Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 314

உண்மையான … ஆமாம் உண்மையான மனிதனாகி விட்டான் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 07

கைவர்கள் முழு வேகத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் எதிரெதிராகப் பாய்ந்து வந்தார்கள்.

“லா-5″-ம் “போக்கே-வூல்ப்-190”-ம் விரைவு மிக்க விமானங்கள். ஒலியின் வேகத்தைவிட விரைவாக ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள் பகைவர்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவும் புகழ்பெற்ற “ரிஹ்த்கோ பென்” டிவிஷனைச் சேர்ந்த எவனோ ஒரு தேர்ந்த ஜெர்மன் விமானியும் தலைமோதல் தாக்கு சில கணங்களே நீடிக்கும். அந்த நேரத்திற்குள் மிகத் துடியான ஆள் கூடச் சிகரெட் பொருத்தி விட முடியாது. ஆனால் இந்தச் சில கணங்களில் விமானிக்குத் தேவைப்படும் நரம்பு இறுக்கமும் உள ஆற்றல்கள் எல்லாவற்றின் சோதனையும் தரைப் போர் வீரனுக்கு ஒரு நாள் முழுவதும் சண்டையிடப் போதுமானவை.

முழு வேகத்துடன் ஒன்றன் மீது ஒன்று நேரே பாயும் இரு விரைவுமிக்க விமானங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பகை விமானம் கண்ணெதிரே பெரிதாக்கிக் கொண்டு போகிறது. இதோ அதன் எல்லாப் பகுதிகளுக்கும் சட்டென்று பார்வையில் படுகின்றன. அதன் இறக்கைகளும் உந்துவிசிறியின் பளிச்சிடும் வட்டமும், பீரங்கிகளின் கரும் புள்ளிகளும் புலனாகின்றன. இன்னும் ஒரு கணத்தில் விமானங்கள் மோதிக் கொண்டு, சிறு சிறு சிம்புகளாகச் சிதறிவிடும். விமானத்தையோ மனிதனையோ இந்தச் சிம்புகளைக் கொண்டு ஊகித்தறியவே முடியாது, அவ்வளவு சிறியவையாக இருக்கும் அவை. அந்த நேரத்தில் விமானியின் சித்த அறிவு மட்டுமே அல்ல, அவனது உள ஆற்றல் யாவுமே சோதனைக்கு உள்ளாகின்றன. மனோதிடம் குறைந்தவன், ராட்சத நரம்பு இறுக்கத்தை தாங்க முடியாதவன், வெற்றிக்காக உயிர் வழங்கச் சக்தி அற்றவன், இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு விசைப் பிடியை தன் பக்கம் இழுப்பான் – தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் மரணச் சூறாவளியின் தாக்கிலிருந்து தப்பும் நோக்கத்துடன். அடுத்த கணமே அவனுடைய விமானம் கிழிந்த வயிறு அல்லது வெட்டுண்ட இறக்கையுடன் கீழே விழும். அவன் தப்பிப் பிழைக்க முடியாது. அனுபவமுள்ள விமானிகள் இதை நன்கு அறிவார்கள். அவர்களில் மிக மிக வீரம் உடையவர்களே தலைமோதல் தாக்கு நடத்தத் தீர்மானிப்பார்கள்.

கிழக்குப் போர்முனையில் ஏற்பட்ட பெருத்த இழப்புகளின் விளைவாக ஜெர்மன் விமானப்படையில் உண்டான பள்ளத்தை இட்டு நிரப்புவதற்காகக் குறுகிய திட்டப்படி விமானப் பறப்புக்கு விரைவில் பயிற்றுவிக்கப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்பட்ட ’கோயெரிங்க் அறைகூவல் வீரர்கள்’ எனப் பெயர் கொண்ட சிறுவர்களில் ஒருவனல்ல தனக்கெதிரே வருபவன் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். “ரிஹ்த்கோபென்” டிவிஷனைச் சேர்ந்த தேர்ந்த விமானி. எத்தனையோ விமானப் போர்களில் அடைந்த வெற்றிகள் அவனது விமானத்தின் மேல் விமான வரையுருக்களின் வடிவில் பொறிக்கப்பட்டிருக்கும். இவன் விலக மாட்டான். மோதலிலிருந்து நழுவ மாட்டான்.

ஒரேயடியாக இறுக்கம் அடைந்திருந்த அலெக்ஸேய்க்கு, தனது விமானத்தினது உந்துவிசிறியின் பளிச்சிடும் அரை வட்டத்திற்கு அப்பால் பகை விமானி அறையின் ஒளிபுகும் முன் சுவரும் அதன் ஊடாகக் குத்திட்டு நோக்கும் இரு மனித விழிகளும் தென்படுவது போல் இருந்தது. அந்த விழிகளில் உக்கிரமான வெறுப்புக் கனல் வீசியது. இது நரம்பு இறுக்கத்தால் உண்டான மாயத் தோற்றமே. எனினும் அலெக்ஸேய் அந்த விழிகளைத் தெளிவாகக் கண்டான். தனது எல்லாத் தசைகளையும் மொத்தமான கட்டியாகும் படி இறுக்கிக் கொண்டு, “அவ்வளவு தான்! எல்லாம் முடிந்தது!” என்று எண்ணினான். நேரே நோக்கியவாறு அதிகரிக்கும் விரைவுடன் எதிரே சென்றான். இல்லை, ஜெர்மானியனும் விலகவில்லை. வாழ்வு தீர்ந்தது!

கணச் சாவுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய். திடீரென எங்கோ – கைக்கெட்டும் தொலைவில் என்று அலெக்ஸேய்க்குத் தோன்றியது – ஜெர்மானியன் தாக்கு பிடிக்க மாட்டாமல் உயரே கிளம்பினான். அவனது விமானத்தின் நீலவயிறு வெயில் பட்டு மின் வெட்டுப் போல அலெக்ஸேயின் எதிரே பளிச்சிட்டது. அக்கணமே அலெக்ஸேய் எல்லாச் சுடுவிசைகளையும் அழுத்தி மூன்று நெருப்புத் தாரைகளால் அதைத் துளைத்துக் கிழித்துவிட்டான். மறு கணத்தில் அவன் தன் விமானத்தைக் குப்புறச் செலுத்திக் கரணம் அடித்தான். தரை அவன் தலைக்கு மேலே பாய்ந்து செல்கையில் அதன் பின்னணியில் மெதுவாக, தன் வசமின்றிப் பறந்த பகைவிமானத்தைக் கண்ணுற்றான். வெற்றி வெறிக்களிப்பு அவனுக்குள் ஊற்றெடுத்துப் பீறிட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு “ஓல்கா!” என்று கத்தினான். வானில் திடீர் வட்டங்கள் இட்டு, களைப்பூண்டுகள் மண்டிச் சிவந்த தரை மீது ஜெர்மன் விமானம் மோதி வெடித்து அதிலிருந்து கரும் புகைத்தூண் எழும்பும் வரை அதைத் தொடர்ந்து சென்றான்.

அப்புறந்தான் அலெக்ஸேயின் நரம்பு இறுக்கம் தளர்ந்தது. கல்லாகிவிட்ட தசைகள் தொய்ந்தன. அவனுக்குப் பெருங்களைப்பு உண்டாயிற்று. உடனேயே அவன் பார்வை பெட்ரோல் மானியின் எண் வட்டத்தின் மேல் பட்டது. முள் சூனியத்தின் வெகு அருகே நடுங்கியது.

பெட்ரோல் மூன்று நிமிடங்களுக்கே, அதிகமாய்ப் போனால் நான்கு நிமிடங்களுக்கே போதுமாயிருந்தது. நிலையம் சேர்வதற்குக் குறைந்தது பத்து நிமிடங்களாவது பறந்தாக வேண்டும். அதுவும் உயரே கிளம்புவதில் இன்னும் நேரம் செலவிட்டால்…. அடிபட்ட பகை விமானத்தைத் தரைவரை தொடர்ந்ததுதான் தப்பு!…

“சின்னப்பயல், முட்டாள்!” என்று தன்னையே திட்டிக் கொண்டான் அலெக்ஸேய்.

துணிவும் பதற்றமின்மையும் உள்ளவர்களின் மூளை ஆபத்துக் காலத்தில் வேலை செய்வது போலவே அலெக்ஸேயின் மூளையும் கூர்மையாக, தெளிவாகச் சிந்தித்தது. முதன்மையாக முடிந்தவரை அதிக உயரத்திற்குப் போய்விட வேண்டும். ஆனால் வட்டங்கள் இடாமல், மேலே மேலே ஏறுகையிலே விமான நிலையத்தை நெருங்க வேண்டும். நல்லது.

விமானத்தைத் தேவையான செல்திசையில் திருப்பி, தரை விலகிப் போவதையும் படிப்படியாகத் தொடுவானத்தில் மூடுபனி சூல்வதையும் கவனித்தவாறு அவன் தனது கணக்கீட்டை இன்னும் நிதானமாகத் தொடர்ந்தான். எரிபொருள் பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை. பெட்ரோல்மானி சிறிது பிசகுவதாகவே வைத்துக் கொண்டாலும் பெட்ரோல் எப்படியும் போதாது. வழியில் இறங்குவதா? எங்கே? குறுகிய வழி முழுவதையும் அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். தழைமரக் காடுகள், சதுப்பு நிலச் சோலைகள், மேடும் பள்ளமுமான வயல்கள். நீண்டகால அரணைப்புக்கள் இருந்த வட்டாராத்தில் உள்ள இந்த வயல்கள் குறுக்கும் நெருக்கும் எங்கும் தோண்டப்பட்டு, குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட குழிகள் நிறைந்து முட்கம்பிகள் பின்னிக்கிடந்தன.

இல்லை, இறங்கினால் சாவு நிச்சயம்.

பாராஷூட்டின் உதவியால் குதிப்பதா? அது செய்யலாம் இப்போதே கூட! வளைமுகட்டைத் திறக்க வேண்டும், ஒரு வளையம் வர வேண்டும், இயக்கு விசைப் பிடியை முன்னே தள்ள வேண்டும், தாவிக் குதிக்க வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் விமானம்! லாவகமும் விசையும் உள்ள இந்த அற்புதமான கரும் பறவை! இதன் போர்ப் பண்புகள் இன்று மூன்று முறை அவன் உயிரைக் காப்பாற்றின. விமானம் நேர்த்தியான, வலிய, பெருந்தன்மையும் விசுவாசமும் வாய்ந்த உயிர்ப்பிராணியாக அலெக்ஸேய்க்கு அந்தக் கணத்தில் தோன்றியது. அதை விட்டுவிடுவது துரோகச் செயலாகப்பட்டது. தவிர, முதல் சண்டையிலேயே விமானத்தை கோட்டை விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது விமானத்தை எதிர்பார்த்துச் சேமிப்பில் ஈயோட்டிக் கொண்டிருப்பது, போர்முனையில் நமது பெருவெற்றி உதயமாகியிருக்கும் இந்த மும்முரமான நேரத்தில் செயலற்றுச் சோம்பியிருப்பது, இப்பேர்பட்ட நாட்களில் வெட்டியாக வளையவருவது என்பதை நினைக்கவே அவன் கூசினான்.

“என்னவானாலும் சரி, இப்படி மட்டும் செய்யக் கூடாது” என்று யாரோ முன் வைத்த யோசனையை அருவருப்புடன் நிராகரிப்பவன் போல உரக்கச் சொன்னான் அலெக்ஸேய்.

எஞ்சின் நின்றுவிடும் வரை பறப்பது! அப்புறம்? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

அவன் மேலே பறந்தான். மூவாயிரம், பிறகு நாலாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து சுற்று முற்றும் கண்ணோட்டி எங்கேயானாலும் சிறு சம தரையாவது தென்படுகிறதா என்று பார்த்தான். தொடுவானத்தில் காடு மங்கிய நீலமாகத் தெரியலாயிற்று. அதன் மறுபுறம் இருந்தது விமான நிலையம். அதனை அடைய இன்னும் பதினைந்து கிலோ மீட்டர் பறக்க வேண்டும். பெட்ரோல்மானியின் முள்ளோ, நடுங்கக் காணோம். எல்லைக் குறி திருகாணி மீது அசைவின்றிக் கிடந்தது அது. ஆனாலும் எஞ்சின் இயங்குகின்றது. எதனால் இயங்குகின்றது? இன்னும், உயரே அப்படித் தான்!

உடல் நலமுள்ளவன் இதயத் துடிப்பைக் கவனிப்பதில்லை. அதே போல விமானியின் காது சரியாக இயங்கும் எஞ்சினின் ஒரு சீரான முழக்கத்தை கவனிப்பதில்லை. திடீரென அந்த முழக்கத்தின் தொனி மாறியது. அலெக்ஸேய் இதைச் சட்டென உணர்ந்து கொண்டான். காடு துலக்கமாகத் தென்பட்டது. அதுவரை ஒரு ஏழு கிலோ மீட்டர் பறக்க வேண்டியிருக்கும் இது அதிகமில்லை. ஆனால் எஞ்சினின் இயக்கப்பாங்கு மிக் கெடுதலாக மாறிவிட்டது. எஞ்சின் மட்டும் அல்ல, தனது மூச்சே நின்றுவிடுவது போன்று விமானி இந்த மாற்றத்தை உணர்ந்தான். திடீரென “ச்சிஹ், ச்சிஹ். ச்சிஹ்” என்ற பயங்கர ஓசை. சுரீரென்ற வலி போல அவன் உடல் முழுவதிலும் பரவியது அது.

இல்லை, மோசமில்லை. மறுபடி ஒரு சீராக இயங்குகின்றது. இயங்குகின்றது, இயங்குகின்றது, வெற்றி! இயங்குகின்றது!

படிக்க :
மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

காடோ, இதோ வந்துவிட்டது. பிர்ச் மர முடிகளின் மேல் சுருள் சுருளான பசிய நுரை வெயிலில் அசைந்தாடுவது தெரிகிறது. காடு, இனி விமான நிலையம் தவிர வேறு எங்குமே இறங்குவது முடியாது. மற்ற வழிகள் துணிக்கப்பட்டு விட்டன. முன்னே, முன்னே !

“ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்!”

மறுபடி ஒரு சீரான இயக்கம். எவ்வளவு நேரத்துக்கு? கீழே காடு. மணல் மீது செல்கிறது பாதை, ரெஜிமென்ட் கமாண்டரின் தலை வகிடு போன்று நேராகவும் சமமாகவும். இப்போது விமான நிலையத்துக்கு ஒரு மூன்று கிலோ மீட்டர் தான் இருக்கிறது. கொத்தள சுவர் போன்ற காட்டோரம் அலெக்ஸேய்க்குத் தென்படத் தொடங்கிவிட்டது. அதற்கு அப்பால் இருக்கிறது விமான நிலையம்.

ச்சிஹ், ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்! திடீரென ஒரே நிசப்தம். விமானப் புறக்கருவிகள் காற்றில் சீழ்கையடிக்கும் ஓசை கூடக் கேட்கும் படி அவ்வளவு அமைதி. இதுதான் முடிவா? தன் உடல் முழுவதும் சில்லிடுவதை அலெக்ஸேய் உணர்ந்தான். குதித்துவிடலாமா? வேண்டாம், இன்னும் கொஞ்சம் போகட்டும்…. விமானம் சாய்வாக கீழிறங்கும் படி வைத்து, காற்று மலை மேலிருந்து வழுகலானான். இந்த வழுகலைக் கூடியவரை அதிகச் சரிவாகச் செய்யவும் அதே சமயம் விமானம் புரண்டு சுழல இடங் கொடாமலிருக்கவும் முயன்றான்.

வானிலே இந்த முழு நிசப்தம் எவ்வளவு பயங்கரம்! சூடுஆறும் எஞ்சின் சடக்கென ஒலிப்பதும், விரைந்த இறக்கம் காரணமாகக் கன்னப்பொருத்துக்களில் இரத்தவோட்டம் விண்விண்ணென்று தெறிப்பதும் காதுகள் நொய்யென்று இரைவதும் கேட்கும் அளவுக்கு நிசப்தம். பிரம்மாண்டமான காந்தத்தால் விமானத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போல அதை எதிர் கொண்டு விரைந்து பாய்ந்தது தரை!

