Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 186

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

மாநாடு அறிவிப்பு !

***

நாள் : செப்டம்பர் 17
இடம் : சென்னை

மாநாட்டிற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321.

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

கொத்தடிமைகளாக பணியாற்றிய சிறுவர்களுக்கு
விடுதலை சான்றிதழ் வழங்கிய ஒசூர் கோட்டாட்சியர்!

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை
பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

செய்தி 1:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள தொட்ட அப்பனூர் கிராமத்தின் அருகே திம்மப்பா (52) என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரின் சூளையில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் கடனாக பெற்றுக் கொண்டு வருடக் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவர்களை அடையாளம் கண்டு ஒசூர் கோட்டாட்சியர் தேன்மொழி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ”விடுதலை சான்றிதழ்” வழங்கி அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

செய்தி 2:

கடந்த 04.07.2022 அன்று ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்திலேயே குடும்பத்துடன் தகர கொட்டகைகளை அமைத்து வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் சம்பவத்தன்று பசியின் கொடுமையால் காட்டாமணக்கு காய்களை தின்றுள்ளார்கள். இதில் 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளும் நம்மிடம் கேட்கும் கேள்வியும், உணர்த்தும் செய்தியும் என்ன?

திராவிட மாடல் ஆட்சியில் வெளிமாநில கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் பட்டினியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை உணவுப் பொருளாக உண்ணும் ஏழ்மை நிலையில் ரேசன் பொருட்களை கூட வாங்க முடியாத உள்நாட்டு அகதிகளாக வாழ்கின்றனர்.


படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !


ஏன் எனில் மானிய விலையில் உணவுப் பொருட்களை வினியோகிக்கும் முறையை கைவிட்டு நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தை நோக்கி அரசு நகர்ந்து கொண்டு இருப்பது இந்த அவலநிலைக்கு காரணம் என உணர்த்துகிறது.

மேலும், 1990-களில் தனியார்மயம் – தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என ரேசன் பொருட்கள் விநியோக முறையில் இரண்டாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என சமூகம் முழுவதும் இந்த நிலைக்கு வித்திட்டது அன்றைய நரசிம்மராவ் அரசு.

சமூக நலத்துறை சார்பில் மூன்று திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு வளர்ச்சி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் 28 ஆயிரத்து 936 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 521 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் டேட் சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதனை போன்று தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் திராவிட மாடல் ஆட்சியில் மற்றும் வல்லரசு மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகளும், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பசியின் கொடுமையை இந்தியா முழுவதும் காண முடியும்.

பொதுவான சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும் என்று அரசு நம்மை நம்ப வைக்கிறது.

இவர்களால் செங்கல் சூளையில் கொத்தடிமையான சிறுவர்களுக்கு வேண்டுமென்றால் விடுதலை சான்றிதழ் வழங்க முடியுமே தவிர உள்நாட்டு ஏழை அகதிகளான கூலி தொழிலாளிகளை பசியின் கொடுமையில் இருந்து விடுவிக்க முடியாது. ஏனெனில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த ஓர் ஆய்வில் ”ஹைநெட்வொர்த்” பணக்காரர்கள் நம்நாட்டில் உருவாகி விட்டார்கள் என கூறுகிறது.


படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !


ஒருபக்கம் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

இந்த அவலநிலையை உருவாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கைகளை அடியோடு வீழ்த்த வேண்டும். இதையெல்லாம் மறைத்து மக்களை பிரித்தாண்டு கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் காவி – கார்ப்பரேட் கும்பல் களத்தில் வீழ்த்தப்பட வேண்டும்.

விக்ரம் – ஒசூர்

ஒசூர்: அழிவின் விளிம்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME)! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

ஜூலை 13, 14 ஆகிய நாட்களில், ஒசூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பாக இரண்டு நாள் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை உரிய வகையில் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதாவது ஒன்றிய – மாநில அரசுகள் நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி ஒசூரை சுற்றியுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அசோக் லேலண்ட், டைட்டான், டிவிஎஸ், ஹோண்டா, டாட்டா குழுமங்கள் உள்ளிட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நூறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, இரும்பு பொருட்களின் கடுமையான விலையேற்றம் காரணமாகவும் கடுமையாக இந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


படிக்க : சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !


இந்த பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும், விநியோகிக்கும் பொருட்களுக்கும் பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையை தருவதால் பெருத்த நட்டம் ஏற்பட்டு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி சிறு குறு தொழில்களே அழியும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையின் குவிமையமாக ஒசூர் விளங்குகிறது. இந்நிலைமைகளின் காரணமாக குட்டி ஜப்பான்  என்று அழைக்கப்படும் இப்பகுதியில் MSME என்று சொல்லப்படக்  கூடிய சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் அடிப்படையில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

உதிரிபாகங்கள் உற்பத்தியைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில்தான் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் மற்ற எல்லா மாநிலங்களை விட தரமான பாகங்கள், துல்லியமான தரத்தோடு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் உதிரிபாக உற்பத்திக்கு தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களையே நாடுகின்றன.  வெளிநாடுகளில் இருந்தும் ஒசூருக்கு இதற்கான ஆர்டர்கள் வருகின்றன.  இப்படிப்பட்ட தரமான, துல்லியமான உற்பத்தியை மேற்கொள்ளும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டுதான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகளோ கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தனியார்மயக் கொள்கையை தீவிரமான அமல்படுத்துவதன் மூலம் மேலும் தீவிர நெருக்கடிக்கு தள்ளுகின்றன. ஆனால் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டே  இருக்கின்றன.

கடந்த ஜூன் 27 அன்று பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்வது, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, புத்தாக்கங்கள், படைப்பு நிலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாக நினைவு கூரப்படுகிறது. அன்று அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்கும், துணை நிற்கும் என்று பேசியுள்ளார்.

இந்த வாக்குறுதிகளால் நொடிநேர மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர பயனேதும் ஏற்படப் போவதில்லை என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினையின் குறிப்பான சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் இயங்குகின்ற முறையைப் பொறுத்தவரை OEM (Original Equipment Manufacturer) எனப்படும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்கடுத்து 20 முதல் 30 கோடி வரை முதலீடு போட்டு இயங்கும் TIER 1 நிறுவனங்கள் (இவை பெரிய நிறுவனங்களின் பெரும்பான்மையான ஆர்டர்களை பெறுகின்றன), அடுத்து TIER 2 நிறுவனங்கள் (5கோடி மதிப்பிலானவை), இறுதியாக TIER 3 நிறுவனங்கள் (இந்த நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன, சில லட்சங்கள் முதலீட்டுத் தன்மை கொண்டவை) என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

TIER 3 நிறுவனங்களுக்கு மேற்கண்ட வரிசைக்கிரம நிறுவனங்கள் மூலமாகவே பெரும்பாலும் ஆர்டர்கள் (குறிப்பாக TIER 2 நிறுவனங்கள் மூலமே) கிடைக்கும். சில சமயங்களில் Open Order என்ற அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் நேரடியாக அணுகுகின்றன. ஆனால் இரண்டு வகையிலுமே உற்பத்தி செய்யும் செய்யும் பொருட்களுக்கு உரிய விலை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தொகையும் 90 நாட்கள் கழித்தே கொடுக்கப்படும். ஜிஎஸ்டி 28% வசூலிக்கப்படும் நிலையில் எந்த வகையிலும் மீள முடியாத நெருக்கடியை நோக்கி இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

GST யைப் பொறுத்தவரை என்ன நடந்தாலும் ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் கணக்குகளை முடித்து 10 தேதிக்குள் வரியைக் கட்டிவிட வேண்டும். அவ்வாறு கட்டவில்லையென்றால் ஒரு நாளைக்கு 50 % வீதம் அபராதம் கட்ட வேண்டும். தாமதமானால் GST கணக்கு முடக்கப்படும். மீண்டும் முதலில் இருந்து தொடங்கியாக வேண்டும். இது அதிக அளவில் செலவீனங்கள் பிடிக்கின்ற விசயம்.

GST கட்ட முடியாமல் போனால் அதைக் கட்டுவதற்கு  மென்கடன் (Soft Loan) என்ற பெயரில்  வங்கிகளில் கடன்  பெற்றுக் கொள்ளலாமாம். அதிலும் 10 ம் தேதிக்குள் கட்டவில்லையென்றால் அதற்கு வட்டி போட்டு கட்ட வேண்டும். இது நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை உருவாக்குகிறது. வருகின்ற லாபத்தில் 25% GST கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே போய்விடுகிறது என்பதுதான் நிலைமை. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் உழைப்பை நேரடியாக சுரண்டுகின்றன. மறுபக்கம் அரசோ சதித்தனமாகவும், குயுக்தியாகவும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் மீது கொடூர சுரண்டலை நடத்துகிறது. இதற்கு மென்கடன் என்று பெயர் சூட்டிக் கொள்கிறது. வெட்கக்கேடு!

OEM, TIER 1 நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள் கூட்டணியாக இருந்து கொண்டு பெருத்த லாபத்தைப் பார்க்கின்றனர். OEM ன் 50% ஆர்டர்கள் TIER 1 லேயே முடிந்து விடும். பெருமளவில் TIER 2, TIER 3 நிறுவனங்கள்தான் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன.

ஆர்டர்கள் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டே சில வேலைகளை செய்து வருகின்றன. TIER 3 நிறுவனங்களுக்கு போட்டியாக தங்களுக்கு தோதான ஆட்களை உருவாக்கி ஜாப் ஆர்டர்களுக்கான டிமாண்டை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூலியை குறைப்பது என்ற அயோக்கியத்தனமான வழிமுறையை கடைப்பிடிக்கின்றன. வேலையில்லாப் பட்டாளத்தை உருவாக்கி எப்படி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அதைப்போல தனக்குத் தோதாக சிலரை உருவாக்கி டிமாண்டை உருவாக்குதன் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை அழிக்கும் வேலையை பெரிய நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதாவது சிறு குறு நிறுவனங்களுக்குள் உள் முரண்பாடுகளை உருவாக்குவதன் மூலமாக தங்களது அதிகப்படியான லாபத்தை பெரிய நிறுவனங்கள் உறுதி செய்து கொள்கின்றன.

10 வருடத்திற்கு முன்பிருந்த நிலையிலேயே ஜாப் ஆர்டர்களுக்கு தற்போதும் கூலி தரப்படுகிறது. MSME நிறுவனங்களைப் பொறுத்தவரை மாதம் 1 முதல் 15 தேதிக்குள் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளருக்கான ஊதியம், மின் கட்டணம், ஆயில், கருவிகளுக்கான செலவுகள், ஜிஎஸ்டி ஆகியவற்றை கட்டாயம் செட்டில் செய்தே ஆக வேண்டும். ஆனால் பெரிய நிறுவனங்களிடம் வரவேண்டிய ஜாப் ஆர்டருக்கான தொகை எப்போதும் தாமதமாகவே வரும்.

உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் விலையோ மிக அதிகமாக உள்ளது. துல்லியமான முறையில் உற்பத்தி செய்வது என்பதற்காக கணிணிமயமாக்கப்பட்ட  CNC மெஷின்களை வாங்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான இறக்குமதி வரி ஜிஎஸ்டி யுடன் சேர்த்து 35% போடப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களது செலவீனங்களைக் குறைத்து,  பெரும்பாலான நிறுவனங்களில் கணவன் – மனைவி வேலைகளில் ஈடுபட்டு கடும் உழைப்பை செலுத்துகின்றனர். தொழிலாளர்களை வைத்து வேலை செய்தால் கட்டுப்படி ஆகாது என்ற நிலை உள்ளது. இங்கு இலாபம் ஈட்டுவதல்ல பிரச்சினை, தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடு என்ற நிலைமைதான் நீடிக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடைப்பதைப் போல சாதாரணமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கியில் லோன் கிடைத்து விடுவதில்லை. ஆவணங்களை முறையாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வங்கிகளின் இழுத்தடிப்புகள் ஒருபக்கம் நடக்கின்றன. எண்ணற்ற வழிமுறைகளில் (PAN CARD மூலமாக) நிறுவனங்களின் பொருளாதாரக் கணக்குகளை கண்காணிப்பதன் மூலம்  கடனை தராமல் மறுப்பதற்கான முகாந்திரங்களை வங்கிகள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒன்றிய அரசின் CIBIL SCORE என்ற கண்காணிப்பு முறையின் வாயிலாக நிறுவனங்களின் கடன் வாங்கும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இம்முறை கடனை மறுப்பதற்கான அம்சங்களை வங்கிகளுக்கு உருவாக்கித் தருகிறது என்பதே உண்மை. இந்நிலைமை பெரும்பாலான சிறு குறு தொழில் செய்வோரை கந்துவட்டி, நுண்கடன் நிறுவனங்கள் பக்கம் இயல்பாக தள்ளிவிடுகிறது. கிராமத்தில் நிலத்தை விற்று, இருக்கும் சொத்துக்களை விற்று , வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் தொடங்குபவர்கள் எப்படியாவது இலாபம் ஈட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமாகவும், பேரிடியாகவும் உள்ளது. நெருக்கடி தாளாமல் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.

வேறு வழியில்லை என்ற நிலையில்தான் ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்கப்படும் கூலியை மணிக்கு ரூ. 250 ஆக  அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஜிஎஸ்டி 18% ஆக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்துகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். இதை தற்காலிகமான தீர்வுக்கானதாக முன்வைக்கிறார்கள்.

மூலப்பொருட்கள் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் – விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் ஊதியம் அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தற்காலிகத் தீர்வுக்கான கோரிக்கையை ஜிஎஸ்டி யை முழுமையாக நீக்க வேண்டும் என்றே வைக்க வேண்டியுள்ளது.

இனி போராடாமல் வாழ முடியாது என்ற நிலைமையில்தான் ஒட்டுமொத்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் போராட்டத்தை நோக்கி இறங்குகின்றன. 1990 களுக்குப் பிறகு தனியார்மயம் உருவாக்கிய குமிழிப் பொருளாதாரத்தினூடாக,  சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பு நிறுவனங்களாக  மாற்றப்பட்டு விட்டன.

மத்திய, மாநில அரசுகளும், அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாக செயல்படுவது ஒன்றையே தனது முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டு விட்டன. அதற்கேற்ப சட்டதிட்டங்களை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பின் மிகத் தீவிரமாக  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தியதன் மூலம் இன்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அழிவின் எல்லைக்கு வந்துவிட்டன.


படிக்க : இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்


இது ஒசூரில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையில் உள்ள சில லட்சக்கணக்கானோரின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு துறைகளில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை சார்ந்து இயங்கும் 10 கோடி பேரின் பிரச்சினை. இதை அழிக்கத்தான் இன்று மோடி அரசு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.  தனியார்மயத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அழிவை நோக்கித் தள்ளுகிறது. அதானி, அம்பானி களின் தேசமாக நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தின் மூலம்தான், நாட்டு மக்களின் தேவைக்கான சுயசார்புப் பொருளாதாரமாக கட்டியமைப்பதன் மூலம்தான் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்ல தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

அதற்கு காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதே நமது முதல் கடமை. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்றிணைவோம்!

வினவு செய்தியாளர்- ஒசூர்

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

24.07.2022

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது !
ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

ள்ளக்குறிச்சி அருகே கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறீமதி மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்து பல மணி நேரங்கள் கழித்தே பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த பெண்ணை உடனே பார்ப்பதற்கு கூட பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வழக்குரைஞர்களின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னரே இறந்த மகளை பெற்றோர்கள் பார்த்தனர். மகளின் உடலில் இருந்த காயங்கள் பெற்றோர்களுக்கு இது கொலையாக இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கிறது. பெற்றோர்களின் நியாயமான சந்தேகத்தை தீர்க்க வேண்டிய போலீசும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை இழுத்தடித்து வந்தனர். மகளின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும், மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே வைக்கப்பட்ட கோரிக்கை.

இந்த மிகச் சாதாரணமான கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத போலீசும் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சினையை இழுத்தடிப்பதன் மூலம் பெற்றோர்கள் கோரிக்கையை கைவிட்டு பெண்ணின் உடலை வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பார்கள் என்று நினைத்தது. ஆனால் நடந்ததோ வேறு, சிறீமதி அம்மா தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கேட்டு வெளியிட்ட கண்ணீர் வீடியோ கேட்காதவரையும் கேட்க வைத்தது, மனம் உருகாதவரையும் உருக வைத்தது. சாதி வித்தியாசமின்றி பலரும் கடந்த 17.07.2022 அன்று காலை தன்னெழுச்சியாக வந்திருக்கின்றனர். குறிப்பாக சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பதை முகநூல் பதிவுகள் வழியே கண்டறிய முடிகின்றது. இதைத்தான் முற்போக்கு சொம்புகள் கலவரத்துக்காக வெளியே இருந்து திரட்டிய கூட்டம் என்கின்றன.

2005-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இப்பள்ளிக்கு எதிராக போராடி இருக்கிறார்கள். இப்பள்ளியில் இதுவரை 7 மாணவர்கள் மர்மமான இறந்து போயிருக்கிறார்கள் என்பதை பலரும் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியின் மீது பல புகார்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இப்பள்ளியின் தாளாளர் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கியநபராக உள்ளார். இப்பள்ளி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தளமாக இருந்திருக்கிறது. இந்த பள்ளியின் மீது சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்கனவே இருந்த வெறுப்பு, மாணவியின் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்கு அடியாள் செய்யும் போலீசு – மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள், சிறீமதி தயாரின் கதறல் ஆகியவையே  மக்களை அணிதிரட்டியிருக்கிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் செய்த மக்களை போலீசு விரட்டியடிக்க செய்த நடவடிக்கை, அவர்களின் கோபத்தை அப்பள்ளிக்கு எதிராகத் திருப்பியது. மாணவியின் பிணம் அழுகிக் கொண்டிருக்கிறது, காரணமான பள்ளியோ கம்பீரமாக வீற்றீருக்கிறது என்ற கோபம், பெருந்தீயாக மாறி பள்ளியை சுட்டுப்பொசுக்கியது. காலை 11 மணிக்குமேல் தொடங்கிய சூறையாடல் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட போலீசுப்படை கடும் தாக்குதல் நடத்திய பிறகே நின்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம், உடனே போராட்டகாரர்கள் கலைந்து வேண்டும், ஆசிரியப் பெருமக்களை எல்லாம் எடுத்தவுடன் கைது செய்ய முடியாது என போலீசு டிஜிபி அன்று பகல் 12 மணியளவில் நேரலையில் பேசினார். ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் சென்ற அதிரடிப்படை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாகத்தாக்கி கைது செய்தது. மேலும் வீடியோவை வைத்து பலரையும் வீரப்பன் தேடுதல் வேட்டை போல தேடித்தேடி கைது செய்தது.

மாணவிக்கு நீதி வேண்டும் என்று யாரெல்லாம் போராடினார்களோ, அவர்கள் எல்லாம் கைது செய்து அதை பரபரப்பு செய்தியாக்கியது. இனி மக்கள் பிரச்சினைக்கு யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாக, தொலைக்காட்சி, ஊடகங்கள், போலீசு, நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்துமே செயல்பட்டன.

ஜூலை 17-ம் தேதி அன்று மாலை பள்ளி செயலாளர் சாந்தி என்பவர், இப்பள்ளியில் ஏற்பட்ட சேதாரத்துக்கு சிறீமதியின் அம்மாதான் பொறுப்பு என்றும், இதற்கெதிராக அனைவரும் குரல் கொடுக்கவும் வேண்டும் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல தனியார் மெட்ரிக் பள்ளியின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், பள்ளியின் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என்று தெரிவித்தார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை எதிர்ப்பு தெரிவிக்கவே 18.07.2022 அன்று தனியார் பள்ளிகளை மூடி எதிர்ப்பு தெரிவிப்போம் என்றனர். தமிழ்நாட்டு அரசின் எதிர்ப்பை மீறி 987 பள்ளிகள் மூடப்பட்டன. அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பள்ளி முதலாளிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம், செய்த மு.க.ஸ்டாலின், அப்பெண்ணின் பெற்றோர்களிடம் போனிலாவது பேசியிருக்கலாமே?

மாணவி இறந்த பிரச்சினையில் போலீசு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் வேலையில் செயல்பட்ட நடவடிக்கை அம்பலமானதால் 17.07.2022 அன்று இரவே பள்ளி நிர்வாகிகள் 3 பேரை போலீசு கைது செய்தது. அடுத்த நாள் காலை மேலும் ஆசிரியர்களை கைது செய்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த 400 பேருக்குமேல் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிலரின் கைகளை உடைத்து போலீசு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூற, அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

மறுகூராய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் இடம் பெற வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மறுத்ததுடன், பெற்றோர்களை மிரட்டி மாணவியின் பிணத்தை வாங்க வைத்தன. காலை 6–7 மணிக்குள் பிணத்தை வாங்க வேண்டும், இறப்புக்கு வெளியூர்காரர்கள் வரக்கூடாது என்பது போன்று இன்னமும் பல கொடூரமான தடைகளை விதித்து சிறீமதிக்கு நீதி வழங்கியது நீதிமன்றம். இது யோகி ஆதித்யநாத் ஹத்ராஸில் கொடுத்த காவி நீதிக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.


