Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 445

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !

0

மிழகம் முழுவதம் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் “மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மே நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக…

சென்னையில்…

நாள் : மே – 1 மாலை 4 மணி
இடம் : சோழிங்கநல்லூர் OMR சாலை சந்திப்பு.

 

*****

திருச்சியில்…

நாள் : மே – 1 மாலை 5 மணி
இடம் : இராமகிருஷ்ணா பாலம் அருகில், மரக்கடை, திருச்சி.

 

தலைமை : தோழர் சுந்தரராசு, புஜதொமு.

கண்டன உரை : தோழர் சத்யா, ம.க.இ.க. கலைக்குழு

****

மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

குமுறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்கட்சிகள் அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என் ற முறையில் செயலிழந்துவரும் அரசுக்கட்டுமானங்கள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

தேர்தல் அரசியல் கட்சிகளும் மொத்த அரசியல் கட்டமைப்பும் இனி மேல் நீடிக்க முடியாதனவாகவும் சீர்த்திருத்தி நாட்டின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவே முடியாத நிலையையும் எட்டிவிட்டன. அரசும், ஆட்சியாளர்களும் , ஆள ம்வர்க்கங்களும் ஆள முடியாமல் போனது மட்டுமல்ல, ஆளத் தகுதியிழந்தும் போய்விட்டன.

தலைமை நீதிபதியை பதவி நீக்கும் நடவடிக்கை முன் மொழிவை துணை ஜனாதிபதியும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு சட்டப்படி மூவர் கு ழுவின் விசாரணைக்கு அனுப்பாமலேயே நிராகரித்துவிடுகிறார். அடுத்து பதவி நீக்க நடவடிக்கையை முன்மொழிந்த எம்.பி.க்களுக்கு உள்ள ஒரேவழி நாடாளுமன்ற மேலவைத் தலைவர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வதுதான்! எந்தத் தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கநடவடிக்கையை முன்மொழிந்தார்களோ அவரிடமே சென்று முறையிடுவதுதான் ஒரேவழி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கும் ந டவடிக்கைக்கான முன்மொழிவை ஒட்டி நடந்த விவகாரங்கள் இதற்கு ஒரு சிறந்த நிரூபணமாகும். முன்மொழிவில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்தது இதுதான்.

உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி , லக்னோவிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்குகிறார் நீதிபதி சுக்லா. தனது நண்பர் மூலம் இந்த அனுமதியை வாங்கித்தருவதாகச் சொல்லி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பேரம் பேசி, அதற்கான பேரத்தொகையாக ரூ.2 கோடியை வாங்கும்போது சிபிஐயிடம் சிக்குகிறார், ஒடிஸா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான குத்தூஸ்.

குத்தூஸ்கைதைத்தொடர்ந்து, சுக்லாவையும் கைது செய்ய அனுமதி கேட்டபோது அதற்கான அனுமதியை வழங்க வேண்டிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி கொடுக்கவில்லை. ”இந்த விவகாரத்தில் தீபக்மிஸ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது; அவரையும் விசாரிக்க வேண்டும்” என்று வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி செலமேஸ்வர், “’வழக்கைதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தவிர்த்த மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்” என்கிறார். உடனடியாக இந்த வழக்கை தன்னுடையகையில் எடுத்த தீபக்மிஸ்ரா, செல்லமேஸ்வரின் உத்தரவைக் கையோடு ரத்து செய்ததோடு வழக்கை மூன்று இளம் நீதிபதிகள் கொண்ட வேறொரு அமர்வுக்கு அனுப்பினார். அந்த அமர்வானது வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர்களுக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த முறையீட்டில் தலைமை நீதிபதி தவறிழைத்ததாகக் கருதினால் அதற்குப்பரிகாரம் தேட நாடாளுமன்ற மேலவைக்குதான் செல்லவேண்டும். இதுதான் அடுத்தவழி. இப்படி ஒரு முட்டுச்சந்தில் நீதியைக்கொண்டு வந்து நிறுத்தி, அதை தலை குனியவைத்து உச்ச நீதிமன்ற புனிதத்தின் மீதான மக்களின் கடைசி நம் பிக்கை யை யும் துடைத் தெறிந்திருக்கிறார்கள் உச்சநீதி மன்றத்தலைமை நீதிபதியும் நாடாளுமன்ற மேலவைத்தலைவரும். மேலவைத்தலைவர் துணை ஜனாதிபதியும் கூட. தற்போது காவிரி வழக்கு, குட்காவழக்கு, 11 தமிழக எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கவழக்கு ஆகியவைகளில் நீதிபதிகள் அளித்த தீர்ப்புகள் நீதிபதிகள் எப்படி கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளன. இவையெல்லாம், நீதிமன்றக் கட்டுமானம் எப்படி நிலை குலைந்து போய், நீதிவழங்க அருகதையிழந்து, இழிந்து போய்விட்டது என்று தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

சட்டவிரோதப் பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது தேர்தல் ஆணையம். அதற்காக தேர்தலை ரத்து செய்து மறுதேர்தலை நடத்தியது. முந்தையத் தேர்தலை விட இந்த மறு தேர்தலில் இன்னும் பல நூதன வழிகளில் பணப்பட்டுவாடா பட்டபகலில் நடந்தது என்பதை எல்லா ஊடகங்களும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.

இந்த முறையும் சட்டவிரோத பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்று இன்னொரு முறை தனது கையாலாகாதனத்தை, அருகதை இழந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. மாநில போலீசார், மத்திய போலீசார், பறக்கும் படை, துணை இராணுவப்படை, ஆயிரக்கணக்கான தேர்தல் அலுவலர்கள் என்ற படைகளை தனது வானளாவிய அதிகாரத்தில் வைத்திருந்தும் தேர்தல் ஆணையத்தால் சட்டவிரோதப் பணப்பட்டு வாடாவைத் தடுக்கமுடியவில்லை என்றால், அது இனி மேலு ம் நீடித்திருப்பதற்கான அருகதையையே இழந்து விட்டது என்பதையும் ‘ஜனநாயக’ த்தைக் காப்பாற்றவக்கற்றுப் போய் விட்டது என்பதையும் பளிச்சென்று எடுத்துக் காட்டவில்லையா?

நீரவ் மோடி என்ற முதலாளி வங்கி ஊழியர்களை வளைத்துப்போட்டு, முறைகேடுகள் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை வாங்கி தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு, கடனைக் கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்றார் என்பது ஊரறிந்த செய்தி. இதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரிசர்வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள், நிதி அமைச்சகம், கார்ப்பரேட் அமைச்சகம், சி.பி.ஐ., அமலாக்கத் துறை, பிரதமர் அலுவலகம் போன்ற மாண்புமிகு நிறுவனங்களே உடந்தையாக இருந்துள்ளன என்பதும் ஊரறிந்த செய்தி.

இது அந்நிறுவனங்களின் தோல்வியையும், நிர்வாகம் செய்ய அருகதையற்றுப் போனதையும் அப்பட்டமாகக் காட்டவில்லையா? வங்கி மோசடிக்குற்றவாளி நீரவ்மோடியை டாவோசில் நடைபெற்ற உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட பொருளாதார மாநாட்டிற்கு பிரதமர் மோடி தன்னுடன் அழைத்துச்சென்ற செய்தியும், இருவரும் கூட்டத்தில் பங்குபெற்ற புகைப்படமும் வெளியாகி பிரதமர் பதவியின் மாண்புசீர்குலைந்து இழிந்து போனதும் கட்டைமப்பு நெருக்கடியின் வெளிப்பாடு அல்லாமல் வேறென்ன?

இப்படி அன்றாடம் கட்டைம ப்பு நெருக்கடிக்கான சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கட்டுமானங்கள் ஒவ்வொன்றிலும் சரி, மொத்த சமூகக் கட்டமைப்பும் சரி தீராத நெருக்கடியில் சிக்கி , எதையு ம் தீர்க்க வக்கற்றுபோய், தோற்றுப்போய், நிலை குலைந்து போய் ஆள அருகதை இழந்து விட்டதை . நிரூபிக்கவில்லையா?

எல்லாகட்சிகளும், எல்லா அரசுதுறைகளைச் சேர்ந்த அதிகாரகள் உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கும் அனைவரும் , மக்கள் அனைவரும் இந்த கட்டமைப்பு ஆள அருகதையிழந்ததை தங்களுக்கு தெரிந்த வகையில் புரிந்து வைத்திருக்கின்றனர். வெறுப்புடனும் கிண்டலும் கேலியும் கலந்த குரலிலும் ஆத்திரத்தோடும் அன்றாடம் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த கட்டமைப்பின் மீது காறி காறி துப்புகின்றனர். கட்டமைப்பு நெருக்கடியின் ஒவ் வொரு வெளிப்பாட்டையும் எப்போதும் அரசியல் கூர்மையுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், எந்த அரசியல் கட்சியும் சரி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர் போலீசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நிபுணர்கள் மக்களின் மனநிலை பற்றி துளியும் கவலையோ அச்சமோ கொள்ள வில்லை. இப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். உள்நாட்டு –  வெளி நாட்டு கார்ப்பரேட் டுகள் அரசு சொத்துக்களை அபகரிக்கவும் இயற்கைவளங்களைச் சூறையாடி சுற்றுச் சூழலை நச்சாக்கவும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அடக்கி ஒடுக்கி, சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கவும் மேலும் மேலும் அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனர்.

இந்த மக்களால் நம்மை ஒன்றும் செய்துவிடமுடியாது. தேர்தல் நேரத்தில் சில இலவசத் திட்டங்களைக் கவர்ச்சிகரமாக அள்ளிவிட்டு, ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால் ஓட்டுவாங்கி ஆட்சிக்குவந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் உள்ளனர். பழைய அரசியல் கட்சிகள் நம்பிக்கை இழந்ததால் மக்களிடம் ரஜினி, கமல் போன்ற புதிய தலைவர்களை உருவாக்கி மக்களை இந்த தேர்தல் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்காமல் செய்து எப்பொழுதும் போல தங்களின் ஆட்சியைத் தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் ஆளும் வர்க்கங்கள் உள்ளன.

இப்பொழுது நம் முன்னர் உள்ளகேள்வி இதுதான்.

இந்த கட்டமைப்பிலேயே என்ன கஷ்டம் வந்தாலும் உழன்று கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது இந்த கட்டமைப்பை அகற்றி விட்டு நமக்கான கட்டமைப்பை, மக்களி ன் நேரடி அதிகாரத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான போரில் இறங்கப்போகிறோமா?

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்றவகையில்தான் திட்டமிட் டு நாட்டி ன் இன்றைய கட்டமைப்பு கட்டப்பட்டிருப்பது தான் இந்தக்கட்டமைப்பு நெருக்கடிக்கான அடிப்படை. தனிச்சொத்துடைமையும், அதன் அடிப்படையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது.

எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நேரடியாகவும் மறை முகமாகவும் சேவை செய்பவைதான்.

எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வுகிடையாது, கட்டமைப்புக்கு வெளியில் தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது , கட்டமைப்பையே மாற்றுவது தான் தீர்வு!

தற்போதைய கட்டுமானங்கள் முழுவதுமாகக் கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதிய அரசுக்கட்டுமானங்களை, மக்கள் அதிகாரத்துக்கான அரசுக் கட்டுமானங்களை மக்கள் தாமே நிறுவிக்கொள்வதுதான் நம்முன் உள்ள ஒரேவழி!

மாற்றுக்கட்டமைப்பு என்று சொல்லும் போது கியூபா நாட் டு மக்கள் கட்டமைத்துள்ள அவர்களின் சமூகக்கட்டமைப்பும், பொதுவுடைமையை அடிப்படையாகக் கொண்டு சீனாவிலும் ரசியாவிலும் அமைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகளும் நமக்கு முன்னுதாரணங்களாக உள்ளன.

போலீசு, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும் தனது ஆட்களை புகுத்தி பார்ப்பன பாசிசத்தை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசகும்பல். இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக்கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக்கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப்பணியாக நம்முன்னே உள்ளது.

  • கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப்போய், ஆளஅருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி,
திருச்சி, தொடர்புக்கு : 97916 92512, 89034 03970, 99431 76246.

வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !

  • ”காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லீம்!”
  • ”கோட்சேவும் சாவர்க்கரும் ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள்!”
  • ”ஐன்ஸ்டீனின் சார்புநிலை கோட்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.”
  • ”ஆரியர்களின் தாயகமான வட துருவம் பீகாருக்கும் ஒரிசாவுக்கும் நடுவில் இருந்தது.”
  • ”ஹிட்லர் போற்றப்பட வேண்டிய ஜெர்மானிய தேசபக்தத் தலைவர்!”

– இவை போன்ற இந்துத்துவப் பிதற்றல்களை, பாரத வரலாறு என்று நமது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் திட்டம். இவற்றின் அடிப்படையில் பள்ளி வரலாற்றுப் பாடங்களைத் திருத்துவதற்கு முன்தயாரிப்பாக, மோடியின் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, 14 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். இந்த கமிட்டியின் தலைவர் கே.என். தீட்சித் என்ற வடநாட்டுப் பார்ப்பனர்.

2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி பற்றிய விபரங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ரூபம் ஜெயின், டாம் லசெட்டர் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

”இந்துக்கள்தான் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப்பதற்குப் பொருத்தமான வகையில் புதைபொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வுகளையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.
”கமிட்டியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றிய பிறகு, அதன் பரிந்துரைகளைப் பள்ளிக் கல்வியிலும், ஆராய்ச்சித் துறைகளிலும் சேர்க்குமாறு மனித வளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்போம்” என்று கூறுகிறார் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா.

”கலாச்சார அமைச்சகம் பரிந்துரைக்கும் எல்லா விஷயங்களையும் அக்கறையோடு அமல்படுத்துவோம்” என்கிறார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யாவைத் தொடர்பு கொண்ட போது, ”இந்திய வரலாற்றின் உண்மையான நிறம் காவி. கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்” என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்று ஆய்வுப் பிரிவின் தலைவர் பால்முகுந்த் பாண்டே, ”இந்து நூல்கள் கற்பனை அல்ல, உண்மை என்று நிரூபித்து, இந்தியாவின் கடந்த காலப் பெருமையை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

முஸ்லீம்களும், கிருத்துவர்களும் இந்து கலாச்சாரத்தை ஏற்று, இந்துக்களின் தயவில் வாழ வேண்டும் என்ற பாசிச அரசியலைத் திணிப்பதற்குப் பார்ப்பன மதம்தான் இந்தியாவின் மதம் என்று நிரூபிப்பது அடிப்படை தேவையாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும், பழங்குடி மக்கள், உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளை இந்துமதம் உள்வாங்கிச் செரிக்க முயற்சித்திருக்கிறது என்பதையும் மறைப்பது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

எனவேதான், பார்ப்பனர்களின் வேத பாராயணம் போல, ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் எது அன்றாடம் போதிக்கப்படுகிறதோ, அதையெல்லாம் மாணவர்கள் அனைவர் மீதும் திணிப்பதன் மூலம் எல்லாப் பள்ளிகளையும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

”இந்துக்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அறிவையும், ஞானத்தையும் கொண்டு சென்றவர்கள். பழங்கால இந்தியாவிலிருந்து அறிவு முதலில் எகிப்துக்குப் போய், அங்கிருந்து ரோமாபுரிக்கும், ஐரோப்பாவுக்கும் பரவி, இறுதியாக அமெரிக்காவைச் சென்றடைந்தது” என்று சாதிக்கிறார்கள்.

