Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 444

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ! புதிய ஜனநாயகம் செப்-2018 மின்னூல்

மின்னூல்

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2018 இதழ்

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு

இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை மகாராஷ்டிராவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை – பா.ஜ.க. அரசின் பயங்கரவாதம்!
இயற்கை வளத்தையும், அதனோடு இணைந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும் அழித்து, ரத்தினகிரி மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட மராட்டிய மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

2. தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !

3. மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடுவதும் எடப்பாடி – மோடியின் வளர்ச்சித் திட்டமே !
காவிரிக் கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?

4. மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
மோடி அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்களைத் திரட்டுபவர்கள் யாரோ, அவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு “நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்ற புதிய முத்திரைகளைத் தயார் செய்திருக்கிறது.

உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

5. பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும்!
‘அச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்ற போதிலும், அச்சுறுத்துபவனைத் தைரியசாலி என்று நாம் கருதவேண்டிய தில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில் கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்

6. 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு!
பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துத் தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக மாருதி தொழிலாளிகளுக்குத் தூக்கு! உயிர் வாழும் உரிமை கேட்டதற்காக தூத்துக்குடி மக்களுக்குத் துப்பாக்கிச்சூடு!

7. தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி!
டில்லியிடம் சரணடைந்துவிட்டதாக அவரை எவ்வளவு விமர்சித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியை எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை .

8. அவசரநிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
கருணாநிதியுடன் இணைந்து அவசரநிலையை எதிர்த்ததாகச் சொல்கிறார் நிதின் கட்கரி. அவசர நிலையை ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆதரித்தது என்பதே வரலாறு. அன்று மட்டுமல்ல, இன்றும் இதுவே உண்மை .

9. ஷாஜகான் காலத்தின் தாஜ்மகாலைக் காட்டிலும் அழகிய காதலர்கள்!
ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து – முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை . அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை .

10. வாஜ்பாய் (1924-2018): நரி பரியான கதை!
1990 -களில் நிலவிய அரசியல் சூழல்தான், வாஜ்பாயிக்கு மிதவாத முகமூடியை மாட்டி விடவேண்டிய கட்டாயத்தை ஆர்.எஸ்.எஸ்.-க்கு உருவாக்கியது.

அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.

11. நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும்
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்றொரு காலம் இருந்தது. இப்பொழுது சமஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து நிறுத்தி, தாய்மொழியில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

12. வங்கிகளின் வாராக்கடன்: இடிதாங்கிகளா பொதுமக்கள்?
தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளைச் சட்டவிரோதமாக மொட்டையடிக்கிறார்கள் என்றால், வங்கி நிர்வாகங்களோ பொதுமக்களின் அற்ப சேமிப்பைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்கின்றன.

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram

07.09.2018

We invite you to the press Conference to be held on behalf of Makkal Athikaram on 8.9.2018 at 12 PM on Saturday at Chennai Press Club, Chepauk

 Dr. Anand Teltumbde, General secratery, Committee for Protection of Democratic Rights, will address the press conference.

The press conference is to condemn the arrests, illegal raids and the orchestrated smear campaign  by the Maharashtra police and the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers. Dr. Anand Teltumbde, a public intellectual, is one of the targets of this offensive.

Presently Mr.Teltumbde works as a Senior professor and Chair, Big Data Analytics,  Goa Institute of Management. He has  held senior positions as Executive Director Bharath Petroleum,  C E O of Petronet and has  also taught at IIT, Kharagpur.

Anand Teltumbde
Dr. Anand Teltumbde

Despite his corporate career, he has been a defender of peoples’ democratic rights, and a harsh critique of the anti people policies of all the governments. He is a regular contributor to the Economic and Political Weekly and has authored several books on Dr.Ambedkar, the dalit movement and the left movements. His recent book is  ‘Republic of Caste’, in which he launches a searring attack against the attempts of the Sangh parivar to saffronise Dr.Ambedkar.

On 28th august, 2018, the Maharashtra police, illegally opened and raided Mr.Teltumbde’s Goa house, when he was away in Mumbai. His wife (Dr.Ambedkar’s granddaughter) had to rush from Mumbai to her house, mainly to find out whether anything was planted by the police. It is relevant to note here, that the name of Jignesh Mewani is also included in the fabricated letter alleging maoist conspiracy against Modi. So much for his infamous reverence towards Dr.Ambedkar!

Though “#me too urban naxal” has evolved into a widespread protest movement in the social media, the Maharashtra police continues to spread canards, against the activists. The Mumbai H.C and the Supreme Court have pulled up the ADGP, Maharashtra  for holding a Press Conference over a matter which is sub-judice.  The S.C has also extended the house arrest of the 5 activists till sep 12th.

What next? Would the intervention of the courts, deter the Modi Govt? How to resist this fascist onslaught?

 Dr. Anand Teltumbde speaks.

 The press conference will be followed by a hall meeting at the same venue, at 4 pm.

  •  Presided by  S.Raju, State Co ordinator, Makkal Athikaram.
  • The Speakers:
  • Prof.Murali, Gen Secretary, PUCL, Tamilnadu – Pondicherry
  • Thiagu, Thamizh Thesiya Viduthalai Iyakkam
  • Maruthaiyan, Makkal Kalai Ilakkiya Kazhagam
  • Dr. Anand Teltumbde, Gen secretery, CPDR

We invite you to stand in solidarity.

Yours,
Marudhu
Spokesperson, Makkal Adhikaram,
9962366321

அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநைநதி என மேலிடும் ஆறு பல ஓடி திரு மேனி செழித்த தமிழ்நா(டு)”-டின்இன்றைய நிலை?

குறுவை சம்பா தாளடி என்ற முப்போக விளைச்சலை கண்டது தஞ்சை டெல்டா மாவட்ட பகுதி. காவிரியில் முறையாக தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலும் பருவ மழை காலநிலை தவறாமலும் கிடைத்தால் சொல்லி வைத்து களமாடுவார்கள் விவசாயிகள். ஆனால் கர்நாடகா அரசு மத்திய அரசு, நீதிமன்றங்கள் உதவி்யுடன் நமக்கு வரவேண்டிய நீரை மறுத்ததால் அகண்ட காவிரி வறண்ட காவிரியானது.

தற்போது கர்நாடகாவில் மழை அதிகம் பெய்த நிலையில் காவிரியில் வெள்ளம் வந்தாலும் அந்த நீர் விவசாயிகளுக்கு பயன்படாமல் விரயமாகிறது. காவிரியில் தண்ணீர் வருவதே கனவாக இருந்த இந்த நேரத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி கண்கொள்ளாக் காட்சியானது. பாலைவனத்தில் வாழ்பவர்கள் தண்ணீரை பரவசமாக பார்ப்பது போல், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை காண்பதற்கினிய காட்சியாக பார்ப்பது போல் ஆற்றில் ஓடும் தண்ணீரை ஆவலோடு பார்க்கும் மனநிலை மக்களுக்கு.

காவிரியில் தண்ணீர் வருமா? வராதா? என்ற பிரச்சனையில் கடந்த காலங்களின் நிலைதான் தொடரும் என்ற எண்ணத்தில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது இயற்கை தந்த பரிசுதான் காவிரி கரைபுரண்டோடும் காட்சி. கனவான காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் விவசாயிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்திருக்குமா?

பொங்கி வரும் காவிரியை பார்த்து சந்தோசப்பட வேண்டி விவசாயி கவலைப்படுகிறான். ஆனி மாதம் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் ஆடி மாதம் நடவு வேலைத் தொடங்கிவிடும். பருவம் பார்த்து தொடங்கப்படும் வேலை மழைக்கும் வெய்யிலுக்கும் தாக்குப்பிடித்து அதிக பாதிப்பு இல்லாமல் போட்ட முதலுக்கு மோசம் இல்லாமல் அறுவடை முடியும். ஆனால் காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.

தஞ்சையில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் கிளை பாசனக் கால்வாய்கள் பாயும் ஊர்களில் தூர் வாரப்படாத நிலையை பார்க்க நேர்ந்தது. வடிகால் ஊற்றுகள் ஏரி குளங்கள் உள்ள நீர் நிலைகளுமே பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தன. கிளை ஆறுகள் ஓடும் பாலத்துக்கு மேல் ஒரு ஆள் மட்டம் அடர்த்தியாக வளர்ந்த நாணல் கோரைப் புற்கள் மண்டிக் கிடக்கின்றன.

ஆறு நிறைய தண்ணீர் ஓடுகிறது அருகில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாமலும் நிலங்கள் ஈரப்பசையற்றத் தரிசாகவும் கிடக்கிறது. சில இடங்களில் தூர் வாரப்படாதக் கால்வாயில் தண்ணீர் வரவும் செய்கிறது. வரும் தண்ணீர் பாசனத்துக்கான மதகு உடைபட்டு கிடப்பதால் வேறு திசைகளில் திரும்பித் தேவைப்படாத இடங்களுக்குப் பாய்கிறது. ஆற்று கரைகளில் ஏற்பட்டிருக்கும் மண் அரிப்பு எப்போது வேண்டுமானாலும் உடைப்பெடுக்கலாம் என்ற நிலையில் உள்ளது. அப்படி உடைப்பெடுத்தால் ஆள் துளைக் கிணற்றைக் கொண்டு செய்யப்பட்ட விவசாயம் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும்.

This slideshow requires JavaScript.

குறுவைப்பருவ பயிறு வளர்ந்து நிற்க வேண்டிய காலகட்டத்தில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டதே என்று இப்பொழுது சம்பா பருவத்து பயிர் செய்தால் ஐப்பசி கார்த்திகையில் அடைமழையில் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும் என்று கவலைப் படுகின்றனர் விவசாயிகள்.

