இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும்
மதுரை : தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !
தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மே 23 அன்று காலை மதுரையில் நடைபெற்றது. முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அனுபவ உரையாக தோழர் கே.எஸ் அவர்கள் தோழர் திசை கர்ணனுடன் அமைப்பு வேலைகளில் பயனித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக புதிய ஜனநாயகம் புத்தகம் விற்பனை, கம்பம் – கூடலூர் பகுதியில் செய்யும்போது, CPI-க்கும் தங்களுக்கும் நடந்த மோதலை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் போட வேண்டும் என அவர் கூறியது, இன்னும் என் நெஞ்சிலே நிற்கிறது. தோழர் அந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் களத்தில் நின்று போராட கூடியவர் என்று கூறி முடித்தார்.
ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், “தோழர் திசை கர்ணனை பற்றி வெளியில் நாங்கள் பேசும்போது, ஒரு சில நபர்கள் எங்களை பார்த்து கேட்டார்கள் அந்த தோழர் அப்பகுதியில் முதலில் என்ன மாதிரியான அமைப்பு வேலை செய்தார் என்றனர். உரம் மற்றும் இறால் பண்ணை ஒழிப்பு மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றில் அவர் முதன்மையானவராக கலந்துகொண்டு களத்தில் தொடர்ச்சியாக போராடியவர் என்பதை கூறும்போது, அவர்கள் புரிந்து கொண்டனர்.
மருத்துவமனையில் அவருடன் இருக்கும்போது தன்னுடைய உள்ள உடல்நிலையை பற்றிகூட அவர் பேசியது இல்லை; மற்ற தோழர்களின் உடல்நிலை குறித்து அவர் விவாதிக்கும் தன்மை எங்களுக்கு ஆச்சரியத்தை காட்டியது. அவர் இறந்தபின்பும் நம்மில் வாழ்கிறார் என்றால் அவரின் சிறப்பு பன்புதான். தன்னலம் கருதாமல் உழைக்கின்ற மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த நம் தோழர் திசை கர்ணனனிடம் இடம் இருந்து இது போன்ற நற்பண்புகளை நினைவு கூறுவதுதான் இந்த நினைவு அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்கும்” என்பதோடு உரையை முடித்துக்கொண்டார்.
படிக்க :
♦ உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்
♦ தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை
பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி, “நாம் இந்த மண்ணில் ஒருமுறைதான் பிறக்கிறோம். நம் வாழ்க்கை என்பதும் ஒருமுறைதான். அப்படி இருக்கும்போது நாம் எவ்வாறு வாழவேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர் தான் தோழர் திசை கர்ணன். உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்காக அமைப்பு வேலைகளை அர்ப்பணிப்பாக செய்தவர். இன்று தமிழகத்தில் இந்து ராஷ்டிரா நிறுவுவதற்கு இந்த காவி கும்பல் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நச்சுக் கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கிறது; இதற்கு எதிராக நின்றவர்தான் தோழர் திசை கர்ணன். இந்த அடிப்படையில் தோழரின் செயல்பாடுகளை நாம் நெஞ்சிலேந்த வேண்டும் என கூறினார்.
மக்கள் அதிகாரம், மாநில இணைச்செயலாளர், தோழர் குருசாமி, “தோழர் திசை கர்ணன் என்னுடைய சிறுவயது நண்பர். அவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தாளராக வேலை செய்தார். பிறகு அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு அமைப்பு வேலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது ஆதிக்கச் சாதியினரின் கொடுங்கோன்மை மேலோங்கி இருந்தது அப்போது ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தோழரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய தேவையே இல்லை; ஆனாலும் அவரை கைது செய்ததின் நோக்கம் அமைப்பின் முன்னணியாளர்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் மேட்டிமைத்தனமான பண்புகள் இல்லை; ஒரு பாட்டாளி வர்க்க சிந்தனை உடையவராகவே திகழ்ந்தார்.
எந்த வர்க்கப் பின்னணியில் இருந்து வந்தாலும் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக பாட்டாளி வர்க்க பண்புகளை ஏற்றுக்கொண்டு எவரொருவர் செயல்படுபவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்ட். அந்த வகையில் தோழர் திசை கர்ணன் அவர்கள் ஒரு உண்மையான நக்சல்பாரி புரட்சியாளர். இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் தோழரின் நற்பண்புகளை அவரிடமிருந்து வரித்துக் கொள்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்” என கூறி முடித்தார்.
தொகுப்புரை மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள் பேசுகையில், “மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்துச் செல்வதற்கு எளிதாக – உதவியாக – இருந்தது இசை நாடகம், பாடல் போன்றவைதான். இதை தோழர் திசை கர்ணன் மிக நேர்த்தியாக கையாண்டார். குறவன் குறத்தி நாடகம் போட்டு மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்து சென்றார். ஒரு நாள் அவர் மாமியார் ஊரில் அவருடைய வீட்டில் குறவன் வேடம் போடும்போது எந்த ஒரு மன சங்கடமும் இல்லாமல் அவர் வேடமணிந்து நாடகம் நடத்தினார். யார் எதை சொன்னாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் ஏற்றுக்கொண்ட வேலைகளை முழுமையாக செய்து முடிப்பதில் முனைப்பாக இருந்தவர்தான் தோழர் திசை கர்ணன். அவர் ஒரு நக்சல்பாரி புரட்சியாளராகவே வாழ்ந்து வந்தவர். அவருடைய அளப்பரிய களப்பணிகளை நம் இளம் தோழர்களுக்கு ஒவ்வொருவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
ம.பி.யில் அதிகரிக்கும் ரத்த சோகை நோய் : உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நல அரசு !
பிறந்து 6 முதல் 59 மாதங்கள் ஆன குழந்தைகளில் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு !
சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் National Family and Health Survey (NFHS) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2019 முதல் 2021 வரையிலான காலத்தில் பிறந்த 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது முன்பு நடந்த ஆய்வில் வந்த 69 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆய்வில் குறிப்பிடும்போது 27 சதவீதம் பேர் மிதமான பாதிப்புடனும் 42 சதவீதம் பேர் அதைவிட அதிகமாகவும் 3 சதவீதம் பேர் மிகவும் கடுமையாக ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விஷயங்களை பார்க்கும்போது, இந்திய குழந்தைகள் எந்த அளவுக்கு நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஆய்வைப் பற்றி குறிப்பிடும் மருத்துவர் ஹேமந்த் ஜெயின் (Dr Hemant Jain (retired professor), Mahatma Gandhi Memoria Medical College) பிறந்து 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆரம்பத்தில் தாய்ப்பால் குடித்து வளருகிறார்கள். அப்படி தாயிடமிருந்து குடிக்கும் பால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் மருத்துவர்.
படிக்க :
♦ மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
♦ இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !
மேலும் அவர் குறிப்பிடும்போது, 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் பயிறு வகைகள் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் கொடுக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.
இது இரண்டு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒன்று பெண்களே ஆரோக்கியமாக இல்லை; மற்றொன்று குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிரச்சினை என்பது பார்த்தாலே நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.
உணவு தானியம், பால், பழங்கள், இறைச்சி, முட்டை உற்பத்தி என அனைத்திலும் உலகின் முதல் மூன்று இடங்களில் அல்லது ஐந்து இடங்களில் இருக்கும் இந்தியாவில் ஏன் இந்த நிலை? ஏனென்றால், உழைக்கும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை, வேலை இல்லை, வருமானம் இல்லை இது ஒருபுறம். இறைச்சி, முட்டை, மீன், கருவாடு போன்றவற்றை சாப்பிட விடாமல் தடுக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் மறுபுறம்.
பள்ளிகளில் உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் இஸ்கான் என்ற நிறுவனம் உணவு வகைகளில் முட்டை இறைச்சி உணவுகளை புறக்கணிக்கும் வேலையை செய்துள்ளது. இது பல்வேறு இடங்களிலும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதை நாமறிவோம். இந்த நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை நிறுவனம் என்பதும் கூடுதல் விஷயம்.
தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே கொள்கைகளை அமல்படுத்திய இலங்கைதான் இன்று மாபெரும் நெருக்கடியில் சிக்கி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.
படிக்க :
♦ குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !
♦ ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !
இந்த அரசு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளதாக பேசுகிறார்கள். நாம் இவர்களிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி; ஏன் போன ஆய்வை காட்டிலும் இந்த ஆய்வில் 73 சதவீதம் என உயர்ந்தது? அப்படியானால் உங்களுடைய திட்டங்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை. பிரச்சனையை மேலும் தீவிரமாகி உள்ளது. இந்த பிரச்சினையை அரசு சரி செய்யாது என்ற எதார்த்தம் நம் கண்முன்னால் நிற்கிறது.
இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை மானியங்களாக கொடுத்து – சலுகைகளாக கொடுத்து – அதானி அம்பானிக்களை உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கிறார்கள் மோடி தலைமையிலான பாசிச கும்பல். மோடி அரசு கொடுக்கும் பணம் எல்லாம் அவருடைய அப்பன் வீட்டு சொத்தா? அது மக்கள் சொத்து அதைத்தான் இந்த கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தினால் என்ன கேடு இந்த அரசுக்கு. கார்ப்பரேட் பாசம் தடுக்கிறது.
அப்படியானால் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது பெண்களின், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கூட காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

ரவி
ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்
24.05.2022
ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த
தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்!
பத்திரிகை செய்தி
2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிரான நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு மே17 இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை மீறிகூட்டம் நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
மே 22-ம் தேதி ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழித்த நாளை நினைவு கூரும் விதமாக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்த தமிழ்நாடு போலீஸ் துறையிடம் மே17 இயக்கம் அனுமதி கேட்டிருந்தது.
மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்க மறுத்த தமிழ்நாடு போலீஸ், இழுத்தடித்து பெசன்ட் நகர் கடற்கரையில் அனுமதி அளித்தது. அவ்வாறு அனுமதியளித்த பிறகு மே 22 காலையில் திடீரென அந்த அனுமதியை ரத்து செய்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்தும் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நினைவு கூரும் விதமாகவும் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு கூட இந்த அரசு அனுமதிக்காது என்றால் இதுதான் வாராது வந்த மாமணியான திராவிட மாடல் அரசா?
சென்ற பழனிச்சாமி ஆட்சியில் மெரினாவில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அன்றைய எம்.எல்.ஏ.க்கள், இன்றைய அமைச்சர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் மறந்து போனதா?
சில நாட்களுக்கு முன்பு நாடுகடந்த தமிழீழம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்திலும் உள்ளே புகுந்த போலீசு அதில் கலந்து கொண்டவர்களை கைது செய்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அவர்களுடைய உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கு உரிமையே இல்லை என்றால் இங்கு யார் ஆட்சி நடக்கிறது?
ஈழத் தமிழருக்காக போராட முடியாத நிலைதான் எடப்பாடி ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியிலும் என்றால் எங்கே இருக்கிறது சமூக நீதி?
ஆகவே, மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த, தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. உடனே அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எந்த கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.
தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
கல்வியில் இருந்தே ஏழை மாணவர்களை வெளியேற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பாசிச உத்தரவை வன்மையாக கண்டிக்கின்றோம் !
கண்டன அறிக்கை!
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
படிக்க :
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 அதிகபட்சமாக ரூ.1,94,100-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இருந்த தொழில்நுட்ப கல்வி கட்டணங்களே சாதாரண உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து படிப்படியாக அகற்றி கொண்டிருந்தது.
அதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் இந்த உத்தரவு. அதாவது கல்வியிலிருந்து ஏழை மாணவர்களை சுத்தமாக துடைப்பதொழிப்பது என்பதுதான் நோக்கம்.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ-ன் இந்த உத்தரவு என்பது பகிரங்கமாக உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து வெளியேறுங்கள் என்று அறிவிப்பதாக உள்ளது. அதற்கானதான் “மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது என்றும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின் கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” என திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.
தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி என்பது படிப்படியாக தனியாரின் வசம் ஒப்படைக்கப்பட்டு இலாப நோக்கத்திற்காக கல்வி என்பது மாற்றியமைக்கப்பட்டது. இது படிப்படியாக மாணவர்களின் மக்களின் மீதான சுமையை மேலும் மேலும் தீவிரப்படுத்தியது. அதிலிருந்து உழைக்கும் வர்க்கத்து வீட்டு மாணவர்கள் கல்வியிலிருந்தே படிப்படியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாகத்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருகிறார்கள்.
அரசின் கட்டுப்பாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும்போதே இவ்வளவு கட்டண உயர்வு என்றால் புதிய கல்விக் கொள்கையின் படி பல்கலைக் கழகங்கள் படிப்படியாக கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்பட்டு அரசு, பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்தாது, கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும்போது எவ்வளவு கட்டணத்தை உயர்த்துவார்கள்?
கார்ப்பரேட்டுகளின் நோக்கம் சேவை செய்வதா? அல்லது கொள்ளையடிப்பதா?
ஒரு காலத்தில் அரசின் சேவைத் துறைகளால் மிகவும் குறைந்தபட்ச கட்டணங்களாக இருந்தவை இன்று கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிறகு கட்டண உயர்வு பல்வேறு துறைகளிலும் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, செல்போன் ரீசார்ஜ் தொடங்கி கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்களின் கழுத்தை நெரிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதிக்கம்.
காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை; காசு இருப்பவனே கல்வி போன்ற நவீன தீண்டாமையை கொண்டுள்ளது ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவிப்பு. அரசின் சுரண்டலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும் மலைப் பாம்பாக மாணவர்களையும் மக்களையும் நெறிக்கிறது.
படிக்க :
♦ அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
இதிலிருந்து விடுபட உழைக்கும் மக்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம். அதுவே நாம் வாழப்போகிறோமா? அல்லது சாகப்போகிறோமா? என்பதை தீர்மானிக்கும்.
மேலும், தொடர்ச்சியாக கல்வியில் காவிமயத்தையும் திணித்து வருகிறது மோடி அரசு. பிற்போக்கு குப்பைகளை பாடத்திட்டத்தில் திணித்து வருபவர்கள் நாட்டிற்காக தூக்கிலேறிய பகத்சிங் போன்றவர்களின் வரலாற்றை பாடத்திட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
உழைக்கும் மக்களாகிய நம்மையும், நமக்காக நின்ற பகத்சிங்கையும் அப்புறப் படுத்துகிறார்கள். பகத்சிங்கை நாம் எடுத்துக் கொண்டு அவர் வழியில் நின்று இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்.
♠ ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே இலவசமாக கல்வி வழங்க போராடுவோம்!
♠ மாணவர்கள் நாம் ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டியமைப்போம்!
♠ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!
♠ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
![]()
இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !
வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த டெய்சாங் ஹாங்காங் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.170 கோடி மதிப்பில் 39 ஆயிரம் சக்கரங்களை அந்த நிறுவனம் தயாரித்து இந்திய ரயில்வேயிடம் கொடுப்பது உறுதியாகிவிட்டது.
இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை சார்பாக ஒப்பந்த புள்ளி கோரபட்டபோது இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் ஒப்பந்தம் வாங்குவதற்கு விண்ணப்பித்தன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த உரிமை கொடுக்காமல் சீன நிறுவனத்திற்கு கொடுத்து, தான் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அடிமை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது இந்த ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்துடன் கடந்த காங்கிரஸ் அரசு ரஃபேல் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதில், இந்தியாவில் ரஃபேல் விமானம் தயாரிக்க, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு தயாரிக்கும் உரிமையை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி, டசால்ட் நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்த போட்டு ரஃபேல் விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதில், ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு பதிலாக தனது எஜமான் அனில் அம்பானியின் ரிலையன் டிபன்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கி தனது விஸ்வாசத்தை நிரூபித்துக் கொண்டார் மோடி. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அம்பானிக்கே, தனது அம்பானி டிபன்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறது என்று தெரியாது. அதிலும், மோடியின் ரஃபேல் ஊழல் என்பது தனிக்கதை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ராஷ்டிரீய இஸ்பத் நிகாம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமும் வந்தே பாரத் ரயில் சக்கரம் தயாரிப்பதற்கு விண்ணப்பித்து இருந்தது. மிகச் சிறந்த கட்டமைப்பும், நிர்வாக திறனும் உள்ள இந்த நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் ரயில் சக்கரம் தயாரிக்கம் திறனுடையது. அப்பேர்பட்ட இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்காமல் சீனா நிறுவனத்திற்கு மோடி அரசு ஒப்பந்தம் வழங்கி இருக்கிறது என்பது மோசடியின் உச்சம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வரும் மோடி அரசு, அனைத்து காப்பீடு ஒப்பந்தங்களையும் பொதுத்துறை நிறுவனத்திற்கு கொடுக்காமல் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தான் வழங்கி வருகிறது.
படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் இந்தியாவில் ஒட்டுமொத்த தேச பற்றை குத்தகைக்கு எடுத்து கொண்டு அதுகுறித்து தொடர்ச்சியாக பொய் பேசி வருகின்றனர். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா தற்சார்ப்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்கு வேண்டும் என்றும், அதுதான் இந்து ராஷ்டிரத்திற்கு பொருத்தமான பொருளாதார கொள்ளைகை என்றும் கூறி வருகிறார். அதுபோல் மோடி தொலைக்காட்சியில் பேசும்போது பெரும்பாலும் இந்தியா, தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் அனைவரும் அந்நியப் பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பாடம் எடுக்கிறார் கார்ப்பரேட் அடிமை மோடி.
தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கப்போவதாக கூறிக்கொண்ட ஒன்றிய பாஜக அரசு ”மேக் இன் இந்தியா” என்ற ஒரு கவர்ச்சிகர, வாய்ச்சவடாலான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தவே பல கோடி மக்கள் வரி பணத்தை வாரி இறைத்தது. இந்த திட்டத்தின் மூலம் ‘இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்’ என்று நாடு நாடாக சென்று பல்வேறு நாட்டு அரசுகளின் ஆதரவையும், கார்ப்பரேட் கம்பெனிகளை அழைத்தும் கூட பெரிய அளவிலான முதலீடுகள் வரவில்லை.
சீன நிறுவனத்திற்கு ரயில் சக்கரம் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கியது என்பது வெறும் தனியார்மய கொள்கையினால் மட்டும் அல்ல. பொதுமக்களுக்கு தேசவெறியுட்ட சீனாவை எதிரியாக காட்டவும், தனக்கு தேவையென்றால் அந்த நாட்டுடன் இணைந்து போவதும்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் அஜண்டா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியபோது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியாவை போர் மேகம் சூழ்ந்துள்ளதாகவும் சீனாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார போரை நடத்தபோவதாகவும் கூறியது. ஆனால் சீனவை சேர்ந்த சுமார் 20 செயலிகளுக்கு மட்டும் தடை விதித்து தனது வீரத்தை காட்டிக்கொண்டது. மேலும், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தடையும் விதித்து தேசபற்று என்றால் இதுதான் என்று பொது மக்களுக்கு பாடம் எடுத்தது பா.ஜ.க அரசு.
நிலைமை இப்படி இருக்க, 20 இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்த அதே சீனாவிடம் தற்போது 170 கோடி முதலீடு செய்து ரயில் சக்கரம் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஒன்றிய அரசு போட்டுள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற சங்கிகளின் தேசப்பற்று என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராடும்போதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதை திசை திருப்புவதற்காகவும் மூடி மறைப்பதற்காகவும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்றும் தீவிரவாத செயல் என்றும் மக்களை மடைமாற்றும் ஒரு தந்திரமாக செய்து வருகிறது மோடி அரசு. இந்தியாவில் தனக்கு பிரச்சினை என்றால் சீனாவை எதிரியாக காட்டுவதும் இல்லை என்றால் தனது அடிமை சேவகத்தை செய்வதும்தான் மோடி அரசின் நிலைப்பாடு. தான் செய்யும் அடிமை சேவகம் அமெரிக்காவிற்கு அடுத்து சீனாதான் என்று அவ்வபோது நிரூபித்து வருகிறது பாசிச மோடி அரசு. ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமை சேவகனாக மாறும் உத்தியை கையாளுகிறது இந்திய அரசு.