கிருஷ்ணனும், அர்ஜுனனும் அஸ்வதாரி (நீராவிக் கப்பல்) ஒன்றின் மீது ஏறிப் பாதாள உலகத்துக்குச் (அமெரிக்கா) சென்றார்கள். உலோபி என்ற பாதாள மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், அர்ஜுனன் என்று மகாபாரதத்தில் இருப்பதால், அந்தக் காலத்து மக்கள் வெளிநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் போய் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அனுமார் என்பவர் இராமாயணத்தில் சஞ்சீவி மலையை இலங்கைக்குத் தூக்கிச் சென்ற பலசாலி என்று நம்பும் வைணவர்கள் பலர் இருக்கிறார்கள். அனுமான் ஒரு சிரஞ்சீவி, அவனுக்கு இறப்பே இல்லை. எங்கெல்லாம் இராமனின் கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் வந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பான் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அது வரையில் அத்தகைய மூட நம்பிக்கை அவர்களது தனிப்பட்ட விவகாரம்.

ஆனால், பாபர் மசூதிக்குள் 1949-இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986-இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி (கே.எம்.பாண்டே), நீதிமன்ற அறையில் மேற்கூரையில் குரங்கு வடிவில் அனுமார் அமர்ந்திருந்தார் என்று நம்பும்போது, நீதிபதியின் அந்த நம்பிக்கைதான் தீர்ப்பைத் தீர்மானிக்கிறது.

”பிள்ளையாருக்கு யானைத் தலை பொருத்தப்பட்டிருப்பது நமது முன்னோர்கள் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று இந்திய அறிவியல் காங்கிரசில் மோடி பேசினாரே, நாம் முட்டாள்தனமாகப் பேசுகிறோம் என்று தெரிந்தா அவர் பேசினார்? நம் முன்னோர்கள் மனித உடலில் யானைத் தலையை ஒட்டவைக்கும் அளவுக்கு அறிவியலில் முன்னேறியிருந்தார்கள் என்று மோடி உண்மையிலேயே நம்புகிறார். விஞ்ஞானிகளையும் அவ்வாறே நம்பச் சொல்கிறார். பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு நபர், இத்தகைய அடிமுட்டாளாக இருக்கும்போது அதன் சமூக விளைவு எத்தகையதாக இருக்கும்?

மாணவ சமுதாயம் முழுவதையும் அந்த மட்டத்துக்கு இறக்குவதாகத்தான் இருக்கும்.

* * * * *

ரலாறு என்பது பைபிள், குரான் அல்லது வேத புராணங்களில் சொல்லப்படும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதல்ல. அறிவியல் அணுகுமுறையின் மூலம் பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சரிபார்த்து, அவற்றுக்கிடையேயான இணைப்புகளைப் பொருத்திப் பார்த்து, படிப்படியாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி உருவாக்கப்பட்டதுதான் இன்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான வரலாறு.

வரலாற்று ஆய்வு என்பது இலக்கிய ஆதாரங்கள் (வேதங்கள், சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள்), கல்வெட்டுகள், புதைபொருள் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நிறுவப்படுவதாகும். சமீப காலங்களில் மரபணு ஆய்வு மூலமாகவும் மனித குலத்தின் வரலாற்று நகர்வுகள் பற்றிய முடிவுகள் முன் வைக்கப்படுகின்றன.

இப்போதைய நமது வரலாற்று அறிவு என்பது கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை உறுதி செய்தும், மறுத்தும், மற்ற ஆய்வாளர்களுடனான வாத பிரதிவாதங்கள், விமர்சனங்கள், கருத்து பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டும் உருவாகியிருக்கிறது.

சங்கப் பரிவாரம் கூறும் வரலாற்றின்படி இராமாயணம் நடந்த திரேதா யுகத்தைத் தொடர்ந்து 8.4 இலட்சம் ஆண்டுகள் துவாபர யுகம் நீடித்தது (மகாபாரதம்) பாண்டவர்களின் ஆட்சிக்குப் பிறகு தொடங்கிய கலியுகம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை திரட்டப்பட்ட புதைபொருள் ஆய்வுகளோ, மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரீக நிலைக்கு மாறியதே சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், பாரதத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நாகரீகம் இருந்தது என்று சொன்னால், உலகம் இந்தப் பார்ப்பனக் கும்பலைப் பார்த்து சிரிக்கும். எனவேதான், மேலே சொன்ன கமிட்டியின் ஆய்வை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து நாகரீகத்தைப் பற்றிய ஆய்வு என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் புதிய திட்டம் இல்லை.

1977-ல் ஜனதா ஆட்சியில் பங்கேற்றபோதே இந்துத்துவாதிகள் தங்கள் நம்பிக்கைக்குப் புறம்பான வரலாற்று நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

வாஜ்பாயி பிரதமராக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முரளி மனோகர் ஜோஷி மனித வளத்துறை அமைச்சராக இருந்தபோது பாடப் புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி தொடங்கப்பட்டது. அதில் சிந்து சமவெளி நாகரீகம் என்பதை சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று மாற்றியிருந்தனர். சிந்து என்ற உண்மையான ஆற்றை, சரஸ்வதி என்ற அவர்களது கற்பனையோடு இணைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.

தீனாநாத் பத்ரா எழுதிய புத்தகங்கள் குஜராத்திலும் அரியானாவிலும் பாடப் புத்தகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இராஜஸ்தானில் வரலாற்றுப் புத்தகங்கள் ஏற்கனவே திருத்தி எழுதப்பட்டு விட்டன.

19-ஆம் நூற்றாண்டில் சனாதன பார்ப்பன மதத்தை இந்து மதம் என்ற புதிய மொந்தைக்குள் அடைத்தவர்களுள் முக்கியமான ஒருவரான தயானந்த சரஸ்வதி, கிருத்துவ பாதிரியார்களை எதிர்த்து வாதிடுவதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார். பைபிள் சொல்லும் பரம்பரை காலக்கோடு ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை மட்டுமே நீளும் போது, இந்து புராணங்களில் சொல்லப்படும் கல்பகோடி யுகங்கள், பூமி 400-500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று நிலவியல் (geology) சொல்வதுடன் ஒத்துப்போவதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

இப்படி இந்துத்துவவாதிகள் அறிவியலைத் தமது நோக்கத்துக்கு ஒருபுறம் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்னொருபுறம், வேதங்களின் காலம் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மொழியியல் அறிஞர்கள் சொன்னால், அதை ஐரோப்பிய கிருத்துவ சதி என்று கூக்குரல் எழுப்புவார்கள்.

புஷ்பக விமானம் பண்டைய இந்தியாவில் விமான போக்குவரத்து இருந்ததற்கான ஆதாரம், பிரும்மாஸ்திரம்தான் அணுகுண்டு என எல்லாமே வேதங்களிலும், இதிகாசங்களிலும் இருந்ததாக அவிழ்த்துவிடும் வேலையை மிகவும் திறம்படச் செய்தவர் செத்துப்போன மூத்த சங்கராச்சாரி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

குவாண்டம் இயற்பியலின் நிச்சயமின்மை கோட்பாட்டை முன்வைத்த ஜெர்மனியைச் சேர்ந்த ஹைசன்பர்க், அதை வேதங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டார் என்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஹைசன்பர்க் வேதங்களைப் படித்ததே இல்லை என்று சுட்டிக்காட்டியதும், அவர் தாகூரிடம் ஒரு முறை பேசியிருக்கிறார், அதிலிருந்து வேதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார் என்று சாதித்தனர். ஆனால், ஹைசன்பர்க் தாகூரைச் சந்திப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிச்சயமின்மை கோட்பாட்டை உருவாக்கி வெளியிட்டிருந்தார்.

இப்போது ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டை விஞ்சுகின்ற அறிவு வேதங்களில் இருக்கிறது என்று ஹாக்கிங் கூறியதாக அவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன். ஹாக்கிங் இவ்வாறெல்லாம் சொன்னதில்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றனர் ஹாக்கிங் அறக்கட்டளையினர்.

அறிவியலாளர்கள் மாநாட்டில் ஹர்ஷ் வர்த்தன் இப்படி பேசியிருப்பது குறித்து நோபல் பரிசு பெற்ற வேதியியல் ஆய்வாளரும் இலண்டன் ராயல் சொசைட்டி ஆப் சயின்ஸின் தலைவருமான வெங்கி. ராமகிருஷ்ணனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
”நான் ஏதாவது கருத்து சொன்னால், உடனே என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகிவிட்டவன் என்பார்கள். அறிவின் மிகப்பெரிய எதிரி, அறியாமையல்ல. தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங். அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். என்னிடம் கருத்து கேட்பது இருக்கட்டும். இந்தியாவில் ஒன்றுக்கு மூன்று அறிவியல் கழகங்கள் இருக்கின்றனவே, அமைச்சரின் பேச்சு பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களைக் கேளுங்கள்” என்றாராம் ராமகிருஷ்ணன்.

இதுதான் நம் கவனத்துக்குரியது. பாடத்திட்டத்தை இந்துத்துவ மயமாக்குவது பற்றி ராய்டர் எழுதுகிறது. ஹர்ஷ்வர்த்தனின் உளறல் பற்றி ராமகிருஷ்ணன் கருத்து சொல்கிறார். ஆனால், இங்கிருக்கும் அறிவியலாளர்கள் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? அவர்களுடைய மவுனம்தான் பாசிசத்துக்கு வாசிக்கப்படும் வரவேற்புரை.

– சாக்கியன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

நூல் அறிமுகம் : நியூட்ரினோ திட்டம் மலையளவு ஆபத்து !

யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை மிகுந்த சூழலுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தேனி நியூட்ரினோ ஆய்வகத்தைக் குறித்து விளக்குகிறது இப்புத்தகம்.

முறையற்ற சூழல் அனுமதி தொடங்கி பல்வேறு குளறுபடிகளுடன் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட காத்திருக்கும் இத்திட்டம் மக்கள் விரோத – சூழல் விரோத – அழிவு அறிவியலின் ஒரு அங்கம் என்பதை அறிவியலாளர்கள், சூழியலாளர்கள் இப்புத்தகத்தில் விவரிக்கின்றனர்.

நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வை எதற்காக மேற்கொள்கிறார்கள்? நியூட்ரினோ ஆய்வை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறார்கள்? இதனால் உடனடியாக ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? எதிர்காலத்தில் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்களா? முறையான சூழலியல் அனுமதி இல்லாமல் அவசரகதியில் கொள்ளைப்புறமாக இத்திட்டத்தை கொண்டுவருவதன் பின்னணி என்ன? அணுஉலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கதிர்வீச்சுத் தன்மையுடைய அணுக்கழிவுகளை பூமிக்கடியில் சேமிக்கும், ஆழ் புவிசார் கிடங்கு அமைப்பதற்குத்தான் குகை தோண்டப் போகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது, இச்சிறுநூல்.

‘’நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனிமாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப்பெரிய அளவுள்ள காந்தமயப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.’’

‘’நமது உடல், நாம் பயன்படுத்தும் பொருள் வெளி என எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது நியூட்ரினோ. ஒரு பேனாவின் மூலம் வைக்கப்படும் புள்ளியில் இரண்டு லட்சம் கோடி நியூட்ரினோ இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சொடக்கு போடும் நேரத்தில் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலில் புகுந்து வெளியேறிக் கொண்டுள்ளது. உடலை மட்டுமல்ல பூமியையே துளைத்து சென்று கொண்டும், வந்து கொண்டும் உள்ளது.’’

‘’இந்தத்திட்டம் ஒரு அடிப்படை அறிவியல் திட்டமென்றும் எதிர்காலத்தில் பல புதிய எல்லைகளைத் திறக்கும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. சார்பியல் தத்துவம் அறிவியல் சூத்திரம்தான். அதை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் உலகத்தின் ஒப்பற்ற விஞ்ஞானிதான். ஆனால் அவர் கண்டுபிடித்த அந்த அடிப்படை சூத்திரத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும்  3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.’’

இந்நூலில் விரவிக்கிடக்கும் பிரமிப்பூட்டும் விவரங்களும் அறிவியல் உண்மைகளும் நியூட்ரினோவிற்கு எதிராக வினையாற்றத் தூண்டுகின்றன.

நூல்: நியூட்ரினோ திட்டம்: மலையளவு ஆபத்து

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.
பேச: 9094990900

பக்கங்கள்: 64
விலை: ரூ.50.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

வினவு செய்திப் பிரிவு

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!

லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று ! புதுச்சேரியில் லெனின் பிறந்த நாள் விழா !

ப்ரல்-22 பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் பிறந்த நாளை, புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் தொழிற்பேட்டைப் பகுதியிலுள்ள தொழிற்சங்க அலுவலகத்தின் முன் முழக்கமிட்டு, பிரசுரங்கள் விநியோகித்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  திருவிழாவாக கொண்டாடினர்.

பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாகப் புறப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், வில்லியனூர் என தொழிற்சாலைப் பகுதிகள், தொழிலாளர் குடியிருப்புக்கள், நகரப் பகுதிகளில் முழக்கமிட்டுச் சென்று வழி நெடுகிலும் உள்ள மக்களுக்கு லெனினைப் பற்றி விளக்கியும், அது தொடர்பான பிரசுரங்களை விநியோகித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

‘’தொழிலாளி வர்க்கம் தன் மீதான உழைப்பு சுரண்டலிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், முதலாளித்துவம் ஒழிய வேண்டும். முதலாளித்துவத்தின் ஆன்மாவாக உள்ள மூலதனக் குவியல் ஒழிய வேண்டும். உழைப்பும், அதனால் கிடைக்கும் லாபமும் சமூகமயமாக்கப்பட வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவினார் மாமேதை காரல் மார்க்ஸ்.

உலகை வியாக்கியானம் செய்யும் மற்ற தத்துவங்களைப் போன்றது அல்ல மார்க்சியம். அது உலகையே மாற்றுவதற்குரிய தத்துவம் என்பதை உழைக்கும் மக்களைப் பாட்டாளி வர்க்கமாக ஒன்று திரட்டி மாபெரும் ரசியப் புரட்சியின் மூலம் நடைமுறையில் சாதித்துக் காட்டினார் தோழர் லெனின். உழைப்புச் சுரண்டலை ஒழித்து, லாபத்தை சமூகமயமாக்கியதன் மூலம், அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை, அனைவருக்கும் கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஆண் பெண் சமத்துவம் உள்ளிட்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியது லெனின் தலைமையிலான சோசலிச ரசியா.

இன்று ஆட்குறைப்பு, வேலைபறிப்பு, வேலை நேரம் அதிகரிப்பு, கூலி குறைப்பு என உழைப்புச் சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் மீதான ஒடுக்குமுறைகளும் இன்று பல்கிப் பெருகி, வாழ்வதே பெரும் பாடாக உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு, உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுபட வழிகாட்டிய ஆசானாக, தலைவனாக, தோழனாக லெனின் நமக்குத் தேவைப்படுகிறார்.

லெனின் தேவை, அவரது படங்களாக, உருவங்களாக, சிலைகளாக இருப்பதால் மட்டும் பூர்த்தியாகி விடுவதில்லை. சிந்தனையாக இருக்கும் போது, அது செயலாக மாறும் போது தான் பூர்த்தியடைகிறது.

லெனினைப் பற்று ! லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று !’’ என லெனின் பிறந்தநாள் கொண்டாங்களின் வாயிலாகத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது, பு.ஜ.தொ.மு.