கர்நாடகத்தில் தண்ணீர் தர மறுப்பு. விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு போராட்டம் என கடந்த கால அனுபவம் எதுவுமே ஆற்றில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு காவிரி கனவாகவே இருந்தது. விவசாயிகள் எப்படி ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பவில்லையோ அதேபோல் அரசும் நம்பவில்லை. அதனால் தான் ஊழலுக்கு பெயர் போன பொதுப்பணித் துறை பாசனக் கால்வாய்களை தூர் வாரும் எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.ஒரு ஊரில் ஒரு கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடந்துள்ளது. அதன் முன்னும் பின்னும் மண் சரிந்து செடி கொடிகள் மண்டியுள்ளன. ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் இந்த அளவு மட்டும் தான் டெண்டர் எடுத்ததாகவும் தூர் வாரப்படாத மற்ற பகுதிகள் அடுத்த ஊர் எல்லையை சேர்ந்தது என்றனர். இப்படியான அவல நிலையில் நீர் நிலைகளை வைத்துக்கொண்டு ஜோடிப் புறாவாக நின்று வெட்கமே இல்லாமல் அணைக்கட்டை திறந்து வைத்து மலர் தூவி மகிழ்கிறார்கள் ஓ.பி.எஸ்.-சும், இ.பி.எஸ்.-சும்.விவசாயத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது “தூர் வாரும் பணி மாவட்டம், வட்டம் என ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்படும். இதற்கான செலவுத் தொகை பொதுப்பணித் துறையால் ஒதுக்கப்படும். மேலிருந்து கீழ் வரை அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை 40 சதவீதம் வரை போய்விடும். மீதமுள்ள 60 சதவீதத்தில் செய்யப்படும் வேலை முழுமையாகவும் தரமாகவும் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.முதன்மை ஆற்றை விட அடுத்தடுத்த பாசனக் கால்வாய்கள் தாழ்வான நிலையில் இருக்கும். முதன்மை பாசன கால்வாய்களில் இருந்து பிரித்து விடப்படும் கிளைக் கால்வாய் தூர் வாரப்படாமல் இருந்தால் நீரோட்டம் எப்படி சீரான முறையில் இருக்கும். இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்பட்டும் இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்படாமலும் இருந்தால் சமமான நிலையில் தண்ணீர் விவசாயத்துக்குப் போய் சேருமா? தூர் வாரப்பட்ட பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பகுதியான பயிர் செய்த வயல்களுக்கு எப்படி தண்ணீர் பாயும்?பயிர் செய்யும் வயல் வரை பொதுப்பணித்துறையை நாம் இழுக்க வேண்டாம். முதன்மை ஆற்றையும் கிளை கால்வாய்களையும் தூர் வாரியிருந்தால் பாசனக் கால்வாய்களை சரிசெய்து பயிர் செய்யும் வயல்களுக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தை விவசாயிகளே சீர்செய்து கொள்வார்கள்.காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத காலகட்டத்தில் முப்போகம், இருபோகம் என விவசாயம் செய்யப்படும். அப்படி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏரி குளங்களைக் கொண்டு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். தண்ணீரின் அளவுக்கேற்ப விவசாய பயிர் வகைகளை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இன்று ஏரி குளமாகவும், குளம் குட்டையாகவும் இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது. தஞ்சை சமுத்திரம் ஏரியும் வடுவூர் ஏரியும் நிலப்பரப்புபோல் மாறி வருவதை பார்க்கும் ஒவ்வொரு விவசாயி மனதும் ரத்தம் சிந்தத்தான் செய்கிறது.ஏரி குளம் போன்ற நீர்ப்பாசன நிர்வாகம் நீர் வினியோகம் என்பது ஆங்கிலேயர் காலத்துக்கு முன் கிராமப் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகள் என்ற பெயரில் கிராம வாசிகளே செய்துள்ளனர். நீர் நிலைகளின் பராமரிப்புக்காக விளைச்சலின் ஒரு குறிப்பிட்ட அளவையும், மீன்பிடிப்பு குத்தகைப் பணத்தையும் ஒதுக்கியுள்ளனர். நிலம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமையும், அதிகம் உள்ளவர்களுக்கு வரம்புக்குட்பட்டும் தண்ணீர் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. நீர் வினியோகம் செய்யும் ஆட்களும் அவர்களுக்கு சம்பளமாக மானிய நிலமும் கொடுத்துள்ளனர்.எப்பொழுது ஏரி குளம் பொதுப்பணித் துறைக்கு போனதோ அப்போது முதல் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பும், பராமரிப்பும் இல்லாமல் கைவிப்பட்டவையாக மாறிவிட்டது. விவசாயிகளே நீர் நிலைகளை பொதுச் சொத்தாக பாதுகாத்து தேவையைப் பூர்த்தி செய்து தன்னளவில் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்நிலையில் காவிரியும் கைவிரிக்க இருக்கப்பட்டவர்கள் ஆள்துளை கிணறு அதிக விவசாயம் என்ற தன்னலம் மேலோங்கத் தொடங்கியது. பாசன வசதியற்ற சிறு விசாயிகள் கூலி விவசாயிகள் நகரத்தை நோக்கி வரவேண்டிய கட்டாயம் உருவானது.

காவிரியில் தண்ணீர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியோடு விவசாயிகள் விவசாய வேலையை ஆர்வத்தோடு தொடங்கவில்லை. தண்ணீர் வந்து விட்டது என இப்பொழுதே வேலையை தொடங்கினால் ஏற்படும் இழப்பு பயம் கொள்ளச் செய்கிறது. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை, காவிரியில் வரும் வெள்ளப்பெருக்கு தூர் வாரப்படாத பாசனக் கால்வாய்கள் அடுத்து வரும் அடைமழை காலம் அனைத்துமே பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனையை தீர்க்கும் ஒரே வழி நீர் நிலைகளின் சீரிய பராமரிப்பு மட்டுமே.

– வினவு களச் செய்தியாளர்

ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி பிரிவு சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு  செய்யப்பட்டனர். சங்கத்தின் முக்கிய நிகழ்வான நிர்வாகிகளுக்கான தேர்தல் 25-08-2018 அன்று நடைபெற்றது. தேர்தலில் நிற்கும் உறுப்பினர்களிடம் வேட்பு மனுக்கள்  பெறப்பட்டு ஜனநாயக முறையில் உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்தல் நடந்தது. சங்கத்தின் செயலாளர் சுகேந்திரன் தனது உரையில் சங்கத்தின் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.

ங்க தேர்தலை பற்றி பேசுவதற்கு முன்னால் கடந்த கால சங்க அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோப்புப் படம் (அக்டோபர் 2017-ல் நடந்த சங்கக் கூட்டத்தில்)

சங்கம் அமைப்பதற்கு முன்னால் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது என்ற கருத்துதான் பிரதானமாக இருந்தது அதனால் ஐ.டி. கம்பெனியில் நடக்கும் கட்டாய வேலை நீக்கத்தை எதிர்த்தும், ஐ.டி தொழிலாளர்களின் வேலைச்சுமை மற்றும் பல்வேறு பிரச்சனைக்கு குரல் கொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வந்தனர்.

பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவு 2015-ல் தொடங்கி தோழர் கற்பகவிநாயகம் தலைமையில் செயல்பட்டுவந்தது. ஐ.டி கம்பெனியில் தொழிலாளர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டது. மேலே சொன்ன சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பு.ஜ.தொ.மு தொடர்ச்சியான சட்டப்போராட்டம் நடத்தி “ஐ.டி-யில் வேலைபார்ப்பவர்கள் தாங்கள் செய்த வேலைக்கு ஊதியம் பெறும் தொழிலாளர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் நிர்வாகத்தின் லாபத்திலும் அவற்றின் முக்கிய பொறுப்புகளில் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. ஆதலால் ஐ.டி தொழிலாளர்ளுக்கும் 1947- தொழிலாளர் நலச்சட்டம் அனைத்தும் பொருந்தும்” என்ற உரிமையை நிலைநாட்டியது.

இந்திய ஐ.டி துறையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்து அதன்மூலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு தொழிலாளர் துறை மூலமும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஈட்டிக்கொள்ளலாம் என்ற நிலைமை உருவானது.

ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என்று ஐ.டி தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைக்கு எதிராக குரல் எழுப்பியும், ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு லாபத்திற்காக தொழிலாளர்களை வெளியேற்றுகிறார்கள், அதைப்பற்றி கேள்விகேட்காத அரசு எவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறது என்று தொழிலாளர்களிடம் அம்பலப்படுத்தி வருகிறோம்.

கடந்த வருடம் ஜூன் மாதம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலமாக ஐ.டி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் CTS-ல் 10 மணி நேரம் கட்டாய வேலை நேரத்தை கண்டித்தும், Tech mahendra-வில் கட்டாய பணி நீக்கத்தை எதிர்த்தும், TCS-ல் அப்ரைசல் முறைக்கேடு மற்றும் PF பிரச்சனைக்கு தலையிட்டும் ஊழியர்களின் நலன் நிலைநாட்டப்பட்டது. Verizon கம்பெனியில் நடந்த கட்டாய பணி நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது.

Wipro-வில் நடந்த கட்டாய பணி நீக்க நடவடிக்கையை பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஒருங்கிணைத்து வழக்கு தொடுக்கப்பட்டது. பு.ஜ.தொ.முவின் மாநில பொருளாளரும் ஐ.டி சங்கத்தின் கௌரவத் தலைவரும் ஆன தோழர் விஜயகுமாரின் வழி காட்டலோடு  வழக்கை சங்கம் உறுதியுடன் நடத்திச் சென்றது. அதன் பலனாக இந்தியாவிலே முதல் முறையாக  ஒரு ஐ.டி நிறுவனத்துக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் 1947, பிரிவு 2K ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தாவாவில் சமரச முறிவு அறிக்கை  பெறப்பட்டுள்ளது.

இது போன்று, கட்டாய ராஜினாமா செய்யவைக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் பிரிவு 2A-ன் கீழ் வழக்கு நடத்தி நிவாரணம் பெறுவது,  சமரச முறிவு அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதவுவது உட்பட இன்னும் பலவற்றை சாதித்துள்ளோம்.

மேலும் ஐ.டி ஊழியர்கள் சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உடைக்கும் முயற்சியாகவும் சமூகத்தில் நடக்கும் எந்தவொரு பிரச்சனைக்கும் ஐ.டி தொழிலாளர்களுக்கும் தொடர்புள்ளது என்பதை நிலைநாட்டும் விதமாக பல்வேறு சமுகப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் மருத்துவராக முடியாமலும் மருத்துவத்துறை பணம் உள்ளவருக்கானதாக சூல்நிலையை உருவாக்கிய நீட் தேர்வை கண்டித்தும், விவசாயிகள் தற்கொலை, காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் மற்றும் பல தொழிற்சாலைகள் நமது நாட்டு சட்டங்களையும் இயற்கையின் மாண்புகளையும் மதிக்காமல் லாபத்திற்காக சுற்றுப்புற சூழலையும் நாசப்படுத்துவதை எதிர்த்தும் என்று பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு உழைக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இத்தனை நிகழ்வுகளையும் அதற்கான வேலைகளையும் எந்தவொரு தனிப்பட்ட நபராலும் செய்து முடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியிருக்கும் பட்சத்தில் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்களின் கடுமையான உழைப்பால் நடந்தது மட்டுமில்லை அவர்களின் கூட்டுச் செயல்பட்டால் நடைமுறையானது என்பதே உண்மை. பல நேரங்களில் நிதிப் பற்றாக்குறை, நடைமுறை வேலை செய்வதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் வராத போதும் திட்டங்களை செயல்படுத்தியது, கூட்டிணைவோடு சங்கம் வளர்வதற்க்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பயனுள்ளதாக நடத்தி முடித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அதே பணியை இன்னும் முன்முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்சொன்னவை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த பின்னர் கடந்த வருடத்தில் செயல்படுத்தப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு

பொறுப்பு பெயர்
தலைவர் சியாம் சுந்தர்
துணைத்தலைவர் காசிராஜன், வாசுகி சீனிவாசன்
செயலாளர் சுகேந்திரன்
இணைச் செய்லாளர் ஓம்பிரகாஷ், தமிழ் செல்வன்
பொருளாளர் ராஜதுரை
செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், ஸ்ரீநிவாசன், பூங்கொடி, பூபதி, ரவிசங்கர், ஹரிஹரன் , கமால், சையது

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். இதுவரை நடந்த தவறுகளை பாடமாக எடுத்துக் கொண்டும் சரியானவற்றை உழைப்புக்கு கிடைத்த பலனாக கருதிக்கொண்டும் மேலும் பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • சுகேந்திரன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.

நன்றி: new-democrats

வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை

‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி சோபியா ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளில் தமிழக காவல்துறை நடத்திய படுகொலைக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

♦♦♦

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான பிரச்சினைக்குரிய தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையை நிரந்தமாக மூடுவதாக தமிழக அரசு ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளை நிரப்பி, சட்டரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத ஒரு அறிவிப்பாணையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு முன் எகனாமிக்ஸ் டைம்ஸ், அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வாலின் நேர்காணலை வெளியிட்டது.

