Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 145

மனு நீதி என்னும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்! | கேலிச்சித்திரம்

க்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி, மதவெறியூட்டும் மனுமர்மத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள் பகுத்தறிவாளர்கள்.

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், சாதி-மத வெறி, சாதி தீண்டாமை, குலக்கல்வி, மூட நம்பிக்கைகள், சூத்திரன் என்பவன் வேசி மகன், தமிழ் நீச பாசை, தமிழில் பாடினால் தீட்டு என்று பல்வேறு பிற்போக்கு குப்பைகளை கொண்ட மனுநீதியை தீட்டுக் கொளுத்துவோம். மனுநீதியை தூக்கிக்கொண்டு நாடுமுழுவதும் இந்துராஷ்டிரத்திற்கான அடிதளத்தை போட்டுக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை வீழ்த்த ஒன்றிணைவோம்.

மனு நீதி எனும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்!

ஓவியம் :
தோழர் ரூபாவதி,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

னநல சிகிச்சை மையத்தில் உள்ள பழுப்பு நிற படுக்கையின் மீது படுத்திருக்கிறேன். ஆழ்ந்த, இருண்ட நினைவுகளுக்குள் நான் செல்கிறேன். தேநீர் அருந்தியபடி, எனக்கு பழக்கமில்லாத ஒரு ஓவிய அறையில் அமர்ந்திருக்கிறேன். என் முன்னே இருக்கும் மேசையில் என்னுடைய செய்தியாளர் குறிப்பேடு இருக்கிறது. அந்த வீடு பழையாதாக இருப்பினும் மிகவும் சுத்தமாக இருக்கிறது.

இதோ ஒரு ஓவியத்தில், இந்துக்களின் கடவுளான கணேசனுக்கு முன்னால் ஒரு சிறிய பலிபீடம் இருக்கின்றது. இந்து பயங்கரவாத – மேலாதிக்க அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சங்க்-ன் முக்கியத் தலைவர்களான தீனதயாள் உபாத்யாயா மற்றும் அத்வானி ஆகியோரின் படங்களும் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன.

நான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழில் நகரமான தாத்ரிக்கு அருகில் உள்ள பிஷாதா என்ற கிராமத்தில் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

கொடும்குற்றம் செய்த பின்னரும் தண்டனையை அனுபவிக்காத குற்றவாளியை நான் பேட்டி எடுக்க வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? நான் ஒரு முசுலீம் என்பதையும் இந்து வன்முறைக் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட 52 வயதான முகமது அக்லக்கின் பெயரின் ஒரு பகுதியே என்னுடைய பெயர் என்பதையும் அவர் நன்கு அறிவார்.

செப்டம்பர் 28, 2015 ஆம் நாள் அந்த கும்பல் படுகொலை நடைபெற்ற சில மாதங்கள் கழித்து அவரை நான் சந்திக்க வந்திருக்கிறேன். முகமது அக்லக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள வீட்டில்தான் அமர்ந்திருக்கிறேன். அவருடனும் அவரைச் சுற்றியுள்ள சகக் கூட்டாளிகளிடனும் என்னுடைய உரையாடலை தொடங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.


படிக்க : நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்


ஏன் எதற்காக அக்லக் கொல்லப்பட்டார் என்ற என்னுடைய கேள்விகளுக்கு சிறிது நேரம் மவுனத்திற்குப் பின்னர் அவர் பேசத் தொடங்குகிறார். “அக்லக் ஒரு பசுப் படுகொலையாளன். இந்துக்கள் புனிதமாகக் கருதி வழிபடும் விலங்கான பசுவினை கொன்றார். முசுலீம்களிடமிருந்து இந்துக்கள் எப்படி தங்கள் புனிதப் பசுவை மீட்க முடியும் என்பதற்கு இது ஒரு எதுத்துக்காட்டு. அக்லக்கின் செயல்கள் ஒரு தேச விரோதச் செயல்கள் என்பதை மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்” என்றார்.

அந்த சமயம் என்னுள் அட்ரனலின் சுரப்பி மிகவும் வேகமாக சுரக்கிறது. ஆபத்தினை என்னுடைய மூளை உணர்வதற்குள் உடல் முழுக்க அச்சுரப்பி பாய்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற உள்ளுணர்வு என்னை தட்டியெழுப்புகிறது. நான் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேட்டியிலேயே மீண்டும் கவனம் செலுத்துகின்றேன்.

என்னிடம் முகமது அக்லக் கும்பல் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை செல்போனில் இருந்து போட்டுக் காட்டிய படியே சொல்கிறான் “எங்கள் இரத்தம் கொதிக்கிறது”. டிசம்பர் மாத கடுங்குளிரிலும் என் உடல் வியர்த்துக் கொட்டுகின்றது. இசுலாமியர்களினுடைய எதிரிகளின் மத்தியில் நான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்.

என்னுடைய எவ்வித உணர்ச்சியையும் காட்ட முடியாமல் எவ்வித உதவியற்றவனாக இங்கே வீற்றிருக்கிறேன். என்னைப் பாதுகாக்க வேண்டி, உதடுகளை இருக்க மூடிக் கொள்கிறேன். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பினும் கூட நான் ஒரு முசுலீம் என்ற உணர்வினை அழித்துவிட்டு மிகவும் குறைவாகவே பேசுகிறேன்.

குற்ற உணர்வு என்னை பிடித்தாட்டுகிறது. ஆனாலும் நான் அவன் வீட்டில் அவனோடு பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பயங்கர சிந்தனை என்னை சிந்திக்க விடாமல் செய்கிறது.

அவனுக்கு மட்டுமல்ல எனது இரத்தமும் கொதித்துக் கொண்டு இருக்கின்றது. நான் சத்தமாக அலற வேண்டும் எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நான் மிகவும் அமைதியாக அங்கே அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

நான் அங்கிருந்து கிளம்பிச் செல்லும்போது, என் பின்னால் உரக்கச் சிரிப்பதும், ஏமாற்றப்பட்ட நிருபராக அதுவும் சுன்னத செய்யப்பட்டவராக என்னை இகழ்வதும் தேச விரோதி, பாகிஸ்தான்காரான் போன்ற வசைச்சொல்கள் கேட்பது போன்ற நிகழ்வுகள் என்னுள் வந்து போகின்றன.

மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட அக்லாக் (உள்படம்)

அந்த நாளில் நான் அடைந்த உணர்ச்சிவசப் படுதலுக்கு நீண்ட நாள் கழித்து, ஏறத்தாழ 3 ஆண்டுகள் கழித்து மருத்துவரின் சிகிச்சையின்போதும் அதே நினைவுகளால் வந்தடைந்தேன். நான் எவ்வித ஆதரவுமற்றவன் என்ற எண்ணம் என்னை ஆழ்ந்த அச்சத்தில் மூழ்கடிக்கிறது.

குறிக்கோளை அடைவதற்காக மரபுகளை அழித்தொழிக்கும் பத்திரிகையியல் துறையினை தெரிவு செய்தேன் என்தற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய அடையாளத்துக்கும் என்னுடைய சமூகத்துக்கும் நான் துரோகம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

இந்த சிகிச்சையளிக்கும் நேரமானது, இந்தியாவில் நானும் எனது மக்களும் தினம் தினம் எந்த அளவுக்கு வெறுப்புணர்வை எதிர்கொள்கிறோம் என்பதை முதன்முறையாக தெளிவாக படம் பிடித்துக் காட்டியது. எனது அறிவினை முழுவதும் இழந்துவிட்டேன். என் இதயம் மிகவும் கனத்துப் போய்விட்டது.

