ஆர்.எஸ்.எஸ் சங்கி மங்கிகள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் முழுமை பெற்று மனிதர்களாகி விடவில்லை என்பது அனைவரும் அறிந்த இரகசியம் தான். இதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான வெறுப்பில் இருந்து சொல்லவில்லை.
நீங்கள் கதுவாவின் ஆசிபாவை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த எட்டு வயதுச் சிறுமியைக் கோவிலில் அடைத்து வைத்து போதை மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கடைசியில் அவளைக் குப்புறக் கிடத்தி முதுகெலும்பை மிதித்தே உடைத்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற தனது சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்த கட்சி பா.ஜ.க. இதில் இருந்தே அவர்கள் பரிணாம வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
உன்னாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் 17 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி சிதைத்துள்ளார். புகாரளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்றுள்ளது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு. ஒன்பது வயதுச் சிறுமியின் மேல் ஓடும் இரயிலில் வைத்து பாலியல் தாக்குதல் தொடுத்த தமிழ்நாடு பா.ஜ.கவின் பிரமுகர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. பிரமுகர் பிரேம் ஆனந்த்
நாடெங்கும் சங்கி மங்கி மிருகங்களைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவின் பல பகுதிகளில் “இந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருப்பதால் ஓட்டுக் கேட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தயவு செய்து உள்ளே நுழைய வேண்டாம்” என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ளனர். மும்பை புறநகர் தொடர் வண்டியில் பயணிக்க நுழைந்த உள்ளூர் பா.ஜ.க பிரமுகரைக் கண்டு அஞ்சிய பயணிகள், பெண்கள் பயணிப்பதால் “வெளியே போ” என அவரைப் பிடித்து தள்ளியுள்ளனர்
https://www.youtube.com/watch?v=ZFApiXbcHHs
மக்களின் பீதியை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் சமீப காலமாக பாரதிய ஜனதா தலைவர்கள் விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பேசிய திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் பிப்லப் தேவ், சிவில் இஞ்சினியர்கள் தான் சிவில் சர்வீசுக்கு (பொது நிர்வாக பணிகள்) வர வேண்டும் என்றும், மெக்கானிக்கல் இஞ்சினியர்கள் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்ட போது சிவில் இஞ்சினியர்கள் தான் சமூகத்தைக் கட்டியெழுப்பும் திறன் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே ’டிப்டாப்’ ஆசாமி கடந்த சில தினங்களுக்கு முன் வேலை கிடைக்காத இளைஞர்கள் அரசாங்கத்தை தொல்லை செய்யக் கூடாதென்றும், மாடு வளர்த்து பால் கறந்து விற்றோ பீடா கடை போட்டோ பிழைக்கும் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு நாம் தமிழர் தம்பிமார்கள் மேற்படி நபருக்கும் தமிழ் முப்பாட்டன்மார்களுக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று அறிய காப்புரிமை பெற்ற மூத்திரச் சோதனைக்கு தயாராகி வருவதாக கேள்வி.
மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்ததாக திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் அறிவித்திருப்பது தம்பிமார்களின் சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்திருக்கிறதாம். ஆமையோட்டுப் படகுகளில் வங்கக் கடலைக் கடந்து திரிபுராவை நோக்கி புலிப்படையொன்று கிளம்பியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தன்னை வந்து சந்திக்கும்படி மேற்படி நபருக்கு பிரதமர் ஓலை அனுப்பியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் அறிவிக்கின்றன. இந்த சந்திப்புக்கு பொருள் விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும் பத்தி எழுத்தாளர்கள், பிப்லப் தேவ்-வை பிரதமர் மோடி கடுமையாக கண்டிக்கப் போகிறார் என்று ஆருடம் சொல்கின்றனர். ஆனால், பிரதமரின் பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இல்லை. பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியர்கள் வரைந்த விநாயகரின் வண்ணப்படத்தைக் காட்டியவர் தான் நமது பிரதமர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மேலும், வேலையற்ற இளைஞர்கள் பக்கோடா கடை போட்டுப் பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னவர் தான் பிரதமர். பக்கோடா கடைக்கும் பீடா கடைக்கும் அதிக தொலைவு இல்லையே. இதில் இன்னொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் உள்ளது. பிரதமரின் பக்கோடா கடை ஆலோசனையை விதந்தோதிய பொருளாதார மேதை துக்ளக் குருமூர்த்தி, திரிபுரா முதல்வரின் பீடாக்கடை ஆலோசனையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Those who make fun of Tripura CM pan shop remark see this link https://t.co/OvPT27pj6o Pan trade is no more the traditional one. There is chocolate pan, Chocolate With Caramel Sweet, almond, strawberry ..what not. Pan is one of the biggest trade in Benaras
ஆக பிரதமர் – திரிபுரா முதல்வர் சந்திப்பில் என்ன நடக்க வாய்ப்புள்ளது?
”என் இனமடா நீ” என்று பிப்லப் தேவ்-வை அணைத்துக் கொள்வார் பிரதமர்.
”என்னப்பா தம்பி, நான் ஷாகா போன காலத்துல இந்த பாடம்லாம் எடுக்கலையே” என ஆச்சர்யப்படுவார்
”என்ன அம்மாச… எனக்கே போட்டியா?” என்று பொறாமைப்படுவார்.
“பிரதமருக்கான நாக்பூரின் அடுத்த பட்டியல்ல நீ தான்யா முதல்லே இருக்கே” என பாராட்டுவார்
“மச்சி நீயெல்லாம் திரிபுராவில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. சீக்கிரம் என்னோட அமைச்சரவைலே இடம் தாரேன்” என்று புளகாங்கிதம் அடைவார்.
”இதே மாதிரி பேச ஹெச்.ராஜாவுக்கும் தமிழிசைக்கும் ட்ரைனிங் குடுத்து தமிழ்நாட்டுல தாமரையை மலர வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு” என்று நம்பிக்கை அளிப்பார்
“பாருப்பா தம்பி நாம பேசறதைக் கேட்டு உலகே உருண்டு புரண்டு சந்தோசத்துல சிரிக்குது” என்று மகிழ்ச்சியடைவார்.
”மார்க்சிஸ்டுகள் ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த திரிபுராவை நோக்கி மொத்த உலகத்தின் கவனத்தையும் திருப்பிய இளவலே வாழ்க” என்று குருமூர்த்தி பாணியில் வாழ்த்துவார்
One good thing that is happening is that thanks to BJP in Tripura, what happens in Tripura becomes national news. Otherwise no one used to bother about Tripura till CPM was in power https://t.co/wTtt2dqXvB
“இந்தக் கட்சியில் கொள்கை முழக்கம் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது” எனக் கோபப்படுவார்.
”நல்ல வேளை… இந்த கும்பல்லேயே புத்திசாலி நான் தான்னு நிரூப்பிச்சிட்டே தம்பி” எனக் கூறி ஆரத் தழுவிக் கொளாவார்.
இதற்கு மேல் பறக்க முடியாதென எமது கற்பனைக் குதிரை சண்டித்தனம் செய்வதால் வேறு எந்த மாதிரியெல்லாம் அந்த சந்திப்பில் பேசப்படும் என்பதை நீங்களே யோசித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து ஓசூரில் 01.05.2018 அன்று மேதின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தாலுகா அலுவலகம் எதிரிலிருந்து மாலை 4.00 மணியளவில் பேரணி தொடங்கியது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் மேதினத்தின் பிறப்பை சிறு குறிப்பாக உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு சென்றதை ஏராளமான பொதுமக்கள் நின்று கவனித்தனர்.
பேரணியின் முடிவில் ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு கலந்து கொண்டு காவி மயமாக்கப்படும் கல்வித்துறை மற்றும் நீதித்துறை என்ற தலைப்பிலும் மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்ற தலைப்பிலும் தோழர் சிவா, காவிரியில் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரையாற்றினார்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர் தொடர்புக்கு – 97880 11784.
திருவள்ளூர் கிழக்கு
மே தினத்தையொட்டி பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக,பேருந்து, இரயில் மற்றும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மே நாளன்று கிளை, இணைப்புச் சங்கங்களில் ஆலை வாயில்களில் கொடியேற்றி ஆலை வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையிலிருந்து தொடங்கிய பேரணியை பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு, மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாநில துணைத்தலைவர் தோழர் இரா.சதீஷ் துவக்கி வைத்தார். பறையிசை, சிறுவர் சிலம்பாட்டத்துடனும் விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவக்கி நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம் விகேந்தர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் ம.சி. சுதேஷ்குமார் மேநாள் குறித்து உரையாற்றினார். கிளை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிலாளார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆளும் வர்க்கத்துக்கு அதிர்வை ஏற்படுத்துவதாகவும், தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உற்ற தோழன் பு.ஜ.தொ.மு.தான் என்பதை பறைசாற்றுவதாகவும் அமைந்தது.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு
இந்த உலகம் தானே சுழலவில்லை! தொழிலாளியின் வியர்வையே அதன் எரிசக்தியாய் இயக்குகிறது !
நீரைத் தேக்கும் அணைகள், பூமியை அளக்கும் சாலைகள், மனித குல முன்னேற்றத்தையே வார்த்தெடுக்கும் ஆலைகள், விரிந்து பரந்த உலகத்தையே கால்பந்தாய் கைக்குள் அடக்கிய கணிணிகள், விண்ணில் மிதக்கும் நட்சத்திரங்களையும் கரம் பிடித்து பூமிக்கு அழைத்து வரும் செயற்கைக் கோள்கள், இப்படி அனைத்திலும் கலந்திருக்கிறது உழைப்பு.
ஆனால் இந்த உலகத்தை உருவாக்கியதும், உலகமக்களை இரட்சிப்பதும் தாங்கள்தான் என்று ஊளையிடுகின்றன முதலாளித்துவ ஓநாய்கள். ஒவ்வொரு முதலாளியின் வளர்ச்சிக்கும் பின்னால், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை புதைக்கப்படுகிறது.
உலகப் பணக்காரனான அம்பானி உயர்வதற்கு அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் எத்தனை ஆயிரம்! டாடா, பிர்லாக்களின் இலாப வேட்டைக்காகவே ஈழத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலும் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனை ஆயிரம். தினந்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், நெசவாளிகளின் பிணங்களை பரிசோதனை செய்து பாருங்கள்.
அங்கே தெரியும் முதலாளித்துவ தனியுடைமையின் கோரமுகம் !
எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் மனிதப் படுகொலைகள், உலகத்தை இரட்சிக்கவா அல்லது உலக வளங்களைக் கொள்ளையிடவா ?
இந்த உலகத்தை அழிப்பவன் முதலாளி.. காப்பவன் தொழிலாளி.. படைத்தலும் காத்தலும் அழித்தலும் கடவுளின் செயல் என்றான் ஆன்மிகவாதி !
அது இல்லாத கடவுளைப் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. இதோ இருக்கும் கடவுளாய் தொழிலாளி வர்க்கம். படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் !
உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் !
பாடல் வரிகள் :
நான் உலகம் !
நானே உலகம் !
( நான் உலகம்! நானே உலகம்! )
வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் ! (2)
நான் உலகம் !