இதோ காட்டோரம். அதற்கு அப்பால் பளிச்சிடுகிறது மரகதப்பச்சைத் துணித்துண்டு போன்ற விமானத் திடல். நேரம் கடந்து விட்டதோ? அரைச் சுற்றில் நின்றுவிட்ட உந்துவிசிறி அலகு தொங்குகிறது. பறக்கையில் அதைப் பார்க்க எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! காடு நெருங்கிவிட்டது. இது தான் இறுதியோ?… அவனுக்கு என்ன நேர்ந்தது, இந்தப் பதினெட்டு மாதங்களாக அவன் மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான். உண்மையான….. ஆமாம், உண்மையான மனிதனாகி விட்டான் என்பதையெல்லாம் ஓல்கா அறியாமலே இருந்துவிடுவாளோ? இந்த நோக்கம் ஈடேறியதுமே இப்படி அசட்டுத்தனமாக நொறுங்கிச் சாக வேண்டியதுதானா?

குதிப்போமா? நேரம் கடந்துவிட்டது! காடு பாய்ந்து வருகிறது, அதன் மரமுடிகள் விரைந்த சூறைக்காற்றில் மொத்தமானப் பச்சைப் பட்டைகளாக ஒன்று கலக்கின்றன. இம்மாதிரி ஒரு காட்சியை அவன் எங்கோ கண்டிக்கிறான். எங்கே? ஆம், அந்த வசந்தத்தில், பயங்கரமான அந்த விபத்தின் போது. அப்போதும் பச்சைப் பட்டைகள் இதே மாதிரி விமான இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்து வந்தன. கடைசி முயற்சி. இயக்கு விசைப் பிடியைத் தன் பக்கம் இழுக்க வேண்டும்…

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

நம்பிக்கையின் ஆட்சி

(பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் ஃபிரண்ட்லைன் இதழில் வெளியாகியிருக்கும் ஆர். விஜயசங்கர் அவர்களின் தலையங்கம் தமிழில் …)

19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவின் சமூக அரசியல் தளங்களில் ஏற்படுத்திய சுழலின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறியது; பொருளாதாரச் சுரண்டலினால் இந்தியாவின் செல்வங்கள் கொள்ளை போனதால் மோசமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும், தொழிலாளிகளும், பழங்குடியினரும் நடத்திய போராட்டங்கள் திரண்டு, 1917-ல் நடந்த போல்ஷிவிக் புரட்சியினால் உந்தப்பட்டு அதன் கொள்கையினால் ஊக்கம் பெற்று இடதுசாரி இயக்கமாக உருப் பெற்றது; சாதியத்தினால் துளைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சுயமரியாதையும், கண்ணியமும் வேண்டிப் போராடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் போரட்டங்கள் சமூக நீதி இயக்கமாக மாறின.

இந்த இயக்கங்களின் உலகப் பார்வையின் அடிநாதமாய் இருந்தவை பிரெஞ்சுப் புரட்சியின் கோஷங்களான சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம். இந்த மூன்று மதிப்பீடுகளும் உலக வரலாற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலம், புத்தொளிக் காலம் ஆகியவை கொண்டு வந்த பூமியைப் புரட்டிப் போட்ட மனித நேய சிந்தனையின் அடிப்படையிலானவை. முதன்முறையாக இறையியலைப் பின்னுக்குத் தள்ளி மனிதநேயத்தை மையப்படுத்திய சிந்தனை அது. மனிதநேயச் சிந்தனை மதப் பழமைவாதத்தின் வேர்களையும் அது மனித சிந்தனையின் மீது கட்டிவைத்திருந்த சங்கிலிகளையும் அறுத்தது. சூரியனுக்குக் கீழே இருக்கும் (சூரியனுக்கு மேலே இருப்பதையும் கூட) எதையும் குறித்தும் ஆய்ந்து, விமரிசனத்திற்குள்ளாக்கும் சுதந்திரத்தை மனிதனுக்கு அளித்தது.

அறிவியல் வளர்ச்சியின் துணையுடன் எழுந்த பகுத்தறிவுக் காலமும், தொழிற்புரட்சியும் மத்திய கால இருளிலிருந்து மனிதனை மீட்டு நீண்ட தூரம் கொண்டு வந்தது; நவீன கால சிந்தனைகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிஸம், இறையாண்மை போன்ற சிந்தனைகளுக்கு உரமூட்டியது. இந்த சிந்தனைகள்தாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கற்கள். 1950-ல் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டது இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனை. சட்டத்தின் ஆட்சியை முதன்மைப்படுத்தி நம்பிக்கைகளின் ஆட்சியைப் பின்னுக்குத் தள்ளிய திருப்பு முனை.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

ஆனால் காலக் கடிகாரத்தின் முட்களைப் பின்னோக்கித் தள்ளும் சிந்தனைகளுக்கும் பகுத்தறிவுக்கும் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஓயவில்லை. இந்த உண்மையை நமக்கு பளிச்சென்று நினைவுபடுத்துவது இந்துத்துவம் என்கிற கொள்கை. அந்தக் கொள்கையை முன் நிறுத்திய நாத்திகரான வினாயக் தாமோதர் சவார்க்கரே இந்துத்துவத்தை தெளிவாக வரையறுக்கப்படாத இந்து மதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் திட்டம். முசோலினியின் ஃபாசிஸத்தினாலும், ஹிட்லரின் நாசிஸத்தினாலும் உந்துதல் பெற்றதாக சவார்க்கரும் அவருடைய தத்துவார்த்த வாரிசுகளும் ஒப்புக்கொண்ட அந்தத் தத்துவத்தின் சாரம் இதுதான்: “அன்னிய சக்திகளுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்று புரிந்து கொள்ளவும்) இரண்டே வழிகள்தாம் உள்ளன. அவர்கள் தம்மை முழுமையாக தேசிய இனத்துடன் [இந்து] ஐக்கியப் படுத்திக் கொண்டு அதன் கலாச்சரத்தை ஏற்றுக் கொள்வது; அல்லது தேசிய இனம் அவர்களை அனுமதிக்கும் வரையில் அதன் கருணையில் வாழ்ந்து, அது விரும்பும் போது நாட்டை விட்டு வெளியேறுவது. அவர்கள் இந்து மதத்தை மதித்து அதனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்; இந்து இனம், அதன் கலாச்சாரம் மற்றும் இந்து நாட்டினைப் புகழ்வதைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது; அதாவது, அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இருப்பைத் துறந்து விட வேண்டும்…”

தேசிய இயக்கம், சோஷலிச இயக்கம், சமூக நீதி இயக்கம் ஆகியவற்றை முடுக்கிவிட்ட கலப்புக் கலாச்சாரம், எல்லை சார்ந்த தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி போன்ற கருத்தாக்கங்கள் சவார்க்கருக்கும் அவருடைய கூட்டத்திற்கும் தேவையில்லை. உடனடி அபாயமாக பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டு பிற அரசியல் இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், கம்யூனிஸம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவற்றை தங்களின் இந்துக் கனவுலகத்திற்குத் தடைகளாகவும் எதிரிகளாகவும் அவர்கள் கண்டனர். அந்த லட்சியத்தை அடைவதற்காக சவார்க்கர் “வெறுப்புணர்வையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் பரப்புவதற்காக பண்டைக்கால அநீதிகள் என்ற கருத்தை உற்பத்தி செய்வதன் அடிப்படையிலமைந்த அந்த அரசியலுக்கு சேவகம் புரியும் வகையில் வரலாற்றைச் சிதைத்தார் சவார்க்கர்.” என்று ஏ.ஜி. நூரானி குறிப்பிடுகிறார்.

சவார்க்கர் இந்துத்துவத்தை முன்வைத்த சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின், மகாத்மாவின் படுகொலைக்குப் பிறகு அரசியல் வனாந்திரத்திற்குள் தனிமைப்பட்டிருந்த இந்துத்துவ அரசியல் கருவியின் தலைவர் எல்.கே. அத்வானி சவார்க்கரை உயிர்ப்பித்தார்.

தன் நெருப்புத் தேரினை முடுக்கி விட்டார். சவார்க்கரின் எதிரொலி போல் அவர் பேசியது இதுதான்: “ரத யாத்திரையின் துவக்கப் புள்ளியாக சோம்நாத் கோவிலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு அடையாள மதிப்பு இருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்கள் இழைத்த கொடுமைகளின் அடையாளமாக அது மீண்டும் மீண்டும் குறிப்பிடப் படுகிறது… முஸ்லிம் ஊடுருவல் என்கிற வரலாற்றுத் தொடர்ச்சியின் ஒரு கட்டமாக அயோத்தியைக் காட்டி, ஒப்புமைப் படுத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு நியாயம் கற்பிப்பதுதான் நோக்கம்.” (அத்வானியின் சுயசரிதையான ‘My Country, My Life) இந்து ராஷ்டிரம் என்கிற கருத்தாக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியே ரத யாத்திரை.

படிக்க:
பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !

இந்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள். மதச்சார்பின்மை குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் ஜஸ்டிஸ் வி.எம். தார்க்குண்டே இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு மதச் சார்பற்ற அரசு அமைக்கப்பட்ட பிறகும், சமுதாயத்தை மதச்சார்பற்றதாக்கும் போக்கு தொடரும் என்று அந்த அரசு உணர்ந்திருக்கிறது. சமுதாயத்தை மதசார்பின்மையாக்கும் போக்கில் கட்டாயம் ஏற்பட்டாலேயொழிய அரசு தலையிடாது.”

சமுதாயத்தை மதச் சார்பற்றதாக்குவது ஒரு தொடர் நிகழ்வு. இந்தப் போக்கினை வலுப்படுத்துவது அரசின் மூன்று அங்கங்களான நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்திருக்கும் கடமை. பாபர் மசூதி இடிக்கப் பட்ட விஷயம் நீதித் துறையின் தலையீட்டை அவசியமாக்கிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. துரதிருஷ்டவசமாக, நீதித் துறை மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் இத்தகைய தலையீட்டிற்கான வாய்ப்பை இழந்து விட்டது.

முரண்பட்ட சிந்தனைகளுக்கிடையேயான போராட்டம் தொடர்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் ஆர். விஜயசங்கர். ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளையொட்டி சென்னையில் கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்ற விழாவில் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகளின் காணொளிகள்.

சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் !

மோடி மஸ்தானின் குரளி வித்தைகள் – நகைச்சுவை நாடகம் !

மலக்குழியில் இறங்கிய அப்பா வருவாரா ? | தோழர் ஸ்ரீஜா பாடல் !

400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !

1

பாகிஸ்தானில் உள்ள சுமார் 400 இந்து கோவில்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு அவற்றை மீண்டும் புனரமைத்து இந்துக்கள் வசம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. இவ்வாறு கோவில்கள் புனரமைக்கப்படும் நடவடிக்கை ஒவ்வொரு கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதியில் சுமார் 428 பெரிய கோவில்கள் இருந்துள்ளன. இவற்றில் சுமார் 408 கோவில்கள் பல்வேறு சந்தர்பங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிறு பொம்மை கடைகள், உணவகங்கள், பள்ளிக் கூடங்கள் போன்றவை செயல்பட்டு வந்துள்ளன. சில இடங்களில் அரசு அலுவலகங்களும், மதரசாக்களுமே கூட ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களில் செயல்பட்டு வந்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள இந்து உரிமை இயக்கம் நடத்திய சர்வே ஒன்றின் படி சுமார் 408 கோவில்கள் 1990-களுக்கு பின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பான்மையான கோவில்கள் 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு எதிர்வினையாகவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்தே இக்கோவில்களை மீட்டு புனரமைத்துக் கொடுக்க வேண்டி கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் இம்ரான்கான் பாகிஸ்தான் அதிபராக தெரிவு செய்யப்பட்ட பின் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த சில நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பாக் ஊடகங்கள் சொல்கின்றன. சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் பிறந்த இடம் பாகிஸ்தானுக்குள் உள்ளது. இந்நிலையில் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் அவரது பிறந்த இடத்திற்கு புனித யாத்திரை செல்ல கர்தார்பூர் சாலையை திறக்க ஒப்புக் கொண்டது பாகிஸ்தான் அரசு.

படிக்க:
நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?
♦ பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !

இந்த வரிசையில் 1992-ல் நடந்த கலவரத்தை அடுத்து சியால்கோட்டில் மூடப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான தேஜா சிங் சிவாலையா கோவிலை முதலில் புனரமைக்க முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசு. அதோடு பெஷாவரில் உள்ள கோரக்நாதர் கோயிலும் புனரமைக்கப்பட இருக்கிறது. மீட்கப்பட வேண்டிய, புனரமைக்கப்பட வேண்டிய கோவில்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வருடத்திற்கு குறைந்தது இரண்டு கோவில்களை புனரமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அரசு. 2019 ஜனவரி மாதம் கைபர் பக்தூன்வாலா மாகாண அரசு அங்குள்ள புராண இந்து கோவில் ஒன்றை பஞ்ச தீர்த்தம் என அடையாளப்படுத்தி பாரம்பரிய இடமாக அங்கீகரித்துள்ளது.

சமீபத்தில் (2019-ல்) பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றின் படி சிந்து மாகாணாத்தில் 11 கோவில்களும், பஞ்சாபில் 4 கோவில்களும், பலூசிஸ்தானில் 3-ம் கைபர் பக்துன்வாலாவில் இரண்டு கோவில்களும் மொத்தம் 20 கோவில்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றோடு பிரிவினையின் போது மூடப்பட்ட சர்தார் தேஜா சிங் சிவாலயம் இந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள சாரதா பீடத்திற்கு இந்தியப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை அனுமதிப்பதையும் ஆலோசித்து வருகின்றது. அசோகரின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோவில் ஒன்றில் சாரதா பீடம் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி 6-ம் நூற்றாண்டிற்கும் 12-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் கோவில் ஒரு பல்கலைகழகமாகவும் செயல்பட்டுள்ளது.

லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆளுயர சிலை.

முந்தைய காலங்களில் இந்திய அரசுடன் பாகிஸ்தான் முரண்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவதும், அவர்களது வழிபாட்டு ஸ்தலங்கள் தாக்கப்படுவதும் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் உள்ள மதச்சிறுபான்மையினரின் மீது அக்கறை செலுத்த துவங்கி உள்ளது அந்நாட்டு அரசு. கோவில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி லாகூர் கோட்டைக்கு வெளியே மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆளுயர சிலை ஒன்றைத் திறந்துள்ளது. அதே போல் சியால்கோட்டில் உள்ள சுமார் 500 ஆண்டு பழமையான பாபா-தே-பெர் குருத்வாராவையும் இந்திய பக்தர்களுக்காக திறந்து விட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறாக பதிவிட்டிருந்தார் இம்ரான் கான் : “புதிய பாகிஸ்தான் என்பது முகமதலி ஜின்னாவின் பாகிஸ்தானாக இருக்கும். இந்தியாவைப் போல் அல்லாது நாங்கள் சிறுபான்மையினர் சம உரிமையோடு நடத்தப்படுவதை உத்திரவாதப்படுத்துவோம்”. இந்த இடத்தில் பாகிஸ்தானில் பிடிபட்ட விமானி அபிநந்தனை விடுவித்த நடவடிக்கையையும் பொருத்திப் பார்க்கலாம்.

படிக்க:
பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

***

ந்த நடவடிக்கைகளின் ஊடாக பாகிஸ்தான் அரசுக்கு அங்குள்ள சிறுபான்மை இன மக்களின் மேல் புதிய பாசம் பீறிட்டு அடிப்பதாக ஏற்பதா? இல்லையா? என்கிற விவாதத்தை ஒரு புறம் தள்ளி வைப்போம். மோடி இந்தியாவில் பதவி ஏற்ற பின் சிறுபான்மை இன மக்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், தலித் மக்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகள், பசுகுண்டர்களின் தீவிரவாத தாக்குதல்கள் என்கிற வரிசையில் சமீபத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வரை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக புரிந்து கொள்ள முடியும்.

