Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 476

நூல் அறிமுகம் : மே தின வரலாறு !

”மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ”

– இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாசகம் இதுவென்றால், நம்ப முடிகிறதா? இன்றைய நடப்போடு இவை அப்படியே பொருந்திப்போகிறதென்றால், வார்த்தைகளின் தீர்க்கதரிசனம் என்று மெய்சிலிர்ப்பதா? இல்லை, தொழிலாளி வர்க்கத்தின் தோல்வி இதுவென்று வெட்கித் தலைகுனிவதா?

வேலைக்கேற்ற ஊதியமில்லை; வேலை உத்திரவாதமில்லை; எட்டுமணிநேர வேலை என்பது எங்குமில்லை; கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டு வருவதுமான மறுகாலனியாக்கச் சூழலில் மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதும், உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது, இந்நூல்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என கண்டதுக்கெல்லாம் ஒரு தினம் அனுசரிக்கப்படுவதைப் போன்றதல்ல, தொழிலாளர் தினம். 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர்கள் இரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகத்தான் மேதினம் கடைபிடிக்கப்படுகிறதென்று பொதுவில் நாம் அறிந்திருப்போம்.

அதற்கு முன்பும் பின்புமான வரலாற்றுப் பின்புலத்தில் நின்று, அதன் வளர்ச்சிப்போக்கை சித்திரம் போல கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இச்சிறுநூல்.

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள்.

1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.

1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.

சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது… 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க …  கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. 1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.

1889-ம் ஆண்டு நடைபெற்ற  பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.  ‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’  இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.

”உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’என்கிறார் எங்கெல்ஸ்.

வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கெதிராக, உரிமைகள் மறுக்கப்படுவதற்கெதிரானப் போராட்டங்கள் நிறைந்த இன்றையச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நினைவூட்டுகிறது, இந்நூல்.

நூல்: மே தின வரலாறு
ஆசிரியர்: அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில் எம்.சிவக்குமார்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பேச : 044- 24332424

பக்கங்கள்: 32
விலை: ரூ.20.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

வினவு செய்திப் பிரிவு

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

தோற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிய மே நாளில் சூளுரைப்போம் !

மேநாள் சூளுரை : தோற்றுபோய், ஆள அருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிவோம்!

ஓசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம்

நாள் : 1.05.2018 மாலை 4 மணி,
இடம் : தாலுக்கா அலுவலகம் தொடங்கி ரயில் நிலையம் வரை

*****

வேலூரில் பேரணி – ஆர்ப்பாட்டம்

நாள் : 1.05.2018 மாலை 4:30 மணி,
பேரணி தொடங்குமிடம் : அண்ணா சாலை, பெரியார் சிலை அருகில்.
ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடம் : மண்டி வீதி, பழைய பேருந்து நிலையம் அருகில்.

*****

தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்பொம் !
வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோல் கொள்லைக்கு தமிழகத்தை ஏலம் விட்ட மோடி!
டெல்டா கிராமங்கள் சிரைவைப்பு! மக்களை ஒடுக்க ராணுவம் குவிப்பு! தமிழகத்தின் உரிமை காக்க தமிழா புறப்படு!

காவிரியில் மட்டுமா டெல்லி தாக்குதல்…


ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, சாகர்மாலா திட்டம் என கொத்து குண்டுகள்!
தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன – ஒன்றிணைந்து போராடுவோம்!

 

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து இறுதியில் 2014-ல் மோடி பிரதமரானார்.

மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட பெயரளவுக்காவது சமூக நீதி, பொருளாதாரப் பிரச்சினைகள், இலவசங்கள் பற்றிப் பேசுகின்றன. பா.ஜ.க மட்டும்தான் பார்ப்பனிய இந்து மத வெறியை மூலதனமாக வைத்து அரசியல் கட்சியை நடத்துகின்றது. நாட்டு மக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் மதவெறியூட்டி அணிதிரட்டியிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு சரிதான் என்று மறைமுகமாக தீர்ப்புக் கூறியது அலகாபாத் உயர்நீதி மன்றம். இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்திருக்கிறது. உடனே ரத யாத்திரையை ஆரம்பித்து விட்டார்கள், இந்து மதவெறி அமைப்பினர். எதிர்க்கும் தமிழகத்தை, ஏன் இங்கு மட்டும் என்று கேட்கின்றன ஊடகங்கள்!

குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்களுக்காக களத்தில் இறங்கினார் தீஸ்தா சேதல்வாத். மோடி செய்த குற்றத்திற்கு ஆதாரத்தோடு நீதித்துறையில் படியேறிய அவரை எவ்வளவு வதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்தனர்.

குண்டுவெடிப்புகள் சிலவற்றை நடத்திய அசீமானந்தா, பிரக்யா சிங் போன்றவர்கள் மீதான வழக்குகள் தற்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாறிவிட்டன. குற்றத்தை நிரூபிக்கப் போராடிய அரசு வழக்கறிஞர்களை மாற்றினர். சொராபுதீன் கொலை வழக்கில் அமித்ஷாவை ஆஜராகச் சொன்ன நீதிபதி லோயா, பிறகு மர்ம மரணம்! நீதிபதி சதாசிவத்திற்கோ கேரள கவர்னர் பதவி!

மோடி பிரதமரான 2014-ம் ஆண்டில் ”வளர்ச்சியை வைத்து மையப் பிரச்சாரம் என்றால் மாநில அளவில் சாதி-மதவெறிதான் தீர்மானித்தது. உ.பியில் கலவரம் செய்து புகழ் பெற்ற யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சர்.

தற்போது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி மூலம் மக்களிடம் கெட்ட பெயரை ஈட்டியிருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துமதவெறியை கையில் எடுத்திருக்கிறது.

உலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் ! – எஸ்.என்.எம். அப்தி, பத்திரிகையாளர்.
  • இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதிய ஜனதாவின் அழைப்பு!
  • பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
  • அயோத்தி: முசுலீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க! – தலைமை பூசாரி பேட்டி
  • ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானந்தாவின் ஆதாரம்!!
  • பாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!
  • இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?
  • உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
  • உ.பி. கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
  • ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்!
  • தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்!
  • கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
  • விசுவ இந்து பரிசத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

காவிரி : போலீசு கோர்ட்டுக்கு அஞ்சாமல் போராடுவோம் ! தோழர் ராஜூ உரை

“ காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! ’’ என்ற முழக்கத்தின் கீழ், ஏப்.28 அன்று சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ பதிவு… பாருங்கள்… பகிருங்கள்…

கீழே உள்ள பிளேயரில் ஆடியோ கோப்பாகவும் கேட்கலாம்.

 

பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !

0

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணம் கடந்த 21ம் தேதி கல்லணையில் துவங்கி இன்று (30.04.2018) பூம்புகாரில் நிறைவு பெற்றது.

கடந்த 5 நாட்களாக 100 கிலோ மீட்டருக்குமேல் நடந்து வந்த தோழர்களை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். பல்வேறு கிரமங்களிலும் மக்கள் தோழர்களுடன் இணைந்து நடைப் பயணத்தில்உடன் சென்றுள்ளனர். சுட்டெறிக்கும் வெய்யிலிலும் சிறுவர்களும் நடைபயணத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பல ஊர்களில் இன்று சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைப் பார்ப்பது என்பதே அரிதாகிப் போயுள்ளது. பலரும் பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றுள்ளனர். அதைத் தாண்டி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

காவிரி நீர் விவசாயத்திற்கு பயன்படுவது இருக்கட்டும், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடே பெரும் பிரச்சினையாக உள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பல இடங்களில் நிலத்தடி நீரானது கெட்டுப் போய் குடிக்க லாயக்கற்றதாகிப் போயுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரு ஆழமான அச்சம் நிலவுகிறது. ஓ.என்.ஜி.சி., மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற கொலைகாரத் திட்டங்களால் தங்கள் வாழ்கை சீரழிந்து நிலங்கள் பாலையாகும் என்ற அச்சம் தான் அது.

அந்த அச்சம் அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக மாற்றியுள்ளது. அதிலிருந்து தான் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி பிரமுகர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இந்த நடைபயணத்தை ஆதரிக்கின்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் வரவேற்கின்றனர். இந்த நடைபயணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தை தணிக்க 12 நிபந்தனைகள் போட்டுள்ளது போலீசு. குறிப்பாக ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது, 30 –பேருக்கு மிகாமல் தான் நடைபயணம் செல்வோர் இருக்க வேண்டும், என்பதில் துவங்கி பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அதையும் தாண்டி பல ஊர்களில் உளவுப் பிரிவு போலிசார் நடைபயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களை நேரில் சென்று பீதியூட்டுகின்றனர். ஆனால் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது, “காவிரியை மீட்காது தமிழகத்துக்கு வாழ்வில்லை. இது டெல்டாவின் பிரச்சினை இல்லை ! தமிழகத்தின் பிரச்சினை!” என அர்ப்பணிப்போடு பீடு நடைபோடும் மக்கள் அதிகாரத்தின் இந்த நடைபயணத்தை ஆதரித்தவண்ணம் உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கல்லணை முதல் பூம்புகார் வரை 150 கிலோமீட்டர் நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் காவேரி மீட்பு நடைபயணத்தை வரவேற்கும் பூம்புகார் மீனவத்தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சென்னை திருநீர்மலை : தூக்குல போட்டாலும் டாஸ்மாக் கடையை திறக்கவிட மாட்டோம் !

சென்னை பல்லாவரத்தை அடுத்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது  திருநீர்மலை பேரூராட்சி. இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட  உழைக்கும் மக்கள் வாழும் புறநகர் பகுதி. பேரூராட்சியின் 13-ஆவது வார்டுக்குட்பட்ட ‘திருமங்கையாழ்வார்புரம்’ தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளது. இப்பகுதியில்  தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. கருங்கல் குவாரியும், சென்னை புறநகரின் குப்பைகளும் மலையாக குவிந்துள்ளன.

இங்கு பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆண்களும் சென்னையை நோக்கி நாற்புறமாய் பறக்கின்றனர். செக்யூரிட்டி, கட்டிட வேலை, தலைச்சுமை வியாபாரம் என்று கிடைத்த வேலையை செய்து வயிற்றை கழுவுகின்றனர். கூலித் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள் கற்குவாரிகளில் மண்ணோடு மண்ணாக வாழ்ந்து மடிகின்றனர். கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்த மக்களின் வாழ்க்கை இது தான்.

கழிவுநீர் கலந்த ஓடையின் ஒருபக்கம் விவசாயமும் மறுபக்கம் குப்பைக்கிடங்கும்

ஓடை தண்ணீர் சீர்கெட்டு கிடக்கிறது.  தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரி நீரில் கலந்து ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. “தூர்வார மனு கொடுத்தோம். அரசு கண்டுகொள்ளவில்லை.  ஆறு வார்டுகள் அடங்கிய பகுதிக்கு ஒரேயொரு ரேசன் கடை மட்டுமே உள்ளது. கட்டிமுடிக்கப்பட்ட கடை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதையெல்லாம் கேட்டும் கொடுக்காத அரசு, டாஸ்மாக் கடையை திறந்து இளைஞர்களை வீணடிக்க பார்க்கிறது” என்கிறார்கள் மக்கள்.

