நவம்பர் புரட்சி நாளை கொண்டாட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 11.11.2018 அன்று குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 21.10.18, 28.10.18 மற்றும் 04.11.18 ஆகிய தேதிகளில் வெட்டுகாலனி மற்றும் கம்மவர்பாளையம் பகுதிகளில் கைப்பந்து, கபடி மற்றும் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
1 of 4
அதனைத் தொடர்ந்து 11.11.2018 அன்று மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை கும்மிடிப்பூண்டியில் சிவம் GR திருமண மண்டபத்தில் நவம்பர் புரட்சி தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நவம்பர் புரட்சி நாள் சூளுரையாக ‘மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!’ என்கிற முழக்கத்தின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நவம்பர் புரட்சி விழாவிற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் K.M. விகந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.
1 of 2
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் J.அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைப்பாளர் திரு ப.நேசகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் K.சரவணன், கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்க துணைச்செயலாளர் வழக்கறிஞர் திருஇரா.வேலு, செந்தமிழ்ச் சோலை, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கவிஞர் சுரேஷ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
1 of 6
மேலும், CPM கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர், தோழர் E.இராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் வீரபாண்டியன் மற்றும் தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமு.மணிபாலன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். எதிர்பாராத வேலைகள் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவின் மைய முழக்கமான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், பாசிச அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தினார்.
மேலும், முதலாளித்துவம் உலகம் முழுவதிலும் அழுகி நாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், இதற்கு மாற்று சோசலிசம்தான் என்பதை புரட்சிக்கு பிறகு சோசலிச ரசியா நடைமுறைப்படுத்திய அரசியல், பொருளாதார பண்பாடுகளுடன் ஒப்பிட்டு விளக்கினார். இந்திய மண்ணிலும் சோசலிச அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியதோடு, அதற்காகப் பாடுபட நாம் அனைவரும் இந்த நவம்பர் புரட்சி விழாவில் சபதமேற்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
1 of 7
சிறப்புரையை தொடர்ந்து கங்கை அம்மன் நாடக மன்றம் நிகழ்த்திய ‘நரகாசுரன் ரிடர்ன்ஸ்’ என்கிற தலைப்பில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நரகாசுரன் கதாபாத்திர வேடம் அனைவரையும் மிகவும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட T.K.வரதராஜ ஆசான் சிலம்பம் கலைக்கூடம் சார்பில் சிறுவர்கள் நிகழ்த்திய சிலம்பாட்ட நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், சிறுவர்கள் நிகழ்த்திய உரைவீச்சு, பாடல், திருக்குறள் வாசிப்பு என அனைத்து நிகழ்ச்சிகளும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உற்சாகத்தையும், உணர்வையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
1 of 7
விழா இறுதியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் விழாக்குழு சார்பில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 9444461480.
விழுப்புரம் :
விழுப்புரம் – அயனம்பாளையம் கிராமத்தில் உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாக மாறிய நவம்பர் – 7.
1 of 7
1 of 4
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம். தொடர்பு:91593 51158.
வேதாரண்யம் :
101-வது நவம்பர் 7 ரசிய புரட்சியை கொண்டாடும் வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் 11-ம் தேதி அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
பகுதிமக்கள், ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் என 80-க்கு மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மண்டபம் முழுவதும் புரட்சிகர முழக்கங்களும், சமூக அவலங்களை எடுத்துக்கூறும் ஒவியங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழா பள்ளி மாணவர்களின் பறையிசை முழக்கத்துடன் தொடங்கியது. ஈஸ்வரி சிலம்பாட்ட குழுவின் சிலம்பாட்டம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
1 of 4
மக்கள் அதிகாரம் அமைப்பின் பட்டுக்கோட்டை வட்டார கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து மற்றும் இளம் விவசாயி தோழர் சோம சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மத்திய மாநில அரசுகள் எப்படி திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க துடிக்கிறது என்பதை தமது உரையில் குறிப்பிட்டனர்.
பள்ளி மாணவர்களின் புதிய விடியல் கலைக்குழு சார்பாக நடத்தப்பட்ட பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் நாடகம் வரவேற்பைப் பெற்றது. இக்குழுவினர் பாடல், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் காளியப்பன் மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில், ரசிய புரட்சியின் சாதனைகளையும் நமது நாட்டின் நிலைமைகளையும் நடைமுறை உதாரணங்களிலிருந்து எடுத்து கூறினார்.
இறுதி நிகழ்வாக, பகுதியில் செயல்படும் ஜனநாயக சக்திகள் மற்றும் போராடும் புரட்சிகர அமைப்பிற்கு ஆதரவளிக்கும் முன்னணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். தொடர்புக்கு: 63837 46095. தொகுப்பு:
சோரியாசிஸ் எனும் தோல் நோய் தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் வந்தால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறட்சி கண்டு செதில் செதிலாக உறிந்து கொண்டு வரும்.
வரலாற்று காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன. எகிப்தின் மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த காலகட்ட மக்களுக்கும் இந்த சோரியாசிஸ் இருந்ததை அறிய முடிகிறது.
“மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ்
“மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாசிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார்.
கிபி 2-ம் நூற்றாண்டில் கேலன் எனும் மருத்துவர் சோரியாசிஸிற்கு மருந்தாக வைபர் எனும் பாம்பின் சூப்பை தடவ வேண்டும் என்று கூறியுள்ளார். பின்பு இந்த இருபது நாற்றாண்டுகளில், இந்த சோரியாசிஸ்-க்கு பல மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
நாய் மற்றும் பூனையின் சாணம், வாத்து எண்ணெய், விந்தணுவை பூசுவது, சிறுநீருடன் வெங்காயம் மற்றும் உப்பை கலந்து பூசுவது போன்ற பல மருத்துவ நம்பிக்கைகள் உலவி வந்தன.
*****
இந்த நோய்க்கான காரணம் தெள்ளத்தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.
ஜீன்களில் ஏற்பட்ட கோளாறுகள் அந்த கோளாறுகளை உருவாக்கும் சூழலியல் மாறுபாடுகள்
கிருமித்தொற்றுகள்(infection)
மனஅழுத்தம் (psychological stress)
இவைதான் இப்போதைக்கு அறியப்பட்ட காரணங்கள்.
சோரியாசிஸில் பல வகைகள் உண்டு அவற்றுள் முக்கியமானவை :
1. செதில் வகை (plague எனப்படும் psoriasis vulgaris ) இந்த வகைதான் 90%
2. Guttate psoriasis
3. Inverse psoriasis ( செந்நிற திட்டுகள் தோன்றும்)
4. Pustular – கொப்புளம் கொப்புளமாக வரும்
5. Erythrodermic psoriasis ( உடல் முழுவதும் சிவப்பு நிற படை வருவது)
இந்த செதில்கள் பொதுவாக தலைப்பகுதியிலும், முன்னங்கையின் பின்பகுதி, காலின் முன்பகுதி போன்றவற்றில் இருக்கும்.
ஏன் செதில்கள் தோன்றுகின்றன ?
தோலின் மேல்பகுதியான எபிடர்மிஸ் (epidermis) எனும் பகுதி அதிகமான அளவில் வளர்ச்சி அடைவதால் உருவாகிறது.
தோலின் க்றுக்கு வெட்டு தோற்றம்.
நன்றாக இருக்கும் தோலின் எபிடர்மிஸில் உள்ள செல்கள் புதிதாக மாற்றப்பட 28 முதல் 30 நாட்கள் ஆகும்.
ஆனால் சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட தோலின் செல்கள் புதிதாக மாற்றப்பட 3 முதல் 5 நாட்களே எடுத்துக்கொள்கின்றன. அதனால்தான் இத்தனை வளர்ச்சி அடைந்து செதில்கள் தோன்றுகின்றன.
சோரியாசிஸிற்கு இருக்கும் மருத்துவ முறைகள் என்ன ?
பாதிக்கப்பட்ட தோலின் மீது வறட்சியை போக்கும் க்ரீம்கள் (emollients)
ஸ்டீராய்டு கிரீம்கள்
விட்டமின் டி(vitamin-D) நிரம்பிய கிரீம்கள்
நோய் முற்றிய நிலையில் இருந்தால் அல்ட்ரா வயலெட் லைட் தெரபி (UV-B therapy) – PUVA therapy
அதனினும் முற்றிய நிலை இருப்பின் தோலின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சைக்லோஸ்போரின், மெத்தோட்ரெக்சேட் போன்ற மருந்துகளை எடுக்கலாம்.
சோரியாசிஸை முழுவதுமாக குணப்படுத்த இயலுமா ?
ஆட்டோ இம்யூன் வியாதிகள் அனைத்துக்கும் மூலம் நமது ஜீன்கள் செய்யும் தகராறு. ஆதலால் நம்மால் அந்த நோய்களை கட்டுப்படுத்ததான் முடியும். முழுவதும் குணப்படுத்த முடியாது
சோரியாசிஸ் (மாதிரிப் படம்)
சரி.. ஜீன்கள்தான் காரணம் என்றால் அவற்றிற்கு உகந்தவாறு நமது வாழ்வியலை அமைத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கலாம்தானே??
நிச்சயம் முடியும். சோரியாசிஸை நமது வாழ்வியல் மாற்றங்களை கொண்டு கட்டுப்படுத்த முடியும்.
சோரியாசிஸை கட்டுப்படுத்துவது எப்படி ?
1. தானியங்கள் நமது ஜீன்களின் எதிரிகள். அதிலும் க்ளூடன் அடங்கிய கோதுமை நமது ஜீன்களுக்கும் , குடலுக்கும் ஒவ்வாத உணவு. ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
2. குடலின் ஆரோக்கியம் சரியாக இருந்தால் சோரியாசிஸ் நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது ஆய்வுகள்.
Gut health என்பது குடலில் உள்ள நல்ல பேக்டீரியாக்களின் ஆராக்கியத்தை பொறுத்து இருக்கிறது. ஆகவே, நல்ல பேக்டீரியாக்களை சரியாக பராமரிப்பதும், leaky gut இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.
ரீபைன்டு எண்ணெய், எண்ணெயில் பொறித்த பண்டங்கள், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள், மைதா/ ஆட்டா/ சிறுதானியம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்
3. பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டுக் கறி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை எடுப்பது நல்லது.
5. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் எடுப்பது நல்லது.
தக்காளி, பெப்பர், மிளகாய், உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
6. தினமும் நண்பகல் சூரிய வெயிலில் 20 நிமிடம் நிற்பது நல்லது. அது நமது உடலின் விட்டமின் டி அளவுகள் உயர வழி வகுக்கும். விட்டமின் டி நிரம்பிய மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுக்கலாம்.
ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் புதுச்சேரியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், தொழிற்பேட்டைப் பகுதியான TBV பேருந்து நிறுத்தத்தில், 20.10.2018 அன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொழிலாளிகள் தங்கள் உரிமைகளைக் கேட்க சட்டப்படி தொழிற்சங்கம் வைத்தால், தொழிற்சங்கம் வைத்ததற்காக வேலையைப் பறிக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. மேலும் தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்குகின்ற வகையிலும், இன்றைய நமது தேவை, உரிமை பறிப்புக்கு எதிரான போராட்டத்துடன், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகவும் மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, இணைப்பு சங்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்பேட்டை வாயில், தொழிலாளர் பேருந்து நிறுத்தம், பேருந்து, சிக்னல்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், இப்பிரச்சினைகள் தொழிலாளர் மத்தியில் பரவலான பேசுபொருளாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு புஜதொமு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புஜதொமு பொதுச்செயலாளர் தோழர். மகேந்திரன், பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோரும், பகுதியில் போராடும் ஈடான் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் தோழர். பாஸ்கர், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர். மாதேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், தாங்கள் வாழும் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளும் வேறு வேறல்ல. தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளிகளது செயல்களும், அரசின் நடவடிக்கைகளும் வேறு வேறல்ல. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது.
எனவே, தொழிலாளர்களாகிய நாம் மட்டும் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள வேற்றுமைகளைப் பார்த்து தனித்தனியே பிரிந்து கிடப்பது, எதிரிகளுக்குத்தான் பலத்தைக் கூட்டுகின்றன. எனவே தொழிலாளர்களது பலம் என்பது அவர்களது வர்க்க ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை விளக்கி உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் ஒட்டி வட்டாரக் கலைக்குழு தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள், கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் நிகழ்ச்சியைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
வசந்தம் வந்தது; பனிப்பாறைகள் உருகி வழிந்தோட ஆரம்பித்தன; மீண்டும் சேறும் புழுதியும் நிறைந்த தரை மட்டும் மிஞ்சியது. நாளுக்குநாள் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அந்தக் குடியிருப்பு முழுவதுமே கழுவப் பெறாமல், கந்தல் கந்தலாகிப்போன துணிகளால் போர்த்தப்பட்டிருப்பது போலத் தோன்றியது. பகல் நேரங்களில் கூரைச் சரிவுகளிலிருந்து தண்ணீர் சொட்டும்; பாசி படிந்து அழுக்கேறிப்போன சுவர்களில் வேர்வை பூத்து வடிவதைப்போல், நீர் ஆவியாக மாறிப் பரவும். இரவு நேரங்களில் துளித்துளிப் பனித்துண்டுகள் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கும். சூரியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. வழக்கம்போல் சாக்கடைச் சிற்றோடைகள் குட்டைகளை நோக்கி முணுமுணுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தன.
மே தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.
அந்தப் புதிய தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பிலும் தொழிற்சாலையிலும் சிதறிப் பரவின. அந்தப் பிரச்சாரத்தால் பாதிக்கப்படாமலிருந்த இளைஞர்கள்கூட, அந்தப் பிரசுரங்களைப் படித்துவிட்டுத் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
பியோதர் மாசின் ஒரே உத்வேக சித்தனாயிருந்தான். மிகவும் மெலிந்து போயிருந்த அவனது நடுக்கம் நிறைந்த அசைவுகளும் பேச்சுக்களும் கூண்டிலே அடைபட்டுள்ள வானம்பாடியை நினைவூட்டின. மெளனமே உருவான யாகவ் சோமவும் அவனோடு எப்போதும் சுற்றித் திரிந்தான். அவனிடம் காணும் அழுத்தம் வயதுக்கு மீறியதாய்த் தோன்றியது. சிறை வாசத்தால் தலைமயிரில் பழுப்புக்கண்ட சமோய்லவ், வலீலி கூஸெவ், புகின், திராகுனவ் முதலியவர்களும் வேறு சிலரும் ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் பாவெல், ஹஹோல், சோமவ் முதலியவர்கள் அந்த யோசனையை நிராகரித்தார்கள்.
”தோழர்களே! இன்று அமுலிலிருக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைப்பது ஒரு மகத்தான சாதனைதான். ஆனால், அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாக, நான் ஒரு ஜோடி புது பூட்சுகள் வாங்கப்போகிறேன்” என்று நனைந்து கிழிந்து பழசாய்ப் போன தனது செருப்புக்களைக் காட்டிக்கொண்டே பேசினான் அவன். ”என்னுடைய ரப்பர் செருப்புகளும் செப்பனிட்டுச் சீர்படுத்த முடியாத அளவுக்குப் பிய்ந்துபோய்விட்டன. எனவே தினம் தினம் என் கால்கள் ஈரமாவதுதான் மிச்சமாயிருக்கிறது. பழைய சமுதாய அமைப்பைப் பகிரங்கமாக எதிர்த்துப் போராடுகிற வரையிலும் நான் சாகமாட்டேன். நான் செத்து மண்ணோடு மண்ணாகப் போக விரும்பவில்லை. எனவே நாம் ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற தோழர் சமோய்லவின் ஆலோசனையை நான் நிராகரிக்கிறேன். அதற்குப் பதிலாக, நான் ஒரு திருத்தப் பிரேரணை கொண்டு வருகிறேன். முதன் முதலில் நான் என் கால்களில் ஒரு ஜோடி புது பூட்சுகளை ஆயுதம் போலத் தரித்துக்கொள்கிறேன். நாமெல்லோரும் கண்மூடித்தனமாகப் போராட முனைவதைவிட, இப்படிப்பட்ட நடவடிக்கை – அதாவது நான் பூட்ஸ் தரித்துக்கொள்ளும் நடவடிக்கை – சோஷலிசத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத, தீர்மானமான நம்பிக்கை!”
இந்த மாதிரியான வேடிக்கைப் பேச்சோடு பேச்சாய், அன்னிய நாடுகளில் மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்கிக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதையும் அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். அவனது பேச்சு தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் மனத்தில் ஏதோ ஒரு அதிசயப் பற்றுதல் உண்டாயிற்று. பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்து, தொந்தி தள்ளிப்போன சிவந்த மூஞ்சிக்காரர்கள்தாம் மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பிழைத்துவரும் பரமவைரிகள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆட்சியாளரின் கொடுமையால் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை அவர்கள் மன்னனுக்கு எதிராகத் தூண்டி விடுவார்கள். மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடிக் கவிழ்த்தவுடனே இந்தக் குள்ள மனிதர்கள் மக்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றி அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக்கொள்வார்கள். மக்களை விரட்டியடிப்பார்கள், மக்கள் எதிர்த்துப் போராட முனைந்தால் அவர்களை ஆயிரம் ஆயிரமாகக் கொன்று குவிப்பார்கள்.
