Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 446

காவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா ?

நான் காவிரி
என்னை
உன்னால் தடுக்கமுடியாது

சிவசமுத்திரத்தில்
சிறையிட்டால்
சிதம்பரம் விளையாட்டரங்கில்
என் குரல் கேட்கும்.

 

என்னை
கபினியில் கைது செய்தால்
நான்
அண்ணா சாலையில்
ஆர்ப்பரிப்பேன்.

வரலாற்றுப் பெருக்கெடுத்த
நதியை
உனது லத்திக்கம்பால்
தடுக்க முடியாது

நீ அடித்து
நீர் விலகாது
குளம், குட்டை
ஏரி, தாங்கல்
மெரினா, நெய்வேலி
மீண்டும் மீண்டும்
நான் நிறைவேன்.

ஆயிரமாய் அணை கட்டு
அபாண்டமாய் கதை கட்டு
அடி, உதை
வெறிகொண்டு விளாசு
தெறிக்கும் உதிர நதியில்
அவமானப்பட்டு
மிதக்கிறாய் நீ

நான் காவிரி
என்னை
உன்னால்
அடக்க முடியாது.

செந்நெல், சீரகச்சம்பா
செங்கரும்பு, கேழ்வரகு
செங்கால் நாரை
சேற்றுக்கால் கொக்கு
நண்டு, நத்தை
ஊர்க்குருவி, ஊமத்தம் பூ
துளசிச்செடி, ஓணாண் கொடி
மாடு, ஆடு
நன்றியுள்ள நாய்
ஆலமரம்
ஏலேலங் கிளி
கோரை விலா
ஈர நிலா
கலப்பையில் துளிர்க்கும்
சூரியன்
எல்லாமும்
என் பக்கம்,
எனக்கு ஆதரவாய்.

எல்லாவற்றுக்கும் மேல்
இயற்கையின் நீதி
என் பக்கம்.

இயற்கைக்கும்
எதிரான காவியே,

நான் காவிரி
உன்னால்
தடுக்க முடியாது!

– துரை. சண்முகம்

தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா – மக்களா ?

“தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா…? மக்களா…?” என்ற முழக்கத்தை முன்வைத்து 23.04.2018 அன்று காலை மக்கள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை “ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. மடத்தூர் பகுதியில் தொடங்கிய இப்பேரணியின் இறுதி நிகழ்வாக சிப்காட் அலுவலகத்திலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் அனைத்து கிராமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

கொடுக்கப்பட்ட மனுவில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:

       ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு:9944246063,6380010462,9003553557

நாள்.23.04.2018

பெறுநர் :

1.மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அவர்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  தூத்துக்குடி.

2.துணை இயக்குநர் அவர்கள்
சிப்காட், தூத்துக்குடி.

ய்யா,

பொருள்:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி சிப்காட்டை விட்டு வெளியேற்றக் கோரி மனு

கடந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

மேற்படி பாதிப்புகளால் நூற்றுக்கணக்கனோர் இறந்து விட்டனர்.எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன.இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு  ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது.1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.

வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற  நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Pétitions No. 15501 to 15503 of 1996.

5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்

“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.

மேலும் ஸ்டெர்லை ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்குவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.

இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும்.

ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து,தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு,பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கு.வி.ந.பிரிவு.133-ன் கீழ் நிரந்தரமாக மூடி,தூத்துக்குடி சிப்காட்டை விட்டு உடனே வெளியேற்ற வேண்டுகிறோம்.

இவண் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 99442 46063,63800 10462,90035 53557.

இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !

மிழக பட்ஜெட்டில் கரும்புக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறை, குப்புறத் தள்ளிவிட்ட குதிரை குழியும் பறித்த பழமொழியை நினைவுபடுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை அரவைப் பருவம் தொடங்கும் முன்பாக, கரும்புக்கான கொள்முதல் விலையை (Fair and Remunerative Price) மைய அரசு அறிவிக்கும். சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழகம், மகாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநில அரசுகள், தங்களது மாநில நிலைமைகளுக்கு ஏற்ப கரும்புக்கான பரிந்துரை விலையை நிர்ணயித்து, அதனை மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையோடு கூட்டி, கரும்புக்கான இறுதிக் கொள்முதல் விலையைத் தீர்மானித்து வந்தன.

கரும்பு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்குக் குறைந்தபட்சமாக ரூ.4,000/- என நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிவரும் நிலையில், மைய அரசோ இந்த ஆண்டுக்கு வெறும் 2,550/- ரூபாய்தான் கொள்முதல் விலையாக அறிவித்திருக்கிறது. தமிழக அரசு பரிந்துரை விலையுடன் சேர்த்து 3,200/- ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி கும்பல் இந்த ஆண்டு முதல் பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் முறையைக் கைவிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையைத் தீர்மானிப்பதில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துத் தமிழகக் கரும்பு விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியிருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பரிந்துரை விலையுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டிருந்த கொள்முதல் விலைக்கே (ரூ.2,750/-) கரும்பை ஆலைகளுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கரும்பு உள்ளிட்டு விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் தமிழக அரசோ தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கரும்புக் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிட்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் புதிய நடைமுறைக்கு மாறிவிட்டன.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி கரும்பின் கொள்முதல் விலையைத் தீர்மானித்தால், விவசாயிகளுக்கு (டன் ஒன்றுக்கு) ரூ.4,970 வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயிகளோ அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாகவே கொள்முதல் விலையை நிர்ணயிக்கக் கோரிவருகிறார்கள். சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தில் பங்கு என்ற மயக்கு வார்த்தைகளை முன்னிறுத்தும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை இந்த இரண்டு விலைகளுக்கும் பக்கத்தில்கூட வரப் போவதில்லை.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்

ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி மாநில அரசுகள் கரும்புக்குப் பரிந்துரை விலையை நிர்ணயிக்கக் கூடாது. சர்க்கரை ஆலைகள் மைய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை மட்டும் முதல் கட்டமாக வழங்க வேண்டும். அதன் பின், அந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை விற்றுக் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 70 சதவீதத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பின் அளவுக்கு இணையான விகிதத்தில் பிரித்து, அந்தத் தொகையை இரண்டாவது கட்டமாக வழங்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016-17 ஆம் ஆண்டில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.3,100/- எனக் கணக்கிடப்பட்டது. இதில் அந்த ஆண்டிற்கு மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலை 2,395/- போக, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தமது இலாபத்திலிருந்து விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய தொகை ரூ.705/-. இலாபப் பகிர்வுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் கோரிவரும் கொள்முதல் விலையைவிட ரூ.900/- குறைவு என்பது ஒருபுறமிருக்க, இதனையும் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஒரே தவணையில் விவசாயிகளிடம் அளிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தனக்கு மூன்று தவணைகளில் சர்க்கரை ஆலைகள் ரூ.2,700/-ஐத் தந்திருப்பதாகவும், இன்னும் நானூறு ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் கூறுகிறார், மாலேகான் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி பாட்டீல்.

