Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 130

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நேற்று குஜராத், இன்று மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை தடை செய்!
♦ அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
♦ பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?
♦ உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்
♦ கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!
♦ தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
♦ வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
♦ கழன்றது முகமூடி : பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்! – பகுதி 2
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.ழு.வின் 25 ஆண்டுகள்! – இறுதி பகுதி

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!

டந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் என 152 பேர் மீது ஊஃபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ள விவரம் அண்மையில் வெளிவந்துள்ளது. தங்கள் மீது ஊஃபா வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற விவரமே இந்த 152 பேருக்கும் கடந்த மாதம் வரை தெரியாது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தி. போலீசு இத்தகவலை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

தெலுங்கானாவின் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் (People Democracy Movement – PDM) தலைவர் சந்திரமௌலி ஒரு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகியபோது, இதுதொடர்பான விவரம் வெளிவந்துள்ளது. ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்காக அவர் மீது பதியப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது. அதை ஆராயும்போதுதான், “மாவோயிஸ்டுகளுடன் இணைந்து அரசைக் கவிழ்க்க முயன்றதாக” குற்றஞ்சாட்டப்பட்டு 152 பேர் மீது போடப்பட்ட ஊஃபா வழக்கில் சந்திரமௌலியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

முலுகு மாவட்டத்தின் தட்வாய் போலீஸ் நிலைய வட்டார ஆய்வாளர் சங்கரால் பதிவுசெய்யப்பட்ட, 52 பக்கங்கள் கொண்ட இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பலராலும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ஹரகோபால், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஜா ஷா, தெலுங்கானா சிவில் உரிமைக் குழுத் தலைவர் பேராசிரியர் கதாம் லக்ஷ்மன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கொடுமை என்னவெனில், களத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பெயர்களுடன் சேர்த்து பீமா கொரேகான் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சுதா பரத்வாஜ், சிறையில் உள்ள அருண் ஃபெரைரா மற்றும் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோரின் பெயர்களும், இவ்வழக்கு பதிவுசெய்யப்படுவதற்கு முன்பே இறந்துவிட்ட முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் அமருலா பாண்டுமித்ரா சங்கத்தின் (ABMS) உறுப்பினர் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கட்டுக்கதையை நிராகரித்த ஜனநாயக சக்திகள்!

ஆகஸ்ட் 19, 2022 அன்று மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகம் ஒன்றில், இந்த 152 செயல்பாட்டாளர்களின் பெயர்பட்டியல் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும், “அரசு சொத்துக்களை அழிக்கவும், பழங்குடியின இளைஞர்களை மாவோயிஸ்டு அமைப்புக்கு வென்றெடுக்கவும், அவ்வமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டவும் திட்டமிட்டனர்” என்று தங்களது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது தெலுங்கானா போலீசு.

ஆனால், தெலுங்கானாவில் உள்ள ஜனநாயக சக்திகள் யாரும் இந்த கதைகளை நம்பத் தயாராக இல்லை. இது செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை உணர்ந்து அதற்கெதிராக கடும் கண்டங்களை எழுப்பியுள்ளனர். பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக இறந்துபோன முன்னாள் நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, போலீசின் சதி நோக்கத்தை அம்பலப்படுத்தினர்.


படிக்க: ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!


இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரா.ஹரகோபால், “இந்தப் பெயர்களை யார் எழுதுகிறார்கள் என்பது முழு சமூகத்திற்கும் தெரியும். மாவோயிஸ்டுகளுக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை. போலீசுதான் அவர்கள் விரும்பும் பெயர்களை எல்லாம் இணைத்துள்ளது” என்றார்.

பல்வேறு சிவில் அமைப்புகள், தனிநபர்களின் குடை அமைப்பாகச் செயல்படும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (NAPM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தெளிவாக உள்ளது; குற்றமாக்கப்படுவது வெறும் நடவடிக்கைகள் அல்ல, அரசாங்கத்தை எதிர்க்கும் எந்தவொரு நம்பிக்கையும் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

மீசையில் மண்ணில்லை: தெலுங்கானா போலீசு!

இந்தாண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜனநாயக சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் தமது பக்கம் திரும்புவதை சந்திரசேகர் ராவ் அரசு விரும்பவில்லை; எனவே பேரா.ஹரகோபால் உள்ளிட்ட 151 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் போலீசுத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, “பேரா.ஹரகோபால், பேரா.பத்மஜா ஷா, வி.ரகுநாத், கதாம் லக்ஷ்மன், குந்தி ரவீந்தர் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரை இந்த வழக்கில் தொடர்புப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை என இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே ஆறு பேரின் பெயர்களையும் நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணை தாக்கல் செய்யப்படும்” என முலுகு போலீஸ்துறை கண்காணிப்பாளர் கவுஷ் ஆலம் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட இறந்த இரண்டு நபர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது குறித்து, தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்றும், அந்த பெயர்களும் வழக்கிலிருந்து நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பீமா கொரேகான் வழக்கில் சிறையிலுள்ள சுரேந்திர காட்லிங் மற்றும் அருண் ஃபெரைரா உட்பட மீதமுள்ள 146 ஆர்வலர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றால், அவர்களின் பெயர்களும் வழக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டு ஒரு பொய்வழக்கைத் தொடுத்து மாட்டிக்கொண்டபின், மீசையில் மண் ஒட்டாமல் பின்வாங்க நினைக்கிறது தெலுங்கானா போலீசு. “அனைவரும் ஒரே வழக்கில் உள்ளனர். ஒருவருக்கு எதிரான வழக்கு நீக்கப்படுகிறதென்றால், அந்த வழக்கில் தவறு அல்லது ஏதேனும் குறைபாடு நடந்துள்ளது என்பதை அரசு உணர்ந்துள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும். எனவே, இந்த வழக்கை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் பேரா.ஹரகோபால்.

ஊஃபா பாய்ச்சப்பட்ட இவர்கள் யார்?

ஊஃபா பாய்ச்சப்பட்ட இந்த 152 செயல்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் மாநில அளவிலோ, நாடு தழுவிய அளவிலோ காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக இயக்கங்கள் வைத்து நடத்துபவர்கள் அல்லது அந்த இயக்கங்களில் செயல்படுபவர்கள்; இயக்கமாகச் செயல்படவில்லையெனினும் தனிப்பட்ட ரீதியில் பாசிஸ்டுகளுக்கு எதிராக குரலெழுப்பி வருபவர்கள்.

முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹோஸ்பெட் சுரேஷ், மோடி பிரதமராவதற்கு முன்பிருந்தே, 2002 குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளி மோடி என்று பேசிவந்தவர். கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும், பீமா கொரேகான் பொய்வழக்கிற்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தவர். பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா மற்றும் சுரேந்திர காட்லிங் உள்ளிட்டோர் இயங்கிவந்த இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவர்.

பேரா.ஹரகோபாலும் பீமா கொரேகான் வழக்குக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அது தொடர்பாக பிற ஆசிரியர்களுடன் இணைந்து கூட்டம் நடத்தியதற்காக 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பத்மஜா ஷா, தி வயர், நியூஸ் மினிட், மின்ட், தி ஹூட் போன்ற வலைத்தளங்களில் மோடி அரசை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிவருபவர்.

இவையன்றி கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் செயல்பட்டுவரும் “கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம்” (AIFRTE) என்ற அமைப்பின் பொருளாளர் எம்.கங்காதர், உறுப்பினர் கே.ரவி சந்தர் ஆகியோரின் பெயர்களும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. “தெலுங்கானா ஜனநாயக ஆசிரியர் முன்னணியை”ச் (DTF) சேர்ந்த ஆறு தலைவர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-க்கு எதிராகவும் களமாடியவர்கள்.

பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள் இயங்கிய அமைப்புகளில் செயல்பட்டுவந்த பலர் தெலுங்கானா அரசு பதிந்துள்ள இந்த ஊஃபா வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாசிசக் கும்பலின் கையாளாக சந்திரசேகர் ராவ்!

இத்தகைய செயல்பாட்டாளர்களை ஒடுக்கவேண்டியத் தேவை யாருக்கு உள்ளது என்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மக்கள் உரிமைக்காக போராடும் இச்செயல்பாட்டாளர்கள் மீது தாங்கள் விரும்பும் தருணத்தில், அடக்குமுறையை ஏவுவதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் முன்பே தயாரித்து வைக்கப்பட்ட முகாந்திரம்தான் இந்த ஊஃபா வழக்கு.

2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா போலீசாரால் பதிவுசெய்யப்பட்ட பீமா கொரேகான் வழக்கு முதலில் என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்பட்டதல்ல; அது மகாராஷ்டிரா போலீசால் போடப்பட்ட வழக்கு. மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு மோடி அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது.


படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !


தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ‘இடைஞ்சலான பேர்வழிகள்’ என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் கருதும் செயல்பாட்டாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக மேற்கொண்ட இந்நடவடிக்கையை, 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்ததன் மூலம் ‘பயங்கரவாதிகளுக்கு அச்சுறுத்தலான நபர் மோடி’ என்ற நாயக பிம்பத்தை உருவாக்குவதே அன்றைய நோக்கமாக இருந்தது. இப்போது அதே பாணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்பாட்டாளர் மீது அடக்குமுறையை ஏவும் நோக்கோடு பாசிசக் கும்பலால் இந்த ஊஃபா வழக்கு பதியப்பட்டிருக்கலாம். பீமாகொரேகான் வழக்கைப் போன்ற இவ்வழக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளை வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் சதித்திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இப்பாசிச நோக்கத்திற்கு குடுமியைப் பிடித்துக் கொடுக்கும் வேலையைத்தான் தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டுள்ளது.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே தனது இலக்கு” என்று அறிவித்துக் கொண்ட சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்தை புறக்கணித்தும், பா.ஜ.க.விற்கு எதிரான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு அடக்கிவாசிப்பதும், அவர் பாசிசக் கும்பலின் பீ டீமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்பதை அறிவிக்கின்றன.


துலிபா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்

Everybody lets join together.. gether.. gether..
Everybody lets raise your hands.. hands.. hands..
Everybody lets raise voice.. voice.. voice..

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

வடகிழக்கு மணிப்பூரின் நிலவரம்
அங்கு 80 நாளா கலவரம்

துணை ராணுவத்தோட அதிகாரம் –
துப்பாக்கி காவிகளின் கைமாறும்.

இந்த கூட்டு கும்பலின் தூண்டுதலில்
இன – மதவெறி மோதல்கள் தினம்தோறும்

தேவாலயங்களில் தீமூட்டம்
தெருவெங்கிளுமே பிண வாடம்

குக்கி பெண்களின் தன்மானம் – அங்கு
தாயும் மகளுமே நிர்வாணம்

அந்த கூட்டு பாலியல் அவமானம்
இந்துராஷ்டிர பாதையின் சன்மானம்

நரவேட்டை நாளும் அங்கு தீயாகும் –
அதில் பாசிசப் படைகள் குளிர் காயும் – இது
காவி வானரங்களின் அதிகாரம் நாளை
நாடு முழுவதும் அரங்கேறும்.

