Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 318

பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!

முன்னாள் மைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுத் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் பிணை பெற்றிருக்கிறார்கள். பிணை ரத்து செய்யப்பட்டால், திகார்தான்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் “சாரதா சிட்பண்ட்ஸ்”, “ரோஸ் வேலி” நிதி நிறுவன மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழகத்திலோ தி.மு.க. மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகள் பாயப்போவதாகவும் முக்கியத் தலைவர் கைது செய்யப்படலாம் என்றும் எச்.ராஜா நேரடியாகவே மிரட்டுகிறார். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான 2 ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, ப.சிதம்பரத்திற்குப் பிணை வழங்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள், மற்ற எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றஞ்சுமத்திக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.க.வும் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக, அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டுவிட்டது. தனது இப்புதிய வேடத்திற்கு 2ஜி அலைக்கற்றை விற்பனை வழக்கு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு ஆகியவற்றை கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது.

“எனது அமைச்சரவையில் யாராவது ஒருவர் ஊழல் செய்தார் எனக் காட்ட முடியுமா?” எனச் சவால்விடுகிறார், மோடி. “தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்” என ஊழலுக்கு நியாயம் கற்பித்த காலம் பா.ஜ.க. ஆட்சியில் மலையேறிப் போய்விட்டதா, என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலும், கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த நில பேர ஊழலும், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலும் பா.ஜ.க.வின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் பழைய புராணங்கள். இனி உத்தமர் மோடி ஆட்சியில் நடந்து வரும் புதிய ஊழல் புராணத்திற்கு வருவோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

அரசுத் திட்டங்களில் சட்டத்தை மீறிக் கையூட்டுப் பெற்றால்தானே ஊழல், ஊழலையே சட்டபூர்வமாக்கிவிட்டால்..? பா.ஜ.க. ஆட்சியில் நடப்பது இத்தகைய சட்டபூர்வ ஊழல்கள்தான். இதற்குப் பணமதிப்பழிப்பு தொடங்கி நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை இயக்கும் உரிமத்தை அதானிக்கு வழங்கியது வரையிலான மோடி அரசின் பல்வேறு பொருளாதார முடிவுகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வழக்குகளையும் தனது அரசியல் இலாப நோக்கில்தான் நகர்த்தி வருகிறது, மோடி அரசு.

நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததாகப் பீற்றிக் கொண்டார் மோடி. ஆனால், அச்சட்டபூர்வ நடவடிக்கை, மோடியே கூறிய மூன்றரை இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குத்தான் பயன்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய சுமார் 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்கள் பா.ஜ.க ஆட்சியின் கடந்த ஆறு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பா.ஜ.க. அளித்த இந்தச் சட்டபூர்வத் தள்ளுபடியின் காரணமாக இந்திய வங்கித்துறையே இன்று திவால் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. அரசுக்கு நட்டமேற்படுத்திய 2ஜி விற்பனையை ஊழல் என்றால், இந்திய வங்கிகளைத் திவால் நிலைக்குத் தள்ளிய வாராக் கடன் தள்ளுபடியை என்னவென்பது?

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

காங்கிரசு அரசு 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதை ஊழல் எனச் சாடும் மோடி, தனது அரசு ரஃபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதைத் தேசப் பாதுகாப்பு என நியாயம் கற்பிக்கிறார். மாமியார் உடைத்தால் மண் குடமாம், மருமகள் உடைத்தால் பொன்குடமாம். ரஃபேல் கொள்முதல் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரை ஊழல் வழக்கில் உள்ளே தள்ளிய மோடி அரசுதான், இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் பத்திரமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் விமானம் ஏறியதாக வாக்குமூலமே அளித்தார் விஜய் மல்லையா.

தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, எந்த முதலாளி எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார் என்பதைக் கணக்குக்காட்டத் தேவையில்லை என்பது சட்டபூர்வமானது. அதாவது இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகள் இரகசியமாக ஓட்டுக்கட்சிகளுக்கு அளித்துவந்த கருப்புப் பண நன்கொடையை இத்தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டபூர்வமாக்கினார் மோடி. இதற்குப் பிரதிபலனாக கார்ப்பரேட் முதலாளிகள் பா.ஜ.க.விற்குத் தமது நன்கொடைகளை வாரி வழங்கினார்கள்.

இது மட்டுமின்றி, ஊழல் ஒழிப்புச் சட்டத்திலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவந்ததன் மூலம் அதிகார வர்க்க ஊழல்கள் அம்பலமாவதையும் அதிகாரிகள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவதையும் தடுத்தாண்டிருக்கிறார், உத்தமர் மோடி.

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. முன்னெடுக்கும் நடவடிக்கைகளோ ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற தார்மீக நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. மாறாக, ப.சி. போன்ற தனது நேரடி அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்க்கட்சிகளை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ப.சிதம்பரத்தையும், டி.கே.சிவக்குமாரையும் உள்ளே தள்ளியிருக்கும் மோடியின் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் எடப்பாடியையும், விஜயபாஸ்கரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இந்த அரசியல் சுயநலம்தான்.

தமிழகத்தில் கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி அரசின் ஊழல்களும் முறைகேடுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை. இவற்றையெல்லாம் அமித் ஷா கண்காணித்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுச் செய்திகள் வெளிவருவதைத் தாண்டி, இவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. அ.தி.மு.க.விற்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளோ, ஒன்று ஊறுகாய்ப் பானைக்குள் உறங்குகின்றன; அல்லது குற்றவாளிகளுக்கு விசாரணை அமைப்புகளே நற்சான்றிதழ் கொடுத்து அவ்வழக்குகளை ஊத்தி மூடிவிடுகின்றன.

மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் தமிழகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக, ஓ.பி.எஸ்.-இன் நெருங்கிய கூட்டாளி சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 34 கோடி ரூபாய் பெறுமான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. ஊரே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு அலைந்துகொண்டிருந்த வேளையில் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே ஊழல் –  முறைகேட்டின் அழிக்கமுடியாத சாட்சியமாக அமைந்தன.

இந்த வழக்கை விசாரித்து வந்த வருமான வரித்துறை இப்பொழுது சேகர்ரெட்டியை விடுவித்துவிட்டது. கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சேகர் ரெட்டி நேர்மையான வழியில் சம்பாதித்தவை என நற்சான்றிதழும் வழங்கிவிட்டது. இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்ன? ரெய்டு நடந்தபோது ஓ.பி.எஸ். சசிகலா கோஷ்டியில் இருந்தார். அதன் பின் அவர் பா.ஜ.க.வின் தீவிர விசுவாசியாக மாறினார். அந்த மாற்றத்திற்குக் கிடைத்த மரியாதைதான் சேகர்ரெட்டி மீதான வழக்கு வாபஸ்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் கோஷ்டி, ஓ.பி.எஸ். கோஷ்டி என இரண்டாகப் பிரிந்து நின்றபோது, தினகரன் கோஷ்டிக்கு எதிராக வருமானவரிச் சோதனை நடத்தி, பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றஞ்சுமத்தி வருமான வரித்துறையினர் கொடுத்த பட்டியலில் விஜயபாஸ்கருடன் எடப்பாடியின் பெயரும் இருந்தது. பா.ஜ.க. மத்தியஸ்தம் செய்துவைத்து, ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்த பின்னர் ஓ.பி.எஸ். துணை முதல்வரானார். ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கிலோ வருமான வரித்துறை விசாரணை என்ற பம்மாத்துதான் நடந்து வருகிறது.

படிக்க:
குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !
♦ அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

2016-ஆம் ஆண்டு சென்னை நகரில் பல இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. அவ்வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை என்ற பூச்சாண்டியைத் தாண்டி அந்த வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் நடந்துவிடவில்லை.

அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் குட்கா விற்பனையோ கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கென அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசார் என அனைத்து மட்டத்திலும் மாதம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம் மட்டும் 300 கோடி ரூபாய் என ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா’ விஜயபாஸ்கர்.

இவை தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை வாங்கியதில் ஊழல், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வில் ஊழல், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஊழல், போக்குவரத்துத் துறையையே முற்றிலும் முடக்கிப் போட்டுள்ள போக்குவரத்து ஊழல், அரசு கட்டிடங்களுக்கு முறுக்குக் கம்பி வாங்கியதில் ஊழல், ஏரி மணல் அள்ளுவதில் ஊழல் என திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க. இந்தக் கொள்ளைக்கூட்டத்தோடு கூட்டணி கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மேலிடத்திற்கு, அ.தி.மு.க. கட்டும் கப்பம் எவ்வளவு என்பதுதான் இவ்வூழல்களில் பொதிந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

அ.தி.மு.க. என்று மட்டுமல்ல, தனக்கு ஆதாயம் என்றால் எத்தகைய கிரிமினல் பேர்வழிகளையும் காத்து இரட்சிக்க பா.ஜ.க. தயங்குவதேயில்லை.

எடுத்துக்காட்டாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் மீது வருமான வரித்துறைச் சோதனைகள் நடத்தப்பட்டு, வருமான வரி மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், அப்பொருளாதாரக் குற்றவாளிகளை மோடி எவ்விதக் கூச்சமும் இன்றித் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் தனது பலத்தைக் கூட்டிக்கொண்டுவிட்டார். இனி அந்த வழக்குகளின் கதி அதோகதிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை உள்ளே தள்ளிய மோடி – அமித் ஷா இணை, பொருளாதாரக் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகுல் ராயை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான முகுல் ராய் பா.ஜ.க.விற்குத் தாவியதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுதான் இந்தத் தலைவர் பதவி.

எனவே, பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, அக்கட்சிக்கோ, தனிப்பட்ட விதத்தில் மோடிக்கோ ஊழலை எதிர்த்து சவுண்டு விடுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !!

2011 -ம் ஆண்டில் ஒரு இரவு. அயோத்தியாவைச் சேர்ந்த நாக வைராகியான ராம் அசாரே தாஸ் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட செத்தே போய்விட்டோம் என்று நினைத்த நேரத்தில், தன் வலுவையெல்லாம் திரட்டி அந்த கொலைகாரனைத் தள்ளிவிட்டார் ராம் அசாரே. தன்னைக் கொல்ல வந்தவன் யாரென அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது தன் சீடனான பிரிஜ்மோகன்தாஸ் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

ராம் அசாரே தாஸ் அயோத்தியாவில் உள்ள சௌபுர்ஜி கோவிலின் மகாந்த். அதாவது தலைவர். ஒரு நாள், அதையும் ராம் அசாரேவிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு, அவரைத் தெருவில் விட்டுவிட்டார் பிரிஜ்மோகன் தாஸ்.

மேல் இருப்பது அயோத்தியாவில் கோவில்களை அடைய நடக்கும் போட்டியின் ஒரு சிறு துளி. அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலின் மகந்த்தும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதுவும் தனது அடுத்த மடாதிபதியை நியமித்துவிட்டால் உயிர் எப்போது போகுமெனத் தெரியாது.

அதேபோல, சில மடங்களின் தலைவர்கள் இன்னொரு மடத்தையும் அதன் சொத்துகளையும் அபகரிப்பதும் நடக்கும். சீடர்களை நியமிக்காமலேயே சீடர்கள் தோன்றுவார்கள். இது எல்லாம் அயோத்தியில் நடக்க ஆரம்பித்தது 1980-களில்.

இதன் பின்னணியில் இருப்பது வி.எச்.பி என்கிறது தீரேந்திர கே. ஜா எழுதியுள்ள Ascetic Games: Sadhus, Akharas and the making of the Hindu Vote என்ற புத்தகம்.
அயோத்தியில் உள்ள கோவில்களும் மடங்களும் எப்படி முழுமையாக ஒரு அரசியல் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, அலகாபாத் கும்பமேளா எப்படி ஒரு அரசியல் கருத்துருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உத்தரப்பிரதேசத்திற்கு வெளியில் இருப்பவர்கள் ஒரு போதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத பல தகவல்களை தீரேந்திர ஜா இந்தப் புத்தகத்தில் கொட்டியிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

வைணவ, சைவ அகாராக்களுக்கிடையிலான மோதல், மகாமண்டலேஸ்வர் போன்ற அர்த்தமில்லாத பட்டங்களின் விற்பனை, கும்ப மேளாவுக்காக போலியாக நாகா சாதுக்கள் பணத்திற்காக அணிவகுப்பது, அந்த நகரமே கிரிமினல்களின் கூடாரமாகியிருப்பது என திகைக்கவைக்கிறது புத்தகம்.

கோவில்களும் மடங்களும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

புத்தக ஆசிரியரான தீரேந்திர கே. ஜா பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுத ஏன் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. இவர் ஏற்கனவே, Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Ayodhya: The Dark Night ஆகிய நூல்களை எழுதியவர். தி கேரவான், ஓபன், ஸ்க்ரால், தி டெலகிராஃப் ஆகிய பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.

புத்தகத்தை Westland பதிப்பகத்தின் இம்ப்ரிண்டானா Contxt வெளியிட்டிருக்கிறது. 218 பக்கங்கள். விலை ரூ. 599/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

1990 – பிப்ரவரி 10-ல், வாரங்கல் ககாதியா பல்கலைக் கழகத்தில் நடந்த ஆந்திரப்பிரதேச வரலாற்றுக் காங்கிரசில், “வகுப்புவாதமும் இந்தியாவின் பழமையும்” என்ற தலைப்பில் பேசப்பட்ட மமிடிப்புடி வெங்கிட ரங்கையா நினைவுச் சொற்பொழிவின் விரிவே இந்த வெளியீடு.

… வகுப்பு, வகுப்புவாதம் ஆகியவற்றை வரையறுத்துச் சொல்லுவது சிரமம். இனத் தன்மை, தொழில், வாழும் இடம், ஜாதி கடைசியாக மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் வகுப்பு உருவாகலாம். ஆனால் வகுப்புவாதம் எனும் பொழுது நாம் மத சமூகங்களையே மனதில் கொள்கிறோம். இந்தியாவில் சமீப காலங்களில் சீக்கிய மத அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான தனித்தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் பொதுவாக இந்தியாவில் வகுப்பு வாதமானது இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகியோரிடையேயுள்ள உறவின் தன்மையிலேயே பார்க்கப்படுகிறது.

அடிப்படையான மத நம்பிக்கைகள், சடங்குகள், நடைமுறைகள், ஆகியன இயற்கை ஏற்படுத்தும் தடங்கல்களை மனிதன் வெற்றி கொள்ளவும், சமூகப் பிரச்சினைகளில் சகமனிதன் ஏற்படுத்தும் பிரச்சினைகளை வெற்றி கொள்ளவு மான தொடர்ச்சியான போராட்டத்தில் தோன்றி வளர்கின்றன. இயற்கை தரும் சிரமங்களை அறிவுப்பூர்வமாக விளக்குவதற்கு மக்கள் சிரமப்படும்போது, அவர்கள் தெய்வீகமான, மத நம்பிக்கையான விளக்கங்களில் இறங்குகின்றனர். இவை பெருந்திரளான ஆண் பெண் கடவுள்களை உருவாக்கியுள்ளன. நமக்கு அனுகூலமான அல்லது எதிரான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மாதிரியான தெய்வீக சக்திகளே ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. (நூலிலிருந்து பக். 3 – 4)

… மதங்களை அவை தோன்றிய சமூகச் சூழல்களிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க இயலாது.

காலந்தோறும் மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாக மதக் கொள்கைகள் ஆகும் போது மதத்தைச் சீர்திருத்தவும், மதத்தைப் பின்பற்றுவோருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை மாற்றவும் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆரிய சமாஜம், பிரார்த்தனை சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவை தற்காலத்தின் முக்கிய உதாரணங்கள். இவற்றில் ஆரிய சமாஜ இயக்கம் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. வேதக் கல்வியிலிருந்து விலகி வைக்கப்பட்ட சூத்திரர்கள், குழந்தை மணம், வாழ்க்கை முழுவதும் விதவை நிலை ஆகிய கொடுமைகளுக்கு இரையானோரின் கொடுமைகளை நீக்க அது இயக்கம் நடத்திற்று. விக்கிரக வழிபாட்டையும் இவ்வழிபாட்டினால் தோன்றிய தீமைகளையும் அது எதிர்த்துப் போராடியது.