இந்த நானூறு ரூபாய் நிலுவை விவசாயிகளின் கைக்கு எப்போது கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, இலாபப் பகிர்வு அடிப்படையில் கணக்கிடப்படும் கொள்முதல் விலை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

மகாராஷ்டிராவில் 2013-ஆம் ஆண்டிலேயே ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால், 2014-15 ஆம் ஆண்டில் இப்பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய மொத்தக் கொள்முதல் தொகை, மைய அரசு அந்த ஆண்டிற்கு நிர்ணயித்த நியாய விலையைவிடக் குறைவாக இருந்ததால், அது கைவிடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் சந்தையில் சர்க்கரை விலை கூடி ஆலைகளின் வருமானம் அதிகரித்தாலும், ஆலை நிர்வாகங்கள் நட்டக்கணக்குக் காட்டி, மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலைக்கு மேல் ஒரு பைசாகூடத் தர மறுத்துவிட்டன.

பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மட்டும் ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்யவில்லை. 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. குறிப்பாக, ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை மைய அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை கரும்பை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொண்ட 15 நாட்களுக்குள் தந்துவிட வேண்டும் என்ற விதியைத் தனியார் ஆலை நிர்வாகங்கள் மதிப்பதேயில்லை. மாநில அரசுகள் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிடுவதற்கு முன்பே, அவற்றால் நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரை விலையைத் தரவும் மறுத்தன.

2014 -15 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி நாடெங்கிலுமுள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை 20,100 கோடி ரூபாயாகும். தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை ரூ.1,347/- கோடி ரூபாய். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய நிலுவை 236/- கோடி ரூபாய். விவசாயக் கடனைக் கட்டத் தவறும் விவசாயிகளை அவமானப்படுத்தி, அவர்களின் சொத்துக்களை அடாவடித்தனமாகப் பறிமுதல் செய்யும் அதிகாரவர்க்கம், விவசாயிகளின் பணத்தை ஏப்பம்விட்டுள்ள எந்த ஆலை முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் துணிந்திருக்கிறது? மாறாக, பரிந்துரை விலை நிர்ணயம் செய்யும் உரிமையைக் கைகழுவித் தனியார் ஆலைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.

இதுவொருபுறமிருக்க, சர்க்கரையையும் அதன் துணை விளைபொருட்களையும் விற்றுத் தனியார் சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தைக் கணக்கிடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பை எடை போடுவதிலேயே தில்லுமுல்லுகள் செய்து, அவர்களை ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகங்களுக்கு விற்பனையைக் குறைத்துக்காட்டி நட்டக் கணக்கு எழுதுவது எம்மாத்திரம்? விவசாயிகளுக்கு ஆலைகள் தர வேண்டிய நிலுவையையே பெற்றுத்தர துப்பில்லாத அரசு, ஆலைகள் அடையும் இலாபத்தில் ஒரு பகுதியை பெற்றுத் தந்துவிடுவார்கள் என நம்பமுடியுமா?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பை, ஆலை முதலாளிகள் சந்தை விலைக்கு, அதாவது தாமே நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்திருப்பதும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதனைக் கைவிட்டிருப்பதும் ஆலை முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் முதல் அடியாகும்.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

குஜராத் கொள்ளையர்கள் !

ட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்து, அதனைப் பட்டை தீட்டி ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இன்று இந்தியா சர்வதேச அளவில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேசமயம், இந்த வைர இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம்தான் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்கு முக்கியமான வழியாகவும் இருந்துவருவதை மைய அரசின் தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சுட்டிக் காட்டியுள்ளன.

செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலில் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதோடு, பா.ஜ.க.வின் அஸ்திவாரத் தூண்களுள் ஒன்றான பனியாக்கள்தான் இந்தத் தொழிலில் முழு ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சர்வதேச அளவில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துவந்த யூத மதத்தினரை இன்று இந்து பனியாக்கள் பின்தள்ளிவிட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதிலிருந்து இந்தியாவின் வைர வியாபாரத்தில் நடந்துவரும் முறைகேடுகள், அதன் மூலம் உருவாகும் கருப்புப் பணம் மற்றும் கடத்தல் ஆகியவற்றின் கேந்திரமாக நரேந்திர மோடியின் குஜராத் இருப்பதை யாரும் ஊகிக்க முடியும். குஜராத்தில் பிறந்த, ஜெயின் மதத்தைச் சேர்ந்த பனியாவான நிரவ் மோடி திடீர் தொழில் அதிபராக உருவானதை இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால், அவரது வளர்ச்சியை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இதுவொருபுறமிருக்க, மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, நிரவ் மோடி 90 கோடி ருபாய் ரொக்கப் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் செலுத்தி வெள்ளையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி மீது சி.பி.ஐ.யில் மோசடி புகார் தெரிவிப்பதற்கு ஆறு நாட்கள் முன்பு நடந்த டாவோஸ் மாநாட்டில், அவர் தொழிலதிபர் என்ற போர்வையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மோடியின் நெருங்கிய வட்டாரப் பிள்ளையாக இருந்திருக்கிறார்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

அம்பேத்கர் விழாவிற்கு சென்ற தொழிலாளிகளை நீக்கிய ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் !

ஆக்சில்ஸ் இந்தியா - பாடி பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள வெம்பாக்கம் பகுதியில், டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த ஆக்சில்ஸ் இந்தியா (Axles India)  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டி.வி.எஸ். அய்யங்கார் குழுமத்தைப் போலவே, தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதும் அதன் உழைப்புச் சுரண்டலும் ‘பாரம்பரிய’மானது.

காண்ட்ராக்ட் தொழிலாளர்களை தொடர்ந்து இரண்டு ஷிப்ட் பார்க்குமாறு கட்டாயப்படுத்துவது; மறுத்தால்  பழிவாங்குவது என, இக்கும்பலின் தொடர் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட காண்டிராக்ட் தொழிலாளர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கமாக அணி திரண்டனர். காண்டிராக்ட் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டுவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணையோடு, நிர்வாகத்தின் அடக்குமுறை – அடாவடித்தனத்தை எதிர்த்து நின்றனர்.

நேற்றுவரை அடங்கிப்போன தொழிலாளர்கள், இன்று நேருக்குநேர் நின்று நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்விகேட்பதை அக்கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

முன்னணியாளர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். சங்கத்தில் செயல்படும் தொழிலாளர்களுக்கு ஒரு அளவுகோல்; சங்கத்தைச் சேராதவர்களுக்கு ஒரு அளவுகோல் என்று பல்வேறு வகைகளில் முன்னணியாளர்கள் பழிவாங்கப்பட்டார்கள். இன்றளவும் தொடர்கிறது.