Ban Ban Ban BJP! {2}
Ban Ban  Ban RSS! {2}

இனி மோடியை பேச சொல்லி கெஞ்சாதே
மணிப்பூருக்கு வரச் சொல்லி தொங்காதே

கலவர தலைவனே ஜீ தானே –
அங்கு அரசும் அதுக்கு துணை தானே

Parliament-ல பேசச் சொன்னா
முடிச்சு போட்டு ஜீ திரிச்சாரே

முதலைக்கண்ணீர் வடிச்சாரே – இது
முழுதும் காவிகளின் சதிதானே

இது நிரந்தரமில்லை நிலை மாறும்}2

தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டம்
தலைநகரம் வரையிலும் பரவட்டும் – அங்கு
கோட்டை வாசல்கள் அதிரட்டும்
அவன் குதிகால் நரம்புகள் அறுபடும்

இப் பாசிசப் படைகளின் எதிர்காலம்
இந்துராஷ்டிர கனவுகளின் அழிவாகும்
இந்தப் போராட்ட தீ எங்கும் பரவட்டும்
இதைப் போராட்ட தீ எங்கும் முழங்கட்டும்

இனி இதுவே நமது கனவாகும்
இனி இதுவே நமது களமாகும்
இனி இதுவே நமது உரமாகும்
இனி இதுவே நமது உணர்வாகும்

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

English Lyrics:

Everybody lets join together.. gether.. gether..
Everybody lets raise your hands.. hands.. hands..
Everybody lets raise voice.. voice.. voice..

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

Riots in Northeastern state of Manipur
For over 80 days

Power in the hands of paramilitary forces
Rifles will get transferred to the hands of saffron fascists

Because of the incitement of the saffron mob
Ethno-communal violence occurring everyday

Churches are being burnt
Streets are full of dead bodies

Kuki women – mother and daughter – were paraded naked

‘Humiliation’ by gang rape
Will become normal in Hindurashtra

The hunt for human flesh is going on
And their appetite is not lost
These atrocities of the saffron thugs
will propagate throughout the country

Ban Ban Ban BJP! {2}
Ban Ban  Ban RSS! {2}

Don’t beg Modi to speak
Don’t plead him to come to Manipur

“Ji” is the leader of the riot
And it is State sponsored

When asked to speak in Parliament
“Ji” tried to divert

He shed crocodile tears
It is the conspiracy of the saffrons

This situation is not permanent and will change}2

Protests of Tamilnadu students
will spread to the capital
It will shake the country
It will paralyze him

Hindurashtra dream will be shattered
This is the future
The propagating protests
will destroy them

Now, this is our dream
This is our field
This is our strength
This is our emotion

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!

ஜூன் 24, மேற்கத்திய ஊடகங்கள் பெரும் ஆரவாரத்தில் இருந்தன. “வாக்னர் என்ற தனியார் ராணுவம், 25,000 படைவீரர்களைக் கொண்டது, அது ரஷ்யாவிற்கு எதிரான போரை அறிவித்துள்ளது!”, “ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கப் போகிறது”, “மாஸ்கோவை நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுகின்றன”, “வாக்னர் படையினர் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்”, “உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வந்துவிடுமா”, “ரஷ்யா மீளுமா” என்றெல்லாம் ஊகங்கள், கருத்துகள், செய்திகள் பலவாறாகப் பரவின.

ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய ஊடகங்களின் ஊதிப்பெருக்கப்பட்ட இதுபோன்ற பிரச்சாரங்களை இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அடிமை ஊடகங்களும் தங்கள் தரப்பிற்கு பரப்புவது முதல்முறை அல்ல. எனினும், எதிர்ப்பாராதவிதமாக, திடீரென, பரபரப்பாக, வெள்ளம் போல இவ்வாறான செய்திகள், அறிவிப்புகள் வந்தபோது, இவை ஊதிப்பெருக்கப்பட்ட வதந்திகள் என்று பலரால் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார். வாக்னர் குழுவினரின் பெயரைக் குறிப்பிடாமல், “நாட்டிற்கு துரோகம் செய்பவர்களைத் துடைத்தொழிப்போம்” என்று அறிவித்தார். ஆனால், அடுத்து சில மணிநேரங்களில் வாக்னர் குழுவினர் பெலாரசிடம் சரணடைய இருப்பதாகவும், அதற்காக அந்நாட்டிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், வாக்னர் குழுவினர் பின்வாங்கப் போவதாகவும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமென்றும் செய்திகள் வெளிவந்தன.

முக்கியமாக, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துகள் அமெரிக்காவின் போர் வெறியை அப்பட்டமாகக் காட்டியது. அவர், ரஷ்யாவில் ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ முயற்சியின் நிலைமை “இன்னும் வளர்ந்து வருகிறது… நான் ஊகிக்க விரும்பவில்லை, அவ்வளவு விரைவாக இறுதி அத்தியாயத்தைப் பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை” என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார். ஆனால், சில மணிநேரங்களில் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரியவந்தன. இதனை அமெரிக்க ஊடகங்களே ஒப்புக்கொண்டன.

சாகசமும் பரப்பரப்பும் ஓய்ந்தாலும் பிரச்சினையை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ரஷ்ய மேல்நிலை வல்லரசு, இந்தப் போரில் தனக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக, தனியார் ராணுவம் என்று கௌரவமாக ஏகாதிபத்தியவாதிகளால் அழைக்கப்படும் கூலிப்படைகளைப் பயன்படுத்தி வருகிறது. இதுபோன்று போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துவது ரஷ்யா மட்டும் மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. உலகத்தில் உள்ள எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு வகைகளில் இந்தக் கூலிப்படைகளை உருவாக்கி வளர்த்து வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு பல நாடுகளில் தனக்கு ஆதரவான கூலிப்படைகளை வளர்த்ததும், அவை அமெரிக்காவிற்கு எதிராகவே திரும்பிய வரலாற்று உதாரணங்களும் பல உள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ., தாலிபான், அல்-கொய்தா போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு சான்றுகள்.

தற்போது உக்ரைன் சார்பாக 60 நாடுகளில் இருக்கும் கூலிப்படைகள், பாசிச கூலிப்பட்டைகள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆகையால், ரஷ்யா பயன்படுத்தியிருப்பதும் அதுபோன்ற ஒரு கூலிப்படைதான்.

அந்தவகையில், ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.

அந்த அடிப்படையில், வாக்னர் கூலிப்படையின் தலைவன் பிரிகோஜின் ரஷ்யாவிற்கு எதிராகப் போர் தொடுக்கப்போவதாகவும் மாஸ்கோ நோக்கி தனது படைகள் நகரும் என்றும் சனிக்கிழமை அறிவித்தான். ஆனால், இந்நிகழ்வில் அமெரிக்காவும் அதன் ஆதரவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்ப்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த ரஷ்யாவின் ஊடகங்கள், உயரடுக்கு அதிகார வர்க்கத்தினர், ரஷ்ய நிதியாதிக்கக் கும்பல்கள், ரஷ்யக் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள், ரஷ்ய ராணுவம் என அனைத்தும் புடினுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதை இந்த சம்பவம் காட்டிவிட்டது.

ரஷ்யாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை இது வெளிப்படுத்துவதாகவும் புடின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த சம்பவம் அமைந்துவிட்டது. தனது நாட்டிற்கு எதிராக ஒரு கூலிப்படை தாக்குதல் நடத்தும், ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ செய்யும் என்பதை ரஷ்ய மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அமெரிக்க பொய்ச் செய்திகளை நம்பியவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


இதுமட்டுமல்ல, ரஷ்யா போன்ற வலிமைமிக்க ஏகாதிபத்திய நாடுகள், முக்கியமான போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துகின்றன எனில், அந்தக் கூலிப்படைக்குள்ளேயே அந்நாட்டின் உளவாளிகள் இருக்கமாட்டார்கள் என்று அமெரிக்கா கருதியிருப்பதுதான் வெட்கக்கேடான நிலையாகும். அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு நிகராகவே ரஷ்ய உளவு நிறுவனம் இருப்பதையும் இந்த சம்பவம் உணர்த்திவிட்டது. மாறாக, வாக்னர் கூலிப்படையினரை மிகைமதிப்பீடு செய்து, ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

அதுமட்டுமல்ல, நாட்டிற்கு எதிராக போர் அறிவித்திருப்பதை ரஷ்ய அரசு எதிர்கொள்ளும் என்று அறிவித்த நிலையில், ரஷ்யாவில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் எவையும் பாதிக்கப்படாமல் இருந்தன. வாக்னர் குழுவை பின்வாங்கவைத்து அவர்களது முகாம்களுக்குத் திரும்பச் செய்யப்பட்டது. கலகத்தில் பங்கேற்காதவர்களுக்கு ராணுவத்தில் இடமளிக்கப்படும் என்ற அறிவிப்பு வாக்னர் குழுவைப் பிளவுபடுத்திவிட்டது.

மொத்தத்தில், பிரிகோஜின் சதி ஒரு நாளைக்கூட தாங்கவில்லை. அமெரிக்கா எதிர்ப்பார்த்தது போல உக்ரைனை ஏவி ரஷ்யாவிற்கு கொடுத்த நெருக்கடிகள் எல்லாம் அது எதிர்ப்பார்த்த விளைவுகளை உருவாக்கவில்லை. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் முரண்பாடுகள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அமெரிக்காவின் நிலைமை பின்னடைந்துள்ளது. உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. இனியும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் வேகமாக சரிவதற்கான வாய்ப்புகளே உள்ளன.

உலகத்தைப் பங்குப்போட்டுக் கொள்வதற்காக ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போரில் நாம் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக்க, சீன-ரஷ்ய மேலாதிக்கத்தை ஏற்க முடியாது. ஏகாதிபத்தியங்களில் ஆதிக்கப் போர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பவதற்கு ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழல் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் செய்திகளையும் பரபரப்புகளையும் உடனுக்குடன் முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.


ராஜா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் | Teaser – டீசர்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் | Teaser – டீசர்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

பெரும்பான்மையான உடல்கள் மிகக் கடுமையாக சிதைந்து, நசுங்கி அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தன. பலியானவர்களின் குடும்பத்தினர்கள், சிதறிய உடல்களிலிருந்து தங்கள் குடும்பத்தினரின் உடல் அல்லது உடல் உறுப்புகள் எது என்பதை மரபணு பரிசோதனை மூலம்தான் அடையாளம் காண முடியும் என்ற அவலநிலை. ஒரு உடலுக்கு பலர் உரிமை கோரும் வலிமிகுந்த துயரச் சம்பவம். ஆம், 40 ஆண்டுகளில் நடைபெற்றிராத மிகக் கோரமான ரயில் விபத்து, ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும், அருகிலிருந்த தண்டவாளங்கள் மீதும் சிதறி விழுந்தன. சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த ஹவுரா விரைவு ரயிலும் சிதறிய கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோரவிபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். நாட்டு மக்களால் மறக்கப்பட முடியாத துயரச் சம்பவமாகும். இந்த விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 900-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பான்மையினர், முன்பதிவுசெய்யாத பெட்டியில் நெருக்கடியாக முண்டிமோதிக் கொண்டு சென்ற அன்றாடங்காய்ச்சி உழைக்கும் மக்கள்.

தார்மீக ரீதியாக இந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக் கூடும்; ரயில்வேயில் சம்மந்தப்பட்டவர்கள் அல்லது வெளிநபர்களுக்கு தொடர்பிருக்கலாம். எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். பாசிஸ்டுகளின் இந்த பிணந்திண்ணி அரசியல் நமக்கு அறுவெறுப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்துகிறது. விபத்து நடந்த இடத்திற்கு புகைப்படமெடுப்பதற்காகச் சென்ற சுயவிளம்பர வெறிப்பிடித்த மோடி, “விபத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிப்போம்” என்று வசனம் பேசுகிறார்.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!