படிக்க : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : கல்வி தனியார்மயத்தை எதிர்த்த அரசியல் போராட்டங்களே தீர்வு! | வீடியோ


சிறீமதியின் தந்தையோ “எந்த மருத்துவக் கல்லுரியில் படிக்க வேண்டுமென்று என் குழந்தை ஆசைப்பட்டதோ அக்கல்லூரியிலேயே பிணமாக இருக்கிறது, என் மகளுக்கு நீதி கிடைக்க வில்லை” என்று சவ ஊர்வலம் முழுவதும் கதறியபடியே வந்தார். இத்தனை பேர் போராடியும் சிறைபட்டும், உதைபட்டும் ஒரு மாணவிக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற வேதனை நம் நெஞ்சை எல்லாம் அறுக்கிறது.

***

ஒரு ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்துக்காகவும் தனியார் பள்ளி முதலாளிகளுக்காகவும் தமிழ்நாடு முழுக்க மக்களை வேட்டையாட சேலம் சரக டிஐஜி தலைமையில் 18 பேர் கொண்ட குழு, பள்ளியில் மாணவி இறந்ததை கண்டறிய 3 பேர் கொண்ட குழு. இதுதான் ஸ்டாலினின் சமூக நீதியோ!

கோவை சின்மயா பள்ளியில் மாணவி ஒருவர் இறப்புக்கு எதிராக அம்மாணவியின் பெற்றோரும் மக்களும் போராடினர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட உடனே போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் அப்படி ஓர் நடவடிக்கையை இப்பள்ளி நிர்வாகத்தின் மீது ஏன் தமிழ்நாட்டு அரசு எடுக்கவில்லை என்பதுதான் இப்பிரச்சினையின் மையம். ஆக, அதிகாரவர்க்கம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டுடன் தன்னுடைய எல்லா அயோக்கியத்தனங்களையும் மூடிமறைத்து கல்விக்கொள்ளையடித்து வந்த பள்ளி நிர்வாகத்தினை காப்பாற்றுவதே அரசின் நோக்கம்.

தமிழ்நாட்டில் இதுவரை கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்ட எந்த ஒரு மாணவருக்கும் நீதி கிடைத்தது இல்லை என்பதை அனுபவங்கள் மூலமாக உணர்ந்த மக்கள் தங்களுக்கு வேறு வழிஇல்லை என்பதையே சக்தி மெட்ரிக் பள்ளில் காட்டினார்கள். சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்திருந்தால் பள்ளி எரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் மக்கள் அமைதியாக புலம்பிக்கொண்டு போவார்கள் என்று நினைத்த அரசின் எண்ணத்துக்கு மாறாக எரிமலையாய் வெடித்து இருக்கிறார்கள் மக்கள்.

***

ஒரு அமைப்பின் கீழ் இல்லாமல், தன்னெழுச்சியாக மக்கள் இப்படி போராடியது போலீசுக்கும் அரசுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கின்றது. அதன் விளைவாக உருவானதே ஊடுருவல்காரர்கள் எனும் மந்திர வித்தை. இப்படிப்பட்ட தன்னெழுச்சியாக போராட்டத்தை இப்போது கொடூரமாக ஒடுக்கிக்கொண்டு இருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு.

முட்டுக்கொடுக்கும் முற்போக்குகள்

இந்தப்போராட்டமே திட்டமிட்ட வன்முறை என்றும் அமைதியான மக்கள் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி தடயங்களை அழித்துள்ளனர் என்றும் திமுக ஆட்சியை கலைப்பதற்கான சதி என்றும் போலீசுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வதுடன் போராட்டம் நடத்தவும் துணிந்து இருக்கின்றனர். மர்ம மரணம் நடந்து 4 நாட்கள் வரை நிர்வாகம் தடயங்களை அழிக்காமல் இருந்ததாம். அதை அழிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்ததாம். கேட்கிறவன் கேணை என்றால் கேப்பையில் நெய் வழியும்!

மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்களாம். வெளியிலிருந்து சிலர் – கலவரக்காரர்கள் – கலவரம் செய்தார்களாம். மாவட்ட நிர்வாகம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டு உள்ளதாம். ஆனால் இதற்காக ஸ்டாலினின் திமுக அரசை கண்டிக்க மாட்டார்களாம். முகநூலில் பதிவிட்டவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்வதெல்லாம் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாது என்பதுபோல இவர்கள் கொடுக்கும் முரட்டு முட்டுக்கு அளவே இல்லை.

சிறீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என்பது நமது கவலையாக இருக்கின்றது. ஆனால், முற்போக்கு சங்கிகளுக்கோ எப்படி இவ்வளவு பேர் கூடினர் என்பதே பெருங்கவலை. மக்கள் பெருமளவில் போராட்டங்களில் தன்னெழுச்சியாக பங்கு பெறக்கூடாது என்பது இரு தரப்பினருக்கு சொந்தமான கருத்து. 1.புரட்சியின் எதிரிகள் 2.புரட்சியின் மீது நம்பிக்கையற்றவர்கள். இருவருமே ஆளும் வர்க்க்க சித்தாந்தத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே!

போராட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆளும் வர்க்கத்தை கெஞ்சுகின்ற போராட்டமாக இருக்க வேண்டுமே ஒழிய, ஆளும் வர்க்கத்தை அசைக்கின்ற போராட்டமாக இருக்கக்கூடாதென்றே விரும்புகின்றனர். அதுவும் சமூக நீதி ஆட்சி அமைய தன்னையே அர்ப்பணித்த / தங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்ட முற்போக்காளர்களுக்கு’ ஸ்டாலின் தலைமையில் ஆன அரசு அம்பலப்பட்டுப்போய், ஆர்.எஸ்.ஸ்-க்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கும் அடியாள் வேலை பார்ப்பது அம்மணமாக மக்களுக்கு தெரிந்துவிட்டதென்று மக்கள் மீது பாய்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் இதுவரை வெளியிடாத “ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்” என்ற தகவல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினி கூறிய ”சமூகவிரோதிகள்” கருத்துக்கு நிகராக இருக்கிறது என்றால் மிகையல்ல. வழக்கம்போல இதற்கு ஒரு கமிசன் போட்டு முற்போக்கு முட்டுகளை விசாரித்தால் உண்மை தெரியவும் வாய்ப்பு இருக்கிறது.


படிக்க : தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ


போராடிய மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். அமைதியாக போராடிய மக்களுக்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களாம், ஆத்திரங்கொண்டு எரித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்வார்களாம். கேட்டால் இதுவும் ஒரு முற்போக்குப் பணியாம். இருக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரம் செய்தார்கள் என்பதை போலீசும் அரசும் எங்கேயும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், திமுகவுக்கு முட்டு கொடுக்கும் முற்போக்குகள்’ இப்படி பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இது வரை செய்யப்பட்ட 400-க்கு மேற்பட்டவர்களில் எத்தனைபேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை இவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தன்னெழுச்சியான போராட்டம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பது தொடர்பான எவ்வித இயங்கியல் பார்வையுமற்ற ஆளும் வர்க்க எடுபிடிகள் இவர்கள்.

கலகம் இல்லாமல் நீதி கிடைக்காது

சீயோன் மெட்ரிக் பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து ஸ்ருதி என்ற மாணவி இறந்து போனார். அப்பள்ளி தாளாளர் விஜயன் கைது செய்யப்படவில்லை. பல மணி நேரம் சாலையை மறித்தார்கள் பிறகே விஜயன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞனை லத்தியால் போலீசு அடித்ததில் தடுப்பில் மோதி அவர் இறந்து போனார். 100 ரூபாய்க்காக கொலை செய்து விட்டாயே என்ற மக்களின் கோபத்துடன் அந்தப்போலீசின் சட்டையை கிழித்து அடித்து உதைத்தனர். அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா என்ன?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரீனாவில் இருந்து தப்பிய மாணவர்களுக்கு அடைக்கலம் தந்து போலீசோடு மோதியது மீனவர்களும் உழைக்கும் மக்களும்தான் அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்ற பின்னர் மக்கள் வெகுண்டெழுந்து போராடவில்லையா? போலீசுடன் மோதவில்லையா? அவர்கள் வன்முறையாளர்களா என்ன?

சொளரி சொளரா சம்பவத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையாளர்களா என்ன? அவர்கள் கலவரக்காரர்கள் என்றால் அந்த வழிமுறையைத்தான் இப்போது நாம் தியாகிகள் என்று கூறும் பகத்சிங்கள் முதலானவர்கள் வரவேற்றார்கள்.

ஆளும் வர்க்கத்தின் வன்முறை சட்டப்பூர்வமானது, மக்களின் பதில் வன்முறை சட்ட விரோதமானதா? ஆளும்வர்க்கத்தின் ஆசீர்வாதத்தில் இருந்து புரட்சி செய்யவும் சமூக மாற்றம் செய்ய முடியும் என்று நம்பும் சிலர் உருவாக்கும் கருத்து இது. இது மக்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விசிக போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையில் மக்களுக்கு எதிராக – போராடிய மக்கள் வேறு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் வேறு – என்று தெரிவித்து இருக்கிறார்களா என்ன? ஏனெனில் அவர்கள், மக்களை இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறக்கிவிட்டதே இந்த அரசின் நடவடிக்கைகள்தான் என்பதை அறிவார்கள். கூட்டணிக்கட்சி தர்மம் என்று இச்சூழலில் திமுகவுக்கு முட்டுக்கொடுத்தால் அது கட்சியின் அடித்தளத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.

சமூக வலைதளத்திலும் பரபரப்பு அரசியலிலும் கோலோச்சும் முற்போக்கு முகமூடிகளுக்கு மக்கள் அடித்தளத்தைப் பற்றிய கவலை ஒருபோதும் இல்லை. ஏனெனில் அவர்களின் கவலை எல்லாம் ஆளும்வர்க்க ஏஜெண்டாக மாறும் தனது படிக்கல்லுக்கு தடை ஏதும் வரக்கூடாது என்பதே!

போராட்ட ஒழுங்கு’ என்னும் ஒட்டுண்ணித்தனம்

இலங்கையில் அதிபர் மாளிகையை மக்கள் எரித்தார்கள். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சென்றனர். அங்கேயே தின்று தீர்த்தனர். பல நாடுகளில் ஏழை மக்கள் பணக்காரர்களின் சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர்.

தெலுங்கானா போராட்டத்தில் தப்பி ஒடும் ஒரு ஜமீன்தாரை ரயில் நிலையத்தில் மறித்து அடிப்பார்கள். அப்போது ஒரு வயதான பெண் அந்த ஜமீன்தாரின் முகத்தில் மூத்திரம் பெய்வார். என்னதான் இருந்தாலும் முகத்தில் மூத்திரம் பெய்யலாமா என்று கேட்பவன் யார்? அவனுக்கு பதில் முகத்தில் மூத்திரம் பெய்வதை தவிர வழியே இல்லை.


படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ


போராட்டத்தில் மக்கள் திருடுவார்களா? உழைக்கும் மக்கள் போராட்டத்தில் திருட மாட்டார்கள் என்று சில கரடியாய் கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆளும் வர்க்க கைகூலிகளே!

ஜார்ஜ் ப்ளாய்ட் போராட்டத்திலும் பிரிட்டன் – பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை பறித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஒரு போராட்டத்தின் ஒட்டு மொத்த நியாயத்தில் இருந்து அது சரியா தவறா என்பதை பார்க்க வேண்டுமே தவிர பொருட்களை தூக்கிச்சென்றனர், தீவைத்தனர் என்பதில் இருந்து பார்க்கக்கூடாது.

உழைக்கும் மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களை சுரண்டிய ஆளும் வர்க்கம், முதலாளிகளின் சொத்துக்களை சூறையாடவும் அழிக்கவும் கூட உரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு எது தேவையோ அதை தேவையான நேரத்தில் செய்வார்கள். மக்களின் அந்த உரிமையை மறுப்பவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவார்கள்.

பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் மீதான தங்கள் கோபத்தை மக்கள் தங்களுக்கு தெரிந்த வகையிலெல்லாம் வெளிப்படுத்துவார்கள். இதில் நாகரீகத்தை எதிர்ப்பார்ப்பவன் யார் என்றால் அவன் ஆளும் வர்க்க அடிவருடியாக இருக்க மட்டுமே தகுதி படைத்தவன்.

***

கள்ளக்குறிச்சி போன்ற சாதி – பிற்போக்கு கோலோச்சும் ஒரு பகுதியில் சாதிக்கு அப்பாற்பட்ட போராட்டம் எப்படி நடந்தது. அப்போராட்டத்தின் நியாயம் என்ன? என்பதை கண்டறிந்து அதில் உள்ள குறைகளை தவிர்த்து வளர்த்தெடுப்பதுதான் நம்முடைய பணி. அதை விட்டுவிட்டு மக்களை பிளவுபடுத்துவது ஆளும் வர்க்க அரியணை கனவுகளில் மிதப்போரின் வேலை.

அப்பள்ளி சேதமாக்கப்பட்டதில், முற்போக்கு முட்டுகளுக்கு என்ன பிரச்சினை? மாணவியின் மரணத்தை மூடி மறைத்த நிர்வாகம் – அதற்கு ஆதரவாக இருந்த போலீசு நடவடிக்கைகள் இருந்தால் அப்படித்தான் நடக்கும் என்று ஏன் இவர்களால் கூற முடியவில்லை? இவர்கள் இப்போது அப்பள்ளி முதலாளியின் இதயமாக மாறிவிட்டனர். ஆளும்வர்க்கத்தின் எண்ணமாக மாறிவிட்டனர்.

அப்பள்ளி எரிபடும்போது அவர்கள், தங்கள் சொத்துக்களுக்கு சேதம் ஆகுமோ என்றெண்ணுகிறார்கள்.

கல்வி தனியார்மயத்தின் அராஜகத்துக்குப் பதிலாக மனநல ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இப்படி ஒரு பிரச்சினை தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏற்பட்டால் பள்ளியை விட்டு எங்கே போவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதையெல்லாம் விட தங்கள் புரவலர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலால் வரவேண்டிய வரத்து நின்றுவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருந்தால், இவர்களின் செயல்பாடு என்னவாக இருந்து இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்? தமிழ்நாடு போர்க்களமாகி இருக்காதா? திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இவர்களுக்கும் சவுக்கு சங்கருக்கும் வித்தியாசம் ஏதும் உள்ளதா என்று இனிதான் கண்டறிய வேண்டும்.

சென்னையில் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்த எங்கேயும் தடை, அரங்கக்கூட்டம் நடத்தக்கூட அனுமதி கொடுக்க பயப்படுகிறார்கள், தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் எல்லாம் தடைவிதிக்கப்படுகின்றன. கல்லூரிகளின் வாசலில் போலீசு குவிக்கப்படுகின்றது. மெரீனாவில் போலீசு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. யூடியூப், முகநூல், வாட்ஸ் அப் கண்காணிக்கப்படுகின்றன.

எடப்பாடிக்கு தூத்துக்குடி மாடல் என்றால் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி மாடல் என்று சொல்ல இவர்களை எல்லாம் எது தடுக்கிறது? உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு என்பது போல திமுகவின் கூட்டணிக் கட்சியினரே அமைதியாக இருக்கும் போதும் கூட இவர்கள் ஓடி வந்து அவிழ்ந்து போன வேட்டியை கட்டிவிட ஓடி வருகிறார்கள். திமுக அரசை விமர்சித்தால், ஸ்டாலினை விமர்சித்தால் கிடைக்க வேண்டிய வெகுமதிகளும் பதவிகளும் கிடைக்காமல் போகலாம் என்னவோ!

***

திசை திருப்பும் ஆளும் வர்க்கம்

மாணவி காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்; குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலோடு இருந்தார்; சாதிக் கட்சியினர் திரட்டி வந்து கலவரம் செய்தனர்; ஆர்.எஸ்.எஸ் முன்னேற்பாட்டின்படி கலவரம் நடந்தது; இப்படி பல்வேறு திசைதிருப்பல்கள் மாணவி மரணித்தது முதல் இப்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கின்றன.


படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்


தனியார்மயக் கல்விப் படுகொலைகளால் இறந்துபோன எண்ணிலடங்காதோரில் இந்த சிறீமதியும் ஒருவர்தான். வழக்கம்போல தனியார்கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக, நிறுவனத்தின் தவறை மூடிமறைத்து அரசு செயல்பட்டதைப் போலவே இங்கேயும் செயல்பட்டது. அப்பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற போலீசும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அம்பலமாகிப்போயின.

ஜூலை 17-ம் தேதி போராட்டத்துக்கு பின்னர் மொத்த அரசு நிர்வாகமும் கவனம் குவிந்து இவ்வழக்கை எதிர்கொண்டு தீர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநில முதல்வரும் டிஐஜியும் நேரடியாக தலையிட்டு ஒரு மர்ம மரணத்தை விசாரிக்கும் அளவுக்கு மாவட்ட போலீசும் – நிர்வாகமும், ஆர்.எஸ்.எஸ் – தனியார்மய கல்விக்கொள்ளை நிர்வாகத்துக்கு அடியாளாக இருக்கின்றன. அதற்கு பின்னரும் ஆர்.எஸ்.எஸ் தனியார்கல்விக் கொள்ளையர்களை பாதுகாப்பதற்காகவே மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை – சிறப்பு புலனாய்வுகுழு  என்ற அரசபயங்கரவாதம்.

இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.


தோழர் சாந்தக்குமார்,
தலைமைக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல் !

பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கோரி, அரசிடம் முறையிட்டு பேரணியாக செல்லும் காஷ்மீர் பண்டிட்கள்.

1990-களுக்கு பிறகு மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறிவைத்து கொல்லப்படுவதும்; பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கக்கோரி அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பண்டிட்டுகள் நடத்திவரும் போராட்டங்களும், “காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டோம்” என்ற மோடி-அமித்ஷாவின் மோசடிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திவருகிறது.

“ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும், காஷ்மீரி இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால், அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலமாகவே, கிரிக்கெட்டில் அவர் அதிக ஆர்வம் காட்டுவதால் அமித்ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்” என பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமியே காரி உமிழுமளவுக்கு விஷயம் நாரியுள்ளது.

***

கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பால் கிரிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டும், சதீஷ் குமார் சிங் என்ற புலம்பெயர் தொழிலாளரும் பயங்கரவாதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலைகளுக்கு பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற பயங்கரவாதக் குழு, ‘கஃபிர்களுக்கு கடிதம்’ (கஃபிர் என்பது முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்) என்ற பெயரில் அச்சுறுத்தும் கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில், “பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறுங்கள் அல்லது மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாத காஷ்மீரி இந்துக்கள் கொல்லப்படுவார்கள். அவர்களை மோடி அமித்ஷா வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்திருந்தது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


மே மாதத்தில், புத்காம் மாவட்ட வருவாய் துறையில் எழுத்தாளராகப் பணிப்புரிந்துவந்த ராகுல் பட், ஜம்மு காஷ்மீர் கான்ஸ்டபிளாக இருந்த ரியாஸ் அகமது தோகர், பள்ளி ஆசிரியையான ரஜ்னி பாலா ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

அதே மாதத்தில், ரஞ்சித் சிங் என்ற வியாபாரி தீவிரவாதிகளால் வீசப்பட்ட கையெறி குண்டால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஜூன் மாத தொடக்கத்தில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி ஊழியரான விஜய் குமார் கொல்லப்பட்டார். விஜய் குமாரின் கொலைக்கு பொறுப்பேற்ற ‘சுதந்திர போராளிகள்’ என்ற பயங்கரவாதக் குழு, “காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்” என தெரிவித்தது.

பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கோரி, அரசிடம் முறையிட்டு பேரணியாக செல்லும் காஷ்மீர் பண்டிட்கள்.

காஷ்மீரி பண்டிட்டுகள் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு பிழைப்பு நடத்த வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பணியிடமாற்றமாகி வந்த அரசு அதிகாரிகள், முஸ்லீம்கள் உட்பட காஷ்மீரி அல்லாத அனைவரும் அடுத்தடுத்து பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மட்டும் 19 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், 34 பேர் பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1990 களில் 2 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகள் உயிருக்கு பயந்து பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார்கள். பண்டிட்டுகள், புலம்பெயர்ந்தோர்கள்மீது தற்போது நடத்தப்பட்டு வரும் படுகொலைகள், அத்தகைய சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் காஷ்மீரிகள்.

“நாங்கள் ஒவ்வொருவராக சாவதை விரும்பவில்லை. பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவது 2021 முதல் அதிகளவில் நடந்தேறிவருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் கொல்லப்படும்போதும் அரசாங்கம் பாதுகாப்பு தருவதாக உத்தரவாதங்களை மட்டுமே அளிக்கிறது. எங்களுக்கு வேலையைவிட வாழ்க்கைதான் முக்கியம். இனியும் இந்த கொடுமைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது” என்கிறார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய். இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்று வாடகை லாரிகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறிவருகிறார்கள் பண்டிட்டுகள்.

