Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 764

மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!

2
பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

வாங்கும் சக்தியுள்ள நடுத்தர வர்க்கம் கணிசமாக இருக்கும் இந்தியாவின் பாக்கெட்டை ஆட்டையை போட இந்தியாவுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும் பிராண்டுகளின் வரிசையில் லேட்டஸ்ட் நுழைவுதான் “பிளேபாய்”!

பிளேபாய் என்றவுடன் ஏதோ விளையாடும் பொம்மைகள் பற்றியது என்று நினைத்து விடாதீர்கள். அது ஊதாரித்தனமாக பெண், போதை என கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ‘மைனர் குஞ்சு’களை குறிப்பது. இவர்களை குறிவைத்து பிரத்யோகமாக அமெரிக்காவில் துவங்கப்பட்டவை தான் வரலாற்றுப் புகழ்பெற்ற ‘பிளேபாய்’ புத்தகம், இரவு விடுதிகள், ஓய்வகங்கள் மற்றும் பிராண்ட் பொருட்கள்.

பாலுணர்வுத் தூண்டல், பெண்களின் அரை – முழு நிர்வாண படங்கள் போன்ற பின்னடித்து பாக்கெட்டில் தொங்கவிடப்படும் ஆண்களுக்கான பிரத்தியேகமான மூன்றாம்தர பத்திரிக்கையான பிளேபாய்  1953 முதல் இன்றும் மவுசு குறையாமல் தடை செய்யப்பட்ட சில நாடுகளைத் தவிர உலகத்தின் பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பிளேபாய் பத்திரிகை தடை செய்யப்பட்டிருந்தாலும், அன்னிய முதலீட்டிற்காக நாட்டை ஹோல்சேலில் விற்பனை செய்யும் அரசும், முதலாளிகளும், நிழலை விடுத்து நிஜத்தை அரங்கேற்ற தயாராகியிருக்கின்றனர்.

மனிதகுலத்துக்கான தனது 52 வருட ‘பணி’யில் உலகம் முழுவதிலும் 44 இரவு விடுதிகளை நடத்தும் பிளேபாயை இந்தியாவில் சந்தைப்படுத்த ‘பிளேபாய் லைஃப் ஸ்டைல்’ என்ற மும்பை நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் பிளேபாய் கிளப் கோவாவின் காண்டோலிம் கடற்கரையில் 22,000 சதுர அடி பரப்பளவில் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘அது உலக அளவில் பிளேபாயின் முதல் கடற்கரை கிளப்பாக விளங்கும்’ என்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட நைட் கிளப்புகளையும், உணவு விடுதிகளையும், சில்லறை விற்பனைக் கடைகளையும் தொடங்குவதாக இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிளேபாய் கடைகள் டாஸ்மாக் பார்களை போல மட்டுமின்றி “பிளேபாய் பந்நி (முயல் குட்டி)” என்ற பெயரில் கவர்ச்சியுடையில் மேசைப் பணிப்பெண்களை வைத்து நடத்தப்படுகின்றன. அதற்காக வேலைக்கு அமர்த்தப்படும் பெண்கள் பெயருக்கேற்றபடி பணக்கார பொறுக்கிகளின் விளையாட்டுப் பொம்மைகளாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

இந்த பிளே பந்நிகளுக்கான கவர்ச்சி உடை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘கோர்செட்’’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உள்ளாடை வகையை சாட்டின் போன்ற பளபளக்கும் துணியில் வெளியாடையாக அணிந்துகொண்டு, நெட் துணியால் ஆன காலுறை,  சாட்டினால் செய்யப்பட்ட முயலைப்போல நீண்ட  காதுகள், பின்புறத்தில் முயலுக்கு இருப்பதைப்போல பருத்தி வால், கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு உடுத்தி, பெயர் அட்டையை இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு அரை நிர்வாண கோலத்தில் வலம் வர வேண்டும். இந்தச் சீருடை மட்டும் $10,000 (சுமார் ரூ 5 லட்சம்) அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.

விடுதிக்கு வரும் மேட்டுக் குடி ஆண்களுக்கு மது பரிமாறும் வேலையைச் செய்வது இந்த பெண்களின் கடமை. கதவைத் திறந்து விடுவதிலிருந்து, சிகரெட் பற்ற வைப்பது, ஒவ்வொருவரின் தேவை அறிந்து சேவைகளை செய்வது, நடன கூட்டாளியாக இருப்பது போன்ற பணிகளையும் இந்தப் பணிப்பெண்கள் செய்வார்கள். தவிர பார்ம் ஹவுஸ்களில் நடக்கும் பிரைவேட் பார்ட்டிகளுக்கும் சென்று சேவை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும், இவர்களை மேய்ப்பதற்காகவே பந்நி அன்னை என்பவர் தலைமை வகிப்பார். அவர் வேலை நேரங்களை ஒழுங்கு செய்வது, பணிக்கு அமர்த்துவது, பணிநீக்கம் செய்வது, பயிற்சி தருவது போன்றவற்றை கையாளுவார். ‘முதலாளித்துவ ஒழுக்கத்தில் அதெல்லாம் கறாராக இருக்கும்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அழகு, இனிய குரல், மற்றும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற குணங்கள்தான் இங்கு முக்கியம். இவர்கள் எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும் மேனேஜர் தினமும் வேலைக்கு வரும் பணிப்பெண்களின் எடையை நிறுத்துப் பார்க்கவேண்டும். எடை குறைவு அல்லது ஏற்றம் இரண்டும் கம்பெனியின் வரையறையை மீறினால் அவர்கள் உடனே வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்.

இப்படியாக, பளபளக்கும் விளக்குகள் மாட்டி, ஊழியர்களுக்கு சிறப்பான சீருடை அணிவித்து, பல மடங்கு விலையில் உணவுப் பொருட்களை விற்கும் மெக்டொனால்டு-கே.எப்.சி போன்ற உணவகங்களைப் போல “பிளேபாய்” என்ற பிராண்டுக்கும் தனித்துவம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஏற்கனவே பெரு நகரங்களில் உரிமமில்லாத இரவு விடுதிகள் பல போலீஸ் அதிகாரிகளின் ‘ஸ்பெஷல்’ கவனிப்பில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இதில் என்ன பெரிய அதிசயம்’ என்று நீங்கள் நினைக்கக் கூடும். எலியைப்பிடிக்க மசால் வடையை வைப்பது போல இந்திய ‘அழகிகள்’ கிடைக்கும் வரை இறக்குமதி செய்யப்பட்ட பாரின் அழகிகளையல்லவா பணிக்கு அமர்த்தப்போகிறார்கள். ‘மேட் இன் அமெரிக்கா என்றால் பால்டாயிலையும் கூட ‘ஆசம் டியூட்’ என குடிக்க தயாராக உள்ள கூட்டத்தை நம்பியல்லவா இறங்கியிருக்கிறார்கள்.

மேலும் நிழல் உலகுக்குள் பயந்து போகத் துணியாத டீசன்ட் ஜென்டில்மேன் மற்றும் எக்ஸ்கியூஸ் மீ பார்ட்டிகளெல்லாம் இந்த அரசு அங்கிகாரம் பெற்ற கேளிக்கை விடுதிக்குள் தயங்காமல் செல்லலாமே… இந்த அடிப்படையில் பிளேபாய் கிளப்புகள் இந்திய நடுத்தர வர்க்க பொழுதுபோக்கு உலகை புரட்டிப் போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது ‘கேஎப்சி போய் வருகிறேன்’ என்று சொல்வதைப் போல ‘பிளேபாய் கிளப் போகிறேன்’ என்று கௌரவத்துடன் போய் வரலாம்.

‘இதனால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து போகுமே’ என்று முண்டா தட்டுபவர்களுக்கு ‘இந்தியாவில் பந்நிகள் அம்மணக்கட்டையாக வலம் வரமாட்டார்கள் இந்திய கலாச்சார அறங்களை நாங்கள் மதித்து நடப்போம்’ என முழுக்க நனைந்திருந்தாலும் முக்காடு உண்டு என்ற உத்தரவாதம் அளிக்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. இப்படி இந்து ஞான மரபு சர்டிபிகேட்டையும் வாங்கியதோடல்லாமல், அறத்தின் அறங்காவலராகவும் தன்னை நியமித்துக்கொண்டுள்ளது பிளேபாய்.

இந்த விடுதிகளில் நுழைந்து பார்த்து விட நினைக்கும் கூட்டம் ஏராளமாக இருந்தாலும் பெரும் பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் அங்கு அனுமதி கிடைக்கும். அனுமதி மறுக்கப்படும் நபர்களின் நுகர்வு வெறியைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? ஏற்கனவே பைக் வாங்குவதற்காக கொலை, செல்போன் செலவுக்காக கொலை, பார்ட்டிக்காக கொலை, சூதாட்டத்திற்காக கொலை என்று சக மனிதர்களின் உயிரையும் துச்சமாக மதிக்கும் போக்கு மலிந்துள்ள நிலையில் மேலும் இது போன்ற குற்றங்கள் பல்கிப் பெருகும். காணும் பெண்களையெல்லாம் பந்நிகளாக கருதத்துவங்கி ஏற்கனவே அபாய நிலையில் இருகும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கால் எடுத்து வைக்கிறான் பிளேபாய். ‘உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள்’ என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை. பாலியல் உணர்வில் மனிதத் தன்மையை துறந்து வெறும் விலங்குணர்ச்சியாக வெறியேற்றும் ப்ளேபாயின் பாலுறவு விற்பனை தந்திரம் அவர்களைப் பொறுத்தவரை இலாபம் மட்டுமே.  ஆனால் நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கி  ‘எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்’ என்ற வெறி மேட்டுக்குடி மட்டுமின்றி மேல்நடுத்தர இளைஞர்களிடமும் பரப்பப்பட்டு வருகிறது. ‘சமூக மிகுதியின் விளைவே குற்றம்’ (Crime is a product of social excess) என்று தோழர் லெனின் சொன்னது நம் நகரங்களில் இன்று நிஜமாகி வருகிறது.

படிக்க

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!

20
ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-3

அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கலங்கிய கண்களோடு அமர்ந்திருக்கிறார். கேமராக்கள் அந்த முகத்தை நெருக்கத்தில் காட்டுகின்றன. எதிரே அமர்ந்திருக்கும் இந்தி நடிகர் அமீர் கான் மெல்லிய குரலில் கேட்கிறார் –

“சொல்லுங்க! உங்க சோகத்தை எல்லோருக்கும் சொல்லுங்க!”

லேசான தழுதழுத்த குரலில் பேசத் துவங்கும் அப்பெண்ணின் பெயர்  கவுஷால் பன்வார். ஹரியானா மாநிலத்தில் வால்மீகி சாதியைச் சேர்ந்த தலித் பெண். கடுமையான சாதி ஒடுக்குமுறைகளைத் தாண்டி துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள கவுஷால், தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியையாகப் பணிபுரிவதாகச் சொல்கிறார்.

கவுஷாலின் துயரமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய விவரணைகளால் அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பலரும் கண் கலங்குகிறார்கள்.  கவுஷாலின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டிருந்த அவரது தந்தை ‘சித்தா’வின் பெயரைச் சொன்னதும் அமீர் பார்வையாளர்களைக்  கரவொலி எழுப்பச் சொல்லிக் கேட்கிறார் – அவர்களும் உற்சாகமாக கை தட்டுகிறார்கள்.

கவுஷாலைத் தொடர்ந்து ஆவணப்பட இயக்குநர் ஸ்டாலின் கே. வருகிறார். அவரது ஆவணப்படமான “தொடப்படாத இந்தியா”விலிருந்து (Untouched India) சில காட்சிகள் திரையிடப்படுகின்றது. அதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கத்தைச் (safai karmachari andholan)  சேர்ந்த பெசவாடா வில்சன் வருகிறார். மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கெதிரான அவரது போராட்டங்களை விவரிக்கிறார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தர்மாதிகாரி வருகிறார். பார்ப்பனரான அவர் சாதி வேற்றுமை கொடியது, இந்த வேற்றுமையை குழந்தைகளிடம் விதைக்கும் பெற்றோர்களே அதை அகற்ற வேண்டிய கடமையையும் கொண்டிருப்பதாகச் சொல்லிச் செல்கிறார்.

இறுதியில் அமீர் கான்.

“இதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறோம்? எப்படித் தடுக்கப் போகிறோம்? மனிதக் கழிவை மனிதனே அகற்ற வேண்டுமா? உங்கள் பதிலை திரையில் பளிச்சிடும் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்புங்கள்… நாம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்”

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-3

மேலே விவரிக்கப்பட்டிருப்பது ஸ்டார் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயம். கடந்த 2012 மே மாதம் 6-ஆம் தேதி ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு மொழிச் சேனல்களிலும், தூர்தர்ஷனிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகத் துவங்கியது சத்யமேவ ஜெயதே. பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுவதும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமென்று கூறிக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ ஊடகங்களில் எழுதும் அறிவுஜீவியினர் சிலர் இந்நிகழ்ச்சி வெறும் ரியாலிட்டி ஷோ மட்டுமல்ல, இதில் பேசப்படும் ஒவ்வொரு விசயமும் சாமானிய மக்களின் இதயங்களைத் தொடுவது போலிருப்பதாகவும், ஒரு மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைப்பதால் இது ஒரு சமூக இயக்கம் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் நிகழ்ச்சியைக் காணும் போதே அடக்க முடியாமல் கண்ணீர் வடித்ததாக எழுதுகிறார்கள்.

சத்யமேவ ஜெயதே இதுவரையில்லாத வரவேற்பைப் பெற்றுள்ளதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கியமான ஆறு பெருநகரங்களில் மட்டுமே 4.74 டி.ஆர்.பி (தொலைக்காட்சி பார்வையாளர் கணக்கீட்டுப்) புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்நிகழ்ச்சி. இதன் இணையதளம் மே மாதத்தில் மட்டுமே சுமார் 68 ஆயிரம் வாசகர்களது மறுமொழிகளைப் பெற்றுள்ளது.

முதல் நிகழ்ச்சி நடந்த சமயத்தில், ஒரே மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமீர் கானைத் தொலைபேசியில் அழைக்க முற்பட்டுள்ளனர். பல லட்சம் செல்பேசி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 42 ஆயிரம் பேர் சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் இந்நிகழ்ச்சியைத் தொடர்கிறார்கள். ஐ.டி. துறையைச் சேர்ந்த இளைஞர்களின் அரட்டைகளில் சமீப காலமாக சத்யமேவ ஜெயதே கட்டாயமாக இடம் பிடித்துள்ளது.

சத்யமேவ ஜெயதே பெற்றுள்ளது ஒரு பிரம்மாண்டமான வெற்றி போலத் தோன்றினாலும் அதன் பின்னே விளம்பர, ஸ்பான்சர் அளிக்கும் பெரும் நிறுவனங்கள் உள்ளன. நட்சத்திர நாயகர்கள் நடிக்கும் தமிழ் சினிமாவை முதல் வாரத்தில் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டு ஆதாயம் பார்ப்பதற்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கும் நிறைய தொடர்புண்டு.

உதாரணமாக, கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தீண்டாமை தொடர்பான நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். ஸ்டார் குழுமத்தின் படப்பிடிப்பு அரங்கத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கண்ணீரும், சிரிப்பும், ஆத்திரமும், ஆர்வமும், பெருமிதமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கும் நேயர்களையும் பற்றிக் கொள்வதாகத் தோன்றினாலும் இது ஒரு செட்டப் என்றால் நம்புவீர்களா?

அறிவுஜீவிகள் வியந்தோதும் அமீர்கானில் இந்த மலம் அள்ளும் சாதி பிரச்சினையின் பின்னே மறைக்கப்பட்ட இரண்டு வார்த்தைகளை அநேகமானோர் கவனிக்கத் தவறியுள்ளனர் – அந்த வார்த்தைகள் அம்பேத்கர் மற்றும் இட ஒதுக்கீடு.

outlook-satyameva-jayate
நன்றி Silence Eva Jayate – அவுட்லுக்

ஜூலை 23-ம் தேதியிட்ட அவுட்லுக் பத்திரிகையில் இது பற்றி எழுதியுள்ள ஆனந்த், தனது பத்தியில் இதை மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறார். தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைகளின் கொடூரங்களை விளக்கியும், அதற்கான தீர்வுகளை இலக்கில்லாமல் முன்வைத்தும் சுமார் ஒன்றரை மணி நேரங்கள் நீண்ட அந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் பற்றியோ, இடஒதுக்கீடு பற்றியோ எந்த வார்த்தையும் வெளிப்படாமல் மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளனர்.

ஆனந்த் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் விசாரித்துள்ளார். குறிப்பாக வில்சன் தனது பேட்டியின் போது இட ஒதுக்கீடு பற்றியும் அம்பேத்கர் பற்றியும் குறிப்பிட்டதாகவும், பின்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் அது வெட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் கவுஷால் பன்வாரும் அம்பேத்கர் பற்றி குறிப்பிட்டுள்ளார் – அதுவும் வெட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த ஆனந்த் வேறு சிலரிடமும் பேசியிருக்கிறார். அதில் சிலருடைய வாதங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது – சிலருடைய பதிவுகள் நிகழ்ச்சியில் வெளியிடப்படாமலேயே வெட்டியெறியப்பட்டிருக்கிறது.

மேலும், கவுஷால் பன்வார் தனது வாழ்க்கையை விவரித்தது பார்வையாளர்கள் இல்லாத ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் – ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அந்த அரங்கத்தில் பார்வையாளர்கள் இருந்தனர். அவர்கள் அழுதனர், சிரித்தனர், கரவொலியெழுப்பினர், ஆத்திரமாகவும், அசூசையுடனும் முகபாவனைகளைக் காட்டினர் – இந்த ‘உணர்ச்சிகளெல்லாமே’ தனியே படம் பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிகள் ஏதேனும் ஒரு பாலிவுட் மசாலாப் படத்தின் மேல் எழுந்ததாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது – ஆனால் நிச்சயம் கவுஷால் பன்வாரின் வாழ்க்கைச் சம்பவங்களின் மேல் எழுந்ததல்ல.

அமீர் கான் தனது நேயர்களை ஏமாற்றி விட்டார் என்பது மட்டும் இங்கே பிரச்சினையில்லை – இந்த போலித்தனங்களின் வெளிச்சத்தில் கேந்திரமான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அயோக்கியத்தனம் தான் நமது கவனத்திற்குரியது. சொல்லப்போனால், அமீரின் நேயர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை விரும்புகிறார்கள் என்பதே எதார்த்தம்.

தலித் மக்களுக்காக உயிர், பொருள், குடும்பத்தைத் தியாகம் செய்து இந்நாட்டில் நடந்த போராட்டங்கள் எண்ணற்றவை – அந்தப் போராட்டங்களில் எண்ணிறந்த உயிர்கள் மடிந்து போயுள்ளன. சமஸ்கிருத பண்டிதராவதற்காகப் போராடிய தலித்தின் கதையை இத்தனை மெனக்கெட்டுத் தேடியெடுத்த அமீர் கான், அதே ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்த ‘குற்றத்திற்காக’ கொளுத்தப்பட்ட தலித் உடல்களைப் பற்றியோ, இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ரத்தமும் தசையுமாக வாழும் கயர்லாஞ்சியின் போட்மாங்கேயைப் போன்றவர்களையோ சொல்லாமல் மறைப்பது தற்செயலானதல்ல.

“இந்த நாட்டில் சாதி இருக்கத்தான் செய்கிறது; அது மக்களின் மூளைகளுக்குள் இருக்கிறது; நாம் தான் நமது குழந்தைகளிடம் அதை விதைத்திருக்கிறோம் – எனவே நாம் தான் அதை அகற்ற வேண்டும்” என்றார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி சந்திரசேகர தர்மாதிகாரி. அவரே மேலும், “நமது பாரதம் இன்னும் முன்னேறி பல சாதனைகள் படைக்க வேண்டுமென்றால் நாமெல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார்.

இந்திய சமூகத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தின் உயிராதாரமே சாதியினுள் தான் புதையுண்டு கிடக்கிறது. ஓட்டுமொத்த இந்துப் பொதுப்புத்தியே சாதிப் படிநிலையென்கிற செங்கற்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு சமூக எதார்த்தத்திற்கு தனிநபர்களைப் பொறுப்பாளிகளாக்கி கதையெழுதுகிறார் அமீர் கான். அதுவும் உழைத்து முன்னேறிய தலித்துக்கள்தான் அவரது அக்கறைக்குரியவர்களே அன்றி, வெட்டிப் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. இதைக் கூறினால் கொன்றவர்கள் யாரென்று குறிப்பாகப் பேச வேண்டியிருந்திருக்கும்.

அதாவது உள்ளூர் அளவில் கயர்லாஞ்சியின் கொலைகாரர்களைப் பாதுகாத்த கட்சி எதுவென்று சொல்ல வேண்டியிருக்கும்; மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகளைக் கொளுத்திய வெறியர்கள் புனிதப் போராளிகள் என்று ஆராதிக்கும் காவிக் கட்சிகளை அடையளம் காட்ட வேண்டியிருக்கும். ஆனால் இத்தகைய கட்சிகள்தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு காசு கொடுக்கும் புரவலர்களின் சமூக அடித்தளங்கள் மற்றும் கூட்டாளிகள்.

சல்வா ஜூடூமினுடைய ஸ்தாபகர்களையும், ரன்பீர் சேனாவின் பிதாமகர்களையும் அமீர் எதிர்த்துப் பேசுவதை ரிலையன்சும் விரும்பாது; சத்யமேவ ஜெயதேவின் மற்ற புரவலர்களும் விரும்ப மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சத்யமேவ ஜெயதேவின் இந்தி-இந்து மாநில ரசிகர்களே கூட அதை விரும்பக் கூடியவர்களல்ல.

எனவே தான் அமீர் இருளான அந்தப் பக்கங்களுக்குள் நுழைய மறுக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தர்மாதிகாரி பேசியது அவரது கருத்து மட்டுமல்ல – சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கருப்பொருளே அது தான். மருத்துவத் துறைப் பிரச்சினைகளைப் பற்றி நடந்த முந்தைய நிகழ்ச்சியொன்றில் மருத்துவம் தனியார்மயமாகியிருப்பது, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் இலாப வெறி, அவர்களுக்கு பாதபூசை செய்யும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிமைப் புத்தி போன்றவற்றைத் தவிர்த்து விட்டு சில மருத்துவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்.

ஆட்டத்தின் விதிகள் இவ்வாறாகத் தீர்மானிக்கப்பட்ட பின் கோகிலா பென் அம்பானி மருத்துவமனையின் மூலம் கொள்ளையடிக்கும் ரிலையன்ஸ் சத்யமேவ ஜெயதேவின் ஆஸ்தான புரவலராக இருக்க தடையேது? அதனால் தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் அமீர்கானால் கைகாட்டப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு இணையான தொகையைத் தானும் வழங்க முன்வந்திருப்பதாக எந்தக் கூச்சமும் இன்றி ரிலையன்ஸால் பீற்றிக்கொள்ள முடிகிறது.

பெண் சிசுக் கொலை பற்றிப் பேசும் போது இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்தின் ஊற்றுமூலமான பார்ப்பன இந்து மதத்தையும். அதன் சமூக அடித்தளமான நிறுவனங்கள், கட்சிகளைப் பற்றியும் பேசாமல் இருப்பது; குடியின் தீமை பற்றிய நிகழ்ச்சியில் விஜய் மல்லையாவின் கொள்ளைகளையும், அதற்கு இசைவான முதலாளி வர்க்கத்தையும் தவிர்த்து விடுவது; விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பற்றிப் பேசும் போது பன்னாட்டு விதைக் கம்பெனிகளான மான்சாண்டோ, கார்கில் பற்றியும், அவர்கள் தேசத்தினுள்ளே நுழைய எல்லைகளை அகலத் திறந்து விட்ட மன்மோகன் —- சிதம்பரம்  கும்பலைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பது – இது தான் சத்யமேவ ஜெயதே.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-2

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது மக்களின் ஆரோக்கியத்துக்கு எத்தகைய கேடுகளை உண்டாக்கும் என்று ஓதிய அமீர்கான், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளை மட்டும் பொறுப்பாளிகளாக்குகிறார். இங்கே முறைகேடான வழிகளில் மரபீனி விதைகளையும், வீரிய நச்சு உரங்களையும் கள்ளத்தனமாக விற்கும் கார்கில், மான்சான்டோ முதலான பன்னாட்டுக் கம்பெனிகளைத் தடைசெய்து நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று கோரவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்குச் சாதகமான காட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக வேண்டுமென்று கேட்கவில்லை.

இது தான் அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடைமுறை என்பது. ஊழலை ஒழிக்க வேண்டும் – ஆனால் அம்பானியின் ஊழலைப் பற்றியோ, டாடாவின் திருட்டைப் பற்றியோ, மிட்டலின் கொள்ளைகள் பற்றியோ, வேதாந்தாவின் நிலப்பறிப்புகள் பற்றியோ வாயைத் திறப்பதில்லை என்பது தான் அண்ணா ஹசாரே. தாலுகா ஆபீஸ் ப்யூன் வாங்கும் பத்து ரூபாயைத் தடுக்க என்ன செய்யலாம், என்ன சட்டம் போடலாம் என்பதைப் பற்றியெல்லாம் மூளையைக் கசக்கும் ஹசாரே, பெல்லாரியின் இரும்புத் தாதுக்கள் வாரிச் செல்லப்படுவதற்கு வகை செய்யும் தனியார்மயத்தைத் தகர்த்தெறிவது பற்றிப் பேச மாட்டார்.

அதனால் தான் அவரது ஊழல் ஒழிப்புப் போருக்கு ஸ்பெக்ட்ரம் திருடர்களான ஏர் டெல்லும், ரிலையன்சும், டாடாவும் ஸ்பான்சர் செய்தார்கள் – அதே காரணத்திற்காகத் தான் இன்று அமீருக்கும் இவர்கள் ஸ்பான்சர் செய்யக் காத்திருக்கிறார்கள். ‘யார்ட்ட துட்டு வாங்கினா என்னா சார், எதுனா நல்லது நடக்குதா பாருங்க சார்’ என்று ஒரு மூலையிலிருந்து கூவுகிறது அறிவாளிகளின் மனசாட்சி. ‘கோழி குருடா இருந்தாலென்ன ?! குழம்பு ருசியா இருக்கா பாரு!’ பளீரென்று ஒளிரும் இந்த சந்தப்பவாதத்தின் நிழலில் தான் மோடியும், மான்சான்டோவும், ரன்பீர் சேனாவும், டாடாவும், அண்ணா ஹசாரேவும், ராமகோபாலனும், ப.சிதம்பரம்-மன்மோகன் சிங்கும் சந்தித்து கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

இந்தளவுக்கு நேர்மையற்றும், அயோக்கியத்தனமாகவும் வழங்கப்படும் ஒரு நிகழ்ச்சி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதை எவ்வாறு புரிந்து கொள்வது? சின்ட்ரெல்லா கதைகளைப் போல மகிழ்ச்சியான தீர்வுகளை அளித்து தமது வார இறுதிகளைக் கொண்டாட்டமாக்குவதைத் தான் இதன் நடுத்தர மற்றும் உயர்நடுத்த வர்க்க நேயர்கள் விரும்புகிறார்கள். சிக்கலான சமூகப் பிரச்சினைகளை இப்படி மொன்னையாகவும், தட்டையாகவும் ஒரு வெண்ணைக் கட்டியை சுலபமாக அறுப்பது போலவும் ஒரு பேக்கேஜ்ஜாக வழங்குவதைத் தான் அவர்கள் வரவேற்கிறார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இதை அமீர்கான் வெளிப்படையாக அறிவித்தும் விடுகிறார். முதல் வார நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் விலை உயர்ந்த கார்களிலும், பைக்குகளிலும், ட்ரெயினிலும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணிக்கிறார். பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கிறது. கையிலிருக்கும் கின்லே பாட்டிலில் இருந்து தண்ணீரை அருந்தியபடியே ‘உண்மையான’ இந்தியாவின் முகத்தைத் தரிசிக்கிறார். திரையில் எழுத்துக்கள் முடியும் நேரத்தில், அந்திசாயும் பொழுதில் கடற்கரையொன்றில் அமீர் இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்கிறார். கனமான குரலில் ஒரு சிறு உரை நிகழ்த்துகிறார். அதில்…

“நான் யாரையும் குற்றம் சுமத்த வரவில்லை; யாரையும் குற்றவாளியாக்கவில்லை; யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ அல்லது புண்படுத்துவதோ என் நோக்கமல்ல. ஆனால்…. நம்மில் ஒருவர் தானே இதற்கெல்லாம் (சமூகப் பிரச்சினைகளுக்கு) காரணம்?  அல்லது எல்லோருமே தானே காரணம்? வாருங்கள்! நாம் சேர்ந்து பயணிப்போம். கொஞ்சம் தேடல்.. கொஞ்சம் களைத்தல்.. கொஞ்சம் கேட்பது, கொஞ்சம் சொல்வது.. சில கஷ்டமான விஷயங்களுக்கு விடை தேடுவது. இதனூடாக கலவரம் எனது நோக்கமல்ல. சிறு மாற்றம் தான் விருப்பம்.” என்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இதயங்கள் ஏன் ‘விழுந்தன’ என்கிற கேள்விக்கான விடை இதனுள் தான் பொதிந்து கிடக்கிறது.