குற்றவாளியே, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என்று பேசுவது கேலிக்கூத்தாகும். 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் பல்வேறு அரசுத் துறைகளையும் சீரழித்து, ஒழித்துக்கட்டிவருவதை நாம் அறிவோம். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருவது மோடி ஆட்சிக் காலத்தில்தான். ரயில்வே துறையை தனியார்-கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதற்காக மோடி அரசு மேற்கொண்டுவரும் சதிச் செயல்கள்தான் ஒடிசா ரயில் கோரவிபத்துக்கு காரணமே ஒழிய, பயங்கரவாதிகள் நிகழ்த்திய சதிச் செயல்கள் அல்ல.

திட்டமிட்டு சீரழிக்கப்படும் ரயில்வேதுறை!

மோடி ஆட்சியில் ரயில்வேதுறை முறையாக பராமரிக்கப்படாமல் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருவதற்கு அண்மையில் வெளியாகியுள்ள அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளே சான்றுகளாக உள்ளன.

ரயில் சிக்னல் மற்றும் தடம் மாற்றுவதற்கான மின்னணு அமைப்புமுறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சொல்லிவைத்தாற்போல, ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பிலிருந்து ஒன்றிய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கர்நாடகாவில் ஹோசர்துங்கா ரோடு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக லோகோ பைலட்டின் (ஓட்டுநர்) சமயோசித செயற்பாட்டால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிதான் ஒன்றிய அமைச்சகத்துக்கு தென்மேற்கு ரயில்வே தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்று கவனத்திற்கு வந்தும் மோடி அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட விபத்து தடுப்புக்கான நிதி ரூபாய் 943 கோடியில் ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் செலவினக் கணக்கு புத்தகங்களில் உள்ள தரவுகளின் மூலம்தான் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில் விபத்து நடந்த ரயில் நிலையமும் தென்கிழக்கு ரயில்வேயின் கீழ்தான் இயங்கி வருகிறது.

2017-ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பாபு, வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஆண்டுதோறும் 4,500 கி.மீ தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும், அதில் ஏறக்குறைய 2,500 கி.மீ தண்டவாளம் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட “டாக்ஸ் போர்ஸ்” என்ற அதிகாரிகள் குழு, ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் சிக்னல் கட்டமைப்பு பழுதடைவதாகவும், அவற்றுள் 100 மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இவையனைத்துக்கும் நிதிப்பற்றாக்குறையே காரணமாகச் சொல்லப்பட்டது.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை


கடந்த ஆண்டு ஒன்றிய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கை, ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பாக செலவழிக்கப்பட வேண்டியவற்றுக்கு உரியவகையில் செலவழிக்கப்படவில்லை என்றும், பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதையும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

மொத்தம் 68,043 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிகப்பெரியதான நம் நாட்டின் ரயில்வே துறையை, தனிக்கவனம் செலுத்தி பராமரிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டுவந்த ரயில்வே தனி பட்ஜெட்டை 2017-ஆம் ஆண்டே சதித்தனமாக முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பொருட்டு, ரயில் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டில் 2022-23 ஆண்டு 14 சதவிகிதத்தை குறைத்துவிட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம்சாட்டுகிறார் முன்னாள் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையாளர் ஸ்ரீதர் வி. மேலும் இதுபோல மோடி ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக குறைத்துவருவதையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். பாலாசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் ரத்தம் நிதியமைச்சரின் கைகளில் வழிவதாகவும் அவர் மிகக் கடுமையாக சாடுகிறார்.

இவ்வாறு நிதிஒதுக்கீட்டை குறைத்து ரயில்வே துறையை சீரழிப்பதற்காகத்தான் 2017-ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கான தனிபட்ஜெட்டை முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.

ரயில் மோதலை உணர்திறன் (சென்சார்) அடிப்படையில் கண்டறிந்து தடுக்கக் கூடிய கவச் என்ற கருவி பொருத்தப்படாததும் ஒடிசா ரயில்விபத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கருவி மொத்த ரயில்வழித்தடங்களில் வெறும் 2 சதவிகித வழித்தடங்களிலேயே பொருத்தப்பட்டுள்ளது. கவச் என்ற இக்கருவி, “நேருக்கு நேராக மோதக்கூடிய ரயிலை மட்டும்தான் தடுக்கும், பாலாசோர் ரயில்விபத்து தடம்மாறும்போது ஏற்பட்டது” என்று நியாயவாதம் பேசுகிறது மோடி அரசு. இத்தகைய சொத்தை வாதங்களின் மூலம் தனியார்மயமாக்க நடவடிக்கைகள்தான் ஒடிசா ரயில்விபத்துக்கு காரணம் என்பதை மூடிமறைக்கிறது.

கார்ப்பரேட்மயமாகும் ரயில்வே துறை!

ரயில் நிலையங்கள், ரயில்வே வழித்தடங்கள், ரயில் என்ஜின் – ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்டு ரயில்வே துறையின் பல்வேறு அங்கங்களும் இன்று படிப்படியாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

அதிக வருவாய் ஈட்டித் தரும் வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியார்களுக்கு “பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இத்திட்டத்தின் கீழ் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு நான்கு வழித்தடங்களில் ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 150 சுற்றுலா ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா.

மோடி அரசு மிகவும் படோடோபமாக அறிவித்து செயல்படுத்திவரும் திட்டம் வந்தே பாரத். அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு. இது மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டமாகும்.

வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள், என்ஜின்கள், சீட்டுகள் முதலியவற்றை தயாரிப்பதற்கு பல பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது மோடி அரசு; இந்த தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிறுவனமான ஐ.சி.எஃப்-வின் கட்டமைப்புகளையும் நமது ரயில்வே தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுதான் அதை உற்பத்தி செய்கிறார்கள். “நீ அரசி கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன், இருவரும் ஊதிஊதிச் சாப்பிடலாம்” என்ற கதையாக “தனியார்-அரசு கூட்டுத்திட்டம்” என்ற பெயரில் மிக அயோக்கியத்தனமான கார்ப்பரேட் கொள்ளை திட்டத்தை அமல்படுத்திவருகிறது மோடி அரசு.


படிக்க: ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்


தற்போது மோடியின் நண்பரான அதானி குழுமமும் ரயில்வே துறையில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துவரும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட “டிரெயின்மேன்” (Trainman) என்ற இணையதளத்திலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்த இணையதளத்தை “ஸ்டார்க் எண்டர்பிரைசஸ்” எனும் நிறுவனம் நடத்தி வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் அதானி குழுமம் வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், “ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அரசு வந்த பிறகுதான் ரயில்வே துறையை மேம்படுத்திவருவதாக பல்வேறு கவர்ச்சிகரமான தரவுகளை அடுக்கியிருந்தார். 2014ஆம் ஆண்டுவரை ரயில்வே துறையின் முதலீடு என்பது 45 ஆயிரம் கோடிகளாகத்தான் இருந்தது என்றும், தற்போது அது 2.45 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் பெருமை பொங்கியிருந்தார்.

அது உண்மைதான். ஆனால், இந்த நிதி ரயில்வே துறையின் கட்டமைப்புகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் செலவு செய்வதற்கான நிதி அல்ல. வந்தே பாரத், கவுரவ் பாரத் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், நாட்டு மக்களின் வரிப்பணத்தாலும் கட்டி வளர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை விலைகொடுத்து வாங்குவதற்கு எந்த கார்ப்பரேட்டுகளிடமும் நிதி இல்லை. மேலும், அடிக்கட்டுமானச் செலவினங்களை அரசிடம் தள்ளிவிட்டு, லாபத்தை மட்டும் கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கிறார்கள். அரசே பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலைபார்க்கும் இந்த கொள்கைக்குப் பெயர்தான் மறுகாலனியாக்கம். இக்கொள்கை ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்தப்போகும் பேரழிவின் ஒரு சாட்சியம்தான் ஒடிசா ரயில்விபத்து!


அமீர்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்

பற்றி எரியும் மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | சென்னையில் தெருமுனைப் பிரச்சாரம்

“பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற தலைப்பில்
மக்கள் அதிகாரம் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள்
சென்னை சைதாப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்.

புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!

0

மும்பையில் அமைந்துள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் (International Institute for Population Sciences – IIPS) இயக்குநரான பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்களை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ், 2018-ஆம் ஆண்டில் ஐ.ஐ.பி.எஸ் (IIPS) நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஐ.பி.எஸ் இந்திய அரசாங்கத்தின் சார்பாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey – NFHS) மற்றும் இதுபோன்ற பிற முக்கியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். ஐ.ஐ.பி.எஸ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

முன்னதாக, ஐ.ஐ.பி.எஸ் நடத்திய சில கணக்கெடுப்புகளின் தரவுத் தொகுப்புகள் மத்திய அரசாங்கத்திற்கு திருப்தியளிக்காததால் ஜேம்ஸை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அரசாங்கம் கூறும் காரணத்தை ஏற்றுப் பதவி விலக அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அரசாங்கத்திற்குத் திருப்தியளிக்கவில்லை’ என்பதன் பொருள் என்ன? பாசிச மோடி அரசாங்கத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட ஜேம்ஸ் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் அதன் பொருள்.

இதனையடுத்து, ஜூலை 28-ஆம் தேதியன்று ஜேம்ஸுக்கு இடைநீக்கக் கடிதம் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து, அதாவது ஜூலை 29 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் இடைநீக்கம் குறித்து ஒரு சிறு குறிப்பை (Brief Note on Suspension of Prof James, Director and Senior Professor, IIPS) வெளியிட்டது. அதில் தேதி கையொப்பம் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட் (letterhead) என எதுவுமே இல்லை. அதில் ”(ஜேம்ஸுக்கு எதிராக) உண்மை கண்டறியும் குழு சில முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. எனவே, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மே 8 அன்று உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டதாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 புகார்களில் 11 புகார்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசின் உண்மை கண்டறியும் குழு கூறுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், புகார்கள் எப்போது பெறப்பட்டன என்பது குறித்தோ புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது குறித்தோ அது தெளிவுபடுத்தவில்லை.

மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

அதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ”திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத நாடாக இந்தியா இருக்கிறது” என்பது பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வினர் பலரால் அடிக்கடி முன்வைக்கப்படும் கூற்று. ஆனால், 19 சதவிகித வீடுகளில் எவ்வித கழிப்பறை வசதியும் இல்லை; அதாவது அவர்கள் திறந்தவெளியில் தான் மலம் கழிக்கிறார்கள் என்று என்.எஃப்.எச்.எஸ் -5 கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. லட்சத்தீவுகளைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ கழிப்பறையைப் பயன்படுத்தும் மக்கள் 100 சதவிகிதம் இல்லை என்பதை அது வெளிப்படுத்தியது.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


அதேபோல், 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்பதை என்.எஃப்.எச்.எஸ் -5  சுட்டிக்காட்டியது. இது ”உஜ்வாலா யோஜனா பெரும் வெற்றி” என்ற மோடி – அமித்ஷா கும்பலின் கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்கியது. கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 57 சதவிகிதம் பேருக்கு, எல்.பி.ஜி (LPG) / இயற்கை எரிவாயு கிடைப்பதில்லை என்பதை இது வெளிப்படுத்தியது.