கடந்த மே 22, 23-ஆம் தேதிகளில் மாநில காவல்துறை வன்முறையை ஏவி, 13 பேர் கொல்லப்படுவதற்கும், 65-க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமானது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடங்கியதோடு, பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட தூண்டியதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்த காரணத்துக்காக பலர் கைதுசெய்யப்பட்டு, வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டனர்.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீதான பொதுமக்களின் சினமும் பேரச்சமும், வேதாந்தாவின் காப்பர் உருக்காலைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. எவ்வித ஆயுதமும் ஏந்தாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு, அதுவரை 100 நாட்களாக நடந்த போராட்டத்துக்கு எந்த எதிர்வினையும் செய்திருக்கவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக செயல்பட்ட தமிழக அரசு மே 23-ஆம் தேதி வரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டிருந்தது.

அதே நாளில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது. அதோடு, பொதுமக்களின் கருத்தை கேட்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தியது.

இத்தகைய அரசியல் சூழலில் அனில் அகர்வால், த எகனாமிக்ஸ் டைம்ஸுக்கு நேர்காணல் அளிக்கிறார். வழக்கமாக ஸ்டெர்லைட் செயல் அதிகாரி ராம்நாத் ஊடகங்களிடம் பேசுவதே வழக்கம்.

இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

ஸ்டெர்லைட் வெளியிடும்  பத்திரிகை செய்தி அறிக்கை போலத்தான் அந்த நேர்காணல் இருந்தது; சில விஷயங்களைத் தவிர. உதாரணத்துக்கு வேதாந்தாவின் தலைவர் சொல்கிறார், “முதல் நாளிலிருந்தே இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். எல்லா நேரங்களிலும், மக்கள் ஜனநாயகத்தில் உள்ள அனுகூலங்களை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்”.

கார்ப்போரேட் தலைமையின் இந்த கூற்று வெளிப்படுத்துவது என்னவென்றால், அவருடைய திட்டங்கள் பொதுமக்களின் பரவலான எதிர்ப்பின் காரணமாக மீண்டும் ஒரு முறை முடக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடல் சமீபமாக நடந்த ஒன்று.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் குரலை கேட்க வேண்டும் என்கிற உண்மையான ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கை அனில் அகர்வாலின் கூற்று சுட்டிக்காட்டவில்லை; ‘இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்’ என்கிற கேள்வியையும் சேர்த்தே சுட்டுகிறது.

உதாரணத்துக்கு, இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராக, பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்துக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படுமா?

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அந்நாட்டின் பிரதமர் தெரசா மே-உம் கூட, 13 பேர் கொல்லப்பட்டதையும் சூழலியல் சீர்கேட்டையும் உருவாக்கிய ஒரு நிறுவனத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் முற்றிலுமாக மறுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது;

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட சாதிய மோதல்கள், அப்போது கட்டுமானப்பணிகளை தொடங்கியிருந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பவே நடத்தப்பட்டன என பல தூத்துக்குடிவாசிகள் கருதுகிறார்கள்.

எப்படியாயினும், சமீபத்திய போராட்டம் சாதி – அரசியல் – மத – வர்க்க அடிப்படைகளை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தது. குமரெட்டியாபுரத்தில் பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கிய போராட்டம் அருகாமை ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் ஓரிடத்தில் கூடி, பேனர்களையும், முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும் வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பணிகளுக்கு ஏற்ப மாறி மாறி போராட்டத்துக்கு நேரம் ஒதுக்கினார்கள், குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வந்த கோடை விடுமுறையிலும் போராட்டக்களத்தில் நின்றார்கள். மார்ச் 24-ஆம் தேதி வியாபாரிகள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தூத்துக்குடி முழுவதுமாக முடங்கியிருந்தது. அன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்று தெருக்களை நிரப்பினார்கள். பேரணியின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை உருவாக்கின.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தூத்துக்குடியின் மில்லர்புரம், மூன்றாவது மைல், ஃபாத்திமா நகர் போன்ற இடங்களில் போராட்டக் கூடாரங்கள் முளைத்திருந்தன. தினமும் நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.

நூறாம் நாள் போராட்டத்தில் உண்ணாவிரதம், மனித சங்கிலி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் காப்பர் உலோகத்தை கொண்டு வருவதைத் தடுப்பதற்கும், அந்தப் பொருட்களை வேறு எங்காவது சேமிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு எந்த தனிமனிதரோ அல்லது மனிதர்களோ தலைமையேற்க அனுமதிக்கக்கூடாது என்கிற தன்னிச்சையான முடிவு போராட்டக்காரர்களால் எடுக்கப்பட்டிருந்தது. அதுபோல, கட்சிகளையும் அமைப்புகளையும் போராட்டக்குழு தள்ளி வைத்திருந்தது.

இது உண்மையில் அடிமட்டத்திலிருந்து நடந்த ஒரு அணிதிரட்டல். சொல்லப்போனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் போராட்டம் எனவும் கொள்ளலாம். முறைபடுத்தும் அமைப்புகள், அரசு, நீதிமன்றம் என மாநில அரசின் அமைப்புகளால், இரண்டு தசாப்தங்கள் ஏமாற்றப்பட்ட பிறகு, நடந்த போராட்டங்களை நசுக்க, கொடூரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தூத்துக்குடியில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டியது.  இறுதியில் அதை சரிகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது மாநில அரசு.

தூத்துக்குடியில் நடைபெற்ற பயங்கர நிகழ்வுகளுக்குப் பின் வந்த முதல் அரசு பிரதிநிதியான அமைச்சர் கடம்பூர் ராஜு, அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அரசியல்வாதிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள், அவர்கள் வார்த்தையை மென்று முழுங்காமல் நேரடியாகவே கேட்டார்கள்.

இதுதான், வேதாந்தாவின் அகர்வாலுக்கு பிரச்சினைக்குரியதாகவும் நேர்மையின் அரிதான தருணமாகவும் உள்ள அவருடைய கூற்று, அமெரிக்க சிந்தனையாளர் நோம்சாம்ஸ்கி சொல்லும் ‘எலைட்டுகளுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் அதீதமான வெறுப்புணர்வை’ காட்டிக்கொடுக்கிறது.

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது.

“நாம் தொழிலை அரசியலிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்” என, மேலும் ஒரு அதிரடியான பாசாங்கு வாக்கியம் ஒன்றை சொல்கிறார் அகர்வால்.

வேதாந்தா குழுமம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் நன்கொடை அளித்திருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் வேதாந்தா குழுமத்திலிருந்து பா.ஜ.க ரூ22.5 கோடி நிதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட்டிலிருந்து மட்டும் ரூ.15 கோடி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அகர்வால் நன்கொடை அளிக்கிறார். இந்திய மதிப்பில் ரூ. 93 லட்சத்தை டிசம்பர் 2015 மற்றும் மே 2017-க்கு இடைப்பட்ட காலங்களில் அளித்திருக்கிறார். இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக்கவோ அல்லது ஜனநாயக நடைமுறைகளை தாக்கம் செலுத்தவோ தனக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடு உள்ளது என கருதுகிறார் அவர்.

போராட்டக்காரர்களை ஆதரிப்பவர்களை புதைக்க தேசியவாதம் என்கிற முகமூடி ஒன்று அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நேர்காணலில் அகர்வால் சொல்கிறார், “காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்முடைய நாட்டை தங்களுடைய சந்தையாக்கிக் கொள்வார்கள்”. கூடவே வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்தில் இருப்பதை மறந்துவிட்டு, ‘வெளிநாட்டு சதி’ இருப்பதாக மறைமுகமாக குறிப்பிடுகிறார் அகர்வால்.

அதோடு, சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இதையேதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் நடிகர் ரஜினிகாந்தும் சொன்னார்கள். தொழிற்சாலைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் இந்த பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒருபோதும் எவரும் இதற்கு ஆதாரங்களை தருவதில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?

அது நியாமகிரி என்றாலும், தூத்துக்குடி என்றாலும் வேதாந்தா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதோடு அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் சூழலியல் செயல்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் குழுக்களை சார்ந்தோரை ஒடுக்குவதையும் விரும்புகிறது. சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?

இந்த நேர்காணலின் எந்த இடத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முக்கியமாக சூழலியல் மற்றும் சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சொல்லப்படவில்லை. கேட்கப்படக்கூடிய கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு எடுக்கப்படும் இத்தகைய நேர்காணல்களில் சொல்லப்படும் எதுவுமே தவறான நோக்கத்திற்காக சொல்லப்படுவதாகத்தான கருத முடியும். எதற்காக இத்தகை நேர்காணல்கள் எடுக்கப்படுகின்றன என்பதை படிப்பவரால் நிச்சயம் யூகிக்க முடியும்.

உண்மையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முடக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட தொழிலதிபர்களின் காரசாரமான நேர்காணல்களுக்கான காலம் இது. அதோடு, பாதிக்கப்பட்ட குரல்களுக்கும் அதிகமாக இடம் கொடுங்கள்.

– லூயிஸ் சோஃபியா

நன்றி : தி வயர் Yes, Mr Anil Agarwal, Business Does Need to be Kept Away From Politics

தமிழாக்கம்: கலைமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சோபியா எழுதிய மற்றொரு கட்டுரை:

அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்

டந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் மேலும் 4 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை, மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்தது புனே போலீசு. சுதா பரத்வாஜ் மாவோயிஸ்ட் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்காகவே அவரைக் கைது செய்வதாகவும் தெரிவித்தது புனே போலீசு.

புனே போலீசு தற்போது கைது நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அப்படி ஒரு கடிதத்தை கடந்த ஜூலை 5-ம் தேதியன்று தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் ’லபோதிபோ’ அர்னாப் கோஸ்வாமி.

இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ம் தேதியன்று ‘தி வயர்’ இணையதளத்தின் பத்திரிகையாளர் ஜானவி சென், அர்னாப் கோஷ்வாமியின்  இக்குற்றச்சாட்டு குறித்து சுதா பரத்வாஜிடம் நேர்காணல் எடுத்தார். அந்த காணொளி அன்றே ’தி வயர்’ இணையதளத்தில் வெளியானது.  அதே நேர்காணலை, சுதா பர்த்வாஜ் கைது செய்யப்பட்டதையடுத்து ’தி வயர்’ இணையதளம் மீள்பதிவிட்டது.

அந்த நேர்காணல் காணொளியின் தமிழாக்கம்:

சுதா பரத்வாஜ் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர். குறிப்பாக சட்டீஸ்கரில் தனது பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஜூலை 5, 2018 அன்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதம் குறித்த பேட்டி இது.

ஜானவி சென் : அர்னாப் கோஸ்வாமி நீங்கள் எழுதியதாக, ஒரு குறிப்பான கடிதத்தைக் காட்டி உங்கள் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் நீங்கள் அதனை மறுத்துள்ளீர்கள். அவரது குற்றச்சாட்டின் பிரதானமான விசயம், நீங்கள் மாவோயிஸ்ட் தலைவராகக் கூறப்படும் தோழர் பிரகாஷ்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பதுதான்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களை (மாவோயிஸ்டுகளை) நீங்கள் சந்தித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியிலிருந்து உங்களது கருத்துக்களைக் கேட்டனரா? இது குறித்து உங்களது கருத்தென்ன?

சுதா பரத்வாஜ் : வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில், காலையில் எனக்கு மும்பை எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசுபவர், தாம் ரிபப்ளிக் தொலைக்காட்சியிலிருந்து பேசுவதாகக் கூறினார். அவர்களது  நிகழ்ச்சியில் அன்று மாலை பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நான் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.