தொழிலாளி நானே உலகம் ! (5)
காணும் காட்சி யாவும்
உருவாக்கும் ஆற்றல் நானே !
உருவாக்கும் ஆற்றல் நானே !
அதை காலம், தேசமெங்கும்
நீண்டு காக்கும் கைகள் நானே !
நீண்டு காக்கும் கைகள் நானே !
மாறாத …
மாறாதே இது என்றால் அதை
மாற்றும் கடவுள் நானே
( நான் உலகம் ! தொழிலாளி நானே உலகம் ! )
சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் ..
(சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் .. )
வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் ..
(வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் .. )
அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் ..
(அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் .. )
அணுவிலும் உயிராய் வாழ்பவன் நான்..
நான் தான்..
(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)
வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் !
(வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் ! )
(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)
(2009-ம் ஆண்டில் வெளியான, ம.க.இ.க-வின் 11-வது பாடல் குறுந்தகடான “நான் உலகம்” தொகுப்பில் இடம் பெற்ற பாடல்.)
பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்
வீடியோ ஆக்கம் : வினவு
சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் “காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளாக பொதுமக்களும், தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன், காவிரி விவசாயிகள் சங்க திரு. G.வரதராஜன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தோழர் வெற்றிவேல் செழியன்
தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். – தனது தலைமை உரையில்…”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் வேலையை நீதிமன்றத்தின் துணையோடு இந்த மோடி அரசாங்கம் செய்து வருகிறது” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, “தமிழக மக்கள் கோருவது காவிரி மேலாண்மை வாரியம். அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியமும், அதை செயல்படுத்த கூடிய ஒழுக்காற்று வாரியமும் வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு என்பது நமது உரிமை. ஆறுகள் எல்லாம் தேசிய உடைமை ஆக்குவோம் என்கின்றனர். என்ன பொருள் கர்நாடக மாநிலத்தின், தமிழக மாநிலத்தின் உடைமையாக உள்ள காவிரியை இந்திய உடைமையாக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
பெங்களுரு தான் பெரிய நகரமா? சென்னை பெரிய நகரம் இல்லையா? காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால், சென்னை மக்களுக்கு வரும் தண்ணீர் அடைப்படுகிறது என்று பொருள். வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. காவிரியில் இருந்து தான் வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. வீராணத்திலிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது என்று தீபக் மிஸ்ரா சொல்கிறார். தமிழகத்தின் மாவட்டங்கள் என்ன செழுமையாகவா இருக்கிறது? இங்கு வறட்சி இல்லையா? காவிரி உரிமை என்பது, காவிரி படுகைக்கான உரிமை.
தோழர் தியாகு
எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதாக தமிழக அரசு குறைபட்டு கொள்கிறது. தமிழ்நாட்டில் நாங்கள் கேட்கும் அத்திக்கடவு-அவினாசி போன்ற கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆதரவு தருகிறோம்.
வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை அழிக்கும் கார்ப்பரேட்களுக்கான திட்டங்களைத்தான் கொண்டு வருகிறது மத்திய அரசு.
நாங்கள் இந்தியாவை ஒன்று கேட்கிறோம். நாங்கள் எங்கள் ஆற்றை காப்பாற்றுங்கள் என்கிறோம், தமிழ்நாட்டு நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்கிறோம். ஆனால் உங்களால் முடியவில்லை எனவே நீங்கள் எங்களை விட்டு விடுதலை பெற்று போய் விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்திற்கு அதிகாரம் இருந்தால் யாரும் காவிரியை சிறைப்பிடிக்க முடியாது. தமிழக மக்கள் அனைவரும் ஒன்று கூடி உரிமையை மீட்டு எடுப்போம்” என்று பேசினார்.
தன்னாட்சி தமிழகம், ஒருங்கிணைப்பாளர், திரு. ஆழி செந்தில்நாதன், “கர்நாடகத்திற்கு சொந்தமான எதையும் நாம் கேட்கவில்லை. தமிழகத்திற்கு பல காலத்திற்கு சொந்தமான உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தான் கேட்கிறோம். கர்நாடகத்தை பொறுத்தவரை காவிரி பிரச்சனையில் அங்கு உள்ள அனைத்து கட்சிகளும் தமிழகத்திற்கு எதிராக தான் பேசுகிறார்கள். ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்சனை வரும் பொழுதெல்லாம் கர்நாடகாவில் திட்டமிட்டே கலவரத்தை உருவாக்குகிறார்கள் பிறகு அதையே காரணம் காட்டி தண்ணீர் தர முடியாது என நாடகமாடுவார்கள்.
திரு. ஆழி செந்தில்நாதன்
மத்திய அரசின் கடமை என்ன? கர்நாடக அரசு என்ன சொல்கிறதோ அதை தான் மத்திய அரசும் சொல்கிறது. இப்பொழுது கர்நாடகத்தில் தேர்தல் என்கிறார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இதையே தான் சொல்வார்கள்.
காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம். காவிரியை காப்பாற்ற போராடுகிறோம். ஆனால் அவர்கள் காவிரி படுகைக்கு கீழே இருக்க கூடிய இயற்கை வளத்தை கொள்ளையடிக்க, அதை ஒரு ஹைட்ரோகார்பன் மண்டலமாக மாற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. மோடி அரசாங்கம் யாரின் பக்கம் இருக்கிறது? தனக்கு ஓட்டு போடாத, மோடி வந்தால் கருப்பு கொடி காட்டும் தமிழக்கத்தின் பக்கம் அவர்கள் செயல்பட மாட்டார்கள். தமிழகம் இந்தியா என்ற கட்டமைப்பை பல வகையில் ஏற்று கொண்டிருக்கிறது. ஆனால் டெல்லி என்றும் நம்மை சமமாக நடத்தியதில்லை.
தமிழகத்தில் ஏன் தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது என்று கேட்கிறார்கள். தமிழகம் தொடர்ச்சியாக பல வகையில் ஒடுக்கப்படுகிறது அதனால் தான் இங்கு போராட்டங்கள் கடுமையாக நடக்கிறது. காவிரி பிரச்சனையை மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் போது உண்மையிலேயே நம்பிக்கை பிறக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து திருவாரூர், காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த, திரு. G. வரதராஜன் ஆற்றிய உரையில்…மக்கள் அதிகாரம் அமைப்பு, விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கும் போது, ”நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்று திருவாரூரில் போராடினார்கள். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பல ஆயிரம் மக்களை அணிதிரட்டி மாநாடு நடத்தினார்கள். காவிரி தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடலில் ஓடும் ரத்தம். விவசாயிகள் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் ரேசன் கடைகளில் தான் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்த்தவே இங்கு இந்த கூட்டம்.
திரு. G. வரதராஜன்
தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்று டெல்லி நினைக்கிறது. விவசாயிகள் காவிரிக்காக மட்டும் போராடவில்லை, விளைநிலங்களை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. மக்கள் வாழ முடியாத இடமாக கிராமங்கள் மாறி வருகிறது. 21 மாவட்டங்களுக்கு ஆதரமாக இருப்பது காவிரி. காவிரி இல்லையென்றால் விவசாயிகள் வாழ்க்கை அழிந்துவிடும். மத்திய அரசை எதிர்த்து போராடி தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசினார்.
இறுதியாக மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜு ஆற்றிய உரையில்…
“காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததை அடுத்து மக்கள் அதிகாரம் உட்பட பல அமைப்புகளும், பொதுமக்களும் இதை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களை டெல்லி கொஞ்சம் கூட மதிக்கவில்லை. தீபக் மிஸ்ரா இன்னொரு மோடியாக செயல்படுகிறார். நமக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
தோழர் ராஜீ
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், பி.ஜே.பி நமக்கு எதிராக செயல்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யும் கடமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த பிரச்சனையை சரி செய்யாமல் இருக்கிறது. 8 கோடி தமிழகமக்களை பற்றி என்ன நினைக்கிறது இந்த மத்திய அரசு? நாம் எல்லா வகையிலும் போராடி விட்டோம். தமிழ்நாட்டில் இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்? காவிரி தர வேண்டும். அது நமது உரிமை. இதை யாரும் மறுக்க முடியாது.
போராடும் மக்களை ஏன் தமிழக அரசு தடுக்கிறது? மக்கள் அதிகாரத்திற்கு சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என தடை விதிக்கிறது. போராட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியது தான் போலீசோட வேலை. நீதிமன்றம், போலீசுக்கு மக்கள் அடிமை கிடையாது. உங்களை உருவாக்கியது யார்?. மக்கள் தான்!
தாசில்தார், கலெக்டர் மனு கொடுத்து நாங்கள் தோற்றுவிட்டோம். மணல் கொள்ளையடிப்பவனுக்கு இவர்கள் துணை போகும் போது மக்கள் தான் மணல் கொள்ளையை தடுப்பார்கள். குட்கா ஊழல் யார் மீது வழக்கு, மாநிலத்துடைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி மீது புகார், தடை செய்த குட்கா விற்பனைக்கு மாதம் மாதம் சம்பளம் மாதிரி மாமூல் வாங்கியுள்ளார்கள். மக்கள் அதிகாரம் இதை சொல்லவில்லை. வருமான வரித்துறை சொல்கிறது. இவர்கள் விசாரணை செய்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும். ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தோற்றுவிட்டது.
3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் வர போகிறதா? டெல்லி அமைக்க போவது கர்நாடகத்திற்கு ஆதரவாக தான் இருக்கும். தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தப்பி தவறி வந்தாலும், அதை கர்நாடக ஏற்று கொள்ள போவதில்லை. மேல் முறையீட்டுக்கு போவார்கள். நாம் மீண்டும் போராட வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் முழுவதும் கச்சா எண்ணெய், நிலக்கரி எடுக்கவேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் திட்டம், கொள்கை. இந்த திட்டத்தை மாநிலத்தில் இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் ஏற்று கொள்கிறது. எரிவாயு எடுப்பதற்கும், எண்ணெய் எடுப்பதற்கும் காவிரி தண்ணீர் எதற்கு? இந்த விசயங்களை தீர்மானிக்க கூடிய அதிகாரத்தை, கொள்கையை கேள்வி கேட்காமல் முறியடிக்காமல் நம்முடைய கோரிக்கையை எப்படி சாதிக்க முடியும்?
எல்லா திட்டங்களையும் வளர்ச்சி என்கிறார்கள். யாருக்கான வளர்ச்சி? அம்பானி, அதானி, மிட்டல், மல்லையா போன்றோரின் வளர்ச்சி, நீரவ் மோடி, லலித் மோடி, போன்றோரின் வளர்ச்சி தான் வளர்ச்சி என்று மோடி அரசு கூறுகிறது.
மோடியின் கொள்கை என்பது கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்க, வழி வகுத்து தருவது தான். ஒரு லட்சம் கோடி கச்சா எண்ணெய் மூலம் மத்திய அரசுக்கு லாபம் போகிறது. ஆனால் வேலை வாய்ப்பு 500 பேருக்கு தான் என்கிறார்கள்.