மேலும், இந்தியாவில் இரத்த சோகை அதிகரித்து வருவதாக என்.எஃப்.எச்.எஸ் -5 தெரிவித்தது. சத்தான உணவு உண்ணும் நிலையில் மக்கள் இல்லை என்பது இதன் பொருள். தனது பெயருக்குக் கலக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மோடி அரசாங்கம் என்.எஃப்.எச்.எஸ் -6 இல் இரத்த சோகையை அளவிடுவதையே கைவிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஷமிகா ரவி (Shamika Ravi), இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ”என்.எஃப்.எச்.எஸ் மற்றும் பிற கணக்கெடுப்புகளுக்கான தரவுகளைச் சேகரிப்பதில் குறைபாடுகள் உள்ளது” என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அமிதாப் குண்டு (Amitabh Kundu) மற்றும் பி.சி.மோகனன் (P.C. Mohanan) ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸின் மற்றொரு கட்டுரையில் ஷமிகாவின் கட்டுரையை விமர்சித்திருந்தனர்.

தரவுகள் என்றாலே மோடி கும்பலுக்கு எப்போதும் ஒவ்வாமை தான்.

மோடி அரசாங்கம் தனது முதல் பதவிக்காலத்தில் நடத்திய நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை (Consumer Expenditure Survey – CES) குப்பையில் போட்டுவிட்டது. சி.இ.எஸ் (CES) என்பது அரசாங்கத்தின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தால் (என்.எஸ்.எஸ்.ஓ) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு ஆகும். அதில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவு முறைகள் (consumption spending patterns) குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். ஆனால், மோடி அரசாங்கமோ தரவுகள் தரமானவையாக இல்லை என்று கூறி அதை வெளியிட மறுத்துவிட்டது.

அதேபோல், 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வேலையின்மை குறித்த தரவுகளை வெளியிட மறுத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அதை வெளியிட்டது. இதனால் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission) செயல் தலைவர் (acting chairman) பி.சி.மோகனன் உள்ளிட்ட தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.


படிக்க: பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !


”(தேசிய புள்ளியியல்) ஆணையத்தை அரசாங்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆணையத்தின் சில முடிவுகளும் பரிசீலிக்கப்படவில்லை. நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்று நினைக்கிறோம். எனவே, எங்கள் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை (ஜனவரி 28, 2019) அனுப்பியுள்ளோம்” என்று பி.சி.மோகனன் அப்போது கூறியிருந்தார்.

2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையும் இந்த அரசாங்கம் இன்னும் மேற்கொள்ளவில்லை. வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த 150 ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் வழக்கமாக மக்களிடையே நிலவும் அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைமதிப்பீடு செய்துதான் காட்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், பாசிச மோடியால் அதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது ’வளர்ச்சி நாயகன்’ பிம்பம் உடைபடுவதற்குப் புள்ளிவிவரங்கள் காரணமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

இதன் வெளிப்பாடாகத்தான் பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நாம் பார்க்க வேண்டும்.


பொம்மி

கழன்றது முகமூடி | பகுதி 1

கழன்றது முகமூடி:
பாசிசக் கும்பலின் தோல்வி முகமும்
பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!

(பகுதி 1)

பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் ஒரே இலக்கு” என்று ஒருமித்த குரலில், கூட்டாக அறிவித்துள்ளார்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள். காங்கிரஸோடு இணைந்து ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பங்கேற்ற இக்கூட்டம் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் “இதுவெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை” என்று கிண்டலடித்துள்ளார் அமித்ஷா. “மோடியை காங்கிரஸ் தனித்து நின்று வீழ்த்த முடியாது என்பதற்கான நிரூபணம்தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக் கூட்டம்”, “பா.ஜ.க.வின் வெற்றியைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று பா.ஜ.க. தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.

பாட்னாவின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கூறினாலும், அதில் பங்கேற்ற 16 எதிர்க்கட்சிகளிடையேயும் ஒரு முடிவான கூட்டணி ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று நாம் சொல்லிவிட முடியாது. பா.ஜ.க.வை தோற்கடிப்பதுதான் தங்கள் ஒரே இலக்கு என்று கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு “நிபந்தனை” உள்ளது. இந்த நிபந்தனையை ஒருவருக்கொருவர் பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் பாட்னா கூட்டம் அமையவில்லை. ஆகவே ஜுலை 12, 13 வாக்கில் சிம்லாவில் மல்லிகார்ஜூன் கார்க்கே தலைமையில் மற்றொரு கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை, மாநிலங்களவையில் தோற்கடிப்பதற்கு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை. இக்கூட்டத்துக்கு முன்பே அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியிருந்தர். குறிப்பாக, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’வைப் படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுடன் ஒத்துப்போகும் கெஜ்ரிவாலே, இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கோரப் போவதாக தெரிவித்திருந்தார்.

பாட்னா கூட்டத்தில் டெல்லி விவகாரத்தை நிகழ்ச்சிநிரலாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்த கெஜ்ரிவால், கூட்டத்திற்குள்ளும் இதை விவாதத்திற்கு கொண்டுவந்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை பகிரங்கமாக நிராகரித்துள்ளார். “காஷ்மீரின் சிறப்புச் சட்டம் 370” ரத்துசெய்யப்பட்டபோது, கெஜ்ரிவால் அதற்கு ஆதரவான நிலை எடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார். டெல்லி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி உத்தவ் தாக்கரே காங்கிரசிடம் பரிந்துபேசியும், காங்கிரஸ் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதுகுறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்றால், சிம்லாவில் நடைபெறும் அடுத்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா, கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்கக் காங்கிரஸின் போக்கு பற்றி குற்றஞ்சாட்டினார். “எல்லோரும் ‘பெரிய மனது’டன் நடந்துகொள்ள வேண்டும். நமக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொண்டால், அது பா.ஜ.க.விற்குத்தான் சாதகம்” என்று பேசினார். கேலிக்கூத்தாக, இந்த கூட்டத்தில் மம்தா ‘பெரிய மனது’ பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதுதான், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமுல் அரசை “திருடர்கள்” என்று அழைத்துள்ளார்.


படிக்க: தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!


ஏற்கெனவே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்க வேண்டுமென்றால், காங்கிரஸும் மேற்கு வங்கம் உள்ளிட்டு மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களை ‘பெரிய மனது’டன் விட்டுத்தர வேண்டும் என்று மம்தா கேட்டிருந்தார். மம்தா தெரிவித்த நிபந்தனை மீதும் காங்கிரஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதுபோக, கேரளாவில் காங்கிரஸ், சி.பி.எம் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது.

எனினும், இந்த முரண்பாடுகள் எல்லாம் இருப்பினும்கூட எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு தற்காலிகமான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதும், தேர்தலில் பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்பதும் சாத்தியமே.

ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருப்பது, இக்கட்சிகளின் முன்முயற்சி அல்ல பா.ஜ.க.வின் பாசிச ஒடுக்குமுறைகள்!

000

சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இன்று பா.ஜ.க. கும்பலால் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடத்தாத கட்சி என்று எதிர்க்கட்சிகளில் எவையும் இல்லை. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்திருக்கும் நிகழ்வு என்பது பாசிசக் கும்பலால் தி.மு.க.விற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டலே!

மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே பிரிவை அங்கீகரித்தது, ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கை போன்றவை எதிர்க்கட்சிகள் அனைவருக்குமே ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. “ஒருவேளை 2024 தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப் படாவிட்டால், இனி தேர்தலே நடக்காது” என்பதை பேசாதவர்கள் யாரும் இல்லை. “பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது” என்று மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவாவது எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்தாக வேண்டிய தேவை இருக்கிறது!

வெளியே வீராப்பு, உள்ளே பயபீதி!

என்னதான் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்று பா.ஜ.க. பகடி செய்துகொண்டிருந்தாலும், தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதானது பா.ஜ.க.விற்கு கிலியை ஏற்படுத்தாமல் இல்லை. எப்படியாவது, அதைச் சிதைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

பிகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆளும் மகாபந்தன் கூட்டணிக்கு அளித்த ஆதரவை தாம் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி. நிதிஷ்குமார் தன்னுடைய கட்சியை அவருடைய கட்சியோடு இணைப்பதற்கு கொடுத்த நிர்பந்தத்தால் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். தற்போது அவர் பா.ஜ.க. கூட்டணியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

“கூட்டணியில் இருந்துகொண்டே பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை ஜிதன்ராம் மாஞ்சி உளவு பார்க்கிறார். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஜித்தன் ராம் கசியவிடுவார் என்பதாலேயே அவருடைய கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்கச் சொன்னேன்” என்று நிதிஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பிய சங்கிக் கூட்டம், மு.க.ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றபோது தி.மு.க. தலைவர்கள் பேசிய இந்தி எதிர்ப்புப் பேச்சுக்களை, இந்தி துணைத் தலைப்புகளுடன் காணொளியாகத் தாயரித்து வெளியிட்டிருந்தது.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


அதில் “இந்தி படித்தால் வேலை கிடைக்குமா”, “இங்கே பானிப்பூரி விற்பவர்கள் யார்”, “பீகாரிலிருந்து இங்கே வந்துள்ளார்கள்” போன்ற பேச்சுக்களை வெட்டியெடுத்துப் பரப்பியது. மேலும், பீகாரிலிருந்து “ஸ்டாலின் கோ பேக்” (ஸ்டாலினே திரும்பிப் போ) என்ற முழக்கத்தை டிவிட்டரில் தனது இணைய வானரப்படைகளை வைத்து டிரெண்டாக்கியது. இவற்றின் மூலம் “நிதிஷ்குமார் தலைமை வகிக்கின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், பீகார் மக்களுக்கு எதிரானது” என்ற கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது.

பாட்னா கூட்டம் வெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான் என்றால், அதை சீர்குலைப்பதற்கு பா.ஜ.க. ஏன் இந்த புழுக்கை வேலைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்! வெளியே வீராப்பு, உள்ளே பயபீதியா?

2014-இல் இருந்து 2024 நோக்கி: பல்லிளிக்கும் பலவீனங்கள்!

2014ஆம் ஆண்டு மோடி கும்பலுக்கு இருந்த மவுசு, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. 2014இல் மோடி அணிந்துவந்த ‘வளர்ச்சி’ என்ற முகமூடி இன்று கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத் தேர்தல் தோல்வி என்பது பாசிசக் கும்பலின் பலவீனங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, “வெல்லப்பட முடியாத தலைவர் மோடி” என்று பா.ஜ.க. கும்பல் கட்டிவைத்திருந்த பிம்பத்தை உடைத்துப் போட்டிருக்கிறது.

அண்மையில் தோனி அரசியலுக்கு வரவேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளி ஆனந்த மகேந்திரா தெரிவித்த கருத்தானது, பா.ஜ.க.வின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அல்லது மோடிக்கு மாற்றாக இன்னொரு முகமூடியை தயாரிப்பதற்கு பா.ஜ.க.வை ஆதரிக்கும் கார்ப்பரேட் கும்பலின் ஒரு பிரிவினரே விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

தமது ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவை பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் கொண்டாடிவரும் நிலையில், இந்த ஒன்பது ஆண்டுகளில் பாசிசக் கும்பல் எந்தெந்த வகையில் தனது பலவீனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பட்டியலிட வேண்டியிருக்கிறது.