அதே நிகழ்ச்சிப் போக்கின் பிற அம்சங்களாக “காந்தி தற்கொலை” “கோட்சே புனிதர்” வரலாற்றை திரிப்பது, வரலாற்று நூல்களை சிதைப்பது என மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. மேற்குலக பொதுபுத்தியில் “தாலிபானிய கொடுமைகள்” குறித்து என்னென்ன விசயங்கள் பதிவாகி உள்ளனவோ அவையெல்லாம் இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. அதே சமயத்தில் பாகிஸ்தானோ தான் சிறுபான்மை மக்களின் நண்பன் என்கிற பதிவை ஏற்படுத்த பிரயத்தனம் செய்கிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் எதார்த்தத்தில் எந்தளவுக்கு மேற்கொள்ளப்படும், அவற்றின் வெற்றி எப்படி இருக்கும், அந்நடவடிக்கைகளுக்கு அங்குள்ள மத்தியகால பிற்போக்கு முல்லாக்களின் அரசியல் எதிர்வனை எப்படி இருக்கும் என்பதெல்லாம் எதிர்காலத்தில் தெரியவரும். ஆனால், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான். அதே நேரம் “தாலிபானிய மூளை” நாக்பூரில் தான் உள்ளது என்பதையும் அதன் வழிகாட்டுதலில் தான் இந்தியா நடத்தப்படுகின்றது என்பதை பசுகுண்டர்கள் மெய்பித்து வருகின்றனர்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : சப்ரங் இந்தியா.

ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?

ரு பெண்ணாய் முதலில் ஆண்களுக்கு என் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள். மனிதன் தோன்றியதிலிருந்து ஆண் பெண் என இருந்த சமூகம், நாகரிகத்தைத் தேட ஓடியதில் இன்று இருபாலரையும் கொண்டாடும் நாள் என வளர்ந்த நிலையில், இந்தப் பதிவை ஆண்கள் தினத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுயிருக்கிறேன்.

இந்தியாவில் தற்போதுதான் சில ஆண்டுகளாக மன அழுத்தம் பற்றி பேச தொடங்கியுள்ளோம். இதைப்பற்றி குறிப்பாக ஆண்களின் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி ஆண் பிரபலங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களும் தற்போது பேசுகின்றன. இது சமூகத்தில் இது குறித்த உரையாடல்களை பெருமளவில் ஊக்குவிக்கும் என நம்புவோம்.

சாதாரண வாழ்கையைக் கடந்து செல்லும் நம்முள் பலருக்கும் இந்த மன அழுத்தம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மன அழுத்தம் என்பது இரு பாலருக்கும் இருக்கிறது. இருப்பினும் ஆண்களின் மனநல பிரச்சினைகளை பற்றி பேசக் காரணம், பெண்களைப் போன்று அவர்களுக்கும் இச்சமூகம் ஏற்றி வைத்திருக்கும் வார்ப்படம் தான் (sterotype). ஆண்கள் ‘கடினமானவர்களாக’ இருக்க வேண்டும் என்று நம்பும் நமது கலாச்சாரத்தில் இதைப்பற்றி ஓரிரு திரைப்படங்களும் ஒரு சில பிரபலங்களும் உரையாடலைத் தொடங்கியுள்ளனர் என்பது நம்பிக்கைக்குரிய விசயம்.

இது ஒரு சமூகக்கட்டுப்பாடு

“ஆண்கள் அழக்கூடாது”, “ஒரு ஆணாக இருக்க…!”, “ஆண்கள் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள வேண்டும்” – இப்படிதான் நாமும் நம் சமூகமும் ஆண்களுக்கான ஒரு வார்ப்படத்தை உருவாக்கி அதனுள் அவர்களை சிறை வைக்கிறோம்.

கடந்த வருடம் சல்மான் கான் தனது பேட்டியில் மன அழுத்தம் அடையும் அளவுக்கு ஆடம்பரம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துக்கள் மன அழுத்தம் உடையவர்களை பலவீனப்படுத்தும். ஒரு நோயாக இல்லாமல், ‘பலவீனமான’ நபர்களால் செய்யப்பட்ட ஒரு ‘தேர்வாக’ இதை உருவாக்குவது தவறு.

தீபிகா படுகோன் தனது பேட்டியில், அடுத்தவர்களின் மன அழுத்தம் பற்றி பிறர் தவறான கருத்துகளை பதிவிடுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.  தான் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை பதிவு செய்தார். அப்படி பகிரங்கமாக பேசியதற்கு அவருக்கு முதலில் எனது பாராட்டுகள்.

பொதுவாக மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவது இந்தியாவில் மிகக் குறைவு. அதுவும் ஆண்களின் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில், பிரபலங்கள் தங்கள் சொந்த போராட்டங்களைப் பற்றி பேசுவது பாராட்டுக்குரியது.

இதை போன்றே Obsessive-Compulsive Disorder (OCD) பற்றி one mic stand போன்ற Stand Up Comedy ஷோக்களில் பேசப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்களின் மன ஆரோக்கியத்திற்கான போராட்டம் குறித்து சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளிவந்த திரைப்படமான ஹவுஸ் அரஸ்டில் காட்சிப்படுத்தப்பட்டது (சமித் பாசு எழுதியது; சமித் பாசு மற்றும் சஷங்கா கோஷ் இணைந்து இயக்கியது; அலி ஃபசல், ஸ்ரியா பில்கோங்கர், ஜிம் சர்ப் மற்றும் பார்கா சிங் நடித்தது) சில நாட்களுக்கு முன்பு ஹவுஸ் அரெஸ்ட் தொடரில் ஒரு நகைச்சுவை. அது, ஒரு மனிதன் தனது மன ஆரோக்கியத்துடன் போராடும் முக்கியமான ஒரு உருவப்படத்தை சிரிப்பவர்களிடையே அளிக்கிறது. அதன் முக்கிய அம்சமாக நான் இதைத்தான் பார்க்கிறேன். அதில் வரும் பிறவிசயங்கள் பற்றி நான் எதுவும் கூறுவதற்கில்லை. ஆனால் படம் நிச்சயமாக பார்க்கத்தக்கது.

படிக்க:
மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்
♦ பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி

இந்தியாவில் மோசமான விசயம் என்னவென்றால், ஆண்களின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ‘உணர்ச்சிபூர்வமான அன்பின்’ வெளிப்பாடுகளாக காதல் என்பது காட்டப்படுகிறது. டாரில் இருந்து ராகுல், தேரே நாமில் இருந்து ராதே, தேவதாஸ், அல்லது கபீர் சிங் ஆகியோராக இருந்தாலும், அவர்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் நிவாரணியாக ஆல்கஹால் / போதைப்பொருட்கள் அல்லது அவர்களின் வாழ்க்கையில் பெண்கள் மீதான ஈர்ப்பு ஆகியவை காட்டப்படுகின்றன. “ஒரு நல்ல பெண்” ஒரு மனிதனை சீர்திருத்த முடியும் – என்ற ஒரே மாதிரியான விசயத்துக்கு ஊட்டமளிப்பதால் இது எல்லையற்ற சிக்கலை உருவாக்குவதோடு, பரஸ்பர துஷ்பிரயோக சுழற்சியில் இரு பாலினரையும் சிக்க வைக்கிறது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான, ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்ற திரைப்படத்தில் அந்த வீட்டின் மூத்த சகோதரராக நடித்த செளபின் ஷாகீர் தன்னுடய கதாபாத்திரத்தில் தன்னுடைய மன அழுத்ததை வெளிக்கொணர தன் தம்பியிடம் உதவி கேட்க அவர் மன நல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வார். அங்கு ஆலோசகரைச் சந்தித்து அண்ணன் கதாபாத்திரம் அழும் காட்சியில் தன்மையை இயல்பாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதைப்போன்றே மற்றொரு படம் லுகா. இப்படியான திரைப்படங்கள் மன அழுத்தத்தையும் இயல்பாக அணுகுகின்றன.

ஆய்வுகளின் அறிக்கை

தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட லியாங் மற்றும் ஜார்ஜ் (2012) ஆய்வில், மனச்சோர்வுள்ள சில ஆண்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ தங்கள் தனிப்பட்ட சிரமங்களைப் பற்றி பேச விரும்புவதாகக் கண்டறிந்தனர். ஆனால் அவர்களின் சமூக வலைப்பின்னல்களில் நம்பகமான அல்லது குறைவான நபர்கள் மட்டுமே தங்கள் உணர்வுகளைப் புரிந்துக்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடாவில், கோயன் மற்றும் பலர்… நடத்திய மற்றொரு ஆய்வு (2013), ஆண் வார்ப்படம் அவர்களை ஓரு மூடிய கதவின் பின் தங்களின் மன உளைச்சலை வைக்கச் செய்வதாகத் தெரிவிக்கிறது. ஆண்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மனச்சோர்வை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் தோழியிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தி, உணர்ச்சிப் பூர்வமான ஆதரவிற்காக ஏங்குகின்றனர். அவர்கள் மற்ற ஆண்களை அணுக முயற்சித்தபோது, அவர்களது அனுபவங்கள் எதிர்மறையாக இருந்தன. மற்ற ஆண்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

இந்தியாவில், மாநில அளவிலான மனநோய் சுமை குறித்த சமீபத்திய ஆய்வுக் கட்டுரை, உலகளாவிய தற்கொலை மரணங்களில் இந்தியாவின் பங்களிப்பு 1990-ல் 18·7%-லிருந்து 2016-ல் 24·3% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெண்களின் புள்ளி விவரங்களை (1990-ல் 25.3%; 2016-ல் 36.6%) விட மிகக் குறைவானவை என்றாலும் , அவை இன்னும் கவலைக்கு ஒரு காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் உள்ள சூழ்நிலையில் வெறுமனே 4000 மன ஆலோசகர்களே உள்ளனர். சிகிச்சைக்கான செலவும் அதிகம். அப்படியிருக்கையில் நாம் சமூகக் கடமையுடன் அதை எதிர் நோக்குவோம்.

ஆண்களின் மனநலப் பிரச்சினைகளை பெண்கள் எப்படி கையாளுகின்றனர் ?

மனநோய்களின் வீழ்ச்சியும், அதன் தாக்கமும் ஆண்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும், சமுதாயத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. இந்தியாவில் ஆணாதிக்க சமுதாயத்தில், பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களே இன்னமும் முடிவெடுப்பவர்களாக இருக்கின்றனர். இப்படி குடும்பத்தின் சமூகப் பொருளாதார நல்வாழ்வும் ஆண்களை பொறுத்தே இயங்குகிறது.

இந்திய பதிவாளர் ஜெனரலின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 78.62% பேர் வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் 13.15% பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதன் தாக்கம் அதிகமாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், மனநோய்க்கு எதிரான களங்கம் காரணமாக, கடுமையான பிரச்சினைகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன.

பொதுவாக குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களைப் பராமரிப்பது ஒரு முழுநேர வேலையாகவும் மாறுகிறது. மேலும் பராமரிப்பாளர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது. கூடுதலாக பொருளாதார துயரத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் குருராஜ் மற்றும் பலரால் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த காலாண்டில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதில் சுமார் 10-20 வேலை நாட்களை இழக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2012 மற்றும் 2030-க்கு இடையில் மனநல பிரச்சினை காரணமாக இந்தியா தனது உற்பத்தித் திறனில், 1.03 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க:
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
♦ கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

மேலும் சிகிச்சையளிக்கப்படாத மன நோயானது, சமூக விரோத நடத்தைகள், குற்றம், வீடற்ற தன்மை, வீட்டு வன்முறை, குடி மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை ஏற்ப்படுத்தும். எனவே, ஆண்களின் மனநலப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவது, மற்றும் மனநோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானது. இதற்கு சம்பந்தப்பட்ட ஆண்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பமும், சமூகமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வேலைவாய்ப்பைப் பற்றி 2016-ல் ஆய்வு செய்த ராமசுப்பிரமணியன், சி. மோகன்தோஸ், ஏ.ஏ., மற்றும் நமசிவயம், ஆர்.கே  ஆகியோரது அறிக்கையில், இப்பிரச்சினையில் இருந்து மீள வேலை வாய்ப்புகள், இட ஒதுக்கீடு மற்றும் பிற மறுவாழ்வு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆண்கள் மீதான வார்ப்படத்தை உடைத்தெறிவோம்

இதற்கு ஆணாதிக்க சமூகம் கட்டமைத்த வார்ப்படத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இது மன அழுத்தம் உள்ள ஆண்களை பலவீனமானவர்களாக பார்க்காச் செய்கிறது. மேலும், பெரும் இழுக்காக பார்க்கப்படும் பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க உளவியல் சங்கம், கடந்த ஆண்டு 10 வழிகாட்டுதல்களின் தொகுப்பைக் கொண்டு வந்தது. மனநல ஆலோசகர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களின் மீதான இந்த சமூகக் கட்டுப்பாட்டை உடைத்தெறியச் செய்ய வேண்டும் என்கிறது. எப்படி தந்தை மகன் உறவுகளை மேம்படுத்தி, தற்கொலை மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஆண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வது? ஆரோக்கியமான நடத்தைகளை நோக்கி ஆண்களை எவ்வாறு வழிநடத்துவது ? என்பதைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டுதல்கள் உதவுகின்றன.

இதைத்தான் சமீபத்தில் பாலிவுட் நடிகரான ஆயுஷ்மன் குரானா நடித்த யூடியுப் நிகழ்ச்சி ஓன்றில் கொளரவ் சொளன்கி எழுதிய பாடலில், ”ஆணின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்பதை தனது வரிகளின் மூலம் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற மனநல மருத்துவர் டாக்டர் பாரத் வத்வானி தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளபடி, “எந்தவொரு பிரபலமும் முன்வந்து, அவர்களின் மனநல பிரச்சினைகளைப் பேசுவது மற்றும் ஒப்புக்கொள்வதன் மூலம், மனநோயை மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் என நம்புகிறோம். இது மட்டுமே அவர்கள் அவர்களாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வழிவகுக்கும்” என்கிறார்.

திரையில் ஆண்களின் மனநலப் பிரச்சினைகளின் நேர்மறையான பிரதிநிதித்துவத்தின் மூலமாக நிச்சயம் சமூகத்தில் சாதகமான மாற்றத்திற்கு வழிவகுக்க முடியும் என சொல்லி ஆண்கள் தினத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்.

ஆண்கள் தினம் – தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.சிந்துஜா சமூக ஆர்வலர்.

நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?

நெருக்கடி நிலைக் காலத்தில் அதுவரை மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசு – மத்திய அரசு – இரண்டுக்கும் பொதுவானது என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், மாநில அரசு முடிவுக்கு மேலாக மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும் என்பதுதான் பொதுப் பட்டியலின் நிலையாகும். பல நேரங்களில் இந்த முரண்பாடுகள் ஏற்படவே செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பது முற்றிலும் சட்ட ரீதியாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மத்திய அரசோ, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றைத் திணிக்கிறது.

மாநில அளவில் மக்களின் நிலை – சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு – இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அதனைப் புறந்தள்ளி, டில்லியில் உட்கார்ந்து கொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்பநிலை, பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக்  கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?

மாநில அரசுகள் தங்கள் தங்கள் மாநிலங்களிலும் மருத்துவக் கல்லாரிகளை, தங்களின் நிதிப் பொறுப்பில் உருவாக்கி, மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பினால், அதில் மத்திய அரசு, மருத்துவக் கவுன்சில் ஆகியவை தலையிட்டு, எம்.பி.பி.எஸ். சேர்க்கையின் மொத்த இடங்களில் 15 விழுக்காடு மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும்; முதுநிலை மருத்துவப் படிப்பு என்றால் 50 விழுக்காடு இடங்களை மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த வகையில் நியாயமானது?

மருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா? மாநில அரசுகளிடமிருந்து இடங்களைப் பறித்துக் கொள்வதோடு அல்லாமல், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின் மீதும் குதிரை சவாரி செய்வது ஆதிக்க உணர்வு அல்லவா! (நூலிலிருந்து பக்.6-7)

1919-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி கல்வி என்பது மாகாண அரசுகள் மட்டுமே அதிகாரம் பெற்றிருந்த துறையாகும் என்பதை கவனிக்க வேண்டும். 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலும் கூட, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி என்பது மாகாணங்கள் அதிகாரம் பெற்ற பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளரின் யதேச்சதிகார, சாம்ராஜ்ய அணுகுமுறையை விட, அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய போது, அதனை இயற்றியவர்கள் எந்த விதத்திலும் தாராளமானவர்களாக இருந்துவிடவில்லை; தேசத்தின் நலன் என்ற பெயரில், நாட்டுப் பிரிவினையைக் காரணம் காட்டி மாகாணங்களின் சுயஆட்சி அதிகாரத்தை முடமாக்கி, சீரழிக்கும் முடிவுகளை வேண்டுமென்றே அவர்கள் மேற்கொண்டனர். இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு சூழலில், காரண காரியம் அல்லால் உணர்ச்சியே மக்களை உந்தும் சக்தியாக இருந்த ஒரு காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்ட போதும் கூட தன் இரண்டாவது (மாகாணங்களின் பட்டியலில் தான், உயர் கல்வி பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் சேர்க்கப்பட்டிருந்தது.