தமிழக மக்கள் ஏமாளியாக இருக்கிறார்கள் என்று டெல்லி நினைக்கிறது. மெரினாவில் மாற்றியிருக்கிறோம், சாதித்து காட்டியிருக்கிறோம். அது போல காவிரியை மீட்காமல் வீட்டுக்கு போக கூடாது என முடிவு செய்வோம். போலீசுக்கு பயப்படாமல் கோர்ட்டுக்கு பயப்படாமல் போராடினால் காவிரிநீர் கண்டிப்பாக வரும்” என எழுச்சியுரையாற்றினார்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல்கள் பாடியது சிறப்பாக இருந்தது. மார்க்கெட் பகுதி என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பொதுக்கூட்டத்தை கவனித்தனர்.
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம், தொலைபேசி : 91768 01656
மே 1 தொழிலாளர் தினமன்று புஜதொமு சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வேலூர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்” சார்பில் அண்ணா கலையரங்கம், மீன் மார்கெட் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய கிளைகளில் மே நாளையொட்டி 01.05.2018 அன்று காலை 10.00 மணியளவில் சங்கக் கொடியேற்றப்பட்டது.
அண்ணா கலையரங்கம் மற்றும் மீன் மார்கெட் கிளைகளில் தோழர் சுப்ரமணி தலைமையேற்க தோழர் சத்யா சங்கக் கொடியை ஏற்றினார். இவ்விரு கிளைகளிலும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார்.
அடுக்கம்பாறை கிளையில் தோழர் முருகன் தலைமையேற்று சங்கக் கொடியை ஏற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்!
“கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்தின்கீழ் வேலூர் மாநகரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மேநாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2018 அன்று நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் அவர்கள் வேலூர் அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து மாலை 5.00 மணிக்கு பேரணியை தொடங்கி வைத்தார். வேலூர் மாநகரின் லாங்கு பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்ற மேநாள் பேரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் முடிவடைந்தது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் மேநாள் குறித்தும் மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றி கூறினார். பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலூர்.
*****
கோத்தகிரியில்…
கோத்தகிரி நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 01 .05.2018 காலை 10 மணிக்கு செங்கொடி ஏற்றப்பட்டு மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தோழர் பாலன் தலைமை ஏற்று முழக்கமிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அவரை தொடர்ந்து மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் கொடியேற்றி உரையாற்றினார். அவரது உரையில் “மேதினத்தில் சிக்காகோ தொழிலாளர்களின் இன்னுயிர் ஈந்து பெறப்பட்ட உரிமைகள் இன்று நம்மிடம் இல்லை. இல்லாத உரிமைகளை மீண்டும் பெறும்வரை மே தினம் கொண்டாட்ட நாளல்ல போராட்ட நாள்” என்றார்.
1 of 3
இறுதியாக மக்கள் அதிகார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றய போது, “தொழிலாலாளர்களுக்கு மட்டு்மல்ல அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் இன்று பறிக்கப்ப்பட்டுள்ளன, இது கட்டமைப்பு நெருக்கடியின் விளைவு எனவே உரிமைகளை பெற அனைத்து தரப்பு மக்களும் ஜல்லிக்கட்டு -மெரினா போராட்டத்தை போல வீதிகளில் இறங்கி போராடி முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் வாகனப் பிரிவு தோழர்கள் சுப்பிரமணி, பாபு, கண்ணன், துரை, மணி, ரஜினி உட்பட 40 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் : நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு-பு.ஜ..தொ.மு)கோத்தகிரி.
கேள்வி : ஏன் வினவு, மூலதனம் (காரல் மார்க்ஸ் எழுதிய முக்கியமான நூல்) படிக்க ஒரு அப்பழுக்கற்ற – வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு கட்சி உறுப்பினராகதான் இருக்க வேண்டுமா? ஒரு சமூக அறிவியல் என்ற முறையில் அதை படிக்க முடியாதா? -ஆதவன்
அன்புள்ள ஆதவன்,
மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிறது.
துறை சார்ந்து ஒரு படிப்பை பயில நாம் ஏதேனும் ஒரு கல்லூரிக்கு செல்வது அவசியம். இணைய காலத்தில் எல்லாம் கையில் அடக்கம் என்றான பிறகு நாம் மெய்நிகர் உலகிலேயே எதையும் படிக்கலாமே என்ற கேள்வி எழுகிறது!
நவீன மருத்துவத் துறையில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமென்றால் அவர் ஐந்தாண்டுகள் கல்லூரியில் படித்து அதில் கடைசி வருடம் “ஹவுஸ் சர்ஜன்” – பயிற்சி மருத்துவர் நடைமுறை தேர்வில் தேற வேண்டும். மேலும் சில வருடங்கள் படித்தால் மட்டுமே முதுகலைப் பட்டம் பெற முடியும்.
இந்த எம்.டி டாக்டர் படிப்பை ஒருவர் இணையத்திலேயே படித்து முடிக்க முடியுமா? இல்லை இது உயிர் காக்கும் விசயம் என்பதால் அப்படி ரிஸ்க் எடுக்க முடியாது என்பீர்கள். அதே போன்று புரட்சி என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு தொடர்புடையது எனும் போது அந்த “ரிஸ்க்” இங்கே இன்னும் பிரம்மாண்டமான அளவில் இருக்கிறதல்லவா? மருத்துவத்தில் அப்படி விசப் பரிசோதனை எதுவும் இருக்க கூடாது என்பதை முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் சட்டங்கள் பார்த்துக் கொள்கின்றன.
மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை!
மாறாக மார்க்சியம் என்பது கருத்து, அரசியல், கொள்கை சார்ந்ததாக இருப்பதால் அதற்கு அத்தகைய கவசங்கள் இல்லை. ஆனால் எது கம்யூனிசம் எது கம்யூனிசமில்லை என்ற கேள்விக்கான பதில்களாகவே மார்க்சிய ஆசான்களின் படைப்புகள் எழுதப்பட்டன. சொத்துரிமை, அரசு – அதிகாரம் என அரசியலின் மையமான அச்சை பேசுவதாக மார்க்சியம் இருப்பதால் அதை எதிர்த்து பேசும் இசங்களும், போலிகளும் நிறைய இருக்கின்றன.
அறிவியல், வரலாறு போன்றவையும் நவீன கல்வியால் வரையறுக்கப் பட்டிருந்தாலும், பிள்ளையார் சிலை அந்தக் கால பிளாஸ்டிக் சர்ஜரியின் சான்று, இராமயண புஷ்பக விமானம்தான் இன்றைய ஜெட் விமானங்கள், அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம்தான் இன்றைய நைட்ரஜன் குண்டு என்று உளறுவோர்தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இந்த உளறல்களை வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார்கள். அதைப் போல கம்யூனிசம் மார்க்சியம் குறித்தும் பல முட்டாள்தனமான கருத்துக்கள் பல அறிஞர்களிடம் இருப்பதை நாம் மேற்கண்ட பிளாஸ்டிக் சர்ஜரி நோயாக மட்டும் கடந்து போய்விட முடியாது. எது அசல், எது போலி என்று விவாதித்து நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முக்கியமாக புதியவர் ஒருவர் இத்தகைய குழப்பமான சூழலில மார்க்சியம் கற்பது எப்படி? அதற்கு கட்சியில் சேரவேண்டியது அவசியமா?
யூடியூப்பில் ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு, சி.ஜி அனைத்தையும் படிப்பதற்கு ஏராளம் டுடோரியல்கள் உள்ளன. இதைப் படித்தே ஒருவர் இயக்குநர் ஆக முடியுமா?
இணையம் பரவலாவதற்கு முன்னர் மேற்கண்ட சினிமா துறைகளில் சேர்ந்து ஆளாவதற்கு நீங்கள் ஒரு முன்னோடியிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். சில பல ஆண்டுகள் கழித்தே உங்களுக்கு வாய்ப்பு வரும். இப்போது அப்படி இல்லை. பல புதிய இயக்குநர்கள் யாரிடமும் சேராமலேயே முதல் படங்களை இயக்குகிறார்கள். எனில் இந்த சான்றின் படி தனியாக படித்தே ஒருவர் சினிமாவில் கலைஞராக முடியாதா?
இணையத்தில் படிப்பது மூலம் ஒருவர் இயக்குநராக உருவாக முடியுமா?
இல்லை. இந்த புதிய இயக்குநர்கள் அனைவரும் சினிமா எனும் கூட்டு உழைப்பின் பாதையில் பயணிப்பதால் அங்கே தயாரிப்பாளர் நியமிக்கும் படைப்பாளிகள் தொட்டு பிற கலைஞர்கள் வரை புதியவரின் தவறுகளை திருத்துவதற்கு இருக்கிறார்கள். மேலும் அந்த புதிய இயக்குநரும் தனது பழைய வாழ்வில் ஏதேனும் ஒரு ஓட்டைக் கேமராவை வைத்து நிறைய குறும்படங்கள், சோதனை முயற்சிகளை செய்து பார்த்திருப்பார். அத்தகைய நடைமுறையில் ஈடுபட ஈடுபடத்தான் கலை பழக்கமாகும். இது போக மைல்கல் சாதனைகளான உலகப் புகழ் பெற்ற படங்களை பார்த்து அவர் ஏராளமான படிப்பினைகளையும் கற்றிருப்பார். உலகப் பட அறிமுகம் இல்லையென்றாலும் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான படங்களை பார்த்துப் பார்த்து அவர் காட்சிக் கலையை பழகியிருப்பது அவசியமாக இருக்கிறது.
இத்தகைய கூட்டுத்துவம் சார்ந்த நடைமுறை பயிற்சி இல்லாமல் புதிய இயக்குநர்கள் இல்லை. முந்தைய காலத்தில் இந்த பயிற்சியை ஒரு முன்னோடி அளித்தார். இப்போது பலரும், பல முறைகளில் அளிக்கின்றனர். அவற்றில் இணையமும் ஒன்று.
இணையத்தில் மருத்துவ தளங்களைப் பார்த்து அதில் மருந்துகள், நோய்க்குறிகளை அறியும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு மருத்துவர் ஒரு மருந்தை தேர்வு செய்து ஒரு நோயாளிக்கு கொடுப்பது என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் தனிச்சிறப்பான முடிவு மட்டுமே. குறிப்பிட்ட மருந்தை அல்லது மருந்துகளின் தொகுப்பை அவர் தனது அனுபவம், நோயாளியின் குறிப்பான நிலை, குறிப்பிட்ட நாடு – பகுதி மக்களின் தனிச்சிறப்பான யதார்த்த நிலை, குறிப்பிட்ட பகுதியின் விசேடமான காலநிலை, குறிப்பிட்ட மருந்தின் தனிச்சிறப்பான விளைவுகள் ஆகியவற்றை வைத்து முடிவு செய்கிறார்.
இன்டெர் நெட் மூலம் ஒரு டாக்டர் ஆகிவிட முடியாது!
ஆனால் இணையத்தின் வழி கருத்தாளர்களாக உருவெடுத்திருக்கும் கந்தசாமிகளும் காயத்ரி-கஸ்தூரிகளும் அதன் அடிப்படை தொகுப்பை படித்து விட்டு மருத்துவர்களை பாடாய்ப் படுத்துகின்றனர். நவீன மருத்துவர்கள் முன்பெல்லாம் மக்களிடம் அதிகம் பேசமாட்டார்கள். சந்தேகங்கள் கேட்டால் சீறுவார்கள். இப்போது மக்கள் விழிப்புணர்வு பெறும் காலத்தில் அந்த சீறல் நிறைய மாறியிருக்கிறது. அதேநேரம் நாம் மருத்துவர்கள் அல்ல, அறிவிலிகள் என்பதை இணைய தலைமுறை ஒப்புக் கொள்ளாது. இந்த நோய்க்கு இந்த மருந்துதானே என்று எளிமைப்படுத்தி தொல்லைகளை வரவழைத்துக் கொள்கிறது.
