Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 191

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

0
திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தில் இருந்து சென்ற முதல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடி மக்கள் எஃகு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களுக்காக அரசின் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலை விவசாயிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கும் பகுதிதான் திங்கியா. கடந்த பத்தாண்டுகளில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ (POSCO) மற்றும் இப்போது ஜிண்டாலுக்கு சொந்தமான JSW உட்கல் ஸ்டீல் லிமிடெட் (JUSL) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக விளங்குகிறது திங்கியா.
கடந்த ஆறு மாதங்களில், எஃகு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 60 பேரை போலீசு கைதுசெய்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை போலீசு ஏவி வருகிறது. இதனால் அப்பகுதி தொடர்ந்து பதட்டமான சூழலே நிலவுகிறது. இராணுவப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள், தங்கள் மனித உரிமைக்கு தொடர்ந்து அச்சுருத்தல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திங்கியாவில் அரசின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள், கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பழங்குடி மக்கள்மீது தடியடி நடத்தியுள்ளனர். பல ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.
***
ஜிண்டால் குழுமத்தால் ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் ஒருங்கிணைந்த எஃகுத் திட்டம் அமைக்கப்படுவது என்பது பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்கின்றனர் ஆர்வலர்கள்.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
♦ திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
இக்கிராமங்களில் இதற்குமுன், ரூ.52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் திறன் கொண்ட எஃகு திட்டத்தை அமைக்க போஸ்கோ (POSCO) திட்டமிட்டிருந்தது. 2011-ம் ஆண்டில் கோபிந்த்பூர், திங்கியா மற்றும் நுகாவ்ன் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் வன உரிமைச் சட்டத்தின்படி, நிலத்தை போஸ்கோ (POSCO) நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தென் கொரிய எஃகு நிறுவனம் (POSCO) அதிகாரப்பூர்வமாக எஃகுத் திட்டத்திலிருந்து வெளியேறியது.
ஜிண்டால் பிரதிரோத் பீதாமதி சுரக்ஷா சமிதி (ஜிண்டால் எதிர்ப்புக்குழு)-வின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே, “கடந்த ஆறு மாதங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். போஸ்கோ (POSCO) எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற 2,500 பேர் மீது 400-க்கும் மேற்பட்ட பொய்யான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது, ​ஜிண்டால் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்கு எதிராக பலர் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் மீது குறைந்தது 72 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய தலைவர் தேபேந்திர ஸ்வைன் உட்பட ஏழு தலைவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், குனி மாலிக், சுமந்த நாயக் மற்றும் திலிப் ஸ்வைன் உள்ளிட்ட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று பைக்ரே கூறினார்.
திங்கியாவில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள்.
மேலும், “கடந்த 2021 டிசம்பர் முதல், திங்கியா பாரிய உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போலீசு கட்டுப்பாட்டில் உள்ளது. திங்கியாவில் மட்டும் இரண்டு படைப்பிரிவு போலீசார் உள்ளனர். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை; நாங்கள் பொதுநல வழக்கு ஒன்றின்மூலம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இருப்பினும், வழக்கு முடித்து வைக்கப்பட்டு, கலெக்டர் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்” என்று பைக்ரே கூறினார்.
போலீசின் நோக்கம் மக்களை நீண்ட காலம் சிறையில் அடைப்பதும், பழைய வழக்குகளை மீண்டும் செயல்படுத்துவதும், அனைத்து போராட்டங்களையும் ஒடுக்குவதும்தான். இரண்டு பெண் ஆர்வலர்களும் சிறையில் வாடுகின்றனர். ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முர்மு இதற்கு முன்பு பாஜக சார்பில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
“பழங்குடியினரின் உரிமைகள் பற்றி முர்மு ஒருபோதும் பேசியதில்லை. அவர் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஒரு கைப்பாவையாக மட்டுமே இருப்பார். அவர் மீது நாங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?” என்று கூறுகிறார் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டணியின் (NAPM) பிரஃபுல்லா சம்ந்தா.
படிக்க :
♦ ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
♦ ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
மேலும், “தேபேந்திர ஸ்வைனின் குடும்பத்தைப் பார்க்க வந்த மேதா பட்கர் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசு இடைவிடாமல் திங்கியா மக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது. இங்கு யாருக்கும் மனித உரிமை இல்லை; யாருக்கு பேச உரிமை இல்லை. தினமும், இடைவிடாத கைதுகள் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதில் இளைஞர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார் பிரஃபுல்லா சமந்தா.
இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒடிசா மாநிலத்தின் பழங்குடி மக்களை, அரசு தன் கொடுங்கரங்களினால் ஒடுக்கி வருகிறது. திரௌபதி முர்மு ஜனாதிபதியானால் மட்டும் இந்த அடக்குமுறைகள் குறைந்துவிடுமா என்ன? அவர் பாசிச அரசின் இன்னொரு பாசிஸ்டாக இருப்பாரே தவிர பழங்குடி மக்களுக்கு ஒருபோது உதவமாட்டார்.
ஜிண்டா நிறுவனத்திற்காக பழங்குடி மக்களை ஒடுக்கும் பாசிச அரசின் கொடுங்கரங்களை உடைத்தெறிய வேண்டியது அவசியம். இயற்கை வளங்களை கார்ப்பரேட் கழுகுகளிடமிருந்து பாதுகாக்க, தொடர்ந்து போராடிவரும் ஒடிசா பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

காளி

ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

0
றிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழ் வெளியிட்ட அறிக்கை, 71 சதவித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் பேர் சத்துக்குறைவான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
உலக மக்கள் தொகையில் 42% பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்று “இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை 2022 : புள்ளிவிவரங்களில்” என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் உணவில் போதுமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து குறைவான உணவு உட்கொள்ளப்படுவதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் 200 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 168.7 கிராம் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் குறைந்தபட்ச பரிந்துரை ஒரு நாளைக்கு 300 கிராம் ஆகும்.
படிக்க :
♦ ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
♦ மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவின் விலை ஒரு நபரின் வருமானத்தில் 63 சதவிதத்தை விட அதிகமாக இருந்தால் அது கட்டுப்படியாகாது என்று கருதப்படுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழின் அறிக்கை, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் கடந்த ஆண்டில் 327 சதவிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு – நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டை உள்ளடக்கியது – அதே காலகட்டத்தில் 84 சதவிதம் உயர்வைக் கண்டது. இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவிதமாக உயர்ந்தது.
Down to Earth இதழின் நிர்வாக ஆசிரியர் ரிச்சர்ட் மஹாபத்ரா, “உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சர்வதேச பயிர்களின் விலை உயர்வு மற்றும் தீவிர வானிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவற்றால் உணவுப் பணவீக்கத்தின் தற்போதைய உயர் நிலைகள் உந்தப்பட்டிருக்கின்றன. உண்மையில், CRISIL (Capital market company) தரவுகளின் பகுப்பாய்வு 2022 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக விகிதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு” நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. நாட்டுமக்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், மக்களின் உடல்நலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.
ஒருப்புறம், மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க முடியாத இந்த பாசிச மோடி அரசு, பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, விலைவாசி உயர்வை ஏற்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை விதித்து, மானியங்களை குறைத்து, மக்கள் மீது வரிக்குமேல் வரியை போட்டு சுரண்டி வருகிறது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகள், மோடி அரசின் உதவியுடன் உழைக்கும் மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்களையும் சூரையாடி தனது சொத்து மதிப்பை பெருக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளையும், காவி அரசையும் ஒழிக்காத வரை ஊட்டச்சத்து என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

புகழ்

“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !

0

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு உடனடியாக மருத்துவ ஜாமீன் வழங்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள பல சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் கூட்டாக கடிதம் மூலம் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை வலியுறுத்தின.

மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பேராசிரியரின் விடுதலைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து “கடுமையான கவலையை” வெளிபடுத்துகின்றனர்.​​முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் 90 சதவித உடல் ஊனமுற்றவர் என்றும் இரண்டுமுறை கொரோனா தொற்று சோதனை செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். தற்போது நாக்பூரில் உள்ள ‘ஆண்டா செல்லில்’ தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை படிப்படியாக இழந்து வருகிறார். தற்போது “அவரது ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாறியுள்ளது” என்று தெரிவித்தனர்.

படிக்க :

♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !

♦ சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

கடந்த ஜூலை 2021-ல் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 84 வயதில் இறந்த தந்தை ஸ்டான் சுவாமியை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் எல்கர் பரிஷத் – மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் மருத்துவத்திற்காக காத்திருந்தபோது கொரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

“நீங்கள் உடனடியாக பதிலளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, அதனால் நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த கதி பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஏற்படாது. அவரது பரோல் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ ஜாமீன் விண்ணப்பம் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தலையிட்டு, பேராசிரியர் ஜி.என்.சாய்பாவுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். உடனடியாக, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரை தனிமை சிறையில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தக்கூடிய அறைக்கு மாற்ற வேண்டும். பின்னர் அவரை மருத்துவ ஜாமீனில் விடுவித்து, சிகிச்சைக்காக பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று கையொப்பமிட்டவர்கள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர்.

Scholars At Risk (USA), PEN America (USA), Freedom Now (USA), The Free Saibaba Coalition-US, Stitching the London Story (The Netherlands), India Solidarity Germany (Germany) போன்ற சர்வதேச குழுக்கள் கையொப்பமிட்டவர்களில் அடங்கும். மேலும், இந்திய நீதித் திட்டம் (ஜெர்மனி), அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (அமெரிக்கா), இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் நலச் சங்கம் (யுகே), இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா), ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி (யுகே), அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள் (கலிபோர்னியா, அமெரிக்கா), பாஸ்டன் தெற்காசிய கூட்டணி (அமெரிக்கா), இந்தியா சிவில் வாட்ச் இன்டர்நேஷனல் (அமெரிக்கா), மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (அமெரிக்கா) ஆகிய சர்வதேசக் குழுக்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

பேராசிரியர் சாய்பாபாவை, கழிவறை-குளியல் அறைகளில் சிசிடிவி கேமராக்களை வைப்பதுபோன்ற பல்வேறு முறைகளில் சிறைக்குள் சித்திரவதை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பேராசிரியரை போன்ற அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் பாசிச கொடுங்கரங்களில் இருந்து மீட்க, நாம் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது அவசியம்.


சந்துரு

ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு.
பங்கு மதிப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தால், அது தொடர்பான தகவல்களை (Price Sensitive Information) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செபி (SEBI) எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு புதிய முதலீடு வரப்போகிறதெனில், எந்த நிறுவனம் முதலீடு செய்யப்போகிறது, எவ்வளவு முதலீடு, எந்த தேதியில் முதலீடு, முதலீட்டின் மற்ற விவரங்களை எவ்வளவு விரைவாக தெரிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக செபிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ஊடகங்களில் ஊகமாக பரவும் செய்திகள் பங்கு மதிப்பை பாதிக்கக்கூடும். உள்பேர வர்த்தகத்திற்கும் (Insider Trading) இது வழிவகுக்கலாம். ஊடகங்களில் ஊகமாக வரும் தகவல்கள் (Price Sensitive Information) பங்கு மதிப்பை கூட்டவோ, குறைக்கவோ உதவும். அன்றைய நாளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை கூட இதுபோன்ற தகவல்கள் பாதிக்கும். அது பங்குச்சந்தையின் போக்கையே மாற்றும் திறன் பெற்றது.
முகேஷ் அம்பானி பங்குச் சந்தையை தன் போக்கிற்கு ஆட வைப்பதில் கில்லாடி. எவ்வளவுதான் மோசடிகள் செய்தாலும், ஹர்ஷத் மேத்தா போன்று, ஒருபோதும் அம்பானி சிக்கமாட்டார். அப்படியே சிக்கினாலும், செபி அம்பானியை சிறையில் தள்ளாது. மாறாக மாலை போட்டு வாழ்த்தி அனுப்பும். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
வாட்சப் செயலி வழியாக சிறு தொழில்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பேஸ்புக்  நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய முனைகிறது. 2020-ம் ஆண்டில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபடுபட்டன. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி (5.7 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக் பேஸ்புக் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி (புதன்கிழமை) அறிவித்தது. பேஸ்புக்கின் இந்த முதலீட்டால் கோடி ரூபாய் இலாபத்தில் திளைத்தார் அம்பானி.
படிக்க :
♦ கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
♦ தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர். “இந்தியா மீதான எங்களுக்குள்ள உறுதிபாட்டை இந்த முதலீடு காட்டுகிறது; மேலும் நாட்டில் ஜியோ ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என ஃபேஸ்புக் (ஏப்ரல் 22 2020) அன்று அக மகிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 10.20 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. அதுவல்ல விஷயம்.
ரிலையன்ஸும் பேஸ்புக்கும் அதற்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டன. எனினும் முகேஷ் அம்பானி இது குறித்து செபியிடம் மூச்சு கூட விடவில்லை. ஆனாலும் ஊடகங்களில் பேஸ்புக் – அம்பானி ஒப்பந்தம் குறித்த தகவல்கள் கசிந்தன; அதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 5 சதவிதத்திற்கும் அதிகமான ஏற்ற இறக்கங்களை 8 வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது.  மார்ச் மாதத்தின் மொத்த வர்த்தக நாட்கள் 18. அதனைத் தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் பங்கு விலை 31 சதவிதம் அதிகரித்தது. இதுபோன்ற திடீர் ஏற்ற இறக்கங்கள் பங்குச்சந்தையை வெகுவாக பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே செபிக்கு ரிலையன்ஸ் தெரிவித்திருக்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் டிஜிட்டல் யூனிட்டில் முதலீடு செய்த தகவல்கள் நாளேடுகள், இணையதளங்கள், சேனல்களில் செய்தியாக வெளியாகின.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இதை அதிகாரபூர்வமாக செபி அமைப்பிடம் தெரிவிக்கவில்லை. ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இடையே எந்தமாதிரியான நிதி ஒப்பந்தங்கள் நடந்துள்ளன; பங்கு கைமாற்றம், பங்குவிற்பனை ஆகியவை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
செபி திங்கள் (ஜுன் 20, 2022) இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பங்குப் பரிமாற்றம், விலைநிலவரம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அது குறித்து தெளிவுபடுத்தவும் இல்லை. நாளேடுகள், உள்ளிட்ட பிற வாய்ப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்த பின்பும் கூட ரிலையன்ஸ் விளக்கமளிக்கவில்லை. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது பொறுப்பை துறந்தது தெரியவருகிறது. ஆதலால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இரு அதிகாரிகளுக்கும் சேர்த்து  ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
2020 நடந்த இந்த விதிமிறல் நிகழ்வை விசாரித்த செபி, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதித்திருக்கிறது. 17 இலட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 30 இலட்சம் அபராதத்தைக் கண்டு பயந்து நடுங்கும் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.
முறையாக தகவல்களை தெரிவிக்காமல் பல ஆயிரம் கோடிகளை ரிலையன்ஸ் சம்பாதித்திருக்கலாம். ஆனால், செய்த மோசடிக்கு பெற்ற அபராதமோ வெறும் 30 இலட்சம். ரிலையன்ஸ் ஏமாற்றுகிறது, மயிலிறகால் தடவிக் கொடுக்கிறது செபி. இந்த மோசடியான பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்து பணக்காரர்களாக மாற நடுத்தர வர்க்க மக்களை தூண்டில்போட்டு இழுக்கின்றனர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளம்பரதார நடிகர்கள்.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?
செபியின் விதிமுறைகளை மீறீயதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 கோடி அபராதமும், 2021 ஆண்டில் 25 கோடி அபராதமும் செபி முகேஷ் அம்பானிக்கு விதித்தது.
இத்தனை முறை தன் வயிற்றுப் பசிக்காக ஒருவர் திருடி இருந்தாலும், அவர் மீது குண்டர் சட்டமோ, தேசப் பாதுகாப்பு சட்டமோ பாய்ந்திருக்கும்.
ஆனால், இப்படி செபியையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவது முகேஷ் அம்பானிக்கு புதிதல்ல. அதேபோல் ஒவ்வொரு முறையும் முகேஷ் அம்பானி முறைகேட்டில் ஈடுபடும்போதும், செபி மயிலிறகால் தடவிக் கொடுக்க தவறுவதில்லை.
எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது. நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்.
சு.விஜயபாஸ்கர்
ஆதாரம் : Economictimes, Businesstoday, indianexpress, Businesstoday2, Economictimes2

உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !

0
மீபத்தில் கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு, நகராட்சி சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 22 அன்று தெரிவித்துள்ளது.
வீடுகள் புல்டோசரால் இடக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத இடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உத்தரப்பிரதேச அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
***
ஜூன் மாத தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், நபிகள் நாயகத்தைப் பற்றிய இரண்டு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் இழிவான கருத்துக்களுக்கு எதிராகப் போராடி முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது.
அதில், பிரயாக்ராஜில் உள்ள ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீடும் இடிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தைப் பற்றிய பா.ஜ.க.வின் அவதூரு கருத்துக்களை எதிர்த்து நகரில் வன்முறைப் போராட்டங்களை நடத்த சதி செய்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
படிக்க :
♦ முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
♦ காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம், சட்டவிரோத கட்டுமானம் குறித்து முகமதுவுக்கு மே 10 அன்று நோட்டீஸ் கொடுத்ததாகக் கூறியது. ஆனால், முகமதுவின் குடும்பத்தினர் எந்தத் தகவலையும் பெறவில்லை என்று கூறுகிறார்கள். பல இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்ட நாள் அன்று நோட்டீஸ் கொடுத்த சில மணி நேரத்திலேயே வீடுகளை இடிக்கத்தொடங்கிவிட்டன காவி புல்டோசர்கள்.
பிரயாக்ராஜ் இடிப்பு வழக்கில், அது ஒரு குடியிருப்பு கட்டிடமாக இருந்ததாகவும், எனினும் அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. “மே 10, 2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் – காரண அறிவிப்பிற்கு பதிலளிக்கத் தவறியதால் – ஜூன் 10-ம் தேதி இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று அறிக்கை கூறியது.
ஜூன் 11 அன்று, மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார். “புல்டோசர்களின் நிழலில் வீடுகள் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கற்களை எறிய மாட்டார்கள்” என்று கூறினார்.
ஜூன் 4 அன்று, கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் இடிக்கப்படும் என்று கூடுதல் போலீசுத்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இருப்பினும், கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையங்கள், சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகள் என்றும், உ.பி நகர்ப்புறத்திற்கு ஏற்ப, அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத்தான் அவர்கள் இடிப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
வளர்ச்சித்துறை அதிகாரிகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதாக அரசு கூறினாலும், ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஆதித்யநாத், “புல்டோசர் நடவடிக்கையை தொடருங்கள்” என்று அதிகாரிகளுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதே கருத்துக்களைதான் மூத்த அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பல்வேறு வடிவங்களிலும், சமூக ஊடகங்களிலும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு. பாஜகவிற்கு எதிராக போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, எப்படி அதுநாள் வரை சட்டப்பூர்வமாக இருந்த வீடுகள் சட்டவிரோத வீடுகளாகவும், ஆக்கிரமிப்பு வீடுகளாகவும் மாறியது என்று கேள்வியெழுகிறது. எனவே இந்த ‘புல்டோசர் நீதி’ என்பது காவி பாசிஸ்டுகளின் ஓர் புதிய நடைமுறை. இந்த புதிய நடைமுறையைதான் சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சித்து வருகிறது பாசிச யோகி ஆதித்யநாத் அரசு.
காவிகள் இனி முஸ்லீம் மக்களை உ.பி.யில் வாழவே விடமாட்டார்கள் என்பதுதான் யோகி ஆதித்யநாத் அரசின் பாசிச செயல்பாடுகள் நமக்கு உணர்த்து செய்தி!

புகழ்

‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!

0

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், ஜூன் 21 அன்று ‘புல்லி பாய்’ & ‘சுல்லி டீல்ஸ்’ வழக்குகளில் இன்னும் காவலில் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் இப்போது ஜாமீனில் உள்ளனர்.

கடந்த ஜூலை 2021-ல் வெளிவந்த ‘Sulli Deals’ – GitHub என்ற உள்ளடக்கப் பகிர்வு தளமான GitHub-ல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. முக்கிய முஸ்லீம் பெண்களின் ஒப்புதலின்றி, அவதூறான கருத்துக்களுடன் அவர்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களை இணையத்தில் ஏலம் விடும் செயலை அரங்கேற்றியது.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில், ‘புல்லி பாய்’ ‘சுல்லி டீல்ஸ்’ உடன் இணைந்த முக்கிய முஸ்லீம் பெண்களுக்கான ஏலங்களையும் நடத்தியது. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு போலீசார் இரண்டு வழக்குகளிலும் முதல் கைது செய்தனர்.

இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஔம்காரேஷ்வர் தாக்கூர் என்பவன் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவன். நீரஜ் பிஷ்னோய் என்பவன் ‘புல்லி பாய்’ செயலியை உருவாக்கியவன். இவர்களுடன் விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங், மயங்க் அகர்வால் மற்றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

படிக்க :

♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

♦ டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !

குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஜா, சிங் மற்றும் அகர்வால் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  அப்போது, ​​தாக்கூர் மற்றும் பிஷ்னோய் ஆகியோருக்கு பாந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த இரண்டு செயலிகளையும் உருவாக்கியவர்களுக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், மும்பையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீசு காவலில் இருந்தனர்.

***

தற்போது கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.பி. சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.50,000 ஜாமீன் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு ஒன்று அல்லது இரண்டு ஜாமீன்களுடன் சேர்த்து விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள் மாதாந்திர சைபர் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

வழக்கறிஞர் சிவம் தேஷ்முக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், ஜாமீன் வழங்குவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படும் குற்றங்களைச் செய்யவில்லை என்றும் விண்ணப்பம் வாதிட்டது; அவர்கள் செயலியை உருவாக்கியவர்கள் அல்ல; வெறுமனே பின்பற்றுபவர்கள்; எனவே இது ஒரு குற்றமாகாது; மேலும் குற்றங்களுக்கான தண்டனை மூன்று வருடங்களுக்கும் குறைவாக இருப்பதால் சிறை தேவையற்றது. அவர்கள் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணை குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் விண்ணப்பம் வாதிட்டது. இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர் ‘மரியாதைக்குரிய’ குடும்பங்களைச் சேர்ந்தவர் என்றும், கூறப்படும் செயல் ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ என்றும் விண்ணப்பம் வாதிட்டது.

அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், இந்த வாதங்களில் பெரும்பாலானவற்றை எதிர்த்தார். இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ளது என்று வாதிட்டார். மேலும், அவர்களின் செயல்கள் தேசத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது என்று அவர் கூறினார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த போதிலும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்மால் உணர முடியும். முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த நீதிமன்றம் உள்ளிட்ட பாசிச அரசு கட்டமைப்பிற்கு எதிராகவும், சங் பரிவார – கிருமினல் மாஃபியா கும்பல்களுக்கு எதிராகவும் நாம் களமிறங்க வேண்டியது அவசியம்.


காளி

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

டந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியிருந்தது. அரசி, பருப்பு, காய்கறிகள், பால் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் விண்ணை முட்ட விலை உயரத்தொடங்கின. எரிபொருட்களைப் பொருத்தவரை மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள் நிரப்பும் மையங்களில், பல மணிநேரங்கள் மக்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருந்தது.
இலங்கையில் மின்சாரமானது பெருமளவு எரிபொருட்களைச் சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. டீசல் இல்லாததால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இரண்டு ஆலைகளைத் தவிர, மற்ற அனைத்து மின் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்களுக்கு மேலாகவாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான இன்ட்யூபேஷன் கருவிகள் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் தீர்ந்துபோய்விட்டன; இறக்குமதி செய்வதற்கு அரசிடம் பணம் இல்லாததால், மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளைக் குறைக்கத் தொடங்கின. காகிதங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலையில், பள்ளி-கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியின் சுமைகள் தாளமுடியாமல், மக்களில் ஒருபிரிவினர் நாட்டைவிட்டே வெளியேறினர். பல ஈழத் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கினர். அதேநேரம் அரசை எதிர்த்த போராட்டங்களோ சிறுசிறு தீப்பொறிகளாகக் கிளம்பி, நாட்டின் பலப் பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தன. தொடக்கத்தில், அவை எதிர்க்கட்சிகளின் அடையாளப் போராட்டங்களாகவே இருந்தன. பின்னர் மக்கள் போராட்டங்களாக தீவிரமடைந்தன.
தடுக்க முடியாத போராட்டப் பெருவெள்ளம்
மார்ச் 25-ஆம் தேதிக்கு பின்னர் பல்வேறு நகரங்களில், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு போங்கள்”, “கோ கோத்தபயா” போன்ற முழக்கங்கங்களை ஒலித்தபடி, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரெய்ட் அவென்யு (Reid Avenue), வி.எம்.டி பார்க் (VMD Park), நெகம்போ (Negambo), பண்டரகம (Bandaragama), நுகேகொட (Nugegoda), கொஹுவல சந்திப்பு (Kohuwela Junction) ஆகிய பகுதிகளில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இது மெல்ல மெல்ல தென்னிலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
கணக்கீடு ஒன்றின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 தேதிகளுக்குள் மட்டும் நாடு முழுவதும் 304 அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகப்பல தென்னிலங்கையில் நடைபெற்றவை. குறிப்பாக, கொழும்புவைச் சுற்றிமட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. ஒரு சூறாவளியின் கருவைப் போல, போராட்டங்களின் குவிமையமாக கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மாறிக் கொண்டிருந்தன.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், முதன் முதலில் மிகப்பெருமளவு கவனத்தை ஈர்த்த போராட்டமாக அமைந்தது மிரிஹானை (Mirihana) போராட்டமாகும். மார்ச் 31 அன்று, நுகேகொட புறநகர் பகுதியான மிரிஹானையில் கூடிய மக்கள், மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர், அருகாமையில் அமைந்திருந்த கோத்தபய இராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பேரணியாகச் செல்லத்தொடங்கினர். போராட்டம் பிற்பகல் சுமார் ஆறு மணி அளவில் தொடங்கியது. நடு இரவுவரையில் மிரிஹானையை நோக்கி மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்.
மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் அரசை எதிர்த்து வீதிக்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம்தான் காலிமுகத்திடல் போராட்ட முகாமுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் உருத்திரள்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத இராஜபக்சேக்கள், ஆரம்பத்திலேயே இதனை கிள்ளியெறிய முற்பட்டார்கள். ஆனால் தோற்றுப் போனார்கள்.
அதிபரின் வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிறப்பு போலீசுப் படை, வரவழைக்கப்பட்ட போலீசு கும்பல் ஆகியவை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் மக்களை கலைக்க முயற்சித்தது. பதிலுக்கு மக்கள் கையில் கிடைத்தப் பொருட்களை போலீசை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். எனவே போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டங்களை செய்தியாக்க வந்த ஊடகங்களுக்கு அதிபர் மாளிகையிலிருந்து மிரட்டல்கள் குவிந்தன. ஊடகவியலாளர்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப்போராட்டத்தை ஒட்டி, போலீசால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேர்களுள் (ஏப் 2 வரை) ஊடகவியலாளர்களும் அடக்கம்.
இவற்றின் மூலம் கோத்தபயவின் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததே ஒழிய, போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. இரவு முழுவதும் போராட்டச் செய்திகளும் போலீசின் ஒடுக்குமுறைகளும் சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. “கோட்டா கோ ஹோம்” (#Gota Go Home – கோத்தபயவே வீட்டுக்கு போ) – என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இவை இதர பகுதி மக்களுக்கும் கிளர்ச்சியூட்டின. அரசின் அடக்குமுறையைக் கண்டு ஆத்திரமுற்றனர் மக்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே தென்னிலங்கையின் வீதிகள் மக்கள் போராட்டங்களால் மூழ்கத்தொடங்கின.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அவசர நிலை மற்றும் நாடுதழுவிய ஊரடங்கை அறிவித்தது கோத்தபய அரசு. தங்களது ஆட்சிக்கெதிராக ‘தீவிரவாதிகள்’ சதிசெய்ததாகவும்; ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதக் குழுவொன்று, இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் இதனை திட்டமிட்டதாகவும் புலம்பியது அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அறிக்கை.
காலிமுகத்திடல் போராட்ட மைதானம். மாலைநேரமொன்றில், மைதானத்தில் குவிந்திருக்கும் மக்கள் வெள்ளத்தின் ஒருபகுதி.
முகநூல், வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் என அனைத்து வகை சமூக ஊடகங்களும் திடுமென முடக்கப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கியதற்காக, அனுருத்த பண்டார என்பவர் கைதுசெய்யப்பட்டார். ஊரடங்கை மீறியதாக, ஒரே நாளில் 660 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முயற்சிகளின் மூலம் போராட்டங்களை பரவாமல் இருக்கச் செய்யவும், கலைத்துவிடவும் முயற்சித்தது அரசு.
ஆனால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையவே செய்தன. ஒடுக்குமுறைகள் தூள் தூளாக்கப்பட்டன. ஊரடங்கையும் மீறி, வீதிகள் ஆர்ப்பாட்டங்களால் அழகுபடுத்தப்பட்டன. மிரிஹானை போராட்டம் தொடர்பாக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராளிகளை கைதட்டி, முழங்கங்களை முழங்கி ஆரவாரமாக வரவேற்றனர். வழக்கு முடிகின்ற வரை ஒருவர் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியேறவில்லை. காயம்பட்ட போராளிகளுக்கு, மருத்துவர்கள் சிறப்பு கவனமெடுத்து மருத்துவம் பார்த்தனர். நாடு முழுவதிலும் காணப்பட்ட கொதிநிலையை அறிந்துகொண்ட மஹிந்த-கோத்தபய அரசு வேறுவழியே இல்லாத நிலையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. 15 மணிநேரத்திற்கு பிறகு முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் விடுவிக்கப்பட்டன.
கொழும்பு கடற்கரையை நோக்கி தன்னெழுச்சி அலை
மக்கள் போராட்டங்கள் அரசின் அடக்குமுறைகளையும் கடந்து தீவிரமாகி வந்ததால், ஓட்டுக் கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஏப்ரல் 4-ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் பேரணியாக சென்றனர். அன்றைய நாளே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், “அரசின் சில தவறான நடவடிக்கைகள்தான் நெருக்கடிக்கு காரணம்” என்று கூறி கூண்டோடு பதவி விலகினர்.
கோத்தபயவும் மஹிந்தவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுக்கட்சிகளின் கபடநாடகத்தால் மக்கள் கவரப்படவில்லை. போராட்டக்காரர்களில் பலரும் (60 சதவிகிதம் பேர்) எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை; நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களுமே பதவி விலக வேண்டும் என்று கருதுவதாக, “மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 96.2 சதவிகிதம் மக்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; மக்களை கொள்ளையிட்டுச் சேர்த்த அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
***
ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் கொழும்புவைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரள் திரளாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றுவது, “கோட்டா கோ ஹோம்” என்ற முழக்கம் பதித்த அட்டைகளை வீட்டின் மேல் மாட்டுவது, சுவர்களில் எழுதுவது என நாடே போர்க்கோலம் பூண்டது. ஒரு பக்கம் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 ஆம் தேதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு கடற்கரையை நோக்கி திரளத் தொடங்கினார்கள். கொழும்புக் கடற்கரை, அதிபர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காலிமுகத் திடல் மக்கள் கூட்டங்களால் நிரப்பப்பட்டது. பீதியானது அரசு.
இலங்கையில் 1953-ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி.
ஏனெனில், காலி முகத்திடல் ஏற்கெனவே வர்க்கப் போராட்டத்தின் குறியீடாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இதே காலி முகத்திடலில் நடைபெற்றது; அந்த ஆண்டு ஜீலை மாதம் 23-ஆம் தேதி, சுமார் இரண்டு இலட்சம் மக்கள் – அதிகம் தொழிலாளர்கள் – காலிமுகத்திடலில் ஒன்றுகூடினார்கள். அதைப் போன்றதொரு போராட்டம் மீண்டும் நடைபெற்றுவிடக்கூடாது என்று பயந்த கோத்தபய-மஹிந்த அரசு, அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் இறங்கியது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எப்போதும் வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பதிலாக, ஒரு வார காலம் விடுமுறை வழங்கியது. கொழும்பு, ஓர் தலைநகரம். நமது சென்னை நகரத்தோடு கொழும்புவை ஒப்பிடலாம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்தில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஆனால், நடந்ததோ தலைகீழானது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து கொழும்பு கடற்கரையை நோக்கி அணிவகுத்தார்கள். திகைத்துப் போனது அரசு. போராட்டத்தை கலைப்பதற்கு, வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி வாகனங்களை எரித்து கலவரத்தை நடத்தியது. பொதுமக்களை, ‘வன்முறையாளர்களாக’ சித்தரித்து போலீசை ஏவி ஒடுக்கும் முயற்சியாக அது இருந்தது. அரசு ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி எச்சரிக்கை செய்வது, போலியான சமாதான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை திசைதிருப்புவது என எவையுமே பலிக்கவில்லை.
அனைத்தையும் கடந்து, ஏப்ரல் 9 அன்று தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள், ஒரு மாபெரும் பேரணியாகச் சென்று காலிமுகத்திடலை கைப்பற்றிக் கொண்டார்கள். கொழும்பு நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 7 இலட்சம்தான் என்ற நிலையில், இந்த பேரணியில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.
காலிமுகத்திடல்: இலங்கையின் மெரினா!
50 நாட்களைக் கடந்து, இன்றுவரை தொடர்ந்துவரும் காலி முகத்திடல் போராட்டத்தை, நாம் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அது இலங்கையின் மெரினாப் போராட்டம், ஷாகீன்பாக், டெல்லிச் சலோ…
பலதரப்பட்ட மக்கள், அன்றாடம் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைசெய்யும் நேரம் போக, மாலை நேரங்களில் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு செல்கிறார்கள். (ஒரு பிரிவு மக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளார்கள்) அது ஒரு வாடிக்கையாக இருக்கிறது. பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆட்டோ ஓட்டும் தமிழ்த் தொழிலாளி, “நான் அன்றாடம் மாலை நேரம் போராட்டத்திற்குச் செல்கிறேன்; போராடினால்தான் விடிவுகாலம் பிறக்கும்; அந்த மைதானத்திற்கு செல்லும்போது, இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது” என்று பூரிப்படைகிறார்.
போராட்டம் தொடங்கிய மூன்று வாரங்களில், ஒவ்வொரு நாள் மாலையும் சுமார் 40,000-லிருந்து 50,000 வரையிலான மக்கள் காலிமுகத்திடலுக்கு வரத்தொடங்கினார்கள். இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
 அந்தப் போராட்டக் களமே தங்கும் முகாம்கள், தற்காலிகக் கழிப்பிடங்கள், மருத்துவ நிலையம், நூலகம், சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளடங்கிய “கோட்டா கோ கம” (Gota Go City) எனும் மாதிரி நகரமாக உருவாகியிருக்கிறது. இந்த மைதானத்தை, மக்கள் சிங்கள மொழியில் “அரகலய” (மக்கள் போராட்டம்) என்று அழைக்கிறார்கள்.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கூடாரங்கள், முதலுதவிப் பொருட்கள் அனைத்தும் சிறு வணிகர்களாலும், சில பெரு நிறுவனங்களாலும் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. போராடும் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்களும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் காத்திருக்கின்றனர்.
“கோட்டா கோ ஹோம்” மட்டுமல்லாமல், “மக்களை வதைக்கும் அரசை விரட்டியடிப்போம்; மக்கள் நேய ஆட்சியை கட்டியெழுப்புவோம்”, “நமது உச்சநீதிமன்றத்தில் வரலாறு தீர்பளிக்கும்”, “சாதி, மதம், இனம் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைவோம்” என மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல வண்ண முழக்க அட்டைகள் போராட்டக் களத்தை அழகுபடுத்துகின்றன. குடைகள், டீ சர்டுகள், தலையில் அணியும் ரிப்பன்கள் என பல வடிவப் பொருட்களிலும் முழக்கங்கள் வரையப்பட்டிருக்கிறது.
போராட்டக்களத்தின் ஒருபகுதியில், 2005 முதல் 2015 வரை இராஜபக்சே அரசால், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூறும் வகையில், அவர்களின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன.
மஹிந்த இராஜபக்சேவைப் போல வேடமிட்ட சிலர், அவர் மக்களால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப்போல காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். பங்கேற்பாளர் உரைகள், பாடல்கள், ஓவியங்கள், நடனம், நாடகம் என ஓர் கலை-இலக்கிய விழா மேடையாகவே காலி முகத்திடல் காணப்பட்டது. தோழர் லெனின் சொன்னதைப் போல, புரட்சிப் போராட்டம் என்பது பொதுமக்களின் திருவிழா அல்லவா.
ஏப்ரல் 13-ஆம் தேதி, பிரதமர் மஹிந்த இராஜபக்சே, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி தூதுக்குழுவொன்றை ஏற்பாடு செய்தார்; “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை; நீங்கள் அரசாங்கத்தைவிட்டு அகலும்வரை நாங்கள் அரகலய-வை (போராட்டம்) விட்டு அகலப்போவதில்லை” – என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டனர் மக்கள்.
(தொடரும்…)

