அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 7
இருபதாம் நூற்றாண்டில் நாம் பயன்படுத்தும் “பொருளாதாரம்” எனும் பதத்திற்கும், அரிஸ்டாட்டில் பயன்படுத்திய அதே பதத்துக்கும் என்ன வித்தியாசம். மேலும் பொருளாதாரத்திற்கும் – செல்வ இயல் என்பதற்கும் உள்ள வரையறை என்ன ? தெரிந்து கொள்வோம் படியுங்கள். கட்டுரையின் இறுதியில் கேள்விகள் இருக்கின்றன – விடையளிக்க முயலுங்கள்!
-வினவு
*****
பொருளாதாரமும் செல்வ இயலும்
அரிஸ்டாட்டில் நமது கவனத்தைத் தூண்டும் வகையில் கூறியிருக்கும் பல கருத்துக்களில் ஒன்று பொருளாதாரத்துக்கும் செல்வ இயலுக்கும் அவர் காட்டிய வேறுபாடு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது விஞ்ஞான வரலாற்றில் மூலதனத்தை ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும்.
செல்வ இயல் (chrematistics) என்ற சொல்லை அவர் உருவாக்கினார்; ஆனால் அது ”பொருளாதாரம்” என்ற சொல்லைப் போல நவீன மொழிகளில் வேரூன்றவில்லை. அது சொத்து, பண்ணை ஆகியவற்றைக் குறிக்கின்ற chrema சொல்லிலிருந்து தோன்றியது. அரிஸ்டாட்டிலுக்குப் பொருளாதாரம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின், பயன் மதிப்புக்களின் உற்பத்தியோடு தொடர்பு கொண்ட இயல்பான வீட்டுக்குரிய நடவடிக்கை.

அது பரிவர்த்தனையையும் உள்ளடக்கியதுதான்; ஆனால் அது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதும் இயற்கையாகவே ஏற்படும். ஒரு நபர் தனது சொந்த நுகர்வுக்குப் போதுமான அளவை அறிவோடு நிர்ணயித்துக் கொள்வார்.
அப்படியானால் செல்வ இயல் என்பது என்ன?
அது “செல்வத்தைத் திரட்டுகின்ற கலை”, அதாவது லாபம் அடைவதை, செல்வத்தை – குறிப்பாகப் பணத்தின் வடிவத்தில் – திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் செல்வ இயல் என்பது மூலதனத்தை முதலீடு செய்வது, திரட்டுவதைப் பற்றிய “கலை”.
பண்டைக்கால உலகத்தில் தொழில்துறை மூலதனம் என்பது இருக்கவில்லை. ஆனால் வர்த்தக மூலதனமும் பண (வட்டி) மூலதனமும் முன்பே கணிசமான பாத்திரத்தை வகித்து வந்தன. அரிஸ்டாட்டில் பின்வருமாறு எழுதுகிறார்.
”…செல்வத்தைக் குவிக்கும் கலையைப் பொறுத்தவரை – இது வர்த்தக நடவடிக்கையில் வெளிப்படுகின்ற அளவுக்குப் பார்க்கும் பொழுது – தமது நோக்கத்தை அடைவதற்கு எந்த எல்லையும் ஒருபோதும் இருந்ததில்லை. இங்கே நோக்கமென்பது முடிவில்லாத அளவுக்கு செல்வமும் பணமும் திரட்டுவதாகும்…… பணச் செலாவணியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் தனது மூலதனத்தை எல்லையில்லாத அளவுக்குப் பெருக்குவதற்கு முயல்கின்றனர்.” (1)
அரிஸ்டாட்டில் இவற்றை இயற்கைக்கு மாறானதென்று கருதினார்; ஆனால் கலப்பற்ற “பொருளாதாரம்” என்பது இயலாதது என்று புரிந்து கொள்கின்ற அளவுக்கு யதார்த்த வாதியாக இருந்தார்; துரதிர்ஷ்டவசமாகப் பொருளாதாரம் தவறாமல் செல்வ இயலாக வளர்ச்சி அடைகிறது என்கிறார். இந்தக் கருத்து சரியானதே. எங்கே பொருள்கள் பண்டங்களாகப் பரிவர்த்தனைக்கென்று உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அந்தப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ உறவுகள் தவிர்க்க முடியாதபடி வளர்ச்சி அடையும்.