… ஆனால் இன்றோ இந்து சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த மூலவர்களின் ஆர்வங்கள் இஸ்லாம் எதிர்ப்புப் போராட்டங்களாகத் தரந்தாழ்ந்து போகும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமானது என்னவென்றால், உலகத்தின் எல்லா ஞானமும், சாதனைகளும் வேதங்களில் உள்ளன என்ற தான்தோன்றித் தனமான கருத்தால் அது தாக்குதல் தொடுக்கவும் தொடங்கியுள்ளது. விவரங்களையும் தடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வரலாற்றாளர்கள் இம்மாதிரிப் பிரச்சாரங்களை ஜீரணித்துக் கொள்ள இயலாது.

பண்டைய நூல்களில் பஞ்சமின்றிக் கிடக்கின்ற உண்மைச் செய்திகளாலும், விவரங்களாலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடா விட்டால் அது எழுத்தறிவு பெற்ற மக்களை மத வெறியர்கள் ஆக்கி விடும். அவர்களோ சாதாரண மக்களிடம் மத வெறி என்னும் விஷக் கிருமியைப் பரப்பி விடுவார்கள். இடைக்காலத்தில் சிலுவை யுத்தமும், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்தாண்டுகளுக்கும் இடையில் நடந்த போர்களும் இம்மாதிரி விஷப்பிரச்சாரங்களும் இதர காரணங்களும் சேர்ந்ததினால் ஏற்பட்ட பைத்தியக் காரத்தனமான போர்களே. தற்காலத்தில் இந்தியாவில் இம்மாதிரியான விஷமப் பிரச்சாரம் தேச ஒருமைப்பாட்டுக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது. (நூலிலிருந்து பக். 6-7)

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

இந்து மதத் தலைவர்களின் வறட்டுத்தனமான சகிப்பின்மைக்கு அயோத்தியின் இடைக்கால வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டலாம். அவுரங்கசீப் ஆட்சி செய்யும் வரை அவருடைய வலிமையான கை அயோத்தியின் விவகாரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் 1707-ல் அவர் இறந்த பின், அங்குள்ள சைவ சன்னியாசிக் கூட்டத்துக்கும், வைணவ வைராகிக் கூட்டத்துக்கும் இடையே பயங்கரமான மோதல்கள் நிகழ்ந்ததை நாம் காணுகிறோம். இருவரிடையே உள்ள பிரச்சினையின் அடிப்படையே மத முக்கியத்துவமுள்ள இடங்களையும் புனித யாத்திரீர்களின் கட்டணங்களையும் காணிக்கைகளையும் யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதே! இந்த இரண்டு கூட்டத்தினருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலை விவரித்து 1804-1805-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு மூல நூலின் ஒரு பகுதியை இங்கே அப்படியே தருகிறேன்:

“ராமர் பிறந்த தினத்தன்று ஜனங்கள் கோசலாபுரிக்குப் போய் அங்கே கூடினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை யாரால் விவரிக்க இயலும்! அந்த இடத்தில் சன்னியாசி உடையில் எண்ணிக்கையிலடங்காத வலுவான போர் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். சடைமுடி தரித்திருந்தார்கள். கை கால்களில், திருநீறு பூசியிருந்தார்கள், யுத்தத்தில் மகிழ்ச்சி கொள்ளும் போர்வீரர்கள் அவர்கள். எண்ணிக்கைக்கோ கணக்கில்லை. வைராகிகளுடன் அவர்களுக்கு போர் மூண்டது. வைராகிகளால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. போர்த் தந்திரம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் சன்னியாசிகளை நோக்கிப் போனது ஒரு தவறு. வைராகி உடை துயரத்தின் அடையாளமாயிற்று. வைராகியுடையணிந்திருந்தவர்கள் சன்யாசிகளைத் தாண்டி ஓடினார்கள். அவத்பூர் வெறிச் சோடிற்று, வைராகியுடையணிந்தவர்களைக் கண்டபோது அவர்கள் (சன்யாசிகள்) பயங்கரமான அச்சுறுத்தினார்கள், அவர்களுடைய அச்சுறுத்தலால் எல்லோரும் அச்சமடைந்தார்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் ரகசிய இடங்களில் மறைந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வைதீக அடையாளங்களையும் மறைத்துக் கொண்டார்கள். யாருமே தங்கள் அடையாளத்தைக் காட்டவில்லை (ரகுநாதபிரசாதின் ஸ்ரீமகராஜ சரித்திரம், பக்கம் 42; ஹான்ஸ் பேக்கரின் அயாத்தியா, கார்னிங்னன், 1986, பக்கம் 149-இல் எடுத்துக் காட்டப்பட்டபடி).

இடைக்கால இந்து மதத் தலைவர்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மை என்னும் புனைச்சுருட்டை வெளிப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட பகுதியே போதுமானது. (நூலிலிருந்து பக். 21-22)

… 1980-ல் உத்தர பிரதேசத் தொல்பொருள் துறையினரால் பெரிதும் சிறிதுமாகக் கிட்டத்தட்ட 6000 கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ராமபக்தர்களுக்கு எப்போதும் சுதந்திரம் உண்டு. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள். (நூலிலிருந்து பக். 36)

நூல் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
ஆசிரியர் : ஆர்.எஸ். சர்மா
தமிழில் : பொன்னீலன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooksperiyarbooks

குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 04

டிசம்பர் 6. பிறந்த நாள்

குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை. உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவனுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவனுடன் விளையாடுங்கள் – அவன் சந்தோஷமடைவான்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள் – அவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள்- அவனுடைய மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவனுக்கு ஒரு கதை சொல்லுங்கள் – அவன் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவான்.

உங்களுடைய மென்மையான, அக்கறை மிக்க உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள், அவன் எப்போதும் சந்தோஷமானவனாக இருப்பான் என்று என்னால் உறுதி கூற முடியும், இது அவனது அன்றாட மகிழ்ச்சிகளின் தீரா மூல ஊற்றாகும். ஆண்டிற்கு ஒரு முறை, அவனுடைய பிறந்த நாளன்று, தனக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் தனது தனித்துவம் உயர்ந்துள்ளதை, தான் பெரியவன் ஆனதை உணரும்படி ஏதாவது செய்யுங்கள். அவனுடைய மகிழ்ச்சிக்கு முடிவே இருக்காது.

ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளையும் வகுப்பில் கொண்டாடுகிறோம். குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றிய இந்தச் சிந்தனைகள் இதன் தொடர்பாக என் மனதில் உதித்தன.

இன்று நாங்கள் மாரிக்காவின் பிறந்த நாளைக் கொண்டாடினோம். காலையில் குழந்தைகளுக்கு முகமன் கூறிய பின் நான் கம்பீரமாக அறிவித்தேன்:

“உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று நம் மாரிக்காவிற்குப் பிறந்த நாள்!”

குழந்தைகள் சந்தோஷமாகக் கை தட்டுகின்றனர்.

“நீங்கள் அவளுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புகின்றீர்கள்?”

சான்த்ரோ: “மாரிக்கா, எப்போதும் அன்பான சிறுமியாக இரு!”

தாம்ரிக்கோ: “உன் தாய் நாட்டை விரும்பு!”

தீத்தோ: “உன் பெற்றோர்களை மதித்து நட. படிப்பில் உன் வெற்றிகளால் அவர்களுக்கு சந்தோஷம் தா!”

விக்டர்: “மாரிக்கா, நான் உன்னைத் தொந்தரவு செய்தேன், ஞாபகம் உள்ளதா? இனி அப்படிச் செய்ய மாட்டேன்.”

தேக்கா: “ உன் அறிவால் நீ புகழ் பெற வேண்டும்!”

கோச்சா: ”துணிவுடைய பெண்ணாயிரு!”

ஏக்கா: “நன்கு, அழகாக எழுது!”

நீக்கா: ”நன்கு ருஷ்ய மொழி பேசக் கற்றுக் கொள்!”

லாலி: ”நீ ஒருமுறை கூட உடல் நலம் குன்றி பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.”

இராக்ளி: “மிகச் சிக்கலான கணக்குகளை நீ முதலில் போட வேண்டும்!”

எல்லோரும் வாழ்த்துகளைக் கூறினர். அந்த நேரத்தில் மாரிக்கா கரும்பலகையருகே நின்று புன்முறுவல் பூக்கிறாள், தலையை ஆட்டுகிறாள், ”நன்றி” என்று சன்னமான குரலில் கூறுகிறாள். கண்களில் மகிழ்ச்சி ஒளி.

“குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன். அதில் ‘எங்கள் அன்பு மாரிக்கா! உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் விரும்புகிறோம். நீ அன்பானவள்! உன் வகுப்பு மாணவர்கள்’ என்று எழுதினேன்.”

புத்தகத்தை மாரிக்காவிற்குத் தருகிறேன். குழந்தைகள் கை தட்டுகின்றனர், மாரிக்காவிற்கோ மகிழ்ச்சி பொங்குகிறது.

”மாரிக்காவிற்காக இன்று எந்த மாதிரி கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன் பாருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை திறக்கிறேன். தாய் மொழிப் பாடத்திற்கான பயிற்சியில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் புதிரில் உரிய எழுத்துகளை எழுதினால் “மாரிக்கா” என்ற பெயர் வரும். குழந்தைகள் இதை விரைவிலேயே கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் இதைச் சொல்லுமாறு சைகை செய்கிறேன்.

”மாரிக்கா!” என்று வகுப்பு முழுவதும் உரக்கக் கூவுகிறது.

மற்ற சாதாரண கேள்விகள் அனைத்திற்கும் மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக பதில் சொல்கின்றனர்.

இடைவேளையின் போது இவளை ஒரு ஸ்டேன்ட் அருகே இட்டுச் செல்கிறோம். இது இரண்டு மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் உயரமும் உடைய ஒரு மரப்பலகை. இதில் குழந்தைகளுக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எடுத்த புகைப்படங்கள் உள்ளன. அப்படங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. குழந்தைகள் குறும்புத்தனமாகப் பார்க்கின்றனர். குழந்தைகள் இவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர். இப்புகைப்படங்கள் ஸ்டேன்டின் மேல் பகுதியில் உள்ளன, கீழ்ப் பகுதிக்கு ஒரு விசேஷம் உள்ளது. பிறந்த நாளன்று குழந்தையை இந்த ஸ்டேன்டின் அருகே அழைத்துச் சென்று, அவனை அருகே நிறுத்தி, உயரத்தை அளக்கிறோம், தேதியை அருகே எழுதி, பெற்றோர்கள் கொண்டு வரும் புதிய புகைப்படத்தை ஒட்டுகிறோம். ஸ்டேன்டில் பல குழந்தைகளின் பிறந்த நாள்களும் குறிக்கப்பட்டு விட்டன. இப்போது மாரிக்காவின் உயரத்தை அளந்து, அருகே தேதியை எழுதி, புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்த வைபவத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இன்னும் மூன்று முறை மாரிக்காவின் உயரத்தை அளந்து அவள் எப்படி வளர்ந்திருக்கிறாள், எல்லாக் குழந்தைகளும் எப்படி வளர்ந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

கணிதப் பாடத்திலும் மிகச் சிக்கலான கணக்குகளை மாரிக்காவை கௌரவிக்கும் முகமாகப் போடுகிறோம்.

ஓவிய வகுப்பிலும் ஒவ்வொருவரும் மாரிக்காவிற்காக வரைகின்றனர். ஒரு அழகிய அட்டை தயாராக உள்ளது, குழந்தைகள் தாம் வரைந்தவற்றின் பின் வாழ்த்துகளை எழுதி இதில் வைக்கிறார்கள் (எல்லா எழுத்துகளையும் தெரிந்தவர்கள் எழுதுகிறார்கள்). பின் கர ஒலியோடு மாரிக்காவிற்கு இதை வழங்குகிறோம்.

கடைசிப் பாடவேளையின் போது கலை நிகழ்ச்சியை நடத்துகிறோம். மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக நடக்கும் அதில் சிலர் கவிதை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பாடுகின்றனர்.

நாள் இறுதியில் சிறுமி அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பாள். அவள் வேறு ஏதோ மாதிரியானவளாக, நாணம் உள்ளவளாக, சிந்தனையுள்ளவளாக மாறியிருக்கிறாள். அவளிடம் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் மிகுந்திருக்கும்.

நாள் முடிகிறது. ஒவ்வொருவராக மாரிக்காவை நெருங்கி, மீண்டும் புன்முறுவல் பூத்து, வாழ்த்துக் கூறி விடைபெறுகின்றனர். வீட்டிற்குச் சென்று தம் மகிழ்ச்சியை உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்ள அவள் அவசரப்படுகிறாள்.

மாரிக்காவின் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடினோம்.

“அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனின் பிறந்த நாளையும் இதே போல் கொண்டாட நான் சமீபத்தில் திட்டமிட்டிருந்தேன். அன்று அவன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தான், எல்லோர் கவனத்தையும் கவர்ந்தான்.

“இது அயல்நாட்டுக் காலணி; இதுவும் அயல் நாட்டுக் கோட்டு! இன்று மாலை எங்கள் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். எனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும்.”

இவ்வாறாக அவன் வகுப்புகள் துவங்கும் முன்னரே தம்பட்டம் அடிக்கத் துவங்கினான், அவனது பிறந்த நாளைப் பற்றிச் சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கும் சந்தர்ப்பத்தையே அவன் எனக்குத் தரவில்லை.

குழந்தைகளும் விசேஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. “அவனுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது?”

குழந்தைகள் சொன்னார்கள்: “தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியாமலிருக்கட்டும்!”

“சிறுமிகளுடன் எப்படிப் பழகுவது என்று தெரிந்து கொள்ளட்டும்!”

“புத்திசாலியாகட்டும்!”

“அவன் நாகரிகமாக நடக்கக் கற்றுக் கொண்டால் நாங்கள் அவனை விரும்புவோம்!”

“அவன் கத்துகிறான்! தன் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறான்!”

“பொய் பேசாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும்!”

இந்த வாழ்த்துகளை நான் தடுத்து நிறுத்த வேண்டிவந்தது. ஏனெனில் சிறுவன் தலையைக் குனிந்தபடி அழத் தயாரானான்.

“குழந்தைகளே, அவனுடைய மனது அன்பானது என்று எனக்குத் தெரியும், அவன் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறான். அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாருங்கள்!”

குழந்தைகள் கர ஒலி எழுப்பினர். நான் புத்தகத்தைப் பரிசளித்தேன்.

கரும்பலகையை மூடியிருந்த திரையை விலக்கி, அன்றைய பாடங்கள் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணித்து, குழந்தைகள் சற்று முன் அவன் மனதில் ஏற்படுத்திய காயத்தை சரி செய்யத் தயாரானேன். அறுவைச் சிகிச்சை மருத்துவர் “இதயத்தைத் திறந்து” காயத்தை சரி செய்ய நுண்ணிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயாராவதைப் போல் நான் தயாரான போது, எச்சரிக்கையின்றி கதவை ஒரு தட்டுத் தட்டி உள்ளே எட்டிப் பார்த்த அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை ஒரு நிமிடம் வகுப்பறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தாள்.

“கதவை மூடுங்கள், இப்போது பாடம் நடக்கிறது!” என்றேன் நான்.

“ஒரு நிமிடம் தான், நீங்கள் என்ன பயப்படுகின்றீர்கள்?”

குழந்தைகள் முன் தாறுமாறாக எதுவும் நடந்து விடக் கூடாதே என்பதற்காக நான் வெளியே தாழ்வாரத்திற்கு வந்தேன்.

இருதய அறுவை சிகிச்சையை துவங்குவதற்காக மேசையருகே இருக்கும் மருத்துவரை பல இனிப்புப் பண்டங்களை காட்டுவதற்காக இதுவரை யாரும் வெளியே அழைத்ததில்லை.

“இங்கே கேக் உள்ளது, எல்லோருக்கும் போதும், சாக்லேட்டுகள், பணியாரம், நாற்பது பாட்டில்கள் லெமனேட். இன்று என் மகனுக்குப் பிறந்த நாள்! குழந்தைகள் கொண்டாடட்டும்! நீங்களும் அவனிடம் அன்பாக இருங்கள்!”