பூபாலன்

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

22.06.2022
அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு புரட்சி செய்ய துடிக்கும்
வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம்!
ன்பார்ந்த தோழமை சக்திகளுக்கு எமது அமைப்பின் சார்பில் ஒரு வேண்டுகோள்! என்ற பெயரில் வழக்கறிஞர் திரு.ராஜூ அவர்கள் கடிதமொன்றை இணையவெளியில் வெளியிட்டிருந்தார். பொதுவாகவே ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் தாங்கள்தான் அந்த அமைப்பு என்றும், கொடி மற்றும் அமைப்பின் பெயரை பயன்படுத்துவதும் சாதாரணமாக நடைபெறுபவையாகும். மேலும் பிரிந்து செல்லும் தரப்பு மற்ற தரப்பைப்பற்றி கேள்விக்குள்ளாக்குவதும் நடைபெறுபவைதான்.
அப்படிப்பட்ட விவாதங்கள் அரசியல் ரீதியாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு பதில் அளிப்பது என்பது தங்களுடைய அணிகளையும் மக்களையும் அரசியல்படுத்துவதாக அமையும். ஆனால், அமைப்பு ரீதியான பிரச்சினைகளைப் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு ஒருபோதும் விருப்பமில்லை. எனினும் திரு.ராஜூ அவர்கள் வெளியிட்டுள்ள இந்த கடிதத்தில் அரசியல் பிரச்சினையும் அமைப்புப் பிரச்சினையும் ஒருசேர கலந்து இருப்பதால், முடிந்தவரை அக்கப்போர்களில் தலையிடாமல் அரசியல் பிரச்சினையைப் பற்றிய விவாதம் மேற்கொள்வது சரியாக இருக்கும்.
நாமே தெரிவு செய்து முன்வைத்த அரசியலை புறந்தள்ளினீர்கள். சதிகாரர்களோடு இணைந்தீர்கள். உங்களை எமது அமைப்பிலிருந்து விடுவித்தோம். பிளவுக்கு பின்னரும் சரி உங்களையோ, உங்களது தோழர்களையோ எதிரிகளாக பாவித்தது இல்லை. பாசிசத்துக்கு எதிரான சக்திகளில் ஒன்றாகவே உங்களை கருதுகிறோம். ஆனால் 10.06.2022 அன்று வெளியான கடிதமோ எங்களை பா.ஜ.க-விற்கு சேவை செய்வதாக கூறியிருந்தது. ஆகவே உங்கள் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உங்கள் மற்றும் உங்கள் அமைப்புத் தோழர்களின் தியாகம் அர்ப்பணிப்பை மதிக்கும் அதேவேளையில் உங்கள் அணுகுமுறையையும் அரசியலையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்களே எங்களை தள்ளிவிட்டிருக்கிறீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
//மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சிலர் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை தொடர்வதால் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூட்டு இயக்கங்களில் இருவரையும் அழைத்து ஒன்றாக பெயர் போடுவது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எனவே அதை தவிர்க்கும் பொருட்டு கூட்டமைப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினரையோ, அல்லது வேறு சிலரோ இதே பெயரில் இயங்குவதை அங்கீகரித்து அழைப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என கோருகிறோம்// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூவை மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்தோம். திரு.காளியப்பன் உள்ளிட்ட சிலரை சதிவேலைகள் செய்த காரணத்தால் எமது அமைப்பிலிருந்து வெளியேற்றினோம். விடுவிக்கப்பட்டவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைந்து மக்கள் அதிகாரம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையை மூடி மறைத்து, ஏதோ நாங்கள்தான் பிரிந்து சென்றோம் என்ற பொய்யை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வைத்து காலம் கடத்துவீர்கள் திரு.ராஜூ?
இரண்டு மக்கள் அதிகாரம் இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவுவதாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் ராஜூ. ஆம்! அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், ஒரு விசயத்தை பரிசீலிப்பதில் இருந்து இந்த விவாதத்தை தொடங்க வேண்டும். ஒன்றாக இருந்தபோது நாங்கள் யார்? மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தனியானதா? அதற்கு வேறு எந்த அமைப்புகளோடும் தொடர்பும் இல்லையா? எவ்வித தொடர்பும் இல்லை என்பதுபோல நாணயத்தோடு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் திரு.ராஜூ அவர்கள்.
தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் தொடர்ச்சியாகவே 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற கொள்கையை முன்வைத்து மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அதில், பங்கு வகித்தவர்கள் யார்? மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணைச் செயலாளர் காளியப்பன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் வெற்றிவேல் செழியன், பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளர் அமிர்தா உள்ளிட்டோர் முதன் முறையாக அமைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவில் இருந்தனர்.
மக்கள் அதிகாரம் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்களிலும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெவிமு ஆகிய அமைப்புகளின் தோழர்கள் பங்குபெற்றதுடன். அந்தந்த அமைப்புகளே மக்கள் அதிகாரம் வேலைகளைக் கொண்டு சென்றன. அப்படி வேலைகளைக் கொண்டு சென்ற, மக்கள் அதிகாரம் அமைப்பையே உருவாக்கிய அந்த நக்சல்பாரி இயக்கங்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு மாற்றாக மக்கள் அதிகாரம் மட்டும் இயங்க முடியுமா?
போலீசு முதல் அரசியல் சக்திகள் வரை யாரிடம் போய் மக்கள் அதிகாரம் என்று கூறினால் அவர்கள் நீங்கள் ம.க.இ.கவினர் தானே என்று கேட்கிறார்கள். இல்லை அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், எங்களுடைய போராட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வார்கள். அந்த அமைப்புகளின் தலைவர்கள் எங்கள் மேடைகளில் பேசுவார்கள். நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல, நாங்கள் நக்சல்பாரி இயக்கம் இல்லை, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதுகூட தவறு, சிவப்புச் சட்டைப் போடக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்டபோது எங்கேயும் முன்வைக்கப்படவில்லை. மாறாக அதன் நடைமுறையில் இப்படிப்பட்ட வலது விலகல்கள் வெளிப்பட்டன. இதற்கு அடிப்படையாக மக்கள் அதிகாரம் கொள்கையில் எவ்விதத்தீர்வும் வைக்கப்படாமல் இருந்ததே காரணம். அமைப்புப் பிளவுக்குப் பின்னர் அதை நாங்கள் பரிசீலித்து இருக்கிறோம். அதன்படி மக்கள் அதிகாரம் அமைப்பை மார்க்சிய – லெனினிய அமைப்பாக அறிவித்து இருக்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. ஒரு அமைப்பு தனது கடந்தகால தவறுகளில் இருந்து படிப்பினைகளை எடுத்து முன்னேற்றத்தை நோக்கி செல்வது எப்படி தவறாக இருக்க முடியும்?
“அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற ரசியாவின் முழக்கத்திலிருந்தே மக்கள் அதிகாரம் என்ற பெயர் உருவானதென்பதை திரு.ராஜூ நினைவில் வைத்திருக்கிறாரா என்பதை தெரியவில்லை. நினைவில் இருந்தாலும் அவரும் திரு.காளியப்பனும் இதை ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் நான் கம்யூனிஸ்டே கிடையாது என்று இறுதிக் காலங்களில் கூறிக்கொண்டு (இப்போதும் கம்யூனிச அமைப்பாக கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பில் அவர் இருக்கிறார்) இருந்த திரு.ராஜூவும் கம்யூனிச கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதையே வாழ்நாள் இலட்சியமாக தற்போது கொண்டிருக்கும் திரு.காளியப்பனும் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. மணற்கொள்ளை போராட்டங்களின்போது திரு.ராஜூவுக்கு கொலை மிரட்டல் வந்தபோது அதை ஒட்டி சேத்தியாதோப்பு பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் அம்பேத்கர்(வி.வி.மு) “நக்சல்பாரி இயக்கத்தின் தோழரான வழக்கறிஞர் ராஜூ” என்று கூறினாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா என்ன? மேடையில் அமர்ந்திருந்த உங்களுக்கு மறந்து போகலாம். அப்பொதுக்கூட்டத்துக்கு போஸ்டர் ஒட்டுவது முதல் பாதுகாப்பு வரை மேற்கொண்ட எங்களுக்கு தோழர் அம்பேத்கரின் வார்த்தைகள் இன்னமும் நினைவிருக்கின்றன. திரு.ராஜூவும், திரு.காளியப்பனும் இத்தனை ஆண்டுகாலம் கம்யூனிச அமைப்பில் இருந்ததை மறைத்து, மக்கள் அதிகாரமே நக்சல்பாரி இயக்கத்தால் வழிகாட்டப்பட்டது என்பதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? ஊரை ஏமாற்றத்தானோ?
//மக்கள் அதிகாரம் பெயரில் இயங்கும் எமது அமைப்பு “குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கை சரியாக அவதானித்து அதை எதிர்த்து முறியடிக்கும் வகையில் மக்களை அணிதிரட்டும் வகையில் ஒன்றுபட்ட அரசியல் தலைமையால் வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராக, தோழர் காளியப்பன் பொருளாளராக மேலும் சில தோழர்களை உள்ளடக்கி மாநில ஒருங்கிணைப்பு குழுவாக 2015-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. போராடி வருகின்ற பல்வேறு தரப்பு வர்க்க பிரிவு மக்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் நோக்கத்தில் மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டது.
அன்றைக்கு ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக இருந்த தோழர் வெற்றிவேல் தரப்பினர் இந்த நோக்கத்திலிருந்து மாறியதுடன், 2015ஆம் ஆண்டு துவக்கபட்டபோது, “குறிப்பான தருணத்தில் நாட்டின் பிரதான அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதை நோக்கமாக கொண்டு புதிய ஜனநாயக புரட்சிக்கு இடையில் ஓர் அதிகார அமைப்பாக” மக்கள் அதிகாரம் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டதை தற்போது மறுத்து விட்டனர். மீண்டும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்கின்றனர். கொடியில் இருந்த கருப்பு கலர் கையினை இடது பக்கம் திருப்பியதுடன், வெள்ளை நிறத்திற்கு மாற்றி உள்ளனர். அதற்கு “வலது திசை விலகலை அடையாளபடுத்தும் விதமாக கை வலது புறம் இருப்பதை இடது புறமாக திருப்புகிறோம் என்றதுடன் ஒற்றுமையின் அடையாளம் கருப்பு அல்ல, எனவே வெள்ளையாக மாற்றுகிறோம் என சித்தாந்த விளக்கம் அளித்தனர். மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை அமைப்பாக கொண்டு செயல்படுகின்ற எமது மக்கள் அதிகாரம் பெயரை புதிய ஜனநாயகப் புரட்சிதான் மக்கள் அதிகாரத்தின் இலக்கு என அறிவித்துக் கொண்ட பிறகும் மக்கள் அதிகாரம் என்ற பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாதது அறிவு நாணயமற்றது உள்நோக்கம் கொண்டது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
மேலும், பாசிசத்தை வீழ்த்துவதற்கு தோழர் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தற்போதைக்கு சாத்தியம் இல்லை. புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு அமைப்பு பெயரை மட்டும் மாற்றாமல் இருப்பது நேர்மையற்ற செயலாகும்.// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூ அவர்கள் தோழர் டிமிட்ரோவின் வாக்கியங்களை பயன்படுத்துவதற்காகவாவது கம்யூனிஸ்டுகளுடைய புத்தகங்களின் சில பக்கங்களை படித்திருப்பாரேயானால் மகிழ்ச்சியே. ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.விமு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு ஆகிய நக்சல்பாரி அமைப்புகளால் உருவாக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அதன் இலட்சியத்தில் இருந்து தடம் புரள்வதை தடுத்து நிறுத்தினோம். சதிகாரர்களையும் நான் கம்யூனிஸ்டே இல்லை என்று ஓங்கி ஒலித்த திரு.ராஜூ போன்றவர்களையும் வெளியேற்றவும் விடுவிக்கவும் செய்தோம். மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டு 5 அண்டுகள் ஆகியும் அமைப்பு விதிகள் கூட வகுக்க முடியாத அளவுக்கு பிரபல வாதத்தில் மூழ்கிக்கிடந்தது தலைமைக்குழு. அதிலிருந்து மீண்டு பிளவு ஏற்பட்ட ஓராண்டில் அமைப்பு விதியை வகுத்து முடித்தோம். அதனால் அம்பலப்பட்ட திரு.ராஜூ தரப்பினர் உடனே மாநாட்டை நடத்தி அமைப்பு விதிகளை நிறைவேற்றினார்கள். ஆக எங்களின் செயல்பாடுகள் உங்களை அறியாமலே அமைப்பு முறைக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறதே, அதனால் ஏற்பட்ட விரக்திகூட இப்படி ஒரு கடிதம் எழுத காரணமாக இருக்கலாம்.
இப்போது திரு.ராஜூவுக்கு என்ன பிரச்சினை? மக்கள் அதிகாரத்தை கம்யூனிச அமைப்பாக்கி விட்டார்கள் என்பதுதானா? இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? நாங்கள் மார்க்சிய – லெனினிய தத்துவத்தால் வழிகாட்டப்பட்ட மக்கள் அதிகாரம் என்று அழைத்துக் கொள்கிறோம். நீங்கள் கம்யூனிச இலட்சியம் என்று அறிவித்துக் கொள்ளுங்கள் அல்லது முதலாளித்துவ அமைப்பு என்று அறிவித்துக் கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம். அணிகளையும் மக்களையும் ஏய்க்க, உள்ளுக்குள் நாம் கம்யூனிச அமைப்புதான் என்பதும் ஆளும் கட்சிகளோடு ஒட்டிக்கொள்வதற்கு, நாங்கள் கம்யூனிச அமைப்பு கிடையாது என்பதுமான இரட்டை நாடகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஆடப்போகிறீர்கள்? அதற்கு ஏன் எங்களை இழுக்கிறீர்கள்? நீங்கள் தேர்தல் சகதியில் புரள்வதற்கும் நீந்துவதற்கும் நாங்கள்தான் காரணமாக கிடைத்தோமா என்ன? இப்படியெல்லாம் இருந்துவிட்டு அறிவு நாணயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே!
//மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர்// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆகா, என்ன ஒரு வியாக்கியானம்! மக்கள் அதிகாரம் பரந்து விரிந்த கொள்கையாம். கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் என்றால் அது சுருக்குவதாம். மக்கள் ஜனநாயகம், புதிய ஜனநாயகம், சோசலிசம், இவை அனைத்தும் வெவ்வேறு படி நிலைகளைக் கொண்டதாக இருந்தாலும் அவை கம்யூனிச இலட்சியத்தை கொண்டதே. அது சரி! நாங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக் கொண்டதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் உங்கள் அணிகள் உங்கள் அமைப்பை கம்யூனிச அமைப்பாக மாற்ற வேண்டும் என்று போராடுகிறார்களா? அவர்களுக்கு பதில் கூற முடியாமல் எங்கள் மீது பாய்கிறீரோ?
//புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆக, எதையும் முழுமையாகப் படிக்காமல் கருத்து சொல்வதுபோல எங்களுடைய கொள்கை அறிக்கையையும் முழுமையாகப் படிக்கவில்லை போலும். படித்துவிட்டு வாருங்கள், தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். வீம்பாக தவறுகளைப் பிடித்துக் கொண்டு தொங்க மாட்டோம்.