ஒருநாள் தாய் தனது தைரியத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டு, இகோரின் பேச்சுக்களால் தன் மனத்தில் தோன்றியுள்ள கற்பனைச் சித்திரத்தை அவனிடம் விளக்கிக் கூற முனைந்தாள்.
“நான் சொல்வது சரிதானே, இகோர்?” என்று அசட்டுச் சிரிப்போடு கேட்டாள் அவள்.
அவன் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான், சிரிக்கும்போது அவனது கண்மணிகள் உருண்டு புரண்டன. மூச்சு வாங்கும்போது அவன் நெஞ்சைத் தடவிக் கொடுத்துக்கொண்டான்.
“அப்படித்தான், அம்மா, அப்படித்தான்! சரித்திரத்தின் உயிர்நாடியையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள். நீங்கள் சொன்ன சித்திரம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் ஒட்டு வெட்டு வேலை செய்து மிகைப்படுத்தி அலங்காரம் பண்ணிவிட்டீர்கள் என்றாலும் நீங்கள் சொன்னவற்றிலெல்லாம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொந்தி விழுந்த குள்ள மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள்தான் மகா பாதகர்கள். மக்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் விஷப் பாம்புகள். பிரெஞ்சுக்காரர்கள் இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.”
“நீங்கள் பணக்காரர்களைத்தானே சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.
”அவர்களையேதான். அதுதான் அவர்களது துரதிருஷ்டம்! ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் உணவில் தாமிரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர்த்து ஊட்டி வந்தால், அந்தத் தாமிரம் அந்தப் பிள்ளையின் எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அந்தப் பிள்ளை குள்ளப் பிறவியாகவே போய்விடுகிறது. ஆனால், ஒருவனை தங்கம் என்று விஷத்தை ஊட்டி வளர்த்தாலோ? அப்போது அவன் இதயமே குன்றிக் குறுகி உணர்ச்சியற்றுச் செத்துப் போய்விடும்; பிள்ளைகள் ஐந்து காசுக்கு வாங்கி விளையாடுகிறார்களே ரப்பர் பந்து, அந்த மாதிரிப் போய்விடும்!”
ஒரு நாள் இகோரைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பாவெல் சொன்னான்:
“அந்திரேய்! உண்மை என்ன தெரியுமா? எந்த மனிதன் சிரித்துச் சிரித்து, விளையாட்டாய்ப் பேசுகிறானோ, அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது. இதுதான் வழக்கம்.”
ஹஹோல் பதில் சொல்வதற்கு ஒருகணம் தயங்கினான்; கண்களைச் சுருக்கி விழித்தான்.
‘நீ சொல்கிறபடி பார்த்தால் ருஷ்ய தேசம் முழுவதுமே சிரித்துக் சிரித்து வயிறு வெடித்துச் சாகத்தான் வேண்டும்!”
நதாஷா வந்து சேர்ந்தாள். அவளும் சிறையிலிருந்துதான் வந்தாள். ஆனால் வேறு ஒரு நகரிலுள்ள சிறையில் இருந்தாள். சிறைவாசம் அவளை எந்தவிதத்திலும் மாற்றிவிட்டதாகத் தெரியவில்லை. அவளது முன்னிலையில் ஹஹோல் வழக்கத்துக்கு மீறிய உற்சாகத்துடன் நடந்து கொள்வதாகத் தாய்க்குத் தோன்றியது. அவன் ஒவ்வொருவரையும் கேலியும் கிண்டலுமாக பேசினான். அவளை வாய்விட்டுக் கலகலவென்று சிரிக்க வைத்தான். ஆனால் அவள் சென்ற பிறகு, அவன் தனது வழக்கமான சோக கீதத்தைச் தீட்டியடித்துக் கொண்டு கால்களை இழுத்து இழுத்துப்போட்டு அறைக்குள் குறுக்கும் மறுக்கும் நடக்கத் தொடங்கினான்.
சாஷாவும் அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். அவள் வரும்போதெல்லாம் புருவங்களைக் சுழித்தபடி ஒரே பரபரப்போடுதான் வருவாள். என்ன காரணத்தாலோ அவளது முகபாவம் எப்போது பார்த்தாலும் ஒரே வக்கிரமும் முறைப்பும் கொண்டதாகவே இருந்தது.
ஒருமுறை அவளை வழியனுப்பிவிட்டு வருவதற்காக பாவெல் வாசல் நடை வரைக்கும் போனான். போகும்போது அவன் கதவைச் சாத்தாமல் விட்டுவிட்டுப் போனதால் அவர்கள் வெளியே பேசிக்கொண்ட பேச்சு தாயின் காதிலும் விழுந்தது.
“நீங்கள்தான் கொடியைச் சுமந்துகொண்டு போகப் போகிறீர்களா?’ என்று கேட்டாள் சாஷா.
”ஆமாம்.
“முடிவாகிவிட்டதா?”
“ஆம், அது என் உரிமை.”
“மீண்டும் கிறைக்குப் போகவா?”
பாவெல் பதில் பேசவில்லை.
“நீங்கள் போகாமலிருக்க முடியாதா…..” என்று ஆரம்பித்தாள் அவள். ஆனால் வார்த்தை தடைப்பட்டது.
“என்னது?”
“இல்லை. அந்தப் பொறுப்பை வேறு யாருக்காவது விட்டுவிடுங்களேன்.”
“இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் அவன்.
”நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள். நஹோத்கா நீங்களும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். நீங்கள் வெளியில் இருந்தால் எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால், கொடியைத் தாங்கி நீங்களே சென்றால், அவர்கள் நிச்சயம் உங்களைக் கைது செய்வார்கள். வெகு தூரத்துக்கு, வெகு காலத்துக்கு நாடு கடத்திவிடுவார்களே”
அந்தப் பெண்ணின் குரலிலிருந்த பயபீதியையும் தாபத்தையும் தாயால் உணர முடிந்தது. சாஷாவின் வார்த்தைகள் அவளது இதயத்தில் பனித் துளிகளைப் போல் குளிர்ந்து விழுந்தன.
”இல்லை, நான் யோசித்தாகிவிட்டது. எதுவும் என் உறுதியை மாற்றிவிட முடியாது” என்றான் பாவெல்.
“நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா?”
பாவெலின் குரல் திடீரென்று உத்வேகமும் கரகரப்பும் பெற்றது.
“நானும் மனிதப் பிறவிதானே” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.
“ஆமாம். அதிசயமான மனிதப் பிறவி!” என்று அவளைப்போலவே மெதுவாய்ச் சொன்னான் அவன். எனினும் அவனுக்குத் தொண்டை அடைபடுவது போலிருந்தது. நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர். அதனால்தான் – அதனால்தான் – இந்த மாதிரி நீங்கள் பேசக்கூடாது”
“சரி, வருகிறேன்” என்றாள் அவள்.
அவளது காலடியோசையின் போக்கிலிருந்து அவள் அவசர அவசரமாய் ஓடுகிறாள் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். பாவெல் அவளைத் தொடர்ந்து வெளி முற்றத்துக்குச் சென்றான்.
தாயின் இதயம் பயத்தால் குன்றிக் குறுகி வேதனைப்பட்டது. அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்கும் புரியவில்லை என்றாலும் தன்னைப் பொறுத்தவரையில் தனக்கு ஒரு பேராபத்து விளையப்போகிறது என்பதை மட்டும் அவள் மனதுக்குள் உணர்ந்தாள்.
“அவன் என்னதான் செய்ய விரும்புகிறான்?”
பாவெல் அந்திரேயோடு வந்து சேர்ந்தான்.
“ஐயோ. இலாய், இஸாய் அவனை என்னதான் செய்கிறது?” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.
“இந்த மாதிரிக் காரியத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று நாம் அவனை ஒரு முறை எச்சரிக்கத்தான் வேண்டும்” என்று முகத்தைச் சுழித்தவாறு சொன்னான் பாவெல்.
“பாவெல், நீ என்ன திட்டம் போடுகிறாய்?” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள் தாய்.
.“எப்போது? இப்போதா?”
“மே முதல்… முதல் தேதிக்கு.”
“அதுவா?” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்லத் தொடங்கினான் பாவெல். நான் கொடியைத் தாங்கிக்கொண்டு, அணி வகுப்புக்குத் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன். இந்தக் காரணத்துக்காக, அவர்கள் மீண்டும் என்னை ஒருவேளை சிறையில் தள்ளுவார்கள்.”
தாயின் கண்களில் குத்தல் எடுத்தது. வாய் உலர்ந்து வறண்டது. பாவெல் அவள் கரத்தைப் பிடித்தெடுத்துத் தடவிக் கொடுத்தான்.
“அம்மா! இதை நான் செய்யத்தான் வேண்டும். என்னை உனக்குப் புரியவில்லையா, அம்மா!”
“நான் எதுவுமே சொல்லவில்லை, அப்பா!” என்று தலையை லேசாக நிமிர்த்தியவாறு சொன்னாள் அவள். ஆனால் அவனது கண்களிலுள்ள உறுதி நிறைந்த ஒளியை அவளது கண்கள் சந்தித்தன. அவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவன் பெருமூச்செறிந்தான். அவள் கரத்தை நழுவ விட்டான்.
“நீ இதைக்கண்டு வருத்தப்படக்கூடாது, அம்மா. சந்தோஷப்பட வேண்டும்” என்று அவன் கண்டிக்கும் பாவனையில் பேச ஆரம்பித்தான். “மரணத்தை நாடிச் செல்லும் தங்கள் மைந்தர்களை, புன்னகையோடு வழியனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்றைக்குத் தோன்றப் போகிறார்கள், அம்மா!”
“அடேடே! உபதேசிகர் வந்துவிட்டாரடா!….” என்று முனகினான் ஹஹோல்.
“நான்தான் எதுவுமே சொல்லவில்லையே” என்று திரும்பச் சொன்னாள் தாய். “நான் உன் வழியில் குறுக்கே நிற்கவில்லை, ஆனால் எனக்குச் சங்கடமாயிருக்கும்போது, நான் ஒரு தாய்போல நடந்துகொள்வதைத் தடுக்க முடியாது…”
அவன் அவளை விட்டு விலகிச் சென்றான்; அவனது வார்த்தைகளின் குத்தலை உணர்ந்தாள் அவள்.
“ஒரு மனிதன் தன் இஷ்டப்படி வாழ்வதற்குக்கூட, குறுக்கே நிற்கிறது ஒருவகைப் பாசம்!”
“இல்லை, பாஷா. அப்படிச் சொல்லாதே” என்று அவள் நடுங்கிக்கொண்டு சொன்னாள். அவன் மேற்கொண்டும் ஏதாவது கூறி தன் இதயத்தைப் புண்படுத்திவிடக்கூடும் என அவள் பயந்தாள்;
“எனக்குப் புரிகிறது. நீ வேறு ஒன்றுமே செய்யமுடியாது. உன் தோழர்களுக்காக, நீ இப்படிச் செய்யத்தான் வேண்டும்…”
“இல்லை. எனக்காகவேதான்” என்றான் அவன்.
அந்திரேய் வாசல்நடைக்கு வந்தான். வாசல்நடை அவன் உயரத்துக்குச் சிறிதாக இருந்ததால், அவன் தன் கால்களை ஓரளவுக்குச் சரித்து நின்று கொண்டான். கதவு நிலையிலே தோளைக் சாய்த்து, மற்றொரு தோளையும் தலையையும் முன்புறமாக நீட்டிக்கொண்டு நின்றான்.
“மகாப்பிரபு! இந்த எண்ணத்தைக் கைவிடுவதால் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை” என்று தனது அகன்ற கண்களை பாவெலின் மீது பதித்துப் பார்த்துக்கொண்டே சொன்னான் அவன். ஏதோ ஒரு கல்லிடுக்கிலிருந்து எட்டிப் பார்க்கும் பல்லியைப் போலிருந்தது அவன் நின்ற நிலை.
தாயோ அழுது கொட்டத் தயாராக நின்றாள்.
”அட கடவுளே, மறந்துவிட்டேனே’ என்று சொல்லிக்கொண்டே அவள் வாசல்நடையைக் கடந்து வெளியே வந்தாள். தான் அழுவதைத் தன் மகன் பார்த்துவிடக்கூடாது என்றுதான் அவள் அப்படிச் செய்தாள். வெளியே வந்ததும் அவள் ஒரு மூலையில் தலையைச் சாய்த்துக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் பொருமிப் பொருமி அழுதாள். அவளது இதயத்தின் செங்குருதியே அவளது கண்ணீரோடு கலந்து கொட்டிப் பெருகுவதுபோல் அவள் உணர்ந்தாள்.
மூடியும் மூடாமலும் கிடந்த கதவின் வழியாக அவர்கள் இருவரும் தணிந்த குரலில் விவாதித்துக் கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.
”இது என்னப்பா வேலை? அவளைத் துன்புறுத்துவதில் உனக்கொரு ஆனந்தமா?” என்று கேட்டான் ஹஹோல்.
“இதுபோல் பேச உனக்கு உரிமை கிடையாது” என்று கத்தினான் பாவெல்.
”சரிதான். நீ உன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை நான் மூச்சுக்காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், நான் அருமையான நண்பன்தானப்பா. நீ ஏன் அப்படிச் சொன்னாய்? உனக்கு எதுவுமே புரியாதோ”
“அதெல்லாமில்லை, எதுவானாலும் சரி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராய்ச் சொல்லிவிட வேண்டும். பயப்படக் கூடாது.”
“அவளுக்குக் கூடவா?”
”எல்லோருக்கும்தான்! பாசமாகட்டும், நேசமாகட்டும். அது என் காலைக்கட்டி என்னை முன்னேறவிடாமல் தடுக்குமானால், அவற்றை நான் விரும்பவே இல்லை…”
“அடாடா! வீராதி வீரன்! போய் மூக்கைத் துடைத்துக்கொள். இதையெல்லாம் சாஷாவிடம் போய்ச் சொல். அவள் தான் ….”
“அவளிடம் ஏற்கெனவே சொல்லியாயிற்று?”
“சொல்லிவிட்டாயா? பொய் சொல்கிறாய். நீ அவளிடம் மிருதுவாகப் பேசினாய். அன்போடு பேசினாய். நான் கேட்காவிட்டாலும் எனக்கு அது தெரியும். ஆனால் நீ உன் சூரத்தனத்தையெல்லாம் உன் தாயிடம் வந்து காட்டுகிறாய். ஆனால், உன் சண்டப்பிரகண்டமெல்லாம் சல்லிக் காசுக்குப் பிரயோஜனமில்லை.”
பெலகேயா தன் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஹஹோல் ஏதாவது கடுமையாகப் பேசிவிடப் போகிறானோ என்ற பயத்தில் அவள் அவசர அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு சமையலறைக்குள் வந்தாள்.
“புர்.. ர்…. அப்பப்பா என்ன குளிர்?” என்று சத்தமாகச் சொன்னாள். எனினும் அவள் குரலில் பயமும் சோகமும் கலந்து நடுங்கிற்று. “இதை வசந்த காலம் என்றே சொல்ல முடியாது.”
அடுத்த அறையிலே கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சுக் குரலை மூழ்கடிப்பதற்காக அவள் சட்டியையும் பெட்டியையும் அப்படியும் இப்படியும் உருட்டி அரவம் உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.
“எல்லாமே மாறிப்போய்விட்டது” என்று அவள் மேலும் உரத்த குரலில் பேசத் தொடங்கினாள். “மக்கள் புழுங்கித் தவிக்கிறார்கள்; சீதோஷ்ணம் என்னவோ குளிர்ந்து வெடவெடக்கிறது. இந்த மாதத்திலெல்லாம் சூரிய வெப்பம் உறைப்பதுதான் வழக்கம். நல்ல வெயிலும், நிர்மலமான வானமும்……..”
பேச்சுக்குரல் நின்றுவிட்டது. எனவே தாய் சமையலறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு என்ன நடக்கிறது என்று காது கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினாள்.
ஹஹோல் மீண்டும் மெதுவாகப் பேசினான். “நீ அதைக் கேட்டாயா? இதற்குள்ளாகவே உன் புத்தியில் பட்டிருக்க வேண்டும். அதை விட்டுத்தள்ளு! உன்னைவிட அவளுக்குப் புத்தி அதிகம். தெரிந்ததா?”
“கொஞ்சம் தேநீர் சாப்பிடுங்களேன்” என்று நடுநடுங்கும் குரலில் கேட்டாள் தாய். தன் குரலில் தோன்றிய நடுக்கத்தை உடனடியாய் மழுப்புவதற்காக, “அப்பப்பா. நான் ஒரேடியாய் விறைத்தே போனேன்” என்று சொல்லிக்கொண்டாள்.