பீமா கோரேகான் குறித்து ஏதேனும் விவாத நிகழ்ச்சிக்குதான் அழைக்கப்படுகிறேன் என்று நினைத்தேன். நான் அவ்வப்போது பார்க்கும் ’ரிபப்ளிக் தொலைக்காட்சி’யின் விவாத நிகழ்ச்சி அனைத்திலும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, வேறு சிலரின் மூலமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியினர், ’நான் மாவோயிஸ்ட் தோழர் பிரகாஷ் என்பருக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை’ ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருப்பதாகக் கூறினார். அது குறித்த தொடர்புச் சுட்டியையும் அனுப்பியிருந்தனர். அதனையும் நான் பார்த்தேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தை அவர்கள் திரையில் காட்டினர். அந்தக் கடிதம் வழக்கறிஞர் தோழர் சுதா பரத்வாஜ்-ஆல் தோழர் பிரகாஷுக்கு எழுதப்பட்டதாக அவர்கள் கூறினர்.

அனைத்து விதமான குற்றச்சாட்டுகளும் அங்கு வைக்கப்பட்டன. காஷ்மீருடனான தொடர்பு குறித்தும், எனக்கு நிதி தேவை என்றும் எழுதியிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் அதில் நிறைய வழக்கறிஞர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதில் கணிசமான வழக்கறிஞர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். சிலரைக் குறித்து எனக்குத் தெரியவே தெரியாது. அந்த வழக்கறிஞர்களை, நான் ’தோழர்’ என விளித்ததாகவும், அவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அக்கடிதத்தில் காட்டப்பட்டிருந்தது.

நான் செய்த முதல் விசயம் என்னவென்றால், உடனடியாக அந்தக் கடிதத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிடக் கூறியதுதான். முதலில் எனக்கு அப்படி ஒரு கடிதம் என ஒன்று இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் அது சில பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறப்பட்டது.

arnab go sami
அர்னாப் கோஸ்வாமி

இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட தவறான அவதூறு பரப்பும் கடிதம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது எனக்கு தனிப்பட்டரீதியிலும், தொழில்ரீதியாகவும் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பல்வேறு ’டுவீட்டுகள்’ வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமாக  வெறுப்பைத் தூண்டி விடும் செயலே ஆகும். நான் இதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்பதை தெளிவாகக் கூறிவிட்டேன். எனது வழக்கறிஞர்களை ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிராக குடிமையியல் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்கு அறிவிப்பு அனுப்பக் கூறியிருக்கிறேன். நான் அனைத்து சாத்தியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன்.

ஜானவி சென்: அந்தக் கடிதத்தில் அவர்களது தொலைக்காட்சித் திரையிலும், இணையதளத்திலும் பெரிதுபடுத்திக் காட்டிய பகுதியில், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு குறிப்பான சந்திப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு வழக்கறிஞரும் அந்த கூட்டத்தில் உங்களுடன் கலந்து கொண்டதாகவும், நீங்கள் ஒரு மிகப்பெரிய சதியின் பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ”நகர்ப்புற நக்சல்கள்” போன்ற புதுவிதமான வார்த்தைப் பதங்களும் உபயோகக்கிப்படுகின்றன. காஷ்மீர் விவகாரமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறியது போல இது இட்டுக்கட்டப்பட்ட கடிதம் எனும் பட்சத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி உங்களைப் போன்ற குறிப்பான நபர்களைக் குறிவைப்பதற்கான அவசியம் என்ன? மேலும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சந்திப்பு நிகழ்வு குறித்த விவரங்கள் குறித்து உங்களது கருத்து என்ன?

சுதா பரத்வாஜ்: முதலில் அவர்கள் எந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. சுரேந்திர காட்லிங்-ஐ எனக்கு வெகுநாட்களாகத் தெரியும். அவர் ஒரு பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர், தலித்திய வழக்கறிஞர். கட்சிரோலியிலோ, ஜக்தல்பூரிலோ வழக்குகள் கொண்டுள்ள வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) என்ற அமைப்பில் நானும் அவரும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். சுரேந்திர காட்லிங் – அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ஓய்வுபெற்ற மும்பை நீதிபதி சுரேஷ் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் இருக்கிறோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம்.

தற்போது, தனிப்பட்டரீதியில் என் மீதான தாக்குதலுக்குக் காரணமாக நான் நினைப்பது என்னவெனில், ஜூன் 6, 2018 அன்று சுரேந்திர காட்லிங் உட்பட பல்வேறு செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட போது, முதல் எதிர்வினை எங்களிடமிருந்துதான் வந்தது.

நான் ஜூன் 7, 2018 அன்றே எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன்.  ராமகிருஷ்ணன், பி.யூ.சி.எல் தலைவர் ரவி கிரண் ஜெயின், பஞ்சோலி இன்னும் பிற வழக்கறிஞர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்பதை நாங்கள் தெளிவாகப் பதிவு செய்தோம். சந்திரசேகர் ராவண், சமீபத்தில் பிணையில் வெளிவந்த வழக்கறிஞர் குபேந்திர நாயக், ஸ்டெர்லைட் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என தற்போது தொடர்ச்சியாக வழக்கறிஞர் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதன் காரணமாக பரவலாக அறியப்படாத  மக்களை இடம்பெறச் செய்யும் திட்டங்களுக்கு எதிராகவும், விசாரணைக் கைதிகளாக சிறையிடப்பட்டுள்ள ஆதிவாசி மக்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்டோருக்காக வாதிடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது அச்சுறுத்தக் கூடிய நிலைமையாகும். இது தனிநபர்களின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி, விளிம்புநிலை மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த நீதித்துறையையே நிலைதிரிவுறச் செய்கிறது.

வழக்கறிஞர்கள் ஓரணியில் திரள்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. நாக்பூரில் கூட, நாக்பூர் பார் கவுன்சில், சுரேந்திர காட்லிங்கின் கைதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஏனெனில் பீமா கொரேகான் வன்முறை வழக்கில் கடந்த ஜனவரியில் போடப்பட்ட முதல் தகவலறிக்கையில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் நீதிபதி சோதனைக்கு உத்தரவிட மறுத்த பின்னும் நடத்தப்பட்ட சோதனை அது. ஏப்ரலில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் மாதத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். இந்தக் குறுகிய காலத்தில் அபாயகரமான ஏதோ சிலவிசயங்கள் நடந்திருக்கின்றன. வழக்கறிஞர்களை இதுபோன்ற விவகாரங்களில் நிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல.

மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) – சமீபத்தில் காஷ்மீருக்குச் சென்று அங்கு உண்மை அறியும் குழுவாகச் செயல்பட்டனர். அங்கு சென்று காஷ்மீர் வழக்கறிஞர்களிடம் பேசுவதற்காக சென்றனர்.. ஏனெனில் அங்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஏனெனில் வழக்கறிஞர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பி.எஸ்.ஏ) பாய்ச்சப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள அவர்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. பிரச்சினைக்குரிய பகுதிகளில் மக்களைப் பாதுகாத்து அவர்களுக்காக வாதாடுவதற்குக் கூட, அனைத்து விதமான சிரமங்களையும் சந்திக்கின்றனர்.

இந்நிலைமையை ஆவணப்படுத்த ம.வ.இ.ச (IAPL) அங்கு சென்றது. பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அவர்களோடு கலந்தாலோசித்தனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்கள் தங்களது அறிக்கையை சமர்ப்பித்திருப்பார்கள். நான் அங்கு செல்லவில்லை. ஆனால் ம.வ.இ.ச (IAPL), உண்மையறியும் குழுவை அங்கு அனுப்பியது.

காஷ்மீருடன் இவர்களுக்கு சட்டவிரோதமான தொடர்பு இருக்கிறது என அவர்கள் சொல்வதற்கு அநேகமாக இதுவே ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குரிய பகுதியில் வழக்கறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது குறித்த விவகாரம் இது. அது மிகவும் சிரமமானது. அநேகமாக இதுவேதான் இத்தகைய தனிப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உடனடி காரணமாகவும் இருக்க முடியும். பெருமெண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள், என்னால் தோழர்கள் என விளிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் சிலரை எனக்குத் தெரியும், அவர்கள் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள். வேறு சிலரை எனக்குத் தெரியாது. இது வழக்கறிஞர்கள் சமூகத்தையும், மக்களுக்கான வழக்கறிஞர்களையும் பற்றி தவறான பிரச்சாரம் செய்வதற்கான வழியாக இருக்கிறது.

ஜானவி சென் : கூடுதலாக, மற்றுமொரு விசயம் அர்னாப் கோஷ்வாமி தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பீமா கோரேகான் வழக்கில் வில்சனின் கணிணியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில், பிரதமரைக் கொல்ல சதி நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதோடு நீங்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் உருவாக்கிவரும் திட்டம் குறித்து நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா ?

சுதா பரத்வாஜ் : இவ்வளவு பெரிய சதித் திட்டம் நடைபெற்றிருக்குமென்றால் ஏன் மாராட்டிய போலீசு மட்டும் இவ்வழக்கை விசாரிக்கிறது என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஏற்கனவே அந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து அது போலியானதாகத் தெரிகிறதுஎன்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றனர்.

இக்கடிதம் குறித்து முதலில் நான் செய்தது ஒரு அறிக்கையை வெளியிட்டதுதான். ராஜீவ் காந்தி கொலை போன்ற நிலைமைகள் என்றும், காஷ்மீர் போன்ற நிலைமைகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? வழக்காடும் வழக்கறிஞராக, ஒரு தொழிற்சங்கவாதியாக, இருக்கும் என்னைப் போன்றவர்களை – மிகவும் பொறுமையாக சமரசப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தல், உயர்நீதிமன்றங்களில் வழக்காடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர்களை – காஷ்மீரோடு எப்படிக் கோர்க்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

அவர்களது நோக்கம், இத்தகைய ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைப்பதுதான். ஏனெனில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல பத்தாண்டுகள் பொது வேலைகளில் ஈடுபட்டவர்கள்.  யாரையும் இவர்கள் பொதுமக்களிடையே நம்பகத்தன்மை இல்லாதாவர்கள் எனக் கூற முடியாது. ஆனால், இப்படி ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை நீங்கள் அவர்கள் மீது வைக்கும் போது, பய பீதியில் மக்கள் அமைதியாக்கப்படுகிறார்கள். நாம் உண்மையில் அதனைக் கேள்வி கேட்க வேண்டும்.

ஒருவேளை அவ்வளவு பெரிய சதித்திட்டம் இருந்திருந்தால், நான் எப்போதுமே தொலைபேசியிலும், நேரிலும் அணுகக் கூடிய இடத்தில்தானே இருக்கிறேன். என்னை இதுவரை யாரும் இதுகுறித்து விசாரிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த புலனாய்வு எவ்வகையைச் சேர்ந்தது எனப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது செயல்பாட்டளர்களை / மக்களை வாயடைக்கச் செய்வதற்கான ஒரு வழி.  குறிப்பாக கடினமான கேள்விகளைக் கேட்பவர்களை வாயடைக்கச் செய்வதற்கான வழி.

ஜானவி சென்: நன்றி ! எங்களோடு இன்று கலந்து கொண்டதற்கு.

செய்தி ஆதாரம் :

தமிழாக்கம்:வினவு செய்திப்பிரிவு

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.

ஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.கேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மிக நீண்ட அந்தக் கட்டுரையின் இணைப்பு:

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

அந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.

1 ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.

2  ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.

3 இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.

4 கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.

5 வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.

இப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.

பதில் 1 ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.

அப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது? ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார்? சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.

அதாவது முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.

பதில் 2 ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.

அன்று மாலை நான்கு மணியளவில் அணையின் நீர்மட்டம் 141.8 அடிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதாரம்: கேரள மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்தின் ட்விட்டர் பதிவு. பார்க்க படம் – 3.

முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.

இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா? இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.

பதில் 3 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது? அப்படி யார் சொன்னது? அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே? இடுக்கி அணைக்குத்தானே போகும்? முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி.

பார்க்க செய்தி இணைப்பு.

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது- உபரி நீர் திறப்பு

அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.

பதில் 4 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம்.

இதற்கான செய்தி இணைப்பு இங்கே.

பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஏன் ஜூன் 11ஆம் தேதியே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு துவங்கிவிட்டது.

செய்தி இணைப்பு இங்கே.

பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறப்பு – கம்பம் விவசாயிகள் ஆத்திரம்

கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

பதில் 5 வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.

ஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்?

இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.

நன்றி: பேஸ்புக்கில் Muralidharan Kasi Viswanathan, (ஆகஸ்டு 30, 2018)

முல்லைப் பெரியாறு: ஹிமான்ஷுவின் பதிலும் ஒரு Tamil enthusiastன் விளக்கமும்
———————————————————————
முல்லைப் பெரியாறு அணை குறித்த ஹிமான்ஷு தாக்கரின் கட்டுரைக்குப் பதிலாக நான் எழுதிய சில கருத்துகளுக்கு அவர் சில பதில்களை அளித்திருக்கிறார்.

முதலில் ஹிமான்ஷு தாக்கரின் பதில் (கருத்துகளுக்கு பதில் சொல்லும்போது எளிதாக இருக்க அவற்றுக்கு எண்களை இட்டிருக்கிறேன்) :

1. இந்தக் கட்டுரையின் வாதம், ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 20 தேதிவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பது அல்ல. இந்தக் கட்டுரை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் குறித்தே பேசுகிறது. ஆனால், அதிகபட்ச நீர் திறப்பு 2,200 கன அடி நீர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு தரமான சாட்சியங்களை நம்பத்தகுந்த இணைய தளங்களில் காண விரும்புகிறேன்.

2. ஆகஸ்டு 14ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிட்டது தொடர்பாக வண்டிபெரியாறு இணையதளத்தில் உள்ள வரைபடத்தைப் பாருங்கள். (முதன்மை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது) அதில் ஆகஸ்டு 14ஆம் தேதியன்று வண்டிபெரியாறில் உச்சபட்ச வெள்ள அளவு எவ்வாறு உயர்ந்தும் குறைந்தும் உள்ளது என்பதையும் பாருங்கள். இந்த அளவு மதிப்பீடுகள் அனைத்தும் மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து பெறப்பட்டது. அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல, நீர் ஆதாரங்கள் தகவல் சேவை (WRIS) அறிக்கையின்படி, வண்டிபெரியாறின் 90% நீர்ப்பிடிப்பு முல்லைப்பெரியாறில் இருந்துதான் பெறப்படுகிறது. அதாவது வண்டிபெரியாறு வெள்ளம் பெருமளவில் முல்லைப்பெரியாறில் இருந்து வந்ததுதான்.

3. அணையின் நீர்மட்டம் குறித்து வெளிப்படையான தகவல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மை ஆணையத்தின் வெளியீட்டின்படி, முல்லைபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 867.41மீ(கடல் மட்டத்துக்கு மேல்) என கொடுக்கப்பட்டுள்ளது. இது 142 அடி என நான் யூகித்துக்கொண்டேன், அதுதான் அணையின் மொத்தக் கொள்ளளவு நீர்மட்டம். இந்த கொள்ளளவு நீர்மட்டத்தின் மேலதிக தகவல்களை நான் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பார்க்கவில்லை. மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அணையின் நீர்மட்டம் குறித்து சரியான தகவல்களைக் கொடுத்திருக்கும் என யூகித்தேன். காரணம், மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அவர்கள் வெளியீட்டில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சம்பதப்பட்ட மாநில அரசால் கொடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தது. ஒருவேளை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால், அது அந்தந்த மாநிலங்கள் கொடுத்த தகவல்களைப் பொறுத்து அது வெளியிட்டுள்ளது என்பது என் புரிதல்.

4. இந்த கட்டுரையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்டத்தைவிட 5 அடி கூடுதலாக இருந்தது என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது. நீர்மட்டம், அணையின் நிர்ணயிக்கபட்ட நீர்மட்டத்தை விட 5 அடி அதிகமாக தேக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்தியாவில் பல அணைகளில் நீர்மட்டம், உச்சபட்ச நீர்மட்டத்தை விட பல அடிகள் அதிகமாக உள்ளது. அது அணையின் வெள்ள அளவையும் மதகுகளின் நிலையையும் பொறுத்து அமையும்.

இப்போது Tamil enthusiastன் பதில்கள்:

1. ஜூலை – 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான 2,200 க்யூசெக்ஸ் திறக்கப்பட்டதா என்பதற்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லை என்கிறார் ஹிமான்ஷு. ஜூலை 25 வாக்கிலேயே 2100 கன அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்த பத்திரிகை செய்தியை என் பதிவில் இணைத்திருந்தேன். அதை ஹிமான்ஷு ஏனோ கணக்கில் கொள்ளவில்லை. அதிகாரபூர்வமாக ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் எந்த அளவுக்குத் திறக்கப்படுகிறது எனத் தெரிய வேண்டுமானால், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிக்கப்படும் Log – book மட்டுமே ஒரே வழி. அது கிடைக்க வாய்ப்பில்லை.

மற்றொரு வழி, அணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைவைத்து ஓரளவுக்குக் கணிக்கலாம்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மின் நிலையத்திலும் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை Power system corporation என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி லோயர் பெரியார் புனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் 180 மெகா வாட். ஜூலை 24ஆம் தேதி மின் உற்பத்தி 147 மெகா வாட். தண்ணீர் 2100 கன அடி திறக்கப்பட்ட பிறகு அதன் உற்பத்தித் திறன் 171 மெகாவாட்.

அதாவது உற்பத்தித் திறனில் 95 சதவீதத்திற்கு மேல். ஜூலை 26, 27 என அடுத்தடுத்த நாட்களிலும் இதேபோல மின் உற்பத்தி தொடர்கிறது. ஆக, ஜூலை 25ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட முழு அளவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதற்கு இதுதான் அதிகாரபூர்வமான புள்ளிவிவரம். இதையாவது ஹிமான்ஷு ஏற்பாரா எனத் தெரியவில்லை. Srldc இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை இணைத்திருக்கிறேன்.

2. வண்டிப் பெரியாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பெரியாறு அணை திறக்கப்பட்டதே காரணம் என்று மீண்டும் சொல்கிறார். சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்கிறார் ஹிமான்ஷு. இதற்கு சற்று விளக்கமாகப் பதிலளிக்க வேண்டும்.

A. இந்த அபாய அளவு என்பது எப்போது குறிக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். ஒருவேளை அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும்போது குறிக்கப்பட்டிருக்கலாம். இப்போது வண்டிப் பெரியாறில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்றால், அறிவியல் ரீதியாக அந்த மட்டத்திற்கு, அபாய அளவை மாற்றியமைக்க வேண்டும். கேரள அரசு அதற்குத் தயாராக இருக்குமா? இதனை இப்படிப் புரிந்துகொள்ளலாம். சென்னையில் நிலநடுக்கமே ஏற்படவில்லையென்று வைத்துக்கொள்வோம். அது seismic zone 4ல் இருக்கும். ஒரு முறை நிலநடுக்கம் வந்தாலே seismic zone 2க்கோ மூன்றுக்கோ சென்னை தள்ளப்படும். Seismic zone4ல் ஏன் நிலநடுக்கம் ஏற்பட்டது எனக் கேட்கக்கூடாது. அதைப்போலத்தான்.

B. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி அளவுக்கு தண்ணீரைத் திறக்க அணையைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென கேரள அரசு கோரிவருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட்ட 24 ஆயிரம் கன அடி நீரே வண்டிப் பெரியாரை மூழ்கடித்தது என்றால் 1,20,000 கன அடி நீரைத் திறக்க ஏன் தயாராக இருக்கச் சொல்கிறது கேரள அரசு? அப்போது இதைவிட நான்கு மடங்கு தண்ணீர் வருமே, வண்டிப் பெரியாறு அப்போது மூழ்காதா? ஆக, இந்த HFL அளவு என்பது ஒரு மாறாத அளவு அல்ல. ஒவ்வொரு வெள்ளத்தையும் வைத்து அந்த அளவை மாற்ற வேண்டும்.

C. தவிர, வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாற்றின் நீர்தான் காரணம் என்கிறார் ஹிமான்ஷு. ஆகஸ்ட் 15 இரவில் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இல்லை. ஆனால், கடந்த ஜூலை 18ஆம் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு பெரும், உடமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. (https://timesofindia.indiatimes.com/…/articles…/65035962.cms ) அன்றைய தினம் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 127.5 அடி. அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பே இல்லை. அன்றைக்கு எப்படி வண்டிப் பெரியாறில் வெள்ளம் வந்தது? முல்லைப் பெரியாறு அணையின் நீரைத் தாண்டியும் வண்டிப் பெரியாறுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உண்டு என்பதுதான் இதற்குக் காரணம்.

3. சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் இணைய தளத்தில் 867.41 அடிதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே அதுதான் 142 அடி என மீண்டும் சொல்கிறார் ஹிமான்ஷு. ‘நண்பர்களிடம் கேட்டேன். அவர்களிடமும் தகவல் இல்லை’ என்கிறார்.

தகவலைப் பெற எளிய வழிகள் இருக்கின்றன. ஒன்று, தமிழகத்தில் உள்ள Dam Safety Directorateல் கேட்கலாம். அல்லது முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் உறைவிடப் பொறியாளர்களைக் கேட்கலாம். அவர்கள் அடுத்த நிமிடமே தந்துவிடுவார்கள். Mean Sea levelல் இருந்து 867.41 என்பது 136 அடிதான். அதிலிருந்து ஐந்து அடி கூடினால் 145 அடி வருமே தவிர, 147 அல்ல. ஆக ஆகஸ்ட் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 142.3 அடிதான்.

4. இன்னொரு கருத்தையும் சொல்கிறார் ஹிமான்ஷு. பெரும்பாலான அணைகளில் உயர்ந்தபட்ச அளவைவிட கூடுதலாக 5-6 அடி அளவுக்கு நீரை நிறுத்த முடியும். அப்படியிருக்கையில் முல்லைப் பெரியாறில் அன்றைய தினம் ஏன் 147 அடியாக இருக்க முடியாது என்று கேட்கிறார். சரியான கேள்விதான். முல்லைப் பெரியாறு அணையில் அப்படிச் செய்ய வேண்டுமெனால், அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி வருமளவுக்கு ஷட்டர்களை இறக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் 156 அடிக்கு தண்ணீரை நிறுத்த முடியும்.

தற்போது அங்கு 142 அடி அளவுக்கே ஷட்டர்கள் இறக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டரைத் தாண்டி வழிந்துவிடும். இப்போது ஒரு கேள்வி வரலாம். அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையின் நீர்மட்டம் அதிகபட்ச அளவான 142 என்ற அளவைத் தாண்டி, 142.3 என்ற அளவுக்கு வந்ததே, அது எப்படி எனக் கேட்கலாம்.
தண்ணீர் ஷட்டரைத் தாண்டி வழியும்போது ஒரு உயரம் இருக்குமல்லவா, அதுதான் அந்த 0.3 அடி அளவு.