This slideshow requires JavaScript.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி
தொடர்புக்கு: 9597789801

நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

0

நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

டிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழகமெங்கும் பல காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பா.ஜ.க. இளைஞரணிக்காரர் புகார் கொடுத்த மறுநாளே திருச்சியில் தோழர் கோவனை வீடு புகுந்து இழுத்துச்சென்ற தமிழக போலீசு, பத்திரிகையாளர் சமூகமே புகார் கொடுத்த பின்னரும், மயிலாப்பூர் சேகர் வீட்டு வாயிற்படியையே மிதிக்கவில்லை.

அதே நேரத்தில் குற்றத்தை எதிர்த்த பத்திரிகையாளர்கள் மீதான நடவடிக்கை மட்டும் வேகம் பிடித்திருக்கிறது. சேகர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையினர் நியூஸ் 18 தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பலர் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவர் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற பத்திரிகையாளர்களை அந்தந்த நிர்வாகங்கள் பாராட்டியிருக்கும் போது, நியூஸ் 18 நிர்வாகம் மட்டும் தண்டிப்பதற்கு விரும்புகிறதா?

பார்ப்பன திமிரின் தொடர்ச்சியாக எஸ்.வி.சேகர்.

அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை பத்திரிகையாளர்கள் மீதான நிர்வாக ரீதியான நடவடிக்கையாக நாம் பார்க்கக் கூடாது. அதனை பா.ஜ.க.-வின் உத்தரவுக்கிணங்க எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.

ஆண்டாள் பிரச்சனை, பெரியார் சிலை உடைப்பு, ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் நியமனங்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் “தாத்தா”வின் நடவடிக்கை, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவர் மனைவி மக்களையும் இழிவு படுத்திய எச்.ராஜாவின் பதிவு, காவிரி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மக்களை அவமதிக்கும் சுப்பிரமணியசாமியின் கருத்துகள், புதிய தலைமுறை செந்தில் நடத்திய நேர்காணலில் எஸ்.வி.சேகர் அவருக்கு எதிராக வெளிப்படுத்திய பார்ப்பனத் திமிர், துக்ளக் குருமூர்த்தியின் எழுத்துகள்.. ஆகிய அனைத்தின் தொடர்ச்சிதான் சா.திருமலை அலையஸ் எஸ்.வி.சேகரின் பதிவு.

எனவே, ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த நிறுவனம், என்ன முகாந்திரத்தின் பேரில் நடவடிக்கை எடுத்தாலும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தின் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடவேண்டும். இது பத்திரிகையாளர்களுடைய பணிப்பாதுகாப்பு குறித்த தொழிற்சங்க பிரச்சினை அல்ல. தமிழ்ச் சமூகத்தை இந்துத்துவ பாசிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை.

***

போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக சங்கி டிரோல்கள் நடத்தும் தாக்குதல் ஒருபுறம் இருக்க, பத்ரிகா தர்மம் என்ற பெயரிலும் நிறுவனத்தின் ஒழுங்கு என்ற பெயரிலும் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. நாம் செய்தது தவறுதானோ என்ற குற்றவுணர்வுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக கேள்வி எழுப்பும் அருகதை நிர்வாகத்தினருக்கு உண்டா என்ற கேள்விக்கு முதலில் பதில் தேவை. தொலைக்காட்சி நிறுவனங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கான நேர்முகம் படுக்கையறையில்தான் நடக்கிறது என்று எழுதி, எல்லா தொலைக்காட்சிகளையும், அவற்றின் ஊழியர்களையும் இழிவுபடுத்தியிருக்கும் இந்த பொறுக்கிகளுக்கு எதிராக நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சேகர் மீதும், தன்னுடைய நண்பர் என்று சேகரால் உரிமை பாராட்டப்படும் திருமலை மீதும் குறைந்த பட்சம் ஒரு போலீசு புகாரைக் கூட கொடுப்பதற்குத் திராணியில்லாத ஒரு நிர்வாகத்துக்கு, தனது ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அருகதை உண்டா?

இந்நிறுவனங்கள் பத்திரிகையாளர்களின் உழைப்புக்குத்தான் ஊதியம் கொடுக்கின்றனவேயன்றி, பா.ஜ.க. பொறுக்கிகளின் பேச்சையெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டு போவதற்கு அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக, தொழிலாளிகளின் மானத்தையும் சுயமரியாதையையும் விலை பேசுவதை பத்திரிகையாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

***

ன்று இந்தியாவில் இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் மாநிலமாக இருப்பது தமிழகம். ஊடக முதலாளிகளின் நெருக்குதலையும், பா.ஜ.க. வினரின் திரைமறைவு அழுத்தங்களையும் மீறி சங்க பரிவாரத்தின் அரசியலுக்கு எதிரான குரல் ஒலிக்கின்ற ஒரு களமாக தமிழ்த் தொலைக்காட்சிகள் இன்னமும் இருக்கின்றன. இன்று இந்த ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்பட்டால், விரைவிலேயே தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தந்தி டி.வி.-யாக மாறிவிடும். அப்படி மாற்றுவதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.

எஸ்.வி.சேகரின் மனசாட்சியான மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன்.

சங்க பரிவாரத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் விதத்தில், “ஆங்கில-மேட்டுக்குடி-அதிகாரத் தாழ்வார“ பத்திரிகையாளர்கள் சிலர் வேலை செய்கின்றனர். அவர்களுடைய இலக்கில் நியூஸ் 18 தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி சங்கபரிவாரங்கள் விரும்பாத சில பத்திரிகையாளர்களும் இருப்பதாகத் தெரிகிறது. எந்தக் காயை யார் என்ன நோக்கத்துக்காக நகர்த்துகிறார்கள் என்பதை இப்போது நாம் ஊகிக்க முடியாது. ஊகங்களை விட்டுவிடுவோம். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு வருவோம்.

ஊடகத்துறை அறம் பற்றி பெரிதும் கவலைப்படுகிறார் மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன். சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பிராம்மண சமூஹம் நடத்திய மனிதச் சங்கிலியின் ஒரு முனையில் எஸ்.வி.சேகர் இருந்தாரென்றால் இன்னொரு முனையில் இருந்தவர் இவர். சங்கராச்சாரியை நிரபராதியாக காண முடிந்தவருக்கு கல்லெறிந்தவர்கள் குற்றவாளிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.

சந்தியா ரவிசங்கர் என்ற அம்மையார் பத்திரிகையாளர் சமூகத்தின் சார்பில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்த விவேக் எப்படி சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்பதை விளக்கி ஆங்கில தி இந்துவில் உருக்கமான ஒரு கட்டுரை எழுதியவர்  இவர். பார்க்க வினவு கட்டுரை . விவேக்கை உழைப்பால் உயர்ந்த உத்தமராக கருதுபவருக்கு பத்திரிகையாளர்கள் ரவுடிகளாகத்தானே தெரிய வேண்டும்.

இவை இரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கூட்டத்தைத் தவிர, ஊரகப் பகுதி பத்திரிகையாளர்கள் யாரும் மேற்படி “கல்லெறி” சம்பவத்தை கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்கவே செய்கிறார்கள்.

***

ல்லெறி என்பது தீவிரமான எதிர்ப்புணர்வின் ஒரு வடிவம். எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்த அந்த வக்கிரத்தை ஒரு பெண்ணிடம் யாரேனும் நேரில் பேசியிருந்தால், சேகருக்கு விழுந்திருக்கக் கூடிய தர்ம அடியை எண்ணிப் பார்த்தால் அதில் ஒரு விழுக்காடு கூடக் காணாது இந்தக் கல்லடி.

கல் எறிந்தது சட்ட விரோதமாம். உண்மைதான். ஆனால் இன்று தமிழகத்தில் நடப்பதும், டில்லியில் நடப்பதும் சட்டவிரோத ஆட்சிகள்தானே. சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வழக்கிற்குப் பின்னரும், அசீமானந்தா, மாயா கோத்னானி விடுதலைக்குப் பின்னரும் லோயா தீர்ப்புக்குப் பின்னரும் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? இந்த தீர்ப்புகள் மீது கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுகிறார் ரவிசங்கர் பிரசாத். இந்த தீர்ப்புகளின் மீது கல்லெறிவதையும் நிறுத்திக் கொள்வோமா?

எச்ச ராஜாவின் திமிருக்கு சிறப்பு கவரேஜ் கொடுக்கும் ஊடகங்கள்!

பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, குஜராத் படுகொலை வரை ஒரு நீண்ட சட்டவிரோதக் கொலைக்குற்றங்களின் மூலம் ஆட்சிக்கு வந்திருக்கும் பாசிசக் கிரிமினல்கள்தான் சங்க பரிவாரத்தினர். சட்டத்தின் ஆட்சி என்று நடிப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி. சட்டவிரோதக் கொலைகள், கலவரங்களை அரங்கேற்ற சங்க பரிவாரம். பிறகு பரிவாரத்தின் குற்றங்களை சேனல்களில் அமர்ந்து நியாயப்படுத்த ராகவன்கள், நாராயணன்கள்.

“எச்.ராசா கள்ள உறவுன்னுதான் சொல்லியிருக்கார். யார் பெயரையும் சொல்லலியே” என்று விவாதத்தில் தி.மு.க.வினரை நக்கல் செய்கிறார் ராகவன். “ஆசிபாவைக் கொன்றது ரோஹிங்யா முஸ்லிம்கள்தான்” என்கிறார்கள் பா.ஜ.க. ஊடகப் பிரதிநிதிகள். எத்தனை ஆண்டுகளாக தொடர்கிறது இந்த நாடகம்?

அன்று பத்திரிகையாளர்கள் வீசிய கல் சேகர் வீட்டின் மீது எறியப்பட்ட கல் மட்டுமல்ல, இந்த நாடகத்தின் மீது எறியப்பட்ட கல்.

***

ல்லை மட்டும் எறியாமல் இருந்திருந்தால்….  என்று பத்திரிகையாளர்களிடம் சொல்பவர்கள், அதை டாஸ்மாக் கடையை உடைக்கும் பெண்களிடம் சொல்வார்களா? மணல் லாரிகளை சிறைப் பிடிக்கும் மக்களிடம் சொல்வார்களா? ஓ.என்.ஜி.சி யைத் தடுத்து நிறுத்தும் விவசாயிகளிடம் சொல்வார்களா? இவர்கள் தமிழிசையிடம் மனுக் கொடுத்ததைப் போல, அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறு டாஸ்மாக்கை எதிர்த்து நிற்கும் பெண்களிடம் இவர்கள் சொல்வார்களா?

சட்டத்தை நம்பி, அதற்கு அடங்கி நடந்து பயனில்லை என்று தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, தமக்கே உரிய முறைகளில் சட்டத்தை மீறி மக்கள் நடத்தும் போராட்டங்களைத்தான் எல்லா தொலைக்காட்சிகளும் அன்றாடம் ஒளிபரப்புகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்தும் தாம் சொல்லிக் கொள்ளும் நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேறு எங்கும் போகத் தேவையில்லை. மற்றெல்லோரையும் விட இந்த உண்மை புரிந்தவர்கள் பத்திரிகையாளர்கள்தான். தொலைக்காட்சி விவாதங்கள் இந்த உண்மையைத்தான் அன்றாடம் நிறுவுகின்றன.

இப்படிக் குமுறி வெடிக்கின்ற மக்களுடைய கோபத்தின் இன்னொரு வடிவம்தான் பத்திரிகையாளர்களின் கல்வீச்சு. இது ஆண்டாள் விவகாரத்தின்போதே வீசியிருக்கவேண்டிய கல், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவுடன் வீசியிருக்க வேண்டிய கல். மேலாண்மை வாரியத்துக்கு கைவிரித்தவுடன், தி.மு.க. தலைவரின் குடும்பத்தை இழிவு படுத்தியவுடன் வீசப்பட்டிருக்க வேண்டிய கல்.

***

சிலர், இந்தக் கல்வீச்சை புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையெனக் விளக்குகிறார்கள். கல்லை வீசியவர்களுக்குத்தான் பாதிப்பு என்று லாபநட்டக் கணக்குப் போட்டு அறிவுரை சொல்கிறார்கள். இந்த அறிவுரைகள் நிர்மலாதேவி மாணவிகளுக்கு வழங்கும் அறிவுரையுடன் அதிசயிக்கத்தக்க முறையில் ஒத்துப் போகின்றன.

போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அதன் விளைவுகள் குறித்து யோசித்துக் கொள்ளவேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால், “இந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு, அந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு” என்று யோசிப்பவர்கள் எந்தக் காலத்திலும் எந்தக் கோட்டையும் தாண்டுவதில்லை.

இந்தக் கல்வீச்சு எதை சாதிக்கவில்லையென்றாலும், “அனுமதிக்கப்பட்ட எதிர்ப்பு முறைகள்” என்ற கோட்டைத் தாண்டியிருக்கிறதே அதுதான் மிக முக்கியமான சாதனை.

இந்த சட்டங்களும் அரசும் எதிரிகளை தண்டிக்கப் போவதில்லை என்பது தெளிவான பிறகு, புதிய போராட்ட முறைகளை நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும். சட்ட வரம்புகள், அவற்றின் மீதான அச்சம், புனித கற்பிதங்கள் ஆகியவற்றை நாம் மதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் எதிரிகள் நிம்மதியாக இருக்க முடியும். பத்திரிகையாளர்கள் அந்தக் கோட்டைத் தாண்டிய காரணத்தினால்தான் சில நாட்களுக்காவது சேகர் தலைமறைவாக வேண்டிய நிலை வந்திருக்கிறது.

ஆகப்பெரிய புத்திசாலிகளாகிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே எல்லைக் கோடுகளை மீறி தெருவுக்கு வந்து கல்லெறியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, பத்திரிகையாளர்கள் எம்மாத்திரம்?

***

ரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர் சமூகத்துக்கு என்ன நடந்ததோ அதுதான் இன்று தமிழக பத்திரிகையாளர்களுக்கும் நடக்கிறது. வழக்கறிஞர் சமூகம் வீதியில் இறங்கிப் போராடுவதென்பது இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எங்கும் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதபோது, அந்த  நியமனத்தையே நிறுத்தியதும் வேறு எங்கும் இல்லை. சுப்ரீம் கோர்ட் என்பதே சுப்பிரமணியசாமி கோர்ட்டுதான் என்ற அளவுக்கு செல்வாக்கு பெற்ற சு.சாமியை நீதிமன்ற அறைக்குள் வைத்தே முட்டையால் அடித்ததும் வேறு எங்கும் இல்லை. கிரானைட், தாதுமணல் கொள்ளைக்கு ஆதரவாக வழங்கப்பட்ட முறைகேடான தீர்ப்புகளையும், அவற்றை வழங்கிய நீதிபதிகளையும் பற்றி ஊழல் புகார் கொடுத்து பயனில்லாத நிலையில் 1500 வழக்கறிஞர்கள் பகிரங்கமாக (மதுரையில்) பேரணி நடத்தியதும் இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை.

கர்நாடகாவில் செருப்படி

இன்று பத்திரிகையாளர்களை குற்றம் சொல்லும் மேட்டுக்குடி ஜர்னலிஸ்டுகளைப் போலவே, மேட்டுக்குடி வக்கீல்களும் தமிழக வழக்கறிஞர்களைக் குற்றம் சொன்னார்கள். தகுதியற்றவர்கள் வக்கீலாகிவிடுவதாக அங்கலாய்த்தார்கள். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் பல வழக்கறிஞர்களுக்கு விசாரணையே இல்லாமல் வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில். இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்தியப் படையைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இன்று உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் ஒடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். நீதிபதிகளின் மர்ம மரணத்தைப் பார்க்கிறோம்.