… இவ்வாறிருக்கும் போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975-77 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், இந்தியா இருளில் மூழ்கி இருந்தபோது, கல்வித் துறை பற்றிய பதிவும் (மற்ற பல முக்கியமான துறைகள் பற்றிய பதிவுகளுடன்) 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இரண்டாம் பட்டியலில் இருந்த 11-ம் எண் பதிவு நீக்கப்பட்டது. மூன்றாம் பட்டியலில் தற்போது உள்ளது போல பதிவு எண் 25 மாற்றி அமைக்கப்பட்டது. 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் காரணங்கள் பற்றிய அறிக்கை குழப்பம் நிறைந்த ஒரு பொதுவான அறிக்கையாகும்.

அது கூறுகிறது, அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள ஜனநாயக அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அழுத்தம் தரப்படும் சூழலில் செயல்பட வேண்டி இருப்பதால், பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக சுயநல சக்திகள் தங்களின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன. கல்வியை இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றுவதற்கு உறுதியான காரணம் எதுவும் கூறப்படவில்லை . இந்த 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகும். இந்தத் திருத்தத்தின் உள்ளடக்கம், நோக்கம் பற்றி முழுமையாக வெகு சிலரே அறிந்திருந்தனர்.

இவ்வாறு 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சில 43 மற்றும் 44-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களில் செயலிழக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட போதும், கல்வியோ, மாநில அரசின் அதிகாரம் பற்றிய வேறு எந்தப் பதிவோ மாநிலங்களின் இரண்டாம் பட்டியலுக்கு மாற்றி அளிக்கப் படவில்லை. அதன் பின்னர், அரசமைப்புச் சட்டத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட சில நீதித்துறை விளக்கங்கள் காரணமாக, மத்திய அரசு மேலும் மேலும் அதிக அதிகாரங்களை பெற்றதாகவும், மாநிலங்கள் மேலும் மேலும் பலவீனமானவைகளாகவும் ஆக்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.38-40)

இதிலே இரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஒன்று கல்வியை மாற்றிய முறை தவறானது. இட்லருடைய பாராளுமன்றமும், முசோலினியின் சட்டமன்றமும் எப்படி அடிமைத்தனத்தில் இருந்தனவோ, அதைப் போன்றுதான் நெருக்கடி காலத்தில் இந்திராகாந்தியின் நாடாளுமன்றமும் செயல்பட்டது. எனவே, ஜனநாயக முறையில் விவாதம் எதுவும் நடத்தப்படாமல், கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, இப்படி மாற்றம் செய்வதற்கு முன்னதாக கல்வியாளர்களையோ, அறிஞர் பெருமக்களையோ மய்ய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இப்படி, மாபெரும் இரண்டு தவறுகளைச் செய்துதான் கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி விட்டார்கள்.

1976-ல் இந்த மாற்றம் கொண்டுவந்து இன்றைக்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்தது? என்ன தீமை விளைந்தது? நாம் அனுபவத்தில் ஆய்ந்து பார்க்கலாம். அதைப் பற்றிய புத்தகம் ஏதாவது கிடைக்குமா? என்று தேடிப்பார்த்தேன். ஆனால் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களில், ஒரு சிலவற்றில் மட்டுமே இந்த மாற்றம் பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த மாற்றத்தை வரவேற்றும்; இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவர் கூட இதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதவில்லை என்பதை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.57)

படிக்க:
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…

1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம் குறைபாடுகள் மலிந்த, மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கிற அரசமைப்புச் சட்டமாகத்தான் உருவாயிற்று. எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்த அரசியல் அறிஞர் கே.சி.வியர் கூட்டாட்சி அரசு (Federal Government) என்ற தனது புத்தகத்தில் இந்தியாவை அரைக் கூட்டாட்சி நாடு என்று உருவகப்படுத்தினார்.

ஆனால், கடந்த 61ஆண்டுகளாக மத்திய அரசால் இயற்றப்படுகின்ற சட்டங்களும், சட்டத் திருத்தங்களும், ஏற்கனவே குறைந்து வருகிற மாநில அரசுகளின் அதிகாரங்களை மேலும் மேலும் குறைப்பதாகவே உள்ளன. அரைக் கூட்டாட்சி முறையிலிருந்து விலகி, மத்திய அரசு அதிகார குவிப்பின் மய்யமாகவே தற்போது உருவெடுத்து வருகிறது. (நூலிலிருந்து பக்.63-64)

நூல் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?
ஆசிரியர்கள் : ஆசிரியர் கி. வீரமணி, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ. இராமசாமி, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி,  சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
மின்னஞ்சல் :info@periyar.org

பக்கங்கள்: 80
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse

ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 08

“பள்ளியின் ஆன்மா“

வர்கள் பேசிவைத்துக் கொண்டா வருகிறார்கள்? திடீரென பத்து – பன்னிரண்டு மகிழ்ச்சிகரமான புன்முறுவல்கள் வெடிக்கின்றன.

“வணக்கம்!”

“வணக்கம்!”

கண்களை மூடியபடியே ஒவ்வொரு “வணக்கமும்” யாரால் சொல்லப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடியும். வகுப்பில் உயிர் வந்துள்ளது, மலர்களின் மணம்…

“வணக்கம், குழந்தைகளே!” என்று ஒவ்வொருவரிடமும் கையை நீட்டுகிறேன்.

சாதாரணமாக, குழந்தை வகுப்பில் நுழைந்ததும் நேராக என்னிடம் வந்து முகமன் கூறுவான், நான் கை வேலையாக இல்லாமலிருந்தால் கை குலுக்குவோம். இது ஒரு பழக்கமாக எங்கள் வகுப்பில் நிலவி வருகிறது. குழந்தைகள் இந்தக் கை குலுக்கலைப் பெரிதும் மதிக்கின்றனர், இது நாள் பூராவும் எங்களது காரிய ரீதியான மற்றும் நட்பு ரீதியான கூட்டை பலப்படுத்துகிறது.

“இன்று நமக்கு நிறைய வேலைகள் உள்ளன. பெற்றோர்களும் விருந்தினர்களும் வரும் முன் இவற்றைச் செய்து முடிக்க வேண்டும்!”

“செய்து முடிப்போம்!”

“நாம் என்ன செய்ய வேண்டும், பாருங்கள்!”

நான் கரும்பலகையில் எழுதியுள்ளதைக் குழந்தைகள் வாய்விட்டுப் படிக்கின்றனர்:

முதல் பாடம்: ரகசிய பாக்கெட்டுகளை நிரப்பி ஒட்ட வேண்டும்.

இரண்டாவது பாடம்: கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது பாடம்: மரங்களிடம் விடை பெற வேண்டும்.

நான்காவது பாடம்: எதிர்காலத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

பின்னர்?

”பின்னர் பெற்றோர்களும் விருந்தினர்களும் வருவார்கள். நாம் நமது நாடகத்தை நடித்துக் காட்டுவோம். பின்னர் ஒருவருடன் ஒருவர் விடை பெறுவோம்.”

“எனக்கு விடை பெற விருப்பமில்லை!”

“வாருங்கள், மணியடிப்பதற்காகக் காத்திராமல் வேலையைத் துவங்குவோம்!”

குழந்தைகள் டெஸ்குகளின் பின் அமருகின்றனர். ஒவ்வொருவரும் டெஸ்க் உள்ளிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து காரியத்தில் இறங்குகின்றனர். உள்ளிருப்பதைப் பார்த்து, சரிசெய்து, ஒழுங்குபடுத்துகின்றனர். நான் ஒவ்வொருவரையும் அருகே அழைத்து, ரகசிய பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து, அதில் குழந்தையைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைப் போட்டு, அதை ஒட்ட அனுமதி தர வேண்டும். – முதல் அரையாண்டு முடிவில் இதே போன்ற முதல் பாக்கெட்டுகளைப் பெற்றோர்கள் பெற்றனர். இது இரண்டாவது பாக்கெட். முதல் பாக்கெட்டைப் பற்றிய இவர்களுடைய கருத்துக்களை வைத்து பார்த்தால் இந்த இரண்டாவது பாக்கெட்டிற்காக இவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும்.

இது என்ன ரகசிய பாக்கெட்? ஏன் பாக்கெட்? ஏன் ரகசியம்? இதற்கான பதில்கள் என்னிடம் உள்ளன, இவற்றிற்கு என் சிந்தனைகளும் பரிசோதனையும் ஆதாரம்.

பூர்வாங்கத் தயாரிப்பிற்காகப் பள்ளிக்கு வந்துள்ள ஆறு வயது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் போடக் கூடாது. எனது இளம் மாணவர்களுக்கு முதல் வகுப்பிலோ, இரண்டாவது வகுப்பிலோ, மூன்றாவது வகுப்பிலோ நான் நீண்ட நாட்களாகவே மதிப்பெண்களைப் போடுவதில்லை. என் கருத்துப்படி, மதிப்பெண்கள் காலுடைந்த போதனை முறையின் ஊன்றுகோல், ஆசிரியரின் அதிகாரத்தை நிலை நாட்டும் தடியாகும். ஊன்று கோல்களுடன் வகுப்பறையில் நுழைவது, ஆறு வயதுச் குழந்தைகளின் கண்களில் படும்படி தடியை வைத்து படிப்பு சொல்லித் தருவது என்பது எனக்கு போதனை முறையின் ஒழுங்கின்மையாகப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் யாருக்கு வேண்டும்?

“குழந்தைகளுக்கு!” என்று ஒரு சில ஆசிரியர்கள் கூறுவது காதில் விழுகிறது.

இல்லை, என்னருமை சக ஆசிரியர்களே! இவை குழந்தைகளுக்கு வேண்டவே வேண்டாம்! மதிப்பெண்கள் என்றால் என்ன, இவை எதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டன, யாருடைய வாழ்க்கையை இவை எளிதாக்குகின்றன என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஆசிரியர்களும் பெற்றோர்களுமாகிய நாம்தான் குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் பற்றிச் சொல்லித் தருகிறோம், இவற்றின் மீது இவர்களுக்கு வெறியையே ஏற்படுத்துகிறோம், பின்னர் இவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கப் பாடுபடும் போது, இந்த மதிப்பெண்களுக்காகப் படிக்கத் துவங்கும் போது, “பார்த்தீர்களா, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் எப்படி அவசியம், இவை இல்லாவிடில் படிக்கவே மாட்டார்கள்” என்று கூறுகிறோம்.

நான் பல்வேறுவிதமான மதிப்பெண்களுடன் அன்றாடம் வகுப்பிற்கு வந்தால், இதோ தமது ரகசிய பாக்கெட்டுகளில் மூழ்கியிருக்கும் இந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்கு வாழ்க்கை எப்படியிருந்திருக்குமென என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை. “சிக்கலான கணக்கைத் தரட்டுமா?” என்று எப்படி நான் அவர்களிடம் கூற முடியும்? நானே எப்படி “பிழை செய்யத்” துணிவது? பாடத்தில் வாழ்க்கைக் கோட்பாடும் காரிய ரீதியான உறவுகளின் கோட்பாடும்… குழந்தைகளின் முன்னோக்கிய அறிதல் வளர்ச்சிக் கோட்பாடும் எங்கு போயிருக்கும்? கசப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் விதைகளை விதைத்து எப்படி நான் ஒவ்வொரு சிறுவனுக்கும் மகிழ்ச்சியைத் தரமுடியும்?

குழந்தைகளுக்கு மதிப்பெண்களே தேவையில்லை. ஏனெனில் படிப்பு என்பதை புதியவற்றை அறியும் முயற்சிகளின் வளர்ச்சிப் போக்காக நாம் மாற்றினால், நமது நிர்ப்பந்த நடவடிக்கைகளை அவர்கள் உணராமலிருந்தால் அவர்கள் மதிப்பெண்கள் இல்லாமலேயே படிப்பார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட எவ்வளவு முன்னால் இருக்கிறோம் என்றோ அல்லது மற்றவர்களிடமிருந்து பின் தங்கியுள்ளோம் என்றோ அறிந்து கொள்வதும் மாணவர்கள் “புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையையும், குறிப்பாக யாரையெல்லாம் வெறுமனே “மந்தமானவர்கள்”, “பின் தங்கியவர்கள்” என்று கருதுகின்றோமோ அவர்களின் மனநிலையை நம்மால் தெரிந்து கொள்ள முடியாததற்காக, இவர்களுக்கு (இப்போது விஞ்ஞானத்தில் கூறுகின்றார்களே அதே போல்) மிகவும் ஏற்புடைய தனிப்பட்ட முறையை ஏற்படுத்த முடியாமைக்காக மேற்கூறிய பிரிவு குழந்தைகள் முன் நம்மை வெட்கமடையச் செய்யவில்லையா? சுருட்டை முடியுடைய எனது வகுப்புச் சிறுவன் ஒருவன் முன், அவன் சோகமாகப் பார்க்கும் போது நான் வெட்கித் தலை குனிகிறேன். “என்னால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது! நீதான் பெரியவன் ஆயிற்றே, புத்திசாலி ஆயிற்றே. என்னைத் தொல்லையில் விடாதே!” என்று அக்கண்கள் என்னை நோக்கிக் கூறுவது போலிருக்கும்.

“அவன் மந்தமானவன், பின் தங்கியவன்” என்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் இது நமது பலவீனத்தை நியாயப்படுத்துவதாகாதா? நாம் அவனை பலவீனமானவனாகக் கருதினால் நம்மை நாமே எப்படி மதிப்பிடுகிறோம்? நான் ஆசிரியர்கள் நடத்தும் பல பாடங்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு நிச்சயமாக பெயில் மதிப்பெண் போட்டு அதை அவர்களின் உழைப்புப் பதிவேட்டில் எழுதலாம். இப்படிப்பட்ட ஆசிரியர்களால் “ஊன்று கோல்களும்”, “தடிகளும்” இல்லாமல் வகுப்பறையில் நுழைய முடியாது தான், இவர்களோ இம்மாதிரி பாடத்தை நடத்தி இப்பாடத்தில் தம் மாணவர்களுக்கு பெயில் மதிப்பெண்களையும் நல்ல மதிப்பெண்களையும் போடுகின்றனர்! என்ன விந்தை!

நெடுங்காலத்திற்கு முன், கையில் கம்புடன் குழந்தையை பள்ளிக்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வருபவரை ஆசிரியர் என்றனர். ஆனால் பின்னர் இச்சொல் முற்றிலும் வேறு உள்ளடக்கத்தைப் பெற்றது: ஆசிரியர் என்றால் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பவர் என்றாயிற்று. ஆசிரியராக, குழந்தையை வளர்ப்பவராக மாறியதும் இவர் தன் கம்பை விட்டெறிந்தாரா? இல்லை! மத்திய கால ஓவியங்களிலும் படங்களிலும் ஆசிரியர் தன் வலது கையில் கம்பு அல்லது பிரம்புக் கட்டையும் இடது கையில் திறந்த புத்தகத்தையும் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பதைக் காணலாம். ஒரு வேளை நமது மதிப்பெண்கள் உருமாறிய கம்பு அல்லது பிரம்புக் கட்டோ? ஆரம்ப வகுப்பில் யாருக்கு மதிப்பெண்கள் வேண்டும்?

ஆறு வயதுக் குழந்தைகளுக்கா? அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூட விருப்பமில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் – பள்ளியிலும் வீட்டிலும் வெளியிலும் – அவர்கள் வாங்கிய மதிப்பெண்களைப் பொறுத்து தான் நாம் அவர்களை எடை போடுகிறோம், மதிப்பிடுகிறோம் என்று காட்டும் போது, குழந்தைகள் என்னதான் செய்வார்கள்? அவர்கள் நம்மை முழுமையாகச் சார்ந்திருப்பதைப் புரிந்து கொள்கின்றனர், நாம் இல்லாமல் வாழ அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் நம்மை நேசிக்கின்றனர், எனவே நம்மை திருப்திப்படுத்த, சந்தோஷப்படுத்த மதிப்பெண்களை நாடுவதைத் தவிர வேறு வழி அவர்களிடம் இல்லை.