இந்நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள நமண்டி பகுதியில் இருந்து கணிசமான அளவு தொழிலாளர்கள் இங்கு காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடர்ந்து 16 மணிநேரத்திற்கு மேலாக, இரண்டு ஷிப்ட் சேர்த்து பார்க்குமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதால் பல்வேறு உடல்ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக நிர்வாகத்திடம் முறையிட்டனர் அத்தொழிலாளர்கள்.

“முன்ன எல்லாம் எதுவும் சொல்லாமல் வேலை செஞ்சிகிட்டு இருந்தீங்க… இப்பல்லாம் லீவு வேனும்னு கேக்குறீங்க… சேர்க்கை சரியில்லாம போச்சு..” எனத் திமிர்த்தனமாக பதிலளித்தது நிர்வாகம்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவர்களது சொந்த ஊரான நமண்டியில் தொழிலாளிகள் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதற்காக விடுப்பு எடுத்துள்ளனர்.

ஊரில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல், “ எங்களுக்கு எதிராக சதித்திட்டம் போடுறீங்களா..’’ என அத்தொழிலாளர்களை அழைத்து மிரட்டியது நிர்வாகம். அதோடு மட்டுமில்லாமல், இதுகுறித்து விசாரிக்க ஹெச்.ஆர்.களைக் கொண்டு ஒரு ‘விசாரணைக் கமிசனே’ அமைத்துவிட்டது.

இது தொழிலாளர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் நடவடிக்கை என கண்டித்தது பு.ஜ.தொ.மு.  “ஊரில் நடக்கும் விவகாரங்கள் எங்கள் சொந்த விசயம். தொழிற்சாலைக்குள் நாங்கள் ஏதும் தவறாக நடந்தால் தான் விசாரனை நடத்த வேண்டும்” எனத் தமக்கேயுரிய தன்மானத்துடன் எதிர்த்து நின்றனர் தொழிலாளர்கள்.

இதனால் ஆத்திரம் தலைக்கேறிய, ஆக்சில்ஸ் இந்தியா நிர்வாகம் ஏப்ரல்-23 அன்று காலை, பணிக்கு வந்த தொழிலாளர்களை வாயிலிலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.

நிர்வாகத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் என வேறுபாடின்றி தங்கள் குடும்பத்தினருடன் இன்று காலையில் அணிதிரண்டனர். ஆலைக்கதவை மறித்துக் கொண்டு முற்றுகையிட்டனர். இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு. தோழர்களும் போராட்டக் களத்தில் உடனிருந்தனர்.

”காண்டிராக்ட் தொழிலாளர்களை பணியமர்த்தும் பொழுது, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரதொழிலாளியாக்க வேண்டும். தொழிலாளர்களை கூடுதல் நேரம் பணி செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது” என்பது உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கண்டன முழக்கங்களாக ஆலை வளாகம் அதிர முழங்கினர்.

தொழிலாளர்களின் உறுதியைக் கண்டு அஞ்சிய நிர்வாகம், தற்காலிகமாகப் பின்வாங்கியது. ’பேசித்தீர்த்துக்கொள்ளலாம்’ என்று நைச்சியமாக சமாதானம் பேசி தொழிலாளர்களை ஆலைக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளது நிர்வாகம்.

‘’ஆலைக்கு வெளியில் கூட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது’’ – என்று நிர்வாகம் நினைப்பதும்; அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைக்கூட விசாரணைக் கமிசன் வைத்து விசாரிக்கத்தக்க கிரிமினல் குற்றமாகச் சித்தரிப்பதும்; அதற்காகத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும், தொழிலாளர்களுக்கு உணர்த்தும் செய்தி இது ஒன்றுதான்,

‘’உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’’

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி,
திருவள்ளுர் மாவட்டம்  ( மேற்கு ), 94453 68009.

கானலால் நிறையும் காவிரி ! நூல் அறிமுகம்

“அண்மையில் வெளியான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், தமிழர்களுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இற்று வீழ்ந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரைக் கருத்தில் கொள்ளாதது ஏன்? பெங்களூரு நகரவாழ் மக்களின் குடிநீருக்கான தேவை குறித்துக் கவலைப்படுகிற உச்சநீதிமன்றம், பெருநகர் சென்னைவாழ் மக்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது ஏன்? பாதிப்பானது, தமிழர்களுக்குத்தான் என்கிற நிலையில் யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது எனத் தீர்ப்பில் கூறியது ஏன்?

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய ஓரவஞ்சனையான அணுகுமுறைகளையும்; கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலவரம்புக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தவிர்க்க முயலும் இந்திய அரசின் தமிழர்விரோத நிலைப்பாட்டையும்; நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த இடைக்கால – இறுதித் தீர்ப்புகளை ஒருபோதும் ஏற்காத – மதிக்காத கர்நாடக அரசின் அடாவடிப் போக்குகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் இந்நூலின்வழி உரிய ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.”

காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவிரி பிரச்சினையின் சுருக்கமான வரலாறு; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு; தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த நிலவரம்; நிலத்தடி நீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் தப்புக் கணக்கு; நம்பகமற்ற வடகிழக்கு பருவமழை; விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்; எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் குறித்து என விரிந்த பார்வையில் அதே நேரம் மிகவும் சுருக்கமாகவும் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உரிய நேரத்தில் அரிய முயற்சி.

நூல்: கானலால் நிறையும் காவிரி
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை
ஆசிரியர்: முனைவர் ரவிக்குமார்.
பதிப்பகம்: மணற்கேணி பதிப்பகம், 79, மருத்துவக்கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613004.
manarkeni@gmail.com

பக்கங்கள்: 104
விலை: ரூ.120.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

– வினவு செய்திப் பிரிவு

சென்னையில் கார்க்கியின் தாயை சந்திக்க வைத்த மேடை நாடகம் !

”தாயின் உலகத்தில் ஊக்கத்துடன் பயணம் செய்யுங்கள். புதிய மனிதனாகவும் வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்”

-வினவு தளத்தில் ஏப்ரல் 21,2011 ஆம் ஆண்டு வெளியான மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலின் நூல் அறிமுக வாசகத்தின் காட்சி உணர்வை நேரில் அனுபவித்தோம்.

சென்னையில் 22.4.2018 ஞாயிறு அன்று கொல்கத்தாவைச் சேர்ந்த செளவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழு நடத்திய “தாய்” மேடை நாடகம் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. நாடகக் காட்சிகள் ஜாரிச ரசியாவை நம் கண் முன்னே நிறுத்தியது.1917 நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த போராட்ட காலத்தின் வலியை ரத்தமும் சதையுமாகக் காட்டியது. நாடகம் வங்க மொழியில் நடத்தப்பட்டாலும் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இரு முறை திரைக்கதை சுருக்கத்தை தமிழில் கூறினார்கள்.