அந்த நாள் படுக்கையில் தூக்கம் வரும் வரை அழுது கொண்டே இருந்தேன். கனவில், நான் இந்து வன்முறைக் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறேன். அவர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறேன். இரவு முழுவதும் அக்கனவு நீண்டது. அன்றிலிருந்து துக்கமும் அச்சமும் எனை ஆழ்த்திக் கொண்டே இருந்தன.

மோடியின் இந்தியாவில் முசுலீம்கள் வாழ்வது இனி கனவு தான்

மனநல சிகிச்சையாளரிடம் 35 வயதான நான் வர வேண்டிய அவசியம் என்ன? பத்திரிகைத் துறையும் முசுலீம் என்ற அடையாளத்தை வைத்து என்னை கணக்கிடுவது என்ற அணுகுமுறையும் தான் என்னை மிகவும் சேதமடைய வைத்து இருக்கின்றன.

நாட்டில் பலராலும் வரவேற்கப்படக் கூடிய நாளிதழ்களில் ஒன்றானதாகவும் முற்போக்கானதாகவும் கருதப்படும் தி இந்து ஆங்கில இதழிலின் டெல்லி பிரதேச பிரிவின் செய்தியாளராக -செய்தி எழுதுபவராக- 2012 முதல் 2018 வரை ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன்.

நான் பணியாற்றிய காலத்தில் முக்கியமாக டெல்லி மற்றும் வட இந்தியாவில் ஏற்பட்ட மத மோதல்கள் மற்றும் மதவாதம் பரவுவது தொடர்பான வேலைகளை மேற்கொண்டேன். இடது மற்றும் முற்போக்கு கருத்துக்களை முன்னிலைக்கு கொண்டு வந்து செய்தியாக்கும் முசுலீம் நபராக அப்பிரிவில் நான் மட்டுமே இருந்தேன். இந்துமத வெறி வன்முறை தொடர்பாக நான் எழுதிய கட்டுரையால் தி இந்து நாளிதழானது வலது சாரிகளால் இந்து விரோதி என்று முத்திரைக்குத்தப்பட்டது.

அக்கட்டுரைக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கு நான் நேரில் செல்ல வேண்டியதாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரிலிருந்து ஏற்பட்ட வகுப்பு மோதல்கள், அவை முன்னெப்போதும் இல்லாமல் இப்போது முன்னிலை வந்துள்ளதை டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளிலிலேயே சென்று உணர்ந்தேன்.

ஆனால், இதை ஆங்கில ஊடகங்கள் பொருட்படுத்துவதே இல்லை. இந்துத்துவா என்பது சாதாரணமானது என்றும் அது இந்து மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கூறுகின்றன.

வலதுசாரி கும்பலுக்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த எலைட் மனிதரான நரேந்திர மோடி 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது கிடைத்தார். அதற்கு பிறகு வலதுசாரி தொடர்பான சிந்தனைகளில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டது. இது ஏதோ திடீரென கிடைத்துவிடவில்லை. பல பத்தாண்டுகளாக அவர்கள் பொறுமையாக உறுதியான ஆழமான வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். அதன்மூலமே இந்த அறுவடையை சாதித்தார்கள். தேர்தலானது அவர்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டியது அவ்வளவே.

களத்தில் மக்களை நேரடியாக சந்தித்து எப்படிப்பட்ட செயல்பாடுகளை வலதுசாரியினர் மேற்கொள்கிறார்கள் என்பதை அறிய நான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டுக்கு இடமாற்றம் பெற முடிவெடுத்தேன்.

நான் சார்ந்துள்ள இசுலாமிற்கு எதிரான பயங்கரவாத சிந்தனை கொண்ட கும்பலைச் சேர்த்து இசுலாமிய மக்களின் மீது கலவரங்களை நடத்த வேண்டும் என்ற நபர்களை சந்தித்து பேட்டி எடுத்தேன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் ஒரு இசுலாமியன் என்பதை ஒரு போதும் மறைக்கவே இல்லை.

இந்த பயங்கரவாத தலைவர்கள் என்னை அழைக்கும்போது “ஜி”யை சேர்த்தே அழைத்தார்கள். பேட்டியின் முடிவில் அவர்களின் இதழ்களில் புன்னகை அரும்புகின்றது. வகுப்புவாத களத்துக்கு அப்பால், என்னை அவர்கள் பத்திரிகையாளராகவே பார்த்தார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முகமூடிகள் தேவையில்லாததால், ஆனால் இந்த அணுகுமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. 2015 மே முதல் 2018 டிசம்பர் வரையில் ஏறத்தாழ 44 பேர் பசு தொடர்பாக வன்முறையால் இந்தியா முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது என்னுடைய பழைய தொடர்புகளை சந்திப்பதற்கே மிகவும் அச்சமாக இருக்கின்றது. அவர்களில் பலர் முசுலீம்களை தாக்குவது கொல்வது மற்றும் முசுலீம்களின் புனிதத்தை அழிக்கின்ற வேலைகளை செய்வதால் அவர்களை தொடர்பு கொள்ள என்னால் இயலவில்லை.

நண்பர்கள் என்னுடைய அடையாளங்களை மறைத்துக் கொள்ளும்படி கூறினாரகள். என்னுடைய சுயவிபரங்களை மறைக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் மோடியின் இந்தியாவில் மிகவும் தீவிரமான அச்சத்தில் உள்ளேன்.

ஏன் என்னுடைய முசுலீம் பெயர் கூட வன்முறைக் கும்பலால் தாக்கப்படுவதற்கு காரணமாகலாம். ஒரு முசுலீம் பத்திரிகையாளர் இப்படி ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது ஆச்சரியமான ஒன்றாகக் கூட இருக்கலாம்.

நீங்கள் இன்று கொல்லப்படுவீர்கள் என்ற தகவல் கிடைக்குமாயின் என்ன நடக்கும்? அன்றைய நாள் முழுவதும் பயம், வலி, அதிர்ச்சி, கோபம் என அனைத்துமே பிடித்தாட்டும். அது ஒரு பயங்கரமான அனுபவம். அந்த அனுபவமானது கைப்பிடி இல்லாத கத்தியைப் போல இரு பக்கமும் கூரானது, அச்சமயத்தில் நான் ஆதரவற்றவனாக உணர்வேன்.

முசுலீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொலைகள் என எதையும் தடுக்க முடியாத நான் பத்திரிகையாளர் பொறுப்பை துறந்தேன். ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புரிகின்றது. ஒரு முசுலீம் பத்திரிகையாளர் நல்ல குறிக்கோள்களுடனும் கூர்நோக்காளராகவும் நீடிக்க வாய்ப்பில்லை.

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம். இந்த விளைவானது என் மனநிலையில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியது, பின்னரே நான் தெளிவடைந்தேன்.