ஆகவதான் அலோபதி மருத்துவத்தை வெறும் புத்தகங்கள் சார்ந்தோ, இணையம் சார்ந்தோ கற்றுக் கொள்ள முடியாது. கல்லூரிகளில் பல பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள், நவீன சோதனை எந்திரங்கள், மருத்துவமனைகள், நோயாளிகளான மக்கள் ஆகியோர் சேர்ந்தே ஒரு மருத்துவரை உருவாக்குகிறார்கள். இந்த பல்துறை நடவடிக்கைகளை அந்தந்த வகுப்பின் பேராசிரியர் ஒருங்கிணைக்கிறார்.
இந்த விதி மார்க்சியத்திற்கும் பொருந்தும்.
ஃபேஸ்புக்கில் தமீம் தாந்த்ரா என்பவர் மாஸ்கோ பதிப்பக தமிழ் நூல்களை வாங்கிப் படிக்க முயன்றும் முடியவில்லை, மொழிபெயர்ப்பு படு மோசம், என்பதாக தெரிவித்திருந்தார். “டெம்பிள் மங்கிஸ்” யூடியூப் சானலின் விஜய் ஆதிராஜ் என்பவரும் தமிழில் இருக்கும் மார்க்சிய நூல்களில் மொழிபெயர்ப்பு படுமோசம் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கும் பரிகாரம் செய்யும் முகமாக சில சி.பி.எம் நண்பர்கள் நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை அவர்களுக்கு சிபாரிசு செய்து அந்தக் குறையை போக்க முயன்றனர்.
ஒருவேளை நல்ல மொழிபெயர்ப்பில் இல்லையென்று நல்ல ஆங்கிலத்தில் மார்க்சிய நூல்களை கொடுத்தாலும் தமீம் தாந்த்ரா போன்றோர் மார்க்சியத்தை தெளிவாக படித்து தேற முடியுமா? முடியாது அல்லது பெரும் சிரமம் என்கிறோம். இது மருத்துவம், இயற்பியல், வேதியியல் என இயற்கை அறிவியல் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும்.
இந்த உலகம், சமூகம் ஏன்இப்படிஇருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது.
இந்த உலகில் இயற்கையின் இயக்கத்திலிருக்கும் வளர்ச்சி குறித்த பொது விதிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் மனித சமூகத்தின் இயக்கம் மற்றும் வளர்ச்சி பற்றிய பொதுவான விதிமுறைகளை மார்க்சியம் கண்டுபிடித்து முன்வைக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஒரு நாட்டில் புரட்சி நடத்த தேவையான பாதை – திட்டங்களை வகுக்க முடியும். அறிவுத்துறை நடவடிக்கையாக பார்த்தால், மனித சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் திறம்பட ஆய்வு செய்து புரிந்து கொள்வதோ, அதை மாற்ற முனைவதோ மார்க்சியம் கற்றுக் கொண்டோர் மட்டுமே மற்றவர்களை விட சரியாக முன்வைக்க முடியும்.
மேலே உள்ளவற்றை சுருக்கிப் பார்த்தால் தத்துவம், நடைமுறை இரண்டும் இணைந்திருப்பதை காணலாம். இந்த உலகம், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது. இவை இரண்டையும் பிரித்தால் அது மார்க்சியமும் இல்லை, அதைப் பயின்று கொள்வதும் சாத்தியமில்லை.
தனிநபராக இருக்கும் அறிஞர்களும், பெயரளவில் இருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சியினர் பலரும் மார்க்சியத்தை ஒரு ஏட்டுக் கல்வியாக மட்டும் பார்ப்பதால் அதன் இலக்கணத்தை எளிமைப்படுத்தி பல நேரங்களில் தவறாக வியாக்கியானம் செய்தும் புரிந்து கொள்கின்றனர், பேசுகின்றனர். இதற்கு அவர்களது பழைய, பிழையான கண்ணோட்டங்களும் காரணமாகின்றன. வர்க்க முரண்பாட்டை ஏற்பதும், அதை மாற்றுவதுமான பார்வை இல்லாமல் இந்த அறிஞர்கள் நிலவும் சமூக அமைப்பை மறைமுகமாக ஆதரிப்பதான தடத்தில் மார்க்சியத்தை பிழையாக விளக்குகிறார்கள். ஆகவே இதில் பிழை எவ்வளவு, காரியவாதம் எவ்வளவு, தேர்தல் கூட்டணிக்கான ஆதாயம் எவ்வளவு என்பதை துல்லியமாக பிரிப்பது கடினம்.
ஒரு நுட்பமான இசையை ரசிக்கும் போது, ஒரு சூக்குமமான கவிதை – ஓவியத்தோடு ஒன்றும் போது, மார்க்சியம் மட்டும் படித்து புரிந்து கொள்வது சிரமமா அது என்ன கம்பசூத்திரமா என்று ஒரு கேள்வி எழலாம்.
இந்த சான்றுகளையே எடுத்துக் கொண்டாலும், இசை, ஓவியம், கவிதைகளை ரசிப்பதற்கு சில ஆண்டுகளாவது பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சியிலும் முன்னோடிகள், பாடத்திட்டங்கள் போன்றவை குறைந்த பட்சமாக இருக்க வேண்டும். மேலதிகமாக கலை ரசனை குறித்த பார்வையில் ஒரு கலைஞனைப் போல ஒரு பார்வையாளனும் சுதந்திரமாக ரசனை எனும் இரண்டாவது படைப்பு முயற்சியில் ஈடுபடும் போது இப்பார்வைகள் பலவாய் வேறுபடலாம்.
ஆகவே இக்கலைகளை ஒரு ரசனை என்று சுருக்கும் போது அது தனிநபரின் பார்வையாகவும் இருக்கலாம் என்பதால் இந்த ரசனைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. குறிப்பாக கலை என்பது நமது அறிவு – சமூகம் சார் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும் உணர்ச்சி என்பதாலும் அது தன்னுடைய பயன்பாட்டு பொருளிலிலும் கூட தொழிற்படும். அதனால்தான் ‘தரமான’ கர்நாடக இசையை விட ‘தரமில்லாத’ திரையிசை இளைஞர்களின் உற்சாகத்தை கரைபுரண்டு ஓட வைக்கிறது.
உரையாடும் மார்க்ஸ்
மார்க்சியம் அத்தகைய தனிநபர் சார்ந்த உணர்ச்சிகளின் ரசனையோடு தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வை ஆய்வு செய்கிறது. அதனால்தான் மற்ற அறிவுத் துறைகளை விட மார்க்சியத்தை கற்பதற்கு தனிச்சிறப்பான கல்லூரிகள், கடும் முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி என்பது புலனறிவோடும், உணர்வு என்பது பகுத்தறிவோடும் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரம் இந்த உலகில் துன்பப்படும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது நம்மிடம் உணர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த மக்களை விடுதலை செய்வது எப்படி என்ற மார்க்சியக் கல்வியை படிப்பதற்கு தேவையான மனித எத்தனம் கிடைக்க முடியும்.
இந்த இரண்டையும் அளிக்கும் கல்லூரிகள்தான் கம்யூனிஸ்டுக் கட்சிகள். சரி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட பல இருக்கிறதே, அவற்றில் எது நல்ல கல்லூரி என்ற கேள்வி எழுகிறதா? ஒருவகையில் எந்த கல்லூரி பொறியியல் படிப்பிற்கு சிறந்தது என்பதைப் போன்றும் இது தோன்றலாம். அதற்கு பதில், எந்த கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாக செயல்படுகிறது, திட்டம் – நடைமுறையில் ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது, தான் கூறுகின்ற கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொள்கிறது, புரட்சியின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா இல்லை சட்டமன்றம், பாராளுமன்ற தொகுதி உடன்பாடை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா என்றெல்லாம் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது.
முக்கியமாக ஒரு அரசியல், பண்பாடு, புரிந்து கொள்ளவே முடியாத ஒரு பிரச்சினை, தீர்வே இல்லாத ஒரு சிக்கல், ஒரு நாடு அல்லது பெரும் மக்கட் கூட்டத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றில் ஒரு சரியான கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே சரியான ஆய்வையும் தீர்வையும் முன்வைக்க முடியும்.
கல்லூரியில் கோட்பாடாக படித்த மருத்துவ அறிவியலை பல நூறு – ஆயிரம் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிக்கும் போது மட்டுமே ஒரு மருத்துவர் மருத்துவம் எனும் நடைமுறையில் தேர்ச்சி பெறுகிறார். அல்லது தன்னை மருத்தவராக செயல்படும் இயக்கத்தில் புகுத்துகிறார். அது போன்று கட்சியில் சேர்ந்து மார்க்சியம் பயிலும் போது மட்டுமே நடைமுறையிலும் அதனை கற்றுத் தேர முடியும்.
மக்கள் என்றால் யார், வர்க்கங்கள் என்றால் என்ன, புரட்சியின் போர் தந்திரம் – செயல் தந்திரம் என்றால் என்ன?, புரட்சி அலை ஓங்குகிறது அல்லது தாழ்கிறது என்பது எவற்றை வைத்து முடிவு செய்வது, பூஜ்யம் என்ற நிலையில் இருந்து துவங்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி சர்வ பலம் நிறைந்த ஆளும் வர்க்கத்தை எப்படி வீழ்த்தும், புரட்சிக்கு முந்தைய – பிந்தைய கால கட்டத்தில் நம்முடைய பணி எதுவாக இருக்கும், புரட்சியை சாதித்த ரசிய – சீன நாடுகளில் கம்யூனிசம் ஏன் பின்னடைவுக்குள்ளானது, அவற்றிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பவையெல்லாம் கட்சி நடைமுறைகளோடுதான் பயின்று கொள்ள முடியும்.
சரி, ஒருவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தால் போதும், அவர் மார்க்சியத்தை சுலபமாக பயின்று கொள்ள முடியுமா? என்று கேட்டால் நம் பதில், இல்லவே இல்லை. நடைமுறை எனும் பாதியோடு தத்துவம் படித்தல் எனும் மறுபாதியும் இருந்தாக வேண்டும். கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை என்றால் அவர் கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது. அல்லது அவரது கம்யூனிச வாழ்வும் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. இங்கே நாம் பேசவது ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியின் அணிகள் எனப்படும் முன்னணிப் படையினரைப் பற்றித்தான். ஏனெனில் கம்யூனிஸ்டு கட்சிகளை ஏற்று ஆதரிக்கும் மக்கள் பலருக்கும் கம்யூனிசம் என்பது குறித்து விரிவாக தெரிந்திருக்காது, அது சாத்தியமுமில்லை. அவர்கள் வர்க்கம் என்ற முறையிலும், அனுபவத்திலம் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்.