  1. பா.ஜ.க.வின் கதாநயகனான மோடியே கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரம் செய்தும், பா.ஜ.க. படுதோல்வியடைந்திருப்பது மோடி பிராண்டின் வரம்பை தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது. மாநில கட்சித் தலைவர்களை துச்சமாகக் கருதுவிட்டு, எல்லா மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மோடி பிராண்டை முன்னிறுத்தியே வெற்றிபெற்று விடமுடியும் என்ற பா.ஜ.க.வின் கருத்து நகைக்கத்தக்கது என்று முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே காரிஉமிழ்கிறார்கள். “இரட்டை என்ஜின் ஆட்சி” என்ற முழக்கம் எடுபடக்கூடிய முழக்கமல்ல என்பதற்கான நிரூபணமே கர்நாடகத் தேர்தல் தோல்வி.
  2. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அதிகரித்துவரும் வேலையின்மை, சிறுதொழில் நசிவு, கிராமப்புற வறுமை அதிகரிப்பு என மக்களுடைய எந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்க்க வக்கற்றுப் போன நிலையில், ‘தேச வளர்ச்சி’ பற்றி வாய்ச்சவடாலடிப்பது சிரமமாகியுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அதானியின் உலக மகா பங்குச் சந்தை மோசடி அம்பலமான பிறகு, மோடி கும்பல் முன்வைக்கும் ‘வளர்ச்சி’ யாருக்கானது என்பது பரந்துபட்ட மக்களிடையே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
  3. எதிர்க்கட்சிகளை விமர்சிக்குமளவுக்கு பா.ஜ.க. யோக்கியமான கட்சியல்ல, அது பல விசயங்களில் இரட்டை நிலைப்பாடுகள் கொண்ட கட்சி என்பது மக்கள் முன்பு அம்பலப்பட்டுவருகிறது. “ஊழல் ஒழிப்பு”, “இலவச ஒழிப்பு” போன்ற விசயங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதும், ஆனால் தனது கட்சியே ஊழல் கட்சியாகவும், தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகளை வாரிவழங்கும் கட்சியாகவும் உள்ளதை மக்கள் பார்த்துவருகிறார்கள்.
  4. “வளர்ச்சி” என்ற முகமூடி கிழிந்துதொங்கும் நிலையில், இந்துமதவெறி – தேசவெறியை தீவிரமாக கொண்டுசெல்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டிருக்கிறது. இது 2014க்கும் 2024க்கும் இடையிலான தலைகீழ் மாற்றமாகும். இந்துமதவெறியை நேரடியாகப் பேசாமல் தன்னை வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே காட்டிவந்த மோடி, “கர்நாடாவில் ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கியது தோல்வி முகத்தின் சாட்சியமாகும்.தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் இந்துத்துவ முகம் மட்டுமே உதவாது என்றபோதும், அதைவிட்டால் “வேறு வழியில்லை” என்ற நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டிருக்கிறது.
  1. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் குதிரைபேர ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகள் மூலம் பா.ஜ.க. தனது ஆட்சியை நிறுவியுள்ளது. ஆனால், இந்த குதிரைபேரம் பா.ஜ.க.விற்கு சாதகமான விளைவுகளை மட்டுமே கொண்டுவந்துவிடவில்லை. ஏற்கெனவே கட்சியமைப்பில் இருக்கும் பெருந்தலைகளுக்கு அதிகாரப்போட்டியில் உரிய ‘பங்கு’ வழங்கப்படாததால் கட்சிக்குள்ளேயே கோஷ்டி சண்டைகளை உக்கிரமாக்கியுள்ளது. இது தேர்தலிலும் தாக்கம் புரிகிறது.
  2. பல்வேறு மாநிலங்களிலும் தான் கூட்டணி வைக்கும் கட்சிகளையே மெல்லமெல்ல கரைத்துக்குடித்துவிடும் பா.ஜக.வின் தந்திரம், அக்கட்சிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. தன்னுடைய கட்சியை காப்பற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐ.ஜ.த. கட்சியின் நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு இது முக்கியக் காரணமாகும். சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் இந்த அபாயத்தை நன்கு உணர்ந்திருந்தார்.அ.தி.மு.க. போன்ற அடிமைக்கட்சிகள் இந்த அபாயத்தை உணர்ந்தாலும் ரெய்டு பயம் காரணமாக வேறுவழியில்லாமல் அடங்கிக் கிடக்கின்றன. வன்னிய இளைஞர்கள் பா.ஜ.க.விற்கு போகாமல் தடுக்க வேண்டுமென்று பா.ம.க.வின் ராமதாஸ் தனது கட்சி பொதுக்கூட்டத்திலேயே பேசினார்; இப்போதுவரை பா.ம.க. பா.ஜ.க.வுடன் ஒரு கறாரான இடைவெளியையே பாரமரிக்கிறது.

மேற்கண்ட ஆறு அம்சங்களுமே இந்துத்துவ பாசிசக் கும்பல் இந்த தேர்தல் வரம்புக்குள் எதிர்க்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் பலவீனங்களுமாகும்!

வலுக்கும் நாய்ச்சண்டை!

அடுத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்ற மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் நடத்திய குதிரை பேரத்தில், 2020ஆம் ஆண்டு 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு தாவின; அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இன்று அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு வினையாக வந்திருக்கிறது.

கடந்த மாதம் ஆறாம் தேதி இந்துத்துவ அமைப்புகளுள் ஒன்றான “பஜ்ரங் சேனா” அமைப்பின் தேசியத் தலைவர் ரன்வீர் படேரியா, ஒருங்கிணைப்பாளர் ரகுந்தன் சர்மா உள்ளிடோர் தங்களது பரிவாரங்களுடன் கூடிவந்து ம.பி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில் தங்களை காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். மேலும் பஜ்ரங் சேனா அமைப்பையே காங்கிரஸுடன் இணைத்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

உடனே பதறியடித்துக் கொண்டு, “ஒரு நான்குபேர்தான் தவறான வழிகாட்டுதலாலும் தூண்டுதலாலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்கள் என்றும், ஒட்டுமொத்த பஜ்ரங் சேனாவும் இணைந்துள்ளதாகக் கூறுவது பொய் என்றும் சில நிர்வாகிகளை வைத்து பேட்டிகொடுக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ்.

இச்சம்பவத்திற்கு ஒருமாதத்திற்கு முன்னர்தான் ம.பி. முன்னாள் பா.ஜ.க. முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, பா.ஜ.க.வில் தனக்கு ‘முக்கியத்துவம் தரவில்லை’ என்றுகூறி காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த தீபக் ஜோஷி தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாகத்தான் பஜ்ரங் சேனாவின் தலைவர்களைக் கொண்டுவந்து காங்கிரஸில் இணைத்துள்ளார்.

பஜ்ரங் சேனா அமைப்பானது மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பொந்தெல்கண்ட் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற அமைப்பாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆத்யநாத்துக்காகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகவும் இவ்வமைப்பு பிரச்சாரம் செய்தது.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


தீபக் ஜோஷியும், பஜ்ரங் சேனாவின் முக்கியத் தலைவர்களும் அவ்வமைப்பின் ஒரு கோஷ்டியும் காங்கிரஸுக்கு தாவியுள்ளது, பா.ஜ.க.வுக்கு பீதியை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மண் சவடி ஆகியோர் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் பா.ஜ.க. தேர்தலில் பலவீனப்படுத்தப்பட்டது போன்ற நிலை ம.பி.யிலும் உருவாகியிருக்கிறது.

கர்நாடக தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ராஜேந்தர் மற்றும் ராஜகோபால் ரெட்டி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கட்சிக்குள் கலகம் செய்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரஸில் இணைந்தால், “மிஷன் சவுத்” கனவில் உள்ள பா.ஜ.க.விற்கு இது மேலும் பேரிடியாக அமையும் என்பதால், உயர்மட்ட கட்சித்தலைவர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

ஓடிசா ரயில் விபத்து: இன்னொரு புல்வாமா எப்படி இருக்கும்?

நாட்டு மக்களை பதைபதைக்கவைத்த கோரச் சம்பவம் ஒடிசா ரயில் விபத்து. ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்காக திட்டமிட்டே பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புச் செலவினங்களை குறைத்துவந்த மோடி அரசே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளி. ஆனால், “துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள்” என தங்கள் மீதான விசாரணையை திசைதிருப்பியது பா.ஜ.க. அதேநேரத்தில், பிணங்களின் மீது தமது பாசிச சதிப் பிரச்சாரத்தை கட்டமைத்ததும் பா.ஜ.க.தான்.

“ஒடிசா ரயில் விபத்து சதிச்செயலாகக் கூட இருக்கலாம்; எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்” என்று அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒதுக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இணைய வானரப்படைகளும், ஒடிசா ரயில் விபத்து ‘இஸ்லாமிய பயங்கரவாதச் சதி’ என்பதாக பொய்ப் பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த வெள்ளைக் கட்டிடத்தை (ஜெயின் கோயில்) மசூதி என்றும்; விபத்து நடந்த பாலாசோர் பகுதி சட்டவிரோதமாகக் குடியேறிய ரோங்கியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்றும் கூறி, நடைபெற்றுள்ள விபத்து “ரயில் ஜிகாத்” என்று ஒரு நயவஞ்சக பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது சங்கிக் கும்பல். இது வடிகட்டிய பொய் – இழிவான வெறுப்புப் பிரச்சாரம் என்பதை “ஆல்ட் நியூஸ்” போன்ற உண்மை கண்டறியும் செய்தி நிறுவனங்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

2016-ஆம் ஆண்டு கான்பூர் ரயில் விபத்தில் 150 பேர் பலியாகினர். அவ்விபத்திற்கு காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் சதி என்று பிரச்சாரம் செய்தார்கள் சங்கிகள். 2017ஆம் உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி கான்பூர் ரயில் விபத்தை “எல்லை தாண்டிய பயங்கரவாத சதி” என்று வருணித்தார்; “தேசத்தைக் காப்பதற்கு யோகிக்கு வாக்களியுங்கள்” என்றார். இது தொடர்பான வழக்கை பா.ஜ.க.வின் ஏவல் அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்தபோதும், ‘சதி’ என்று போலியாக ஜோடிப்பதற்குக்கூட எந்த துப்பும் கிடைக்கவில்லை.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இதுதொடர்பான விவரங்களை நினைவூட்டி பா.ஜ.க. கும்பலின் கேவலத்தை அம்பலப்படுத்தினர்.

000

பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு பிண அரசியல் புதிதல்ல. இதுபோலத்தான் 2019 தேர்தல் பிரச்சாரத்திலும் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து ஓட்டுப் பொறுக்கியது. அன்று காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்திய பால் மாலிக், உளவுத்துறை ராணுவ வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் 44 வீரர்கள் பலியானதற்கு காரணம் என்பதையும், இதை மோடியிடம் கூறியபோது அவர் இதை வெளியே தெரியாமல் மறைக்கச் சொன்னார் என்ற விவரத்தையும் பொதுவெளியில் போட்டுடைத்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்தனங்கள் அம்பலப்பட்டுபோனதால், ஒடிசா ரயில் விபத்தில் அக்கும்பலால் அரசியல் ஆதாயம் தேடமுடியவில்லை. மாறாக இவை அனைத்துக்கும் மோடி கும்பல்தான் முதன்மையான குற்றவாளி என்பது அம்பலப்பட்டு நாறுகிறது.