***

சித்தார்த் வரதராஜன், புரொபீர் புர்காயஸ்தா, கிருஷ்ணபிரசாத், ஹரிஷ் கரே, பாபி கோஷ் ஆகிய பத்திரிகையாளர்கள் கல்லெறிந்த காரணத்தால் வெளியேற்றப்படவில்லை. கவுரி லங்கேஷ் கல்லெறிந்த குற்றத்துக்காக படுகொலை செய்யப்படவில்லை.

இன்று போராடும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துகளிலும் சரி, அன்று தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளிலும் சரி சாதியக் காழ்ப்பும், மேட்டுக்குடி மனோபாவமும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. இவ்வாறு கருத்து தெரிவிப்போர் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் சங்க பரிவார எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிராக, இயல்பாக, நேர்மையாகப் போராடிய இளம் பத்திரிகையாளர்களைக் காவு கொடுப்பதற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் எதிரிகளுக்குத்தான் துணை நிற்கிறார்கள். இப்போது தேவைப்படுவது பத்திரிகையாளர்களின் ஒற்றுமையல்ல, பிளவு.

காவிரி, நியூட்ரினோ, ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன், நீட், இந்தித்திணிப்பு ஆகியவை மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் பணிநீக்கமும் இனி தமிழ்ச்சமூகத்தின் பிரச்சனைதான்.

பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!

  • வினவு

எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை

மிழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2017 – ஆம் ஆண்டின்படி 518. அதில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து ஐநூறு. எண்பத்தி ஒன்பது ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேரவில்லை. இது அரசே கொடுத்த புள்ளி விவரம்.

சென்ற 2017-ம் ஆண்டு நீட் தேர்வு குழப்பத்தால் பத்தாயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக சேர்ந்து விட்டனர். இந்த ஆண்டு தனியார் கல்லூரிகள் திகிலில் இருக்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு இந்து பத்திரிகை போன்ற ‘மதிப்பு’ மிக்க ஊடகங்கள் துணை நிற்கின்றன. இப்படியாக ஊடகங்களும், சுயநிதிக் கல்லூரி முதலாளிகளும் சந்தையை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் டிரேட் சென்டர் – வர்த்தக மையத்தில் வரும் நாட்களில் மேற்படி கல்வி சந்தைக்கான கண்காட்சியை அடிக்கடி காணலாம். அப்படி ஒரு கண்காட்சிக்கு வினவு செய்தியாளர்கள் சென்றிருந்தார்கள்.

சென்னை வர்த்த மையத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரம். குழப்பத்திலிருந்து விடுதலையா, குழப்பத்தை வைத்து வழிப்பறியா?

சிவராமகிருஷ்ணன். தாம்பரம், தனியார் நிறுவன ஊழியர், ‘’பொண்ணு பிளஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கு. அடுத்து எதை எடுப்பது என்று தெரியாமல் குழப்பமா இருக்கு. இங்க பல கல்லூரிகளின் வசதிகளைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தாலும் நம்ம பசங்க வாங்குற மார்க்குக்கு கவர்மென்ட் கல்லூரியில இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியிலதான் சேர்க்கணும். அதுக்கு இப்பவே எது நல்லதுன்னு தேடுறோம். பணம் செலவானாலும் ஒரு நல்ல கல்லூரியில சேர்த்துட்டோம்ன்ற ஒரு நிம்மதி நமக்கும் கிடைக்கும்.’’
ஹர்ஷிதா, பத்தாம் வகுப்பு மாணவி. ‘’பிளஸ் டூ-வில் எந்தப் பிரிவு எடுக்க வேண்டும், எதற்கு வருங்காலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு வந்திருக்கிறோம். எம்.பி.பி.எஸ். தான் படிக்கணும்னு இல்ல. மருத்துவத்துலயே தொழில்நுட்ப பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். அது சம்பந்தமாக படித்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இன்னும் சுத்தி விசாரிக்க போறோம்.’’
சிவா, தாம்பரம் பிளஸ் டூ மாணவர். ‘’நான் இஞ்சினியரிங் EEE படிக்கணும்னு ஆசை. எந்த காலேஜ்ல சேர்ந்தா நல்லதுன்னு விசாரிக்க வந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு, நேர்காணலின் போது குழப்பம் வரக்கூடாது இல்லையா? அரசு பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைப்பது சந்தேகம்.’’ என்றார்.
சிவக்குமார், காவல்துறை அதிகாரி, மேற்கு சைதாப்பேட்டை. ‘’என் மகள் பெயர் ஆர்த்தி. அவரை (clat) தேசிய சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன். எட்டாவது படிக்கும் போதே இதற்கான முயற்சியில இறங்கிட்டேன். கடந்த இரண்டு வருஷமா சென்னையில ஸ்ரீராம் அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். பெங்களூர் நேசனல் லா காலேஜ்தான் சிறந்தது. அதில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும். போலீஸ் துறையில் இருப்பதால் எனக்கு சட்டம் பற்றி தெரியும். போலீசு நாங்கள் சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும். ஆனால் வக்கீல்கள் சட்டத்தோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்காக இத்துறையில் பொண்ணை எப்படியாவது சேர்த்து விட வேண்டும்.’’
ஜெயசங்கர், ஐயப்பன்தாங்கல். ‘’என் மகள் சோனா, பி.இ. பொறியியல் படிக்க வேண்டும். கல்வித்தரமும், வேலை வாய்ப்பும் வழங்கும் கல்லூரியைத் தேடி வந்திருக்கிறேன். வி.ஐ.டி. அதிகம் பணம் கேட்கிறார்கள். இருந்தாலும் தரம் இருக்கும். என்ன படிக்கிறோம் என்பதைவிட எங்க படிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியமில்லையா!’’

 கார்த்திகேயன், புனித பீட்டர்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி ஆவடி. ‘’மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர். அவருடைய கல்லூரி ஸ்டாலில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ஆள் பிடிப்பதற்கு கல்லூரி நிறுவனம் இவரை அழைத்து வந்துள்ளது. கோட்டுப் போட்டுக்கொண்டு, வரும் பெற்றோர்களிடம் தன் கல்லூரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சொந்த ஊர் கோவில்பட்டி. தந்தை இல்லை. இரண்டு அண்ணன்கள் பாராமரிப்பில் படிக்கிறார். இவர் நான்கு அரியர்ஸ் வைத்துள்ளார். ‘’நீங்களே சரியாக படிக்க முடியவில்லை. நீங்கள் எப்படி மாணவர்களுக்கு ஆசைக்காட்டி சேர்க்கலாம்’’ என்று கேட்டதற்கு, சிரிக்கிறார்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்.

புரோக்கர் நிர்மலாதேவி கைது ! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது ?

0

‘’புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி கைது! சிறை! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது?’’ – என்ற தலைப்பில், ஏப்ரல் 23 அன்று மதுரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார், பேராசிரியர்கள் சீனிவாசன் மற்றும் இரா. முரளி, ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர் லயனல் அந்தோணிராஜ், ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

‘’டாஸ்மாக்கை எதிர்த்து பெண்கள் போராடினால் எட்டி உதைக்கிறது போலீசு. கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் தடியடி நடத்துகிறது போலீசு. சமூக அவலங்களை அம்பலப்படுத்தி பாட்டுப் பாடிய தோழர் கோவனை, கதவை உடைத்து இழுத்துச் செல்கிறது போலீசு. ஆனால் புரோக்கர் வேலை செய்த நிர்மலாதேவிக்கு, ஆவணங்களை அழிக்கவும் உயர்மட்டங்களோடு கலந்துபேசி முடிவுக்கு வருவதற்கும், ஆறு மணி நேரம் அவகாசம் வழங்குகிறது. இதுனுடைய அர்த்தம் என்ன?’’ என்று கேள்வியெழுப்பிய தோழர் ஆனந்த், ‘’மாணவர்கள் சங்கமாக ஒன்று சேராமல் ஒதுங்கிப் போவதால்தான், கேட்பாரற்று இருக்கும் மாணவர்களை அதிகார வர்க்கம் தங்கள் இஷ்டம் போல் வளைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.’’ என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார்  தனது உரையில், ‘’ நிர்மலாதேவியை கைது செய்த போலீசு துணைவேந்தரையும் ஆளுநரையும் இன்னும் ஏன் கைது செய்ய வில்லை?’’  எனக் கேள்வி எழுப்பியவர், ‘’பல்வேறு சிறப்பான பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் கொண்டிருந்த இப்பல்லைக்கழகம், கல்யாணி மதிவாணன் மற்றும் அவருடைய அடிவருடி செல்லத்துரை போன்றவர்களால் சீரழிந்துவிட்டது.  இவர்களை பல்கலைகழகத்திலிருந்து விரட்ட மாணவர்களும் மக்களும் தான் முன்வரவேண்டும்’’ என்றார்.

‘’பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பாலியல் கிரிமினல்களாக உள்ளனர், சிறுமிகளை வல்லுறவு செய்கின்றனர், நாடாளுமன்றத்தில் அதிகமான பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.பிக்களில் பா.ஜ.க. வினர்கள் தான் அதிகம். இந்த கும்பலில் ஒரு ஆளுதான் ஆளுநர் புரோகித்’’  என்றார் ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம்.

” இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் காரிதுப்பும் நிலையில் தான் உள்ளன. தகுதியே இல்லாத செல்லத்துரை போன்ற நபர்கள் துணைவேந்தர்களாக இருந்தால் எப்படி உருப்படும்?’’ எனச் சாடிய பேராசிரியர் சீனிவாசன், ‘’இந்த சம்பவம் நடந்த பிறகு எந்த பொற்றோர்களாவது தன்னுடைய பெண் பிள்ளைகளை பல்கலைகழகங்களுக்கு படிக்க அனுப்ப தைரியம் வருமா? இவர்களுக்கெல்லாம் பெற்றோர்கள் போராசிரியர்கள் மாணவிகள் இணைந்து செருப்படி கொடுத்தால் தான் நம்முடைய குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியும்’’ என்றார்.

பேராசிரியர் இரா. முரளி , தனது உரையில், ‘’ஏதோ ஒரு நகரத்தில் ஆயிரம் பேர் துப்பாக்கியுடன் ஊர்வலம் போகின்றார்கள். மக்களுடைய பிரச்சனைகள் தொடர்ச்சியாக இப்படி தீர்க்கப்படாமல் அதிகரித்து கொண்டே சென்றால் நாமும் இதை போல ஆயுதங்களை தூக்கிக்கொண்டு செல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது’’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

‘’நாம் ஆளுநரை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் உண்மை நிலைமை என்ன? பதவியில் இருக்கக் கூடிய ஆளுநரையோ, நீதிபதிகளையோ, குடியரசுத் தலைவரையோ சட்டப்படி கைது செய்ய முடியாது. இதைத்தாண்டி குற்றம் வெளியே வந்தால் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த புகார்களை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். இந்த சட்ட பாதுகாப்புடன் தான் இவ்வளவு கிரிமினல், பாலியல் அத்துமீறல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த அரசு கட்டமைப்பில் அது சாத்தியமில்லை. இந்த அரசு கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் இணைய வேண்டும் என்று பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனி ராஜ்.

தகவல்: ம.க.இ.க., பு.மா.இ.மு., மதுரை.

காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !

காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை சார்பில் கடந்த ஏப்ரல் – 21 அன்று கல்லணையில் இருந்து தொடங்கியது, மக்கள் அதிகாரம். கல்லணையில் தொடங்கிய இந்நடைபயணம் ஏப்ரல் – 30 அன்று பூம்புகாரில் நிறைவடைகிறது. நடைபயணத்தின் நிறைவையொட்டி, சீர்காழி பகுதியிலுள்ள திருமுல்லைவாசலில் நடைபெறும் என அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மனுவைக் கூட வாங்கிப் பார்க்காமல், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது சீர்காழி போலீசு. ‘’என்ன காரணத்துக்காக அனுமதி மறுக்கிறீர்கள்? எழுதிக் கொடுங்கள்’’ என வாதிட்டனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். ‘’அய்யாகிட்ட பேசிட்டு சொல்றேன்… எஸ்.பி.கிட்ட பேசிட்டு சொல்றேன்’’னு ஏப்ரல்-18 முதல் போக்கு காட்டி வந்தது சீர்காழி போலீசு.

இந்நிலையில், பொதுக்கூட்ட அனுமதி தொடர்பாக போலீசு நிலையம் சென்ற மக்கள் அதிகாரத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி மற்றும் முன்னணியாளர் தோழர் ஸ்டாலின் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது சீர்காழி போலீசு.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியது; காசுமீரத்துச் சிறுமி ஆசிஃபா, பா.ஜ.க. கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சுவரொட்டி ஒட்டியது; ஆகிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும், மேலும் தொடர்ந்து அரசுக்கு எதிராக கலகம் செய்யும் விதமாக செயல்படுவதாலும் இந்தக் கைது நடவடிக்கை என்றது, போலீசு.

சீர்காழி மாஜிஸ்ட்ரேட் முன் தோழர்களை நேர்நிறுத்தியது போலீசு. ‘’போஸ்டர் ஒட்டுவது கூடக் கிரிமினல் குற்றமா?’’ என அங்கேயே வாதிட்டனர், தோழர்கள். சொந்தப் பிணையில் விடுவித்தார் மாஜிஸ்ட்ரேட்.

நெல்வயல்களைப் பாழாக்கும் ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு என்பதும்; பூமியைக் குடைந்து, வருங்காலத் தலைமுறையையே இல்லாதொழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களை கைவிடு என்பதும்; காவிரி நீரின் தமிழக உரிமையை மறுத்து, அரைகுறை வயித்துப்பாட்டுக்கும் வேட்டு வைக்கும் மத்திய அரசின் ஓரவஞ்சனையை கண்டிப்பதும் தேசவிரோதமாகத் தெரிகிறதாம் அரசுக்கு.

இது, தேசவிரோதம் என்றால்; இது கலகம் என்றால் அதைத் தொடர்ந்து செய்வோம்; துணிந்து செய்வோம்!

தகவல்: மக்கள் அதிகாரம்.

எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் ‘’ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளு!!’’ – என்ற கோரிக்கையுடன், தோழர் நிர்மலா தலைமையில் 24-04-2018 அன்று திருச்சி காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் ‘’சென்னையில்தான்  வழக்கு போட்டுட்டாங்களே, நீங்க ஏன் திரும்ப மனு கொடுக்கிறீங்க?’’ என்றார், காவல் ஆணையர். ‘’இந்த ஒரு சம்பவம் என்றில்லை, தொடர்ச்சியாகவே வன்மத்துடனும் வக்கிரமாகவும் கருத்துக்களை வெளியிட்டுவரும் எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்று பதிலளித்தனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

காவல் ஆணையரிடம் வழங்கப்பட்ட மனு:

அனுப்புதல்

ஜெ.நிர்மலா,
மக்கள் அதிகாரம்,
21-சி, என்.என்.என். கட்டிடம்,
காஜாமியான் தெரு,
பாலக்கரை, திருச்சி-1.
பேச:-94454 75157

அடைதல்

உயர்திரு.காவல்துறை ஆணையர் அவர்கள்,
திருச்சி மாநகரம்,  திருச்சி.

அய்யா,

பொருள்:- ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் உள்ளிட்ட பெண்களைமிகக் கேவலமாக சித்தரித்து, தமிழகத்தின் அமைதியை கெடுத்து, வன்முறையைத் தூண்டும்  எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தால் கன்னத்தில் தட்டப்பட்ட ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் என்ற பெண் நிருபர் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் “மதுரை யுனிவர்சிடியும், கவர்னரும் பின்னே கன்னிப் பெண்ணின் கன்னமும்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், “அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள், படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரும்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக் கழகங்களை விடவும் அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான்பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்விக் கேட்க கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான அசிங்கமான அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன் பெரும்பாலான மீடியா ஆட்களே” என்று பதிவிட்டுள்ளார்.