சரி, நான்தான் Tamil enthusiast; எனக்குத்தான் விவரம் தெரியாது. கேரளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 16 அன்று 141.6 அடிதான் நீர் மட்டம் என்கிறதே, அவர்களுமா அப்படி இருப்பார்கள்?

Muralidharan Kasi Viswanathan,ஆகஸ்டு 31, 2018

மேலும்:

சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !

எந்த இடத்தில் எதை சொல்வது என்று தெரிய வேண்டாமா?
பறக்கும் விமானத்தில் அப்படி சத்தம் போடலாமா?
மற்ற கட்சித் தலைவர்களை நோக்கி இப்படி சொல்லிவிட முடியுமா?

– என இதில் கலர் கலராக தொழில்நுட்பக் காரணங்களை கண்டுபிடித்து அலசுவோர் பலரையும் பார்க்கிறோம்.

தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள்

இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த தடையையும் தாண்டப் போவது இல்லை. அவர்கள், தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள். அத்தகைய காரியவாதிகளுக்கு சோபியாவின் சுயமரியாதை மிக்க முழக்கத்தின் உணர்ச்சியை புரிந்துகொள்ள இயலாது.

தான் வாழ்ந்த மண்ணை நஞ்சாக்கி, பல்லாயிரம் மக்களை நோயாளிகளாக மாற்றி, குழந்தைகளுக்குக் கூட புற்றுநோயை கொண்டுவரும் ஸ்டெர்லைட் என்ற கொடிய ஆலையின் நேரடி சாட்சியம், சோபியா. கனடாவில் படித்துக் கொண்டிருந்த போதிலும், அவரது மனம் தூத்துக்குடியின் ஒவ்வோர் அசைவோடும் இணைந்திருந்தது என்பதை அவர் எழுதியுள்ள பதிவுகளும், கட்டுரைகளும் சொல்கின்றன. மே 22-ம் தேதி மஞ்சள் சட்டை அணிந்த தமிழக காவல்துறையின் கூலிப்படை, போராடிய மக்களைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்திய காட்சிகளைக் கண்டு நமக்கு மனம் கொதித்ததுபோல, சோபியாவும் ஆத்திரம் கொண்டார்.

ஒரு நாளோடு முடியவில்லை… அடுத்தடுத்த நாட்களும் வீதி வீதியாக, வீடு வீடாக விரட்டிச்சென்று மக்களை நரவேட்டையாடிய, இளைஞர்களை இழுத்துப்போட்டு அடித்துக்கொலை செய்த இந்த காவல்துறையை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் யாராலும் மறக்க இயலாது. அப்படி இருக்கும்போது தன் சொந்த ஊரின் மீது நீங்கா நேசம் கொண்ட, தன் மண்ணின் மக்கள் மீது காதல் கொண்ட சோபியாவின் மனதில் அந்த துப்பாக்கி சூடும், போலீஸின் அடாவடி வன்முறைகளும் எத்தகைய ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அதே துயருடன் அவர் கனடாவில் இருந்து சென்னை வந்திறங்கி, தூத்துக்குடி விமானத்தில் ஏறுகிறார். அங்கே தமிழிசை சவுந்தர்ராஜனைப் பார்க்கிறார்.

தமிழிசை யார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை இந்த கணம் வரை நியாயப்படுத்தி வரும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை பின்னின்று இயக்கும் ஒரு கட்சியின் தலைவர். அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது சோபியாவின் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பு என்பது மிக இயல்பானது. தனது சொந்தங்களைக் கொலை செய்த ஒரு கொலைகாரனை கண்ணெதிரே காண்கையில் உருவாகும் மனக் கொந்தளிப்பு அது. மனித மனதின் ஆதாரமான நீதியுணர்ச்சி. அந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தினால் விளைவுகள் என்னவாகும் என்று அவர் கணக்கு போடவில்லை. மாறாக கணக்கு போட்டவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

தமிழிசையை கதறவிட்ட சோபியா

தான் சார்ந்த ஒரு கட்சியை பாசிச கட்சி என்று தன் கண்ணெதிரே ஒரு பெண் முழக்கமிடுகிறாள். அதுவும், கனவான்கள் பயணிக்கிற விமானப் பயணத்தில், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற சத்தம், தமிழிசைக்கு எப்படி துளியும் எதிர்பாராத ஒன்றாகவும், திடுக்கிட வைத்த துர்கனவாகவும் இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகாயத்தில் ஒலித்த அந்த போர்க்குரலை அங்கேயே எதிர்கொள்ளும் திராணி தமிழிசைக்கு இல்லாமல் போனது ஏன்? ’சோபியாவுக்கு இங்கிதம் இல்லை;  தமிழிசைக்கு சபை நாகரிகம் தெரிந்துள்ளது’ என இதை புரிந்துகொள்வதா?

பார்ப்பனியத்தின் பெயரால் இந்தியாவை வதைத்து வரும் ஒரு பாசிசக் கட்சி தலைவரிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பதே அநாகரீகம். எனினும் அந்த அநாகரீகங்களையே நாகரீகம் என நம்பும் சில அப்பாவிகளுக்காக தமிழைசை ‘நாகரீகமாக’ நடந்து கொண்டால் எப்படி இருக்குமென கற்பனை  செய்து பார்ப்போம்.

அதன்படி சோபியாவை அழைத்து, “உங்கள் கோபத்துக்கு என்ன காரணம்?” என்று விசாரித்திருக்கலாம். பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி இல்லை என்று அவர் நம்புவதை விளக்கியிருக்கலாம். எதையும் செய்யவில்லை என்பதுடன், விமானம் தரையிரங்கும் வரையிலும் காத்திருந்து தன் கட்சிக்காரர்கள் நிற்கும் இடத்தை வந்தடைந்தவுடன் கோபத்தை வெளிப்படுத்துவது ஏன்? ஏனெனில் சோபியாவுக்கு வந்த கோபம் மிக இயல்பானது. தமிழிசைக்கு வந்த கோபம் செயற்கையானது; காரியவாதமானது. அடியாட்களின் பலத்தில் கொலேச்சும் ஒரு சர்வாதிகாரியுடையது.

ஒருவேளை விமானத்துக்கு உள்ளேயே தமிழிசை தனது கூச்சலை நிகழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ’உங்க அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை மேடம்’ என்ற பெண் காவலரின் உள்குத்தையும், ‘அறிவெல்லாம் இருக்கு. அதனாலதான் பா.ஜ.க. ஆட்சி ஒழிகன்னு கத்துது’ என்ற தமிழிசையின் சொந்த உள்குத்தையும் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போம் என்பதைத் தவிர ஆகாயத்தில் உண்மையிலேயே என்ன நடந்திருக்கும்?

இது ஒரு சுவாரஸ்யமான யூகம்தான். ஆனால் ஒருவேளை அப்படி நடந்திருந்தால் பறக்கும் விமானத்துக்குள் சோபியாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒரு சிலவேனும் எழுந்திருக்கும் என்பது நிச்சயம். அவரது முழக்கத்துக்கு விமானத்தின் இதர பயணிகளில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்ற பயணிகளின் அடியாழத்தில் புதைந்துகிடந்த பேசாக்குரலின் சாட்சியாகவே சோபியா ஓங்கி ஒலித்திருக்கிறார்.

உண்மையில் சோபியா செய்ததும், அதற்கு பொதுவெளியில் கிடைக்கும் ஆதரவும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிலைமைகளில் மட்டுமே சாத்தியம். அறிவுஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதைத் தாண்டி, தமிழ் சிவில் சமூகம் சோபியாவின் பக்கம் நிற்கிறது. அவரது உணர்ச்சியுடன் தன்னை மிக இயல்பாக ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. ஆனால் இது வட இந்தியாவில் சாத்தியம் இல்லை. சோபியா ஒரு வட இந்தியராக இருந்திருந்தால் இந்நேரம் அவர் லூயிஸ் சோபியா என்ற பெயருக்காகவே மத அடையாளம் முன்னிருத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருப்பார்.

சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற நான்கு சொற்கள், உறைந்து கிடந்த தமிழ் பொது மனநிலைக்கு ஓர் உத்வேகத்தை தந்துள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்… சமூக ஊடகங்களில் கூட அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மை மட்டுப்பட்டிருந்தது. அந்த மடையை சோபியா திறந்துவிட்டிருக்கிறார்.

என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை – சோபியாவின் தந்தை

தன் செயலுக்கு மன்னிப்புத் தெரிவிக்க சோபியா மறுத்திருக்கிறார். “நான் வெளிப்படுத்தியது இயல்பான பேச்சுரிமை” என்கிறார் அவர். “என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஒரேயொரு அவச்சொல்லை கூட பேசவில்லை” என்கிறார் சோபியாவின் தந்தையும் மருத்துவருமான கிருஷ்ணசாமி. ஆனால், இந்த அரசு சோபியாவை எளிதில் விட்டுவிடாது. கனடாவில் மீதமிருக்கும் அவரது ஆய்வுப் படிப்பை தொடர்வதற்கு தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் இடையூறைத் தரும். அதை மோடியின் ஒன்னாம் நம்பர் அடிமையான எடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வார். இதன் முதல் கட்டமாக சோபியாவின் பாஸ்போட்டை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே சமூக ஊடகங்களின் ஒருநாள் கொண்டாட்டமாக சோபியா செய்தி முடிந்துவிடாமல் அவருக்காக நாம் தொடர்ந்து பேச வேண்டும்.

தமிழ்நாட்டில் தொட்டதெல்லாம் பூம்ராங் ஆக மாறி பா.ஜ.க.வை திருப்பித் தாக்கியபோதிலும், தொடர்ந்து எதிர்மறை செய்திகளில் அடிபடுவது குறித்து அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற இயலாது என்று தெரிந்துவிட்ட பின்பு, தேர்தலுக்கு அப்பாற்பட்ட சமூக உடைப்பை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இறுகிப்போன இந்து மதவாத உணர்ச்சியை இன்னும் ஒருபடி வெறியேற்றவும், தேசியவெறியின் பெயரால் நடுத்தர வர்க்க உணர்வுகளை திசைதிருப்பவும், இவற்றுக்கு முட்டுக்கொடுக்கும் லிபரல்வாதிகளை ஊடகங்களில் உலவவிடவும் இதுபோன்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

நாம் இவர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற முழக்கத்தை சொல்ல வேண்டியது தமிழிசைக்கு எதிராக மட்டுமல்ல. அது பொன்னாருக்கு எதிராக, எச்.ராஜாவுக்கு எதிராக, கே.டி.ராகவனுக்கு எதிராக, நாராயணன் திருப்பதிக்கு எதிராக, பத்திரிகையாளர் மாலனுக்கு எதிராக, குருமூர்த்திக்கு எதிராக, எஸ்.வி.சேகருக்கு எதிராக… இன்னும் பலருக்கு எதிராக எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.

உரக்க முழங்குவோம், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’! 

  • வழுதி

திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை

கருத்து சுதந்திரம்  – போலீசார் புது விளக்கம்

“சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது“ என்று கூறி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

செப்டம்பர் 8 திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை இந்த நிலை நீடிக்கலாமா? என மாநாடு நடத்த திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் போலீசார் விசித்திரமான காரணங்களை சொல்லி அனுமதி மறுத்துள்ளனர்.