“ஒன்றும் வேண்டாம்! எல்லாவற்றையும் திரும்ப எடுத்துச் செல்லுங்கள்!” என்று நான் கண்டிப்புடன் கூறுகிறேன்.

அவளோ: “பயப்படாதீர்கள், இவையெல்லாம் வீட்டில் செய்தது, ஒன்றும் ஆகாது!”

“எது எப்படியானாலும் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவதென எங்களுக்கு ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் இல்லாமலேயே கொண்டாடுவோம்.”

அவள்: “அநாவசியம். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும், அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சந்தோஷம் தரத்தானே விரும்புகின்றீர்கள்! இதோ உங்கள் வகுப்புக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷம்!”

மணியடித்து, குழந்தைகள் அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியே வந்தனர். “அதிகாரத் தொனியுள்ள அம்மா” உடனேயே அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினாள். குழந்தைகள் முன் அந்த அம்மாவுடன் சச்சரவை வளர்க்க நான் விரும்பவில்லை. குழந்தைகள் கேக், சாக்லேட் ஆகியவற்றோடு அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனுடைய பிறந்த நாளையும் “சாப்பிட்டனர்”, ஆம், அச்சிறுவனின் பாலான தம் உறவையோ, அவனைப் பற்றிய கருத்தையோ சிறிது கூட மாற்றவில்லை.

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

இதைப் பற்றி நான் நிறைய நினைக்கிறேன். அப்போது தாழ்வாரத்தில் நான் எப்படி நடந்திருக்க வேண்டும்? இன்னும் கடுமையாக, உறுதியாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? குழந்தைகள் இனிப்புகளை வாங்கக் கூடாதென தடுத்திருக்க வேண்டுமோ? ஆனால் இப்போது இது முக்கியமல்ல, குழந்தையின் தன்மையை மேற்கொண்டு எப்படி உருவாக்குவது என்பது தான் முக்கியம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

7

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு திடீரென திருவள்ளுவர் பாசம் பொங்கிப் பீறிடுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை தாய் மொழியில் வெளியிட்டார். அதே நேரத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசி அவர் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் பூசி சமூக வலைத்தளங்களில் அலப்பறையை ஆரம்பித்து வைத்தது தமிழக பாஜக-வின் ஐ.டி விங். பக்கவாத்தியமாக மைலாப்பூர் பார்த்தசாரதிகள் குடுமியை இழுத்துக் கட்டிவிட்டு களத்தில் இறங்கினர்.

“வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தர்ம, அர்த்த, காம, மோட்ச…  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தான் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என தனது குறளை எழுதினார். சொல்லப் போனால் பிராமனிய விழுமியங்களின் படி திருக்குறள் எழுதப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் நிச்சயம் ஒரு பிராமனராகத் தான் இருந்திருக்க வேண்டும்” என்பது மையிலை மாமா ஒருவரின் துணிபு. மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருந்த சூத்திர சம்பத்துகளில் ஒருவர் “சாமி, காமத்துக்கு பின்னே மோட்சம் ஏன் திருக்குறளில் இல்லை?” என கேட்டு மண்டையைச் சொறிந்தது தனிக் கதை.

சமீப நாட்களாக ராஜராஜ சோழனின் பெருமை, அங்கோர்வாட் சூரியக் கோயில், தமிழின் பெருமைகள் என காக்கி டவுசர்கள் சப்பளாக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைவதை நாம் எல்லோரும் அறிவோம். இதனால் பிஜேபியின் “பி” டீமான சீமானின் திருவோட்டில் விழுந்த ஓட்டையின் விட்டம் எவ்வளவு என்பது  தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று.

நிற்க.

நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவானேன்?

***

ற்கெனவே பல மாநிலங்களிலும் தேசிய அளவிலும் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்த ஒரு உத்தியை கையிலெடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதாவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெருமையும் இந்துப் பெருமையும் வேறு வேறல்ல என இரண்டையும் முடிச்சுப் போடுவது; பின்னர் இந்துத்துவத்தை எதிர்த்தால் அதை இந்துமத எதிர்ப்பாக மடைமாற்றி அப்படியே அந்த குறிப்பிட்ட மாநிலப் பண்பாட்டுக்கு எதிரானதாக நிறுவுவது. இந்த அடிப்படையிலான முழக்கங்கள் தான் “குஜராத்தி அஸ்மிதா” மற்றும் “மராத்தி மானூஸ்” போன்ற முழக்கங்கள். இந்த வரிசையில்தான் தற்போது தமிழுக்கு பூணூல் மாட்டும் முயற்சி.

படிக்க:
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

ஒருபக்கம் தமிழுக்கு காவி வண்ணம் பூசி அதை இந்துமயமாக்குவது – பின்னர் அப்படியே இந்துத்துவ போர்வையால் மூடுவது. இன்னொரு பக்கம் இதற்கு எதிர்ப்பு வரும் திசையில் இருப்பவர்களை கேலி கிண்டல் செய்து முடக்குவது. இப்போதைக்கு பாஜக தமிழகத்தில் வகுத்திருக்கும் தேர்தல் உத்திகளுக்கு குறுக்கே நிற்பது திமுகதான். திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரியத்தில் இருந்து கணிசமாக விலகிச் சென்று விட்டாலும் தேர்தல் அரசியல் நலன் என்கிற வரம்புக்குள் நின்று பாஜக – இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய சமரங்கள் மற்றும்  போதாமைகள் ஒருபுறம் இருக்க தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் இந்துத்துவத்தின் நேரடி வெற்றியை தாமதப்படுத்தும் காரணிகளில் பிரதானமாக திமுக இருக்கிறது.

காங்கிரசு மற்றும் ராகுல் காந்தியை கையாள தேசிய அளவில் பாஜக எந்த ஆயுதத்தை பயன்படுத்தியதோ அதே அயுதத்தை திமுக மற்றும் முக ஸ்டாலினை நோக்கி நீட்டியுள்ளது. முதலில் திமுக என்கிற கட்சியின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பது – இரண்டாவது அதன் தலைவரை காமெடியன் போல காட்டுவது – மூன்றாவது கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் திமுக ஏற்படுத்தி வைத்துள்ள அடையாளங்களை கைப்பற்றுவது.

இதில் முதல் அம்சமாக திமுக-வின் மேல் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்த பல்லாண்டுகளாக பார்ப்பன லாபி திமுகவை நோக்கி கட்டமைத்து வந்த “ஊழல் கட்சி” என்கிற பிம்பத்தை ஊதிப் பெருக்குவது. இதற்கு துணை செய்யும் விதமாகத் தான் முரசொலி பத்திரிகையின் கட்டிடம் பஞ்சமி நிலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்கிற புகார். கடந்த சில மாதங்களாக (வருடங்களாகவே) தொலைக்காட்சிகளில் நடக்கும் அனைத்து விவாதங்களும் திமுகவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யும்  விதமாகவே நடந்துள்ளன என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளையோ அரசுகளையோ நோக்கி இந்த ஊடகங்கள் சிறிய முணுமுணுப்பைக் கூட எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது அம்சமாக ராகுல் காந்தியை “பப்பு” என கிண்டல் செய்ததைப் போலத் தான் முக ஸ்டாலினை கிண்டல் செய்யத் துவங்கியுள்ளனர். மூன்றாவது அம்சத்தில் தான் திருவள்ளுவர் வருகிறார். திமுகவின் அடையாளங்களில் முக்கியமானது அந்தக் கட்சியின் மீது இருக்கும் தமிழ் அடையாளம் – குறிப்பாக திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் கற்சிலை, வள்ளுவர் கோட்டம், பேருந்துகளில் திருக்குறள், கலைஞர் எழுதிய குறளோவியம் என தமிழ்சார்ந்த (குறிப்பாக திருக்குறள் சார்ந்த) கலாச்சார அடையாளங்களை திமுக நிறுவியுள்ளது. இந்த அடிப்படைகளை தகர்ப்பதன் மூலம் திமுகவை பலகீனப்படுத்துவது அந்த இடைவெளியில் தமிழகத்தின் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றுவது என்பதுதான் பாஜகவின் வியூகம்.

***

தேர்தல்களை மைக்ரோ அளவிலும் மேக்ரோ அளவிலும் அணுகி வியூகம் வகுப்பது; அதில்  வெற்றி பெறுவது என்பதில் பாஜகவுக்கு நிகரான கட்சி இன்றைய தேதியில் இந்தியாவில் இல்லை. வரலாற்றுரீதியில் இந்துத்துவ அரசியல் நுழையவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள், பிரதேசங்களில் எல்லாம் பாரதிய ஜனதா வெற்றிகரமாக நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு சவாலான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் நிற்கின்றன கேரளமும், தமிழகமும். இதில் குறிப்பாக தமிழகத்தின் மீது பாஜகவுக்கும் அதன் மூளையாகச் செயல்படும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தீராத ஆத்திரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
♦ #GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

வடக்கில் பாரதிய ஜனதா பரீட்சித்துப் பார்த்த இந்த உத்திகள் தமிழகத்தில் செல்லுபடியாகுமா?

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றம்ச அணுகுமுறையில் ஒவ்வொன்றிலும் பாரதிய ஜனதா கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. முதலில் திமுகவை ஊழல் கட்சியாக காட்டி மக்களின் அவநம்பிக்கையை அக்கட்சியின் மீது திருப்பும் முயற்சிக்கு முதல் தடையாக இருப்பது இங்கு நடக்கும் அதிமுக ஆட்சி. கடந்த ஒன்பதாண்டுகளாக மாநில நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சி ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் என மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

முரசொலி அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் கேள்வி “அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் விடுவது ஏன்?” என்பதாகத்தான் உள்ளது.

ஸ்டாலினை கேலிக்குரியவராக காட்டும் உத்தியின் விளைவாக அவர்கள் எதிர்பார்ப்பது “நம்பிக்கைக்குரிய மாற்று யாரும் இல்லை” (TINA – There Is No Alternative) என்பதை நிறுவுவதே. தேசிய அளவில் மோடி Vs ராகுல் காந்தி என்கிற தெரிவுகள் மக்கள் முன் இருந்த நிலையில் ராகுலை “பப்பு” என கிண்டல் செய்தது பாஜகவுக்கு நல்ல பலனைக் கொடுத்தது – இதற்கு முக்கிய காரணம் ராகுலுக்கு எதிரே நின்றது நரேந்திர மோடி.

மக்களை சிந்திக்கவிடாத வகையில் பேசுவது, சவடால், கண்ணீர் காட்சிகள் என பிரச்சார மேடைகளில் மோடி நடத்திய நாடகங்கள் ஒருபுறம் என்றால், “சின்ன வயதில் முதலையைப் பிடித்து விளையாடிய வீரன், ராஜாவீட்டு கன்றுக்குட்டி ராகுலை எதிர்க்கும் எளிய டீக்கடைக்காரரின் மகன்” போன்ற பிம்பங்களை ஊடகங்களின் உதவியோடு பல ஆண்டுகால முயற்சியில் கட்டமைத்திருந்தது பாஜக. “மோடி என்கிற விண்ணை முட்டும் ஒரு ஆளுமையை எதிர்க்கும் ராகுல் என்கிற கற்றுக்குட்டி” என்ற இந்த உத்தி மிகச் சிறப்பாக பலனளித்தது.

ஆனால், தமிழகத்தின் நிலை வேறு. கலைஞர் அளவுக்கு மு.க. ஸ்டாலின் பேச்சாற்றல் இல்லாதவர் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை திமுகவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளிலும் அவ்வாறான பேச்சாளர்கள் இல்லை என்பது. பழனிச்சாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தையே கரைத்துக் குடித்த அறிவாளி என்றாலும் சேர்ந்தாற் போல் நான்கு வரிகளை பேசும் ஆற்றல் அவருக்கு இல்லை.

தர்மயுத்த்தம் தோற்ற அன்றே ஓபிஎஸ்-ன் பிம்பமும் தகர்ந்தது. இவர்களைத் தவிர்த்து பார்த்தால், ஜெயக்குமார் போன்றோர்தான் உள்ளனர். தன்னை விட கட்சியில் எவனும் / எவளும் அறிவாளியாக இருந்து விடக்கூடாது என்கிற புரட்சித் தலைவி அம்மாவின் கொள்கையின் வளர்க்கப்பட்ட இயக்கம் என்பதால் அண்ணா திமுக மேலிருந்து கீழ் வரை செல்லூர் ராஜூக்களால் நிரம்பி உள்ளது.

பாரதிய ஜனதா தானே நேரடியாக ஹெச்.ராஜா, நாராயணன், எஸ்.ஆர் சேகர் உள்ளிட்ட தன்னுடைய ஆளுமைகளை தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி விடலாம். ஆனால், அப்படி மட்டும் நடந்து விட்டால் திமுக பிரச்சாரத்திற்கே போகாமல் வென்று விடும் – தன்னைப் பற்றிய இந்த உண்மை பாஜகவுக்கும் தெரியும். இப்போதைக்கு ரஜினியை நம்பிக் கொண்டுள்ளனர். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ரஜினியின் வாயைத் தைத்து மண்டையின் இருபுறமும் மிச்சமிருக்கும் முடியைக் கோதுவதோடு நிறுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். மீறி ரஜினி வாயைத் திறந்து பேசி விட்டால் திமுகவுக்கு பிடி கிடைத்து விடும் – ரஜியைப் பற்றிய இந்த உண்மையும் பாஜகவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இறுதி அம்சமாக வருகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு பட்டையும் கொட்டையும் சாட்டியாகி விட்டது – ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற குறளின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பிறப்பினடிப்படையில் வேற்றுமை பாராட்டும் இந்துத்துவத்தை கைவிட வேண்டியிருக்கும். இந்துத்துவம் தமிழை வரித்துக் கொள்வதை அரசியல் உத்தியாக கையில் எடுத்தால் இந்தித் திணிப்பையும் சமஸ்கிருதமயமாக்களையும் கைவிட வேண்டி வரும்.

எனினும் ஒரு குறைந்தபட்ச அளவில் “திருவள்ளுவர் ஒரு துறவி”, “தமிழின் பெருமை அதன் பக்தி இலக்கியங்கள்” என ஜல்லி அடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது. ஆழ்ந்த வாசிப்பறிவற்ற இளம் தலைமுறையினரில் ஒரு சிறிய பிரிவினர் இதற்கு பலியாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை வெறுமனே திமுக எதிர்கொள்ளும் சவால் என்று மட்டும் குறுக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழகம் பல நூற்றாண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வந்த ஒரு சகிப்புத் தன்மை மற்றும் மனிதநேயத்தை வேரறுக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதை முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவ பாசிஸ்டுகள் நம் கலாச்சாரத்தை கைப்பற்ற வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் சில கேள்விகள் உண்டு.

  • வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
  • திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
  • கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  • சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  • தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
  • உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
  • சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
  • தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
  • இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
  • தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.


சாக்கியன்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 07.11.2019

பத்திரிகை செய்தி

  • மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடத்துக!
  • யாரை நியமிக்க சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுகின்றன?
  • முந்தைய துணைவேந்தர் திரு. செல்லத்துரை காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

1. கடந்த 31.05.2019 அன்று வெளியான அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கான விண்ணப்பங்கள் 21.06.2019-க்குள் அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் தங்கள் மீது குற்ற/துறை ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கக் குழு அமைக்கப்பட்டு 25.07.2019 அன்று 20 பேராசிரியர்கள் நேர்காணலுக்கு வரத் தகுதியானவர்கள் எனப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலே குளறுபடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. Dr.Paul Mary Deborrah என்பவர் பெயர் இருமுறை(1,7) இறுதி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் திரு.ஓ.ரவி மற்றும் கர்ணமகாராஜன் ஆகியோர் “தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளனர்” (Provisionally Shortlisted) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகச் சட்டப்படி தற்காலிகமாக இறுதி செய்தல் சட்டவிரோதம்.