//மக்கள் அதிகாரத்தின் அரசியல் தலைமை 2020-ஆம் ஆண்டு தனது ஜனநாயக விரோத அதிகாரத்துவ தன்மையினால் ஏற்பட்ட தவறுகளை மறைப்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் உட்பட பெரும்பான்மையினரை புறக்கணித்து ஒரு சில தோழர்களை ரகசியமாக கூட்டி அனைவரையும் நீக்கி விட்டதாக அறிவித்தனர். அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது. தலைமைக்குழுவில் இருந்த வெற்றிவேல் செழியனும் சில தோழர்களும் அமைப்பை பிளவுபடுத்தி வெளியேறிய பிறகு புதிய பெயர் வைத்து இயங்காமல் பெரும்பான்மை தோழர்கள் உள்ள எமது மக்கள் அதிகாரம் அமைப்பு பெயரை பயன்படுத்தும் செயலையும் கண்டிக்கிறோம்.
பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுக்குழு கூடி 80% தோழர்கள் பங்கேற்க வெற்றிவேல்செழியன் தரப்பிலான சிறுபான்மை தோழர்கள் ரகசியமாக எடுத்த முடிவை நிராகரித்து தற்போது தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரத்தை உறுதி செய்தது.// (திரு.ராஜூவின் கடிதம்)
அமைப்பு பிளவுபட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஸ்ஸப்பா… போதும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிறுபான்மை, பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள். ஒரு அமைப்பு பிளவுபட்ட நேரத்தின்போது நான் சிறுபான்மை நீ பெரும்பான்மை என்று பேசலாம். பிளவுபட்ட உடனே ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து செயல்படுவது சாதாரணமான நடைமுறைதானே.
//அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது// (திரு.ராஜூவின் கடிதம்)
யாரோ சிலர் சொன்னால் ஏற்றுக்கொண்டு செல்ல யாரும் ஆட்டு மந்தைகள் அல்ல. மற்றவர்கள் சிந்திப்பார்கள், சொந்தமாக முடிவெடுப்பார்கள் என்ற இயக்கவியலை மறுக்கும் பார்ப்பனீய புத்தி கொண்டோர்க்கு எங்கள் செயல்பாடுகள் அப்படித்தான் தெரியும். ஏனெனில் அணிகள் சுயமாக சிந்திக்கக் கூடாது என்பதில்தானே உங்கள் தலைமை இறுதி வரை காப்பாற்றப்படும். உங்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் எல்லாம் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட தலையாட்டி பொம்மைகள் அல்ல. இந்த அமைப்புக்காக அர்ப்பணிப்பு தியாகம் அனைத்தையும் சிரமேற்று செய்தவர்கள். இந்த அமைப்பில் பல ஆண்டுகளாக நீடித்த வலது திசைவிலகல் அரசியலை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே செல்கின்ற பாதை சரி என்று முடிவெடுத்தவர்கள் தானே தவிர, அவர்கள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல. உங்கள் தரப்பு ஆகட்டும் எங்கள் தரப்பு ஆகட்டும் அனைவருமே சொந்தமாக யோசித்து முடிவெடுத்தவர்கள்தான் என்பது உங்களுக்கு எப்போது புரியும்?
//பாசிசத்தை வீழ்த்த பரந்த ஐக்கிய முன்னணி தேவை அதை உருவாக்க வேண்டும் என்பதில் முழு உறுதியோடு செயல்பட விரும்புகிறோம். ஆனால் கூட்டு இயக்கங்களில் ஒரே பெயரில் இரு அமைப்புகள் என்பது தொடருவது தவிர்க்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இது குறித்து தாங்கள் ஜனநாயக அடிப்படையில் பரிசீலியுங்கள் என கோருகிறோம். அது மட்டுமல்ல எமது அமைப்பிற்கும், வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற உட்கடசி ஜனநாயக கோட்பாட்டை நாங்கள் வழுவாமல் கடைபிடிப்பதால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்கின்ற பல கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றுடன் ஜனநாயக பூர்வமான விவாதங்களையும் தோழமையுடன் கூடிய அணுகுமுறையையும் நாங்கள் கையாண்டு வந்துள்ளோம்.
நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.
எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
அமைப்புகள் கட்சிகள் பிளவுபடுவது ஒன்றும் புதிதல்ல.பெரும்பான்மையான அமைப்புகளில் நடந்து வருகின்ற ஒரு செயல்தான். பிரிந்தவர்கள், சிறுபான்மை தகுதி கொண்டவர்கள் தங்களது பெயரை மாற்றி செயல்பட்டு வருவதுதான் மரபு, ஜனநாயக பூர்வமானது நேர்மையானது. இதற்கு முன்பு பிரிந்த தேர்தல் கட்சிகளோ, பெரியாரிய இயக்கங்களோ பிரிந்தவர்கள் மீண்டும் கூட்டாக வெவ்வேறு பெயரில் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் வெற்றி தரப்பினர் பிடிவாதமாக அதே பெயரில் இயங்குவதன் மூலம் அவர்களின் கீழ் உள்ள அணிகள் மத்தியில் எமது அமைப்பின் மீதான வெறுப்பரசியலை விதைப்பதுடன், அவதூறு சேற்றை வாரி இறைத்து சக தோழர்களுடன் உரையாடுவதையே தடுத்து சிதைக்கின்றனர்.
இன்றைய அரசியல் பொருளாதார பண்பாட்டு சூழல் அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய கார்ப்பரேட்-காவி பாசிசத்தை தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் பரந்து பட்ட கூட்டணி அமைத்து முழுமையாக வீழ்த்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அத்தகைய போராட்டத்தின் வழியாக பெரும் மக்கள் திரள் நலனை பிரதிபலிக்கும் உத்திரவாதப்படுத்தும் பங்கேற்க செய்யும் ஜனநாயக கூட்டரசை உருவாக்க வேண்டும். இதற்காக மக்கள் அதிகாரம் சாத்தியமான அனைவரோடும் கைகோர்த்து செயல்படும் என்பதை உறுதியாக சொல்கிறோம்.// (திரு.ராஜூவின் கடிதம்)
மக்கள் ஜனநாய இளைஞர் கழகம் பிளவுபட்டது, ம.ஜ.இ.க-வும் ம.ஜ.இ.மு-வும் ஒரே கொடியை பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இந்த அமைப்புக்கள் ஒருவர் கலந்து கொள்ளும் கூட்டமைப்பில் தாங்கள் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுக்கவில்லை. ஏனெனில் காலப்போக்கில் அமைப்புகளின் பெயரில் ஒன்று மாற்றம் பெற்றே தீரும் அதிலும் கூட மக்களும் சூழலுமே முடிவெடுக்கும் காரணியாக இருக்கும். ஒரு அமைப்பு பெயரையும் அல்லது கொடியையையும் பயன்படுத்துவதும் அதில் அரசியல் நியாயமிருக்கும் வரை அது அவ்வாறே தொடரும். அவ்வளவு நாணயமுள்ளவராக இருந்தால் புதிய ஜனநாயகம் என்ற பெயரின் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் ஒரு பத்திரிகை பெயரில் நாம் செயல்படக் கூடாது என்று திரு.ராஜூ தனது அரசியல் தலைமையிடம் ஏன் தெரிவிக்கவில்லை. தனக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
//நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.// (திரு.ராஜூவின் கடிதம்)
நட்பு சக்தியை பகை சக்திபோல கடுமையாக விமர்சனம் செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு சேவை செய்கின்றோமாம். உங்களுக்கு நேர்மை இருந்தால் அந்த நட்பு சக்திகள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் சாயம் வெளுத்துப்போகும். காங்கிரசும், திமுகவும் செய்யக்கூடிய தவறுகளை எதிர்க்கிறோம் இது தவறா? திமுகவிற்கு கோபம் வருவதற்கு முன்னர் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வெடிக்கிறது?
டாஸ்மாக்கை மூடுவோம்! என்று 2016 தேர்தலின்போது வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்யவில்லை என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள்! வேண்டுகோள் வைத்தீர்கள்!
தமிழில் பாடுவதை தடுக்கும் தீட்சிதர்களை ஏன் கைது செய்யவில்லை? அதற்கு திராணி இல்லையா என்று கேட்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர் அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். சிற்றம்பல மேடையிலேயே தமிழ் பாடினீர்கள். மிக்க மகிழ்ச்சி, வரவேற்கிறோம். ஆனால் இப்போது என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பது போலவும் முகாந்திரத்துக்காக அலைவது போலவும் அதற்காக பொதுமக்களே புகார் கொடுங்கள் என்று புகார் வாங்குகிறது. நீங்களும் ஆயிரம் பேர்களுக்கு மேல் கையெழுத்து வாங்கி புகார் அளிக்கின்றீர்கள். உங்கள் புகாரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்போகின்றதா? இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்துவிட்டீர்கள்?
பட்டினப்பிரவேசத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். மிகவும் பாராட்டக் கூடியதும் வரவேற்கக் கூடியதுமாகும். ஆனால் போராடிய தோழர்கள் நள்ளிரவு வரை மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்களே. இப்போது கூடவா உங்களுக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை அல்லது வேறுவழி இல்லையா?
பறையா என்று இழித்துரைத்து பேசுகிறார் அண்ணாமலை. ஆனால் தமிழ்நாட்டு அரசு அவரை கைது செய்யவில்லை. இந்தப் பிரச்சினையில் எப்படி உங்கள் பாணியில் திமுகவுக்கு நட்பு முறையில் எடுத்துக் கூறுவது திரு.ராஜூ அவர்களே!
//எமது அமைப்பிற்கும் வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது // (திரு.ராஜூ கடிதம்) இது உண்மையிலும் உண்மை.
அய்க்கியமும் போராட்டமும்தான் தோழமையை பலப்படுத்தும் என்ற அரசியல் அடிப்படையே புரியாமல் ஆளும் திமுகவிற்கு சோப்பு போட்டு அய்க்கிய முன்னணி கட்டும் வேலையில் அல்லவா இறங்கி இருக்கின்றீர்கள்.
உங்களுடைய தலைவர் திரு.மருதையன் அவர்கள் திமுக அரசாங்கத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்ற வேலையை, திமுக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற வேலையை மேற்கொள்வதுதான் மக்கள் இயக்களின் வேலை என்றார். அதை தமிழ்நாட்டில் எந்த மக்கள் இயக்கங்களும் ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் திரு.மருதையனின் கருத்துக்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றி அல்லவா வருகிறீர்கள்.
திமுக அரசு 5 ஆண்டு காலம் தொடர்ந்து நீடித்திருப்பதற்காக, சொர்க்கத்துக்கு செல்லும் பட்டினப்பிரவேசத்துக்கு, முள் பொறுக்கியாக வேலை செய்ய வேண்டுமென்ற திரு.மருதையனது அரசியலை தாங்கள் சிறப்பாக செய்து முடிக்க திட்டமிட்டு இருக்கின்றீர்கள். அந்த பட்டினப்பிரவேசப் பாதையில் நாங்கள் முள்ளாக வந்து விட்டோமோ?
புரட்சிக்கான பாதையில் முள்ளாக இருப்பதுதான் தவறு. திமுகவை பல்லக்கில் வைத்து தூக்கிக்கொண்டு செல்வோருக்கும் முள் பொறுக்குவோருக்கும் நாங்கள் முன்வைத்த அரசியல் முள்ளாக உள்ளதென்றால் என்றால் அது மகிழ்ச்சியே. அதுவும் கூட நீங்கள் பரிசீலிப்பதற்கே.
//எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
எனவே கூட்டியக்கங்களில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதே பெயரில் இயங்கும் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினர் அல்லது வேறு எவரையும் அதே பெயரில் அங்கீகரித்து எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும் ஒன்றாக அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.// (திரு.ராஜூ கடிதம்)
காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளோடும் இணைந்து போராடுவதே காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்திற்கு எதிரான முக்கியப்பணி என்று வகுத்துக் கொண்ட நாங்கள், யாரையும் வரக்கூடாது; இவர்கள் இருந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று ஒருபோதும் சொல்லமாட்டோம். பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருக்கும், பொறுப்புடன் வேலை செய்யும் எவருடனும் இணைந்து செயல்படுவோம் இதுவே எமது நிலைப்பாடு.
இதுவரை அணிகளுக்கு ஆணையிட்டு வந்த திரு.ராஜூ, இப்போது மற்ற அமைப்புகளுக்கும் ஆணையிட ஆரம்பித்துவிட்டார். எமது அமைப்பை அழைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்று மறைமுகமாக மிரட்டவும் தொடங்கிவிட்டார். ஒரு கூட்டு நடவடிக்கையோ அல்லது கூட்டமைப்போ அதன் நோக்கத்திலிருந்துதான் யாரை சேர்த்துக் கொள்வது என்ற முடிவை எடுக்கும். இதைப்பற்றிய அடிப்படை புரிதல் இன்றி அமைப்பு பிளவு – தனிநபர் பிரச்சினை என்ற அக்கப்போரை மற்ற அமைப்புக்களின் முன்வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்கிறார் திரு.ராஜூ அவர்கள். அடிப்படை கொள்கைகளோடு மாறுபாடு இல்லாத எவருடனும் பயணிக்கலாம். அப்படி இல்லாமல் இவர் வந்தால் நான் வரமாட்டேன் என்பதெல்லாம் பார்ப்பனீய புத்தியே.
செஞ்சட்டை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் சிவப்பு சட்டையில் வந்திருக்கும்போது, தனக்கிருக்கும் சிவப்பின் மீதான – கம்யூனிச சித்தாந்தத்தின் மீதான – அலர்ஜி காரணமாக செஞ்சட்டையை தவிர்த்த ராஜூவால் அதற்கான காரணத்தைக்கூட வெளிப்படையாக கூறமுடியாது. திரு.ராஜூ அவர்கள் எங்கேயாவது தன்னை தோழர் என்று விளித்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது துண்டறிக்கையில் தோழர் என்று போட்டுக்கொள்ள அனுமதித்து இருக்கிறாரா?
எல்லாவற்றிலும் தான் தனித்திருக்க வேண்டும். எல்லோரும் தனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற தனது கொள்கையை மற்ற அமைப்புகளுக்கும் விரிவு படுத்திவிட்டார். அவருடைய கனவெல்லாம் திமுக, காங்கிரசுடன் இணைந்த அய்க்கிய முன்னணியில் அல்லவா இருக்கிறது. அதனால்தான் அவருக்கு ஆணையிடுவது எளிதாகிவிட்டது.
இறுதியாக ஒன்று,
கொள்கையை துறந்தோடியது நாங்கள் அல்ல; மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் இந்த கட்டமைப்பை பயன்படுத்த முடியாது, தேர்தல் கட்டுமானம் சீரழிந்து போயிருக்கிறது, ஆளை மாற்றுவது தீர்வல்ல; கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்று கூறியிருப்பதை மூடி மறைத்துவிட்டு தேர்தல் பாதையில் மூழ்கி முத்தெடுத்து, அதிகாரத் தாழ்வாரங்கங்களில் ஒட்டிக்கொண்டு புரட்சித் திட்டம் கொண்டிருக்கும் நீங்களே இன்னமும் மக்கள் அதிகாரம் என்று பெயரை தாங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள். நக்சல்பாரி இயக்கத்தின் வழித்தோன்றலாக, நாங்கள் செய்த தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக முன்வைத்து முன்னேறிவரும் எங்களுக்கு மக்கள் அதிகாரம் என்ற பெயரை முன்னெடுத்துச்செல்ல உரிமை இல்லையா என்ன?
எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள். நாங்கள் மக்கள் அதிகாரம் பெயரை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்; மக்கள் முடிவு செய்யட்டும். நீங்கள் ஆளும் வர்க்கத்தின் புட்டம் வலிக்காதவாறு முள் பொறுக்கும் புனிதப்பணியை மேற்கொள்வீராக! அரசியலற்ற விவாதங்களில் எங்களை தள்ளிவிடாதிருப்பீராக!
நாம் இருவரும் தத்தமது அரசியலை நேர்மையாய் முன்வைப்போம்! எது சரி என்று மக்கள் தீர்மானிக்கட்டும்!

தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

0
ஜூன் 21 அன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம், ‘புல்டோசர் நீதி’-க்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தைக் குழுவின், 90 முன்னாள் அரசு ஊழியர்கள் உத்தரப்பிரதேசத்தில் “சட்டவிரோதமாக காவலில் வைத்தல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான போலீசின் வன்முறை” ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அக்கடித்தத்தில் கூறியுள்ளனர்.
“எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதற்கு” தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980, உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1986 ஆகியவற்றை செயல்படுத்த “வெளிப்படையான வழிகாட்டுதல்கள்” உள்ளன என்று முன்னாள் அரசு ஊழியர்கள் கூறினர்.
“இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. உள்ளூர் மட்ட அதிகாரிகள், போலீசுகாரகள் இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்றாலும், உண்மையான குற்றம் அரசியல் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் உள்ளது” என்று கடிதம் கூறுகிறது.
“மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது சட்டப்பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவோ துணிந்த குடிமக்களுக்கு மிருகத்தனமான தண்டனையை வழங்குகிறது இந்த ‘புல்டோசர் நீதி’. தற்போது பல இந்திய மாநிலங்கள் விதிவிலக்காக இல்லாமல் புல்டோசர் நீதி வழக்கங்கப்பட்டு வருகிறது” என்று கூறுகிறது.
படிக்க :
♦ காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ ‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
பிரச்சினை இனி உள்ளூர் மட்டத்தில் போலீசுத்துறை, நிர்வாகத்தின் ‘அதிகப்படியான செயல்கள்’ அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சி, ‘முறையான செயல்முறை’, ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்பட வேண்டும் என்பதே உண்மை. இந்து தற்போது தலைகீழாக மாற்றப்படுகிறது” என்கின்றனர்.
“பிரயாக்ராஜ், கான்பூரில், சஹாரன்பூர் மற்றும் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட பல நகரங்களில் ஒரு மாதிரியைப் பின்பற்றுகிறது. அரசியல் ரீதியாக வழிநடத்தப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.
இக்கடித்தத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், முன்னாள் இந்தியக் போலீசுத்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரிகள் ஜூலியோ ரிபெய்ரோ, அவினாஷ் மோகனானி, மேக்ஸ்வெல் பெரேரா மற்றும் ஏ.கே. சமந்தா மற்றும் முன்னாள் சமூக நீதித்துறை செயலாளர் அனிதா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 90 பேர் இதில் அடங்குவர்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் சிலர் ஜூன் 14 அன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவை முன்னாள் அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்திய செயல்களை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடித்ததை எதிர்த்து நீதிபதிகள் போபண்ணா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் “எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும்” என்றும், சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
“இந்த பிரச்சினையில் உயர் மட்டத்தில் உள்ள நீதித்துறை தலையிடாவிட்டால், கடந்த எழுபத்திரண்டு ஆண்டுகளாக மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்ட அரசியலமைப்பு நிர்வாகத்தின் முழு கட்டிடமும் இடிந்து விழும்” என்று கூறினார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரானது. ‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை. அமைதியாய் இரு! அடிமையாய் இரு! அதைத்தாண்டி உரிமை என்று பேசினால் ஒடுக்கப்படுவாய்! நசுக்கப்படுவாய்! உன் வீடுகள் இடிக்கப்பட்டு சொந்த நாட்டிற்குளேயே அகதிகளாக்கப்படுவாய்! என்பதே யோகி அரசு நமக்கு கூறும் ‘புல்டோசர் நீதி’யின் சாரம்.
இது ஏதோ முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் போது ‘காவி புல்டோசர்கள்’ நம் வீட்டு கதவுகளையும் தட்டும்.

சந்துரு

அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !

0
2021-ம் ஆண்டு அசாம் போலீசுத்துறை, 51 பேரைக் கொன்றுள்ளது என்று அம்மாநில அரசு கடந்த ஜூன் 21 அன்று கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரிப் ஜவாடர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, “2021 மே முதல் மே 31, 2022 வரை – போலீசு விசாரணை – போலீசு காவலின்போது 51 இறப்புகள் மற்றும் 139 பேருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் தொடர்புடையவை” என்று அசாம் அரசு வாக்குமூலம் அளித்துள்ளது.
***
அசாமில், போலீசின் துப்பாக்கிச் சூடு அதிகரிப்பு குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பரில் வழக்கறிஞர் ஜவாடர் கோரிக்கை விடுத்தார். மே 2021 முதல் டிசம்பர் 2021 வரை இதுபோன்ற 80-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டினார். இந்த காலகட்டத்தில் “போலி என்கவுண்டர்களில்” 28 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“என்கவுண்டர் நடந்தபோது, பாதிக்கப்பட்ட அனைவரும் நிராயுதபாணிகளாகவும் கைவிலங்கிடப்பட்டவர்களாகவும் இருந்தனர்” என்று ஜவாடர் தனது மனுவில் கூறினார். போலீசுத்துறையினருக்கு “கொலை செய்வதற்கான உரிமம் இல்லை” என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அவர்களைக் கொல்வதற்கு அல்ல என்றும் வழக்கறிஞர் ஜவாடர் கூறினார்.
படிக்க :
♦ பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
♦ உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !
“இதுபோன்ற என்கவுண்டர் கொலைகள், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையைப் பறிக்கிறது. இது ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை’ தவிர மறுக்க முடியாது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமை நீதிமன்றங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், என்கவுண்டர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
***
அசாம் அரசு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 31 மாவட்டங்களில் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசுத்துறையின் நடவடிக்கையால் இறப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் 21 அன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த போலீசுத்துறையின் குற்றங்கள் தொடர்பாக கடந்த மார்ச் 15 அன்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில சட்டசபையில் போலீசுத்துறை நடவடிக்கையை ஆதரித்து பேசினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது; இது குற்றவாளிகளுக்கு எதிரான போலீசுத்துறையின் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுவதை காட்டுகிறது என்றார்.
“என்கவுண்டர்களுக்காக நாங்கள் பலமுறை சபையில் விமர்சிக்கப்படுகிறோம். போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், அப்படி சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும்போது, ​​பலாத்காரம் செய்தவருக்கு அனுதாபம் காட்ட வேண்டுமா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று சர்மா கூறினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா, அசாம் சட்டமன்றத்தில், போலீசு காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறப்பது மாநிலத்தில் புதிதல்ல என்று கூறினார். அசாம் போலீசுத்துறையின் கையேட்டில் என்கவுண்டர் என்ற வார்த்தையே இல்லை. “ஒரு குற்றவாளி தப்பிக்க அல்லது போலீசுத்துறையைத் தாக்க முயன்றால், அவர்கள் காயமடையலாம் அல்லது கொல்லப்படலாம்” என்று ஹசாரிகா கூறினார்.
அசாம் போலீசுத்துறைக்கு அம்மாநில அரசு எல்லையற்ற சுதந்திரம் வழங்கி இருக்கிறது என்பது இந்த காவல் கொலைகள் மூலம் அம்பலமாகிறது. இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி – கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலி என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