பாவெல் அவளிடம் மெதுவாகப் போய் சேர்ந்தான். அவனது தலை தொங்கிப்போயிருந்தது: குற்றமுள்ள குறுஞ்சிரிப்பு அவன் உதடுகளில் கோணி வதங்கியது.
”என்னை மன்னித்துவிடு அம்மா. நான் இன்னும் சின்னப்பிள்ளை மூமூ முட்டாள்…..”
“என்னைத் துன்புறுத்தாதே அப்பா” என்று அவனது தலையைத் தன் மார்போடு அணைத்தவாறு பரிதாபகரமாகக் கத்தினாள் அவள். ஒன்றுமே சொல்லாதே, நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார் அப்பா. ஆனால் – என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நீங்கள் எல்லோருமே எனக்குப் பிரியமானவர்கள், நீங்கள் அனைவரும் நேசிக்கத் தகுதியுள்ளவர்கள். உங்களுக்காக நான் அனுதாபப்படாவிட்டால், வேறு யாரப்பா அனுதாபம் கொள்வார்கள்? நீங்கள் அனைவரும் – நீ தலைமை தாங்கிச் செல்ல, உனக்குப் பின்னால் மற்றவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் செல்வீர்கள்……. பாஷா!”
அவளது நெஞ்சுக்குள் கனன்றெரிந்து கனலெழுப்பும் மகத்தான சிந்தனைகள் துடித்துக்கொண்டிருந்தன. சோகங்கலந்த இன்பம் அவளது இதயத்தில் ஊடாடியது. எனினும் அதை வெளியிட்டுக் கூற அவளுக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வாய் பேச முடியாத ஊமை நிலையின் சித்திர வேதனையோடு, அவள் தன் மகனை ஆழமும் கூர்மையும் பெற்ற வேதனை நிறைந்த கண்களோடு வெறித்துப் பார்த்தாள்.
”ரொம்ப சரி, அம்மா என்னை மன்னித்துவிடு. எனக்கு இப்போதுதான் எல்லாம் தெரிகிறது. இனி நான் இதை மறக்கவே மாட்டேன். சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மறக்கவே மாட்டேன்” அவன் புன்னகை அரும்பும் தன் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டான். அவனது முகத்தில் குதூகலம் தொனித்தது; அவமானத்தால் குன்றியும் போயிருந்தது.
அவள் அவனை விட்டுப் பிரிந்து அடுத்த அறைக்குள் சென்றாள்.
”அந்திரியூஷா!” என்று பரிவு கலந்த தொனியில் கூப்பிட்டாள் அவள். “அவனை அதட்டாதே. நீ பெரியவன்…”
”பூ! அவனை நான் அதட்டுகிறதாவது? அவன் என்னிடம் உதைபட வேண்டியது ஒன்றுதான் பாக்கி!” என்று திரும்பிப் பார்க்காமலேயே கத்தினான் ஹஹோல்
அவள் அவனிடம் நேராகச் சென்று தன் கரத்தை நீட்டினாள்.
“நீ எவ்வளவு நல்லவன்.”
ஹஹோல் திரும்பினான். உடனே தன் தலையை ஒரு மாட்டைப்போல கவிழ்ந்து வைத்துக் கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டும் சமையலறையை நோக்கி நடந்தான். எகத்தாளமாக அவன் குத்திப் பேசுவது தாயின் காதில் ஒலித்தது.
”பாவெல், ஓடிப்போய்விடு! உன் தலையை நான் கிள்ளித் தூர எறிவதற்குள் போய்விடு! அம்மா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் பயந்துபோய்விடாதீர்கள். நான் இங்கே தேநீருக்குத் தண்ணீர் போடுகிறேன். வேறொன்றுமில்லை. அடடே! அருமையான அடுப்புக் கரி இருக்கிறதே – ஊறப்போட்ட கரியா?”
அவன் மெளனமானான். தாய் சமையலறைக்குள் நுழைந்தபோது, அவன் அடுப்புக்கு எதிராக இருந்து உலையை ஊதிக்கொண்டிருந்தான்.
நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார் அப்பா. ஆனால் – என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள்.
”பயப்படாதீர்கள். அம்மா, அவனை நான் தொடவேமாட்டேன்” என்று தலையை திருப்பாமலே சொன்னான் ஹஹோல், “நான் ரொம்ப சாது, வெந்துபோன கிழங்கு மாதிரி. அப்புறம் – ஏ, வீரசூரா, நீ இதை ஒன்றும் கேட்க வேண்டாம். தெரிந்ததா? உண்மையிலேயே எனக்கு அவன்மீது ரொம்பப் பிரியம். ஆனால் அவன் போட்டிருக்கிறானே, ஒரு கையில்லாச் சட்டை, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு அந்தப் புதுச் சட்டை மேலே ஒரே மோகம். அதைப் போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் அதையே போட்டுக்கொண்டு தொப்பையைத் தள்ளிக்கொண்டு போகிறதும் வருகிறதும். ஒவ்வொருவனையும் வழிமறித்து, ‘பார்த்தாயா? எவ்வளவு அருமையான சட்டை’ என்று பெருமை பீற்றிக்கொள்கிறதும்தான் அவனுக்கு வேலையாய்ப் போயிற்று. நன்றாய்த்தானிருக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருத்தனையும் இடித்துக் கொண்டு செல்லாவிட்டால் என்ன? ஏற்கெனவே இங்கு நெரிசல்.”
“ஏய்! எவ்வளவு நேரம்தான் நீ இப்படிக் கதை அளக்கப் போகிறாய்?’ என்று சின்னச் சிரிப்போடு கேட்டான் பாவெல். நீதான் எனக்கு ஒரு தடவை புத்தி சொல்லியாயிற்றே, இன்னும் என்ன?”
ஹஹோல் தரையிலே உட்கார்ந்து தன்னிரு கால்களையும் அடுப்புக்கு இருபுறமும் நீட்டிப் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தான். தாய் வாசல் நிலையருகில் நின்று அந்திரேயின் பின் தலையை அன்பு ததும்பக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னிரு கைகளையும் பின்னால் ஊன்றியவாறு உடலைத் திருப்பி, பாவெலையும் தாயையும் பார்த்தான்.
”நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நன்றாயிருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே ஓரளவு சிவந்து கன்றிப்போயிருந்த தன் கண்களை இமை தட்டிக்கொண்டான்.
பாவெல் குனிந்து அவன் கையைப் பிடித்தான்.
“அடடே, இழுக்காதே. என்னைக் கீழே தள்ளிவிடுவாய்” என்றான் ஹஹோல்.
“எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய், ”நீங்கள் இரண்டு பேரும் கட்டித் தழுவி முத்தமிடுங்கள்.”
“என்ன, இந்த யோசனை எப்படி?” என்று கேட்டான் பாவெல்.
“பேஷாய் வா இப்படி” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ஹஹோல்.
அவர்கள் இருவரும் கட்டித் தழுவினார்கள். ஈருடலும் ஓருயிருமாக அங்கு நட்பு பிரகாசித்தது. தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இது அழுகைக் கண்ணீர் அல்ல, ஆனந்தக் கண்ணீர்.
”போதும்” என்று கூறிக்கொண்டே தனது கண்களையும் துடைத்துவிட்டுக்கொண்டான் அவன். “ஆடி முடிந்துவிட்டது கன்றுக்குட்டி, இனி வெட்டிப் போடுவோம் வேகவைக்க. உன் அடுப்புக் கரியை உடைப்பிலேதான் கொண்டு போடவேண்டும். ஊதி ஊதி என் கண்களில்தான் கரி விழுந்து போயிற்று”
”இந்த மாதிரிக் கண்ணீருக்கு வெட்கப்படவே தேவையில்லை.” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஜன்னலருகே சென்று உட்கார்ந்தான் பாவெல்.
அவனது தாய் அவனருகே சென்று உட்கார்ந்தாள். அவளது இதயத்தில் புதிய தைரியம் நிறைந்திருந்தது. அந்தத் துணிச்சலினால், அவளது துக்கம் ஒருபுறமிருக்க, அவளது மனம் நிறைவும் நிம்மதியும் பெற்று விளங்கியது.
“அம்மா. நீங்கள் ஒன்றும் எழுந்திருக்க வேண்டாம். நானே எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே அந்த அறையை விட்டு அடுத்த அறைக்கு வந்தான் ஹஹோல். ”கொஞ்ச நேரம் சும்மா இருங்கள். உங்கள் இதயத்தை இந்த மாதிரிப் பிழிந்தெடுத்த பிறகு கொஞ்சம் ஓய்வு தேவைதான்…”
அவனது செழுமை நிறைந்த குரல் மீண்டும் அவர்களிடையே ஒலிக்க ஆரம்பித்தது.
“இப்போது நாம் வாழ்க்கையிலேயே ஒரு புதிய ருசியைக் கண்டோம். மனித வாழ்க்கையிலேயே ஒரு புதிய சுகத்தை அனுபவித்தோம்!”
“ஆமாம்” என்று தன் தாயைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.
“அப்படித்தானம்மா இருக்க வேண்டும்” என்றான் ஹஹோல். “என் அருமை அம்மா! இன்று ஒரு புதிய இதயம் பிறந்தது. புதிய இதயம் வாழ்வு கண்டது. மனிதன் முன்னேறிச் செல்கிறான்; பகுத்தறிவினால் அனைத்தையும் ஒளிரச் செய்தவாறே முன்னேறுகிறான். போகும்போதே “சர்வதேசத்தின் மக்கள் கூட்டமே! ஒரே குடும்பமாக ஒரே இனமாக ஒன்று சேருங்கள்” என்று அறைகூவி அழைக்கிறான். அவனது அறைகூவலுக்கு எதிரொலியாக, உறுதிவாய்ந்த சகல இதயங்களும் ஒன்றுகூடிக் கலந்து மாபெரும் பேரிதயமாகி மகத்தான பலம் பெற்று மணிநாதமாக ஒலிக்கின்றன…”
நடுங்கித் துடிதுடிக்க முயலும் தன் உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டாள் தாய். அழுகை முட்டிக்கொண்டு வரும் தன் கண்களையும் அவள் இறுக மூடிக் கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டாள்.
பாவெல் ஏதோ பேசப் போவதைப்போல் கையை உயர்த்தினான். ஆனால் தாய் அவனைத் தன்பக்கம் இழுத்து மெதுவாக இரகசியமாகச் சொன்னாள்.
“அவன் பேசட்டும்; நீ குறுக்கிடாதே” என்று குசுகுசுத்தாள்.
ஹஹோல் எழுந்து வந்து கதவருகே நின்று கொண்டான். “மக்கள் இன்னும் எத்தனையெத்தனை துன்பங்களையோ பார்க்கப் போகிறார்கள். எவ்வளவோ இரத்தத்தை இன்னும் சிந்திப் பெருக்கப் போகிறார்கள். என்னுடைய இதயத்திலும் என்னுடைய அறிவிலும் நான் கொண்டிருக்கும் வேட்கைக்கு என்னுடைய துயரங்கள் எம்மாத்திரம்? என் உடம்பிலுள்ள இரத்தம்தான் எம்மாத்திரம்? இவை போதாது. நான் ஒளிக்கிரணம் வீசும் தாரகையைப்போல் இருக்கிறேன். நான் எதையும் தாங்க முடியும்; எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஏனெனில், என் இதயத்தினுள்ளே பெருகும் பேரானந்தத்தை எந்தச் சக்தியும், எவரும் அழித்துத் துடைத்துவிட முடியாது. அந்தப் பேரானந்தத்தில் தான் என்னுடைய முழு பலமும் அடங்கியிருக்கிறது.”
அவர்கள் நடுநிசிவரையில் உட்கார்ந்து தேநீர் பருகினார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.
எப்போதாவது ஒரு கருத்து தனக்குத் தெளிவாகிப் புரியும் சமயத்தில், தாய் தனது கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்செறிந்து கொள்வாள். அந்தக் கருத்தை நன்கு உணர்ந்து கொள்வதற்காக, அதைத் தனது துன்பம் நிறைந்த இங்கிதமற்ற பழைய வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்வாள்.
அவர்களது உரையாடலிலிருந்து உற்சாகத்தில் அவளது பயபீதிகளெல்லாம் மறைந்தோடிப் பறந்துவிட்டன. அன்று, அவளது தந்தை அவளைப் பார்த்துக் கடுமையாகக் கூறியபொழுது தோன்றிய அந்த உணர்ச்சி மீண்டும் அவளிடம் தோன்றியது.
“முகத்தைச் சுழிப்பதிலே எந்தப் பிரயோசனமும் இல்லை. எவனோ ஒருவன் முட்டாள்தனமாக, உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துவிட்டானோ, உடனே அவனை ஏற்றுக்கொள், சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எல்லாப் பெண்களும் கல்யாணம் செய்துதான் தீர வேண்டும். கல்யாணம் பண்ணி, குழந்தைகளைப் பெற்றுப் போட வேண்டியதுதான் தலைவிதி. குழந்தைகளோ ஒரே தொல்லை பிடித்த பாரச்சுமைதான். எல்லோரையும் போன்ற மனிதப் பிறவிதானே நீயும்?” என்று கூறினார் அவளது தந்தை.
இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அவளது கண் முன்னால் ஏதோ ஒரு தப்பிக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரே ஒரு மார்க்கம்தான் தோன்றுவது போலவும், அந்தப் பாதையே அவள் முன்னால் இருண்டு வெறிச்சோடிக் கட்டாந்தரையாக நீண்டு கிடப்பது போலவும் தோன்றியதுண்டு. அந்தக் தவிர்க்க முடியாத நெடுவழியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளது இதயத்தில் ஒரு குருட்டு அமைதியை உண்டாக்கியது. இன்றும் அதுபோலவே இருந்தது அவளுக்கு தனக்கு வரப்போகும் புதிய துயரத்தை அவள் உணர முனைந்தபோது, தனக்குத்தானே, யாரோ ஒரு இனந் தெரியாத நபருக்குச் சொல்வது போலப் பேசிக்கொண்டாள்.
“வருவதை ஏற்றுக்கொள்.”
இந்த எண்ணம் அவளது இதய வேதனையைச் சமாதானப்படுத்தியது; அவளது இதயத்துக்குள்ளே தந்தி நாதம் போல் ஒலி எழுப்பியது.
ஆனால் அவளது மனத்தின் அதல பாதாளத்திலே, மங்கிய, எனினும் இடைநீங்காத நம்பிக்கையொன்றை அவள் வளர்த்து வந்தாள். எந்தச் சக்தியும் தன்னிடமிருந்து சகலவற்றையும் பறித்துச் சென்றுவிட முடியாது. நிச்சயம் ஏதாவது மிஞ்சவே செய்யும் மூமூ என்பதே அந்த நம்பிக்கை.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
ஒரு வெப்ப மண்டல புயலின் தோற்றம், வலுவடைதல், வலுவிழத்தல் என்ற மூன்று கட்டங்களை கடந்து வருகிறது. கடற்பரப்பில் 26.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் தொடர்ந்து நீடிக்கும் போது காற்று சூடாகிறது. சூடாகும்போது காற்று விரிவடைகிறது. இலகுவாக மாறிய காற்று மேலே எழும்புகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது.
இங்கு காற்றின் அழுத்தம் குறைவதால், அருகாமைப் பகுதியிலிருந்து காற்று உள்நுழைந்து, அந்தக் காற்றும் சூடாகி கடற்பரப்பில் மேலே எழும்புகிறது…
இந்த நிகழ்வு ஏற்படும் புவியின் துருவப்பகுதியின் அடிப்படையில் கடிகார வட்டச் சுழலாகவோ, எதிர் கடிகார வட்டச் சுழலாகவோ சுழன்று சூறாவளியாகிறது.
இந்த வெப்ப மண்டலச் சூறாவளிகளால் மிகப் பலத்த காற்றுடன் மிக பலத்த மழையையும் உருவாக்க முடியும். இவற்றுடன் இந்தச் சூறாவளிகள் உயரமான அலைகளையும் அழிவு உண்டாக்கக்கூடிய புயல் அலை எழுச்சிகளையும் உருவாக்க முடிகிறது.
கடற்பரப்பில் தோன்றி நிலத்தை நோக்கி நகரும்போது இந்தப் புயல்கள் வலுவிழக்கின்றன.
வேகத்தை வைத்து புயல்களை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தென்னிந்தியா இத்தகைய வெப்பமண்டலப் பகுதியில் வருவதால் ஆண்டுதோறும் அதிகப் புயல்களை நாம் சந்திக்கிறோம். உலகம் முழுவதும் புயல் குறித்த விழிப்புணர்வும் நவீன அறிவியலும் வளர்ந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியா மட்டும் இதில் விதிவிலக்கு.
இதற்கு முன்னர் வந்த ஒக்கிப் புயலின் தாக்கம் மற்றும் அதன் பேரழிவை வெளிக் கொணரும் ஆவணப்படம் – கண்ணீர்க் கடல் !