விவசாயியை வாழவிடு – தஞ்சையில் நடைபெற்ற மாநாடு

மோடி அரசிற்கு எதிராக எழுதினால், பேசினால், சிந்தித்தால், செயல்பட்டால் அவர்கள் தீவிரவாதி என முத்திரை குத்தி தாக்குதல் நடத்தும் இன்றைய பா.ஜ.க. அரசின் பாசிச நடவடிக்கை பரவிவரும் சூழலில், போராடும் மக்களை சுட்டுக்கொல்வதும், தேசதுரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதும் தவறில்லை என ஆட்சியாளர்கள் பேசிவரும் நிலையில் “அடக்குமுறைதான் ஜனநாயகமா?“ என்ற தலைப்பில் நடத்தப்படவிருக்கிறது இந்த மாநாடு.  இதில்,  நடைபெறும் மாநாட்டில் தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்.,  சி.பி.ஐ. எம்.எல்., த.தே.வி.இ. மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என பல தரப்பினர் பங்கேற்கவிருக்கின்றனர்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையாக விண்ணப்பித்த பின்னர் மொத்தம் 19 கேள்விகள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியது திருச்சி மாநகர காவல்துறை.

“அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்பதன் விளக்கம் என்ன? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை என்பதன் விளக்கம் என்ன? மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களின் நோக்கம், மைய கருத்துக்கள் என்ன? எவ்வளவு நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் அதில் ஆண்கள் பெண்கள் எத்தனை பேர்? என 19 கேள்விகள் கேட்டு திருச்சி மாநாகர போலீசார் கடிதம் கொடுத்தனர். இத்தைகய கேள்விகளைக் கேட்கும் அதிகாரம் போலீசுக்கு கிடையாது. இதற்கு எந்த சட்டத்திலும் இல்லை. இவ்வாறு கேட்பதே பேச்சுரிமை கருத்துரிமைக்கு எதிரானது என்ற ஆட்சேபணையுடன் காவல்துறையில் கடிதத்திற்கு பதில் எழுதி கொடுத்தோம்.

இதற்கு முன்னரும், மூடு டாஸ்மாக்கை, விவசாயியை வாழவிடு மாநாடுகள் மற்றும் பல பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்னால், போலீசாரால் “என்ன பேச போகிறீர்கள், பாடல் வரிகள் என்ன? மாநாட்டில் பங்கேற்பவர்களின் முகவரி செல் நம்பர் என்ன “ என்பன போன்ற மோசமான கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிக் கேள்வி கேட்பது, பின்னர் அனுமதி மறுப்பது, பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று நாங்கள் கூட்டம் நடத்துவது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி பெற்றுதான் மக்கள் அதிகாரம் பல கூட்டங்களை நடத்தி வருகிறது. எந்த நீதிபதியும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் இப்படிபட்ட கேள்விகள் கேட்கிறீர்கள் என காவல்துறையிடம் கேள்வி எழுப்பியதில்லை. கண்டித்ததுமில்லை.

செப்டம்பர் 8 திருச்சி மாநாட்டிற்கு போலீசார் கொடுத்த அனுமதி மறுப்பு உத்திரவில் காவல்துறை சொல்லியிருக்கும் காரணங்களில் முக்கியமானவை கீழ்வருமாறு –

1 கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான முழுமையான பதில்கள் தங்களால் அளிக்கப்படவில்லை.

2 உயர்நீதிமன்ற உத்திரவு பெற்று நடத்தப்பட்ட திருச்சி உறையூர் பொதுக்கூட்டத்தில் அத்துமீறி பேசி உள்ளதாக ம.க.இ.க., வி.சி.க., தி.வி.க., த.வி.ச. ஆகிய அமைப்புகளை சேர்ந்த எட்டு பேர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

3 திருச்சி மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை போஸ்டராக ஒட்டி உள்ளீர்கள் என ஒருங்கிணைப்பாளர் செழியன் மீது வழக்கு உள்ளது.

4 தங்கள் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது அரசு உழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக திருச்சியில் 4 வழக்குகள் உள்ளது.

5 மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் , புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி,  சென்னை என பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

6 திருச்சி ம.க.இ.க. ஜீவா மீது ஒரு போஸ்டர் ஒட்டியதற்காக ஒன்பது ஸ்டேசன்களில் மாநகரின் அழகை சீர்குலைத்ததாக வழக்கு உள்ளது.

7 தங்கள் அமைப்பின் செயல்பாடு நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசின் திட்டங்களை செயல்படவிடாமல் தடுப்பதும் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பும் செயல்பாடாகவும் தெரிகிறது.

8 பல வழக்குகளில் தங்கள் அமைப்பினர், குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் தாங்கள் கோரி உள்ள இந்த அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்ற சிறப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தால் அது தாங்கள் மேலும் ஒரு நிகழ்வில் சட்ட மீறல் நடவடிக்கையில் ஈடுபட வழிவகுப்பதாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது. எனவே தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே சிறப்பு மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

இவைதான் அனுமதி மறுப்புக்கான காரணங்களாம்.

ஜனநாயக உரிமையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது என்பதை இதைவிட பச்சையாகவும், வெளிப்படையாகவும் சொல்லமுடியுமா?

போலீசாரின் இந்த உத்திரவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வேறு தேதியில் மாநாட்டை நடத்துவோம்.

மேலும் கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் எந்த ஊரிலும் பொதுக்கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை. ஆனால்  மண்டப உரிமையாளரை மிரட்டி கூட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.

கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

அடுத்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுமா ? இலண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர்

பாசிச பா.ஜ.க வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காணாமல் போகும் என்கிறார் இலண்டன் பல்கலை பேராசிரியர்!

‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்ட காரணத்துக்காக 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஆய்வு மாணவர் சோபியா. அவர் எழுப்பிய முழக்கத்தை இப்போது முழு இந்தியாவும் சமூக ஊடகங்களில் எழுப்பிக்கொண்டிருக்கிறது.  சமீபத்தில் மோடியை கொல்ல சதி என்கிற பெயரில் கைதான செயல்பாட்டாளர்கள் குறித்த ஆங்கில ஊடக செய்தி ஒன்றில், பெரும்பாலான பின்னூட்டங்கள் மோடி தன்னுடைய கையாலாகா தனத்தை மறைக்கத்தான் இந்த ‘கொலைப்பழி’ நாடகத்தை போடுகிறார் என்பதை சுட்டுவதாக இருந்தன. மோடி ஆட்சிக்கு வந்த பின், இணைய ஊடகத்தில் மோடி ட்ரால்களின் ஆட்சியாகத்தான் இருந்தது. சமீபகாலமாக அந்த ட்ரெண்ட் மாறியிருக்கிறது. மோடி ட்ரால்களாக இருந்த, நடுத்தர வர்க்கம் சொந்த பாதிப்பிலிருந்து பாடம் கற்றிருப்பதை, அவர்களின் மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாக ‘பாசிச பா.ஜ.க. வரும் தேர்தலில் ஒழிந்துபோகும்’ என்கிறார் ஜேம்ஸ் மேனர் என்கிற இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.♦♦♦

ர் ஆண்டுக்கு முன் பா.ஜ.க, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்பியது. ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள், பா.ஜ.க தேய்ந்து வருவதை சொல்கின்றன. மக்களவையில் தனிப் பெரும்பான்மையுள்ள கட்சி, இப்போது தள்ளாட்டத்தை சந்திக்கிறது.  பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தாலும் அவர்கள் பிரதமரை மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கக்கூடும்.

லோக்நீதி என்ற அமைப்பு மே மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 22% தலித்துகள் பா.ஜ.க.வை ஆதரித்திருந்தனர். கடந்த ஜனவரி வெளியான முடிவைக் காட்டிலும் இது 8% குறைந்திருந்தது. இதுபோல பழங்குடியினரின் ஆதரவும் குறைந்திருந்தது. விவசாயிகளின் ஆதரவு ஒரே வருடத்தில் 49% சதவீதத்திலிருந்து 29% சதவீதமாக குறைந்திருப்பது தெரிந்தது.

மேலும் சில சரிவுகள்…

61%  பேர் இந்த அரசு விலைவாசியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

55% பேர் ஊழலை ஒழிக்க இந்த அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்கிறார்கள்.

61% பேர் இந்த அரசே ஊழல் அரசுதான் என்கிறார்கள்.

64% பேர் பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக சொல்கிறார்கள்.

57% பேர் 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்ன வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டதாக கருதுகிறார்கள்.

47% பேர் இந்த அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். முந்தைய  கணிப்பில் 27% பேர் மட்டுமே இப்படி சொல்லியிருந்தார்கள்.

38% பேர், 2014ல் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள்,     வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாநிலத்துக்கு மாநிலம் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கணக்கில் எடுத்தால், இதே போன்ற முடிவுக்கு வரமுடியும். பா.ஜ.க.வுக்கு சாதகமான மாநிலங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வென்றது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது, ஆனாலும், பா.ஜ.க. 10 லிருந்து 15 இடங்களை வெல்ல வாய்ப்புண்டு.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அசாமில் 14 இடங்களில் 7 இடங்களை வென்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றாலும் கருத்து கணிப்பு பின்னடைவு உள்ளதைக் காட்டுகிறது. சிறு மாநிலங்களில் 10க்கு 1 இடத்தில் வென்றது பா.ஜ.க. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க, வரவிருக்கிற தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.

இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் வெறும் 87 எம்.பிக்கள் மட்டுமே கிடைப்பார்கள். 326 இடங்களை ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவு. பா.ஜ.க சில அல்லது பல இடங்களை இழக்கலாம்.

டெல்லியில் ஏழுக்கு ஏழு இடங்களை பெற்றது, அதில் இழப்பு ஏற்படலாம். ஹரியானா (10 இடங்களில் முந்தைய தேர்தலில் பெற்றது 7), சத்தீஸ்கர் (11-10), குஜராத் (26-26), ஹிமாச்சல் பிரதேசம் (4-4). மொத்தமுள்ள 63 இடங்களில் பல இடங்களை பா.ஜ.க. இழக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 40 இடங்களில் 22ல் வென்றது. அதில் 9 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குப் போனது. ஜார்க்கண்ட்(14-12), கர்நாடகா(28-17). இந்த மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பீகாரில் இழப்பு அதிகமாகவே இருக்கும். காங்கிரசுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குமான கூட்டணி குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற வாய்ப்புண்டு. மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், 47 இடங்களில் 23 இடங்களைப் பெற்ற கணக்கு வெகுவாக குறையக்கூடும். அப்படியே கூட்டணி அமைந்து விட்டாலும், இவர்களை எதிர்த்துப் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பொறுத்தே இவர்களது வெற்றி அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டால், உத்திரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இதில் காங்கிரசும் ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்தால், கடந்த தேர்தலில் பா.ஜ.க வென்ற 71 தொகுதிகளில் பல தொகுதிகளை இழக்கும்.

இறுதியாக, பா.ஜ.க.வுக்கு மிக மிக சாதகமான இரண்டு மாநிலங்களில் அது கடுமையான பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்பு அறிவிக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 29 இடங்களில் 27 தொகுதிகளை வென்றது. அங்கே தற்போது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசிக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வென்றது. ராஜஸ்தானில் பா.ஜ.க. முதல்வராக முதல்முறை வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்பட்டபோது என்னென்ன குளறுபடி செய்து ஆட்சியை இழந்தாரோ அதுபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதோடு, கணிசமான மக்களவை தொகுதிகளையும் பெறும். பா.ஜ.க. பெற்ற 52 இடங்களில் கணிசமானதை இழக்கும்.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. நான்கு இடங்களை மட்டுமே வென்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க. 2 இடங்களில் வென்றது. 2019-ல் இந்த எண்ணிக்கை சற்று கூடும் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 87 இடங்கள் புதிதாக கிடைத்தாலும், முன்பு கிடைத்த 326 தொகுதிகளின் எண்ணிகையில் பெரும் சரிவு இருக்கும்.