தண்ணீர் பற்றாக்குறையால் தனியார் லாரியில் பணம் கொடுத்து வாங்கப்படும் தண்ணீர்.

கல்குவாரியின் புழுதி மண்டலத்துக்குள் மூழ்கி மூச்சுத் திணறி வாழும் இப்பெண்கள் திருமங்கையாழ்வார்புரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு  போராட்டக் களத்தில் போலீசையே திணற வைத்தனர்.  தங்களின் வாழ்நிலையையும், போராட்டத்தைப் பற்றியும் அவர்களேசொல்கிறார்கள்.

மோகனா, மருமகளுடன் கைதானவர், “நா.. பொறந்து வளந்தது எல்லாமே இந்த இடம் தான். இங்க நாப்பது வருஷமா குடியிருக்கோம். இந்த ஏரியாவுக்கு வரதுக்கு ஒரு வழி மட்டும் தான் இருக்கு. அதிலயும் மழை பெஞ்சா ஊருக்குள்ள வரவே முடியாது. இங்க எல்லோரும் வார சம்பளம், நாள்கூலி, கம்பனியில வேலை செய்யிரவங்க.எங்களுக்கு எதுக்கு சாராயக்கடை?” என்று கேட்கிறார்.

வலதுபுறம் இருப்பவர் ராணி

மீன் வியாபாரியான ராணி “எட்டு வயசு முஸ்லிம் பொண்ண ஆறுநாளா ஊசி போட்டு மோசம் பண்ணியிருக்கானுங்க. டி.வி.யில போட்டு போட்டு காட்டுறான்.  தெளிவா இருந்தாலே பொம்பள பசங்கள கிண்டல் பண்றானுங்க. இதுல குடிச்சிட்டா என்ன நடக்கும்னு தெரியும். என்ன ஆனாலும் பரவாயில்ல இந்த கடைய திறக்க விட மாட்டோம். போலீசு ஜெயிலுக்கு எல்லாம் பயந்தவங்க நாங்க இல்ல.. அவ்ளோ பெரிய குவாரி ஓனர் ஜே.கே. குமாரையே எதிர்த்து போராடி குவாரிய மூடிட்டோம். அதுக்காக இரண்டு மாசம் ஜெயிலுல போட்டாங்க. பத்து வருசமா கேசு நடக்குது. “மணி அடிச்சா சோறு, மயிறு மொளச்சா மொட்ட” இதான் ஜெயிலு என்கிறார் உறுதி குலையாமல்.

மாலதி மற்றும் மையுராவுடன் கைதான பெண்கள்

மையுரா மற்றும் மாலதியுடன் கைதானவர்கள்,  “இந்த இடத்துல கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும்போதே ஏதோ கடை கட்டுராங்கன்னு நெனச்சோம். கொத்தனார் கிட்ட கேட்டதுக்கு ஓட்டல்னு சொன்னதால விட்டுட்டோம். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவரு  தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஏர்போர்ட் ராஜா. அவரோட பையன் திலீப், “இந்த இடத்துல டாஸ்மாக்- பார் வரப்போகுது. கட்டிடம் கட்டி முடிச்சதும் கவர்மென்ட் அப்ரூவல் கெடச்சிடும்”னு அவனோட நண்பர்கள் கிட்ட பேசிட்டிருந்தான். அப்போதான் எங்களுக்கு தெரிய வந்துச்சி. அப்ப இருந்தே கடைக்கு எதிரா போராட ஆரம்பிச்சிட்டோம்.

மக்கள்கிட்ட கையெழுத்து வாங்கி மார்ச் மாசம் 22-ஆம் தேதி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனா கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கல.  எங்க தொகுதியோட தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி  ஊரு பஞ்சாயத்து போர்டுக்கு வந்தப்ப அவரை சந்திச்சி கலெக்டர்கிட்ட கொடுத்த மனுவோட நகலை அவர்கிட்டயும் கொடுத்தோம். “ஓட்டுகேட்டு வரும்போது எங்களை கும்பிட்டிங்க. இப்ப நாங்க உங்களை கும்பிடுறோம்” தயவு செஞ்சி இந்த கடையை மூடுங்க. உங்க கட்சிகாரர்தான் இடம் கொடுக்கிறார். இவர்கிட்ட நீங்க சொல்லுங்க என்றோம். எம்.எல்.ஏ. பக்கத்துலயே ராஜா இருக்காப்புல. எதுவுமே பேசாம “கடையை திறந்தா உடைச்சிடுங்கன்னு” சொல்லிட்டு ராஜாவ காருல ஏத்திகிட்டு போயிட்டாரு. நாங்க இங்கயும் அங்கயுமா வெயில்ல அலைஞ்சோம்.

22-ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு வேன்ல சரக்கை கொண்டுவந்து திருட்டுத்தனமா இறக்கினாங்க. வண்டிய எடுக்கச் சொன்னோம் கேட்கல. ஷட்டரை மூடினோம். அப்பவும் அவங்க போகல. அதன் பிறகுதான் எல்லாத்தையும் உடைக்கவே ஆரம்பிச்சோம்.

‘’நாங்க கலெக்டர், எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் பாதுகாப்பு கேட்டோம். யாரும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கல. எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டோம். எதுவும் நடக்கல.  நீங்க ஓட்டல் கடை வச்சா நாலு இட்லி வாங்கி சாப்பிடுவோம், மளிகை கடை வச்சா காய்கறி வாங்குவோம்.  அதுக்கு ஒத்துழைப்போம். நாங்க அந்த பக்கமே வந்திருக்க மாட்டோம்.  கோவில் கட்டினா கையெடுத்து கும்பிடலாம் –  ஹாஸ்பிட்டல் கட்டினா கால்ல விழுந்து வணங்கலாம். குடும்பத்த கெடுக்கிறவன எப்படி ஆதரிக்க முடியும். சொந்தகாரனா இருந்தாலும் ஆதரிக்க முடியாது.’’ என்கிறார்கள் ஆவேசமாக.

‘’குடிச்சிட்டு வர பசங்கள அம்மா தான் கேள்விக் கேக்கணும், அப்பா கேட்டா மொறக்கிரானுங்க. அந்த வேதனை எங்களுக்குத் தான் தெரியும். கடை இருந்தா தானே இந்த பிரச்சனை. அதான் கடைய ஒடச்சோம். பாதி பேர் கடைய ஒடச்சாங்க. மீதிபேர் ஊர்ல இருக்க எல்லோரையும் கூட்டிட்டு வர போனோம். அப்போதான் போலிசு வந்து எங்கள மடக்கிச்சி. கைது பண்றோம்னு சொன்னாங்க. நாங்க எதுக்கும் பயப்படல. நாங்களே வண்டியில ஏறி உக்காந்துட்டோம். நைட்டி,துண்டு மட்டும் தான் இருந்துச்சி. அதையெல்லாம் பத்தி நாங்க கவலைபடவே இல்ல.’’

‘’கடைய தொறந்துட்டா கடப்பேரி, பர்மாகாலனி, பெரியமலை, லட்சுமிபுரம்னு எல்லாரும் குடிக்க வருவானுங்க. வண்டிய வழியிலேயே நிறுத்துவான். வண்டிய எடுடான்னா சண்டை வரும்……. ஸ்கூல் வேன், பொம்பள புள்ளைங்க எல்லோரும் ஒயின்ஷாப் எதிரதான் நிக்கும். எவ்ளோ பிரச்சனையதான் சந்திக்கிறது. இனிமே எங்க உயிரே போனாலும் ‘எங்கள அரஸ்ட் பண்ணி கொண்டு போயி தூக்குல போட்டாலும்’ கடைய தொறக்க விடமாட்டோம்’’ என்கிறார்கள் ஒரே குரலாக.

நித்யகல்யாணி – லட்சுமி- ராஜேஸ்வரி.

நித்யகல்யாணி – லட்சுமி – ராஜேஸ்வரி கற்குவாரியில் வேலை செய்யும் தினக்கூலிகள்.  “இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாராயக் கடையைக் கூட எங்க வீட்டு ஆம்பளைங்க விடாம தினமும் குடிக்க போறானுங்க. இப்போ வீட்டு வாசப்படியிலேய சாராயக்கடையை திறந்தாங்கன்னா அங்கேயே போய் படுத்துக்குவானுங்க. அவனுங்கள நாங்க தான் தினமும் வீட்டுக்கு தூக்கினு வரணும். குடிச்சிட்டானுங்கன்னா அவனுங்க பண்ற அலம்பல் உங்களுக்கு சொன்னா விளங்காது. எங்கள மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பானுங்க. வாரத்துக்கு நாலாயிரம் சம்பாதிச்சா இரண்டாயிரம் குடிச்சியே அழிச்சிடுவாங்க.

தினமும் இரவு ஏழு மணிக்கு நாங்க வேலைய முடிச்சிட்டு பயந்து பயந்து தான் எங்க வீட்டுக்கு வருவோம். அவனுங்க தூங்கற வரைக்கும் எங்க உயிரை எடுத்துடுவானுங்க. தினமும் இப்படி குடிச்சியே அழிச்சா சோத்துக்கு இன்னா பண்றதுன்னு கேட்டா அதுக்கும் அடிப்பானுங்க. அப்படி அடிவாங்கிய உடம்பு முடியாம போயிடுது, அடிச்சி கைய ஒடச்சிடுவாங்க. அதுக்கு மருத்துவ செலவு வட்டிக்கு வாங்கி தான் பாக்குறோம். எங்களால வட்டிகட்ட முடியல கடன் கொடுத்தவன் எல்லாம் வீட்டுல வந்து அசிங்கமா திட்டிட்டு போறாங்க.

வீட்டில இருக்க ஆம்பளை பசங்க அம்மாவ அடிக்கிறதை பார்க்க முடியாம அப்பன அடிக்கிறானுங்க. வயசு பொம்பள பசங்க தினமும் சண்டையை பார்க்க முடியாம மனசு நொந்து தூக்கு மாட்டினு செத்து போவுதுங்க. நாங்க இந்த கொடுமையை எல்லாம் யாருகிட்ட சொல்றது. இதுக்கு பிறகும் இந்த கவர்மெண்டு இங்க கடையை திறந்தா நாங்க எங்களை பலி கொடுக்கிறதை தவிர வேறு இல்ல. சாராயக் கடை எதிரிலேயே கிருஷ்ணாயில் ஊத்திக்கினு மொத்தமா செத்துருவோம் என்கிறார்கள் கண்ணீருடன்.