***

2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கிய பிறகுதான் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் 90-களை போல மூர்க்கமாக மாறியது. சுதந்திர போராளிகள் குழு, எதிர்ப்பு முன்னணி, அல்லா டைகர்ஸ், லஷ்கர்-இ-இஸ்லாம் என்று புதுப்புது பெயர்களில் உருவாகிற பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகளும் காஷ்மீரி அல்லாதவர்களும் குறிவைத்துக் கொல்லப்படுவது அதிகரித்தது.


படிக்க : காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !


இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீரில் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பல்வேறு சட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டன.

குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம், அவர்களில் மத்திய அல்லது பொதுத்துறை ஊழியர்களாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகளிலேயே குடியுரிமை வழங்கலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்றும், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகித பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதமாக குறைத்தும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. காஷ்மீரி மக்களின் உரிமைக்கு எதிரான இத்தகைய தொடர் தாக்குதல்கள் மக்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இன்னொருபுறம் மேற்சொன்னதைப் போன்று பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்களை அதிகரித்தன.

ஆக, மோடி-அமித்ஷா கும்பல்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் உருவாக்கிய குற்றவாளிகள். பாசிச ஒடுக்குமுறைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் மென்மேலும் அதிகரிக்குமே ஒழிய, என்றுமே அமைதியை நிலைநாட்டமுடியாது.


வெண்பா

Sri Lanka, Pakistan, Afghanistan: Dice in the Fight for Hegemony of US-China in South Asia (Part 1)

For more than 30 years, the US, which emerged as a superior superpower at the end of the cold war, unquestionably dominated the world. But this unipolar world order of the US is now shaken. On one side, the neo-liberal policy, which is the tool for US hegemony, has emerged as a total fiasco worldwide. On the other hand, Russia and China are challenging the unipolar world hegemony. The fight between these two camps determines the international politico-economic trends.

The fight for hegemony between these two camps is the hidden reason behind the politico-economic crisis that occurred in Sri Lanka, Pakistan and Afghanistan; especially the fight between the US and China.

China has now emerged as the world’s largest manufacturing hub. It has been exporting its goods to other countries at a cheaper rate. In order to expand its economic hegemony, China has started “New Silk Road” project. This New Silk Road joins various countries in Asia and Europe and will encompass land routes and maritime routes. This has become a challenge to the US hegemony. In order to counter China’s New Silk Road, Biden government had proposed a new initiative called “Build Back Better World”.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 2


By saying that there exists a security threat because of China, the US is pressurizing China militarily. China revealed about its plan to annex Taiwan according to the One China Policy. The US is deploying its forces in Taiwan under the name of military aid. Since QUAD was diluted as a result of India’s trade relations with Russia, the US intends to include Japan in NATO and expand its military presence in Asia.

Apart from pressurizing China externally, the US has been orchestrating coups in Sri Lanka and Pakistan to overthrow the pro-China and pro-Russia regimes by creating an economic crisis and installing a puppet rule. It has now emerged victorious too. Mahinda Rajapaksa regime in Sri Lanka and Imran Khan regime in Pakistan have been replaced with the puppet rules of Ranil and Shahbaz Sharif.

The US imperialism has destroyed Afghanistan in the name of “Fight against terrorism” and continuing the civil war for almost 20 years. On last October, after the withdrawal of US-NATO forces from Afghanistan, the interim Taliban government became close to China and Russia by initiating ties on politico-economic spheres. China is ready to include Afghanistan in its New Silk Road project. China has also signed new trade agreements with the Taliban regime.

The US did not want Afghanistan, a place with a great geo-political significance, to side with China. So, it is imposing economic sanctions at an international level and pressurizing the Taliban regime. The US froze the assets of Da Afghanistan Bank (Central Bank of Afghanistan). Afghanistan, which was already in drought, has become another Somalia as a result of US sanctions.

Understanding about the political trends of South Asia will enable the working people of this region to identify the reasons for the economic crises and to fight against the hegemonic forces.

Sri Lanka

As a result of people’s uprising which prolonged for more than a month, Mahinda Rajapaksa was forced to resign. The protests have crossed 50 days. The people gathered en mass in the Galle Face are continuing the protests and demanding for the resignation of Gotabaya and to arrest Mahinda and his goons for attacking the protesting people.

Ranil is being projected as a messiah who will solve the economic crisis. But he will only mortgage the country in the IMF through his ‘roadmap for economic recovery’. Even with such a loan, the economy is in such a crisis that it can’t be resolved immediately.

The debt and the foreign exchange crises are not accidental. It didn’t begin with the advent of corona as the ruling class press campaign.

The ongoing crisis has started in the 1970s, when Sri Lanka was mortgaged in the IMF and the World Bank. It was a result of relentless implementation of recolonization policies. Corona has only aggravated the situation.

At the same time, the crisis was intensified by the US-led imperialists to deter the pro-China stance of the Rajapaksa gang.

We have explained about this trend of economic crisis of Sri Lanka in our previous issue (October 2020) of New Democracy in an article entitled “Sri Lanka reeling under debt: Western imperialists desperate to dominate by intensifying the crisis”.

An excerpt from that article: “The pro-China actions of the Gotabaya government and non-cooperation with the strategic plans of the US have annoyed the US-led imperialists. With an intention to intimidate the Gotabaya government, the European Union (EU) has announced that it will end the tax concessions provided to Sri Lanka under the name of GSP (Generalized System of Preference)”.

The US-led imperialists have moved a step forward by successfully installing their puppet Ranil as the Prime Minister. Sri Lanka was made into a dice in the fight for hegemony of the US and China in South Asia.

During the regime of Mahinda Rajapaksa, Sri Lanka got unpayable loans from China in the name of ‘developing the infrastructure’. These loans acted as an instrument of hegemony for China. A few examples are mentioned below.

As Sri Lanka was unable to repay the loan it pursued for developing the Hambantota port, the port was sold to the Chinese Public Sector Company “China Merchants Port Holdings” by the Mahinda government. Moreover, 15,000 acres of land surrounding the port was leased for 99 years.

By utilizing 269 hectares of reclaimed land from the sea, a special economic zone called “Colombo Port City” is planned to be constructed by the Sri Lankan government.

This project is worth $ 1.4 billion and China Harbour Engineering Company had already begun its work. As a reward for this development project, 116 hectares of reclaimed land will be given to that Chinese company for a lease of 99 years. China is planning to include Colombo in its Silk Road project to strengthen its economic hegemony.

Not the Mahinda-Gotabaya government mortgaged Sri Lanka to China, but also it tried to deter the entry of the capital of ruling classes of other countries.

“The government of Maithripala Sirisena and Ranil Wickremesinghe, loyalists of US-led imperialism and Indian supremacy, planned to jointly develop the East Container Terminal (ECT) at the Colombo Port based on 2019 tripartite agreement with India and Japan. But within three months after assuming power, the Gotabaya government cancelled the project” – from the aforementioned article.

The US-led imperialists played their hand to worsen the foreign exchange crisis of Sri Lanka to stop the extreme inclination of Sri Lanka towards China. After the introduction of recolonization policies, the entire economy of Sri Lanka was tilted towards the US-led imperialists. This made the Rajapaksas conform to the US.

As the bourgeois press wrote, the Sri Lankan economy did not primarily depend on tourism alone. Readymade garments, porcelain products and rubber made a significant contribution to the GDP of Sri Lanka. They were produced solely for exporting.

The US and the EU are the top importers of these Sri Lankan products. That’s why cancellation of tax concessions (GSP) has aggravated the foreign exchange crisis.

““Former Prime Minister and current parliamentarian Ranil Wickremesinghe suggests the ruling party to approach the IMF to address the economic crisis. If we turn to the IMF, we can solve the economic crisis, but many social problems will arise. The terms of the IMF are now politically orientated. Therefore, the government does not need to go to the IMF”, Governor of the Central Bank of Sri Lanka Cabraal replied.” – From the aforesaid article. (In our previous article we have wrongly mentioned “Governor of the Central Bank of Sri Lanka” as “Finance Minister”)

But the Rajapaksa gang can’t stay in this stance till the end. Since April, the protests have intensified. The Rajapaksa gang reached to the IMF and had surrendered to the US as there was no other way and they had to save their designation.

We have explained this shortly in an article entitled “Sri Lankan people longing for a Revolutionary Party” in our website vinavu.com. An excerpt is provided below.

“Mahinda Rajapaksa initially rejected the opposition’s idea of borrowing from the IMF to recover from the economic crisis, but later set up a committee of his own to negotiate with the IMF.

Ajith Nivard Cabraal, a Chinese loyalist and close friend of Rajapaksa, who was the governor of the Central Bank of Sri Lanka, was ousted and replaced by Nandalal Weerasinghe, a former IMF executive.  Dismissed Ajith Nivard Cabraal was strongly opposed to borrowing from the IMF; He was the one who encouraged borrowing from China.

Mahinda Rajapaksa reshuffled his cabinet on April 18 in the name of ‘tackling the economic crisis’ to dispel the stigma among the people such as “family rule” and “corrupt rule”. A new cabinet of 17 members was formed and Basil, Chamal and Namal Rajapaksa were left out.

In the parliament, Mahinda surrendered, and said that the delay in borrowing from the IMF was wrong and that the crisis was due to some of his wrong decisions.

But people are not ready to believe any of these dramas. The struggles for the resignation of the Prime Minister and the President continued.

Despite his surrender, the United States did not help Rajapaksa because he had lost the moral support of the people and was not ready to fully trust the Rajapaksa mob. In talks with the IMF, it was agreed to pay between $ 300 million to $ 600 million, but the funds were not released until Rajapaksa’s resignation. In this way, the United States intensified the crisis.” – From the aforesaid article.

Now, everything happened according to the US’s plan and Ranil Wickremesinghe had become the Prime Minister. The stock market gained just after a few seconds after Ranil assumed office. Japan which accepted to provide $ 5 billion, released $ 2 billion immediately. The World Bank has approved to grant $ 600 million for importing basic amenities. The ruling class media is praising Ranil as ‘change bringer, political sage’ by mentioning the aforementioned things.

The US-led imperialists are now making their next move. First – stabilizing Ranil’s government. Second – diminishing the peoples protest.

Ranil has been the sole MP of his party; that too a nominated MP. Considering this situation, in order to stabilize Ranil’s government, there is a need for gaining of the support of MPs of other parties. This will be done through horse-trading. A tug-of-war is going on regarding this.


Also Read : The uprising of the working people that shook Sri Lanka! – Part 1


As of May 20, 13 persons from other parties took oath as Ministers in the Ranil government. Harin Fernando and Manusha Nanayakkara of Samagi Jana Balawegaya (United People’s Power) have been made as Ministers. Their party has said that disciplinary action would be taken against them. Party leader Sajith Premadasa said that they had violated the party decision to “not to a part of the cabinet”. For similar reason, Sri Lanka Podujana Peramuna (SLPP) has also announced that action will be taken against Mahinda Amaraweera and Nimal Siripala de Silva.

