Monday, August 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 186

மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்

ஊடகச் செய்தி

08-02-2022

தமிழ்நாடு அரசே! மதக் கலவரத்தைத் தூண்ட முனைந்துவரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்!
தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றிடு!!

ஆர்ப்பாட்டம்

ணக்கம். அரியலூர் மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து மத வன்முறையைத் தூண்ட முனைந்து வரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யவும் தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தி பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 4:00 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியா, தமிழக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்தன.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் சதிஸ்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாளர் மொய்தீன் அப்துல் காதர், மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைவர் வெற்றிவேல் செழியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புச் செயலாளர் மகிழன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன் ஆகியோர் உரையாற்றினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விசயத்தில் பாசக, வி.எச்.பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்டி வருகின்றன.

படிக்க :

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !

குறிப்பாக, அந்த மாணவியிடம் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 45 விநாடி காணொளி ஒன்றை சனவரி 20 அன்று மதியம் 3:47 மணிக்கு பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். பாசக தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோதும் இது போன்ற ஒரு முக்கிய காணொளியைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் அரசியல் பரப்புரைக்கான பொருளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

”மதமாற்றம் தமிழகத்திலே வேகமாகப் பரவுகின்ற விசச் செடி” என்று பாசக தலைவர் அண்ணாமலை செய்தியறிக்கை வெளியிட்டார். கிறித்தவ மிசனரிகளுக்கு எதிராக மாணவியின் தற்கொலையைத் திருப்பிவிடும் முயற்சியில் பாசக தலைவர் தொடங்கி அதன் முக்கியத் தலைவர்களான எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், மனோஜ், குஷ்பூ உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, சனவரி 23 ஆம் நாள் கோவை மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேலத்திலும் ஒரு கிறித்தவ பள்ளி மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்றுள்ளனர்.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிறித்தவ வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது காவிக் கும்பல் அங்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் ஊடகங்களில் தெரிய வந்த நிகழ்வுகள். இன்னும் வெளியே அதிகம் அறியப்படாமல் கிறித்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றது.

இந்நிலையில் சனவரி 27 அன்று மாணவியிடம் இருந்து பெறப்பட்ட முழுமையான காணொளியை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதில் அவர் தன்னை யாரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று தெளிவாகச் சொல்வது அனைத்துச் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

மொத்தத்தில், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் பயன்படுத்தி மதச்சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறித்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பாக பாசகவினர் இதைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

மாணவியின் அடையாளம், முகவரி, பெயர், அகவை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் பெயர் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது சிறார் நீதிச்சட்டம், 2015 இன் பிரிவு 74(1) இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை அறியாமலும் அறிய முற்படாமலும் அதைப் பொறுப்புடன் காவல் துறையிடம் ஒப்படைக்காமலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு கலவர அரசியலுக்கு முனைந்தது பொறுப்பற்ற, உள்நோக்கம் நிறைந்த செயலாகும். பாசக தலைவர் அண்ணாமலை மீது பிரிவு 153, 505 (1) (b), பிரிவு (505) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சமூக நீதி, பல்வேறு சமயத்தவரிடம் இருக்கும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் நோக்கில் பொய்ச் செய்தியைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயலும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்துள்ள அமைப்புகள் இணைந்து மாநில காவல் தலைமை இயக்குநரிடம் கடந்த 29-1-2022 அன்று புகார் மனுவைக் கொடுத்தனர். மேலும் திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளரிடம் இதை ஒத்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்தே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காவிப் பாசிஸ்டுகள் இந்தியாவின் தலைநகரில் இருந்தபடி இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு அறைகூவல் விடுகின்றனர். மும்பை மாதிரி, குசராத் மாதிரி, முசாபர் நகர் மாதிரி, தில்லி மாதிரி என வகைவகையாக மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை சங் பரிவார அமைப்புகள் நிகழ்த்தி வந்துள்ளன. இப்போது கர்நாடகாவில் பரிசோதித்து பார்த்த , கிறித்தவர்களுக்கு எதிரான மங்களூர் மாதிரி என்ற ஒன்றை தமிழ்நாட்டில் செய்து பார்க்க துடிக்கின்றனர். அதன் பகுதியாக எல்லா முனையில் இருந்தும் மத மாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க :

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

வெறுப்பு பேச்சுகள் சிறுபான்மையினருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறைக்கு களத்தை தயார்ப்படுத்துகின்றன. மக்களின் மனங்களில் வன்முறை வெறியாட்டத்திற்கான ஏற்பை ஏற்படுத்துகின்றன. ஆனால, அவை பெரும்பாலும் கண்காணிப்புக்கும் கட்டுபடுத்தலுக்கும் உள்ளாவதில்லை. மேலும், அரசு இயந்திரம் குறிப்பாக நீதித்துறை, காவல் துறையிலும் பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை ஆழ வேரூன்றி உள்ளது. இந்த மெய்நிலையும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் செய்து விடுகிறது.

காவிப் பாசிஸ்டுகளின் கையில் ஒன்றிய அரசின் அதிகாரம் இருக்கும் நிலையில், கடந்த ஏழரை ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் தடுக்கவும் பாதிக்கப்படு்வோருக்கு நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்யவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு ஒன்று (( Prevention of Communal and Targetted Violence (Access to Justice and Reparations) Bil 2011 ) கடந்த 2011 இல் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவே இல்லை.

இன்றைய அவசர, அபாயகரமான நிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய சட்டம் ஒன்றை மாநில அளவில் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.

இப்படிக்கு,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…

துநாள் வரை, ‘இந்தியக் குடியரசில்’ இருப்பதாக காட்டிக்கொண்ட பெயரளவிலான மதச் சார்பின்மை, மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கோட்பாடுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டுவிட்டது.
இனிமேல் இந்த அரசை ‘இந்தியக் குடியரசு’ என்று அழைக்கத் தேவையில்லை, இந்து ராஷ்டிரக் குடியரசு என்றே அழைக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மொத்த அரசுக் கட்டமைப்பையும் காவிமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இதற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள ‘குடியரசு’ தின நிகழ்ச்சிகளே சாட்சியம்!
வழக்கமாக டெல்லியில் நடைபெறும் ‘குடியரசு’ தின அணிவகுப்பில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களும் பங்குபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரம், வரலாற்றை பிரதிபளிக்கச் செய்வதே இதன் நோக்கம்.
படிக்க :
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் வெளியீடுகள் : கொரோனா || காவி கார்ப்பரேட் பாசிசம்
மோடி ஆட்சியின் கீழ், இந்த ஆண்டு நடைபெற்ற 73-வது குடியரசு தின அணிவகுப்பிலோ மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலனவை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுடையது.
தென்னிந்தியாவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நுழைவாயிலாக உள்ள கர்நாடகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்த்தியை, மத்திய அரசின் தேர்வர் குழு கீழ்த்தரமான பல காரணங்களைச் சொல்லி புறக்கணித்தது.
முதன்மையாக, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை ஊர்தியின் முகப்பிலே வைத்த காரணத்தால்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. “வ.உ.சி. ஒரு வணிகர்தானே. அவரை எப்படி விடுதலைப் போராளியாக கருதுவது?” என்று தேர்வர் குழு கருத்து தெரிவித்ததாம். ஆனால் பாரதி சிலையை ஏற்றுக் கொண்டார்களாம். பாரதி வெள்ளையனை எதிர்த்து ஆயுதமேந்திய கதை நமக்குத்தான் தெரியவில்லை.
மற்றபடி, “சுதேசியமே, சுயராஜ்ஜியத்தின் பாதை” என்று போராடிய வ.உ.சி.யை, நாட்டை அந்நியனுக்கு கூட்டிக் கொடுக்கும் மறுகாலனியாக்க எட்டப்பர்கள் வெறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
இதே போல கேரளாவில், பார்ப்பன மதத்தை நிறுவனமயப்படுத்திய ஆதி சங்கரனை சேர்க்காததால், சாதி எதிர்ப்பு சீர்த்திருத்தவாதி நாராயண குரு இடம்பெற்ற ஊர்த்தியை தேர்வர் குழு ஏற்கவில்லை.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை முதன்மையாக நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருந்தாலும் “கோதான் நியாய் யோஜனா” என்ற பெயரில் கோமாதாவின் (பசு) பயன்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சதீஷ்கர் ஊர்திக்கு அனுமதியளிக்கப்பட்டது, அதற்குச் சான்று.
உத்தரப் பிரதேச அரசின் ஊர்தியில் காசி விசுவநாதர் கோயிலும் கர்நாடக அரசின் ஊர்தியில் அனுமனும் இடம்பெற்றிருந்தது, ‘குடியரசு’ தின அணிவகுப்பை கோயில் திருவிழாவைப் போல காட்சிப்படுத்தியது. தங்களது சித்தாந்தத்திற்கு உகந்தவைகளை காட்சிப்படுத்தியதும் தொந்தரவானதை நிராகரித்ததும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அராஜகச் செயல் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
இது பல்தேசிய இனங்களின் தனித்த பண்பாடு, வரலாற்று அடையாளங்களை துடைத்தொழித்து இந்தியாவை “ஒரே நாடு, ஒரே பண்பாடு” என்ற அடிப்படையில், இந்து ராஷ்டிரமாக கட்டியமைக்க முயலுவதன் வெளிப்பாடு. தேசிய இனங்களுக்கு செலுத்தபட்ட அவமரியாதை!
புதிய ஜனநாயகம்

நடுநிலைவாதம் – லிபரல்வாதம் என்பது என்ன? || ராஜசங்கீதன்

றிவுஜீவித்தனம் என நம்பிக்கொள்ளும் முரட்டு முட்டாள்தனம்தான் லிபரல்வாதம். சமீபத்திய ஹிஜாப் பிரச்சினையில் ஒரு லிபரல் அறிவுஜீவி (வார்த்தை விரயம்) ‘ஹிஜாப்பும் தவறுதான் ஆனால்’ என ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இவர் சார்ந்த கூட்டத்துக்குக் குட்டையை குழப்பும் வேலை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை.

‘தலித் தலைவர்கள் தொடங்கி இலங்கை விவகாரம் வரை இவர்களின் இணையக் குழப்பங்கள் கழகத்துக்குதான் கெட்ட பெயர் பெற்றுத் தருகிறது என முதல்வர் ஸ்டாலினே கடிந்து கொண்டிருப்பதால் இஸ்லாமியர் பக்கம் வந்து குதறி வைத்திருக்கின்றனர்.

இந்த ‘I love you but as a friend’ ரக நட்ட நடுத்தனம் சரியா?

‘யூனிபார்ம்கள் போடச் சொல்வதே எல்லாரும் ஒன்று போல் இருக்கத்தான். அப்படி இருக்க ஹிஜாப் என்ன நியாயம்’ என்கிற கேள்வி சரியாகவே தோன்றக் கூடிய கேள்வி. ஆனால் சரியான கேள்வி அல்ல.

படிக்க :

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

கடவுள் நம்பிக்கையைப் பெரியார் எதிர்த்தார். அதற்குக் காரணமாக மதம் இருந்தது. பார்ப்பனியம் இருந்தது. பெண்ணடிமைத்தனம் இருந்தது. ஆணாதிக்கம் இருந்தது. ஆனால் அவர்தான் ஆலய நுழைவுக்கும் போராடினார்.

இன்றும் பாஜக, ‘நாத்திகர்களுக்கு ஏன் கருவறை பற்றி கவலை’ எனக் கூவும். இதுவும் பார்ப்பதற்கு சரியாகவே தோன்றக் கூடிய கேள்விதான். ஆனால் சரியானது அல்ல.
இத்தகைய பைனரிக் கேள்விகளை பார்ப்பன ஆதிக்க வெறிக் கூட்டம்தான் செய்து வந்தது. ‘இஸ்லாமியர்களுக்கு நாடு உண்டு, இந்துக்களுக்கு வேண்டாமா?’, ‘சிறுபான்மையினருக்கு அதிகம் அக்கறை காட்டுவது மதச்சார்பின்மை அல்ல’ என்பதெல்லாம் பைனரி தன்மையுடன் உருவாக்கப்பட்ட, பார்த்ததும் சரியெனத் தோன்ற வைக்கக் கூடிய கருத்தாடல்கள். இவற்றைப் போல்தான் ‘ஹிஜாப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை. ஆனால்’ என்கிற பத்திகளும்.

சீருடை முறைக்கு வரலாற்றில் எந்த அரசும் காரணமாக இருக்கவில்லை. 1552-ம் ஆண்டில் பிரிட்டனில் க்ரைஸ்ட் ஹாஸ்பிட்டல் முதலிய தொண்டு நிறுவனப் பள்ளிகள்தாம் சீருடை வழக்கத்தை அறிமுகப்படுத்தின. பெரும்பாலும் அவை ஏழைகள், அநாதைகள் முதலிய குழந்தைகளையே பள்ளியில் சேர்த்தன. எனவே அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடக் கூடாது என்பதற்கும் தொண்டுக்கான அடையாளமாகவும்தான் சீருடை உருவானது.

சீருடையின் முக்கியத்துவத்துக்காக போராடி உயிரை விடத் தயாராக இருக்கும் சங்கிகள், அந்தச் சீருடை முறைக்கே கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம்தான் தொடக்கம் எனத் தெரிந்தால் யார் தொண்டையைக் கடிப்பார்களோ?