இந்தியாவில் நடுத்தர வர்க்கமாய் வாழ்தவதன் சிக்கல்கள் அவ்வளவு அலாதியானது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி, வியர்வை வழியும் போக்குவரத்துப் பயணங்கள், நாளிதழ்களில் புரட்டப் புரட்ட முடைநாற்றமெடுக்கும் ஊழல்கள், அலுவலகத்தில் வெட்டப்படும் சலுகைகள், அதிகரித்து வரும் வீட்டுக் கடனின் மாதாந்திரத் தவணை, பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தது ஒரு லட்சமாவது அதிகமாயிருகிறதே என்கிற எரிச்சல், இன்னுமா ஸ்மார்ட் போன் வாங்கவில்லை என்கிற துக்க விசாரிப்புகள், எப்போதாவது தென்படும் வறுமை பற்றிய செய்திகள் – ‘பேசாம இராணுவ ஆட்சி வரணும் சார்’ என்று அவலை மென்று கொண்டிருந்த வாய்களில் வி.கே.சிங் என்கிற புண்ணியவான் வேறு மண்ணள்ளிப் போட்டு விட்டார் – கடைசியில் இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரமான அண்ணா ஹசாரே உலக மகா காமெடியனாக சீரழிந்து விட்டார். பரிதாபமான நிலை தான்.

படித்த நடுத்தர வர்க்கத்தினர் புழங்கும் இணையம், ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் சமூகத்தை எதிர்நோக்கும் சவால்கள் என்பவை குறித்த மிக மேலோட்டமான, ஆனால் உணர்ச்சியைத் தூண்டும் விதமான விவாதங்களே நிறைந்துள்ளன. இந்த அடிப்படையில் இருந்து தான் ‘எதாவது செய்யணும் பாஸ்’ என்கிற அரிப்பு தோன்றுகிறது. உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும்.

ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.

இந்தக் குறுஞ்செய்தி எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக நின்று கொள்வதில் வேறு சில வசதிகளும் இருக்கிறது. சிக்கலான பல்வேறு அரசியல் பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினைகளை மிக எளிமையாகவும், தட்டையாகவும் புரிந்து கொள்ளும் சாத்தியத்தை  உண்டாக்குவதோடு, எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளின் ஆன்மாவாக இருக்கும் அரசியலை உருவியெடுத்து விடுகிறது. அந்த இடத்தில் சில தனிநபர்களை வில்லன்களாக நிறுத்துகிறது.

இந்த வில்லன்களைக் கூட மனுப் போடுவது மூலமோ, சட்டங்கள் மூலமோ திருத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்கிறார் அமீர் கான். ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும், சட்டங்கள் இயற்றச் சொல்லியோ நடவடிக்கை எடுக்கச் சொல்லியோ அரசை வலியுறுத்த நேயர்களைக் குறுஞ்செய்தி அனுப்பச் சொல்கிறார் – சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அரசும் அவ்வாறாக ‘நடவடிக்கை’ எடுத்திருக்கிறது.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே

ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்க்க மனு அளிப்பது என்கிற 19-ம் நூற்றாண்டின் காங்கிரசு வழிமுறையை அன்றைய வெள்ளை அரசாங்கம் எந்தளவுக்கு ரசித்து வரவேற்றதோ அதே அளவுக்கு இன்றைய ஆளும் வர்க்கமும் விரும்பி வரவேற்கிறது. அமீர் கான் முன்னெடுத்துச் செல்லும் சமூகப் பிரச்சினைகளின் ஆயுள் ஒரு வாரம் தான் என்பதும், அதன் வரம்புகள் மனு மற்றும் குறுஞ்செய்திகள் மட்டும் தானென்பதும் ஆளும் வர்க்கத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

தண்டகாரண்யாவிலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, காஷ்மீரத்திலோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பியளித்ததன் மூலம் கூடங்குளத்திலோ இருக்கும் மக்கள் இயக்கங்களின் போராட்டமும் அமீர் கானின் ‘ கடிதக் கலகமும்’  சாராம்சத்திலேயே வேறுபட்டது. முந்தையது ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையையே ஆட்டம் காணச் செய்பவையாக இருக்கும்; அதே நேரம் அமீர் கானுடையது காந்தி-ஹசாரே வகைப்பட்ட தடவிக் கொடுத்தல்கள் தான்.

அதனால் தான் ஊர்வலம், சாலை மறியல், கடையடைப்பு போன்ற மக்களின் ஜனநாயகப்பூர்வமான, மிதமான எதிர்ப்புகளைக் கூட ஏதோ பயங்கரமான தீவிரவாத நடவடிக்கை போல நடத்தும் அரசுக்கு இது போன்ற ‘போராட்டங்கள்’ உவப்பானதாக இருக்கிறது. முதலாளியே ஏற்பாடு செய்யும் தொழிற்சங்கம் போன்றது தான் அண்ணா ஹசாரே- அமீர் கான் வகைப்பட்ட ‘சமூக இயக்கங்கள்’. பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள சிவப்பு விளக்குப் பகுதி இருப்பது அவசியம் என்று சில ‘அறிவுஜீவிகள்’ சொல்வார்களல்லவா, அது போல மக்களிடையே எழக்கூடிய நியாயமான எதிர்ப்புணர்வுகளுக்கு அண்ணா ஹசாரேவும், அமீர் கானும் வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அமைப்பாக்கப்பட்ட வகையில் ஆத்திரம் கொள்வதற்கும், அதனடிப்படையில் ‘எதிர்ப்பு’ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்துவதே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் உட்கிடை. பாதுகாப்பான முறையில் எதிர்வினையாற்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கிடந்த நடுத்தர வர்க்கத்திற்கு இது கச்சிதமாகப் பொருந்திப் போனதாலேயே அவர்கள் இதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.

ஆகவே தான் அண்ணா ஹசாரேவை ஆதரித்தது போலவே அமீர் கானையும் பெரும் கார்ப்பரேட்டுகள் முன்னின்று ஆதரிக்கின்றன. பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் குடித்து அந்தப் பகுதியையே பாலைவனமாக்கிய கோகோ கோலா வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்று சுதி சேர்க்கிறது, நாட்டையே கொள்ளையடித்த ரிலையன்ஸ் வயலின் வாசிக்கிறது; 2ஜி கொள்ளையர்களெல்லாம் கன்னக் கோல்; கொலைகார பால் தாக்ரே பின்பாட்டு; உலகவங்கி ஏஜெண்ட் மன்மோகன் சிங் தம்புரா. இந்தக் கன்றாவியை ரசித்துப் பார்க்கும் நேயர்களெவருக்கும் கிஞ்சித்தும் வெட்கமில்லை – கச்சேரி மிகச் சிறப்பாகக் களை கட்டுகிறது.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

18

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

நவம்பர் 7,  1917 உழைப்பது மட்டுமல்ல நமது வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான புதிய அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்கிற சொர்க்கத்தை உழைக்கும் மக்களுக்கு அறுமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களின் உண்மையான கொண்டாட்ட நாளும் இதே தான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான தோழர் லெனின் தலைமையில், ரசிய  கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடானடியாகத் தீர்த்து வைத்ததோடு, அனைவருக்கும் கல்வியையும் வேலையையும் உத்திரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால் நமது நாட்டின் நிலை ?

விலைவாசி விசம் போல் ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்படுகிறார்கள். விவசாயம் அழிந்து தற்கொலைகள், பட்டினிச்சாவுகள் என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறிகளாக்கப்படுகிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் இந்த நாடே பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது. வால்மார்ட் போன்ற பன்னாடு நிறுவனங்கள் கொழுக்கவும் வழிவகுத்துள்ளது. மேலும் காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மக்களின் சேமிப்பை பன்னாட்டு கம்பெனிகள், மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் சூறையாடவும் பட்டுக் கம்பளம் விரித்துள்ளது மன்மோகன் கும்பல்.

மானிய வெட்டு என்கிற பெயரில் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் போன்ற இதர பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பல லட்சக்கணக்கான, கோடி ரூபாய்களை வரிச்சலுகைகளாக வாரி வழங்குகின்றன மத்திய மாநில அரசுகள். இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதோ இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை  கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது மன்மோகன்-சோனியா-சிதம்பரம் கும்பலின் காங்கிரசு அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம். இது தான் இன்று உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு நாட்டையும் அடிமையாக்கி வருகிறது.

இதெற்கெல்லாம் என்ன காரணம் ? உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க கொள்கை தான் காரணம். இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் இன்றைய உடனடி கடமை, இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை, மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம். தெற்காசிய மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம்.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டியமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்காக இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

 நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் !

______________________________________________________

சென்னையில் நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நிரல்

நாள்  : 7.11.2012
நேரம் : பிற்பகல் 2 மணி.

தலைமை : தோழர் த. நெடுஞ்செழியன்
இணைச் செயலாளர்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி. சென்னைக் கிளை.

நவம்பர் தின உரை :  தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

நாடகம்,  உரைவீச்சு,  விவாத மேடை. கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இளம் தோழர்களின் புரட்சிகர பாடல்கள்.

உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக !

தொடர்புக்கு
வினவு -97100 82506
புதிய கலாச்சாரம்  -99411 75876

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நமக்கும் வேண்டும் நவம்பர் – 7

8

காத்திருந்த காற்றின் சுகம்
சொல் ஒன்றால் விளங்கிடுமா?
கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர்
கூறக் கேட்டு உணர்ந்திடுமா!
தானே ஒருவன் அனுபவிக்காமல்
மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
நவம்பர் ஏழின் பயனுணர
நடைமுறையில்… நீ வேண்டும்!

ரசியப் புரட்சி,
பாட்டாளி வர்க்கத்தின் பன்முகத் திரட்சி…
அது
காய்ந்த வயிற்றில் முளைத்த பசி
மங்கிய விழிகளில் பொங்கிய கனவு
மாற்றம் வாராதா? வாராதா? என
துளைத்த சலிப்பின் துளைகளில்
துலங்கிய இசை!
தருணம் நழுவாமல் பெய்த மழை
தன் வாழ்வின் நாட்களை அரித்தரித்து
பிறர் வாழ வழங்கிய பண்பின் அலை
விடுதலைத் தவிர வேறெந்த உணர்ச்சியும்,
வீண்சுமை என்று தெளிந்த ஞானம்.
பற்றிய நம்பிக்கை விலகிய போதும்,
வளைந்து, நெளிந்து படர்ந்த உயிர்ப்பு.
நெற்றியில் வானம் இடிந்த போதும்,
நிலைகுலையாமல் மலையென நிமிர்ந்த அறிவின் துணிபு.
பக்கம் பார்த்து வாழ்வது இழிவு
வர்க்கப்போரே வாழ்வின் பொலிவென
நடத்திக்காட்டிய தத்துவத் தெளிவு!

சும்மா வரவில்லை ரசியப் புரட்சி!
அது  சுமந்த உணர்வுகள்
வர்க்கப்போரின் வரலாற்று நீட்சி…
இன்று,
நம் கண்ணெதிரே கார்ப்பரேட் ஜார்கள்…
கவரி வீசும் மன்மோகன், அலுவாலியா, சிதம்பரங்கள்
ரஷ்புடீனை மலைக்க வைக்கும் நரேந்திரமோடிகள்…
ரொட்டி ‘இல்லையெனில் கேக்’ சாப்பிடச் சொல்லும்
மட்டி மகாராணி ஜெயலலிதாக்கள்…
இடிந்து விழப்போகும் மாரிக்கால அரண்மணைகளில்
‘இச்சு’ கொட்டி திசைதிருப்பும் இடது, வலது பல்லிகள்
ஆக்கிரமிக்கும் அமெரிக்க வெண்படைக்கு
நாட்டை காட்டிக்கொடுக்கும்
கரைவேட்டி கறுப்பு நூற்றொருவர்கள்…

போதுமான காரணங்களைப் பார்க்கையில்
இந்நேரம் நடந்திருக்க வேண்டும்
இங்கொரு புரட்சி…
தடைபடக் காரணம்
நம்மிடம் உள்ளதோ?
யார் மூலமாவது புரட்சி நடக்காது
சம்பந்தப்பட்டவர்களாலேயே
அது சாத்தியம்…

உனக்கும் புரட்சி வேண்டுமா…
வாழ்த்திக் காட்டினால் போதாது
புரட்சியை வாழ்ந்து காட்டு!

________________________________

–  துரை. சண்முகம்

________________________________

வாசகர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

-வினவு

Mad City (1997) பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!

3
மேட்-சிட்டி-2

24 மணி நேரமும் செய்திகளை அள்ளித்தரும் தொலைக்காட்சிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் நிறைய வந்து விட்டன. இந்த செய்தி ஊடகங்கள் வெறுமனே ரேடியோ போல் இல்லாது காட்சி ஊடகமாகவும் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பான செய்திகளுக்காக ஒரு வேட்டை நாயைப் போல அலைகின்றன. குறிப்பிட்ட நாளில் தீனி சரியாக அமையவில்லை என்றால் இவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.

செய்தி, அதன் முக்கியத்துவம், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, நெருடும் காட்சிகள் மீதான சுய தணிக்கை, பார்வையாளர்களின் மலிவான உணர்ச்சிகளைத் தூண்டாமல் விமரிசனமாகப் பார்க்க கற்றுத்தரும் பொறுப்பு என்று அடிப்படை ஊடக அறவியல் எதனையும் இச்செய்தி ஊடகங்களிடம் பார்க்க முடியாது. 24 மணி நேர செய்திகளின் தாயகம் அமெரிக்காதான். அமெரிக்க மக்களை அறிவும், விமரிசனமும் இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் ஆர்வலர்களாக  உருவாக்கியிருப்பதில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.

இத்தகைய அமெரிக்க ஊடகங்களை முன்மாதிரியாக வைத்து தான் நமது செய்தி ஊடகங்களும் செயல்படுகின்றன. சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி’.

கதை:

மேட்-சிட்டி-1அமெரிக்காவின் சிறுநகர தொலைக்காட்சி சானல் ஒன்றில் பணி புரியும் மேக்ஸ், நடுத்தர வயதை எட்டி விட்டவனென்றாலும் அனுபவம் மிக்க, துடிப்பான செய்தியாளர். எப்போதும் பரபரப்பான செய்திகளுக்காக அலைந்துக் கொண்டிருக்கும் மேக்ஸ், ஒரு பிரத்யேக உடனடிச்  செய்தியின் மூலம் நாட்டையே தன் பக்கம் திருப்ப வேண்டுமென்ற இலட்சியம் உள்ளவன்.

இல்லாததை இட்டுக்கட்டி, பரபரப்பான செய்தி உருவாக்கும் முயற்சிகளுக்காக மேக்ஸை கடுமையாக விமரிசிக்கும் சானலின் மேலாளர், அவனை நொடித்துப்போன அருங்காட்சியகம் ஒன்றைக் குறித்து செய்தி சேகரிக்க அனுப்புகிறார். கூடவே புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் பயிற்சி பெறுபவரை படம் எடுப்பவராக அனுப்புகிறார். ஆளில்லாத சிவன் கோவிலைப் போல, கூட்டமின்றி வாடும் அந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்தியைக் கூட பரபரப்பாக மாற்ற முடியாது என்றில்லை. காரணம் மாக்ஸ் எதை நோக்கினாலும் அது சாகாவரம் பெற்று விடும்.

அருங்காட்சியகத்தின் நிதி நெருக்கடி பற்றி விளக்குகிறார் அதன் மேலாளர், திருமதி பேங்க்ஸ். நிதி நிலைமை காரணமாக அருங்காட்சியகத்தின் இரு காவலர்களில் ஒருவரை வேலை நீக்கம் செய்து, ஒருவரை மட்டும் வைத்து சமாளிப்பதாகத் தெரிய வருகின்றது. வேலையில் தக்கவைக்கப்பட்டிருக்கும் கிளிஃப் என்ற  கருப்பு இனக்  காவலர் அருங்காட்சியக கட்டிடத்தின் வெளியில் காவல் இருக்கிறார்.

அந்த நேரத்தில் பள்ளிச் சிறுவர்களின் குழு ஒன்று ஆசிரியையுடன் அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா வருகின்றது. எதுவும் பரபரப்பாக செய்தி சிக்காததால் சலிப்படைந்து, பேட்டியை முடித்து விட்டு, கேமராவை இயக்கும் பெண்ணை வெளியில் அருங்காட்சியகக் கட்டிடத்தை படம் எடுக்க அனுப்பிவிட்டு மேக்ஸ் அங்கிருக்கும் கழிவறைக்குச் செல்கிறான்.

இந்த நேரம் பார்த்து, அருங்காட்சியகத்தில் காவலாளியாக இருந்து வேலை இழந்த சாம் கையில் ஒரு பையுடன் நுழைகிறான். வேலை இழந்த பிறகும் காவலருக்கான சீருடை அணிந்து வந்திருக்கிறான். வேலை போய் விட்டது என்று வீட்டில் மனைவியிடம் சொல்ல அவனுக்குத் தைரியம் இல்லை என்று பின்னர் தெரிய வருகிறது. தான் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் எனக் குழந்தையைப் போல் திருமதி பேங்க்ஸிடம் கெஞ்சுகிறான் சாம். வேலை இல்லாமல் அவன் வாழ்க்கை அழிந்து போகும் என்று புலம்புகிறான்.

திருமதி பேங்க்ஸ் சாமிடம் பேசுவதற்குக் கூட மறுக்கிறாள்; உடனே வெளியில் போகச் சொல்கிறாள். சாம் கோபமடைந்து திருமதி பேங்க்ஸை மிரட்டுவதற்காகத் தன் துப்பாக்கியைக் காட்டுகிறான். அதுவும் சூடான விவாதத்தின் அங்கமாக இருக்கிறதேயன்றி வேறு வன்முறை ஒன்றுமில்லை.

உள்ளே கழிவறையில் இருந்தபடி இதைக் கவனிக்கும் மேக்ஸ், வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளை சாம் பிடித்து வைத்திருப்பது போல புரிந்து கொள்கிறான். அங்கிருந்த பொது செல்பேசியில் தன் சானலை தொடர்பு கொண்டு ’ஒரு கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் அதை “பிரத்யேகமாக” நம் சானல் காட்ட வேண்டும்’ என்றும் சொல்கிறான். மேலாளர் அதை ஏற்றுக்கொள்ளவே, வெளியே இருக்கும் பெண் மூலம் நேரடி ‘பிரத்யேக‘ படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. சிறுவர்கள் கடத்தப்பட்டதாக உடனடிச் செய்தி வெளியாகிறது.

திருமதி பேங்க்ஸ், சாம் கையில் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சிக்க அது எதிர்பாரா விதமாக வெடித்து வெளியே இருக்கும் கருப்பர் கிளிஃபை காயப்படுத்துகிறது.

அருங்காட்சியகத்தில் இருக்கும் தொலைக்காட்சியைப் போட்டு பார்க்கும் சாம் திடீரென்று செய்தியில் தான் கடத்தல்காரனாகச் சித்தரிக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தொலைபேசி வழியாகப் பேசிக் கொண்டிருக்கும் செய்தியாளர் மேக்ஸை கையும் களவுமாகப் பிடிக்கிறான். ஆனால், அதற்குள் நிலைமை எல்லை மீறிப் போய் விடுகின்றது.

இதுதான் தன் வாழ்நாளை மாற்றப் போகும் பிரத்யேக செய்தி, இந்தச் சூழலை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மேக்ஸ் முடிவு செய்கிறான். சாமின் அப்பாவித்தனத்தையும், பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான அவனது கற்பனைக் கொடூரத்தையும் கலந்து  அதனை ஒரு சுவாரசியமான செய்தியாக்கத் திட்டமிடுகிறான். ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் லைவ் தொலைக்காட்சி செய்தியாளரான மேக்ஸ்,  தொலைக்காட்சி மூலமாக சாமை தீவிரவாதியாகச் சித்தரிக்கிறான். இழந்து விட்ட வேலையைக் கேட்க வந்த சாம் தான் ஒரு கடத்தல்காரனாக்கப்பட்டிருப்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த சூழ்நிலையில் திணறுகிறான். வெளியே ஊடகங்களும், போலிசும் குவிந்து விடுகிறார்கள்.

சாதாரணமாக அவன் வந்ததாகவும், திருமதி பேங்க்ஸை பயமுறுத்துவதற்கு மட்டும் அவன் துப்பாக்கியுடன் வந்ததாகவும், வேலை இழப்பால் அவன் குடும்பமும், குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும்,  தனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை கிடைக்காது என்றும் அப்பாவியாகக் கூறுகிறான், ஆறடி உயரமான வாட்டசாட்டமான சாம்.

அதற்குள் போலிசார் தொலைபேசியில் சாமைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை விடுவிக்க பணயமாக என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. கடத்தினால்தானே கோரிக்கை வைக்க முடியும்? வெளியே போனால் போலிசு கைது செய்துவிடும் என்பதால் செய்தியாளார் மேக்ஸ் சொல்படி கேட்கிறான். மேக்ஸை தன் தூதுவராக வெளியில் அனுப்புவதாகச் சொல்கிறான். இதற்கு மேல் மேக்ஸ் தன் நிகழ்ச்சியைப் பரபரப்பாகத் தொடர்கிறான்.

செய்தியாளார் மேக்ஸ், சாமின் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொள்கிறான். அவனைக் காப்பாற்றுவதற்கு மாக்ஸ் விரும்பினாலும் அதனூடே தனக்கு வேண்டிய சென்சேஷன் (பரப்பரப்பு) செய்திகளையும் சேர்த்து அறுவடை செய்ய விரும்புகிறான். ’அருங்காட்சியகத்தில் பள்ளிச் சிறுவர்களைப் பிடித்து வைத்திருக்கும் துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரன்’ என்ற ஒற்றைச் செய்தியை வைத்து அமெரிக்கா முழுவதும் பரபரப்பில் ஆழ்த்த வேண்டும். இதனை உண்மையென நம்பும் வண்ணம் ஒரு கருப்பினக் காவலர் வேறு சுடப்பட்டுக் காயமடைந்திருக்கிறார்.

தன் பேட்டியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என்பது சாமின் கோரிக்கை என்று மாக்ஸ் வெளியில் நிற்கும் போலீசு அதிகாரியிடம் சொல்கிறான். அவர்களது ஒப்புதலைப் பெற்று தொலைக்காட்சி காமிராவை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்புகிறான். “வேலை இழந்ததால்தான் இப்படிச் செய்கிறேன். நான் ஏழை, அப்பாவி. எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று சாம் சொல்வது தொலைக்காட்சியில் நாடெங்கும் ஒளிபரப்பாகின்றது. மற்ற செய்தி நிறுவனங்களும் இதை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன.

மேக்ஸ் வெளியில் நிற்கும் பயிற்சிக்கு வந்துள்ள பெண்ணிடம் சாமின் அம்மா, நண்பர்கள், க்ளிஃப் என சகலரையும் பேட்டியெடுக்கச் சொல்கிறான். அனைத்துக் காட்சிகளையும் ஒரு திரைக்கதை போல் அமைத்து,  பேட்டிகளை முன்னும் பின்னுமாகக் கோர்த்து மாற்றியமைக்கிறான். ஆனால் ஏதோ குறைகிறது. மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டு கடைசியில் உதவியாளர் பெண் கேட்கும் கேள்வியில் சாமின் மனைவி உடைந்து அழுகிறாள். ஆம். மேக்ஸிற்கு வேண்டியது கிடைத்து விட்டது. அதன்படி சாம் மீது அனுதாபத்தை உருவாக்கும் செய்தித் தொகுப்பை உருவாக்கி ஒளிபரப்புகிறான் மாக்ஸ்.

சாம் அமெரிக்காவின் ஹீரோ ஆகிவிடுகிறான். சாம் படம் போட்ட டீ சர்ட்களின் விற்பனை கூட பரபரப்பாக நடக்கின்றது. சாமிற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு பெருகுகிறது. ஒரு சிறு ஊரில் நடக்கும் நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பேசப்படும் முக்கியச் செய்தியாகி விடுகிறது.

வெளியே பரப்பரப்பாக இருக்க, அருங்காட்சியகத்தினுள் பள்ளிச் சிறுவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள்; தூங்குகிறார்கள்; தாங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள். சிறுவர்களுடன் சிறுவனாக சாம் விளையாடி கொண்டிருக்கிறான். அவர்களுக்குப் பசிக்கும்போது அருங்காட்சியகத்தின் உணவு விற்கும் எந்திரத்தைத் திறந்து தின்பண்டங்களை எடுத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு விளையாட்டு காட்டுகிறான்.

வெளியே அவர்கள் பெற்றோர்களோ செய்தி நிறுவனங்கள் பரப்பியிருக்கும் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நியூயார்க்கில் இருந்து செயல்படும் அமெரிக்காவின் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றில் முக்கியச் செய்தியாளராகக் கருதப்படும் கெவின் என்பவன் மேக்ஸூக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து எரிச்சலடைகிறான். முன்பு மேக்ஸ் இவனுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதும் இந்த எரிச்சலுக்கு ஒரு காரணம்.

’ஒருவன் குழந்தைகளை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளான், அவன் ஹீரோ ஆக்கப்படுவது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ என்று மேக்ஸுக்குப் போட்டியாக எதிர்க்கோணத்தில் செய்திகளை உருவாக்குகிறான் கெவின். நியூயார்க்கிலிருந்து சிறப்பு விமானத்தில் வரும் கெவின், மேக்ஸ் வேலை செய்யும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடமிருந்து செய்தித் தொகுப்புகளை விலைக்கு வாங்கி அவனே இனி ரிப்போர்ட் செய்வதாகச் சொல்கிறான்.

மேக்ஸ் தொகுத்த செய்தி சாமின் மீது அனுதாபம் பிறக்கச் செய்கிறது. ஆனால் அதை அப்படியே நேர் எதிராக திருத்தம் செய்கிறான் கெவின். உதாரணத்திற்கு சாமின் மனைவியின் பேட்டியை எடுத்து, தனக்கு வேண்டியே வாக்கியங்களை திருத்தம் செய்து சாமை ஒரு தீவிரவாதியாகச்  சித்தரிக்கிறான். கெவின் மற்றும் மாக்ஸின் போட்டியால் சாமின் உயிருக்கு பெரும் அபாயம் ஏற்படுகிறது.