2024 தேர்தலை முன்னிட்டு இனி ஒரு புல்வாமா கதையை மோடி கும்பல் தயாரித்தால், அதை நம்புவதற்கு நாடு தயாராக இல்லை!

மணிப்பூர்: தான் பற்றவைத்த தீ, தன்னையே சூழ்ந்தது!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கட்டுக்கடங்காத வன்முறையால் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மணிப்பூரை மாற்றும் நோக்கில், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு குக்கி பழங்குடிகளுக்கு எதிராக இனக் கலவரத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல். அக்கும்பல் பற்ற வைத்த நெருப்பு இன்று அவர்களையே சூழ்ந்துகொண்டுள்ளது. பாசிஸ்டுகளின் கலவர அரசியல் எல்லா நேரத்திலும் அவர்களது நோக்கப்படி அமைந்துவிடுவதில்லை, அவர்களுக்கு எதிராகவும் திரும்பும் என்பதற்கு மணிப்பூர் சான்றாக இருக்கிறது.

எந்த மேய்தி இந்து மக்களை தனது அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்கு பாசிசக் கும்பல் வேலைசெய்ததோ, அந்த மேய்தி மக்களே இன்று மோடி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

40 நாட்களுக்கு மேல் ஒரு மாநிலமே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, நாட்டின் பிரதமரான மோடி வாய்திறந்து பேசவில்லை. அகில இந்திய வானொலியில் மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சியிலும் (18-06-2023) மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பேசுவதற்கு தவிர்த்தார் மோடி. இதைக் கண்டித்து மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக ரேடியோ பெட்டிகளைப் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர் மணிப்பூர் மக்கள். பாசிசக் கும்பலுக்கு உரைக்கும்படிச் சொல்ல வேண்டுமென்றால் “மேய்தி இந்துக்கள்”. மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருப்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக, மணிப்பூர் பெண்களால் தீ பந்தங்கள் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


போராட்டங்கள் தங்களுக்கு எதிராக திருப்பியதை உணர்ந்த சில நாட்களிலேயே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “வேதனையளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” தெரிவித்திருந்தது.

மணிப்பூரின் அமைதி குறித்து ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்பட்ட ‘திடீர் கவலை’யோடு ஒப்பிடத்தக்க சம்பவம், இதற்கு முன்பும் நடந்திருக்கிறது!

000

மோடியின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான “டெல்லிச் சலோ விவசாயிகள் போராட்டம்” அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்று முன்னேறியபோது, கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசு அதை அடக்குமுறைகளைகளின் மூலம் ஒடுக்கிவிட முனைந்தது. மற்றொருபக்கம் “காங்கிரஸால் தூண்டிவிடப்பட்ட போராட்டம்” என்றும், “காலிஸ்தான்கள் பின்னணி” என்றும் அவதூறு கிளப்பியது. டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியது போல கருத்தியல் ஆதரவை முடக்குவதற்காக, போராட்ட ஆதரவு டுவீட்களையும் நீக்கியது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி போராட்டம் மென்மேலும் வலுத்தது.

போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தாண்டி, மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் காவிக் கும்பலால் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் பல பொதுக் கோரிக்கைகளுக்காகவும் குரல்கொடுக்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழலில்தான், “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக்கட்டுரை 20.11.2021)

தாங்கள் பற்றவைத்த கொல்லி தங்களது தலைக்கே வந்துள்ளதை உணர்ந்து பாசிசக் கும்பல் சுதாரித்துக் கொள்வதன் அறிகுறிதான் இதுபோன்ற ‘கவலை’ தெரிவிக்கும் அறிக்கைகள். இந்த அறிக்கையைத் தொடர்ந்துதான் மணிப்பூரில் அமைதியை கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது ஒன்றிய அரசு. “மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் நாட்டின் பிரதமர் இல்லை!” என்று இதையும் எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தின.

தீவிரப்படுத்தப்படும் தேசப்பெருமிதப் பிரச்சாரங்கள், இந்துமதவெறி!

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை. தோல்வியின் அறிகுறிகள் கண்களில் புலப்படும் இத்தருணமானது பாசிசக் கும்பலுக்கு வெறியைக் கிளப்பியுள்ளது. எப்பேர்ப்பட்ட சதித்தனங்களை மேற்கொண்டும், பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என நினைக்கிறது!

ஜி20ல் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதன் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், அது மோடியின் அரசின் பராக்கிரமத்துக்கு வழங்கப்பட்ட பரிசு என்பதாகப் பிரச்சாரம் செய்தது. ஜி20 மாநாடு மட்டுமல்ல, மோடியின் அண்மைய அமெரிக்கப் பயணம் மோடியால் இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரமாக ஊடகங்களால் பிரச்சாரம் செய்ப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் மோடி நடத்திவரும் பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அமெரிக்காவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் நடத்திய போராட்டமானது, மோடி கும்பல் உருவாக்க முனைந்த தேசப்பெருமித பலூனில் குண்டூசியை இறக்கியுள்ளது.


படிக்க: கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!


அடுத்த ஜனவரி 14 அன்று அயோத்தி ராமர் கோயில் திறப்பை வெகுவிமரிசையாக நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. 2024 தேர்தலில் ராமனை ஒரு பிராண்டாக முன்னிறுத்த முயற்சித்துவருகிறது பாசிசக் கும்பல். இதையொட்டி, ஓம் ராவத் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆதிபுருஷ் என்ற ராமயணப் படம் வெளிவந்தது. ஆதிபுருஷ் ஓடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனுமனுக்கு ஒரு சீட்டை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஓம் ராவத். பா.ஜ.க. தலைவர்கள் இத்திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தார்கள்.

ஆனால், திரைப்படத்தில் அனுமனும் ராவணனும் தாடிவைத்திருக்கும் தோற்றம் முஸ்லிம்களை ஒத்திருக்கிறது; சீதாவாக வருபவர் முழு கையும் தெரியும்படி (Sleeveless) உடுப்பு உடுத்தியிருக்கிறார் மற்றும் படத்தின் சில வசனங்கள்-காட்சிகள் ஆகியவற்றை முன்வைத்து ஆதிபுருஷ் “இந்துக்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சதி” என்று இந்து அமைப்புகளே போர்கொடி தூக்கியுள்ளன. தன் வினைத் தன்னைச் சுடும் என்பதுபோல, சங்கிக் கும்பல் விதைத்துள்ள இஸ்லாமிய வெறுப்புக் கலாச்சாரம் அவர்களையே தாக்கியுள்ளது.

000

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், அவற்றில் வெற்றிபெறுவதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியை கிளறிவருகிறது பாசிசக் கும்பல்.

“லவ் ஜிகாத்”, “நில ஜிகாத்”, “ரயில் கவிழ்ப்பு ஜிகாத்”, “வியாபார ஜிகாத்” என பலப்பல வடிவங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதை பரப்புரையாக மேற்கொள்வதன் ஒரு அங்கம்தான் “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம். தென்னிந்தியாவில் அது மண்ணைக் கவ்வினாலும், வடமாநிலங்களில் இது காவிக்கும்பலுக்கு நல்ல பிரச்சாரமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஷ்ரதா என்ற இளம்பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த அப்தாப் என்பவனால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட் நிகழ்வு பாசிசக் கும்பலுக்கு மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக மாறியது.

கொலைசெய்த மிருகம் மதத்தால் ஒரு முஸ்லிம். இதைவைத்துக் கொண்டு நாடுமுழுக்க லவ் ஜிகாத் பிரச்சாரத்தை தீவிரப்படுதியது காவிக் கும்பல். கொலையுண்ட ஷ்ரதா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தில் இன்றுவரை அதைவைத்து இஸ்லாமிய எதிர்ப்பை தூண்டிவருகின்றன இந்துவெறி அமைப்புகள். 2022 நவம்பர் தொடங்கி இந்த ஆண்டு மே மாதம்வரை, மகாராஷ்டிரத்தில் “சகல் ஹிந்து சமாஜ்” என்ற அமைப்பு மொத்தம் 56 ‘லவ்ஜிகாத் எதிர்ப்பு’ப் பேரணிகளை நடத்தியுள்ளது.

மே மாதம் 26ஆம் தேதி உத்தரகாண்டில் சிறுமி ஒருவரை கடத்த முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் முஸ்லிம். இதை சாக்காக்கிக் கொண்ட உத்தரகாண்டின் இந்துமதவெறி அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதோடு, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தாங்கள் குறித்த நாளுக்குள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்துள்ளர்கள். முஸ்லிம்களின் வீடுகளிலும், கடைகளிலும் இந்துமதவெறியர்கள் குறிச்சின்னங்களை இட்டுவைத்திருப்பதால் மிகப்பெரிய கலவரங்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது.

இதேபோன்று இஸ்லாமியர்கள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டுமென இமாச்சலப்பிரதேசத்திலும் இந்துமதவெறி அமைப்புகள் வெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் பல மாநிலங்களுக்கும் பரப்புவதே காவிக் கும்பலின் இலக்காக உள்ளது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


இந்துமதவெறியை தேர்தலில் அறுவடை செய்துகொள்வதற்கேற்ப பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் தயாரித்துவருகிறது பா.ஜ.க. இஸ்லாமியர்கள், கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டை இந்துக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாக காட்டிப் பிரச்சாரம் செய்வது, இந்துப் பண்டிகைகளை ஒட்டி ஒன்றிய அரசின் சலுகைகள் அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது போன்ற திட்டங்களை வைத்துள்ளது பாசிசக் கும்பல்.

பசுவளைய மாநிலங்களைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து எடுக்கப்படும் இதுபோன்ற இந்துத்துவப் பிரச்சாரங்கள் பிற மாநிலங்களில் எடுபடுவதில்லை என்பதை கர்நாடக தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது என்றாலும், இதற்கு எதிர்வினையாற்றாமல் போனால் பாசிசக் கும்பல் தனது நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி முகம் மென்மேலும் உறுதிப்படுத்தப்பட்டால், ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே நடைமுறைப்படுத்துவது குறித்தோ, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவந்து பசுவளைய மாநிலங்களின் தொகுதிகளை அதிகப்படுத்திக் கொள்ளும் சதித்திட்டத்திலோ பாசிசக் கும்பல் இறங்கலாம்.

நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது!

பாசிசமும் ஆளும்வர்க்கக் கட்சிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதமும்!

கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியும் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தேர்தல் வென்றவுடன் தாங்கள் அளித்த முதன்மை வாக்குறுதிகாளான 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 உதவித் தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு பத்து கிலோ இலவச அரிசி, படித்து வேலையில்லாத பட்டதாரி – பட்டயதாரிகளுக்கு உவித் தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதளித்துள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறப்போவதாகவும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர், சாவர்க்கர் தொடர்பான பாடப்பகுதிகளை நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது காங்கிரஸ். விவசாயிகளுக்கு எதிரான ஏ.பி.எம்.சி சட்டம், நிலச் சீர்த்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்துக்களுக்கான கோரிக்கையையும் மதிப்பாய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளர் முதல்வர் சித்தராமையா. சமூக வலைதளங்களில் பரப்பபடும் வெறுப்புப் பேச்சுக்களை காண்காணித்து ஒடுக்குவதற்காக சைபர் கிரைம் குழுக்களை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு எதிரான இச்சட்டரீதியான நடவடிக்கைகள் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது. இது ஒரு முன்மாதியாக பார்க்கப்படுகிறது. இவை நாம் வரவேறக்கக்கூடிய விசயமே என்றாலும், இதே போன்றதொரு நிலையை அடுத்து தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கிற மத்தியப் பிரதேச காங்கிரஸாரிடம் பார்க்க முடியவில்லை.

