்பாடி அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஒரு போதும் வெற்றிபெறாது. தற்போது தோழர் கோவன் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவரது விடுதலைக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள். ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவன் மீதான தாக்குதல் என்பது கருத்துரிமை மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் எனவே மக்களை நேசிக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள்
தோழர். காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்

*****

தோழர் கோவன் கைதை கண்டித்து குடந்தையில் ஆர்ப்பாட்டம் !

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 13.04.2018 மதியம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் குடந்தை மீன் மார்க்கெட் பகுதியில் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் (மக்கள் அதிகாரம்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624

காவிரியை மீட்க தமிழகமே கிளர்ந்தெழு ! போராட்ட செய்திகள் படங்கள் !

0

‘’காவிரியை மீட்க கிராமங்கள் தோறும் கிளர்ந்தெழுவோம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சிறுநகர், சிறுகலத்தூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர், அப்பகுதி மக்களை அணிதிரட்டி கடந்த 8.04.18 அன்று, சித்தாமுர் நான்கு வழிசாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதற்கு முன்னதாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியே பேரணியாகச் சென்றனர். பேரணியில், உணர்வுப் பூர்வமாகப் பங்கேற்ற பெண்களும் குழந்தைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ‘’தமிழகத்தை மீண்டும் மெரினாவாக்குவோம்’’ என்றும் சூளுரைத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
சிறுநகர், தொடர்புக்கு : 94451 12675.

*****

காவிரி : தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் !

“காவிரியை தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 09.04.2018 அன்று காலை திருச்சி லால்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு – 94454 75157, 95979 12822.