அடையாளமாக சீருடை மாறியதன் விளைவாகத்தான் கல்வித்தளங்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அது வந்தது. காலவோட்டத்தில் மேலாண்மை பொறுப்புகளுக்கு சீருடை விலக்கு அளிக்கப்பட்டு, பிறகு அது பிற நிலைகளுக்கும் தொடர்ந்து, சீருடை என்கிற வழக்கம் இன்று நிறுவனங்களில் இல்லாமல் போய்விட்டது. எனினும் formals-தான் அணிய வேண்டும் என்பது போன்ற வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

அடையாளமாகத் தொடங்கிய சீருடை வழக்கம் அடுத்து ஒரு முக்கியமான இடத்தை அடைந்தது. Conformity! ஒரு இடத்தில் இருக்கும் விதிகளுக்கு அடிபணிந்து போகும் தன்மை. அதாவது விதி என்பதாலேயே அது எத்தகையதாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம்! இந்த இடத்தில்தான் ஆதிக்கம்-அடக்குமுறை என்பதற்கான ஆரம்பப் புள்ளி உருவாக்கப்படுகிறது. அரசின் ஆதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பாமல் அடங்கிப் போகும் தன்மை குடும்பத்தைத் தாண்டி உருவாக்கப்படுவது முதலில் பள்ளிகளில்தான்.

எனவேதான் பள்ளி மாணவர்கள் சீருடையை ‘Tuck In’ செய்யாமல் செல்வதையும் தலையைக் கலைத்துக் கொள்வதையும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான புரட்சி நடவடிக்கையாக மேற்கொள்ளும் உளநிலை மாணவர்களிடம் உருவாகிறது. எத்தகைய ஒடுக்குமுறை, ஆதிக்கம், நிர்பந்தம் இருந்தாலும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கை இருந்தே தீரும்.

‘அனைவரும் ஒன்று என்பதற்கே சீருடை. பிறகு ஏன் ஹிஜாப்’ என்கின்றனர் சங்கிகள். ‘சரிதானே’ என லிபரல்கள் ஆமோதிக்கின்றனர். லிபரல்கள் பாவம், அறிவில்லாதவர்கள். சங்கிகளோ அறிவை நிராகரிப்பவர்கள். மேற்கண்ட அறிவுஜீவித்தனத்துக்கு இரையாகக் கூடிய வெகுமக்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.

சாதிக் கயிறு பழக்கம் எங்கிருக்கிறது, கல்வித்தளத்தில்தானே? திருநீறு, குங்குமம் வைக்காத ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் உண்டா? பள்ளிப் பாடங்களில் எத்தனை இந்து மதக் கடவுளர் பாடல்களும் கலாசாரமும் இருக்கின்றன? திருவாசகம், கம்ப ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதைகள் என எத்தனை எத்தனை? சிறுபான்மையினருக்கு ஒப்புக்கென ஒரு ஒரு சீறாப்புராணம், ஒரு இயேசு காவியம் இருக்கும்.

படிக்க :

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

கடவுள் நம்பிக்கை மறுப்பு இருக்கலாம். ஆனால் எல்லா கடவுள் நம்பிக்கை மறுப்பும் ஒன்றல்ல. ஆதிக்கம் செலுத்தும் கடவுள் நம்பிக்கைக்கு, பிற கடவுளர் நம்பிக்கை எதிர்ப்பு ஆதரவாகவே நிற்கும்

எனவே எதுவும் பொதுவாக இருக்க முடியாது. நடுநிலையாகவும் யோசிக்க முடியாது. குறிப்பாக உரிமை என வரும்போது!

சமூகமே சமமற்று இருக்கும்போது நீதியில் சமத்துவம் எப்படி இருக்க முடியும்?
கல்வியே ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்போது கல்வித்தளத்தில் எப்படி நடுநிலை இருக்க முடியும்?

வழிபாட்டுத் தலமே தகர்க்கப்பட்ட நாட்டில் வழிபாட்டு உரிமை மட்டும் எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்?

பார்ப்பனியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலத்தில் பொதுத்தன்மை யாருக்கு ஆதரவாக சென்று முடியும்? பாசிசத்துக்கான பல்லக்கு தூக்கிகள்தான் மேலே சொன்ன பைனரித்தன்மையும் நடுநிலையும்.

எச்சரிக்கை.. எச்சரிக்கை!

முகநூலில் : ராஜசங்கீதன்

disclaimer

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இந்த மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் :
♣ பத்திரிகை செய்தி : மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
♣ தலையங்கம் : இந்தியக் குடியரசில் இருந்து இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி
♣ மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க-வும் காங்கிரசும் ஓரணி !
♣ ‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம் !
♣ “ட்ரேட்ஸ்” : காவி பாசிசத்தின் இணையப் படை !
♣ கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படந்து வரும் ‘இந்து ராஷ்டிர பேரபாயம்’! பாகம் 2
♣ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
♣ நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது !
♣ கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
♣ ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும் ?
♣ பத்திரிகை செய்தி : பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில் மதக்கலவர செய்ய முயலும் பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய் ! பிஜேபி- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தடை செய் !
♣ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
♣ சங்கபரிவாரத்தின் அடுத்தகட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்!
♣ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம் !!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

டையில் மத அடையாளம் மட்டுமேதான் உள்ளதா? சாதி அடையாளம் இல்லையா? அடிப்படையில் உடை என்பது தனி மனிதர்களின் விருப்பம் சார்ந்தது. ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், அதைத் தாண்டி பேச வேண்டும் எனில், வாழும் பிரதேசம், தட்பவெப்பம், அதாவது குளிர் பிரதேசம், வெப்பப் பிரதேசம், இரண்டுக்கும் பொதுவான நிலையில் உள்ள பிரதேசங்கள் என இயற்கை சார்ந்து மனிதர்கள் தேர்வு செய்யும் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டு விசயங்களில் அடங்குபவைதான் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள்.
இவை அடிப்படைத் தேவைகள் என்பதை தாண்டி காலப்போக்கில் மத அடையாளம் சார்ந்த விஷயங்களாகவும் மாறின. இந்தியாவில் இந்த அடிப்படை தேவைகள் சாதி அடையாளத்துடன் கூடிய பயன்பாட்டு விசயங்களாகவும் மாறி இருப்பதை மறுக்க முடியாது. இன்ன உணவு, இன்ன உடை, இன்ன இருப்பிடம் இன்ன மதத்துக்கு உரியது என்பதையும் தாண்டி இன்ன சாதிக்கு உரியது என்று அடையாள முத்திரை இடப்பட்டிருப்பது உண்மைதானே?
இதை விரிவாக பேச முடியும். முலைவரியில் இருந்து பேசலாம். அது வெறும் உடை சார்ந்த விசயமா? மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி மதத்துடன் மட்டுமே அடையாளம் காணப்படுவது இல்லையே? அதற்குள் மத அடையாளத்தையும் தாண்டி சாதி அடையாளம் இல்லையா? மனிதர்கள் வசிக்கும் பகுதி எல்லாமே மனித வாழிடங்கள் என்ற பொதுவான வரையறைக்குள் வந்துவிடும் எனில் அக்ரஹராமும் சேரியும் மசூதி தெருவும் ஒன்றுதானா? வாழிடம் மட்டுமே எனில் சமத்துவபுரத்துக்கு அவசியம் வந்தது ஏன்? சாதி ஒழிப்பே நோக்கம் எனில் சமத்துவ புரங்களில் கணக்கெடுத்தால் உண்மை என்னவென்று தெரியும்.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
ஹிஜாப்?
ஹிஜாப் அணிகின்ற இசுலாமிய பெண்கள் இருக்கின்றார்கள், அணியாத இசுலாமிய பெண்களும் இருக்கின்றார்கள். இசுலாமிய குடும்பங்களில் இருந்து தொடங்குகிறது இந்த ஹிஜாப் அணிவதா வேண்டாமா என்பது.
உண்மையில் இது இஸ்லாமியப் பெண்களின் தனிப்பட்ட உரிமை மட்டுமேதானா? இஸ்லாமிய ஆண்களின் தலையீடோ கட்டாயமோ இதில் இல்லையா என்ற கேள்வி உள்ளது. விளக்கி சொல்லலாமா? ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிவது அவளது தனிப்பட்ட உரிமை அல்லது சவுகர்யம் சார்ந்தது மட்டுமேதானா? இதில் பெண்ணின் தந்தை அல்லது தாய், திருமணம் ஆன பின் கணவன் ஆகியோரின் தலையீடு இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மத நம்பிக்கை உள்ள கணவன் மனைவியரிடையே கூட சரியான புரிதல் இருக்கும்பட்சத்தில் ஹிஜாப் அணிவது பெண்ணின் விருப்பத்திற்கு விட்டுவிடும் கணவர்களை என்னால் காட்ட முடியும். அணிவதும் அணியாமல் இருப்பதும் அவள் விருப்பம், அவள் சவுகர்யம் சார்ந்த தனிப்பட்ட விசயம் என்று அதில் தலையிடாமல் இருக்கும் கணவர்கள் உள்ளார்கள்.
அதிகம் பேசப்படாத உண்மை என்னவென்றால், வெயில் கொளுத்தும் ஊர்களில், குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காற்றுப்புகாத புர்கா, ஹிஜாப் அணிவது பெண்ணுக்கு எத்தனை சவுகர்ய குறைச்சல் அல்லது அறிவார்ந்த செயலா என்பதுதான்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது மத கலாச்சார எல்லையையும் தாண்டிய, பொதுவாக பெண்களின் மனநிலை அல்லது உரிமை சார்ந்த விடயம் எனில் உடையின் வடிவத்தையும் எந்த மாதிரி உடையை எங்கே அணிந்து கொள்வது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மதங்களையும் சாதிகளையும் தாண்டி பொதுவான தளத்தில் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு பொருள்தான்.
சேலை என்பது பொதுவான உடை எனில் மடிசார் என்பது சாதியை அடையாளப்படுத்தும் உடை இல்லையா? ஹிஜாப் மதம் சார்ந்தது. கிறித்துவ மத அடையாளங்களுடன் கூடிய உடை இல்லையா? நீ இதை அணியாதே என்று யாருக்கு யார் உத்தரவு போட முடியும்?
உடை என்பதை பொது வெளியில் அணிகின்ற ஒரு கண்ணியமான ஆடை என்ற குறைந்தபட்ச புரிதலுடன்தான் என்னால் வரையறுக்க முடியும். இந்த குறைந்தபட்ச வரையறைக்குள்ளும் கூட பொருந்துகின்ற மத அடையாளங்களுடன் அல்லது எந்த ஒரு மத அடையாளமும் இல்லாமலும் இருக்கின்ற ஆடைகளை அணிந்துகொண்டுதான் இந்திய பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொதுவெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றோம் என்பதையும் அதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் வழங்கி இருக்கின்றது என்பதையும் வலுவாக சொல்ல வேண்டியுள்ளது.
மதசார்புள்ள நாடுகளிலும் கூட அங்கே வாழ்கின்ற மத சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் உடையை தேர்வு செய்யும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனில் மதச்சார்பற்ற இந்திய சமூகத்தில் எந்த ஒரு மதத்தினரும் தமக்கான உடையை தான் சார்ந்துள்ள மத அடையாளத்துடன் தேர்வு செய்யும் உரிமை மட்டுமல்ல, எந்த அடையாளமும் இல்லாமலே தேர்வு செய்யும் உரிமையும் வேண்டும் என்பதே நியாயம்.
படிக்க :
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
இப்போது கர்நாடகத்தில் நடப்பது இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம் அல்லது இஸ்லாமிய மதத்தில் உள்ள நம்பிக்கைகளை ஆக்கப்பூர்வமான கேள்விக்கு அல்லது விவாதத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை அல்ல. இது இந்திய வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நடத்திவரும் மதவெறி அரசியலின் பகுதி.
காலங்காலமாக இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்தே வந்துள்ளார்கள், இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது எனில், இப்போது கிளப்பிவிடப் பட்டுள்ள ஹிஜாப் விசயத்தை இஸ்லாமிய பெண்களின் உரிமை சார்ந்த விசயமாக பார்ப்பது அறிவுக்கு உகந்தது அல்ல, அப்படியான அணுகுமுறை இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, பிரச்சினை கிளப்பிவிடப் பட்டுள்ள இந்த இரண்டொரு நாட்களில் பிற சமூக மாணவர்கள் இதுவரை இல்லாத வழக்கமாக திடீரென காவித்துண்டு அணிந்து வந்தது அவரவர் விருப்பத்தின் பேரிலா அல்லது இந்துத்துவா வலதுசாரி இயக்கங்களின் தூண்டுதலின் பேரிலா என்ற கேள்வியை எழுப்பினால் உண்மையும் பின்னணியும் புரியும்.
நான் முதலில் குறிப்பிட்டது போல, உணவு உடை இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள், இந்திய சமூகத்தில் மத சாதி அடையாளங்களுடன் உள்ளன என்பதிலும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயம் அல்ல.