The stand of all the opposition parties is that they will provide ‘support from outside’ to the actions of Ranil, who has been sworn in as Prime Minister, to revive the economy. That is, all these traitors are complicit in the attempt to mortgage the country to the IMF.

However, the people did not want Ranil’s rule to continue with Gotabaya remaining as the President; Ranil is believed to be indirectly protecting the Rajapaksas.

That is why the opposition parties are fearing to directly participate in the government and are demanding for a general election. It may take a few more days for the tug-of-war and horse-trading to end.


Appu

பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!

3

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி தந்திரத்தைத் தந்த கம்யூனிச அகிலத்தின் தலைவராக இருந்த டிமிட்ரோவின் பல்கேரிய நாட்டில், பிரின் என்ற மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பான்ஸ்கோ-வில் 1909, டிசம்பர் 7-ம் தேதி பிறந்த நிகோலா வாப்சரோவ், 2-ம் உலகப் போரின் போது 1942 ஜூலை 23-ம் நாளில் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்டார். அவரது பாசிச எதிர்ப்பின் மரபை, உரிமையை வரித்துக் கொள்ளவும், பாசிச எதிர்ப்புப் போரைத் தொடரவும் இந்நாளில் நாம் சபதமேற்போம்!

நிகோலா வாப்சரோவ் ஒரு போர்க்குணமிக்க தொழிலாளி, களப் போராளி மட்டுமல்ல, கார்க்கி, மாயகோஸ்க்கி வழியில் சிறந்த கவிஞரும் கூட. இவர் 19-ம் நூற்றாண்டின் பல்கேரிய தேசியக் கவிஞரான ஹிரிஸ்டோவ் போடெவ்-வின் கவிதை மரபை வரித்துக் கொண்டவர். இவர் வாழ்ந்த காலத்தில் தனியாக இல்லை.

இவர் இங்கிலாந்தின் டேவிட் கஸ்ட் அல்லது கிரிஸ்டோபர் காட்வெல், ஸ்பெனின் லோர்கா, துருக்கியின் நசீம் இக்மத் பாஷா, ஜெர்மனியின் பெட்ரோல்ட் ப்ரெக்ட், இந்தியாவின் ஃபைஸ் அகமது ஃபைஸ்…  இன்னும் பல முற்போக்கு எழுத்தாளர்களின் சம காலத்தில் வாழ்ந்து, பாசிசத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த உன்னத தியாகி.


படிக்க : ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !


இரண்டாவது உலகப் போரின் சம காலத்தில், அதற்கு முன்னும் பின்னும், உலகெங்கும் அநீதிகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல ஜனநாயக சக்திகளும் களத்தில் நின்று பாசிசத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்துள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து நிலவிய பாசிச ஆட்சிக்கு எதிராக பிரிட்டனின் கிரிஸ்டோபர் காட்வெல்லும், பிரான்சின் ஜார்ஜ் பொலிட்சரும் போராட்டக் களத்தில் தோட்டாக்களுக்கு பலியான பாசிச எதிர்ப்புப் போராளிகள். ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராகப் போராடி, தூக்குக் கயிற்றில் உயிர் நீத்த செக் நாட்டின் ஜூலியஸ் ஃபூசிக் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

கனடாவின் மருத்துவர் நார்மன் பெதூன் சீனத்தில் செம்படைக்கு உதவச் சென்று உயிர் துறந்தார். அதே சீனத்தில் செம்படைக்கு உதவி உயிர் நீத்த இந்திய மருத்துவர் கோட்னிஸ்-சின் (இவர் இன்றைய குஜராத் பகுதியில் பிறந்தவர்) ஜனநாயக உணர்வே அவரை சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு உதவ உந்தித் தள்ளியது என்றால் அது மிகையல்ல. இந்த பாசிச எதிர்ப்புப் போராளிகளின் உன்னத வரிசையில் வைத்து போற்றத் தக்கவர் தான் வாப்சரோவ். இவர் ஒரு வகையில் தனித்துவம் மிக்கவர் தான்.

எளிய, வறிய குடும்பத்தில் பிறந்த வாப்சரோவ் இளம் வயதிலேயே கவிதை எழுதத் துவங்கினார். பல்கலைக் கழகத்தில் இணைந்து இலக்கியம் பயில விரும்பினாலும், குடும்ப வறுமைச் சூழல் இவரை ஒரு காகித ஆலையின் மெக்கானிக்காக நெட்டித் தள்ளியது. முன்னதாக ஒரு கடலோடியாக வேலை பார்த்த காலத்தில் புரட்சிகர மார்க்சியத் தத்துவம் அறிமுகமாகி இவரை ஆட்கொண்டது.

ஆலையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்தாலும் தொழிலாளர்களை அமைப்பாக்கும் வேலையையும் மேற்கொண்டார். பாசிசம் தனது கோரப் பிடியை இறுக்கிக் கொண்டிருந்த பல்கேரிய நாட்டில், குறிப்பாக தொழிலாளர் இயக்கத்தை மிக கொடூரமாக ஒடுக்கிக் கொண்டிருந்த சூழலில் இது மிகவும் சிரமமான வேலை.

தொழிலாளர் இயக்கத்தின் மீது அப்பட்டமான, அம்மணமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட அதே நேரத்தில் அவர்களைப் பிளவுபடுத்தவும், போராட்ட இலட்சியத்தை சிதைத்து, போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் ஊடகங்களில் வரம்பற்ற பொய்களும் அவதூறுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. வாப்சரோவ் தனது ஒரு கவிதையில் இது பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

‘என்னவொரு போராட்டம் இது
மக்களின் வாழ்வைத்
தட்டியெழுப்புவதற்கு
அவர்களின் வாழ்க்கை மீது
படிந்து
அவர்களின் வாழ்வை
அழுத்திக் கொண்டுள்ள
பொய்களின்
பொதி மூட்டைகளை
உடைத்தெறிவது!’

(தற்போதைய பார்ப்பன பாசிச பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயலை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல இந்த வரிகள் உள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா?)

இவர் மிகவும் ஜனரஞ்சகமான, முற்போக்கான ஒரு நாடக மன்றத்தையும் அரசின் கெடுபிடிகளுக்கிடையிலும் தொடர் சென்சார் கட்டுப்பாடுகளுக்கிடையிலும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். மக்களிடையே இலக்கிய சிந்தனைகளை உருவாக்கினார். மார்க்சிய படிப்பு வட்டங்களை அமைத்து, தொடர்ந்து நடத்தினார்.

1936-ல் ஒரு ஆலை மூடல் நடவடிக்கைக்குப் பின் ஆலையைத் திறந்த நிர்வாகம் 300 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. இதற்கெதிராக தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி அனைவரையும் வேலையில் சேர்த்தார். ஆனால் நிர்வாக இவரை வேலையிலிருந்து துரத்தியடித்தது. வேறு வழியின்றி தனது மனைவி குழந்தையுடன் தலைநகர் சோஃபியாவிற்கு குடிபெயர்ந்தார்.

முதலாளிகளால் வெறுத்தொதுக்கப்பட்ட இவருக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. கையில் சேமிப்பு ஏதுமின்றியும், புதிய நகரில் நண்பர்கள் பரவலாக இல்லாத சூழலில் வறுமையின் கோரப் பிடியில் தள்ளப்பட்ட இவர், அந்த வறுமையில் தனது பிஞ்சுக் குழந்தையைப் பறி கொடுத்தார்.

இறுதியில் ஒரு மாவு ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். எந்தப் பாதுகாப்புச் சாதனங்களும் இன்றி மிக கொடூரமான சூழலில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததால் டிபி என்ற கொடிய காச நோய்க்கு எண்ணற்ற தொழிலாளர்கள் பலியாயினர். இவர்களின் நினைவாகவும் அந்த கொடூர வேலை சூழலைப் பற்றியும் பல கவிதைகள் எழுதிய இவர், தானே டிபி நோய்க்கும் ஆளானார்.

இதனால் இந்த வேலையை விட்டுவிட வேண்டியதாகியது. 1939-ல் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்த இவர் ஓராண்டுக்குப் பின் நகர எரியூட்டிக் கிடங்கில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த கால கட்டம் மிகக் கடுமையான உடலுழைப்பைக் கோரிய காலகட்டம். இந்த கடும் வேலைக்குப் பின் ரகசியமாக தொழிலாளர்களைத் திரட்டும் அரசியல் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

இரவு மிகத் தாமதமாக வந்து படிப்பது, பின் கவிதை எழுதுவது என மூளை உழைப்பையும் கடுமையாகச் செய்தார். இப்படியான கடும் போராட்டத்தின் விளைவாக இயல்பாகவே இவரது கவிதைகள் புடம்போடப்பட்ட உண்மைகளைத் தாங்கியிருந்ததால் மக்களால் பெரிதும் விரும்பப் பட்டன.

1941-ல் பல்கேரிய ஆளும் வர்க்கத்தால், சோசலிச சோவியத் மீது தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக நாஜி ஜெர்மன் படைகளிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது. வாப்சரோவ் ஆயுத எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து துடிப்பாக செயல்பட்டு, ‘இராணுவ மையத்தின்’ முக்கியமான செயல்வீர்ராக ஆனார். மெக்கானிக்காக வேலை செய்த அனுபவம் இந்த கால கட்டத்தில் இவருக்கு மிகவும் கைகொடுத்தது. இது மிக கடுமையான உடலுழைப்பையும் ஆபத்தையும் கோருகின்ற வேலைச் சூழல்.

இவருக்கு கவிதைகள் எழுத நேரமே இல்லாமற் போனது. ஆனாலும் தோழர்கள், நண்பர்கள் கவிதை எழுதும்படி ஊக்குவித்தனர். அவரது நண்பர் ஒருவர் கூற்றுப்படி, “இந்தத் தருணத்தில் ஆயுதங்களால் உலகின் தலைவிதி தீர்மாணிக்கப்பட்டாலும், (மக்களைத்) தட்டியெழுப்பும் சமகாலக் கவிதை ஆயுதத்திற்கு சற்றும் குறைவில்லாதது”.

1942-ல் கைது செய்யப்பட்ட வாப்சரோவ் மிகக் கொடூரமாக, மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டு 1942 ஜூலை 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மரணத்தின் இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்தார். அவரது கடைசிக் கவிதை அவரது துனைவியாருக்கு எழுதப்பட்ட ஒன்று. இப்போதும் நம்மை எழுச்சியுறச் செய்யும் ஒன்று.

இந்தப் போராட்டம் கடினமானது ஈவிரக்கமற்றது
அவர்கள் கூறுவது போல போராட்டம் காவியமானது
நான் வீழ்வேன். மற்றொருவர் எனது இடத்தை எடுப்பார்—-
தனிப்பட்ட பெயரில் என்ன இருக்கிறது?