000

மத்தியப் பிரதேச தேர்தல் களம் கர்நாடகத் தேர்தல் போல அல்லாமல், 2021 உத்தரப்பிரதேச தேர்தல் களம் போல உள்ளது. மென்மையான இந்துத்துவத்தை மூர்க்கமாக முன்னிறுத்துகிறார்கள் ம.பி காங்கிரஸார். இதற்கு தலைமை வகிப்பவர் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வதேரா. நர்மதா நதிக்கரையில் ஆரத்தி காட்டி பூசை செய்வது, கோயில்கோயிலாகச் சுற்றுவது, அனுமன் சாலிசா மந்திரம் ஓதுவது என தேர்தல் பிரச்சாரம் களைகட்டுகிறது.

காங்கிரஸ்காரரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான சுனில் குமார் மத்தியப் பிரதேச பிரதேசத்துக்கு வகுத்துக்கொடுத்துள்ள திட்டம் “இந்து வாக்குவங்கியைக் கவருவது”! ஏனெனில் மத்தியப் பிரதேசம் இந்துத்துவத்தின் கோட்டையான பசுவளைய மாநிலங்களுள் ஒன்று, அங்கே இந்துத்துவப் பிரச்சாரம்தான் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று கருதுகிறது காங்கிரஸ் கட்சி.

ஒருபக்கம் ராகுல், “நடைபெற்றுக் கொண்டிருப்பது இருவேறு சித்தாந்தங்களுக்கான போர்” என முழங்குகிறார். களநிலவரமோ மத்தியப் பிரதேசம் போலத்தான் இருக்கிறது. ஏனெனில் சித்தாந்தப் போராட்டத்திற்காக தேர்தல் வெற்றியை பலிகொடுப்பதற்கு காங்கிரஸ் தயாரில்லை!

தேர்தல் களமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் வலுவும்!

கர்நாடகத்திற்கும் மத்தியப்பிரதேசத்திற்குமான இந்த பாரிய வேறுபாட்டை எப்படிப் புரிந்துகொள்வது?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை காங்கிரஸ் மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

“பஜ்ரங்தளை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் தைரியமாக முழங்கமுடிந்தது என்றால், நமக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை களத்தில் எதிர்கொள்வதற்கு பாசிச எதிர்ப்பு சக்திகள் இருக்கிறார்கள் என்ற தைரியம் இருந்தது. அந்த தைரியத்தை ஏற்படுத்தியது கர்நாடக பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தங்களது சொந்த முன்முயற்சியில் நடத்திய “எழு கர்நாடகமே” என்ற இயக்கம்!

இப்பிரச்சார இயக்கம் பா.ஜ.க.வின் தோல்விக்கு மிகப்பெரிய உந்துவிசையாக இருந்தது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டு 112 சமூக அமைப்புகள் இணைந்து பணியாற்றிய இந்த இயக்கத்தில், 5 ஆயிரம் தன்னார்வலர்கள் களப்பணியாற்றியுள்ளனர். கருத்தரங்கங்கள், இணையவெளிப் பிரச்சாரங்கள் ஆகியவற்றோடு சுருங்காமல், இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டியும், ஏழை-உழைக்கும் மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் வீடுவீடாகச் சென்று இத்தன்னார்வலர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் இந்த களப்பணி மக்களிடையே உருவாக்கியுள்ள கருத்துக்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டிய நிலையில், காங்கிரஸ் உள்ளது. இதை 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சியமைத்த சூழலோடு ஒப்பிடலாம்!

“எழு கர்நாடகமே இயக்கம்” கிட்டத்தட்ட காங்கிரஸிடம் ஒரு “தார்மீக ரீதியான நிபந்தனை”யை முன்வைத்துள்ளது என்றே சொல்லலாம். தனது வெற்றிக்கு பங்காற்றிய பாசிச எதிர்ப்பு சக்திகளின் உணர்விற்கு எதிராகச் செயல்பட்டால் தானும் பா.ஜ.க.வைப் போல மக்களால் புறக்கணிப்படுவோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

இப்படியொரு சூழல் மத்தியப்பிரதேசத்தில் இல்லை!

காங்கிரஸின் மென்மையான இந்துத்துவப் போக்கு, தற்போது பஜ்ரங் சேனாவின் ஒரு பிரிவினர் காங்கிரஸில் இணைந்துள்ளது ஆகியவற்றைப் பார்க்கும்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால்கூட, பா.ஜ.க.வின் பாசிசத் திட்டங்களுக்கு எதிரான கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ம.பி. காங்கிரஸிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நம்மிடம் கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்த அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன…

பாசிச எதிர்ப்புக்கு தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்த முடியுமா?

இதன் பொருள் என்ன?

ஆளும் வர்க்கக் கட்சிகளை நிபந்தனையின்றி ஆதரிக்கும்போக்கு மட்டும்தான் பாசிசத்திற்கு எதிரான மூச்சுவிடும் அவகாசத்தைக் கொடுக்குமா?

(தொடரும்…)


பால்ராஜ்,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

1

ரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து தனது பாத யாத்திரையை நேற்று (ஜூலை 28) துவங்கினார். “என் மண் என் மக்கள்” என்று பெயரிடப்பட்ட இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கிவைத்தார். நேற்று (ஜூலை 28) தொடக்க விழா நடைபெற்றது. இன்று (ஜூலை 29) முதல் யாத்திரை துவங்கப்பட்டது. இதன் முதல் கட்டம் ஆகஸ்ட் 22 வரை நடக்கவுள்ளது. முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

இந்த யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் நடைபெறும் என்றும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும் மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையாகவும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் அண்ணாமலை செல்லப்போகிறாராம். ஜனவரி 11-ஆம் தேதிக்குள் யாத்திரை முடிக்கப்படும் என்றும் யாத்திரையின் நிறைவு நாள் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

’என் மண், என் மக்கள்’ நடைப்பயண தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா “தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த நடைப்பயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணம். இந்த யாத்திரை வெறும் அரசியல் காரணத்திற்கானது அல்ல; தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவே அண்ணாமலை யாத்திரை மேற்கொள்கிறார்” என்று கூறினார்.

ராமேஸ்வரம் கிளம்பும்முன் அமித்ஷா தமிழ்நாடு செல்ல உள்ளதாக தமிழில் டுவீட் வேறு பதிவிட்டுள்ளார். மோடி – அமித்ஷா காவிக் கும்பல் கொஞ்ச காலமாகவே தமிழ் மொழியைத் தூக்கிப்பிடிப்பதைப் போல் பாவனை செய்து வருகிறது. இது நமக்கான எச்சரிக்கை. மதவெறிப் பிரச்சாரம் எடுபடவில்லையெனில் காவிக் கும்பல் தமிழ் மொழியைக்கூட தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தும். ஏற்கனவே, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி அபகரிக்க முயன்று வருகிறது.


படிக்க: முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!


அண்ணாமலையின் இந்த யாத்திரை ஊடகங்களால் பூதாகரமாக்கிக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையென்னவெனில் யாத்திரை செல்லும் இந்த பா.ஜ.க-வின் திட்டம் ஆரம்பத்திலேயே அந்தர் பல்டி அடித்து மண்ணைக் கவ்வியது.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில் தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறித்துப் பேசியது அ.தி.மு.க-வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தார். எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்தான் அமித்ஷா கலந்துகொண்டு துவக்கி வைக்கும் நிகழ்விற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் கூட வரவில்லை. ஆனால், அமித்ஷாவோ ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைப்பயணம் செல்கிறார்” என்று பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் அமித்ஷாவே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க தன்னைக் கழற்றிவிட்டு விடுமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் அரசியல் வியூகங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது.


படிக்க: விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பா.ஜ.க தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிச் சேர்களே யாத்திரை தொடக்க விழாவை அலங்கரித்தன.

ஒருபுறம் பா.ஜ.க ”என் மண் என் மக்கள்” (#EnManEnMakkal) என்று சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்தால், மறுபுறம் அதற்கு எதிராக ”என் வீடியோ என் ஆடியோ” (#EnVideoEnAudio) என்று டிரண்ட் செய்யப்படுகிறது.

”நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க அரசுதான்” என்று அமித்ஷா பேசினால், அதற்கு எதிர்வினையாக ஆருத்ரா மோசடி குறித்தும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் அண்ணாமலை யாத்திரை செல்கிறாரா என்று கேட்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் எல்.முருகன் மேற்கொண்ட வேல் யாத்திரை தமிழ்நாட்டு மக்களால் மண்ணைக் கவ்வவைக்கப்பட்டது. ஆனால், இந்த ”என் மண் என் மக்கள்” என்னும் அண்ணாமலையின் யாத்திரை தொடங்கப்படும் போதே மண்ணைக் கவ்விவிட்டது. தமிழ்நாடு தொடர்ந்து காவிக் கும்பலுக்கு சம்மட்டியடி கொடுத்து வருகிறது.

ஆயினும், இந்த காவிக் கும்பலை நாம் குறைத்தும் எடைபோட்டு விடக்கூடாது. நாடு முழுவதும் ஊர்வலங்கள், யாத்திரைகள் மூலம் இக்கும்பல் பல கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டையும் மணிப்பூரைப் போல பற்றி எரிய வைக்க இவர்களை நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது.


பொம்மி

துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!

லகம் முழுவதும் பல நாடுகளில் பாசிசக் கட்சிகளும் பாசிஸ்டுகளும் ஆட்சி செய்து வரும் நிலையில், துருக்கியில் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளுக்கு சொந்த மாற்று ஜனநாயகத் திட்டத்தின் தேவையை உணர்த்துகிறது.

சென்ற மே 12, 18 தேதிகளில் இரண்டு சுற்றுகளில் நடைபெற்ற துருக்கி அதிபருக்கான தேர்தலில், இசுலாமியமதப் பிற்போக்குவாதி பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 52.18 சதவிகித வாக்குகளைப் பெற்றார். சென்ற அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வாக்கு விகிதத்திலிருந்து எந்த பெரிய வேறுபாடும் இல்லையெனினும், சென்ற முறை முதல் சுற்றிலேயே அறுதிப் பெரும்பான்மை பெற்று அதிபர் பதவியைக் கைப்பற்றிய எர்டோகன் இந்த முறை இரண்டாவது சுற்றில்தான் அறுதிப் பெரும்பான்மை பெறமுடிந்தது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுவாத மக்கள் கட்சி சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 17.2 சதவிகிதம் கூடுதலாகப் பெற்றபோதும், இதன் வேட்பாளர் கெமால் கிலிடாரோக்லு 47.82 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியுள்ளார்.

முதல் சுற்றில் எர்டோகன், கிலிடாரோக்லு, சினான் ஒகன், மொகர்ரம் இன்ஸ் ஆகிய நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்தனர். இவர்கள் முறையே, 49.52, 44.88, 5.17, 0.43 சதவிகித வாக்குகளைப் பெற்றனர்.

இரண்டாவது சுற்றில் வாக்காளர்கள் 3 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிநாட்டில் வாழும் துருக்கியர்கள் அதிக அளவில் வாக்களித்ததால் எர்டோகன் அருதிப் பெரும்பான்மை பெற்றார்.