மனிதப் பன்றிகளும் புனிதப் பசுக்களும்

கடந்த நான்காண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் கும்பல் படுகொலைகளால் கொல்லப்பட்ட பலரில் அக்லாக்-ன் செய்தியே எனது முதல் கும்பல் படுகொலை செய்தி சேகரிப்பாகும்.

இந்து விழிப்புணர்வு’-ன் நம்பிக்கையை பெறுவதற்கு நான் வாரக்கணக்கில் அவர்களோடு நேரத்தை கழித்திருக்கிறேன். அவர்கள் அசாதாரணமான கொலையாளிகள் அல்ல. உண்மையை சொல்லப்போனால் அவர்கள் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் எதிர்காலமே இல்லாதவர்கள்.

நான் அவர்களோடு உணவருந்தி இருக்கிறேன். அவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து இருக்கிறேன். அவர்கள் சமூகமயமாக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களால் தாக்கப்பட்ட முசுலீம்களைப் பற்றி கேலி செய்யும்போது அவர்கள் கண்களைக் கூட இமைப்பதில்லை. நான் இப்போதும் பாதுகாக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.


படிக்க : கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி


ஷாமிலி என்ற கிராமத்தில் வசிக்கும் விவேக் பிரேமியை நான் 2015 கோடையில் சந்தித்தேன். அதன் பிறகே அவன் மூலம் எனக்கு தொடர்பு கொள்ள பலர் கிடைத்தனர். பொது இடத்தில் 22 வயதான முகமது ரியாஸ் என்பவரை கடுமையாகத் தாக்கினான் என்பதற்காக பிரேமி கைது செய்யப்பட்டிருந்தான்.

நான் சந்தித்த போது பிரேமி 22 வயதை நெருங்கிக் கொண்டு இருந்தான். அவன் ரியாசை அடித்ததை திட்டமிட்டு வீடியோ எடுத்திருந்தான். அந்த வீடியோ ஒரு நிமிடம் 24 வினாடிகள் கொண்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில், ரியாசை கடுமையாகத் தாக்குகிறான் பிரேமி. ரியாசின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கூட பொருட்படுத்தாமல் தன்னுடைய பெல்ட்டால் கடுமையாக விளாசுகிறான்.

அந்த வீடியோ முழுவதும் அவனின் முகம் மற்றும் நடவடிக்கைகள் தெளிவாக வரும்படி வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. அவனின் கண்களில் முசுலீம் வெறுப்பை நான் உற்று கவனித்தேன்.

பிரேமி என்றால் இந்தியில் காதலர் என்று அர்த்தமாம். அந்த வீடியோ அவனை உள்ளூரில் பிரபலமாக்கியது. வாட்ஸ் அஃப் மூலம் அந்த வீடியோ பலரையும் சென்றடைந்ததால் அவன் விரைவிலேயே பஜ்ரங் தள் அமைப்பின் முக்கிய உள்ளூர் தலைவரானான்.

முசுலீம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது, காதல் ஜோடிகளைப் பிரிப்பது, மாடு வெட்டுபவர்களை தாக்குவது என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.

(தொடரும்…)

முகமது அலி (இந்து மேலாதிக்கம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.)

India’s transformation under Narendra Modi என்ற புத்தகத்தை எழுதி வருகிறார்.
thebaffler.com என்ற தளத்தில் The Scream என்ற தலைப்பில் வெளியான ஆங்கில கட்டுரை

தமிழாக்கம் : மருது

சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

மணிரத்தினமோ, ஜெயமோகனோ கீழடி வரலாற்றை மறுத்துவிட்டு பொன்னியின் செல்வனை ஏன் வைக்கிறார்கள் என்பதற்குள்ளாகத்தான் ஒரு பார்ப்பன ஆதரவு அரசியலும் இந்த சுரண்டல் அரசியலும் முன்னிலையில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம்.

பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக கொலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வனில் என்ன வந்துள்ளது, நீங்கள் கதை எழுதினால் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? இந்த ஆதித்த கரிகாலன் சமண மதத்திற்கு ஆதாரவான ஒரு நபராக இருந்திருக்கலாம், தாங்கள் ஒரு மிகப்பெரிய உயர் பதவிக்கு வருவதற்கு அவர் பிற்காலத்தில் தடையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தின் காரணமாக, இந்த ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் தெளிவாக சொல்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் அந்த பொன்னியின் செல்வனில் இல்லை.

குறிப்பாக ராஜராஜசோழன் காலத்தில் தனக்கு ஒரு தோசம் இருக்கிறது, அதை கழிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, ஆயிரக்கணக்கான சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பனர்களை வட நாட்டில் இருந்து கொண்டு வந்து காவிரி கரையில் – தஞ்சாவூரில் – குடியமர்ந்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன் படி குடியமர்த்துகிறார். அப்போது ஒவ்வொரு கிராமத்திற்கு மகா சபை இருந்தது. இந்த மகா சபைகளுக்கு பார்ப்பனர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற சொல்லப்படாத விதி வகுக்கப்படுகிறது.

தமிழர் பண்பாடாக உயர்த்தப்பட்டு பிறகு ஒரு இந்து பண்பாடாக மாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அந்த திரைப்படத்தில் இருக்கிறது.

குந்தவை நாச்சியார் பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறுகிறார். ஏன் மாறுகிறார். இங்கே அதிகார போட்டியில் ஒருவரை ஒருவர் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள், யார் பெரியவன் யார் சின்னவன் என்ற மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. இதை பார்த்து மனம் புழுங்கி அவர் இஸ்லாமியராக மாறுகிறார்.

மக்கள் மீது அடக்குமுறைசெய்து, அவர்களை பல்வேறு சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் பிளவுபடுத்தி, நம்மை ஆட்சி செய்துகொண்டு, தன் ஆட்சியை ஒருவர் காப்பாற்றி கொள்கிறார் என்று சொல்லப்போனால் அதை பெருமையாக பேச முடியாது.

பார்ப்பனர்களுக்கு ஆரியர்களுக்கு வாரிக்கொடுத்தான் ராஜராஜசோழன். ஆனால் நிலங்களை எல்லாம் பிடுங்கி உழைத்தால் தான் உனக்கு சோறு என்று சொன்னான் எங்களுடைய மன்னன் திப்புசூல்தான். அதனால் தான் திப்பு சூல்தானை வீழ்த்தவேண்டும், அந்த வரலாற்றை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இரண்டுதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒன்று பார்ப்பனிய அடைமை மரபு, மற்றொன்று பார்ப்பன எதிர்ப்பு மரபு. சதூர் வர்ணம்- நான்கு வர்ணங்களையும் நான் தான் படைத்தேன் என்கிற ஒரு மரபு இருக்கிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்று இந்த வேதத்தை எதிர்த்து பேசினான் எங்களுடைய வள்ளுவன். அவருடைய மரபு இருக்கிறது. நாம் எந்த மரபை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!

God chooses certain people to do the difficult work. I believe god has chosen me for this work. Now I only need your blessings. Give BJP 60 months to change India’s future”: Modi demagogued in 2014. But eight years of BJP rule was over. What has changed in India?

Modi, who came to power by unleashing jumlas such as abolishing black money, $ 5 trillion economy, 2 crore jobs and doubling farmers’ income, has left the working people of this country without any means to survive. Today, the country understands the true meaning of his statement ‘I will change India’.