யாரோ ஒருவரைப் பிடித்து,  அவர் தான் காவலர் சாமின் பக்கத்து வீட்டுக்காரர் என்று பேட்டியெடுக்கிறார்கள். அவர் ஏதேதோ உளறும்போது “சாம் அவ்வபோது கோபப்படுவான்” என்று பேச்சுவாக்கில் கூறுகிறார். இந்தப் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்து சாமின் குடும்பத்தார் குழப்பம் அடைகிறார்கள். ‘யார் இந்த நபர், இவரை நாம் எப்பொழுதுமே பார்த்ததில்லையே?!” என்று யோசிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கருப்பினத் தொலைக்காட்சிகள் கருப்பர் க்ளிஃப் சுடப்பட்டதற்கு இனவெறிதான் காரணம் என்று செய்தியைப் புனைகிறார்கள். காவலர் க்ளிஃப்,சாம் தன் நண்பர் என்றும், அவன் தனக்கு எந்தத் தீங்கும் நினைக்கமாட்டான்  என்றும் சொல்வதை எடிட் செய்து நீக்குகிறார்கள். இதற்கிடையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பர் க்ளிஃப் இறந்து விடுகிறார்.

ஏற்கெனவே நாட்கள் சென்று கொண்டிருப்பதால் விரக்தியடைந்த பெற்றோர்கள் சாம் மீது எரிச்சல் கொள்கிறார்கள். நிலைமை தலைகீழாக மாறுகின்றது. சாமுக்கு உதவியாக மேக்ஸ் ஏதும் செய்ய முடியாமல் திணறுகிறான். போலிஸ் சாமை சுட்டுப் பிடிக்க தயாராகின்றது.

சாம் நிலைமையை உணருகிறான். சிறுவர்களையும், மேக்ஸையும் வெளியேறச் சொல்லிவிட்டு, பையில் கொண்டு போயிருந்த வெடிமருந்தை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொள்கிறான். வெடிவிபத்தில் காயமுறும் மேக்ஸ் அதிர்ச்சியில் ஒரு இடத்தில் அமருகிறான். அவனை எல்லா தொலைக்காட்சி காமிராக்களும் சூழ்ந்து கொள்கின்றன. ”உள்ளே என்ன நடந்தது ?” என்று அவர்களைனவரும் கேட்கின்றனர்.

“நாம் சாமைக் கொன்று விட்டோம்‘’ என்று கத்தியபடி நடக்கிறான். அதுவும் நேரடியாக ஒளிபரப்பாகின்றது.

மேட்-சிட்டி-2

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியில்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி‘ என்ற பிரபலமான கூற்றே இன்றைய 24 மணி நேர செய்தி ஊடகங்களின் தாரக மந்திரம். ஒருவேளை நாய்தான் வழக்கமாக மனிதனைக் கடிக்குமென்றாலும், அதையே ஒரு தூரக்காட்சியில் நேரெதிராகக் காட்டுவதை இந்த ஊடகங்கள் விரும்பிச் செய்கின்றன.

படத்தில் வரும் ஒரு காட்சியின்படி அருங்காட்சியகத்தில் குழந்தைகளுடன் மாட்டிக்கொண்ட சாம் அவர்களுக்கு கதை சொல்கிறான். தன் பாதுகாப்பிற்கு வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து அமெரிக்கப் பழங்குடிகளைப் போல் ஆடியும், நடித்தும் காண்பிக்கிறான். ஆனால் இதை ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து படமெடுக்கும் செய்தி நிறுவனங்கள் அவன் குழந்தைகளை துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதாக அறிக்கை கொடுக்கின்றன. போலிசு அவனைக் கொன்றாவது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்குச் செல்கிறது.

ஒரு காட்சியில் அவர்கள் எதிர்பார்க்கும் பொருட்கள் இடம்பெற்று விட்டாலே போதும், மீதித்  திரைக்கதையை ஊடகங்கள் எழுதி, உருவாக்கி விடுகின்றன. சமீபத்தில் கவுகாத்தியில் ஒரு பெண் துகிலுறியப்பட்ட வன்முறை அனைத்து ஊடகங்களிலும் வெளியாயின. எல்லோரும் இந்தக் காட்சியை வெளியிட்டபடி ‘நாடு இப்படிக் கெட்டுக் கிடக்கின்றதே! பெண்களுக்கு பாதுகாப்பில்லையே!‘ என்று கவலைப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் இந்தக் காட்சியைக் காட்டுவதற்காகத்தான் இத்தகைய ’கவலைகளே’ அன்றி வேறு எதுவுமில்லை. பார்வையாளர்களும் இணையம் முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தக் காட்சியை பார்க்கத்தான் விரும்பினார்களே அன்றி, அந்தப் பெண் மீது இரக்கமோ, அந்தக் கயவர்கள் மீதான கோபமோ கொள்ளவில்லை.

உலக ஊடகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் ரூபர்ட் முர்டோச்சின் செய்தி நிறுவனங்கள் இங்கிலாந்தில் ஒட்டுக்கேட்டு எழுதிய ஊழல் பலராலும் பேசப்பட்டது. அதுவும் இங்கிலாந்து அரச வம்சத்தின் மாளிகைகளுக்குள்ளும் முர்டோச்சின் காது சென்ற பிறகே அது பாரிய தவறாகக் கருதப்பட்டது. ஆனால் முர்டோச்சின் நிறுவனங்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக பல்வேறு பொய்க்கதைகளைத் தயாரித்து வெளியிட்டிருப்பதை யாரும் ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை. போர்க்களச் செய்தியாளர்கள் என்ற பெயரில் அமெரிக்க இராணுவத்துடன் சென்றவர்கள் வியந்து பேசிய கதைகளெல்லாம் ஊடக அறத்தினைக் கேலி செய்வதாக பொதுவில் கருதப்படுவதில்லை.

அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை நியாயப்படுத்துவது போல, பண்பாட்டு ரீதியாக அரட்டை, கிசுகிசு, வி.ஐ.பி.களின் வாழ்வை வியந்தோதும் செய்திகள் போன்றவற்றை வைத்து மலிவாக கல்லாக் கட்டுவதும் இத்தகைய ஊடகங்கள்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பேஜ் 3‘ எனும் இந்திப்படம் நினைவிருக்கிறதா? அதில் மேட்டுக்குடியினரின் ஆட்டம் பாட்டங்களைச் செய்திகளாக வெளியிடும் போது, அவர்களது பாலியல் வன்முறை குறித்த செய்திகளை வெளியிட முடியாமல் பதவியிலிருந்து நீக்கப்படுவாள், படத்தின் நாயகி. பல்வேறு ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்களெல்லாம் இப்படித்தான் கவனமாக தயாரிக்கப்படுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் சிந்தனையோட்டத்தை சில மாதங்களுக்குள்ளாகவே உண்டு உரமாக்கி விடுகின்றனர்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கருப்பு இனக் காவலர் கிளிஃப் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்து சாயும் போது, மேக்சின் உதவியாளரான பெண் ஓடி வந்து அவரைத் தூக்கிவிட உதவி செய்வாள். ’அப்போது ஏன் காமராவால் அதைப் பதிவு செய்யவில்லை?‘ என்று பின்னர் மேக்ஸ் அவளைக் கடிந்து கொள்வான். இறுதிக் காட்சியில் காயமடைந்த மேக்ஸ் தன் தலையில் வழியும் ரத்தத்தை துடைக்க முனைகிறான். அதே உதவியாளர் பெண் அதைத் தடுத்து, ரத்தம் வழிய படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்படியே பேச சொல்லுகிறாள். அவளும் ஊடகத்துறைக்கு ’தயாராகி’ விட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் மனித நேயத்தோடு செயல்பட்டவள் பின்னர் ஊடகங்களின் இரக்கமற்ற நெறிமுறைக்குத் தயாராகி விடுகிறாள்.

கவுகாத்தி பெண் மீதான பாலியல் வன்முறையில் கூட அதைப் பதிவு செய்த உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பல விமரிசனங்கள் வைக்கப்பட்டன. தொலைக்காட்சி செய்தி பரபரப்புக்காக நிருபரே தூண்டி விட்டு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தாண்டி வேறு சில அறிஞர்கள் ஒரு ஊடகவியலாளனின் கடமை ஒரு சமூக நிகழ்வைப்  பதிவு செய்வதிலிருந்தே மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி, அந்தப் பிரச்சினைக்கு அவன் உதவினானா, இல்லையாவென ஆராய்தல் தவறு என்கிறார்கள்.

ஊடக உலகில் ஒரு பத்திரிகையாளனது அறம் என்பது அவனது தனிப்பட்ட விழுமியங்களால் உருவாக்கப்படுவது இல்லை. அப்படி இருந்தாலும் அது நடைமுறைக்குச் செல்லும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதில்லை. பத்திரிகை முதலாளிகளின் வர்த்தக நோக்கே ஊடக உலகின் நெறிமுறைகளைத் தீர்மானிக்கும் அடிப்படையைக் கொண்டிருக்கிறது. ஆகவே எதனைச் செய்தியாகப் பார்க்க வேண்டும், செய்தியை எப்படிப் பார்க்க வேண்டும், எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதிலெல்லாம் இந்த புதிய பத்திரிகையாளர்கள் விரைவில் கை தேர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.

மலிவான பரபரப்புச் செய்திகளைத்தான் பரந்துபட்ட வாசகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்று முடிவு செய்து கொண்டு, இவர்களாகவே அத்தகைய செய்திகளைத் தெரிவு செய்கிறார்கள். அல்லது ஒரு செய்தியின் கோணத்தை அப்படி மாற்றி விடுகிறார்கள். மக்கள் போராட்டம் ஒன்றின்மீது போலீசு நடத்தும் தாக்குதலைக் கூட காட்சி ரீதியாக வெறும் சண்டைக் காட்சி போல மாற்றி விடுகிறார்கள். ஆகவே ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் முரண்படுவதில்லை.

நிகழ்வு ஒன்றினைப் பதிவு செய்து, பொது மக்களிடம் காண்பிப்பது ஒரு பத்திரிகையாளனது அடிப்படைக் கடமை என்றாலும் அத்தகைய நிகழ்வின் மீது அவன் யார் சார்பில் பேச வேண்டும் என்பது முக்கியமானது. நடுநிலைமை என்று பொதுவில் கூறப்படும் ஒன்று உண்மையில் இருக்கவே முடியாது. அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் ஒரு பத்திரிகையாளன் அதை மக்கள் நோக்கிலிருந்தே பேச முடியும். ஆனால் அதிகார வர்க்கத்திடம் அடிபணிந்து போகும் ஊடகச் சூழ்நிலையே இன்று செல்வாக்கு செலுத்துகிறது. இறுதியில் தனது பணி குறித்து எந்த பத்திரிகையாளருக்கும் குற்ற உணர்வு வருவதில்லை. அந்த அளவுக்கு பிழைப்புவாதம் கோலேச்சும் சூழ்நிலையில் வாழ்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவின் புகைப்பட பத்திரிகையாளரான கெவின் கார்ட்டர் 1993 இல் சூடானுக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுமி பட்டினியாலும், வறட்சியாலும் எலும்பும் தோலுமாக இருக்க, அருகே செத்த விலங்குகளைத் தின்னும் ஒரு பெரிய பறவை அவளை நெருங்க முயற்சிக்கிறது. அந்தப் பறவையை தொந்திரவு செய்யாமல் அதுவும், சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் 20 நிமிடங்கள் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். அந்தப் புகைப்படம் 1994ஆம் ஆண்டு புக்கர் பரிசைப் பெறுகின்றது.

கருத்தரங்கு ஒன்றில் படத்தில் இருக்கும் அந்தச் சிறுமிக்கு பிறகு என்ன ஆனது என்று பலரும் கேட்கிறார்கள். உண்மையில் கார்ட்டருக்கு அது குறித்து எதுவும் தெரியாது. படம் எடுத்த பிறகு அவர் திரும்பி விட்டார். இதனடிப்படையில் கார்ட்டர் மீது பலமான விமரிசனம் எழுப்பப்படுகின்றது. உயிர் போகும் நிலையில் உள்ள சிறுமியைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், வெறுமனே புகைப்படம் மட்டும் எடுத்த அவரது செயலைப் பலரும் கண்டிக்கிறார்கள். இதன் பிறகு இரண்டு ஆண்டுகளாய் இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கார்ட்டர் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆனால் இன்று அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டால் யாரும் அந்த கேள்வியையோ, விமரிசனத்தையோ முன்வைக்கப் போவதில்லை. அத்தகைய அடிப்படை அறத்தை ஊடகங்கள் கொன்று விட்டதால், எந்தப் பத்திரிகையாளரும் அப்படி தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்று இல்லை.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_______________________________________________________

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?

25

வாங்கும் பொருளை உற்றுப் பார்ப்பவர்கள்
இதை வழங்குவோர் வாழ்க்கையை
நெருங்கிப் பார்த்ததுண்டா?

கடை சாத்தப் போகும் கடைசி நேரம் …
அரைக் கிலோ அரிசிக்கு
எடை போட வேண்டும்.
சிதறிய பொருளில் பசியாறி
சிற்றெறும்பும் நேரத்தே உறங்கும்.

ஒவ்வொரு நாளும் பதினோரு மணிக்கு …
ஏங்கிய குடலில் ராச்சோறு திணித்து
மறுநாள் ’லைன்’ வியாபாரிக்குத்
தர வேண்டிய காசைப் பாகம் பிரித்து,
விடிகாலை மார்க்கெட் சாமானுக்கு
வேண்டியதை எடுத்து,
குடும்பச் செலவுக்கு கேட்பதைக் குறைக்கையில்,
மனைவியின் பார்வையும்
மணி பன்னிரெண்டு முள்ளும்
கண்களைக் குத்தும்.
கண்களை மூடினால்
தசை கடுகடுத்துக் கொத்தும்.

அதிகாலை நான்கு மணிக்கெழுந்து
முகம் கழுவி, கொப்பளிக்க
புல் இமை மூடி நிலம் கூட அசந்து தூங்கும்.
எழுந்து கொள்ளும் தாயுடல் வேகத்தில்
இமை திறவாமல் பிள்ளை அசைந்து துவளும்.

இரு சக்கர வாகனத்தை எடுத்து உதைக்கையில் …
நடக்க வழியின்றி நாளும் கடைக்குள்

சிறைப்பட்ட கால்களில் சீரான ஓட்டமின்றி
இரத்த நாளம் வெடுக்கென வலிக்கும்.

வண்டியின் சுமைகள் கூடக் கூட
தனக்கென உடல் ஒன்றிருப்பதை
உணர்த்தும் நரம்பின் வலிகள்.
இத்தனையோடும் …
உங்கள் தேவைகளைத் தருவிக்கும்
சிறு கடை வாழ்க்கை!

பால்குடிப் பிள்ளைக்கு
மனைவி கேட்ட மருந்துகள் மறப்பினும்
கடையில் கேட்ட குரல்கள் துரத்தும்…
பால் பாக்கெட், தண்ணீர்—— கேன்
குழம்பு, வறுவல், பொறியலுக்கேற்ற பலவகைக் காய்,
புலம்பும் எதிர் வீட்டுக்காரர் உடலுக்கேற்ற
பாகற்காய், சுண்டக்காய்,
அவசரமாய் நீளும் கைகளின் தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கோழி முட்டை – என
உங்கள் தேவையின் தெரிவு
கடையினில் தெரியும்.
காலையிலிருந்து காய்ந்த
கடைக்காரரின் வயிறோ
ஒரு தேநீர் கேட்டு இரைப்பை எரியும்!

சில்லறைக் காசுக்கு சீரகம், புளி வரை
’கிரடிட்’ அட்டை தேவையில்லை …
சிறு சிகரெட் அட்டையில்
உங்கள் கடன் மொழி அடங்கும்.
வாந்தி, மயக்கம் அவசரத் தேவைக்கு
அடைத்த கடையைத் திறந்து உடனே
சோடா, ஜிஞ்சர் பீர் …
முகம் வாடாமல் அண்ணாச்சி உழைப்பில்
மனித உறவு தொடங்கும்.

பசி, நீர் ஒடுக்கி
சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு
நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல்
தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும்
அண்ணாச்சி வாழ்க்கையைக்
காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’

தெரிந்தவர் வாழ்க்கை அழிபடும் தருணம்
தெரிந்தே நழுவுதல் தேசத் துரோகம்.
ஆபத்து ! அண்ணாச்சிகளுக்கு மட்டுமல்ல.
சில்லறை உணர்ச்சிகளின்
அந்நியப் பாக்கெட்டுகளில்
அடைக்கப்படப் போவது நீங்களும் தான்!
இதயத்தை விற்கச் சம்மதிக்காதவர்கள்
போராடுகிறார்கள்… நீங்கள்?

– துரை. சண்முகம்.

_______________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________________

கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!

10

ஓவியர்-மருது

சுதா வந்துட்டாளாம்! சுதா வந்துட்டாளாம்!“ என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாய் பேசிக் கொண்டும், செய்தியைப் பரிமாறிக் கொண்டும் ஊரை வலம் வந்தார்கள்.

‘எப்படித்தான் மனம் வந்து செய்துருப்பாளோ?!  நிலமை இப்படி இருக்கும் போது அவள் என்ன தான் செய்வாள்? அதெல்லாம் டாக்டர்ட்ட காம்பிச்சு சரி செஞ்சுடலாமாம். மனசு பேதலித்துத்தான் இப்படி செய்திருப்பான்னு நினைக்கிறேன்‘ இவையெல்லாம் அவளைப் பார்த்தவர்கள் பகிர்ந்தவை. அவர்களைப் பார்த்தபடி வீட்டின் முன் நின்று கொண்டிருந்த என்னை அந்த வார்த்தைகள் குடைய ஆரம்பித்தன. இது வெறும் புறணி பேசும் மக்களுடைய கதைகள் என்றால் அதை நான் சட்டை செய்திருக்க மாட்டேன். இது அடிவயிற்றைப் பிசையும் ஒரு மனவலி.

நானும் சுதாவை பார்க்கும் எண்ணத்துடன் வேலைகளைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென ஓடிக் கொண்டிருந்தேன். வேலையின் ஊடே இடையிடையே அவளின் கம்பீரமான நடையும், வைரம் போன்ற கருமையான அழகும், பெண்களுக்கென கிராமங்கள் விதித்திருக்கும் கட்டுப்பெட்டித் தனத்தை மீறாத அவளது அப்பாவித்தனமும் என் நினைவில் நிழலாடியது. கிராமத்து மொழியில் சொன்னால் ‘அவள் நல்ல உழைப்பாளி, பார மாடு மாதிரி எல்லா வேலையும் செய்வாள்‘.

அவள் இடத்தில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேனோ என்றெல்லாம் எண்ணத்திலே களைப்பூட்டும்படி நீந்தியதால் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை. அவளைப் பார்த்தால் தான் மனசு ஆறுமென்று தோன்றவே, பக்கத்தில் உள்ள உறவுக்காரப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சுதாவைப் பார்க்க விரைந்தேன்.

சுதாவைப் பார்த்த நொடியில் விக்கித்து நின்று விட்டேன். நான் பார்த்த சுதாவா அவள்? கல் தூண் போன்ற அந்த கம்பீரம் எங்கே? தலைவிரி கோலமாக, கழுத்து முழுதும் காயமாக, நான் பார்த்த உடம்பில் பாதியாக, நிலைகுத்திய கண்களுடன் செத்தும் சுடுகாடு தெரியாதவள் போல காட்சியளித்தாள். பேய் அறைஞ்சா மாதிரி என்று சொல்வார்களே அது போல் ’யார் வருகிறார்கள், யார் போகிறார்கள்?’ என்று உணராமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் கிணற்றில் போட்ட கல் போல குந்தியிருந்தாள்.

அவள் அம்மாதான் என்னைப் பார்த்த மாத்திரத்தில் கதறி அழுதார்.

“பாத்தியாளாயி என் மவளை! நாங்க இனிமே என்ன செய்யுவோம்? எப்படியெல்லாம் இருந்தா! உங்கள்ட்டெல்லாம் நல்ல பேரு எடுத்தாளே… இப்படியொரு அவப்பெயர எடுத்துட்டு வந்து உக்காந்திருக்காளே… இந்த ஊரு என்னா சொல்லும்? இனி யாரு எங்கள மதிப்பா? நான் இந்த ரெண்டு பொம்பளப் பிள்ளைவள வளக்க படாத கஷ்டமா? விதி விட்ட வழின்னு இல்லாம இந்தப் பாவி மவ இப்புடி செஞ்சு வச்சுருக்காளே? நான் இனி என்ன செய்வேன்? கூலி வேலைக்குப் போய் இந்தக் குடும்பம் பண்ணுனனே! இனி இவள பாதுகாத்துட்டு உக்காந்திருக்க முடியுமா? ஆம்பள துணையில்லாம 18 வயசுலேருந்து பொம்னாட்டியிலும் கம்னாட்டியா இருந்து கஷ்டப்படுறனே..இனிமே இந்த ஊர் எம்மவள கொலைகாரின்னு சொல்லுமே! எப்புடி உசுர வச்சுகிட்டு இருக்குறது? இந்தக் கடவுளு நம்மள கொண்டுட்டு போகாதா…..”

சுதா கொலை செய்தாள் என்பதை நினைத்துப் பார்க்கவே மனது நம்பவில்லை. ஆனால் உண்மை அதுதான். இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை, கோழி கூப்பிடும் நேரம். ஐந்தரை மணியிருக்கும். நான் எழுந்திருக்கவே இல்லை. அந்த நேரத்தில் மனிதர்களின் சலசலப்பு சத்தம் என்னைத் தட்டி எழுப்பியது.

ஊரில் என்ன நடந்திருக்கும்? திருட்டு எதுவும் நடந்து விட்டதா? இல்லை யாரும் தற்கொலை எதுவும் செய்து கொண்டார்களா? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘.

♥ ♥

சுதாவுக்கு அப்பா, அண்ணன் என்று யாரும் ஆண் துணை கிடையாது. அம்மா, சுதாவோட நாலு வயசு மூத்த அக்கா என்று மூன்று பேரும் பெண்கள்தான். சொந்தமா ஒரு குடிசை, ரெண்டு முந்திரி மரம் கொண்ட ஐம்பது குழி குட்டியூண்டு நிலம் – இதுதான் அவங்களோட சொத்து. களை பறிக்க, கடலை பிடுங்க, கடலைக் கொடி ஆய, உளுந்து-பாசிப் பயிறு-எள்ளுச் செடி பிடுங்கன்னு பொம்பளைங்க செய்யுற எல்லா கூலி வேலையும் செய்ஞ்சுதான் பொழப்பை ஓட்டுனாங்க. இதுக்கெல்லாம் இப்பவும் கூலி 25 ரூபாதான்.

இந்த கஷ்டத்திலயும் சுதா பத்தாவது வரை படித்தாள். பிறகு பக்கத்து நகரத்தில் உள்ள சீவல் கம்பெனி வேலைக்கு ஒரு நாலு வருசமா போனாள். அந்த வருமானத்தில்தான் தனது திருமணத்துக்குத் தேவையான நகை, நட்டுக்களை வாங்கிச் சேர்த்தாள். உறவினர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். ஒரு வழியா 2003-ஆம் வருசத்துல சுதாவுக்கு கல்யாணம் நடந்தது. அவ பிறந்து வளர்ந்ததும் ஒரு கிராமம்னா, வாக்கப்பட்டதும் ஒரு கிராமம்தான். அவ பிறந்த ஊருதான் நான் வாக்கப்பட்ட ஊரும்.

சுதாவின் கணவன் அவனோட கிராமத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு சிற்றூர் சினிமா தியேட்டரில் டிக்கட் கொடுக்கும் வேலை செய்து வந்தான். மாலை, இரவு நேரம் மட்டும் சினிமா ஓடும் டூரிங் தியேட்டர் அது. சுதாவுக்கும் அவனுக்கும் 15 வயது வித்தியாசம். அந்த வட்டாரத்துல சுதா மாதிரி ஏழைங்கள ரெண்டாம் தாரமாவோ, இல்லை இது மாதிரி கல்யாணம் ஆகாம அதிக வயசுல இருக்கிற ஆம்பளைங்களுக்கு கட்டிக் கொடுப்பதோ தான் வழக்கம். எப்படியாவது கல்யாணம் நடக்கணும்கிறதைத் தாண்டி விருப்பப்பட்டெல்லாம் நடக்கவே நடக்காது.

எது எப்படியோ, சுதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூன்று வருட இடைவெளியில் பிறந்தன. முதல் குழந்தைக்கு மூன்று வயதாகி, இரண்டாவது குழந்தை மாசமான சமயத்தில் அவள் கணவனின் உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துவரிடம் காண்பித்தார்கள். குச்சி போல நடக்கத் தெம்பில்லாமல் இருந்தவனுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு சோதனை எடுத்துப் பார்த்தார்கள். அப்போதுதான் அவன் எமன் மாதிரி சுதாவின் வாழ்வில் வந்தவனென்று தெரிந்தது. ஆம் அவனுக்கு எய்ட்ஸ் உள்ளதைக் கண்டுபிடித்தார்கள்.

பிறகு கர்ப்பமுற்ற சுதாவையும் பரிசோதித்தார்கள். அவளுக்கு மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு முதல் குழந்தையையும் அழைத்து சோதனை செய்து, அதற்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று கூறி விட்டனர். மொத்தக் குடியிலும் இடி விழுந்தது போல சுதாவைத் தாக்கியது எய்ட்ஸ். என்ன செய்வாள் அந்த அபலை?

இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு மாத காலத்துக்குள் கணவன் எய்ட்ஸ் நோய் முத்திய நிலையில் இறந்து விட்டான். பெண் எந்த நிலையில் இருந்தாலும், சுயநினைவே இல்லாவிட்டாலும், அவளுக்குச் செய்யும் விதவைச் சடங்கைச் செய்யாதிருக்காது இந்தச் சமூகம். பொட்டழித்து, பூப் பிடுங்கி, பின்னலைக் களைந்து தலைவிரி கோலமாய், தலையில தண்ணீர் ஊத்தி, வெள்ளைத் துணி போட்டு மூடி, ஏனைய விதவைப் பெண்கள் பிடித்துக் கொள்ள, நாவிதர் தாலியை அறுத்து பால் இருக்கும் கிண்ணத்தில் போட, யாரையும் பார்க்க விடாமல் துணி போட்டு மூடி, பாடைக்கும் கீழே குனிந்தபடி, வீடிருக்கும் வீதி வரை நடக்க வைத்து….. இறுதியில் வீட்டின் மூலையில் அவள் முப்பது நாட்கள் முக்காடு போட்டபடி, ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.

இப்படியாக சுதாவை ஒரு மூலையில் சாத்தி வைத்தது சமூகம். கணவன் இறந்து முப்பதாவது நாள் இறுதியாக ஒரு காரியம் செய்வார்கள். அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லா உறவுகளும் பொறுப்பு முடிந்தாகக் கலைந்து சென்று விடுவார்கள்.

அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அப்போது யாரும் குழந்தைகளை நினைக்கவில்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகத்தான் எல்லாரும் கருதினார்கள். சுதாவை காரில் அனுப்பிய கையோடு குழந்தைகளுக்கு கடையில் டீ வாங்கிக் கொண்டு வீடு வந்து எழுப்பிய போதுதான் குழந்தைகள் இறந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

சுதா பிறந்த ஊரான எங்க ஊருக்கும் சேதி சொல்லப்பட்டது. அந்த செய்தி கேட்டுத்தான் மக்கள் கும்பல் கும்பலாக நிறுத்தாமல் பேசியபடியே இருந்தனர். பிறகு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடி, சுதா வாக்கப்பட்ட ஊருக்கு போய் என்ன ஏது என்று பார்ப்போமெனப் புறப்பட்டனர்.

சொல்லப்பட்டவை, அதாவது சுதா குழந்தைகளைக் கொன்றது உண்மைதான். அவளது கணவர் வீட்டுக்காரர்கள் சுதாவை மருத்துவமனையில் இருந்து தங்களது ஊருக்கு வரக் கூடாது,  அப்படியே பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள், இல்லையின்னா போலீசுக்குப் போவோம் என்றனர். சுதாவின் ஏழைத் தாய் என்ன செய்வாள்? தற்போதைக்கு சுதாவை ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு, குழந்தைகளை அடக்கம் செய்த பின் தாயும், ஏனைய பிறந்த ஊர்க்காரர்களும் சுதாவை அழைத்துச் சென்று விடுகிறோம் என்றார்கள்.