இந்த எளிய மக்கள் அன்றாட செலவுகளுக்கே பெரும் போராட்டம் நடத்துபவர்கள், டாஸ்மாக்கையும் எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுக்கு உதவ யாருமில்லை, ஆனால் அவர்களது உழைக்குவர்க்க கோபமும், இழப்புக்கு அஞ்சாத உறுதியும் இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

– வினவு களச் செய்தியாளர்கள்

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !

0

மிழகம் முழுவதம் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் “மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மே நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக…

சென்னையில்…

நாள் : மே – 1 மாலை 4 மணி
இடம் : சோழிங்கநல்லூர் OMR சாலை சந்திப்பு.

 

*****

திருச்சியில்…

நாள் : மே – 1 மாலை 5 மணி
இடம் : இராமகிருஷ்ணா பாலம் அருகில், மரக்கடை, திருச்சி.

 

தலைமை : தோழர் சுந்தரராசு, புஜதொமு.

கண்டன உரை : தோழர் சத்யா, ம.க.இ.க. கலைக்குழு

****

மேநாள் சூளுரை ! கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

குமுறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்கட்சிகள் அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என் ற முறையில் செயலிழந்துவரும் அரசுக்கட்டுமானங்கள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

தேர்தல் அரசியல் கட்சிகளும் மொத்த அரசியல் கட்டமைப்பும் இனி மேல் நீடிக்க முடியாதனவாகவும் சீர்த்திருத்தி நாட்டின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவே முடியாத நிலையையும் எட்டிவிட்டன. அரசும், ஆட்சியாளர்களும் , ஆள ம்வர்க்கங்களும் ஆள முடியாமல் போனது மட்டுமல்ல, ஆளத் தகுதியிழந்தும் போய்விட்டன.

தலைமை நீதிபதியை பதவி நீக்கும் நடவடிக்கை முன் மொழிவை துணை ஜனாதிபதியும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு சட்டப்படி மூவர் கு ழுவின் விசாரணைக்கு அனுப்பாமலேயே நிராகரித்துவிடுகிறார். அடுத்து பதவி நீக்க நடவடிக்கையை முன்மொழிந்த எம்.பி.க்களுக்கு உள்ள ஒரேவழி நாடாளுமன்ற மேலவைத் தலைவர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வதுதான்! எந்தத் தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கநடவடிக்கையை முன்மொழிந்தார்களோ அவரிடமே சென்று முறையிடுவதுதான் ஒரேவழி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கும் ந டவடிக்கைக்கான முன்மொழிவை ஒட்டி நடந்த விவகாரங்கள் இதற்கு ஒரு சிறந்த நிரூபணமாகும். முன்மொழிவில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்தது இதுதான்.

உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி , லக்னோவிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்குகிறார் நீதிபதி சுக்லா. தனது நண்பர் மூலம் இந்த அனுமதியை வாங்கித்தருவதாகச் சொல்லி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பேரம் பேசி, அதற்கான பேரத்தொகையாக ரூ.2 கோடியை வாங்கும்போது சிபிஐயிடம் சிக்குகிறார், ஒடிஸா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான குத்தூஸ்.

குத்தூஸ்கைதைத்தொடர்ந்து, சுக்லாவையும் கைது செய்ய அனுமதி கேட்டபோது அதற்கான அனுமதியை வழங்க வேண்டிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி கொடுக்கவில்லை. ”இந்த விவகாரத்தில் தீபக்மிஸ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது; அவரையும் விசாரிக்க வேண்டும்” என்று வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி செலமேஸ்வர், “’வழக்கைதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தவிர்த்த மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்” என்கிறார். உடனடியாக இந்த வழக்கை தன்னுடையகையில் எடுத்த தீபக்மிஸ்ரா, செல்லமேஸ்வரின் உத்தரவைக் கையோடு ரத்து செய்ததோடு வழக்கை மூன்று இளம் நீதிபதிகள் கொண்ட வேறொரு அமர்வுக்கு அனுப்பினார். அந்த அமர்வானது வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர்களுக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த முறையீட்டில் தலைமை நீதிபதி தவறிழைத்ததாகக் கருதினால் அதற்குப்பரிகாரம் தேட நாடாளுமன்ற மேலவைக்குதான் செல்லவேண்டும். இதுதான் அடுத்தவழி. இப்படி ஒரு முட்டுச்சந்தில் நீதியைக்கொண்டு வந்து நிறுத்தி, அதை தலை குனியவைத்து உச்ச நீதிமன்ற புனிதத்தின் மீதான மக்களின் கடைசி நம் பிக்கை யை யும் துடைத் தெறிந்திருக்கிறார்கள் உச்சநீதி மன்றத்தலைமை நீதிபதியும் நாடாளுமன்ற மேலவைத்தலைவரும். மேலவைத்தலைவர் துணை ஜனாதிபதியும் கூட. தற்போது காவிரி வழக்கு, குட்காவழக்கு, 11 தமிழக எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கவழக்கு ஆகியவைகளில் நீதிபதிகள் அளித்த தீர்ப்புகள் நீதிபதிகள் எப்படி கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளன. இவையெல்லாம், நீதிமன்றக் கட்டுமானம் எப்படி நிலை குலைந்து போய், நீதிவழங்க அருகதையிழந்து, இழிந்து போய்விட்டது என்று தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

சட்டவிரோதப் பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது தேர்தல் ஆணையம். அதற்காக தேர்தலை ரத்து செய்து மறுதேர்தலை நடத்தியது. முந்தையத் தேர்தலை விட இந்த மறு தேர்தலில் இன்னும் பல நூதன வழிகளில் பணப்பட்டுவாடா பட்டபகலில் நடந்தது என்பதை எல்லா ஊடகங்களும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.

இந்த முறையும் சட்டவிரோத பணப்பட்டுவாடாவைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்று இன்னொரு முறை தனது கையாலாகாதனத்தை, அருகதை இழந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. மாநில போலீசார், மத்திய போலீசார், பறக்கும் படை, துணை இராணுவப்படை, ஆயிரக்கணக்கான தேர்தல் அலுவலர்கள் என்ற படைகளை தனது வானளாவிய அதிகாரத்தில் வைத்திருந்தும் தேர்தல் ஆணையத்தால் சட்டவிரோதப் பணப்பட்டு வாடாவைத் தடுக்கமுடியவில்லை என்றால், அது இனி மேலு ம் நீடித்திருப்பதற்கான அருகதையையே இழந்து விட்டது என்பதையும் ‘ஜனநாயக’ த்தைக் காப்பாற்றவக்கற்றுப் போய் விட்டது என்பதையும் பளிச்சென்று எடுத்துக் காட்டவில்லையா?

நீரவ் மோடி என்ற முதலாளி வங்கி ஊழியர்களை வளைத்துப்போட்டு, முறைகேடுகள் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை வாங்கி தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு, கடனைக் கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்றார் என்பது ஊரறிந்த செய்தி. இதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரிசர்வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள், நிதி அமைச்சகம், கார்ப்பரேட் அமைச்சகம், சி.பி.ஐ., அமலாக்கத் துறை, பிரதமர் அலுவலகம் போன்ற மாண்புமிகு நிறுவனங்களே உடந்தையாக இருந்துள்ளன என்பதும் ஊரறிந்த செய்தி.

இது அந்நிறுவனங்களின் தோல்வியையும், நிர்வாகம் செய்ய அருகதையற்றுப் போனதையும் அப்பட்டமாகக் காட்டவில்லையா? வங்கி மோசடிக்குற்றவாளி நீரவ்மோடியை டாவோசில் நடைபெற்ற உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட பொருளாதார மாநாட்டிற்கு பிரதமர் மோடி தன்னுடன் அழைத்துச்சென்ற செய்தியும், இருவரும் கூட்டத்தில் பங்குபெற்ற புகைப்படமும் வெளியாகி பிரதமர் பதவியின் மாண்புசீர்குலைந்து இழிந்து போனதும் கட்டைமப்பு நெருக்கடியின் வெளிப்பாடு அல்லாமல் வேறென்ன?

இப்படி அன்றாடம் கட்டைம ப்பு நெருக்கடிக்கான சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கட்டுமானங்கள் ஒவ்வொன்றிலும் சரி, மொத்த சமூகக் கட்டமைப்பும் சரி தீராத நெருக்கடியில் சிக்கி , எதையு ம் தீர்க்க வக்கற்றுபோய், தோற்றுப்போய், நிலை குலைந்து போய் ஆள அருகதை இழந்து விட்டதை . நிரூபிக்கவில்லையா?

எல்லாகட்சிகளும், எல்லா அரசுதுறைகளைச் சேர்ந்த அதிகாரகள் உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கும் அனைவரும் , மக்கள் அனைவரும் இந்த கட்டமைப்பு ஆள அருகதையிழந்ததை தங்களுக்கு தெரிந்த வகையில் புரிந்து வைத்திருக்கின்றனர். வெறுப்புடனும் கிண்டலும் கேலியும் கலந்த குரலிலும் ஆத்திரத்தோடும் அன்றாடம் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த கட்டமைப்பின் மீது காறி காறி துப்புகின்றனர். கட்டமைப்பு நெருக்கடியின் ஒவ் வொரு வெளிப்பாட்டையும் எப்போதும் அரசியல் கூர்மையுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், எந்த அரசியல் கட்சியும் சரி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர் போலீசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நிபுணர்கள் மக்களின் மனநிலை பற்றி துளியும் கவலையோ அச்சமோ கொள்ள வில்லை. இப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். உள்நாட்டு –  வெளி நாட்டு கார்ப்பரேட் டுகள் அரசு சொத்துக்களை அபகரிக்கவும் இயற்கைவளங்களைச் சூறையாடி சுற்றுச் சூழலை நச்சாக்கவும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அடக்கி ஒடுக்கி, சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கவும் மேலும் மேலும் அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனர்.

இந்த மக்களால் நம்மை ஒன்றும் செய்துவிடமுடியாது. தேர்தல் நேரத்தில் சில இலவசத் திட்டங்களைக் கவர்ச்சிகரமாக அள்ளிவிட்டு, ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால் ஓட்டுவாங்கி ஆட்சிக்குவந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் உள்ளனர். பழைய அரசியல் கட்சிகள் நம்பிக்கை இழந்ததால் மக்களிடம் ரஜினி, கமல் போன்ற புதிய தலைவர்களை உருவாக்கி மக்களை இந்த தேர்தல் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்காமல் செய்து எப்பொழுதும் போல தங்களின் ஆட்சியைத் தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் ஆளும் வர்க்கங்கள் உள்ளன.

இப்பொழுது நம் முன்னர் உள்ளகேள்வி இதுதான்.

இந்த கட்டமைப்பிலேயே என்ன கஷ்டம் வந்தாலும் உழன்று கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது இந்த கட்டமைப்பை அகற்றி விட்டு நமக்கான கட்டமைப்பை, மக்களி ன் நேரடி அதிகாரத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான போரில் இறங்கப்போகிறோமா?

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்றவகையில்தான் திட்டமிட் டு நாட்டி ன் இன்றைய கட்டமைப்பு கட்டப்பட்டிருப்பது தான் இந்தக்கட்டமைப்பு நெருக்கடிக்கான அடிப்படை. தனிச்சொத்துடைமையும், அதன் அடிப்படையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது.

எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நேரடியாகவும் மறை முகமாகவும் சேவை செய்பவைதான்.

எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வுகிடையாது, கட்டமைப்புக்கு வெளியில் தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது , கட்டமைப்பையே மாற்றுவது தான் தீர்வு!

தற்போதைய கட்டுமானங்கள் முழுவதுமாகக் கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதிய அரசுக்கட்டுமானங்களை, மக்கள் அதிகாரத்துக்கான அரசுக் கட்டுமானங்களை மக்கள் தாமே நிறுவிக்கொள்வதுதான் நம்முன் உள்ள ஒரேவழி!

மாற்றுக்கட்டமைப்பு என்று சொல்லும் போது கியூபா நாட் டு மக்கள் கட்டமைத்துள்ள அவர்களின் சமூகக்கட்டமைப்பும், பொதுவுடைமையை அடிப்படையாகக் கொண்டு சீனாவிலும் ரசியாவிலும் அமைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகளும் நமக்கு முன்னுதாரணங்களாக உள்ளன.

போலீசு, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும் தனது ஆட்களை புகுத்தி பார்ப்பன பாசிசத்தை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசகும்பல். இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக்கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக்கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப்பணியாக நம்முன்னே உள்ளது.

  • கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப்போய், ஆளஅருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி,
திருச்சி, தொடர்புக்கு : 97916 92512, 89034 03970, 99431 76246.

வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !

  • ”காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லீம்!”
  • ”கோட்சேவும் சாவர்க்கரும் ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள்!”
  • ”ஐன்ஸ்டீனின் சார்புநிலை கோட்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.”
  • ”ஆரியர்களின் தாயகமான வட துருவம் பீகாருக்கும் ஒரிசாவுக்கும் நடுவில் இருந்தது.”
  • ”ஹிட்லர் போற்றப்பட வேண்டிய ஜெர்மானிய தேசபக்தத் தலைவர்!”

– இவை போன்ற இந்துத்துவப் பிதற்றல்களை, பாரத வரலாறு என்று நமது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் திட்டம். இவற்றின் அடிப்படையில் பள்ளி வரலாற்றுப் பாடங்களைத் திருத்துவதற்கு முன்தயாரிப்பாக, மோடியின் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, 14 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். இந்த கமிட்டியின் தலைவர் கே.என். தீட்சித் என்ற வடநாட்டுப் பார்ப்பனர்.

2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி பற்றிய விபரங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ரூபம் ஜெயின், டாம் லசெட்டர் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

”இந்துக்கள்தான் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப்பதற்குப் பொருத்தமான வகையில் புதைபொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வுகளையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.
”கமிட்டியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றிய பிறகு, அதன் பரிந்துரைகளைப் பள்ளிக் கல்வியிலும், ஆராய்ச்சித் துறைகளிலும் சேர்க்குமாறு மனித வளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்போம்” என்று கூறுகிறார் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா.

”கலாச்சார அமைச்சகம் பரிந்துரைக்கும் எல்லா விஷயங்களையும் அக்கறையோடு அமல்படுத்துவோம்” என்கிறார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யாவைத் தொடர்பு கொண்ட போது, ”இந்திய வரலாற்றின் உண்மையான நிறம் காவி. கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்” என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்று ஆய்வுப் பிரிவின் தலைவர் பால்முகுந்த் பாண்டே, ”இந்து நூல்கள் கற்பனை அல்ல, உண்மை என்று நிரூபித்து, இந்தியாவின் கடந்த காலப் பெருமையை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

முஸ்லீம்களும், கிருத்துவர்களும் இந்து கலாச்சாரத்தை ஏற்று, இந்துக்களின் தயவில் வாழ வேண்டும் என்ற பாசிச அரசியலைத் திணிப்பதற்குப் பார்ப்பன மதம்தான் இந்தியாவின் மதம் என்று நிரூபிப்பது அடிப்படை தேவையாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும், பழங்குடி மக்கள், உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளை இந்துமதம் உள்வாங்கிச் செரிக்க முயற்சித்திருக்கிறது என்பதையும் மறைப்பது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

எனவேதான், பார்ப்பனர்களின் வேத பாராயணம் போல, ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் எது அன்றாடம் போதிக்கப்படுகிறதோ, அதையெல்லாம் மாணவர்கள் அனைவர் மீதும் திணிப்பதன் மூலம் எல்லாப் பள்ளிகளையும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

”இந்துக்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அறிவையும், ஞானத்தையும் கொண்டு சென்றவர்கள். பழங்கால இந்தியாவிலிருந்து அறிவு முதலில் எகிப்துக்குப் போய், அங்கிருந்து ரோமாபுரிக்கும், ஐரோப்பாவுக்கும் பரவி, இறுதியாக அமெரிக்காவைச் சென்றடைந்தது” என்று சாதிக்கிறார்கள்.

கிருஷ்ணனும், அர்ஜுனனும் அஸ்வதாரி (நீராவிக் கப்பல்) ஒன்றின் மீது ஏறிப் பாதாள உலகத்துக்குச் (அமெரிக்கா) சென்றார்கள். உலோபி என்ற பாதாள மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், அர்ஜுனன் என்று மகாபாரதத்தில் இருப்பதால், அந்தக் காலத்து மக்கள் வெளிநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் போய் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அனுமார் என்பவர் இராமாயணத்தில் சஞ்சீவி மலையை இலங்கைக்குத் தூக்கிச் சென்ற பலசாலி என்று நம்பும் வைணவர்கள் பலர் இருக்கிறார்கள். அனுமான் ஒரு சிரஞ்சீவி, அவனுக்கு இறப்பே இல்லை. எங்கெல்லாம் இராமனின் கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் வந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பான் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அது வரையில் அத்தகைய மூட நம்பிக்கை அவர்களது தனிப்பட்ட விவகாரம்.

ஆனால், பாபர் மசூதிக்குள் 1949-இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986-இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி (கே.எம்.பாண்டே), நீதிமன்ற அறையில் மேற்கூரையில் குரங்கு வடிவில் அனுமார் அமர்ந்திருந்தார் என்று நம்பும்போது, நீதிபதியின் அந்த நம்பிக்கைதான் தீர்ப்பைத் தீர்மானிக்கிறது.

”பிள்ளையாருக்கு யானைத் தலை பொருத்தப்பட்டிருப்பது நமது முன்னோர்கள் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று இந்திய அறிவியல் காங்கிரசில் மோடி பேசினாரே, நாம் முட்டாள்தனமாகப் பேசுகிறோம் என்று தெரிந்தா அவர் பேசினார்? நம் முன்னோர்கள் மனித உடலில் யானைத் தலையை ஒட்டவைக்கும் அளவுக்கு அறிவியலில் முன்னேறியிருந்தார்கள் என்று மோடி உண்மையிலேயே நம்புகிறார். விஞ்ஞானிகளையும் அவ்வாறே நம்பச் சொல்கிறார். பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு நபர், இத்தகைய அடிமுட்டாளாக இருக்கும்போது அதன் சமூக விளைவு எத்தகையதாக இருக்கும்?

மாணவ சமுதாயம் முழுவதையும் அந்த மட்டத்துக்கு இறக்குவதாகத்தான் இருக்கும்.

* * * * *

ரலாறு என்பது பைபிள், குரான் அல்லது வேத புராணங்களில் சொல்லப்படும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதல்ல. அறிவியல் அணுகுமுறையின் மூலம் பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சரிபார்த்து, அவற்றுக்கிடையேயான இணைப்புகளைப் பொருத்திப் பார்த்து, படிப்படியாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி உருவாக்கப்பட்டதுதான் இன்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான வரலாறு.

வரலாற்று ஆய்வு என்பது இலக்கிய ஆதாரங்கள் (வேதங்கள், சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள்), கல்வெட்டுகள், புதைபொருள் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நிறுவப்படுவதாகும். சமீப காலங்களில் மரபணு ஆய்வு மூலமாகவும் மனித குலத்தின் வரலாற்று நகர்வுகள் பற்றிய முடிவுகள் முன் வைக்கப்படுகின்றன.

இப்போதைய நமது வரலாற்று அறிவு என்பது கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை உறுதி செய்தும், மறுத்தும், மற்ற ஆய்வாளர்களுடனான வாத பிரதிவாதங்கள், விமர்சனங்கள், கருத்து பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டும் உருவாகியிருக்கிறது.

சங்கப் பரிவாரம் கூறும் வரலாற்றின்படி இராமாயணம் நடந்த திரேதா யுகத்தைத் தொடர்ந்து 8.4 இலட்சம் ஆண்டுகள் துவாபர யுகம் நீடித்தது (மகாபாரதம்) பாண்டவர்களின் ஆட்சிக்குப் பிறகு தொடங்கிய கலியுகம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை திரட்டப்பட்ட புதைபொருள் ஆய்வுகளோ, மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரீக நிலைக்கு மாறியதே சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், பாரதத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நாகரீகம் இருந்தது என்று சொன்னால், உலகம் இந்தப் பார்ப்பனக் கும்பலைப் பார்த்து சிரிக்கும். எனவேதான், மேலே சொன்ன கமிட்டியின் ஆய்வை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து நாகரீகத்தைப் பற்றிய ஆய்வு என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் புதிய திட்டம் இல்லை.

1977-ல் ஜனதா ஆட்சியில் பங்கேற்றபோதே இந்துத்துவாதிகள் தங்கள் நம்பிக்கைக்குப் புறம்பான வரலாற்று நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

வாஜ்பாயி பிரதமராக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முரளி மனோகர் ஜோஷி மனித வளத்துறை அமைச்சராக இருந்தபோது பாடப் புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி தொடங்கப்பட்டது. அதில் சிந்து சமவெளி நாகரீகம் என்பதை சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று மாற்றியிருந்தனர். சிந்து என்ற உண்மையான ஆற்றை, சரஸ்வதி என்ற அவர்களது கற்பனையோடு இணைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.

தீனாநாத் பத்ரா எழுதிய புத்தகங்கள் குஜராத்திலும் அரியானாவிலும் பாடப் புத்தகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இராஜஸ்தானில் வரலாற்றுப் புத்தகங்கள் ஏற்கனவே திருத்தி எழுதப்பட்டு விட்டன.

19-ஆம் நூற்றாண்டில் சனாதன பார்ப்பன மதத்தை இந்து மதம் என்ற புதிய மொந்தைக்குள் அடைத்தவர்களுள் முக்கியமான ஒருவரான தயானந்த சரஸ்வதி, கிருத்துவ பாதிரியார்களை எதிர்த்து வாதிடுவதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார். பைபிள் சொல்லும் பரம்பரை காலக்கோடு ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை மட்டுமே நீளும் போது, இந்து புராணங்களில் சொல்லப்படும் கல்பகோடி யுகங்கள், பூமி 400-500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று நிலவியல் (geology) சொல்வதுடன் ஒத்துப்போவதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

இப்படி இந்துத்துவவாதிகள் அறிவியலைத் தமது நோக்கத்துக்கு ஒருபுறம் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்னொருபுறம், வேதங்களின் காலம் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மொழியியல் அறிஞர்கள் சொன்னால், அதை ஐரோப்பிய கிருத்துவ சதி என்று கூக்குரல் எழுப்புவார்கள்.