படிக்க:
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
♦ அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5
அரிஸ்டாட்டில் பொருளாதாரத்தை இயற்கையானதாகவும் செல்வ இயலை இயற்கைக்கு மாறானதாகவும் கருதினார். பிற்காலத்தில் இந்தக் கருத்து ஒரு விசித்திரமான மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய காலத்தில் அறிஞர்கள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றி வட்டித் தொழிலை முழுமையாகவும் வர்த்தகத்தை ஓரளவுக்கும் பணம் குவிப்பதில் அவை “இயற்கைக்கு மாறான” வழிகளைப் பின்பற்றுகின்றன என்று கண்டனம் செய்தார்கள். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, பணம் திரட்டுவதற்குரிய எல்லா வழிகளுமே இயற்கையானவை என்று தோன்றின; ‘‘இயற்கைச் சட்டத்தால்” அனுமதிக்கப்பட்டவையாகத் தோன்றின.
இந்த அடிப்படையில்தான் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சமூக – பொருளாதாரச் சிந்தனையில் ”பொருளாதார மனிதன்” என்ற உருவம் தோன்றியது; அந்த மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் உந்தித் தள்ளுவது பணத்தைக் குவிக்க வேண்டுமென்ற ஆசையே. பொருளாதார மனிதன் தன்னுடைய சொந்த லாபத்துக்காக உழைப்பதன் மூலம் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதாக ஆடம்ஸ்மித் கூறினார். எனவே ஸ்மித்துக்குத் தெரிந்த உலகங்களில் மிகச் சிறந்ததான முதலாளித்துவ உலகம் வெளித் தோன்றியது.

பொருளாதார மனிதன் என்ற வார்த்தை அரிஸ்டாட்டிலுக்கு முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை, அதாவது தன்னுடைய நியாயமான தேவைகளை – அந்தத் தேவைகள் முடிவில்லாதவை அல்ல – பூர்த்தி செய்வதற்குப் பாடுபடுகின்ற மனிதனைக் குறித்திருக்கும். ஆனால் தசையும் இரத்தமும் இல்லாத இந்தக் கற்பனை உருவத்தை, ஸ்மித் காலத்தில் எழுதப்பட்ட பொருளாதாரப் புத்தகங்களின் கதாநாயகனை அவர் “செல்வ இயல் மனிதன்” என்று சொல்லியிருப்பார்.
இந்த மாபெரும் கிரேக்க அறிஞரை விட்டுவிட்டு நாம் இப்பொழுது இரண்டாயிரம் வருடங்களைத் தாவி பதினாறாம் நூற்றாண்டின் கடைசியிலும் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த மேற்கு ஐரோப்பாவுக்குப் போக வேண்டும். ஆனால் இந்த இருபது நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையில் எத்தகைய சிறு வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கருதிவிடக் கூடாது.
கிரேக்கத் தத்துவஞானிகள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களில் சிலவற்றை மேலும் வளர்த்துச் சென்றார்கள். இன்று நாம் விவசாயப் பொருளாதாரம் என்று கூறுகின்ற துறையைப் பற்றி ரோமானிய எழுத்தாளர்கள் நிறைய எழுதினார்கள். மத்திய காலத்தில் அறிவுமிக்கோர் மதப் போர்வையை அணிந்திருந்தார்கள். அந்த மதப் போர்வையின் மறைவில் எப்பொழுதாவது தற்சிந்தனையுள்ள பொருளாதாரக் கருத்துக்களைக் காண்கிறோம். அரிஸ்டாட்டிலின் எழுத்துக்களைப் பற்றி உரை எழுதிய மதப் பண்டிதர்கள் ”நியாய விலை” என்ற கருத்தை உருவாக்கினார்கள், பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைக் கூறுகின்ற எந்தப் புத்தகத்திலும் இவை பற்றிய விவரங்களைப் படிக்கலாம்.