அந்த ஊர்க்காரர்களும் அதுதான் நல்லது, போலீசுக்குப் போய் என்ன பிரயோசனம்? யாருக்கு என்ன நன்மை?! என்று கூறி சுதாவை பிறந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகுதான் எங்க கிராமத்து பதட்டம், பரபரப்பில் நானும் சுதாவின் வீடு வந்து அவளைப் பார்க்கிறேன். அவளது தாய் அழுது அரற்றிய போதும் என்னால் ஒன்றும் ஆறுதலாகச் சொல்ல முடியவில்லை. அப்படி ஆறுதல் சொல்லுமளவு அந்த சம்பவம் லேசானதில்லை; நானும் வலிமையானவளில்லை.

♥ ♥

ப்படியே சில மாதங்கள் சென்றன. சுதாவின் கழுத்துப் புண் ஆறியது. எய்ட்ஸ் பயம் குறித்து அறிந்திருந்த கிராமத்தினர் சுதாவோடு தொட்டுப் பழகி உறவாடாத படிக்கு ஒரு இடைவெளியைக் கவனமாக வைத்தே அணுகினர். சுதாவோ அதையெல்லாம் ஒரு குறை என்று எடுத்துக் கொள்ளாதபடிக்கு சோகத்திலும், வேதனையிலும் வெகு தொலைவு போயிருந்தாள். திருமணத்திற்கு முன் சீவல் கம்பெனி வேலைக்குச் சென்ற இடத்தில் உள்ள பெண்கள் சிலர் வந்து பார்த்துச் சென்றனர். “சுதாவை இப்படி வீட்டிலேயே அடைத்து வைத்தால் அவளது மனது இன்னும் பாதிக்கப்படும். ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம். அனுப்புங்கள்” என்றனர் அந்தப் பெண்கள்.

“ஊரே கண்டு பயப்படும் எய்ட்ஸ் நோயுள்ள பெண்ணை எப்படி வேலைக்கு அனுப்புவது, யார் ஏற்பார்கள் ?” என்றாள் சுதாவின் அம்மா. “காசுக்காக இல்லை என்றாலும் மன நிம்மதிக்காக சில வேலைகள் இருக்கின்றன. விசாரித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று அந்தப் பெண்கள் கூறினார்கள்.

அவர்கள் மூலமாக நகரத்தில் உள்ள மருந்துவமனையில் எய்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவச் சேவைக்கு அழைத்துச் சென்றனர். சுதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மரணத்தை நிச்சயமாகத் தேதியிட்டு அறிவிக்கும் எய்ட்ஸ் நோயை எதிர்கொண்டு வாழ்வது குறித்து அவளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுதாவும் ஓரளவு முன்னேறியிருந்தாள். யாரையும் நிலைகுத்திய விழிகளால் துளைக்கும் அவளது முகத்தில் கொஞ்சம் சாந்தம் குடியேறியது போல இருந்தது.

பிறகு அங்கேயே ஒரு வேலையும் போட்டுக் கொடுத்தார்கள். அவளைப் போல் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை, அவர்கள் வசிக்கும் ஊர்களுக்கே சென்று, நம்பிக்கைத் தரும் வண்ணம் பேசி பழக்கப்படுத்த வேண்டும். அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் கொடுத்து வர வேண்டும். மற்றவர் துயர் துடைக்கும் இந்த வேலையினூடாக சுதா தன்னுடைய சோகத்தை சற்று மறந்திருந்தாள். அந்த வேலையை உற்சாகமாகவே செய்து வந்தாள்.

சுதா வேலைக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் என்னிடம் நட்பாகப் பழகுவாள். நான் அவள் மேல் இரக்கப்பட்டு, பரிதாபமாகப் பார்ப்பேன். சுதா பஸ்ஸை விட்டு இறங்கிச் செல்லும் வழியில் என் வீடு இருந்தது. அவள் வீடு சற்றுத் தூரத்தில் இருந்தது. என் வீட்டில் சற்று இளைப்பாறி விட்டு, பேசிக் கொண்டிருப்பாள்.

அப்பொழுது சுதா வேதனையுடன் சொன்ன கதைகள் பல.

‘நான் மட்டும் இல்லக்கா. என்னப் போல நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நான் ஒரு ஊருக்குப் போனேன். அங்க ஒரு பொண்ணு சொன்னிச்சு, “அவன் எங்கெல்லாம் அரிப்பெடுத்துப் போனானோ? மொத்தப் பாவத்தையும் எம் மேல இறக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு நடுத்தெருவுல நிக்கறேன்.” இதுனாலும் தேவலாம். இன்னொரு ஊருல நடந்ததக் கேளுக்கா. கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல பொண்டாட்டி கிட்ட ஒருத்தன் எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லியிருக்கான். பெறவு அந்த பொண்ணு தற்கொலை செஞ்சு செத்துப் போச்சு. திரும்பவும் பொம்பள சுகம் தேடி அந்த கம்னாட்டி இன்னொரு பொண்ணையும் கண்ணாலம் பண்ணியிருக்கான். பெறவு அவனும் நோய் முத்தி செத்துட்டான். இந்தக் கதையை அவனோட ரெண்டாவது சம்சாரமாயிருக்கிற பொண்ணு சொல்லிச்சு. நல்ல வேளை! அந்தப் பொண்ணு செஞ்ச புண்ணியம்.. அதுக்கு எய்ட்ஸ் இல்ல.‘

இதையெல்லாம் சுதா அழுதபடிதான் சொல்லுவாள். அழும்போது, “எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க! பாவிப் பயலுவ… பொம்பளையா பெறந்தா பாவப்பட்ட ஜென்மாமா ஆயிறோம். எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு போக வேண்டியதா இருக்கு. இவனையெல்லாம் கொன்னு மரத்துல தொங்க விடணும். புதைக்க கூடாது, காக்கா, கழுகுதான் தின்னுட்டுப் போகணும்…” என்று அவள் சொல்லும்போது பாவப்பட்ட பெண்ணினத்தின் குமுறல் இறுதியில் சாபமாகவும் வரும். இப்படி அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்கும் போது அன்றைய பொழுது பேயறைந்தாற் போல் இருக்கும்.

ஒரு நாள் என் அம்மா என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்தார்.  வேலைக்குச் சென்று திரும்பிய சுதா அன்று மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். “ஏன்? உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தேன். அம்மா தண்ணி கொண்டு வந்து கொடுத்தார். அவள் சிரித்துக் கொண்டே “வேண்டாம்மா! நான் தண்ணி வைச்சிருக்கேன்” என்றாள். என் அம்மா இருமியதைப் பார்த்து அவள் வைத்திருந்த இருமல் மருந்தை தயக்கத்துடன் கொடுத்தாள். ஒரு எய்ட்ஸ் நோயாளி தரும் மருந்தை சாதாரண மக்கள் வாங்க யோசிப்பார்களில்லையா?

அப்படியெல்லாம்  நினைக்கவில்லை என்பதாக வாங்கிக் கொண்டார் என் அம்மா. எங்கள் கிராமத்து நர்சின் உதவி ஆயாவாக வேலை பார்த்திருப்பதால் என் அம்மாவுக்கு அப்படி ஒரு தயக்கம் இல்லை.

“என்ன சுதா! மறுபடியும் உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார் என் அம்மா. “நான் நல்லாத்தான் இருக்கேம்மா! ஊருல சனங்க பேசற பேச்சுதான் நம்மை சாகடிச்சுரும் போல இருக்கு” என்றாள். “ஏன்? யாரு என்ன சொன்னாங்க?” என்றேன்.

“வீட்ல சும்மா இருக்கும்போது மனசு எதையாச்சும் நினைச்சுக்கிட்டே இருக்குதேன்னு பக்கத்துல நம்ம மாமா வீடுதானேன்னு  டி.வி. பார்க்கப் போனேன். அந்த வீட்டு அத்தை சொன்னாங்க, ’சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத! இது புள்ள குட்டிங்க புளங்குற இடம். உன் நோய் எல்லாத்துக்கும் வந்திருச்சுன்னா என்னா பண்றது?’ பெரியப்பா வீட்டுக்குப் போனா டி.வி.யை இழுத்து வாசல்படிக்கு நேரா வைச்சு திண்ணையில ஒரு ஓரமா ஒக்காத்து பார்த்துட்டு போங்கிறாங்க. டி.வி. பார்த்துட்டுப் போன பிறகு நான் உக்காந்த இடத்தை தண்ணி விட்டுக் கழுவி விடுறாங்க. எனக்கு கோபம் வரல, அவங்க அறியாமையை நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். இது கூட பரவாயில்லம்மா. சில பேரு நான் திமிரெடுத்துப் போய் பிள்ளைகளை கொன்னுட்டு, மினிக்கிக்கிட்டுத் திரியறதா சொல்றாங்க.”

“புருசன் இல்ல. பிள்ளைவ என்னத்துக்கு எடைஞ்சலான்னு கொன்னுபுட்டு ஊரு மேயுறான்னு சொல்றாங்க. அதைத்தான் என்னால தாங்க முடியலக்கா!” என்று கதறி அழுதாள். அவளது ஒழுக்கத்தையும், முக்கியமாக தாய்மையைக் குத்திப் பேசுவதையும் சுதாவால் எப்போதும் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை.

“காய்ச்சலும், தலை வலியும் வந்தவங்களுக்குத்தான் கஷ்டம் புரியும்” என்றேன். சுதாவோ தன் மனக்குமுறலை அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தாள்.

“ஜனங்க என்ன வேணா சொல்லட்டும். திமிரெடுத்துப் போயி வச்சுக்க முடியாம குழந்தைகளை கொன்னுபுட்டு திரியுறாங்கறாங்க. அதைதான் பொறுத்துக்க முடியல. நான் என்ன பரம்பரையாவா கொலை செஞ்சுட்டு திரிஞ்சேன்? என் நேர காலம். எங்க அம்மா ரெண்டு பொம்பளப் புள்ளைவள வெச்சுகிட்டு கஷ்டப்பட்டுச்சு. நான் இந்த நோய்வளோட இந்தப் புள்ளைவளை வச்சுகிட்டு என்னத்த செய்ய? அதுங்க இருக்கிறத விட சாவுறதுதான் மேலு. பிளான் பண்ணியா கொல செஞ்சேன்? ஆறு மாசத்துல எத்தனை பிரச்சினை? எதை நினைக்கிறது, எதை விடுறதுன்னே தெரியல. கல்யாணம் ஆகாம முத்திப்போய் எங்கயோ கிடந்தவன எந் தலையில கட்டி வெச்சாங்க. சினிமா கொட்டகையில டிக்கெட் கொடுத்துட்டு அங்கயே எத்தனை பேருகிட்ட படுத்து எந்திரிச்சானோ! எம் பாவத்துல விழுந்துட்டான். பொண்ணா பொறந்து என்ன சந்தோஷத்த அனுபவிச்சோம். பொம்பளையா பொறக்குறதே பாவம்க்கா.”

“நான் தூக்கு போட்ட அன்னைக்கே போயிருந்தா என் கதயும் முடிஞ்சிருக்கும். பெத்த பிள்ளைக்குத்தான் அம்மாவா இருக்க முடியல; பெத்தவளுக்காவது பிள்ளையா இருப்போம்னு இருக்கேன்” என்று தேம்பி தேம்பி அழுதாள் சுதா.

♥ ♥

ப்படியாக ஒரு வருட காலம் சென்றது. ஊர் அவளை நடைப்பிணமாகக் கூட வாழ விடவில்லை. “சுதாவை பாருங்க முடி கட் பண்ணி, ஸ்டைலா செருப்பு போட்டுக்கிட்டு, பொட்டு வச்சுக்கிட்டு போறத. அவளை யாராச்சும் ஒரு தாலியறுத்தவன்னு சொல்லுவாங்களா? ஊருக்குள்ளே இப்படி திரியறவ டவுணுக்குள்ள போயி என்னென்ன பண்ணுவாளோ”ன்னு ஒருத்தி எங்கிட்டயே பேசினாள். அவளிடம் சண்டை போட்டேன். “ஆட்டுக்கு வால அளவெடுத்துதான் வச்சுருக்கான் ஆண்டவன்” என்று சுதாவின் அவலத்தை விதியாக்கி சாபம் விட்டாள் அந்தப் பெண்.

இது போன்று என்னென்ன வார்த்தைகள் சுதாவைக் குதறியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எய்ட்ஸ் ஒருபுறம் அவளை அரித்தது என்றால், சமூகம் இன்னொரு புறம் அவளை உயிருடன் வதைத்தது.

அவளது குழந்தைகள் இறந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகி விட்டன. அந்த நாளும் வந்தது. பகல் நேரம். சுதாவின் அம்மா வயல் வேலைக்குச் சென்றிருந்தார். மதியம் 12 மணி இருக்கும். கோடை காலம் என்பதால் ஊரே அடங்கியிருந்தது. வேலை முடிந்து வந்த சுதாவின் தாய் மகளைக் காணவில்லையே என்று அருகாமை வீடுகளில் தேடினார். பிறகு தெரு ஜனங்களும் தேடினார்கள். இறுதியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் சுமார் ஒரு ஃபர்லாங் தூரத்தில் உள்ள மரங்கள் அடங்கிய தோட்டமொன்றில் சுதா தனது 28 வருச வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தூக்கில் பிணமாகத் தொங்கியதை மக்கள் கண்டுபிடித்தார்கள்.

எங்கள் கிராமத்தில் தூக்குப்போட்டு இறப்பவர்களை வீட்டுக்குக் கொண்டு வர மாட்டார்கள். ரொம்ப நேரமும் வைத்திருக்க மாட்டார்கள். பேய் பயம்தான் முக்கியமான காரணம். அதன்படி சுதாவும் அப்படியே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, எரிக்கப்பட்டாள்.

( உண்மைச் சம்பவம். ஊர்ப்பெயர் தவிர்க்கப்பட்டு, அந்தப் பெண்ணின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது.)

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!

40

குஜராத்-மோடி

சற்று அதனை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு முதுகுத்தண்டு சில்லிடுகின்றது. குஜராத்தில் முசுலிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அது 2002 -ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 4 -ஆம் தேதி. இனப்படுகொலைகள் தொடங்கி 5 நாட்கள் ஆகியிருந்தது. குஜராத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த கதைகள் எவர் ஒருவரையும் போலவே என்னையும் கலக்கமுறச் செய்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளனுக்கு  இருக்க வேண்டிய துணிச்சலுடன் நான் அகமதாபாத் விரைந்தேன். அகமதாபாத், நான்  ‘ இந்திய மேலாண்மைக் கழகத்தில்’ படித்த காலத்தில் என் நேசத்துக்குரிய நகரமாக இருந்தது.

அகமதாபாத்திற்கு நான் பயணித்த விமானத்தின் இருக்கைகள் பத்து சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தது. விமான நிலையத்தில் இறங்கிய போது எவ்வித மோசமான அறிகுறிகளும் தென்படவில்லை. நகருக்குள் காரில் சென்ற போது எங்கும் கடந்த மூன்று நாட்களின் கொடூரத் தழும்புகள் அதன் தீவிரத்துடன் என் முன் எழுந்து நின்றது. என்னுடன் காரில் உயர்வர்க்கத்தைச் சேர்ந்த  முசுலிம் நண்பர் ஒருவர் உடன் வந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவருடன் செல்லத் திட்டமிட்டேன். கார் ஓட்டுநர் எனது நோக்கம் பற்றி எதுவும் புரியாமல் சற்று கலக்கத்துடன் இருந்தார். எனினும் அதனை வெளிக்காட்டாதவராக ஒரு செயற்கையான அமைதியை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருந்தா ர்.

எங்களுடைய முதல் சுற்றிலேயே 20 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டோம். அடுக்கடுக்காகக் கேள்விகளை எம் முன் வீசினார்கள். பயத்தை எந்தச் சூழ்நிலையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற முடிவில், தைரியத்தை சற்று வரவழைத்துக் கொண்டு, நான் ஒரு இசுலாமியராக இருந்தால் என்னை என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது கேள்வி அந்த கூட்டத்துக்குள் சிறு சலசலப்பை உண்டாக்கியது. உடனே கார் ஓட்டுநர் குறுக்கிட்டு அவர்களுடன் குஜராத்தி மொழியில் பேசலானார். நான் மும்பையிலிருந்து வந்திருக்கும் ஒரு பெரிய அதிகாரி என்று தெரிவித்தார். எதற்கும் தயாரான கூட்டம் அது. எங்கள் காரை சேதப்படுத்தவும் செய்யலாம்; எங்களைத் தாக்கவோ, ஏன் உயிரைப் பறிக்கவோ கூட செய்திருப்பர். ஆனால், சந்தர்ப்பவசமாக எங்களை எச்சரித்து மட்டுமே அனுப்பினர்.

தற்காலிமாக உருவெடுத்த கல்லறைகளில் அப்பாவி மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கொடுங்கனவில் இருந்து மீள முடியாமல் தப்பிப் பிழைத்தவர்களின் வெறுமை சூழ்ந்த கண்கள்; முகாம்களில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, ஈக்கள் மொய்க்க அரைப் பட்டினியோடு சில குடும்பத்தினர் இருந்தார்கள். இன்னொரு பக்கம் தன்னார்வத் தொண்டர்கள் முகாமில் முடக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உழைத்துக் கொண்டிருந்ததோடு, ஊடகங்களுக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பாதி எரிந்து சாம்பலான வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் இழந்த வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு முகாமிலும் சோகம் மற்றவற்றை விஞ்சிய வண்ணம் ஒரு காப்பியத் துயரமாக விரிந்து எங்கள் உணர்ச்சிகளைக் கொன்று தின்றது. மதியம் IIM  மாணவர்களைச் சந்தித்தேன். அதன் பிறகு ‘பிரஷாந்த்’ மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்னிடம் காண்பித்த படுகொலை காட்சிகளில் இருந்த பாதி எரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் என்னைக் கதறியழச் செய்தது. அன்று மாலை ‘நடத்தை அறிவியல் மையத்தில்’ நடைபெற்ற கூட்டம் என் உணர்ச்சிகளுக்குச் சற்று உயிர் கொடுத்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பாதிப்புகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, மறுநிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், நரேந்திர மோடி மிகக் குரூரமாக தனது அரசாங்கத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலக்கிக் கொண்டார். இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்புவது போல இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் முதல்வர் நரேந்திர மோடி இருப்பதற்கான திட்டவட்ட ஆதாரத்தை அவரே அளித்துக் கொண்டிருந்தார். மனித குலம் மோடியின் நடத்தையைக் கடுமையாக கண்டித்த பிறகே லேசாக சில ஒட்டு வேலைகளை அவர் செய்தார்.

வெட்கமில்லை, வேதனையுமில்லை

எண்ணிறந்த உண்மையறியும் குழுக்கள் குஜராத்தைப் பார்வையிட்டு, துயரத்தின் ரத்தம் தோய்ந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அனைத்து அறிக்கைகளும் இந்த மனிதப் பேரழிவுக்குப் பின்னால் மாநில அரசும், மோடியின் தனிப்பட்ட பங்கும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதில் தமக்குள் ஒத்திருந்தன. 2005 மே மாதம் ராஜ்யசபாவில் 254 இந்துக்களும், 790 முசுலிம்களும் கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய வன்முறையில் கொல்லப்பட்டதாக அரசு ஒரு கணக்கை முன்வைத்தது. 223 மக்கள் காணாமல் போனவர்களாகவும், 258 பேர் காயம்பட்டவர்களாகவும், 919 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதாகவும் மற்றும் 606 குழந்தைகள் அநாதைகள் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விபரங்களின் மோசடியை மனித உரிமை ஆர்வலர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.  இந்துக்கள் படுகொலையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்கள். முசுலிம் மக்கள் படுகொலையில் இவர்கள் காலாட்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் அனைத்துமே இசுலாமிய மக்களுடையவை.

அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது போல மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இரூந்திருந்தால் மக்களின் வாழ்க்கை மீதும், உடைமை மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக நேர்மையான முறையில் வருத்தத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மோடியும், அவருடைய சீடர்களும் திரும்பத் திரும்ப முசுலிம் மக்கள் படுகொலைக்கும், சந்தேகமான முறையில் 2002 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி எரிக்கப்பட்டதற்கும் குமட்டலூட்டும் முடிச்சினைப் போட்டு பேசி வந்தார்கள். இந்த வக்கிரம் மோடி மற்றும் பி.ஜே.பியை இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தியது. அவர்கள் நினைப்பது போல அவர்கள் குற்றத்தை மறைக்கவில்லை.

அரசு சார் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் விசாரணை முடிவுகள், நீதிமன்றங்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்து வந்த கண்டனங்களால் ஏற்பட்ட அவமானங்கள் எதனையும் பொருட்படுத்தாமல் மோடி தனது வில்லங்க செயல்பாடுகள் மூலம் இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தி வருகின்றார். கோத்ரா சம்பவத்தின் எதிர்விளைவே இந்த இனப்படுகொலைகள் என்றும் பேசி வருகிறார். மைய அரசு அமைத்த பானர்ஜி கமிஷன் கோத்ரா ஒரு எதிர்பாராத சோக சம்பவம் என்று கூறியது. இந்த அறிக்கையை மாநில அரசு உடனடியாக எதிர்த்தது. கோத்ரா ரயில் எரிப்பின் பயனாளிகள் யாரென்பதை வைத்துப் பார்த்தால், அந்த ரயில் எரிப்புக்குக் காரணமானவர்கள் இந்துத்துவ சக்திகளாகக் கூட இருக்கக் கூடும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மோடி பெற்ற மாபெரும் வெற்றிகளுக்கும் இன்று பிரதமர் வேட்பாளராக மோடி முன்தள்ளப்படுவதற்கும் அடிப்படை கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய முசுலிம் படுகொலைகள் என்பதை ஒருவர் மறந்து விட முடியாது.

ஒளிரும் குஜராத்தின் பொய்கள்

2002 படுகொலைகளுடன் தொடர்பற்றது எனினும் மோடியின் பிம்பத்தைக் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைக்க பயன்பட்ட பொய் எதுவென்றால், குஜராத் முன்னேறுகிறது; ஒளிர்கிறது என்பதாகும்.  இது 2002 இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்று கோருபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் குஜராத் மக்களனைவருக்கும் எதிராக இருப்பதாக அவர்களை பழித்துப் பேச பயன்படுத்துகிறார்கள்.. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் கோரிக்கையை திசைதிருப்பும் விதமாக ‘மறப்போம் , அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’ என்றும் பேசி வருகிறார்கள். முகாம்களை திடீரென மூடிய மோடி, ‘அனைத்தும் சரியாகி விட்டது’ என்று அறிவித்தார். அதன் பிறகு 2003 இல் ‘ஒளிரும் குஜராத் சம்மேளனம்’ எனும் கொண்டாட்டம் ஒன்றை அறிவித்தார். முதலீட்டாளர் அனைவருக்கும் பண்டைய நவாப் பாணியில் மானியங்களை வாரி வழங்கினார். இது முதலாளிகளின் பாராட்டைப் பெற வைத்ததோடு, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தவும் பயன்பட்டது. குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பெரியளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் தகவல் பெறும் உரிமையின் கீழ் அதனை விசாரித்ததில், விளம்பரப்படுத்தப்பட்ட தொகையில் 25 % மட்டுமே, அதாவது மகாராஷ்டிரா, தமிழகம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003 -இல் திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பின்படி குஜராத்தின் 25 மாவட்டங்களில் 20 பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் இருந்தது. அவற்றில் 6 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் இருந்தது. சமூக வளர்ச்சிப் புள்ளி விகிதத்தில் பின்தங்கியிருப்பதோடு, சமூகத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 பெரிய  மாநிலங்களில்  17வது இடத்தில் இருக்கிறது.

தன்னை நவீன குஜராத்தின் சிற்பி என்று கட்டமைத்துக் கொள்ள மோடி, மிகப்பெரிய அளவுக்கு மக்கள் தொடர்புப் பணிகளைக் கட்டவிழ்த்து விட்டார். உண்மை என்னவென்றால், குஜராத் ஏற்கெனவே தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 11 சதவிகிதமாக, தேசிய வளர்ச்சி விகிதத்தில் சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறது.

மாநிலத்தின் கஜானாவை பெருமுதலாளிகளுக்குக் கொள்ளையடிக்கத் திறந்து விட்டதன் மூலம் குஜராத்திலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாக துணை புரிந்தார் மோடி. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பபட்டனர். சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ‘2008 இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம்’ பற்றிய அறிக்கையில் குஜராத், ஒரிசாவை விடக் கீழாக உள்ளது. 17 பெரிய மாநிலகளில் 13 வது இடத்தில், அதாவது சட்டிஸ்கார், ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கிறது.

ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 1999 இல் 46 .3 % இருந்து 2004 இல் 55 .5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளில் 74 .5 ஆக இருந்த ரத்தசோகை சதவிகிதம் 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2006 இல் எடுத்த மூன்றாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் காணக் கிடைக்கின்றது. மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூற்றுப்படி  16000 குஜராத்திகள் மோடியின் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துள்ளனர் .  அவர்களில் 9 ,829 பேர் தொழிலாளர்கள், 5 ,447 பேர் விவசாயிகள், 919 பேர் பண்ணை தொழிலாளர்கள்.

சத்பவனா நாடகம்

ஒரு சிறு குற்றவுணர்ச்சி கூட இல்லாமல், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர் ஒருவரைக் கூட நேரில் சென்று பார்க்காமல் அதன் 10 வது ஆண்டு நினைவு தினத்தில் சத்பாவனா நாடகத்தை நிகழ்த்தினார் மோடி. தனிச்சிறை போன்ற சேரியில் அடைத்து, வகுப்புவாதத் தீ படரும் ஆபத்தை எண்ணி இப்போதும் பயத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அகமதாபாத்தின் முசுலிம் மக்கள். ஆனால் மோடியோ முசுலிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் சிலரை மட்டும் பொறுக்கி எடுத்து ‘வகுப்பு ஒற்றுமை’ என்று விளம்பரப்படுத்துகிறார். நீதியை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் காயங்களில் உப்பைத் தேய்ப்பதற்கு சற்றும் குறைவில்லாத மோசடி இது. தனது பாவங்களுக்கு மோடி தண்டிக்கப்படுவார் என்பது நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

பணம் படைத்தவர்களையும், செல்வாக்கு மிக்கவர்களையும் காப்பாற்றும் அதே வேளையில், சாதாரண மக்களை வெறும் கற்பனாவாத நம்பிக்கையில் ஆழ்த்தும் ஒரு அரசமைப்பு நம்முடையது என்பது நிரூபணம் ஆன ஒன்று. பத்து ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டங்கள் சில நீதித் துணுக்குகளை, அதுவும் மோடிக்கு ஆதரவான முறையிலே வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தனது கணவருடன் 66 பேர் குல்பெர்க் சொசைட்டியில் கொல்லப்பட்டது சம்பந்தமானது. 62 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு [SIT ] அவர்கள் 62 பேர் மீதோ அல்லது இந்தப் படுகொலைக்கு மூளையாகச் செயல்பட்ட மோடி மீதோ எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியம் கண்டுகொள்ளப்படவில்லை. மோடியின் குற்ற நடவடிக்கைகளின் எல்லை 2002 இனப்படுகொலையோடு முடிந்து விடக் கூடிய ஒன்றுமல்ல. ஹரேன் பாண்டியா வழக்கில், அவர் குடும்பத்தினர் போலீசின் விசாரணை நடவடிக்கையில் திருப்தியில்லாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல் முறையில் கொல்லப்பட்டவர்களின் வழக்குகள் நிறைய நிலுவையில் நிற்கின்றன. அவற்றில் ஒன்றின் நீதிக்காக நான் போராடி வருகிறேன்.  19 வயது மாணவி, இஷ்ரத் ஜகான் போலி மோதல் முறையில் கொல்லப்பட்ட  இந்த வழக்கு பலராலும் போலியானது என்று கூறப்படும் ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் நீதி கிடைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த சம்பவமும், வழக்கின் போக்கும் மற்ற ‘பயங்கரவாதத் தாக்குதல்களின்’ உண்மைத் தன்மையை ஒருவர் ஊகித்தறியப் போதுமானதாக உள்ளது. இது போன்ற கட்டுக்கதைகள் மோடி போன்ற மக்கள் விரோத அரசியல்வாதிகளின் நலனைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்டதேயன்றி வேறென்ன?

இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இது தான்.  இங்கிருந்து நாம் எத்திசையில் பயணிக்க இருக்கிறோம்?

_____________________________________________________________________________

ஆனந்த் தெல்டும்டே [எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர், மும்பை]

தமிழில் – சம்புகன்

நன்றி: எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மார்ச் 17 2012 .

________________________________________________________________________________

சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…

9
ஐஎஸ்ஐ-சதி

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 22

பஞ்பாப், காசுமீர் பிரச்சினைகள் மூலம் பாரதத்தைத் துண்டாக்குவதற்கும், பம்பாய்கோவை தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் பாரதத்தைச் சீர்குலைப்பதற்கும், பாகிஸ்தான் இந்நாட்டு முசுலீம்களைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் சதி வேலை உளவுப் பிரிவான .எஸ்..இன் ஏஜெண்டுகளாக பல முசுலீம் அமைப்புகள் செயல்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்து வரும் அவதூறு.

.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானின் தேசிய உளவு நிறுவனமான ‘இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்’, ‘பாரத் மாதாகீ ஜெய்’ யைவிட அதிகமாக ஆர்.எஸ்.எஸ்.கும்பலால் ஜெபிக்கப்படும் மூன்றெழுத்து மந்திரமாகும். அவர்கள் மட்டுமல்ல செய்தி ஊடகம், ஓட்டுக் கட்சிகள், அரசு அனைவருமே தேசபக்தி சாமியாட்டத்திற்கு ஐ.எஸ்.ஐ பூச்சாண்டி காட்டுவது ஒரு கேலிக்கூத்தாகி வருகிறது. கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிடுவதைப்போல ‘ரேசன் தட்டுப்பாடு, சுகாதாரக் கேடுகள் போன்றவைக்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் எனக் கூறும் நாள் தூரத்தில் இல்லை.’

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் முத்திரையாக அறியப்பட்ட ஐ.எஸ்.ஐ., இந்து மதவெறியர்களால் தேசத்துரோகிகளுக்கான முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 12 கோடி முசுலீம் மக்களையும் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டுகளாகச் சித்தரித்துத் தனிமைப்படுத்துவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.

அடுத்து அரசின் உளவுத்துறை, பாதுகாப்பு படையினரின் முறைகேடுகளை வெளிச்சமாக்கி இந்திய அரசை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளை தேசத்துரோக முத்திரை குத்துவது இரண்டாம் நோக்கமாகும். இப்படி ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியை வைத்து பெரும்பான்மை மக்களது தேசபக்தி உளவியலை சதித்தனமாகத் திரட்டி வரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறை இடுப்பொடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

காலிஸ்தான்: காங்கிரசின் சதி!

பசுமைப்புரட்சியின் மூலம் பணக்காரர்களான சீக்கிய விவசாயிகளுக்கும், ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த நகர்ப்புறத்து இந்து வியாபாரிகளுக்கும் தோன்றிய முரண்பாடே பஞ்சாப் பிரச்சினையின் அடிப்படையாகும். அந்த முரண்பாட்டைப் பயன்படுத்தி அகாலி தளத்தை வீழ்த்த நினைத்தவர் இந்திரா காந்தி. அதன்படி காங்கிரசு கும்பலால் அகாலிதளத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டவர் பிந்தரன் வாலே.

ஏற்கனவே பஞ்சாபி மொழி, நதிநீர் பிரச்சினை போன்ற கோரிக்கைகள் சீக்கியர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகச் சித்தரித்து, பஞ்சாபி மக்களை இந்து, சீக்கியர் என மதரீதியாகப் பிளப்பதில் காங்கிரசு, இந்துமத வெறி அமைப்புகள் வெற்றி பெற்றிருந்தன. இப்படி பஞ்சாப் பிரச்சினைக்கு அச்சாரம் போட்டு, எண்பதாம் ஆண்டுகள் முழுவதும் பஞ்சாபை இரத்தக் களறியில் மூழ்கடித்தவர்கள் யார்? நிச்சயமாக ஐ.எஸ்.ஐ. இல்லை.

அரசு பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த சீக்கிய இளைஞர்களைப் பயன்படுத்துவதற்கே ஐ.எஸ்.ஐ. மூக்கை நுழைத்தது. மேலும் பஞ்சாபில் ஐ.எஸ்.ஐ. நடத்திய சதிவேலைகளைவிடப் பல மடங்குக் கொடூரங்களை நடத்தியது இந்திய அரசுதான். கே.பி.எஸ்.கில் என்ற போலீசு பயங்கரவாதியினால் ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர்; காணாமலும் போயினர். இன்றைக்கும் பஞ்சாப் மக்களிடம் நீங்கள் யாரை வெறுக்கிறீர்கள் பாக்கிஸ்தான் உளவுப்படையையா, இந்தியப் பாதுகாப்பு படையினரையா என்று கேட்டுப் பாருங்கள். நூறுசதம் இந்திய படை என்றே பதில் வரும்.

காசுமீர் யாருடைய சதி?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசுமீர் மக்களின் அவலநிலை ஐ.எஸ்.ஐ. பெயர் சொல்லியே நியாயப்படுத்தப்படுகிறது. ”காசுமீர் யாருடன் சேர்வது என்பதையோ, தனிநாடாக இருப்பதையோ நாங்களே முடிவு செய்கிறோம்” எனும் காசுமீர் மக்களின் கோரிக்கையை இந்தியா ஏற்பதில்லை. சிம்லா ஒப்பந்தப்படியும், ஐ.நா. உடன்படிக்கைப்படியும் பேச்சு வார்த்தை மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதை இந்திய அரசு மறுத்து வருகிறது. அதையே மூலதனமாக வைத்து பாகிஸ்தானும் காசுமீர் போராட்டத்தை தனது நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இரு நாட்டு அரசுகளும் தமது மக்களின் சமூக பொருளாதார அவலங்களைத் தீர்க்க வக்கின்றி, தேசிய வெறியைக் கிளப்பி விடும் கருவியாக காசுமீரைப் பயன்படுத்துகின்றன. இதில் இந்தியாவின் பங்கே முதன்மையானது.

பாகிஸ்தானின் உள்ளார்ந்த நோக்கம் கேடானது என்றாலும், காசுமீர் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும், காசுமீர் புனிதப்போருக்குச் செல்லும் எந்தத்  தனி நபரையும் தடுக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறது. போராளிகளும் ஆசாத் காசுமீர் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் மக்களிடம் பிரச்சாரம் செய்தும், நிதி வசூலித்தும், போராளிகளைத் தெரிவு செய்தும் இயங்கி வருகின்றனர். இதில் ரகசியம் எதுவுமில்லை. ஆனால், காசுமீர் போராட்டத்தை ஐ.எஸ்.ஐ சதி என்று ஒடுக்கி வரும் இந்திய அரசின் நடவடிக்கைகள் முற்றிலும் சதித்தனமாக இருக்கின்றன. ‘தேசபக்தியும் ஜனநாயகமும்’ அப்படித்தான் இயங்க முடியுமோ?

இந்திய இராணுவம் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு

கிளிண்டன் வருகையின் போது காசுமீர் சித்சிங்கபுராவில் 35 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவுப் போராளிக் குழுக்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இன்றுவரை அதற்குச் சான்றாதாரம் எதுவுமில்லை. மாறாக இந்திய இராணுவம்தான் செய்தது என்ற விமர்சனத்தையும் ஒதுக்க முடியாது. சீக்கயர்களைக் கொன்ற ‘பயங்கரவாதிகள்’ ஐவரை பாத்ரிபால் கிராமத்தில் சுட்டுக் கொன்ற இந்திய இராணுவம், தினத்தந்தி ‘போஸில்’ மீசையை முறுக்கியது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி முசுலீம் கிராம மக்கள் என்பது உடன் தெரிய வந்து, காசுமீர் மக்கள் வெகுண்டெழுந்தனர். அப்படி பிராக்போராவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களில் 11 பேர் மறுபடியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் விசயம் முடிந்து விடவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி.மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘மாலிக்’ என்ற லஷ்கர் – இ தோய்பா (பாகிஸ்தான் ஆதரவுக் குழு) உறுப்பினர் கைது செய்யப்பட்டார். ”எங்கள் குழுதான் சீக்கியர் கொலை உள்ளிட்ட மூன்று படுகொலைச் சம்பவங்களை நடத்தியது” என்று இவர் கொடுத்த வாக்கு மூலத்தைக் காட்டி இந்திய இராணுவம் மீண்டும் மீசை முறுக்கியது. முறுக்கிய வேகத்திலேயே மண்ணைத் தொட்டது.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழக விடுதியில் மாலிக் தங்கியிருந்தது, அவரது மாணவர் அடையாள அட்டை, வாக்குமூலம் அனைத்துமே இந்திய அரசு உளவுத் துறையினரால் ‘செட் அப்’ செய்யப்பட்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படுகொலைகளை விசாரிக்க காசுமீர் அரசு நியமித்திருக்கும் ‘பாண்டியன் கமிசனிடம்’ எப்படித் திறமையாக பொய் சொல்வது என்று இந்திய இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தற்போது மண்டை காய்ந்து வருகின்றன. இப்படி காசுமீரை குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றியது யார்? இந்திய அரசா, ஐ.எஸ்.ஐ.யா?

இந்திய அரசு போட்டுக் கொடுத்த இராஜபாட்டையில் ஐ.எஸ்.ஐ. கம்பீரமாக நுழைந்தது. மதச் சார்பற்ற காசுமீர் போராட்டத்தை இசுலாமியச் சார்பாக மாற்றியும், விடுதலைக் குழுக்களை உடைத்து பாகிஸ்தான் ஆதரவு குழுக்களாக மாற்றியும் ஐ.எஸ்.ஐ. செயல்படுவதற்கான முகாந்திரத்தை இந்தியாதான் ஏற்படுத்தியது. தற்போது அதிகாரத்திலிருக்கும் இந்து மதவெறியர்களோ பாகிஸ்தானுக்கு மேலும் உதவுகின்றனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது லஷ்கர்-இ-தொய்பா குழுவின் அப்துல்லா முன்டாசர், ”பா.ஜ.கட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென இறைவனைத் தொழுகிறோம். அப்போதுதான் நாங்கள் இன்னும் பலமான சக்தியாக உருவாக முடியும்,” என்று சொல்லியிருந்தார். ஐ.எஸ்.ஐயின் நண்பர்கள் இந்திய முசுலீம்களா, இந்து மதவெறியர்களா என்ற கேள்விக்கு இதைவிடத் திருத்தமான பதில் வேறு உண்டா?

வெள்ளை அறிக்கையும் வெளிறிப்போன அத்வானியும்

ஒருமுறை சென்னை வந்த இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், பா.ம.க. இராமதாசைச் சந்தித்தாராம். ராஜ்குமார் கடத்தலையொட்டி இரு மாநில மக்களிடமும் கலவரங்களைத் தூண்டிவிட ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருப்பதால் அதை விளக்கி வீரப்பனுக்கு ஒரு கடிதம் எழுதி நெடுமாறனிடம் கொடுத்தனுப்பும் படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டதாக ஜு.வியில் ஒரு செய்தி வந்திருந்தது. இந்து மதவெறியர்களுக்கு நிகராக இந்திய செய்தி நிறுவனங்களும் இத்தகைய ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியைக் கேவலமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கேவலத்தின் தமிழக உதாரணம் புளுகுணி தினமலர்.

எதிர்க்கட்சியாக இருந்த போதே ஐ.எஸ்.ஐ. குறித்த உண்மைகளை மைய அரசு வெளியிடுமாறு அத்வானி வகையறாக்கள் அடிக்கடி கேள்விக்கணைகள் விடுவது வழக்கம். இப்போது உள்நாட்டுப் பாதுகாப்பையே பொறுப்பேற்று நடத்தும் ‘தேசபக்தர்’ அத்வானி பதவி ஏற்ற புதிதில் ஐ.எஸ்.ஐ. குறித்த ‘வெள்ளை அறிக்கை’ விரைவில் வெளியிடப்படும் எனச் சபதம் எடுத்தார்.

மாதங்கள் பல கடந்தும் அறிக்கையை வெளியிடவில்லையே ஏன்? ”எங்கள் வண்டவாளங்களை வெளியிட்டால், உங்கள் உளவுத்துறையான ‘ரா’வின் (ரிசர்ச் அன்ட் அனலாசிஸ் விங்) தில்லுமுல்லுகளை வெளியிடுவோம்” என பாக்கிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிடுமோ என்றஞ்சிய அத்வானி தற்போது வெள்ளை அறிக்கை குறித்து கேட்டால் நரசிம்மராவ் பாணியில் செத்த பிணம் போல முகத்தை வைத்துக்கொள்கிறார். இருநாட்டு உளவுத்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை ‘நாம் இருவரும் திருட்டுப் பேர்வழிகள்தான், சதி வேலை செய்வது – வெற்றி பெறுவது அவரவர் சாமர்த்தியம்’ என்ற இராஜதந்திர அறிவோடும், தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பும் வெள்ளை அறிக்கை வேண்டாம் என்ற பரஸ்பர புரிதலோடும் இருக்கின்றனர்.

இதுபோக வெளிவராத அந்த வெள்ளை அறிக்கையில் ‘தினமலர்’ பாணி புளுகுகளை அத்வானி புனைந்திருப்பது தற்போது அம்பலமாயிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் எட்வர்டோ பெலைரோ பேட்டி ஒன்றில் கீழ்க்கண்ட செய்தியைக் கூறியிருக்கிறார். ”குஜராத் – கட்ச் பகுதியில் உள்ள மதரஸா – மசூதிகளில் சமீபகாலமாக ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை அதிகரித்திருப்பதாக அத்வானி புனைந்திருக்கிறார். குஜராத் உளவுத்துறை ஐ.ஜி.யோ ‘அப்படி ஏதும் தகவல்கள் எங்களுக்கு வரவில்லையே’ என்று அத்வானியிடம் மறுத்திருக்கிறார். வெகுண்டெழுந்த அத்வானி, ‘அப்படியெல்லாம் மறுக்கக்கூடாது. செல்லுங்கள் தீர விசாரித்து தகவல்களை (நான் விரும்பியபடி) பெற்று வாருங்கள்” என்று ஆணையிட்டாராம்.

ஐ.எஸ்.ஐ.யின் சதி வேலைகளை இப்படிச் சதித்தனமாகப் புனைந்துரைக்கும் இந்த தேசபக்தத் திலகம் 27-4-2000 அன்று லோக்சபாவில் பேசும்போது, ”இந்தியாவைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. தொடுத்திருக்கும் ஜிகாத்திற்கு இந்திய முசுலீம்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அப்படித்தான் இந்திய முசுலீம்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

பாரதீய ஜனதா: ஐ.எஸ்.ஐ-யின் தலைமை ஏஜெண்டு!

முசுலீம் மக்களின் தலையை நசுக்கி இரத்த யாத்திரை நடத்திய அத்வானியும் அவரது வானரக் கூட்டமும் பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் கலவரம் நடத்தி குறிப்பாக பம்பாயில் பல நூறு முசுலீம் மக்களின் உயிரைக் குடித்தனர். 12 கோடி முசுலீம் மக்களை எதிர்த்து பத்தாண்டு காலம் இவர்கள் நடத்திய வெறிக் கலவரங்கள் – கொலைகள் காரணமாகத்தான் இசுலாமியத் தீவிரவாதம் முளைவிட்டது.

‘நமது சிறுபான்மை மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டால், ஐ.எஸ்.ஐயின் இரையாக அவர்கள் சிக்குவது நடக்கும்’ என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவி ஐ.ஜி. விபூதி நாராயண்ராய். ஐ.எஸ்.ஐயின் வலைக்கு பற்றாக்குறை வராமல் இரை தேடிக் கொடுப்பது இந்துமத வெறியர்களே என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்துவதே இந்துமத வெறியர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.இன், ஒரே குறிக்கோளாகும். எனவே ஐ.எஸ்.ஐ-யின் மிகப் பெரிய, அதிகாரப்பூர்வமற்ற சம்பளம் வாங்காத ஏஜெண்டுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்பதே உண்மை.

அடுத்து, கைது செய்யப்படும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளில் இந்து – சீக்கியர் – கிறிஸ்தவர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். ஆனால், அதிலிருக்கும் முசுலீம்கள் மட்டும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுகிறார்கள். 1999 பாராளுமன்றத் தேர்தலின் போது பாகிஸ்தானிற்கு உளவு சொன்னதாகக் கைது செய்யப்பட்ட உள்துறை அமைச்சக நபர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. உ.பி., பா.ஜ.க. அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங், ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் என்றும், உள்ளூர் ரவுடி பிரதேஷ் சிங் கும்பலுக்கு கணிசமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

தாவுத் இப்ராஹிமின் டெல்லித் தளபதியாகச் செயல்பட்ட ரொமேஷ் சர்மா ஒரு இந்துதான். இவனது கட்டித்தில்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷனது ‘தேசபக்தி அமைப்பு’ அலுவலகம் செயல்பட்டது. டெல்லி வாழ் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பலர் இவனோடு தொடர்புள்ளவர்கள்தான். இவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை; ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக அடையாளமும் காணப்படவிலை. தாவுதின் தளபதியாகச் செயல்பட்டு பின் பங்காளிச் சண்டையால் பிரிந்து போனவன் சோட்டாராஜன். பின்னர் இந்து மத வெறியர்களால் ‘இந்து தாதா’வாகப் போற்றப்பட்டான். பாங்காக்கில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் இவனை தாவுத் கும்பல் சுட்டுக் காயப்படுத்தியது. இவனைக கைது செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முறையான தகவல் வேண்டும் என்கிறது தாய்லாந்து அரசு. தாவுத்துடன் சேர்ந்தும், பிரிந்தும் இவன் நடத்திய கொலைகள் ஏராளம். மேலும், ஐ.எஸ்.ஐ.யின் வேண்டுகோளுக்கேற்ப பல முறைகேடுகள் நடத்தியவன்.

இவனை இந்தியா கொண்டு வர பம்பாய் போலீசு முயன்றபோது, தேசபக்தர் அத்வானியின் அலுவலகத்திலிருந்து ‘வேண்டாம்’ என்று உத்திரவு வருகிறது. தாவுதை எதிர்த்துப் போர் நடத்தும் ‘இந்து வீரனை’, சிவசேனா ஆதரவு பெற்ற ரவுடித் தலைவனை பாசத்தோடு பராமரிக்கிறது பா.ஜ.க. அரசு. தற்போது தாய்லாந்து போலீசிடமிருந்து ராஜன் தப்பி இருக்கிறான். இதற்கு ஏற்பாடு செய்ததே பா.ஜ.க. அரசுதான் என்று குற்றம் சாட்டுகிறார் மராட்டிய காங்கிரசு அமைச்சர்.

உளவு வேலை: ‘மேல்சாதி’ மேட்டுக்குடியின் திறமை!

நாடறிந்த பிரபலமான இராணுவத் தளவாட தேசத் துரோக வழக்குகளான கூமர் நாராயணன் சதி வழக்கு, போபார்ஸ் பீரங்கி வழக்கு, ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் பேர வழக்கு, தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மாறாக காங். – பா.ஜ.க.வைச் சேர்ந்த பலர் நேரடியாகவும், பினாமியாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். போபர்ஸ் பணத்தைச் சுருட்டிய தரகு முதலாளிக் கும்பலான லண்டன் வாழ் இந்துஜா சகோதரர்கள் இந்து மதவெறியாளர்களின் சர்வதேசப் புரவலர்களாவார்கள்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, இராணுவத் தலைமையகம் பென்டகன், இவர்களுக்காக மென்பொருள் தயாரிக்கும் மைக்ரோ சாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஏராளனமான ‘இந்து’ இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தியா உள்ளிட்டு முழு உலகையும் உளவு பார்க்கும் விண்கோள், மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடும் இவர்கள் சி.ஐ.ஏ. கைக்கூலிகள் என்று அழைக்கப்படுவதில்லை, இந்தியாவின் தேசத் துரோக பாரம்பரியத்தில் ‘இந்து’ ‘மேல்சாதி’ – மேட்டுக்குடியினரின் பங்குதான் பெரும்பான்மையானது என்பதை எவரும் மறுக்க இயலாது.

‘ரா’ சைவப்புலியா?

‘போதைப் பொருள் கடத்தல், வடகிழக்குப் போராட்டம், வங்க தேச – நேபாள – பாக். எல்லை மாவட்டங்களில் சதி’ என ஐ.எஸ்.ஐ. பற்றிய குற்றப்பட்டியலை இந்துமதவெறியர்கள் பாராயணம் செய்வது வழக்கம். ஆயினும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் தகிடுதத்தங்களைப் பார்க்கும்போது ஐ.எஸ்.ஐ. ஒரு கொசு என்பது புரியவரும். ”’ரா’ அமைப்பு இத்தகைய எதிர்ச் சதிவேலைகளில் ஈடுபடவில்லை என்று சொல்ல மாட்டேன். ‘ரா’வை விட ஐ.எஸ்.ஐ. கொடூரமானது, தொழில் முறையில் தீவிரமானது” என்கிறார் பி.எஸ்.எப்-இன் உளவுத் துறைத் தலைவர் விபூதி நாராயண்.

இந்தியத் தலைமைக் கணக்காளரின் சோதித்தலுக்கு உட்படத் தேவையில்லாத ‘ரா’வின் செலவுப் பட்டியல் இரகசியமானது. எத்தனைக் கோடி ரூபாய், எதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தகவல் தரும் தரகர்களுக்கு மது, மாது  சப்ளை செய்து குஷிப்படுத்த நாடெங்கும் ஆடம்பர மாளிகைகளை  ‘ரா’ நிறுவனம் வாடகைக்கு எடுத்திருக்கின்றது. மேற்கண்ட உளவுத் துறை அதிகாரியே ‘ரா’வை சைவப்புலி என்று ஒரு பேச்சுக்குச் சொல்லக்கூடத் தயங்குகிறார் என்றால் யதார்த்த நிலை எப்படியிருக்கும்?

காசுமீர் போராட்டத்திற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாப் – சிந்து தேசிய இனப் போராட்டங்கள், முஜாகீர் என்றழைக்கப்படும் இந்தியாவிலிருந்து சென்ற முசுலீம்களின் போராட்டம் ஆகியவற்றை சகல – சதி வேலைகளோடு ‘ரா’ ஆதரிக்கிறது. லாகூரிலும், கராச்சியிலும் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புகளை இந்தியா நடத்தியது என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

வடகிழக்கிலும், ஈழத்திலும் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிடுவது, அப்பாவி மக்களைக கொலை செய்யத் தூண்டுவது, டம்மி குழுக்களை உருவாக்குவது என ‘ரா’வின் கொலைகார – சதிப் பட்டியல் நீளமானது. அதன்மூலம் இந்தப் போராட்டங்களை முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது என்ற தந்திரத்தில் ‘ரா’ கொட்டை போட்ட பெருச்சாளியாகும். ஒரு வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்கள் ஏராளம் எனும்போது அண்டை நாடுகளிலும், எல்லை மாநிலங்ளிலும் ‘ரா’ நடத்திய பயங்கரவாதங்கள் பற்றிச் சொல்லி மாளாது.

சி.ஐ.ஏ. தனது சதிப்பின்னலை உலகம் முழுவதும் நடத்த, ‘ரா’ தெற்காசியாவில் நடத்துகிறது. சென்ற ஆண்டு இஸ்ரேல் சென்று வந்த அத்வானி ‘மொசாத்தின்’ (இசுரேலின் உளவுப் பிரிவு) ஆசிகளையும், பயங்கரவாதத் தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒப்பந்தங்களையும் வாங்கி தந்தார். இந்தியாவிலும் எஃப். பி.ஐ., சி.ஐ.ஏ. கிளைகள் தற்போது வெளிப்படையாகத் துவக்கப்பட்டுள்ளன. இனி சி.ஐ.ஏ மேற்பார்வையில் ‘ரா’வின் வேலைகளில் அமெரிக்கத் திறமை பளிச்சிடும்.

எனவே இந்திய முசுலீம் மக்கள் ஐ.எஸ்.ஐ.இன் கைக்கூலிகள் எனச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் ‘தேசபக்த வேடத்தை’த் தோலுரிக்க வேண்டும். அடுத்து ஐ.எஸ்.ஐக்கு தியாக மனப்பான்மை கொண்ட முசுலீம் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டமே கையளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக இந்த ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டி முசுலீம்களை மட்டுமல்ல புரட்சிகர –  மனித உரிமை அமைப்புக்களையும் துரோகிகளாகச் சித்தரிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமெரிக்கக் கைக்கூலிகள்!

இரண்டாம் உலகப்போர் முடிவுற்று கம்யூனிசம் பரவி வந்த காலம். கம்யூனிசத்தை முறியடிக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அப்போது இந்தியாவில் கம்யூனிச எதிர்ப்பில் தீவிரமாயிருந்த ஒரு இயக்கத்தைக் கேள்விப்பட்ட அமெரிக்கர்கள் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான ஜே.ஜே.குர்ரான் என்பவரை 1950-களில் அனுப்பி வைத்தனர்.

அவரும் நாகபுரி வந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கி இரண்டாண்டுகள் ஆய்வு செய்து தன் எஜமானர்களுக்குத் தெரிவித்தார். ‘மிலிடன்ட் இண்டுயிசம் இன் பொலிட்டிக்ஸ் – (இந்திய அரசியலில் இராணுவ இந்துத்துவம்) என்ற அவரது நூலில், கம்யூனிச எதிர்ப்பிற்காவே இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பணஉதவி அளிப்பதாகவும், இந்தியாவில் கம்யூனிசத்தை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். மட்டுமே உள்ளது என பாராட்டும் தெரிவிக்கிறார்.

இப்படி ஆரம்பத்திலேயே ஆண்டையின் விசுவாத்தைப் பெற்றதனால் இன்றுவரை இவர்கள் அமெரிக்கச் சேவையை தொடருகின்றனர். அமெரிக்காவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அமெரிக்க தலைவர்கள் பலர் வருகின்றனர். அமெரிக்க அதிபருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர். பாபர் மசூதியை இடித்த கையோடு ராம ஜென்ம பூமி தலைவர், கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள்தான் பூவுலகின் தர்மம் காக்க அவதரித்த நவீன கிருஷ்ணர்’ என்று உருகுகிறார். இவர்களது அமெரிக்க அடிமைத்தனத்திற்கு ஒரு சான்று:

‘விஜயபாரதம்’ (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்) தீபாவளி மலர் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்.இன் அப்போதைய தென்னிந்திய கொ.ப. செயலரான சண்முகநாதன் என்ற பேர்வழி ‘அகண்ட பாரதம் விரைவில் மலரும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.

‘ஆசியா 2025’ என்ற எதிர்கால உலக அரசியல் நிலைமை பற்றிய ஜோசியம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறதாம். அதன்படி 2020 ஆண்டிற்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்துவிடுமாம். பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்களை அமெரிக்கா அழிக்குமாம்.  பாகிஸ்தானுடன் சேரும் சீனாவை அமெரிக்கா மிரட்டி வைக்குமாம். அமெரிக்க இராணுவம் ஆசியாவில் தனது நம்பகமான கூட்டாளியாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்து சீனாவை ஒதுக்குமாம். இப்படி அமெரிக்கா இந்தியாவைக் கணித்திருப்பது பற்றி புல்லரிக்கிறார் சண்முகநாதன்.

இந்தியாவின் பல கட்சிகளில் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் இருந்ததுண்டு. ஒரு கட்சியே சி.ஐ.ஏ. ஏஜெண்டாக உள்ளது என்றால் அது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ. கும்பல்தான்.

– தொடரும்

__________இதுவரை____________

கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!

கேள்வி பதில்

கேள்வி: கடவுளை மறுத்தால்…..பரம்பொருள், ஆன்மா, பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது என்று கூறுகிறார்களே…சற்றே விளக்குங்கள்!

– பி.தினேஷ் குமார்.