வினோதன்
Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
In 2019, the then Erode District Collector Kathiravan imposed a night traffic ban to prevent wild animals from getting hit by vehicles on the Dhimbam ghat road, which passes through the forest where the Sathyamangalam Tiger Reserve is located. The ban was lifted after continuous mass struggle.
S.P.Chockalingam had filed a petition in the Madras High Court seeking the re-imposition of the night traffic ban imposed by the district collector in 2019, alleging that between 2012 and 2021, 155 wild animals had been killed after being hit by vehicles in the mountain tracks. Hearing the case, the High Court ordered the implementation of the night traffic ban on Dhimbam road from 2022 February 10. Accordingly, heavy vehicles will be banned from 6 pm onwards and light vehicles and passenger vehicles will be banned from 9 pm.
Due to this ban, the agricultural produce from the hills cannot be transported to Mettupalayam market and people of the surrounding areas can’t go out even for emergency needs. People from various walks of life including Thalavadi farmers, traders, Tamil Nadu Scheduled Tribes Association, van drivers and others protested against the ban. The court, however, refused to lift the ban.
An RTI reply received from the field director office of Sathyamangalam Tiger Reserve states that between 2012 and 2021 only 40 road kills happened on the road. Seven animals have died on Bannari road outside the prohibited forest area. Out of the remaining, 20 animals died during the day and 13 at night. This exposes that the litigant has given false information to the Court that 155 wild animals have been killed during this period, taking into account all the dead peacocks in the entire Erode district.
Read :
♦ Perarivalan released; Release all ! including Nalini, Murugan, Santhan ! | People’s power
♦ 18,850 Textile units go on strike to protest against rising yarn prices! People’s power support this !
The judges are shedding tears over the plight of wildlife due to vehicular traffic. What actions had they took on the hit and run of animals on the national highways that were laid by tearing the forests apart across Tamilnadu, or for the people who died in accidents?
According to the government, in 2021 alone, 14,912 people have died in 55,713 road accidents in Tamilnadu. Why is that a court that does not care about several thousands of people showing mercy when it comes to the fact that two animals die every year? What is hidden behind this clemency?
Malicious Forest Department Officials
The tribals living in this area cultivate millets like bajra, sorghum and ragi on the land for six months in a year to meet their food demands. For the remaining 6 months, they meet their economic needs by collecting 35 types of Minor Forest Produce (MFP) such as honey, shikakai, amla, broom grass, myrobalan, etc. from the forests in a sustainable way. The non-tribal forest dwellers live in the forest by tending cattle and working as labourers.
At present, tribals are often not allowed in forests to harvest Minor Forest Produce; They are only taking the broom grass. That too is being allowed for the corruption of forest officials, says tribals. A 10-member Village Forest Council (VFC) is formed by the people of the village. One member of the committee will be elected as the Chairman. The forest guard of the same forest will be the Secretary. The income from the minor forest produce will be saved by opening a bank account in the name of these two persons.
A village forest council leader from the Thalavadi hills says, “The wage to cut broom grass is ₹25 per kg. ₹5 each will be allocated for VFC and the tiger reserve. The VFC is not under the control of the people, it is under the control of the forest department. The money saved in the council is 8 lakh. But they don’t even utilize it to meet our basic needs. Salaries to the forest guards and anti-poaching watchers are taken from this fund. They don’t return the money back. If a five ton load of broom grass is sold, whether profit or loss, ₹50,000 should be given to the forest department”.
Similarly, in the accounts of 28 village forest councils, about ₹1 crore of hard earned money of tribals is saved. With it, people can meet basic necessities like electricity, housing, water, etc. But the forest officials are deceiving the tribals by not allowing them to do so. People in the area are being threatened by the forest officials. They register false cases against tribals and beat them up in the name of calling for interrogation.
Sathyamangalam Tiger Reserve, which was set up illegally in 2013, is the root cause of the Dhimbam ghat road problem. It is only after its establishment that the forest department’s crackdown on tribals and blocking of traffic have been on the rise. The Forest Department has set up a collection centre in the name of ‘Sathyamangalam Tiger Reserve Trust’ to forcibly collect money from motorists going to Mysore. As a result, the tribals had to pay an entry fee of ₹50 at the checkpoint to get back to their native places.
The Madras High Court has struck another blow on these people who are already losing their livelihood. On March 4, it had issued a prohibitory order banning the grazing of cattle inside the forest. Against this, the forest dwellers of Tamilnadu, Kerala and Karnataka adjoining the tiger reserve had staged protests. In Tamilnadu, the people of Masinagudi have staged a protest and submitted petitions to the Collector. The people of Thalavadi hills are losing their livelihood on all fronts. Misfortunes never come singly as they say.
Forest Rights Act: An eye-piercing ‘golden’ needle!
What is the reason for such attacks on the innocent tribals and forest dwellers, who regard the mountain and the forest as gods? Some people have come out alleging that the tribals are destroying the forest, which is keeping them alive. They have maintained the forests for all these years. While tribals feel that the Forest Rights Act, 2006 will protect them, this pro-corporate clique is trying to use it as a weapon to exterminate innocents.
The Forest Rights Act was enacted in 2006 as a result of a series of struggles to protect the livelihoods of the tribal people. This law was relatively helpful to the oppressed people. It also gave certain powers to the gram sabhas of the tribals. The Act recognises land rights to the cultivating tribes, the right to collect and sell minor forest produce, the right to use traditionally used paths and water bodies, the right to graze sheep and cows, the right to protect and manage forest resources. While all of this is good to hear, practically there have been counter-reactions.
The Act has not come into force in many places and the state governments have mostly used it to deny the rights of the people in the areas where it has been implemented. Lakhs of individual claims have been rejected on the basis of this Act. As of November 2018, Chhattisgarh had rejected most individual claims (4,55,000), followed by Madhya Pradesh (3,50,000) and Maharashtra (1,20,000).
The Act recognises individual rights of tribals over forest areas, if they can prove occupation before December 13, 2005. Other traditional forest dwellers, those who do not belong to a scheduled tribe, need to prove “continuous existence” in the forest for 75 years (three generations). The bureaucracy has been harassing the ignorant – innocent tribals and forest dwellers with these conditions. All over India, it is this bureaucracy that dominates like kings and zamindars, and is intended on driving out the tribal people.
The forest department officials have been resorting to unfair rejection of applications seeking pattas. They do not respect the legal provisions which mandates them to provide reasons for the rejection in writing. This law is a proof that the word “sugar” written in a book won’t taste sweet.
In 2008, “Wildlife First”, an organisation that had filed a case in the Supreme Court seeking the eviction of tribals from forest areas, argued that land pattas should not be given through the Forest Rights Act. It absurdly argued that the tribals would destroy the forests. On the basis of the aforesaid rejections, it demanded that tribals without pattas be driven out of the forests. While the Centre did not respond to this, the Supreme Court, in 2019, passed an order evicting those who did not have a patta. The apex court then temporarily stayed its order after the Centre filed an appeal after widespread protests.
Is the intention of the government protecting forests or serving corporates?
“In those days the animals were in the forest, and we were here; From where did this new concern for animals came?”, “We and the animals live in harmony and there is no need for any reserve”, “the forest department has not planted a single plant since the tiger reserve was established”, “Even if the money comes from outside the tiger reserve, none of it is used to feed the tigers” says the adivasis.

None of the officials, commissions and NGOs, who are crying that the forest and wildlife are in danger because of the tribals, show any evidence of the same. The evidence they show is nothing but lies, such as those shown in connection with the Dhimbam ghat road. What is the purpose of blaming the tribals who have lived in the forests for thousands of years and have been making their livelihood by maintaining the forest? Why do you want to drive them away?
Between 2001 and 2006 alone, the government occupied more than 5 lakh hectares of forest area and drove away the tribals there. These lands were handed over to big corporates and industries. Notably, Chhattisgarh, where one-third of the population is tribal, rejected the land patta claims of 4,55,000 tribals. This is the highest in India. The government’s concern for the forest can be understood when we view Chhattisgarh government’s handing over of large areas of forest land to the big mining companies in tandem with their concern for the forests.
It is from this point of view that the amendments brought by the government have to be seen. In 2019, the Modi government introduced a Bill in the Parliament seeking an amendment to the Forest Conservation Act of 1980. The amendment provides for the privatisation of forests and hills and gives maximum powers to the District Forest Officer. The amendment shifts the burden of proving innocence to the accused. It allow forest bureaucracy to use fire arms and enter and search any premises on mere suspicion, just by informing Gram Sabha, to check forest offence.
Privately owned forests spread over several hectares in the middle of the sanctuaries are removed from the purview of the Forest Conservation Act and are allowed for commercial use. Moreover, it allows to extract natural gas and oil resources that are several thousand feet deep beneath the forests. By allowing wildlife parks, forest tours, etc., it is making forests fall prey to the profiteering frenzy of private companies.
Read :
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
♦ Sri Lankan people longing for a Revolutionary Party !
Mukesh Ambani’s son Anand Ambani is setting up a private zoo in Gujarat. By 2020, the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) has decided to enter into an agreement with private players for the development of 160 wildlife parks. The aforementioned two information exposes that corporate interest is responsible for the centre’s over-concern for the protection of forests and wild animals and driving away of tribals.
Not only this, the corporates are also showing interest in privately developing forests with the intention of carbon trading. The government’s plan is to hand over forest areas to corporates and allow thousands of crores of rupees to be pumped in every year. For this, the government needs masks like tiger reserves to drive tribals out of the forest areas.