மேலும் பல்கலைக் கழகத் தேர்வாணையர் திரு.ஓ.ரவி மீது துறைரீதியான நடவடிக்கையும், ரூபாய் 40 லட்சம் அரசுப் பணத்தை மோசடி செய்ததாக கு.எண்.09/2017 என்ற கிரிமினல் வழக்கு 21.06.2019-ல் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் நிலுவையிலிருந்தது. பேராசிரியர் திரு.கர்ணமகாராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. சட்டப்படி இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கப்பட்டு, இவர்களில் திரு.ஓ.ரவி மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை துணைவேந்தர் விளக்க வேண்டும்.

2. செப் 23, 2019 அன்று பதிவாளர் நேர்காணல் (Interview) என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் அறிவிக்கப்படவில்லை. 23.09.2019 அன்று நடந்த பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அரசின் பிரதிநிகளை நேர்காணல் குழுவில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினர்களின் எதிர்ப்பால் நேர்காணல் குழு உறுப்பினர்கள் குறித்த அஜண்டா (Item no.65) ஒத்திவைக்கப்பட்டது.

3. உச்சகட்ட விதிமீறலாக MKU ACT-CHAPTER VI- SEC.1-ன்படி நேர்காணல் குழுவை சிண்டிகேட் இறுதி செய்யாமலே, நவம்பர் 7, 2019 அன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதனை சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்த்ததால் இன்று நடைபெற இருந்த நேர்காணலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ரத்து செய்யப்பட்டது.

4. மேற்கண்ட நடைமுறைகள் துணைவேந்தருக்கோ, அதிமுக அமைச்சர்களுக்கோ வேண்டிய நபரை பதிவாளராக்குவதற்கான வேலைகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இதற்கு துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும்.

படிக்க:
கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

துணைவேந்தரின் செயல்பாடுகள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்துமா?

02.01.2019 அன்று பொறுப்பேற்ற துணைவேந்தர் திரு.கிருஷ்ணன், பத்து மாதங்களை  நிறைவு செய்துள்ளார். பல்கலைக் கழகத்தில் நிலவிவரும் முறைகேடுகளை அகற்றுவதே தனது முக்கியப் பணி என்றார். இன்று நிலைமை என்ன?

1. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்மலாதேவி பிரச்சனையில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பும், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, குழு கூட அமைக்காததேன்?

2. செனட், சிண்டிகேட்டிற்கான Academic council- தேர்தல்கள் நடத்தப்படாதது ஏன்?

3. பல்கலைக் கழக சட்டப்படி உதவிப் பதிவாளர் தகுதியில் உள்ள ஒருவரே, பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அறிவழகன் என்பவர் தனது அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து 5 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். துணைவேந்தர் மவுனம் காப்பதேன்?

4. நிர்மலாதேவி பிரச்சனையில் விசாரிக்கப்பட்ட பேராசிரியர் கலைச்செல்வன், தற்காலிகப் பதிவாளர் பேராசிரியர் சுதா, பல்கலை ஊழியரை மிகவும் தரக்குறைவாகப்பேசி மிரட்டியது தொடர்பாக பதிவாளர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஏன்? பதிவாளர் நிலைமையே இதுதான் என்றால் நிர்வாகம் எப்படி நடக்கும்?

மேற்கண்ட கேள்விகளுக்கு துணைவேந்தர் உரிய விளக்கமளித்து அறிக்கை வெளியிட வேண்டும். 31.05.2019 தேதிய பதிவாளர் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து, புதிதாக வெளியிட வேண்டும். தேர்வுமுறை, தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். பல்கலைக் கழக சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
முகவரி:384, முதல் தளம்,
கிழக்கு 8-வது தெரு,
கே.கே.நகர், மதுரை-20.  
தொடர்புக்கு : 98653 48163.

வழக்கறிஞர் சே. வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

பேரா.அ. சீனிவாசன்,
தலைவர்

ம. லயனல் அந்தோணிராஜ்,
செயலர், மதுரைக் கிளை

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள் : பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

ருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கும் அனைவரும், “தகுதி இல்லாதவர்கள்” மருத்துவர் ஆவதைத் தடுப்பதற்காகத்தான் தேசிய அளவிலான ஒரே தேர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அத்தகுதித்  தேர்வின் நோக்கம் பொருளாதாரரீதியாகவும், சாதிரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் –  கவனிக்க, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பின்தங்கியவர்கள் அல்ல –  மருத்துவர் ஆவதைத் தடுப்பதுதான் என்பது நீட் அமலுக்கு வந்த அதே ஆண்டில் நடந்த அனிதாவின் தற்கொலை மூலம் அம்பலமானது.

வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு ஒரே தேர்வுமுறை அநீதியானது என ரத்தத்தால் எழுதிப் போராடும் மாணவர்கள். (கோப்புப் படம்)

நீட் தேர்வு முறை அதன் தன்மையிலேயே ஒருதலைபட்சமானது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி மாநிலப் பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுவது; நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்படுவது; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் அவ்வினாத்தாள் வழங்கப்பட்டாலும், அவற்றில் ஏதாவது தவறுகள் நேர்ந்தால் ஆங்கில வினாத்தாள்தான் இறுதியானது என நியாயத்திற்குப் புறம்பான முறையில் மட்டையடியாக ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு +2 மதிப்பெண்களைக் கணக்கிலே கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை மட்டுமே தகுதியாகக் கொண்டிருப்பது ஆகிய இவை அனைத்துமே இத்தேர்வு முறையின் ஓரவஞ்சனையை எடுத்துக்காட்டுகின்றன.

இவை காரணமாக அத்தேர்வு, அதன் இயல்பிலேயே அரசுப் பள்ளிகளில், அதுவும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு எதிராக அமைகிறது.  மேலும், தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கில் வழியில் பயிலும் மாணவர்கள்கூட நீட் தேர்வு எழுதுவதற்குத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுவதைக் கட்டாயமாக்கி, +2 பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! 

இத்தனியார் பயிற்சிப் பள்ளிகளும்கூட ஒருபடித்தானவை கிடையாது. பத்தாயிரம், இருபதாயிரம் கட்டணம் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. இலட்சக்கணக்கில் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. மேலும், இத்தனிப் பயிற்சிப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொண்டால், அவை ஒரு வருட பயிற்சித் திட்டம், இரண்டு வருட பயிற்சித் திட்டம், எட்டாம் வகுப்பு தொடங்கியே நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டம் என காசுக்குத் தக்கபடி விதவிதமாக உள்ளன.

நீட் தேர்வு வந்த பிறகு அத்தேர்வை மூன்று முறை எழுதவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதால், +2 முடித்த பிறகும்கூட ஓரிரு ஆண்டுகள் நீட் தேர்வுக்காகத் தனிப் பயிற்சி எடுத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு பொருளாதார வசதி படைத்த மாணவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.

ஏழை மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் தமது பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புக்களையும் அரசு நடத்தும் தனிப் பயிற்சி வகுப்புக்களையும்தான் நீட் தேர்வு எழுதுவதற்கு நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களால் நீட் கோச்சிங்கிற்காக பல பத்தாயிரக் கணக்கில் பணம் செலவு செய்யக்கூடிய பணக்கார மாணவர்களோடு எப்படிப் போட்டியிட முடியும்?

ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித் சூர்யா (இடது) மற்றும் இர்ஃபான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுள் பெரும்பாலோர் ஆதிக்க சாதியினராகவும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினராகவும் இருப்பது எதார்த்தமான உண்மை. அது போல சாதிரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே, நீட் தேர்வு அதன் தன்மையிலேயே அடித்தட்டு வர்க்கத்தினரைப் புறக்கணிப்பதாகவும், உயர்சாதி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குச் சாதகமாகவும் அமைகிறது. மேலும். இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளிலும் கூடப் பத்தாயிரக் கணக்கில் பணம் செலவழித்துத் தனிப்பயிற்சிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள்தான் மருத்துவராகும் கனவைக்கூடக் காண முடியும்.

இவை ஒருபுறமிருக்க, மிக மிக வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வாரிசுகள் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்திருந்தாலே போதும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் அல்லது தனியார் மருத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பல இலட்சங்களை வீசியெறிந்து இடத்தைப் பிடித்துவிட முடியும்.

ஆகவே, நீட் தேர்வு எதிர்பார்க்கும் தகுதி என்பது பிரதானமாகப் பணம்தான். தற்பொழுது தமிழகத்தில் அம்பலமாகியிருக்கும் ஆள் மாறாட்டங்கள், பாதாளம் வரை பாயக்கூடிய பணபலத்தின் முன் நீட் தேர்வெல்லாம் சப்பை மேட்டர் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும், நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசியத் தேர்வு முகமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைப்பும் இம்மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் தோற்றுப்போய்விட்டது.

♦ ♦ ♦

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, இர்ஃபான், ராகுல், பிரவீன், பிரியங்கா ஆகிய ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாணவர்களுள் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; மற்ற மூன்று பேர் வெவ்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டத்தின் மூலம் சேர்ந்து படித்து வந்தனர்.

உதித் சூர்யாவிற்குப் பதில் வேறொரு நபர் நீட் தேர்விலும், மருத்துவக் கலந்தாய்விலும், பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் உதித்சூர்யாவினுடையது. கல்லூரி தொடங்கிய பிறகு உதித்சூர்யா வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

மாணவிகளின் துப்பட்டாவையும், கொண்டை ஊசியையும் கூட பிடுங்கிக் கொண்டு ‘கடுமையாகச் சோதித்த’ நீட் தேர்வு அதிகாரிகள். பேனைத் தேடி பொருச்சாளியை விட்ட கதை.

பிரவீனும் ராகுலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அதேசமயத்தில், அவர்களது பெயர் மற்றும் முகவரியில் போலி நபர்களும் வடநாட்டு மையங்களில் அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பிரவீனும் ராகுலும் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவர்கள் இருவரும் போலியான நபர்கள் எடுத்த அதிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தித் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் கண்காணிப்பு, கெடுபிடிகள் நடத்தப்படும்போது, வடநாட்டு மையங்களில் ஆள்மாற்றாட்டம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கிறது. தமிழகம் மைய அரசால் ஓரவஞ்சனையாகவும் சந்தேகக் கண்ணோடும் நடத்தப்படுகிறது என்பதை இந்தப் பாரபட்சமான அணுகுமுறை நிரூபிக்கிறது.

படிக்க:
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

இந்த ஆள்மாறாட்டத்தை நீட் தேர்வை நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியத் தேர்வு முகமையோ, மருத்துவ மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கக்கூடிய இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட வேறு அதிகார அமைப்புக்களோ கண்டுபிடிக்கவில்லை. மேலும், அரசு நடத்தும் கலந்தாய்வு உள்ளிட்ட இடங்களிலும் இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக, படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவனான உதித் சூர்யா பற்றிய விவரங்கள் சமூக ஊடகம் வழியாகக் கசிந்து வெளியில் வர, அதன் பிறகுதான் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமானது.

♦ ♦ ♦

திகார வர்க்கத்திற்கு இலஞ்சம் கொடுத்து போலியான இருப்பிடச் சான்றிதழைப் பெற்று தமிழகத்தைச் சேராத 150 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகியிருக்கிறது. மேலும், இம்மோசடியில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இந்த ஐந்து பேர் மட்டும்தானா,  மற்ற மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஏனென்றால், இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் பீகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற இரண்டு மாணவர்கள் போலியான மாணவர் சேர்க்கைச் சான்றிதழ் கொடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்று பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தில்லியில் உள்ள கும்பல் ஒன்றிடம் பணம் கொடுத்து இந்தப் போலிச் சான்றிதழ்களை வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

போலி சேர்க்கைச் சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ், ஆள் மாறாட்டங்கள் என்பவையெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆள் மாறாட்டங்களில் ஈடுபட்டு நீட் தேர்வை எழுதிய நபர்கள் கேரளாவையும் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உதித் சூர்யாவும் இர்ஃபானும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டருக்கும் இம்மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தமிழக போலீசு கூறியிருக்கிறது.

இந்த ஆள் மாறாட்ட மோசடிக்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் குழும அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரூபாய் ரொக்கமும் 150 கோடி ரூபாய்க்குக் கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீட் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கிரீன் பார்க் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் பெறுமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இவை ஒருபுறமிருக்க, 2017-ம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்த நான்கு மாணவர்கள் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீதாதேவி என்ற மாணவி குறுக்கு வழியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் அம்பலமானது. 2013-ம் ஆண்டிலிருந்தே வட இந்திய மாநிலங்களில் நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு கிரிமினல் கும்பல் இந்தியா முழுமைக்கும் வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கம், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கோச்சிங் சென்டர்கள் ஆகியோரைக் கையில் போட்டுக்கொண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி வருவது தெளிவாகிறது.

தமிழக போலீசு விசாரித்து வரும் இந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கு அக்கிரிமினல் கும்பலை, அதற்குத் துணையாக நிற்கும் அதிகார வர்க்கத்தைக் கைது செய்யும் திசையில் இதுவரை நகரவில்லை. உதித் சூர்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள மூன்று தரகர்கள் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த மோசடியின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையிலும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசோ, இது மைய அரசின் பிரச்சினை என ஒதுங்கிக் கொள்கிறது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை உள்ளிட்ட மைய அரசின் நிறுவனங்களோ இம்மோசடி பற்றி வாயே திறக்க மறுக்கின்றன. இவை யாவும் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்களோடு வழக்கை முடித்துவிடுவார்களோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

♦ ♦ ♦

மோடி அரசு நீட் தேர்வைத் தமிழகத்தின் மீது திணித்தபோதே, இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலைத் தேசியமயமாக்குவதில்தான் முடியும் என அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம். அது இப்பொழுது உண்மையாகியிருக்கிறது.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வின் போது காப்பியடிக்க உதவுவது, விடைத்தாளை மாற்றுவது, தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வெளியிடுவது, போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது எனப் பல வகைகளில் பல ஆண்டுகளாக வியாபம் முறைகேடு மத்தியப் பிரதேசத்தில் நடந்து வந்தது. அம்முறைகேட்டின் பின்னே ஒரு பெரிய மாஃபியா கும்பல் இருந்ததும், மாநில ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என அதிகாரம் படைத்த பலருக்கும் அம்முறைகேட்டில் நெருங்கிய தொடர்பிருந்ததும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபம் ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., 2000-க்கும் அதிகமானவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்திருப்பதைத் தாண்டி, வேறெதையும் இதுவரை சாதிக்கவில்லை. இம்முறைகேடுகளை அம்பலப்படுத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களுள் ஒருவரான ஆனந்த் ராய், “விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலம், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. முயலுகிறது” எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு வரை சென்ற வியாபம் ஊழலின் விசாரணைக்கே இதுதான் கதி எனும்போது, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மினி வியாபம் ஊழலின் விசாரணை மட்டும் ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களையும் தாண்டி, இந்த ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் கிரிமினல் கும்பலையும் அதிகார வர்க்கத்தினரையும் தண்டித்துவிடும் என நம்புவதற்கு இடமில்லை.

இந்த ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமான பிறகு, நீட் தேர்வில் பயோ- சோதனையைப் புகுத்த வேண்டும் எனக் கோரியிருக்கிறது, தமிழக அரசு. இது கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற விவாதத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம்.

நீட் தேர்வு பலி கொண்ட மாணவிகள் அனிதா மற்றும் பிரதீபா.

இம்முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தொடங்கி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எந்தளவிற்கு அவசியமானதோ, அதனைவிடப் பலமடங்கு அவசியமானது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. ஏனென்றால், நீட் தேர்வு அதன் தன்மையிலேயே ஏழை மாணவர்களின், தாய்மொழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளை முளையிலேயே நசுக்கிவிடும் ஓரவஞ்சனைமிக்கது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் பணம் படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமானது. தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைத் தமிழகத்தைச் சேராத மாணவர்கள் குறுக்குவழியில் அபகரித்துக்கொள்ளும் அபாயமிக்கது.

மேலும், ஊழல், முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் இந்த அமைப்பு முறை எத்தனை கண்காணிப்புகள், சோதனைகளைக் கொண்டுவந்தாலும், அதிலெல்லாம் ஓட்டைபோட்டுப் பணத்தை வீசியெறிபவர்களுக்குச் சாதகமாகச் செயல்படவே செய்யும்.