புகழ்

காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, “இது வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா என தங்களுக்கு அடுத்தடுத்த இலக்குகள் உள்ளன” என்று வெளிப்படையாக அறிவித்தார்கள் காவி பாசிஸ்டுகள். இன்று அதை நோக்கிச் செயலுக்குப் போய்விட்டார்கள். “இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை” என பல புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அடுத்தடுத்து இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய நினைவுச் சின்னங்கள் குறிவைக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால், காசி – ஞானவாபி மசூதி, மதுரா – சாகி ஈத்கா பள்ளிவாசல்; டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரம், மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஜாமியா மசூதி, மங்களூருவில் உள்ள மாலாஜி ஜீம்மா மசூதி ஆகியவை முதற்கட்டமாக குறிவைக்கப்பட்டுள்ளன.
‘தாஜ்மஹால்’ இல்லையாம், ‘தேஜோ மஹாலயா’-வாம்!
யமுனை ஆற்றங்கரையில், வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஷாஜகான், தனது காதலி மும்தாஜ்-ன் நினைவாக கட்டியதாகும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களோ ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோயில்தான் தாஜ்மஹால் என்ற கதையை நீண்ட காலமாகப் பாடிவருகிறார்கள்.
படிக்க :
♦ ’குதுப்மினாரை முகலாயர்கள் கட்டவில்லையாம்’ – கரசேவகனாக கூவும் தொல்லியல் துறை அதிகாரி !
♦ மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !
‘தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில்’ என 2000 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக, பின்.ஓக் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு 2005 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் 2015 ஆம் ஆண்டில் ஆக்ரா நீதிமன்றத்திலும் சிலரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், மாநில சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹாலை நீக்கி தனது வெறுப்பை வெளிக்காட்டினார்கள் காவிகள். “தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, அதற்கு இந்திய வரலாற்றில் இடமளிக்கக் கூடாது; அதை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில் கட்ட வேண்டும் அல்லது தேஜோ மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றி இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும்” – என அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களால் வெளிப்படையாக பேசப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பொறுப்பாளரான ரஜ்னீஷ் சிங், கடந்த மே மாதத் தொடக்கத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தாஜ்மஹால் பற்றிய ‘உண்மையை’ கண்டறிய, அதற்குள் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை சோதனையிட்டுப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார். இம்மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வழக்கின் மூலம் ‘தேஜோ மஹாலயா’ என்ற வரலாற்றுப் பொய்யை மீண்டும் விவாதப் பொருளாக்கிவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள்.
ஞானவாபி மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிவலிங்கம்’, உண்மையில் ஒரு செயற்கை நீரூற்று.
நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடிசெய்வதற்கு ஒருநாள் முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் அரசன், இரண்டாம் மான் சிங்-இன் பேத்தியுமான தியா குமாரி, “தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் எனது முன்னோர்களான ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் இந்நிலத்தை எங்களிடமிருந்து ஆக்கிரமித்துவிட்டார்” என்று பேட்டியளித்திருந்தார்.
***
தாஜ்மஹாலைப் போலவே, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள ஜாமியா மசூதியும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என கிளம்பியிருக்கிறது காவி கும்பல். இம்மசூதி, 19 ஆம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாப்-ஆன குத்துஸியா பேகம் என்பவரால் கட்டப்பட்டது. ஆனால், இம்மசூதி சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதென்றும், அங்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டுமென்றும் கோரி மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரிடம் ‘சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின்’ என்ற அமைப்பு மனு அளித்துள்ளது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், காசி கோயில்?
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் பழையான மசூதி ஆகும். பாபர் மசூதிக்கு முன்பாகவே, ஞானவாபி மசூதியை குறிவைக்கும் திட்டம் காவிகளுக்கு இருந்துவந்திருக்கிறது. இம்மசூதி உள்ள இடத்தில்தான் பழைய காசி விஸ்வநாதர் கோயில் இருந்ததாகவும் அவுரங்கசிப் ஆண்டபோது, காசி கோயில் இடிக்கப்பட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் காவிகளால் தொடர் பிரச்சாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது; இன்றுள்ள காசி கோயில், மசூதி கட்டிய பிறகு, புதிதாக கட்டப்பட்டது என அவர்களால் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, 1991 ஆம் ஆண்டே வி.எச்.பி.யால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், பழைய காசி கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வின் மூலம் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறி, 2019 ஆம் ஆண்டு, விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற சங்கி, வாராணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு (2021) மீண்டும் இந்துத்துவ அமைப்பொன்றின் சார்பில் ஞானவாபி மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஸ்வ வேத சனாதன சங்கத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், ஞானவாபி மசூதியில் வெளிப்புறச் சுவறொன்றில் சிருங்கார கௌரி, விநாயகர், அனுமன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், நாள் தோறும் அங்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் இந்து அடையாளங்களை கண்டறிவதற்காக, வளாகத்திற்குள் சென்று ஆய்வு நடத்தவும் அதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த ஆய்வில், மசூதியின் வளாகத்தில் ‘சிவலிங்கம்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினால் தெரிவிக்கப்பட்டது. காவி கும்பல் உடனடியாக இதை பிரச்சாரமாக்கியது. உண்மையில் அது மசூதிக்கு வழிபட வருபவர்கள், தங்கள் கைகால்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள ‘செயற்கை நீரூற்று’ என மசூதி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிருங்கார கௌரி உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதோ, மசூதியின் மேற்கு வெளிப்புறச் சுவரில்; வழக்கு தொடுக்கப்பட்டதோ, அச்சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி; ஆனால், சம்மந்தமே இல்லாமல் மசூதிக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரா: ‘கிருஷ்ணன் கோயில் ஆக்கிரமிப்பு’
மதுராவில் உள்ள சாகி ஈத்கா மசூதி, அவுரங்கசிப் காலத்தில் கிருஷ்ணர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகவும், அம்மசூதியை இடித்துவிட்டு மீண்டும் அதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது காவி கும்பல். இதையொட்டி இதற்கு முன்னரும் பல வழக்குகள் தொடரப்பட்டு, அவை நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சாகி ஈத்கா மசூதி, கேதவ் தேவ் என்ற கிருஷ்ணன் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. ஆகவே பல ஆண்டுகளாக, இந்துத்துவவாதிகளால் இம்மசூதி கிருஷ்ணன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்துவரப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு, கேதவ் தேவ் கோயில் நிர்வாகத்திற்கும் சாகி ஈத்கா மசூதி நிர்வாகத்திற்கும் இடையே மதச் சொத்துக்கள் விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது; இதன்படி, அவரவர் வழிபாட்டுத் தலங்கள் அவரவருக்குச் சொந்தம் என்ற ஒத்த முடிவு ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தற்போது காவி கும்பல் மதுரா விவகாரத்தை மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளது.
டெல்லி குதுப்மினாரை மீட்கக் கோரி, அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தும் சங் பரிவார அமைப்புகள்.
இவ்வழக்கு ஒரு பக்கம் விசாரணையிலிருக்கும்போதே, முகலாய மன்னன் அவுரங்கசிப் உத்தரவின் பேரால் கிருஷ்ணன் கோயில் இடிக்கப்பட்டபோது, கோயிலில் இருந்த பொன் வேய்ந்த சிலைகள் கொல்லையடிக்கப்பட்டு, ஆக்ராவில் உள்ள பேகம் சாஹிபா மசூதிக்கு கீழே புதைத்திருப்பதாகவும் அதை மீட்க வேண்டுமெனவும் கோரி, சங்கி ஒருவரால் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
“அம்மசூதியின் படிக்கட்டுகளின் கீழே இந்துதெய்வங்களின் சிலை உள்ளதால், அதை மிதித்துக் கொண்டு செல்லக்கூடாது; அது இந்துதெய்வங்களை அவமதிப்பது போன்றதாகும்; ஆகவே இம்மசூதிக்கு பொதுமக்கள் செல்வதை தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
குதுப்மினார்: ‘விஷ்ணு கொடிமரம்’ அல்லது ‘சூரிய கோபுரம்’
தாஜ்மஹாலைப் போன்ற மிகப் பழைமையான (13 ஆம் நூற்றாண்டு) கட்டிடம் டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார். இஸ்லாமிய மன்னன் குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்ட மிக உயர்ந்த செங்கல் கோபுரம் இது. ஆனால், இது ‘குதுப்மினார்’ அல்ல, ‘விஷ்ணு கோபுரம்’ என்று ஒரு கதையை தோற்றுவித்திருக்கின்றன வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள். மேலும் குதுப்மினாருக்கு உள்ளே இருக்கும் இந்தியாவின் முதல் மசூதியான குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதி 27 இந்து மற்றும் சமணக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
பல சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்து, கடந்த மே 10 ஆம் தேதி, குதுப்மினாரை ‘விஷ்ணு கொடிமரம்’ என பெயர் மாற்றக் கோரியும், குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதியை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில்களைக் கட்டித்தர வேண்டும் என்று கோரியும் அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தியுள்ளன.
குதும்பினார் விஷயத்தில், முன்னாள் தொல்லியல் துறை அதிகாரியும் சங்கியுமான தரம்வீர் சர்மா என்பவர் சற்று வேறுபட்டு கூவுகிறார். குதுப்மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லையென்றும், அது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மன்னன் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால், அதன் பெயர் ‘சூரிய கோபுரம்’ என்கிறார்.
கர்நாடகா: வடக்கே அவுரங்கசிப், தெற்கே திப்பு சுல்தான்
டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் மசூதிகளை குறிவைத்துக் கொண்டிருக்கிறது காவி கும்பல். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் ஜாமியா மசூதியானது கி.பி. 1782 ஆம் ஆண்டு திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதியாகும். இது தற்போது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே 14 ஆம் தேதி, ‘நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு, “இம்மசூதி உள்ள இடத்தில், முன்பு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது; அதை இடித்துவிட்டுத்தான் திப்பு சுல்தான் ஜாமியா மசூதியை கட்டியுள்ளார். எனவே இந்துக்கள் மீண்டும் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று மாண்டியா மாவட்ட துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.
ஆஞ்சநேயர் கோயிலை மீட்கக் கோரி வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், ஜூன் 4 ஆம் தேதி ‘ஸ்ரீரங்கப்பட்டணம் சலோ’ என்ற பெயரில், பேரணி ஒன்றை அறிவித்து நடத்தினர். இப்பேரணியின் முடிவில், ஜாமியா மசூதிக்குள் சென்று பூஜைகள் செய்யப்போவதாக அறிவித்தனர். மதவெறி நோக்கம் கொண்ட இப்பேரணியை தொடக்கத்திலேயே தடுக்காமல், மசூதியை நோக்கி வரும் வரை வேடிக்கைப் பார்த்து, பாதி பேரணியில் தடுத்து நிறுத்தியது கர்நாடக காவல்துறை.
ஜாமியா மசூதிக்குள், இஸ்லாமியர்கள் நடத்தும் மதரசாப் பள்ளி ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு பயிலும் மாணவர்கள், அங்குள்ள இந்து அடையாளங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, அம்மதரசாவை ஒருமாதத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று அரசுக்கு கெடுவிதித்துள்ளது வி.எச்.பி. அவ்வாறு காலி செய்யவில்லையென்றால் தாங்களே காலி செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார்கள்.
இம்மசூதி மட்டுமல்லாமல் மங்களூருவில் உள்ள மலாலி ஜீம்மா மசூதியும் காவிகளின் இலக்காகியிருக்கிறது. கடந்த மே மாத இறுதியில், இம்மசூதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது; அப்போது இந்து கோயில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் “மசூதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பிரச்சினையாக்கத் தொடங்கினர்.
***
‘வரலாற்றுச் சான்றுகளை’ தயாரிக்கும் வரலாற்றுப் புரட்டல்வாதிகள்
இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய மசூதிகள், நினைவுச் சின்னங்கள் அனைத்துமே இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவைதான் என்று கூறும் காவி கும்பல், தனது பொய்-புரட்டுகளை வைத்தே மதவெறிக் கலவரங்களை நடத்திவருகிறது. ஆனால், தாங்கள் கூறும் கூற்றுகளுக்கெல்லாம் ‘தொல்லியல் ஆதாரங்கள்’, ‘வரலாற்றுச் சான்றுகள்’ போன்றவைகள் இருப்பதாக கதையளிக்கிறார்கள் காவிகள்; உண்மையில் அப்படிச் சிலவற்றைக் காட்டவும் செய்கிறார்கள். அவையெல்லாம் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த புரட்டல்வாத அறிவுஜீவிகளால், தோற்றுவிக்கப்பட்ட ‘ஆதாரங்கள்’.
‘ஆஞ்சநேயர் கோயிலை’ மீட்கக்கோரி, கர்நாடகா ஜாமியா மசூதியை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்ற வி.எச்.பி.
சான்றாக, தாஜ்மஹாலை ‘தேஜோ மஹால்’ ஆக்கியவர் பி.என்.ஓக் என்ற புரட்டல்வாதி. இவர் ஒரு வரலாற்றுப் பேராசியர் மற்றும் கடைந்தெடுத்த சங்கி ஆவர். 1989 ஆம் ஆண்டு, தாஜ்மஹால்: ஓர் உண்மை கதை (Taj Mahal : The True Story), தாஜ்மஹால் ஒரு கோயில் அரண்மனை (Taj Mahal is a Temple palace) ஆகிய புரட்டல்வாத நூல்களை வெளியிட்டார். 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக தாஜ்மஹாலை ஆராயச் சொல்லி வழக்கு போட்டவர் இவர்தான். ஷாஜகானுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே ‘தேஜோ மஹால்’ என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுவிட்டது என்றும் ‘தேஜோ மஹால்’ என்பதன் திரிபே தாஜ்மஹால் என்று ஆனதாகவும் இவர் கூறுகிறார்.
இவர் ஆர்.எஸ்.எஸ். உடைய ‘அகண்ட பாரத’ பிரச்சாரத்தையும் தாண்டி, ‘அகில பாரத’ பிரச்சாரத்தை மேற்கொண்ட முரட்டுச் சங்கி. ஐரோப்பியாவில் இருக்கும் வாடிகன் சிட்டி, சவுதி அரேபியாவின் கப்பா மெக்கா, இலண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே ஆகியவை ஒரு காலத்தில் இந்து கோயில்களாக இருந்ததாகச் சொல்கிறார் இவர். இக்கூற்றிலிருந்தே இவரது ‘வரலாற்று ஆய்வை’ நாம் வியப்போம்.
பழைமை வாய்ந்த மசூதிகளெல்லாம் இந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவை என்று சித்தரிக்கும் நூல்களுள் ஒன்று, “இந்து கோயில்கள் : அவற்றுக்கு என்ன ஆனது?” (Hindu Temples : What happened to them) என்ற நூல். சீதா ராம் கோயல், அருண் ஷோரி, ஹர்ஷ் நரேன், ஜெய் துபாஷி மற்றும் ராம் ஸ்வரூப் ஆகியோர் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆவர்.
இவர்கள் எழுதிய மேற்கண்ட நூலில், சுமார் 1800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கட்டிடங்கள், அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பாபர் மசூதி, ஞானவாபி, குதும்பினார் ஆகியவையும் அடக்கம்.
நூல்களைத் தாண்டி, தாங்கள் கடத்தவரும் வரலாற்றுப் புரட்டுகளை திரைப்படங்களாகவும் கொண்டுவந்து வெகுமக்களை மதவெறியூட்டுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். அதற்கு பொறுத்தமான சான்று, அண்மையில் வெளிவந்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். ‘வரலாற்று உண்மையை’ அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற பெயரில், ஒட்டுமொத்த காஷ்மீர் முஸ்லீம்களையும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளாகவும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும் வரலாற்று மோசடி இத்திரைப்படத்தில் அரங்கேற்றப்பட்டது. பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்படுவதாகக் காட்டும் காட்சிகளை, நம்மை இரத்தம் கொப்பளிக்க வைப்பவையாகவும் ‘முஸ்லீம்களை பழிதீர்க்க வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடியதாகவும் அமைத்திருப்பார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. அதுதான் அவரது நோக்கம்.
இந்த சங்கப் பரிவாரப் பிரச்சார பீரங்கியின் அடுத்தப் படமாக தயாராகிக் கொண்டிருப்பது ‘டெல்லி ஃபைல்ஸ்’. விவேக் அக்னிஹோத்ரி சென்னை வந்திருந்தபோது, “முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிவரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது டெல்லி ஃபைல்ஸ் படத்தின் கதைக்களமாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியை ஆண்ட சுல்தான்கள் ‘இந்துக் கோயில்களை இடித்துச் சேதப்படுத்தினார்கள்’ என்ற கருப்பொருளுக்கு சில வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துவைத்துக் கொண்டு, அவற்றை மிகைப்படுத்தி, திரித்து, போலியாக சேர்த்து பேசக் கூடிய படமாக ‘டெல்லி ஃபைல்ஸ்’ இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் வன்முறையை ஏவுவுதற்கான தலைசிறந்த பிரச்சாரக் கருவியாக இது செயல்படும்.
காவி பாசிஸ்டுகளின் கையாளாக நீதிமன்றங்கள்
“இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்ட மசூதியை மீட்க வேண்டும்” என்று கூறி நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வது காவிகளுக்கு இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாக அவர்கள் செய்துவருவதுதான். ஆனால், 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவ்வாறு தொடுத்த வழக்குகள் பெரும்பாலும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை; காரணம், 1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் ஆகும்.
1991-இல் பாபர் மசூதியைக் குறிவைத்து இராம ஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டத்தின் பிரிவு 4, ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அப்படியே பராமரிக்கப்பட வேண்டுமெனவும்; ஒரு மத வழிப்பாட்டுத் தலம், முன்னொரு காலத்தில் வேறொரு மத வழிபாட்டுத் தலமாக இருந்து, அதை இடித்துவிட்டு தற்போதைய மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டதாகக் கூறி, அதை பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது என்றும் சொல்கிறது. இச்சட்டத்தில், பாபர் மசூதிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, இச்சட்டப்பிரிவை நீக்கக்கோரி விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதுவரை, இச்சட்டம் நடைமுறையிலேயே உள்ளது. இப்படியிருக்க ஞானவாபி, மதுரா வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்திருக்கின்றன. இது சட்டத்தைக் காக்கும் நிறுவனமாக கருதப்படும் நீதிமன்றங்களே செய்த சட்டவிரோத நடவடிக்கைகளாகும்.
உச்சமாக, மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது வாரணாசி சிவில் நீதிமன்றம். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, ஆய்வுக் குழு அமைத்த வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மசூதி நிர்வாகம்; ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதி நிர்வாகத் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோதும், ஆய்வுக்குத் தடை விதிக்கப்படவில்லை; மாறாக, இவ்வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என நழுவிக் கொண்டது உச்சநீதிமன்றம். இதற்கிடையில், மசூதிக்குள் ஆய்வு நடைபெற்று, நீரூற்றை ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாக போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன; ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சீல்வைக்கச் சொல்லி, பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எஃப். படைகளை குவித்து முஸ்லீம் மக்களை அச்சுறுத்தியது வாரணாசி நீதிமன்றம்.
மசூதி நிர்வாகத்தின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத்தன்மையை கண்டறிவாதாலேயே அதை 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாக கருதமுடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்துக்களின் நம்பிக்கை’ என்பதாலேயே பாபர் மசூதியில் இராமன் கோயில் கட்ட அனுமதி கொடுத்த மனுநீதி மன்றமல்லவா உச்சநீதிமன்றம், அதனிடம் நாம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.
‘தேஜோ மஹாலயா என்பதுதான் தாஜ்மஹால்’ சங் பரிவார புரட்டல்வாதி பி.என்.ஓக் எழுதிய நூல்.
ஞானவாபி, மதுரா விவகாரங்களில் காவிகளின் மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்டே போதே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது கழிப்பறை காகிதமாக்கப்பட்டுவிட்டது; காவிகளின் விருப்பத்திற்கேற்ப அக்காகிதமும் இனி கிழித்தெறியப்படலாம்.
எதிர்கொள்வோம்!
“இந்துக் கோயில்களை மீட்போம்” எனக் கிளம்பியிருக்கும் இந்நடவடிக்கையானது, இராம ஜென்ம பூமி இயக்கத்திற்குப் பின், காவி பாசிஸ்டுகள் கையிலெடுத்துள்ள இன்னொரு கரசேவை இயக்கமாகும். ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்றில், இராம ஜென்ம பூமி இயக்கம் என்பது முக்கியமானதாகும். இந்த இயக்கத்தை ஒட்டி நடத்தப்பட்ட இரதயாத்திரை கலவரங்களில்தான், நாடு முழுவதும் சுமார் 2,000 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள். கொடிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனக்கு மக்கள் மத்தியில் வலுவானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டதும் இந்த இயக்கத்தின்போதுதான்.
“ராமர் கோயில் பிரச்சினையைக் கையிலெடுத்த பின் ஆர்.எஸ்.எஸ். செழித்து ஓங்கியது. 1979-க்கும் 1989-க்கும் இடையிலான பத்தாண்டுகளில் ஸ்வயம்சேவக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 18 லட்சமாக உயர்ந்தது. ஷாகாக்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது மட்டுமன்றி 18,880 நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது. அதற்கு 38 முன்னணி அமைப்புகள் இருந்தன. 50 லட்சம் பேர் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் வியக்கதகு வளர்ச்சியை அடைந்தது ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் இருக்கும் 14 மாவட்டங்களில் 12-இல் 3,000 தினசரி ஷாக்காக்களும் 900 வாராந்திரக் கூட்டங்களும் நடத்தப்பட்டன” (ஏ.ஜி. நூரானி எழுதிய, “ஆர்.எஸ்.எஸ். : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலிலிருந்து)
எனினும், அன்றைக்கும் இன்றைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று ஆர்.எஸ்.எஸ். தனது அடித்தளத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்தி, விரிவுபடுத்திக் கொள்ளும் கட்டத்தில் இருந்தது. இன்றோ, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அமைப்புகள் புற்றீசல் போல பெருகி, எண்ணிலடங்காதவையாக வளர்ந்துள்ளன. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை நடத்தி முன்னோட்டம் பார்த்திருக்கிறது. ‘இந்துத்துவத்தின் சோதனைச் சாலை’ என்று ஒரு காலத்தில் குஜராத் மாநிலத்தை மட்டுமே குறிப்பிட்டு வந்தோம்; இன்றோ உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என தனது அடித்தளங்களை பல்வேறு மாநிலங்களிலும் வலுப்படுத்தி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.
அன்று பாபர் மசூதி என்ற ஒரு இடத்தை குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது, மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.
மேலும் காவி பாசிஸ்டுகளே அறிவித்ததைப் போல, 1992-இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, இரதயாத்திரைக் கலவரங்கள் ஆகியவை ஒரு ‘முன்னோட்டம்’தான். கொடிய இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான முன்னோட்டம் அது.
இன்று, ஆர்.எஸ்.எஸ். அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன; பெயரளவிலான போலி ஜனநாயகக் கட்டமைப்புகளும் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு, இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் என எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்.தான்” என சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளிப்படையாக பேசினார் கர்நாடக அரசவைத்தலைவர் விஷ்வேஸ்வர் ஹெக்டே.
படிக்க :
♦ ‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
♦ கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !
இது முந்தையவைகளைக் காட்டிலும் கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளும், இனப்படுகொலைகளும் நாடுமுழுவதும் தலைவிரித்தாடப்போகும் காலகட்டமாக இருக்கப் போகிறது.
ஆனால், நம்மிடம் அச்சப்படுவதற்கு மட்டுமே விசயங்கள் இல்லை; பாசிச அபாயம் முறியடிக்கப்பட முடியாதது அல்ல. ஆர்.எஸ்.எஸ். வெகுமக்களை இந்துமதவெறியின் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கும்போதே, புரட்சிகர நெருக்கடிக்கான சூழலும் கனிந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கொரோனா பொருளாதார முடக்கம், உக்ரைன் – இரஷ்யப் போர் ஆகியவை தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் தோல்வியை உலக அளவில் விரைவுபடுத்தியுள்ளன; இலங்கையைப் போலவே பல்வேறு நாடுகளிலும் பணவீக்கமும், கடன் நெருக்கடிகளும் தீவிரமாகி வருகிறது. நமது நாட்டில்கூட பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிகப்பெரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன; அரசி, பருப்பு, சமையல் எண்ணெய், பெட்ரோல்-டீசல் என அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றன. (இந்த நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு வித்திட்டுவிடக்கூடாது என்ற அச்சம் காரணமாகவே மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை சொற்பமாகக் குறைத்து நாடகமாடியுள்ளது)
பீகாரில் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களே வீதிக்கு வந்து போராடியது, இரயில்களைக் கொளுத்தியது ஆகியவை வேலையின்மையின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், ஷாகீன்பாக் போராட்டம், டெல்லிச் சலோ என காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டச் சூழல் கனிந்து வருகிறது. இவ்வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதும் வளர்த்தெடுப்பதும்தான் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வழி.