முதலாம் உலகப் போர் முடிவடைந்து நூறு வருடங்கள் ஆகிவிட்டன. 28-6-1914 அன்று, சரயேவோ (பொஸ்னியா) நகரில், ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுவே முதலாம் உலகப் போரின் தொடக்கமாக கருதப்பட்டு வந்தது. உண்மையில் அது “உலகப்” போர் அல்ல. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பங்கெடுத்த “ஐரோப்பியப்” போர் ஆகும். ஆனால், அது ஒரு காலனியாதிக்க காலகட்டம் என்பதால், ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால், அது இன்றளவும் “1-ம் உலகப் போர்” என்று அழைக்கப்படுகின்றது.
நூறு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரிய இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப்பிற்கு சரயேவோ நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கவ்ரிலோ பிரின்சிப் (Gavrilo Princip) பற்றி சில குறிப்புகள்.
கவ்ரிலோ பிரின்சிப் சிலை.
உலகம் முழுவதும், அரசியல் காரணங்களுக்காக திரிபுபடுத்தப்பட்ட வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. அனேகமாக எல்லா வரலாறுகளும் “அங்கீகரிக்கப்பட்ட பொய்கள்” தான். இளவரசர் பெர்டினன்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான், 1-ம் உலகப் போரை தொடக்கி வைத்தது என்று எல்லா சரித்திர நூல்களிலும் எழுதி இருக்கிறார்கள். உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.
இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “பயங்கரவாதி” அல்லது “செர்பிய தேசியவெறியன்” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்கள். அநேகமாக ஆஸ்திரிய சாம்ராஜ்யவாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்தே அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது.
கவ்ரிலோ பிரின்சிப் உண்மையில் ஒரு பயங்கரவாதி அல்ல. யூகோஸ்லேவியா என்ற தாயக விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைப் போராளி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி நிலவியது. அந்தக் காலத்தில் தேசியவாதம் ஒரு முற்போக்கான கொள்கையாக கருதப்பட்டது.
பொஸ்னியாவும், குரோவாசியாவும் ஆஸ்திரிய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தன. ஆஸ்திரியா அந்தப் பிரதேசத்தை காலனி மாதிரி நடத்தி வந்தது. பொஸ்னியா முழுவதும் நான்கு இடைத்தர பாடசாலைகள் மட்டுமே கட்டப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா (அல்லது இலங்கையில்) ரயில் பாதை, நெடுஞ்சாலை அமைத்தார்கள் என்று சொல்லிக் கொள்வதைப் போன்று, ஆஸ்திரிய காலனிய ஆதரவாளர்களும் கூறி வந்தனர். ஆனால், அந்த ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் யாவும், பொஸ்னியாவின் இயற்கை வளங்களை, ஆஸ்திரியாவுக்கு எடுத்துச் செல்வதற்காக போடப்பட்டவை. ஆஸ்திரிய காலனிய சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் பயங்கரவாதம் ஆகாது.
கவ்ரிலோ பிரின்சிப் கைது செய்யும் இராணுவ வீரர்கள். (சித்திரம்)
சரித்திர பாடநூல்கள் குறிப்பிடுவது போன்று, கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “செர்பிய தேசியவாதி” அல்ல. அன்று அவனுடன் ஒரு பொஸ்னிய முஸ்லிம், குரோவாசியர் ஆகியோரும் கூட்டுச் சேர்ந்து தான் தாக்குதலுக்கு திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் செர்பியா, பொஸ்னியா, குரோவாசியா ஆகிய பகுதிகளை இணைத்த யூகோஸ்லேவியா குடியரசு.
மேற்குறிப்பிட்ட தகவல்கள், சரித்திர பாட நூல்களில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இன்று செர்பிய தேசியவாதிகள் கவ்ரிலோ பிரின்சிப் தங்களது நாயகன் என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியுலகமும் அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு பரப்பி வருகின்றது.
இதில் இருந்து நமக்குக் கிடைக்கும் பாடம், உண்மையான தேசியவாதத்தை விட, குறுந்தேசியவாதமும், இனவாதமும் ஏகாதிபத்தியத்திற்கு நன்மை தரத்தக்கது. அதனால், உலகம் முழுவதும் அந்தக் கோட்பாட்டை வளர்ப்பதில் குறியாக உள்ளது.
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
விழாக்காலம் என்றால் குழந்தைகள் நினைவுக்கு வருவார்கள். தற்போது டாஸ்மாக் வசூலும், புதுப்பட ரிலிசுமே பண்டிகைகளை நினைவுபடுத்தி வருகின்றது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் முதற்கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக், சினிமாக்கள் வரை மக்களை சுரண்டுவது எப்படி என திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் “தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” என்றும், “பிக் பில்லியன் டேஸ்” என்று பிளிப்கார்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு இதுவரை இல்லாத சலுகைகளை வழங்குவதாகக் கூறி தமது வசூலை அள்ளியிருக்கிறார்கள்.
அமேசான் மூன்று கட்டங்களாக சலுகைகளை வழங்கி மக்களிடம் விரட்டி விரட்டி விற்பனை செய்திருக்கிறது. அதன் விளைவு, கடந்த ஆண்டை விட 117 சதவீதம் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்று பன்மடங்கு விற்பனையையும் உயர்த்தியுள்ளது. “இந்தியாவில் பெரும்பாலன வாடிக்கையாளர்கள் அமேசானில் இணைந்துள்ளனர். பிரைம் வாடிக்கையாளர்களும் இரு மடங்கு உயர்ந்துள்ளனர். இ-காமர்ஸில் இது ஒருநாள் விற்பனையே. மேலும் இந்தியாவில் விற்பனை செய்வதில் அதிக முதலீடு செய்வோம்” என்கிறார் அமேசானின் இந்திய தலைவர் அமித் அகர்வால்.
பிளிப் கார்ட் நிறுவனத்தை கடந்த மே மாதம் வால்மார்ட் வாங்கியதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த இணைய வர்த்தகப் போரால் மின் சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தும் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்தது பிளிப் கார்ட்.
“தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” மூலம் 10 கோடிக்கும் அதிகமான பொருட்களை தள்ளுபடியில் விற்பனையை அறிவித்த அமேசான், சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக், அமேசான் பே-பேலன்ஸ் மூலமாக ஷிப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத தொகை திரும்ப கிடைக்கும் என சாத்தியமான அனைத்து வகைகளிலும் சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களின் பாக்கெட் மணியைக்கூட “ஸ்வைப்” செய்தது.
இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபுறம் சுரண்ட, தமிழகத்தில் எடப்பாடி அரசும்- தமிழ்த் திரைத்துறையும் மக்களின் பட்டாபட்டி டிராயரைக்கூட அவிழ்த்து அலைய விட்டிருக்கிறது.
தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு சரக்கு விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு, ரூ.320 கோடி என்று நிர்ணயித்த இலக்கை எட்டி மகத்தான சாதனையை புரிந்திருக்கிறது. பட்டாசு, பலகாரப் பொருட்கள், புத்தாடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை குறைந்த நிலையில், ரூ.602 கோடிக்கு சாராய சரக்குகளை விற்பனை செய்திருக்கிறது.
இதைவிட அதிர்ச்சியான செய்தி, “ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் சரக்கு அடிப்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்” என அதிமுகவின் பிரமுகர் ஒருவர் பார் முன்பு பேனரே வைத்திருந்தார்.
வழக்கமாக டாஸ்மாக்கின் ஒருநாள் விற்பனை 70-80 கோடிதான். ஆனால் கடந்த 3-ம் தேதி சனிக்கிழமை 124 கோடி, ஞாயிறு 150 கோடி, திங்கள் 148 கோடி, செவ்வாய் தீபாவளி அன்று 180 கோடி விற்பனையாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 131 கோடி, அதற்கு முந்தைய தினத்தில் 113 கோடி என மொத்தம் 244 கோடிக்கு விற்பனையானது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவையே விஞ்சி விட்டார் எடப்பாடி பழச்சாமி.
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின்போது புதுப்புதுப்படங்களை வெளியிட்டு பிளாக்கில் விற்று கொள்ளையடிக்கிறார்கள் திரைத்துறை முதலாளிகள். . “திருட்டுக்கதை” என்று நீதிமன்றம் வரை சென்று சமரசமாகி வந்திருக்கும் “சர்க்கார்” திரைப்படமும் வெளியான இரண்டு நாட்களில் பல கோடிகளை வசூலித்தாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்கார் படமோ, கபாலி மற்றும் பாகுபலியின் இரண்டாம் பாக வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கொண்டாடித் தீர்க்கின்றனர். தமிழகம் முழுவதும் முதல் நாளில் 31.6 கோடியும், “சென்னையில் மட்டும் 2.41 கோடியும் வசூல் செய்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் 6.6 கோடியும், கர்நாடகாவில் 6.1 கோடியும், ஆந்திராவில் 3.8 கோடியும் அள்ளியுள்ளது. இதன் மூலம் சர்கார் வசூல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று வர்ணிக்கிறார்கள் திரைத்துறை மேதாவிகள்.
இந்தியாவில் மட்டுமா? “அமெரிக்காவில் 2.31 கோடியும், ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி, இங்கிலாந்தில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது” என்கிறார் விமர்சகரும், திரைத்துறை வர்த்தக ஆய்வாளருமான தரன் ஆதர்ஷ். இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண டிக்கெட் வரவு எவ்வளவு என்பது மற்றும் தேவ ரகசியம். தற்போதைய செய்திகளின் படி சர்கார் திரைப்படத்தின் வசூலால் வினியோகஸ்தர்களுக்கு நட்டம் என்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களுக்குச் சென்ற வசூலில் மக்கள் இழந்தது எவ்வளவு என்பதுதான் கேள்வி!
இவற்றோடு தீபாவளி அன்று தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் விளம்பர வருவாயை அதிகரித்துக் கொண்டன. அதே பட்டிமன்றம், சிறப்புத் திரைப்படம் என்று எந்த பிராயத்தனமும் இல்லாமல் சானல்களின் வசூல் சுமூகமாக நடந்தேறியது.
மோடி அரசின் நான்காண்டு ஆட்சியில் அடுக்கடுக்கான தாக்குதல்கள் மக்களின் மீது தொடுக்கப்பட்டது. குறிப்பாக பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒட்டு மொத்த தொழில் துறையையே புரட்டி போட்டது. பலர் வேலையிழந்தனர். இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்து வந்த ஜி.எஸ்.டி-யும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி என்று இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.
அன்றாடம் வாழவே வழியில்லாமல் செய்வதறியாமல் திகைத்து வருகிறார்கள் மக்கள். அதிலிருந்து அவர்களை மீட்டுருவாக்கம் செய்யாமல் மேலும் மேலும் அவர்களை எப்படி சுரண்டுவது என்றுதான் சிந்திக்கிறது மோடி அரசு.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம், வழிப்பறி, கொள்ளை, என்று பெரும் இளைஞர்கள் சமூகத்தையே லும்பன்களாகவும், குடி வெறியர்களாகவும், சினிமா – நுகர்வு வெறியர்களாகவும் மாற்றி அதை நோக்கியே பயணிக்க வைக்கிறது.
தமிழகத்தில் நடந்து வரும் யமஹா,என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முதற்கொண்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் – இந்தியாவில் மோடி அரசின் ரஃபேல் ஊழலும், சி.பிஐ மாற்றம் – ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு என்று எல்லாமும் பெருவாரியான மக்களின் பார்வைக்கு வராதபடி பின்னுக்கு தள்ளப்பட்டன. கவனிக்கபட வேண்டிய நாட்கள் எல்லாம் இந்த விழா விளம்பரத்தில் கவனிக்க தவறியுள்ளது தமிழ்ச்சமூகம். பேப்பரை திறந்தாள் முதல்பக்கத்திலேயே மனதை கொள்ளைகொல்லும் அமேசான் விளம்பரமும், டி.வி பெட்டியை திறந்தால் தீபாவளி நிகச்சிகளும், சர்க்கர் பட சர்ச்சை பற்றியும்தான் பேச்சு. இதைத்தான் இந்த அரசும் விரும்புகிறது.
தமிழ் திரைப்படங்களில் சரக்கு அடிப்பதையே ஹீரோயிசமாக காட்டுவது – அந்த ஹோரோக்களையே தங்கள் பொருட்களின் விளம்பர தூதராக முன்னிருத்துவது – சினிமா நாயகர்கள்தான் தங்களின் தேவதூதன் என மக்களை திரும்பத் திரும்ப நம்ப வைப்பது என்று ஒரு சுழல் வட்டப் பாதையில் அரசு மற்றும் முதலாளிகளின் நலன்களோடு பின்னிப் பிணைந்துள்ளது.
தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அளவு மக்களிடம் பணமில்லை எனும் போதே இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. பணத்தோடு மக்களின் நேரத்தையும் திருடியிருக்கிறார்கள். சிந்தனையையும் திசை திருப்புகிறார்கள். இந்த நச்சு சூழலை முறிப்பது எப்போது?
விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 5 (இறுதி பகுதி)
மோடி வெளிநாடு போனாரு, அங்க போனாருன்னு அதுக்கான விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு பண்ற இந்த அரசு ஒவ்வொரு மாவட்டத்திலையும் ஒவ்வொரு ஊர்லயும் திட்டங்கள் வகுத்து “இந்த மாதிரி திட்டம் நடக்குது, போய் சேருங்க”ன்னு கொண்டு வரலாமே, ஏன் செய்வதில்லை?. தகவல் அறியும் மனு போட்டா “இது மாதிரி நாங்க skill development program நடத்திருக்கோம்”னு கணக்கு காட்டுவாங்களே தவிர அது பலனுள்ளதாக இல்லேன்றதுதான் நிலைமை. அது பலனுள்ளதாக இருந்தா அது நிறைய பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
ஜின்டால் ஆலை வேணும், ஸ்டெர்லைட் ஆலை வேணும் என்று ஒரு எதிர்தரப்பு வாதம் வரலாம். வேலை வாய்ப்புன்றது தனியார் நிறுவனங்கள்ல வரணும்ன்னு இல்லை. அரசு திட்டமிட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்படி சரியான நிறுவனங்களை சரியான இடத்தில் வைச்சு அதுக்கான சரியான கவனமும், விழிப்புணர்வும், ஊக்கமும் கொடுத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தமிழ்நாட்டுல எத்தனை ஐ.டி நிறுவனங்கள் இருக்கு? எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க. ஏன் உள்ளூர் இளைஞர்கள் நிறைய பேரை கேம்பஸ் இன்டர்வியூல எடுக்கிறதில்லை என்று கேட்டால் ஸ்கில் செட் -ன்ற காரணத்தை கொண்டு வர்றாங்க. இந்த ஸ்கில் செட் டெவலப்மென்ட் புரோகிராம் என்னன்னு இருட்டடிப்பாகத்தான் இருக்கு.
இன்னோன்னு இந்த மைண்டு செட். ஒரு தரப்பு மக்கள், ஒரு தரப்பு படிப்பு படிச்சவங்க மட்டும்தான் உள்ள வரணும்ன்ற மாதிரியான மனநிலை இது. உதாரணமாக, சி.பி.எஸ்.இ ஆகட்டும், நீட் ஆகட்டும் இது மாதிரியான மனநிலையோட வெளிப்பாடு. இதை அரசு மாத்திக்கிற மாதிரி தெரியல. அரசு அதே பாதையில தான் போயிட்டிருக்கு. அதே பாதையில போயிட்டிருக்கும் போது நோய் எப்படி குறையும்ன்றது தெரியலை.
ஒரு வேளை சரியான நிறுவனங்கள் சரியான விதிமுறைகளின் படி வந்தாங்கன்னா எல்லாரும் வரவேற்கத் தான் செய்வாங்க. விதிமுறைகளை வரையறுப்பதும் அதை பின்பற்றுவதும் அதுக்கான கல்வியை குடுக்கிறது தான் சரியா இருக்கும்.
எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க.
இங்க அரசு வேலையை பொறுத்தவரை லஞ்சம், தனியார் வேலையை பொறுத்த வரைக்கும் கார்ப்பரேட் அஜெண்டா இருக்கிறது. அதாவது ஊழல் இருக்கிறது, சாதிய அஜெண்டா இருக்கிறது. என்ன சாதி, என்ன மதம், எந்த மாநிலம், எங்கு படித்தீர்கள் என்று ஒதுக்கி வைக்கும் அஜெண்டா உள்ளது.
திருச்சி நகரில் சில நிறுவனங்கள கொண்டு வரலாம். அதை சுத்தி உள்ள கிராமங்களுக்கு அதுக்கான வாய்ப்பு கிடைக்கும், அங்க போவாங்க. இல்ல வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களை செய்யலாம். இந்த மாதிரி விசயங்கள் கேட்டா எல்லாமே இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, நடைமுறையில் எதுவும் இல்லை.