எனவே, இனியும் அனிதா போன்ற மருத்துவராகும் தகுதி படைத்த ஏழை மாணவ – மாணவிகள் நீட்டால் ஏமாற்றமடைந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றால், நீட்டை அடியோடு ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் எழ வேண்டும்.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

இந்த நாளைப் பற்றி எத்தனை எத்தனை முறைகள் அவன் கனவு கண்டிருந்தான் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04b

மெரேஸ்யெவின் விமானம் ஒரு புறம் தள்ளப்பட்டது. அது நெருப்புப் பிழம்பு ஒன்றின் அருகாகப் பாய்ந்து சென்றது. விமானத்தைச் சமநிலையில் திருப்பியவாறு மெரேஸ்யெவ் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். அவனது பின்னோடி வெள்ளைச் சோப்பு நுரையை ஒத்த மேகப் படிவுகளுக்கு மேலே எல்லையற்ற நீல வானில் தொங்கியபடி வலப்புறமாக அவனைத் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தான். சுற்றிலும் வெறுமையாக இருந்தது. தொடுவானில் மட்டுமே, தொலைதூர மேகங்களின் பின்னணியில் நாற்புறமும் சிதறி ஓடிய “செருப்புக்காலிகள்” வரையுருக்கள் தென்பட்டன. மெரேஸ்யெவ் கடிகாரத்தைப் பார்த்தவன் ஆச்சர்யம் அடைந்தான். சண்டை குறைந்தது அரை மணி நேரம் நீடித்திருக்க வேண்டும் என்றும் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. உண்மையிலோ, எல்லாவற்றிற்கும் மூன்றறை நிமிடங்களே பிடித்திருக்கின்றன என்று கடிகாரங்கள் காட்டின.

வலப்புறம் சம மட்டத்துக்கு வந்து அருகாகப் பறந்த பின்னோடியைப் பார்த்து, “உயிரோடு இருக்கிறாயா?” என்று கேட்டான் மெரேஸ்யெவ்.

பல்வகை ஒலிகளின் குழப்பத்தினூடாக, எங்கோ தொலைவிலிருந்துபோல் ஒலித்தது வெற்றிக் குரல்.

“உயிரோடிருக்கிறேன்!… தரை… தரையில் பாருங்கள்…..”

கீழே, மிதித்துத் துவைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருந்த கல்லுங்கடுரடுமான பள்ளத்தாக்கில் புகைமண்டிய பெட்ரோல் நெருப்புக்கள் சில இடங்களில் மூண்டெரிந்தன. வீசாமல் அசைவற்றிருந்த காற்றில் அவற்றின் கொழும் புகை தூண்களாக எழுந்தது. ஆனால் மெரேஸ்யெவ் பகை விமானங்களின் இந்த எரியும் பிணங்களைப் பார்க்கவில்லை. போர்க்களம் அனைத்திலும் விரிவாகப் பரவி ஓடிக் கொண்டிருந்த சாம்பல் – பசுமைநிற வண்டுகளையே அவன் நோக்கினான். இரு குறுகிய பள்ளங்கள் வழியே அவை பகைவர்களின் இடங்களைத் தாக்கிப் புகுந்து விட்டன. ஜெர்மன் பீரங்கிகளின் குண்டுகள் அவற்றின் பின்னே இன்னும் வெடித்துக் கொண்டிருந்தன, எனினும் அவை ஜெர்மன் அரண்வரிசைகளைக் கடந்து மேலே முன் சென்றன.

பகைவர்களின் தகர்ந்த அரணிடங்களுக்கு உள்ளே நூற்றுக் கணக்கான இந்த டாங்கிகள் புகுந்து தாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை மெரேஸ்யெவ் புரிந்து கொண்டான்.

படிக்க:
அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

அன்று நிகழ்ந்ததைப் பற்றி மறுநாள் சோவியத் மக்களும், விடுதலை விரும்பும் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் செய்தித்தாள்களில் படித்தனர்.

கூர்ஸ்க் பிரதேசத்தின் ஒரு பகுதியில், இரண்டு மணி நேரம் பலத்த பீரங்கித் தாக்குதலுக்குப் பிறகு சோவியத் சேனை ஜெர்மானிய அரண்வரிசையை உடைத்து எல்லாப் படைகளுக்கும் வழியைச் செப்பம் செய்தன.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரனில் இருந்த ஒன்பது விமானங்களில் இரண்டு அன்று விமான நிலையம் திரும்பவில்லை. விமானச் சண்டையில் ஒன்பது “செருப்புக் காலிகள்” சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்பதுக்கு இரண்டு என்பது விமானங்களைப் பற்றிப் பேசுகையில் சந்தேகமின்றி நல்ல கணக்குத் தான். எனினும் இரண்டு தோழர்களை இழந்தது வெற்றிக் களிப்பில் துயர நிழல் படியச் செய்தது. விமானங்களிலிருந்து வெளியே குதித்த விமானிகள் ஆரவாரிக்கவில்லை, கத்தவில்லை, சண்டையின் சிக்கல்களைப் பற்றி உற்சாகத்துடன் விவாதித்து, கடந்துவிட்ட அபாயத்தை மீண்டும் அனுபவித்தவாறு கைகளை வீசி ஆட்டவில்லை. வெற்றிகரமான சண்டைக்குப் பின் வழக்கமாகச் செய்யும் இந்தக் காரியங்களை அன்று அவர்கள் செய்யவில்லை. அலுவலகத் தலைவரைச் சுளித்த முகங்களுடன் அணுகி, விளைவுகள் பற்றிய வரையறுத்த, சுருக்கமான தகவலைக் கொடுத்துவிட்டு ஒருவரை ஒருவர் நேரிட்டு நோக்காமலே பிரிந்து சென்றார்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ரெஜிமென்டுக்குப் புதியவன். கொல்லப்பட்டவர்களின் முகங்கள் கூட அவனுக்குப் பழக்கமில்லை. எனினும் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த சோகம் அவனையும் தொற்றிக் கொண்டது. எதற்காகத் தனது சித்தவுறுதி முழுவதையும் மனோபலம் அனைத்தையும் ஈடுபடுத்தி முயன்றானோ, அவனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான அந்த நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. அவனது அடுத்துவரும் வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிப்பது இந்த நிகழ்ச்சி, உடல் நலமுள்ள முழு மதிப்பு வாய்ந்த மனிதர்களின் அணிகளில் அவன் மீண்டும் சேரப் புரிவது. மருத்துவமனைக் கட்டிலிலும், பிறகு நடக்கவும் நடனமாடவும் கற்றுக்கொள்ளும் போதும், இழந்துவிட்ட விமானமோட்டும் தேர்ச்சியை விடாப்பிடியான பயிற்சிகளால் மீண்டும் பெற்ற போதும் எத்தனை எத்தனை முறைகள் அவன் இந்த நாளைப் பற்றிக் கனவு கண்டிருந்தான்! இப்போது, அந்த நாள் வந்துவிட்டது. இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான். அவன் எல்லோரையும் போலவே அலுவலகத் தலைவரை அணுகி, தான் வீழ்த்திய விமானங்களின் எண்ணிக்கையைக் கூறி, நிலைமைகளை விவரித்து, பெத்ரோவைப் புகழ்ந்து விட்டு அப்பால் போய், அன்று திரும்பாத விமானிகளைப் பற்றிச் சிந்தித்தவாறு பிர்ச் மரப்பந்தரின் கீழ் நின்றான்.

பெத்ரோவ் மட்டுமே தலைக்காப்பு இன்றி, வெளிர் முடிகள் கலைந்து பறக்க, விமானத் திடலில் ஓடி, வழியில் எதிர்ப்பட்டவர்கள் எல்லாருடைய கைகளையும் பற்றிக் குலுக்கி, விமானச் சண்டையை விவரிக்கலானானன்:

“..பார்க்கிறேனோ, பகை விமானங்கள் பக்கத்தில் வந்து விட்டன., கையை நீட்டினால் பிடித்துவிடலாம் போல! கேளு…. பார்த்தேன்: சீனியர் லெப்டினன்ட் முன் விமானத்தைக் குறிவைத்துத் தாக்கிவிட்டார். நான் பக்கத்து விமானத்தைக் குறிவைத்தேன். ஒரே அடி, விமானம் கயா!”

அவன் மெரேஸ்யெவிடம் ஓடி அவன் காலருகே மென்மையான புல்லடர்ந்த பாசி மீது விழுந்து கால்களை நீட்டிக் கொண்டான். இந்த அமைதியான கிடை அவனுக்குச் சகிக்கவில்லை. எனவே உடனே துள்ளி எழுந்தான்.

“நீங்கள் தாம் இன்று எப்பேர்பட்ட வளையங்கள் இட்டீர்கள்! வெகு நேர்த்தி! என் கண்கள் அப்படியே இருண்டு விட்டன….. ஜெர்மன்காரனை இன்று எப்படி அடித்து வீழ்த்தினேன் தெரியுமா? கேளுங்கள்…. உங்கள் பின்னாலேயே பறந்தவன் திடீரென்றுப் பார்த்தேன், அவன் கிட்டே வந்துவிட்டான், கையை நீட்டித் தொட்டுவிடலாம் போல. இதோ, நீங்கள் நிற்கிறீர்களே, இதே மாதிரி…. ”

அலெக்ஸேய் தன் சட்டைப் பைகளைத் தட்டிப் பார்த்தவாறு அவன் பேச்சை இடை முறித்தான்: “பொறு, தம்பி. கடிதங்கள், கடிதங்கள்… அவற்றை எங்கே வைத்துவிட்டேன்?”

தனக்கு அன்று கிடைத்த, தான் இன்னும் படிக்காத கடிதங்களை அவன் நினைவு கூர்ந்தான். பைகளில் அவற்றைக் காணாமையால் அவனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அப்புறம் சட்டைக்குள் மார்பின் மீது சரசரத்த உறைகளைத் தொட்டுணர்ந்து அவன் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டான். ஓல்காவின் கடிதத்தை எடுத்து, பிர்ச் மரத் தடியில் உட்கார்ந்து, வெற்றிக் கிளர்ச்சி கொண்ட தன் நண்பனின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உறையை ஜாக்கிரதையாகப் பிரிக்கலானான்.

அந்தச் சமயத்தில் வாணக்குழல் டப் பென உரக்க ஒலித்தது. சிவப்புப் பொறிகள் சிந்திய பாம்பு விமானத் திடலுக்கு மேலே வானில் நெளிந்து சென்று, மெதுவாகக் கலைந்து சிதறிய சாம்பல் தடத்தை விட்டுவிட்டு அணைந்தது. விமானிகள் துள்ளி எழுந்தார்கள். போகிற போக்கிலேயே அலெக்ஸேய் கடித உறையைச் சட்டைக்குள் மார்பருகேச் செருகிக் கொண்டான். கடிதத்தின் ஒரு வரியைக் கூட படிக்க அவனுக்கு வாய்க்கவில்லை. உறையைப் பிரித்த போது அதற்குள் காகிதங்கள் தவிர ஏதோ கடினமான ஒன்றும் அவனுக்கு தட்டுப்பட்டது. ஏற்கனவே பழக்கமாகிவிட்ட வழியில் அணிக்கு முன்னே பறந்தவாறு அவன் அவ்வப்போது உறையைத் தொட்டுப் பார்த்தான். அதில் என்ன இருந்தது?

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.

வி.இ.  குகநாதன்

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 5.11.2019 அன்று கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய அரசின் அடியாளான காவல்துறையை கண்டித்து, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் விளைவாக வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்கையும் நியமித்தது. 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (05.11.2019) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
♦ திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். மேலும் “காவல்துறையினரால் படுகாயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உரிய நிதி உதவியையும், இந்த சலசலப்புக்கு காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ( protection of advocates act ) அமல்படுத்த வேண்டும்.” என்று மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே திட்டமிட்டு தாக்கப்பட்டனர். பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. விசாரணைக் கமிஷன்கள் மூலமாக எந்த ஒரு தீர்வையும் அடைய முடியாது. இதுபோல சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கான ஒரேவழி மாணவர்கள், மக்கள், மற்றும் பல தரப்பினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, அவர்களின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம்.

கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42

2

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 42

பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர்

அ.அனிக்கின்

ரசரின் ஆசை நாயகிக்கு வயது முப்பதுக்கு மேல் சற்று அதிகமாகியிருந்தது. அவள் உல்லாசப் பிரியரான அரசரின் தயவை இழந்து கொண்டிருந்தாள். பிறகு அவள் அரசரின் அந்தப்புர நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கான நிலையைக் கடைசிவரையிலும் காப்பாற்றிக் கொண்டாள்.

பிரான்சில் அதிகமான அதிகாரத்தை வகித்த இந்த இருவருக்கும் அடுத்தபடியாக சீமாட்டி பாம்பதூரின் சொந்த மருத்துவரும் அரசரின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் கெனே இருந்தார். அவர் உருண்டையான தோள்களைக் கொண்டவர், எளிமையான உடையணிந்தவர், எப்பொழுதும் அமைதியாகத் தோன்றுவார்; ஆனால் அவரிடம் லேசான ஏளனம் இருந்தது. அவர் அரசாங்க இரகசியங்கள் பலவற்றை அறிந்திருந்தார். ஆனால் அவற்றை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றுவதற்கும் அவருக்குத் தெரியும். மருத்துவத் தொழிலில் அவருடைய திறமையைப் போல இந்த குணமும் பாராட்டுதலைப் பெற்றது.

அரசருக்கு போர்டோ மதுவின் மீது ஆசை அதிகம்; ஆனால் அரசருடைய வயிற்றுக்கு அது ஒத்துவராது என்பதால் அதைக் குடிக்கக் கூடாது என்பது கெனேயின் உத்தரவாகும். அரசர் வேறு வழியில்லாமல் அந்த மதுவைக் குடிப்பதை நிறுத்தியிருந்தார். எனினும் இரவு உணவின் போது அரசர் அதிகமாக சாம்பேன் மதுவைக் குடித்து விட்டு கால்கள் தள்ளாட சீமாட்டி பாம்பதூரின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வார். அவர் பல தடவை மயங்கி விழுவார்; டாக்டர் கெனே அவருக்கு உடனே மருந்து கொடுப்பார்.

பாம்பதூர் சீமாட்டி

சாதாரணமான மருந்துகளைக் கொண்டே நோயாளியை உடனே குணப்படுத்திவிடுவார். தன்னுடைய படுக்கையில் அரசர் மரணமடைந்துவிடுவாரானால் அடுத்தாற் போல என்ன நடக்கும் என்பதை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கும் சீமாட்டி பாம்பதூருக்கும் அவர் தைரியம் சொல்லுவார். அரசர் மரணமடைந்தால் அந்தச் சீமாட்டியே அதற்குப் பொறுப்பு என்பது நிச்சயம். அந்த ஆபத்து ஏற்படாதென்று கெனே அவளிடம் உறுதியளித்தார். அரசருக்கு வயது நாற்பது; அவருக்கு அறுபது வயதாகியிருக்குமானால் கெனேயால் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. அவர் அறிவாளி, அனுபவம் மிகுந்தவர்; அரசவைப் பிரமுகர்களுக்கும் விவசாயிகளுக்கும், இளவரசிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்; சீமாட்டி பாம்பதூரை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவர் மருத்துவத் துறையில் அதிகமான அளவுக்கு இயற்கையில் நம்பிக்கை கொண்டவர்; சாதாரணமான இயற்கை மருந்துகளையே அவர் அதிகம் உபயோகித்தார். அவருடைய சமூக, பொருளாதாரக் கருத்துக்கள் அவருடைய குணத்திலிருந்த இந்த அம்சத்தோடு முழுமையாகப் பொருந்தியிருந்தன. ஏனென்றால் “பிஸியோக்ரஸி” என்ற சொல்லுக்கு “இயற்கையின் சக்தி” என்பது பொருள் (கிரேக்கச் சொல்லான “பிஸிஸ்” என்றால் இயற்கை; ”கிராடோஸ்” என்றால் சக்தி).