In order to achieve these objectives, the traffic ban on the Dhimbam ghat road has now been imposed. Tribals and farmers who will lose their livelihood due to the ban will either leave the forests on their own or be evicted by the government.
It is the duty of each and everyone of us to expose this intention of the corporates among the people and stand with the tribals and forest dwellers who are fighting for their right to livelihood.

The Reporter, New Democracy
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
இரஷ்ய – உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான
அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 1
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது.
இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியும் சரி, இப்போர் நீண்டகாலம் நீடிக்கலாம்; எனவே அதற்கான தயாரிப்புகளில் இறங்க வேண்டும் என்று கூறுகின்றன. போர் நிறுத்தத்திற்கோ அமைதிப் பேச்சு வார்த்தைக்கோ எந்த தரப்பும் தாயாரில்லை. குறிப்பாக, உக்ரைனை பலிகடாவாக்கி இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போரை (Proxy War) நடத்திவரும் அமெரிக்கா பின்வாங்கத் தயாராக இல்லை. தீவிரப் போர் வெறியோடு செயல்பட்டு வருகிறது.
போரின் நெருக்கடிகள் மக்களின் தலையில்..
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த நாய்ச்சண்டையில் பலியாகிக் கொண்டிருப்பதோ உக்ரைன் உழைக்கும் மக்கள்தான். போரில் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தம் குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதும் பெற்றோர்களின் அவலம் குறித்த செய்தி நமது நெஞ்சை உலுக்குகிறது. உக்ரைனில் அரசாட்சி செய்கிற நவநாஜி கும்பலோ போரில் இரஷ்ய இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க பெண்கள், குழந்தைகள் என சொந்த நாட்டு மக்களையே மனிதக் கேடயமாகப் (Human Shield) பயன்படுத்தி வருகின்றனர்.
படிக்க :
♦ உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
♦ உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட (40,19,287) மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியேறியவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 18 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் கட்டாய இராணுவ சேவைக்கு தேவைப்படுவார்கள் என்பதால், உக்ரைன் நாஜி அரசு வெளியேற அனுமதிக்கவில்லை.
ஆனால், இரஷ்யப் படையினரே உக்ரைன் குடிமக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றுகொண்டிருப்பதாக, ஒருதலைபட்சமான பல பேய்க்கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள்.
இரஷ்யா உலக அளவில் பெட்ரோல் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. பலநாடுகளின் கோதுமை தேவைகள் உக்ரைன், இரஷ்யாவின் ஏற்றுமதி மூலமே நிறைவுசெய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே இப்போரின் காரணமாக உலக நாடுகளில் எரிவாயு விலை உயர்ந்து காணப்படுகிறது; பல நாடுகளில் கோதுமைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பல உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு எனப் போர் உண்டாக்கியிருக்கும் நெருக்கடிகள் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தலையிலேயே விழுகின்றன.
மூன்றாம் உலகப்போர் அபாயம்!
ஏப்ரல் 24 அன்று உக்ரைனுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனும் பாதுகாப்புத்துறைச் செயலர் லொயிட் ஆஸ்டினும் இரஷ்யாவை இராணுவ ரீதியில் முடமாக்குவதே இப்போரில் எங்களது (அமெரிக்கா) நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
அமெரிக்காவின் செல்லப் பிராணியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களுக்குத் தேவை ஆயுதங்கள், மென்மேலும் கூடுதலான ஆயுதங்கள்” என்று எஜமானருக்குத் தோதாக ஊளையிடுகிறார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தும் இப்போரில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்கு ஐரோப்பில் தனது 8,000 துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது.
இரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு மலைமலையாக பணத்தை வாரியிறைத்து வருகிறது அமெரிக்க அரசு. போர் தொடங்கியபோது உடனடியாக 1.3 கோடி டாலர்களை வழங்கியது. மார்ச் மாத தொடக்கத்தில் 20 கோடி டாலர்களை ஒதுக்கியது. பிற்பாடு சிறிது நாட்களிலேயே 80 கோடி டாலர்களை அறிவித்தது. தற்போது உக்ரைனுக்கு உதவுவதற்காக 3,500 கோடி டாலர்கள் வரை வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் அதிபர் பைடன்.
நிதி உதவி மட்டுமல்லாது விமான எதிர்ப்பு கருவிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், அதிநவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய போர்க் கருவிகளையும் தனது உளவுத்துறையின் உதவியையும் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது அமெரிக்கா.

தன் நாட்டு ஆயுதங்களை உக்ரைனுக்கு தங்குதடையின்றி வழங்குவதற்காக ‘உக்ரைன் – ஜனநாயக பாதுகாப்புக் கடன் மற்றும் குத்தகைச் சட்டம் 2022’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார் பைடன். இரண்டாம் உலகப்போரின்போது, இங்கிலாந்துக்கு தன்னுடைய ஆயுதங்களை வழங்குவதற்காக, முதன்முதலாக 1941-ம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உக்ரைனுக்காக அதை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் பைடன். குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் இணைந்து பெரும்பான்மை ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
அமெரிக்கா மட்டுமல்லாது 30 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகின்றன. இராணுவ வல்லரசான இரஷ்யாவினுடைய தாக்குதலை உக்ரைன் இத்தனை நாள் சமாளிப்பதற்குப்பின் உள்ள காரணம் இதுவே.
மேலும் ஏப்ரல் 19 அன்று ஜெர்மனியில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் உள்ளிட்டு 43 நாடுகள் ஒன்றுகூடி, போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். உக்ரைனுக்கு போர்ச் செலவினங்களுக்காக நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தங்களது திட்டம் பற்றி இக்கூட்டமைப்பு நாடுகள் ஆலோசிக்க இருக்கின்றன.
நிலைமைகளை அவதானிக்கும்போது, இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் மூன்றாம் உலகப் போருக்கான அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனை அமெரிக்காவும் இரஷ்யாவுமே மாறிமாறிச் சொல்லிக் கொள்கின்றன. எனவே இருதரப்புமே எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி, அம்மணமாக தங்களது நோக்கங்களை அறிவித்துக் கொண்டு, போர்த் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
பனிப்போரின் தொடர்ச்சியும்; நேட்டோவில் உக்ரைன் இணைப்பும்
இரஷ்ய-உக்ரைன் போரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் நடைபெற்ற பனிப்போரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக 1950-களின் பிற்பகுதி தொடங்கி, 1991 வரையுள்ள காலகட்டம் மற்றும் 1991-லிருந்து தற்போது வரையிலான காலகட்டம் என இரண்டாகப் பிரித்து, நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவானது ஏகாதிபத்திய முகாமிலேயே தலைமை தாதாவாக – மேல்நிலை வல்லரசாக வளரத்தொடங்கியது. 1950-களின் பிற்பகுதியில், சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தனர்; ஆகையால் சோசலிச சோவியத் யூனியன், சமூக ஏகாதிபத்தியமாக (சொல்லில் சோசலிசம்; செயலில் ஏகாதிபத்தியம்) சீரழிந்து அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்கான போட்டா போட்டியில் இறங்கியது.
இதற்கு முன்னதாக, 1945-ம் ஆண்டு – இரண்டாம் உலகப் போரின் முடிவில், பாசிச ஹிட்லரின் பிடியிலிருந்த நாடுகளை சோவியத் செம்படை விரட்டியடித்து அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி வரை விடுவித்திருந்தது. இந்த நாடுகளெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் சோசலிச குடியரசுகளாக மாறின.
இந்நிலையில், சோசலிசம் பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக உருவாக்கிய அரசியல்-இரணுவக் கூட்டணியே நேட்டோ.
1949-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் வடபகுதியைச் சேர்ந்த நாடுகளான பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐலாந்து, இத்தாலி, லுக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்சுகல், இங்கிலாந்து, அமெரிக்கா என 12 நாடுகள் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நேட்டோவை ஏற்படுத்தின. வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு என்பதன் சுருக்கமே நேட்டோ (NATO) ஆகும்.
மறுபக்கம் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளை தனது சுரண்டலுக்கான தொங்கு சதை நாடுகளாக ஆக்கிக் கொண்டது சோவியத் சமூக ஏகாதிபத்தியம்; மேலும் 1955-ம் ஆண்டு நேட்டோவை எதிர்கொள்வதற்காக அந்நாடுகளை ஒருங்கிணைத்து வார்சா ஒப்பந்த அமைப்பை (WTO) ஏற்படுத்தியது. இதுவும் நேட்டோவைப் போலான அரசியல்-இராணுவக் கூட்டணியாகும்.
சுமார் 35 ஆண்டு காலத்திற்குமேல் நடைபெற்ற பனிப்போரில், 1990-1992களில் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்காவிடம் தோற்றது. 90-களின் இறுதியில் வார்சா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. இரஷ்யாவுடனான சோவியத் கூட்டமைப்பிலிருந்து 14 நாடுகள் வெளியேறியதால் சோவியத் யூனியனும் சிதறியது. ஆனால் இதே காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கிரீஸ், துருக்கி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட நாடுகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்தது.
90-களுக்குப் பின் செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் 1999-ம் ஆண்டும்; பல்கேரியா, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 2004-ம் ஆண்டிலும்; அல்பேனியா மற்றும் க்ரோஷியா 2009-ம் ஆண்டிலும்; மண்டேநீக்ரோ 2017-ம் ஆண்டிலும்; 2020-ம் ஆண்டில் வடக்கு மாசிடோனியாவும் நோட்டோவில் இணைந்தன.
வட அட்லாண்டிக் பிராந்திய நாடுகளை மட்டுமே கொண்டிருந்த நோட்டோ படை, முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகள் உள்ளிட்டு பெரும்பான்மையான கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பாகத் திகழ்கிறது. தற்போது 30 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
000
பனிப்போர் காலத்தில், மேலும் கிழக்கு நோக்கி எங்களது படைகளை விரிவுபடுத்த மாட்டோம் என்று இரஷ்யாவுக்கு கொடுத்த வாக்கை மீறியுள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ. தற்போது நேட்டோ நாடுகள் இரஷ்யாவை சுற்றிவளைத்துள்ளன.