கெளதம் முகர்ஜி வயது 73. செளவிக்சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழுவின் அமைப்பாளர். 1978-ம் ஆண்டிலிருந்து 2500 முறை இந்நாடகத்தை இந்தியா முழுக்க மேடையேற்றியிருக்கிறார். இவரே தாய் நாவலின் நீலோவ்னா தாயாக பெண் பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பாத்திரத்தைப் போலவே இன்றும் பாட்டாளி வர்க்க உணர்வோடு நம்மிடையே வாழ்கிறார்.

அவருடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள். பாவெல், சக தோழி சாஷா, சக தோழர்களான அந்திரேய, பியோதர்மாசின், கூ செவ் சகோதர்கள், சமோய்லவ், புகின், சோமவ் எல்லாரும் தாய் நீலோவ்னவை மட்டுமல்ல நம்மையும் போராட்டத்தில் இழுக்கிறார்கள்.

அப்போராட்டத்தில் குறுக்கே மறிக்கும் கசடுகளை கண்டு வெறுப்பும் போராட்ட வெற்றியின் களிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. மேடை அமைப்பும் பின்னணி இசையும் ஒளிக் கலவையும் உயிருள்ள தொழிலாளர்கள ஓராயிரம்பேர் போராட்டத்துடன் இணைந்துக் கொள்வதற்காக தூரத்தில் வருவது போன்ற உணர்வை ஊட்டியது.

நடிகர்களே தொழில் நுட்ப கலைஞர்களாக ஒலி,ஒளி,மேடையை நிர்மாணித்து நடித்து முடிந்ததும் மேடையை பிரிக்கும் தொழிலாளர்களாக பணியாற்றினார்கள்.

பார்வையாளர்களிடம் குழந்தைகள்போல் நெருங்கி தங்கள் நடிப்பு பற்றி குறை நிறைகளைக் கேட்கிறார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் சாகச கலைஞர்கள் இவர்கள்.
இருள் சூழ்ந்த இன்றைய நிலையில் ஜனநாயக வெளியை உருவாக்க கலை இலக்கிய தளத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி கடுமையாக உழைக்கிறார்கள். வெல்க அவர்கள் பணி!

இந்நாடகம் தமிழ்நாடு மக்கள் கலை இலைக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்  நிகழ்த்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்.

மேலும் : அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா ?

மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா

4) ‘‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அதன் முன்னாள் காலனிய எஜமானரான பிரான்சிடமிருந்து முற்றிலும் விடுதலை பெறவில்லை. நாட்டின் நிகழ்ச்சிநிரல் வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் 22 வயதான அன்னே பெர்டில் டுய்ஸ்ஸிட் வோபியண்ட் என்ற மாணவி.
1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாங்கி பல்கலைக்கழகம், அறிவியல் ஆராய்ச்சி, சட்டம், விவசாயம், சுதந்திரக் கலைகள், பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

தோள்களில் முதுகுப் பையுடன் ஊதா நிற சட்டை அணிந்துள்ள ‘ஙய் பகோம்’ (Ngai Pacome), அவரது நாட்டின் அவல நிலையை விவரிக்கும் போதும் புன்னகைக்கிறார்.

“நாட்டின் சில பகுதிகளில், நிலைமை சோகமாகவும் துயரமானதாகவும் இருக்கிறது” என்று 23 வயதான, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக முதுகலை மாணவர் கூறுகிறார்.

2005-2008 காலகட்டத்தில் அதிபர் ஃபாஸ்டின் அர்சேன்ஞ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.

”நிகழ்ந்துவரும் வன்முறை காரணமாக நாட்டில் பொருளாதார செயல்பாடே முற்றிலும் இல்லை. இது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது, இங்குள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்” என்கிறார் பகோம்.

ஏன் இந்நிலை என்பது புரிந்துகொள்ள கடினமாக இல்லை. 2013 மார்ச்சில் செலேகா என்ற ஆயுதக் குழுவினர் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிபர் ஃபிரான்கிஸ் போஸைசை நீக்கியதிலிருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு அராஜகத்திற்கு நெருக்கமான நிலையில் இருக்கிறது. இரத்தம் தோய்ந்த கைப்பற்றுதல் நடவடிக்கை, பழிவாங்கும் தாக்குதல்கள், இன அழிப்பு மற்றும் வெகுஜன இடப்பெயர்வுகள் உள்ளிட்ட வன்முறையின் கொடூரமான செயல்களால் விளைந்தது.

‘‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அதன் முன்னாள் காலனிய எஜமானரான பிரான்சிடமிருந்து முற்றிலும் விடுதலை பெறவில்லை. நாட்டின் நிகழ்ச்சிநிரல் வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் 22 வயதான அன்னே பெர்டில் டுய்ஸ்ஸிட் வோபியண்ட் என்ற மாணவி.

நாட்டை 2013-ஆம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வந்த வன்முறைகளுக்கு 2016-ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் சிறு ஆறுதலை தந்தது. தலைநகர் பாங்கிக்கு வெளியில் புதிய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேல் ஆயுதக்குழுக்களின் கட்டுபாட்டில் உள்ளன. அவை வரிகள் வசூலித்தல் உள்ளிட்ட தேசிய அரசாங்கத்திற்கு இணையான நிர்வாகங்களை இயக்கி வருகிறார்கள்.

நாட்டில் நடக்கும் மோதல்கள், கல்வி மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை நாசப்படுத்தியுள்ளன; மற்ற பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு இடையில் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்க அரசாங்கம் போராடுகிறது.

இந்த உள்நாட்டுப் போரால் விளைந்த முக்கிய சேதங்களில் ஒன்றாக கல்வி உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மக்கட்தொகையில் சுமார் 75 சதவீதத்தினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள். இளைஞர் வேலையின்மை வீதம் 12.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதையொட்டி இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறைந்திருக்கலாம்; ஆனால் அதன் முகப்பிற்குப் பின்னால் வேளாண்மை மற்றும் விவசாய நுட்பங்களை கணிசமாக ஆராய்ச்சி செய்துவருகிறது.

மலாவி, சாட் மற்றும் நைஜர் போன்ற மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உயர் கல்வியில் நுழையும் மாணவர்கள் விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 26% ஆகும்.

பல்கலைக்கழகங்களில் நுழையும் நற்பேறு கொண்ட சிறுபான்மை மத்திய ஆப்பிரிக்கர்களுக்கும் கூட நிலவும் இடையறாத போர் மற்றும் நெருக்கடியினாலும், ஆசிரியர் பற்றாக்குறையினாலும் வகுப்புகள் பெரும்பாலும்  தள்ளிவைக்கப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.