பதினைந்தாம் லுயீ கெனே மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்; அவரை ”என்னுடைய சிந்தனையாளர்” என்றே கூப்பிடுவார். அவர் தன்னுடைய மருத்துவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்தார்; அதற்குரிய இலச்சினையையும் அவரே தேர்ந்தெடுத்தார். அரசரின் உடற்பயிற்சிக்காகக் கையால் அச்சிடுகின்ற சிறு இயந்திரத்தை கெனே ஏற்பாடு செய்திருந்தார். அதில் கெனே எழுதிய பிரசுரத்தின் முதல் பிரதிகளை அரசர் தாமே கைப்பட அச்சிட்டார். பொருளாதார அட்டவணை என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிரசுரம் கெனேக்கு அதிகமான புகழைத் தேடித் தந்தது. ஆனால் கெனேக்கு அரசரைப் பிடிக்காது; தன் மனதில் அவரைப் பற்றி ஆபத்தான அனாமதேயம் என்று நினைத்திருந்தார்.

பிஸியோகிராட்டுகளின் பார்வையில் இலட்சிய அரசர் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும்; அரசுச் சட்டங்களை மதிநுட்பத்தோடு பயன்படுத்துகின்ற நாட்டின் பாதுகாவலர் அவர். இந்த இலட்சியத்துக்கும் பதினைந்தாம் லுயீக்கும் எத்தகைய ஒற்றுமையும் கிடையாது. கெனே அரண்மனையில் நிரந்தரமாக இருந்தார்; அரசவையில் தமக்கிருந்த செல்வாக்கை உபயோகித்து பதினைந்தாம் லூயீயின் மகனும் வாரிசுமான இளவரசரை அப்படிப்பட்ட அரசராக மாற்றுவதற்குப் படிப்படியாக முயற்சி செய்தார்; இளவரசரின் மரணத்துக்குப் பிறகு அரசரின் பேரனும் புதிய இளவரசரும் எதிர்கால பதினாறாம் லுயீயுமான இளைஞரை மாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

படிக்க :
♦ வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?
♦ பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !

1694 -ம் வருடத்தில் வெர்சேய்க்கு அருகிலுள்ள கிராமத்தில் நிக்கோலஸ் கெனே என்பவரின் எட்டாவது மகனாக அவர் பிறந்தார். அவர் தந்தைக்கு மொத்தம் பதிமூன்று குழந்தைகள். நிக்கோலஸ் வழக்குரைஞராக அல்லது நீதித்துறை அதிகாரியாக இருந்ததாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. டாக்டர் கெனேயின் மரணத்துக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை முதலாவதாக எழுதியவரும் அவருடைய மருமகனுமான எவேன் என்ற மருத்துவர் இந்தக் கட்டுக் கதையைப் பரப்பினார் என்று பிற்காலத்தில் தெரிய வந்தது; டாக்டர் கெனேக்கு அதிக கௌரவமான குடும்பப் பின்னணியைக் கொடுப்பது அவருடைய நோக்கம். நிக்கோலஸ் ஒரு சாதாரண விவசாயி; எப்பொழுதாவது சிறு அளவுக்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவதுண்டு என்ற விவரங்கள் இன்று ஆதாரத்தோடு தெரியவந்திருக்கின்றன.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

பதினொரு வயது வரை கெனே எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார். பிறகு ஒரு அன்பான தோட்டக்காரர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு கிராமத்தின் குருவிடம் பாடங்களைக் கேட்டார்; பக்கத்திலிருந்த சிற்றூரில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலும் போய்ப் படித்தார். இந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் வயலிலும் வீட்டிலும் கடுமையாகப் பாடுபட்டார்; அவருக்குப் பதிமூன்று வயதாகிய பொழுது அவருடைய தகப்பனார் இறந்துவிட்டதனால் அவர் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது என்று எவேன் எழுதுகிறார். புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது; அவர் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பி பாரிசுக்கு நடந்தே போவார், அங்கே புத்தகத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் நடந்து இரவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவார். இத்தனைக்கும் அவர் கிராமத்திலிருந்து பாரிஸ் பல டஜன் கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. கிராமவாசிகளைப் போல அவர் ஆரோக்கியமும் உடல் வலிமையும் கொண்டிருந்தார். இளம் வயதிலிருந்தே கீல்வாதம் அவரைத் துன்புறுத்திவந்தது என்பதை ஒதுக்கிவிட்டால் கடைசி வரையிலும் அவர் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கெனே தனக்குப் பதினேழு வயதாகும் பொழுது, அறுவை மருத்துவராக வேண்டுமென்று முடிவு செய்து உள்ளூர் மருத்துவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் உடலிலிருந்து இரத்தத்தை எடுப்பது தான் சர்வரோக நிவாரணியாக இருந்தது. அவரும் அதையே முக்கியமாகக் கற்றுக் கொண்டார். அவருக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் தீவிரமாக உழைத்துப் படித்தார். 1711 முதல் 1717 வரை அவர் பாரிசில் இருந்தார்; ஒரே சமயத்தில் உலோகத்தில் படம் செதுக்கும் கடையில் வேலை செய்து கொண்டும் மருத்துவ நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டுமிருந்தார். இருபத்து மூன்று வயதுக்குள்ளாகவே அவர் வேரூன்றிவிட்டார் என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைக்காரரின் மகளை அதிகமான சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

அறுவை மருத்துவர் தகுதிச் சான்றிதழ் பெற்றதும் பாரிசுக்கு அருகில் மான்ட் என்ற நகரத்தில் தொழில் செய்ய ஆரம்பித்தார். அவர் அங்கே பதினேழு வருடங்கள் இருந்தார்; அவருடைய திறமையும் உழைப்பும், நோயாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் அவர் கொண்டிருந்த விசேஷமான ஆற்றலும் அந்த மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவர் என்ற பெயர் அவருக்குக் கிடைக்குமாறு செய்தன. அவர் பிரசவம் பார்த்தார் (பிரசவ வைத்தியத்தில் அவர் குறிப்பிடக் கூடிய புகழடைந்திருந்தார்), இரத்தத்தை வெளியேற்றினார், பல் வைத்தியம் செய்தார்; அந்தக் கால நிலைமைகளை நினைக்கும் பொழுது சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகளையும் செய்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேன்மக்களும் படிப்படியாக அவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்தார்கள்; பாரிஸ் நகரத்தில் பிரபலமானவர்களோடு பழகினார்; மருத்துவத் துறையில் சில புத்தகங்களை வெளியிட்டார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்
♦ கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

1734-ம் வருடத்தில் கெனே – அவர் இப்பொழுது மனைவியை இழந்தவர், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனார் – மான்டை விட்டுப் போய் வில்லெருவா கோமகனின் குடும்ப மருத்துவரானார். அந்த நூற்றாண்டின் முப்பதுக்களிலும் நாற்பதுக்களிலும் அரசாங்கச் சட்டத்துக்கு எதிராக அறுவைச் சிகிச்சையாளர்கள் நடத்திவந்த போராட்டத்தில் அதிகத் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு பழைய சட்டத்தின் படி அறுவைச் சிகிச்சையாளர்கள் நாவிதர்களைப் போன்றவர்களே; எனவே அவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. “அறுவைச் சிகிச்சையாளர்கள் கட்சிக்கு” கெனே தலைவரானார்; இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தக் காலத்தில் அவர் தமது முக்கியமான இயற்கை விஞ்ஞானப் புத்தகத்தை எழுதினார். அது அடிப்படையான மருத்துவப் பிரச்சினைகளை, தத்துவத்துக்கும் மருத்துவ நடைமுறைக்கும் உள்ள உறவை, மருத்துவ ஒழுக்கம் முதலியனவற்றைப் பற்றி எழுதப்பட்டிருந்த மருத்துவத் தத்துவஞான ஆராய்ச்சி நூலாகும்.

1749-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டி கெனேயைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கோமகனிடம் “இரந்து” வாங்கிக் கொண்டாள். அது கெனேயின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சியாகும். வெர்சேய் அரண்மனையின் மாடியில் ஒரு பகுதியில் கெனே தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. அவர் இப்பொழுது பெரும் பணக்காரராகியிருந்தார்.

அவருடைய வாழ்க்கையிலும் பணிகளிலும் மருத்துவம் அதிகமான இடத்தைப் பெற்றிருந்தது. மருத்துவத்திலிருந்து தத்துவஞானம் என்ற பாலத்தின் வழியாக அரசியல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறினார். மனித அமைப்பும் சமூகமும். இரத்தத்தின் சுற்றோட்டம் அல்லது வளர்சிதை மாற்றமும் சமூகத்தில் ஒரு பொருள் செலாவணியாவதும். உயிரியல் தொடர்புடைய இந்த ஒத்த உறவு கெனேயின் சிந்தனையைக் கிளறிவிட்டதோடு இன்றைய நாள் வரையிலும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

வெர்சேய் அரண்மனை.

வெர்சேய் அரண்மனையின் மாடியின் ஒரு பகுதியிலிருந்த அறைகளில் கெனே இருபத்தைந்து வருடங்கள் வசித்தார். பதினைந்தாம் லுயீ மரணமடைந்தவுடன் புது அரசர் இறந்தவருடைய ஆட்சியின் ஒவ்வொரு எச்சத்தையும் அரண்மனையிலிருந்து அகற்றிய பொழுது அவரும் அரண்மனையை விட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது கெனேயின் மரணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தணிவாகவும் ஓரளவுக்கு இருட்டாகவும் இருந்த ஒரு பெரிய அறை, இதைத் தவிர சாமான்கள் வைத்திருக்கும் இரண்டு இருட்டறைகள் – இவை தான் அந்த அரண்மனையில் கெனேக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதி. எனினும் அந்த அறை வெகு சீக்கிரத்திலேயே “இலக்கியக் குடி யரசு” விரும்பிக்கூடும் அறையாக மாறியது.

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் “கலைக் களஞ்சியத்தைச்” சுற்றித் திரண்டிருந்த எழுத்தாளர்கள், அறிவாளிகள், தத்துவஞானிகள் அங்கே வழக்கமாகக் கூடினார்கள். டாக்டர் கெனே தன்னுடைய கருத்துக்களை முதலில் பத்திரிகைகளில் வெளியிடவில்லை, இந்த அறையில் கூடிய நெருக்கமான நண்பர்கள் மத்தியில் தான் வெளியிட்டார். அங்கே அவரோடு ஒத்த கருத்துடையவர்களும் மாணவர்களும் மட்டுமல்லாமல், எதிர்க் கருத்துடையவர்களும் வருவது வழக்கம். கெனேயின் இருப்பிடத்தில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றிய தத்ரூபமான வர்ணனையை மார்மன்டெல் எழுதியிருக்கிறார்:

“அந்த மாடி அறைக்குள் புயல் மேகங்கள் திரண்டு வரும்; கலைந்துபோகும். அந்த நேரத்தில் கெனே விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றித் தனது கருதுகோள்களையும் கணக்குகளையும் தயாரித்துக் கொண்டிருப்பார். அரசவையின் நடவடிக்கைகளிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் தள்ளியிருப்பவரைப் போல அவர் அமைதியோடும் அலட்சியத்தோடும் நடந்து கொள்வார். கீழே அரசவைப் பிரமுகர்கள் யுத்தம், சமாதானம், தளபதிகளை நியமித்தல், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களை முடிவு செய்து கொண்டிருப்பார்கள்; ஆனால் அவருடைய அறையில் நாங்கள் விவசாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம், நிகர உற்பத்தியை மதிப்பிடுவோம் அல்லது சில சமயங்களில் டிட்ரோ , ட அலம்பேர், டுக்ளோ, ஹெல்வெடிய ஸ், டியுர்கோ, புஃபான் ஆகியோரோடு ஆனந்தமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம். இவ்வளவு தத்துவஞானிகளையும் தன்னுடைய வரவேற்பு அறைக்குள் ஈர்க்க முடியாமற்போன பாம்பதூர் சீமாட்டி தானே அங்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியடைவாள்.”  (1)

பிற்காலத்தில் கெனேயின் குழு அங்கே கூடிய காலத்தில் அந்தக் கூட்டங்களின் தன்மை சற்று மாறியிருந்தது. அங்கே அமர்ந்திருப்பவர்கள் பிரதானமாக கெனேயின் மாணவர்களாக, அவரைப் பின்பற்றுவோராக இருந்தனர் அல்லது ஆசானுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகக் கூட்டிக் கொண்டு வரப்பட்ட நபர்களாக இருந்தனர். 1766-ம் வருடத்தில் ஆடம்ஸ்மித் இங்கே வந்து சில மாலைப் பொழுதுகளைக் கழித்தார்.

கெனே எப்படிப்பட்டவர்?

அவருடைய சமகாலத்தவர்கள் எழுதியுள்ள அநேகமாக ஒன்றுக்கொன்று முரண்படுகிற வர்ணனைகளிலிருந்து சூழ்ச்சியான ஒரு அறிவாளியைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர் தன்னுடைய ஆழமான அறிவை எளிமையான தோற்றத்திலே மறைத்துக் கொண்டார்; பலர் அவரை சாக்ரடிசோடு ஒப்பிட்டனர். அவர் எளிதில் புலப்படாத ஆழமான உட்பொருளைக் கொண்ட உருவகக் கதைகளை விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் அதிகமான எளிமையுடையவர்; தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்; தன்னுடைய கருத்துக்களைத் தன் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்கள் என வெளியிட்டு கௌரவமடைவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

அவருடைய தோற்றம் சாதாரணமாக இருந்ததனால் அந்த அறைக்கு முதன் முறையாக வருபவர்கள் அங்கே விருந்தளித்து விவாதங்களுக்குத் தலைமை வகிப்பவர் யார் என்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. அவரோடு பேசிய மிராபோ பிரபுவின் சகோதரர் “பேய்த்தனமான அறிவுடையவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார். அவர் கூறிய கதையைக் கேட்ட அரசவைப் பிரமுகர் ஒருவர் ”குரங்கைப் போலத் தந்திரமானவர்” என்று அவரைப் பற்றி அபிப்பிராயம் கூறினார். 1767-ம் வருடத்தில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தில் ஒரு அவலட்சணமான சாதாரண முகத்தைக் காண்கிறோம்; அந்த முகத்தில் உலகத்தைப் பார்த்து ஏளனமான புன்சிரிப்பு தவழ்கிறது; கண்கள் அறிவுக் கூர்மையோடு ஊடுருவிப் பார்க்கின்றன.

கெனே “அரண்மனையில் வாழ்ந்தாலும் தத்துவஞானி; அவர் படிப்பதிலும் தனிமையிலும் பொழுதைக் கழித்தார்; அங்கே பேசப்படுகின்ற மொழியை (2)  அவர் அறியார், அதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சிறிதளவு கூட முயற்சி செய்ததில்லை, ஏனென்றால் அங்கே இருந்தவர்களோடு அவருக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது; அவர் எவ்வளவு அதிகமான அறிவு கொண்ட நீதிபதியாக இருந்தாரோ அந்த அளவுக்குப் பாரபட்சம் இல்லாத நீதிபதியாகவும் இருந்தார்; அரண்மனையில் அவர் பார்த்தவையும் கேட்டவையும் அவரைச் சிறிது கூட பாதிக்காதபடி இருந்தார்” (3) 

அரசர் மீதும் சீமாட்டி பாம்பதூர் மீதும் அவருக்கு இருந்த செல்வாக்கை, இப்பொழுது அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரியங்களின் நன்மைக்காகப் பயன்படுத்தினார். அவரும் டியுர்கோவும் சேர்ந்து செய்த முயற்சிகளின் பலனாகச் சட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னோடு ஒத்த கருத்துடைய நண்பர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்; லெமெர்ஸியேவை ஒரு முக்கியமான பதவியில் நியமிக்குமாறு செய்தார், அந்தப் பதவியிலிருக்கும் பொழுது தான் லெமெர்ஸியே முதல் தடவையாக பிஸியோகிராட் பரிசோதனையைச் செய்ய முயன்றார். 1764-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டியின் மரணம் இந்தப் பொருளியலாளர்களின் நிலையை ஓரளவுக்கு பலவீனப்படுத்தியது; ஆனால் கெனே அரசரின் சொந்த மருத்துவராக நீடித்தார், அரசரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Oeuvres completes de Marmontel, t. I, Paris, 1818, pp. 291-92.