முகநூல் : மு இக்பால் அகமது
disclaimer

நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்

ழி பதிப்பகம் அரசியல் ரீதியாக தொடர்ந்து முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கை, எல்லா இடங்களிலுமே காணாமல் போன நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செழியனிடமிருந்த ஒரு பிரதியைப் பெற்று, அதனைப் பதிப்பித்தார் செந்தில்நாதன். தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அந்தப் பதிப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இப்போது மீண்டும் ஒரு முக்கியமான பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது ஆழி. இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்தும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள உறவுகள் குறித்தும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் நிலவும் நிலைமையை மேம்படுத்துதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது பி.வி. ராஜமன்னார் குழு. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள், அது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதையொட்டி நடந்த விவாதங்கள் இந்தப் புத்தகத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1969ல் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தில்லிக்கு சென்ற மு. கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “மாநில சுயாட்சி குறித்து அறிந்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
இதற்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தி, பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினரிடம் கேள்வித் தாளை அனுப்பி பதிலைப் பெற்று தனது அறிக்கையை தொகுத்தது. இந்த அறிக்கை 1971 மே 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்தப் பரிந்துரைகள் செழியன், முரசொலி மாறன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையில் சாத்தியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இது தொடர்பான தீர்மானம் 1974 ஏப்ரலில் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டது.
இதற்குப் பிறகு, முதலமைச்சர் மு. கருணாநிதி நீண்ட உரையை ஆற்றினார். இதற்குப் பிறகு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அவ்வப்போது குறுக்கிட்டு, முதலமைச்சர் பதிலளித்தார். இவையனைத்தும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திற்கு ஒரு அணிந்துரையை கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அந்த அணிந்துரையில், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மாநில அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து ஒரு விரிவான பட்டியலைத் தந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழில் வெளியான புத்தகங்களின் பட்டியலையும் தந்திருக்கிறார். அந்த வகையில் மிக முக்கியமான கட்டுரை அது.
இதற்கான அறிமுகவுரையை ஆழி செந்தில்நாதன் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு விரிவான நூலின் சாரத்தை மிகக் கச்சிதமாகத் தொகுத்து அந்த அறிமுகவுரையில் தந்திருக்கிறார் செந்தில்நாதன்.
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இதுபோன்ற தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பல ஆணையங்களின் பரிந்துரைகள் புத்தகமாகக் கிடைக்கும்போது, அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். அரசியல் விவாதங்களில் ஆர்வமுடையோர், பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
1974 : மாநில சுயாட்சி
வெளியீடு: ஆழி பதிப்பகம், 5, கலைஞர் கருணாநிதி சாலை,
காவேரி ரங்கன் நகர், சாலி கிராமம், சென்னை – 93.
விலை: ரூ. 1000/-
நூல் வாங்க : 97150 89690
முகநூலில் அறிமுகம் : K.Muralidharan
disclaimer

நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

03.02.2022
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின்,
பாசிச மோடி அரசின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
பத்திரிகை செய்தி
ட்டுக்கு தாடியும் மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என்றார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட்டுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரள்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி, கிருஷ்ணசாமி போன்ற எதிரிகள் மற்றும் துரோகிகளை தவிர வேறு யாரும் வெளிப்படையாக நீட்டுக்கு ஆதரவாக பேச முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் போராடி வந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா  நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
படிக்க :

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

அதன் மீது நீட் தேர்வு, மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு முடியும் வரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஆளுநர் ரவி, தற்பொழுது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை கூறி சட்ட மசோதாவை அனுப்பியுள்ளார்.
மக்களால், மக்களே தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர் மூலம் இணை ஆட்சி நடத்துவது தான் பாசிச மோடி அரசின் நோக்கம். அதையே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி மாநில அரசுகளை செயல்படாமல் செய்தும் வருகின்றனர்.
நீட் தேர்வினால் தற்கொலை செய்து இறந்துபோனவர்கள் பலர், தங்கள் மருத்துவ கனவை கைவிட்டோர் ஏராளம். இப்படி மாணவர்களின் மருத்துவக் கனவை சூறையாடிய நீட்டுக்கு ஆதரவாக தான் ஒன்றிய அரசும் ஆளுநரும் செயல்படுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும் ஒன்றை, மாநில சட்டமன்றம் எதிர்க்கும் ஒன்றை ஆளுநரால் திணிக்க முடியும் என்றால் இதற்குப் பெயர்தான் மானங்கெட்ட மக்களாட்சியா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் உரிமையையும் மறுக்கும் ஒரு நபருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்காக கொடுக்க வேண்டும்?
முன்னாள் போலீஸ் அதிகாரியான ரவி, ஆளுநராக இருந்து தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக காவல் கொட்டடியில் அடைக்கப் பார்க்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
99623 66321.

கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய வரலாறு || குறுந்தொடர் பாகம்-2

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 2

முதல் பாகம்

நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்குதல்

பார்ப்பனரல்லாதோரை ‘இந்து’ வளையத்திற்குள் கொண்டுவருவதற்காக நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனமயமாக்குவது என்ற உத்தியைக் கையாண்டது ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில், கிராமப்புற காவல் தெய்வமான முனியப்பனை முனீஸ்வரனாக்கியது, மழை தெய்வமான மாரியம்மனை சக்தியின் வடிவமாக்கியது, குறிஞ்சி நில கடவுளான முருகனை ஷண்முகனாக்கி பார்ப்பனமயமாக்கியது போன்று கர்நாடக மக்களின் நாட்டார் தெய்வங்களையும் பார்ப்பனமயாக்கியது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல்.

கர்நாடகாவில், நாட்டார் தெய்வங்களின் வரலாறு வாய்வழிக் கதைகளாக ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திருவிழாவின் போது சொல்லப்படும். இத்திருவிழாவின் போது கோழிகள், விலங்குகள் பலியிடப்படுவது வழக்கமாக இருந்தது. திருவிழா நேரம் மட்டுமின்றி நாட்டார் தெய்வங்களின் வரலாற்றை வயல்களில் வேலை செய்யும் போதும் பெண்கள் பாடுவர்.

படிக்க :

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

1920-களில் கர்நாடக நிலவுடைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் வேலை தேடி பெரும்பகுதி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் 1974-ல் கொண்டுவரப்பட்ட நிலவுடைமைச் சீர்த்திருத்தச் சட்டங்களாலும் பெரும் பண்ணைகள் படிப்படியாக மறைந்து சிறு நிலவுடைமையாளர்கள் அதிகம் தோன்றினார்கள். அவர்களிடம் விவசாயம் செய்வதற்கு போதிய பண வசதி இல்லாததால் 1970-களுக்குப் பிறகு விவசாயம் நலிவடைந்ததோடு நாட்டார் தெய்வ வழிபாடும் மெல்ல குறையத் தொடங்கியது. இந்த காலத்தை பார்ப்பனக் கும்பல் பயன்படுத்திக் கொண்டது.

000

தெய்வ வழிபாடு (தெய்வ ஆராதனா) நடைபெற்ற இடங்களை தெய்வங்களின் உறைவிடம் (தெய்வ சனா) என்று சொல்லி கோயில் கட்டி பட்டா போட்டதோடு, அவற்றிற்கு பார்ப்பனர்களே பூசாரிகளாகவும் ஆயினர். கர்நாடக நாட்டார் தெய்வமான பூடா சிவன் விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒரு முறை நடந்த வழிபாடு தினமும் நடைபெற ஆரம்பித்தது. கோழிகள், விலங்குகள் பலியிடப்பட்டு விருந்து நடைபெறுவது நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் சிவனை வழிபட நினைத்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நந்தனை சிதம்பரம் தீட்சித பார்ப்பன கும்பல் கோயிலுக்குள்ளேயே எரித்து “நந்தனார்” ஆக்கியது போல், கோயிலுக்குள் நுழைந்த ‘குற்றத்திற்காக’ பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்ட கோரக தான்யா என்ற பழங்குடியை தெய்வமாக்கி வழிபட்டனர் பழங்குடி மக்கள். இன்று கோரக தான்யாவை கோரகஜ்ஜா என்று சிவனின் மறு உருவமாக்கி பார்ப்பனியத்திற்குள் செரித்துள்ளத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மொகவீரர் என்ற மீனவ மக்களின் தெய்வமான பொப்பாரியாவையும் பார்ப்பன கும்பல் விட்டுவைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு முன் பொப்பாரியாவை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பொப்பாரியா தெய்வத்தை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனின் மகன் பாப்ருவாகனனின் மறு அவதாரமாக்கி பார்ப்பனியத்திற்குள் வலைத்துப் போட்டுவிட்டார்கள். இதற்கேற்ப பொப்பாரியா அர்ஜூனனுக்கும் கேரள அரசி பிரமிளாவுக்கும் பிறந்தவன் என்ற திரைக்கதை, வசனங்களையும் உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.

இவ்வாறு நாட்டார் தெய்வங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டாலும் பார்ப்பனக் கடவுள்களுக்குரிய வேத அல்லது பார்ப்பன சடங்குகளின்படி வழிபாடு நடத்தப்படாமல் தீண்டாமையுடன்தான் நடத்தப்படுகின்றன என்பது தனிக்கதை.

‘பசுப் பாதுகாப்பு படை’ எனும் பேரில் பாசிச படை

1952-இல் ஜன சங்கம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் நடவடிக்கையாக பசு பாதுகாப்பைக் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். உடுப்பியில் 1952 ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியை “பசுக் கொலை எதிர்ப்பு நாளாக” அறிவித்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் “தேசிய பசு வாரம்” என்ற ஒன்றை உருவாக்கி பரப்பியது ஆர்.எஸ்.எஸ். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, துர்கா வாகினி, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்க பரிவார அமைப்புகள் “கிராமங்கள் தோறும் பசுப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தன. அதே போல் தட்சன கன்னடா எனும் தென் பகுதியில் பசுப் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

‘பசுவைக் கொல்வதற்கு எதிராக’ என்ற பெயரில் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. “வேத காலத்திலிருந்து ஒரு மனிதன் இன்னொருவனைக் கொன்றிருக்கிறான். ஒருபோதும் பசுவைக் கொன்றதில்லை. நாம் ஒருவரைக் கட்டாயம் கொல்லலாம். நமது சொந்த சகோதரனையும் கொல்லலாம். ஆனால் நாம் பசுவை மட்டும் கொல்லக்கூடாது” என்று மறைமுகமாக முசுலீம்களுக்கு எதிராக கொலைவெறியூட்டப்பட்டது.

இவைகளுக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டவாறே உ.பி-யில் நடப்பது போல் முசுலீம்கள் மீதான கும்பல் தாக்குதல்கள் அரங்கேறத் தொடங்கின. 1950-களில், உடுப்பி மாவட்டத்தில் ஹஜ்ஜபா, ஹாசனப்பா என்ற இரு முசுலீம்கள் பசுவைக் கடத்தினார்கள் என்று பொது இடத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும், அந்நியர்கள் என்றும் ‘இந்தியாவிற்கு பழக்கமில்லாத’ மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும் முசுலீம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். உருவாவதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் முசுலீம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1933-இல் இந்து மகா சபா மாநாட்டில் சிறப்புப் பேச்சாளரான ஆ.ஜி.பிடே, “முசுலீம்கள் தேச விரோதிகள், முசுலீம்களின் கிலாபத் இயக்கம் தேச விரோத இயக்கம்” என்று பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பிறகு கேசரி இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1933-இல் தொடங்கி இன்று வரை முசுலீம்களை ‘தேச விரோதிகள்’ என்று சித்தரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தியும் கலவர யாத்திரைகளும்

நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்கியதோடு தன்னுடைய பார்ப்பனப் பண்பாட்டை – விநாயகர் சதுர்த்தியை – தேசியமயமாக்குவதன் மூலமும் பார்ப்பனரல்லாத மக்களிடம் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டது ஆர்.எ.ஸ்.எஸ். மகாராஷ்டிராவில் ‘இந்துக்களை’ இந்துத்துவமயப்படுத்த விநாயகர் வழிபாட்டை திலகர் கையிலெடுத்தார். கர்நாடாகவிலும் விநாயகர் வழிபாட்டைக் கையிலெடுக்கவும் அதன் மூலம் கலவர ஊர்வலங்களை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைத் தூண்டியவர் கோல்வால்கர்.

1960-களுக்கு முன்பு வரை கர்நாடகாவில் விநாயகர் வழிபாடே இல்லை. 1960-களில்தான் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மருத்துவரான டோன்ஸ் மாதவா ஆனந்த் பாயால் தொடங்கப்பட்ட கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியிலும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான சாந்தி நிகேதன் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விநாயகர் உருவச்சிலை இருந்தது. தொடக்கத்தில் விநாயகர் வழிபாட்டை செய்தவர்கள் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்களே. இதர ‘இந்து’க்களான சூத்திரர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டதில்லை. விநாயகர் சதுர்த்தியின் 25-வது ஆண்டு விழாவின் போது, கர்நாடகாவின் அனைத்தரப்பு மக்களையும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குள் ஈர்த்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

கர்நாடகாவில் மதவெறியை மூட்டிய ‘இராம ஜென்ம பூமி’

விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ்-க்கு கர்நாடகாவில் மிகப் பரந்த அளவில் மக்கள் அடித்தளத்தை உருவாக்கியது இராம ஜென்ம பூமி இயக்கம்தான். 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்வானியின் இரத யாத்திரையும் இராம ஜென்ம பூமி இயக்கமும் இராமனை ‘இந்து இந்தியா’வின் கதாநாயகனாக்கியது என்றால் மிகையல்ல. இராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக கர்நாடகாவில் “ஸ்ரீ ராம் ஜென்ம பூமி முக்தி யக்ன சமிதி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். 1992 ஆம் ஆண்டு இராம ஜென்ம பூமியின் கடைசிக் காட்சியான பாபர் மசூதி இடிக்கும் வரை தனது முழு பலத்துடன் தீவிரமாக மக்கள் மத்தியில் செயல்பட்டது.

இந்தியா முழுவதும் நடந்தது போல் கர்நாடகாவிலும் பாபர் மசூதியிருந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்டுவதற்காக வீட்டுக்கு வீடு செங்கல் வழங்க சொல்லி ‘கர சேவை’ இயக்கத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல். அவ்வாறு செங்கல் பெறும்போது ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசைகள் நடத்திய பிறகே செங்கல் பெறப்பட்டது. இவ்வாறு பூசை நடத்தி செங்கலைப் பெறுவது என்பது உளவியல் ரீதியாக மக்களை இந்துத்துவத்திற்கு வென்றெடுப்பதற்கான நடவடிக்கையாக அமைந்தது.

இராம ஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான் இராமாயணமும் மகாபாரதமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இராமன் யார் என்று அறியா மக்களுக்கும் அவன் தெய்வீக அவதாரமாக, இந்துக்களின் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டான். இராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு முன்பு வரை தென் கடற்கரை பகுதியான மங்களூருவில் மட்டுமே இருந்த ஆர்.எஸ்.எஸ். அதன் பிறகு பெங்களூருவிலும் பரவத் தொடங்கியது.