இரஷ்யாவின் நிலப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை நேட்டோவில் இருக்கின்றன. தற்போது இரஷ்யாவுடன் மிகப்பரந்த அளவில் நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளக்கூடிய உக்ரைனையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா. உக்ரைனைப் போலவே நார்வே, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
தனது மேலாதிக்கப் பரப்பை விரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இரஷ்யாவை சுற்றி வளைத்துத் தாக்கவும் உகந்த புவிசார் முக்கியத்துவமிக்கப் (Geo-political importance) பகுதியாக உக்ரைனைக் கருதுகிறது அமெரிக்கா. இதை முறியடிப்பதற்காகத்தான் இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. எனவே இப்போர் ஒரு திடீர் நிகழ்வல்ல. அமெரிக்க-இரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் தொடர்ச்சி.
அமெரிக்கப் பதிலிப் போரின் முன்தயாரிப்பு பணிகள்
2000-ம் ஆண்டிலிருந்து உலகின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2021-ம் ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவை.
1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது. அதுவே ஒப்பீட்டு நோக்கில் 2014-2021 வரையான குறுகிய ஆண்டுகளில், 240 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளாக அதிகரித்திருக்கிறது.
இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகுதான் அமெரிக்காவும் நேட்டோ கூட்டணியும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கிவருகின்றனர் என்பது கிடையாது; ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா உக்ரைனை களமாகக் கொண்டு இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போருக்கு தாயரித்துள்ளது என்பதை விளக்கும் சித்திரம்தான் மேற்சொன்ன புள்ளிவிவரம்.
000
இசுலாமிய நாடுகளில் ஒசாமா பின்லேடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபான் உள்ளிட்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிட்டதைப் போல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வும் அந்நாட்டின் இராணுவத் தலைமையகமும் 500 கோடி டாலர் செலவுசெய்து உக்ரைனில் அசோவ் எனும் நவநாஜிக் கும்பல்களை வளர்த்துவிட்டுள்ளது.
படிக்க :
♦ உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
♦ உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில், இரஷ்யப் படையினரை எதிர்த்து சண்டையிடுவது உக்ரைன் இராணுவம் மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து அசோவ் பட்டாலியன் எனும் நவநாஜி ஆயுதப் படையும் சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்கள் இக்குழுவினரின் கட்டுப்பாட்டிற்கே செல்கின்றன.
உக்ரைனில் தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை உருவாக்க ஆட்சிக் கவிழ்ப்புகளையும் அமெரிக்கா நடத்தியிருக்கிறது. 2004-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். இதைப் பொறுக்காத அமெரிக்கா தனது விசுவாசக் கும்பல்கள் மூலம் உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ என்ற பெயரில், ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அரங்கேற்றி அமெரிக்க ஆதாரவளரான விக்டர் யுஷ்செங்கோவை அதிபராக்கியது.
2010-இல் நடைபெற்ற தேர்தலில், இரஷ்ய ஆதரவாளரான யனுகோவிச் மீண்டும் அதிபரானார். இவர் இரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிசக் கும்பல்கள் போராட்டங்களில் இறங்கின. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக அதிபர் பதவியிலிருந்து யனுகோவிச் விலகினார். பாசிசக் கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றின. தற்போது ஆட்சியிலிருக்கும் ஜெலன்ஸ்கியும் நவநாஜிக் கும்பலின் ஆசி பெற்ற அதிபரே.
இனவெறி கொண்ட உக்ரைன் நவநாஜிக் கும்பல்கள் இரஷ்யர்கள் அதிகம் வாழும் கிரீமிய தீபகற்பம் மற்றும் டான்பாஸ் பிரதேசம் ஆகியவற்றில் இனவெறி அடக்குமுறை – அத்துமீறல்களை அரங்கேற்றி வந்தன. இந்த உள்நாட்டு இன அழிப்புப் போரில் 14,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரஷ்யா 2014-ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
(தொடரும்…)

பால்ராஜ்
அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !
உக்ரைனில் நடக்கும் போர், உலக காலநிலை உறுதிப்பாட்டை கைவிடுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து தற்போது உலக பெருங்கடல்களின் நீர் மட்டமானது கடந்த ஆண்டுகளை காட்டிலும் உயர்ந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் பெருங்கடல்களின் அமிலத்தன்மை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது. 2021-ல் பனிக்கட்டிகள் அதிகம் உருகுவதால் கடல் மட்டம் புதிய உயரத்தை எட்டி இருப்பதாக உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
நமது காலநிலை நம் கண் முன்னே மாறி வருகிறது எனவும், மனிதனால் தூண்டப்படும் பசுமை இல்ல வாயுக்களால் பூமியில் பல தலைமுறைகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் WMO-ன் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில், “மனிதகுலம் பசுமை இல்ல வாயுகளின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பேரழிவு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
போர்களின் காரணமாக காலநிலை உறுதிப்பாட்டை உலக நாடுகள் கைவிடுவதாகவும், இது எரிசக்தி விலைகளை உயர்த்தி, ஐரோப்பிய நாடுகளை எரிசக்தி வழங்குனராக மாற்ற முற்படுகிறது எனவும் ஐ.நா பொதுச்செயலாளரின் காலநிலை நடவடிக்கைக்கான சிறப்பு ஆலோசகர் செல்வின் ஹார்ட் கூறியுள்ளார். இங்கு மேற்கொள்ளப்படும் பல பொருளாதார நடவடிக்கைகள் கூட நமது காலநிலை இலக்குகளை ஆபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.
படிக்க :
♦ இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
♦ COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
ரஷ்யா நிலக்கரியை எரிவாயுவாக மாற்றுவதை நிறுத்தாவிட்டால் உலகம் பசுமை இல்ல வாயுக்களின் அபாயகரமான அதிகரிப்பை எதிர்கொள்ளும் என்று உலகளாவிய சம பங்கு குறியீட்டு நிறுவனமான MSCI எச்சரித்தது. 2021-ம் ஆண்டில் வளிமண்டலத்தில் வெப்பமயமாதலால், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மீத்தேன் அளவுகள் முந்திய பதிவுகளைவிட மிஞ்சி விட்டதாக WMO-ன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் தொழில் துறைகளின் மூலம் வெப்பநிலையானது முந்தைய சராசரியைவிட 1.11 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கிறது. இது 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நீர்நிலைகள் புவியின் திரட்டப்பட்ட வெப்பத்தில் 90% மற்றும் மனித நடவடிக்கைகளில் 23% கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை உறிஞ்சுகிறது. இதனால் கடலின் வெப்பநிலை அளவானது 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள, மாற்றங்கள் அனைத்தும் தலைகீழாக மாற பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
கடல், வளிமண்டலத்திலுள்ள அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி வினை புரிவதால், இப்போது 26,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் 4.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இது 1993 முதல் 2002-ம் ஆண்டுகளுக்கிடையிலான கடல்நீர்மட்ட அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.
உலகெங்கிலும் உள்ள தீவிர வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் பிற காலநிலை தொடர்பான பேரழிவுகளை WHO பட்டியலிட்டது. இதில், 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏகபோக இலாபத்திற்காக உலகையே தன் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்தியங்களால்தான், இன்று உலகமே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இலாபவெறி கொண்டு இயற்கையை அழித்து வரும் இந்த கொடூர உலக ஏகாதிபத்தியங்களை (முதலாளித்துவத்தை), உலகப் பாட்டாளி வர்க்கத்தை கொண்டு வீழ்த்தாமல் காலநிலை மாற்றங்களை தடுக்க முடியாது.
![]()
தேன்மொழி
தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு 4-ம் ஆண்டு நினைவஞ்சலி !
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் தியாகிகளின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன்பு, ஊர் மக்களை வரவிடாமல் தடுப்பது, புரட்சிகர அமைப்பினரை தடுத்து நிறுத்துவது, மக்களை ஒன்றிணையவிடாமல் செய்வது போன்ற பல்வேறு அடக்குமுறைகளை போலீசு செய்தது. அதையும் மீறி தியாகிகளின் கல்லரை வரை சென்று அஞ்சலி செலுத்தினார்கள் தூத்துக்குடி மக்கள்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், CBI-ன் விசாரணை அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர் அனைவரையும் சுடுகாட்டில் இருந்தே வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து போலீசு. கைதான மண்டபத்தில் இருந்து வெளியேறுவதற்கே கடுமையான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
000
இந்நிகழ்வைப்போல், தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக அகற்ற தி.மு.க அரசே! சிறப்பு சட்டம் இயற்று! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்திடு! கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்! போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு 4-ஆம் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
000
விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் சார்பாக நான்காம் ஆண்டு ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது, ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக அகற்ற தி.மு.க அரசே! சிறப்பு சட்டம் இயற்று! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்திடு! கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்! போராடும் மக்களை பிளவுப் படுத்தும் ஸ்டெர்லைட்டு கைக்கூலிகள், அரசு அதிகாரிகளை விரட்டியடிப்போம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பலப்படுத்துவோம்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது..
இதில், வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார், மண்டல செயலாளர் தோழர் முருகானந்தம், வழக்கறிஞர் மோகன்ராஜ் மற்றும் பிற தோழர்கள் கலந்து கொண்டனர்.
000
மே 22 அன்று காலை 11 மணி அளவில் திருப்பூர் நம்பியம்பாளையம். பகுதியில் தமிழக அரசே சிறப்பு சட்டம் ஏற்று நாசகார ஸ்டெர்லைட் அகற்று. தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைத்திடு! என்ற கோரிக்கை முழக்கத்துடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பகுதி தோழர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தோழர் என்.பி.ஆறுமுகம், தலைவர், சமூக விடுதலை கட்சி பேசுகையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவிநாசி ரோடு மறைத்து ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வை நினைவு கூர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தில் அமைப்போடும் மக்களோடும் இணைந்து செயல்படுவேன்” என்று உறுதி அளித்தார்.