அன்புள்ள தினேஷ் குமார்,
உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் குறித்த அனைத்து விளக்கங்களும், செய்திகளும், கற்பனைகளும் நம்மால் சிந்தனையில் மட்டுமே அறியப்படுகிறது. சிந்தனை என்பது மூளையின் செயல்பாடு. நமக்கு வெளியே இருக்கும் உலகத்திலிருந்து புலன்கள் மூலம் கடவுள் குறித்த அனைத்தும் மூளையில் பதியப்பட்டு நாம் பேசுகிறோம், சிந்திக்கிறோம் அல்லது உணர்கிறோம். ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் கூட மூளையின் அறிதலோடு மட்டுமே கட்டுண்டு கிடக்கின்றன. டாஸ்மாக் குவார்ட்டரினால் கூட இத்தகைய நிலைகளை எளிதில் ‘உண்மை’யாகவே அடைய முடியும். அது மூளையின் மயக்க நிலை, அல்லது போதை நிலை.

ஒரு வேளை இந்த பரவச நிலைகளை அடையும் வண்ணம் நாம் பக்குவப்படவில்லை என்று ஆன்மீகவாதிகள் கூறுவார்களாயின் அதுவும் கூட மூளையின் உதவியோடுதான் அறியப்படுகிறது. கடவுளை ஒன்றியவர் என்று ஒருவர் கூறும் அனுபவம் கூட இவ்விதமே கடவுளை ஒன்றாதவர்களை சென்றடைகிறது. மனித உடலில் உயிரின் இயக்கம் நின்ற பிறகு மூளையின் செயல்பாடும் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பிறகு டிடிஎஸ் எபெக்டில் கடவுள் வந்தாலும் செத்தவர் அதை உணர முடியாது. எனவே ஆன்மா, பருப்பொருள், கடவுள், என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது மூளையின் செயல்பாடான சிந்தனையேயன்றி வேறல்ல. அந்த சிந்தனையும் வெளியே இருக்கும் மனித சமூகத்தின் வழியாக கற்றுக் கொள்ளப்படுகிறதே அன்றி சுயம்புவாக தோன்றிவிடுவதில்லை.

ஆகவே நாம் சிந்தித்தால் மட்டுமே ‘கடவுள்’ இருப்பார். சிந்திக்கவில்லை என்றால் கடவுள் இல்லை. அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’. ஆக கடவுளை, ஆன்மாவை, பரம்பொருளை தோற்றுவிப்பவன் மனிதனே அன்றி கடவுள் அல்ல. பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது அனைத்தும் மனித சிந்தனையால் தோற்றுவிக்கப்படும் கனவுலகமே அன்றி உண்மை அல்ல. இந்த கனவுலகின் கற்பனைக்கு கூட யதார்த்த உலகின் அறிவை மூளை கற்றிருப்பது அவசியம்.

அதாவது காட்டில் ஒரு மனிதக் குழந்தையை விட்டு அது தானே வளருகிறது என்றால் அது நாட்டில் இருக்கும் மனிதர்களின் கடவுளை அறியவே முடியாது. அதை அருகில் இருந்து உசுப்பேற்றி சொல்லிக் கொடுப்பதற்கு இன்னொரு மனிதன் வேண்டும். எல்லா மதங்களும் சொல்லும் சொர்க்கத்தின் வசதி, ஆடம்பரம், கேளிக்கைகளைக் கூட இகலோக இன்பங்களிலிருந்தே மனிதன் கற்பித்துக் கொள்கிறான். அல்வாவைச் சாப்பிட்டிருந்தால் மட்டுமே அமுதத்தின் சுவை எப்படி இருக்கும் என்று சிந்திக்க முடியும்.

இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும். ஆகவே இயற்கை அல்லது பருப்பொருள் என்ற அளவில் நாம் என்றும் மரணிப்பதில்லை. ஆனால் இந்த உண்மையை மனிதனாக இருக்கும் போது மட்டும் உணர்கிறோம். மற்ற பொருட்கள் அப்படி உணர முடியாது. அந்த வகையில் இயற்கை தன்னைத்தானே உணரும் உன்னத பொருள் என்று மனித மூளையைச் சொல்லலாம்.

ஒரு மனிதன் சேகரித்த அறிவும், திறமையும், கருத்தும் அவனது மரணத்தோடு அழிந்து விடுவதில்லை. அவனைச் சுற்றி இருக்கும் மற்ற மனிதர்கள் மூலம் அந்த அறிவு வாழையடி வாழையாக கைமாற்றித் தரப்படுகிறது. ஆகவே நாம் இன்று சிந்திக்கும் விசயமும், கண்டுபிடிக்கும் பொருளும் நாளைக்கு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும். அந்த வகையில் நமது சிந்தனைக்கும் ‘அழிவில்லை’ இதைத்தாண்டி ஆன்மீகவாதிகள் சொல்லும் பிறப்பற்ற நிலை, முக்தி நிலை என்று எதுவுமில்லை. அவை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ளும் சுய இன்ப கற்பனைகள்.

இரண்டாவதாக கடவுள் குறித்த கருத்தோ, நம்பிக்கையோ, பற்றோ எதுவும் நமது உயிர் வாழ்க்கையின் நிபந்தனையாக என்றுமே இருப்பதில்லை. நீங்கள் வேலை செய்தால் ஊதியம், ஊதியமிருந்தால் சாப்பாடு, தங்குமிடம், வாழ்க்கை. மற்றபடி எவ்வளவுதான் கவனத்தோடு தியானமோ, நம்பிக்கையோ கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சினைகளுக்கான ஒரு கற்பனையான இடைக்கால நிம்மதியை வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை தரலாம். அதனால்தால் இந்த உலகம் மனிதர்களை வைத்து மட்டுமே இயங்குகிறது, கடவுளை வைத்து அல்ல. அதனால்தான் வீட்டு சாக்கடை அடைத்தால் கூட நகர சுத்தி தொழிலாளிகளைத்தான் அழைக்கிறோமே அன்றி கடவுளை அல்ல. அந்த வகையில் இந்த உலகை இயக்க வைக்கும் உழைக்கும் மக்கள்தான் கடவுள். கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.

இறுதியாக நீங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை போராடி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்ட குணம் வேண்டுமென்றால் இல்லாத கடவுள் குறித்த நம்பிக்கையை அகற்ற வேண்டும். அந்த வகையில் கடவுள் இல்லை என்பது இளமைத்துடிப்புள்ள பண்பாகும். கடவுள் உண்டு என்றால் அது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வேண்டாம் என்று சொல்கிற கிழட்டுத் தத்துவமாகி விடுகிறது.

ஆகவே நீங்கள் இளமைத் துடிப்புடன் எப்போதும் வாழ விரும்புகிறீர்கள் என்றால் கடவுளை புரிந்து கொள்ளுங்கள்…அதாவது இல்லை என்பதை!

அமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்

2

பணத்தை பின் தொடர்! தலைவனைக் கண்டுபிடி! – பி.சாய்நாத்.

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் தரப்பு $1.25 பில்லியன் (சுமார் ரூ 7,000 கோடி) வரை செலவழித்திருக்கும். வெற்றி பெற்றவர் நிதி தந்தவர்களுக்கு கைமாறு செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதிலேயே ஆட்சிக் காலத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

ராக் ஒபாமா மறுபடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதோ, மிட் ரோம்னி ஜெயிக்க முடியுமா என்பதோ விஷயமில்லை. பில்லியன் டாலர்கள் இல்லாத யாரும் போட்டி போடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது என்பதுதான் விஷயம். அந்த அளவு பணமிருந்தால் கூட போட்டி போடுவது மட்டும்தான் உத்தரவாதம், வெற்றி பெறுவது உத்தரவாதம் இல்லை. போட்டியாளர் அதிகம் செலவழிக்க முடிந்தால் வெற்றி கை நழுவிப் போய் விடும்.

மேட்டுக் குடியைச் சேர்ந்த மிகச் சிறு பிரிவினரைத் தவிர சேருவதற்கான விலையை கொடுக்க முடியாத மற்ற அனைவரும் இந்த விளையாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். “1%த்தினருக்காக 1%த்தினர் நடத்தும்” ஜனநாயகம் என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்ளிஸ் இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

நவம்பரில் பரபரப்புகள் ஓய்ந்த பிறகு கணக்கு பார்த்தால் இரண்டு முக்கிய போட்டியாளர்களும், அவர்களது கட்சியினரும், ‘சுயேச்சையான குழுவினரும்’ மொத்தமாக $2.5 பில்லியன் செலவழித்திருப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தச் செலவு $6 பில்லியனை (சுமார் ரூ 32,000 கோடி) தாண்டும் என்கிறது நாட்டின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பொலிடிக்ஸ் என்ற அமைப்பு. 12 கோடி இந்தியப் பள்ளிக் குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் மதிய உணவு வழங்குவதற்கு போதுமான தொகை அது.

ஒரு சதவீதத்தை விட குறைவு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பும் சம அளவு பணம் செலவழிப்பதாக வைத்துக் கொண்டால், வெற்றி பெறும் தரப்பு எல்லா செலவினங்களையும் சேர்த்து $1.25 பில்லியன் செலவழித்திருக்கும். திரு ரோம்னி வெற்றி பெற்று 2016ல் மீண்டும் போட்டி போட விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அடுத்த தேர்தலில் போட்டியிட இதே அளவு தேர்தல் நிதியை திரட்ட வேண்டுமானால் நான்கு ஆண்டு பதவிக் காலத்தின் ஒவ்வொரு நாளும் சராசரியாக $850,000 (சுமார் ரூ 4.5 கோடி) சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

அந்த அளவு நிதி வழங்குபவர்கள் விரும்பும் சட்டங்களை நிறைவேற்றுவதை தவிர வேறு எதையும் செய்வதற்கு அவருக்கு நேரம் இருக்கப் போவதில்லை. இதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென்றால் திரு ஒபாமாவைக் கேட்டுப் பார்க்கலாம்! தேர்தல்களைப் பொறுத்த வரை 1 சதவீதத்திலும் குறைவான சிறு பகுதியினரே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். (அளவிலும் வடிவத்திலுமான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும்).

அமெரிக்க அதிபர் தேர்தல் பணபலத்திற்கு பிணைக் கைதியாக இருப்பது இட்டுக் கட்டப்பட்ட விஷயமில்லை. CounterPunch.orgல் டேவிட் லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல 2008 ஒபாமா தேர்தல் பிரச்சாரத்துக்கு கார்ப்பரேட்டுகளைத் தவிர பெருமளவு பங்களித்தவர்கள் நிதி நிறுவனங்கள்தான். கோல்ட்மேன் சாக்ஸூம், ஜே பி மார்கன் சேஸூம், அரசியல் ஆர்வலர் குழுக்கள் மூலம் $2.5 மில்லியன் வழங்கிய சிட்டிகுரூப்பும் இவர்களில் அடங்குவர்.

இன்னொரு $1.5 மில்லியன் யூபிஎஸ் மற்றும் மார்கன் ஸ்டேன்லி போன்ற பெரிய வங்கிகளிடமிருந்து வந்தது. மக்கள் பணத்திலிருந்து வங்கிகளுக்கு அரசாங்கம் வாரி வழங்கிய மீட்பு நிதியில் ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக வங்கி ஒன்றை விலைக்கு வாங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்கும் இதில் அடங்கும்.

திரு லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல திரு ஒபாமா தான் பட்ட கடன்களை எல்லாம் முறையாக அடைத்தார். டிம் கெயிட்னரை நிதி அமைச்சராக நியமித்தது அந்த கைமாறுகளில் ஒன்று. புஷ் ஆட்சிக் காலத்தில் நியூயார்க் மத்திய வங்கியின் தலைவராக இருந்த திரு கெய்ட்னர், “நிதி நெருக்கடிக்கு வழி வகுத்த, டெரிவேட்டிவ் மோசடிகளை  கண்டு கொள்ளாமல்“ இருந்து புகழ் பெற்றவர்.

லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை தனது தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்தார் ஒபாமா. அந்த சம்மர்ஸ்தான் பில் கிளின்டன் ஆட்சியில் நிதி அமைச்சராக டெரிவேட்டிவ்கள் மீதான கண்காணிப்பை விலக்கியும், வங்கிகள் மூலதன வங்கிகளுடன் இணைவதற்கு அனுமதி அளித்தும் நிதி நெருக்கடிக்கு வித்திட்டவர்.  இன்னும் பல பதவிகளையும் நிதித்துறை ஆட்களுக்கு வாரி வழங்கினார் ஒபாமா. ஆனாலும், இந்த முறை திரு ரோம்னி திரு ஒபாமாவை விட அதிக அளவு வால்ஸ்ட்ரீட் நிதியை திரட்டியிருக்கிறார்.

2012ல் இரண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரங்களும் நேரடியாக செலவழிக்கும் தொகை 2008ல் செலவழித்ததை விட சிறிதளவு குறைவாக இருப்பதைப் போல தோன்றலாம். வேட்பாளர்களும் கட்சிகளும் செய்யும் செலவை மட்டும் கணக்கில் எடுத்தால் அப்படித் தோன்றுகிறது. ஆனால், சூப்பர் பிஏசிகள் எனப்படும் அரசியல் ஆர்வலர் குழுக்கள் தனியாக செலவழிக்கும் பணம் இதில் சேரவில்லை.

அந்த குழுக்கள் பெருமளவு நிதி திரட்டுவதற்கான சாத்தியங்கள் உடையவை. தமது பிரச்சாரங்களை வேட்பாளர்களுடன் ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு அவற்றின் மீது பெயரளவில் உள்ளது. ஆனால், உண்மையில் வேட்பாளர்களின் நடைமுறை நீட்சிகளாகவே அவை செயல்படுகின்றன. கார்ப்பரேட்டுகள் நேரடியாக செலவழிப்பதன் மீதான கட்டுப்பாடுகளை 2010ம் ஆண்டின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு தூக்கி எறிந்து விட்ட பிறகு இன்னும் கூடுதல் பணம் பாய ஆரம்பித்திருக்கிறது.

பெரு நிறுவனங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சூப்பர் பிஏசிக்கள் திரட்டக் கூடிய நிதிக்கு வரம்பு எதுவும் இல்லை. ஒரு வேட்பாளரை ஆதரிக்கவோ, அல்லது தோற்கடிக்கவோ எவ்வளவு செலவழிக்கலாம் என்பதற்கும் வரம்பு இல்லை. (அவை நேரடியாக ஒரு வேட்பாளருக்கு நிதி அளிக்க முடியாது. நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்).

சிஆர்பி மதிப்பீட்டின்படி அக்டோபர் 16ம் தேதி வரையில், “சூப்பர் பிஏசிக்களாக பதிவு செய்து கொண்ட 935 குழுக்கள் $433 மில்லியனுக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன. 2012 தேர்தல் களத்தில் $375 மில்லியனுக்கும் அதிகமான செலவு செய்திருக்கின்றன.

‘வெளிப்புற சுயேச்சை குழுக்களால் செலவழிக்கப்பட்ட இந்தத் தொகையில் பெரும்பகுதி தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு போனது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். அயோவாவில் மட்டும் இரண்டு பிரச்சாரங்களுடனும் தொடர்புடைய ‘சுயேச்சை’ குழுக்கள் மாநிலத்தின் ஆறு பிரதிநிதிகளை வெல்வதற்கான முயற்சியில் 100,000க்கும் அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பின.

இதற்கிடையில் நிபுணர்கள் இரண்டாவது ஒபாமா-ரோம்னி விவாதம் சூடாக நடந்ததாக புளகாங்கிதம் அடைகின்றனர். இரு தரப்பினரும் தன்னெழுச்சியாக விவாதித்தனர் என்று பாராட்டுகின்றனர். அது ‘ஒரு அரங்கக் கூட்ட வடிவத்தில் இருந்தது’ என்று சிலாகிக்கின்றனர்.

பார்வையாளர்கள் கூட்டம் நடத்துபவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன் கூட்டியே மட்டுறுத்துனருடன் ஒத்திகை நடத்தியிருக்க, கேட்கப்படவிருக்கும் அனைத்து கேள்விகளும் முன் கூட்டியே பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்க அரங்கக் கூட்ட வடிவம் என்பதில்  எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

விவாதத்தின் போது இரண்டு தரப்புமே ‘ஏற்றத் தாழ்வு’ என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. அந்தச் சொல்தான் சென்ற ஆண்டு நாட்டின் எண்ணற்ற நகரங்களில் ஆக்கிரமிப்பு இயக்க போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. பல முன்னணி பொருளாதார மேதைகளை கவலை கொள்ள வைக்கும் விஷயமாக அது இருக்கிறது. சமீபத்திய வருவாய்த் துறை தரவுகளில் அது வெளிப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் வறுமை பற்றிய விபரங்களிலும் அது வெளியாகியிருந்தது.

“கார்ப்பரேட் கிரைம்” என்பதைப் போலவே இதுவும் ஒரு சொல்லக் கூடாத வார்த்தையாக மாறியிருக்கிறது. ‘ஒரே மாதிரியான வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் 72 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுவது ஏன்’ என்று கேட்டவரிடமிருந்து இதைப் பற்றிய ஒரே குறிப்பு வந்தது. ‘திரு ரோம்னி மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விதிமுறைகளின்படி விளையாட அனுமதிக்க விரும்புவதாக குற்றம் சாட்டிய போது’ அந்த விஷயத்தை பேசுவதற்கு ஓரளவு அருகில் வந்தார். இரண்டு பேருமே கேள்விக்கு பதில் சொல்லும் போது கூட அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

‘சென்ற ஆண்டு வால் ஸ்ட்ரீட்டில் ஊதியங்கள் 4 சதவீதம் அதிகரித்து அவற்றின் மொத்த மதிப்பு $60 பில்லியனை (ரூ 3 லட்சம் கோடி) எட்டியது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். 2007, 2008ம் ஆண்டுகளை தவிர்த்து மற்ற எந்த ஆண்டையும் விட அதிகமான தொகை இது. “நியூயார்க்கின் நிதித் துறை ஊழியர்களின் சராசரி சம்பளம் ($362,950 – சுமார் ரூ 1.88 கோடி) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 16.6% அதிகம்”. இதே நேரத்தில் வேலை தேடும் 2.5 கோடி மக்களுக்கு வேலை இல்லை. உணவு கூப்பன்களை சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது. 5 கோடி மக்கள் உணவு நிச்சயமின்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் பால் புஹ்ஹைட் சுட்டிக் காட்டுவது போல, அமெரிக்காவில் வாழும் “10 பணக்கார அமெரிக்கர்கள் சென்ற ஆண்டு ஈட்டிய பணத்தை வைத்து இந்தப் பூமியில் உள்ள பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் உணவு தர முடியும்”.

அந்த விவாதத்தில் இன்னும் ஓரிரு விஷயங்கள் இந்தியர்களுக்கு ஆர்வமளிக்கக் கூடியவை. இரண்டு வேட்பாளர்களுமே பெட்ரோல் விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்பும் வாக்காளர்களை குறி வைத்து பெட்ரோல் விலை பற்றி கவலை தெரிவித்தார்கள். நம் நாட்டிலோ அவர்களின் சீடர்கள் ‘பெட்ரோல் விலையின் மீதான ஒழுங்குபடுத்தலை ஒழித்துக் கட்டி சந்தையில் தீர்மானிக்கும்படி விட வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதை விட சுவாரஸ்யமானது எரிசக்தி தட்டுப்பாடு குறித்த விவாதத்தில், திரு ஒபாமா அணுசக்தியை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை என்பது. தூய்மையான ஆற்றல் என்ற வரிசையில் கூட அவர் அதைச் சேர்த்துக் கொள்ளவில்லை. (ஆனால், இந்தியா அந்த நம்பிக்கையில் திட்டங்களை செயல்படுத்துவதில் அவருக்கு மகிழ்ச்சிதான்). “காற்று, சூரிய ஒளி, உயிர் எரி பொருட்கள்” இதுதான் அவரது மந்திரம். திரு ரோம்னி அணுசக்தியை ஒரே ஒரு முறை குறிப்பிட்டாலும், அதற்கு சிறப்பான இடம் எதையும் கொடுக்கவில்லை.

விவாதத்தை கட்டி அமைத்தல்

‘யார் இந்த விவாதங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் அவை எப்படி நடத்தப்படுகின்றன’ என்றும் பார்ப்போம். போன வாரம், ஒபாமா மற்றும் ரோம்னி பிரச்சாரங்கள் பேரம் பேசி ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தைப் பற்றிய ரால்ப் நாடாரின் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் (சிபிடி) என்ற பிரச்சார குழுக்களின் கார்ப்பரேட் வாரிசு அந்த ஒப்பந்தப்படிதான் செயல்படுகிறது.  ‘விவாதங்களுக்கான நடைமுறையில் இரு தரப்பு பிரச்சார குழுக்களின் இரும்புப் பிடி மூச்சு முட்ட வைப்பது, நேர்மையற்றது, முழுமையானது’ என்கிறார் ரால்ப் நாடார்.

இது எப்போதுமே இப்படி இருந்ததில்லை. 1987 வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் தேர்தல் பிரச்சார விவாதங்களை பெண் வாக்காளர்களின் கூட்டமைப்பு நடத்தி வந்தது. அந்த நடைமுறை எப்படி மாறியது? சுயேச்சையான விவாதங்களை நடத்தி வந்த கூட்டமைப்பு, விவாதங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை எப்படி இழந்தது? 1987ல் அந்த பொறுப்பை கை விடுவதற்கு அது ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது? அல்லது அந்த முடிவு அதன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதா?

இது பற்றிய விபரங்களை கேட்டு எழுதியதும், அந்தக் கூட்டமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பெட்சி கார்டனரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது. விவாத வடிவத்தை தேர்ந்தெடுப்பதிலும், மட்டுறுத்துனரை தேர்ந்தெடுப்பதிலும், கேட்கப்பட வேண்டிய கேள்விகளை முடிவு செய்வதிலும் கட்சிகளின் பிரச்சாரக் குழுக்கள் பெருமளவு அழுத்தத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்தி வந்தன என்கிறார் அவர். கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் நேன்சி நியூமென் வெளியிட்ட அறிக்கையையும் அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ்-மைக்கேல் டுகாகிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட நியூமேனின் அறிக்கை வேறு பல விஷயங்களுடன் இதையும் சொல்கிறது. “தொலைக்காட்சி கேமராக்கள் எதைப் படம் பிடிக்க வேண்டும் என்பதைக் கூட இரு தரப்பினரும் தமக்கிடையே முடிவு செய்து கொண்டானர். வேட்பாளர்களிடம் கேள்வி கேட்கவிருப்பவர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதையும் அவர்களே முடிவு செய்து கொண்டார்கள். அரங்கத்தை தமது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புவதாக அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். விவாத வடிவத்தையும் அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள்.”

“இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களின் ஒப்பந்தம் திரைமறைவில் செய்யப்பட்ட ஒரு உருவாக்கம். அந்த ஒப்பந்தம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று என்றார்கள் அவர்கள். அதில் ஒப்பமிட்டு அதன் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துப் போக வேண்டியதுதான் நாங்கள் செய்ய வேண்டியது. அதைச் செய்யா விட்டால் விவாதத்தை நடத்தும் உரிமையை நாங்கள் இழந்து விடுவோம். வின்ஸ்டன்-சேலமில் மட்டுறுத்துனரின் ஆரம்ப உரையை தாங்கள் பார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்கள் வலியுறுத்தினார்கள்.”

“கூட்டமைப்புக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. விவாதம் இந்த கோல்மால்களை தாண்டி உண்மையாக நடக்கும் என்று நம்பி திரைமறைவு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது அல்லது இந்த நாடகத்துக்கு எங்களது நம்பகமான பெயரை கொடுக்க மறுத்து வெளியேறுவது”

“எனவே, பெண் வாக்காளர்களுக்கான கூட்டமைப்பு அமெரிக்கப் பொது மக்களை முட்டாளாக்கும் அந்த முயற்சிக்கு துணையாக இருக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறது”

__________________________________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து
தமிழாக்கம் – செழியன்

__________________________________________________________________________

வெட்டுக்கிளிப் பாட்டி – வீடியோ!

8
abuela-grillo
வெட்டுக்கிளி பாட்டி

abuela-grillo

ண்ணீர் தனியார்மயமாதலையும் மக்களுக்குச் சொந்தமான அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலின் மூலம் கைப்பற்றி தமது லாப வேட்டைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் உலகெங்கிலும் உள்ள யாருக்கும் புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்ட குறும்படம் அபுயுலா க்ரிலோ (வெட்டுக்கிளிப் பாட்டி).

பொலிவியாவில் 2000 வருடம் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது. அதன் விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அதை எதிர்த்து கோபகன் நகரில் அமைதி ஊர்வலம் நடத்தினர். ஆனால் அரசு ஆயுதப் படைகள் அவர்க்ளை குறிவைத்துத் தாக்க, பேரணி கலவரமாக மாறியது. தளராமல் தொடர்ந்த பொலிவிய மக்கள் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

அந்த அனுபவத்தினால் உந்தப்பட்ட பொலிவியாவின் இளம் அனிமேஷன் கலைஞர்க்ள், டென்மார்க் அனிமேஷ்ன் பள்ளி ஒன்றின் உதவியுடன், தண்ணீர் தனியார்மயமாதல் பற்றிய அருமையான, கூர்மையான குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.

பொலிவியாவின் நாட்டுப்புறக் கதை ஒன்றின் பாத்திரமான “வெட்டுக்கிளிப் பாட்டி” என்ற மூதாட்டி எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து நீர் மேகம் வருகிறது, அவர் பாடும் போது அங்கு மழை பொழிகிறது. மழை பெய்வதால் பயிர் செழிக்கிறது, வளம் பெருகிறது, மக்கள் செழிப்பாக வாழ்கிறார்கள்.

ஒரு முறை மக்கள் அவரை அவமானப்படுத்தியதன் காரணமாக வெட்டுக் கிளிப் பாட்டி பாடியபடி நகரம் நோக்கி சென்று விடுகிறார். நகரத்தில் அவரைப் பிடிக்கும் கார்ப்பரேட் ஆசாமிகள் அவரை பாட வைத்து, பொழியும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்க ஆரம்பிக்கிறார்கள்.

வெட்டுக்கிளிப் பாட்டி ஓரிடத்தில் அடைபட்டு விட்டதால், நாட்டில் தண்ணீர் பஞசம் தலை விரித்து ஆடுகிறது. ஆனால் பாட்டி இருக்கும் இடமோ கார்ப்பரேட் நிறுவனம். அந்த நிறுவனம் பாட்டியைக் கொடுமைப்படுத்தி அவரது கண்ணீரையும் பாட்டிலில் பிடித்து மக்களுக்கு விற்கின்றது, தண்ணீரின் விலையையும் ஏற்றிக் கொண்டே போகிறது.

பாட்டி தப்பிக்க முனைந்தாலும் முடியவில்லை. பாட்டி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக அவரை விடுவிக்க வருகிறார்கள்.

தனியார் நிறுவனமோ அரசு உதவியுடன் போலிசை மக்கள் மீது ஏவுகிறது. இறுதியில் போலீஸ் தோற்கடிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெற்றி பெறுகிறது. பாட்டி சுதந்திரமாக பாடிக் கொண்டு வெளியில் நடக்க பெருமழை பெய்து தண்ணீர்  பெருகி சுதந்திரமாக ஓடுகிறது.

இந்தியாவின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா “இலவசமாக கிடைப்பதால் தான் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். தண்ணீரை தனியார் மூலம் விற்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்.

தண்ணீரை வீணாக்குவது சாதாரண மக்கள் அல்ல அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆடம்பர விடுதிகளிலும், பணக்கார வீடுகளிலும்தான் நீச்சல் குளங்கள், குளிக்கும் தொட்டிகள் என்று தண்ணீரை பெருமளவு வீணடிக்கின்றனர்.

ஆனால், அரசு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தவும் வீணாக்கவும் அனுமதிக்கிறது.

சுற்றுச் சூழல் பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றிப் பேசும் தன்னார்வக் குழுக்கள் பெரு நிறுவனங்களிடமே நிதி உதவியும் நன்கொடையும் பெற்றுக் கொள்கின்றன. யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களையே புரவலர்களாக கொண்டு செயல்படுகின்றன தன்னார்வ குழுக்கள்.

தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்ட வழியை நடைமுறையில் நிரூபித்துக் காட்டிய பொலிவிய மக்களின் அனுபவப் பாடத்தை பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம்.

முதலாளிகளின் பிடியில் இருக்கும் போது அவர்களது லாப வேட்டைக்காக விஷத்தையும் வக்கிரத்தையும் உமிழும் கலை, மக்கள் கலைஞர்கள் கையில் செய்திகளையும், சுரண்டல்களையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறது என்பதையும் இந்தக் குறும்படம் நமக்குச் சொல்லுகிறது.

போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!

14

‘‘போலீசாரைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும்; சமூக விரோதிகளை ஒடுக்க முடியும்” என்ற பொய் பார்ப்பனக் கும்பலால் மட்டுமின்றி, பத்திரிகைகள், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினராலும் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப பரப்பப்படுகிறது.  இது மட்டுமின்றி, “தி.மு.க. ஆட்சியைவிட, அம்மாவின் ஆட்சியில்தான் தமிழக போலீசு, எவ்விதமான அரசியல் தலையீடும் இன்றி, அப்படிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்றும் இவர்கள் ஜெயாவைக் குற்றங்களைச் சகித்துக் கொள்ளாத இரும்பு மனுஷியாகப் புகழ்ந்து தள்ளிவருகிறார்கள்.

ஆனால், உண்மையோ இவர்கள் சொல்லி வருவதற்கு நேரெதிராகவே உள்ளது.  பார்ப்பன ஜெயா பதவியேற்ற பிறகும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அவர்களே கூறிக்கொள்ளும் சட்டம்  ஒழுங்கைக் காப்பதில் ஜெயா ஆட்சி படுதோல்வியடைந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகின்றன.  இன்னொருபுறம் ஜெயாவின் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வரும் தமிழக போலீசு, இக்குற்றங்களைக் கட்டுப்படுத்தாத அதேசமயம், பொதுமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தும் சட்டபூர்வமான போராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வெறிபிடித்த நாயைப் போலப் போராடும் மக்கள் மீது பாய்ந்து குதறிவருகிறது; கொட்டடிக் கொலை  சித்திரவதை, கும்பல் பாலியல் வன்புணர்ச்சி என அனைத்துவிதமான வக்கிரமான அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

  • பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று, தான் அடகுவைத்த பொருளை மீட்பதற்காக நரியூத்து என்ற ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பெரியகுளம் திரும்புவதற்காக அன்றிரவு எட்டு மணி போல பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.  அப்பொழுது அவர் முன்னால் திடீரென பைக்கில் வந்து நின்ற இரண்டு போலீசார் வசந்தியைச் சந்தேக கேஸில் கடமலைக்குண்டு போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தனர்.
காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்
காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்

அன்றிரவு 11 மணிக்கு அப்போலீசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியை நெருங்கி, “கொஞ்சநேரம்தான், நான் சொல்றதைக் கேட்டா, உடனே உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு” வக்கிரமாகப் பேசிக்கொண்டே, வசந்தியின் ஆடைகளை அவிழ்த்து, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்த முயன்றான்.  வசந்தி அப்போலீசு அதிகாரியின் வக்கிரமான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எதிர்த்து நின்று போராடியபொழுது, “ச்சீ நாயே…., ஒழுங்கா அவுத்துட்டுவா, இல்லைன்னா விபசார கேஸ் போட்டு நாளைக்குப் பேப்பர்ல உன்படம் வரும்” என அதிகாரத் திமிரோடு மிரட்டினான். அவனின் அம்மிரட்டலுக்கும் பணியாமல் வசந்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து போராடவே, வசந்தியைத் தயார் செய்யும் வேலையை டூட்டியில் இருந்த ஒரு போலீசுக்காரனிடம் ஒப்படைத்தான் அப்போலீசு அதிகாரி.

அதிகாரியின் கட்டளையை ஏற்றுக் கொட்டடிக்குள் நுழைந்த காக்கிச் சட்டை அணிந்த மிருகமொன்று, வசந்தியை லத்தியைக் கொண்டு மாறிமாறித் தாக்கி, அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாகக் களைந்து அம்மணமாக்கி, தனது டூட்டியைச் செய்தது.  அதற்குப் பின் கொட்டடிக்குள் நுழைந்த ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியின் எதிர்ப்பையும் மீறி, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்தினான்.  இதனால் உதிரப் போக்கு அதிகமாகி, வசந்தி தன்னுணர்வு இழந்து மயக்கமடைந்தார்.

வசந்தியைச் சீரழித்த போலீசு அதிகாரி போன பிறகு, காவலுக்கு நின்ற போலீசார், வசந்தியை எழுப்பி, தரையில் ஒழுகித் தேங்கிக் கிடந்த இரத்தத்தை, அவரது சேலையைக் கிழித்துத் துடைக்கச் செய்தனர்.  வசந்தி இரத்தத்தையெல்லாம் துடைத்துவிட்டு, பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிய பிறகு, அப்போலீசு நிலையச் சிறப்புத் துணை ஆய்வாளர் அமுதனால் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, மயக்கமடைந்தார்.  தங்களின் வக்கிரமான காமவெறியைத் தீர்த்துக் கொண்ட போலீசு, தமது கைஅரிப்பைத் தீர்த்துக் கொள்ள, அடகுப் பொருளை மீட்பதற்காக வசந்தி வைத்திருந்த 6,700 ரூபாயைத் தெனாவட்டாகத் திருடிக் கொண்டது.

தங்களின் இக்குற்றங்களை மறைத்துக் கொள்வதற்காக, “நரியூத்து பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் புகுந்த வசந்தி, புஷ்பத்தைக் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்தி, அவரிடமிருந்து மூணே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுவிட்டதாக” வசந்தியின் மீது ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி, அவரைச் சிறையிலும் தள்ளியது, கிரிமினல் போலீசு கும்பல்.  ஒரு மாதம் கழித்துச் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மையை வெளியாட்கள் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது எனத் தொடர்ந்து போலீசாரால் மிரட்டப்பட்டதால், அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டார்.

“மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் குற்றம் புரிந்த போலீசாரின் பெயர்களை வெளியிடவில்லை” எனக் குறிப்பிட்டு, வசந்திக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி எழுதியது ஜூனியர் விகடன் (8.7.2012).  ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபினபு, “திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார்” என அறிக்கைவிட்டு கிரிமினல் போலீசாருக்குச் சாதகமாக நடந்துவருவதையடுத்து, ஜூ.வி., வசந்தியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இரண்டு போலீசு அதிகாரிகளின் பெயர்களையும் அம்பலப்படுத்தியது; “வசந்திக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைகளைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்; வசந்திக்குப் பாதுகாப்புத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தவமணி என்ற வழக்குரைஞரும், மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. (ஜூ.வி.25.07.2012)

  • திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
    திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்

    சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.

‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

  • சென்னைதி.நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமாரும், அவரது நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட சிலரும் கூடுவாஞ்சேரிக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபொழுது, அவர்களது காரை வாகனச் சோதனைக்காக வண்டலூர் அருகே போலீசார் நிறுத்தினர்.  காரை ஓட்டிவந்த ரஞ்சித்குமாரின் நண்பர் கார்த்திக் காரிலிருந்து இறங்கிய அதேசமயம், வாகன சோதனையை நடத்திவந்த போலீசு இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி திடீரென வெடித்து, துப்பாக்கிக் குண்டு காரின் கதவையும் துளைத்துக் கொண்டு சென்று ரஞ்சித்குமாரின் தொடையைத் துளைத்தது.

இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததா அல்லது காரில் வந்தவர்களிடம் தனது அதிகாரத் திமிரைக் காட்டி, மிரட்டும் நோக்கத்தோடு சுட்டாரா என இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை; மாறாக, தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, “கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மீது சில ரவுடிகள் தங்களிடமிருந்த பெரிய ஆயுதமான காரை (!) ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தபொழுது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக’’ச் செய்தி கொடுத்துத் தங்களது கிரிமினல் குற்றத்தை மூடிமறைத்துவிட்டதோடு, காரை ஓட்டிவந்த கார்த்திகையும் கைது செய்தனர்.

  • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வானுமாமலை, அவ்வப்போது மணல் அள்ளிவந்து விற்பனை செய்வதும் உண்டு.  மணல் அள்ளும் மாஃபியா கும்பலிடம் இலஞ்சம் வாங்கி வாங்கி அரிப்பெடுத்துப் போன நாங்குநேரி போலீசார் வானுமாமலையிடமும் இலஞ்சம் கேட்டுத் தகராறு செய்தபொழுது, அவர் தர மறுத்துவிட்டார்.  போலீசு இலஞ்சம் கேட்டுத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்குநேரி போலீசு ஆய்வாளர் விஜயகுமார், கௌபாய் படங்களில் வருவது போல, வானுமாமலையை அவரது கிராமத்திற்கே தேடிவந்து சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார்.
போலீசு
எருதாட்டத்திற்குத் திடீரென விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சேலம்-நெய்க்காரன்பட்டி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் பொழுது அம்மக்களை வீடு புகுழ்து தாக்க முற்படும் போலீசு

இந்த நான்கு சம்பங்களுமே திருட்டு, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை  கொலை, சாட்சியங்களை அழித்தல் எனக் கொடிய கிரிமினல் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.  ஒரு சாதாரண மனிதன் இக்குற்றங்களைச் செய்திருந்தால் அல்லது அவன் மீது இப்படிப்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தாலே இந்நேரம் அவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பான்.  ஆனால், இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எவ்வித கிரிமினல் வழக்கும் இதுவரை தொடுக்கப்படவில்லை.

போலீசார், தமது சக ஊழியர்களைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது.  சாமானியனுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்திற்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை என்ற திமிரோடு போலீசு நடந்துவருவதையும்; சட்டத்திற்கு மேலான தனிவகைப்பட்ட சாதியாக இருந்துகொண்டு, சமூகத்தையே அச்சுறுத்தி வருவதையும்தான் இச்சம்பவங்கள் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றன.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்

மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை போலீசு நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்கிறது சட்டம்; ஆனால், கடமலைக்குண்டு போலீசாரோ வசந்தியை இரவு எட்டு மணிக்கு பொதுமக்களின் கண்முன்னாலேயே ஆட்டோவில் இழுத்துப்போட்டுத் தூக்கிச் சென்றுள்ளனர்.  குற்றவாளிகளைக் கண்காணிப்பது என்ற பெயரில் ரோந்து வந்த போலீசார்தான் வசந்தியைத் தூக்கிக் கொண்டுபோய் சீரழித்துள்ளனர்.  இலஞ்சம் தர மறுத்து, போலீசாரோடு மோதியதால் வானுமாமலை போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  வாகனச் சோதனையின்பொழுது போலீசின் துப்பாக்கி வெடித்து, ரஞ்சித்குமார் குண்டடிபட்டுக் காயமடைகிறார்.

வாகன சோதனை நடத்தும் இடங்களில், போலீசு கேட்கும் ஆளறிச் சான்றுகள் இல்லாதவர்களைச் சந்தேகக் கேஸில் கைது செய்து, போலீசு நிலையத்திற்கு கூட்டிச் சென்று, அவர்களின் கைவிரல்கள், அங்க அடையாளங்கள், முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளும் அளவிற்கு போலீசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால், இப்பொழுதெல்லாம் இரவு 11 மணிக்கு மேல் சட்டபூர்வ கிரிமினல் கும்பலான போலீசு ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.  இது மட்டுமின்றி, சென்னை நகரத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் போலீசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற போலீசின் கட்டளை, சிவிலியன்கள் அனைவரையுமே சந்தேக லிஸ்டில் வைத்துக் கண்காணிக்கும் மமதையை போலீசுக்கு வழங்குகிறது.

இவையனைத்தும் போலீசு வழங்கப்பட்டுள்ள ரோந்து சுற்றும் அதிகாரம், ஆயுதம் ஏந்தும் அதிகாரம், போதிய ஆதாரம் எதுவுமின்றியே ஒருவரை விசாரணைக்காகக் கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட பல அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற கருத்துக்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.

ஆனால், துக்ளக் சோ போன்ற போலீசின் ஊதுகுழல்கள், “போலி மோதல்கள் நடப்பதெல்லாம் உண்மைதான்; அதன் மூலம்தான் சமூக விரோத சக்திகளை ஒடுக்க முடியும்” என வெளிப்படையாகவே போலீசின் அத்துமீறல்களுக்கும் அதிகாரத்துக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.  மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் இயங்கிவரும் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “மனித உரிமைகள் பற்றி போலீசாருக்கு வகுப்புகள் எடுப்பதன் மூலம் அவர்களைப் பொதுமக்களின் நண்பனாகத் திருத்திவிட முடியும்” என ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், “போலீசாருக்கு அதிக ஊதியம் வழங்கி, அதன் மூலம் அவர்கள் வேறு எந்த முறைகேடுகளிலும் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.  போலீசாரின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், அதன் மூலம் காவல்துறை தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திச் செயல்பட முடியும்.  இது சமுதாயத்துக்கும் பெரும் நன்மைகளை விளைவிப்பதாக இருக்கும்” எனத் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளது.

போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை
போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை

உயர் நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஒருவிதத்தில் மூடநம்பிக்கையோடு ஒப்பிடலாம்; இன்னொருவிதத்தில் மோசடித்தனமானது என்றும் குறிப்பிடலாம்.  திருப்பூரில் பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்த பாசி நிதி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி 3 கோடி ரூபாய் வரை கையூட்டுப் பெற்ற கிரிமினல் வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார்தான் முதன்மைக் குற்றவாளி.  அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் சம்பளம் குறைவானதா என்ன?  அரசு ஊழியர்களிலேயே போலீசுதுறைதான் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்து வருவதோடு, மற்றவர்களைவிட, போலீசாருக்குத்தான் பல்வேறு விதமான சலுகைகள் கொட்டி அழப்படுகின்றன.

இச்சலுகைகள் ஒருபுறமிருக்க, போலீசை சைவப் புலியாகக் காட்டுவதற்கும் அரசு ஏற்கெனவே பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.  மனித உரிமைகள் தொடர்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது தொடங்கி ஒருவரைக் கைது செய்யச் செல்லும்பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது வரை அவர்களுக்குப் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை யாரும் மயிருக்குச் சமமாகக்கூட மதிப்பதில்லை.  போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும், ஆளுங்கட்சியும் மட்டுமல்ல, நீதிமன்றமும்கூடக் கண்டு கொள்வதில்லை.

ஒன்றிரண்டு மனித உரிமை மீறல் வழக்குகளில் கிரிமினல் போலீசார் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றால், அதற்குப் பொதுமக்களின் சமரசமற்ற போராட்டம்தான் காரணமாக இருந்திருக்கிறதேயொழிய, அரசின், நீதிமன்றத்தின் ‘நீதிவழுவாத’ தன்மை காரணமாக இருந்ததேயில்லை.  “தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால், போலீசின் தார்மீக பலம் குன்றிவிடும்” எனக் கூறி, போலீசின் கிரிமினல் குற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரை மூடிமறைத்துவிடவும், கிரிமினல் குற்றம் புரிந்த போலீசாரைக் காப்பாற்றவும்தான் ஆளும் கும்பல் முயலுகிறது.

எனவே, பாலியல் வல்லுறவு, கொட்டடிக் கொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைத் தண்டிக்கச் சட்டம், நீதிமன்றங்களை நம்புவதைவிட, பொதுமக்கள் தமது சொந்த பலத்தைத்தான் நம்ப வேண்டும்.  போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராக மட்டுமின்றி, அத்துறைக்கு வழங்கப்படும் மட்டுமீறிய அதிகாரத்தை ரத்து செய்யக் கோரியும் கிளர்ச்சிகளிலும், கலகங்களிலும் இறங்க வேண்டும்; ஜேப்படி திருடர்களின் படங்களை வெளியிட்டுப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுவது போல, இலஞ்சம், ஊழல், பொறுக்கித்தனம், அத்துமீறல்களில் ஈடுபடும் போலீசாரின் பெயர்களையும் படங்களையும் பகிரங்கமாக வெளியிட்டு, அக்கும்பலை அவமானப்படுத்த வேண்டும்.  பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டால் உடனடியாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை உருவாக்கி, அக்கும்பலின் அதிகாரக் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.

கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி
கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி

போலீசின் அதிகாரங்களையும் தனிஉரிமைகளையும் பறித்து, அதனைப் பல் இல்லாத பாம்பாக ஆக்கிவிட்டால், சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும் என்ற வாதம் வைக்கப்பட்டு, போலீசுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.  ஆனால், இன்றளவும் நமது நாட்டின் பல்வேறு கிராமங்களில் போலீசு என்ற அமைப்பு இல்லாமலேயே சமூக ஒழுக்கம் பேணப்படுவதையும்; திருட்டு, விபச்சாரம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ரவுடிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதே போலீசுதான் என்பதையும் மக்கள் தமது சொந்த அனுபவத்திலிந்தே புரிந்து வைத்திருக்கிறார்கள்.  எனவே, அந்த வாதத்தை நாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியதேயில்லை; போலீசின் வரம்பற்ற அதிகாரங்களை பறிப்பது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கைக் காப்பது என்ற பெயரில் மக்கள் அனைவருக்கும் மேலாக, தனிவகை ஜாதியாக இருந்துகொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கிவரும் போலீசு என்ற அமைப்பே தேவையில்லை என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

பட்டுத் தறி… பறி போன கதை!

7

திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டுபவரை கண்டால், ”இங்க ஏம்பா காலை ஆட்டுற, காஞ்சிபுரத்துக்கு போயி காலை ஆட்டினா சோறு கிடைக்கும்” என்பார்கள். காரணம், உழைப்பாளின் உற்பத்திப் பொருட்களின் பளபளப்புக்கு பின்னே இருக்கும், துயரம் தெரிவதில்லை. பட்டு விளம்பரத்தில் வரும் வத்ஸரகலா, சமுத்திரிக்கா என்று ஜொலிக்கும் பட்டின் பின்னாலிருக்கும் சோகம் விடியாத, இருள் போன்றது.  பாவு போல சிக்கலானது. பச்சை பாவுப் போல் நையிந்துப் போனது.

பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு…. பட்டுபுடவையாகும் நீண்ட…. கதை.

பட்டு புழு, பட்டு இழை,  பட்டு நூல், பட்டு கோறா, பாவு பட்டு, தறிப்பட்டு, தங்கம் வெள்ளியிலிருந்து ஜரிகை. இவை, நெசவுக்கு வெளியே நடக்கும் வேலைகள்.

அடுத்து, நெசவு வேலைகள். இதில் மூன்று நிலைகள். ”நெசவுக்கு முன், நெசவு, நெசவுக்கு பின்”.

நெசவுக்கு முன்; கோறா தலா- எண்ணிக்கை பிரிப்பது,  சாயம் போடுவது, கஞ்சி போடுவது, அச்சுப் பிணைப்பது, பண்ணையில் வாங்குவது, பட்டு இழைப்பது, நான்கு இழைகளாக சோர்ந்து, தார் திரிப்பது – ஜரிகைக்கும் இதே வேலை.

பிறகுதான் நெசவு வேலை; பண்ணையில் வாங்குவது. நெய்யும்போது சரியான இறுக்கத்தில், பாவு கட்டுவது, -எயட்டு கட்டுவது- அச்சு மரம் அடிப்பது, டிசைனுக்கு தகுந்தவாறு பேட்டு குச்சு இழுப்பது, இதில் எதாவது ஒன்று  பிசகினாலும், அனைத்து வேலையும் நாசம். இந்த வேலைகள் ஒருவரால் செய்ய முடியாது.  குடும்பமே உழைக்க வேண்டும். பாவுக்கு கஞ்சிப் போடும்போது, பிற தறிக்காரர்களின் உதவி முக்கியம். இவ்வளவு நுணுக்கமான வேலையினையும், சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் செய்யும் நெசவாளர்களுக்கு நேரம், காலம் கிடையாது. வாழ்க்கையுடன் தொழிலும் பிணைந்தே இருக்கும்.  குழந்தைகளும் உதவும்.

நெசவாளர்கள் எப்போதும் எளிமையான யதார்த்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றுவர். சாமி கும்பிடும்போது முதலில் வணங்குவது தறியைதான். அமாவாசை, கிருத்திகையை வீட்டு முருங்கைக்கீரையிலேயே முடித்துவிடுவார்கள். தொழிலுடன் ஒன்றி எளிமையாக வாழும் பட்டு நெசவாளர்களுக்கு கிடைக்கும் கூலியோ சொற்பத்திலும் சொற்பம். இருந்தாலும் பட்டுதான் அவர்கள் சுவாசம்.  குழந்தையைக்கூட ‘பட்டூ’ என்றுதான் வாய் நிறைய  கொஞ்சுவார்கள்.

பட்டு தறி பறிபோகும் நிலை

நெசவாளியிடம், ”உங்கள் குழந்தை என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்டால்,  ”பட்டு தறியைவிட வேறு எதாவது படிச்சுட்டு செய்யட்டும், இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்” என்பார்கள். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை.  தறித் தொழிலே எவ்வளவோ ‘மேல்’ என்றாகிவிட்டது. காரணம், வேலை செய்யும் போது யாருடைய ஆணைக்கும் காத்திருக்க தேவையில்லை. வீட்டிலேயே வேலை, சோர்வுற்ற போது ஓய்வு. குழந்தைகளுக்கு, வளரும் போதே தொழிலை கற்றுத் தருவார்கள்.

எனக்கும்  அந்த அனுபவம் உண்டு. 5, 6-ம் வகுப்பு படிக்கும்போதே பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு நானும், என் தோழியும் சாதாவாட்டு, கோர்வை, பிட்னி எடுக்க கூலிக்கு செல்வோம். ஒரு நாளைக்கு ரூ.5 சம்பாதித்து,  நோட்டு, பாக்ஸ், வாட்டர் கேன் வாங்கி பள்ளிக்கு எடுத்துச் சென்றதும்,  பாட்டி நோயுற்றபோது ”காப்பி” வாங்கிக் கொடுத்தது இன்னும் மறக்கவேயில்லை. தறிகார பெண்கள் , கூடவே வீட்டு வேலையும் வாங்குவார்கள், இதனால்,  வீட்டு வேலைகளும் அத்துபடி.  அந்த வேலைகள் எல்லை மீறும்போது பாட்டிகள் அவர்களிடம் சண்டைப் போட்டு மீட்டு வருவார்கள்.

குழந்தைகளைப் போல பெண்களும்  கூலிக்கு செல்வதுண்டு. புடவையின் முந்தானைக்கான கலர் மாற்ற  வேண்டி புது பாவினை இழை, இழையாக அச்சில் ஏற்றுவது – பிட்னி ஏற்றுவது –  குழந்தைகள் பிட்னி எடுத்துக் கொடுக்கும்- பிறகு, முந்தானைக்கான டிசைனை கையினாலயே, பலகை மூலம் பாவுனுள் செலுத்தி தூக்குவது -செல்ப் பாசுவது-. மிகவும் நுட்பமான வேலை, கடினமான வேலையும் கூட. தறிக்குக்கேற்றவாறு உட்கார்ந்து தரையோடு குனிந்து பாச வேண்டும் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் முறையான கூலி கிடையாது. ஆனால், இந்த வேலை செய்யும்போது ஒரு சந்தோஷம் உண்டு. புடவை முடிவதற்கான கடைசி வேலை.

முக்கியமான பின் நெசவு வேலை

புடவை மடிப்பது.  கண்டிப்பாக இதற்க்கு அனுபவம் வாய்ந்த இருவரின் உதவி தேவை.  குஞ்சம் கட்டி பிசிறு எடுத்து முந்தானை, பார்வையிடம் என்று அனைத்தும் சரியான இடத்தில் மடிக்க வேண்டும். இந்த வேலையை முழுபலத்துடன் இழுத்தவாக்கில் இரண்டுப் பேர் செய்ய வேண்டும்.  நேர்த்தியும், பளப்பளப்பும் இங்குதான் கிடைக்கும். புடவை மின்னும்.

பட்டுக்கு உழைப்பை கொட்டுவது மட்டுமல்ல. தன் வீடு கட்டும்போது கூட  தனக்காக அல்ல, பட்டு தறிக்காகவே வீடு கட்டுவார்கள்.  தறி பொருட்களை  சுத்தமாக, பாதுகாக்க இடம் ஒதுக்குவார்கள். வீடுகட்டியும் படுக்க இடம் இல்லாமல் தறிக்கு அடியிலேயே முடங்கி தூங்குவார்கள். தறி நெய்யும்போது வரும் சத்தம் காது நோகும். நோயுற்றவர்களுக்கு வேதனையாக இருக்கும். இவ்வளவுக்கும், தறி மட்டும்தான் தறிக்காரர்களுக்கு சொந்தம்.  புடவைக்கான பாவு, பட்டு ஜரிகை முதலாளிக்கானது. அற்பமானதுதான் தறிக்காரர்களுக்கு. பட்டு புடவை அல்ல, மீந்த பட்டுஅரைஞாண் கயிறுதான் நெசவாளிக்குழந்தைக்கு.

இன்னமும் 94 ஆம் ஆண்டு  கொடுத்த கூலி ஏறவே இல்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால், இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் பலனும் முதலாளிக்கே. ஏனெனில், இயந்திரம் முதலாளிக்கு சொந்தம்.

கூட்டுறவு சங்கத்தில் இந்த நடைமுறைகள் வித்தியாசப்படும். ஆனால் நெசவாளர்கள் அனைவரும் அதில் உறுப்பினர்களாக முடியாது.  அதையும் இதே முதலாளிகள்தான் இயக்குகிறார்கள் பினாமி பெயரில்.

தறிக்காரர் வாழ்க்கை

தறிக்குழியில் கால் எட்டும் வரைதான் ஆண்குழந்தைகளுக்கு படிப்பு. பெண் குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.  இருட்டும் வரை தறியில் இருக்கும் நெசவாளிகள்  டீ குடிக்க காசு தேடுவார்கள். கடைசியில் அன்றைய தினம் விழுந்த ஜரிகை துக்கு, சேட்டுக் கடையில் ரூ.5, 10 ஆக மாறும். அதுதான் டீ,  செலவுக்கு. குழந்தைகளும் அதற்கு காத்திருக்கும்.

தின கூலிக்கு செல்லும் போது பல கஷ்டங்கள். தறியுடன் வீட்டு வேலைகளையும் செய்யணும்.  குழைந்தைகளை ரூபாய்.முண்ணூறு, ஐநூறு மாத சம்பளத்துக்கு விட்டு அதிகபட்சம் ரூபாய் ஐயாயிரம் அட்வானஸ் வாங்குவார்கள்.  சம்பளத்துக்கு போய்ட்டா அடிமைதான். எஜமானர் வீட்டில் வேலையில்லையென்றால், மற்ற வீட்டுக்கு கூலிக்கு சென்று கூலியை பெற்று எஜமானர்களுக்கு கொடுத்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டுதான் வரவேண்டும். வேலை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை. மாதம் அமாவாசை ஒருநாள் மட்டும் தான் லீவு.  சேலை முடியும் தருவாயில் இருந்தால் அதுவும் போச்சு. பொங்கல் பண்டிக்கைக்கு  ஒரு செட்டு துணி உண்டு. இதற்கு மார்கழி முதல் நாளிலிருந்து தை  வரை  அதிகாலை 3.30 லிருந்து இரவு 10.30 மணிவரை நிமிராத வேலை. ஆயுத பூஜையில், தறி சாமானை கழுவி சுத்தமாக்கி பட்டை அடிக்க வேண்டும். கொஞ்சம் பொரியும் துட்டும் இனாமாக கிடைக்கும்.