‘மன் கீ பாத்’ன்னு மோடி வந்து பேசுறாரு, எடப்பாடி பழனிச்சாமி எல்லா இடத்திலையும் போயி பேசுறாங்க. அதுக்கு பதிலா வேலைவாய்ப்புகளை உருவாக்க முறையான திட்டங்கள் தீட்டி, அதை அமல்படுத்தி அதை கொண்டு சேர்க்கணும். அரசின் செயல் திட்டங்கள்ன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தியேட்டர்லயும் படம் போடுறத விட இது மாதிரி வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும்படி திட்டம் போட்டு அது எங்க எங்க இருக்கு அதுக்கான பயிற்சி திட்டம் என்ன இருக்கு அப்பிடின்றத ஒரு தியேட்டர்ல ஒரு 2 நிமிட படமா காண்பிக்கலாம். இதை பார்க்கிற எல்லாரும் பார்த்து பயனடைவாங்க. இதெல்லாம் இல்லாமதான் வெளிநாடுகளுக்கு போய் ஏமாறுராங்க.
இன்னோன்னு பொருளாதார நெருக்கடி. ராணுவ வீரர் ஒருத்தர் பென்சன் வாங்குறாரு, இது மாதிரி ஏன் விவசாயத்தை பின்புலமா கொண்டவங்களுக்கு அரசு ஓய்வூதியம் மாதிரியான முறையை கொடுத்தீங்கன்னா அவங்க வாழ்க்கையை மாசம் மாசம் ஓட்டுறது ஒரு பெரிய பிரச்சனையா இருக்காது. நெருக்கடியில் விழ மாட்டாங்க. வாழ்நாள் முழுதும் உழைச்ச விவசாயிகளும், தொழிலாளிகளும் இந்த மாதிரி பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் போது தான் தப்பு நடக்குது.
இது சாதாரண பிரச்சனை கிடையாது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?
8 வழி சாலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலத்தை இழக்க போறாங்க. அரசு குடுக்கிற எல்லா பணமுமே திரும்பி அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போக போகுது. அரசியல் கட்சி பின்புலம் இருக்கிற ஆளுங்க தான் இது மாதிரி குற்றங்களை துணிந்து செய்றாங்க. அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போலீஸ் சப்போர்ட்டும் இருக்கு. மத்தபடி அவங்களை அடக்கி ஆளுற அதிகாரமும் அந்த திமிரும் இருக்கு.
தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.
தருமபுரி மாவட்டம் சிட்லிங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சவுமியா. அருகில் உள்ள நகரில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 5 அன்று தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். மாலையில் சிறுநீர் கழிக்க அருகில் உள்ள மறைவிடப் பகுதிக்கு சென்ற சவுமியாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் என்ற இருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சிதைத்து கொல்லப்பட்ட சவுமியா.
சவுமியா வெளியில் சென்று வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டு மூச்சுத்திணறிக் கொண்டிருந்த சவுமியாவை உடனடியாக துணி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர், நடந்த விவகாரத்தைக் கேட்டு குற்றவாளி சதீஷை பிடித்து சவுமியாவின் அண்ணன் விசாரித்த போது, சதீஷ் தனது நண்பர்கள் உறவினர்களை வரவழைத்து சவுமியாவின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின்னர் சவுமியா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
ஆனால், புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தது போலீசு. பாதிக்கப்பட்ட பெண்ணே வந்து புகாரளிக்க வேண்டும் எனக் கூறியது. சட்டப்படி, பாலியல் வன்முறையைப் பொருத்தவரையில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண் வரவேண்டும் என அவசியம் இல்லை. அப்பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கும், அப்பெண் இருக்கும் இடத்திற்கும் ஒரு பெண் போலீசு அதிகாரி சென்று விசாரணை நடத்த வேண்டும், இதுதான் விதிமுறை. ஆனால், அதனை செய்யாமல் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வா என அலைக்கழித்திருக்கிறது போலீசு.
போலீசு சட்டம் தெரியாததும் அல்ல. குற்றவாளி ரமேஷ் குடும்பத்தின் கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் வரும் வருமானம் குறித்தும் அறியாததும் அல்ல. சவுமியா நேரில் சென்று அங்கு புகார் பதிவு செய்துள்ளார். புகார் பதிவு செய்யும் போது உடன் அவருடன் யாரையும் அனுமதிக்கவில்லை.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்து சவுமியாவிடம் விசாரிக்க வந்த பெண் போலீசு, சவுமியாவின் வீட்டிற்குள் விசாரிக்கையில் சவுமியாவின் குடும்பத்தினர் யாரையும் விசாரணையின் போது உள்ளிருக்க அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க கிரிமினல்தனமாக சட்டத்தை மீறியிருக்கிறது போலீசு.
1 of 2
அதன் பின்னர் நவம்பர் 7-ஆம் தேதி அரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோம் என சவுமியாவை அழைத்துச் சென்று காப்பகத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கும் அவரது தாயாரை அருகில் கூட இருக்க அனுமதிக்கவில்லை. போலீசே சவுமியாவின் பெற்றோரை பேருந்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னரும் குற்றவாளிகளைத் தண்டிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்திலிருந்த தடயங்களைக் கூட எடுக்கவில்லை.
இந்நிலையில், சவுமியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளதாகவும் போலீசு தரப்பிலிருந்து தகவல் வருகிறது. உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர்களும் அலட்சியமாகவே சிகிச்சை அளித்துள்ளனர். பாலியல் வல்லுறவு காரணமாக ஏற்பட்ட இரத்த இழப்பு அவரது உடல்நிலை மோசமடையக் காரணம் என்று கூறப்பட்டது. அதற்கு உரிய மருத்துவம் அளிக்காமல், சவுமியாவிற்கு தூக்க மாத்திரை மட்டுமே மருத்துவர்கள் கொடுத்தனர் என்கிறார் சவுமியாவின் அக்கா.
கொலைகார கிரிமினல்கள்.
கடந்த சனிக்கிழமை (10-11-2018) அன்று காலையில் சிகிச்சை முறையாக கொடுக்கப்படாததன் காரணமாக சவுமியா மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்களும் சவுமியாவின் உறவினர்களும் போலீசின் அயோக்கியத்தனத்தையும், மருத்துவர்களின் அலட்சியப் போக்கையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு துணை போன போலீசு மற்றும் மோசமான சிகிச்சை அளித்த மருத்துவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போதைக்கு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகவும், 48 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்வதாகவும் கூறி மாணவியின் உடலை வாங்கச் செய்தது மாவட்ட நிர்வாகம்.
மக்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் இச்செய்தி மைய ஊடகங்களில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினையின் உண்மையான நிலை வெளிவரக் கூடாது என்பதை மனதில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் சவுமியாவின் குடும்பத்தினரிடம், ஒரு கோடி நிவாரணப் பணம் பெற்றுத் தருவதாகவும், இச்சம்பவம் குறித்து மீடியாக்களிடமும், விசாரிக்கும் யாரிடமும் எதுவும் பேசக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
பல்வேறு பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பான,”வன்முறைக்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பைச்” சேர்ந்த பெண் தோழர்கள் 12 பேரும் ஆண் தோழர்கள் 2 பேரும், ஒரு பள்ளிக் குழந்தை என மொத்தம் 15 பேர், இது குறித்து விசாரிக்கவும், மரணமடைந்த மாணவி சவுமியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் அங்கு கடந்த நவம்பர் 13 அன்று சென்றுள்ளனர்.
நவம்பர் 13 அன்று அ.தி.மு.க. அமைச்சர் அன்பழகன், வரவிருந்ததை ஒட்டி, சவுமியாவின் வீட்டில் முன்னமே வந்திறங்கியிருந்த அ.தி.மு.க. அல்லக்கைகள், சவுமியாவின் குடும்பத்தாரை பெண் தோழர்களிடம் எதுவும் கூறக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் வரும் நேரம் நெருங்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு படைகளைக் குவித்து சந்திக்கச் சென்ற பெண் தோழர்களை உடனடியாக அங்கிருந்து கிளம்பக் கூறி வலியுறுத்தியது போலீசு.
போலீசோடு வாக்குவாதம் செய்தும் பலனற்ற நிலையில், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட பெண்கள் கூட்டமைப்பினர் சென்றிருக்கின்றனர். சுமார் 100 பேர் கொண்ட குண்டாந்தடி போலீசு கும்பல் ஒன்று அவர்களை சுற்றி வளைத்து அப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேறுமாறு நிர்பந்தித்தது. அவர்களை போலீசு வாகனத்தில் ஏறுமாறு மிரட்டியது.
தடயத்தைக் கூட இன்னும் சேகரிக்கவில்லை போலீசு.
அதனை மறுத்து தாங்கள் வந்த வாகனத்திலேயே திரும்பினர் பெண் தோழர்கள். அவர்களது பாதுகாப்பிற்காக வருவதாகக் கூறி அவர்களது வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீசு வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்தது. இடையே திருநங்கையர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்லவேண்டும் எனக் கூறியபோது, போலீசாரும் உடன் வருவார்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் கூறி கெடுபிடி செய்திருக்கிறது போலீசு.
அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் அரூர் சி-1 போலீசு நிலையத்தில் இருக்கவைத்தது. தனது தாயுடன் இந்தக் குழுவில் உடன் வந்த பள்ளி மாணவி நேயாவிற்கு உடல் பிரச்சினைக்கு மருத்துவம் எடுக்க வேண்டிய சூழலை அவரது தாயார் எடுத்துக் கூறியும் அதற்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு. இத்தனைக்கும் மாணவி நேயா தலைவலி தொடங்கி அழ ஆரம்பித்திருக்கிறார். அச்சூழலிலும் மருத்துவமனைக்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு காட்டுமிராண்டிக் கும்பல்.
போலீசு நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள தோழர்கள்.
1 of 2
போலீசு நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள தோழர்கள்.
அதன் பின்னர், மாலையில் 4 பேர் மீது மட்டும் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் சட்டவிரோதமாகக் கூடுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்துள்ளது போலீசு. கைது செய்தால் அனைவரையும் கைது செய், இல்லையேல் அனைவரையும் விடுதலை செய் என பெண் தோழர்கள் அனைவரும் கூறியிருக்கின்றனர். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் அனைவரையும் தனி வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள நகர்ப்பகுதியில் இறக்கி விட்டுள்ளது போலீசு.
கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு.
தோழர் வளர்மதி – பொது நல மாணவர் எழுச்சி இயக்கம்.
தோழர் மகாலெட்சுமி – பெண்கள் எழுச்சி இயக்கம்.
தோழர் ராமகிருஷ்ணன் – வங்கி அலுவலர்.
தோழர் வேடியப்பன் – சமூக ஆர்வலர்.
மாணவி சவுமியா படுகொலையில் முதல் குற்றவாளி போலீசு, இரண்டாவது குற்றவாளியாக இருப்பது மருத்துவமனை நிர்வாகம் என குற்றம்சாட்டுகின்றனர், உண்மையறியும் குழுவினர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், அதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட போது உடனடியாக ஏற்க மறுத்திருக்கிறது போலீசு. அதன் பின்னர் உயரதிகாரிகளைப் பார்த்து மனுகொடுக்கப் போகிறோம் என சவுமியா குடும்பத்தினர் சொன்ன பிறகுதான் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவி என்ற வகையில் இந்த வழக்கை போக்சோ பிரிவின் கீழ் முதலில் பதிவு செய்யவில்லை. நெருக்கடி கொடுக்கப்பட்ட பிறகே பதிவு செய்துள்ளது.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போதே கடுமையான உதிரப் போக்குக்கு ஆளான சவுமியா உடல் நலமில்லாத நிலையில் இருந்த போதும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்குப் பதிலாக அருகில் உள்ள அரசு காப்பகத்தில் அவரை ஒரு நாள் வைத்துள்ளது.
அங்கும் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீசு. மருத்துவமனை நிர்வாகம் மாணவி சவுமியாவிற்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தூக்க மாத்திரை கொடுத்துள்ளது. முறையாக மருத்துவர் வந்து பார்க்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் மாணவி சவுமியா கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்தப் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.
#JusticeForSowmiya
தொடர்புடைய பதிவு:
அரியலூர் நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
“மக்களை மரணக் குழியில் தள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்’’ என்ற முழக்கத்தின் கீழ் காஞ்சிபுரம் பகுதி பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பாக கடந்த நவ-11 அன்று காஞ்சிபுரம் – அப்துல்லாபுரம் பகுதியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு 90 பேர் கலந்து கொண்டு குடும்ப விழாவாகக் கொண்டாடினர்.
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி பறையிசையோடு துவங்கிய இந்நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன. காவியும் கார்ப்பரேட்மயமும் என்ற நாடகம்; நவீன ஔவையார் உரை ஆகியன நிகழ்த்தப்பட்டன.
இறுதி நிகழ்வாக, ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம் நவம்பர் புரட்சி தின விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றினார். ரஷ்ய புரட்சியின் வரலாற்று ஆவணங்களை பட்டியலிட்ட அவர், இங்கு நாட்டு மக்களை மரணக்குழியில் தள்ளும் ஆர்.எஸ்.எஸ். மதவெறிக்கும்பலையும் அக்கும்பலின் புராண புளுகுகளையும் அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கமாக அணிதிரண்டு மோதி வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
1 of 17
பு.மா.இ.மு. காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் துணைவேந்தன் நன்றியுரையாற்ற, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தோடு நவம்பர் புரட்சி தின விழா நிறைவு பெற்றது.
***
வேலூர்:
“மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக “நவம்பர் 7 ருஷ்யப் புரட்சியின் 101 வது ஆண்டு விழா” 11.11.2018 அன்று மாலை வேலூரில் கொண்டாடப்பட்டது.
1 of 9
தோழர் இராவணன்
தோழர் செஞ்சுடர்
தோழர் சரவணன்
பொன்.சேகர்
முருகன்
வழக்கறிஞர் பாலு
தோழர் வாணி
வில்சன்
சந்தோஷ்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் வாணி விழாவிற்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். “சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக் கூடாது?” என்கிற தலைப்பில் இந்த பிரச்சனையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களின் அரசியலை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றினார்.
“லெனின் யார்? அவரை ஏன் எனக்குப் பிடிக்கும்!” என்கிற தலைப்பில் அனைவருக்கும் இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கியவர் லெனின், அதனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என பள்ளி மாணவர் சந்தோஷ் ஆற்றிய உரை சிறுவர்களை உற்சாகப்படுத்தியது.
நாடெங்கிலும் நடக்கும் கௌரவக் கொலைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளைப் பட்டியலிட்டு இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் பார்ப்பன பாசிசத்திற்கு சவக்குழி தோண்டுவதோடு சாதி பேதமற்ற சோசலிச இந்தியாவை உருவாக்குவதுதான் ஒரே வழி என்றார், ஆலைத் தொழிலாளி வில்சன்.
பங்கேற்றோர்
1 of 3
ஆண் – பெண் சமத்துவத்தை தனக்கு உணர்த்தியது மார்க்சியம். பழைய பிற்போக்கு சாதி – மதச் சடங்குகளிலிருந்து விடுவித்து அறிவியல் பூர்வமான செயல்களில் தன்னை மாற்றி அமைத்தது மார்க்சியம் என்பதை தனது சொந்த அனுபவத்திலிருந்து மார்க்சியத்தின் அவசியம் குறித்து “பார்ப்பன வாழ்க்கை முறையும் கம்யூனிச வாழ்க்கை முறையும்” என்கிற தலைப்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன்.
அடுப்படியில் சிக்கியிருந்த பெண்களை விடுவித்து அவர்களையும் ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தி பெண்களின் விடுதலைக்கு வித்திட்டது நவம்பர் புரட்சி என்பதை மிக எளிமையாக எடுத்துரைத்தார், அடுக்கம்பாறை பு.ஜ.தொ.மு. கிளைத் தலைவர் தோழர் முருகன்.
மார்க்சிய அரசியலை கற்றுக் கொண்டு சமூக விடுதலைக்குப் போராடும் போதுதான் பெண் விடுதலையும் சாத்தியம் என விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார் வழக்கறிஞர் பாலு.
1 of 2
இன்றைய சமூக அமைப்பில் அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு மருத்துவம் மறுக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தார் மாணவி செஞ்சுடர்.
தோழர் துரை.சண்முகம் எழுதிய தீபாவளி – நமக்கு தீராவலி ; நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டன.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில் சோசலிமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது? என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சேகர் நிறைவுரையாற்றினார்.
விழாவில் இடையிடையே “கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்ன மருது, பெரிய மருது”…., “சபரி மலைக்கு வந்தா தீட்டா தீட்டா?”…, “பாரத மாதா நீயும் பாத்து இருந்துக்க பத்திரமா!”.., “மலைகளையே பிளந்திட்டோம்”…, “நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு…. ஆகிய பாடல்கள் பாடப்பட்டன.
1 of 8
நவம்பர் புரட்சி விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றது மட்டுமன்றி இதில் சரி பாதிப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.