துருக்கியின் தேர்தல் களம்

2020-இல் ஏற்பட்ட கொரானா பெருந்தொற்றை சரியாக கையாளாததால் 3 லட்சம் மக்கள் இறந்தனர். 2022-இல் இருந்து மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி, விலையேற்றத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் முக்கியமாக, இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரம் பேர் இறந்தனர். இது உண்மையில் ஒருலட்சத்து 50 ஆயிரம் பேராக இருக்கும் என்று அஞ்சப்பட்டது. குறிப்பாக, கார்ப்பரேட் வர்க்கங்களுக்கேற்ப கட்டுமனங்களில் செய்த முறைகேட்டினால்தான் இவ்வளவு மக்கள் இறப்பதற்கு காரணமானது என்பதால் ஆளும் எர்டோகன் மீது மக்கள் கடும் அதிருப்தில் இருந்தனர்.

தற்போதைய தேர்தலில் எர்டோகன் வெற்றி பெறவே முடியாது என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி மேலோங்கியிருந்த போதும், எர்டோகன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அரசியல் சாசனத்தை மீறுதல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தல், போலீசு ஆட்சியை நிறுவி அடக்குமுறைகளை அதிகரித்தல், அரசு வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டுதான் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார் எனினும், இது, எதிர்க்கட்சிகளின் ஓட்டாண்டித்தனத்தை பளிச்சென காட்டிவிட்டன.

பாசிசத்தின் இருபிரிவுகளுக்குடையிலான போட்டி

1999-இல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்த பொருளாதார நெருக்கடி, 2000-01 ஆகிய ஆண்டுகளின் பொருளாதார வீழ்ச்சி, தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த குடியரசுவாத நீதிக் கட்சிகளின் ஊழல், முறைகேடுகள், அக்கட்சியில் ஏற்பட்ட பிளவு ஆகியவை காரணமாக குடியரசுவாத நீதிக் கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி மேலோங்கி இருந்தது.

2001-இல்தான் எர்டோகனின் இசுலாமிய அடிப்படைவாத பிற்போக்கு தன்மை கொண்ட, “நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி” தொடங்கப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு, ஜனநாயக எதிர்ப்பை தனது இயல்பாகக் கொண்ட எர்டோகன் அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.

2002-இல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலின்போது, எர்டோகன் மதவாதத்தை தூண்டியதற்காக அரசுப் பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 3 இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். இருப்பினும், 2002 தேர்தலில் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி 550-க்கு 363 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 2003-இல் எர்டோகன் பிரதமராக்கப்பட்டார்.

அக்கட்சி தொடங்கப்பட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கான ஆறு பொதுத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வந்துள்ளது.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


2003-ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து எர்டோகன் மக்கள் அறிந்த தலைவராக உள்ளார். 2014-இல் முதல் முறையான அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 21 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தின் முக்கியமான பதவியில் இருக்கிறார். அந்தவகையில், எர்டோகன் துருக்கியின் மிகவும் ஆதிக்கம்பெற்ற ஒரே அரசியல் தலைவர்.

இவருக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசுவாத மக்கள் கட்சியானது, துருக்கியின் மாபெரும் ஜனநாயகவாதத் தலைவரான முஸ்தபா கெமால் அடாடர்க்-ஆல் தொடங்கப்பட்ட கட்சியாகும். அவரது இறப்புக்குப் பின்னர், அக்கட்சி தனது மதசார்ப்பற்ற, ஜனநாயகத் தன்மையைக் கைவிட்டது. இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடுகளுடன் சேர்ந்து கொண்டது. அதன் பின்னர், ‘பலகட்சி ஜனநாயகம்’ என்ற பெயரில் கேடுகெட்ட ஆட்சி முறை 1946-இல் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்து அமெரிக்கா மற்றும் இசுலாமிய மதவாத பிற்போக்குவாதிகளுக்கு அடிபணிந்து ‘சீர்த்திருத்தங்கள்’ என்ற பெயரில் அரசியல் சாசனத்தை பல்வேறு வகைகளில் திருத்தியது.

அன்றுமுதல் உட்கட்சிப் பூசல், ஆட்சிக் கவிழ்ப்பு, தொடர்ச்சியாக கட்சியில் பிளவுகள், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அதிகரித்தல், கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சாதகமான முறையில் அரசியல் சட்டங்களைத் திருத்துதல் போன்றவை காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகள் கை மேலோங்கியது மட்டுமின்றி, 1980-இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1987-இல் கட்சிகளுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர், பல கட்சிகள் உருவாகின. குடியரசுவாத நீதிக் கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மை பெரும் நிலையை இழந்தது. இருப்பினும் மதசார்பின்மையை குடியரசுவாத நீதிக்கட்சி தொடர்ந்து பின்பற்றுவதாக அறிவித்தது.

உட்கட்சியில் ஏற்பட்ட குழப்பமும், பொருளாதார ரீதியாக கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு ஆற்றிய சேவையை கட்சியின் மதசார்பின்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைத்ததும் இசுலாமிய அடிப்படைவாதிகள், இந்த குடியரசுவாத நீதிக் கட்சிக்கு எதிராக தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு வழிவகை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்கள், கம்யூனிச எதிர்ப்பு குழுக்கள் பலவும் பலமடைந்தன.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


மேலே குறிப்பிட்டது போல 1999-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், 2000-01 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கிராமப்புற மக்களிடம் நிலவும் மதவாத பிற்போக்குத்தனம் ஆகியவற்றைக் கைப்பற்றி, எர்டோகன் தலைமையிலான நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. துருக்கியை பிராந்திய வல்லரசாக்குவது, ஒட்டமான் பேரரசின் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவுவது என்ற தேசியவெறி, இசுலாமிய வெறியூட்டி ஆட்சியைத் தக்கவைத்து வருகிறார் எர்டோகன்.

அன்றிலிருந்து, பாசிசத்திற்கு எதிரான தனது அரசியல் கையாளாகாத் தனத்தை காட்டி வந்த குடியரசுவாத மக்கள் கட்சி, எர்டோகனின் பாசிசத்திற்கு மாறாக, வேறொரு பாசிசக் கொள்கையை ஆதரித்து வருகிறது. தனக்கு இருக்கும் மிதவாத ஜனநாயகப் போர்வையை அதற்கு சாதகமாக்கிக் கொள்கிறது. அந்தவகையில், அமெரிக்காவுக்கு பட்டவர்த்தனமான ஆதரவு, நெட்டோவுடன் கூட்டணி, ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களின் சுரண்டலுக்கு அடிபணிதல், தீவிர பாசிஸ்டுகளுக்கு ஆதரவு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுகிறது. எர்டோகனுக்கு எதிராக இந்தக் கட்சியை போலி கம்யூனிஸ்டுகள், குர்திஸ் தேசிய இன இயக்கங்கள் எல்லாம் ஆதரிப்பதால் அவையும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்திருக்கின்றன.

இதுமட்டுமின்றி, குடியரசுவாத மக்கள் கட்சியில் சென்ற முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மொர்ரம் இன்ஸ், 2021-இல் இக்கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கினார். இந்த 2023 தேர்தலில் பல வண்ண போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பல துருக்கிய தேசியவாத கட்சிகள், பல சிறுபான்மை குர்து இனவாதக் கட்சிகள், பசுமைவாதக் கட்சிகள், பாரம்பரியவாதக் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் என அனைவரின் ஆதரவோடு போட்டியிட்டும் குடியரசுவாத நீதிக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

துருக்கி மக்களின் தேவை எது?

துருக்கியின் மக்கள் அனைத்து வகையிலும் இசுலாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றனர். எர்டோகனின் அகண்ட துருக்கிக் கொள்கையை எதிர்க்கின்றனர். சிரியா மீது போரும் வேண்டாம், சிரிய அகதிகளுக்கு ஆதரவு தரவும் வேண்டாம் என்பதுதான் மக்களின் நிலை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேட்டோ கூட்டமைப்பில் துருக்கி அங்கம்வகிப்பதை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ நடத்தும் போரை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், கிலிடாரோக்லு நேட்டோ ஆதரவு நிலைடுத்தார். நோட்டோவுடன் மேலும் தனது ஒருங்கிணைப்பை அதிகரிப்பதாக தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

எர்டோகனின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக குடியரசுவாத நீதிக் கட்சி தொழிலாளர்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. இவ்வாறு ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார் கிலிடாரோக்லு. எர்டோகன் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் எனில், இவரை இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகள் “துரோகி” என்று தூற்றி வருகின்றனர்.

துருக்கியின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அகதிகள் பிரச்சினையாகும். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் நாட்டின் மக்கள் துருக்கியில் குடிபெயர்ந்து வந்துள்ளனர். எர்டோகன் இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக தேர்தலில் வாக்குறுதியளித்தார்.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


கிலிடாரோக்லு-வோ 10 லட்சக்கணக்கான சிரிய அகதிகளை நாடு கடத்துவதாக வாக்குறுதியளித்தார். மேலும், எல்லை மீறிய பயங்கரவாதிகளை ஒடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். இதன் மூலம், எர்டோகனுக்கு எதிராக அதிருப்தியைக் கிளப்பும் தீவிர இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டார்.

மொத்தத்தில், எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.

மக்களோ சமூக மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால், கிலிடாரோக்லுவும் போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் எர்டோகன் எதிர்ப்பு என்ற போர்வையில் அவரைவிட கொடிய இசுலாமிய பாசிஸ்டுகளை வளர்த்துவிடும் கேடுகெட்ட வேலையைச் செய்து வருகிறார்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, அகதிகளுக்குரிய உரிமைகளை அங்கீகரிப்பது, சிறுபான்மை குர்து தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரிப்பது, அமெரிக்க-நேட்டோ ஆதரவை நிராகரிப்பது, சொந்தநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, கார்ப்பரேட் வர்க்கங்கள் அதிகாரம் செலுத்தும் வகையிலான, பாசிசம் அரங்கேறுவதற்கு காரணமான அரசியல் சாசனத்தை, உழைக்கும் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் திருத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்று பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்துப் போராட வேண்டியது புரட்சிகர சமூக மாற்றத்தை நேசிக்கின்ற, பாசிசத்தை எதிர்க்கின்ற கட்சிகள், அமைப்புகளின் இன்றைய அவசர அவசியமான கடமையாகும்.

தங்கம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

ஸ்டெர்லைட் வேண்டாம் என்று பேசுவதற்கும் போராடுவதற்கும் எமது மக்களுக்கு தூத்துக்குடியில் உரிமை இல்லை! கொலைகாரன் அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பா?

***

தமிழ் மண்ணில் இருந்து கொண்டு தமிழரை சுரண்டி வாழும் மார்வாடி-பனியா கும்பலே!
தமிழரைக் கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைப்பாயா?
உன் திமிரை தமிழ்நாடு அடக்கும்!

***

தூய நிலம், காற்றுக்காகப் போராடிய தமிழர்கள் 15 பேரை கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

***

தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரன் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை வருகிறார்! தூத்துக்குடி தியாகிகளை கொச்சைப்படுத்திய போராளிகளை இழிவுபடுத்திய கனிமவளக் கொள்ளையன் வருகிறார்!  மானமுள்ள தமிழரே, அணிதிரண்டு வாரீர்!

***

மார்வாடி – பனியா கும்பலே! தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை பள்ளி நிகழ்வுக்கு அழைக்காதே! தமிழ்நாட்டை சீண்டாதே!

***


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.