இவ்வாறாக பிரச்சினை, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் தேவை என்பதில் இல்லை; மதிப்பெண்கள் இருப்பதை ஆரம்ப வகுப்பு ஆசிரியர் மறந்து விட்டு, தன் அதிகாரத்தைக் குறிக்கும் தடியை வீசியெறிந்து விட்டு வெறுமனே வந்து குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வளர்க்க முடியுமா என்பதில்தான் பிரச்சினை அடங்கியுள்ளது. இதைச் செய்வது எளிதா?

இல்லை, தன் தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியருக்கு எளிதல்ல. ஏனெனில் எந்த கல்வி போதனை, குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்டு விட்டாரோ அந்த முறை இவற்றுடன் தொடர்புடையது. கல்வி முறையியலை மாற்றியமைப்பது என்றால் முறைகள், வழிகள், படிப்பு சொல்லித் தரும் வகைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு என்று பொருளாகாது; ஆசிரியர் தன்னையே, தன் கண்ணோட்டங்களை, கருத்துக்களை, தன் அனுபவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

இப்படி முறையியலையும் இதன் மூலம் தன்னைத் தானேயும் மாற்றியமைப்பது யாருக்குப் பிடிக்காது தெரியுமா? யார் ஒரே மாதிரியாக, இயந்திரகதியில் வேலை செய்கின்றார்களோ, யாருக்கு முதல் வரிசையிலும் மூன்றாவது வரிசையிலும் உட்கார்ந்துள்ள குழந்தைகள் ஒரே மாதிரியானவர்களாகப் படுகின்றனரோ (இது எல்லோரையும் ஒரே மாதிரியாக அணுகும் ஆசிரியரின் வாழ்க்கையை எளிதாக்குகிறது) அந்த ஆசிரியருக்குப் பிடிக்காது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

0

யோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த உடனேயே, இது கடந்து செல்வதற்கான நேரம், முடிவுக்கான நேரம், தேசிய சிகிச்சை போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வழிந்தோடின.

இந்தத் தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்கள் இந்த வரிகளை முதன்மைப்படுத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்விளைவுகளில் அடக்கிக் காட்டின. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, அமைதியைக் கோரியது.

பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ தொனியும் இணக்கமானது. விசுவாசிகள் வெற்றியாளர்களாக ஒலிக்க தங்கள் முயற்சியைச் செய்தார்கள், ஆனால் பிரதமர் நீதிமன்றங்களின் நடுநிலைமையை பாராட்டி, ‘ஒத்திசைவான கலாச்சாரம்’, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியதால், வெறுப்பு பிரச்சாரம் குறைந்தது. இடது, வலது மற்றும் மையங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றியது. இது ஒரு மகிழ்ச்சி அல்ல; ஆனாலும் ஒன்றாக வர வேண்டும். அது ஒரு மெய்நிகர் தேசிய குழு அணைப்பாக இருந்தது.

மிகவும் மனதைக் கவரக்கூடியதாக உள்ளது. ஒரு மாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம்… இந்து அமைப்புகளின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். மேலும், அந்த இடத்தை முசுலீம் வாதிகளுக்கு திரும்ப அளிக்கிறார்கள். அல்லது அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முசுலீம்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னது, அதை முன்மாதிரியாகக் கொண்டு, இரண்டு தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமென பிரித்துக்கொண்டு, கோயிலையும் மசூதியை கட்டலாம் என தீர்ப்பளித்திருந்தால்…

பாபர் மசூதி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை செய்தித்தாளில் பார்க்கும் சாமியார்கள். (இடம் – அயோத்தி, படம் நன்றி : வயர்)

அப்போதும் இதுபோன்ற, இவ்வளவு தாராள மனப்பான்மை வெளிப்பட்டிருக்குமா? பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா? பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா? இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சில இடங்களில் இணைய தடையும் மும்பையில் அதிகப்படியான போலீசு பாதுகாப்பும் இருந்தது. அங்கு 1992-93 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் வடு இன்னும் மறையவில்லை.

ஒருவேளை கற்பனை செய்துபாருங்கள் தீர்ப்பு வேறொரு பக்கமாக இருந்திருந்தால், மாநிலத்தின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும். வழக்கின் தீர்மானம் ‘இந்துக்களுக்கு’ திருப்திகரமாக இருந்தது; எனவே, அவர்கள் பெரிய மனதுடன் திளைப்பதில் வியப்பில்லை.

இது செயலற்ற ஊகம் அல்ல – இது துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். ‘தேசிய சமரசம்’ அல்லது உண்மையில் மூடல் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்போதுதான் நடக்கிறது. இது தாராள மனப்பான்மையுடன் பெரும்பான்மை சமூகம் பி, மற்றும் சி-தர குடிமக்கள் அனைவருக்கும் தரும் ஒரு சைகை ஆகும். குடியுரிமையின் படிநிலை பற்றி ஒரு மிருகத்தனமான பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் நபர்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டதற்கு பின்னர், இது கையளிக்க வேண்டிய பரிசாகும்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

உங்களுக்கு ஐந்து ஏக்கர் கிடைத்துள்ளது, இல்லையா? நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா? குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா? பின்னர் ஏன் இந்த புகார்கள்?

எல். கே. அத்வானி தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதன் வலி, வேர்வரை சென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘மூடுவதற்கான’ தாராள அழைப்புகளில் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. இரத்த யாத்திரையின் சங்கிலி தொடர் நிகழ்வுகள் நம்மை இந்த நிலைக்கு, அது சாலையின் முடிவல்ல என்றபோதும் கொண்டுவந்துள்ளது. மசூதியை வீழச் செய்ததன் மூலம் நவீன இந்தியாவின் மேற்கட்டுமானத்தை இடித்த, அத்வானி அப்போது ஒரு போர்வீரர், தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு வழிகாட்டியாக சுருங்கிப்போயிருக்கிறார்.

அவரால் இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், அவரின் சீடர்; அவரை வழியிலிருந்து தள்ளிவிட்டு அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து வெற்றி கண்டுள்ளார். முழுமையாக, உறுதியான தீர்மானத்துடன் நரேந்திர மோடி இந்தியாவை அனைத்து காலத்திற்குமாக மாற்ற விரும்பினார். மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது, அது மாறிவிட்டால் நிறுவனங்கள்கூட அவரை ஆதரிக்க காத்திருக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த நேரத்தில், எங்கள் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் மீறி, அவரை முக மதிப்பில் கொண்டு செல்வோம். மோடி உயர் பாதையில் செல்வதற்கு பெயர் பெற்றவர் – 2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதைக் கண்டோம் – பின்னர் தேர்தல் பிரச்சாரங்களில் மோசமான சொல்லாட்சியை நோக்கிய கூர்மையான திருப்பத்தையும் கண்டோம்… அவர் இன்னும் ‘ஒத்திசைவு கலாச்சாரம்’ வரிசையில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரா அல்லது வேறு வடிவத்திற்கு மாறுகிறாரா என்பதை வரவிருக்கும் பல தேர்தல்கள் காட்டும்… ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைமை திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை வெற்றியாகவோ இழப்பாகவோ யாரும் பார்க்கக்கூடாது என்றும் சொன்னது. காசியும் மதுராவும்கூட இடித்து தள்ளப்படும் என முன்பு சொன்னதற்கு மாறாக, விசுவ இந்து பரிசத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது தனது கடந்த கால திட்டம் எனவும் அது சொன்னது. இவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவையாக உள்ளன.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

ஆனாலும், சந்தேகப்பட மட்டுமல்ல கவலைப்படவும் இடமுண்டு. இவை தெளிவான நிகழ்ச்சி நிரலோடு, அந்த இலக்கை நிறைவேற்ற முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய நிறுவனங்கள். அவர்கள் இந்தியா பற்றிய ஒரு பார்வையை தங்கள் மனதில் வைத்துள்ளனர். அதை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, தேவைப்பட்டால், மூர்க்கமாகவும் நகர்வார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த

மசோதார், பொது சிவில் சட்டம் மற்றும் பல அந்த இலக்கை அடைவதற்கான படிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பல அரசியலமைப்பு விதிகளுக்கு ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயமாக அந்த விரோதப் போக்கிற்கு வழிவகுக்கும். சில நடவடிக்கைகள், அயோத்தி வழக்கு போன்றவை பல தசாப்தங்களாக நடக்கும், மற்றவை அவசர வேகத்துடன் நடக்கும்.

தீர்மானம் மட்டுமல்ல, நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் இருக்கும்போது உண்மையான சிகிச்சைமுறை நிகழ்கிறது. இரண்டுமே அதிகமாக குறிப்பிடப்படவில்லை. வெற்றிகரமான தன்மை இல்லாதது எல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறி அல்ல. இது நடவடிக்கைகளில் ஒரு மந்தமானது, மூச்சு பிடிக்க நேரம் தேவைப்படக்கூடியது. இதன் பொருள் என்ன என்பதற்கான முழு தாக்கங்களையும் நாடு இன்னமும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அவர்கள் தீர்ப்பை தங்கள் மனதில் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு சொந்தம் என அழைத்த நிலத்தில் நிகழ்ந்த மாறுதல் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை – இனி யாராவது சிலரின் கண் சில தேவலாயங்கள் மீது பட்டு, அவற்றை வீழ்த்த கோரினால் அதை யாரால் தடுக்க முடியும்?

இல்லை, இது முடிவு அல்ல. இது ஒரு மைல்கல் – மற்றும் முக்கியமான ஒன்று, சந்தேகத்திற்கு இடமின்றி – ஆனால் நீண்ட பயணத்தில் உள்ள பலவற்றில் ஒன்று. இங்கிருந்து, இந்துத்துவா திட்டம் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் தொடங்கும்…


கட்டுரை : சித்தார்த் பாட்டியா
கலைமதி
நன்றி : தி வயர்

மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !

ங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் குவாட்ரில்லா என்ற நிறுவனம் கார்ப்பரேட் நீரியல் விரிசல் முறையில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் இரசாயனக் கூட்டுப் பொருட்கள் துரப்பணவு செய்துவருகிறது. இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டுவரும் சிறு சிறு நிலநடுக்கங்களுக்கு  இந்நீரியல் விரிசல் தொழில்நுட்பம்தான் காரணம் எனக் கண்டறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இத்தொழில்நுட்பமுறைக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது.

பூமியைத் துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியேற்றி, மணல் மற்றும் பல்வேறு இரசாயனக் கலவைகளைப் பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி, அடிப்பகுதியில் வெடிப்புகளை ஏற்படுத்தி மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல் கேஸையும் விடுவித்துப் பிரித்தெடுப்பதே நீரியல் விரிசல் முறை. இத்தொழில்நுட்பம் நிலநடுக்கம் உள்ளிட்டுப் பல்வேறு சுற்றுச்சூழல் பேராபத்துக்களை உருவாக்கக்கூடியது எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் சமூக இயக்கங்களும் கூறிவருவது உண்மைதான் என்பதை இங்கிலாந்து நாட்டு அனுபவம் நிரூபித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையை மனித குலத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம் என்றும் ஷேல்வாயு தேடலில் எதையும் மிச்சம் வைக்க வேண்டாம்” என்றும் கூறிவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அமைந்திருக்கும் அரசுதான் தற்பொழுது இத்தொழில்நுட்பத்திற்குத் தற்காலிகத் தடையுத்தரவை விதித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையால் இனி எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று நிரூபிக்கும் வரை இந்தத் தொழிட்நுட்ப முறைக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். “இத்தடையை நிரந்தரமாக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறார், இங்கிலாந்தின் தொழில் மற்றும் திறன் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சன்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

எதிர்வரவுள்ள தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து அரசு இத்தடையை விதித்திருப்பினும், இங்கிலாந்தில் ஷேல் கேஸ் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் (Oil and Gas Authority) அளித்திருக்கும் அறிக்கையில், “லங்காஷயர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்கு ஆபத்தான நீரியல் விரிசல் முறை தான் உடனடிக் காரணம்” என்பதை அறிவியல் ஆதாரங்களோடு உறுதிப்படுத்தி, இத்தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“தற்காலிகமானது எனினும், இங்கிலாந்தின் செல்வாக்குமிக்க புதைபடிவ எரிபொருள் தொழிற்கழகங்களுக்கு எதிராக உள்ளூர் மக்களால் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் வெற்றி இத்தடையுத்தரவு” என்கிறார் புவியின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் க்ரைக் பேனட்.

இங்கிலாந்து அரசு இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தடை விதிப்பதற்கு முன்பாகவே ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆபத்துக்கள் நிறைந்த தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுவிட்டது.

நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும் கைப்புண் போல நிரூபணமான பிறகும்கூட, இந்திய அரசு இத்தொழில்நுட்பத்திற்குத் தடை விதிக்க மறுக்கிறது.  குறிப்பாக, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இத்தொழில்நுட்ப முறையைக் கமுக்கமாகப் புகுத்தி, 271 இடங்களில் நீரியல் விரிசல் முறை மூலம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இழிபுகழ்’ அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பரங்கிப்பேட்டைலிருந்து வேதாரண்யம் வரையிலும், விழுப்புரம் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவிற்கும், சிதம்பரத்தை ஒட்டிய 731 சதுர கி.மீ. பரப்பளவில் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி  ஹைட்ரோகார்பனை துரப்பணவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பதும், அதன் பிறகு 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுப்பதும் தான் இத்திட்டங்களின் முழுநோக்கமாகும்.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் நீரியல் விரிசல் முறையின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களும், முற்போக்கு அறிவுத்துறையினரும் இத்தொழில்நுட்பம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

எனினும், மைய பா.ஜ.க. அரசும், அதனின் அடிவருடியான தமிழக அ.தி.மு.க. அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவதூறு செய்துவருவது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளா?” என எகத்தளமாகப் பரிகாசம் செய்தும் வருகின்றன.

நீரியல் விரிசல் முறைக்காக அரசு உருவாக்கியிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்று 2019-இல் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், “நீரியல் விரிசல் முறைக்கு எதிராக உள்ள அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேசமயம் தமிழக நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மக்களுக்கும் அறிவியல்  உண்மைகளுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அறத்தைக் கைவிட்டு, நீரியல் விரிசல் முறை குறித்த பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகளுக்குப் பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து, உண்மைகள் மக்களைச் சென்றடைந்துவிடாமல் தடுக்கும் அயோக்கியத்தனங்களில் இறங்கியுள்ளன.

இத்தகைய சூழலில்தான் இங்கிலாந்தில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் நீரியல் விரிசல் முறைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது உண்மை மக்கள் பக்கம் தான் இருக்கிறது  என்பதை நிறுவியிருப்பதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரியல் விரிசல் முறை ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஒரு தார்மீக உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.


மேகலை

பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

பாபர் மசூதி வழக்கு : நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள் நல்லதல்ல | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

சபரி மலையில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பு சொல்லாமல், 7 நபர் கொண்ட விரிவான பெஞ்சிற்கு மாற்றியமைத்ததன் காரணம் என்ன ?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியிருக்கும் தீர்ப்பு நியாயமானதா ?

– விடையளிக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

சுதர்சன் பத்மநாபனை இந்த அரசு கைது செய்யாது | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதில், சுதர்சன் பத்மனாபன் தான் மரணத்திற்குக் காரணம் என தற்கொலைக்கு முன் பாத்திமா குறிப்பிட்ட பின்னரும் சுதர்சன் பதமநாபனைக் கைது செய்ய இந்த அரசு தயங்குவது ஏன் ?  எச்.ராஜா , எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றம் செய்தும் கைது செய்யப்படாமல்  தப்பியதன் பின்னணிதான் இதற்கும் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.” 1952-ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை இன்றைக்குத் தமிழகமெங்கும் மேடை போட்டுப் பேச வேண்டிய தேவையை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தைத் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்ட தீட்சிதர்களின் முறைகேடும், அத்திவரதர் வைபவத்தில் அர்ச்சகர்கள், அதிகார வர்க்கம், தனியார் முதலாளிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு அடித்த கொள்ளையும் உருவாக்கியுள்ளன.

”அத்திவரதர் வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுக்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு? பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு?” என்பவை உள்ளிட்ட 28 கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருந்தனர். இதற்குச் ”சட்டப்பிரிவு 2(F)-இன்படித் தகவல் அளிக்க முடியாது” என்ற ஒற்றை வரிப் பதிலை, அதுவும் பதிலளிக்கும் அதிகாரியின் பெயர், பதவி எதையும் குறிப்பிடாமல் மொட்டைக் கடுதாசியைப் போலக் கொடுத்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம்.