ஒரே மருத்துவக் கல்வியை படித்து வந்தாலும், பிரபலமான மருத்துவர்களின் சிகிச்சை முறை சற்றே அல்லது கணிசமான அளவில் மாறுபடுகிறது அல்லவா? காரணம் அவர்கள் தமது கல்வி – அனுபவத்தின் ஊடாக சொந்த முறையில் மருத்துவத்தை பிரயோகிக்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியிலும் அத்தகைய சொந்த பிரயோகங்கள் பல சேர்ந்தே இறுதியில் அந்த நாட்டின் புரட்சியை சாத்தியமாக்குகிறது. இந்த சொந்த பங்களிப்புகள் என்பவை பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனத்தின் தனித்தனி செடிகள், மலர்களே அன்றி அவை தனியாக ஒரு காட்டிலோ, தெருவிலோ இருப்பதல்ல. ஒரு நாட்டில் எப்போது புரட்சியை கொண்டு வருவோம் என்ற கேள்விக்கு ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் தனிநபர்கள் தீவிரமாக விடை தேடும் போதே இந்த தனிநபர் பங்களிப்புகள், சாதனைகள் தவிர்க்கவியலாமல் தோன்றுகின்றன. ஆகவே இவற்றை கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் தனிநபர் சாதனைகள் என்று புரிந்து கொள்வது அவசியம்.
மேற்கு ஐரோப்பிய மக்கள், சமூக அளவில் முன்னேறியவர்களாக இருக்கும் போது ரசியா பின்தங்கி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியமில்லை என்றார்கள், லெனினின் சமகாலத்திய கம்யூனிஸ்டுகள் பலர். ஆனால் அரசியல் ரீதியில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை விட ரசிய பாட்டாளி வர்க்கம் முன்னேறி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியம், இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சாதித்துக் காட்டினார்கள். தியரிப்படி முடியாது என்ற ஒன்றை முடியும் என்று சாதித்த இந்த அம்சமே நாம் குறிப்பிடும், மார்க்சியம் என்பது தத்துவம் – நடைமுறை இரண்டோடும் சேர்ந்த ஒன்று என்பது.
போலவே பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் சீனாவில் புரட்சி சாத்தியமே இல்லை எனும் போது உழவர்கள் – தொழிலாளி கூட்டணியில், தொழிலாளி வர்க்கத் தலைமையில் ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி புரட்சி நடத்துவது சாத்தியம் என்று மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்டுக் கட்சி சாதித்தது. கம்யூனிசத்தை வறட்டுவாதமாக கற்கும் எவரும் இந்த சீன, ரசிய சான்றுகளின் வேறுபாடுகளை ஒரு போதும் உணர முடியாது.
கட்டுப்பாட்டிற்கு பேர் உள்ளது கம்யூனிஸ்டுக் கட்சிதான். ஆனால் கட்சிக்குள் கம்யூனிசமல்லாத கருத்துக்கள் உள் புகுந்து கட்சி சீரழியும் என்பதையும், அப்படி சீனாவில் ஒரு நிலை உருவானபோது, பொதுமக்கள், அணிகளிடம் தலைமையை தகர்த்தெறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தவரும் அதே கட்டுப்பாடான கம்யூனிசத்தின் மாவோதான்.
ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல்.
ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல். இதைப் படிப்பது என்பது அதன் பொது விதிகளை தெரிந்து கொள்வது, இதை புரிந்து கொண்டோம் என்பது அந்த விதிகளின் துணையோடு சமூக நிகழ்வுகளை ஆய்வு செய்வதால் கிடைப்பது. குர்ஆன் – பைபிள் போல மார்க்சிய நூல்களில் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இன்ன தீர்வு என்று ஒன்றைக் காட்டவே முடியாது.
மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வுமுறையில் அலசி எழுதப்பட்ட படைப்புகள். இந்த நூல்களை படிப்பதால் நாம் கற்பது என்ன? அவர்கள் மார்க்சியத்தின் துணை கொண்டு அந்த நிகழ்வை எப்படி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனால் ஏன் அந்த முடிவுகளுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளை வந்தடைந்த பாதையின் விசேட அம்சங்கள் என்ன என்பதையே கற்கிறோம். இந்த பயிற்சி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.
மூலதனம் நூல் முதலாளித்துவ பொருளாதாரம் செயற்படும் இரகசியத்தை திறந்து காண்பிக்கிறது. அதன் முரண்பாடுகளை ஆய்வின் வழி நிரூபிக்கிறது. அந்த முரண்பாடுகளே அதற்கான சவக்குழியை வெட்டும் என்பதை ஏற்க வைக்கிறது. இதில் எந்த வர்க்கம் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடும், உணர்வின் மேதைமையோடும் முன்வைக்கிறது.
ஆகவே முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமோ அவையும், அந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவிலிருந்து உலகைக் காக்கும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கம்யூனிசக் கட்சியின் கற்பித்தலும் இன்றி மூலதனம் நூலை மட்டுமல்ல, மற்ற கம்யூனிச நூல்களையும் கற்பது சிரமம் என்கிறோம்.
கட்சி என்றால் தனிநபரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், படைப்புணர்ச்சியை நிறுத்திவிடும், புத்தாக்க சிந்தனைகளை அழித்து விடும் என்று முதலாளித்துவ உலகின் ஆதரவு அறிஞர்கள் வரலாறு நெடுகிலும் உருவாக்கி வைத்திருக்கும் – தோ பாரு பூச்சாண்டி வாறான், ஒழுங்கா சாப்பிடு – தவறான அபிப்பிராயங்கள் கம்யூனிஸ்டு கட்சியில் சேருவது குறித்து நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மறுபுறம் உலகமயம் உருவாக்கியிருக்கும் வண்ணமயமான தூண்டில் புழு வாழ்க்கை வசதிகளும் கூட இந்த தயக்கத்தினை ஒரு நீதி போல அறம் போல பேசவைக்கின்றன. தனிநபரின் காரியவாத வாழ்க்கை கம்யூனிசத்தின் கூட்டுத்துவ இலட்சியத்தினை தவறு என்று பேசும் அடிப்படையை தோற்றுவிக்கிறது.
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கம்யூனிச நூல்கள் கற்கும் ஆர்வம் இளையோரிடம் அதிகரித்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் கம்யூனிச நூல்கள் அதிகம் விற்றிருக்கின்றன. ஆனால் அந்த நூல்களை வாங்கியோர் படிக்க முயன்றும் இது ஏன் புரியவில்லை என்று குழம்பியிருப்பர்.
அவர்களை அழைக்கிறோம், வாருங்கள் மார்க்சியம் கற்போம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் இணைந்து மார்க்கசியம் எனும் இந்த மகத்தான தத்துவத்தை கற்பதோடு, அதை மனித குல விடுதலைக்கான போராட்டமாக மாற்றும் பணியிலும் நம் வாழ்வை இணைக்க முடியும். இதை விட நமது வாழ்க்கை அதன் பிறவிப் பொருளை அடைவதற்கு வேறு வழி இருக்கிறதா?
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ரிக்சா தொழிலாளிகள் முக்கியமானவர்கள். கால ஓட்டத்தில் இன்று ரிக்சாவிற்கு தேவை இல்லை. ஆட்டோ வந்து, பிறகு ஷேர் ஆட்டோ வந்து இன்று அவையும் தத்தளிக்கும் வண்ணம் ஓலா – உபர் கால் டாக்சிகள் ஆக்கிரமித்துவிட்டன. ரிக்சா தொழிலை நம்பி வாழ்ந்த சில ஆயிரம் தொழிலாளிகள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் சிலர் வேறு போக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்சாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் வயதானவர்கள்தான். மே தினத்தில் இந்த தொழிலாளிகளை சந்தியுங்கள்!
சென்ட்ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலையில் பயணிகளை ஏற்றிச் செல்லை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ரிக்சாக்கள்!
இன்னைக்காவது ஒரு சவாரி வருமா என்ற ஏக்கத்துடன் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலையே பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் ரிக்சா தொழிலாளி!
குப்புசாமி, ஒரு புது ரிக்சா வாங்கணும்னா 25,000 ரூபா. இதுவே பழசு வாங்குனா 10,000 ஆகும். அதுக்கு பெயின்ட் அடிச்சி FC காட்டி லைசென்ஸ் வாங்க மூவாயிரம் ஆகிடும். ஆர்.டி.ஒ முத்திரை குத்தினா தான் வண்டிய ஓட்ட முடியும். இப்ப யாரும் ரிச்சாவுல ஏறது இல்ல. ஓலா ஆட்டோ,ஓலா காருன்னு போறாங்க. முன்பெல்லாம் மார்வாடிங்க ஏறுவாங்க. இப்ப அவங்களும் இல்ல. லக்கேஜ் அதிகமா இருந்தா எங்ககிட்ட வருவாங்க. இல்லனா வெத்தலைய அடுக்கின மாதிரி ஆட்டோவுல கூட்டம் இருந்தாலும் அதுல ஏறிக்குறாங்க. ரிக்சாவ கேவலமா நெனக்குறாங்க. காலையில நாலு மணியில இருந்து இப்ப வரைக்கும் ஒரு சவாரி வரல. மூணு நாளா கூட வண்டி ஓடாம இருந்திருக்கு.
ஆடலழகன், எம்ஜிஆர் ரிச்சாக்காரன்னு படம் எடுத்தாரு. அதனால அவரு நல்லா சம்பாதிச்சாரு. ஓபீஸ்,இபிஎஸ்னு எந்த பாடுபசங்களும் எங்களுக்கு ஒன்னும் பண்ணல. பத்து வருசத்துக்கு முன்னாடி இந்த சென்னையில 18,000 ரிக்சா இருந்துச்சி. இப்ப இரண்டாயிரம் வண்டி கூட இல்ல. பட்டாளம் B&C மில்லுல மட்டும் மூவாயிரம் ரிக்சா இருந்துச்சி இப்ப ஒன்னு கூட இல்ல. சென்ட்ரலயும், சவுகார்பெட்டையிலும் தான் ஏதோ கொஞ்சம் வண்டி ஓடிட்டு இருக்கு. எல்லாம் ஆட்டோவால அழிஞ்சிடுச்சி. ஆட்டோவோ சொல்லியும் தப்பு கிடையாது. அவங்களுக்கும் வாயிவயிறு இருக்கு. அதுக்கும் பெட்ரோல் போடணும். அவங்க தி.நகர், அண்ணா நகர்னு தொலைவா போனா பரவாயில்லை. இங்க இருக்க சந்து பொந்து கூட சவாரி வந்தா நாங்க எப்படி பொழைக்கிறது சொல்லுங்க!
சவாரி எதுவும் இல்லாததால் ரிக்சாவிலேயே தூங்கும் தொழிலாளி.
ராமு-மணி, ஆட்டோ எங்களுக்கு பெரிய போட்டியா இருக்கு. தொழில்ல நாங்க எப்பவும் நேர்மையா இருப்போம். யாரையும் ஏமாத்த மாட்டோம். நாங்க மிதிக்கிற கஷ்டத்தை பார்த்துட்டு பத்து ரூபா அவங்களே சேர்த்து கொடுப்பாங்க. அப்படித்தான் எங்க வண்டி ஓடுது.