‘லவ் ஜிகாத்’ எனும் நச்சுப் பிரச்சாரம்

இந்துக்களின் மத்தியின் முசுலீம் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்த மற்றொரு நச்சுப் பிரச்சாரம்தான் ‘லவ் ஜிகாத்’. கடந்த 2005-லிருந்துதான் லவ் ஜிகாத் என்ற சொல்வழக்கு கர்நாடகாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முசுலீம் ஆண்கள் இந்துப் பெண்களைக் கவர்ந்து (ல்வ் ஜிகாத் செய்து) மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் சங்கிகள் வெறியூட்டினர்.

2008 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது ஊற்றிய பெட்ரோலுக்கு தீ வைத்த கதையாக அமைந்தது. ‘லவ் ஜிகாத் கர்நாடகாவின் பற்றியெரியும் பிரச்சனையாகியது. 2009, 2012 ஆம் ஆண்டுகளில், ‘லவ் ஜிகாத்திற்கு எதிராக’ என்ற பெயரில் பப்களில் இருந்த பெண்களின் உடைகளைக் கிழித்து கடுமையாகத் தாக்கியது காவி குண்டர் படை. 2009-இல், இந்து பெண் ஒருவர் முசுலீம் இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ‘லவ் ஜிகாத்’ பற்றி விசாரிப்பதற்கு சி.பி.சி.ஜ.டி. விசாரணையே நடத்தப்பட்டது என்பதுதான் கொடுமையின் உச்சம்.

1998 ஆம் ஆண்டு சுரத்கால் என்ற பகுதியில் முசுலீம் இளைஞர் இந்துப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக கலவரம் நடந்தது. அதே போல், அனிதா என்ற இந்து பெண் முசுலீம் இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்காக, அவர்களை கார் விபத்தில் கொலை செய்தான் சங்க பரிவார கும்பலைச் சேர்ந்த மோகன்.

***

படிக்க :

கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !

கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவதற்கு முன்புவரை முசுலீம்களும் இதர மதத்தினரும் நட்புறவாகத்தான் இருந்தனர். கறிக்கடைக் காதருக்கும் மீனவ மொகவீர சமூகத்தினருக்குமான நட்புறவை காதல் கதையாக கொண்டாடிய சுவைமிக்க வரலாறு கர்நாடகாவிற்கு உண்டு. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய பிறகோ மதத்தின் பெயரால் அந்த வரலாற்று ரீதியான நட்புறவு இருகூறாக பிளக்கப்பட்டது. முசுலீம்களை அந்நியர்களாக சித்தரிக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாக வெற்றிபெற்றது.

1968 ஆம் ஆண்டு சுரத்கல்லில் நடைபெற்ற கலவரம்தான் அதிகார மாற்றத்திற்கு (1947- போலி சுதந்திரம்) பிறகு கர்நாடகாவில் நடைபெற்ற முதல் இந்து-முசுலீம் கலவரமாகும். இதைத் தொடர்ந்து, மங்களூர் துறைமுகத்தில் மீனவர்களிடையே கலவரம் வெடித்தது. முசுலீம் வெறுப்புணர்வும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களான சரஸ்வத் பார்ப்பனர்கள் மீன்பிடித் தொழிலில் இறங்கியதுமே இக்கலவரத்திற்கு அடிப்படை. இதில் 6 முசுலீம்களும் 2 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மொகவீர சமூகத்தினர் பார்ப்பனர்களின் அடியாட்களாக செயல்பட்டனர்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கர்நாடகத்தில் கலவரங்கள் தொடர்கதையாயின. 2006 ஆம் ஆண்டு முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் 2008 ஆம் ஆண்டு கிறித்தவர்களுக்கு எதிரான கலவரமும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கர்நாடக மக்களை காவிமயமாக்குவதில் பாசிஸ்ட்டுகள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பதையே கர்நாடகாவில் நடைபெற்ற ஒவ்வொரு மதவெறிக் கலவரங்களும் நமக்குக் காட்டுகின்றன. தென்னிந்தியாவில் ‘இந்துராஷ்டிரத்தின்’ முதல் களமாக கர்நாடகா மாறியிருக்கிறது.

(தொடரும்…)

அப்பு

 

சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !

சாவர்க்கரின் அரசியலுக்கும் இந்து மகாசபாவிற்கும் எதிரான வலுவான பார்வையை போஸ் கொண்டிருந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த விவரணை எல்லாம் இன்றைய அரசியல் சூழலின் நிகழ்ச்சிநிரலால் உருத் திரிக்கப்பட்டவையாகவும் இருந்துவருகின்றன.
சாவர்க்கருக்கும் போஸிற்கும் இடையிலான உறவு மிகமிக சிறு வேறுபாடுகளைக் கொண்டது மட்டுமல்ல, அரசியலில் வேறுபாடு இருந்த போதிலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்துகொண்டனர் என்று புதிய தகவல் கூறுகிறது.
பின்னணி வரலாறு
மே 1937 ல் சாவர்க்கர் விடுதலையான போது சுபாஷ் சந்திரபோஸ் ஓராண்டு சிறைவாசம் மற்றும் வீட்டுக்காவலை அனுபவித்துவிட்டு டல்ஹவுசியில் உடல்நிலை தேறிவந்தார். ஐரோப்பியாவிற்கு நாடுகடத்தப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வருவதற்காக இந்திய அரசாங்க உத்தரவுகளை மறுத்து 1936, ஏப்ரலில் போஸ் இந்தியா வந்தார். எதிர்பார்த்தப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அவர் 1937, மார்ச் மாதத்தில் விடுதலையானார். அவர் சாவர்க்கர் பொதுவாழ்க்கைக்கு திரும்பி வந்ததை வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டார். சாவர்க்கர் காங்கிரசில் சேருவார் அவர் என்று நம்பினார். எனினும் சாவர்க்கர் அந்த ஆண்டின் இறுதியில் இந்து மகாசபாவை ஒரு தேசிய அரசியல் சக்தியாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அதில் இணைந்தார்.
படிக்க :
சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
1938-ல் போஸ் காங்கிரசில் சேர்ந்ததால் சிறிய வார்த்தை போர்களை தவிர அவர்களுடைய பாதைகள் நேருக்குநேர் குறுக்கீடாகவில்லை. வர இருக்கின்ற எந்த ஒரு வட்ட மேசை மாநாட்டிலும் காங்கிரசுதான் இந்தியாவை பிரதநிதிப்படுத்தும் என்று போஸ் உறுதிபட கூறியபோது, சாவர்க்கர் அதை எதிர்த்தார். அதிகபட்சமான இந்து தொகுதிகளை முந்தய தேர்தல்களில் காங்கிரசு வெற்றிபெற்றிருந்த போதிலும் முற்றிலும் இந்துக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி அது போட்டியிட்டதில்லை என்பதை குறிப்பிட்டு இந்து மகாசபைமட்டும்தான் இந்துக்களை பிரதிநிதித்துவபடுத்த முடியும் என்று சாவர்க்கர் வாதிட்டார்.
போஸ் காந்திய தலைமையிலான காங்கிரசுடன் முரண்பட்டு புதிய ஒரு மாற்று தேசிய இயக்கத்தை தனது அனைத்திந்திய ஃபார்வடு ஃப்ளாக் என்ற கட்சி மூலம் அடைய முயல்கையில் வெவ்வேறான அரசியல் பார்வைகளோடு அவர்கள் இருவரும் (போஸ், சாவர்க்கர்) தனித்தனி தளங்களில் இயங்கினர்.
அரசியல் மோதல்
ஏகே ஃபஸ்ஸுல் ஹக் அரசாங்கத்தின் மதவாத அரசியலுக்கு எதிராக சாவர்க்கர் மாகாண இந்து மகா சபையை பலப்படுத்த 1939, டிசம்பரில் வந்தபோது, அவர்களின் அரசியல்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. சுபாசும் காங்கிரசு கட்சியில் அந்த மாகாண சட்டசபையின் உறுப்பினரான அவருடைய மூத்த சகோதரர் சரத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து இறக்க தங்களுடைய சொந்தவழியில் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் காந்தியின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டன. காந்தி, ஜிடி பிர்லா மற்றும் ஹக் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நளினி ரஞ்சன் சர்கார் அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டார்.
போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது. போஸின் விமர்சனம், மகாசபை அணுகுமுறையுடன் உள்ள வேறுபாட்டை காட்டி மத பிரச்சினையை ஒட்டிய விசயத்தில் அவருடைய அணுகுமுறையை பிரதிபலித்தது. எல்லா முஸ்லீம்களையும் ஒன்றாக சேர வைப்பதன் மூலம், மத வேற்றுமைகளை கோடிட்டு காட்டி இந்து மகாசபா இந்திய தேசியத்திற்கு கணக்கிடமுடியாத தீமையை செய்துவருகிறது என்று பார்வர்டு பிளாக் இதழ் வாதிட்டது.
முகம்மத் அலி ஜின்னாவும் அவருடைய கூட்டத்தாரும் பரந்த இந்திய முஸ்லீம் மக்களில் ஒரு சிறு பிரிவினர் மட்டும்தான். மற்றும் அந்த பரந்தபட்ட மக்கள் கூட்டம் படிப்படியாக பொறுப்பான ஒரு தேசிய உணர்வு பெற்றுவருகிறது என்று குறிப்பிட்ட அந்த இதழ், இந்தியா உருவாவதற்கான தேசியவாத முஸ்லீம்களின் பங்கை கண்டுங்காணாமல் விடுவதன் மூலம் சாவர்க்கருக்கு நாம் அனுகூலம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டது.
சாவர்க்கர்
சிறு ‘மோதல்களை’ விட மிகமிக சிறு வேறுபாடே இருவருக்கும் இடையில் இருந்தது.
அவர்களுக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் ஆச்சர்யமூட்டும் வகையில் போஸ் இந்து மகாசபையுடன் கல்கத்தா மாநகராட்சி கழகத்திற்கு 1940-ல் நடந்த தேர்தலில் கூட்டுவைத்தார். இந்த ஒரு அத்தியாயம் அவருடைய நிலையான வாழ்க்கை வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டதாகவே இன்றும் உள்ளது.
இருப்பினும் இந்த கூட்டு நீடிக்கவில்லை மற்றும் தேர்தல் நடப்பதற்கு முன்னரே கூட எரிச்சலூட்டி ஷியாமா பிரசாத் முகர்ஜியால் தலைமை தாங்கப்பட்ட அந்த உறவு நிறுத்தப்பட்டது.