ஆட்சியமைக்கப் போதுமான 272 தொகுதிகளை பா.ஜ.க. பெறுவதுகூட முடியாத நிலைமைதான் என தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியமைக்க போதுமான இடங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மோடியின் மீது ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் கூட்டணி கட்சியினரிடம் கடுமையான பேரத்தை பா.ஜ.க. நடத்த வேண்டியிருக்கும். 200-க்கு மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. பெற்றால், கூட்டணி கட்சியினர் மோடியை மாற்றச் சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ் அதற்கு தயாராகவே இருக்கும். 200-க்கும் கீழே எண்ணிக்கை குறைந்தால் கூட்டணி ஆட்சியமைவதும் கடினம்தான்.

இது மாறக்கூடிய நிலைமைதான். அமித் ஷாவின் தந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடியதுதான். குஜராத், உத்திரபிரதேசத்துக்கு வெளியே ஏராளமான வகுப்புவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் பா.ஜ.க.வுக்கும் உதவலாம். ஊடகங்களை வளைத்துப் போடுவதன் மூலம் மோடி பிம்பம் இன்னமும் வசீகரிப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வின் முழக்கமான எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதுதான் உண்மையான ஆபத்தில் உள்ளது.

நன்றி: ஜேம்ஸ் மேனர் எழுதி த வயரில் வெளியான கட்டுரை
For the BJP, a Troubling National Election Outlook

தமிழாக்கம்: கலைமதி

தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது.

“கேரளாவில் பா.ஜ.க. அரசு மீது வெறுப்பு வருவதற்கு ஒரு பெருமழையும், வெள்ளமும் வந்து அழிக்க வேண்டியிருந்தது. தமிழகத்தில் அதை ஒரு பெண் சாதித்து விட்டார்” என்று டிவிட்டரில் ஒரு கேரள நண்பர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சோஃபியாவின் விமான யுத்தத்திற்கு முன்பேயே அது பெருமளவு நடந்திருக்கிறது.

மோடி ஆட்சியேற்ற பின்பு தமிழகம் ஒரு புதிய பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அட்ரசே இல்லாத பா.ஜ.க., ஊடகங்களை மிரட்டியும், அ.தி.மு.க-வை ஏவியும் தன்னை தமிழகத்தில் நிறுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. அதே நேரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது. மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக மக்களிடையே பொதுவில் அரசியல் விவாதங்களை அதிகரிக்கவும், அரசியல் நிகழ்வுகளை கவனிக்கவும் வைத்திருக்கிறது.

குறிப்பாக இணையத்தில் அரசியல் சார்ந்த விவாதங்கள் பல்வேறு வடிவங்களில் – மீம்ஸ் – செய்தி – குறிப்பு – கட்டுரை – வீடியோ – விவாதம் என அதிகரித்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மோடி அரசின் மீது விமர்சனங்களை வைப்பதோடு தங்களுக்குள்ளும் உரையாடுகின்றன.

கேள்வி இதுதான்:

தமிழக  சமூக வலைத்தளங்களில் மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது?

  • கம்யூனிசம்
  • திராவிடம்
  • தமிழ் தேசியம்
  • தலித் அரசியல்
  • இந்துத்துவம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

இனி மோடி படத்தைப் பார்த்து சிரிச்சாக் கூட ஜெயிலுதான் ! கேலிச்சித்திரங்கள்

பாசிச பா.ஜ.க. ஒழிக!

பா.ஜ.க.-வின் அடிமையல்ல, தமிழகம்!
கைகளை உயர்த்துவோம், உரக்க முழங்குவோம்!
பாசிச பா.ஜ.க. ஒழிக!

___________________________________

இல.கணேசன், ஆவேசம்!

ஷோபியா பின்னாடி கூடும் கூட்டம் எங்களுக்குப் பின்னால் ஏன் வரவில்லை? இல.கணேசன், ஆவேசம்!

___________________________________

இனி சிரிச்சாகூட ஜெயிலுதான்.

(ஜெயிலில் கைதிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்)
கைதி-1: நீங்கள்லாம் ஏன்பா ஜெயிலுக்கு வந்தீங்க ?
கைதி-2: நான் மோடிய பத்தி ஒரு ஜோக் சொன்னேன்
கைதி-3: நான் அந்த ஜோக்கை கேட்டேன்.
கைதி-4: நான் அந்த ஜோக்குக்கு சிரிச்சேன்.

___________________________________

புதிய இந்தியா

புதிய இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.
கும்பல் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் – பிணையில்
சமூக செயற்பாட்டாளர் – சிறையில்

___________________________________

நகர்ப்புற நக்சல்

(இரயில் பயணத்தில் இரு பயணிகள்)
பயணி-1: ஷ்…ஷ்.. பாரு அவன் ஒரு புத்தகம் படிச்சிகிட்டு இருக்கான்.
பயணி-2: ஷ்..ஷ்.. அவன் ஒரு நகர்ப்புற நக்சலாத்தான் இருப்பான்.

கருத்துப்படங்கள்: வேலன் மற்றும் இணையம்.

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

நீதிமன்றங்களின் சமீபத்திய தீர்ப்புகள்:

தீர்ப்பு 1: இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் (தலை கவசம்) அணிய வேண்டும்.

தீர்ப்பு 2: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் நின்று செல்வதால் நேரம் விரயம் ஆகிறது. அதனால் நீதிபதிகளுக்கும் மற்ற விஐபி-களுக்கும் தனி வழி அமைக்க வேண்டும்.ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உள்ளபடியே நல்ல எண்ணம்தான். இரு சக்கர வாகனம் ஓட்டும் சாதாரண மக்களின் உயிர்களை காக்க நல்ல எண்ணத்துடன் சொல்லப்பட்ட தீர்ப்பு தான். ஆனால் நீதிமன்றங்கள் யாரை ஒழுங்குபடுத்துவதில் வேகமாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டியது.

பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் பேருந்தில் பயணம் செய்வதில்லை. படிக்கட்டுகளில்தான் பயணிக்கின்றனர்

எந்த நகரத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். பள்ளிகள் கல்லூரிகள் துவங்கும் நேரத்தில் பள்ளி கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகள் நிரம்பி வழியும். மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் படிகளில் பயணம் மேற்கொள்வதைப் பார்க்கலாம். அரசு பேருந்துகளில் மட்டுமல்ல, தனியார் பேருந்துகளிலும் இப்படித்தான் செல்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு செல்வது மட்டுமல்லாமல், இப்படி செல்வதால் விபத்துகளும் நடப்பதுண்டு.

இதே போல மழைக் காலங்களில் சாலைகள் பழுதடைந்து சரி செய்யப் படாமல் விபத்துகள் நிகழ்ந்து அதிலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதும் ஆண்டுதோறும் நடக்கும் விடயம் தான்.

நீதிபதி ஹெல்மெட்டுக்கு மட்டுமே கவலைப்படுவார்.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இருப்பதுபோல பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. அதிகம் ஏற்றிச் சென்றால் அதற்கேற்ற தண்டனையையும் சட்டம் கூறுகிறது.
ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த இருக்கும் முனைப்பும் வேகமும் அதிக பயணிகள் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏனோ இருப்பதில்லை. இரண்டு சட்டங்களும் பின்பற்றப்படாததாலும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால் ஒரு சட்டம்தான் அவர்களுக்கு முக்கியமாக தோன்றுகிறது. இதனால் நமக்கு புரிவது என்ன?

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு: “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி (பூசாரி)”.

உத்தரவுகளும் சட்டங்களும் எளியவர்களுக்கு மட்டும்தான் போல. அரசுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ எந்த சட்டமும் அமல்படுத்தப்படுவது இல்லை. ஏன் என்ற கேள்வியை யார் கேட்க முடியும்! கேட்டால் மாண்பு குறைந்துவிடும். அவமதிப்பாகி விடும்.

வேகமாக தீர்ப்பளிப்பதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம்.

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு :

கடந்த 2017-ம் ஆண்டு, செப்டெம்பர் 19, 20-ல் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி 2018-ல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. பிறகு அந்த தீர்ப்பு ஜூன் 2018-ல்தான் வருகிறது. கடந்த 2018 ஜூலை இறுதியில் மூன்றாம் நீதிபதி முன் வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி. பழைய ’சாதனைகளின்’படி பார்த்தால் டிசம்பர் அல்லது ஜனவரி 2019-ல்தான் தீர்ப்பு வரும். சாதாரணமாக யாரைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பதில் சொல்லக்கூடிய ஒரு கேள்விக்கு ஒரு வருடம் ஆகியும் இன்னும் பதில் இல்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் நடக்க வேண்டியது. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று வழக்கு தொடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 2018 ஆகப் போகிறது இன்னும் தேர்தல் நடத்தியபாடு இல்லை.

18 எம்.எல்.ஏ-க்கள் இல்லை, அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவில்லை. இவை அனைத்துக்கும், தேர்தல் ஜனநாயகம் கிட்டத்தட்ட அனைத்து நிலைகளிலும் செயல்படாமல் இருப்பதற்குக் காரணம், வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருப்பதுதான்.

ஜெயா வழக்கு :

1996-ல் சுப்பிரமணிய சாமி ஜெயாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். 1991-96 ஜெயா முதல்வராக இருந்தபொழுது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது வழக்கு. 2000 வாக்கில் முதல்முறையாக தீர்ப்பு வருகிறது. அதனால் 2001 தேர்தலில் வெற்றி பெற்றும் முதல்வராக முடியாமல் (பின்னாள்) தர்மயுத்த நாயகன் முதல்வர் ஆகிறார்.

பிறகு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பல கூத்துகளுக்கு பிறகு, 2014-ல் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கிறது. உடனே மேல்முறையீடு. சில நாட்களில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்குகிறது.
பிறகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, ஜெயா கடந்த 2016-ல் இறந்த பின்னர் 2017-ல் இறுதித் தீர்ப்பு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா இல்லையா என்று தீர்ப்பளிக்க 20 ஆண்டுகள். இந்த 20 ஆண்டுகளில் அவர், மூன்று முறை முதல்வர் ஆகி, பிறகு இறந்தே போய்விட்டார். ஆனால் சொத்து சேர்த்தாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைப் போன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்ப்பளிக்க விரைவாக செல்லவேண்டி உள்ளது. சுங்கச்சாவடிகளில் எல்லாம் நின்றால் நேரம் விரயமாகிறது. அதனால்தான் தனி வழி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் பற்றி மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும், இது ஆள்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும். எத்தனை சலுகைகள், எத்தனை சிறப்பு வழிகள்!

எங்கோ படித்தது – ‘சாலைகளில் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் வாகனங்களில் உள்ள வேகம் ஏனோ அவர்கள் செய்யும் செயல்களில் இருப்பதில்லை, ஆட்சியில் இருப்பதில்லை!’

நன்றி : Arun Karthik முகநூல் பக்கம்

அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம்செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல் !

அரங்கக் கூட்டம்

  • இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
  • நாள் : 08.09.2018, சனிக்கிழமை
  • நேரம் : மாலை 4.00 மணி

நிகழ்ச்சி தலைமை:

ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை:

  • பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
    பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா
  • பேராசிரியர் முரளி
    பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை
  • தியாகு
    தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
  • மருதையன்
    பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

நன்றியுரை:

வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!

அனைவரும் வாரீர்!

தகவல்:

மக்கள் அதிகாரம் – சென்னை
தொடர்புக்கு : 91768 01656

குறிப்பு : இந்நிகழ்ச்சி வினவு நேரலையில் ஒளிபரப்பப்படும்