ஆனால் அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் வீழ்ச்சிக் காலம்; நிலப்பிரபுத்துவம் வளர்ந்து ஆதிக்கம் வகித்த காலம். அந்தக் காலம் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறை உற்பத்தி ஏற்பட்ட கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி, முதலாளித்துவ உறவுகளின் முக்கியமான கூறுகள் முன்பே உருவாக்கமடைந்து கொண்டிருந்த பொழுது அரசியல் பொருளாதாரம் ஒரு சுயேச்சையான விஞ்ஞானமாகத் தோன்றியது.
(தொடரும்…)
அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல்
அடிக்குறிப்பு:
(1) அரிஸ்டாட்டில், அரசியல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், 1911, பக்கங்கள் 25- 26 (ருஷ்ய மொழிபெயர்ப்பு).
கேள்விகள்:
- அரிஸ்டாட்டில் உருவாக்கிய “செல்வ இயல்” என்றால் என்ன?
- உற்பத்தி செய்தவற்றை பரிவர்த்தனை செய்வதற்கும், பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்வதற்கும் என்ன வேறுபாடு?
- “செல்வ இயலை” இயற்கைக்கு மாறானதாக அரிஸ்டாட்டில் கருதியது சரியா?
- அடிமைகளை உடமையாகக் கொண்டிருந்த சமூகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சி நடைபெறவில்லை என்று நூலாசிரியர் கூறுவது ஏன்?
தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ







இந்த பின்னணியில்தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று பீற்றிக்கொள்ளப்பட்ட திருப்பெரும்புதூர் ஒரகடம் தொழிற்பேட்டைப் பிராந்தியத்தில் யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளில் போராட்டம் வெடித்தது. சுமார் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போராட்டங்கள் சில தற்காலிக வெற்றிகளோடும், சமரசங்களோடும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், தினசரி விரிவடைந்தும், புதிய புதிய உற்பத்திகளைக் கையாண்டும், நவீனமாகியும் வருகின்ற மோட்டார் வாகனத்துறையில் நீடித்த தொழில் அமைதி ஒருபோதும் சாத்தியமில்லை. சமீபத்திய யமஹா, என்ஃபீல்ட் போராட்டங்களை முன்வைத்து இந்த கள உண்மையை பரிசீலிக்கலாம்.









‘‘நம் முன்னோர்’ பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்களே? நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’’ என்கிறார் மருத்துவர் நாராயணரெட்டி. ஆம், கோயில்களில் யார் நுழைந்தார்கள், யாருக்காக கோயிலில் பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. அத்தனையும் அரசர்களுக்காகவும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகவுமே. அங்கேயும் பெண் ஒரு காட்சி பொருள். புணர்வதற்கென்றே பிறந்த உடல். விதவிதமாக புணர்வதற்குப் படைக்கப்பட்ட பண்டம்.
இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்
முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.
பிரெஞ்சு மன்னராட்சி காலத்தில் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் அணியும் விதி இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஆண்கள் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை இன்ச் உயர்த்தப்பட்ட செருப்புகளையும் அரச மரபினர் இரண்டரை இன்ச் உயர்த்தப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என விதிகள் போடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் ‘பெண் தன்மை’ இருப்பதை கண்டுபிடித்த சிலர், அதை பெண்களுக்கு பரிந்துரைத்தார்கள்.
வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதென்ற மூடநம்பிக்கை அநேகமானோரிடம் இருக்கிறது. “மாதவிடாய் மிகுந்த வலியுடன் தொடர்புடையதுதானே, இதற்கெல்லாம் தொண தொணத்துக் கொண்டிறாதே”, என்றே பலநேரம் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஒரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.
பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் தமிழகத்தில் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மனைவிக்குப் பிரசவம் பார்த்து மனைவி இறந்த நிகழ்வை விமர்சிக்கும் கட்டுரைகளுக்கு வந்த பதில்களைப் பாருங்கள். பலர் ”இது அரிதாக நடக்கும் ஒரு செயல்; கிராமப்புறங்களில் பல பிரசவங்கள் இவ்வாறே ஒரு பிரச்சனைகளுமின்றி நடக்கிறது; நீங்கள் யாரும் மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களைக் குறிப்பிடுவதில்லை” போன்ற கருத்துகளை எழுதியிருந்தனர்.
ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பசுவையும், முசுலீமையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் கொல்லப்படுவதால் பசு தொடர்பாக – பசுவை வளர்ப்பது, பால் கறப்பது, உழவுப் பயன்பாடு என்று – எந்த உரிமை கோரலும் ஓர் முசுலீமுக்கு எதார்த்தத்தில் மறுக்கப்படுகின்ற கால நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம்.
நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.
மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா?
எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன).
கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு.
நாம் அறிந்தவையெல்லாம் பசும்பால், எருமைப் பால், ஆட்டுப் பால், ஒட்டகப் பால் போன்றவையே. அது என்ன A1, A2 பால்? A2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், A1 பால் சீமை மற்றும் கலப்பினப் பசுவின் பால் என்றும் கூறப்படுகின்றதே? உண்மையா? A2 பால் சிறந்ததென்றும், A1 பால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றதே. ஏன்?
ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.
‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.
பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.
பேனர் வைப்பதையோ சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டு குழிகளில் இறங்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி மக்கள் கொல்லப்படுவதையோ எல்லாம் நீதி மன்றங்கள் கேட்பது இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது! ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என்று நான் கூறுவதாக எண்ண வேண்டாம்! நீதிமன்றங்கள் யாரிடம் கடுமையாகவும் யாரிடம் நீக்கு போக்காகவும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்!
மேற்கு தொடர்ச்சி மலையில் காரணகாரியம் சார்ந்து கேள்விகள் இருந்தாலும் அதன் திரைஅனுபவம் மார்க்சிய அழகியலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இயக்குநர் ஜனநாதனின் புறம்போக்கு என்ற பொதுடமை அடிப்படையில் காந்திய சிந்தனையை முன்வைக்கின்ற திரைப்படம் தான் என்றாலும் அது மக்கள் போராளிகள் எல்லாம் அரசு சித்தரிப்பது போல அவ்வளவு மோசமானவர்களில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை உரத்து கூறுகிறது.
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை.
மரக்கிளையில் துயிலெழுந்து காடுகளில் சுற்றித் திரிந்து புற்புழுக்களை உண்டுவந்த வண்ண காட்டுக் கோழியை (Red Jungle Fowl) ஊருக்குள் கொண்டு வந்து நாட்டுக் கோழியாக்கியதும், நாட்டுக் கோழியை ’அறிவியல் தொழில்நுட்பம்’ துணை கொண்டு வணிகக் கோழியாக்கியதுமே மனிதனின் மாபெரும் சாதனை.
எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்…
ஜனவரி 4-ம் தேதி, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜகத்தள கிருஷ்ணன் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஹாக்கிங் எல்லாம் அறிவியலாளர்களே கிடையாது என்கிறார். மேலும் 20-ம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு என்றால், இது தன்னுடைய நூற்றாண்டு என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு ‘மேதை’ இருப்பதே இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என பின்னணியைத் தேடினால், வியப்பு…வியப்பு!


“நம்முடைய வேதங்களிலிருந்துதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் டைனோசர்கள் என்ற பதத்தை உருவினார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்து போனபோது, பிரம்மா கண்களை மூடி வேதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த இமைப் பொழுதில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த உலகத்தில் உள்ள எவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், வேதங்களில் டைனோசர்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மை. டைனோ- சர் என்பதே சமஸ்கிருத சொல். டைனோ என்றால் சூனியக்கார என பொருள்; சர் என்றால் ராட்சசன் என பொருள். எனவே, இந்த பூமியில் உள்ள அனைத்தும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என புராண ஆராய்ச்சியை அவிழ்த்து விடுகிறார்.







தலைமையுரையில் தோழர் மோகன் அவர்கள் ” தூத்துக்குடி மக்களின் இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தையும் அங்கே 14 பேர் மக்கள் கொல்லப்பட்டதையும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள், வெறும் சம்பவமாக மட்டுமே பார்க்கின்றனர். தூத்துக்குடியில் தற்போது மிக தீவிர அளவில் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில்தான் இந்த பசுமைதீர்ப்பாய உத்தரவு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக ஆலையை திறக்கலாம் என வந்திருக்கின்றது. இதை கேட்டு தமிழகம் போர்க்களமாக ஆகியிருக்க வேண்டாமா? இவ்வாறு மக்கள் மவுனமாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. 