கவர்னரின் செயல் குறித்து உரிய பத்திரிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட கவர்னரும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், மேற்படி பதிவானது ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படுகின்ற பத்திரிக்கை துறையில் பணியாற்றும் பெண்களை அவதூறு செய்வதாக உள்ளது. மேலும் மேற்படி பேஸ்புக் பதிவானது அமைதியை கெடுத்து, வன்முறை தூண்டும் நோக்கம் கொண்டதாகும். ஒரு ஊடகத் துறை பெண்ணையும் அதை முன்னிட்டு ஒட்டு மொத்த பெண் இனத்தையுமே சிறுமைப்படுத்தி பேசியுள்ள இச்செயலை ஒரு ஜனநாயக சமூகம் சகித்துக் கொள்ள முடியாது. ஆணாதிக்க கருத்தியலின் அருவெறுக்கத்தக்க இக்கருத்தை பேசியவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராகவும் சினிமா நடிகராகவும் இருப்பவராவா்.

காஷ்மீர் கதுவா தொடங்கி உ.பி. உன்னாவ் வரை பா.ஜ.க. தலைவர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும் கொலை செய்தும் வந்துள்ள நேரத்தில்… முன்னாள் மேகாலயா கவர்னர் தொடங்கி இந்நாள் தமிழக கவர்னர் வரை பாலியல் விவகாரங்களில் சிக்கி சந்தி சிரித்து வரும் நிலையில்… எஸ்.வி.சேகர் இவ்வாறு பெண்கள் பற்றி மட்டமான கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் கீழ்த்தரமான ஆணாதிக்க கருத்து என்பதுடன் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

வாய்க்கொழுப்பெடுத்து இவ்வாறு பேசியுள்ள எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மனநோயாளிகளின் நிலைக்கு ஆளாகிவிட்ட இப்படிப்பட்ட நபர்கள்  சுதந்திரமாக நடமாடுவதும் கருத்து தெரிவிப்பதும் இனியும் தொடரக்கூடாது என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கருதுகிறோம். எனவே, இவரை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

தமிழக அரசின் தலைமைச்செயலராக இவரது நெருங்கிய உறவினர் இருப்பதால் இவரைக் கைது செய்ய காவல்துறை அஞ்சுவதாக ஊடகங்களில் கருத்து வந்து கொண்டுள்ளது. தவறிழைத்தவர்கள் எத்தகைய செல்வாக்குள்ளவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். எனவே, தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(நிர்மலா)
மக்கள் அதிகாரம், திருச்சி.

தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.

 

காவிரி : திருவாரூரில் நடைபயணம் – தாம்பரத்தில் பொதுக்கூட்டம் !

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணக் குழுத் தோழர்களை வரவேற்கும் விதமாக இன்று (26-04-2018) மாலை 5.00 மணியளவில் திருவாரூர் தைலம்மை திரையரங்கம் எதிரில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மக்கள் அதிகாரம். விவசாய சங்கப் பிரதிநிதிகளும் ஜனநாயக சக்திகளும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

**

‘’காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ், வருகிற ஏப்.28 அன்று சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தியாகு; தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆழி செந்தில்நாதன்; தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை புண்ணியமூர்த்தி; காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திருவாரூர் ஜி.வரதாஜன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

தகவல்: மக்கள் அதிகாரம்.

#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?

பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி. சேகர் வன்மத்துடன் அவதூறு பொழிந்தார். அதை பகிர்ந்தேன், படிக்கவில்லை, மன்னிக்க என்று நாடகமாடினார். இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராடினார்கள். சிலர் பா.ஜ.க அலுவலகத்தில் மனுக் கொடுத்தார்கள். சிலர் அதைத் தாண்டி சேகர் வீட்டின் முன்பு நியாயம் கேட்டு போராடினார்கள். கூடவே அந்த வீட்டுக் கதவின் மீது இரண்டு கற்களை வீசினார்கள். #savetamiljournos

உடனே மேட்டுக்குடி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலருக்கு கோபம் வந்து விட்டது. எப்படி ஒரு பத்த்திரிகையாளர் தனது தொழில் அறத்தை மீறலாம் என்று துள்ளினார்கள். தங்களது கோழைத்தனத்தையே மற்றவரிடம் எதிர்பார்க்கும் இந்த காரியவாதிகள்தான், உண்மையில் ஜெயலலிதா போன்ற ஒடுக்குமுறையாளர்களை இதயத்தில் வைத்து போற்றுபவர்கள்.

இடையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கு ஒரு தொலைக்காட்சி நிர்வாகம் முயல்வதாக செய்தி வந்திருக்கிறது.

பா.ஜ.க தூண்டுதலில், தொலைக்காட்சி நிர்வாகங்கள் அப்படி நீக்கினால் தமிழ் சூழலில் ஒரு பத்திரிகையாளர் மக்கள் நலனோடும், முற்போக்கு பார்வையோடும் செயல்படுவதற்கான இடமே இருக்காது என்பது உண்மை.

தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

*****

Kavin Malar

உரக்கச் சொல்வோம்…
“முதல் கல்லை நாம் எறிந்திருக்கிறோம்”. காலணியை முதலில் கழற்றி எறிந்தது ஒரு பெண் பத்திரிகையாளர்தான். கண்ணில் பொங்கும் நீருடன் அந்தக் காரியத்தைச் செய்தார் அவர். அந்தக் கண்ணீரைவிட பலருக்கு கல்தான் பெரிதாகிவிட்டது.

சொல்லடியைவிட கல்லடி பெரிதல்ல தோழர்களே!

Divya Bharathi

காவேரி நியூஸ் சேனலின் இந்த கம்பீரமான அறிவிப்பு பெரும் நம்பிக்கை தருகிறது. மனதார அந்த நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன். இதுவே ஊடக அறம்.❤
பெரும் டீவி சேனல்கள் காவேரி நியுஸ் சேனலிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்.

பொறுக்கிகளுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து தங்கள் ஊழியர்களை பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் பெரும் டீவி சேனல்களை நினைக்கையில் கேவலமாக இருக்கிறது. ஊடக நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த சேனல்களை ஒட்டுமொத்தமாக நாம் புறக்கணிப்போம்.

மு.வி.நந்தினி

வேளாண் குடும்பப் பின்னணியில்(பெரும்பாலும்) பிறந்து அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்குப் போகாத தலைமுறையில் முதல் ஆளாக கல்லூரிக்குள் நுழைந்து, ஊடகப்பணி என்றால் என்னவென்று தெரியாத பெற்றோரிடம் விளக்கம் கொடுத்து, பத்து ஊடகங்களின் வாசலில் காத்திருந்து, ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்காக இரவு 11 மணி வரை உழைத்து, ஆமாம் திறமையால் மட்டுமெ முன்னேறி, ஏகப்பட்ட ஒடுக்குமுறைகளை சகித்து, வேலையிழந்து, மீண்டும் வேலைகிடைத்து முழுமையாக இல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சமூகத்துக்கா எழுதும் பெண் பத்திரிகையாளர்க(ஆண்களும்தான்)ளை படுத்தால்தான் பிழைக்க முடியும் என அவதூறு செய்தால் சுரணையில்லாமல் இருப்பார்களா?

kural

கல் எறிவது யார்?

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனின் கேள்விக்கு பதிலாக கன்னத்தை தட்டிய ஆளுநரின் சீரழிந்த செயலுக்கு கடுமையன கண்டனம் எழுந்தது. மன்னிப்புக் கேட்டார் ஆளுநர். ஒரு பெண் தன் பணியிடத்தில் தன் விருப்பமில்லாமல் பெண் என்பதற்காகவே ஒரு ஆணால் சீண்டலுக்கு உள்ளாவது தண்டனைக்குரிய குற்றம். மேதகு ஆளுநர் என்ற காரணத்துக்காக மன்னிப்பு கேட்டவுடன் இந்த விவகாரம் கைவிடப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை செய்தியாளரை பாலியல் சீண்டல் பேச்சுக்களை உதிர்த்தபோதும் இதேதான் நடந்தது. ’வருத்தம்’ மட்டுமே தெரிவித்தார் அவர். இதுவே தாரளவாத பத்திரிகையாளர்கள் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் நடந்திருந்தால் தொடர்புடையவர்கள் பதவி விலகலுக்கு உள்ளாகி இருப்பார்கள்.

பாலின சமத்துவம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்நாட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் இரண்டாம்பட்சமான பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒருவேளை, அடுத்தடுத்த நடந்த இந்த இரண்டு பிரச்னைகளையும் பத்திரிகையாளர்கள் மிகத் தீவிரமான எதிர்வினை ஆற்றியிருந்தால், ஆளுநரே மன்னிப்புக் கேட்ட பின்பும், ஆளுநரை நியமித்த பாஜக அரசின் விசுவாசிகள் பெண் பத்திரிகையாளர்களை இத்தனை மோசமாக அவதூறு செய்திருக்க மாட்டார்கள் என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனிடன் ஆளுநர் மன்னிப்பு கேட்டபின் ட்விட்டரில் அவருக்கு எதிராக மிகக் கீழ்த்தரமான பதிவுகள் போடப்பட்டன. பொதுவெளியில் இயங்கும் பெண்கள் பொதுமகளீராகவே இருக்கக்கூடும் என்கிற பழமைவாதிகளின் குரலாக அவை ஒலித்தன. இதையெல்லாம் பாஜகவின் ட்ரோல் படை செய்துகொண்டிருந்தது. இந்த ட்ரோல்கள் குரலை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சினிமா அரசியல் பிரபலமாக அறியப்பட்ட எஸ். வி. சேகர் அகமகிழ்ந்து பகிர்கிறார். (மன்னிப்பு கடித்தத்தில் படிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சொல்வதை அவர் பகிர்ந்திருந்த மூவர்ணகொடியே காட்டிக்கொடுத்துவிடுகிறது).

பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதற்காக ஆளுநர் தன் கையை கழுவ வேண்டும் என்கிற சாதிய மனோநிலையுடன் தொடங்கும் அந்தப் பதிவு பெண் ஊடகவியலாளர் படுக்கையை பகிர்ந்துகொள்ளாமல் முன்னேற முடியாது என சங்கராச்சாரியின் கருத்தை குமட்டி எடுத்து முடிகிறது. இந்தப் பதிவு சில மணி துளிகளிலேயே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி, தன் முகநூல் கணக்கையே முடக்கிவிட்டுப் போய்விட்டார் எஸ். வி. சேகர். ‘குரல்’ அமைப்பு எஸ். வி. சேகர் கைது செய்யப்பட வேண்டும் என முதல் முழக்கத்தை எழுப்பியது. பல பத்திரிகையாளர்கள் இதே கருத்தை காட்டத்துடன் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பல பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் கொடுப்பதென்றும் முடிவெடுக்கின்றன.

மத்திய அரசிலும் மாநில அரசிலும் எஸ். வி. சேகர் ‘செல்வாக்கு’ குறித்து ஊடகவியலாளர்கள் அறியாமல் இருக்க முடியாது. அவரை கைது செய்ய வேண்டும் என்கிற குரலைக்கூட அழுத்தமாக வைக்காமல் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சில ஊடக அமைப்பினர் திரும்பினர். அரசியல்பாதிகள், சமூக ஊடகங்களில் இயங்குகிறவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பல தளங்களில் இயங்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்துடன் அவதூறு செய்யும் பாஜக-சங் பரிவார கும்பலின் மீதான ஒட்டுமொத்த கோபத்தின் விளைவாக எஸ். வி. சேகரின் வீட்டு முன் சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பேருந்திலோ, அலுவலகத்திலோ பாலியல் சீண்டலுக்கும் அவதூறு சொற்களுக்கும் உள்ளாகும் பெண்கள் இ.பி.கோ சட்டங்களை சிந்திப்பதில்லை. செருப்பை கழற்றி அடிப்பது தான் நடைமுறை. தன்மானமுள்ள செயல். எஸ்.வி.சேகர் வீட்டின்முன் கல் எறியப்பட்டதும் இப்படித்தான் இயல்பாக நடந்தது. அழுதுகொண்டே ஒரு பெண் பத்திரிகையாளர் தான் செருப்பை கழற்றி எறிந்தார். எவருக்கும் காயம் ஏற்படாதபட்சத்தில் இந்தப் போராட்டங்களில் என்ன தவறு இருக்க முடியும்? எஸ். வி. சேகர் வீட்டுக்கு வெளியே எவரும் இல்லை என்பதை அறிந்துதான், தங்களுடைய கடுமையான எதிர்வினையை தெரிவிக்க இரும்பு கேட்டின் மீது கல்லெறிகிறார்கள் போராட்டக்காரர்கள். இரும்பு கேட்டுக்கேகூட வலிக்காதபோது சில லிபரல் ஊடகவாதிகள் அறம் அறுந்துவிட்டதாக கதறுவது எஸ். வி. சேகர் கும்பலுக்குத்தான் சாதகமாக உள்ளது.

போராடுவதுகூட தெரியாமல் போராடி யாருடைய மனதும் புண்படக்கூடாது என்கிற தெளிவுடன் இவர்கள் நடந்துகொள்வது எப்போதும் சங் பரிவார் கும்பலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இப்போதும்கூட இரும்பு கேட்டுக்குக்கூட வலிக்காத நியாமான உணர்வை ‘வன்முறை’யாக சித்தரித்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிறு அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன. இந்த சிறு ஊடகங்கள் செய்யும் பணியை, பெரும் ஊடகங்களில் முதலாளிகளுக்கு பயந்துகொண்டே பணியாற்றுகிறவர்களால் செய்ய முடியாது. நிதர்சனம் இப்படியிருக்க, சிறு ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் ‘தூய்மைவாதம்’ இங்கே கட்டமைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த தூய்மைவாதம் பார்ப்பனியத்தை ஒத்தது!

ஜல்லிக்கட்டில் நடந்த ‘வன்முறை’, ஐபிஎல் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’, பத்திரிகையாளர் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’ என போராட்டக் களங்களில் நடப்பைகளை ‘வன்முறை’ யாக சித்தரித்து காட்டிக்கொடுப்பவர்கள் கூடவே இருக்கிறவர்கள் என்னும்போது இத்தனை நாளும் நீங்கள் பேசிய ‘அறங்கள்’ வீழ்ந்துவிடுகின்றன. ஒடுக்கும் அரசுக்கோ அவதூறுகளை ஓயாது செய்யும் பரிவார கும்பலுக்கோ நீங்கள்தான் குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சகோதரத்துவ முரண்பாடுகளுடன் இதைத் தெரியாமல் செய்கிறீர்களா? அல்லது கும்பல்களுக்கு செய்தி சொல்கிறவர்களாக இருக்கப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

– குரல்
Journo’s voices for the masses

Kavin Malar

டிவிட்டரில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கேட்ட சில ஆங்கில ஊடகவியலாளர்களின் செயல் புல்லரிக்க வைக்கிறது. சேகர் போன்றவர்களிடம் மன்னிப்பு கேட்பதன்மூலம் எதை நிறுவுகிறார்கள் இவர்கள்? சக பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுக்க வக்கற்றவர்கள் எதிரியிடம் சரணடைவது கல்லெறிந்தோரின் மீது வீசப்படும் சேறுதான். கல்லெறிந்த 30 பேரில் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கத் தயாரில்லாதபோது ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுக்கும் தங்களை பிரதிநிதிகளாக உங்களை நீங்களே எப்படி கருதிக்கொண்டீர்கள்?
பத்திரிகையாளர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதாக‌ எப்படி நீங்கள் எண்ணிக்கொள்கிறீர்கள்?