சீனுவாசன்-ஜெயலட்சுமி, எங்க மாமனார் இங்க ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவரு போன பிறகு நான் இந்த வேலைய செய்யுறேன். கல்யாணம்,கருமாதி எதுவானாலும் இந்த பிளாட்பாரத்துலதான். என்னோட கல்யாணமும் இங்கதான் நடந்துச்சி. கானா பாட்டு கச்சேரி, விருந்து எல்லாம் இங்க நடக்கும். ரேசன் கார்டு,ஆதார் கார்டு எல்லாத்துலயும் இந்த அட்ரஸ் தான் இருக்கு. குடிக்கிற தண்ணிய சென்ட்ரல்ல புடிச்சிப்போம். இங்கேயே சாப்பிட்டு படுத்துப்போம். காசு இருந்தா கவுச்சி. இல்லனா சாம்பார் சோறுதான்.
எங்க சொந்த பந்தம் எல்லாம் இங்க தான் இருந்தாங்க. இரண்டு வருசத்துல அஞ்சி பேர் செத்துட்டாங்க. என்னோட தங்கச்சி தீக்குளிச்சி இறந்துடுச்சி. ஏழுமலை, வெங்கடேசன் தண்ணி அடிச்சி இறந்துட்டாங்க. இவங்க தான் எங்க கடவுள்.
சின்னபொண்ணு, என்னோட புருஷன் செத்த பிறகு, பழக்கடை போட்டு பொழச்சிட்டு வந்தேன். இப்ப அந்த கடையையும் கார்ப்பரேசன் ஆளுங்க எடுத்துட்டானுங்க. நாலு நாளா சாப்பாட்டு வழி இல்லாம இருக்கேன். எனக்கு 12 வயசுல ஒரு பொண்ணு இருந்துச்சி. அதுவும் இங்க கரண்ட் ஷாக் அடிச்சி செத்துடுச்சி. எந்த ஆதாரவும் இல்லாம இந்த பிளாட் பாரத்துல கெடக்கிறேன்.
ஆதாரைக் கட்டாயமாக்க முயற்சிக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நடந்த வழக்கு விவாதங்களின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயிரியளவு விவரங்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவதால் அவற்றை ஹேக்கர்கள் களவாடும் வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், ஆதார் விவரங்கள் சேமிக்கப்பட்டுள்ள கணினிகள் நிலவறைக்குள் இருப்பதாகவும் அந்த அறையின் சுவர்கள் 13 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டவையாக இருப்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை யாராலும் களவாட முடியாது என பதிலளித்துள்ளார்.
காவிரி வழக்கில் ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு பொருள் கூறும் அகராதியாகச் செயல்பட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் வழக்கில் கனமான சுவர்களைக் கொண்டு மின்தரவுகள் களவு போவதைத் தடுத்து விடுவோம் என்கிற மத்திய அரசின் வாதத்தை கேட்டுக் கொண்டது. கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற இந்த விளக்கத்தைச் சொன்னவர் செல்லூர் ராஜூத்தனமாக நடந்து கொண்டார் என்றால் அதையும் கேட்டுப் பதிவு செய்து கொண்ட மேன்மை தங்கிய நீதிபதிகளை எப்படி அழைப்பது?
போகட்டும். மேற்படி “ஐந்தடிச் சுவரைத் தாண்டி” நடக்கும் ஆதார் விவரத் திருட்டுக்கள் குறித்த செய்திகள் அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஆதார் திருட்டு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆந்திராவில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் 89,38,138 பயனாளிகளின் ஆதார் விவரங்கள் அரசின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தன. ஆதார் எண்களுடன் சேர்த்து வங்கிக் கணக்கு விவரங்களும் வெளியாகின. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையில் வெளியாகும் போது அவற்றைக் கொண்டு எந்த வகையான சைபர் குற்றங்களையும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விவரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையதளத்தில் வெளியாகியிருப்பதை, அரசு அதிகாரிகளோ, ஆதார் விவரங்களைச் சேமித்து வைக்கும் கணினிக் கட்டுப்பாட்டகத்தை பராமரிக்கும் டி.சி.எஸ் நிறுவனமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக சிரீனிவாஸ் கோடாலி என்கிற இணைய ஆராய்ச்சியாளரே முதன்முதலாக கண்டுபிடித்து ட்விட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார் (https://twitter.com/digitaldutta/status/989332234976088064?ref_src=twsrc%5Etfw) இதற்கிடையே அதே ஆந்திர மாநிலத்தில் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசின் இணைய தளத்தில் சுமார் 1.39 லட்சம் பேருடைய சாதி, மொழி, மதம், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ஆதார் எண்களுடன் வெளியாகின.
மக்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதுமே ஆதார் திட்டத்தின் நோக்கம். மக்களுடைய நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட இன்னபிற நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவே வங்கிக் கணக்கு, வருமானவரித்துறை, செல்பேசி என சகலத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகின்றது. ஆதாரைக் கட்டாயம் ஆக்கலாமா கூடாதா என்கிற வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஏறத்தாழ அனைத்து விசயங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்கிற நிலையை அரசு நிலைநாட்டி விட்டது. ஆதார் என்பது தனிநபர் உரிமையில் தலையீடு செய்வதா இல்லையா என்கிற கேள்வியில் இருந்து, ஆதார் என்பது பாதுகாப்பானதா இல்லையா என்கிற கேள்விக்கு விவாதத்தை நகர்த்திச் சென்று விட்டனர்.
மோடி அரசின் இரட்டை நாக்குத்தனத்திற்கு எடுப்பான உதாரணமாக ஆதார் உள்ளது. ஒருபக்கம் ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்கைக் கோரி தினசரி குறுஞ்செய்திகளாக அனுப்பி பீதியூட்டிய அரசு, கடந்த 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவைத் தாம் ஏற்றுக் கடைபிடிப்பதாக பச்சையாக புளுகியுள்ளது.
இந்தப் பின்புலத்தில் ஆதார் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்களது கருத்தைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.
ஆதார் எண் குறித்து உங்களது கருத்து ?
அ. நிச்சயம் தேவை. தேசப்பாதுகாப்புக்காக எனது விவரங்களை அரசு சேகரிக்கலாம்.
ஆ. ஆதார் அவசியமில்லை. ஆனால், எனது விவரங்களை மறைப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?
இ. ஆதார் தேவையில்லை – அது அரசு மற்றும் முதலாளிகளின் ஒரு உளவுக் கருவி.
ஈ. ஆதாரின் பின்னணி குறித்து தெரியாது. கருத்து இல்லை.
பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. அங்கே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பதிவுக் கட்டணம், அறை வாடகை போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்தியும் முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கும் கட்டணங்களை நிர்ணயித்தும் நவம்பர், 2017-ல் ஆளும் பா.ஜ.க அரசு அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உபகரணங்களை பராமரிப்பதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவருவதற்கும் இந்த கூடுதல் கட்டணம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிகரித்துள்ள செலவை ஈடுகட்ட இக்கட்டண உயர்வு தேவை என மகாராஷ்டிர அரசு வாதிட்டுள்ளது.
ஆனால், இது தனியார் மருத்துவமனைகளுக்கு போகமுடியாமல் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்களின் மீது கடும் சுமையை ஏற்றியுள்ளது. ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியதோடு அரசு மருத்துவமனைகளின் கட்டணங்களையும் உயர்த்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க மத்திய மாநில அரசுகள்.
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் :
நோயாளிகளுக்கான பதிவு கட்டணம் ரூ. 10-லிருந்து ரூ.20-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டணமும் ரூ.200-லிருந்து ரூ.400-க்கு இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டண முறை உள்ள அறைகளுக்கான வாடகை 7 நாட்களுக்கு மேல் தங்குவோர்க்கு நாளொன்றுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2000-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி : தி வயர்
குழந்தைகளுக்கான நோய் கண்டறியும் சோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.350-லிருந்து ரூ.1100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி.டி ஸ்கேன், மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைகளுக்கான கட்டணம், ரூ.120 ஆக இருந்தது, தற்போது ரூ.600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பல், கண், எலும்பு அறுவை சிகிச்சைக்கான கட்டணமும் ரூ.1000 என்றிருந்தது போய், தற்போது ரூ.11,000-ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கான மகளிர் மருத்துவம், மகப்பேறியல் போன்ற சேவைகளுக்கான கட்டணமும் ரூ.50-திலிருந்து ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுவிட்டது.
இவற்றைப் போலவே, மருத்துவ சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம், ரூ.50-திலிருந்து ரூ.500-ஆக மாற்றப்பட்டு விட்டது. மேலும், இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களுக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும்.
சரி, மகாராஷ்டிரா அரசு சுகாதாரத்துறைக்கு இதுவரை எவ்வளவு செலவு செய்திருக்கிறது?
2017-18 ஆம் ஆண்டு மொத்த மாநில வருவாயில் 0.46 சதவீத்தை மட்டுமே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிகக்குறைவாகும். தேசிய சராசரியே குறைவு எனும் போது மகாராஷ்டிர அரசின் ஒதுக்கீடு இன்னும் குறைவாகும்.
மராத்திய அரசு சுகாதார துறைக்கு சராசரியாக இந்தியாவின் தனிநபர் வருவாயில் (Per Capita) ரூ. 763-ஐ ஒதுகீடு செய்துள்ளது. ஆனால், மக்கள் செய்யும் சுகாதாரத்திற்கான செலவானது தனிநபருக்கு 2684 ரூபாயாக உள்ளது. அதாவது, அரசு ஒதுக்கீடு செய்வதை விட, கூடுதலாக 3.5 மடங்கு அதிகமான தொகையை மக்கள் தங்கள் சொந்த காசில் இருந்து செலவழித்தே தங்களது உடல் நலத்தை பேணி வருகிறார்கள்.
தேசிய சுகாதார புள்ளிவிவரம் 2017-ன் படி, சராசரியாக ஒரு நபருக்கு 3000 முதல் 6600 ரூபாய் வரை சுகாதாரத்திற்கென்று ஒதுக்கி, இந்த துறையில் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக லட்சத் தீவு, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், அந்தமான், கோவா ஆகியன உள்ளன. இவையெல்லாம் சிறிய மாநிலங்கள், மக்கள் தொகையும் குறைவு.
நேர் மாறாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உ.பி, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தனிநபர் சராசரியில் 1043 ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யவில்லை. இம்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர பா.ஜ.க. தான் ஆள்கிறது.
சுகாதாரத்துறையில் ஒட்டு மொத்த இந்தியாவுமே பின் தங்கிதான் உள்ளது
2014-15 க்கான தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின் படி, சுகாதாரத்திற்கான தனிநபர் செலவு சராசரியாக 3,826 ரூபாய் இருந்தது. இதில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது 1108 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள தொகையை மக்கள் தங்கள் கைகளில் இருந்தே கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் அரசு மிகக் குறைவான தொகையையே சுகாதாரத்திற்கு செலவிட்டு வருவதும், மக்கள் தாங்களாகவே தங்களின் சுகாதாரத்தை பேணி வருவதும் தெரிய வருகிறது.
அரசின் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு 2004-05 ஆண்டு தனிநபர் வருவாயில் 22.5 சதவீதமாக இருந்தது 2014-15 ஆண்டில் 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்தது பெருமளவு அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் 1.6%-ஆக இருந்த ஒதுக்கீடு 2014-15-ம் ஆண்டில் 3.7%-மாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் அடிப்படை வசதியின்றி 61% சதவீத பழங்குடிகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றார்கள். இவர்கள் பொது சுகாதார நிலையங்களையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர்.