ஐ.டி.-யில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. இதுபோன்ற அப்ரைசலுக்குப் பிறகு அதைப்பற்றி மேனேஜருடன் விவாதிப்பது ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விவாதம் எனக்கும் நடந்தது. அந்த விவாதத்தில் எனது மேனேஜர் என்னிடம் சொன்ன வார்த்தை “நீங்கள் செய்த வேலை திருப்திகரமாகத்தான் இருந்தது அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நமது கம்பெனியில் இந்த வருடம் 7 சதவிகித ஊழியர்களுக்கு 4th bucket, கொடுப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. அதனால்தான் உங்களுக்கும் அது கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்பொழுதுதான் எனது நிறுவனத்திலேயே மேல்மட்ட குழுவில் பல ஊழல்கள் நடைபெற்று இருப்பதும், அது வெளியே தெரிந்தவுடன் பங்குதாரர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதும் எனக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல ஊழியர்கள் மத்தியில் தான் பணி நீக்க நடவடிக்கை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பங்குதாரர்கள் மத்தியில் அல்லது பங்குச்சந்தையில் இதுபோன்ற ஐ.டி கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கை என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பங்குதாரர்களின் நன்மதிப்பைப் பெற கம்பெனிகள் பணிநீக்க நடவடிக்கையை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.
அப்பொழுதுதான் அந்தப் பெண் FITE சங்கத்தின் உதவியுடன் நீதி மன்றத்தை நாடினார் என்பதும் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அந்த வழக்கை வென்றார் என்பதும் தெரிந்தது. உடனடியாக நாமும் அந்த சங்கத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு இது பற்றி பேசிய பொழுது கோயம்புத்தூரில் இன்னும் நாங்கள் சங்க நடவடிக்கைகளை பெரிதாக துவங்கவில்லை எனவே அந்த முயற்சிகளை கூடிய விரைவில் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம் அப்பொழுது உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.
ஏற்கனவே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான மற்றும் என்னைப்போல் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து தொழிலாளர் துறையை அணுகி புகார் கொடுக்கும்படி சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நானும் சக ஊழியர்களும் தொழிலாளர் துறையை அணுகினோம். கம்பெனியில் நடைபெறும் அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்தோம், அதைப்பற்றி புகார் கொடுத்தோம்.
இதுபோன்று பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்களின் மேல் வைக்கப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு என்னவென்றால் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு கம்பெனியின் நற்பெயரை கெடுக்க இங்கு வந்து புகார் தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதையெல்லாம் கேட்க கேட்க கம்பெனிகள் இதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திரும்பி பணியில் அமர்த்துவது ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கிறது என்று நம்பினேன். அவர்களின் வழக்கம் அதுபோன்ற ஒரு திசையில்தான் பயணித்தது.
நவம்பர் 30,2018 ஒரு இளைஞர் ரத்தம் கொடையாக வழங்குகிறார். டிசம்பர் 3,2018
இந்த விசயத்தில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் நானும் ஒரு பதிவு செய்தேன். ஆனால் இது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியது துறை சார்ந்த ஆய்வு முடிவு மட்டுமே. ஆகவே, நாம் எப்போதும் நடுநிலையுடனே இந்த பிரச்சனையை ஆய்வு செய்வோம்
எந்த தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி.. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும் சரி… அதன் மருத்துவ பரிசோதனைகளில் எச்.ஐ.வி கண்டறிதலும் இருக்கும்.




இந்தியாவின் வருடாந்திர ரத்த யூனிட் தேவை 1.25 கோடி. ஆனால் கிடைப்பதோ 90 லட்சம் யூனிட்கள் தான். அதுவும் அனைத்து இடங்களிலும் சரிசமமாக கிடைப்பதில்லை. டெல்லி போன்ற பெருநகரங்களில் 200 % க்கு மேல் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் அதுவே பிஹார் போன்ற மாநிலங்களில் 85% கிடைப்பதே இல்லை.
ஒரு உயிருக்கும் தெரிந்தே தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே நீதி. ஆனால் விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன. நமது பதிவின் நோக்கம் யாதெனில் மருத்துவத்துறையில் நடக்கும் விபத்துகளை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்குவது தவறு.