Every family in the country struggles to make their ends meet. The price of petrol, which was Rs. 66 in 2014, is now approaching Rs. 110; the price of LPG cylinder, which was Rs. 400, is now nearing Rs. 1,100. The prices of essential commodities are rising exorbitantly due to increase in petrol-diesel prices and increase in GST.

Also Read : Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

The Modi government has hiked the taxes on packaged food items, including milk, curd and rice, to 5%. The prices of oils and pulses are already bad. After increase in GST, tea which was sold at Rs. 10 had now increased to Rs. 12. Even idlis and dosas which are sold at push carts for Rs. 5 & Rs. 10 have increased by a rupee or two. The BJP has made us strive hard even to half fill our stomachs.

Modi said that he would eradicate poverty. But, it is in the Modi-led BJP regime that poverty is thriving. According to a 2019 report published by the World Poverty Clock, India ranks third in the list of countries with extreme poverty. India is also ranked second among the countries with the highest number of poor people. 68.8% of India’s population lives on an income of less than Rs. 160 a day.

According to a study by the Hindrise Foundation, more than 20 crore Indians go to bed hungry every night. More than 7,000 people die of hunger every day, the report said.

In the last eight years, 12.5 crore people lost their jobs. According to a report by the Centre for Monitoring the Indian Economy and the Azim Premji University, 57% of the workers have lost their jobs in rural areas and 80% in urban areas. In the last May-June, within a one-month span, 1.6 crore people lost their jobs. This did not happen just because of corona. This is the result of Modi’s anti-people policies.

An example for this is demonetization in the name of curbing black money. Soon after the announcement of demonetization, the wholesale market was closed for about 20 days and the sales had stopped. This forced the factories to stop production. Many micro-small scale industries which incurred losses were closed down. 35 lakh people lost their jobs. There was a loss of Rs. 2.25 lakh crore in the value of GDP.

Moreover, after this move, 99.3% of the demonetized money had returned to the banks. But, as many as 140 people died while standing in queues to exchange the demonetized money.

Introduction of GST taxation was the next attack. According to a survey conducted by the All India Trade Union Congress (AITUC) in July 2018, one-fifth of the 6.3 crore micro-small scale enterprises saw a decline in their profits by 20% after the implementation of GST. It is to be noted that thousands of workers had to be laid off.

Similarly, according to an estimate by the Centre for Monitoring Indian Economy, 50 lakh workers had lost their jobs in the year of implementation of GST. As a result, India’s unemployment rate rose from 4.1% in July 2017 to 6.4% in August, i.e. within a single month.

These micro-small scale industries account for 32% of the Indian economy. While agriculture is being destroyed, the organized industrial sector provides less than 10% employment. This is how the micro-small scale industries, which provided job to about 40% of the population, were systematically eliminated under the Modi regime.

Unemployment is rampant. It has risen to 7.83%. The rate of unemployment among the younger generation between the ages 15 and 19 is over 50%.

In the two years between 2018 and 2020, 25,000 people committed suicide due to debt crisis, unemployment and business crisis. Instead of calling it as suicide, we can call it as genocide perpetrated by Modi’s pro-corporate policies.

The magnitude of labourers migrating within the country from their home states without adequate employment and the failure of agriculture is increasing day by day. Without any rights, these workers who work as wage labourers live like refugees within their country. In March, the Modi government itself told in the Parliament that there were 10 crore inter-state migrant workers.

During the CoViD-19 pandemic, migrant labourers were the worst sufferers of the lockdown announced by Modi without any prior notice. Hundreds of thousands of migrant labourers walked hundreds of miles across the country with no food and money. Many died on the way, because of starvation. The news of the unjust death of starved workers lying on the rails shook our hearts. In 2020 alone, 8,733 people died.

As a result of privatization policies, all the public sector undertakings are being handed over to the private sector. Even those who work in the government jobs also live in fear of their jobs being taken away. Moreover, in the name of amendments to the Labour laws, the entire rights, including the rights of the workers to join unions, are being taken away. Contractualisation takes place even in the army in the name of ‘Agnipath’. This is a prelude to the fact that from now on, all the government jobs will be turned into contracted bonded labour.

The Modi government is pursuing the task of destroying the farmers in many ways. Funds for agriculture are being cut off in the budget every year. Food, fertilizer and petroleum subsidies continue to be cut. Lakhs of farmers have committed suicide in the last eight years due to continuous deception by the Modi government. In 2014-2020 alone, 9.5 lakh farmers committed suicide.

The Modi government, which had said it would double farmers’ income, amended the farm laws to eliminate the minimum support price (MSP) and allow corporates to take over agricultural land and agriculture. The farmers laid siege to Delhi and protested for nearly two years and made Modi bow down. More than 500 farmers lost their lives in this struggle.

Also Read : Saffron-Corporate coalition regime looting the country!

The Modi government gave a written assurance while repealing the farm laws that they would fulfill the farmers’ demand for a legal guarantee of minimum support price. But following the months of no action, the Modi government has now set up a committee consisting of those who supported the farm laws.

The fascist devilish rule is attacking the country and the working people with innumerable anti-people and corporate welfare policies including the farm laws, labour law amendments, NEEM-FTE schemes, Marine Fisheries Bill, allowing 100% foreign direct investment (FDI) in retail, GST, Environment Impact Assessment Act, tariff for groundwater, Electricity Amendment Act, New Education Policy, NEET and many more.

BJP is waging a proxy war against farmers, labourers, fishermen, small and marginal traders, students and youth from all walks of life during every moment of its rule. Working people cannot live in peace without putting an end to this fascist regime.


Thulipa

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

29.09.2022

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பாசிச சக்திகளை தடை செய்!

பத்திரிகை செய்தி

எங்கு சென்றாலும் சாதி – மத வெறி கருத்துக்களை பரப்பிவரும் பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத், குலசை தசரா திருவிழாவிற்கு சென்று அங்கே மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனே திறக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் நிறுவனம் மூடுவதற்கு காரணமாக இருந்த மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆகியவற்றை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, குஜராத்தில் முஸ்லீம் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கலவரம், ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் இப்படி பல்வேறு பயங்கரவாத செயல்களை நாடுமுழுவதும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல்தான் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்புகளின் பயங்கரவாதிகள் சட்டத்தால் தண்டிக்கப்படும் இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள்.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இந்து மக்கள் கட்சியின் தலைவரும், பயங்கரவாதியுமான அர்ஜுன் சம்பத், தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார். மக்களுக்காக போராடக் கூடிய அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக சித்தரித்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் கூறிவருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகின்ற அமைப்பு எமது மக்கள் அதிகாரம். இதனால் தமிழ்நாடு முழுவதும் எமது தோழர்கள் போலீசால் கடும் அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும் இந்த நாட்டின் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறது எமது அமைப்பு. எமது அமைப்பின் மீது பாசிச பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் மூச்சுக் காற்றையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை நீத்த, தங்கள் அங்கங்களை இழந்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்துமதவெறி பயங்கரவாதியும் தேசவிரோதியும் ஸ்டெர்லைட் கம்பெனியின் கைக்கூலியுமான அர்ஜுன் சம்பத்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சுமந்த மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார் இந்த பயங்கரவாதி.