அத்திவரதரைத் தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.

“கோவில் நிர்வாகம் வாங்கிய பல இலட்சம் ரூபாய் பெறுமான அங்கவஸ்திரங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய அங்கவஸ்திரங்கள்” குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லி பாபு கேட்டிருந்த கேள்விகளுக்குப் ”பதில் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகத்” தெரிவித்துள்ளார் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் தியாகராஜன்.

இவையெல்லாம் சாதாரண பக்தர்கள் தெரிந்துகொள்ளக்கூடாத தேவ இரகசியங்களா அல்லது பொதுமக்கள் அறிந்துகொள்ளக் கூடாத இராணுவ இரகசியங்களா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்திருப்பதே, அத்திவரதரைக் காட்டிப் பக்தர்களிடம் பகற்கொள்ளையடித்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, அத்திவரதர் முன்பாக உட்கார்ந்து தரிசிக்க 50,000; நின்று கொண்டே தரிசிக்க 30,000; அத்திவரதரோடு ‘செல்பி’ எடுத்துக்கொள்ள 10,000 என ரேட் நிர்ணயிக்கப்பட்டுப் பசையுள்ள பக்தாளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பிடுங்கப்பட்டிருக்கிறது.

தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டு ஆயிரம், ரெண்டாயிரம் எனப் பக்தர்கள் தாராளமாகக் கொடுத்த காணிக்கைகள், உண்டியலுக்குப் பதிலாக அர்ச்சகர்களின் தட்டுகளில் விழுவதை உத்திரவாதப்படுத்தும் திட்டத்தோடு உண்டியல்களின் எண்ணிக்கை சொற்பமாகவே வைக்கப்பட்டன. எவ்விதக் கணக்கிற்குள்ளும் வராமல் நடந்த கொள்ளையிது.

படிக்க:
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
♦ சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

மிக முக்கியமாகச் சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டு விற்பனையின் மூலம்தான் கோடிகோடியாகக் கொள்ளையடித்திருக்கிறது, அர்ச்சகர்கள், அதிகாரவர்க்கம், முதலாளிகள் கூட்டணி. இந்த அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள் “ரூ. 10,000-க்குப் புடவை வாங்கினால் பாஸ் இலவசம்” எனச் சலுகை அளித்துக் கல்லா கட்டியதன் மூலம் மட்டும் ரூ. 200 கோடிக்கும் குறையாமல் இலாபம் பார்த்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, ஜூனியர் விகடன் இதழ்.

இந்தக் கொள்ளையை நடத்துவதற்காகவே அத்திவரதரின் வரலாறு, மகிமைகள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மயக்கப்பட்டனர். இந்தக் கொள்ளையின் ஆதாரமாக இருந்த அத்திவரதர் ஆழ்ந்த சயனத்திற்குச் சென்றுவிட்டார். அவர் இனி படுத்தபடியும் கேட்கப் போவதில்லை, எழுந்து நின்றாலும் கேட்கப் போவதில்லை. பக்தர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பக்தியின் பெயரால் இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாறப் போகிறீர்கள்?

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 06

தாக்கும் சேனையின் பின்புலப் பாதைக்கு உயரே நடந்த விமானச் சண்டையின் இரைச்சலைக் கேட்டவர்கள் அதில் பங்கு கொண்டவர்கள் – சண்டையிடும் விமானங்களின் அறையில் இருந்தவர்கள் – மட்டுமே அல்ல.

சண்டை விமான ரெஜிமென்ட் கமாண்டர் கர்னல் இவனேவும் விமான நிலையத்தில் அலுவலகத்தின் திறன் மிக்க வானொலிக் கருவியில் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தாமே அனுபவம் மிக்க தேர்ந்த விமானி ஆதலால், சண்டை உக்கிரமாக நடக்கிறது, பகைவர்கள் அதிக பலமுள்ளவர்கள், வானைவிட்டுக் கொடுத்து விலக அவர்கள் தயாராயில்லை என்பதைக் கருவியில் கேட்ட ஒலிகளிலிருந்து அவர் புரிந்து கொண்டார். பாதைகளுக்கு மேலே பேதொத்தவ் கடினமான போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செய்தி விமான நிலையத்தில் விரைவாகப் பரவிவிட்டது. எவர்களுக்கெல்லாம் முடிந்ததோ அவர்கள் காட்டிலிருந்து திறப்பு வெளிக்கு வந்து கலவரத்துடன் தெற்கே பார்க்கலானார்கள். அங்கிருந்து தான் விமானங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது.

நீளங்கிகள் அணிந்த மருத்துவர்கள் போகிற போக்கில் எதனையோ சவைத்தவாறு சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். பின்புற முகடுகள் மேல் பிரம்மாண்டமான செஞ்சிலுவைகள் பொறித்த மருத்துவ உதவி லாரிகள் புதர்களுக்குள்ளிருந்து யானைகள் போல வெளியேறி, இயங்கும் எஞ்சின்கள் கடகடக்கத் தயாராக நின்றன.

மர முடிக் குவைகளின் பின்னிருந்து முதலில் வெளிப்பட்டு, வட்டம் இடாமல் கீழே இறங்கி விசாலமான திடல் நெடுக ஓடியது முதல் விமான ஜோடி – சோவியத் யூனியனின் வீரர் பெதோத்தவின் “எண் ஒன்றும்” அவரது பின்னோடியின் “அடுத்த இரண்டும்.” அவற்றை அடுத்து உடனேயே இறங்கிற்று இரண்டாவது இணை. திரும்பும் விமான எஞ்சின்களின் இயக்கத்தால் காட்டுக்கு மேலே வானம் தொடர்ந்து ஆர்த்தது.

“ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது…..” என்று எண்ணினார்கள் விமான நிலையத்தில் நின்றவர்கள். மேலும் மேலும் அதிக இறுக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இறங்கிய விமானங்கள் திடலிருந்து அகன்று தங்கள் காப்பிடங்களுக்குள் போய் அடங்கிவிட்டன. ஆனால் இரண்டு விமானங்கள் இன்னும் திரும்பவில்லை.

எதிர்பார்த்திருந்தவர்களின் கூட்டத்தில் நிசப்தம் குடி கொண்டது. ஒவ்வொரு நிமிடமும் கழிய மாட்டாமல் மெதுவாகக் கழிந்தது.

“மெரேஸ்யெவும், பெத்ரோவும்” என்று தணிந்த குரலில் சொன்னான் ஒருவன்.

திடீரென ஒரு பெண்ணின் குரல் திடல் முழுவதிலும் கேட்கும்படி களிப்புடன் கீச்சிட்டது:

“வருகிறது!”

எஞ்சினின் கடகடப்பு கேட்டது. பிர்ச் மர முடிகளின் பின்னிலிருந்து, தொங்கவிட்ட சக்கரங்களால் அவற்றை அனேகமாகத் துவைத்துக் கொண்டு பறந்து வந்தது. “பன்னிரண்டாவது” விமானம் அடிபட்டிருந்தது, அதன் வாலின் ஒரு துண்டு பிய்ந்திருந்தது, இடது இறக்கையின் வெட்டுண்ட முனை கம்பியில் இழுபட்டவாறு நடுங்கிற்று. விமானம் விந்தையான முறையில் தரையைத் தொட்டது, உயர எம்பிக் குதித்தது. மறுபடி தரையில் பட்டது, மீண்டும் எம்பிக் குதித்தது. அனேகமாக விமான நிலையத்தின் கோடிவரை இவ்வாறே குதித்துக் குதித்துச் சென்று திடீரென வாலை உயர்த்திக் கொண்டு நின்றுவிட்டது. ஏறுபடிகளில் நின்ற மருத்துவர்களுடன் மருத்துவ லாரிகளும் சில ஜீப் கார்களும் எதிர்பார்த்திருந்த கூட்டம் அனைத்தும் விமானத்தை நோக்கி விரைந்தன. விமானி அறையிலிருந்து யாரும் வரவில்லை.

வளைமுகடு திறக்கப்பட்டது. இருக்கையுடன் ஒண்டியபடி இரத்தக் குட்டையில் மிதந்தது பெத்ரோவின் உடல். தலை சக்தியின்றி மார்பின் மேல் துவண்டு தொங்கியது. நீண்ட வெளிர் முடியின் நனைந்த கற்றைகள் முகத்திற்குத் திரையிட்டிருந்தன. மருத்துவர்களும் நர்ஸ்களும் வார்களை அவிழ்த்தார்கள், இரத்தம் படிந்து குண்டுச் சிதறலால் ஊடறுக்கப்பட்டிருந்த பாராஷூட் பையை அகற்றினார்கள். அசைவற்ற உடலை வெளியே எடுத்துத் தரையில் கிடத்தினார்கள். பெத்ரோவின் கால்களில் குண்டுகள் தாக்கியிருந்தன, ஒரு கை சேதமுற்றிருந்தது. கருங்கறைகள் நீல விமானி உடையில் விரைவாகப் பரவின.

படிக்க :
அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !
பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

அங்கேயே பெத்ரோவின் காயங்களுக்கு உடனடியாகக் கட்டுக்கள் போடப்பட்டன. அவனை ஸ்டிரெச்சரில் கிடத்தி லாரியில் ஏற்றத் தொடங்கிவிட்டார்கள் ஆட்கள். அப்போது அவன் கண்களைத் திறந்தான். ஏதோ கிசுகிசுத்தான். ஆனால் அவனது ஈனக்குரல் ஒருவர் காதிற்கும் எட்டவில்லை. கர்னல் அவன் அருகே குனிந்தார்.

“எங்கே மெரேஸ்யெவ்?” என்று கேட்டான் பெத்ரோவ்.

“இன்னும் திரும்பவில்லை.”

ஸ்டிரெச்சர் மறுபடி தூக்கப்பட்டது. ஆனால் காயமடைந்தவன் தலையை விசையாக ஆட்டி. ஸ்டிரெச்சரில் இருந்து குதிக்க முயல்பவன் போன்று உடலை அசைத்தான்.

“நிறுத்துங்கள், என்னை அப்பால் கொண்டு போகாதீர்கள்! நான் போக மாட்டேன். மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்றான்.

பெத்ரோவ் தீவிரமாக எதிர்த்தான், கட்டுக்களைப் பிய்த்து அறுத்துவிடுவதாக அச்சுறுத்தினான். எனவே கர்னல் கையை ஆட்டி, முகத்தைத் திருப்பிக்கொண்டு, “சரி, ஸ்டிரெச்சரைக் கீழே வையுங்கள். மெரேஸ்யெவிடம் பெட்ரோல் இன்னும் நிமிடத்திற்கு மேல் காணாது. அதற்குள் இவன் உயிர் போய்விடாது” என்று பற்களை கடித்துக் கொண்டே சொன்னார்.

தமது விமானமானியின் சிவப்பு வினாடி முள் டிக்டிக் கென்று ஒலித்தவாறு எண் வட்டத்தில் சுற்றி வருவதைக் கவனித்தார் கர்னல். எல்லோரும் மெரேஸ்யெவ் விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். காதுகளை கூராக்கிக் கொண்டு உற்றுக் கெட்டார்கள். ஆனால் தொலைவில் கேட்ட பீரங்கிக் குண்டுகளின் முழக்கமும், அருகே மரத்தைக் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்தியின் அலகோசையும் தவிர வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை.

சில வேளைகளில் ஒரு நிமிடம் எவ்வளவு நீடிக்கிறது!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

2

பாபர் மசூதி வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என அளித்திருக்கும் தீர்ப்பு, மசூதி இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருப்பதாக நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர் ஏ.கே. கங்குலி.

பாஜக மற்றும் விசுவ இந்து பரிசத்தால் அணிதிரட்டப்பட்ட இந்துத்துவ காவிகள் 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி மசூதியை இடித்து தள்ளியது, ‘சட்டத்தின் ஆட்சியில் அதிர்ச்சிக்குரிய மீறல்’ என உச்சநீதிமன்றம் சொன்னது. ஆனால், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்து. ‘நிகழ் தகவுகளின் சமநிலையை’ கருத்தில் கொண்டு, சன்னி வக்ஃப் வாரியத்தைவிட வி.எச்.பி தரப்பு அதிக உரிமை கோரலைக் கொண்டுள்ளதாகக் கருதியது.

முரண்பாடாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி இடிக்கப்பட்டிருக்காவிட்டால் உச்சநீதிமன்றம் இந்து தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்க முடியாது என்று கங்குலி கூறினார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி

“பாபர் மசூதி இடிக்கப்படாமல், இந்துக்கள் நீதிமன்றம் சென்று ராமர் அங்கு பிறந்தார் என்று சொல்லியிருந்தால், நீதிமன்றம் அதை இடிக்க உத்தரவிட்டிருக்குமா?” என கேட்கும் அவர், “நீதிமன்றம் அதைச் செய்திருக்காது” என்கிறார்.

உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இடிப்பை குற்றம் என வர்ணித்தாலும், உச்சநீதிமன்றம் இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருக்கிறது என்கிற நீதிபதி கங்குலி, “மிகவும் துரதிருஷ்டமான போக்கை இது ஊக்குவிக்கிறது…” என்கிறார்.

இந்த வழக்கில் தான் ஒரு நீதிபதியாக இருந்திருந்தால் மசூதியை மீள் அமைக்கும் உத்தரவை இட்டுப்பிருப்பேன் என்றும் அப்படியில்லை எனில், அந்த இடத்தில் மசூதியோ கோயிலோ கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். அதற்குப் பதிலாக, மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற பிற மதச்சார்பற்ற பணிகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

பாபர் மசூதிக்கு அடியில் உள்ள அமைப்பு, இந்து அமைப்புதான் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதை தீர்ப்பு கூறவில்லை. நீதிபதிகள் மசூதியை கட்டவோ அல்லது நடுநிலையான நோக்கத்திற்கு அந்த இடத்தைப் பயன்படுத்தவோ அரசாங்கத்துக்கு ஆணை இட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

படிக்க:
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.

அவரைப்பொறுத்தவரை, பாபர் மசூதி இடிப்பை இந்துக்கள் கொண்டாடக்கூடாது. “மசூதியை இடிப்பது என்பது இந்து நம்பிக்கை அல்லது மதத்தின் பகுதி அல்ல. ஒரு மசூதியை இடிப்பது முழுமையாக இந்து மதத்துக்கு எதிரானது” என்பது அவருடைய விளக்கம்.

இந்திய தொல்லியம் கழகம் அளித்தது என கூறிய முழுமையற்ற அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் உள்ள கட்டமைப்பு இந்து கட்டமைப்பு தான் என உச்சநீதிமன்றம் எப்படி முடிவுக்கு வந்தது? எனவும் கங்குலி கேள்வி எழுப்பினார்.

1900-களில் பாபர் மசூதி (படம் : நன்றி – பிரிட்டிஷ் அருங்காட்சியகம்)

“இப்போது உச்சநீதிமன்றம் மசூதிக்கு அடியில் ஏதோ ஒரு கட்டமைப்பு இருந்தது என்று கூறுகிறது. ஆனால், அங்கே கோயில் கட்டமைப்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு, கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுகிறது. அங்கே, புத்த ஸ்தூபியோ அல்லது சமண கட்டமைப்போ அல்லது தேவாலயமோ இருந்திருக்கலாம். ஆனால், அது கோயிலாக இருந்திருக்க வில்லை. எனவே நிலம் இந்துக்களுக்கு அல்லது ராம் லல்லாவுக்குச் சொந்தமானது என்று எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் கண்டறிந்தது?”.

இசுலாம் நம்பிக்கையின் மேல் இந்து நம்பிக்கையை நீதிமன்றம் தேர்வு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்த சட்ட கல்வியாளர் ஃபைசான் முஸ்தபா போன்றவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதாக கங்குலி தெரிவித்தார். ‘ஒரு சாராரின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வழக்கை நீங்கள் தீர்க்க முடியுமா?’ எனக் கேட்கிறார் அவர்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

கடந்த வாரம் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், இந்தியா வந்த பல்வேறு பயணிகள் பாபர் மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததாக எழுதியுள்ளனர். எனவே, நீதிமன்றம் ஒரு காலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனைக்குரிய இடமாக பயன்படுத்தினர் என முடிவு செய்தது. முசுலீம் தரப்பு இது தங்களுடைய புனித இடம் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை சமர்பித்தனர். ஆனால், நீதிமன்றம் பயணிகள் எழுதியவை, முசுலீம் தரப்பினர் சமர்பித்த வருவாய் ஆவணங்களைவிட முந்தியவை எனக் கூறியது.