இப்போது வரை விடைகாணாமல் தொடர்ந்து வந்த கேள்வி என்னவென்றால், போஸை போன்ற இடது சாரி என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒருவர், ஏன் மதவாத இந்து மகாசபா போன்ற ஒரு மத அமைப்புடன் கூட்டணி வைத்திருந்தார்?
பார்வர்டு பிளாக் இதழில் போஸ் கையெழுத்திட்ட ஒரு தலையங்கத்தில் மற்ற விவகாரங்களில் வேறுபாடு நீடித்தாலும் உள் விவகார நிர்வாகத்தில் ஆதரவு கேட்டு குறிப்பாக இந்து மகாசபா மற்றும் முஸ்லீம் லீக் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்ததாக விவரித்தார்.
இந்து மகாசபா முதலில் பதில் அளிக்க நேர்ந்தது. இந்து மகாசபாவில் உள்ள தேசியவாத ஆதரவு சக்திகளை அவருடன் கூட்டணி சேரவைத்தற்காக பாராட்டிய அதே நேரத்தில் மத அடிப்படைவாத சக்திகளை அவர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் காங்கிரசை அழிப்பதற்காக அதனுடன் எந்த உடன்பாடும் ஏற்படுத்த கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தனர்.
போஸ் குறிப்பிட்ட ஒரு உடன்பாடு என்பது ஒரு வலுவான ஒற்றுமைதான். அது வரும்காலங்களில் மதவாத சக்தி அல்லாமல் தேசியவாத வெற்றியை உறுதிபடுத்தும் என்பதுதான். இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக ஒன்று சேரவேண்டிய அவசியம் இருந்தது.
அந்த கூட்டணி முறிவுக்கு பின்னர், அதிருப்தி அடைந்த சந்திர போஸ் தான் உள்ளபடியே மகா சபாவை எதிர்க்கவில்லை, காங்கிரசை அப்புறப்படுத்த நினைக்கும் அதன் பேராசையைத்தான் எதிர்ப்பதாக தெளிவுபடுத்தினார்.
பார்வடு ப்ளாக் இதழில் அவர் எழுதினார், “இந்து மகாசபா ஒரு அரசியல் பாத்திரத்தை ஆற்றுவதற்கும் வங்கத்தின் அரசியல் தலைமைக்காக அல்லது குறைந்தபட்சம் வங்கத்தின் இந்துக்களுக்காக பாத்திரம் ஆற்றுவதற்கும் முன்வந்துள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டில் உள்ள தேசியவாதத்தின் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். உண்மையான இந்து மகாசபாவுடன் நமக்கு எந்த வாக்குவாதமோ சண்டையோ அல்ல. ஆனால் காங்கிரசை வங்கத்தின் பொதுவாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த விரும்பும் இந்துமகா சபா-வின் அரசியல் தான் எங்களுக்கு பிரச்சினை. காங்கிரசை அப்புறப்படுத்தும் நோக்கிற்காக ஏற்கனவே எங்களுக்கு எதிரான தாக்குதல் நிலை எடுத்துள்ளது. அந்த ஒரு சண்டை தவிர்க்கமுடியாதது. இந்த சண்டை இப்போதுதான் தொடங்கியுள்ளது’’
Subhas Chandra Bose1940 ஜூலையில் அவர் சிறைபடுத்தப்படுவதற்கு கொஞ்சம் முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பரந்துவிரிந்த தேசிய இயக்கத்தை தோற்றுவிப்பதற்காக போஸ் அவர்கள் சாவர்க்கரையும், ஜின்னாவையும் சந்தித்தார். ஆனால் அவருக்கு இருவரிடமும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்திய போராட்டம் என்ற அவருடைய புத்தகத்தின் இரண்டாவது பகுதியில், ஜின்னா அவர்கள் பிரிட்டிஷ் உதவியுடன் எப்படி பாகிஸ்தான் பிரிவினை திட்டத்தை வெளிப்படுத்துவது என்று மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நிலையில் சாவர்க்கர் சர்வதேச சூழ்நிலைகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதன் மூலம் இந்துக்கள் எப்படி ராணுவ பயிற்சி எடுப்பது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்று எழுதினார்.
அந்த இரு தலைவர்களுடனான நீண்ட விவாதங்கள் முஸ்லீம் லீக் அல்லது இந்து மகாசபாவிடமிருந்து, அவருடைய திட்டமான தேச எழுச்சியை எதிர்பாக்கமுடியாது என்ற முடிவுக்கு போஸ் அவர்களை கொண்டுவந்தது. .
தற்செயலாக, தேர்தல் கூட்டு சாத்திய எல்லைக்குள் இருப்பதற்கு முன்பு மற்றும் போஸ் அப்போதும் சாவர்க்கர் அரசியலின் மீது விமர்சனம் கொண்டிருக்கின்ற பொழுதும் எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட டிசம்பர் 30, 1939 பார்வடு பிளாக் இதழ் கட்டுரை சாவர்க்கர் குறுங்குழுவாத அரசியலுக்கு சென்றது குறித்து வருந்தி புலம்பியது. இருப்பினும் அது வியக்கத்தக்க வகையில் அவர் மீது உயர்ந்த மதிப்பை கொண்டிருந்தது.
மற்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க, அந்த இதழ், “இந்திய போராட்ட களத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டின் சுதேசி இயக்கம் கண்ட பெரும் ஆளுமைகளில் சாவர்க்கரும் ஒருவர்” என்று அந்த இதழ் குறிப்பிட்டது.
மேலும், “ஒரே அச்சில் உண்மையான கதாநாயகர்கள் உருவாக்கப்பட, மகாராஷ்டிரத்தின் இந்த துணிகர மனிதனின் மொத்த வாழ்க்கை பயணம் தவிர்க்க இயலாமல் வாழ்க்கை நெடுக துன்பங்கள் இணைந்த பயணங்களுடன் கொடுங்கனவு மற்றும் சாதனைகள் கொண்ட பரபரப்பூட்டும் நீண்ட கதைகள் கொண்ட ஒன்றாகும். 25 ஆண்டுகளுக்கான தொடர் சிறைவாசத்திற்கு பிறகு அவர் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுதலையான போது எல்லாருடைய பார்வையும் அவர் மீது இருந்தது. ஒரு சாதாரண மனிதன் இந்த அடக்குமுறையால் முழுமையாக பிழியப்பட்டிருப்பான். ஆனால், சாவர்க்கர் நிலைத்து நின்றார். இயற்கையின் உண்மையான வெகுமதியை (அறிவாற்றலும் ஆற்றல் மிகுந்த பண்புகளையும்) முழுமையாக பாதிக்கப்படாதவாறு திரும்ப கொண்டுவந்தார். என்ன ஒரு வியக்கத்தக்க வகையில் ஊக்கத்தை அவர் கொண்டிருந்தார்! ஆனால் பாவம் என்ன செயவது!
மிக அருமையான கொடையை காங்கிரசால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேசிய நலனுக்காக சிறப்பாக்குவதற்கு பதிலாக அவர் இந்து மகாசபா என்ற பதாகையை சுற்றுவதையும் மத கீத மத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சாவர்க்கர் நாட்டில் தீமை விளைவிக்கும் முஸ்லீம் மதவாத வளர்ச்சியை கண்டு எரிச்சலூட்டப்பட்டிருக்கிறார். அது சந்தேகத்திற்கிடமின்றி இன்றய இந்திய அரசியலில் அதிர்ச்சியும் கோபமும் அடையச்செய்கின்ற ஒரு அபாயகரமான இன்றய நிகழ்வு. ஆனால் அவருடைய பெரிய கொடுமைகளுக்கான அவருடைய தீர்வு என்பது சந்தேகத்திற்கிடமின்றி விரக்தி அடைந்த ஒன்று. நாட்டை இரு போர் முகாம்களாக பிளவுபடுத்தி இவ்வாறு எதிர்காலத்தில் ரத்த ஆறு ஓடுவதற்கான ஒன்றை தயாரிப்பது நடைமுறைக்கு உகந்ததோ அறிவு பூர்வமான ஒன்றோ அல்ல.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த இதழ்.
இந்த வார்த்தைகளை போஸ் அவரே எழுதவில்லை என்றாலும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்த இடதுசாரி இதழில் எழுதப்பட்டது என்று கருதமுடியாது.
படிக்க :
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !
சாவர்க்கரின் புகழ் வார்த்தைகள்
சாவர்க்கரும் கூட, எங்கெல்லாம் போஸ் குறித்து பொதுவெளியில் பேசுகிறாரோ அங்கெல்லாம் அவரைப் பற்றி புகழ்ந்துரைப்பார். இந்தியாவை விட்டு போஸ் சென்ற கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு பிப்ரவரி 23, 1941 அன்று அவருடைய பாதுகாப்பிற்காக கவலையை வெளிப்படுத்தி கடைபிடிக்கப்பட்ட, ‘அனைத்திந்திய சுபாஷ் தினம்’ அமைப்பாளர்களுக்கு சாவர்க்கர் ஒரு செய்தியை அனுப்பினார்.  “அவர் எங்கிருந்தாலும், தேசத்தின் நல்விருப்பமும் இரக்கமும் நன்றியுணர்வும் அவருக்கான ஆறுதலாகவும், ஊக்கமாகவும் அமையட்டும்”என்று அதில் குறிப்பிட்டார்.
மறுபடியும், 1969ல் ராஷ்ட்ரிய சுயம் சேவக்கின் முதன்மை பத்திரிகையான ஆர்கனைசரில் அவருடைய இறுதிகாலகட்ட நேர்க்காணல் ஒன்றில் இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்த நான்கு முதன்மை காரணிகளாக சாவர்க்கரால் பட்டியலிடப்பட்டவற்றில், மூன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்புடையவையாக இருந்தது.
சாவர்க்கரின் கூற்றுப்படி, “இந்திய விடுதலைக்குப் பங்காற்றிய பல காரணிகள் இருக்கின்றன. இந்துஸ்தானத்திற்கு காங்கிரஸ் மட்டுமே விடுதலை பெற்றுத்தந்தது என்று கற்பனை செய்துகொள்வது தவறானது ஆகும். அதே போல் ஒத்துழையாமை இயக்கம், கைராட்டினம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கமே நமது நாட்டிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரத்தை பின்வாங்கவைத்தது என்று நினைப்பதும் முட்டாள்தனத்திற்கு இணையானது. பல ஆற்றல் மிக்க உறுதியான சக்திகள்தான் இறுதியாக விடுதலையை உறுதிசெய்தன.
முதலாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக சார்ந்திருந்த ராணுவத்திடம் இந்திய அரசியல் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாவதாக, இந்திய கப்பல் படை கலகம் மற்றும் விமானப்படை அச்சுறுத்தல், மூன்றாவதாக, ஐஎன்ஏ மற்றும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரமிக்க பாத்திரம். நான்காவதாக, 1857-ல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம். அது பிரிட்டிஷ் அரசை உலுக்கியது. ஐந்தாவது, காங்கிரசிலும் மற்ற குழுக்களிலும் கட்சிகளிலிருந்தும் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற தியாகம்’’
கட்டுரையாளர் : சந்திரச்சுர் கோஷ் – The Print
மொழியாக்கம் : முத்துக்குமார்

ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்

ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு,
வணக்கம்.. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம்
( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்கார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் தன் புகைப்படங்களையோ, பெயரையோ குறிப்பிட்டு செய்தி வெளியிடக்கூடாதென கோரிக்கை வைத்து தொடர்ந்த வழக்கு அது.
நீதிமன்றத்தில் முருகன் IPS தொடர்ந்த மனுவிற்கு Writ Petition எண் கொடுக்கப்படவில்லை. வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த மனுவை நீதிமன்ற எண் -10-ல் விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, மனுதாரர் என்னவெல்லாம் கேட்டிருந்தாரோ அதையே உத்தரவாக பிறப்பித்தது.
படிக்க :
போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஒருவேளை சட்டத்தில் அதற்கு இடமிருக்கலாம்.. நீதிபதிகளுக்கு அப்படி பிறப்பிக்க அதிகாரம் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். அது சரி அல்லது தவறென்று நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு விநோதம் இருந்தது ! என்ன தெரியுமா ?
நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு 10-09-2018-ம் தேதியன்று இணைந்து பிறப்பித்த உத்தரவு, அது ஒன்று மட்டுமே..
அன்றைய தேதியில் நீதிமன்ற எண் -10-ல் பிறப்பிக்கப்பட்ட மீதி அனைத்து உத்தரவுகளையும் நீதியரசர் கல்யாண சுந்தரம் மட்டுமே பிறப்பித்திருந்தார்.
ஆச்சர்யமாக உள்ளது தானே..
அதெப்படி ஒரே நீதிமன்ற விசாரணை அமர்வில் ஒரே ஒரு மனுவுக்கு மட்டும் இரண்டு நீதிபதிகள் இணைந்து உத்தரவை பிறப்பித்தனர் என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. கொஞ்சம் ஆழமாக தேடிய பின்னர் தான் தெரியவந்தது.
10-09-2018 -ம் தேதியில் இருந்து -14-09-2018 வரை அதாவது நான்கு தினங்கள் நீதியரசர் ஹுலுவாடி ரமேஷ் விடுப்பு என்று தெரியவந்தது. அதாவது விடுமுறையில் இருந்தார். ஆனாலும்,, அவரது பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த ஒரு மனுவிற்கு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மனுதாரர் முருகன் IPS மீது CBCID வழக்கு பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே முருகன் IPS மீது CBCID வழக்கை பதிவு செய்து விட்டது. அதிகாரம் மிக்க மனிதர்கள் நீதித்துறையில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை இந்த சம்பவம் உருவாக்க வாய்ப்பிருக்கிறது தானே !?
ஆம்.. அந்த எண்ணத்தை சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கியது. 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக இருந்த செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சந்திப்பில் நான்கு நீதியரசர்களும் கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதிபதியுடன் பேசித் தீர்வு காண நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன என சொல்லி எழுந்து செல்கிறார்கள்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், செல்லமேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோக்கூர்
அப்படி அவர்கள் கூறிவிட்டு சென்ற 9 மாதங்களுக்கு பிறகு தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து, நீதித்துறை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பேராபத்து, தயவு செய்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என மக்களை நோக்கி கைகூப்பிய பிறகு என்ன செய்வது ?
பின்னர், ஏதோ ஒரு வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விடுமுறையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்த விஷயம் வெளியில் வந்து விட்டது. அதன் பிறகு, கொலிஜியம் கவனத்திற்கு சென்றதாக கருதுகிறேன். சில நாட்களில் அவரை மத்திய பிரதேச நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து விட்டது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் எத்தனையோ சிறப்பான நல்ல தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்.
மிகுந்த வருத்தத்துடன் எழுதுகிறேன். சமீப காலத்தில் 160 ஆண்டு காலம் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிஜேபி என்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு, விருப்பத்திற்கு ஏற்றவாறு சாதகமான தீர்ப்புக்களை வழங்குகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று மக்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் வார்த்தைகளின் படி, நேர்மையான இந்திய குடிமகன் என்ற உரிமையிலும் உங்களுக்கு சிலவற்றை தெரியப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது.
24-01-2018-ம் தேதியன்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஷயம் சர்ச்சையானது. தமிழகத்தில் இருக்கும் “நாம் தமிழர்” என்ற கட்சியின் நிர்வாகிகள் காஞ்சி மடத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மடத்தின் மேலாளர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் மனு தாக்கல் செய்கிறார்.
நீதியரசர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் 06-12-2021- ம் தேதியன்று உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதில்..
தமிழக அரசின் குறிப்பாணை எண். 3584/70-4 தேதி 23.11.1970 -ன் படி உள்ளாட்சி அமைப்புக்கள், அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினார்.
தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கம் பாடல் தானே தவிர, பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார். சன்யாசிகள் குறித்து மிக உயர்வான கருத்துகளையும் கூட அந்த உத்தரவில் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் பதிவு செய்திருந்தார்.
நீதிபதி ஸ்வாமிநாதன்
ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நான்கு தினங்களில் அதாவது
06-12-2021- ம் தேதியன்று எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.. 10-12-21-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்படும் தருணத்தில் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.
இந்த விஷயம் பார்ப்பதற்கு கொஞ்சம் லேசானது போல தெரியலாம். ஆனால்,,
நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஒரு விதமான மோதல் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்.
மதுரையில் இருக்கும் மாரிதாஸ் என்ற நபர் Maridhas Answers என்ற Youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருடைய ஒரே நோக்கம் இலக்கு எல்லாம் திமுக என்ற கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவது மட்டுமே. ஆட்சியில் இருந்தாலும்-இல்லாவிட்டாலும் திமுகவை மட்டுமே திட்டி வீடியோ போடுவார். அரசியல் ரீதியாக அவரது வீடியோக்கள் பிஜேபிக்கு ஆதரவானவை. அது அவரது நிலைப்பாடு. தவறொன்றும் இல்லை.
ஆனால்,, கடந்த 2021-டிசம்பர் மாதம் 10-ம் தேதி குன்னூரில் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிறது.
அது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவொன்றை போடுகிறார். அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
போலீசார் கைது செய்கின்றனர்.
கொரோனா தொற்றின் முதலாம் அலை பரவல் தொடங்கியபோது தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் தான் பரவலுக்கு காரணம் என்று அவர் பேசிய வீடியோ குறித்து கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுகிறார். மாரிதாஸின் கைதை கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் செயல், என தமிழக பிஜேபியினர் பெரும் அரசியல் யுத்தத்தையே நடத்தி வந்தனர். பிஜேபியின் பல தேசியத்தலைவர்கள் கூட மாரிதாஸின் கைதை கண்டித்தனர். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முழுக்க பிஜேபியின் அரசியலுக்கு உதவக்கூடியவர்.
ஆனால், விஷயம் அதுவல்ல.. தன் மீது போடப்பட்ட FIR – களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் இரண்டு மனுவும் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்தது. மனு தாக்கல் செய்த சில தினங்களில் பதிவு செய்யப்பட்ட FIR –களை ரத்து செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பிக்கிறது நீதிமன்றம். அந்த உத்தரவு சட்டப்படியே கூட பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
மாரிதாஸ்
காவல்துறையால் பொய்யாக போடப்பட்ட FIR-ஐ ரத்து செய்யக்கோரி,,, உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபர்கள் தாக்கல் செய்யும் எல்லா மனுக்களின் மீதும் மதுரை உயர்நீதிமன்ற கிளை இவ்வளவு வேகமாக உத்தரவு பிறப்பித்துள்ளதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
சாமானியர்களுக்கும் இவ்வளவு விரைவாக நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதே நேரம், நீதிபதியின் தீர்ப்புக்கு எந்த விதமான உள்நோக்கமும் நான் கற்பிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து வரும் பாஜக தங்களுடைய ஆதரவாளர்களை கண்ணின் இமைபோல பாதுகாக்க நினைக்கிறது.
அந்த கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் விஷயங்கள் எப்படி நடக்க வேண்டுமென நினைக்கிறதோ அது மதுரை உயர்நீதிமன்ற கிளை மூலமாக நடக்கிறது. அப்படியொரு தோற்றம் ஆழமாக உருவாகிறது என்பதை தலைமை நீதிபதியான தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.
கடந்த 2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி,விஷமருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி அவர். 163 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி அது.
அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது முத்துவேல் என்பரால் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. அதன் பிறகு மாணவி லாவண்யாவின் இறப்பிற்கு காரணம் மதமாற்ற நிர்பந்தமே என தமிழக பிஜேபினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இறந்த மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 21-01-22 ம் தேதியன்று மனு ஒன்றை தாக்கல் செய்கிறார். அவசர வழக்காக அன்றே மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு, அந்த வழக்கில் ( Crl OP(MD)No.1344 of 2022) 31-01-22-ம் தேதியன்று நீதிபதி.ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 34 பக்க தீர்ப்பொன்றை பிறப்பிக்கிறார்.
மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே தயவு செய்து அந்த தீர்ப்பை நீங்கள் படிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் மனு ஜோசப் என்பவர் கற்பனையாக எழுதிய Serious Men என்ற புத்தகத்தை மையமாக வைத்து Sudhir Mishra என்பவர் நவாஸுதீன் சித்திக்கை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்கி உள்ளார். netflix-OTT தளத்தில் அந்த படம் வெளியாகியிருக்கிறது.
அந்த திரைப்படத்தில் வரும் 2 நிமிடம் மட்டுமே வரும் காட்சியில் உள்ள வசனங்களை எல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கு முன்பாக, அய்யன் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நவாஸுதீன் சித்திக், தன்னுடைய தாத்தா குளத்தில் தண்ணீர் எடுத்து குடித்தற்காக சிலர் எலும்பை உடைத்துவிட்டதாகவும், அதனால் தன்னுடைய தாத்தா சாகும் வரை கூன் விழுந்த நிலையிலேயே வாழ்ந்ததாக மிகுந்த கோபத்துடன் கூறுவார்.
தலைமையாசிரியர் அறையில் பேசப்படும் காட்சிகளை மட்டும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதால் இதையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. தனக்கு தேவையான விஷயங்களை மட்டும் குறிப்பெடுத்து வழக்கறிஞர்கள் பேசலாம்.
பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசலாம். ஆனால்.. நீதிமன்றமே பேசக்கூடாது அல்லவா!
கற்பனையான கதையில் கதாபாத்திரங்கள் உரையாடுவதை எல்லாம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளதால், அந்த கதாபாத்திரம் பேசிய மற்ற எல்லா விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமையில்லையா ?
அதே போல மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தின் வசனங்கள். 1990- ம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாணக்யா என்ற தொடர் குறித்து கூட தீர்ப்பில் எழுதியுள்ளார்.
மிகுந்த பணிவுடன் கூறுகிறேன். நீதிபதி குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் ஆவணப்படங்கள் அல்ல. அவை ஒரு பொழுதுபோக்கு அம்சம் நிரம்பிய திரைப்படங்கள்.
ஆனால்.. திரைப்படத்தில் வரும் காட்சிகளை, வசனங்களை எல்லாம் உண்மை என்று நீதிமன்றங்கள் எப்போது நம்பத் தொடங்கின என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கூடவே அந்த தீர்ப்பில், சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில் கூறப்படும் விஷயம் குறித்து விசாரிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
உண்மையில் அந்த வீடியோவே சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கும் முக்கிய காரணம். அதனால் உங்களுக்கு இந்த ஒரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
2017, ஏப்ரல் 1-ம் தேதி ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத், ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க இராஜஸ்தான் சென்றார். அப்போது விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொடூரமாக தாக்குதலுக்கு ஆளான முதியவர் பெஹ்லு கான் அடுத்த இரண்டு தினங்களில் இறந்து விடுகிறார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கை இராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. 9 பேர் அந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் சிறுவர்கள். கடந்த 14.08.2019 தேதியன்று ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட 6 நபர்களையும் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுவித்துவிட்டது.
அதோடு நிற்கவில்லை. இந்த தேசத்தையே அதிர வைத்த அந்த வீடியோவை எல்லாம் ஆதாரமாக கருத முடியாதென்றும் கூறி விட்டது. ஆனால், தமிழகத்தில் அதே விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முத்துவேல் என்பவர் எடுத்த ஒரு வீடியோவை மட்டுமே ஆதாரமாக வைத்து நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நம்புகிறோம். எல்லோரும் பேசுகிறோம். உண்மை வேறோ என்று நினைக்கத்தோன்றுகிறது. நாம் எல்லோருமே ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றக்கூடியவர்களே. ஏதோ ஒரு கட்சியின் கொள்கை, சித்தாந்தம் பிடித்தோ, அல்லது அந்த கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டோ அதன் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.
நீதிபதியாக பதவி வகிப்போர் கூட வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். நீதிபதிகளுக்கு கூட அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். அது தவறொன்றும் இல்லை. ஆனால், அவர்களின் தீர்ப்பு அரசியல் கட்சிகள் செய்யும் ஆதாய அரசியலுக்கு உதவிகரமாக இருந்துவிடக்கூடாதென நினைக்கிறேன்.
படிக்க :
யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !
லாவண்யா என்ற சிறுமியின் மரணம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ள உத்தரவு, பிஜேபி என்ற அரசியல் கட்சி தன்னுடைய ஆதாயத்திற்காக கையிலெடுத்த விவகாரத்திற்கு உதவி செய்வதற்காகவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவோ என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அதனால் மீண்டும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அந்த உத்தரவை நீங்கள் படிக்க வேண்டும்.
இந்தியாவில்,, திரைப்பட வசனங்களை எல்லாம் உதாரணமாகக் காட்டி இதற்கு முன்பு இப்படி ஒரு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை மாண்புமிகு தலைமை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் நீதிமன்றங்களால் மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்டால் ஆபத்தானதாக மாறிவிடும் என மிகவும் அச்சப்படுகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக கூறியதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “Justice for the Judge” புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் தொடர்பாக பல தொலைக்காட்சிகளுக்கு அவர் பேட்டி கொடுத்தார். நீதிபதிகள் மீதான சில விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, நீதிபதிகளும் மனிதர்கள் தான்-தேவ தூதர்கள் அல்ல என்று பதில் கொடுத்தார். உண்மைதானே அது..
நீதிபதிகளுக்கும் சில அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். அரசியல் கட்சிக்கு ஆதரவானவர்களாக கூட இருக்கலாம். தவறே அல்ல. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இந்திய நீதித்துறை செயல்படுகிறதென வெளிப்படையாகவே விமர்சனங்கள் இருப்பதை நீங்களும் அறிவீர்கள்.
பதவியில் இருந்த போதே 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மறைமுகமாக அதை மக்கள் முன்பு வெளிப்படுத்திவிட்டனர். ஒருவேளை நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாகவோ, தவறாகவோ நடக்கிறார்கள் என்றால், அவர்களை தண்டிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
சட்டத்தை வடிவமைத்தவர்களும் அப்படியான வாய்ப்புக்களை உருவாக்கவில்லை. கடந்த 60 தினங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் சில உத்தரவுகள் பகிரங்கமாகவே அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ற உத்தரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கும் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனுக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் நிலவும் இந்த போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தவறான முன்னுதாரணமாகவும் மாறிவிடக்கூடாது. அந்த அக்கறையின் அடிப்படையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன். இதை நீங்கள் மனுவாகவும் கூட கருதலாம்.
அதிகாரம் மிக்கவர்கள், செல்வாக்கானவர்களால் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஏற்றவாறு காரியத்தை சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற நீதித்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருக்க, பிஜேபி என்ற கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு, அதன் நிர்வாகிகள் விரும்புவது போல நீதிமன்றம் மூலமாக உத்தரவுகளை பெறுகிறதோ என்ற பிம்பம் ஏற்படுவது நல்லதல்ல என்பதை மிகுந்த கவனத்தோடு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
அது ஒரு குடிமகனாக என்னுடைய கடமை என்றும் கருதுகிறேன். மனிதர்கள் எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் நீதிபதிகள் கொஞ்சமாவது
விதி விலக்கானவர்களாக இருக்க வேண்டியது அவசியமில்லையா ?
B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்
முகநூலில் : Aravind Akshan
disclaimer