புஷ்பக விமானம் பண்டைய இந்தியாவில் விமான போக்குவரத்து இருந்ததற்கான ஆதாரம், பிரும்மாஸ்திரம்தான் அணுகுண்டு என எல்லாமே வேதங்களிலும், இதிகாசங்களிலும் இருந்ததாக அவிழ்த்துவிடும் வேலையை மிகவும் திறம்படச் செய்தவர் செத்துப்போன மூத்த சங்கராச்சாரி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

குவாண்டம் இயற்பியலின் நிச்சயமின்மை கோட்பாட்டை முன்வைத்த ஜெர்மனியைச் சேர்ந்த ஹைசன்பர்க், அதை வேதங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டார் என்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஹைசன்பர்க் வேதங்களைப் படித்ததே இல்லை என்று சுட்டிக்காட்டியதும், அவர் தாகூரிடம் ஒரு முறை பேசியிருக்கிறார், அதிலிருந்து வேதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார் என்று சாதித்தனர். ஆனால், ஹைசன்பர்க் தாகூரைச் சந்திப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிச்சயமின்மை கோட்பாட்டை உருவாக்கி வெளியிட்டிருந்தார்.

இப்போது ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டை விஞ்சுகின்ற அறிவு வேதங்களில் இருக்கிறது என்று ஹாக்கிங் கூறியதாக அவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன். ஹாக்கிங் இவ்வாறெல்லாம் சொன்னதில்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றனர் ஹாக்கிங் அறக்கட்டளையினர்.

அறிவியலாளர்கள் மாநாட்டில் ஹர்ஷ் வர்த்தன் இப்படி பேசியிருப்பது குறித்து நோபல் பரிசு பெற்ற வேதியியல் ஆய்வாளரும் இலண்டன் ராயல் சொசைட்டி ஆப் சயின்ஸின் தலைவருமான வெங்கி. ராமகிருஷ்ணனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
”நான் ஏதாவது கருத்து சொன்னால், உடனே என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகிவிட்டவன் என்பார்கள். அறிவின் மிகப்பெரிய எதிரி, அறியாமையல்ல. தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங். அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். என்னிடம் கருத்து கேட்பது இருக்கட்டும். இந்தியாவில் ஒன்றுக்கு மூன்று அறிவியல் கழகங்கள் இருக்கின்றனவே, அமைச்சரின் பேச்சு பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களைக் கேளுங்கள்” என்றாராம் ராமகிருஷ்ணன்.

இதுதான் நம் கவனத்துக்குரியது. பாடத்திட்டத்தை இந்துத்துவ மயமாக்குவது பற்றி ராய்டர் எழுதுகிறது. ஹர்ஷ்வர்த்தனின் உளறல் பற்றி ராமகிருஷ்ணன் கருத்து சொல்கிறார். ஆனால், இங்கிருக்கும் அறிவியலாளர்கள் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? அவர்களுடைய மவுனம்தான் பாசிசத்துக்கு வாசிக்கப்படும் வரவேற்புரை.

– சாக்கியன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

நூல் அறிமுகம் : நியூட்ரினோ திட்டம் மலையளவு ஆபத்து !

யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை மிகுந்த சூழலுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தேனி நியூட்ரினோ ஆய்வகத்தைக் குறித்து விளக்குகிறது இப்புத்தகம்.

முறையற்ற சூழல் அனுமதி தொடங்கி பல்வேறு குளறுபடிகளுடன் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட காத்திருக்கும் இத்திட்டம் மக்கள் விரோத – சூழல் விரோத – அழிவு அறிவியலின் ஒரு அங்கம் என்பதை அறிவியலாளர்கள், சூழியலாளர்கள் இப்புத்தகத்தில் விவரிக்கின்றனர்.

நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வை எதற்காக மேற்கொள்கிறார்கள்? நியூட்ரினோ ஆய்வை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறார்கள்? இதனால் உடனடியாக ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? எதிர்காலத்தில் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்களா? முறையான சூழலியல் அனுமதி இல்லாமல் அவசரகதியில் கொள்ளைப்புறமாக இத்திட்டத்தை கொண்டுவருவதன் பின்னணி என்ன? அணுஉலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கதிர்வீச்சுத் தன்மையுடைய அணுக்கழிவுகளை பூமிக்கடியில் சேமிக்கும், ஆழ் புவிசார் கிடங்கு அமைப்பதற்குத்தான் குகை தோண்டப் போகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது, இச்சிறுநூல்.

‘’நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனிமாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப்பெரிய அளவுள்ள காந்தமயப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.’’

‘’நமது உடல், நாம் பயன்படுத்தும் பொருள் வெளி என எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது நியூட்ரினோ. ஒரு பேனாவின் மூலம் வைக்கப்படும் புள்ளியில் இரண்டு லட்சம் கோடி நியூட்ரினோ இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சொடக்கு போடும் நேரத்தில் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலில் புகுந்து வெளியேறிக் கொண்டுள்ளது. உடலை மட்டுமல்ல பூமியையே துளைத்து சென்று கொண்டும், வந்து கொண்டும் உள்ளது.’’

‘’இந்தத்திட்டம் ஒரு அடிப்படை அறிவியல் திட்டமென்றும் எதிர்காலத்தில் பல புதிய எல்லைகளைத் திறக்கும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. சார்பியல் தத்துவம் அறிவியல் சூத்திரம்தான். அதை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் உலகத்தின் ஒப்பற்ற விஞ்ஞானிதான். ஆனால் அவர் கண்டுபிடித்த அந்த அடிப்படை சூத்திரத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும்  3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.’’

இந்நூலில் விரவிக்கிடக்கும் பிரமிப்பூட்டும் விவரங்களும் அறிவியல் உண்மைகளும் நியூட்ரினோவிற்கு எதிராக வினையாற்றத் தூண்டுகின்றன.

நூல்: நியூட்ரினோ திட்டம்: மலையளவு ஆபத்து

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.
பேச: 9094990900

பக்கங்கள்: 64
விலை: ரூ.50.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

வினவு செய்திப் பிரிவு

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!

லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று ! புதுச்சேரியில் லெனின் பிறந்த நாள் விழா !

ப்ரல்-22 பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் பிறந்த நாளை, புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் தொழிற்பேட்டைப் பகுதியிலுள்ள தொழிற்சங்க அலுவலகத்தின் முன் முழக்கமிட்டு, பிரசுரங்கள் விநியோகித்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  திருவிழாவாக கொண்டாடினர்.

பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாகப் புறப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், வில்லியனூர் என தொழிற்சாலைப் பகுதிகள், தொழிலாளர் குடியிருப்புக்கள், நகரப் பகுதிகளில் முழக்கமிட்டுச் சென்று வழி நெடுகிலும் உள்ள மக்களுக்கு லெனினைப் பற்றி விளக்கியும், அது தொடர்பான பிரசுரங்களை விநியோகித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

‘’தொழிலாளி வர்க்கம் தன் மீதான உழைப்பு சுரண்டலிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், முதலாளித்துவம் ஒழிய வேண்டும். முதலாளித்துவத்தின் ஆன்மாவாக உள்ள மூலதனக் குவியல் ஒழிய வேண்டும். உழைப்பும், அதனால் கிடைக்கும் லாபமும் சமூகமயமாக்கப்பட வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவினார் மாமேதை காரல் மார்க்ஸ்.

உலகை வியாக்கியானம் செய்யும் மற்ற தத்துவங்களைப் போன்றது அல்ல மார்க்சியம். அது உலகையே மாற்றுவதற்குரிய தத்துவம் என்பதை உழைக்கும் மக்களைப் பாட்டாளி வர்க்கமாக ஒன்று திரட்டி மாபெரும் ரசியப் புரட்சியின் மூலம் நடைமுறையில் சாதித்துக் காட்டினார் தோழர் லெனின். உழைப்புச் சுரண்டலை ஒழித்து, லாபத்தை சமூகமயமாக்கியதன் மூலம், அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை, அனைவருக்கும் கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஆண் பெண் சமத்துவம் உள்ளிட்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியது லெனின் தலைமையிலான சோசலிச ரசியா.

இன்று ஆட்குறைப்பு, வேலைபறிப்பு, வேலை நேரம் அதிகரிப்பு, கூலி குறைப்பு என உழைப்புச் சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் மீதான ஒடுக்குமுறைகளும் இன்று பல்கிப் பெருகி, வாழ்வதே பெரும் பாடாக உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு, உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுபட வழிகாட்டிய ஆசானாக, தலைவனாக, தோழனாக லெனின் நமக்குத் தேவைப்படுகிறார்.

லெனின் தேவை, அவரது படங்களாக, உருவங்களாக, சிலைகளாக இருப்பதால் மட்டும் பூர்த்தியாகி விடுவதில்லை. சிந்தனையாக இருக்கும் போது, அது செயலாக மாறும் போது தான் பூர்த்தியடைகிறது.

லெனினைப் பற்று ! லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று !’’ என லெனின் பிறந்தநாள் கொண்டாங்களின் வாயிலாகத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது, பு.ஜ.தொ.மு.

This slideshow requires JavaScript.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி
தொடர்புக்கு: 9597789801

நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

0

நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

டிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழகமெங்கும் பல காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பா.ஜ.க. இளைஞரணிக்காரர் புகார் கொடுத்த மறுநாளே திருச்சியில் தோழர் கோவனை வீடு புகுந்து இழுத்துச்சென்ற தமிழக போலீசு, பத்திரிகையாளர் சமூகமே புகார் கொடுத்த பின்னரும், மயிலாப்பூர் சேகர் வீட்டு வாயிற்படியையே மிதிக்கவில்லை.

அதே நேரத்தில் குற்றத்தை எதிர்த்த பத்திரிகையாளர்கள் மீதான நடவடிக்கை மட்டும் வேகம் பிடித்திருக்கிறது. சேகர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையினர் நியூஸ் 18 தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பலர் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவர் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற பத்திரிகையாளர்களை அந்தந்த நிர்வாகங்கள் பாராட்டியிருக்கும் போது, நியூஸ் 18 நிர்வாகம் மட்டும் தண்டிப்பதற்கு விரும்புகிறதா?

பார்ப்பன திமிரின் தொடர்ச்சியாக எஸ்.வி.சேகர்.

அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை பத்திரிகையாளர்கள் மீதான நிர்வாக ரீதியான நடவடிக்கையாக நாம் பார்க்கக் கூடாது. அதனை பா.ஜ.க.-வின் உத்தரவுக்கிணங்க எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.