தீர்ப்பு ஒருமனதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் கையெழுத்திடப்பட்டாலும், நீதிபதிகளில் ஒருவர் இந்தக் கேள்விக்கும் ஒரு தனிப்பட்ட பார்வையை பதிவு செய்துள்ளார். ‘இந்த சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையா?’ இந்தக் கேள்வியைக் கேட்ட நீதிபதியின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. தீர்ப்பின் 116-ஆம் பக்கத்தின் முடிவில் பின் இணைப்பாக,

“மசூதியை நிர்மாணிப்பதற்கு முன்பிருந்தே, அதன் பின்னரும் பாபர் மசூதி இருந்த இடமே ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்பினர் என்பதன் அடிப்படையில் முடிவுக்கு வரப்பட்டுள்ளது” என எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பு கையொப்பமிடப்படவில்லை என்பது தீர்ப்புகள் எழுதப்படும் முறையிலிருந்து விலகியிருக்கிறது என்பதோடு, “இது மிகவும் விசித்திரமானது மற்றும் மிகவும் தீவிரமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பென்பது மிகவும் தீவிரமான விசயம்” என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.


கலைமதி
நன்றி : தி வயர்

நவீன வேதியியலின் கதை | பாகம் 02

நவீன வேதியியலின் கதை | பகுதி – 02

ரசவாதத்தின் மருட்சியில் இருந்தும் பிரமிப்பிலிருந்தும் எழுந்து வந்த வேதியியல் ஃபிலாஜிஸ்டன் சங்கிலியில் கட்டுண்டு கிடந்தது. பிளாக், பிரிஸ்ட்லி மற்றும் லவாய்சியர் ஆகியோரின் கண்டுபிடிப்புகளால் அது விடுவிக்கப்பட்டது.

ஃபிலாஜிஸ்டன் கருதுகோள் அறிவியல் ஆய்வுகளுடன் முரண்பட்டது என்பதால் அதை நிராகரித்த லவாய்சியர் கலோரிக் (caloric) கருதுகோளை முன்வைத்திருந்தார்.  பொருட்கள் வெப்பம் அடைவதற்கு  அவற்றின் உள்ளே இருக்கும் கலோரிக் என்ற திரவப் பொருள் தான் காரணம் என்றார்.

இந்தக் கருதுகோளுக்கு மிகத் துடிப்பான இளவயது ஆய்வாளர் ஒருவர் மூலம் ஆபத்து காத்திருந்தது. அவர் இங்கிலாந்தின் வேதியலாளர் ஹம்ஃப்ரி டேவி; பொருட்கள் வெப்பம் அடைவதற்கு அவற்றுள் இருக்கும் மூலக்கூறுகளின் நகர்வும் அதனால் ஏற்படும் உராய்வுமே  காரணம் என்று நினைத்தார்.

இரண்டு பனிக்கட்டிகளை ஒன்றோடு ஒன்று அழுத்தி உராயும்போது, உராயும் பரப்பில் புறவெப்பத்தின் தாக்கம் களையப்படுகிறது. அதே சமயம் பனிக்கட்டிகள் உருகுகின்றன. இது உராய்வின் மூலம் உருவாகும் வெப்பத்தால் ஏற்படுகிறது என்பதை டேவி நிருபித்தார். இந்த ஆய்வு முடிவை 1799- ம் ஆண்டு “வெப்பம், ஒளி மற்றும் ஒளிக் கலவைகள் பற்றிய கட்டுரை”- யில் பதிப்பித்தார்.

அதன் பின் டேவி வாயுக்களை தயாரித்து அவற்றை சோதிக்கும் பணியில் ஈடுபட்டார். வாயுக்களை அவர் முதலில் தன் மீதே பரிசோதித்து கொண்டார். ஒரு குறிப்பிட்ட வாயுவை அவர் உள்ளிழுத்த போது உணர்வின்மை ஏற்பட்டது. தற்போது மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சு தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு தான் அந்த வாயு. இதேபோல சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடையும் கண்டுபிடித்தார்.

வேதியலாளர் ஹம்பிரி டேவி

டேவி தனது குறிப்பேடுகளில் “டேவி மற்றும் நியூட்டன்” என்று எழுதி வைத்தார். டேவி தன்னை நியூட்டனுடன் ஒப்பிட்டுக் கொண்டதும், தம்மை வேதியியலின் நியூட்டன் என்று கருதிக் கொண்டதும் வெறுமனே தற்பெருமை மட்டுமல்ல. அது ஒரு கனவு. வேதியியல் துறையில் தாம் நியூட்டனைப் போன்று திருப்பங்களை, பாய்ச்சல்களை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

இதனிடையே 1801-ம் ஆண்டு லண்டன் ராயல் சொசைட்டி அறிவியல் கழகம் தனது வேதியியல் நிறுவனத்தில் மக்களிடையே அறிவியல் விரிவுரைகளை நிகழ்த்த டேவியை பணியில் அமர்த்திக் கொண்டது. டேவியின் விரிவுரைகள் லண்டனில் பிரபலமாகி மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. இந்த விரிவுரைகளில் இருந்து மைக்கேல் ஃபாரடே உந்துதலைப் பெற்று, டேவியின் உதவியாளராக சேர்ந்ததும், அதன்பின் மின்னியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதும் தனிக்கதை.

உலகமும், உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய அடிப்படை பொருட்களால் ஆனது – என்ற பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கருத்து தகர்க்கப்பட்டு விட்டது. நீர் நிலம் காற்று ஆகியவையே கூட தனிமங்கள் என்ற அடிப்படைத் துகள்களால் ஆனவை – என்ற கருத்து உருவாகி விட்டது.

ஆனால், எல்லா இயற்கை பொருட்களில் இருந்தும் தனிமங்கள் எளிதாகப் பிரித்தறியப்பட்டு விடவில்லை. வடிகட்டுதல், அமிலத்தால் வினையூட்டுதல், வெப்பபடுத்துதல் போன்ற வேதியியலில் ஏற்கனவே அறியப்பட்ட செயல்முறைகளின் மூலம் சில இயற்கை பொருட்களிலிருந்து தனிமங்களை பிரித்தறிய இயலவில்லை.

படிக்க:
சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !
அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?

உதாரணமாக, இயற்கையில் கிடைத்த பொட்டாஷ் படிகத்திலிருந்து (Potash crystal) லவாய்சியர் தனிமத்தை பிரித்து எடுக்க முயற்சித்தார். அவர் பல்வேறு முறைகளை முயற்சித்தும், எவையும் பயனளிக்கவில்லை. பிரித்தறிவதற்கு புதிய வேதியியல் செயல்முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது.

இந்த நேரத்தில் மிக முக்கியமான திருப்புமுனை வேறொரு துறையிலிருந்து வந்தது. அன்றைய காலத்தில் மின்னாற்றல், மின்சாரம் என்பது புதிய துறை. பெரும்பாலான ஆய்வுகள், நிலை மின்னாற்றலைப் (Static Electricity) பற்றியும் அதை பயன்படுத்திக் கொள்வதைப் பற்றியுமே இருந்தன. இயங்கு மின்னாற்றல் (Dynamic Electricity) இன்னும் கண்டுபிடிக்கப்பட இல்லை. மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் ஒரு அமைப்பு அல்லது கருவி இன்னும் கண்டுபிடிக்கப் படாமலிருந்தது.

இத்தாலியைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்சாண்டரா வோல்டா(Alessandro Volta) 1799-1800 ஆம் ஆண்டு உலகின் முதல் மின்கலத்தை(Battery) கண்டறிந்தார். வோல்டா தாமிரம் மற்றும் துத்தநாக தகடுகள், நீர்த்த கந்தக அமிலத்தில் தோய்த்த துணி ஆகியவற்றை அடுக்கடுக்காக வைத்து தனது மின்கலத்தை(Voltaic pile) உருவாக்கினார். இது மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தது. இயற்பியலில் (மின்னியல் துறையில்) புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது.

ஹம்ஃப்ரி டேவி மின்னாற்றல் வேதிவினையின் விளைவாகதான் உருவாகிறது என்று நம்பினார். அதனால் அதன் தலைகீழ் விளைவாக – மின்சாரம் பாயும் போது அது வேதிவினையை தூண்டக்கூடும் என்று நினைத்தார். அதை தனது ஆய்வுகளில் பயன்படுத்த தலைப்பட்டார். மின்சாரத்தை நீரில் பாய்ச்சிய போது அதிலுள்ள மூலக்கூறுகளை பிரித்து ஹைட்ரஜன் ஆக்சிஜன் வாயுக்களை உருவாக்கியது. மின்னாற்பகுப்பு முறை (Electrolysis) தோற்றம் பெற்றது.

மின்கலத்தை கண்டுபிடித்த அலெக்சாண்டரா வோல்டா.

1807-ம் ஆண்டில் இதை காஸ்டிக் பொட்டாஷின் மீது பரிசோதித்துப் பார்க்கத் தீர்மானித்தார் ஹம்ஃப்ரி டேவி. பொட்டாசை நீரில் கரைத்து அதில் மின்சாரத்தை பாய்ச்சி முயற்சி செய்தார். அது பொட்டாசை விட்டுவிட்டு நீரை மட்டும் ஹைட்ரஜன் – ஆக்சிஜனாக பிரித்தது. பின்னர் பொட்டாஷை உருக்கி உருகிய நிலையில் மின்சாரத்தை பாய்ச்சி முயற்சி செய்தார். அது பிரிந்து புதிய தனிமம் பொட்டாசியம் (Potassium) கண்டறியப்பட்டு விட்டது.

பொட்டாசியத்தை கண்டுபிடித்த மறுநாளே அதே மின்னாற்பகுப்பு முறையை காஸ்டிக் சோடாவில் முயற்சி செய்தார். அதன் மூலம் சோடியம் தனிமத்தை கண்டறிந்தார். அடுத்த ஓராண்டுக்குள் பேரியம்(barium), கால்சியம்(calcium), மக்னீசியம்(magnesium), ஸ்ராண்டியம்(strontium) என்று ஆக மொத்தம் ஆறு தனிமங்களை கண்டறிந்தார் டேவி.

மின்வேதிப்பகுப்பின் மூலம் போரான்(boron), அயோடின்(iodine), லித்தியம்(lithium), சிலிகான்(silicon), அலுமினியம்(aluminum) ஆகிய மேலும் ஐந்து தனிமங்கள் வெவ்வேறு அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதும் இருந்த வேதியியலாளர்கள் இந்த புதிய செயல்முறை நுட்பத்தைப் பயன்படுத்தி மேலதிகமான தனிமங்களைக் கண்டுபிடிக்க துவங்கினர்.

தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஓட்டி மூலக்கூறுகளாக இருக்கின்றன. அப்படி அவற்றை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ள விசை எது என்ற கேள்வி எழுந்தது. மின்சாரம் சேர்ந்துள்ள மூலக்கூறுகளை பிரிக்கிறதென்றால் அவற்றுக்கிடையில் மின் விசை ஒன்று செயலாற்ற வேண்டும் என்று கருதினார் டேவி. இந்த கருதுகோள் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் நிரூபிக்கப்பட்டது.

லவாய்சியரின் பட்டியலில் மேலும் தனிமங்கள் சேர்க்கப்பட்டு 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இயற்கையாக உருவாகும் 92 தனிமங்களில் 55 கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன. அவறுக்கு இடையிலான ஒற்றுமை, தொடர்புகள் மற்றும் உருப்படிவம் (pattern) என்ன? இந்தக் கேள்வி இன்னும் தீர்க்கப்படாமலே இருந்தது.

ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளருமான ஜான் டால்ட்டன் இதற்கு விடையளிக்க முற்பட்டார். அது வேதியியலில் மட்டுமின்றி இயற்பியலிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.

படிக்க:
பிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44
♦ துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

தனிமங்களிருந்து சேர்மங்களை உருவாக்கும் போது அவை ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்திலேயே இணைகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். உதாரணமாக, ஒரு சோடியம் துகளும், ஒரு குளோரைடு துகளும் சேர்ந்து சோடியம் குளோரைடு உருவாகிறது. ஒரு ஆக்சிஜன் துகளும் இரண்டு ஹைட்ரஜன் துகளும் இணைந்து நீர் உருவாகிறது. இது அறுதி விகிதசம விதி (Law of definite proportions) எனப்படுகிறது.

இவ்வாறு நடக்க வேண்டுமெனில், ஒவ்வொரு தனிமமும் அதன் தனித்துவமான கட்டுமானத் துகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை தனித்துவமான அளவு, நிறை, பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு தனிமங்கள் வெவ்வேறு நிறை, பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துகள்களை அவர் அணுக்கள் என்று அழைத்தார். பண்டைய இந்திய மற்றும் கிரேக்க தத்துவவியலாளர்கள் முன்வைத்த அணுக் கோட்பாட்டிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார் டால்டன்.

ஜான் டால்டன்

மேலும், இரண்டு தனிமங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மத்தைத் தருவதைக் கண்டறிந்தார் டால்டன். அதில் முதல் தனிமத்தின் நிறையை நிலையானதாகக் கொண்டால் சேரும் இரண்டாவது தனிமத்தின் இரண்டு வெவ்வேறு நிறைகள் இரண்டு வெவ்வேறு சேர்மத்தை உருவாக்குகின்றன. இந்த இரு வேறு வினைகளில் இரண்டாவது தனிமத்தின் நிறைகளுக்கிடையான விகிதம் எளிய முழு எண்களின் விகிதத்திலிருக்கும் என்றார். இது மடங்கு விகித விதி (Law of multiple proportions) எனப்படுகிறது.

உதாரணமாக, 100 கிராம் கார்பனுடன், 133 கிராம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து ஒரு வகை ஆக்சைடையும் (கார்பன் மோனாக்சைடு), 266 கிராம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து மற்றைய வகை ஆக்சைடையும் (கார்பன்–டை-ஆக்சைடு) தருகின்றன. 100 கிராம் கார்பனுடன் வினைபடும் ஆக்சிசனின் நிறை விகிதமானது 266:133 = 2:1 எளிய முழு எண்களின் விகிதமாகும்.

முதல் முறையாக அணு நிறையின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தி வைத்தார் டால்டன். அவர் அணு நிறையை சரியாகக் கணக்கிடவில்லை என்றாலும் அறிவியியலுக்கு சரியான திசைவழியை உருவாக்கினார். இவற்றை 1808-ம் ஆண்டு தனது வேதியியல் தத்துவத்தின் புதிய அமைப்பு (A New System of Chemical Philosophy) நூலில் பதிப்பித்தார். தனிமங்கள் வெவ்வேறு அணு நிறையைக் கொண்டிருக்கின்றன என்பதை அப்போது மிகச்சில வேதியலாளர்களே ஏற்றுக் கொண்டனர்.

வெவ்வேறு தனிமங்களின் வெவ்வேறு அணு நிறைகள் குறித்த கருத்தை தீவிரமாக கொண்டிருந்த சில அறிவியலாளர்களில் ஸ்வீடனைச் சேர்ந்த ஜான்ஸ் ஜேக்கப் பெர்செலியசும் (Jöns Jacob Berzelius) ஒருவர். முன்னதாக, சிலிக்கான், தோரியம், சீரியம் மற்றும் செலினியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்திருந்தார் பெர்செலியஸ். டால்டனின் கோட்பாட்டை கேள்விப்பட்டவுடன் தனிமங்களின் அணு நிறை குறித்த தேடலில் (pursuit of atomic weights) ஈடுபட்டார். அணு நிறையை துல்லியமாகக் கண்டறியும் முயற்சியில் சுமார் பத்தாண்டுகள் 2000-க்கும் மேற்பட்ட தனிமங்கள் மற்றும் சேர்மங்களைக் கொண்டு செய்த அயராத சோதனைக்குப் பின் 45 தனிமங்களின் அணு நிறையை கண்டறிந்தார். அவை மற்ற வேதியியலாளர்களின் கணக்கீடுகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஹைட்ரஜனைப் போன்ற எளிய தனிமங்களை தவிர மற்றவற்றின் நிறையில் ஒத்த கருத்து எட்டப்படவில்லை.