துப்பாக்கிச் சனியனின் சுடுதலுக்குப் பின் —- புழுக்கள்
இந்த எளிய லாஜிக் இப்படிச் செல்கிறது
ஆனால் புயலின் போது நாங்கள் உங்களுடன் இருப்போம்
அன்பான மக்களே, நாங்கள் உங்களை அவ்வளவு நேசிக்கிறோம்.
(மதியம் 2 மணி – 23 ஜூலை 1942)

வரலாறு பற்றிய வாப்சரோவின் பார்வை முதலாளித்துவ தனி நபர் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மார்க்சியக் கண்ணோட்டம் கொண்டது. கம்யூனிச அறிக்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது போல, “அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்ற தனித்துவமிக்க, மக்களை மையப்படுத்திய வரலாற்றுப் பார்வையைக் கொண்டது.


படிக்க : பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !


ப்ரெக்ட் ஒரு பாடலில் எழுதுவார்.

தேபசின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் பார்க்கலாம் அரசர்களின் பெயர்களை.
மன்னர்களா பாறைக் கற்களைச் சுமந்தார்கள்?

இதே போன்று வாப்சரோவும் வரலாறு பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். ஆனால் ப்ரெக்ட் கவிதையைப் போல அப்படி பலரின் கவனத்தைக் கவராமலே போய்விட்டது வாப்சரோவின் கவிதை. ஆனால் இன்றைக்கும் மிகத் தேவையான ஒன்று!

வரலாறே, நீ எங்களைக் குறிப்பிடுவாயா
உனது மங்கிப் போன பட்டியலில்?

எனத் தொடங்குகிறார். முதலாளிகளின் நிறுவனங்களில் உரிமை கோரவில்லை. மாறாக, அவற்றை ரத்தமும் சதையுமான மக்களாகப் பார்க்கிறார்.

உன்னை செய்திகளால் கொழுக்க வைத்தோம்
உனது தாகத்தை மிக உயர்ந்த முறையில் தணித்தோம்
படுகொலை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தின் ரத்தத்தால் அல்லவோ?

எங்கள் வாழ்க்கை குறிப்பிட ஏதுமற்றதா
எங்கள் வாழ்க்கை அசைபோட்டுப் பார்க்க ஏதுமற்றதா?
தோண்டியெடுத்தால், விசம் நிரம்பியிருக்கும்
கோப்பையில் சுவைக்கையில் கசக்கும்

கவிதை கடைசியில் இவ்வாறு முடியும்:

அந்த கடின உழைப்பிற்கும் துன்பத்திற்கும்
நாங்கள் பரிசுகளை எதிர்பார்க்கவில்லை,
மாறாக எங்கள் நிழற்படங்களைக்
காலண்டர்களில் எதிர்பார்க்கவில்லை

எங்களின் கதைகளை எளிமையாகச் சொல்லுங்கள்
நாங்கள் பார்க்க இயலாதவர்களிடம்,
எங்களுக்கு மாற்றாக வந்திருப்பவர்களிடம் சொல்லுங்கள்,
நாங்கள் அச்சமின்றி தீரமாகப் போரிட்டோமென்று

ஆம்! வாப்சரோவ் கூறுவது போல நமது வரலாறு, வர்க்கப் போராட்ட வரலாறு, நமது வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும்! பாசிசத்திற்கு எதிராக அச்சமற்றுப் போராடினோம் என்று! வாப்சரோவ், தோழனே! கவிஞனே! பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க உனது பாதையில் அச்சமின்றி போராடுவோம் என உனது நினைவு நாளில் உறுதியேற்கிறோம்!

(குறிப்பு : REVOLUTIONARY DEMOCRACY, Vol. VI. No.1.  ஏப்ரல் 2000 இதழில் சி.என். சுப்ரமணியன் என்பவர் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)


நாகராசு

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா?

போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !
போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு !

பத்திரிகையாளர் சந்திப்பு

22.07.2022 – வெள்ளிக்கிழமை 12 மணி – சென்னை பத்திரிகையாளர் மன்றம்

தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்;
பேராசிரியர் மார்க்ஸ்,தேசியத் தலைவர், NCHRO;
பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்;
சு.கோபால்,  CPDR-TN,  பொதுச் செயலாளர்;
வழக்கறிஞர் ஜீவா CPCL-TN,  சென்னை மாவட்ட பொறுப்பாளர்;
தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி;
தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி;
தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?

0

டந்த ஜூலை 18 அன்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 104 என்ற மன நல ஆலோசனை உதவி மைய எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். 104 என்ற எண்ணை இலவசமாக தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மருத்துவர்களிடம் பேசி குறைத்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கச் சொல்லும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதே மாணவர்கள் யாரால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை?

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவே தலைக்குமேல் குவிக்கப்படும் பாடச்சுமையால் மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதில் தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு நடுப் பகுதியிலேயே 12-ம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகின்றனர். இவ்வாறு ஆண்டு தொடங்கியதிலிருந்தே தொடர்ச்சியாக தேர்வு, படிப்பு என மாணவர்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இதனால் பாடச் சுமை தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.


படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !


இதற்கிடையில் நீட் தேர்வு வந்ததிலிருந்து, பன்னிரண்டு ஆண்டுகள் படித்த படிப்பு முக்கியமில்லை என புதிதாக NCERT முறையில் படித்தால்தான் மருத்துவ படிப்பிற்கு சீட்டு பெற முடியும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்விற்கும் படிக்க சொல்லி மனதளவில் அவர்களை பாதிப்படைய செய்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர்களின் மனநிலை மாற்றப்படுகிறது.

நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். உண்மையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? இல்லை அவர்களின் உளவியலை பற்றி சிறிதும் சிந்திக்க முடியாத அதிகாரத்தில் இருக்கும் மூடர்களுக்கா?

மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது யாருக்கு ?

தமிழ்நாட்டில் மனநல ஆலோசனை தேவைப்படுவதுபோல் நடந்து கொள்பவர்கள் யார்? மின் தடை ஏற்படுவதற்கு காரணம் மின் கம்பிகளில் அணில்கள் ஓடுவதுதான் என்கிறார் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை ஊழியர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததற்காக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார். விருதுநகர் மாவட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அந்த மனுவை வைத்தே தலையில் அடிக்கிறார். பசு மாட்டுக்கு மடம், மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை என ‘திராவிட’ ஆட்சியில் சங்கி வாடையை மணக்க செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

மேலும், தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மின் கட்டணத்திற்கு எதிரான போராட்டம், சாத்தான்குளம் போலீசு செய்த படுகொலைக்கான நீதி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டோர்க்கு நீதி என மேடைக்கு மேடை கூவிய திமுக-வினர், இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அதை எல்லாம் நாங்களா சொன்னோம் என்பதுபோல குட்டிக்கரணம் அடிக்கின்றனர். தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டு அதிமுக என்ன செய்ததோ அதை அப்படியே செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முன்பு நீட்-ஐ ஒழிப்போம் என்று வீராவேசமாக பேசியவர்கள், தற்போது பெயரளவில் நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு கள்ளமௌனம் காத்து வருகின்றனர். ஒன்றிய அரசோ அந்த தீர்மானத்தை கழிவறை காகிதமாக கூட மதிக்காமல் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது.


படிக்க : மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!


எல்லா ஆண்டும் மக்கள் போராட்டத்தோடு நிறைவடையும் நீட் தேர்வோ இந்த ஆண்டு போராட்டங்களுக்கான அறிகுறி சிறிதும் இல்லாமல் மௌனமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியில் இருக்கும் எதிர் கட்சிகள் கூட தங்களுடைய சுய மரியாதையை எங்கோ தொலைத்து விட்டு ‘கூட்டணி தர்ம’ கீதம் பாடி கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களின் பொய் மூட்டைகளுக்குள் மூச்சி திணறி பலியானவர்கள் என்னவோ “மருத்துவராக வேண்டும்” என்று கனவு கண்ட அப்பாவி மாணவர்கள் தான்.

இப்படி ஆளும் வர்க்கத்திடம் சமரசம் செய்துகொண்டு தங்களுடைய சந்தர்ப்பவாததிற்கு மாணவர்களின் கனவையும் உயிரையும் பலியிடும் சமரச அற்பவாதிகளான ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தான் முதலில் மன நல ஆலோசனை வழங்க வேண்டுமே தவிர மாணவர்களுக்கு அல்ல!


பாரி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் ! | வீடியோ

சாதாரண மக்கள் எப்போதும் கோபம் கொள்வதில்லை. ஆனால், அலட்சிய செயல்பாடு கோபத்தை தூண்டும். இருபது ஆண்டுகாலம் கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியின் தனியார்மயக்கொள்ளையையும் மரணங்களின் அலட்சியங்களையும் எதிர்த்தே மக்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.

மக்கள் மீதான அலட்சியப்போக்கை பலநாட்களாக தமிழக அரசு கையாண்டதன் விளைவே மக்களின் கோபம் கள்ளக்குறிச்சியில் அதிகரிக்க காரணம். தன் மகளை மறுக்கூராய்வு செய்யவேண்டும் என்ற சாதாரணக்கோரிக்கையை கூட நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியது போலீசும் மாவட்ட நிர்வாகமும்.

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள். இதுபோன்ற பல்வேறு விளக்கங்களை இந்த காணொலியில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் !

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்

கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை பாதுகாக்கும் வகையில் செயல்படும் திமுக அரசு போராடும் மக்களை ஒடுக்குகிறது. கள்ளக்குறிச்சி மர்ம மரணம் தொடர்பான பல்வேறு விளக்கங்களை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

The uprising of the working people that shook Sri Lanka! – Part 2

The uprising of the working people that shook Sri Lanka! – Part 1

The uprising of the working people that shook Sri Lanka! – Part 2

Rajapaksa feared the working class!

In April, mass protests took place not only in Galle Face, but throughout Sri Lanka.  Workers, businessmen, civil servants, doctors, university students, Christian priests, Buddhist monks and people from all walks of life all joined in their own way in the anti-government struggles.

In some places, police firing took place. Especially in Rambukkana, on April 19, the police fired to dissolve the protest which lasted for more than 8 hours. The protest was for condemning the rise in prices of fuels. One person was killed and 12 were injured in the firing.

The working class people had to take the matter in their hands to make Mahinda Rajapaksa to resign. He resigned only after being terrified by the protests of the working class.

After talks by diverse union leaders, 1,000 unions jointly announced a nationwide one-day strike on April 29. The trade unions belonging to the ruling party Sri Lanka Podujana Peramuna (SLPP) also joined the strike.