இப்படிப்பட்ட பயங்கரவாத சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி – மதவெறி கருத்துக்களையும் மக்கள் விரோத கருத்துக்களையும் தேசவிரோத கருத்துக்களையும் கூறிவருகின்ற பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென்றும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற பயங்கரவாத பாசிச அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

பாசிசத்தை முறியடிக்கும் ஒரே ஆயுதம் மக்கள் தான் | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய போது, சமூகத்தில் பாசிசம் ஊடுருவியிருக்கிறது. பாசிசம் நம்மை சுற்றி பற்றி பரவியிருக்கிறது. தொழிலாளர் இடம்பெயர்ந்து வேலை செய்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நாடுவிட்டு நாடு, மாநிலம் மாநிலம் இடம்பெயர்ந்து வேலை செய்கிறார்கள். வட மாநிலங்களிலிருந்து இங்கே வருகிறார்கள். தொழிலாளர்களை நாம் குற்றம் சாட்டவில்லை. வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தமிழகம் சொர்க்கமாக இருக்கிறது. எல்லா தொழில் நிறுவனங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கிராமப்புறங்களில் ஒரு 20 தொழிலாளர்கள் காவி உடைப்போட்டிருக்கிறார்கள் என்றால் அவர் பலியாகியிருக்கிறார்கள் என்றுதான் யோசிக்க வேண்டிருக்கிறது. காளியம்மன் கோயிலில் ஸ்ரீராம் ஜெயம் என்று எழுதுகிறார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அரசியல் தெரியாது. நாட்டார் தெய்வ வழிப்பாட்டு முறைகளில் இன்றைக்கு பார்ப்பனிய கருத்துகள், இந்து மதவெறி கருத்துகள் ஊடுருவியிருக்கிறது.

கல்வி என்பது தனியார்மயமாக்கப் பட்டிருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் சாகா பயிற்சி நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஒரு மாணவி இறந்த பிறகுதான் அந்த பள்ளியில் சாகா பயிற்சி நடந்தது நமக்கு தெரிந்தது.

ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் எங்கே இருக்கிறார்கள். மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து கூட ABVP-யில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். இங்கு இருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் யோசிக்க வேண்டும். இந்து மதவெறி பயங்கரவாதிற்கு சாதகமாக இருக்கிறது. இந்த அரசு இயந்திரம் என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வழிநடத்துவது என்ற நிலையில் இருக்கிறது.

தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்த முடியாது. இந்தியாவில் உள்ள கட்சிகள் எல்லாரும் சேர்ந்து வீழ்த்தினாலும் நிலையாக ஆட்சி நடத்த முடியாது. இந்த அரசு என்பது எவ்வளவு கார்ப்பரேட் நலன் கொண்ட அரசாக இருக்கிறது. இவர்களை களத்தில் நின்று முறியடிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டி இவர்களை முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

Saffron-Corporate coalition regime looting the country!

The BJP rule is hostile to all sections of the people. But it has been the golden age for the corporates. Its patrons are bourgeois from the Brahmin-Baniya, Sindhi and Marwari castes of Gujarat, including Ambani and Adani. These corporates and the saffrons are inseparable two sides of the same coin and are looting the country and its people.

Bank frauds of Rs. 5.35 lakh crore occurred under the Modi regime in the last eight years. Of these, 23 persons fled the country after indulging in frauds worth Rs. 53,000 crore. Majority of the 23 persons including Nirav Modi, Mehul Choksi and Vijay Mallaya were close to Modi.

The total NPAs (Non-Performing Assets) in the nationalized banks were Rs. 2.83 lakh crore in 2014. It has now risen to Rs. 13 lakh crore. These bank frauds are concrete examples of how the corporates are poaching people’s money.

Also Read : Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

It is for these corporates, who are indulging in bank frauds, that the Modi government is providing various concessions under the name of ‘promotion of business growth’ in every budget. Modi government reduced the corporate tax from 30% to 22%. The government suffered a revenue loss of Rs. 1.20 lakh crore in a single year between 2019-20 and 2020-21.

On the other hand, there is looting of the public sector. The Modi government, which is actively implementing the recolonizational policies of liberalization-privatization-globalization, is selling the public sector to nurture the corporates close to it. They have created a separate department under the Ministry of Finance called the Disinvestment Department for the sale of public assets.

Between 2014-15 and 2020-21, assets worth Rs. 4.86 lakh crore of public sector stocks were sold to private players. The scheme that has been designed to sell off the entire country to the corporates by disinvestment of public sector stocks is called “Aatmanirbhar Bharat Abhiyan”. The BJP is saying that through the National Monetization Pipeline, which is a part of Aatmanirbhar Bharat, the assets held by the government can be sold to the big corporates to raise funds for infrastructure development.

Under this scheme, the Modi government has decided to lease out public assets worth Rs. 6 lakh crore – including railway lines and stations, telecom sector, power, oil and gas pipelines, roads and ports – to the corporates for 40 years. The BJP government is giving these precious assets created by decades of labour and people’s tax money in the name of ‘lease’. This leasing out of public assets is not so different from selling out; only the name differs.

Instead of saying corporates in general, the corporates that are dearest to Modi such as Ambani and Adani have grown exponentially under the Modi regime. In these eight years, Mukesh Ambani’s wealth has increased by 400% and Adani’s by 1830%.

Between 2014 and 2019, the assets of Ambani and Adani rose to an all-time high. Ambani’s net worth rose 118% to Rs. 3.65 lakh crore from Rs. 1.68 lakh crore. Adani’s net worth increased by 121% from Rs. 50.04 lakh crore to Rs. 1.1 lakh crore. Adani, who was ranked 313 in the list of world’s richest people, has risen to the 12th rank because of Modi’s favour.

Recently, it was revealed that Modi himself had bargained with the Gotabaya government to hand over the Sri Lankan power generation contract to Adani. It has to be noted that, when every time Modi goes abroad, Ambani and Adani are rewarded with various international contracts.

When Modi visited Australia in November 2014, Adani got a 200-km narrow-gauge rail line project from the Australian government. Following the aftermath of Modi’s Bangladesh visit in June 2015, the Reliance group and the Adani group signed an agreement to set up power plants in Bangladesh with an investment of $ 4.5 billion. As a result of Modi’s repeated visits to Japan in August 2014 and in September & November 2016, Adani Logistics along with Japan’s NYK Auto Logistics secured a contract to run automobile freight trains in 2018.

Following Modi’s visit to Russia in July 2015, Russian defence manufacturer Almaz-Antey signed an agreement with Anil Ambani’s Reliance Defence to jointly make missiles. Modi’s 2016 US trip, in turn, resulted in Reliance Defence receiving a contract to repair US warships. The 2015 trip to Malaysia and the port project that Adani received. The list goes on and on. Adani has finally acquired Haifa port, Israel’s second largest port, after the conference of the newly formed I2U2 grouping, which has been created by India, Israel, the United Arab Emirates and the United States.

The corporates have poured out hundreds of crores to the BJP as election donations, in return to the corporate services rendered. According to a report by the Association for Democratic Reforms (ADR), of the Rs. 258.43 crore donations received by political parties through seven electoral trusts from corporates and individuals during the financial year 2020-21, 82.05% of the funds (Rs. 212.05 crore) were received only by the BJP.

Also Read : NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

On seeing the monstrous growth of Ambani and Adani, a very reactionary section of the bourgeoisie is seeking the RSS’s favour to include them in the fascist camp.