கிருஸ்தவ – முஸ்லீம் இனங்களுக்கு இடையிலான இடைவிடாத பதட்டத்தின் காரணமாக பாங்கியை விட்டுத் தப்பிச் சென்ற நண்பர்கள் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறார்கள்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பட்டப்படிப்பை முடிக்க இருமடங்கு காலமாவதாக சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘‘நான் எனது சட்ட முதுகலை படிப்பை முடிக்க விரும்புகிறேன். ஆனால் இங்கு போதிய தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை. அதனால் நான் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார் ஃபியர் பெபனிசிங்கோ என்ற மாணவர்.

அறிவியல் மற்றும் மருத்துவத் துறை கட்டிடங்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலையைப் போல் காட்சியளிக்கின்றன.

தலைநகர் பாங்கி முழுவதும் மின்சாரம் மற்றும்  நீர் பற்றாக்குறையால் அவதியுறும்போது இத்தொந்தரவுகளுக்கு பல்கலைக்கழகம் விதிவிலக்கல்ல. இந்த வசதி, வளங்களின் பற்றாக்குறையையும் தாண்டி தொழில்நுட்ப துறையிலுள்ள வகுப்பறைகளின் சன்னல்கள் பெரும்பாலும் உடைந்துள்ளன. சுவர்கள் பெயர்ந்துள்ளன, வண்ணப் பூச்சுகள் உரிந்து சிதிலமடைந்துள்ளன.

‘‘இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது’’ என்கிறார் 18 வயதான மாணவி பெனிசியா டொய்னா. இங்குள்ள நிலைமைகள் இளைஞர்களை இங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கின்றன என்கிறார்.

படிப்பதற்கு அல்லது வேலைக்காக வேறு இடத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போக விரும்புவதாக 22 வயதான டயானே நகோப் கூறுகிறார்.

இந்த உள்நாட்டுப் போருக்கு முன்னரே நாட்டின் கல்விநிலை மோசமாக தானிருந்தது. ஆனால், 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்வி பெறும் வாய்ப்பே மிக மோசமாகிவிட்டது.

யுனிசெஃபின் கணக்கீட்டின் படி மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் கல்வியறிவற்றவர்கள்.

ஒரு அரசியல்வாதியாகி தனது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை கொண்டுவர விரும்புவதாக சொல்கிறார் 23 வயதான ஙய் பகோம்.

‘‘தலைநகருக்கு வெளியில் உள்ள நகரங்கள் கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் பள்ளி, கல்லூரிகளைக் கைப்பற்றி வைத்துள்ளனர். அமைதிப்படையினரும் கூட பள்ளி கட்டிடங்களை தங்களுக்கான முகாம்கள் அல்லது தளங்களாகப் பயன்படுத்துகின்றனர் அல்லது பள்ளி விளையாட்டுத்திடல்களில் தங்கள் படைதளத்தை அமைத்துள்ளனர்’’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

நாட்டில் உறுதியற்ற தன்மை தொடர்வதால் மாணவர்களின் வகுப்புகள் தொடர்ச்சியாக ஒத்திவைப்பு மற்றும் ரத்து செய்யப்படுகின்றன.

மிகப் பெரிய கல்வி நெருக்கடி உட்பட நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்கிறார் பகோம்.  “என்ன இருந்தாலும் இது எங்களுடைய வீடு என்பதை  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நான் படிப்பதற்கு வேறு இடத்திற்குப் போனாலும், நான் திரும்பி வர வேண்டும், வந்து இந்த இடத்தை சரி செய்ய வேண்டும்” என்கிறார் பகோம்.

தொடர்ச்சியான நெருக்கடி இருந்தபோதிலும், பல மாணவர்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: அல்ஜசீரா.
ஆதாரம்: CAR: ‘To live and study in Bangui is a type of torture’

லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !

பாட்டாளி வர்க்க பேராசான் லெனின் அவர்களின் 149-வது பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் கொண்டாடின.

தருமபுரியில்…

ருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பு.மா.இ.மு.வினரும்; விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டார வி.வி.மு.வினரும், காஞ்சிபுரம் மாவட்ட பு.மா.இ.மு. மற்றும் பு.ஜ.தொ.மு. அமைப்புகள் சார்பிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் பேரணியாகச் சென்றனர். பேரணியின் நிறைவில் நடத்தப்பட்ட தெருமுனைக்கூட்டங்களில் முன்னணியாளர்கள் உரையாற்றினர். சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முன்னணியாளர்கள் தமது உரையில், “பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் திரிபுராவில் ஆசான் லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதன் மூலம் அவரை மறைத்துவிட முடியாது. ஆசான் லெனின் சிலையல்ல; கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விஞ்ஞான தத்துவம். பேராசான் லெனின் உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவன். பின்தங்கிய நாடான ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை நிறுவியவர்.

பெண்கள் மீதான தாக்குதல், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் அவரது தத்துவத்தை பயின்று, அவர் நடைமுறையில் சாதித்துக்காட்டிய மகத்தான சாதனைகளை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிய, புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று’’ அறைகூவல் விடுத்தனர்; உறுதியேற்றனர்.

தருமபுரி

திருவெண்ணெய் நல்லூர்

காஞ்சிபுரம்

மிஸ்டர் மோ(ச)டி !

மிஸ்டர் மோ(ச)டி !

காங்கிரசு 60 ஆண்டுகளில் செய்யாததை 60 மாதங்களில் செய்து முடிக்கப் போவதாகக் கூறி பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி, சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டார்.

60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் என்ன நடந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். டாடாவும் பிர்லாவும் கொழுத்ததைத் தாண்டி, நகர்வாலா ஊழல், போஃபர்ஸ் ஊழல், பங்குச் சந்தை ஊழல், கேதான் பரீக் ஊழல், யு.டி.ஐ. மோசடி, தனியார் வங்கிகள் திவால் எனப் பல பெருமைகளைக் கொண்டது காங்கிரசு கட்சி.

நரேந்திர மோடிக்கு அம்பானி, அதானி. இதற்கு அப்பால், வியாபம் ஊழல், ரஃபேல் போர் விமான ஊழல் என ஊழல்கள் ஒரு பக்கம்; லலித் மோடி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி எனப் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல் மறுபக்கம் என்ற நிலைமையை வைத்து மதிப்பிட்டால், 60 மாதங்கள் முடிவதற்கு முன்பே மோடி காங்கிரசின் சாதனையை வென்றுவிடுவார் எனக் கூறிவிடலாம்.