கல்வி, சுகாதாரம், தண்ணீர் போன்றவை மக்களுக்கான அடிப்படை உரிமைகள். மக்களுக்கு அரசு உத்திரவாதப்படுத்த வேண்டிய சேவைகளில் மருத்துவம் அத்திவாசியமான ஒன்று. இவற்றை விற்பனைக்கான சரக்காக சந்தையில் திறந்துவிட வேண்டும் என்பதுதான் காட்ஸ் ஒப்பந்தத்தின் சரத்து. இது அமல்படுத்தப்படுவதைத் தான் இக்கட்டண உயர்வும், நிதிக் குறைப்பும் காட்டுகிறது. இதில் ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்து அமல்படுத்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க அரசுகள்.
”மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ”
– இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாசகம் இதுவென்றால், நம்ப முடிகிறதா? இன்றைய நடப்போடு இவை அப்படியே பொருந்திப்போகிறதென்றால், வார்த்தைகளின் தீர்க்கதரிசனம் என்று மெய்சிலிர்ப்பதா? இல்லை, தொழிலாளி வர்க்கத்தின் தோல்வி இதுவென்று வெட்கித் தலைகுனிவதா?
வேலைக்கேற்ற ஊதியமில்லை; வேலை உத்திரவாதமில்லை; எட்டுமணிநேர வேலை என்பது எங்குமில்லை; கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டு வருவதுமான மறுகாலனியாக்கச் சூழலில் மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதும், உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது, இந்நூல்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என கண்டதுக்கெல்லாம் ஒரு தினம் அனுசரிக்கப்படுவதைப் போன்றதல்ல, தொழிலாளர் தினம். 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர்கள் இரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகத்தான் மேதினம் கடைபிடிக்கப்படுகிறதென்று பொதுவில் நாம் அறிந்திருப்போம்.
அதற்கு முன்பும் பின்புமான வரலாற்றுப் பின்புலத்தில் நின்று, அதன் வளர்ச்சிப்போக்கை சித்திரம் போல கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இச்சிறுநூல்.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள்.
1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது… 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க … கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. 1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.
1889-ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’ இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.
”உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’என்கிறார் எங்கெல்ஸ்.
வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கெதிராக, உரிமைகள் மறுக்கப்படுவதற்கெதிரானப் போராட்டங்கள் நிறைந்த இன்றையச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நினைவூட்டுகிறது, இந்நூல்.
நூல்: மே தின வரலாறு ஆசிரியர்: அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில் எம்.சிவக்குமார்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பேச : 044- 24332424
பக்கங்கள்: 32 விலை: ரூ.20.00
சென்னையில் கிடைக்குமிடம்: கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
– வினவுசெய்திப்பிரிவு
வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Puthiya Kalacharam – Vinavu 122, Nehru Park (Slum Clearance Board), Poonamallee High Road, Chennai 600084. Tamilnadu, India Mobile – (91) 99411 75876
மேநாள் சூளுரை : தோற்றுபோய், ஆள அருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிவோம்!
ஓசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம்
நாள் : 1.05.2018 மாலை 4 மணி,
இடம் : தாலுக்கா அலுவலகம் தொடங்கி ரயில் நிலையம் வரை
*****
வேலூரில்பேரணி – ஆர்ப்பாட்டம்
நாள் : 1.05.2018 மாலை 4:30 மணி,
பேரணி தொடங்குமிடம் : அண்ணா சாலை, பெரியார் சிலை அருகில்.
ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடம் : மண்டி வீதி, பழைய பேருந்து நிலையம் அருகில்.
*****
தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!
காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்பொம் ! வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோல் கொள்லைக்கு தமிழகத்தை ஏலம் விட்ட மோடி!
டெல்டா கிராமங்கள் சிரைவைப்பு! மக்களை ஒடுக்க ராணுவம் குவிப்பு! தமிழகத்தின் உரிமை காக்க தமிழா புறப்படு!
காவிரியில் மட்டுமா டெல்லி தாக்குதல்…
ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, சாகர்மாலா திட்டம் என கொத்து குண்டுகள்!
தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன – ஒன்றிணைந்து போராடுவோம்!
அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து இறுதியில் 2014-ல் மோடி பிரதமரானார்.
மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட பெயரளவுக்காவது சமூக நீதி, பொருளாதாரப் பிரச்சினைகள், இலவசங்கள் பற்றிப் பேசுகின்றன. பா.ஜ.க மட்டும்தான் பார்ப்பனிய இந்து மத வெறியை மூலதனமாக வைத்து அரசியல் கட்சியை நடத்துகின்றது. நாட்டு மக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் மதவெறியூட்டி அணிதிரட்டியிருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு சரிதான் என்று மறைமுகமாக தீர்ப்புக் கூறியது அலகாபாத் உயர்நீதி மன்றம். இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்திருக்கிறது. உடனே ரத யாத்திரையை ஆரம்பித்து விட்டார்கள், இந்து மதவெறி அமைப்பினர். எதிர்க்கும் தமிழகத்தை, ஏன் இங்கு மட்டும் என்று கேட்கின்றன ஊடகங்கள்!
குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்களுக்காக களத்தில் இறங்கினார் தீஸ்தா சேதல்வாத். மோடி செய்த குற்றத்திற்கு ஆதாரத்தோடு நீதித்துறையில் படியேறிய அவரை எவ்வளவு வதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்தனர்.
குண்டுவெடிப்புகள் சிலவற்றை நடத்திய அசீமானந்தா, பிரக்யா சிங் போன்றவர்கள் மீதான வழக்குகள் தற்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாறிவிட்டன. குற்றத்தை நிரூபிக்கப் போராடிய அரசு வழக்கறிஞர்களை மாற்றினர். சொராபுதீன் கொலை வழக்கில் அமித்ஷாவை ஆஜராகச் சொன்ன நீதிபதி லோயா, பிறகு மர்ம மரணம்! நீதிபதி சதாசிவத்திற்கோ கேரள கவர்னர் பதவி!
மோடி பிரதமரான 2014-ம் ஆண்டில் ”வளர்ச்சியை வைத்து மையப் பிரச்சாரம் என்றால் மாநில அளவில் சாதி-மதவெறிதான் தீர்மானித்தது. உ.பியில் கலவரம் செய்து புகழ் பெற்ற யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சர்.
தற்போது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி மூலம் மக்களிடம் கெட்ட பெயரை ஈட்டியிருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துமதவெறியை கையில் எடுத்திருக்கிறது.
உலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் ! – எஸ்.என்.எம். அப்தி, பத்திரிகையாளர்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதிய ஜனதாவின் அழைப்பு!
பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
அயோத்தி: முசுலீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க! – தலைமை பூசாரி பேட்டி
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானந்தாவின் ஆதாரம்!!
பாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
உ.பி. கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்!
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்!
கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
விசுவ இந்து பரிசத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
“ காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! ’’ என்ற முழக்கத்தின் கீழ், ஏப்.28 அன்று சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ பதிவு… பாருங்கள்… பகிருங்கள்…
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணம் கடந்த 21ம் தேதி கல்லணையில் துவங்கி இன்று (30.04.2018) பூம்புகாரில் நிறைவு பெற்றது.
கடந்த 5 நாட்களாக 100 கிலோ மீட்டருக்குமேல் நடந்து வந்த தோழர்களை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். பல்வேறு கிரமங்களிலும் மக்கள் தோழர்களுடன் இணைந்து நடைப் பயணத்தில்உடன் சென்றுள்ளனர். சுட்டெறிக்கும் வெய்யிலிலும் சிறுவர்களும் நடைபயணத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பல ஊர்களில் இன்று சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைப் பார்ப்பது என்பதே அரிதாகிப் போயுள்ளது. பலரும் பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றுள்ளனர். அதைத் தாண்டி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
காவிரி நீர் விவசாயத்திற்கு பயன்படுவது இருக்கட்டும், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடே பெரும் பிரச்சினையாக உள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பல இடங்களில் நிலத்தடி நீரானது கெட்டுப் போய் குடிக்க லாயக்கற்றதாகிப் போயுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரு ஆழமான அச்சம் நிலவுகிறது. ஓ.என்.ஜி.சி., மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற கொலைகாரத் திட்டங்களால் தங்கள் வாழ்கை சீரழிந்து நிலங்கள் பாலையாகும் என்ற அச்சம் தான் அது.
அந்த அச்சம் அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக மாற்றியுள்ளது. அதிலிருந்து தான் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி பிரமுகர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இந்த நடைபயணத்தை ஆதரிக்கின்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் வரவேற்கின்றனர். இந்த நடைபயணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தை தணிக்க 12 நிபந்தனைகள் போட்டுள்ளது போலீசு. குறிப்பாக ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது, 30 –பேருக்கு மிகாமல் தான் நடைபயணம் செல்வோர் இருக்க வேண்டும், என்பதில் துவங்கி பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
அதையும் தாண்டி பல ஊர்களில் உளவுப் பிரிவு போலிசார் நடைபயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களை நேரில் சென்று பீதியூட்டுகின்றனர். ஆனால் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது, “காவிரியை மீட்காது தமிழகத்துக்கு வாழ்வில்லை. இது டெல்டாவின் பிரச்சினை இல்லை ! தமிழகத்தின் பிரச்சினை!” என அர்ப்பணிப்போடு பீடு நடைபோடும் மக்கள் அதிகாரத்தின் இந்த நடைபயணத்தை ஆதரித்தவண்ணம் உள்ளனர்.
1 of 10
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கல்லணை முதல் பூம்புகார் வரை 150 கிலோமீட்டர் நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் காவேரி மீட்பு நடைபயணத்தை வரவேற்கும் பூம்புகார் மீனவத்தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள்.
1 of 12
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சென்னை பல்லாவரத்தை அடுத்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருநீர்மலை பேரூராட்சி. இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் புறநகர் பகுதி. பேரூராட்சியின் 13-ஆவது வார்டுக்குட்பட்ட ‘திருமங்கையாழ்வார்புரம்’ தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளது. இப்பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. கருங்கல் குவாரியும், சென்னை புறநகரின் குப்பைகளும் மலையாக குவிந்துள்ளன.
இங்கு பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆண்களும் சென்னையை நோக்கி நாற்புறமாய் பறக்கின்றனர். செக்யூரிட்டி, கட்டிட வேலை, தலைச்சுமை வியாபாரம் என்று கிடைத்த வேலையை செய்து வயிற்றை கழுவுகின்றனர். கூலித் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள் கற்குவாரிகளில் மண்ணோடு மண்ணாக வாழ்ந்து மடிகின்றனர். கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்த மக்களின் வாழ்க்கை இது தான்.