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 1
கிறித்தவர்கள், முசுலீம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய நான்காந்தர குடிமக்களாக, உள்நாட்டு ஏதிலிகளாக மாற்றுவது; மனு நீதியின் படி ஆண்களை மகிழ்விப்பதற்காகவே படைக்கப்பட்ட பிறவிகளாக, பார்ப்பன ஆணாதிக்கத்திற்கு அடிமைச் சேவை செய்பவர்களாக பெண்களை நடத்துவது; விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை, தேவைகளை தேசத்திற்கு எதிரானதாகவும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை தேச நலனாகவும் முன்னிறுத்துவது; உழைக்கும் மக்களின் நலன்களைப் பேசக் கூடிய புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகளை அழித்தொழிப்பது; இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பன பாசிச அமைப்பு சொல்லும் ‘இந்துராஷ்டிரம்’. நாம் சொல்லும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
இத்தகைய இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னேறிவருகிறது என்பதுதான் இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பேரபாயம். உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகள், பாசிசக் கொடுங்கோன்மைக்கான முன்மாதிரிகள் என்று நாம் சொல்லிவந்தோம். ஆனால், அவை பழைய செய்திகளாகிவிட்டன. இன்று கர்நாடகா, திரிபுரா, அசாம் என பல புதிய சோதனைச் சாலைகளையும் உண்டாக்கியிருக்கிறது சங்கப் பரிவார கும்பல்.
சமீபத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், தொடர்ந்து அம்மாநிலத்தில் கிறித்துவ வழிபாட்டுத்தலங்கள் காவி குண்டர்களால் தாக்கப்படுவது; அசாமில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அரசால், செப்டம்பர் மாதம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் ஏழை இசுலாமிய மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி 800 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைத்ததோடு, இருவரை சுட்டுக் கொன்றது; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட பாசிச கொலைவெறி தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் பேரணியின் போது இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்கள் என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எல்லா இடங்களிலும் நிகழ்த்தும் வழமையான நிகழ்வுகளாகவோ, பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களாகவோ பார்க்க முடியாது. இவையாவும் இம்மாநிலங்களில் உள்ளூர வேர்விட்டிருக்கும் காவி பயங்கரவாதத்தின் வெளிப்படைத் தோற்றங்களே!
குஜராத், உத்தரப்பிரதேசம் போல கர்நாடகா, திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களும் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியிருக்கிறது என்று நாம் சொல்வதற்கான பொருள், இம்மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பன-இந்துமதவெறியின் செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.
படிக்க :
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
000
1993 முதல் 25 ஆண்டுகாலம் சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுராவில் எவ்வாறு ஒரே தேர்தலில் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது? 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க, 2018-ல் 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2013-ல் 1.5 சதவீதமாக இருந்த வாக்குகள் 2018-ல் 42.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் திரிபுராவில், 222 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 217 இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருக்கிறது.
அசாமில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, 29.5 சதவீத வாக்குகளுடன் 2016-ல் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 123 இடங்களில் 86-ல் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க மட்டும் 60 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களால் பா.ஜ.க தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2021 தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 33.2 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 11 இடங்களை பா.ஜ.க இழந்திருந்தாலும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே மேற்கண்ட வாக்கு சதவிகிதம் உறுதிசெய்கிறது.
தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க நேரடியாக ஆளும் மாநிலம் என்றால் அது கர்நாடகம்தான். இங்கு 2008 சட்டமன்றத் தேர்தலில், 33.6 சதவீத வாக்குகளுடன் 110 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களை இழந்து 104 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்கு சதவிகிதம் 36.2 ஆக அதிகரித்திருக்கிறது.
பற்றி எரியும் திரிபுரா
கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் என்பது அம்மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு மக்கள் அடித்தளம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இந்த அடித்தளம் தேர்தலில் வெற்றி பெற்று உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசியல் சூழல், வரலாறு, மக்களின் பண்பாடு உள்ளிட்ட தனிச்சிறப்பான நிலைமைகளுக்கேற்ப பல ஆண்டுகள் மக்களிடம் வேலைசெய்து உருவாக்கிய இந்துத்துவ செல்வாக்கின் விளைவே தேர்தல் வெற்றி. சந்தர்ப்பவாத கூட்டணிகள், பிற கட்சியினரை மிரட்டிப் பணியவைப்பது, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கவர்ச்சிவாத பிரச்சாரங்கள் போன்றவையெல்லாம் இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்திக் கொண்டவை மட்டுமே.
சான்றாக, தமிழகத்தில் அடிமை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அவர்களது ஓட்டுகளையும் தனக்கு அறுவடை செய்துகொண்டாலும் நாகர்கோயில், கோயம்பத்தூர் (தெற்கு), மொடக்குறிச்சி, திருநெல்வேலி என கீழே தான் வேலைசெய்து செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க.வால் வெற்றிபெற முடிந்தது. அ.தி.மு.க.வின் ஓட்டுகள் கூடுதலாக அவர்களுக்கு உதவியவை மட்டுமே.
எனவே “தமிழகத்தில் அ.தி.மு.க. இல்லாவிட்டால் பா.ஜ.க. ஒரு சீட்டு கூட வெற்றி பெற்றிருக்காது; பிற மாநிலங்களிலும் சந்தர்ப்பவாத கூட்டுகள், பொய் வாக்குறுதிகள், குதிரை பேரங்களை நடத்துவது போன்றவற்றின் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது, மற்றபடி அதற்கு செல்வாக்கு இல்லை” என்பது போன்ற கருத்துக்கள் எதார்த்தத்தை காண மறுப்பதும் பாசிஸ்டுகளைப் பற்றிய மிகவும் கொச்சையான புரிதலுமாகும்.
கர்நாடகா, திரிபுரா, அசாம் போன்ற மாநிலங்களை கவ்வியிருக்கும் இந்துராஷ்டிர அபாயத்தை புரிந்துகொள்ளவும் இந்தியாவை காவி-கார்ப்பரேட் பாசிசத்திடமிருந்து விடுவிக்கவும் விரும்புவோர் அனைவரும் ‘தகிடுதத்தங்கள் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது’ என்ற அப்பாவித்தனமான புரிதலையும் சட்டமன்ற-நாடாளுமன்ற தேர்தல்களில் ‘சாத்தியமான மாற்று’களை ஆதரிப்பதன் மூலமே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தோற்கடித்துவிடலாம் என ‘மேற்’பார்வை பார்ப்பதையும் விடுத்து ‘கீழே’ (மக்கள் மன்றத்தில்) நடக்கும் மாற்றங்களை கண் திறந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
000
கர்நாடகா: காவி பயங்கரவாதத்தின் தென்னிந்திய நுழைவாயில்!
இதுவரை இல்லாத வகையில், கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் மேல் பயங்கரவாத தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்கிறார்கள் என கிறித்தவர்களும் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என முசுலீம்களும் பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா ஆகிய சங்கப் பரிவார மதவெறி அமைப்புகளால் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
கடந்த நவம்பர் 30 – அன்று கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பேலூர் பகுதியில், நடைபெற்றுக் கொண்டிருந்த கிறித்துவ ஜெபக் கூட்டத்தை பாதியில் நிறுத்தி அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளார்கள். கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்திலும் சர்ச்சுக்குள் புகுந்து பைபிள் புத்தகங்களைப் தீயிட்டு எரித்துள்ளது காவி குண்டர்படை. கடந்த மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கிறித்துவ பள்ளிக்குள் நுழைந்து அவர்களின் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தேவாலயத்திலும் வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கே கிறித்தவர்கள் அச்சமுறும் நிலைமைதான் உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், “நீங்கள் வழிபாடு நடத்தாதீர்கள். எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது” என்று வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ்.இன் அடியாள் படையாக நடந்துகொள்கிறது போலீசு.
உண்மை கண்டறியும் குழு ஒன்றின் அறிக்கையின் படி, கிறித்தவர்கள் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்திய மாநிலங்களில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம்வரை நாடு முழுவதும் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட 305 மதவெறித்தாக்குதல்களில் 66 சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்திலும் 47 சத்தீஸ்கரிலும் 32 கர்நாடகத்திலும் நடைபெற்றிருக்கிறது.
முசுலீம் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. தங்களது மத அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தாலேயே பலர் காவி குண்டர்களால் அநியாயமாக தாக்கப்படுகிறார்கள். பாகல்கோட் மாவட்டத்தில், தனியார் டியூசன் செண்டர் ஒன்றிற்கு குல்லா அணிந்து வந்த இரண்டு முசுலீம் மாணவர்கள் 15 பேர் கொண்ட மதவெறி கும்பலால் கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். முசுலீம்களின் கடைகளும் தாக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் வரிசையில், கர்நாடகாவிலும் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு. இவையெல்லாம் கர்நாடகா இன்னொரு உத்தரப் பிரதேசமாக மாறி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-ன் விளைநிலமான கர்நாடக பார்ப்பன கும்பல்
கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு விதை துர்கவாகினி, பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, பசுப் பாதுகாப்புப் படை, பா.ஜ.க. என பல்வேறு பெயர்களில் கிளை பரப்பி விருட்சமாய் வளர்வதற்கான வளமான அடித்தளமாய் இருந்தவர்கள் தென் கர்நாடகாவின் மங்களூரு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்களே.
மகாராஷ்டிரத்தில் ஆர்.எ.ஸ்.எஸ். தோன்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள் என்றால், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கு காரணமானவர்கள் கொங்கனி பேசும் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்கள், சித்ரபூர் சரஸ்வத் பார்ப்பனர்கள், துளு பேசும் சிவாலி பார்ப்பனர்கள் மற்றும் கன்னடம் பேசும் ஹவ்யாக் பார்ப்பனர்களாவர். இவர்கள் பார்ப்பன மேலாதிக்கத்திலும், செழிப்பான வேத காலத்திலும் விருப்பம் கொண்டிருந்ததால் இயல்பாகவே இந்துராஷ்டிரத் திட்டம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் நீரோட்டத்தில் இரண்டறக் கலந்தனர். ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கு முன்பே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா ஆகியவற்றைக் கர்நாடகாவில் உருவாக்கியவர்களும் இவர்களே.
கிறித்தவ மிஷனரிகள் ஆங்கிலக் கல்வி என்ற பெயரில் மதமாற்றம் செய்கின்றன என்பதற்கு எதிராக பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது. மதமாற்றம் என்பது முழு உண்மையல்ல. பார்ப்பனர்கள்கூட கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள். உண்மை என்னவென்றால், 1860-களில் ஆங்கில கிறித்துவ மிஷனரிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (பில்லவர்கள்) ஆங்கிலக் கல்விக் கொடுத்தன. இதனால் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிகளில் பார்ப்பனர்களுக்கு சமமாக தாழ்த்தப்பட்டவர்களும் பணியாற்றினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பார்ப்பன மேலாதிக்க வெறியின் விளைவாகவே கர்நாடகாவில் பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது, “இந்துக்கள் கிறித்துவ மிஷனரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது” என்று பிரச்சாரமும் செய்தது.
படிக்க :
மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
1925-ல் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடக பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களாயினர். கர்நாடாகவில் முதல் ஷாகா பெலகாவில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மங்களூருவில் உருவாக்கப்பட்டது. சரஸ்வத் பார்ப்பனர்களின் நிதி உதவியால் உருவாக்கப்பட்ட கனரா பள்ளிதான் ஆர்.எ.ஸ்.எஸ்-ன் அலுவலகமாக இருந்தது. இப்பள்ளியில் ஆங்கிலக் கல்வியோடு வேத கலாச்சாரமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
1970-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி நிறுவனமான “வித்யா பாரதி” தற்போது 2,000 பள்ளிகள்; 30 இலட்சம் மாணவர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், 1951-இல் ஷாகாக்கள் இருந்தாலும் ஜன சங்கம் தொடங்கப்பட்ட பிறகும் பரந்துபட்ட மக்களிடம் செல்வாக்கு இல்லாத, பார்ப்பனர்களின் அமைப்பாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். இருந்தது.
பரந்த மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பார்ப்பனரல்லாத மக்களை சாதியைத் தாண்டி ‘இந்துக்களாக’ திரட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இராமன் என்ற கதாநாயகனும் முசுலீம் என்ற வில்லனும் தேவைப்பட்டார்கள். இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் அமைப்பு வடிவங்களையும் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
(தொடரும்)

பாகம் – 2

அப்பு

மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, வடக்கு மலையம்பாக்கம் என்ற ஊரில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு வரை தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரையில் பெயர் குறிப்பிட விரும்பாத கல்வி நலன்விரும்பிகளின் முன்முயற்சியால் தான் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர், கம்ப்யூட்டர், புரோஜெக்டர், ஸ்பிக்கர் பாக்ஸ் போன்றவை அனைத்தும் இத்தகைய நலன் விரும்பிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகம் மட்டும் அல்லாமல் தமிழ், கணிதம், ஆங்கிலம் பயிற்சிகளுக்கு தேவையான நூல்கள் பிரதி (ஜெராக்ஸ்) எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வகுப்பறைகளில் புரோஜெக்டர் உள்ளது.
இந்த பள்ளியில் ஆண்களுக்கு 2 கழிவறைகள் மற்றும் பெண்களுக்கு 2 கழிவறைகள் என மொத்தம் 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கவேயில்லை. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 350 மாணவர்களுக்கும் சேர்த்து நான்கு கழிப்பறைதான் இருக்கிறது.
படிக்க :
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
கல்வி நலன் விரும்பி ஒருவரின் உதவியுடன் பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர பேருந்து ஏற்பாடு செய்து தினமும் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் தினமும் 2 கி.மீ நடந்து வர வேண்டிய சிரமம் மாணவர்களுக்கு இல்லாமல் உள்ளது. மேலும், இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2013-ம் ஆண்டு முதல் 90%-க்கு கீழ் குறையாமல் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெறுகின்றனர். தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதன் காரணமாக 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு 2011-ம் ஆண்டு கட்டிடம் கட்ட அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை ஏற்கெனவே பல பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அரசு ஒதுக்கிய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர். ஆனால் சுமார் 20 செண்ட் அளவிலான மாட்டுப்பண்ணை மட்டும் அகற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு 5 செண்ட் அளவிலான பள்ளி நிலம் அருகில் உள்ள கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
பள்ளி திறந்து செயல்பட ஆரம்பித்த பிறகும் மாட்டுப்பண்ணை அகற்றப்படவில்லை. பள்ளிக்கு புரவலர்களாக இருந்து வரும் ஆர்வலர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தால் அரசானது 27.6.21 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
பள்ளி வளாகத்திற்கு முன்னால் விளையாட்டு மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் மழை பெய்யும் போது எல்லாம் 3 அடிக்கு தண்ணீர் தேங்கிவிடுகிறது. மழை விட்ட பிறகும் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி விடுகிறது. தற்போது 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீரை கொரோனா ஊரடங்கால் அப்புறப்படுத்தாமல் அப்படியே ஒன்றரை மாதமாக விட்டுவிட்டனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பள்ளி திறக்கப்படுவதால் கிராமப் பஞ்சாயத்து சார்பாக தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீரை எப்படி தேங்கவிடாமல் தடுப்பது என்பது பற்றி நிரந்தர தீர்வாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றிய அக்கறையும் அரசுக்கு இல்லை. மண்ணைப் போட்டு அந்த விளையாட்டு மைதானத்தை மேடாக்குவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். ஆனால் அதற்கு பணம் செலவழிக்க அரசு தயாராக இல்லை.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் நிறைவடையவில்லை. முகப்பு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குடிகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு, பள்ளி வளாகத்தில், மதுபாட்டில்களும், குடிகாரர்கள் விட்டுச் செல்லும் மீந்து போன உணவுப்பொருட்களும் ஆங்காங்கி சிதறிக் கிடக்கின்றன.
அரசு செய்துதர வேண்டிய பல்வேறு அவசியப் பணிகளை சமூக ஆர்வலர்கள் தங்கள் முயற்சியால் நிறைவேற்றிவந்த போதும், விளையாட்டு மைதானத்தை சீர்செய்தல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட அதிக செலவு கோரும் பணிகளைக் கூட அரசு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகள் அங்குள்ள ஆசிரியர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களின் முன்முயற்சியால் தான் இயங்கிவருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய அரசோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.

அமீர்

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தோழர்கள் மகத்தான வெற்றி!