வெண்பா

சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !

0
வினீத் குமார் ராவத் Zomato நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் 18 அன்று ஆஷியானா பகுதியின் செக்டார் எச் பகுதியில் உணவு டெலிவரி செய்ய அஜய் சிங்கின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராவத். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் வசிப்பவர்கள் அவரது கைகளில் இருந்து உணவை வாங்க மறுத்துவிட்டனர்.
ராவத் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசுக்கு அளித்த புகாரிலும் வீடியோவிலும் கூறுகிறார். கதவைத் திறந்த ஒருவர் அவரது பெயரையும் சாதியையும் கேட்டார். ராவத் தனது பெயரைச் சொன்னதும் அவர் முகத்தில் புகையிலையை துப்பியுள்ளார்.
“அஜய்யின் சகோதரர் அபய் சிங் கதவைத் திறந்தார். அவர் நான் ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து சாதிரீதியாக அவதூறு செய்தார். அபய் ஆர்டரைப் பெற மறுத்து, பசியின் (பட்டியலிடப்பட்ட சாதி) கையிலிருந்து உணவை எடுக்க மாட்டோம் என்று வாங்குவாதத்தில் ஈடுபட்டனர்” என்று ராவத் தனக்கு நேர்ந்த சாதிய கொடுமையை விவரிக்கிறார்.
உணவு ஆர்டரை என்னிடம் இருந்து வாங்க விருப்பவில்லை என்றால், அந்த ஆடரை ரத்து செய்யுமாறு அஜய்யிடம் ராவத் கேட்டுக் கொண்டார். சாதிவெறியுடன் இருந்த அஜய், ராவத் மீது புகையிலையை துப்பியது மட்டுமல்லாமல், சாதி ரீதியாக கேவலப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் 10 முதல் 12 பேர் அஜய் வீட்டில் இருந்து வெளியே வந்து ராவத்தை அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தடி மற்றும் கம்பியால் தாக்கியதாக ராவத் கூறுகிறார்.
படிக்க :
♦ தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
♦ ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
தடியால் தாக்கியபோது, ராவத் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ராவத் தலைப்பகுதியில் காயம் ஏற்படவில்லை. ஆனால், ராவத் அந்த சாதிவெறி பிடித்த கும்பலால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் மூலம் நாம் உணரமுடியும். ராவத் கடந்த நான்கு வருடங்களாக டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இது போன்ற ஒரு சம்பவத்தை கடந்த காலத்தில் நான் சந்தித்ததே இல்லை என்று கூறுகிறார்.
ராவத்தின் புகாரின் பேரில், அபய் சிங் மற்றும் 10-12 குற்றவாளிகள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 147, 148, 323 மற்றும் 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு Zomato தொழிலாளி இதுபோன்ற ஓர் சாதி ரீதியான அடக்குமுறையை சந்தித்துள்ளார்.
ஜூலை 30, 2019 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, டெலிவரி செய்ப்வர் “இந்து அல்லாதவர்” என்பதால், தனது ஆர்டரை ரத்து செய்தது பற்றி ட்வீட் செய்தார். டெலிவரி பாயை மாற்றவும், பணத்தைத் திருப்பித் தரவும் Zomato மறுத்துவிட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், தன் வயிற்று பிழைப்புக்காகவும், தன் குடும்ப வறுமையை போக்கவும், வெயிலியும் மழையிலிலும் உணவு ஆடர்களை டெலிவரி செய்துவருகின்றனர். நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இத்தகையை டெலிவரி தொழிலாளர்கள் புரட்சிகர சங்கமாய் இணைந்து தனது உரிமைக்காகப் போராடுவதே அவர்களின் உடனடிக் கடமையாக இருக்க முடியும்.

காளி

பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

0
ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலீசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இச்செய்தியை அமெரிக்காவில் உள்ள வயர்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோர் 2018-ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் சாதி வன்முறையைத் தூண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பீமா கோரேகான் வழக்கில் வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் உட்பட 16 பேரை கைது செய்தது புனே போலீசு.
கடந்த பிப்ரவரி 2021-ல், அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் என்ற நிறுவனம், வில்சனின் மடிக்கணினிக்குள் ஊடுருவி malware-ஐ (ஒரு கணினி அமைப்பை சீர்குலைக்கவும், சேதப்படுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறவும் வடிவமைக்கப்பட்ட மென்பொருள்) பயன்படுத்தியதாகவும், அதில் குறைந்தது 10 குற்றஞ்சாட்டக்கூடிய கடிதங்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறியது.
படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு மாவோயிஸ்ட் போராளிக்கு எழுதப்பட்ட கடிதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சொல்லி ஓர் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவை இதில் அடங்கும்.
ஹேக்கிங்கை நடத்திய குழுக்களில் ஒன்று, வில்சனின் சாதனத்தில் ஆவணங்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. இப்போது, ​பீமா கோரேகான் வழக்கில் நெருக்கமாக தொடர்புடைய புனே போலீசு அதிகாரி ஒருவர் ஹேக்கிங்குடன் தொடர்புடையவர் என்று வயர்டு தெரிவித்துள்ளது.
முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு, கவிஞர் வரவர ராவ் மற்றும் ஆர்வலர் ரோனா வில்சன்.
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோரின் மின்னஞ்சல் கணக்குகளில் மீட்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த மீட்பு மின்னஞ்சலில் புனே போலீசுத்துறை அதிகாரியின் பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மின்னஞ்சல் முகவரி, குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றினால், அவர்களின் கணக்குகளை மீண்டும் அணுக போலீசுத்துறை அதிகாரியை அனுமதித்தது என்று சென்டினல்ஒன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மின்னஞ்சல் சேவை வழங்குநரின் பாதுகாப்பு ஆய்வாளர், ஏப்ரல் 2018-ல் வில்சனின் கணக்கில் phishing (கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த தனிநபர்களைத் தூண்டுவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பும் ஒரு மோசடி நடைமுறை) மின்னஞ்சலைப் பெற்றபோது, புனே போலீசுத்துறையுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் சேர்க்கப்பட்டது என்று கூறினார்.
வில்சன் கைது செய்யப்படுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு phishing மின்னஞ்சல்களை அனுப்ப ஆர்வலரின் மின்னஞ்சல் கணக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், “இவர்கள் பயங்கரவாதிகளைப் பின்தொடர்வதில்லை. மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பின்தொடர்கின்றனர். அது சரியல்ல” என்று ஆய்வாளர் கூறினார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் குடிமக்கள் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான ஜான் ஸ்காட்-ரெயில்டன், புனே போலீசுத்துறை பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான பின்னொட்டான pune@ic.in என முடிவடையும் மின்னஞ்சல் ஐடியுடன் மீட்பு தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளர், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து, டிசம்பரில் வில்சனின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அதே போலீசுத்துறை அதிகாரியின் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் முகவரியுடன் மீட்பு ஃபோன் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்-ரயில்டன் கூறியதாக வயர்டு செய்தி வெளியிட்டுள்ளது.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள். போலீசு அவர்களை குற்றவாளியாக சித்தரிப்பதற்கு மின்னனு சாதனங்களை ஹேக் செய்து தரவுகளை பதிவேற்றம் செய்துள்ளது. இது ஒரு சைபர் கிரைம். இந்த சைபர் கிரைமின் குற்றவாளிகள் புனே போலீசுத்துறை அதிகாரிகள்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி
போலியாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் பாபு மற்றும் வில்சன் உட்பட 12 பேர் தற்போது சிறையில் உள்ளனர். ராவ் அடுத்த மாதம் முடிவடையும் தற்காலிக மருத்துவ ஜாமீனில் வெளியே இருக்கிறார், அதே நேரத்தில் வழக்கறிஞர்- ஆர்வலர் சுதா பரத்வாஜ் டிசம்பரில் வழக்கமான ஜாமீன் பெற்றார். பழங்குடியினர் உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, மும்பையில் விசாரணைக்காக காத்திருந்தபோது ஜூலை 5 அன்று இறந்தார்.
முற்போக்காளர்களையும், சமூக ஆர்வலர்களையும், புரட்சியாளர்களையும் குற்றவாளிகளாக சித்தரித்து, கைது-சிறை-சித்திரவதை செய்வதற்காகவே இருக்கிறது போலீசுத்துறை என்பது இந்த சம்பவத்தில் அம்பலமாகிறது. தான் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்து சித்தரவை செய்யமுடியும் என்ற கட்டற்ற அதிகாரத்தை இந்த கிருமினல் போலீசுத்துறை பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.

சந்துரு

ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா?