தோழர் ராஜன் கோவை பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், “ஆலை நிர்வாகமும் அரசும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு போராடும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். நாம் அமைப்பாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நமக்கு கிடைத்த அனுபவம். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் இந்த நாசகார ஸ்டெர்லைட் விரட்டி அடிக்க முடியும்” என்று சூளுரைத்தார்.
தோழர் சங்கர் கோவை மண்டல செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், “சமீபத்தில் அரசுக்கு CBI கொடுத்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின் ஆய்வு அறிக்கையில், ஆலைக்கு எதிராக போராடிய மக்கள்தான் குற்றவாளிகள் என்றும் துப்பாக்கி ஏந்தி சுட்ட போலீசும், போலீசுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளும் குற்றவாளிகள் இல்லை என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதைக்கண்ட தூத்துக்குடி பகுதி மக்கள் அந்த நகலை கிழித்து போராடுகிறார்கள் CBI-ன் நகல் எதை காட்டுகிறது. அரசிடம் நீதியும் நியாயமும் எதிர்பார்க்க முடியாது மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து போராடினால் மட்டுமே நீதி பெற முடியும்” என்று சூளுரைத்தார்.
பகுதி சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் ஆலையை மூடுவோம் என்று முழக்கமிட்டு இந்நிகழ்வை முடித்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம். 9488902202.
000
உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரம் சார்பாக பாலி மற்றும் செம்மணங்கூரில் நான்காம் ஆண்டு ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக அகற்ற தி.மு.க அரசே ! சிறப்பு சட்டம் இயற்று! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்திடு ! கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்! போராடும் மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டு கைக்கூலிகள், அரசு அதிகாரிகளை விரட்டியடிப்போம் ! உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பலப்படுத்துவோம் ! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் தோழர் தமிழ் அழகன் தலைமை வகித்தார் தோழர் வினாயகம் சிறப்புரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை – 72001 12838.
000
மே 22 ஸ்டெர்லைட் போராளிகள் படுகொலை நாள், நான்காம் ஆண்டு நினைவு நாள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தையோட்டி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனை பிரச்சாரத்தை நடைப்பெற்றது. இதில் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் அமிர்தா, பூர்ணிமா, புமா இ மு வை சேர்ந்த துணைவேந்தன், யுவராஜ், ஜனார்த்தனன் ஆகிய தோழர்கள் பேசினார்கள்.
காஞ்சிபுரம் கிளையின் சார்பாக ராணிப்பேட்டையில் புதூரில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. அதில் தோழர்கள் சரவணன். மோகன், எழில் பேசினார்கள். இதில் விசிக மற்றும் திவிக தோழர்களும் கலந்து கொண்டனர்.
தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கண்டன முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை தோழர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
இதில் பேசிய தோழர்கள் தூத்துக்குடியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான அரசு பயங்கரவாதத்தில் 15 உயிர்கள் பட்டப்பகலில் போலீஸின் துப்பாக்கிச்சூட்டால் கொள்ளப்பட்டனர்.
அமைதியாக மனு கொடுப்பதற்காக பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என 50000 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கூடினர்.
இந்த அரசு சொல்ல கூடிய எந்த சட்ட முறைகளையும் பின்பற்றாமல் அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் முதலாளியின் லாபத்திற்காக இத்தனை உயிர்களை பலி கொடுக்கப்பட்டது.
இப்படி 15 பேர் பட்டப்பகலில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதை நாடே தொலைக்காட்டசியில் பார்த்தது. இன்று சிபிஐ மூன்றாவது இறுதி அறிக்கையில் எந்தப் போலீசும் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. போராடிய மக்கள் 101 பேர் மீதே வழக்கு போட்டுள்ளது.
மோடியின் அரசு அனில் அகர்வால் நான்கு ஆண்டுகளாகியும் அதில் உயிர் நீ மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை எந்த போலீசும் கைது செய்யப்படவில்லை இதை எதிர்த்து போராடிய மக்கள் மீது
வழக்கு போட்டுள்ளது சிபிஐ. தமிழக அரசோ இதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறது. எல்லா அரசுகளும் கார்ப்பரேட் ஆதரவில் கை கோர்க்கின்றன.
இந்த அரசுகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக தான் வேலை செய்கின்றன. அவர்களின் நலனுக்கான சொந்த நாட்டு மக்களை கொலை செய்கின்றன. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் இவர்களுக்கு யாருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
துப்பாக்கி சூட்டில் இறந்த தன் பிள்ளைகளின் பிணத்தை வாங்காமல், ஸ்டெர்லைட்டை மூடு பிறகு வாங்கி கொள்கிறோம் என நெஞ்சுரத்தோடு நின்ற அந்த பொற்றோர்களிடமிருந்து நாம் போராட்ட குணத்தை கற்று கொள்ள வேண்டும் என தோழர்கள் பேசினார்கள்.
நான்கு ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் யாரும் தண்டிக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், தியாகிகளுக்கு நினைவு தமிழக அரசு அமைக்க வேண்டும்,. கொலைகார போலீசு தண்டிக்க பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு சென்றோம்.
செய்தி:
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.
91768 01656.
000
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் உட்பட்ட மேலப்புலம்புதூரில் மக்கள் அதிகாரம் மற்றும் பு.ஜ.தொ.மு, விசிக, திராவிடர் விடுதலைக் ஆகியோர் இணைந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்பு தியாகிகளின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
000
மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்து நான்காம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமனின் ஊர். அங்குதான் இந்த நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் படங்களை வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. தோழர் ஜெயராமனின் படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தோழர்களும் தோழர் ஜெயராமன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தோழர் ஜெயராமனின் அம்மா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். வீடுகளிலும் ஆங்காங்கு கடகடைகளிலும் நின்ற பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட்டனர்.
சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை அகற்று! ஸ்டெர்லைடால் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைத்திடு! படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளை கைது செய் சிறையிலடை! ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக காசு வாங்கிக்கொண்டு கைக்கூலி வேலை பார்க்கும் நபர்கள் அதிகாரிகள் ஆகியவர்களை முறியடிப்போம்! சிபிஐயின் அறிக்கை போலியானது அதை நிராகரிக்கின்றோம்! கலவரம் செய்தது காவல்துறையும் ஸ்டெர்லைடின் கைக்கூலிகளும்தான் அவர்களை கைது செய் சிறையில் அடை! போன்ற முழக்கங்களின் அடிப்படையில் கூட்டம் நடைபெற்றது. அதில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் உரையாற்றினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தோழர் ரவி பேசினார். மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்களின் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
எப்படி தூத்துக்குடியில் ஒரு மணி நேரம் கூட நினைவு கூட்டம் நடத்த அனுமதி தராமல் காஷ்மீரைப் போல் இந்த திராவிட மாடல் அரசு நடந்து கொள்கிறதோ அதேபோல்தான் மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி பகுதிகளில் செயல்படும் தோழர்களின் வீடுகளுக்கு சென்று போலீசுத்துறை மிரட்டியது. அடிக்கடி தோழர்களின் வீடுகளில் போய் விசாரிப்பது தூத்துக்குடிக்கு தோழர்கள் போவதாக சொல்லிக் கொண்டு தொடர்ச்சியாக நச்சரிப்பது போன்ற வேலைகளை பார்த்தது போலீசு மற்றும் உளவுத்துறை.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தோழர்களின் பின்னால் அலைந்து திரிந்தார்கள் போலீசுத்துறை அதிகாரிகள்.
தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. தனது கழிவுகளால் ஒட்டுமொத்த தூத்துக்குடியையும் நாசம் செய்துள்ளது ஸ்டெர்லைட். இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் மக்கள் மத்தியில்பொய் பிரச்சாரம் செய்யவும் தனது கைக்கூலிகளை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சில பகுதி மக்களுக்கு செய்துகொண்டு நாடகம் ஆடுவதை வேடிக்கை பார்க்கும் இந்த போலீசுத்துறைதான் மக்களையும் போராடும் அமைப்பினரையும் ஒடுக்குகிறது.
இதை எதிர்த்து முறியடிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பலப்படுத்துவோம்! அதற்கு ஒட்டு மொத்த தமிழக மக்களும் துணை நிற்போம்!
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
000
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் சிவா மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார துணை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க கோரியும், போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தியாகிகளின் படங்களுக்கு தோழர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தருமபுரி மண்டலம்
9790138614
000
கடலூரில்….. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் !
000
ஸ்டெல்ரைட் எதிர்ப்பு போராட்டத்தில் வீரமரணமடைந்த 15 தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தும்விதமாக திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் மூலமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தகவல் : மக்கள் அதிகாரம், தஞ்சை மண்டலம்.
000
சிறப்பு சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை அகற்று! என்ற முழக்கத்தின் கீழ் நான்காம் ஆண்டு திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் இணை செயலாளர் தோழர் கின்சன், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்த போராட்டம். இன்று உழைக்கும் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் முழுவதையும் கார்ப்பரேட் கையில் கொடுப்பது, விவசாயிகள் போராட்டம் என போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஸ்டெர்லைட் போராட்டம் என்பது மக்கள் போராட்டக்களத்தில் தான் கார்ப்பரேட்டை, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணரவைக்கிறது”.
“கார்ப்பரேட் முதலாளி வேதாந்தாவிற்கு எதிரான போராட்டத்தில், அடியாட்படை போலீசுத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்” என்று உரையாற்றினர். அதன்பின் கிராம மக்கள் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்-9385358605
000
புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 4-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
000
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பாசிச மோடி அரசு !