Shiv Nadar, the owner of HCL and Azim Premji of Wipro have spoken to the RSS Chief Mohan Bhagwat. Rahul Bajaj went to the Smruti Mandir to pay tribute to the RSS founder Hedgewar.

Last April, Ratan Tata went to meet Mohan Bhagwat. In 2018, Tata trusts donated Rs. 100 crore to the RSS’s Dr Aabaji Thatte Seva Aur Anusandhan Sanstha, which had served in collaboration with the National Cancer Institute, Nagpur.

Thus, a saffron-corporate alliance has formed and is destroying our country. In order to exercise its control, it is resorting to fascist oppressions. To bring down this fascist alliance, which is acting against the people and against the country, all the people affected by this fascist mob must unite and come together as an Anti-Fascist People’s Front. There is no other choice.


Velmurugan

தமிழகத்தில் கலவரம் நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் ! | மருது வீடியோ

ர்.எஸ்.எஸ் என்பதை மற்ற அமைப்புகள் போலவே இதுவும் ஓர் அமைப்பு என்று பார்ப்பது தவறு. ஆர்.எஸ்.எஸ் ஏன் உறுவாக்கப்பட்டது என்ற பின்னணியுடன் தான் சேர்ந்து நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை ஒரு வழிமுறை இருக்கிறது.

திமுக திராவிட நாடு என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் தங்களுடைய கருத்துக்களை, தங்களுடைய சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சென்றார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள், காலம் முழுக்க பிரச்சாரம் செய்து, மக்களை நேரடியாக சந்தித்து பேசுவது மூலமாக தங்களது போராட்டங்களை நடத்தி பல்வேறு உரிமைகளை பெற்று தந்தார்கள்.

அப்படி ஆர்.எஸ்.எஸிற்கு என்னதான் கொள்கை என்றால், ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பாசிச அமைப்பு, அதாவது வழக்கம்போல இருக்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பா என்றால் அப்படி அல்ல. உலகத்திலேயே 100 ஆண்டுகள் நீடித்து நிற்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பு. அந்த அமைப்பு பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இருந்த பாசிச அமைப்புகள் எப்படி மக்களால் ஒழித்துக்கட்டப்பட்டது, எப்படி காலாவதியானது என்பதில் இருந்து பல்வேறு அனுபவங்களை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது.

குறிப்பாக அவர்கள் வழிமுறையே வன்முறைதான். கலவரம் செய்வதும் அதன்மூலமாக ஆட்சியை பிடிப்பதும்; முஸ்லீம்களையும், கிருத்துவர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்றொழிப்பதுதான் அவர்கள் இலக்கு. இப்படிபட்ட இலக்கை வைத்திருக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

வர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய போலி ஜனநாயகத் தேர்தலில் நெடுங்காலமாக ஓட்டுக் கட்சிகளால் புழுத்து நாற வைக்கப்பட்டுள்ளவை; இவற்றை மற்ற பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைக் காட்டிலும் பாசிஸ்டுகளால் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், அதிலுள்ள ஆபத்தையும் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்கள்.

இத்தேர்தல்களில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு எதிர்கட்சிகளின் நிலை வேறாக இருந்தது; பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்த பின் எதிர்கட்சிகள் நிலை தலைகீழாக மாறியது.

எதிர்கட்சிகளின் சார்பில், குடியரசுத் தலைவருக்கான பொதுவேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைமையில் 22 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஜூலை 15 ஆம் தேதி ஆலோசனை நடத்தின. அதே நாளில் காங்கிரஸுக்கு போட்டியாக எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் மம்தா. அவற்றிலும் எதிர்கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். இப்படியாக, எதிர்கட்சிகள் ‘ஒற்றுமையோடு’ யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தன.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்ததற்கு மறுநாளே, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக கூட்டணி. சொல்லிக் கொள்ளப்பட்ட எதிர்கட்சிகளின் ஒற்றுமை அப்போதே குடை சாய்ந்துவிட்டது. திரௌபதி முர்மு சந்தால் இனத்தைச் சேர்ந்த பழங்குடி என்பதை முன்னிறுத்தி, பாஜக சாதி அடையாள அரசியலில் இறங்கியதை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. திரௌபதி முர்முவை எதிர்த்தால் பழங்குடிகள் மத்தியில் தமக்குள்ள வாங்கு வங்கியை இழந்துவிடுவோமோ என அஞ்சி எதிர்கட்சிகளில் ஒரு பிரிவினர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று வாய்ச்சவடாலடித்த வீரமங்கை மம்தா, பா.ஜ.க ஒரு பழங்குடியை வேட்பாளராக அறிவிப்பதாக முன்பே சொல்லியிருந்தால் அவரை பாஜக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம் என்று பேசினார். தனது ஆட்சிக்கே உலைவைத்துக் கொண்டிருந்தபோதும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பழங்குடி என்பதால் பாஜக வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்கிறோம் என்றார். ஜார்கண்டில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, முர்முவை ஆதரித்தது.

மேலும் சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.ஜு. ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் திரௌபதி முர்முவை ஆதரித்தன.

வாக்கெடுப்பின்போது, முர்முவை வெளிப்படையாக ஆதரிக்காத எதிர்கட்சிகளின் வரிசையிலிருந்து பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது முகீம், தாம் ‘ஒடிசாவின் புதல்விக்கு’ (முர்மு) வாக்களித்ததாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 11-லிருந்து 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அசாமில் 15-லிருந்து 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தரவுகளிலிருந்து அம்பலமாகியுள்ளது. பீகார், குஜராத் உள்ளிட்டு பல மாநிலங்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். கேரளாவில் பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் முர்முவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு விழுந்துள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்தும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 64 சதவிகிதம் வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு மகத்தான வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மட்டுமே 38 சதவிகிதம் வாக்குகள் இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், 36 சதவிகிதம் வாக்குகளே பெற்று யஷ்வந்த் சின்ஹா படுதோல்வியடைந்தார்.

திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தாவிட்டாலும் பாஜக கூட்டணியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றிருக்க முடியும் என்றாலும், எதிர்கட்சிகளை நிலைகுலையச் செய்வது, அடுத்தடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் பழங்குடி வாக்குவங்கிகளை தமக்குச் சாதகமாக ஈர்ப்பது என்ற இரண்டு மாங்காய்களை ‘சாதிய அடையாள அரசியல்’ என்ற ஒரே கல்லால் வீழ்த்தியுள்ளது பாஜக. குறிப்பாக, இத்தேர்தல் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியின் மீது பெரிய அளவிலான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் (2011 கணக்கெடுப்பின் படி) 5.8 ஆகும். இப்பழங்குடிகள் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். இம்மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ‘ஜங்கல் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. சந்தால் மற்றும் குர்மி இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜங்கல் மஹால், 40 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். எனவே மேற்கு வங்கத் தேர்தல் அரசியலில் பழங்குடிகளின் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக வேலைசெய்துவருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜங்கல் மஹாலின் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பழங்குடிகள் மத்தியில் பாஜக செல்வாக்கு பெற்றுவருவதையும் தமது செல்வாக்கு சரிவதையும் உணர்ந்த மம்தா, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பழங்குடிகளுக்கு பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதன் மூலம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றினார்; பாஜக 15 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி வேட்பாளர் முர்முவை ஆதரிக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த உயர்சாதி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறார் மம்தா என்று பாஜக மேற்கு வங்க பழங்குடியினரிடையே பிரச்சாரம் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் இப்பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும் பழங்குடிகளிடையே தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மம்தாவும் கவர்ச்சிவாத, சாதி அடையாள அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில், மே.வங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ள மம்தா, தனது புதிய அமைச்சரவையில் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான பிர்பா ஹன்ஸடாவுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் பங்கா பூஷன் விருது, இந்த ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தரான மகேந்திரநாத் ராய், எழுத்தாளரான ரபிலால் துடு ஆகிய இரண்டு பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி சந்தால் பழங்குடிகள் கொண்டாடும் ஹூல் உற்சவ் எனப்படும் திருவிழாவிற்கு மம்தா அரசு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் போலி சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பழங்குடிகளுடன் சேர்ந்து நடனமும் ஆடினார் மம்தா.