கழிவுநீர் கலந்த ஓடையின் ஒருபக்கம் விவசாயமும் மறுபக்கம் குப்பைக்கிடங்கும்
ஓடை தண்ணீர் சீர்கெட்டு கிடக்கிறது. தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரி நீரில் கலந்து ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. “தூர்வார மனு கொடுத்தோம். அரசு கண்டுகொள்ளவில்லை. ஆறு வார்டுகள் அடங்கிய பகுதிக்கு ஒரேயொரு ரேசன் கடை மட்டுமே உள்ளது. கட்டிமுடிக்கப்பட்ட கடை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதையெல்லாம் கேட்டும் கொடுக்காத அரசு, டாஸ்மாக் கடையை திறந்து இளைஞர்களை வீணடிக்க பார்க்கிறது” என்கிறார்கள் மக்கள்.
தண்ணீர் பற்றாக்குறையால் தனியார் லாரியில் பணம் கொடுத்து வாங்கப்படும் தண்ணீர்.
கல்குவாரியின் புழுதி மண்டலத்துக்குள் மூழ்கி மூச்சுத் திணறி வாழும் இப்பெண்கள் திருமங்கையாழ்வார்புரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டக் களத்தில் போலீசையே திணற வைத்தனர். தங்களின் வாழ்நிலையையும், போராட்டத்தைப் பற்றியும் அவர்களேசொல்கிறார்கள்.
மோகனா, மருமகளுடன் கைதானவர், “நா.. பொறந்து வளந்தது எல்லாமே இந்த இடம் தான். இங்க நாப்பது வருஷமா குடியிருக்கோம். இந்த ஏரியாவுக்கு வரதுக்கு ஒரு வழி மட்டும் தான் இருக்கு. அதிலயும் மழை பெஞ்சா ஊருக்குள்ள வரவே முடியாது. இங்க எல்லோரும் வார சம்பளம், நாள்கூலி, கம்பனியில வேலை செய்யிரவங்க.எங்களுக்கு எதுக்கு சாராயக்கடை?” என்று கேட்கிறார்.
வலதுபுறம் இருப்பவர் ராணி
மீன் வியாபாரியான ராணி “எட்டு வயசு முஸ்லிம் பொண்ண ஆறுநாளா ஊசி போட்டு மோசம் பண்ணியிருக்கானுங்க. டி.வி.யில போட்டு போட்டு காட்டுறான். தெளிவா இருந்தாலே பொம்பள பசங்கள கிண்டல் பண்றானுங்க. இதுல குடிச்சிட்டா என்ன நடக்கும்னு தெரியும். என்ன ஆனாலும் பரவாயில்ல இந்த கடைய திறக்க விட மாட்டோம். போலீசு ஜெயிலுக்கு எல்லாம் பயந்தவங்க நாங்க இல்ல.. அவ்ளோ பெரிய குவாரி ஓனர் ஜே.கே. குமாரையே எதிர்த்து போராடி குவாரிய மூடிட்டோம். அதுக்காக இரண்டு மாசம் ஜெயிலுல போட்டாங்க. பத்து வருசமா கேசு நடக்குது. “மணி அடிச்சா சோறு, மயிறு மொளச்சா மொட்ட” இதான் ஜெயிலு என்கிறார் உறுதி குலையாமல்.
மாலதி மற்றும் மையுராவுடன் கைதான பெண்கள்
மையுரா மற்றும் மாலதியுடன் கைதானவர்கள், “இந்த இடத்துல கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும்போதே ஏதோ கடை கட்டுராங்கன்னு நெனச்சோம். கொத்தனார் கிட்ட கேட்டதுக்கு ஓட்டல்னு சொன்னதால விட்டுட்டோம். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவரு தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஏர்போர்ட் ராஜா. அவரோட பையன் திலீப், “இந்த இடத்துல டாஸ்மாக்- பார் வரப்போகுது. கட்டிடம் கட்டி முடிச்சதும் கவர்மென்ட் அப்ரூவல் கெடச்சிடும்”னு அவனோட நண்பர்கள் கிட்ட பேசிட்டிருந்தான். அப்போதான் எங்களுக்கு தெரிய வந்துச்சி. அப்ப இருந்தே கடைக்கு எதிரா போராட ஆரம்பிச்சிட்டோம்.
மக்கள்கிட்ட கையெழுத்து வாங்கி மார்ச் மாசம் 22-ஆம் தேதி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனா கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கல. எங்க தொகுதியோட தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி ஊரு பஞ்சாயத்து போர்டுக்கு வந்தப்ப அவரை சந்திச்சி கலெக்டர்கிட்ட கொடுத்த மனுவோட நகலை அவர்கிட்டயும் கொடுத்தோம். “ஓட்டுகேட்டு வரும்போது எங்களை கும்பிட்டிங்க. இப்ப நாங்க உங்களை கும்பிடுறோம்” தயவு செஞ்சி இந்த கடையை மூடுங்க. உங்க கட்சிகாரர்தான் இடம் கொடுக்கிறார். இவர்கிட்ட நீங்க சொல்லுங்க என்றோம். எம்.எல்.ஏ. பக்கத்துலயே ராஜா இருக்காப்புல. எதுவுமே பேசாம “கடையை திறந்தா உடைச்சிடுங்கன்னு” சொல்லிட்டு ராஜாவ காருல ஏத்திகிட்டு போயிட்டாரு. நாங்க இங்கயும் அங்கயுமா வெயில்ல அலைஞ்சோம்.
22-ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு வேன்ல சரக்கை கொண்டுவந்து திருட்டுத்தனமா இறக்கினாங்க. வண்டிய எடுக்கச் சொன்னோம் கேட்கல. ஷட்டரை மூடினோம். அப்பவும் அவங்க போகல. அதன் பிறகுதான் எல்லாத்தையும் உடைக்கவே ஆரம்பிச்சோம்.
‘’நாங்க கலெக்டர், எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் பாதுகாப்பு கேட்டோம். யாரும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கல. எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டோம். எதுவும் நடக்கல. நீங்க ஓட்டல் கடை வச்சா நாலு இட்லி வாங்கி சாப்பிடுவோம், மளிகை கடை வச்சா காய்கறி வாங்குவோம். அதுக்கு ஒத்துழைப்போம். நாங்க அந்த பக்கமே வந்திருக்க மாட்டோம். கோவில் கட்டினா கையெடுத்து கும்பிடலாம் – ஹாஸ்பிட்டல் கட்டினா கால்ல விழுந்து வணங்கலாம். குடும்பத்த கெடுக்கிறவன எப்படி ஆதரிக்க முடியும். சொந்தகாரனா இருந்தாலும் ஆதரிக்க முடியாது.’’ என்கிறார்கள் ஆவேசமாக.
‘’குடிச்சிட்டு வர பசங்கள அம்மா தான் கேள்விக் கேக்கணும், அப்பா கேட்டா மொறக்கிரானுங்க. அந்த வேதனை எங்களுக்குத் தான் தெரியும். கடை இருந்தா தானே இந்த பிரச்சனை. அதான் கடைய ஒடச்சோம். பாதி பேர் கடைய ஒடச்சாங்க. மீதிபேர் ஊர்ல இருக்க எல்லோரையும் கூட்டிட்டு வர போனோம். அப்போதான் போலிசு வந்து எங்கள மடக்கிச்சி. கைது பண்றோம்னு சொன்னாங்க. நாங்க எதுக்கும் பயப்படல. நாங்களே வண்டியில ஏறி உக்காந்துட்டோம். நைட்டி,துண்டு மட்டும் தான் இருந்துச்சி. அதையெல்லாம் பத்தி நாங்க கவலைபடவே இல்ல.’’
‘’கடைய தொறந்துட்டா கடப்பேரி, பர்மாகாலனி, பெரியமலை, லட்சுமிபுரம்னு எல்லாரும் குடிக்க வருவானுங்க. வண்டிய வழியிலேயே நிறுத்துவான். வண்டிய எடுடான்னா சண்டை வரும்……. ஸ்கூல் வேன், பொம்பள புள்ளைங்க எல்லோரும் ஒயின்ஷாப் எதிரதான் நிக்கும். எவ்ளோ பிரச்சனையதான் சந்திக்கிறது. இனிமே எங்க உயிரே போனாலும் ‘எங்கள அரஸ்ட் பண்ணி கொண்டு போயி தூக்குல போட்டாலும்’ கடைய தொறக்க விடமாட்டோம்’’ என்கிறார்கள் ஒரே குரலாக.
நித்யகல்யாணி – லட்சுமி- ராஜேஸ்வரி.
நித்யகல்யாணி – லட்சுமி – ராஜேஸ்வரி கற்குவாரியில் வேலை செய்யும் தினக்கூலிகள். “இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாராயக் கடையைக் கூட எங்க வீட்டு ஆம்பளைங்க விடாம தினமும் குடிக்க போறானுங்க. இப்போ வீட்டு வாசப்படியிலேய சாராயக்கடையை திறந்தாங்கன்னா அங்கேயே போய் படுத்துக்குவானுங்க. அவனுங்கள நாங்க தான் தினமும் வீட்டுக்கு தூக்கினு வரணும். குடிச்சிட்டானுங்கன்னா அவனுங்க பண்ற அலம்பல் உங்களுக்கு சொன்னா விளங்காது. எங்கள மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பானுங்க. வாரத்துக்கு நாலாயிரம் சம்பாதிச்சா இரண்டாயிரம் குடிச்சியே அழிச்சிடுவாங்க.
தினமும் இரவு ஏழு மணிக்கு நாங்க வேலைய முடிச்சிட்டு பயந்து பயந்து தான் எங்க வீட்டுக்கு வருவோம். அவனுங்க தூங்கற வரைக்கும் எங்க உயிரை எடுத்துடுவானுங்க. தினமும் இப்படி குடிச்சியே அழிச்சா சோத்துக்கு இன்னா பண்றதுன்னு கேட்டா அதுக்கும் அடிப்பானுங்க. அப்படி அடிவாங்கிய உடம்பு முடியாம போயிடுது, அடிச்சி கைய ஒடச்சிடுவாங்க. அதுக்கு மருத்துவ செலவு வட்டிக்கு வாங்கி தான் பாக்குறோம். எங்களால வட்டிகட்ட முடியல கடன் கொடுத்தவன் எல்லாம் வீட்டுல வந்து அசிங்கமா திட்டிட்டு போறாங்க.
வீட்டில இருக்க ஆம்பளை பசங்க அம்மாவ அடிக்கிறதை பார்க்க முடியாம அப்பன அடிக்கிறானுங்க. வயசு பொம்பள பசங்க தினமும் சண்டையை பார்க்க முடியாம மனசு நொந்து தூக்கு மாட்டினு செத்து போவுதுங்க. நாங்க இந்த கொடுமையை எல்லாம் யாருகிட்ட சொல்றது. இதுக்கு பிறகும் இந்த கவர்மெண்டு இங்க கடையை திறந்தா நாங்க எங்களை பலி கொடுக்கிறதை தவிர வேறு இல்ல. சாராயக் கடை எதிரிலேயே கிருஷ்ணாயில் ஊத்திக்கினு மொத்தமா செத்துருவோம் என்கிறார்கள் கண்ணீருடன்.
இந்த எளிய மக்கள் அன்றாட செலவுகளுக்கே பெரும் போராட்டம் நடத்துபவர்கள், டாஸ்மாக்கையும் எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுக்கு உதவ யாருமில்லை, ஆனால் அவர்களது உழைக்குவர்க்க கோபமும், இழப்புக்கு அஞ்சாத உறுதியும் இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.