மோடியின் ஆட்சியில் மட்டும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பொதுத்துறை வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் வைத்திருக்கும் கடன் பாக்கி 5.27 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டு, அங்கே சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதை நிரவ் மோடி விவகாரம் உறுதிப்படுத்துகிறது.

நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றிலிருந்து பெறப்பட்ட உத்தரவாதக் கடிதங்களைப் பயன்படுத்தி 280 கோடி ருபாய் அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாக கடந்த ஜனவரி 29-இல் பஞ்சாப் நேஷனல் வங்கி சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தது. பின்னர் இது குறித்து மேலும் விசாரித்த போது 150 உத்தரவாதக் கடிதங்கள் மூலம் நிரவ் மோடியும், அவரது தாய்மாமன் மெகுல் சோக்ஸியும் இணைந்து 12,800 கோடி ருபாய் அளவிற்கு ஆட்டையைப் போட்டிருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றஞ்சுமத்தியிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடிக்கும் அவரது மாமாவிற்கும் 1500க்கும் அதிகமான உத்தரவாதக் கடிதங்களை அளித்திருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரசாத் சுக்லா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதங்களைப் பயன்படுத்தி அவர்கள் எவ்வளவு கோடி ரூபாய் வெளிநாடுகளில் வாங்கிப் பதுக்கியிருக்கிறார்கள், எவ்வளவு பணத்தை வங்கிக்கு திரும்பத் தந்திருக்கிறார்கள் என்பது தற்போது உறுதியாகத் தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் நிரவ் மோடி இந்திய வங்கிகளில் ஆட்டையைப் போட்ட தொகை 12,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்க வாய்ப்புண்டு.

நிரவ் மோடி பெரும் தொழில்அதிபரான சூட்சமம் இதுதான். பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் நிரவ் மோடியின் லீலையை வெளியே சொல்லுவதற்கு முன்பே, அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணை தொடங்கும் முன்பே மெகுல் சோக்ஸியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். லலித் மோடியும், விஜய் மல்லையாவும் எப்படி வழியனுப்பி வைக்கப்பட்டார்களோ, அது போலவே நிரவ் மோடியும் மெகுல் சோக்ஸியும் தப்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்.

* * * * *

கார்ப்பரேட் முதலாளிகளும் பெரும் வணிகர்களும் வங்கிப் பணத்தைக் கடனாக மட்டும் பெறுவதில்லை. எந்தவொரு ஈடும் காட்டாமல், வங்கிப் பணத்தை அவர்களுக்குக் கொடுப்பதற்கு ஓவர் டிராப்ட், எல்.ஓ.சி., என பல வழிமுறைகளைச் சட்டபூர்வமாகவே மைய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. அதிலொன்றுதான் எல்.ஓ.யு. எனப்படும் வங்கி உத்தரவாதக் கடிதங்கள் அளிக்கும் முறை.

இந்த உத்தரவாதக் கடிதங்கள் வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை இறக்குமதி செய்யும் முதலாளிகளுக்கு இந்திய வங்கிகள் அளிக்கும் கடனுக்கான சான்றாவணம் ஆகும். வெளிநாட்டிலிருந்து இத்துணை கோடி ரூபாய் பெறுமான சரக்குகளை இறக்குமதி செய்யப் போவதாக வங்கிக்குக் கணக்கு காண்பித்து இந்தக் கடிதத்தை இறக்குமதியாளர்கள் பெற முடியும். பின்னர் இதனைத் தங்களுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனத்திடம் அவர்கள் கொடுத்தால், அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இந்திய வங்கியின் கிளையிலும் கொடுத்துப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தப் பரிவர்த்தன முறை முறைகேடுகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு ஓட்டைகளுடன்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, உத்தரவாதக் கடிதங்கள் மூலம் கடன் தரும் வங்கிகள் சரக்குகள் முறையாக இறக்குமதி செய்யப்படுகிறதா என்பதையெல்லாம் கண்காணிப்பதில்லை. இப்படி முறைகேடுகளைச் செய்வதற்கு ஏற்றபடி சட்டப்படியே உருவாக்கப்பட்ட இந்தப் பரிவர்த்தனை முறையில் நிரவ் மோடி கும்பல் சட்டவிரோதமான முறையிலும் முறைகேடுகளில் ஈடுபட்டு வங்கிப் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் நிரவ் மோடிக்கு உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளித்த கடன்களை, அவ்வங்கியின் மைய வரவு செலவுக் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்துள்ளனர். தடயமே இல்லாமல் திருடுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளில் இதுவரை சுளையைத் தின்றவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிரவ் மோடி கும்பலோ வங்கி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு முழு பலாப்பழத்தையே விழுங்கிச் செரித்திருக்கிறது.

உத்தரவாதக் கடிதம் பெறுவதற்கு இறக்குமதி செய்யும் சரக்கினுடைய அளவு மற்றும் மதிப்பிற்கு இறக்குமதியாளர்கள் காட்டும் ஒரே அத்தாட்சி ஏற்றுமதியாளரிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் மட்டுமே. இதிலும் நிரவ் மோடி கும்பல் வங்கி அதிகாரிகளின் துணையோடு தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து வைரக் கற்களை இறக்குமதி செய்வதாகக் கூறித்தான் நிரவ் மோடி வங்கி உத்தரவாதக் கடிதங்களைப் பெற்றிருக்கிறார். பெல்ஜியத்திலுள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம் நிரவ் மோடியின் தந்தைக்குச் சொந்தமானது.

தந்தை ஏற்றுமதி செய்கிறார். மகன் இறக்குமதி செய்கிறார். வங்கி மகன் வழியாகத் தந்தையிடம் பல ஆயிரம் கோடி பணத்தைக் கொண்டு சேர்க்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணையோடு நிரவ் மோடி குடும்பம் நடத்திய பணக் கடத்தலுக்கு ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் என்ற சாயம் பூசப்பட்டிருக்கிறது.

இந்திய இறக்குமதி சந்தையின் மொத்த மதிப்பான 10 இலட்சம் கோடி ருபாயில் 60 சதவீதம், அதாவது 6 இலட்சம் கோடி ருபாய், நிரவ் மோடிக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற உத்தரவாதக் கடிதங்களின் நிதியுதவியுடன் நடைபெறுவதாகப் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. அப்படியென்றால், மாட்டிக் கொள்ளாத பெருச்சாளிகள் இன்னும் எத்தனையோ! இந்த இலட்சணத்தில்தான், பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்கிவிட்டால் கருப்புப் பணம் உருவாவதையும், அது வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதையும் தடுத்துவிட முடியும் என நரேந்திர மோடி கும்பல் பொதுமக்களின் காதில் பூ சுற்றிவருகிறது.