ஜெர்மானிய வேதியியலாளர் ஜோகன் டோபரீனர் (Johann Döbereiner) வேதிப்பண்புகளைக் கொண்டு தனிமங்களின் ஒத்த பண்புகளைக் கண்டறிய முற்பட்டார். லித்தியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அணு நிறையும் பண்புகளும் சோடியம் அணுவுடன் நெருக்கமாக இருந்தது. இதே போன்று நான்கு ஒத்த பண்புகளைக் கொண்ட மும்மைத் (Triads) தனிமங்களைக் கண்டறிந்தார்.

இத்தாலிய வேதியியலாளர் ஸ்டானிஸ்லாவ் கன்னிசரோ (Stanislao Cannizzaro) அணு நிறையை அளப்பதற்கான புதிய முறையை முயற்சித்து வந்தார். சம பருமன் – கன அளவுள்ள (Volume) வாயுக்களில், சம எண்ணிக்கையில் துகள்கள் (அணுக்கள்) இருக்கும் என்பது ஏற்கனவே 1811-ல் இத்தாலியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் அமேடியோ அவகாதரோவால் (Amedeo Avogadro) முன்மொழியப்பட்டு, நிரூபிக்கப்பட்டிருந்தது. ஒத்த பருமனில் வாயு நிலையில் அணு எடையை அளக்கும் முறையை முன்வைத்தார் கன்னிசரோ. ஜெர்மனியின் கார்ல்ஸ்ருஹே (Karlsruhe) நகரில் 1860–ல் நடந்த உலகின் முதல் வேதியியலாளர்கள் மாநாட்டில் கன்னிசரோ அணு நிறையை அளப்பதற்கான தனது புதிய முறையிலான நியமத்தை (Standard) சமர்பித்தார். இதன் மூலம் அணு நிறைகள் துல்லியமாக அளக்கப்பட்டன. ஆனால், இன்னும் வரிசைப் படுத்தப்படவில்லை.

இதற்கு அக்கம் பக்கமாக புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பும் நடந்து வந்தது. வேதியியலாளர்கள் பண்டைய காலத்திலிருந்தே கைக்கொள்ளும் சோதனை முறைகளில் ஒன்று சுடர் சோதனை (flame test). பண்டைய அரபு இரசவாதிகள் பொருட்களை நெருப்பில் இடும்போது வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு நிறத்தில் எரிவதைக் கண்டறிந்தனர். ஆனால் தனிமங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரே நிறத்தின் சிறு நிறபேதங்களுடன் (small shades) பல தனிமங்கள் எரிந்தன. அவற்றை பிரித்தறிய இயலவில்லை.

வேதியியலாளர் ராபர்ட் பன்சென் (Robert Bunsen) மற்றும் அவரது நண்பரும் இயற்பியலாலருமான கிரிச்சாஃப்.

இந்தப் பிரச்சினையை ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ராபர்ட் பன்சென் (Robert Bunsen) தனது நண்பரும் இயற்பியலாலருமான கிரிச்சாஃபிடம் (Kirchhoff) விளக்கினார். கிரிச்சாஃப் இதற்கு தீர்வாக நிறப்பிரிகை (Spectroscope) கருவியை கொண்டு வந்தார். அதைக் கொண்டு இருவரும் எரியும் தனிமங்களை உற்று நோக்கினார்கள். பொருட்கள் எரியும் போது வெளியிடும் ஒளியை இந்த நிறப்பிரிகை கருவி மூலம் பிரித்து அதன் நிறமாலையை காணமுடிந்தது. இன்றைக்கு பொருட்களின் மீது இருக்கும் பார்கோடை (Barcode) போல் ஒரே நிறத்தின் வெவ்வேறு நிறபேதங்களை தெளிவாகப் பார்க்க முடிந்தது. இந்த ஸ்பெக்ட்ரோஸ்கோப்பைக் கொண்டு பன்சென், கிரிச்சாஃப் இருவரும் இணைந்து 1860-61 ஆண்டுகளில் சீசியம்(Caesium), ருபீடியம்(Rubidium) ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்தனர்.

இதே நுட்பத்தைக் கொண்டு தாலியம் (Thallium), இண்டியம் (Indium) ஆகிய மேலும் இரண்டு தனிமங்கள் வெவ்வேறு அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வானியலாளர்கள் இந்தக் கருவியை விண்ணை நோக்கித் திருப்பி விண் பொருட்களின் நிறமாலையைக் காண தலைப்பட்டனர். விண் ஒளியை நிறப்பிரிகை செய்தபோது ஹீலியம் வாயு இருப்பது அதன் நிறமாலையிலிருந்து கண்டறியப்பட்டது.

1863–ம் ஆண்டு ஜான் நியுலேண்ட்ஸ் (John Newlands) என்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் தனிமங்களை அணு நிறை அடிப்படையில் வரிசைப் படுத்தினார். எந்த ஒரு தனிமமும், வரிசையிலுள்ள எட்டாவது தனிமத்தின் பண்புகளை ஒத்திருந்ததைக் கண்டறிந்தார். ஒத்த பண்புகளைக் கொண்ட எண்மைத் (Octaves) தனிமங்கள் என அவற்றை அழைத்தார். துரதிருஷ்டவசமாக சக அறிவியலாளர்கள் பலரால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பெர்செலியஸ் மற்றும் கன்னிசாரோவின் அணு எடைகளைக் கொண்டு ஒரு முறையிலும், வேதியியல் பண்புகளைக் கொண்டு டோபரீனரின் மும்மைத் தனிமங்கள் மற்றும் நியூலாண்டின் எண்மைத் தனிமங்கள் அடிப்படையில் மற்றொரு முறையிலும் என வேதியியலாளர்கள் இரண்டு வழிகளில் தனிமங்களை தொகுத்து வந்தனர். உருப்படிவம் (Pattern) மற்றும் வரிசைப்படுத்தி தொகுப்பதில் (Grouping) குழப்பம் நீடித்து வந்தது. தனிமங்களின் எண்ணிக்கையும் 63-ஆக உயர்ந்து விட்டது.

இந்தப் பிரச்சினையை ஒரு சீட்டு விளையாட்டு முறை தீர்த்துவிட்டதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

(தொடரும்)

மார்ட்டின்

« முந்தைய பாகம்                                                                                      அடுத்த பாகம் »

செய்தி ஆதாரங்கள் :
Alchemy: how a tradition spanning millennia became modern chemistry
ஆண்டவனை அச்சுறுத்தும் புதிய தனிமங்கள் – அறிவியல் கட்டுரை
Chemistry: A Volatile History

சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

சிலியில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சிலி தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன

சிலி நாட்டில், அரசின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சிலியில் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(12-நவம்பர்-2019) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அன்டோபகஸ்டா நகரில், தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்புக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்காள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பல்துறை, சுரங்கத்துறை, கட்டுமானம், கல்வி, அரசு ஊழியர்கள் மற்றும் பிற தொழிற்சங்க கூட்டமைப்புகளின் கூட்டணி சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவுக்கு கடந்த வாரம் ஒரு இறுதி எச்சரிக்கையை அளித்தது. ஐந்து நாட்களில் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறும் தவறினால் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை சமாளிக்கத் தயாராக இருக்குமாறு கூறினர். இதற்கு பினெரா பதிலளிக்கவில்லை.

சிலி அதிபர் பினெரா.

தொழிற்சங்கங்கள் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் தொழிற்சங்க ஏற்பாடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தன. ஆனால், அவர்களின் முதன்மையான கோரிக்கை – சிலி முழுவதும் நடைபெறும் போராட்டங்களை  ஒன்றிணைக்கும் ஒரே கோரிக்கை  : பரந்துபட்ட மக்களின் பங்கேற்போடு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில், கல்விப் பணியாளர்கள் சங்கத்தின் உள்ளூர் தலைவரான பமீலா பாசே இது குறித்துக் கூறுகையில் ” குடிமக்களின் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியலமைப்பை நாங்கள் இதற்கு முன்னர்  கொண்டிருக்கவில்லை” என்றார்.

அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-நவம்பர்-2019), இந்த புதிய அரசியலமைப்பிற்கான தனது ஆதரவை அறிவித்தது. ஆனால், இந்த செயல்முறை சட்டசபையில் கூடி விவாதித்தபின் நடைமுறைப்படுத்தப்படும் என்றது. இது போராட்டத்தில் ஈடுபவோரின் கோரிக்கைகளுக்கு எதிரானது. கடந்த செவ்வாயன்று (12 நவம்பர்) கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து  நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பதினான்கு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்து, புதிய அரசியலமைப்பிற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

“மாற்றத்திற்கான தருணம் இது. குடிமக்கள், தங்களது குரல்கள் கேட்கப்படாமலும், மதிகப்படாமலும் இந்த அரசியல் பிரிவினரால் மிகவும் சோர்வடைந்து விட்டனர்” என்கிறார் பசாச்சே.

வடக்கு சிலியில் நடந்த ஒரு அணிவகுப்பில் ஒரு எதிர்ப்பாளர்  ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஒரு எலும்புக்கூட்டை எடுத்துச் செல்கிறார்.

கடந்த செவ்வாயன்று (12-11-2019) வேலைநிறுத்த நடவடிக்கை ஒரு சில தொழிற்சங்க கூட்டமைப்புகளால் முதலில் முன்னெடுக்கப்பட்டது. எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் செப்புத் துறை தொழிற்சங்கங்கள் தாங்களும் பங்கேற்பதாக அறிவித்தன. சாண்டியாகோ விமான நிலையத் தொழிலாளர்கள், வால்ப்பரிசோ மெட்ரோ தொழிலாளர்கள், வேளாண் தொழில் சங்கங்கள் மற்றும் பலரும் இதில் இணைந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் போராட்டங்கள், தடுப்புகள் மற்றும் சாலை முற்றுகைகள் தொடங்கின. சிலியின் 4,270 கி.மீ (2,653 மைல்) நீளத்திற்கு பிற்பகல் வரை வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் முற்றுகைகள் நடந்து கொண்டிருந்தன.

“இது வெறுமனே ஒரு தொழிற்சங்க இயக்கமோ அல்லது ஒரு சமூக இயக்கமோ மட்டுமல்ல. சிலி மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிகளில் இறங்கியுள்ளனர். அதனால்தான் இது மிகப்பெரியது ” என்று அன்டோபகாஸ்டாவைச் சேர்ந்த கப்பல்துறை தொழிலாளர் சங்கத் தலைவரான எட்வர்டோ ரோஜாஸ் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், நகரத்தின் திறந்த பகுதியில் இருந்து இதை அவர் கூறினார். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியை நோக்கி திரண்டு வந்து கொண்டிருந்தனர்.

(கோப்புப் படம்)

ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களின் கூட்டணி 500,000 சிலி பெசோக்களை (635 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் முன்மொழிந்தது, தற்போது இது வெறும் 301,000 பெசோக்களாக (386 அமெரிக்க டாலர்கள்) தான் உள்ளது. இந்த திட்டங்களுக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் பரவலாக ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த வாரம், பினெரா அரசாங்கம், 350,000 பெசோக்கள் (444 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை அறிவித்தது. ஆனால், இந்த தொகையானது  நாம் முன்வைத்த கோரிக்கையைவிட மிகக் குறைவு என்பதைத்தாண்டி, உண்மையில், அரசாங்கத்தின் இந்த மானியமானது, உண்மையான ஊதிய உயர்வு அல்ல, என்று தொழிற்சங்கங்கள் விரைவாக இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டின. மேலும், 301,000 முதல் 350,000 பெசோ வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களை அரசாங்கம் வேறுபடுத்தி அவர்களுக்கேற்ற தொகையை செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அமைதியின்மையைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்தது. 2.4 முதல் 2.9 சதவிகிதம் என்றிருந்த அதன் ஆரம்ப கட்ட கணிப்பு 1.8 முதல் 2.2 சதவிகிதம் வரை தற்போது குறைந்துள்ளது என்று சிலி நிதியமைச்சர் இக்னாசியோ பிரியோன்ஸ் கடந்த வாரம் டிவிட்டரில் அறிவித்தார்.

டாலருக்கு நிகரான சிலியின் பெசோ கடந்த செவ்வாயன்று, ஒரு டாலருக்கு 800 பெசோக்களின் என்று வரலாற்றில் இல்லாத அளவு குறைந்தது.

பிரியோன்ஸ் பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் பின்னடைவு குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும், “இயல்புநிலை” என்ற உணர்வுக்கு நாடு திரும்ப உதவுமாறு சிலி மக்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாயன்று வேலைநிறுத்த நடவடிக்கைகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் சிலி பொருளாதாரத்தின் மிக சக்திவாய்ந்த சில துறைகளான சுரங்கம், பொருளுற்பத்தி துறை  மற்றும் விவசாயத் துறையைச் சேர்ந்தவர்கள். நாட்டின் பொருளாதாரம் இயற்கை வளம் மற்றும் பிற ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளதால் துறைமுக செயல்பாட்டை பெரிதும் நம்பியுள்ளது என்று தொழிற்சங்கத் தலைவர் ரோஜாஸ் குறிப்பிட்டார்.

சாரை சாரையாய் திரண்ட சிலி மக்கள். (கோப்புப் படம்)

“போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இது எங்கள் மூன்றாவது வேலை நிறுத்தமாகும். அரிக்காவிலிருந்து பண்டா அரெனா வரை அனைத்து துறைமுகங்களும் செயலற்று நிற்கின்றன. சிலி துறைமுகப் பணியாளர்கள் சங்கத்தைச் சாராத பிற துறைமுகங்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளன” என்று அவர் கூறினார்.

சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் கவுன்சில், தாம் ஒரு சர்வதேச அளவிலான ஆதரவு புறக்கணிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக எச்சரித்தது. ஐந்து கண்டங்களில் 125,000-க்கும் மேற்பட்ட கப்பல்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை, கடந்த வாரம் சிலி போராட்டக்காரர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான போலீசின் வன்முறை குறித்து ஒரு அறிக்கையில் தனது அக்கறையை தெரிவித்தது.

“துறைமுகத் தொழிலாளர் குடும்பத்திற்கு எதிரான அடக்குமுறை தீவிரமடையுமேயானால், சிலி குடியரசின் கப்பல்களில் இருந்து வரும் சரக்குகளை சர்வதேச அளவில் புறக்கணிப்போம்” என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

போலீசு மற்றும் இராணுவத்தினர் ஐவர் உட்பட, நெருக்கடியின் முதல் மூன்று வாரங்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டும், காயமடைந்துமுள்ளனர். இதில் ரப்பர் மற்றும் உலோக ஆயுதங்களைக்கொண்டு போலீசு தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சுமார் 180-க்கும் மேற்பட்டோரும் இதில் அடக்கம்.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில் தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்பில் லித்தியம் சுரங்கத் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

”சிலிக்கு தீவிர மாற்றம் தேவை, மக்கள் அந்த மாற்றத்தை செயல்படுத்த புதிய அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்க, அரசியலமைப்பு சட்டசபையில் மக்கள் பங்களிப்பைக் கோருகின்றனர்”, என்று அன்டோபகாஸ்டாவின் கலாச்சார தொழிலாளர்கள் சங்க அமைச்சகமான அன்ஃபுகல்ச்சுராவின் உள்ளூர் தலைவர் அலெஜான்ட்ரோ கார்சியா கூறினார்.

“அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகளில் மக்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

படிக்க:
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

கடந்த செவ்வாயன்று, போராட்டக்காரர்களால், “புரட்சியின் பிளாசா” என மறுபெயரிடப்பட்ட அன்டோபகாஸ்டாவின் “சோட்டோமேயர் பிளாசா”, தொழிற்சங்கக் கொடி, சிலி நாட்டுக் கொடி, தொழிற்சங்கக் கொடி மற்றும் எல்ஜிபிடி கொடிகளால் கலவையாக நிரப்பப்பட்டது.  அந்தோபகாஸ்டா பிராந்தியத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து பல மணிநேர அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தது. மைதானத்தில் கூட்டம் இரவில் இருமடங்காக அதிகரிக்கும் என்று ரோஜாஸ் எதிர்பார்க்கிறார்.

“இது இன்னும் பெருகும்…  ஒற்றுமையே வலிமை என்பதை நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம்.” என்கிறார் ரோஜாஸ்


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி : aljazeera