Arul Ezhilan

ஒரு வெறிநாய் தெருவில் வருகிற போகிறவர்களையெல்லாம் கடிக்குமாம், விரட்டுமாம். அதற்கு பயந்துகொண்டு வெளியே வராமலா இருக்க முடியும்? அந்த வெறிநாயை என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நம் ஊடகத் தோழர்கள் செய்திருக்கிறார்கள்.

தங்கள் சுயமரியாதைக்காகவும், தங்கள் ஊடகப்பணியின் மாண்பைக் காக்கவும் நம் ஊடகத் தோழர்கள் போராடி இருக்கிறார்கள்.இந்துத்துவாக் கும்பலின் அழுத்தங்களுக்கும், அதிகாரத்துக்கும் பணிந்து, ஊடக முதலாளிகள் போராடிய ஊடகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவார்களேயானால், அவர்களுக்கு நாம் ஒன்றை அழுத்தமாகச் சொல்லிக் கொள்வோம்.

“மக்கள் போராடியவர்கள் பக்கம் இருக்கிறார்கள்!”

#savetamiljournos

Kavin Malar

ஆங்கில ஊடகங்களில் பணிபுரிவோர்தான் இத்தகைய மன்னிப்பு கேட்டுள்ளனர். சேகரின் வீட்டின் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தோரில் ஒரேயொரு ஆங்கில ஊடகவியலாளர் கூட இல்லை. ஒரேயொரு பார்ப்பனர்கூட இல்லை. யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இங்கே ஆங்கில தமிழ் ஊடகங்களுக்கிடையே இருக்கும் பாரதூர வேறுபாடுகள் வெளிப்படையானவை. அவற்றை வெகுகாலத்திற்கு மறைக்க முடியாது. இது குறித்து இங்கு பொதுவாக யாரும் பேசுவதும் இல்லை, ஒரு சிலரைத் தவிர. சிலர் கேட்கிறார்கள். ஏன் இப்படி பதிவுகளை போடவேண்டும்? நம் ஒற்றுமை குலையுமில்லையா என்கின்றனர். என்ன ஒற்றுமை வாழ்கிறது இங்கே..அது குலைவதற்கு? சிலவற்றை உடைத்துப்பேச வேண்டிய கட்டாயத்திற்கு இந்தப் போராட்டம் நம்மைத் தள்ளியிருக்கிறது.

மகிழ்நன் பா.ம

எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லுட்டது ரவுடித்தனம்னு நியூஸ்18 தமிழ் ஊடகத்தை மிரட்டி பார்க்குது காவி கும்பல்….

இறந்து போய்விட்ட பெரியாரின் சிலை மீது கைவைப்பேன் என்று சொன்ன கும்பலுக்கெதிராக, அவர் விதைத்த சுயமரியாதையோடு கொதித்த தமிழ்ச்சமூகம்,

களத்திலும், தங்கள் வேலையினூடாகவும் வினையாற்றும் ஊடகவியலாளர்களை காக்க இந்த #savetamiljournos எனும் ஹேஷ் டேக்கின் கீழ் பதிவு செய்யுங்கள்…

பணி பாதுகாப்பு தொழிலாளர்களின் உரிமை, அதை மோடி கும்பலோ, மோடியின் அல்லக்கைகளோ பறிப்பதை நாம் அனுமதிக்க கூடாது…..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

அன்புடையீர் வணக்கம்,

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.

எஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.

ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.

ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.

தற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.

எஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.

– கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Radhika Sudhakar

பார்ப்பன இந்திய இந்து சேகருக்கும் அவர் மீது மென்மை காட்டக் கூடியவர்களுக்கும் ஒரு கேள்வி. ஆண்களே தவறாக நடந்து கொண்டாலும் பெண்களின் ஒழுங்கீனம் என வர்ணிக்கும் சேகரின் இந்து மத ‘முற்போக்கு’ கண்டும் அறிவுத்திறமையை கண்டும் வியந்தேன். என் கேள்வி ஒன்று தான். சில காலம் முன்பு வரை அனைத்து ஆண் ஊடகர்களின் நண்பராக காட்டிக்கொண்ட சேகர், சில காலம் முன்பு, மிக பழங்காலம் அல்ல, சில காலம் தான், அவர் துறையை சார்ந்த பார்ப்பனரின் மனைவி பாடகி சுசித்ரா ஒரு மிகப்பெரிய அநீதி தன் துறை ஆண்கள் மூலமாக நடந்து வருவதாகவும் தான் சந்தித்து வருவதாகவும் பொது வெளியில் கூறினார்.

அப்பொழுது அவர் வாய் எங்கே சென்றது ? அவர் துறை தானே அது ? மிக வெளிப்படையான குற்றச்சாட்டு தானே அது! அப்பொழுது என்ன செய்தார் சேகர்? அவரது துறையே மூடி மறைத்த ஒன்றுக்கு அவரும் உடந்தையாக இருந்துவிட்டு இன்று பெண்களின் நடத்தையைப் பற்றி பேச இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கின்றது? ஆனால் ஒரு பார்ப்பனரல்லாத பெண் ஊடகரிடத்தில் ஆளுநரின் சகிக்க முடியாத செயல்பாடு குறித்துக் கண்டித்ததும், அந்த செயல்பாடு கணடனத்திற்கு வந்தவுடன் ஊடக பெண்களின் நடத்தை பற்றி கேவலமாக பேசி ஆனந்தப்பட்டார் !

அப்பொழுது பார்ப்பன பெண்கள் தங்களை இதில் ஒரு பகுதியாக குறிப்பிட்டதாக பார்க்கவில்லையா? தன் துறையில் ஆண்கள் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு சேகரோ அல்லது இன்று கல் எறிந்துவிட்டார்கள் என்று ஆத்திரப்படும் ஊடகத்துறை பார்ப்பன பெண்களோ என்ன செய்துவிட்டார்கள்? இரும்பு கதவின் மீது கல் எரிந்தது போன்ற மென்மையான செயல்பாடு அல்ல சுசித்ரா சந்தித்தது அல்லது ஆளுநர் செயல்பட்டது.

கதவின் மீது விட்டெறியப்பட்ட கல் பலகாலமாக கட்டமைத்த சாதியையும் அதன் ஆணாதிக்கம் மீதும் விட்டெறிந்த கல். பிராமணர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்படாத ரௌடிகள் என்பதை தெரிந்தே வீசப்பட்ட கல். பிராமணர்கள் தங்களை எந்த சட்டத்திற்கும் உட்படாதவர்களாக நினைத்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தை உடைக்க வீசப்பட்ட கல். பார்ப்பனரல்லாதோரின் கோபத்தை வெளிப்படுத்திய கல் அது.

அதை பிராமண ஊடகப் பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஊடகத்துறையில் நிலவும் சாதிய மற்றும் பெண்ணுரிமை குறித்த பார்ப்பன பெண்களின் பார்வையும் அதில் உள்ள வேறுபாட்டையும் தான் வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் எல்லோரும் ஒன்று அல்ல, அவர்களின் உரிமைப் போரும் ஒன்று அல்ல சாதிய சமூகத்தில் என்பது மீண்டும் நிரூபித்துள்ளது. கணிசமாக பெருகிவரும் பெண் ஊடகத்தார் பற்றி வரலாற்றில் இதுவும் ஒரு சம்பவம் இனி இது எப்படி உருவெடுத்தாலும் கூட. கல்வித் புலத்தில் இயங்கிய எட்வர்ட் செய்ட் டும் கல்லெறிந்தவர் தான் இசுரேலியா ராணுவத்தினரை நோக்கி. இந்திய இராணுவத்தினரின் மீது கல்லெறியும் பலரும் மாணவர்கள் தான், காசுமீரத்தில். எனினும் , காசுமீரத்தின் உரிமை மறுக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவது கிடையாது.

அ.ப. இராசா

கர்நாடக பத்திரிகையாளர்களின் செருப்படி….

https://youtu.be/KNx1hT4wCbg

Swara Vaithee

எஸ் வி சேகர் வீட்டில் கல் எறிந்ததாகக் கூறப்படும் 30 பத்திரிக்கையாளர்களையும் வேலையை விட்டு நீக்க அழுத்தம் தரப்படுவதாக அறிகிறேன். இது கண்டிக்கத்தக்கது. குஜராத் கலவரம் செய்தவன் ஆட்சியில் கல்விட்டு எறிவதெல்லாம் தவறே இல்லை. #savetamiljournos

மு.வி.நந்தினி

#savetamiljounos பிரபலமாக இருக்கும் ஒருவர் பெண் பத்திரிகையாளர்களை வாய்ப்புக்காக படுக்கிறவர்கள் என பகிரங்கமாக பதிவுசெய்கிறார். அவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் அவருடைய கேட்டின் மீது செருப்பு வீசுகிறார்கள். சூடுசுரணையுள்ள பத்திரிகையாளர்கள் சக பத்திரிகையாளர்களின் உணர்வினை புரிந்துகொண்டு ஒதுங்கியிருப்பார்கள். ஒருசிலர் ஓடிவந்து ‘காட்டிக்கொடுத்து’ தங்களது சுயத்தை காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு காலத்தில் ஆதரவாக இருந்தோம் என்று நினைக்கிறபோது அருவருப்பாக உள்ளது.

Kuttima Nasi is with Ameen Korky.

பத்திரிக்கை சுதந்திரமும்,
ஊடகவியலார்களின் பாதுகாப்பும்;

s.v சேகரின் பத்திரிக்கையாளர்களின் பார்வையை பற்றிய ஆபாச பேச்சில்,வழக்கு பதிந்து கைது செய்யும் நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் வேலையில்!
sv.சேகருக்கு முன்ஜாமீன் வாங்குவதில் காட்டும் முணைப்பும்,சேகர் தலைமறைவு என்ற செய்திகளும் நம்மை மறக்கடிக்க செய்யும் நிகழ்வு.

பத்திரிக்கையாளரின் பாதுகாப்பும்! நலனும்!

சேகரின் பேச்சை கண்டித்து அவரின் வீட்டு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களின் மீது வழக்கு புணையபடுவதும்! பணி நீக்கவும் நிர்பந்தபடுத்தப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது!
வெறுமனே மக்கள் பிரச்சனையை ஊடகங்களையும்!ஊடகவியாளர்களையும் குறைசொல்வதற்கும் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவு அவர்களை பாதுகாப்பதிலும் உள்ளது.மக்களுக்கான பொறுப்பு!
இந்த பாதுகாப்பை கருதியே அவர்கள் அலுவலகத்திற்கு வேலை செய்வதோடு நின்றுவிடுகின்றனா்.
கோவையில் அனைத்து பாத்திரிக்கை நிருபர்களும்,ஊடகவியாளர்களும்.கண்டனத்தை பதிவு செய்கின்றனா்.
பாசிசம் எத்துறையில் வஞ்சித்தாலும் நீதிக்கேட்டு போராட வேண்டிய நிலையில் தமிழகம்! இப்பொழுது,பத்திரிக்கை துறையிலும் பாசிசத்தின் கருப்பாடுகள், கயமைத்தனத்தை கட்டு அவிழ்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்களும், ஊடகவியலார்களும் ஒன்றுபட்டு நலன் காக்க வேண்டும் மக்களும், ஒன்று இணைய வேண்டும்!

மு.வி.நந்தினி

#savetamiljournos பத்திரிகையாளர்கள் எஸ். வீ. சேகர் வீட்டு கேட்டின் மீது கல்லெறிந்ததற்காக பத்திரிகையாளர் மு. குணசேகரன் கண்டனம் தெரிவித்திருக்கும் ட்விட்டர் பதிவில் இந்துத்துவ ட்ரோல்கள் கடுமையாக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் நியூஸ் 18 ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பேசிவருகின்றனர். ஆனால், முற்போக்கு முகாமிலிருந்து ஒரு ஆதரவும் இல்லை. போராடிய பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்தக் காரணத்துக்காகத்தான் போராடினார்கள் என திராவிட, தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைத்து அமைதி காக்கிறார்களா?

#savetamiljournos நீங்கள் நாலு பேருடன் படுத்தால்தான் ஊடகத்தில் பணியாற்ற முடியும் என ஒரு கழிசடை பதிவு போடுகிறது. அதை ரசித்து, தேசியகொடி பறக்க பகிர்கிறார் பிரபலமாகவும் ஒரு கட்சியின் முகமாகவும் இருக்கும் எஸ். வி. சேகர். மூன்றாம் தரமான இந்தச் செயல்பாட்டுக்கு மனுகொடுத்து யாருக்கும் வலிக்காமல் போராட்டம் நடத்துவது ஒரு சில பத்திரிகையாளர்களின் போராட்ட உத்தியாக இருக்கலாம். கழிசடை பதிவை அங்கீகரித்து வெளியிட்டவருக்கு சுரணையுடன் எதிர்வினையாற்றுவதும் ஒரு சில பத்திரிகையாளர்களின் உரிமை. அவர்கள் எதிர்வினைக்கு என்ன எதிர்வினை வரும் என்பதை அறிந்தேதான் செய்திருப்பார்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள். உங்களுக்கேன் காட்டிக்கொடுக்கிற வேலை?

30 பத்திரிகையாளர்கள் பணி நீக்க முயற்சி? : எமர்ஜென்ஸியா நடக்கிறது?

ஊடகப் பெண்கள் குறித்து மிகக் கீழ்த்தரமான அவதூறு பரப்பியவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் கூண்டோடு பணிநீக்கம் செய்வது, ஊடக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிடும். எஸ். வி. சேகர் வீட்டின் முன்கேட்டுக்கே வலிக்காத செருப்பு வீச்சுக்கெல்லாம், பணிநீக்கம் என்றால் இங்கே என்ன அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியா நடக்கிறது?

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி :
அ. மார்க்ஸ் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.

இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

சற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

அந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

இம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

பத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.

இப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

சன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.

இது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் நேர்காணல்!

ர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணை விலைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஒட்டி அன்றாடம் விலையை தீர்மானிப்பது என இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் அன்றாடம் எரிபொருள் விலை உயர்வினால் மக்களின் துன்பதுயரங்கள் அதிகரித்து வருகின்றன.  தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.43. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். கடந்த 2013  செப்டம்பர் 14-ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்துள்ளது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும்.

அதை நோக்கி பெட்ரோல்  விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை ரூ.4.94 அதிகரித்துள்ளது. ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விட்ட டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கயிருக்கிறது.  ஒரு லிட்டர் டீசலின்   இன்றைய விலை ரூ.69.56. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 என இருந்த நிலையில், இதுவரை ரூ.6.66 உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையுயர்வுஒரு மாதத்தில் டீசல்- ரூ.3 அளவிலும், பெட்ரோல் ரூ.2.30 அளவிலும் அதிகரித்துள்ளது. கண்ணுக்கு தெரியாமல் சிறிய அளவில் தினமும் கூடி பெரிய அளவில் விலை உயர்ந்து வருகிறது. “ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு அனைத்து பொருட்களும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்” பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். இவர்களைப் பற்றி அரசுக்கு கவலையும் இல்லை.

லாரி உரிமையாளர்கள்
தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன்

பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக, இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது நிதியமைச்சகம். வேண்டுமானால்  மாநிலங்கள் தங்கள் வாட் வரியை குறைக்கலாம் என்று கூறி நழுவிக்கொண்டது.