ஆண்டாள் பிரச்சனை, பெரியார் சிலை உடைப்பு, ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் நியமனங்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் “தாத்தா”வின் நடவடிக்கை, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவர் மனைவி மக்களையும் இழிவு படுத்திய எச்.ராஜாவின் பதிவு, காவிரி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மக்களை அவமதிக்கும் சுப்பிரமணியசாமியின் கருத்துகள், புதிய தலைமுறை செந்தில் நடத்திய நேர்காணலில் எஸ்.வி.சேகர் அவருக்கு எதிராக வெளிப்படுத்திய பார்ப்பனத் திமிர், துக்ளக் குருமூர்த்தியின் எழுத்துகள்.. ஆகிய அனைத்தின் தொடர்ச்சிதான் சா.திருமலை அலையஸ் எஸ்.வி.சேகரின் பதிவு.

எனவே, ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த நிறுவனம், என்ன முகாந்திரத்தின் பேரில் நடவடிக்கை எடுத்தாலும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தின் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடவேண்டும். இது பத்திரிகையாளர்களுடைய பணிப்பாதுகாப்பு குறித்த தொழிற்சங்க பிரச்சினை அல்ல. தமிழ்ச் சமூகத்தை இந்துத்துவ பாசிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை.

***

போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக சங்கி டிரோல்கள் நடத்தும் தாக்குதல் ஒருபுறம் இருக்க, பத்ரிகா தர்மம் என்ற பெயரிலும் நிறுவனத்தின் ஒழுங்கு என்ற பெயரிலும் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. நாம் செய்தது தவறுதானோ என்ற குற்றவுணர்வுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக கேள்வி எழுப்பும் அருகதை நிர்வாகத்தினருக்கு உண்டா என்ற கேள்விக்கு முதலில் பதில் தேவை. தொலைக்காட்சி நிறுவனங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கான நேர்முகம் படுக்கையறையில்தான் நடக்கிறது என்று எழுதி, எல்லா தொலைக்காட்சிகளையும், அவற்றின் ஊழியர்களையும் இழிவுபடுத்தியிருக்கும் இந்த பொறுக்கிகளுக்கு எதிராக நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சேகர் மீதும், தன்னுடைய நண்பர் என்று சேகரால் உரிமை பாராட்டப்படும் திருமலை மீதும் குறைந்த பட்சம் ஒரு போலீசு புகாரைக் கூட கொடுப்பதற்குத் திராணியில்லாத ஒரு நிர்வாகத்துக்கு, தனது ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அருகதை உண்டா?

இந்நிறுவனங்கள் பத்திரிகையாளர்களின் உழைப்புக்குத்தான் ஊதியம் கொடுக்கின்றனவேயன்றி, பா.ஜ.க. பொறுக்கிகளின் பேச்சையெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டு போவதற்கு அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக, தொழிலாளிகளின் மானத்தையும் சுயமரியாதையையும் விலை பேசுவதை பத்திரிகையாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

***

ன்று இந்தியாவில் இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் மாநிலமாக இருப்பது தமிழகம். ஊடக முதலாளிகளின் நெருக்குதலையும், பா.ஜ.க. வினரின் திரைமறைவு அழுத்தங்களையும் மீறி சங்க பரிவாரத்தின் அரசியலுக்கு எதிரான குரல் ஒலிக்கின்ற ஒரு களமாக தமிழ்த் தொலைக்காட்சிகள் இன்னமும் இருக்கின்றன. இன்று இந்த ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்பட்டால், விரைவிலேயே தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தந்தி டி.வி.-யாக மாறிவிடும். அப்படி மாற்றுவதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.

எஸ்.வி.சேகரின் மனசாட்சியான மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன்.

சங்க பரிவாரத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் விதத்தில், “ஆங்கில-மேட்டுக்குடி-அதிகாரத் தாழ்வார“ பத்திரிகையாளர்கள் சிலர் வேலை செய்கின்றனர். அவர்களுடைய இலக்கில் நியூஸ் 18 தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி சங்கபரிவாரங்கள் விரும்பாத சில பத்திரிகையாளர்களும் இருப்பதாகத் தெரிகிறது. எந்தக் காயை யார் என்ன நோக்கத்துக்காக நகர்த்துகிறார்கள் என்பதை இப்போது நாம் ஊகிக்க முடியாது. ஊகங்களை விட்டுவிடுவோம். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு வருவோம்.

ஊடகத்துறை அறம் பற்றி பெரிதும் கவலைப்படுகிறார் மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன். சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பிராம்மண சமூஹம் நடத்திய மனிதச் சங்கிலியின் ஒரு முனையில் எஸ்.வி.சேகர் இருந்தாரென்றால் இன்னொரு முனையில் இருந்தவர் இவர். சங்கராச்சாரியை நிரபராதியாக காண முடிந்தவருக்கு கல்லெறிந்தவர்கள் குற்றவாளிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.

சந்தியா ரவிசங்கர் என்ற அம்மையார் பத்திரிகையாளர் சமூகத்தின் சார்பில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்த விவேக் எப்படி சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்பதை விளக்கி ஆங்கில தி இந்துவில் உருக்கமான ஒரு கட்டுரை எழுதியவர்  இவர். பார்க்க வினவு கட்டுரை . விவேக்கை உழைப்பால் உயர்ந்த உத்தமராக கருதுபவருக்கு பத்திரிகையாளர்கள் ரவுடிகளாகத்தானே தெரிய வேண்டும்.

இவை இரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கூட்டத்தைத் தவிர, ஊரகப் பகுதி பத்திரிகையாளர்கள் யாரும் மேற்படி “கல்லெறி” சம்பவத்தை கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்கவே செய்கிறார்கள்.

***

ல்லெறி என்பது தீவிரமான எதிர்ப்புணர்வின் ஒரு வடிவம். எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்த அந்த வக்கிரத்தை ஒரு பெண்ணிடம் யாரேனும் நேரில் பேசியிருந்தால், சேகருக்கு விழுந்திருக்கக் கூடிய தர்ம அடியை எண்ணிப் பார்த்தால் அதில் ஒரு விழுக்காடு கூடக் காணாது இந்தக் கல்லடி.

கல் எறிந்தது சட்ட விரோதமாம். உண்மைதான். ஆனால் இன்று தமிழகத்தில் நடப்பதும், டில்லியில் நடப்பதும் சட்டவிரோத ஆட்சிகள்தானே. சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வழக்கிற்குப் பின்னரும், அசீமானந்தா, மாயா கோத்னானி விடுதலைக்குப் பின்னரும் லோயா தீர்ப்புக்குப் பின்னரும் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? இந்த தீர்ப்புகள் மீது கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுகிறார் ரவிசங்கர் பிரசாத். இந்த தீர்ப்புகளின் மீது கல்லெறிவதையும் நிறுத்திக் கொள்வோமா?

எச்ச ராஜாவின் திமிருக்கு சிறப்பு கவரேஜ் கொடுக்கும் ஊடகங்கள்!

பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, குஜராத் படுகொலை வரை ஒரு நீண்ட சட்டவிரோதக் கொலைக்குற்றங்களின் மூலம் ஆட்சிக்கு வந்திருக்கும் பாசிசக் கிரிமினல்கள்தான் சங்க பரிவாரத்தினர். சட்டத்தின் ஆட்சி என்று நடிப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி. சட்டவிரோதக் கொலைகள், கலவரங்களை அரங்கேற்ற சங்க பரிவாரம். பிறகு பரிவாரத்தின் குற்றங்களை சேனல்களில் அமர்ந்து நியாயப்படுத்த ராகவன்கள், நாராயணன்கள்.

“எச்.ராசா கள்ள உறவுன்னுதான் சொல்லியிருக்கார். யார் பெயரையும் சொல்லலியே” என்று விவாதத்தில் தி.மு.க.வினரை நக்கல் செய்கிறார் ராகவன். “ஆசிபாவைக் கொன்றது ரோஹிங்யா முஸ்லிம்கள்தான்” என்கிறார்கள் பா.ஜ.க. ஊடகப் பிரதிநிதிகள். எத்தனை ஆண்டுகளாக தொடர்கிறது இந்த நாடகம்?

அன்று பத்திரிகையாளர்கள் வீசிய கல் சேகர் வீட்டின் மீது எறியப்பட்ட கல் மட்டுமல்ல, இந்த நாடகத்தின் மீது எறியப்பட்ட கல்.

***

ல்லை மட்டும் எறியாமல் இருந்திருந்தால்….  என்று பத்திரிகையாளர்களிடம் சொல்பவர்கள், அதை டாஸ்மாக் கடையை உடைக்கும் பெண்களிடம் சொல்வார்களா? மணல் லாரிகளை சிறைப் பிடிக்கும் மக்களிடம் சொல்வார்களா? ஓ.என்.ஜி.சி யைத் தடுத்து நிறுத்தும் விவசாயிகளிடம் சொல்வார்களா? இவர்கள் தமிழிசையிடம் மனுக் கொடுத்ததைப் போல, அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறு டாஸ்மாக்கை எதிர்த்து நிற்கும் பெண்களிடம் இவர்கள் சொல்வார்களா?

சட்டத்தை நம்பி, அதற்கு அடங்கி நடந்து பயனில்லை என்று தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, தமக்கே உரிய முறைகளில் சட்டத்தை மீறி மக்கள் நடத்தும் போராட்டங்களைத்தான் எல்லா தொலைக்காட்சிகளும் அன்றாடம் ஒளிபரப்புகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்தும் தாம் சொல்லிக் கொள்ளும் நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேறு எங்கும் போகத் தேவையில்லை. மற்றெல்லோரையும் விட இந்த உண்மை புரிந்தவர்கள் பத்திரிகையாளர்கள்தான். தொலைக்காட்சி விவாதங்கள் இந்த உண்மையைத்தான் அன்றாடம் நிறுவுகின்றன.

இப்படிக் குமுறி வெடிக்கின்ற மக்களுடைய கோபத்தின் இன்னொரு வடிவம்தான் பத்திரிகையாளர்களின் கல்வீச்சு. இது ஆண்டாள் விவகாரத்தின்போதே வீசியிருக்கவேண்டிய கல், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவுடன் வீசியிருக்க வேண்டிய கல். மேலாண்மை வாரியத்துக்கு கைவிரித்தவுடன், தி.மு.க. தலைவரின் குடும்பத்தை இழிவு படுத்தியவுடன் வீசப்பட்டிருக்க வேண்டிய கல்.

***

சிலர், இந்தக் கல்வீச்சை புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையெனக் விளக்குகிறார்கள். கல்லை வீசியவர்களுக்குத்தான் பாதிப்பு என்று லாபநட்டக் கணக்குப் போட்டு அறிவுரை சொல்கிறார்கள். இந்த அறிவுரைகள் நிர்மலாதேவி மாணவிகளுக்கு வழங்கும் அறிவுரையுடன் அதிசயிக்கத்தக்க முறையில் ஒத்துப் போகின்றன.

போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அதன் விளைவுகள் குறித்து யோசித்துக் கொள்ளவேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால், “இந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு, அந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு” என்று யோசிப்பவர்கள் எந்தக் காலத்திலும் எந்தக் கோட்டையும் தாண்டுவதில்லை.

இந்தக் கல்வீச்சு எதை சாதிக்கவில்லையென்றாலும், “அனுமதிக்கப்பட்ட எதிர்ப்பு முறைகள்” என்ற கோட்டைத் தாண்டியிருக்கிறதே அதுதான் மிக முக்கியமான சாதனை.

இந்த சட்டங்களும் அரசும் எதிரிகளை தண்டிக்கப் போவதில்லை என்பது தெளிவான பிறகு, புதிய போராட்ட முறைகளை நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும். சட்ட வரம்புகள், அவற்றின் மீதான அச்சம், புனித கற்பிதங்கள் ஆகியவற்றை நாம் மதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் எதிரிகள் நிம்மதியாக இருக்க முடியும். பத்திரிகையாளர்கள் அந்தக் கோட்டைத் தாண்டிய காரணத்தினால்தான் சில நாட்களுக்காவது சேகர் தலைமறைவாக வேண்டிய நிலை வந்திருக்கிறது.

ஆகப்பெரிய புத்திசாலிகளாகிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே எல்லைக் கோடுகளை மீறி தெருவுக்கு வந்து கல்லெறியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, பத்திரிகையாளர்கள் எம்மாத்திரம்?

***

ரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர் சமூகத்துக்கு என்ன நடந்ததோ அதுதான் இன்று தமிழக பத்திரிகையாளர்களுக்கும் நடக்கிறது. வழக்கறிஞர் சமூகம் வீதியில் இறங்கிப் போராடுவதென்பது இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எங்கும் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதபோது, அந்த  நியமனத்தையே நிறுத்தியதும் வேறு எங்கும் இல்லை. சுப்ரீம் கோர்ட் என்பதே சுப்பிரமணியசாமி கோர்ட்டுதான் என்ற அளவுக்கு செல்வாக்கு பெற்ற சு.சாமியை நீதிமன்ற அறைக்குள் வைத்தே முட்டையால் அடித்ததும் வேறு எங்கும் இல்லை. கிரானைட், தாதுமணல் கொள்ளைக்கு ஆதரவாக வழங்கப்பட்ட முறைகேடான தீர்ப்புகளையும், அவற்றை வழங்கிய நீதிபதிகளையும் பற்றி ஊழல் புகார் கொடுத்து பயனில்லாத நிலையில் 1500 வழக்கறிஞர்கள் பகிரங்கமாக (மதுரையில்) பேரணி நடத்தியதும் இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை.

கர்நாடகாவில் செருப்படி

இன்று பத்திரிகையாளர்களை குற்றம் சொல்லும் மேட்டுக்குடி ஜர்னலிஸ்டுகளைப் போலவே, மேட்டுக்குடி வக்கீல்களும் தமிழக வழக்கறிஞர்களைக் குற்றம் சொன்னார்கள். தகுதியற்றவர்கள் வக்கீலாகிவிடுவதாக அங்கலாய்த்தார்கள். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் பல வழக்கறிஞர்களுக்கு விசாரணையே இல்லாமல் வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில். இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்தியப் படையைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இன்று உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் ஒடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். நீதிபதிகளின் மர்ம மரணத்தைப் பார்க்கிறோம்.

***

சித்தார்த் வரதராஜன், புரொபீர் புர்காயஸ்தா, கிருஷ்ணபிரசாத், ஹரிஷ் கரே, பாபி கோஷ் ஆகிய பத்திரிகையாளர்கள் கல்லெறிந்த காரணத்தால் வெளியேற்றப்படவில்லை. கவுரி லங்கேஷ் கல்லெறிந்த குற்றத்துக்காக படுகொலை செய்யப்படவில்லை.

இன்று போராடும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துகளிலும் சரி, அன்று தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளிலும் சரி சாதியக் காழ்ப்பும், மேட்டுக்குடி மனோபாவமும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. இவ்வாறு கருத்து தெரிவிப்போர் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் சங்க பரிவார எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிராக, இயல்பாக, நேர்மையாகப் போராடிய இளம் பத்திரிகையாளர்களைக் காவு கொடுப்பதற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் எதிரிகளுக்குத்தான் துணை நிற்கிறார்கள். இப்போது தேவைப்படுவது பத்திரிகையாளர்களின் ஒற்றுமையல்ல, பிளவு.

காவிரி, நியூட்ரினோ, ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன், நீட், இந்தித்திணிப்பு ஆகியவை மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் பணிநீக்கமும் இனி தமிழ்ச்சமூகத்தின் பிரச்சனைதான்.

பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!

  • வினவு

எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை

மிழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2017 – ஆம் ஆண்டின்படி 518. அதில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து ஐநூறு. எண்பத்தி ஒன்பது ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேரவில்லை. இது அரசே கொடுத்த புள்ளி விவரம்.

சென்ற 2017-ம் ஆண்டு நீட் தேர்வு குழப்பத்தால் பத்தாயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக சேர்ந்து விட்டனர். இந்த ஆண்டு தனியார் கல்லூரிகள் திகிலில் இருக்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு இந்து பத்திரிகை போன்ற ‘மதிப்பு’ மிக்க ஊடகங்கள் துணை நிற்கின்றன. இப்படியாக ஊடகங்களும், சுயநிதிக் கல்லூரி முதலாளிகளும் சந்தையை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் டிரேட் சென்டர் – வர்த்தக மையத்தில் வரும் நாட்களில் மேற்படி கல்வி சந்தைக்கான கண்காட்சியை அடிக்கடி காணலாம். அப்படி ஒரு கண்காட்சிக்கு வினவு செய்தியாளர்கள் சென்றிருந்தார்கள்.

சென்னை வர்த்த மையத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரம். குழப்பத்திலிருந்து விடுதலையா, குழப்பத்தை வைத்து வழிப்பறியா?

சிவராமகிருஷ்ணன். தாம்பரம், தனியார் நிறுவன ஊழியர், ‘’பொண்ணு பிளஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கு. அடுத்து எதை எடுப்பது என்று தெரியாமல் குழப்பமா இருக்கு. இங்க பல கல்லூரிகளின் வசதிகளைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தாலும் நம்ம பசங்க வாங்குற மார்க்குக்கு கவர்மென்ட் கல்லூரியில இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியிலதான் சேர்க்கணும். அதுக்கு இப்பவே எது நல்லதுன்னு தேடுறோம். பணம் செலவானாலும் ஒரு நல்ல கல்லூரியில சேர்த்துட்டோம்ன்ற ஒரு நிம்மதி நமக்கும் கிடைக்கும்.’’
ஹர்ஷிதா, பத்தாம் வகுப்பு மாணவி. ‘’பிளஸ் டூ-வில் எந்தப் பிரிவு எடுக்க வேண்டும், எதற்கு வருங்காலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு வந்திருக்கிறோம். எம்.பி.பி.எஸ். தான் படிக்கணும்னு இல்ல. மருத்துவத்துலயே தொழில்நுட்ப பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். அது சம்பந்தமாக படித்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இன்னும் சுத்தி விசாரிக்க போறோம்.’’
சிவா, தாம்பரம் பிளஸ் டூ மாணவர். ‘’நான் இஞ்சினியரிங் EEE படிக்கணும்னு ஆசை. எந்த காலேஜ்ல சேர்ந்தா நல்லதுன்னு விசாரிக்க வந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு, நேர்காணலின் போது குழப்பம் வரக்கூடாது இல்லையா? அரசு பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைப்பது சந்தேகம்.’’ என்றார்.
சிவக்குமார், காவல்துறை அதிகாரி, மேற்கு சைதாப்பேட்டை. ‘’என் மகள் பெயர் ஆர்த்தி. அவரை (clat) தேசிய சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன். எட்டாவது படிக்கும் போதே இதற்கான முயற்சியில இறங்கிட்டேன். கடந்த இரண்டு வருஷமா சென்னையில ஸ்ரீராம் அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். பெங்களூர் நேசனல் லா காலேஜ்தான் சிறந்தது. அதில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும். போலீஸ் துறையில் இருப்பதால் எனக்கு சட்டம் பற்றி தெரியும். போலீசு நாங்கள் சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும். ஆனால் வக்கீல்கள் சட்டத்தோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்காக இத்துறையில் பொண்ணை எப்படியாவது சேர்த்து விட வேண்டும்.’’
ஜெயசங்கர், ஐயப்பன்தாங்கல். ‘’என் மகள் சோனா, பி.இ. பொறியியல் படிக்க வேண்டும். கல்வித்தரமும், வேலை வாய்ப்பும் வழங்கும் கல்லூரியைத் தேடி வந்திருக்கிறேன். வி.ஐ.டி. அதிகம் பணம் கேட்கிறார்கள். இருந்தாலும் தரம் இருக்கும். என்ன படிக்கிறோம் என்பதைவிட எங்க படிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியமில்லையா!’’

 கார்த்திகேயன், புனித பீட்டர்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி ஆவடி. ‘’மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர். அவருடைய கல்லூரி ஸ்டாலில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ஆள் பிடிப்பதற்கு கல்லூரி நிறுவனம் இவரை அழைத்து வந்துள்ளது. கோட்டுப் போட்டுக்கொண்டு, வரும் பெற்றோர்களிடம் தன் கல்லூரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சொந்த ஊர் கோவில்பட்டி. தந்தை இல்லை. இரண்டு அண்ணன்கள் பாராமரிப்பில் படிக்கிறார். இவர் நான்கு அரியர்ஸ் வைத்துள்ளார். ‘’நீங்களே சரியாக படிக்க முடியவில்லை. நீங்கள் எப்படி மாணவர்களுக்கு ஆசைக்காட்டி சேர்க்கலாம்’’ என்று கேட்டதற்கு, சிரிக்கிறார்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்.

புரோக்கர் நிர்மலாதேவி கைது ! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது ?