***
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 10.11.2018, சனிக்கிழமை அன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சிநாளையொட்டி அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. பு.மா.இ.மு. மாணவர்கள் சார்பாக பறையிசை, சிலம்பாட்டம் நடத்தப்பட்டன.
திருவாரூர் பகுதியில் செயல்படும் மாற்று அமைப்பைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் இவ்விழாவில் பங்கெடுத்து உரையாற்றினர். இறுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் “சோவியத் யூனியன் இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தை வேரோடு அழித்தது. அதைப்போல் நமது நாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன பாசிசத்தையும், ஏகாதிபத்திய – தரகுமுதலாளிகளின் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட அணிதிரள வேண்டும்” என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சர்வதேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
***
தஞ்சாவூர்:
கொடியேற்ற நிகழ்ச்சி.
1 of 3
ம.க.இ.க., பு.மா.இ.மு. தஞ்சைக் கிளை சார்பாக கீழவாசல் காமராஜர் சிலை அருகில், நவ-07 அன்று நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழாவில், ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் செங்கொடியேற்றி வைத்தார். மேலும், கீழவாசல் கடைவீதியில் குழுமியிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நவம்பர் புரட்சிநாளை கொண்டாடுவதன் நோக்கத்தை விளக்கிக்கூறும் பிரசுரங்களையும் இனிப்பு – பழங்களையும் விநியோகித்தனர்.
அரங்கக்கூட்டம்.
1 of 3
இதனைத் தொடர்ந்து நவம்பர் – 10 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கில் ” கம்யூனிசம் கனவல்ல அது மனித குலத்தின் மகத்தான இறுதி இலட்சியம்! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்ற முழக்கங்களை முன்வைத்து அரங்கக்கூட்டம் நடைபெற்றது. ம.க.இ.க. தஞ்சைக் கிளை செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். மேலும், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாண்டியன், AITUC மாவட்டத் தலைவர் தோழர் சேவையா, சி.பி.ஐ.(எம்-எல்) மக்கள் விடுதலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருணாச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தாய் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்ததும் கதவைத் திறந்தாள்; திறந்தவுடனேயே வாசல் நடையில் அப்படியே நின்றுவிட்டாள். வேனிற்கால மழையிலே நனைந்து விட்டதைப் போன்ற குதூகலத்தில் முங்கித் திளைத்து தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் வீட்டினுள் பாவெலின் வலுவான குரல் கேட்டது.
“இதோ அவளும் வந்துவிட்டாளே” என்று கத்தினான் ஹஹோல். திடீரெனத் திரும்பிய பாவெலின் முகத்தில் ஏதோ ஆறுதல் தரும் உறுதிமிக்க உணர்ச்சி பிரகாசிப்பதாக அவளுக்குத் தோன்றியது.
“வந்துவிட்டான் – வீடு வந்து சேர்ந்துவிட்டான்” என்று அவள் தடுமாறிக் குழறினாள். அவனது எதிர்பாராத வரவினால் அவள் மெய்மறந்து நிலை குழம்பிப்போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
அவன் தனது வெளிறிய முகத்தை அவள் பக்கமாகக் கொண்டு போனான். அவனது உதடுகள் துடித்து நடுங்கின. கண்ணின் கடையோரத்தில் ஈரம் பளபளத்துக் கசிந்தது. ஒரு கணநேரம் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் அவனை மெளனமாக வெறித்துப் பார்த்தாள்.
ஹஹோல் அவர்களைவிட்டு விலகி வெளி முற்றத்துக்கு வந்து சீட்டியடிக்கத் தொடங்கினான்.
“நன்றி, அம்மா!” என்று தணிந்த குரலில் தளதளத்துக்கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான் பாவெல், “என் அன்பே மிகுந்த நன்றி.”
“அவனது முகத்திலே தோன்றிய உணர்ச்சியையும், சொல்லிலே தொனித்த இனிமையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்து தன்னை மறந்துபோன அந்தத் தாய், மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாள். தனது இதயத்தின் படபடப்பைச் சாந்தி செய்ய முயன்றாள்.
“அட கடவுளே, எனக்கு எதற்காக நன்றி கூறுகிறாய்?” என்றாள் தாய்.
”எங்களது மகத்தான கருமத்தில் நீ ஒத்துழைத்ததற்காக! உனக்கு நன்றி, அம்மா” என்று திரும்பச் சொன்னான். “தானும் தன் தாயும் ஒரே மாதிரி உணர்ச்சி கொண்டவர்கள், ஒரே கொள்கை வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், அம்மா!”
அவள் மௌனமாக இருந்தாள். அவனது வார்த்தைகளைத் திறந்த மனத்தோடு ஆர்வத்தோடு அள்ளிப் பருகினாள். தன் முன்னே மிகவும் நல்லவனாக, அன்புருவமாக நின்ற தன் மகனைக் கண்டு வியந்து கொண்டிருந்தாள் தாய்.
”அம்மா, உனக்கு எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏதேதோ உன் மனத்தைப் பிடித்து இழுத்தது என்பது எனக்குத் தெரியும். நீ எங்கள் கருத்துக்களோடு ஒத்துவரமாட்டாய், எங்கள் கருத்துக்கள் உன் கருத்துக்களாக என்றுமே ஆகப்போவதில்லை என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், நீ உன் வாழ்க்கை முழுவதையும் எப்படிப் பொறுத்துச் சகித்து ஏற்றுவந்தாயோ, அது போலவே மெளனமாகப் பொறுத்து விடுவாய் என்றுதான் நான் நினைத்தேன், அதுவே எனக்குச் சங்கடமாயிருந்தது.”
“அந்திரியூஷா எனக்கு எவ்வளவோ விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவி செய்தான்” என்றாள் அவள்.
”அவன் உன்னைப் பற்றிச் சொன்னான்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.
“இகோரும் கூடத்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அந்திரியூஷா எனக்கு எழுதப்படிக்கக்கூடக் கற்றுக்கொடுக்க விரும்பினான்.”
”ஆனால் நீ வெட்கப்பட்டுப்போய், யாருக்கும் தெரியாமல் இரகசியத்தில் எழுதப் படிக்க முனைந்தாய். இல்லையா?”
“அதுகூட அவனுக்குத் தெரியுமா?” என்று வியந்தாள் அவள். தனது இதயத்தில் பொங்கிய ஆனந்தத்தோடு அவள் பாவெலை நோக்கிச் சொன்னாள்:
”அவனை உள்ளே கூப்பிடு. நம்மிருவருக்கும் இடையில் தானும் இருக்க வேண்டாம் என்றுதான் அவன் வெளியே போனான். பாவம், அவனுக்கு என்று ஒரு தாய் இல்லை…..”
”அந்திரேய்!’ என்று வாசற்கதவைத் திறந்து கொண்டே கூப்பிட்டான் பாவெல்; “நீ எங்கே இருக்கிறாய்?”
”இங்கேதான். கொஞ்சம் விறகு தறிக்க வேண்டும்.”
“வா இங்கே!”
அவன் உடனே வந்துவிடவில்லை. சிறிது நேரம் கழித்து சமையல் கட்டுக்குள் வந்து வீட்டு விஷயங்களைப் பேசத் தொடங்கினான்.
“நிகலாயிடம் சொல்லி கொஞ்சம் விறகு கொண்டுவரச் சொல்ல வேண்டும். இங்கு விறகு அதிகமில்லை. அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.”
தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் இன்னும் ஆனந்தத்தில்தான் திளைத்திருந்தாள். அவளது இதயம் இன்பகரமாகத் துடித்தது என்றாலும் தன் மகனை அவனது வழக்கமான அமைதியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ உணர்ச்சி அவளுக்கு உந்தியெழுந்தது. எல்லாமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவளது வாழ்க்கையில் முதன்முதலாக ஏற்பட்டுள்ள இந்தப் பேரானந்தம் என்றும் எப்போதும், இன்றிருப்பது போலவே, வலிவும் வனப்பும் பெற்று நிலைத்திருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அந்தப் பேரானந்தம் எங்கே கரைந்தோடிவிடப் போகிறதோ என்று பயந்து, அவள் அந்த ஆனந்தத்தை வெளியிடாமல் தன்னுள்ளேயே அடக்கிச் சிறை செய்ய முயன்றாள். அபூர்வமான பறவையொன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணியில் சிக்கிவிட்டால், ஒரு பறவை பிடிப்பவன் அது பறந்து போய்விடாமல் எப்படி பிடித்து அடைப்பானோ அந்த மாதிரி இருந்தது அவளது பரபரப்பு.
”சரி, நாம் சாப்பிடலாம், நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையே, பாஷா?” என்று பரபரப்போடு கேட்டாள் அவள்.
“இல்லை, நேற்று சிறையதிகாரி என்னை விடுதலை பண்ணப்போகும் செய்தியைச் சொன்னார், அதிலிருந்து எனக்குச் சாப்பாடும் செல்லவில்லை; தண்ணீர்கூட இறங்கவில்லை” என்றான் பாவெல்.
“சிறையை விட்டு வெளியே வந்ததும் முதன் முதல் நான் சந்தித்தது சிஸோவைத்தான்” என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான் பாவெல். “என்னைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுவதற்காக அவன் தெருவைக் கடந்து வந்தான். நான் அவனை எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவைத்தேன். இப்போதுதான் நான் ஒரு பயங்கர ஆசாமியாச்சே! அதிலும் போலீஸ் கண்காணிப்பிலுள்ள ஆசாமி.’ ‘சரி, அந்தக் கவலை வேண்டாம்’ என்றான் அவன். ‘அவனது மருமகனைப் பற்றி அவன் விசாரித்ததை நீ கேட்டிருக்க வேண்டும்.’ ‘பியோதர் ஒழுங்காக இருக்கிறான் அல்லவா?’ என்று கேட்டான். ‘சிறையில் எப்படியப்பா ஒழுங்காக இருப்பது?’ என்றேன் நான். ‘சரி, அவன் தன் தோழர்களுக்கு எதிராக ஏதாவது உளறிக் கொட்டுகிறானா?” என்று கேட்டான் சிஸோவ். பியோதர் ரொம்பவும் நல்லவன். யோக்கியன், புத்திசாலி என்று நான் சொன்னேன். உடனே அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ‘எங்கள் குடும்பத்தில் மோசமானவர்கள் பிறப்பதில்லை!” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டான்.
”அந்தக் கிழவனுக்கும் மூளை இருக்கிறது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல். “அவனோடு நான் எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். ரொம்ப நல்லவன். சரி, அவர்கள் பியோதரையும் சீக்கிரம் விடுதலை செய்யப் போகிறார்களா?”
“எல்லோரையுமே விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கிழட்டு இஸாய் சொல்லும் சாட்சியத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்தச் சாட்சியமும் கிடையாது. அவன்தான் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறான்?”
மகனின் மீது தன் பார்வையைச் செலுத்தியவாறே தாய் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள். அந்திரேய் தன்னிரு கைகளையும் பிடரியில் கோத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக நின்று பாவெல் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். பாவெல் அங்குமிங்கும் உலவினான். அவனுக்குத் தாடி அதிகம் வளர்ந்து போயிருந்தது. அழகான கருமயிர்ச் சுருள்கள் கன்னம் இரண்டிலும் சுருண்டு வளர்ந்து அவனது கரிய சருமத்தை இதப்படுத்திக் காண்பித்தன.
“உட்காருங்கள்” என்று சாப்பாட்டைக் கொண்டுவந்தவாறே சொன்னாள் தாய்.
சாப்பிடும்போது அந்திரேய் பாவெலிடம் ரீபினைப் பற்றிச் சொன்னான். அவன் பேசி முடித்ததும், பாவெல் வருத்தத்தோடு பதிலுரைத்தான்.
“நான் மட்டும் இங்கிருந்தால். அவனை நான் போகவிட்டிருக்கமாட்டேன். அவன் செல்லும்போது என்னத்தைக் கொண்டு போனான்? மனக்கசப்பையும் மனக் குழப்பத்தையும்தான் சுமந்து சென்றான்.”
”சரி, ஆனால் ஒரு மனிதன் நாற்பது வயதை எட்டிய பிறகு. அத்தனை காலமும் தன் இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக்கொண்டிருந்த பிறகு, அவனைச் சீர்திருத்தி வழிக்குக் கொண்டுவருவது என்ன, லேசுப்பட்ட காரியமா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.
அவர்கள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அந்த விவாதத்தில் வார்த்தைகள்தான் மலிந்திருந்தனவாகத் தோன்றியதே ஒழிய, அதிலிருந்து எந்த விஷயத்தையும் தாயால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை. சாப்பாடு முடிந்தது. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தடபுடலான வார்த்தையலங்காரத்தோடு வாதாடிக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில்தான் அவர்கள் தெளிவாகவும் எளிமையாகவும் பேசினார்கள்.
“நாம் நமது கொள்கையில் ஓரடி கூடப் பின்வாங்காது நிலைத்துநின்று முன்னேற வேண்டும்” என்று உறுதியோடு சொன்னான் பாவெல்.
“ஆமாம் நம்மையெல்லாம் தங்களது எதிரிகள் என்று கருதும் பல்லாயிரங்கோடி மக்களிடையே நாம் கண்மூடித்தனமாக முன்னேற வேண்டும். இல்லையா…?”
அவர்கள் விவாதித்துக்கொள்வதைக் கேட்ட தாய்க்கு, ஒன்று, மட்டும் புரிந்தது. விவசாய மக்களால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லையென்பது பாவெலின் கட்சி. எது உண்மை, எது நியாயம் என்பதை முஜீக்குகளுக்கும் கற்றுக்கொடுக்க முயலத்தான் வேண்டும் என்பது ஹஹோலின் கட்சி. அவளுக்கு அந்திரேயின் வாதம்தான் புரிந்தது. அவன்தான் உண்மையோடு ஒட்டி நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே, அவன் பாவெலிடம் பேசத் தொடங்கும்போதெல்லாம் அவள் ஆர்வத்தோடும் பாதுகாப்புணர்ச்சியோடும் அவன் பேச்சைக் கவனித்துக் கேட்டாள். ஹஹோலின் பேச்சு பாவெலைப் புண்படுத்திவிடவில்லை என்பதைத் தன் மகனது பதிலைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள முடியும் என்று கருதி, மகனது பதிலுக்காக மூச்சுக்கூட விடாமல் காத்திருந்து பார்த்தாள் தாய். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் விபரீதமாகவோ குற்றமாகவோ கருதாமல் காரசாரமாக இருவரும் கத்திக்கொண்டிருந்தார்கள்.
சமயங்களில் தாய் தன் மகனைப் பார்த்துச் சொல்லுவாள்:
“அப்படியா பாவெல்?”
அவனும் ஒரு சிறு புன்னகையோடு பதிலளிப்பான்:
“ஆமாம். அப்படித்தான்.”
“ஆஹா, என் அன்பே” என்று சிநேக பாவமான கிண்டலோடு பேசத் தொடங்கினான் ஹஹோல். “கனவானே, நீங்கள் வயிறு முட்டச் சாப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நன்றாக அசைபோட்டுத்தான் தின்னவில்லை. அதனால் தொண்டைக்குழியில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் அதைக் கழுவித் துடைத்துவிட்டு வருக.”
”என்னை அசடாக்கப் பார்க்காதே” என்றான் பாவெல்.
“விளையாட்டில்லை அப்பனே!”
தாய் சிரித்தவாறே, தலையை ஆட்டிக்கொண்டாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
கடவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி. கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது. வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை எங்களுக்கு அன்று இல்லை. காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.
ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம். வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை. சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.
ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. மீடியா ஓனர்கள் எங்களை பாதகமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?
ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது. ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு. எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…
எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது. பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.
ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல். சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன. போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.
அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது. மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம். ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.
இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல் பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள். இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன. ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால் தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன். ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் எங்கள் காலடியில் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.
சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம். இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள். ஏற்கனவே காதல் எனும் கருமத்தால் பல பெண்களை எங்கள் சமூகம் இழந்துகொண்டிருக்கிறது.
ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன. மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.
போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான். இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம். மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும். இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால் வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம். பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும். வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.
ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை பற்றி கேட்கையில், “எந்த ஏழு பேர் ?” என திருப்பிக் கேட்டார் ‘சூப்பர் ஸ்டார்’. பத்திரிக்கையாளர்கள் விளக்கிச் சொல்லியும், தனக்கு தெரியாது என அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஆனால் அவர் கேள்வியை உள்வாங்கி பதில் சொல்லவில்லை, என தானாக வந்து அவருக்கு வக்காளத்து வாங்குகிறார் தமிழிசை. எல்லாம் அடுத்த தேர்தல் கணக்கிற்காகத்தான். மக்கள் மீதான பற்றும் சமூகத்தைப் பற்றிய அறிவுமில்லாத ரஜினி இப்படிச் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த ஆச்சரியமில்லைக்குரிய மனிதர்தான் இங்கே அடுத்த முதல்வர் போஸ்ட்டிற்கு கியூ வரிசையில் ஊடகங்களின் உதவியோடு போட்டி போடுகிறார்.