எரிபொருள் விலை உயர்வு குறித்து இதுகுறித்து தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் தொலைபேசி மூலம் வினவு தளத்திற்கு அளித்த நேர்காணல்:

வரலாறு காணாத இந்த பெட்ரோல் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

மத்திய அரசின் இந்த விலையேற்றத்தால் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இது மத்திய அரசின் கையாலாகாதத் தன்மையால் நேர்ந்த விளைவு.  ஜி.எஸ்.டி வரி விதிப்பின் போதே நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை சொல்லி டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.. இதையே காங்கிரசு அரசு செய்யும்போது எதிர்த்த பிஜேபி இப்போது உயர்த்தும் வேலையைச் செய்கிறது. இது எங்களுக்கும், எங்கள் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோவ் பாய்சன் (மெல்லக் கொல்லும் மருந்து) என்று தான் பார்க்கிறோம்.

விலை உயர்வு எந்த வகையில் உங்கள் தொழிலை பாதிக்கிறது?

இது எங்களை மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை. நாட்டு மக்கள் பிரச்சனை என்றுதான் பார்க்கிறோம். தற்போது இருக்கக்கூடிய லாரிகளுக்கு டிரைவர்கள் பற்றாக்குறையாக உள்ளது. கிட்டத்தட்ட நாற்பது சதவீத லாரிகள் ஓட்டுனர்கள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க  டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் உயர்வு, டயர் விலையேற்றம், இன்சுரன்ஸ் பிரிமியம் தொகை அதிகரித்திருப்பது, டோல்கேட் கட்டணம் என்று செலவு அதிகரிக்கிறது.பெட்ரோல் டீசல்

நாளுக்கு நாள் ‘வாழ்வாதார சுமைகள்’ கூடிக்கொண்டே போகிறது எங்களால குடும்பம் நடத்த முடியல.  விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிகிறாங்க.  இந்த விவசாயத்துக்கு நிகரான தொழில் எங்களோடது. இதனால், நாங்கள் செத்து பிழைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நீங்கள் சந்திக்கும் குறிப்பான பிரச்சனை வேறு என்ன?

எப்பொழுதுமே கடன் பெரும் பிரச்சனையா இருக்கு. நாங்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைக்கூட கட்ட முடியவில்லை. கட்டாதபட்சத்தில்  வண்டியை பறிமுதல் செய்து கொள்கிறார்கள். மேற்கொண்டு இருக்கும் தொகையை வசூலிக்க வழக்கும் போட்டு விடுகிறார்கள். எங்களுக்கு கடன் கொடுக்கும்  நிதி நிறுவனங்கள் தேதி போடாமல், தொகையை குறிப்பிடாமல் வெறும் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். நாங்களும் அந்த நிலைமையில் அதனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பணம் கிடைத்தால் போதும் என்ற சூழல்தான் உள்ளது.

பெட்ரோல் டீசல்வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் 138 செக் மோசடி வழக்கு போட்டு விடுகிறார்கள். இந்நிலையில் பிள்ளைகளை படிக்க வைக்கக் கல்விக் கடன் கூட பெறமுடிவதில்லை.  இந்த பிரச்சனையால மனமுடைந்த உரிமையாளர்கள் பலபேர்  தற்கொலை பண்ணி இறந்திருக்காங்க. இது வெளியில் தெரிவது இல்லை. காரணம் நாங்கள் இந்த பிரச்சனையில் இருப்பதால் யாரும் முன் வந்து கடன் கொடுக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் இதனை வெளியில் சொல்வது கிடையாது. வாழ்க்கையே கேள்விகுறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

எண்ணெய் விலையேற்றம் என்பது சர்வதேச அளவில் தீர்மானிக்கப்படுகிற ஒன்று. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் போது இந்தியாவில் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

கார்ப்பரேட்களின் லாபத்துக்கு தான் வழி திறந்து விடுகிறது மோடி அரசு. விலையை நிர்மாணிக்கும் பொறுப்பை அரசே செய்திருக்க வேண்டும். அப்படியில்லாமல்  ‘தினமும் விலையை நிர்ணயித்துக் கொள்ள’ எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டு விட்டது. இவர்கள் மொத்த மக்களையும் சுரண்டுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைத் தான் பார்ப்பார்கள்.

பெட்ரோல் டீசல்பதினைந்து நாளைக்கு ஒரு முறை – மாதத்திற்கு ஒருமுறை  விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறியபோது நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இன்றும் போராடுகிறோம். இது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பெரும் அவமானம். மோடியின் கையாலாகாத தனத்துக்கு கிடைத்த வெகுமதி.

பொருளாதாரத்துக்கு அவமானம் என்கிறீர்கள். ஆனால் வரி விதிப்பின் மூலம் அரசுக்கு வருவாய் வருவதால் இதுதான் வளர்ச்சி என்கிறார்களே?

எது வளர்ச்சி? 70 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது எப்படி வளர்ச்சி ஆகும்? இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கக் கூடியது எவ்வாறு வளர்ச்சி ஆகும்? சரக்கு போக்குவரத்து கடல் வழியோ, வான் வழியோ நடைபெறவில்லை. லாரிகளில் தான் ஏற்றி செல்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

லாரிகள்
கோயம்பேடு காய்கறி சந்தையில் விவசாய விளைபொருட்களை இறக்கக் காத்திருக்கும் லாரிகள் (மாதிரிப் படம்)

விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், உரம் உள்ளிட்ட அனைத்தும் லாரிகளில் தான் கொண்டு செல்கிறோம். அதற்கு ஏற்றவாறு வாடகையை நாங்கள் உயர்த்தினால், விவசாயிக்கு இடுபொருட்களின் விலை உயரும். பிறகு விவசாயம் எப்படி செய்ய முடியும்? விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கி விடும்.

அப்படியே உற்பத்தி நடந்தாலும் விளைந்த பொருட்களை சந்தைக்கு ஏற்றி செல்லும் வாடகையை கணக்கில் கொண்டு தான் விவாசாயிடம் இருந்து கொள்முதல் செய்வார்கள். இதனால் விவசாயி உற்பத்தி செய்த  பொருட்கள் விலை கடுமையாக குறைந்து விடுகிறது. நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும் விவசாயம் கடுமையான வீழ்ச்சியடையும். மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கலால் வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால் முடியாது என்கிறது அரசு. இதற்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

விவசாயத்துக்கு அடுத்தபடியா தரை வழிப்போக்குவரத்து தான் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பா இருக்கு. இப்போ இதோட இயக்கத்தையே நிறுத்தக் கூடியதா இருக்கு அரசின் கொள்கை.  தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து அரசே விலையை தீர்மானிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் விலை  தீர்மானிப்பதை நிரந்தரமாக்க  வேண்டும்.

அதே அரசு விபத்து தடுப்பு என்ற பெயரில் படிக்காத தொழிலாளிக்கு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்கிறது. ஏற்கனவே ஓட்டுனர் பற்றாகுறையால் தொழில் திண்டாடுகிறது, நசிவடைகிறது. இச்சூழலில் ஆண்டுக்கு நான்கு லட்சம்  கனரக வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்கு அனைத்து வகையான வரியையும் வங்கிக் கொண்டு உற்பத்திக்கு அனுமதியளிக்கிறது அரசு. ஆனால் சாலை மேம்பாட்டை கைவிட்டு விடுகிறது. அந்த வாகனங்கள் செல்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்துவதில்லை. இதனாலேயே விபத்து ஏற்படுகிறது. அரசுக்கு எதிலெல்லாம் வருமானம் கிடைக்கிறதோ அதற்கு எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்சம் கலால் வரி, வாட் வரியை குறைக்க முன்வருவதில்லை. இந்த தவறான கொள்கையை கைவிட வேண்டும்.

-வினவு செய்தியாளர்.

கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?

5

டப்பாடி பழனிச்சாமியின் ‘சீரிய’ ஆட்சியில் ஆளுநரின் பங்கும் ‘மகத்தானது’. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு “ஆய்வு” மேற்கொள்ளச் செல்கிறார். காவல்துறை அதிகாரிகளை அழைத்து சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கிறார். மாவட்ட ஆட்சியர்களோடு நிர்வாகம் பற்றி பேசுகிறார். இதை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்பவர்களின் மேல் “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று இப்போது அறிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்பு என்ன, அதில் அரசியல் சாசன சட்டப்படி கவர்னரின் செயல்பாடுகள் என்ன? போன்றவை பா.ஜ.க-வின் அடிமைகளான ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணையருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் அத்து மீறும் ஆளுநர் குறித்து அவர்கள் ஆத்திரமாவதற்கு பதில் ஆளுநரின் ஆய்வுப் பணியினால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். இந்த மானக்கேட்டிற்கு ”அம்மாவின்” ஆட்சியே பரவாயில்லை என்று திமுக பேச்சாளர்களே சொல்லும் நிலையை ஏற்படுத்தி ”புரட்சித்” தலைவியை புனிதத் தலைவியாக்கியுள்ளனர் அன்னாரின் விழுதுகள்.

போகட்டும். ஆளுநர் ஆட்சியாளராக மாறி வந்த நிகழ்ச்சிப் போக்கு அதன் தர்க்கப்பூர்வ எல்லையை அடைய வேண்டுமல்லவா? தற்போது ‘விபச்சார புரோக்கர் நிர்மலா தேவியின்’ வாயில் விழுந்ததன் மூலம் அந்த உச்சநிலையையும் எய்தி முழுமையடைந்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ”கவர்னர் தாத்தா இல்லை” என்று நிர்மலாதேவி வழங்கிய சான்றிதழின் பொருள் அவரது ‘களச்செயல்பாடுகள்’ குறித்து சொல்லப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது. இது குறித்து விசாரிக்கும் இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்டான தமிழக போலீசாரும் அதை கண்டு பிடிக்கப் போவதில்லை என்பது ஊரறிந்த விசயம்.

இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அடித்துக் கூறிவிட்ட ஆளுநர், அதை நிரூபிக்க தானே முன்வந்து விசாரணைக் கமிசன் ஒன்றையும் நியமித்துள்ளார். இந்த விசாரணைக் கமிசன் ஆளுநரின் யோக்கியதைக்கு ஒரு நற்சான்றுப் பத்திரத்தைத் தயாரித்து அதைத் தனது விசாரணையின் முடிவில் அறிக்கையாக ஆளுநரிடமே சமர்பிக்கும் தன்மீதான பிராதைத் தானே விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்பது தமிழ் சினிமா நாட்டாமைகளே ஒப்புக்கொள்ளும் எளிய நியாயம்.

ஆனால், தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளின் எட்டரை மணி பஞ்சாயத்தார் இதில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தர்க்க நியாயங்களையும் விரிவாகப் பேசி முட்டைக்கு விக்கு போட்டுக் கொண்டிருந்தது தனிக் கதை.

தமிழகத்தில் மோடிக்கு அடுத்து மிக அதிகம் வெறுக்கப்படும் நபர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க எஸ்.வி. சேகர் மற்றும் ஹெச்.ராஜா ஆகியோரோடு போட்டியில் இறங்கியுள்ளார் ஆளுநர். எனினும், ”ஆட்சி” எனும் பெயரில் நடந்து கொண்டிருக்கும் அலோங்கோல நாடகத்தில் எதையும் தாங்கிக் கொள்ளும் ஜென் நிலைக்கு சிலர் சென்று விட்டதையும் நாம் கணக்கில் கொள்ளத் தான் வேண்டும். “இவர்கள் ஒழுங்காக இல்லாத நிலையில் ஆளுநராவது ஆய்வு கீய்வுன்னு ஏதோ செய்யறாருங்களே” என அப்பிராணியாய்ச் சிந்திக்கின்றனர். மெய் உலகில் இவ்வாறு சிந்திப்பவர்கள் வெகு சிலர் தான் என்றாலும் மெய் நிகர் உலகின் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ளவே இந்த கருத்துக் கணிப்பு.

பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது?

  • அதிகாரத்திற்குப் புறம்பாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவது
  • பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை துணை வேந்தர்களாக நியமிப்பது
  • தன் மேலான புகாரைத் தானே விசாரிப்பது
  • பாலியல் குற்றச்சாட்டு
  • கருப்புக் கொடி காட்டுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருப்பது.
  • எதுவுமில்லை. கவர்னர் ரொம்ப நல்லவருங்க.

ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !

நேரடி மானியத் திட்டம் : ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து !

”ரேஷனைக் காப்பாற்றுவோம்!”- ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் வேர்விட்டிருக்கும் இந்த முழக்கமும் இதனை முன்னிறுத்தி அம்மக்கள் நடத்தத் தொடங்கியிருக்கும் போராட்டமும் அம்மாநிலத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அரிசிக்கும் கோதுமைக்கும் வழங்கப்படும் மானியத்தைக் கைவிடச் சொல்லி உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசை நிர்பந்தித்து வரும் வேளையில், நேரடி மானியம் என்ற குறுக்கு வழியில் உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாண்மையை இந்திய அரசு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கும் வேளையில், ஜார்கண்டு பழங்குடியின மக்கள் முன்வைத்திருக்கும் முழக்கமும் போராட்டமும் இந்தியாவெங்குமே பொருந்தக்கூடியதாக, உழைக்கும் மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்கக்கூடியதாக உள்ளது.

சமையல் எரிவாயு விநியோகத்தில் நாடுதழுவிய அளவில் புகுத்தப்பட்டிருக்கும் நேரடி மானியத் திட்டத்தை – வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடும் திட்டத்தை – ரேஷன் பொருள் விநியோகத்திலும் புகுத்தத் திட்டமிட்டுள்ள மோடி அரசு, பாண்டிச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட தனது அதிகாரத்துக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களிலும், ஆந்திரா, ஜார்கண்டு ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மற்ற பகுதிகளைவிட, ஜார்கண்டு மாநிலத்தில், அதன் தலைநகர் ராஞ்சிக்கு அருகே அமைந்துள்ள நாக்ரி வட்டாரத்தில்தான் பெரிய அளவில் இப்பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ 12,500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் ரேஷன் கடையில் சந்தை விலையில் அரிசியையும், கோதுமையையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

நாக்ரி வட்டாரத்தில் வசித்து வரும் இந்த 12,500 குடும்பங்களுள் ஆகப் பெரும்பான்மையினர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் கட்டிட வேலை, வெல்டிங் உள்ளிட்ட உதிரித் தொழில்கள்தான் இவர்களின் வருமானத்திற்கு அடிப்படை. இக்குடும்பங்கள் அனைத்திற்கும் அக்டோபர் 2017-க்கு முன்பு வரை அந்த்யோதயா உணவு விநியோகச் சிறப்புத் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ ஒரு ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வந்தது. முப்பந்தைந்து ரூபாயும், முப்பந்தைந்து கிலோ அரிசியைத் தூக்கிச் சுமந்து வரும் தெம்பும் இருந்துவிட்டால், அரிசியை வீட்டிற்குக் கொண்டுவந்துவிட முடியும்.

நேரடி உணவு மானியத் திட்டத்தின் கீழ் இந்த 35 கிலோ அரிசியை வாங்குவதற்கு, ஒரு கிலோ அரிசி ரூ.32.60 என்ற விலையில் 1,141 ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த 1,141 ரூபாயில் 1,106 ரூபாயை ஜார்கண்டு மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடும். அந்த 1,106 ரூபாயோடு 35 ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் அரிசி வாங்கிவர வேண்டும்.

”அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் 1,106 ரூபாயைப் போட்டுவிட்ட தகவல், ஒவ்வொருவருக்கும் அவர்களது கைபேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அத்தகவல் வந்த உடனேயே வங்கிக்குப் போய் பணத்தை எடுத்துக்கொண்டு, ரேஷன் கடைக்குப் போய் அரிசியை வாங்கிவிடலாம்” என மாநில அரசு கூறிவருகிறது. கேட்பதற்கு வெண்ணெயை வெட்டுவது போலச் சுலபமாகத் தெரியும் இந்தத் திட்டம், நடைமுறையில் அரிசி வாங்குவதைக் குதிரைக் கொம்பாக மாற்றிவிட்டதோடு, குடும்ப அட்டைகளை இழக்கும் நிலைக்கு அப்பழங்குடியின மக்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

முதலாவதாக, வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிட்ட தகவல் பெரும்பாலும் யாருக்குமே வருவதில்லை. இந்த விவரத்தை வங்கிக்கு நேரடியாகப் போய்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வங்கிக்குப் போய்திரும்புவது என்பது வெளியூருக்குப் போய்வருவது போன்றது. ஒரு முறை வங்கிக்குச் சென்று திரும்ப நாற்பது ரூபாய் கையில் இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கில் பணம் விழுந்துவிட்டாலும், அதனைச் சொந்தப் பணம் போல நினைத்த மாத்திரத்தில் எடுத்துவிட முடியாது. முதலாவதாக, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ரேஷன் அட்டை எனப் பல ஆதாரங்களையும் சான்றாவணங்களையும் பழங்குடியின மக்கள் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும், மறந்து வீட்டில் வைத்துவிட்டிருந்தாலும் பணத்தை எடுக்கமுடியாது.

இதற்கு அப்பால், பணத்தை எடுக்கப் போகும் நாளன்று வங்கியில் மின்சாரம் நின்றுபோகாமல் இருக்க வேண்டும். மின்சாரம் இருந்தாலும், இணைய தள சேவை தடையின்றிக் கிடைக்க வேண்டும். பணத்தை எடுக்கும் முன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை பெறப்படும். அந்த ரேகைப் பதிவும் ஆதார் அட்டைக்கு அளித்த ரேகைப் பதிவும் ஒத்துப் போக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று கோளாறு ஆனாலும் பணத்தை எடுக்க இன்னொரு நாள் போக வேண்டும். இப்படி மானியப் பணத்தை எடுப்பது என்பது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிரை எடுக்கப் போகும் சாகசப் பயணமாக மாறிவிட்டது.

சேட்டே கிராமத்தைச் சேர்ந்த ஜமுனா, ஒவ்வொரு மாதமும் மூன்று முறை – இரண்டு முறை பணம் வந்துவிட்டதா என விசாரிப்பதற்கு, மூன்றாவது முறை பணத்தை எடுப்பதற்கு – வங்கிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகிறார். வங்கிக்குச் சென்று திரும்பும் நாட்களில் ஜமுனா கூலி வேலைக்குச் செல்ல முடியாது. அந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து அவருக்கு 450 ரூபாய் கூலியிழப்பு ஏற்படுகிறது. ரேஷன் கடைக்குச் செல்லும் தினத்தையும் கணக்கில் சேர்த்தால் கூலியிழப்பு 600 ரூபாயாகிறது. வங்கிக்குச் சென்றுவர போக்குவரத்துச் செலவு 128 ரூபாய், பணத்தை எடுப்பதற்குச் சேவைக் கட்டணம் 40 ரூபாய் என ஆக மொத்தம் 168 ரூபாயைக் கையிலிருந்து செலவழிக்கிறார். கைக்குக் கிடைக்கும் 1,106 ரூபாய் மானியத்தில் கூலியிழப்பையும் சேர்த்து 768 ரூபாய் போக, அவருக்குக் கிடைக்கும் உண்மையான மானியம் 338 ரூபாய்தான். ஒரு ரூபாய் விலையில் வாங்கி வந்த ரேஷன் அரிசி, நேரடி மானியத் திட்டத்திற்குப் பிறகு ஜமுனாவிற்கு ஏறத்தாழ 23 ரூபாயாகிவிட்டது.

நாக்ரி பகுதியில் அக்.2017 மாதம் தொடங்கி நேரடி மானியத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. பிப்.2018 முடியவுள்ள ஐந்து மாதங்களில் ஒரேயொரு மாதம் தவிர, மற்ற மாதங்களுக்குரிய மானியத் தொகை ஜமுனாவிற்குக் கிடைத்துவிட்டது. ஆனால், பெரும்பாலோருக்கு ஜமுனாவிற்குக் கிடைத்த ‘அதிருஷ்டம்’ வாய்க்கவில்லை.

ஹல்ஹூ கிராமத்தைச் சேர்ந்த பெர்காவ் ஓரேனுக்குச் சேர வேண்டிய மானியத் தொகை வேறொருவரின் வங்கிக் கணக்கிற்குச் செல்கிறது. ஜனவரி 2018-க்குப் பிறகு அந்த மானியத் தொகையும் வரவேயில்லை.

புத்னி ஓரேனுக்கு டிசம்பர் 2017-க்குப் பிறகு மானியத் தொகை வரவேயில்லை. 32 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியை வாங்க முடியாத வறுமையில் வாடும் அவரது குடும்பம், வெளிச்சந்தையில் 19 ரூபாய்க்கு நொய்யரிசி வாங்கிப் பசியாறுகிறது.

வங்கிக்கு அலையமுடியாத நிலையில் உள்ள 78 வயது முதியவர் விநாயக் முண்டா நவம்பர் 2017-க்குப் பிறகு ரேஷன் அரிசி வாங்குவதையே கைவிட்டுவிட்டார். அவருக்கு இப்பொழுது புத்னி ஓரேன் குடும்பம்தான் கஞ்சி ஊற்றுகிறது.

உணவு உரிமைக்கான இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஜனவரி 2018-இல் நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வில், ஜனவரி உள்ளிட்டு நான்கு மாதம் வர வேண்டிய மானியத் தொகையில் ஆகப் பெரும்பாலோருக்கு இரண்டு மாதம் மட்டுமே மானியத் தொகை வந்திருப்பது தெரிய வந்தது.

மானியத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. கடன் வாங்கியோ அல்லது வேறு வழிகளில் 1,141 ரூபாயைப் புரட்டியோ 35 கிலோ அரிசியை வாங்கிவிட வேண்டும். இல்லையென்றால், தமது குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் அநியாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.

சப்ரோன் கிராமத்தைச் சேர்ந்த பப்லு கச்சாப் தனது குடும்ப அட்டையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை, 32 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார். சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் திர்கி, ஜமுனா திர்கி உள்ளிட்ட பலருக்கு ரேஷன் அட்டையை ரத்து செய்யும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள முதியவரான ஜோசப் கெர்கெட்டாவிற்கு மானிய அரிசி மறுக்கப்பட்டதன் காரணமாகத் தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

343 குடும்ப அட்டைகள் பதியப்பட்டுள்ள வந்தேயா கிராம நியாயவிலைக் கடையில், ஜனவரி மாத்தில் வெறும் 200 குடும்ப அட்டைகளுக்குத்தான் மானிய அரிசி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதத்திலும் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் குறிப்பிடும் அக்கடையின் நிர்வாகி அஸ்கர் அன்சாரி, ”இதைத்தான் இந்த அரசு விரும்புகிறதா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

இந்தக் கேள்விக்கு ஆம் என்பதைத் தவிர வேறொரு பதிலில்லை. ஆனால், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும் அதிகார வர்க்கமும் மானியம் கிடைப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்துவிட்டால், நேரடி மானியத் திட்டம் போல யோக்கியமான திட்டம் வேறில்லை எனக் காதில் பூச்சுற்ற முயலுகிறார்கள்.

ரேஷன் பொருள் விநியோகத்தில் ஒட்டகம் என்றோ மூக்கை நுழைத்துவிட்டது. முதலில் ஏழைகளைக் காட்டி, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வேண்டிய அரசின் சட்டபூர்வக் கடமையை ரத்து செய்தார்கள். அடுத்து, நேரடி மானியத் திட்டம் என்ற பெயரில் ரேஷன் விநியோக முறையிலிருந்து ஏழைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, ரேஷன் கடைகளையே மூடிவிடும் முடிவை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள். இந்த உண்மையை மூடிமறைப்பதற்காகவே ரேஷன் பொருள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே வங்கியில் மானியப் பணம் போடப்படுகிறது எனக் கதையளக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் முறைகேடுகளை ஒழிப்பதல்ல; மாறாக, உணவுப் பொருட்களைச் சந்தை விலைக்கு வாங்குவதற்குப் பொதுமக்களைத் தயார்படுத்தும் சூழ்ச்சியாகும்.

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் இதுதானே நடந்து வருகிறது. முதலில் சமையல் எரிவாயு உருளையின் விலையைச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிக்கும் உரிமையை ஆயில் கம்பெனிகளின் அதிகாரிகளிடம் தூக்கிக் கொடுத்தது, மைய அரசு. அதனைத் தொடர்ந்து, நேரடி மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் உருளையைச் சந்தையின் விலைக்கு வாங்குவதற்குத் தயார்படுத்தப்பட்டனர். அதன் பிறகு, எரிவாயு உருளையின் விலையை மாதாமாதம் இரண்டு ரூபாய், நான்கு ரூபாய் என உயர்த்திக்கொண்டே போய் மானியத்தைப் படிப்படியாக வெட்டியதோடு, மார்ச் 2018-க்குள் எரிவாயு உருளைக்கு வழங்கும் மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலைதான் கூடிய விரைவிலேயே உணவுப் பொருள் விநியோகத்திலும் வரவிருக்கிறது. ஜார்கண்டு மாநில பா.ஜ.க. முதல்வர் ரகுபார் தாஸ், ”ரேஷன் கடைகளைப் படிப்படியாக மூடிவிட்டு, பொதுமக்களைச் சந்தையிலேயே உணவுப் பொருட்களை வாங்கத் தயார்படுத்த வேண்டும்” என அரசு விழாவில் வெளிப்படையாகவே பேசி, இந்தச் சூழ்ச்சியைப் பச்சையாகவே உடைத்துப்போட்டுவிட்டார்.

உணவுப் பொருட்களுக்கு மானியத்தைக் கைவிடுவது என்பது ஏழைகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல. அரிசி, கோதுமை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையைத் தீர்மானித்து, அதன் கீழ் கொள்முதல் செய்யும் அரசின் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவிவிட்டு, விளைபொருட்களுக்கு விலையைத் தீர்மானிப்பதையும், அதனைக் கொள்முதல் செய்வதையும் முழுமையாக வர்த்தகச் சூதாடிகளிடம் ஒப்படைப்பதாகும்.

விவசாய விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைந்து வரும் வேளையில், வேலையில்லாத் திண்டாட்டமும் வேலையிழப்பும் அதிகரித்து வரும் வேளையில், குறைந்தபட்ச கூலிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருந்துவரும் வேளையில், உணவுப் பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை ரத்து செய்வது ஏழைகளைப் பட்டினியில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு வரித் தள்ளுபடிகள், மானியங்கள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன், கடன் தள்ளுபடி என விதவிதமாகச் சலுகைகளை வாரிவழங்கும் அரசும் அதிகார வர்க்கமும் ஏழைகளுக்குத் தரப்படும் உணவு மானியத்தை அடியோடு ரத்து செய்து, அவர்களின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது. சேமநல அரசு என்ற சல்லாத் துணியையும் களைந்துவிட்டு, பொதுமக்களின் எதிரியாக நம் முன் நிற்கிறது.

இந்தச் சதித்தனத்தை எதிர்த்துதான், இந்திய மக்களின் உணவு உரிமையை நிலைநாட்டும் பொருட்டுத்தான் ஜார்கண்டு மாநிலப் பழங்குடியின மக்கள் ரேஷனைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். இதன் முதல்கட்டமாக, கடந்த பிப்ரவரி இறுதியில் ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஜார்கண்டில் எழுந்துள்ள சிறுபொறி பெருங்காட்டுத் தீயாக மாறட்டும், இந்தியாவெங்கும் பரவட்டும்!

– ரஹீம்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !

டிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலேயே மரத்தடியில்கூட வகுப்புகளை நடத்திவிட முடியும், பயிற்சிபெற்ற ஆசிரியர் இருந்தால். ஆனால், தமிழக அரசோ ஆசிரியர்களே இல்லாமல் வகுப்புகளை நடத்தும் சாதனையைச் செய்துவருகிறது. ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றில்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மேநிலை மற்றும் பத்தாம் வகுப்புகளும்கூட ஆசிரியரே இல்லாமல் நடத்தப்படுவதை தலித் விடுதலை இயக்கம், சமக்கல்வி இயக்கம் ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் கருப்பையா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து பெற்ற அறிக்கையின்படி, 884 உயர்நிலைப் பள்ளிகளும், 34 மேநிலைப் பள்ளிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, இந்தப் பணியிடங்களை நிரப்ப மறுத்து வருகிறது, தமிழக அரசு. எதிர்வரும் மாதங்களில் 425 தலைமை ஆசிரியர்கள் பணிஓய்வு பெற இருப்பதால், தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் உயர்நிலை/மேநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை விரைவிலேயே 1,500-ஐத் தொட்டுவிடும் எனக் கூறுகிறது, பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.

தலைமை ஆசிரியர் மட்டுமின்றி, மேநிலை வகுப்புகளில் வேதியியல் துறையில் 421, பொருளாதாரத் துறையில் 370, வணிகவியலில் 215, இயற்பியலில் 156, தமிழ் புலத்தில் 284, மற்ற துறைகளில் 194 என மொத்தமாக 1,640 பயிற்சிபெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நான்கு ஆண்டுகளாக காலியாக உள்ளன.

உயர்நிலைப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அறிவியல் புலத்தில் 773, சமூகவியலில் 521, கணிதத்தில் 490, தமிழில் 349, ஆங்கிலத்தில் 272 உள்ளிட்டு 2,405 பயிற்சிபெற்ற ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எதிர்வரும் மே மாதத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை 10,000-ஐத் தொடும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, அரசு பழங்குடியின உறைவிடப் பள்ளி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் கீழ் இயக்கப்படுகின்றன. இவற்றுள் மேற்கண்ட காலிப் பணியிடங்கள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளன. மற்ற துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கோ இரண்டு மடங்கோ அதிகமாக இருப்பது நிச்சயம்.

ஏழை-ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து தமிழ்வழியில் படித்து வரும் நிலையில், ஆசிரியர்களை நியமிக்காமல் புறக்கணிப்பது அவர்களின் கல்வியுரிமையைப் பறிக்கும் சமூக அநீதி ஆகும். நவீன காலத்து மனுதர்மம் ஆகும்.

ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம். இன்னொருபுறமோ நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்களை அமைத்தல், 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் திறன் வகுப்புகளைத் தொடங்குதல், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.-க்கு இணையான புதிய பாடத்திட்டம் என அதிரடியான அறிவிப்புகள்.

”பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மெண்டு வீக்கு” என்ற வடிவேலுவின் நகைச்சுவையைத் தமிழக அரசின் இந்த பில்ட்-அப்புகள் நினைவுபடுத்துவதோடு, ஆசிரியரைப் போடக் கேட்டால், ”ஸ்மார்ட் கிளாஸ் அறிவிப்பை” வெளியிடும் எடப்பாடி அரசின் ‘அக்கறை’, ”ரொட்டி கிடைக்கவில்லையா, கேக் சாப்பிடுங்கள்” என எகத்தாளமாகக் கூறிய பிரெஞ்சு ராணியின் திமிரோடும் ஒத்துப் போகிறது.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com