(2) அரண்மனைகளில் வழக்கமாக நடைபெறும் சூழ்ச்சி களும் வம்புப் பேச்சும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. 1, p. 240.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறைக் கும்பலை கண்டித்தும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச். ராஜா, திருக்குறளை வைத்து அரசியல் நடத்துவதை கண்டித்தும், 05.11.2019 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் காலை 11.30 மணி அளவில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தலைவர் பெரும் புலவர் சிவராம சேது அவர்கள் ஆர்ப்பட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜு அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் திருவள்ளுவர் அறக்கட்டளை இல. சிறுத்தொண்ட நாயனார், வி. நாராயணன், சா. குப்புசாமி, மக்கள் அதிகாரம் விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் கு. முருகானந்தம், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் வா. அன்பழகன், விவசாய சங்கத்தின் சார்பில் M.G. பஞ்சமூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் கதிர்காமன் மற்றும் CP-ML மக்கள் விடுதலை அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் : மந்திரத்தால் மாங்காய் விழாது !

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் தினந்தோறும் நடைபெறுவதும் அவற்றுள் ஒரு சில பத்திரிகைகளில் வெளியாகி விவாதப் பொருளாவதும் புதிய செய்தி அல்ல. எனினும், தற்பொழுது, அதாவது இந்து மதவெறிக் கும்பல் மைய அரசு அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நடைபெறும் தாக்குதல்கள், முன்னைக் காட்டிலும் வக்கிரத்தோடும், எவ்விதமான கூச்ச, குற்ற உணர்வின்றியும், தண்டிக்கப்பட மாட்டோம் என்ற திமிரோடும் தொடுக்கப்படும் புதிய சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த வகையான மிகவும் வெளிப்படையான வன்கொடுமைத் தாக்குதல் குஜராத் மாநிலம் உனாவில் நடந்தபோது நாடெங்கும் அதிர்ச்சியும் எதிர்வினைகளும் ஏற்பட்டன. ஆயினும், இந்த வகையான தாக்குதல்கள் தற்பொழுது இயல்பாகி வருவதை மத்தியப் பிரதேச மாநிலம் பாவ்கேதி கிராமத்திலும், தமிழகத்தில் மதுரை மாவட்டத்திலும் நடந்திருக்கும் வன்கொடுமைகள் எடுத்துக்காட்டுகின்றன.

caste-violence-in-india-(2)
வன்கொடுமை தாக்குதலுக்குப் பலியான குழந்தைகள் அவினாஷ் மற்றும் ரோஷிணியின் சடலங்கள்.

மத்தியப்பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியைச் சேர்ந்த 12 வயது ரோஷ்ணி, 10 வயது அவினாஷ் ஆகிய இரு குழந்தைகளும் அவ்வூரின் ஊராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்ற அற்பமான காரணத்திற்காக, யாதவ் சாதியைச் சேர்ந்த சகோதரர்கள் ஹக்கீமும், ராஜேஷ்வரும் அவ்விருவரையும் குழந்தைகள் என்றுகூடப் பாராமல் மிருகத்தனமாகத் தாக்கியதில், அவ்விரு குழந்தைகளும் இறந்து போனார்கள்.

தமிழகத்தில், மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், மறவப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற மாணவனின் புத்தகப்பையைத் தேவர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்னும் சக வகுப்பு மாணவன் ஒளித்து வைத்திருக்கிறான். ஏண்டா, என் பையை ஒளிச்சு வச்ச? என்று சரவணக்குமார் கேட்டதற்காக, அவனின் சாதியைச் சொல்லித் திட்டி, நீயெல்லாம் என்னை எதுத்துப் பேசறயா? என்று அவமானப்படுத்தி, சரவணக்குமாரின் முதுகுப் பகுதியில் கழுத்து முதல் இடுப்பு வரை பிளேடால் பிளந்திருக்கிறான் மகா ஈஸ்வரன்.

படிக்க :
♦ திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !
♦ மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

திறந்தவெளியில் மலம் கழிப்பது இந்தியாவில் பரவலாக நடந்துவரும் விடயம்தான். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அநாகரிகத்தை ஒழிக்கப் போவதாக நரேந்திர மோடி பீற்றிவரும்போது, ஆதிக்க சாதிவெறியர்களோ இதனை வன்கொடுமை மூலம் ஒழித்துக்கட்ட முனைகிறார்கள் போலும்.

“எப்படியோ இந்தியா சுத்தமானால் சரி” என்று இந்த வன்கொடுமைக்கு ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் ஆதரவுகூடக் கொடுக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. காஷ்மீர் மாநிலம், கதுவாவில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை ஆதரித்து ஊர்வலம் போனவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள்.

மேலத் தெருக்களிலும் அக்ரஹாரத்திலும் ஆடு மாடுகளும் நாயும் மூத்திரமும் மலமும் கழிப்பதைச் சகித்துக்கொண்டு போகும் ஆதிக்க சாதி இந்து மனம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகள் திறந்த வெளியில் மலம் போனதைப் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. அக்குழந்தைகளைக் கொன்றுபோடும் அளவிற்கு மிருகத்தனமாகத் தாக்குகிறது. எனில், இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஆடு, மாடுகளைவிடக் கீழானது என்பதுதான் இக்கொலை உணர்த்தும் பொருள்.

அதனால்தான் இத்தாக்குதலைக் குற்றமாகவோ அநாகரிகமானதாகவோ கருத மறுக்கிறது ஆதிக்க சாதி மனோபாவம். மேலும், இதற்காகத் தம்மை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற சாதி ஆணவத் திமிரில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிடுகிறார்கள். இதன் வழியாக தாழ்த்தப்பட்டோர் மத்தியில் அச்சத்தை விதைக்க முயலுகிறார்கள்.

சரவணக்குமாரின் முதுகில் தெரியும் “ஆதிக்க சாதிவெறி”க் காயம்!

“ஏன்டா, என் பையை ஒளிச்சு வச்ச?” என்பது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத மாணவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் மிகச் சாதாரணமான கேள்வி. இக்கேள்வியால் கேள்விக்குள்ளானவனின் கௌரவம் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதில்லை. ஆனால், இங்கோ கேள்வி கேட்ட சரவணக்குமார் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே ஆதிக்க சாதியைச் சேர்ந்த மகாஈஸ்வரனால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறான். ஆதிக்க சாதியினரின் எந்தவொரு செயலையும் தாழ்த்தப்பட்டவர்கள் கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதுதான் இத்தாக்குதல் உணர்த்தும் செய்தி.

ஆதிக்க சாதியினரின் முகம் சுளித்துவிடாதபடி, மனம் கோணாதபடி தாழ்த்தப்பட்டோர் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிர்த்தோ, கண்டித்தோ சுண்டுவிரலைக்கூட அசைத்துவிடக் கூடாதென்றால், தாழ்த்தப்பட்டோர் சுயமரியாதையற்ற சதைப் பிண்டங்களாகத்தான் வாழ வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கும் அவ்வன்கொடுமைக்கு, அம்மாநிலம் பின்தங்கிய மாநிலம், சமூக சீர்திருத்த இயக்கங்கள் எதுவும் நடைபெற்றிராதா மாநிலம், மிக முக்கியமாக  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் கோட்டை எனக் காரணங்களை அடுக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அப்படியா? பெரியார் மண், சமூக நீதி பூமி என்றெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒளிவட்டம் போடப்படுவதெல்லாம் வெற்றுக் கோஷம்தானா என்றால், இந்தக் கேள்விக்கு இல்லை என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியாது.

சரவணக்குமாரின் சொந்த ஊரான மறவப்பட்டியில் இன்றும்கூட தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு அணிந்துகொண்டு ஊர்த் தெருவுக்குள் செல்ல முடியாத தீண்டாமை தாண்டவமாடுவதாகக் கூறுகிறார்கள், அவ்வூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள்.

படிக்க :
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

இத்தகைய தீண்டாமைக் கொடுமை இன்னமும் தமிழ்நாட்டில் நிலவுகிறதா என நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் புருவத்தை உயர்த்தக்கூடும். எனினும், சந்தேகமே கொள்ளமுடியாத அளவிற்குத் தீண்டாமையும் வன்கொடுமைகளும் தமிழகத்தில் நடைபெற்று வருவதற்கு ஆணவக் கொலைகளும், இரட்டைக் குவளை முறை, தீண்டாமைச் சுவர், தனிச் சுடுகாடு உள்ளிட்டவையும் சாட்சியங்களாக உள்ளன.

சரவணக்குமார் மீது மகாஈஸ்வரன் நடத்திய வன்கொடுமைத் தாக்குதலை விதிவிலக்கானதாகப் பார்க்க முடியாது. ஆதிக்க சாதிவெறி தென் தமிழகப் பள்ளி மாணவர்களைக் கபளீகரம் செய்திருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது, அத்தாக்குதல். 1990-கள் தொடங்கியே தென் தமிழக மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறி மனோபாவமும் சாதிவெறியர்களின் கொட்டமும் அதிகரித்து வருவதன் விளைவுதான் மகா ஈஸ்வரன் சரவணக்குமாரைத் தாக்கியதன் பின்னே இருக்கும் சூழல்.

இந்தச் சூழலைத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தென் தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் தத்தமது சாதிகளைக் குறிக்கும் வண்ணக் கயிறுகளைத் தமது கைகளில் கட்டிவருவதை ஆதரித்து எச்ச.ராசா அறிக்கைவிட்டது ஒரு தனிப்பட்ட பார்ப்பன வெறியனின் கருத்து மட்டுமல்ல. சாதியுணர்வைத் தனது சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் அரசியல் நோக்கமும் அதன் பின்னே  உள்ளது.

எச்ச.ராஜா அறிக்கை வந்தவுடன் அ.தி.மு.க. அரசு அவ்விவகாரத்தில் பின்வாங்கிக் கொண்டது அதனின் அடிமைத்தனத்தை மட்டும் காட்டவில்லை. அ.தி.மு.க. அரசு அதன் தன்மையிலேயே பார்ப்பனர், தேவர், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையான அரசுதான் என்பதையும் உறுதிப்படுத்திக் காட்டியது.

ஆதிக்க சாதிவெறியை அரவணைத்துக் கொம்பு சீவிவிடுவதற்கு மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதற்கும் ஏற்ற அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. இச்சூழலுக்கு முகங்கொடுக்காமல், அதனை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடாமல், பெரியார் மண், சமூக நீதி பூமி என்று மட்டும் கதைத்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு ஆக்கபூர்வமான பயனும் விளைந்துவிடாது.

தமிழ்ச்சுடர்
– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !

தலையங்கம் : மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!

ந்த வருட தீபாவளி போனசாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு என்ற தண்டனையையும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பங்குச் சந்தை சூதாடிகளுக்கும் வரிக் குறைப்பு, வரித் தள்ளுபடி உள்ளிட்டப் பலவிதமான சலுகைகளையும் வழங்கியிருக்கிறது, நரேந்திர மோடி அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 34.94 சதவீத வரியை 25.17 சதவீதமாகக் குறைத்தது உள்ளிட்டுப் பெருநிறுவன வரிவிதிப்பில் செய்திருக்கும் மாற்றங்களின் மூலம் அந்நிறுவனங்களுக்கு 1,45,000 கோடி ரூபாய் பெறுமான வெகுமதி; ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகள்; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தமது கட்டுமானத் திட்டங்களை முடிப்பதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி நீக்கம்; தொழில் முனைவோர் மீது விதிக்கப்பட்டு வந்த ஏஞ்செல் வரி ரத்து எனச் சலுகைக்கு மேல் சலுகையாக அறிவித்து வருகிறது, மத்திய பா.ஜ.க. அரசு.

கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் வரித் தள்ளுபடிகளுக்கு அப்பால், வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி 5.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தவிக்கக்கூடாது என்பதற்காகவே, பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் நிதியிலிருந்து 70,000 கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனமும் வழங்கப்பட்டிருக்கிறது.

stop PSU bank Stop merger
பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் புதுதில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தச் சலுகைகளையெல்லாம் மோடி அரசு புதிய நோட்டுக்களை அச்சடித்து வழங்கப் போவதில்லை. அரசின் கஜானாவிலிருந்துதான் தூக்கிக் கொடுக்கவுள்ளது. இதன் காரணமாக இந்த நிதியாண்டில் மட்டும் மைய அரசிற்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு 2.85 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அபரிமிதமான சலுகைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த வரிக் குறைப்பால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கும் பணத்தை அவர்கள் தொழிலில் முதலீடு செய்வார்கள், அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்” என்று நியாயப்படுத்துகிறார்கள் நிபுணர்கள் என்ற போர்வையில் உலவும் முதலாளி வர்க்கக் கைத்தடிகள்.

உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து ரூபாய் பிஸ்கெட்டுகள்கூட விற்பனையாகவில்லை எனப் புலம்பிவரும் முதலாளித்துவ வர்க்கம், இம்மந்த நிலையிலும் புதிய முதலீடுகளைச் செய்ய முன்வரும் என முட்டாள்கூட நம்பமாட்டான். ஆனால், மோடி அரசோ கேப்பையில் நெய் வழியும் என நம்பச் சொல்கிறது.

இவ்வரி குறைப்புக்கு முன்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது 30 சதவீதம் அளவிற்கு வருமான வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த முப்பது சதவீத வரி மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகள், செஸ் வரிகளையும் சேர்த்து அவ்வரி 34.94 சதவீதமாக இருந்தது. எனினும், இந்தளவிற்கான வரியை கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு நாளும் முழுமையாகச் செலுத்தியதில்லை. அந்நிறுவனங்களுக்குச் சட்டப்படியாகவே வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் அவை குறைந்த வரியைத்தான் செலுத்தி வந்தன. இவ்வரிச் சலுகைகளால் சிமெண்ட் நிறுவனங்கள் 20.74 சதவீதமும், இரும்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் 17.80 சதவீதமும், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் 18 சதவீதமும்தான் வரி செலுத்தியதாக அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகளை, அதாவது கார்ப்பரேட் மானியத்தைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும். 2005 ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2013-  ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள ஒன்பது ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித் தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 36 இலட்சம் கோடி ரூபாய்” எனக் குறிப்பிடுகிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் (2015 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த வருமான வரித் தள்ளுபடி 2.48 இலட்சம் கோடி ரூபாய்; அதே ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுங்க வரித் தள்ளுபடி 1.80 இலட்சம் கோடி ரூபாய்; உற்பத்தி வரித் தள்ளுபடி 1.50 இலட்சம்  கோடி ரூபாய்.

இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு தமக்கு ஒரு பைசாகூட இலாபமே கிடைக்கவில்லை எனக் கணக்கு எழுதி வரியே கட்டாமல் தப்பித்துக்கொள்ளும் நிறுவனங்களும் உண்டு. அப்படி இலாபமே காட்டாத நிறுவனங்களும் குறைந்தபட்ச வரி கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பையும் 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்திருக்கிறது, மோடி அரசு.

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தான் போட்டிருப்பதாகக் கூறும் மூலதனத்தைவிடப் பல மடங்கு அதிகமாகவே வரிச் சலுகைகளையும் இலாபத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடுவதை நோக்கியா விவகாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. வெறும் 600 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னையில் தொழிலைத் தொடங்கிய பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அத்தேசங்கடந்த நிறுவனம், வரி ஏய்ப்புகளின் மூலம் மட்டும் 25,000 கோடி ரூபாயைத் தனது நாட்டிற்குக் கடத்திச் சென்றதாக வருமான வரித்துறையே குற்றஞ்சுமத்தியது.