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலையானது மாறியுள்ளது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கொரோனா பெருந்தொற்றை இந்த ஒன்றிய அரசு கையாண்ட லட்சணம் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். கொரோனா முதல் அலையின்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாகவே தாங்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர். வீட்டிற்கு சென்ற பலர் பசியாலும் உடல் நல பிரச்சினைகளாலும் தங்கள் உயிரை இழந்தனர். அதனால் இன்று அவர்கள் பல மைல்கள் கடந்து வேலை செய்வதை விரும்புவதில்லை.
கொரோனாவின் தொடர்ச்சியான தாக்கத்தாலும் ஆபத்தான மற்றும் உத்தரவாதமற்ற வேலை நிலைமையாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது கிராமங்களுக்கு அருகிலேயே, கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். குடும்பத்துடன் இருக்க முடிவதால் ஓரளவு மனநிம்மதியை அளிப்பதாக கூறுகின்றனர்.
14 கோடி புலம்பெயர் தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் சில மோசமான வேலை நிலைமைகளை எதிர் கொள்பவர்களாகவும் அவர்கள் எந்த ஒரு ஒப்பந்த முறையிலும் இல்லாதவர்களாகவும் இருக்கின்றன. இவர்களில் ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
படிக்க :
♦ செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
பல புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர்வது மிகவும் அரிதாகவே உள்ளது. காரணம், இவர்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். முறையான தொழிலாளர்களில் 4% பேர் உடன் ஒப்பிடும்போது, முறைசாரா தொழிலாளர்கள் 23% ஊதியத்தை குறைவாகவே பெறுகின்றனர். 2020-ல் மத்திய மற்றும் மாநில அரசுகள் இவர்களுக்கு ஒரு சில நல திட்டங்களை அமல்படுத்தினாலும் அது மோசமான மற்றும் சீரற்ற முறையிலேயே இருந்தது.
இந்தியாவின் ஜவுளி மையமான சூரத்தில்(குஜராத்), உள்ளூர் ஜவுளி தொழிலாளர்களுக்காக ப்ரவாசி ஷ்ராமிக் சூரக் ஷா மன்ச் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது 2020-ல்தான் முறையான தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இதில் 5000-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பு தொழிலாளர்களின் ஒரு சில பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அதை தீர்த்து வைத்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்கங்கள் அமைவது அரிதாகவே உள்ளது. அப்படி அமைந்தாலும் அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் சேருவதும் இல்லை.
பல மைல்களை கடந்து வந்து வேலை செய்வதை காட்டிலும் தான் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் வேலை செய்வதையே புலம்பெயர் தொழிலாளர்கள் விரும்புகின்றனர். குறைவான சம்பளமாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வசிப்பதையே விரும்புகின்றனர்.
மேற்சொன்ன நிகழ்வானது பல மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈர்ப்பதாகவும்; குறிப்பாக மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறையில் உள்ள தொழிலாளர்களை ஈர்ப்பதாகவும் சர்வதேச இடப்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜன் கூறுகிறார். XLRI – சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டின் பேராசிரியரான சுந்தர், “வரவிருக்கும் ஆண்டுகளின் சமூக மூலதனம் மிகவும் முக்கியமானதாக மாறும்” என்று கூறுகிறார்.
நம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தொழிலாளர்கள்தான். ஆனால், இன்று மாநில அரசும், மத்திய அரசும் கார்ப்பரேட்டின் நலன்களுக்காக பல தொழிலாளர்களை கடுமையாக வஞ்சித்து வருகிறது. இருப்பினும் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து பல இடங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டமானது இத்துடன் நின்றுவிடாமல், நாளை படைக்கவிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சியாக மாறவேண்டும்.

தேன்மொழி
“One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
During the campaign for the just-concluded urban local body elections, ADMK’s Edappadi Palaniswami had said that Assembly elections could be held in 2024 denoting ‘one nation, one election’. “The DMK regime has got only 27 new moons (amavasyas) to go,” he claimed.
We would have thought of them as a ‘fantastic joke’. But it reflected a slave’s deep faith in his master.
The fascistic RSS-BJP, which is in power under the leadership of Modi, has been carrying out various legal preparatory works and experiments to achieve its Hindu Rashtra goal. The Citizenship Amendment Act, the repeal of the Kashmir’s Special Status, the Prevention of Cow Slaughter Act, the Prevention of Love Jihad Act, the Prevention of Religious Conversion Act, the New Education (Saffron) Policy, the Unlawful Activities Prevention Act (UAPA), the NIA, the Property Damage Prevention Act, and the linking of Aadhaar with voter ID can be cited as examples of this.
In line with that, it is now going to implement the ‘One Nation, One Election’. The ‘one nation, one election’ method is to hold simultaneous elections once in five years to the Parliament, Assemblies and local bodies across the country.
From the very beginning, the BJP government has taken several initiatives to bring this about. Speaking on National Voters’ Day this year, Modi said, “One nation, one election is not a topic of discussion; That is the need of the hour; Frequent elections are an impediment to the ‘development’ of the country”.
Read :
♦ 18,850 Textile units go on strike to protest against rising yarn prices! People’s power support this !
♦ Rising suicides due to unemployment and overburdened debt: Working people under the grip of demonic fascist rule!
Since 2014, the BJP, in its election manifesto, has put forward the ‘one nation, one election’ agenda. In 2017, NITI Aayog had formulated plans for its implementation. In 2018, the Law Commission had recommended that certain changes should be made in the Constitution for implementing ‘One Nation, One Election’.
The idea of ‘one nation, one election’ requires a single electoral roll. As a first step towards its implementation, the Modi government passed the Election Laws (Amendment) Bill, 2021 in Parliament late last year which permits linking of voter ID with Aadhaar number.
On March 10, Chief Election Commissioner Sushil Chandra had said, “One Nation One Election is a good suggestion but this needs a change in the constitution. The Election Commission is fully prepared and is capable of conducting simultaneous elections”.
Ever since the Modi government started campaigning for it, a section of BJP opposers said that ‘one nation, one election’ is against the Constitution. Therefore, they were innocently saying that the Modi government will not be able to implement it.
The Election Commission of India is said to be an independent body. The Chief Election Commissioner’s speech makes us feel that ‘there is no need for such a fantasy’. It is against the democratic system for a top government official to express his opinion in favour of the ruling party on a law that has not yet been enacted by the Parliament.

Similarly, on December 18 last year, the Principal Secretary to the Prime Minister held an online meeting with Election Commission officials. It became a topic of debate. Congress spokesperson Randeep Surjewala said it was obvious that like the CBI and the ED, the Election Commission was also a captive puppet of the BJP.
The BJP and its supporters have been giving a number of reasons as to why the ‘one nation, one election’ system should be introduced. Every year, there are elections somewhere in the country. The government spends heavily on conducting these elections. As a result, the development work of the country is also affected. It is because of frequent elections that people’s participation in elections is low. They are stacking up lies to make us admit that if elections are held only once in five years, people will vote in large numbers.
First, let’s see how it is a blatant lie to claim that it costs too much to hold elections.
The Centre for Media Studies conducted a survey on election expenditure. A total of ₹30,000 crore was spent on the 2014 elections. This expenditure is the total expenditure incurred by the government, political parties and the candidates together. Of this, the government spending was just ₹3,500 crore, i.e., only 11 percent of the total cost.
Although this is only for parliamentary elections, it can be seen from this that the total election expenditure of the government is relatively low.
But since Modi came to power, the total amount of non-performing assets (NPAs) that had been written off is ₹10,72,000 crore. They are saying that it is because of the conduction of elections that the coffers are being emptied.
A total of ₹60,000 crore has been spent on the 2019 Lok Sabha elections. Of this, 45 per cent, i.e., ₹27,000 crore, is spent by the BJP alone. It may be because of this, they say that elections cost too much!
Next, let’s see how ‘development works’ get affected. We have to accept this point. Before that, we need to define what according to the BJP is ‘development work’. With clusters of farmer suicides, unemployment unseen in 45 years and the annihilation of small scale industries — the Modi regime is a hell for the working people.
GST, demonetisation, Bharatmala, Sagarmala, methane gas project, expansion of nuclear power plant, amendment to the farm laws, privatisation of public sector, waiver of lakhs of crores of bad loans, tax concessions for the corporates, etc., are some of the things that the Modi government is doing to make the corporate bosses delighted. This is what they call ‘development work’.
According to a statistics, Adani’s net worth rose by 261 percent in 2020-2021 alone. Similarly, the number of super-rich people in India has risen by 39 percent. The BJP’s regret is that there may not be a steady growth in these ‘development works’ due to frequent elections.
Take, for example, the implementation of the farm laws. The farm laws were brought in to bail out the corporate capitalists and carve out the Indian agriculture among them. The farmers fought against this for a year. In this struggle, 750 farmers became martyrs.
Modi, however, has withdrawn the farm laws just because elections in five states are due (even if this is just another reason). This has led to Modi’s friends (Ambani and Adani) getting mad at him. That is why it is necessary for the BJP to wipe out frequent elections.
While the frequently held elections are not conducive to the interests of their patrons, the Brahmin-Bania corporate clique, on one hand, it is also inconsistent with the RSS’s definition of ‘Bharat Desh’ on the other hand.
After the 1947 regime change, the RSS was the only organisation that opposed the reorganization of states on the basis of language and the creation of state governments. Their leader Golwalkar, in his book ‘Bunch of Thoughts’, said, “For the integrity of our holy motherland, a Unitary State – One Country, One Legislature, One Executive Centre running the administration throughout the country – is required”
The state governments, which represent different nationalities and have certain powers in their hands, are against the Hindu Rashtra Authority Centre. The territory had to change again into various princely states as it had been, prior to the British domination; There should be a local authority at the village level. The form of the Hindu Rashtra state is that there should be a single empire that controls all those village powers. It was in this form that the brahmanical caste tyranny and feudal exploitation were preserved for over two thousand years.
Even though they say that elections once in five years, the aim of the RSS-BJP is to abolish elections altogether and establish its fascist dictatorship – The Hindu Rashtra. ‘One Nation, One Election’ is just a beginning.