டந்த மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 2009 ஆம் ஆண்டு, சிங்கள இராணுவத்தால் புலிகளோடு சேர்த்து, ஈழத் தமிழ் மக்களும் கொடிய இனப்படுகொலைக்கு உள்ளான நாள். மறக்க முடியாத “மே” அது. 13 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு மே மாதமும் இலங்கை உழைக்கும் மக்களின் வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது. முந்தைய மே, மாளாத துயரத்தின் வடு. இன்றைய மே துளிர்விடும் புதிய நம்பிக்கையாக இருக்கிறது.
எந்த மஹிந்த இராஜபக்சே, சிங்களப் பேரினவாதத்துக்கு தலைமை தாங்கி இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இறுதிப் போரில் கொன்றொழித்தானோ, அதே இராஜபக்சேவை இன்று ஆட்சியைத் துறந்தோடிவிட்டு, மறைந்து வாழும்படி செய்துவிட்டார்கள் சிங்கள உழைக்கும் மக்கள்.
இனவெறி-மதவெறியை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை படைக்க விரும்பிய அனைத்து இலங்கை புரட்சிகர-ஜனநாயக சக்திகளுக்கும் பெருமகிழ்ச்சியை வழங்கியிருக்கிறது இனம் கடந்த உழைக்கும் மக்களின் பேரெழுச்சி.
“இலங்கையில் இன முரண்பாடுதான் பிரதான முரண்பாடு. சிங்களவர்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளே கிடையாது. அனைவரும் ஈழத்தமிழருக்கு பகையாளிகள். சிங்களவர்கள் எக்காலத்திலும் தமிழர்களோடு இணையவே மாட்டார்கள். தமிழர்களும் எக்காலத்திலும் சிங்களவர்களோடு இணைய முடியாது” – என்று கூறிவந்த தமிழினவாதிகளின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மூவின மக்களின் வர்க்க ஒற்றுமை.
இந்தச் சூழலில், தனித் தமிழீழக் கோரிக்கை இலங்கை மற்றும் இங்குள்ள தமிழினவாதிகளால் முன்னைக் காட்டிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (கவனமாக ‘விவாதம்’ என்ற வரம்போடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அதற்கான காரணத்தை நாம் கடைசியில் விளக்குவோம்.)
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
ஆனால் இப்பொழுதுகூட வர்க்க ஒற்றுமையை மறுக்கின்ற, வெறுக்கின்ற அவர்களது இழிந்த இனவாதக் கண்ணோட்டத்தை விட்டொழித்தபாடில்லை. இச்சூழலில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கிற அநீதியான இனப்படுகொலைக்கு நீதி வழங்கவும் அவர்களது தன்னுரிமைக் கோரிக்கையை வென்றெடுக்கவும் எந்த பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நாமும் பேச வேண்டியிருக்கிறது.
***
1980கள் முதல் புதிய ஜனநாயகம் இதழும் எமது தோழமை அமைப்புகளும் ஏற்கெனவே இதுகுறித்து தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அவை தமிழினவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன; எம்மையும் எமது தோழமை அமைப்புகளையும் தமிழீழத்தின் எதிரிகளாகவும் அவர்கள் சித்தரித்தார்கள். ஆனால் நமது நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை இலங்கையின் வர்க்கப் போராட்டம் பறைசாற்றிவிட்டது.
2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழில், “ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்” என்று தலைப்பிட்ட கட்டுரையில், ஈழம் தொடர்பான பு.ஜ. மற்றும் பு.ஜ. தோழமை அமைப்புகளின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்கியிருப்போம். பொருத்தம் கருதி, அக்கட்டுரையின் ஒருபகுதியை இங்கு நீண்ட மேற்கோளாகத் தருகிறோம் :
“ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். “அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.
தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.
ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம்.
பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.
தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து, பேரணியாகச் செல்லும் சிங்கள் மக்கள். இடம், காலிமுகத்திடல் மைதானம்.
அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.
இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். “சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.
இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.”
***
ஆம், “சாத்தியமே இல்லாதது அல்ல” என்று அன்று நாம் கூறினோம். இன்று சாத்தியப்பட்டிருப்பதை கண்ணெதிரே பார்க்கிறோம்.
“கோத்தபய பதவி விலக வேண்டும்; போராட்டக்காரர்களைத் தாக்கிய மஹிந்த தண்டிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில், சிங்கள-தமிழ் மக்களின் பொது எதிரியான இராஜபக்சே கும்பலுக்கு எதிரான போராட்டத்தில், தமிழினப் படுகொலைக் குற்றத்திற்கும் சேர்த்து அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்; தமிழ் மக்களின் தன்னுரிமை கோரிக்கையும் வலுவாக இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு உகந்த தருணம் இது. நிச்சயம் அவை சிங்கள உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெறும்.
ஆனால் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய தென்னிலங்கையில்தான் போராட்டங்கள் வீச்சாக நடந்துவருகின்றன. தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளில், தொடக்கம் முதலே பெருமளவில் மக்கள் போராட்டங்களைக் காண முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருவதால், அதற்கு பழகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். மேலும், தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பகுதிகளில்தான் பெருமளவு இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்கு பிறகு அம்மக்கள் மத்தியில், அரசை எதிர்த்த போராட்டங்களில் பங்குபெற ஒருவித அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளை முதன்மையான காரணங்களாக நம்மால் கருதமுடியாது.
தமிழ் மக்களிடையே இயங்குகிற செல்வாக்கு பெற்ற அரசியல் அமைப்புகள் – சிறுகுழுக்களாக உள்ள புரட்சிகர-ஜனநாயக அமைப்புகள் விதிவிலக்காக இருக்கலாம் – எவையும் அம்மக்களை போராடுவதற்கு திரட்டவில்லை; அவ்வாறு செய்வதற்கு விரும்பவும் இல்லை என்பதுதான் முதன்மைக் காரணம். குறிப்பாக தமிழின அமைப்புகளையே சொல்கிறோம்.
இப்போது மட்டுமல்ல, இலங்கை வரலாற்றிலேயே, இத்தமிழினவாத அமைப்புகள் ஒருநாளும் இருதேசிய இனத்து உழைக்கும் மக்களின் பொதுக்கோரிக்கைகளுக்காக, தமிழர்களைத் திரட்டிப் போராடியதில்லை. இனப் பிரச்சினையை மட்டுமே, அதுவும் தங்களது குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திலும் பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் மட்டுமே முன்வைத்து களமாடியுள்ளார்கள்.
இன, மத முரண்பாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாக மக்கள் போராடிவரும் இச்சூழலிலும், தமிழினவாதிகள் பேசுவதை அறிந்தால் நம்மால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
2009 ஆம் ஆண்டு வெளியான புதிய ஜனநாயகம் வெளியீடு.
திருக்குமரன் என்ற தமிழினவாதி தமிழ் யூடியூப் சானலுக்கு தான் அளித்த பேட்டியொன்றில், “சிங்களர்கள் மூன்றுவேளை சோற்றுக்காக போராடுகிறார்கள். அவர்களால் மூன்று வேளை சோறில்லாமலும் ஏசி இல்லாமலும் இருக்க முடியாது. தமிழர்களுக்காக என்றாவது, சிங்களவர்கள் போராடியிருக்கிறார்களா, எனவே தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது” என்று பேசுகிறார். தோழர்களே, இது ஈனப் புத்திகொண்ட ஒருவரது பேச்சுமட்டுமல்ல. பல தமிழ்த்தேசியவாதிகள் இதே அலைவரிசையில் பயணிப்பதை நாம் எடுத்துக் காட்ட முடியும்.
“(வடக்கில்) நாங்கள் உணவுக்காக போராடவில்லை, நீதிக்காக போராடுகிறோம்” என்று தமிழ்த்தேசியவாதிகளால் நடத்தப்படும் “தமிழ் கார்டியன்” (Tamil Guardian) என்ற இணையப் பத்திரிகை எழுதிருந்தது.
அதேபோல, “தமிழ்நெட்” (Tamilnet) என்ற மற்றொரு இணையப் பத்திரிகையின் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் : “இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழ்தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது” … “இன அழிப்பு ஒற்றையாட்சி அரசின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, இன அழிப்புத் தேசத்தோடு ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர் அணிதிரள்வதென்பது, இன அழிப்பு மறுப்புக்கு ஒப்பாகிவிடும்”
மேற்கண்ட இணையதளங்கள் மட்டுமல்ல, “கூர்மை” (Koormai), “ஈழப்பார்வை” (Eeelamview) என தமிழினவாதிகள் நடத்துகின்ற பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவை சுருதியும் இலயமும் மாறாமால் ஒரேமாதிரி வாசிக்கின்றன.
“1990களிலிருந்தே இலங்கையில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள்தான். தமிழர்களாகிய நாம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதனை அனுபவித்து வருகிறோம். சிங்கள மக்கள் இப்பொழுதுதான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இனவாத நஞ்சைக் கக்குகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன்.
இவர்கள் சொல்லும் “சோத்துப் பிரச்சினை” சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துப் பாட்டாளிகளுக்கும்தான். பொருளாதர நெருக்கடி வெடித்ததிலிருந்து, இதுவரை 73 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள் (ஜூன் 01 வரையான கணக்கீடு). ஆனால் “சோத்துப் பிரச்சினை” தமிழர்களுக்கு பெரிதல்லவாம், இதற்காக எக்காரணம் கொண்டும் சிங்களவர்களோடு சேர்ந்துவிடாதீர்கள் என்று உயிர்போக கத்துகிறார்கள் இனவாதிகள்.
இந்த இனவாதக் கூச்சலுக்கு ஒரு “வர்க்க உள்ளடக்கம்” உள்ளது தோழர்களே. அதுதான் மேட்டுக்குடி வர்க்கத் திமிர். “தமிழன்” என்ற இனத்தோல் போர்த்துக் கொண்டு, தமிழின பாட்டாளியிடம் இனவாத ஊளையிடுகின்றன இந்த மேட்டுக்குடி நரிகள்.
இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழினவாதிகள் நேரடியாக பேசுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு தமிழினவாதிகளோ அதையே மென்மையாகவும் பகிரங்கமாக வெளியில் தெரியாத வண்ணமும் பேசுகிறார்கள். இவர்களில் யாரும், சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளான இராஜபக்சேக்களுக்கு எதிராகவோ, பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டியோ போராடிவரும் பெரும்பான்மை சிங்களவர்களோடு தமிழர்களும் இணைந்து போராடவேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இப்பொழுதும் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து போராடமுடியாது என்று பேசிவருகிறார்கள்.
சரி, தமிழர்களுக்கு “சோத்துப் பிரச்சினை” பெரிதல்ல, தனி ஈழப் பிரச்சினையைத்தான் பேசவேண்டும் என்று கதைப்பவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அதற்காகவேணும் தமிழ்மக்களைத் திரட்டி போராடியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து போராட விடமால், இனவாத வேலியிட்டு தடுப்பதன் மூலம் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அரசுக் கட்டமைப்பையும் பாதுகாப்பதே இந்த கும்பல்கள்தான்.
தமிழன் பிணங்களை வைத்து நாடாளுமன்ற பதவி சுகம் காணவும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதி வசூலித்துப் பொறுக்கித் திண்பதற்காகவும் “இனவாதம்” அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு உலைவைக்கும் “வர்க்க ஒற்றுமை” அதனால்தான் அவர்களுக்கு கசக்கிறது.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
சிங்களப் பேரினவெறியோ, குறுந்தேசிய தமிழினவாதமோ, இனி நீண்டகாலம் இனவாத அரசியலுக்கு உழைக்கும் மக்களை பலியாக்க முடியாது. வர்க்கப் போராட்டச் சூறாவளியில், இந்த ‘அற்பப் பதர்கள்’ தாக்குப்பிடிக்க முடியாது.
“சிங்களர்களை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது” என்று வியக்கிறார்கள் தமிழ் மக்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சிங்களர்களும் நினைவேந்துகிறார்கள். தற்போது சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களிடையே ஐக்கியமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியும் இன உரிமைப் போர்வையில், தமிழினவாதிகள் முன்வைக்கும் “பிளவு அரசியல்” எடுபடாது.
இனவாத அரசியல் தலைமைகளிடம் தமிழ் மக்கள் சரணடைந்து கிடக்கப் போவதில்லை. தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்காக, வடக்குப் பகுதியின் மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கிடைக்கும் செய்திகள் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சிங்கள-தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் இலங்கையை விடுவிப்பதோடு, தமிழ் மக்களுக்கும் தன்னுரிமையைப் பெற்றுத்தரும்.

செவ்வந்தி

“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !

0
க்னிபாத்” கடந்த 4 நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வார்த்தைதான் இது. இதுகுறித்து செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தங்களில் மூலம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது முதல் பீகார் மாநிலத்தில் பல ஆயிரம் இளைஞர்கள் போராடி வருகிறனர். மேலும் பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம் அரியான, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தெலுங்கான போன்ற மாநிலங்களுங்களும் பரவின. தற்போது நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் ஓட்டு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கம்போல ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு ஆதரவாக சங் பரிவார கும்பல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தினமல‘ம்’ர் நாளிதழ், நடுநிலை சங்கி சமஸ் ஆகியோர் தனது அடிமை சேவகத்தை செய்து வருகின்றனர்.
நிரந்தர வேலை பறிபோகிறது, ஓய்வூதியம் கிடையாது, படித்த இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை இது உருவாக்கும் என்பதை தாண்டி இந்த ஆளும் வர்க்க ஊடகம் இந்த திட்டத்தின் உள்நோக்கத்தை கூற மறுக்கிறது. அக்னிபாத் என்ற திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்பதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது கொள்கையை நிலைநாட்டும் விதமாக அறிவித்துள்ளது.
படிக்க :
♦ நாகாலாந்து படுகொலை : இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள்
♦ பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !
கொரோனா காலகட்டங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புத் துறைக்கு ஒன்றிய அரசு ஆள்சேர்ப்பு செய்யவில்லை. இந்த வேலையை நம்பி இருந்த சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 23 வயதை கடந்து ராணுவத்தில் சேருவதற்கான தகுதியை இழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தின் ஆட்சேர்ப்புக்கான வயது உச்ச வரம்பை 23-ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிரந்தரமாக ராணுவ வீரராக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இளைஞர்களுக்கு பேரிடியாக வந்து இறங்கி இருக்கிறது அக்னிபாத்.
ராணுவ வேலையை நம்பி இருந்த இளைஞர்களின் வாழ்க்கையில் இந்த ஒன்றிய அரசு மணல் அள்ளிபோட்டுவிட்டது என்பதால் தற்போது இளைஞர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தை தனியார்மயம்படுத்துவது, செலவினங்களை குறைப்பது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாறாக இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டமாக இந்த அக்னிபாத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. இந்த திட்டத்தின் மூலம் காவிகளின் செல்வாக்கை ராணுவத்தில் அதிகப்படுத்துவது மற்றும் முழுக்க முழுக்க ராணுவத்துறையை கார்ப்பரேட்களின் நலனுக்காக திறந்து விடுவது ஆகியவைதான் இதன் நோக்கம்.
“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார்மயமாக்கி, மிக வேகமாக கார்ப்பரேட் சேவையை செய்துவரும் இந்த பாஜக அரசு ராணுவத்தையும் தனியார்மயமாக்கும் வேலையில் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது.
பாதுகாப்பு துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவீத அந்நிய முதலீடு போன்றவற்றின் மூலம் ராணுவத்தை தனியார்மயமாக்கும் வேலைகளை கடந்த 2014-ம் ஆண்டு முதல் பா.ஜ.க கும்பல் செய்து கொண்டுதான் வருகிறது. அதனுடைய அடுத்தகட்ட நகர்வாகதான் இந்த அக்னிபாத் என்ற திட்டத்தை தற்போது அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் படி, 4 ஆண்டுகளில் 6 மாதம் பயிற்சியுடன் கூடிய வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றும் 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் 40 ஆயிரமாக மாத ஊதியம் அதிகரித்து இருக்கும் என்று ராணுவத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பளத்தில் கிட்டத்தட்ட 25% வரை மாதம் தோறும் பிடித்தம் செய்து விட்டு 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் எந்தவிதமான வரியும் வசூலிக்காமல் 11 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறிவருகிறது ஆளும் பா.ஜ.க அரசு.
இந்த பணத்தை வைத்து சுய தொழில் செய்து கொள்ளலாம் என்றும் வாழ்க்கைக்கு பயன்படுமாறு வேறு விதமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் கூறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைவான அளவில் மட்டுமே ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரந்தரமாக ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு முப்படைகளிலும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் மட்டுமே ஆட்களை தேர்வு செய்வார்கள் என்பது அவர்களுடைய கடந்த கால செயல்களின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் மூலம் குத்தகைக்கு, ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் இந்த ஒன்றிய அரசு இனிவரும் காலங்களில் முப்படைகளுக்கும் ஒப்பந்த முறையில் ஆட்களை தேர்வு செய்வதை தனியாருக்கு கொடுக்கும். ரயில்வே, வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது தனியார் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணீயாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அரசின் மூலம் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தனர். அதன்பிறகுதான் இன்று தனியார் துறை மூலம் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். அதுபோலதான் இன்று அரசின் மூலம் குத்தகைக்கு எடுக்கப்படும் இந்த அக்னிவீரர்கள் நாளை உள்நாட்டு தரகு முதலாளிகளின் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களகவோ அல்லது வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பபெனிகளின் ஒப்பந்த ஊழியர்களாகவோ இருப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.
ராணுவ தளவாட தயாரிப்பு, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு ஆகியற்றை வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததன் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன அந்த தனியார் நிறுவனங்கள். தற்போது ராணுவ வீரர்களையும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு எடுத்தால் மேலும் தனது இலாபத்தை செலுமைபடுத்தும் என்பது உறுதியாகிறது. இந்தியாவில் தேசபக்தியை குத்தகைக்கு எடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், ராணுவத்தை காரணம் காட்டியே ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த ராணுவத்தையே தனியார்மயமாக்குவதன் மூலம் அவர்களின் தேச பக்தி நாடகம் மேலும் அம்பலப்பட்டு நிற்கிறது.
அக்னிபாத் – ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் அடியாட்படையாக மாற்றும் திட்டம்
ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு கிளை அமைப்புகளாக பிரிந்து கொண்டு தன்னை சமூக நல அமைப்புகள் காட்டிக்கொண்டு உழைக்கும் மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பல்வேறு சூழ்ச்சிகளை செய்துகொண்டு பிரித்து வருகிறது. மேலும் சாகா என்ற பெயரில் தொண்டர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சிகளை இன்று வரையும் வழங்கி வருகிறது.
இதேபோல் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களின் அடியாட்களும் நீதித்துறை, உளவுத்துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, விளையாட்டுத்துறை மற்றும் அரசின் பல நிர்வாக அமைப்புகளில் இன்று நுழைந்துள்ளனர். மேலும் ஊடகத்துறையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக அவர்கள் மாறிவிட்டனர். மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் போன்றவர்கள் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் நுழைந்து தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
படிக்க :
♦ ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் மோடி அரசு !
♦ தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !
அடிமட்ட அளவில் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தற்போது வரை இல்லை என்பதால் அதை நிறைவு செய்யும் விதமாகவும் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுல் முழுமையாக கொண்டுவரும் நோக்கத்தில்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் 4 ஆண்டுகளுக்கு சாக தொண்டர்களை ராணுவத்தில் களம் இறக்கிவிட்டால் அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும். மேலும் இந்துத்து சித்தாந்தம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்காக இந்துத்துவவாதிகள் மிக மூர்க்கமான வேலைகளில் ஈடுபடுவார்கள். அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டிய சூழல் வரும். அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களை ஒடுக்கவும் அவர்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும் இந்த அக்னிபாத் வீரர்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மிக சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.
வினோதன்