Also Read : A Revolutionary Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation


The working people including Post office workers, bank employees, university professors, school teachers, railway workers, bus drivers, auto drivers, tea plantation workers had hampered the functioning of Sri Lanka for a day.

Colombo market, which is usually full of traders and thronged with people, remained vacant during the strike. Doctors and nurses, who are essential workers, used their lunch breaks to stage two-hour demonstrations in support of the general strike, as it was not possible for them to participate in the full-day strike.

After a successful one day strike, the workers warned that “Gotabaya and Mahinda Rajapaksa must resign immediately or else they will face a series of strikes from May 6”. As said earlier, the workers paralyzed Sri Lanka again

The workers hoisted black flags and staged demonstrations at the gates of the factories. And political circles began whispering that Mahinda Rajapaksa was about to step down from his position. The government declared a state of emergency in the wake of the workers’ uprising.

People retaliated, Manhinda escaped!

Before announcing his resignation on May 9, the angry Mahinda Rajapaksa summoned 3,000 thugs to Allari Palace by bus and rallied in the name of a party meeting. Hambantota prisoners were among them. Mahinda gave money and alcohol to everyone and resorted to violence against people who were fighting in Galle Face.

The thugs entered the protest camps and set fire to the tents. They attacked the people, who were protesting, with murderous weapons such as iron rods and sticks. People who were protesting peacefully were not just mute spectators. They retaliated by attacking the Rajapaksa mob and thrashed them.

The rallied crowd attacked the Rajapaksa’s party members, barricaded them and smashed their buses with JCB machines and set them on fire.

In many parts of the country, houses of SLPP party Ministers, MPs and Mayors were besieged by the people. They threw stones at them and expressed their anger. Protesters set fire to Mahinda’s house in Kurunegala.  The house of the Mayor of that city belonging to the SLPP party was also set ablaze.  People repeatedly tried to break into the Prime Minister’s official residence in Colombo.  Ruling party MP Amarakeerthi, who was terrified of being trapped by protesters, shot himself inside his car.

The Rajapaksa mob never dreamt of such retaliation. Mahinda Rajapaksa resigned and fled and took refuge in the Trincomalee naval base to save his life. The angered people gathered outside the naval base and protested by shouting the slogan, “Don’t defend the looter!”, “Send him outside”.

The class unity that erased historical ethnic bigotry!

Above all, the significance of the struggle lies in the class solidarity which emerged among the Sinhala working people, who were overwhelmed by ethnic fanaticism deliberately created by the ruling class for many years. They have discarded it when they realized by experience, who their real enemy is. The highlight of the struggle was in the class solidarity with which working people of all religions and ethnicities – Sinhalese, Tamils, Muslims and Christians – rallied together.

In 2019, when Mahinda Rajapaksa assumed power, he blatantly claimed that he had come to power with the support of the Sinhalese. He was ousted today by the same Sinhalese people. In order to advertise himself as a tolerant person, he declared Galle Face as a site for protest. But now the situation is that the Sinhala majority that chose the Rajapaksas captured the Galle Face and created a small town called “Gota Go Gama”. What a tasty revenge story!

***

On May 9, Sinhala protesters searched for the pro-Rajapaksa thugs, who attacked the people. By chance, they stopped a Tamil family. But after finding out that they were Tamils, the Sinhalese protesters immediately apologised to them. In another incident, one of the protesters stopped a vehicle and demanded Rs. 500 from the driver. Other protesters who saw this reprimanded him and demanded a refund.  “We are revolutionaries, not rowdies” the protesters said.

The person who posted the above incident on Twitter is said to be a serious Tamil ethnic fanatic who hates Sinhalese.  But, this is the personal experience of his relatives; He was moved by the way that the Sinhalese treated the Tamils.  (Source: Kalaiyagam YouTube)

May 18, the day of the Mullivaikkal genocide, is usually celebrated every year by the Sri Lankan army as Victory Day.  The Galle Face where the President’s official residence is located will be in a festive mood. But today, the Sinhalese are paying tribute to the Eelam Tamils at the same ground.  This is the first time in 13 years that a tribute has been made to the remembrance of the massacre of Tamils in southern Sri Lanka, which is predominantly Sinhalese. The Mullivaikkal genocide is usually remembered only in the north-eastern provinces.

The Sinhalese people carried banners with slogans such as “We apologize for the massacre of Tamils” and “Rajapaksa government should answer to the massacre of the Tamils”.

A.R.V Loshan, a senior journalist in Sri Lanka, said, for the first time in his life he saw the problems of Tamils being talked about in a struggle by the Sinhalese people; He said that he saw slogans such as “war criminals must be punished”, “Justice for the missing must be served”, and “Justice must be done for the Mullivaikkal massacre”.


Also Read : Our revolutionary greetings to the working people of Sri Lanka!


A Sinhalese man shared his experience with the BBC Tamil media, saying, “I can now imagine what the government has done to the Tamil people by directly seeing how the government is now oppressing the Sinhalese people so far”.

Not only in regard to the Tamil genocide, a silent protest has been held on April 17 (this year’s Easter day) in memory of the people killed in the attack on 2019. It demanded to find the culprits behind the 2019 Easter bombings.  Similarly, on May 3, Tamils and Sinhalese were cooking together for their Muslim companions to break the Ramadan fast.

Sinhalese, Tamils, Muslims and Christians are not enemies of each other. But religious fanaticism and ethnic hatred are the enemies of all the sections of the population. The working people of Sri Lanka have understood this through class struggle.

This understanding of the people on class unity has made the ethnic-hatred fascists fearful.  Fascists are not invincible. The uprising of the working people of Sri Lanka provides us the hope to fight for the annihilation of saffron fascism in India.

Boobalan

தீஸ்தா செதல்வாட் கைது : பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! | வீடியோ

ஜூன் 24 ஆம் தேதி குஜராத் படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அந்த வழக்கை தொடுத்த தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஓர் ஜனநாயப் படுகொலை.

2002 குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளிகளின் என்று அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிவும். இருந்து விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். இந்த மோடி-அமித்ஷா கும்பல் நீதிமன்றத்தையே மிரட்ட கூடியவர்கள். எனவே இவர்கள் ஓர் பாசிச நடவடிக்கையை அரங்கேற்றுகிறார்கள்.

PUCL மாநில செயலாளர், ஜான் வின்சென்ட், PUCL வழக்கறிஞர் C.கணேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியார் தீஸ்தா செதல்வாட் கைது பற்றிய பல்வேறு விளக்கங்களை இந்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : கல்வி தனியார்மயத்தை எதிர்த்த அரசியல் போராட்டங்களே தீர்வு! | வீடியோ

ள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.காரர்கள்தான் கலவரத்தை தூண்டினார்கள் என்று திமுகவை விமர்சிக்காத ஓர் கருத்து உளவுகிறது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை, துத்துக்குடி மக்கள் படுகொலையை நாம் பார்த்தோம் ஆனால் எடப்பாடி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுகிறார். எந்த தகுதியும் இல்லாத இந்த கருத்தையும் நாம் புறம் தள்ளுவோம்; மற்றும் சிலர், மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்கிறார்கள். இன்னும் சிலர் இப்பிரச்சினையில் அரசு தலையீடு தவறாக உள்ளது என்று கருத்து கூறுகிறார்கள்.

இவை அனைத்து கருத்துக்களையும் நாம் ஏற்க கூடியதாக இல்லை. உண்மையில் அரசு என்பது தனியார்மயத்தையும், தனியார் முதலாளிகளையும் வாழவைக்கத்தான் – அவர்களை பாதுகாக்கத்தான் – செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட அரசு ஒருபோது மக்களுக்கு உதவப்போவது இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்று போராடும் மக்களை மட்டுமே ஒடுக்கும். கடுமையான போராட்டங்களினால் மட்டுமே அரசை அடிபணியவைக்க முடியும். இதற்கு ஸ்டெர்லைட் போராட்டம் மிக சிறந்த உதாரணம்.

தனியார் கல்வி நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியதுதான் அரசின் வேலை. மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல. கல்வி தனியார்மயத்தின் விளையே இந்த மாணவின் மரணம். மக்கள் போராட்டம் அதை எதிர்த்துத்தான் நடக்கிறது. எனவே கல்வி தனியார்மயத்தை ஒழிக்காமல் கள்ளக்குறிச்சி மாணவியை போன்ற மரணங்களை நாம் தடுக்க முடியாது.

கள்ளக்குறிச்சி கல்வி தனியார்மய போராட்டம் குறித்தும், போராடும் மக்கள் குறித்து இந்த காணொலியில் விளங்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு

21.07.2022

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா?

போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !
போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு !

பத்திரிகையாளர் சந்திப்பு

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள் : 22.07.2022 – வெள்ளிக்கிழமை
நேரம் : 12 மணி

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்து போனார். அவருடைய மர்ம மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒரு சாதாரண கோரிக்கையைக்கூட உடனே நிறைவேற்றாத  தமிழக அரசின் செயல்பாடே அங்கே அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நியாயத்தை மறுத்துவிட்டு ஏற்பட்ட வன்முறையை மட்டுமே காரணம் காட்டி தமிழகம் முழுவதும் பலரை கைது செய்து சித்திரவதை செய்தது  எடப்பாடி அரசு.

அதைப்போலவே கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறுமியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய மக்களின் நியாயத்தை மறுக்கும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,  இறந்த  மாணவியுடைய தாயாரின் வீடியோவை  யார் பகிர்ந்தார்களோ,  அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கூறினார்களோ, போராடினார்களோ  அவர்களை தேடுதல் வேட்டை மூலம் கைது செய்து கொண்டே இருக்கிறது.தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளின் வாசலில் போலீஸ் குவிக்கப்படுகிறது.

போராடுவதற்கும் கருத்து கூறுவதற்கும்  உள்ள அடிப்படை உரிமையை மறுத்து தமிழ்நாடு அரசும் போலீசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று கருத்து தெரிவித்தவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்கிறது.

இதை கண்டிக்கும் விதமாகவும்  போராடிய மக்களை உடனே விடுவிக்க வேண்டும், அவர்கள் மீதான வழக்கை கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசுக்கு கட்டுப்படாமல் கடந்த திங்கள் அன்று விடுமுறை அளித்த 987 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீஸ் ராஜ்ஜியத்தை உடனே நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 22.07.2022 வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. ஊடகவியலாளரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இச்செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளவர்கள் :

♦ தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்
♦ பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO
♦ பேராசிரியர் சங்கரலிங்கம்,PUCL-TN, மாநிலத் தலைவர்
♦ தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
♦ சு.கோபால்,  CPDR-TN, பொதுச் செயலாளர்
♦ வழக்கறிஞர் ஜீவா CPCL-TN, சென்னை மாவட்ட பொறுப்பாளர்
♦ தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை,
99623 66321.