***

மேற்கு வங்கம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலுமுள்ள பழங்குடி வாக்குகளைக் குறிவைத்தே பாஜக முர்முவைக் களமிறக்கியுள்ளது. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் 8.6 ஆகும். அதேநேரம் மாநிலங்கள் வாரியாகப் பார்க்கும்போது இதில் பாரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

சான்றாக வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக் கொண்டால், சிக்கிம் மாநிலத்தில் 33.8 சதவிகிதமும், மேகாலயாவில் 86.1 சதவிகிதமும், அருணாச்சலப் பிரதேசத்தில் 68.8 சதவிகிதமும், நாகாலாந்தில் 86.5 சதவிகிமுதம், மிசோராமில் 94.4 சதவிகிதமும், மணிப்பூரில் 35.1 சதவிகிதமும், திரிபுராவில் 31.8 சதவிகிதமும் பழங்குடிகள் உள்ளனர்.

இவையன்றி சதீஷ்கர் (30.6%), ஜார்கண்ட் (26.2%), ஒடிசா (22.8%), மத்தியப் பிரதேசம் (21.1%), குஜராத் (14.8%), ராஜஸ்தான் (13.5%) ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பழங்குடி மக்கள் வாழ்கின்றன.

குஜராத், ராஜஸ்தான், சதீஷ்கர், தெலுங்கானா – என அடுத்தடுத்த வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்களையும், தற்போது பாஜக காலூன்றி வளர்ந்துவருகின்ற வடகிழக்கு மாநிலங்களையும் குறிவைத்தே முர்மு என்ற அம்பு வீசப்பட்டுள்ளது.

***

குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்முவை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததைப் போலவே, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மே.வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரைத் தேர்ந்தெடுத்ததிற்குப் பின்னும் பாசிச பாஜகவுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

ஜெகதீப் தன்கர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் ஆதிக்க சாதிக்காரர் ஆவர். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதே ஜெகதீப் தன்கரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தற்கான நோக்கமாகும்.

ஜூலை 16 அன்று ஜெகதீப் தன்கரை வேட்பாளராக முன்மொழிந்தபோது, அவருக்கு ‘விவசாயி மகன்’ என்ற அடையாளத்தை வழங்கியது பாஜக. அன்றைய தினம் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார் :

“விவசாயி மகனான (கிசான் புத்ர) ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்குப் பெயர் பெற்றவர். சட்டம், சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாகத்தின் புகழ்மிக்க அனுபவங்களை அவர் தன்னோடு கொண்டுவருகிறார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது, ஆர்.எஸ்.எஸ்-பாஜக பல்லாண்டு காலமாக ஜாட்டுகள் மத்தியில் உருவாக்கியிருந்த சாதிய, மத முனைவாக்கத்தை உடைத்தது, வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போக்கைத் தடுப்பதற்காகவும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன்னிட்டும் மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

சட்டங்களைப் பின்வாங்கியது ஒருவகையில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் ஜாட்டுகள் மத்தியில் தனது இழந்த அடித்தளத்தை மீட்பதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் அன்றே தலையங்கம் (2021 டிசம்பர் இதழ்) எழுதினோம்; அதைப் போலவே பாஜகவின் செயல்பாடுகளும் அமைந்தன. ஒரு தொடர் நிகழ்வின் அங்கமாகத்தான் ஜகதீப் தன்கரை முன்னிறுத்தியிருக்கிறது பாஜக.

உ.பி சட்டமன்றத் தேர்தலின் போது, ஜாட்டுகள் அதிகமாக வசிக்கக் கூடிய மோடி நகர் தொகுதியில், ராஜ்நாத் பிரச்சாரம் செய்தார். அப்போது சீக்கியர்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவரும் முன்னாள் பிரதமருமான சவுத்ரி சரண் சிங்கை தனது அரசியல் ஆசானாகக் குறிப்பிட்டு பேசினார். மேலும் பாஜகதான் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாக அறிவித்ததாகவும் ஜாட்டுகள் பாஜக மீது கோபப்பட முடியாது என்றும் பேசினார்.

கடந்த ஏப்ரல் மாதம், சீக்கியர்களின் 10 குருமார்களில் 9வது குருவாகப் போற்றப்படும் குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாளை மோடி செங்கோட்டையில் கொண்டாடினார். ‘அவுரங்கசீபை எதிர்த்து நமது ஆன்மீக கலாச்சாரத்தைப் பாதுகாத்தவர்’ என்று புகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடு வாழ் சீக்கியர்களின் தூதுக் குழுவுடன் பேசிய மோடி, புதிய இந்தியாவைப் படைப்பதில் சீக்கியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனப் புகழ்ந்தார். மேலும் குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தைச் செலவிடுவது, சீக்கியக் குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும் என்று கூறினார்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் சீக்கியர்களின் தலைப்பாகையுடன் மோடி காட்சி தந்தார். இவையெல்லாம் ஜாட் விவசாயிகளை, சீக்கியர்களைக் கவருவதற்காக பாஜக மேற்கொண்ட கவர்ச்சிவாத, சாதிய அடையாள அரசியலின் பகுதிகளே.

வேளாண் சட்டங்களைத் திருப்பப் பெற்றபோது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு எழுத்துப் பூர்வமாக ஒப்புதலளித்த மோடி அரசு எட்டுமாதங்களாக அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது குடியரசுத் துணைத் தலைவராக தன்கரை அறிவித்து ஒருநாள் கழித்து, அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது மோடி அரசு. இதில் பங்குபெறச் சொல்லி சம்யுக்த கிசான் மோர்சா என்ற விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பை அழைத்துள்ளது. (இக்குழுவே ஒரு மோசடி என்று விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு அதைப் புறக்கணித்துள்ளது என்பது வேறு விசயம்)

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

***

கவர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய தேர்தல் அரசியலிலிருந்து பிரிக்க முடியாததாகும். குறிப்பாக சாதி அரசியல் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் புரையோடிப் போயிருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்காத கட்சி என்ற ஒன்று இல்லை. போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முறை கோடான கோடி வாக்காளர்களுக்குப் பயிற்றுவித்திருப்பது நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டு என்ற ஜனநாயக சிந்தனையைத்தான்.