6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னைக்கு அருகே ஒரகடத்தில் கார் தொழிற்சாலை அமைத்திருக்கும் நிஸான் நிறுவனம், மைய அரசும், தமிழக அரசும் தனக்கு 5,390 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சலுகைகளை அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனை உடனே அளிக்க வேண்டுமெனக் கோரிப் பன்னாட்டு நடுவர் மையத்தை அணுகியிருக்கிறது. (திஇந்து, அக்.18)

இச்சட்டபூர்வ வரித் தள்ளுபடிகள், சலுகைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் பல்வேறு விதமான வரி ஏய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அம்மோசடிகளின் மதிப்பு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும். பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பிக்கொண்டு செயல்பட்டு வரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி டாலர் அளவிற்கு – ஏறத்தாழ 35 இலட்சம் கோடி ரூபாய் – வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக”க் குறிப்பிடுகிறார், ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ். (திஇந்து, அக்.14)

சில ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொய்யாக எழுதப்பட்டு வரும் இத்துணை இலட்சம் கோடி ரூபாய்களும் மைய, மாநில அரசுகளின் வழியாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் மூலமும்; விவசாயம், எரிபொருள், போக்குவரத்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் மூலமும் மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

மோடி அரசோ இதனைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. மக்களிடமிருந்து பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புகிறது.

இப்பொருளாதார நெருக்கடி எந்தவொரு கார்ப்பரேட் முதலாளியையும் வாழ வழியற்ற நிர்க்கதியான நிலைக்குத் தள்ளிவிடவில்லை. தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும், சிறுதொழில் முனைவோரும்தான் அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்திலும் ஒரு ரூபாய் அளவிற்குக்கூடச் சலுகை அளிக்க மோடி அரசு முன்வரவில்லை.

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மோடியின் இந்த நடவடிக்கையைக் கூச்சமின்றி ஆதரிக்கும் பொருளாதார நிபுணர் கூட்டம், இச்சலுகைகளால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என நரித்தனமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் பொருள், இதனை ஈடுகட்ட மக்களை எந்தெந்த வழிகளில் கொள்ளையிடப் போகிறீர்கள்?” என்பதுதான்.

அக்கொள்ளைக்கான முன்னேற்பாடுகளில் மோடி அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது என்பதே உண்மை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1.45 இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையை அளித்திருப்பதை ஈடுகட்டும் நோக்கத்தோடுதான் ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.76 இலட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அபகரித்திருக்கிறது, மோடி அரசு. மேலும், இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று ஒரு இலட்சம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இது முதலாளிகளுக்கு இட்ட படையலை பொதுச்சொத்தை விற்று ஈடு செய்வதாகும்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வரிக் குறைப்பு அறிவித்த அதேநேரத்தில்தான் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை அதிகரிக்கப்பட்டன. நல்ல வருமானம் தரக்கூடிய ரயில் வழித்தடங்களைத் தனியாருக்கு விற்கும் அரசின் முடிவு, மக்களை கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகக் கொள்ளையிடுவதற்குச் செய்து கொடுக்கப்படும் ஏற்பாடாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் சந்தையிலிருந்து மேலும் 2.68 இலட்சம் கோடி ரூபாய் கடனாகப் பெறுவது, வங்கி சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைப்பது, சிறு சேமிப்புத் துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலுள்ள மக்களின் சேமிப்பைக் கடன், பொதுத் திட்ட முதலீடுகள் என்ற போர்வையில் உருவிக் கொள்வது என இந்தக் கொள்ளை பல வழிகளில் நடைபெறவிருக்கிறது.

வரிக் குறைப்பால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டப் போவதில்லை” எனக் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாசிஸ்டுகளின் மொழியில் இதன் பொருள் என்ன வென்பதை விளக்க வேண்டிய தேவையில்லை.

இப்பொருளாதார மந்த நிலையிலும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வீதம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே வருமான வரிச் சட்டம் திருத்தப்பட்டு, வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை சூதாடிகள் மீது விதிக்கப்பட்டிருந்த சூப்பர் ரிச் வரி கைவிடப்பட்டிருக்கிறது.

மோடி அரசு மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட் அடிவருடி அரசு எனப் புரிந்துகொள்ளுவதற்கு இதனைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இந்த அரசை மட்டுமல்ல, மக்களைக் கொள்ளையிட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பன்மடங்கு பெருக்கும் தனியார்மய  தாராளமயக் கட்டமைப்பையும் வீழ்த்துவதற்கு மக்களை அணிதிரட்டுவதுதான் நமது உடனடியாகக் கடமையாக அமைய வேண்டும்.

அவ்வாறு மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

கீழடி

2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை. தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

கீழடி

என்ற தலைப்பில் ஒசூர்-சாந்திநகர் பிரபா செலிபிரேசன் ஹாலில் காலை 10 மணியளவில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தோழர் வனவேந்தன், தமிழகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் தமிழரசன், சமூக விஞ்ஞான ஆய்வரங்கத்தை சேர்ந்த தோழர் ரகுவரன் ஆகியோர் உரையாற்றினர்.

கீழடி பற்றி கவிதை

பள்ளி மாணவி புனிதா கீழடியை வரவேற்று கவிதை வாசித்தார்.  தொல்லியல் துறை ஆய்வாளர் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்கள் விரிவான அளவில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

கீழடி அகழாய்வு

தோழர் பரசுராமன் தனது தலைமையுரையில், கடந்த 12 ம்தேதி கீழடிக்கு சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் கீழடி விசயத்தில் அக்கறைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்கிப்பேசினார். இந்துக்களின் நலனுக்காக உள்ளதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி கும்பல் அவர்களால் சொல்லிக்கொள்ளப்படும் அந்த பெரும்பான்மை ‘இந்து’-க்களின் நலனுக்கே அவர்கள் எதிரானவர்கள் என்பதை அம்பலப்படுத்திப் பேசினார்.  வேதகால எச்சங்கள் வேற எங்கு தோண்டினாலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆதலால் கீழடியைக்கண்டு அவர்கள் பதறுகிறார்கள். நாம் கீழடி தரும் சான்றுகளை பாதுகாப்போம்! பரப்புவோம்! என்று தனது தலைமை உரையை முடித்தார்.

கீழடி அகழாய்வு முடிவுகள்

திரு. தமிழரசன் தனது உரையில், நாம் இதுவரையில் வரலாறு என்று பாடப்புத்தகங்கள் வாயிலாக கஜினி முகம்மது 18 முறை படையெடுத்தான் என்று மனனம் செய்துவந்துள்ளோம். இதனால் எள்முனையளவாவது நமக்கு பயன் உண்டா? என்று கேள்வி எழுப்பி ஒரு 40 வருட அத்திவரதரை வைத்துக் கொண்டாடுகிற மனநிலை அளவிற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான நமது கீழடி நகர நாகரிகத்தை நம் மக்கள் கொண்டாடுகிறார்களா என்றால்..? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

நம்மைப்போன்ற முற்போக்கு இயக்கங்கள் மட்டுமே இதனை கையிலெடுத்துக் கொண்டாடும் நிலையில் உள்ளோம். இதே கீழடியில் தோண்டும்போது பானையிலிருந்து ஒரு பூணூலோ அல்லது விநாயகர்-  பெருமாள் சிலைகளில் ஏதாவது ஒன்றோ கிடைத்திருந்திருந்தால் அதனை உலகம் முழுவதும் பரப்பியிருப்பான் நம் எதிரிகள். ஆனால் நமக்கு சாதி-மதம்-கடவுளுக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை, வேதகால நாகரிகத்துக்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நமக்குக் கிடைத்த சான்றுகளை இப்படியாக கூட்டம் போட்டும் பேசும் நிலையிலேதான் நாம் உள்ளோம். உண்மையில் நிச்சயம் ஒரு திருவிழாவைப்போல மக்களை அணிதிரட்டி இதையெல்லாம் பேசவேண்டியிருக்கிறது. அந்தவகையில் பட்டித்தொட்டியெல்லாம் இந்த கீழடியின் பெருமையை கொண்டுச் சென்றுகொண்டிருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு நன்றி பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

கீழடி அகழ்வாரய்ச்சி

அடுத்ததாக பேசிய தோழர் வனவேந்தன் தனது உரையில், கீழடி தொடர்பாக பெரும் பங்களிப்பு செலுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியும், கீழடியிலே என்ன நடந்தது, அது நாளை என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதையெல்லாம் பட்டியலிட்டு விழிப்புணர்வு கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல வந்திருக்கும் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு பெரியார் ஆயிரம் எனும் நூலை தந்து சிறப்பித்தும் தனது உரையை தொடங்கினார்.

தனது பள்ளிப்படிப்பின் போது ஆரிய நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்தி படித்ததை நினைவுகூர்ந்து சிந்துசமவெளி நாகரிகம் என்பதே திராவிட நாகரிகம்தான் என்றும் அதன் தொடர்ச்சி்யை கீழடியில் உறுதி செய்யப்பட்டுள்ளதை கண்டு நெகிழ்ந்ததாக பதிவுசெய்தார். கீழடிக்கு தான் சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்றைக்கு வாட்சப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நமது இளைஞர்கள் விழிப்புடன் பதிவிட்டிருப்பதை பார்க்கும்போது இதுபோன்ற விழிப்புணர்வுதான் நம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள செய்கிறது. இந்த விழிப்புணர்வு சுடரை நாம் அணையாமல் ஏந்தி நிற்போம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அருமைத்தோழர்கள் தமிழ் சார்ந்த மற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இதுபோன்ற நிகழ்வை நடத்துவது மிகவும் வரவேற்ககூடியதாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை மேலும் மேலும் தொடரவேண்டும் என்றும், இதற்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம் என்று சொல்லி தனது உரையை முடித்தார்.

கீழடி தமிழர் நாகரிகம்

திரு. ரகுவரன் தனது உரையில், நாம் தமிழ் இனம் என்றவகையில் இனம் சார்ந்து பார்ப்பதோடு மட்டும் நில்லாமல் சர்வதேசிய கண்ணோட்டத்தோடு இதனை அணுகவேண்டும் என்ற தனது கருத்தை மையமாக முன்வைத்துப்பேசினார். அடுத்ததாக பள்ளி மாணவி புனிதா, கீழடி அகழாய்வு முடிவுகள் பற்றி ஊடகங்களில் படித்தது மற்றும் தோழர்களின் பிரச்சாரத்தின்போது ஊக்கத்தோடு கவனித்ததை வைத்து உணர்வோடு கவிதை எழுதிக்கொண்டுவந்து அரங்கக்கூட்டத்தில் கூட்டத்தலைவரிடம் அனுமதி கேட்டு வாசித்தது பரவலான வரவேற்பைப் பெற்றது.

பார்ப்பனிய எதிர்ப்பு கீழடி

திரு. சாந்தலிங்கம் அய்யா தனது சிறப்புரையில், நாம் இன்று கீழடி அகழாய்வு முடிவுகளை மட்டும் உங்கள் இடத்திலேயே வந்து சொல்வதற்கு காரணம் இந்த கீழடி அகழாய்வு வந்த பிறகு நமது தமிழ்ச் சமூகம் பலதரப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது.

இந்த எதிர்ப்புகள் தலைமையுரையாற்றிய தோழர் பரசுராமன் சொன்னது போல குஜராத்தில் எப்படி 40 ஆண்டு காலம் தயாரிக்கப்பட்டதோ அதைப் போல தமிழகத்திலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு களத்தை தயாரித்து வைத்துக்கொண்டு, நமக்கு சவாலாக பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கீழடி முடிவுகள் அவர்களது கண்களை உறுத்துகின்றன. இதுவரை பல காலமாக சொல்லிக்கொண்டு வந்த கருத்தாக்கங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்ட காரணத்தாலேயே இப்படிப்பட்ட ஆய்வுகள் தொடரக் கூடாது என்பதற்காகவே எந்தெந்த வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அதற்கான வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் இதை நாம் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக படித்த சமூகத்தின் மத்தியில் கொண்டுச் செல்ல வேண்டியது உடனடி கடமையாக  இருக்கிறது.

தோழர் பரசுராமன் பிரச்சாரத்தின்போது ஒரு வழக்கறிஞர் எதிர்நிலையில் நின்று விவாதித்த விசயத்தை இங்கே பதிவு செய்தார் அல்லவா? அதாவது, தமிழுக்கு என்று தனித்த நாகரிகம், எழுத்து, இலக்கண, இலக்கிய வரலாறு இல்லை எல்லாமே சமஸ்கிருதத்தின் தழுவல் என்று சொல்லியதோடு மட்டுமின்றி திருக்குறளே தமிழ் தானா என்று சந்தேகம் இருக்கிறதாகவும் சொன்னாரல்லவா? அது அந்த வழக்கறிஞரின் சொந்த கருத்து அல்ல. அவரை சொல்ல வைத்திருக்கிறது ஒரு நூல். திரு. நாகசாமி என்ற தொல்லியல் வல்லுநர், என்னுடைய ஆசான்தான் அந்த நூலை வெளியிட்டார். வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

இப்போதெல்லாம் விருதுவேண்டும், பட்டம், பதவி வேண்டும் என்று சொன்னால் சமஸ்கிருதத்தின் பெருமையை தூக்கிப் பிடித்தால் உடனடியாக கவனிக்கப்படும். அதற்கு எதிராக பேசினால் கௌரி லங்கேஷ் மாதிரி வேறு வகையாக கவனிக்கப்படும் அதுதான் இன்றைய காலச் சூழல்.புத்தக கடை

நான் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து வந்து இருக்கிறேன். இதுவரை கிட்டத்தட்ட 75% இந்தியாவை பார்த்துவிட்டேன். தமிழ்நாட்டை போன்ற ஒரு வளர்ந்த சமூகம் படிப்பறிவு பெற்ற சமூகம் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகையான வளர்ச்சிகளை அடைந்த சமூகம் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. இப்படிப்பட்ட வளர்ச்சி என்பது இன்று நேற்று ஏற்பட்ட வளர்ச்சி அல்ல என்பது தான் கீழடி நமக்கு அடையாளப்படுத்தி இருக்கிறது.

கீழடியில் இப்போது கிடைத்து இருக்கக்கூடிய மிகத் தொன்மையான சான்று என்பது கிமு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து குறித்த ஒரு பானை ஓடு.  அசோகரின் பிராமி எழுத்துக்களைவிட தமிழ் 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சான்றுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலரால் மட்டுமல்ல, பரவலாக சாமானிய மக்களிடத்தில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுத்தறிவு இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. இந்த அகழாய்வில் 1001 ஓடுகள் எழுத்துவரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. இது சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் திராவிட தமிழ் நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பையும் காட்டுவதாக உள்ளது.

நெசவு, உழவு, வணிகம், கட்டிடம், தொழில் நுட்பம், அழகியல், விளையாட்டு என்றெல்லாம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி சங்ககால இலக்கியங்களில் எல்லாம் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல, உண்மையே என நிரூபிக்கும் வகையில் ஆய்வுமுடிவுகள் வந்துள்ளதை கோடிட்டிக் காட்டி வேதகாலத்தில் குறிப்பிடப்படும் புராண கதைகள், அதனடிப்படையிலான கடவுள், மதம், சாதி போன்றவை இருந்ததற்கான எந்த அறிகுறியும் கீழடியில் கிடைக்கவில்லை. இதிலிருந்து தமிழக மக்கள் சமத்துவமாக வாழ்ந்துள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளும் வகையில் சான்றாக அமைகிறது.

ஆரிய கருத்தாக்கங்கள்தான் இந்திய வரலாறாக நாம் இதுவரை படித்துவந்துள்ளோம். இனி அவற்றை மறுபரிசீலனை செய்து திருத்தி எழுதப்படவேண்டும். அது ஒன்றுதான் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையாக இருக்கமுடியும். இதற்கு நம்மை ஆள்வோர்கள் அவ்வளவு எளிதாக சம்மதிக்கமாட்டார்கள் என்ற எச்சரிக்கையை மனதில்கொண்டு அதனை முறியடிக்கும் வகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை நாம் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்று விழிப்புணர்வூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சொல்லி தனது உரையை நிறைவுச்செய்தார்.

கீழடி அகழாய்வு அரங்ககூட்டம்

இக்கூட்டத்தில் திரளான அளவில் தமிழ் உணர்வாளர்கள், தொழிலாளர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் கலந்துக்கொண்டனர். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் உள்ளிட்ட புரட்சிகர முற்போக்கு அமைப்புகளின் வெளியீடுகள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கீழடி குறித்து சிறப்பு கட்டுரைகளை தாங்கி வெளிவந்த புதிய கலாச்சாரம் இதழ் அனைத்தையும் வாங்கிச்சென்றனர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசனின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஒசூர்.