A 2015 study by the IDFC Institute found “a 77% chance that the winning political party or alliance will win both the Lok Sabha and Assembly elections in that state when held simultaneously”. Because during the nationwide elections, only national issues will be discussed. Many scholars have been saying that the people will focus their attention only on the national issues.
Read :
♦ Sri Lankan people longing for a Revolutionary Party !
♦ Perarivalan released; Release all ! including Nalini, Murugan, Santhan ! | People’s power
From the very beginning, the RSS-BJP has instilled in the minds of the majority the idea that only Modi, with a 56-inch chest, has the power to thwart attacks from ‘Muslim terrorists’ at home and attacks by Pakistan and China from the outside.
Moreover, as of now, no party leader has the image of a ‘saviour’ who can challenge Modi. It was for the same reason that Modi won the 2019 Lok Sabha elections again. The Pulwama attack was of good use to the BJP at that time. It is not possible to defeat the jingoism and religious bigotry that the RSS-BJP whips up in every election, by standing within the elections.
Both legally and illegally, the RSS-BJP is in the final stages of its work in establishing its dream of Hindu Rashtra barbarianism. “One nation, one election’’ is a part of the legal process.
We are living in the imminent peril of establishment of a fascist dictatorship. It is time for the electoral parties, who are strategising ‘how to defeat the BJP in the upcoming election’, and the people who consider this pseudo-democracy as stable by saying “the Constitution cannot be shaken”, should wake up from their dreams.
![]()
Mathi
தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்காதே ! | மக்கள் அதிகாரம்
விடியல் திமுக அரசே !
தூத்துக்குடியில் நடப்பது திராவிட மாடல் அடக்குமுறையா !
மக்கள் விரும்பும் வடிவில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்காதே !
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை மூடு !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி அமைதியாக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி போலீசு.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் தூத்துக்குடி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான போலீசை தூத்துக்குடியில் குவித்து மக்களை அச்சுறுத்துவதும், அச்சப்படாமல் அஞ்சலி நிகழ்வை நடத்த தயாராகும் மக்களை ஊரைவிட்டு வெளியேசெல்ல விடாமலும், வெளியூர் நபர்களை கிராமப்புறங்களுக்குள் செல்லவிடாமல் தடுப்பதும் என்று அனில் அகர்வாலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.
போலீசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு நடுவில் அஞ்சாமல் ஒவ்வொரு ஆண்டும் எழுச்சிகரமாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.
எடப்பாடி அரசின் அடக்குமுறையை அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கண்டித்ததோடு அடக்குமுறைகளுக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக பொறுப்பாக்கினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்; அடக்குறையை கைவிட வேண்டும் என்று தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவர் அன்றைய எதிர்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமாகிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்.
வழக்கம்போல இந்த ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தூத்திக்குடி மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஆயத்தமாகும் இடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் போலீசு குவிக்கப்பட்டுள்ளது
வெளி ஆட்கள் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள போலீசு தடை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அஞ்சலி கூட்டம் நடத்துபவர்கள் கடந்த ஆண்டுகளில் நடத்தியதைப் போல அவரவர் ஊர்களின் உள்ளேயே நடத்திக் கொள்ளுங்கள், யாரும் பொது வெளியில் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தக்கூடாது, மீறினால் கைது செய்ய முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளது ஸ்டாலின் போலீசு.
பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்களை மிரட்டியுள்ளதோடு, அரங்கக்கூட்டம் நடத்த அரங்கம் கொடுக்க கூடாது என்று அரங்க உரிமையாளர்களையும் ஸ்டாலின் போலீசு மிரட்டியுள்ளது. கடந்த காலங்களில் போலீசு மிரட்டலை மீறி பிளக்ஸ் அச்சடித்து கொடுத்த அச்சக உரிமையாளர்கள் அரசாங்கத்தால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுத்துள்ளது ஸ்டாலின் போலீசு.
ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தியும், தியாகிகளுக்கு நினைவிடம் எழுப்ப கோரியும் மக்கள் அதிகாரம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பு.இ.மு அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டிகள் முழுவதும் தூத்துக்குடியில் கிழிக்கப்பட்டுள்ளது.
இவை நடப்பது கருத்துரிமையை பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் விடியல் ஆட்சியில் தான்!
அன்று நடந்த அடக்கு முறைக்கும் இன்று நடைபெறும் அடக்குமுறைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எடப்பாடிக்கு பதில் ஸ்டாலின் முதல்வர் என்பதைத் தவிர.
ஆனால், அன்று நடந்த அனைத்து அடக்குமுறைகளுக்கும் எடப்பாடியை பொறுப்பாக்கிய அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் அதே அடக்குமுறையை தொடரும் இன்றைய திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலினை அதற்கு பொறுப்பாக்காமல், போலீசை மட்டும் பொறுப்பாக்குகின்றனர். இது போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், போராடிவரும் தூத்துக்குடி மக்களுக்கும் இழைக்கும் துரோகமேயன்றி வேறென்ன?
தனியார்மயமும், கார்ப்பரேட் கொள்கையும் எடப்பாடியையும், ஸ்டாலினையும் இணைக்கும் புள்ளி, இவர்களை மட்டுமல்ல மோடி, ராகுல் இவர்களையும் இணைக்கும் புள்ளி இதுதான். இந்த தனியார்மயம், கார்ப்பரேட் கொள்கைக்கான சேவைதான் இந்த அடக்குமுறை.
திமுக பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கோ, தனியார்மயத்திற்கோ எதிரான கட்சியா?
திமுக சுயவிருப்பத்தின் அடிப்படையிலா ஸ்டெர்லைடை எதிர்ப்பதாக கூறியது?
தூத்துக்குடி மக்களின் விடாப்பிடியான போராட்டம்தானே திமுகவை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசவைத்தது!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில் தூத்துக்குடியில் நலத்திட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த ஸ்டெர்லைட் ஆலை மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடப்பாடி அரசும், அதன் பின் ஸ்டாலின் அரசும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என்பதை மறுக்க முடியுமா?
ஆனால், மறுபுறம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முடக்க அன்று எடப்பாடி அரசும் அதன் பின்பு இன்றைய திராவிட மாடல் ஸ்டாலின் அரசும் கடுமையாக அடக்குமுறைகளை ஏவி வருகின்றது என்பதை மறுக்க முடியுமா?
மக்களின் கருத்துரிமையும் கார்ப்பரேட் நலனுக்கு உட்பட்டதுதான் அனுமதிக்கப்படும்! இதற்கு திமுக ஒன்றும் விதிவிலக்கல்ல!
இந்த அடக்குமுறைகள் திராவிட மாடல் விடியல் முதல்வருக்கு தெரியாமல் நடக்கின்றது என்று மெத்த படித்த அறிவாளிகள் சிலர் கூறலாம்; ஆனால் அதை நம்புவதற்க்கு தூத்துக்குடி மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அடக்கு முறைகள் நிகழ்த்தப்படுவதை திராவிட மாடல் அரசின் முதல்வரின் கவனத்திற்கு மக்களே கொண்டு சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு அதிமுக இதுவரை அஞ்சலி செலுத்தியதில்லை; ஆனால் திமுக அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது, அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டு மறுபுறம் மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது பச்சை துரோகமில்லையா? இதுதான் திராவிட மாடல் அடக்குமுறை போல!
தூத்துக்குடி மக்களின் முதன்மையான கோரிக்கையான சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை மூடு என்ற கோரிக்கையை திராவிட மாடல் முதல்வர் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறார் ஏன்?
பாஜக வந்துவிடும் என்று திமுக கூட்டணி கட்சியினரும் அதன் ஆதரவு இயக்கங்களும் திமுக பின்னால் ஒளிவது பாஜக நுளைவதையும் தடுக்காது ஸ்டெர்லைட்டின் அத்துமீறலையும் தடுக்காது. களத்தில் போராடும் மக்கள் மீது திமுக ஏவும் அடக்குமுறையை வெளிப்படையக அனைவரும் கண்டிக்க வேண்டும்.
திமுகவால் பாஜக நுளைவதை தடுத்துவிட முடியும் என்று நம்புவது அரசியல் முதிர்ச்சியின்மையே காட்டுகின்றது.
பா.ஜ.க.வையும், ஸ்டெர்லைட்டையும் களத்தில் போராடி மட்டுமே வீழ்த்த முடியும்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக விரட்ட சமரசமின்றி போராடும் தூத்துக்குடி மக்களுடன் களத்தில் இணைவோம், ஸ்டெர்லைட் போராட்ட வழியில் கார்ப்பரேட் கொள்ளையை முறியடிப்போம்.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம். – 9385353605
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நான்காம் ஆண்டு – கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்தும் அரசு ! | வீடியோ
கடந்த 2018, மே 22 வரலாற்றில் மறக்க முடியாத நாள். வேதாந்தா என்ற நிறுவனத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய தூத்துக்குடி மக்களை ஸ்டெர்லைட்டின் அடியாளாக நின்று இந்த அரசு 15 பேரை சுட்டு படுகொலை செய்த நாள்.
கார்ப்பரேட்டுக்கு எதிராக இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டில் நாம் வாழுகின்ற பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, அரசின் படுகொலைகளை நாம் மறக்க முடியாது.
கார்ப்பரேட்டுக்கு எதிராக எப்படி போராடினால் அவனை பணிய வைக்க முடியும்? கார்ப்பரேட்டுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு என்ன? கார்ப்பரேட்டின் நலனை பாதுகாப்பதற்காகத் தான் அரசு இருக்கின்றது என்பனவற்றை தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த போராட்டம் நமக்கு உணர்த்து பாடம்.
ஆகவே, அரசு என்பது ஒரு கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்துகின்றது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி போராட்டம் அதன் பிறகு நாம் கடந்து வந்த வரலாற்றையும், தற்போது தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள் பற்றியும், ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை பற்றியும், திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகள் பற்றியும் இக்காணொளியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நான்காம் ஆண்டு !
கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்தும் அரசு !
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!






