* * * * *

சூடு கண்ட பூனை பாலை ஒதுக்குவதைப் போல, நிரவ் மோடி மோசடி அம்பலமான பிறகு ரிசர்வ் வங்கி இறக்குமதியாளர்களுக்கு வங்கி உத்தரவாதக் கடிதங்கள் அளிக்கும் நடைமுறைக்குத் தடை விதிக்கிறது. மோடி அரசோ, நிரவ் மோடி மோசடி வங்கியின் தனிப்பட்ட தவறென்றும், காங்கிரசு ஆட்சியில் தங்க இறக்குமதி தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட 20:80 விதிதான் நிரவ் மோடி மோசடிகளுக்குக் காரணமென்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறது.

ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் உருவாகும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுவது) அதிகமானதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு மத்தியில் அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தங்க இறக்குமதிக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே, தங்க இறக்குமதியில் 20:80 என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டது.

இப்புதிய விதியின்படி, தங்கத்தை இறக்குமதி செய்யும் நிறுவனம், தான் இறக்குமதி செய்யும் மொத்தத் தங்கத்தில் 20 சதவீதத்தை நகைகளாகச் செய்து ஏற்றுமதி செய்தால், அந்த நிறுவனத்துக்கு மீண்டும் இறக்குமதி செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில் இந்த விதிப்படி தங்கம் இறக்குமதி செய்து கொள்ளும் சலுகையை மேலும் ஏழு நிறுவனங்களுக்கு வழங்கினார், ப.சி. அந்த ஏழு நிறுவனங்களுள் நிரவ் மோடியின் நிறுவனமும், அவரது மாமா மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனமும் இருந்தன.

இந்த 20:80 விதி கொண்டுவரப்பட்ட போதே, அது உள்நாட்டில் உருவாகும் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திப் போவதற்குப் பயன்படும் எனக் குறிப்பிட்டு, வருவாய்ப் புலனாய்வுத் துறை எதிர்ப்புத் தெரிவித்தது. ப.சி. அளித்த இந்தச் சலுகையால் அரசிற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றப் பொது கணக்குக் குழு இப்பொழுது குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இவற்றைக் காட்டி, காங்கிரசு மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

ப.சிதம்பரத்தால் 2013-ஆம் ஆண்டு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த 20:80 சலுகையை, பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த மறுநிமிடமே ரத்து செய்யவில்லை. ஐந்தாறு மாதங்கள் கழித்து சாவகாசமாக 2014 இறுதியில்தான் ரத்து செய்தது. இந்தத் தாமதம் யாருக்குப் பயன்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. காங்கிரசின் பாவத்தில் கையை நனைத்துவிட்டு, இப்பொழுது யோக்கியனைப் போல நாடகமாடுகிறது, பா.ஜ.க.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் முகவர்களுள் ஒருவரான பெங்களூருவைச் சேர்ந்த ஹரிபிரசாத், கீதாஞ்சலி நிறுவனம் 31 வங்கிகளிலிருந்து பத்தாயிரம் கோடி ருபாய் அளவிற்கு கடன் வாங்கி, அவற்றைப் பல்வேறு போலி நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாகக் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சுமத்திப் பிரதமர் மோடி அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, நிரவ் மோடி-மெகுல் சோக்ஸி குடும்பம் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பிறகு, அவர்களை விட்டேனா, பார் எனச் சவடால் அடித்துவருகிறது. இதைக் கேட்டு லலித் மோடியும் விஜய் மல்லையாவும் வாயாலா சிரிப்பார்கள்?

* * * * *

பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றிருக்கும் மோசடிகள் அம்பலமாகும்போதெல்லாம், அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்குவதுதான் இதற்குத் தீர்வு என்று மழைக்காலத் தவளைகள் போல முதலாளித்துவ நிபுணர்கள் கத்துவது வாடிக்கை. இப்பொழுதும் அந்த உபதேசத்தைத் தரகு முதலாளிகள் சங்கமான அசோசெம், மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, கோத்ரேஜ் குழுமங்களின் தலைவர் ஆதி கோத்ரேஜ் உள்ளிட்ட பலரும் காது புளிக்கும் வண்ணம் சொல்லி வருகின்றனர்.

1967-க்கு முன்பு இந்திய வங்கித் துறை தனியாரின் வசம்தான் இருந்தது. அக்காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளால் ஆண்டொன்றுக்கு 35 தனியார் வங்கிகள் திவாலாகி, பொதுமக்களின் பணத்திற்கு வேட்டு வைத்தன. இந்திரா காந்தி வங்கித் துறையை அரசுடமையாக்கியதற்கு, தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளும் திவாலும் முக்கிய காரணமாக அமைந்தன.

வங்கிகள் அரசுடமையாக்கப்பட்ட பிறகு, எந்தவொரு அரசு வங்கியும் திவாலாகவில்லை. அதன் பிறகுதான் கிராமப்புறங்களை நோக்கி வங்கிகள் செல்லத் தொடங்கின. தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வங்கித்துறையில் மீண்டும் தனியார் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குளோபல் டிரஸ்ட் வங்கி உள்ளிட்ட சில தனியார் வங்கிகள் தமது தில்லுமுல்லுகளால் திவாலாகின.

உண்மை இவ்வாறிருக்க, வங்கிகளைத் தனியார்மயப்படுத்தினால் மோசடி நடைபெறாது என நிபுணர்களும் தரகு முதலாளிகளும் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பொய்.

தற்பொழுது அரசு வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்குத் தப்பியோடியிருப்பவர்கள் யார்? விவசாயிகளா, ஏழை மாணவர்களா, சிறுதொழில் முனைவோரா? ஓடிப்போன அனைவரும் விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி வகைப்பட்ட தரகு முதலாளிகள்தான். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்களும் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள்தான். ஏர்டெல் நிறுவனம் வங்கி சேவையில் இறங்கியவுடனேயே தில்லுமுல்லு செய்து பிடிபட்டு, ஐந்து கோடி ரூபாய் அபராதம் செலுத்தித் தப்பியிருக்கிறது. இப்படிப்பட்ட தில்லுமுல்லு முதலாளிகளிடம் அரசு வங்கிகளை ஒப்படைக்கக் கோருவது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுக்கச் சொல்லுவதற்கு ஒப்பானது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டு மற்றும் தேசங் கடந்த தனியார் வங்கிகள் நடத்திய சப்-பிரைம் மோசடி காரணமாக, உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிவரும் வேளையில், நரேந்திர மோடி அரசு வங்கிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க முயலுவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, பேரபாயத்தை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பானது.

-கதிர்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப் படங்கள்

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!
பா.ஜ.க. பிரேம் ஆனந்துக்கு பயணிகள் தர்மஅடி!

**

சங்க பரிவாரின் பாரதப் பண்பாடு!

**

ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கை!

கருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து

1

ள்ளி – கல்லூரி படிப்பை கடந்தபின் பலரும் புத்தகங்களை மறந்து விடுகின்றனர். கல்வி பயிலும் காலத்தில் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு வாசிப்பு என்றாலே அது போட்டித் தேர்வுக்கானது என்றாகி விட்டது. இன்று ஏப்ரல் 23 உலக புத்தக தினமாம்.

பொதுவில் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் சூழல் இருப்பினும் வாசிப்பின் சுவை அறிந்த பலரும் இன்றும் அதைத் தொடர்ந்து வருகின்றனர். புத்தகங்கள் எவ்வாறு ஒரு மனிதனுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது என்பதை விளக்குகிறது இந்த காணொளி… பாருங்கள்… பகிருங்கள்… படியுங்கள்…

எஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய ? கருத்துப் படம்

0

எச்.ராஜா பேச்சுக்களை என்ன செய்ய…?

நாவடக்கத்தை இனி பத்திரிக்கையாளர்கள் சொல்லிகொடுக்கட்டும்…

*****

பார்ப்பன கழிசடை எஸ்.வி. சேகரை கைது செய் !

பத்திரிக்கையாளர்களை விடுதலை செய் !

படங்கள் : வேலன்

இணையுங்கள்:

தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !

1

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 149−வது பிறந்த நாள் தமிழகமெங்கும் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது. அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தும், இன்றைய அரசியல் சூழலில் நம்முன் உள்ள கடமைகளை நிறைவேற்ற உறுதியேற்றும் லெனின் பிறந்த நாளை, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடைபிடித்தன. தாங்கள் செயல்படும் பகுதிகளில் தோழர் லெனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தும், பறை இசைத்தும், கொடியேற்றியும், தெருமுனைக் கூட்டங்களை நடத்தியும், பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மக்கள் பங்கேற்புடன் கொண்டாடினர்.

பாட்டாளி வர்க்க வழிகாட்டி ஆசான் லெனின்! அவர் சுரண்டல் , தனிச் சொத்துடைமைக்கு முடிவு கட்டியவர்;  விவசாயிகள் – தொழிலாளர் கூட்டை கட்டியமத்தவர்; உலகில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கியவர்; தேசிய இன விவகாரத்தில் தங்களை தாங்களே ஆளத் தீர்மானித்துக்கொள்ளும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன் வைத்தவர்; ஏழைப் பங்காளன். கூட்டுப்பண்ணை விவசாயத்தை ஏற்படுத்தி ரசியாவில் வறுமையை ஒழித்துக் காட்டியவர்.

நமது நாட்டிலோ, நாடாளுமன்ற அரசியல், பொருளாதாரக் கொள்கை மூலம் நம்மை காப்பாற்ற முடியவில்லை என்பது 70 ஆண்டுகளில் நிரூபணம் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் மக்கள் மீதான சுரண்டலும், அடக்கு முறைகளும் பல்வேறு வடிவங்களில் ஏவப்படுகின்றன. விவசாயம் அழிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில், நியுட்ரினோ,  அணு உலை, சாகர் மாலா என அழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக நாடு மாற்றப்படுகிறது.

நாம் போராடினால்தான் வாழமுடியும்; மக்கள் நலனையும் இயற்கையை பாதுகாக்க முடியும் என்ற இன்றைய சூழலில் நமக்கு தேவை மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய  சோசலிச கொள்கை. அதற்கு ஒரே வழி ஆசான் லெனின் காட்டிய புரட்சிப்பாதை !

அவர் காட்டிய வழியில், ‘’நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக் காடாக்கும் தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்! மக்களை சாதி – மதம் – இனரீதியாக மோதவிட்டு ரத்தம் குடிக்கும் பார்ப்பன – இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!’’ – என்று சூளுரைத்தனர்.

சென்னை

மதுராந்தகம்

கோவில்பட்டி

விருத்தாசலம்

ஓசூர்

 தகவல்:
ம.க.இ.க., பு.மா.இ.மு.,
பு.ஜ.தொ.மு., வி.வி.மு.,
பெ.வி.மு.

காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !

காவிரி உரிமை பிரச்சார நடைபயணம்

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் கர்நாடக அரசும், வஞ்சிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுச் செயல்படும் வேளையில் உச்சநீதிமன்றமும் தன்பங்கிற்கு வஞ்சகம் செய்கிறது. இந்த வஞ்சகத்தால் தமிழகமக்கள் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் மத்திய அரசு இது பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இங்குள்ள இயற்கை வளங்களான நிலக்கரி, மீத்தேன், ஷேல்,பெட்ரோலியம் போன்றவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுக்க காவிரி டெல்டாவை திட்டமிட்டு பாலைவனமாக்குகிறது மோடி அரசு.

மத்திய அரசின் இந்த தமிழக விரோதக் கொள்கைகளையும் திட்டத்தையும் முறியடிக்காமல் காவிரி நீர் உரிமையையும், தமிழக விவசாயத்தையும் காப்பாற்றமுடியாது. இதனை வலியுறுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்லணையிலிருந்து பூம்புகார்வரை பிரச்சார நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தோம். இதனை முடக்கும் விதமாக நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.

போலீசின் அனுமதி மறுப்பை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தோம். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 30 நபர்கள் மட்டுமே இப்பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தது, மதுரை உயர் நீதிமன்றம்.

இதனையடுத்து, திட்டமிட்டபடி ஏப்ரல்-21 அன்று கல்லணையில் பிரச்சார நடைபயணம் தொடங்கியது. மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி அசைத்து நடைபயணத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற திருவையாறு  சி.பி.எம். கட்சியின் விவசாய சங்க வட்டார செயலாளர் தோழர் ராமலிங்கம் மற்றும் விவசாயி  திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் கணேசன் உட்பட திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

காவிரி உரிமைப் பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு திருமுல்லைவாசலில் பிரச்சாரநடை பயணநிறைவு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். காவிரி உரிமைப்போராட்டத்தில் பெரும் திரளாக மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவிஅழைக்கிறோம்.

**

பிரச்சார  நடைபயணம் இரண்டாவது  நாளாக நேற்று (22.04.2018) காலை 7 மணிக்குத் திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கி நடுக்காவேரி, கண்டியூர் வழியாக திருவையாறு வந்தடைந்தது. இன்று 23.04.2018  காலை 7 மணிக்கு கண்டியூரிலிருந்து புறப்பட்டு  திருச்சோற்றுத்துறை, மாத்தூர்,அய்யம்பேட்டை வழியாக பாபநாசம் வந்தடையும். பொதுமக்கள் வழியெங்கும் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றி.

தகவல்:
மக்கள் அதிகாரம்.
(99623 66321- 91768 01656 – 94431 88285)