0

‘’புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி கைது! சிறை! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது?’’ – என்ற தலைப்பில், ஏப்ரல் 23 அன்று மதுரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார், பேராசிரியர்கள் சீனிவாசன் மற்றும் இரா. முரளி, ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர் லயனல் அந்தோணிராஜ், ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

‘’டாஸ்மாக்கை எதிர்த்து பெண்கள் போராடினால் எட்டி உதைக்கிறது போலீசு. கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் தடியடி நடத்துகிறது போலீசு. சமூக அவலங்களை அம்பலப்படுத்தி பாட்டுப் பாடிய தோழர் கோவனை, கதவை உடைத்து இழுத்துச் செல்கிறது போலீசு. ஆனால் புரோக்கர் வேலை செய்த நிர்மலாதேவிக்கு, ஆவணங்களை அழிக்கவும் உயர்மட்டங்களோடு கலந்துபேசி முடிவுக்கு வருவதற்கும், ஆறு மணி நேரம் அவகாசம் வழங்குகிறது. இதுனுடைய அர்த்தம் என்ன?’’ என்று கேள்வியெழுப்பிய தோழர் ஆனந்த், ‘’மாணவர்கள் சங்கமாக ஒன்று சேராமல் ஒதுங்கிப் போவதால்தான், கேட்பாரற்று இருக்கும் மாணவர்களை அதிகார வர்க்கம் தங்கள் இஷ்டம் போல் வளைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.’’ என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார்  தனது உரையில், ‘’ நிர்மலாதேவியை கைது செய்த போலீசு துணைவேந்தரையும் ஆளுநரையும் இன்னும் ஏன் கைது செய்ய வில்லை?’’  எனக் கேள்வி எழுப்பியவர், ‘’பல்வேறு சிறப்பான பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் கொண்டிருந்த இப்பல்லைக்கழகம், கல்யாணி மதிவாணன் மற்றும் அவருடைய அடிவருடி செல்லத்துரை போன்றவர்களால் சீரழிந்துவிட்டது.  இவர்களை பல்கலைகழகத்திலிருந்து விரட்ட மாணவர்களும் மக்களும் தான் முன்வரவேண்டும்’’ என்றார்.

‘’பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பாலியல் கிரிமினல்களாக உள்ளனர், சிறுமிகளை வல்லுறவு செய்கின்றனர், நாடாளுமன்றத்தில் அதிகமான பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.பிக்களில் பா.ஜ.க. வினர்கள் தான் அதிகம். இந்த கும்பலில் ஒரு ஆளுதான் ஆளுநர் புரோகித்’’  என்றார் ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம்.

” இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் காரிதுப்பும் நிலையில் தான் உள்ளன. தகுதியே இல்லாத செல்லத்துரை போன்ற நபர்கள் துணைவேந்தர்களாக இருந்தால் எப்படி உருப்படும்?’’ எனச் சாடிய பேராசிரியர் சீனிவாசன், ‘’இந்த சம்பவம் நடந்த பிறகு எந்த பொற்றோர்களாவது தன்னுடைய பெண் பிள்ளைகளை பல்கலைகழகங்களுக்கு படிக்க அனுப்ப தைரியம் வருமா? இவர்களுக்கெல்லாம் பெற்றோர்கள் போராசிரியர்கள் மாணவிகள் இணைந்து செருப்படி கொடுத்தால் தான் நம்முடைய குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியும்’’ என்றார்.

பேராசிரியர் இரா. முரளி , தனது உரையில், ‘’ஏதோ ஒரு நகரத்தில் ஆயிரம் பேர் துப்பாக்கியுடன் ஊர்வலம் போகின்றார்கள். மக்களுடைய பிரச்சனைகள் தொடர்ச்சியாக இப்படி தீர்க்கப்படாமல் அதிகரித்து கொண்டே சென்றால் நாமும் இதை போல ஆயுதங்களை தூக்கிக்கொண்டு செல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது’’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

‘’நாம் ஆளுநரை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் உண்மை நிலைமை என்ன? பதவியில் இருக்கக் கூடிய ஆளுநரையோ, நீதிபதிகளையோ, குடியரசுத் தலைவரையோ சட்டப்படி கைது செய்ய முடியாது. இதைத்தாண்டி குற்றம் வெளியே வந்தால் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த புகார்களை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். இந்த சட்ட பாதுகாப்புடன் தான் இவ்வளவு கிரிமினல், பாலியல் அத்துமீறல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த அரசு கட்டமைப்பில் அது சாத்தியமில்லை. இந்த அரசு கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் இணைய வேண்டும் என்று பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனி ராஜ்.

தகவல்: ம.க.இ.க., பு.மா.இ.மு., மதுரை.

காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !

காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை சார்பில் கடந்த ஏப்ரல் – 21 அன்று கல்லணையில் இருந்து தொடங்கியது, மக்கள் அதிகாரம். கல்லணையில் தொடங்கிய இந்நடைபயணம் ஏப்ரல் – 30 அன்று பூம்புகாரில் நிறைவடைகிறது. நடைபயணத்தின் நிறைவையொட்டி, சீர்காழி பகுதியிலுள்ள திருமுல்லைவாசலில் நடைபெறும் என அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மனுவைக் கூட வாங்கிப் பார்க்காமல், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது சீர்காழி போலீசு. ‘’என்ன காரணத்துக்காக அனுமதி மறுக்கிறீர்கள்? எழுதிக் கொடுங்கள்’’ என வாதிட்டனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். ‘’அய்யாகிட்ட பேசிட்டு சொல்றேன்… எஸ்.பி.கிட்ட பேசிட்டு சொல்றேன்’’னு ஏப்ரல்-18 முதல் போக்கு காட்டி வந்தது சீர்காழி போலீசு.

இந்நிலையில், பொதுக்கூட்ட அனுமதி தொடர்பாக போலீசு நிலையம் சென்ற மக்கள் அதிகாரத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி மற்றும் முன்னணியாளர் தோழர் ஸ்டாலின் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது சீர்காழி போலீசு.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியது; காசுமீரத்துச் சிறுமி ஆசிஃபா, பா.ஜ.க. கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சுவரொட்டி ஒட்டியது; ஆகிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும், மேலும் தொடர்ந்து அரசுக்கு எதிராக கலகம் செய்யும் விதமாக செயல்படுவதாலும் இந்தக் கைது நடவடிக்கை என்றது, போலீசு.

சீர்காழி மாஜிஸ்ட்ரேட் முன் தோழர்களை நேர்நிறுத்தியது போலீசு. ‘’போஸ்டர் ஒட்டுவது கூடக் கிரிமினல் குற்றமா?’’ என அங்கேயே வாதிட்டனர், தோழர்கள். சொந்தப் பிணையில் விடுவித்தார் மாஜிஸ்ட்ரேட்.

நெல்வயல்களைப் பாழாக்கும் ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு என்பதும்; பூமியைக் குடைந்து, வருங்காலத் தலைமுறையையே இல்லாதொழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களை கைவிடு என்பதும்; காவிரி நீரின் தமிழக உரிமையை மறுத்து, அரைகுறை வயித்துப்பாட்டுக்கும் வேட்டு வைக்கும் மத்திய அரசின் ஓரவஞ்சனையை கண்டிப்பதும் தேசவிரோதமாகத் தெரிகிறதாம் அரசுக்கு.

இது, தேசவிரோதம் என்றால்; இது கலகம் என்றால் அதைத் தொடர்ந்து செய்வோம்; துணிந்து செய்வோம்!

தகவல்: மக்கள் அதிகாரம்.

எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் ‘’ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளு!!’’ – என்ற கோரிக்கையுடன், தோழர் நிர்மலா தலைமையில் 24-04-2018 அன்று திருச்சி காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் ‘’சென்னையில்தான்  வழக்கு போட்டுட்டாங்களே, நீங்க ஏன் திரும்ப மனு கொடுக்கிறீங்க?’’ என்றார், காவல் ஆணையர். ‘’இந்த ஒரு சம்பவம் என்றில்லை, தொடர்ச்சியாகவே வன்மத்துடனும் வக்கிரமாகவும் கருத்துக்களை வெளியிட்டுவரும் எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்று பதிலளித்தனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

காவல் ஆணையரிடம் வழங்கப்பட்ட மனு:

அனுப்புதல்

ஜெ.நிர்மலா,
மக்கள் அதிகாரம்,
21-சி, என்.என்.என். கட்டிடம்,
காஜாமியான் தெரு,
பாலக்கரை, திருச்சி-1.
பேச:-94454 75157

அடைதல்

உயர்திரு.காவல்துறை ஆணையர் அவர்கள்,
திருச்சி மாநகரம்,  திருச்சி.

அய்யா,

பொருள்:- ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் உள்ளிட்ட பெண்களைமிகக் கேவலமாக சித்தரித்து, தமிழகத்தின் அமைதியை கெடுத்து, வன்முறையைத் தூண்டும்  எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தால் கன்னத்தில் தட்டப்பட்ட ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் என்ற பெண் நிருபர் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் “மதுரை யுனிவர்சிடியும், கவர்னரும் பின்னே கன்னிப் பெண்ணின் கன்னமும்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், “அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள், படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரும்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக் கழகங்களை விடவும் அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான்பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்விக் கேட்க கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான அசிங்கமான அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன் பெரும்பாலான மீடியா ஆட்களே” என்று பதிவிட்டுள்ளார்.

கவர்னரின் செயல் குறித்து உரிய பத்திரிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட கவர்னரும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், மேற்படி பதிவானது ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படுகின்ற பத்திரிக்கை துறையில் பணியாற்றும் பெண்களை அவதூறு செய்வதாக உள்ளது. மேலும் மேற்படி பேஸ்புக் பதிவானது அமைதியை கெடுத்து, வன்முறை தூண்டும் நோக்கம் கொண்டதாகும். ஒரு ஊடகத் துறை பெண்ணையும் அதை முன்னிட்டு ஒட்டு மொத்த பெண் இனத்தையுமே சிறுமைப்படுத்தி பேசியுள்ள இச்செயலை ஒரு ஜனநாயக சமூகம் சகித்துக் கொள்ள முடியாது. ஆணாதிக்க கருத்தியலின் அருவெறுக்கத்தக்க இக்கருத்தை பேசியவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராகவும் சினிமா நடிகராகவும் இருப்பவராவா்.

காஷ்மீர் கதுவா தொடங்கி உ.பி. உன்னாவ் வரை பா.ஜ.க. தலைவர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும் கொலை செய்தும் வந்துள்ள நேரத்தில்… முன்னாள் மேகாலயா கவர்னர் தொடங்கி இந்நாள் தமிழக கவர்னர் வரை பாலியல் விவகாரங்களில் சிக்கி சந்தி சிரித்து வரும் நிலையில்… எஸ்.வி.சேகர் இவ்வாறு பெண்கள் பற்றி மட்டமான கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் கீழ்த்தரமான ஆணாதிக்க கருத்து என்பதுடன் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

வாய்க்கொழுப்பெடுத்து இவ்வாறு பேசியுள்ள எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மனநோயாளிகளின் நிலைக்கு ஆளாகிவிட்ட இப்படிப்பட்ட நபர்கள்  சுதந்திரமாக நடமாடுவதும் கருத்து தெரிவிப்பதும் இனியும் தொடரக்கூடாது என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கருதுகிறோம். எனவே, இவரை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

தமிழக அரசின் தலைமைச்செயலராக இவரது நெருங்கிய உறவினர் இருப்பதால் இவரைக் கைது செய்ய காவல்துறை அஞ்சுவதாக ஊடகங்களில் கருத்து வந்து கொண்டுள்ளது. தவறிழைத்தவர்கள் எத்தகைய செல்வாக்குள்ளவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். எனவே, தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(நிர்மலா)
மக்கள் அதிகாரம், திருச்சி.

தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.