வயசுக்கு வந்த பெண்களின் நிலைமையோ கொடுமை. வீட்டு குடிகார ஆண்களால் பல தொந்தரவுகள். ஆண்கள், வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள்  சுறுசுறுப்பா வேலை செய்தால், அவளை இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்வதுண்டு. பெண்கள் தங்கள் வீடுகளிலேயே வேலை செய்தால் தப்பித்தார்கள். வயசு பெண்கள் தறி நெய்துதான் கல்யாணத்துக்கு சேர்க்க வேண்டும். கல்யாணமாகிச் சென்றால் அங்கும் தறிதான்.  வீட்டுக்காரன் தன்னை விட்டு ஓடிவிட்டாலும், இறந்துவிட்டாலும்  சொந்த காலில் நிற்பார்கள்.  குழந்தைகள் படிப்பு கனவுதான்.  பெண்கள் நரம்பு புடைப்பு, மூலம்,  மூட்டுவலி, ஆண்கள் விரைவீக்கம் என்று நோயுறுவார்கள். தறிக்குழியில்  கொசு கடித்து யானைக்கால் வந்தாலும்,  அதைப் பெரிசா எடுத்துக்காம நெய்யும் புடவையில் கொசு கரை படிஞ்சா பதறி போயிடுவாங்க.  தறி நெய்ய முடியாத வயதான காலத்திலும் பட்டு, கோறா, கூலிக்கு  இழைப்பது,  சேலைகளுக்கு  தைக்கும் பார்டர் நெய்வது என வாழ்க்கையையே  தறியுடன் முடிப்பார்கள்.

நெசவாளிகளுக்கு மழைகாலம் வேதனைக்காலம்.  குளிரில் குழந்தை அழுதாலும் கவனிக்காமல், தறியின் மீது ஈரக் காற்று படாமலிருக்க  துணிகளையெல்லாம் அதன் மீது போர்த்துவார்கள். மழைப் பெய்த்தால், தறி அச்சுமரம் நகராது. பேட்டு டிசைனும் விழாது, தறி அசையாது. சோறு ஒருவேளை மட்டும்தான்.  நிறைய வீடுகளில் அடுப்பெரிக்கக்கூட விறகு இருக்காது. முடிச்ச சேலையை அறுக்க முடியாது.  சேலை நமுத்து ஒடிஞ்சி போயிடும். விறைப்பா இருக்காது. வெயில் வந்தாதான் சேலையை அறுக்க முடியும்.

ஆயிரம் கஷ்டப்பட்டாலும், தொழில் இருந்தது.  காஞ்சிபுரம் பட்டு என்றாலே  குழந்தைக்கும் தெரியும். காரணம் தலைமுறை தாண்டியும் மின்னும் ஜரிகையின் தரம்.  பலமுறை அணிந்தாலும் கசங்காத, எடைநிறைந்த  பட்டு.   அன்னம், மயில், கலசம், இன்னும் மயக்கும் உருவங்கள். அரக்கு, புவனா, அஜந்தா என்ற கண்ணை பறிக்கும் வண்ணங்கள். புடவையின் ஆயுள்வரை வசிகரிக்கும்.

இப்போது பட்டு தொழில், பட்டு போய்விட்டது. தொழில் பாழாய் போனதற்கு பல காரணம் அதில் ஒரு காரணம்.  பாதிக்கு பாதி இலாபம்  கொழுத்த முதலாளிகள் – புது பணக்கார பொறுக்கிகள் – பட்டு ஜரிகையில் போலியை புகுத்தி பெரும் கொள்ளையடித்தார்கள்.  காஞ்சிபுரம் பட்டு என்றால் கேள்விக்கிடமின்றி,  வாங்கும் நிலை மாறி, போலியால் பட்டு தொழிலே கேலியாகிப் போனது. தரமில்லாத பட்டை மெஷினில் உற்பத்தி செய்து  கொழுத்தனர் முதலாளிகள். இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் நெசவாளிகள். நெசவையொட்டியிருந்த தொழில்களான, வண்ணம் தோய்ப்பது, அச்சு கட்டுதல், பரூட்டம், நாடா சரிபார்ப்பது, பட்டு, கோறா இழைப்பது,  பட்டு, ஜரிகை துக்கு கடைகள், தறிசாமான்கள் செய்யும் ஆசாரிகள், என்று கண்ணுக்கு தெரியாத பல குடும்பங்களும் குலைந்துவிட்டது. 10 ஆண்டுக்களுக்குமுன் 1,00,000 பட்டுதறிகள். இன்று 10,000 க்கும் கீழ் குறைந்து விட்டது.

நெசவாளியின் குடும்பத்தின் வியர்வையால் கொழுத்த முதலாளிகள் ஏ.சி கார்களில் ரியல் எஸ்டேட், டிம்பர் லாரி, வட்டிக் கடை எனப் புதுப்புது தொழிலில் இறங்கிவிட்டனர். ஆனால், நெசவாளிகளோ அந்த சொகுசு கார்களை தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளில், மெஷின் துடைப்பவர்களாவும், பெருக்குபவர்களாவும்,  காவல்காரர்களாவும் இன்னும் கோரமென்னவென்றால், காஞ்சிபுரத்தில் தறிக் கொட்டகைகள் சாராயபாட்டில்கள் கழுவும் ‘கம்பெனிகளாக’   மாறிவிட்டது. அங்கு பாட்டில் கழுவ பெண்கள் செல்கிறார்கள். ஆண்கள் குடியில், பெண்கள் சாராய பாட்டில் கழுவி குடும்பத்தை காக்கின்றனர்.  தன் குடும்பத்துக்கு கௌரவத்துடன் சோறுப் போட்ட பட்டு தறி, இப்போது அடுப்பெரிக்க பயன்படும் அவலம்.

முன்பெல்லாம் காலையில் குளித்து மஞ்சள் பூசி மங்களகரமாக தொழில், குடும்பம் என்று வீட்டோடு இருந்தவர்கள், இன்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு  பெருக்கும் வேலைக்கு இரவுபகலாக ஓடுகிறாரகள். 70,100 கி.மி சென்று நடுஇரவு 12 க்கு வீடு திரும்புகிறார்கள். கோலுக்கு ஆடும் குரங்கினைப் போல், தன்  ரூபத்தை மாற்றி தலைமுடிக்கு டை அடித்து சென்றாலும் 35 வயதிற்க்கு மேல் வேலை இல்லை.  துரத்தும் நிலை. பெருக்கி கூட்டும் வேலையும் கனவாகி போன அவலம்.நெசவாளிகள் இடிந்துப் போன நிலையில் இருக்கிறார்கள்.

அரசோ, ஜவுளி பூங்கா என்ற பெயரில் பரம்பரிய காஞ்சிப் பட்டை, பன்னாட்டு  கம்பெனிக்கு  முந்தானை விரிக்கிறது.  பட்டு புடவைகளுக்கு பண்டிகைக் கால தள்ளுப்படியாக அரசு  தரும் மான்யம், சுருங்கிப் போனது.  மலை அளவு விலையால், பட்டு புடவையின் விற்பனையும் தேங்கியது. கையிலே கலைவண்ணம் கண்டவர்கள், ஓட்டுக் கட்சிகளின் பல வண்ணப் பித்தாலாட்டத்தை, பிரித்து அறியமுடியாமல் தவிக்கிறார்கள். படிப்பறிவற்ற பட்டு நெசவாளர்கள் மனக் கணக்கில் வல்லவர்கள். பட்டுபுடவையின்  எடையை  இழை, குளிகை, தார் கணக்கில் நொடியில் சொல்லுவார்கள். இதுபோலவே,  தங்கள் தொழிலை சுறையாடிய எதிரியின் கணக்கை விரைவில் கச்சிதமாக முடிப்பார்கள்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

____________________________________________

-வீரலட்சுமி.
__________________________________________________

இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!

31
சென்னை-ஜி-எச்
அரசு பொது மருத்துவமனை, சென்னை

ந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும்? இந்த கேள்விக்கு பதில்  தெரிந்து கொள்ள வேண்டுமா? அவசியம் சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.

நாமும் அந்தக் கேள்விக்கு விடை தேடித்தான் மருத்துவமனைக்கு போனோம்.  வளாகத்தில் நுழைந்தவுடன் செட்டிநாடு மருத்துவமனை விளம்பரத்தில் வருவது போல் யாரும் நம்மை கை கூப்பி வரவேற்கவில்லை. அப்போலோ மருத்துவமனையின் ரிசப்ஷன் போன்று பளபள தரையில் பளிங்கு விநாயகர் சிலை, மணக்கும் பூக்கள் இல்லை.

வளாகத்தைச் சுற்றியும் மக்கள், ஏதோ ஒரு நோய், ஏதோ ஒரு கதையுடன், எதிர்காலம் என்னெவென்ற ஒரு கேள்விக் குறியுடன் மக்கள். முதலில் வெளி நோயாளிகளுக்கான பிரிவில் நுழைந்தோம். மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அழுக்குப் படிந்த கட்டிடம், மக்கள் கூட்டம். அவர்களுக்கு சத்தமாக பதில் சொல்லியபடி இருக்கும் ஊழியர்கள்.

வெளியே மக்கள் ஓய்வெடுக்க உட்காரும் மண்டபத்துக்குள் நோயாளிகளும் உடன் வந்தவர்களும் ஈ மொய்க்க படுத்திருக்கிறார்கள். எங்குமே ஒரு கவிச்சி வாடை, கழிவு பொருட்கள், குப்பைகள் சிதறி விழுந்து கிடக்கின்றன. பக்கத்திலேயே ஒரு கோவில் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு வந்தால் யாருக்குமே கடவுள் நம்பிக்கை வந்துவிடும். கடவுள் நம்பிக்கையும் இல்லை என்றால் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சாகிற நாள் தெரிந்து மிச்சம் வாழும் நாள் நரகமாகிவிடும்.

பேசினால் நம்முடன் பேசுவார்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்களா? என்ற தயக்கத்துடன் பேச தொடங்கினோம். ‘யாராவது நம்முடன் பேசமாட்டார்களா? நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ளமாட்டோமா’ அவர்கள் ஏங்கியிருப்பார்கள் போல. நாம் பேச ஆரம்பித்தவுடன் மடமட என பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கிருஷ்ணகிரியிலிருந்து தங்கள் குழந்தையின் கால் நரம்பு பிரச்ச்னைக்கு சிகிச்சை பெற வந்திருந்தவர்களிடம் பேசினோம். அவர்கள் கட்டிட வேலை செய்கிறவர்கள். கிருஷ்ணகிரியிலிருந்து இரவே கிளம்பி விடியற்காலை 2 மணிக்கு கோயம்பேட்டில் இறங்கி 3 மணிக்கு மருத்துவமனை வந்துவிட்டார்கள்.

“விடியகாத்தாலேயே வந்தோம் அப்பவே எங்களுக்கு முன்னாடி பத்து பேர் லைன்ல நிக்கிறாங்க. காத்தாலேயே வந்தா, டாக்டர பாத்துட்டு பொழுதோட வீடு போய் சேரலாம் இல்லையா?” என்றார்கள்.

“கிருஷ்ணகிரி பக்கத்துல ஆஸ்பெத்திரி இல்லையா?”

“இருக்கு சார், பிரைவேட் ஆஸ்பெத்திரி போனா, காசு கொடுத்து கட்டுப்படி ஆகாது, கெவர்ன்மென்ட் ஆஸ்பெத்திரிக்கு போனா அவங்க சீட்டு எழுதி கொடுத்து இங்க வரச் சொன்னாங்க”

‘இங்க நல்ல தான் சார் பாக்கிறாங்க காசு எதுவும் வாங்கல, எல்லாம் ஃப்ரிதான்’

‘எதற்கும் காசு வாங்கவில்லையா? மாத்திரைகள் எல்லாம் ்ப்ரீயா கொடுக்கிறாங்களா?’

‘மருந்தும் ஃப்ரி தான் சார் சில தவிர, ஒரே ஒரு ஸ்கேன் மாத்திரம் வெளியே எடுக்க சொன்னாங்க 2000 ரூபாய் ஆச்சு’.

‘ஏன் அது இலவசம் இல்லையா’

‘ப்ரைவெட்டுக்கு போயிருந்தா எவ்வளவு செலவாயிருக்கும். டாக்டர் நல்லா பாத்துக்கிட்டாரு, கொழந்தைக்கும் குணமாயிடிச்சி’ என்றபடி விடை பெற்றார்.

வடபழனியில் இருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சந்தித்தோம். அவருக்கு சர்க்கரை வியாதியாம். தொடர்ந்து வருகிராறாம், இலவச மருந்துகள் தான் தருகிறார்கள். ஆனால் ஊசியில் தினமும் போட்டுக் கொள்வதற்கான இன்சுலின் மருந்தை மட்டும் வெளியே வாங்கிக் கொள்ள சொன்னார்கள் என்றார். அவரிடம் இருந்த மருந்துகளை விட இன்சுலின் விலை உயர்ந்தது. அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பார்த்துக்கொன்டிருக்கிறார், ஆனால் அந்த மருத்துவர் இவர் செலவு செய்ய முடியாதவர் என தெரிந்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு போக சொல்லியிருக்கிறார்.

சர்க்கரை வியாதியுடன் கூடிய ரத்த அழுத்த நோய் என்பது உடலை சிறிது சிறிதாக அழித்து வரும் நோய். அதற்கு சிகிச்சை தனியார் மருத்துவமனை என்றால் தடபுடலாக இருக்கும். மருத்துவரை நன்றாக ‘கவனிக்கும்’ மருந்து கம்பனியின் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தை பரிந்துரைப்பார். தனக்கு வருட சுற்றுலா செலவிற்கு பணம் கொடுக்கும் சர்க்கரை குறைக்கும் மருந்தை கொடுப்பார். இங்கே சில மருந்துகள் அரசே கொடுக்கிறது. முக்கிய மருந்தான இன்சுலினை வெளியே வாங்கிக் கொள்ளச் சொல்லி விட்டார்கள்.

அரசு மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. மருத்துவர்கள் தங்கக் கொடுத்திருக்கும் அறைகளைப் பார்த்தால், அழுக்கு படிந்த ரத்த வாடை அடிக்கும் மருத்துவமனை வளாகம் எவ்வளவோ மேல். மழை நீர் ஒழுகி கறை படிந்து இன்றோ நாளையோ என்று காத்திருக்கும் சுவர். பராமரிக்கப்படாத படிக்கட்டுகள். மருத்துவர்கள் ஒன்று சேவை மனப் போக்கில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும, இல்லை என்றால் மனதை கல்லாக்கிக் கொண்டு பணம் சம்பாதித்து வெளியே ஜாலியாக வாழ வேண்டும்.

நடுவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர்கள் போராடினால் (போராடுகிறார்களா?) அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். ஏதாவது பிரச்சினை வந்து நோயாளிகள் தாக்கினால் மருத்துவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்களே அன்றி மருத்துவமனை மேம்பாட்டிற்காக போராடுவதில்லை.

மருத்துவமனை வளாகத்தின் பின்பகுதியில் இருந்த கான்டினுக்கு சென்றோம். மரத்தடியில் சிமென்ட் சுவர் மீது உட்கார்ந்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பக்கத்தில் அமரர் ஊர்திகள் நின்றுக்கொண்டிருந்தன. அழுக்குத் துணி போர்த்தி சூம்பிபோன கால்களை கொண்ட ஒரு அனாதை பிணத்தை எடுத்து சென்றார்கள்.

ஒருவரிடம் பேச்சு கொடுக்க அருகில் இருந்த இரண்டு பேரும் சரளமாக பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் திருவாரூரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயக் கூலி செய்பவர்கள். தலையில் அடிபட்டு நரம்பு கோளாறுக்குள்ளான தங்கள் நெருங்கிய சொந்தக் காரரின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள்.

அவர் சிறு வயதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். திருமணமாகி குழந்தைகளும் பிறந்து விட்டன. நாளாக நாளாக உடலில் பல குறைகள், நடக்க முடியவில்லை, கால் வலி என்று படுத்த படுக்கையாகி விட்டிருக்கிறார்.

‘திருவாரூர்ல இதே மாதிரி பெரிய ஆஸ்பெத்திரி கட்டிடம் கலைஞர் பீரியட்ல கட்டிட்டாங்க, இங்க ஒவ்வொரு வகை நோய்க்கும் டாக்டரு இருக்கிறாங்க ஆனா அங்க இவ்வளவு டாக்டரு இல்ல. நரம்பு சிகிச்சைக்கு வெளியேதான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க’

‘தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா இருக்குற கோமணத்தையும் வித்தா கூட நோவு குணமாகுமா தெரியாது அதனால, தஞ்சாவூரில இருந்து திருவாரூர் வந்து வாரம் ஒரு முறை நோயாளிகளை பார்க்கிற டாக்டரைப் பார்த்தோம், ஒவ்வொரு முறைக்கும் 100 ரூபாய் பீசு. அவரு தஞ்சாவூரு போய் ஸ்கேன் எடுத்துட்டு வரச் சொன்னார். வழக்கமாக 5,000 ரூபாய் ஆகுமாம், இவர் சொன்னதால 3,000 ரூபாய்க்கு முடிஞ்சது’

நோயாளி படுத்திருக்கும் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு போய் ஆம்புலன்சில் ஏற்றி, ஸ்கேன் மையத்திற்கு கொண்டு போய், திரும்ப வந்து சேரும் ‘ஆடம்பரம்’ இவர்களுக்கு இல்லை.

நோயாளியை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி ரயில் நிலையம் அழைத்துச் சென்று, ரயிலில் ஏற்றி, தஞ்சாவூரில் இறங்கிய பிறகு மீண்டும் ஒரு ஆட்டோவில் ஸ்கேன் மையம் போய் ஸ்கேன் எடுத்து விட்டு ஆட்டோ, ரயில், ஆட்டோ என்று வீடு கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘ஸ்கேனைப் பார்த்த டாக்டர் ஆப்பரேசன் செய்யச் சொல்லிட்டாரு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போகலாம்’ தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட இரண்டு பேர் இறந்துவிட்டார்களாம். ‘இறந்தால் பரவயில்லை சார் ஆனால் பொறுப்பா ஒருத்தரு கூட பதில் சொல்றது இல்லை. நரக வேதனையா பொயிடுது’

அதனால் சென்னையில் வேலை பார்க்கும் இன்னொரு உறவினர் மூலமாக சென்னை கொண்டு வந்திருக்கிறார்கள். கூட வந்தவர்களுக்கு இரவு படுக்கையெல்லாம் வெளியே ரோடு, ப்ளாட்பாரத்தில் தான். குளியல் அரசு மருத்துவமனை கழிப்பறையில். உணவு ப்ளாட்பார கடையில். அதுவே காசு அதிகமாகிவிடுகிறது என இரண்டு வேளைதான்  சாப்பிடுகிறார்கள். மெனுகார்ட் பார்த்து ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு ப்ளாட்பார கடையில் விலை கேட்டு கேட்டு சாப்பிடும் அவலம் புரியாது.

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராமல் விவசாய வேலை இல்லை. வயலெல்லாம் பிளாட் போட்டு விற்பதில் கட்டிட வேலை கிடைக்கிறது. அங்கு போனால் வேலை சிரமம். 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போகலாம். 133 ரூபாய் குறைந்த பட்ச கூலி என்று அரசாங்கம் அறிவித்து விட்ட போதும், இவர்களுக்கு கிடைப்பது கமிஷன் போக 80 முதல் 90 ரூபாய் மட்டும்தான். அதுவும் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கொடுக்கிறார்கள்.

’90 ரூபா சம்பாதிச்சா எப்படி பொழைக்கிறது, அரிசி கிலோ 37 ரூபாய்க்கு விக்குது. நாங்க நெல்லை 10 ரூபா ஐம்பது காசுக்கு கொடுக்கிறோம். அதை அரிசியாக்கினா 400 கிராம் தேறும். அதுக்கு வெலை 25 ரூபாதான் வரணும். ஆனா நல்ல அரிசி 45 ரூபாய்க்கு விக்குது’

‘ரேஷன் அரிசியை வாங்கி மனுசன் சாப்பிட முடியாது, தஞ்சாவூரில் நாங்க விளைத்து கொடுக்கிற சன்ன ரக அரிசி எல்லாம் தனியார் வியாபாரிகளுக்கு போய் விடுகிறது. எங்களுக்கு மோட்டா அரிசிதான் போடுகிறார்கள்’

’நாம் சோற்றில் கை வைக்க விவசாயி சேற்றில் கால் வைக்க வேண்டும்’ஆனால் உண்மை நிலமை நாம் பிட்சாவில் கை வைக்க விவசாயி புதை சேற்றில் கால் வைத்து புதைந்துவிடுகிறான். இப்படி வாழ்க்கையில் புதைந்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சை ஒரு கேடா?

இவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, நம்முடன் பேச முனைகிறார் ஒரு வயதானவர். அவரிடம் பேசினோம். இவர் வேலூர் அருகில் இருக்கும் திருப்பத்தூரை சார்ந்தவர். தன் மகனுக்கு சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். கூலி விவசாயியா? கூலித் தொழிலாளியா? என்று வரையறுத்து அவரால் கூற முடியவில்லை.

”விவசாய வேலைக்கு கூப்பிட்டா போவேன், எல்லா நாளும் கெடைக்காதில்ல, அப்பயெல்லாம் ஏதாவது கூலி வேலைக்கு போவேன். மூட்டை கூட தூக்குவேன்”என்றார். மகனுக்கு விபத்தில் சிக்கி ஒரு பக்கம் உடல் செயலற்று போயிருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள் என்று கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சை பார்த்ததில் சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற மூன்று லட்ச ரூபாய் செலவாகி விட்டிருக்கிறது.

அதன் பிறகு இப்போது இங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

”மூணு நாளா இங்கியே விழுந்து கிடக்கிறேன். பொண்டாட்டி நகை வச்சி கொண்டுவந்த காசு தீந்து போச்சு. இப்ப டாக்டரு ஸ்கான் ஒண்னு எடுக்கணும், வெளியே எடுத்தா 5,000 ஆகும், நான் சொல்லுற இடத்துல எடுத்தா 3,000 தான்னு சொன்னாரு. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கேன்” என்றார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் கேள்வியுடன் ஒரு நிச்சயமற்றத் தன்மையுடன்  அவர் அரசு மருத்துமனையை சுற்றி சுற்றி வருகிறார். ‘ஏதாவது வழி கிடைத்து விடாதா, யாராவது வழி காட்டி விட மாட்டார்களா’ என்ற தவிப்பு முகத்தில்.

அவருக்கு நியாய விலையில் உணவு கொடுக்க விரும்பாத அரசு, அவருக்கு வேலைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத சமூகம், அவரை இப்படி உதிரி பாட்டாளியாய் அலையவிட்ட இந்த அரசு  எப்படி அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை மாத்திரம் அளித்துவிடும் என்பதை அவருக்கு எப்படி புரிய வைக்க?

அரசு மருத்துமனை முழுவதும் அனைவரிடமும் ஒரு சோகமும், நிச்சயமற்றத்தன்மையும் காண முடிகிறது. ‘இலவசமாக கிடைக்கிறது, கிடைப்பதை நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம்தான் இருக்கிறது. மருத்துவ வசதிகள் தமது அடிப்படை உரிமை அவற்றுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை.

‘நல்ல மருத்துவ சேவை எப்படி இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ சேவை எப்படி கொடுக்க வேண்டும்’ இதெல்லாம் அரசுக்கு கவலையளிக்கும் விசயமல்ல. மருத்துவத்துறையை தனியார்மயமாக்கிவிட்டொம். பணம் இருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை என்ற மாயை. பணம் இல்லாதவர்களுக்கு அந்த மாயையும் இல்லை.

4 வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனுக்கு காலில் அடிபட்டுவிட்டது. லேசான காயம் தான். அப்பலோ மருத்துவமனையில் ஒரு மைனர் ஆபரேஷன். அவன் உயர் மத்தியவர்க்க குடும்பத்தைச் சார்ந்தவன். நான் தான் அன்று அவனுடன் இருந்தேன். காலை 8 மணிக்கு சென்று ஒரு அறையில் அட்மிட் ஆக சொன்னார்கள். இவன் டிலக்ஸ் அறை ஒன்றை புக் செய்தான் அப்பொழுதே நாள் வாடகை 3,000 ரூபாய் என்று நினைக்கிறேன்.

அந்த அறை குளிரூட்டப்பட்ட அறை, அழகிய டிவி, அட்டாச்சட் பாத்ரூம் இருந்தது. உணவுக் கட்டுப்பாடு பெரிதாக இல்லை என்பதால் இருவரும் தின்பண்டங்களை கொரித்தப்படி டீவி பார்த்தோம். அன்பாக பேசும் உதவியாளர்கள். மத்தியானம் ஒரு ஸ்டெரச்சரில் அழைத்துக்கொண்டு போய், 1 மணிநேரத்தில் அனுப்பிவிட்டார்கள். மாலை டிஸ்சார்ஜ் ஆகலாம் என சொல்லிவிட்டார்கள். அறையில் பினாயில் வாசனை கூட இல்லை. அவ்வளவு சுத்தம்.

புறப்படும் நேரம் வந்த போது, என் நண்பன் ‘இருடா அறைக்கு இன்னும் நேரமிருக்கு ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் டீவி பார்க்கலாம்’ என்றான்.

நான் இதை நினைத்தப்படியே அரசு மருத்துவமனையை பார்த்து கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கூட ஒரு தர்மம் போல பிச்சையாகத்தான் போடப்படுகிறது.

சிறு நீர் கழிக்க வேண்டும் என்று கழிவறை தேடினோம். கட்டண கழிவறை. வெளியே 2 ரூபாய் கட்டும் இடத்தில் குளியல் சோப்பு, ஷாம்பூ, துணி துவைக்கும் சோப்பு, என்ணேய் எல்லாம் விற்பனைக்கு இருந்தது. காசு வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்தவர், கழிவறைக்கு வந்த ஒரு பெண்மணியிடம் சண்டை போட்டபடி இருந்தார். அந்த பெண்மணி சரியாக பணம் கொடுப்பதில்லை போலும், சிறுநீர் என்று சொல்லிவ்ட்டு 2 ரூபாய் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிடுவாராம் இது தான் சண்டையின் சாரம்.

ஒருவர் ஒரு நாளைக்கு 2 முறை சிறு நீர் கழிப்பார் என்றால், சர்க்கரை வியாதிக்காரருக்கு 4 அல்லது5 முறை ஆகிவிடும். அத்தனை முறை 2 ரூபாய், கழிவறைக்கு 5 ரூபாய் குளிக்க 10 ரூபாய் என்று போனால் ஒரு நாளைக்கு இதற்கு மாத்திரம் 20 ரூபாய் செலவாகிவிடும். 10 ரூபாய்க்கு சாப்பிட்டு 20 ரூபாய்க்கு கழித்து, இதற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது!

கழிவறையோ இன்னும் மோசம். அங்கே சென்றால் இல்லாத நோய்கள் நம்மை தாக்க்கும். இதில் அங்கேயே துணியும் துவைத்துக் கொள்ளலாமாம். ஒரு செட் துணிக்கு 10 ரூபாய் தான். சிறுநீர் கழிக்கக் கூட பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய நிலையில் தான் அரசு மருத்துமனைகள் உள்ளன.

ஒருவரின் உயிர் வாழும் உரிமை கூட அவரிடம் இருக்கும் பணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. மாரடைப்பு வந்து விட்டால் பணம் இல்லாத ஏழைகள் உயிரை விட்டு விட வேண்டியதுதான். ஓரிரு லட்ச ரூபாய்கள் வைத்திருப்பவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் செய்து சரி செய்ய முயற்சிக்கலாம். அதிலும் தேறவில்லை என்றால் பல லட்சங்கள் செலவழிக்க முடிய வேண்டும், ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடத்துவதற்கு. அதற்கு அடுத்த கட்டமாக சில கோடி ரூபாய்கள் செலவழித்து வெளிநாடுகளுக்கு அழைத்து போகலாம். வசதி இல்லாதவர்களுக்கு உயிர் வாழும் வாய்ப்பு இல்லை, சிம்பிள்!

சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் எல்லாம் எங்கு இருக்கின்றன? வல்லரசாவதற்கு இவை எல்லாம் தேவை இல்லை போலிருக்கிறது!

______________________________________________

– வினவு செய்தியாளர்.

_______________________________________________