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர்கள் மகத்தான வெற்றி !
SRF மணலி தொழிலாளர்களை வாழ்த்துகிறோம் !
31.01.2021 அன்று நடந்து முடிந்த SRF மணலி பொதுத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையை ஏற்றுக் கொண்ட எமது NDLF – தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் 5 பேரை மகத்தான வெற்றி பெறச் செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகள், அச்சுறுத்தல்களையும் மீறி நமது அணிக்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து தொழிலாளர்கள் தங்களது மிகப் பெரிய நம்பிக்கையை பதிவு செய்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் பா. விஜயகுமார் (முன்னாள் பொருளாளர், பு.ஜ.தொ.மு) அவர்கள் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கையானது, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய மூன்று வேட்பாளர்களது ஓட்டுக்களின் கூட்டு எண்ணிக்கையை விட 52 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. நீண்ட காலம் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சுப.தங்கராசுவுக்கு 65 ஓட்டுகளும், பு.ஜ.தொ.மு-வின் ஏகபோக உரிமையாளராக கூறிக்கொண்ட சீர்குலைவுவாதிகள் அணியிலிருந்து போட்டியிட்ட திரு. சுதேஷ்குமாருக்கு 32 ஓட்டுக்களும்தான் கிடைத்தன.
படிக்க :
ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
துணைத் தலைவராக போட்டியிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளரும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் & டெக்னீசியன்கள் சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளருமான தோழர் சி.வெற்றிவேல் செழியன் நான்குமுனைப் போட்டியில் 140 ஓட்டுகள் பெற்று வெற்றிவாகை சூடினார். சீர்குலைவுவாதிகள் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. பார்த்தசாரதி வெறும் 38 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
சீர்குலைவுவாதிகளது சீடராகவும், 4 முறை பொதுச்செயலாளராகவும் இருந்த திரு. பி.ஆர். சங்கர் வெறும் 48 ஓட்டுகள் பெற்று நமது முன்னணி தோழர் வி. தேவராஜ் அவர்களிடம் தோற்றுப்போனார்.
சீர்குலைவுவாதிகளின் இன்னொரு முக்கியப் புள்ளியான முன்னாள் மாநில துணைத்தலைவர்) திரு. சதீஷ் வெறும் 48 ஓட்டுகள் வாங்கி எமது தோழர் பொ.பிரகாஷ் அவர்களிடம் மண்ணைக் கவ்வினார். நான்குமுனைப் போட்டியில் இன்னொரு முன்னணி தோழரான எம்.எஸ்.ஆனந்த் முதன்முதலாக போட்டியிட்ட தேர்தலில்) 3-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்று இணைச்செயலாளராக வென்றார்.
நமது அணி தோழர்கள் சீர்குலைவுவாதிகளை விட அதிகபட்சம் 5 மடங்கு ஓட்டுகளைப் பெற்று, நாம்தான் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு – வின் உண்மையான வாரிசுகள் என்பதை நிலைநாட்டியுள்ளனர். இது நமது தலைமைக்கும், அரசியல் – அமைப்பு உறுதிக்கும் கிடைத்த வெற்றி.
கடந்த ஜனவரி 2021 முதலாகவே தொழிற்சங்கத்தின் மீதும், தொழிலாளர்கள் மீதும் நிர்வாகம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அப்போது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த சீர்குலைவுவாதிகளது சீடரும், தலைவர் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் வடசென்னை தொழிற்சங்க முகமாக இருந்தவரும் சங்கத்தின் உரிமைகளை நிர்வாகத்துக்கு பலியிட்டனர்.
நமது அணி தோழர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. முகநூலில் லைக் போட்டவருக்கு சஸ்பென்சன் கொடுக்கின்ற அளவுக்கு அடக்குமுறை தலைவிரித்தாடியது. எதிர்பார்ப்புகள் நிராசையானது. சங்கத்தலைமை வெறும் பொம்மையாக இருந்தது. இந்த தருணத்தில் சீர்குலைவுவாதிகள் நம்மீது அவதூறுகளை பொழிந்து கொண்டிருந்தனர்.
ஆனாலும், இந்த அவதூறுகளை புறந்தள்ளிய தொழிலாளர்கள் நிர்வாகத்தை எதிர்க்கொள்வதற்கு பொருத்தமான அரசியல் – அமைப்பு ஆளுமை கொண்ட அணி நமது அணிதான் என்பதை தொழிலாளர்கள் மிகச்சரியாக உணர்ந்துள்ளனர். இந்த உணர்தல் மற்றும் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் உண்மையானவர்களாக இருப்போம் என்பதை தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.
இந்த வெற்றி தொழிலாளர்களது வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த வர்க்க ஒற்றுமையை கூட்டாக பேணிப்பாதுகாக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு
தொடர்புக்கு : 8056386294

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

தமாற்றம் என்கிற வார்த்தையைக் கொண்டுவந்து ஊடகங்களில் திணித்து ஒரு கலவரத்தை நிகழ்த்த இன்றைக்கு சில தமிழக இந்துத்துவாதிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அணுவளவிற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அதனை அணுகுண்டாக்கி வெடித்து அதனால் வீழ்ந்த பிணங்களின் மீதேறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்கள் தான் இந்துத்துவவாதிகள்.
மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும், அதே தேதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.
1965-ம் ஆண்டு, தன்னுடைய 24-வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
1999-ல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல் வந்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் வெளிப்புற கதவுகளையும் மூடி பூட்டுப் போட்டது அக்கும்பல். பின்னர், கிரகாம் இருக்கும் காரைச் சுற்றி அக்கும்பல் நின்றது. அவர்கள் ஒவ்வொரின் கையிலும் வாளும் கோடாரியும் இருந்தன. அந்த ஆயுதங்களை வைத்து அந்த காரை அடித்து உள்ளே இருக்கும் கிரகாமையும் அவரது மகன்களையும் மிரட்டினர். உள்ளே என்ன செய்வதென்றே பயந்து கதறிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்று வழிதெரியாமல், காருக்கு வெளியே இருக்கும் கும்பல் என்னதான் செய்யப்போகிறதோ என்ற பதட்டத்தில் கிரகாமும் இருந்தார்.
அந்த காரின் மீது ஊற்றுவதற்காகவே கொண்டுவந்திருந்த எரிபொருளை அக்கும்பல் ஊற்றியது. அதன்பின்னர், அந்த காரின் மீது நெருப்பைப் பற்றவைத்தது அக்கும்பல். அந்த கார் முழுமையாக பற்றி எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தது அக்கும்பல். காரிலிருந்து கிரகாம் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த கார் எரிந்து முற்றிலும் சாம்பலாகும் வரையிலும் அதனைச் சுற்றியே அக்கும்பல் நின்று கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தது.
மிக வசதியான ஒரு நாட்டில் பிறந்து, ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தும், அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கிற ஒரு கிராமத்தில் ஏழை மக்களுக்காக சேவை செய்ய வந்த ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்துவிட்டு, தன்னுடைய கோரப்பசியைத் தீர்த்துக்கொண்டதும் அங்கிருந்து அக்கும்பல் கிளம்பியது.
ஏழைகளை ஏமாற்றி கிருத்துவ மதத்திற்கு மாற்றுவதாக குற்றஞ்சாட்டித்தான் அவர்களைக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டவர்கள் தைரியமாகவே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தனர். அத்தனை பெரிய கும்பல் திட்டமிட்டு செய்த இவ்வளவு பெரிய குற்றத்திற்கு டாரா சிங் ஒரே ஒருவனுக்கு மட்டும் தான் தண்டனையே கிடைத்தது. அவன் அக்கொடூரக் கொலையை நிகழ்த்துவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் கூட பாஜகவுக்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்து ஓட்டுக்கேட்டவன். பஜ்ரங் தளத்தில் இருந்தவன்.
“டாரா சிங்குக்கும் பாஜகவிற்கு உள்ள தொடர்பு ஊரறிந்த ஒன்றுதான். அந்த சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் அனைத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்துகொள்ளும் அளவுக்கு அவன் அதன் அங்கமாகவே இருந்தான்” என்றார் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லலித் தாஸ்.
ஆனால், அவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்றும் அவன் தனியாக ஒருவனே திட்டமிட்டு, ஒருவனே அந்த காரை மடக்கி, ஒருவனே அந்த காருக்கு தீவைத்து, கொலை செய்ததாக தீர்ப்பு எழுதப்பட்டு, அவனுக்கு மேலுள்ள மிகப்பெரிய கொலைகாரர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் விட மிகக்கொடுமை என்னவென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கூட ஆயுள் தண்டனையாக பின்னர் குறைக்கப்பட்டுவிட்டது. அதுகூட பரவாயில்லை. ஆனால், அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள் இருக்கிறதே, அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“கிரகாம் ஸ்டெயின்சும் அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் ஏழைகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததும் அதற்காகவே அவர்களுக்கு பாடம் புகட்டவே குற்றவாளி இவ்வாறு செய்ததாகவும் தெரியவருகிறது. அதனை கருத்தில்கொண்டு, அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டையாக குறைக்கிறோம்… ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிட்டு, அவரை மதமாற்றம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..” என்றெல்லாம் விரிவாக மதமாற்றத்தையே அதிகமாகக் கண்டித்து ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது.
ஒருவேளை சோத்துக்காக மதம் மாறினால் என்ன? தொட்டால் தீட்டு, அருகே வராதே, படிக்காதே, வேலைக்குப் போகாதே என்று தள்ளிவைக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ஒருவேளை சோறும் வேலையும் வாழ்க்கையும் கிடைக்கிறதென்றால் மதம் மாறினால் கூட தவறில்லை தானே.
‘தேசம்… தேசம்’ என்று பேசிக்கொண்டே காசுக்கும் பெரிய வேலைக்குமாக ஆசைப்பட்டு அமெரிக்காவிற்கு போய், தேசம் மாறும் தேசபக்த(?) இந்துத்துவாதிகள் இல்லையா? காசுக்காக தேசம் மாறலாம், ஆனால் ஒருவேளை சோத்துக்காக மதம் மாறக்கூடாதா என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டாய மதமாற்றம் நடந்ததாக சொன்னது அந்த குற்றவாளி மட்டும்தான். அது வேறெந்த வடிவத்தில் நிரூபிக்கப்படாத ஒரு வாதம் தான்.
இந்த தீர்ப்பை எழுதியவர் வேறு யாருமல்ல… அச்சு அசல் தமிழரான முன்னாள் நீதிபதியும், ஓய்வுக்குப்பின்னர் கேரளாவின் கவர்னராக பதவிகிடைத்தவருமான சதாசிவம் தான்.
சரி, ஏழைகளை மதமாற்றம் செய்ததால் தான் கொலை செய்தோம் என்று சொன்னார்களே அந்த கொலைகாரர்கள், ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்சைக் கொன்ற பின்னர், அந்த கிராமத்தின் ஏழ்மையை அவர்கள் போக்கிவிட்டார்களா?
இல்லை. இல்லவே இல்லை.
அந்த கிராமம் முன்பைவிடவும் மிகக்கொடூரமான ஏழ்மை நிலையில் தான் இருக்கிறது. அங்கே இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டிடம் வெறுமனே ஒரு பெயர்ப்பலகையுடன் கூடிய பாழடைந்த கட்டிடமாகத் தான் இருக்கிறது. அந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
தன்னுடைய வாழ்க்கையையே அந்த கிராமத்தில் வாழமுடிவுசெய்திருந்த கிரகாமின் மனைவியும் மகளும் அந்த கிராமத்தைவிட்டே வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கே சென்றுவிட்டனர்.
படிக்க :
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆனால், யார் இலாபமடைந்திருக்கிறார்கள்?
ஃபாதர் கிரகாம் கொல்லப்பட்ட போது, பஜ்ரங்தளத்தின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சிங், 2019-ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு, வென்று, இன்று மத்திய அமைச்சராக இருக்கிறார்.
ஒரு குடும்பத்தை உயிரோடு கொளுத்தியவர்களும், அவர்களின் கொள்கையும், இயக்கங்களும் இன்றும் நம்மிடையே வெட்கமில்லாமல் ஓட்டுக்கேட்டு, வெற்றிபெற்று, ஆட்சியையும் பிடித்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நினைக்கும்போது தான் ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது.
இவர்கள் அண்டா திருடர்கள் மட்டுமல்ல… அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவுபெற்ற விசக்கிருமிகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது…
முகநூலில் : சிந்தன் இ. பா.
disclaimer

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

30-01-2022
பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில்  மதக்கலவரம் செய்ய முயலும்
பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்!
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடைசெய்!
பத்திரிகை செய்தி
ஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு  நீதிபதியிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தன்னை மதமாற்றக் கூறி கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் அப்பள்ளி விடுதியின் பெண் காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மாணவி சித்திகொடுமைக்கு அஞ்சிதான் தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் விசாரணையின் முடிவில்தான் உண்மை வெளிவரும்.
ஆனால், லாவண்யாவின் சித்தி மற்றும் அப்பாவை தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதால்தான் அம்மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று மதக்கலவரத்தை தூண்டி மெல்ல மெல்ல நாடுமுழுதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்து சிறுபான்மை மக்களை வதைக்க சதித் திட்டம் தீட்டிவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தி அப்பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும், கிருத்துவப் பள்ளிகளை மூட கோரிக்கை வைத்து திமுக அரசு ஓர் இந்துவிரோத அரசு என்று பேசிவருகிறார்கள் பிஜேபி –  ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
படிக்க :
அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மேலும், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறதென்று பொய்யான புகார் கொடுக்க திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பட்டி மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அப்பகுதி மக்கள்” இந்து – கிருத்துவ மக்களாகிய தாங்கள் ஒற்றுமையாக வாழ்வதாகவும் அதை சீர்குலைக்க பிஜேபி-யினர் முயற்சி செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் வதந்தி பரப்பினார்கள் என்று கூறி கைது செய்த திமுக அரசு, இங்கே வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்ட முயலும் பிஜேபியினர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது.
ஆக, காவி பாசிசம் ஒரு சிறு துரும்பை கூட பயன்படுத்தி தன்னை நிலைநாட்ட முயன்றுவரும் நிலையில் திமுக அரசு பாசிச சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து மெல்ல மெல்ல பாசிசம் அரங்கேறவே வழிவகுத்து வருகிறது என்பதைத்தான் நாம் கண்டுவருகிறோம்.
திமுகவையோ, இந்த அரசு கட்டமைப்பையோ நம்பி காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதுதான் நாம் சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் கொட்டடி கொலைகள் மற்றும், கொரோனா கட்டுபாடு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போலிசின் அடக்குமுறை முதலியவை நமக்கு உணர்த்துகின்றன.
ஆகவே, டெல்லி விவசாயிகள் போல் வீதியில் இறங்கி போராடுவதன் மூலம்தான் பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும், பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.