ரஜினியின் மேற்கண்ட உளறல் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறோம். தான் அம்பலமான பிறகு போயஸ் தோட்டத்திற்கு ஊடகங்களை வரவைத்த ரஜினி தன்னுடைய உளறலின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார். அதாவது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் என்று கேட்காமல் பொதுவில் எழுவர் விடுதலை என்று கேட்டதால் தான் யார் அந்த எழுவர் என்று கேட்டாராம் ரஜினி.
ஆனால் ஊடகங்கள் தெளிவாக கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை என்பதே உண்மை. இன்றைக்கு அவர் ”பேரறிவாளனோடு தொலைபேசியில் பத்து நிமிடம் பேசியவன் இந்த ரஜினி” என்றெல்லாம் அனுதாப அலை தேட முயற்சிக்கிறார். இதற்கு முன்னர் அவர் இதை ஏன் சொல்லவில்லை? எல்லாம் பயம்தானே? பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, பத்து பேர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தால் யார் பலசாலி அந்த ஒருவனா, பத்து பேரா என்று பாஜகவை பச்சையாக ஆதரிக்கிறார் ரஜினி. இத்தகைய சந்தர்ப்பவாதியும் கோமாளியும் ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று செய்திகளில் இடம் பெறுவதே தமிழகத்தின் மாபெரும் அவமானம்!
*****
பா. ஜீவ சுந்தரி
ஏழு பேர் பெயர் சொல்லத் தெரியாதவரா அவர்?
அவ்வளவும் பின்னிருந்து ஆட்டுவிக்கும் அரசியல்…
அடுத்த படம் ஓடணும்னா வந்து சலாம் போட்டுத்தான் ஆகணும் கண்டக்டரே…
————-
Yuva Krishna
சென்ட்ரல் பக்கத்துலே பைக்குலே ஒருத்தன் யுவகிருஷ்ணா மாதிரியே போயிருக்கான். ஆட்டோவில் போன தெரிஞ்ச மேடம் ஒருத்தங்க அவனைப் பார்த்து சிரிக்க, அவன் உம்முன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிருக்கான். அந்த நேரத்துலே ஒரிஜினல் யுவகிருஷ்ணா பெருங்குடியில் இருந்தான். மேடம் போனை போட்டு, ‘என்னய்யா கோவம், முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போறே’ன்னு விசாரிக்க ஏகப்பட்ட குழப்பம். இதுமாதிரி ஏற்கனவே ரெண்டு, மூணு இன்சிடென்ட். ஆகையால் மக்களே! எனக்கு எவனோ டபுள் ஆக்டிங் இருக்கான். ‘ராஜாதிராஜா’ படத்து ரஜினி மாதிரி பிரச்சினை வந்தா நீங்கள்லாம்தான் சாட்சி சொல்லி தூக்குத்தண்டனையில் இருந்துக் காப்பாத்தணும்.
————-
Bala G
எந்த ஏழுபேர் என்று கேட்கும் ரஜினி அவர்களே..
தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.
————-
Abdul Hameed Sheik Mohamed
நடிகர்கள் நாடாள வந்தால்
………………………………………
கடந்த 100 வருடங்களாக தமிழகத்தில் டீகடையிலும் சலூனிலும் பேசிப்பேசி வளர்ந்தது தமிழக அரசியல். ஹிந்து பேப்பரிலிருந்து தந்தி பேப்பர் வரை எல்லா மட்ட தமிழர்களும் நாட்டு நடப்போடு பிணைக்கப்பட்டிருந்த மாநிலம் இது. ஐந்தாம் வகுப்புப் படித்த ஒரு ஆட்டோகாரரிடம் பேச்சுக்கொடுத்தால் நாட்டு நடப்புகளை அலசித் தீர்த்துவிடுவார்.
ஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.
ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.
ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.
இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்
இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.
————-
Parimala Rajan
“யார் அந்த 7 பேர்?” என்று கேட்ட கோமாளி கிறுக்கன் ரஜினிகாந்தை தொலைத்துக்கட்ட வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமை
அவன் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட குப்பை எந்திரன் 2.0 எனும் திரைப்படத்தை குப்பைத்தொட்டிக்கு அனுப்புவோம். திரையரங்குகளில் அந்தப் படத்தை பார்க்காமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் பாஜகவின் மறைமுக கைக்கூலி கிறுக்கனை
ஒழித்துக்கட்டுவோம்.
————-
Manikandan Rajendiran
ரஜினியின் சமிப கால பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி பதற்றதினால் அறியாமையால் அப்படி பேட்டி கொடுப்பதாக என்னால் எடுத்து கொள்ள இயலவில்லை… ரஜினி தனக்கு தெரிந்தே திட்டமிட்டு அப்படியான பேட்டிகளை கொடுப்பதாக நினைக்கிறேன்…
ரஜினியின் சமிபத்திய ஜீ தமிழ் டிவி பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் ரஜினி எவ்வளவு கூர்மையாக தன்னுடைய நினைவுகளை வெளிபடுத்தகூடியவர் என்று 40 வருடங்களுக்கு பிறகு பைரவி படத்தை நினைவு கூறுகிறார்.. கமலை பார்த்து வியந்த நொடிகளை நினைவுபடுத்துகிறார்.. அபுர்வராகங்கள் படத்தில் வரும் கேட்டை பற்றி துல்லியமாக பேசுகிறார்… ஆனால் இந்தியாவையே உலுக்கிய ராஜீவ் கொலை சம்மந்தமான குற்றவாளிகள் 7 பேரை பற்றி கேட்டால் யார் அவர்கள் என்கிறார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பாக இருக்கும்போது படுகொலை செய்யபட்டவர்களுக்கு எதிராக கருத்தை முன்வைக்கிறார்…
அதாவது பெரும்பான்மை மக்களின் உணர்வுளுக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.. ரஜினி ஏன் இப்படியான கருத்தை முன்வைக்க வேண்டும் ? அதனால் அவருக்கு என்ன பயன்?
ஜெ என்ற நடிகை அரசியல்வாதியாகி நாட்டை கெடுத்ததுபோதும் நாமும் அந்த வரிசையில் சேர வேண்டாமென நினைக்கலாம்..
ரஜினிக்கு உண்மையாகவே அரசியலுக்கு வர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி மக்களுக்கு எதிரான கருத்தை முன்வைப்பதால் மக்களால் வெறுக்கபடும்/வெறுக்கபட்ட ஒருவராக தன்னை கட்டமைத்து தன்னை அரசியலுக்கு தள்ள நினைப்பவர்களுக்கு(பாஜக) நான் இதற்கு சரிபட்டு வரமாட்டேன் என்பதை மறைமுகமாக உணரத்தலாம்…
ஆனால் அழுத்தம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள் அல்லவா… அவர்களை சமாளிப்பதற்காக இதோ கட்சியை கட்டமைக்கிறேன் உறுப்பினர்கள் சேர்க்கிறேன் கொடியை அறிமுகபடுத்தபோகிறேன் என்று சப்ப காரணத்தை தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், சத்தியநாராயண போன்றவர்கள் மூலமாக சொல்லி கொண்டே இருக்கிறார்/இருப்பார்..
இவைகளுக்கு எல்லாம் எப்போது தெளிவான விளக்கம் கிடைக்கும்? வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இப்படியான உள்ளே-வெளியே விளையாட்டுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கமாட்டார்.. எனவே ஆதரவும் யாருக்கும் இல்லை..
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அப்போது வேறுவழி இல்லாமல் ரஜினி அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும்.. ஆனால் அதற்குள்ளாக அவரின் மொத்த இமெஜூம் சிதைந்து மக்களுக்கு எதிரான ஒருவராக இருப்பார்.. so பாஜகவே ரஜினியோடு சேர்வது தன் 3% ஓட்டுக்கு பங்கம்வந்துவிடும் என்று ரஜினியை புறம் தள்ளிவிடும்..
ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை தாம் அமைதியை விரும்புகிறேன் ஆன்மிகத்தை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இமயமலையில் உள்ள தன்னுடைய ஆசரமத்திற்கு சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவார்..
ஆனால் எம்ஜிஆரை மிரட்டி அதிமுகவை காங்கிரஸ் தொடங்கவைத்தது போல ரஜினியையும் மிரட்டி கட்சி தொடங்க காங்கிரஸ் கட்டாயபடுத்தினால் இன்று ஏழு பேரை யார் என்று கேட்டதுபோல நாளை ஏழு கோடி தமிழர்களையும் நீங்கள் யாரென்று கேட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார்…
————-
Saravanakarthikeyan Chinnadurai
கமல் கிட்ட கேட்ருந்தா மக்களைப் பார்த்து கை காட்டி இருப்பார்:
“அவுங்க தீர்மானிப்பாங்க அந்த ஏழு பேரை என்ன பண்றதுன்னு. ஏன்னா ஏழு பேரா எட்டுப் பேரான்னு தீர்மானம் பண்ணினது அவுங்க தான். இதுக்கும் பதில் சொல்ற கெட்டிக்காரங்க அவுங்க.” இங்க ஒரு pause. மக்கள் கைதட்டல். லவ் லெட்டர் கொடுத்த அந்நியன் அம்பி மாதிரி முகத்தை வெச்சிட்டு அப்புறம் தொடர்வார்: “நான் அவுங்க சொல்றதச் செய்யற பிரதிநிதி தான். சிவாஜி, பாலச்சந்தர்னு எனக்குக் கிடைச்ச குருநாதர்கள் இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.”
————-
Mukunthan Ramasamy
என்னது ராஜிவ் காந்தி செத்துட்டாரா??? 😢
எவன்ட போயி எத கேக்குறதுன்னு தெரியாத வெக்கங்கெட்டவனுங்க..😡😡
————-
Joe Milton
அந்த ஏழு பேர் ?
ரஜினி : எந்த ஏழு பேர் ?
கமல் : ஏழு ஸ்வரங்கள் , ஏழு அதிசயங்கள் , வாரத்தின் ஏழு நாட்கள் என ஏழு என்பதில் எல்லாமே அடக்கம் . அந்த ஏழு பேரில் நானும் உண்டு , நீங்களும் உண்டு . உங்களிலிருந்து தான் அந்த ஏழு பேர் உருவாகிறார்கள் என்பதை உணரும் போது ..
அடங்கப்பா !
————-
Thiru Yo
ரஜினிகாந்த் யார்? கட்சியெல்லாம் துவங்க போவதா இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா. #ரஜினிக்கு_தெரியாது #நான்தான்ரஜினிகாந்த்
————-
Bala Vellore
ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல..
மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”
அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…
அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..
இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்
அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை..உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது…நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..
வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..
————-
ம.கு வைகறை
“எந்த ஏழு பேர்?” என்று கேட்ட மாத்திரத்திலேயே மைக்க வைச்சு மண்டையில நங்குன்னு… #Rajini_voice
————-
Pavithra Baskaran
இப்போவெல்லாம் தமிழ் சினிமால வடிவேலு இல்லாத குறையை
ரஜனி, ராதாரவி, டுமிழிசை, எச்ச ராஜா தீர்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கு
————-
————-
Thiru Yo
பெரிய அறிவாளின்னு நினைக்குமாம்… கீறல் விழுந்த ஒலித்தட்டு…
————-
ஆனந்த்குமார் சித்தன்
7 பேர் யாருங்க..
தெரியாது.. இனிமேல் தான் பாக்கணும்..
சாவர்க்கர் யாருங்க..
அந்த மாதிரி மகான்கள் வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை..
————-
Arul Ezhilan
அந்த எழுவர்!
அவர்கள் யார் என்று உலகிற்கு தெரியும். ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பிடப்பட்ட 26 பேர் தொடர்பாகவும் இறுதியில் தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்ட எழுவர் தொடர்பாக உலகம் அறிந்திருக்கிறது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தலையங்கங்களை ஊடகங்கள் எழுதியுள்ளது. உலகின் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார்கள். கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இந்த வழக்கில் பங்குபற்றிய நீதிபதிகளும், விசாரணை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களுமாக கால் நூற்றாண்டுகாலம் இந்த விவாதம் இங்கு நடந்து. இவர்கள் அப்பாவிகள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின்னர் அமைதி நிலவுகிறது.
தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.
அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.
அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான் காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.
உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!
ஏழு பேர் யார் எனத் தெரியாமல் இருப்பது பெருங்குற்றம் அல்ல. தமிழ் நாட்டில் 90% பேருக்குத் தெரியாது. அதில் ஒருவராக ரஜினி இருந்து விட்டுப் போவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படியான ஒருவர் அரசியலில் இறங்க விரும்புவது தான் பிரச்சனை. அவர் மீது பரிதாபம் தான் எஞ்சுகிறது.
ரஜினி மீது கொஞ்சமேனும் இரக்கம் கொண்ட எவரேனும் அவரைச் சுற்றி இருப்பார்கள் எனில் உயிரைக் கொடுத்தேனும் அவர் அரசியலுக்கு வருவதைத் தடுப்பார்கள். அல்லது பணம், பதவி என அவரைப் பிய்த்துத் தின்னும் கூட்டம் தான் சுற்றி இருக்கிறதெனில் அவர் இதை விடக் கேடுகெட்ட அவமானங்களைச் சந்திப்பதைத் தடுத்து நிறுத்தவே முடியாது.
பாசிஸ்டுகள் எப்போதும் பொய்யை அடிப்படையாகக் கொண்டே அரசியல் செய்கின்றனர். “எத்தனை பெரிய பொய்யை வேண்டுமானாலும் சொல்லுங்கள், திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்… ஒரு கட்டத்தில் மக்கள் அதனை உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டால், நீங்களே அதனைப் பொய் என்று சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்” என்பதுதான் கோயபல்ஸின் பிரச்சாரங்களுக்கு அடிப்படை.
அவரின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை நரேந்திர மோடிஜியும் அருண் ஜெட்லிஜியும் நிரூபித்து வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரம் குறித்து இவர்கள் இருவரும் வாய் திறந்தாலே வெறும் பொய்யாக வந்து விழுகிறது.
நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவிதம் சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் மீது ஏவப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய நடவடிக்கைகளின் காரணமாக நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக அடித்துவிடுகிறார்கள்.
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.
வாங்கிய கடனைக் கட்ட வழியில்லாத விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், உற்பத்திப் பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைக் கேட்டும், இராஜஸ்தான், மராட்டியம், தில்லி என நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இனி விவசாயத்தை நம்பியிருந்தால் வாழவேமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என நகரங்களை நோக்கி வருகின்றனர். நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.
இவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக அமைப்புச்சாரா தொழிற்துறையில் வேலைசெய்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் தினக்கூலிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. அதாவது 15 கோடிப் பேர் தினக் கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. கூலியும் நிலையானதாக இருக்காது.
அமைப்புச் சாரா தொழிற்துறைகளில் மட்டுமல்ல, அமைப்புசார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் உண்டா என்றால் அதுவும் கிடையாது. தொழிற்சாலைகளில் கான்டிராக்ட் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, இன்று மூன்றில் ஒரு பங்கு தொழிளாளர்கள் கான்டிராக்ட் முறையில் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.
இதுபோதாதென்று, தொழிலாளர் நலச் சட்டங்களை தொடர்ந்து திருத்தி வரும் மோடி அரசு, நிலையான கால ஒப்பந்தம் (பிக்ஸ்ட் டெர்ம் கான்டிராக்ட்), நீம் போன்ற புதிய முறைகளைக் கொண்டுவருவதன் மூலம் கான்டிராக்ட் முறையை விட மோசமான சுரண்டலைப் புகுத்த வழிசெய்துள்ளது.
விவசாயம் சாராத தொழிற்துறைகளில் 93 சதவிதம் பேருக்கு சிறுதொழில்கள்தான் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. 2016-ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் நாடு முழுவதும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 2017-18 காலகட்டத்தில் சுமார் ஐம்பதாயிரம் சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவுகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிவிதிப்பைப் பல மடங்கு அதிகரித்ததால், இன்று பெட்ரோலின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, குட்டி யானை எனக் கூறப்படும் மினி லாரி, வேன்கள் போன்றவற்றை வைத்து வாழ்க்கை நடத்தும் “சிறு உடைமையாளர்களின்” வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. இதனைச் சமாளிக்க அவர்கள் தங்களது வேலை நேரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர் அல்லது தொழிலையே விட்டுவிட்டு வேறு வேலை தேடி ஓடுகின்றனர்.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்துப் பல ஆய்வு முடிவுகளும், புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன. மத்திய ரிசர்வ் வங்கியினால் நடத்தப்படும் KLEMS இந்தியா டேட்டாபேஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி, 2015-16 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு 1% அளவிற்கு குறைந்துள்ளது. இதே போன்று “இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்” என்ற அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவித அளவிற்கு உயர்ந்திருந்தாலும், வேலைவாய்ப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2018-19-ஆம் ஆண்டில் 1% என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. 2017 ஆகஸ்டு மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2018 ஆகஸ்டு மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் ஆணையத்தின் ஆய்வுப்படியே 2016-17 காலகட்டத்தில் 5.56 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
படித்தவர்கள், படிக்காதவர்கள், திறன் உள்ளவர்கள், திறனற்ற தொழிலாளர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லாத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் திண்டாடிவருவதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்தோஷ் மெக்ரோத்ரா கூறுகிறார். பொறியியல் உள்ளிட்ட தொழிற்துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களிடையேதான் மிக அதிக பட்சமாக 11% அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக அவர் கூறுகிறார்.
பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் முக்கிய பங்குவகித்த ஐ.டி.. துறையிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாவது 85 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன.
இவ்வாறு வேலைவாய்ப்பு குறித்து வரும் எல்லா ஆய்வுகளும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதையும் குறைந்த கூலிக்குக் கிடைத்த வேலையைப் பார்ப்பதும் (under employment) அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர் ஆணையம், தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு ஆகிய அரசு நிறுவனங்களின் ஆய்வுகள்கூடத் தங்களுக்கெதிராக இருப்பதால், 2017-க்குப் பிறகு இத்தகைய ஆய்வுகள் அனைத்தையும் நிறுத்தும்படி நிதி ஆயோக் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடியும், அருண் ஜெட்லியும் என்ன கூறுகிறார்களோ அதுதான் ஆய்வுமுடிவுகள் என ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.
மோடியோ நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதற்குச் சான்றாகத் தொழிலாளர் சேமநல நிதியத்தில் (EPF) 2017-18 காலகட்டத்தில் 45 இலட்சம் பேர் புதிதாகச் சேர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். சிறு, குறு தொழில்நிறுவனங்களிடம் சேம நல நிதியத்தில் சேர்ந்தால், நிறுவனங்களின் பங்கை அரசே கட்டிவிடும் எனச் சலுகை கொடுத்து, அவர்களைக் கணக்கு தொடங்கவைத்து அதையே வேலைவாய்ப்பு அதிகரிப்பு எனக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார். பட்டதாரிகள் பக்கோடா கடைபோட்டு பிழைத்துக் கொள்ளலாம் எனக் கூறும் “பனியா” பிரதமரிடமிருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.
மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!
வெப்ப மண்டல நாடான இந்தியாவின் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பது இயல்பு. எனினும் ஒவ்வொரு கோடையிலும் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று பேசுவது மக்கள் வழக்கம். இதற்கு சூழலியல் காரணம் இருந்தாலும் கடினமாகி வரும் வாழ்க்கைச் சூழலால் மக்கள் வெயிலை எதிர்கொள்ள முடிவதில்லை. தீபாவளியும் கூட இனி ” முன்ன மாதிரி இல்லை” எனும் வழக்கில் இடம் பெற்று விட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, எரிபொருள் விலை உயர்வு என மும்முனைத் தாக்குதலில் தீபாவளி கொண்டாட்டமும் தப்பவில்லை.
தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கைத் தவிர பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது. பண்டிகை நாட்களும் வழக்கமான நாட்களைப் போன்று கடந்து செல்லும் நாட்களாகி உள்ளன.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வினர் என்னதான் இந்து, இந்து ராஷ்டிரம், பாரதக் கலாச்சாரம் பேசினாலும், “பொருளாதார நெருக்கடிகள்” பண்டிகை கலாச்சாரத்தை நொறுக்கி வருவது உண்மை. தீபாவளி அன்று, சென்னையில் வசிக்கும் மக்களிடம் “இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.
பவளவண்ணன், பட்டாசு விற்பனையாளர்.
நீதிமன்ற தீர்ப்பால் தொழில் பாதிப்படைந்துள்ளது உணமைதான். ஆனால் இந்த தீர்ப்பு நாட்டிற்கு நல்லது என்ற அடிப்படையில் வரவேற்கிறோம். சென்ற ஆண்டு 1 மணிக்கெல்லாம் பட்டாசு காலி ஆகிவிட்டது. இந்த ஆண்டு விற்பனையாகவில்லை. பொதுவாக பண்டிகை காலம்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனை மனதில் வைத்துக்கொண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். சில இயற்கை ஆர்வலர்கள் சொல்வதைக் கொண்டு தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதுதான் விற்பனை தொய்வு ஏற்பட்டதற்கு காரணம்.
என்னுடைய ரெகுலர் கஸ்டமர் ஒருவர், ரூ.40,000-க்கு பட்டாசு வாங்குவார். இந்த ஆண்டு ஐந்தாயிரத்துக்கு மட்டுமே வாங்கினார். கேட்டால் “இரண்டு மணி நேரத்தில் இதுமட்டும்தான் வெடிக்க முடியும்” என்கிறார்.
லோகேஷ், தீபக், தனுஷ், சுப்பிரமணி – +2 மாணவர்கள்
போன வருஷம் முழுக்க முழுக்க பட்டாசுதான். இந்த வருஷம் ஒன்லி படம்தான். இப்ப சர்கார் பார்த்துட்டு வர்றோம். ஒரு ஆளுக்கு டிக்கெட் 300 ரூபா. இந்த வருஷம் துணி எடுக்கவும், படத்துக்கு பணம் புரட்டவுமே பெரும்பாடு பட்டோம். வீட்டுல காசு கேட்டா கஸ்டமா இருக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டாங்க.. இருந்தாலும் போராடி ஒவ்வொருத்தரும் 1500 ரூபாய் வாங்கினோம். அதுல ஒரு ஆளுக்கு ட்ரெஸ்ஸு 1100 ரூபா. 300 ரூபா படம்… வந்து போறதுக்கு 100 ரூபா.
”எங்க அம்மா ஜூனியர் ஆர்டிஸ்ட்… ஷூட்டிங் போனாதான் காசு. இப்ப வேலையே இல்ல. இந்த நெலைமையில எப்படி செலவு பண்ண முடியும். ஒவ்வொரு வருஷமும் நெலம மாறிக்கிட்டே இருக்கு. போன வருஷம் மாதிரி இப்ப இல்லை” என்கிறார் லோகேஷ்.
அண்ணாமலை, ஆட்டோ ஓட்டுநர் – வடபழனி.
எங்க சார்… கஷ்டமா இருக்கு. எவ்ளோதான் ஓட்டினாலும் ஒரு நிமிஷம் வீட்டுல உக்காந்து சந்தோஷமா இருக்க முடியல. ஆட்டோ ஓட்டினாதான் வீட்டுக்கு போகும்போது எதையாவது வாங்கிட்டு போக முடியும். பண்டிகையின்னா எதையாவது பண்ணியாகணும்னு இருக்கு. காசு இல்லன்னு பசங்கள சும்மா விட்டுட முடியுமா?
இந்த வருஷம் கடன் வாங்கிதான் செலவு பண்ணியிருக்கேன். போன வருஷம் 4,800 ரூபா செலவு பண்ணேன். இந்த வருஷம் 2,000 ரூபாயில பசங்களுக்கு மட்டும் சிம்பிளா துணி எடுத்தேன். போகும்போது கொஞ்சமா பட்டாசு வாங்கிட்டு போகணும்.
திருப்பதி – பழைய புத்தக விற்பனையாளர்.
“எந்த வருமானமும் இல்லை சார். எப்பவாது புத்தகம் விற்பனையாகும். அதுவும் அய்யர் வீட்டு பெண்கள்தான் வாங்குவாங்க. அதை எந்த செலவும் செய்யாம தேவை வரும்போது எடுத்து செலவு பார்த்துப்பேன். ஒருநாளைக்கு 200, 300 ரூபாய் வருமானம் வரும். அதுல தினமும் 70 ரூபாய் பெட்ரோல் போட்டுடுவேன். தினமணி பேப்பர் வாங்குவேன். இவ்ளோதான் செலவு. பசங்கள அரசுப் பள்ளியில சேர்த்திருக்கேன். சொந்த வீடு இருக்கு. அதனால சமாளிக்க முடியுது சார்.
பசங்களுக்கு துணி, பட்டாசு எதுவும் எடுத்து தரலை. கூடுதலா கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதிச்சதால சவுரியமா போச்சி. அதனால செலவு இல்லை. உங்களைப் போன்ற இளைஞர்கள் எப்போ புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைவிட்டார்களோ அப்போதே தொழில் முடிஞ்சு போச்சு. வேறு தொழில் தெரியாதுன்றாதல இதுலயே உழல வேண்டி இருக்கிறது. என்னோட பையன் துப்பாக்கி சுடும் போட்டியில முதல் இடத்துல இருக்கான். ஆனா அவனுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவைக் கூட வாங்கிதர முடியவில்லை” என்கிறார் கவலையோடு.
சுப்பிரமணி- ஆட்டோ ஓட்டுநர்.
இப்ப இதகேட்டு இன்னா ஆவப்போவுது… சொல்லுங்க? சர்க்கார் படத்துக்கு போவணும். பாக்கெட்ல 200 ரூபா இருக்கு. இன்னும் 50 ரூபா சவாரி கெடச்சா படத்துக்கு போயிடலாம். அதுக்கு தான் அலஞ்சிகிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு 500 கெடச்சாலே பெரிய விசயமா கீது… ஓலா வந்த பிறகு 200 ரூபா கூட கெடக்க மாட்டேன்’து. டீசல் வெலை எல்லாம் ஏறிடுச்சி. நாங்க எக்ஸ்ட்ரா சார்ஜ் கேட்டா மக்கள் மொறைக்கிறாங்க. அதனால நம்ம ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கினாதான் வாழ முடியுது…!
மூர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்.
மாசம் பதிமூனாயிரம் சம்பளம் வாங்குறேன்… இதுல எப்படி பட்ஜெட் போட்டு வாழ முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆட்டோகார் 5 ரூபா ஏத்திக் கேட்டா தர்லன்னு சொன்னாரு. அது அவரோட நெலமை. அதை தர முடியாத நெலமதான் எங்களுக்கு இருக்கு. பார்க்க சின்ன பொருளா இருக்கும்.. ஆசையா வாங்கலாம்னு விலைய கெட்டா அதிர்ச்சியா இருக்கு… அமைதியா திரும்பி வந்துடுறோம். இதான் நெலமை. கம்பனியில ஐந்தாயிரம் போனஸ் கொடுத்தாங்க… அப்படியே வீட்டுல கொடுத்துட்டேன். அதை வச்சி அவங்க என்ன பண்ணாலும் இனி அவங்க பாடுதான். அதுக்கு மேல என்ன பண்ண முடியும்?
பூமிநாதன், கரும்பு ஜுஸ் கடை.
சொந்த ஊரு ராமநாதபுரம்.. சின்ன வயசுல இங்க வந்துட்டேன். ஊர் திருவிழா தவிர வேற எந்த பண்டிகையும் கொண்டாடுறதே இல்ல. குறைந்தது 15,000 ரூபா இருந்தாதான் குடும்பத்தோட ஊருக்கு போக முடியும். அதுக்கேத்த வருமானமும் இல்ல.
வெய்யில் காலமா இருந்தாலும் பரவாயில்ல… சம்பாதிச்சிடுவேன். இது மழைக்காலம். தினமும் 500 ரூபா தான் வருது. இந்த மிஷினுக்கு தினமும் 250 ரூபாய்க்கு டீசல் போட்டுடுறேன். ரெண்டு பேருக்கு டீ 60 ரூபா செலவாகிடுது. மிச்ச பணத்த வச்சி என்ன பண்றது? எனக்கு ஒரே பையந்தான். அவனுக்கே எதுவும் எடுத்து தரல. பட்டாசும் வாங்கல. கறி சோறுகூட சாப்பிட முடியல. மூணு வேளையும் சோறுதான்.
விஜய்- வங்கி ஊழியர், சுகைன் – சுய தொழில் செய்பவர்.
விஜய் – சுகைன்
“இன்னைக்கு இருக்க கூடிய கடும் நெருக்கடியில அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். மளிகை, காய்கறி, பால் இதுக்கே வாங்குற சம்பளத்துல துண்டு விழுது. அப்படி இருக்கும்போது விழாவை எப்படி சமாளிக்க முடியும்? போனஸ் கொடுத்தா சமாளிக்கலாம்.
ஏற்கனவே பல பண்டிகை காணாமல் போயிடுச்சி. இதனையும் விட்டுட்டோம்னா மகிழ்ச்சியே இல்லாம போயிடும். டென்சனா இருந்தா அதை மறக்க இந்த பண்டிகை பயன்படுது. அதே சமயம்.. பணம் பற்றாக்குறையா வரும்போது பிரச்சனையாயிடுது” என்கிறார் விஜய்.
சுகைன்
இது தீபாவளி மாதிரி தெரியவில்லை. மூனு வருசத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு முதல்நாளே அமர்களமாகிடும். இப்ப அந்தமாதிரி இல்ல. கடந்த மூனு வருஷமா எல்லாத்தையும் இழந்துட்டோம். இந்த அரசாங்கத்தால எந்த பலனும் இல்ல. எல்லாம் கார்ப்பரேட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் தருது.. இதை கேட்க பப்ளிக் லீடர்சும் இல்லை. என்ன சொல்றது.. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல.
ரமேஷ், அரசு கார் ஓட்டுநர்.
ரமேஷ் (வலது)
இந்த ஆண்டு அர்ரியர்ஸ் போட்டுட்டாங்க. மொத்தம் நாற்பதாயிரம் வந்ததால பிரச்சினை இல்ல. இல்லனா வீட்டுல இருக்க பொருட்களை கொண்டு போயிட்டு அடமானம் வச்சிருக்கணும். அதுவும், இல்லையா… எங்க அய்யாகிட்டதான் (நீதிபதி) வாங்கியிருப்பேன். காசு வந்ததும் வீட்டுல எல்லாரும் கெளம்பி காஞ்சிபுரம் போயிட்டாங்க. ரூ.30,000-க்கு துணி எடுத்துட்டாங்க… 5,500-க்கு பட்டாசு வாங்கிருக்காங்க. அதனால போன வருஷம் மாதிரி எனக்கு இந்த வருஷம் இல்ல.
நடராஜன், பழைய புத்தக விற்பனையாளர்.
“மக்கள் கிட்ட பணப்புழக்கம் சுத்தமா இல்ல. அப்புறம் எப்படி தீபாவளி கொண்டாட முடியும். ரமணிச்சந்திரன் புத்தகம் பெண்கள் வாங்குவாங்க, ராஜேஸ்குமார் நாவல் ஆண்கள் வாங்குவாங்க. பழைய புத்தகம் என்பதால 10 ரூபாய்க்கு கொடுப்பேன். அவங்க படிச்சிட்டு வந்து திருப்பி தருவதாக இருந்தால் 5 ரூபாய் வாங்கிப்பேன். இதுக்கே யாரும் வரது இல்ல.” என்கிறார் விரக்தியாக!
அண்ணாமலை – மூர்த்தி, கோயம்பேடு வாகன டோக்கன் போடுபவர்கள்.
அண்ணாமலை – மூர்த்தி
வீட்டில் இருந்தால் செலவுன்னுதான் இந்தப் பக்கம் வந்துவிட்டோம். ஓனர் ரூ.1000 போனஸா கொடுத்தார். அதைத்தான் வீட்டில் கொடுத்தோம். அதையும் பசங்க சினிமாவுக்கு போறேன்னு புடுங்கிட்டு போயிட்டானுங்க. இன்னா பண்றது? இந்த வருஷமே இப்படின்னா… இன்னும் வர வருஷம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல.
ஜமால், துணி வியாபாரம்.
”தம்பி, நான் முசுலீம். இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்லுறேன். இருபது வருஷமா இந்த வியாபரம் செய்யுறேன். சரியா ஒரு வாரத்துக்கு நல்ல சேல்ஸ் இருக்கும். இந்த முறை ஞாயித்துக்கிழமை மட்டும்தான் போச்சி. இன்னைக்கு காலையில இருந்து ஒன்னும் ஓடல. அதான் மூட்டை கட்டிடலாம்னு இருக்கேன்.”
இப்படியாக பார்க்குமிடமெல்லாம் தீபாவளி ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு பெரும் சோகத்தையே அளித்துள்ளது. பண்டிகை என்பதால் குடும்பதினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரவேண்டும் என்பதே அந்தக் கவலையின் குவி மையம். அரசு, தனியார் நிறுவனங்களில் ஓரளவு நல்ல மாத சம்பளம் வாங்குவோரைத் தவிர இதர பிரிவினர் அனைவருக்கும் தீபாவளி மகிழ்ச்சியாக இல்லை. இம்மக்கள்தான் பெரும்பான்மையினர். அங்காடிகளின் தள்ளுபடி விற்பனைகள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஊடகங்களின் கொண்டாட்டங்களைத் தாண்டி உண்மையான தீபாவளியின் யதார்த்தம் இதுதான்.