படிக்க : காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

மாறாக, பெரும்பான்மை மக்கள் எந்த அரசியல் கட்சியின் கொள்கை தங்கள் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் என்று தெரிவுசெய்து வாக்களிப்பதில்லை. இத்தனைக் காலமும் கவர்ச்சிவாதத்தையும் அடையாள அரசியலையும் பிழைப்புவாதக் கட்சிகள் திறமையாகப் பயன்படுத்தி வந்தன. இன்று பாசிஸ்டுகள் அதை வீரியமாக முன்னெடுக்கிறார்கள். எனவே இத்தேர்தல் வரம்பிற்குள் நிற்கும் பிழைப்புவாத அரசியல் கட்சிகளால் பாசிஸ்டுகளின் அடையாள அரசியலை எதிர்கொள்ள முடிவில்லை. எதிர்கொள்ளவும் முடியாது!

வர்க்க அரசியலால் மட்டுமே இதை எதிர்கொண்டு முறியடிக்க முடியும். வேதாந்தாவுக்காகவும் ஜிண்டாலுக்காவும் பழங்குடிகள் வேட்டையாடப்படுவதையும், அம்பானி-அதானி கும்பலுக்காக பாரம்பரிய விவசாயம் அழிக்கப்பட்டு கார்ப்பரேட்மயமாக்கப்படுவதையும் வர்க்க அரசியலால் மட்டுமே எடுத்துக் காட்ட முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர் – இளைஞர்கள், சிறு – குறு வணிகர்கள் என அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது வர்க்க நலன்களை எடுத்துக் காட்டி அரசியல் உணர்வு ஊட்டுவதன் மூலம் மட்டுமே கவர்ச்சிவாத, அடையாள அரசியல் மாயைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்.

தேர்தல் பாதைக்கு வெளியே போராட்டப் பாதையில் மட்டுமே இத்தகைய அரசியல் உணர்வுக்கு உழைக்கும் மக்களைப் பயிற்றுவிக்க முடியும். இப்பாதை மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தும்!


பால்ராஜ்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

28.09.2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை !

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி – அதானி  பாசிசம் முறியடிப்போம் !

கண்டன அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தியது.

இச்சோதனை தொடர்பாக நாடு முழுவதும் அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது மோடியை கொலை செய்ய முயற்சி செய்வது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மக்கள் மீது மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச பார்ப்பன கும்பல் வைத்திருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை, கைதுகள் நடைபெற்றதாக ஏற்கனவே மக்கள் அதிகாரம் தெரிவித்தது.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

இன்று(28.09.20022) காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தடை செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இதன்மூலம் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக செயல்படக்கூடிய எந்த ஒரு அமைப்பின் மீதோ அல்லது எந்த ஒரு கட்சியின் மீதோ எப்போதும் எந்த நேரத்திலும்  தடை விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

வழக்கமான மோடியின் பாசிச நடவடிக்கைகளில் இது ஒன்று என்று கருதாமல் இதற்கெதிராக, அனைத்து முற்போக்கு, ஜனநாயக புரட்சிகர அமைப்புகளும் மக்களும் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321.

காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

ஞ்சாப், ஹரியானா, உ.பி மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக, சட்டத்தில் ஒரு புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம் என்று திமிர்த்தனமாகக் கூறிய மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது.

மேலும் ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருதிலேயே கவனம் செலுத்தியதால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டு விவசாயிகளின் இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளித்தது.

அவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றாததால், மோடி அரசைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் எட்டு மாதங்கள் கழித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிப்பதற்காக மோடி அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

இக்குழு தொடர்பாக மத்திய வேளாண்மை அமைச்சகம், ஜூலை 18 ஆம் தேதி அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலையை மேலும் சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவது குறித்து ஆராய 26 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இக்குழுவில் பங்கேற்க விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது; 3 இடங்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பானது இக்குழுவை நிராகரித்தது மட்டுமின்றி, தங்கள் சார்பாக எந்தப் பிரதிநிதிகளையும் பரிந்துரைக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் நிறைந்த இக்குழுவின் நிகழ்ச்சிநிரலில் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

***

மூன்று வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்த கன்வந்த் பாட்டீல், கிருஷ்ணவீர் சவுத்ரி, பிரமோத் குமார் சவுத்ரி, கனி பிரகாஷ் மற்றும் சையத் பாஷா படேல் ஆகியோர் விவசாய சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில், இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக உடன் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள். கிருஷ்ணவீர் சவுத்ரி பாஜகவின் தலைவராக உள்ளார்; சையத் பாஷா படேல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ; பிரமோத் குமார் சௌத்ரி ஆர்.எஸ்.எஸ்-இன் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்; கன்வந்த் பாட்டீல் சுதந்திர பாரத் பஷ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் வழக்கறிஞர்; கனி பிரகாஷ் விவசாயிகளின் இயக்கத்தை எதிர்த்ததில் முன்னோடியாக இருந்தவர்.

மேலும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் மற்ற உறுப்பினர்களும் அரசின் விசுவாசிகளே. முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் உருவாக்கியவர் இவரே. நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் மூன்று வேளாண் சட்டங்களின் முக்கிய வழக்கறிஞராக இருந்தவர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக இருந்தனர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஆதரிப்பவர்களைக் கொண்ட இக்குழுவானது விவசாயிகளின் கூற்றுப்படி, தங்களுடைய முதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவது பற்றி விவாதிக்கவில்லை. மாறாக, நான்கு துணைக் குழுக்களை அமைத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம், விவசாயிகளிடம் நுண்ணுயிர் பாசனத்தை மையப்படுத்துவது, பயிரிடும் முறை மற்றும் பயிர்களைப் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்ய இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம் என்றால், கனிம உரங்கள் உட்பட எந்தவித இடுபொருள்களும் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்வது. அதாவது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது நாள்தோறும் ஏறிக்கொண்டே போகிறது. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியிலிருந்து எந்த இடுபொருளும் வாங்கவேண்டியதில்லை. மாட்டு மூத்திரம், சாணி போன்றவற்றையே உரங்களாகப் பயன்படுத்திக் கொள்வது. அதே போல் நுண்ணுயிர் பாசனம் என்றால், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்வது.

இனி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் உள்ளிட்டு பல்வேறு இடுபொருட்களையும் வழங்குவதை ஒழித்துக் கட்டுவதே ஜீரோ பட்ஜெட் விவசாயம். சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதாரவிலையைப் பற்றி விவாதிப்பதாகச் சொல்லி அமைக்கப்பட்ட இக்குழு, விவசாயத் துறையை அரசானது முற்றிலுமாக கைக்கழுவி விட்டு, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ரத்துசெய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை இக்குழுவின் மூலம் வேறுவடிவத்தில் அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம் என்று விவசாயிகள் இதனை அம்பலப்படுத்தி உள்ளார்கள்.

***

குறைந்தபட்ச ஆதாரவிலைக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பின்புலத்தை ஆராய்வது, குழுவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது, மோடி அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆராய்வது போன்ற செயல்பாடுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளதையே காட்டுகின்றன.

மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், விவசாயிகளாகிய நாம் மட்டும் தனித்துநின்று போராடினால் போதாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும் மற்றும் பிற வர்க்கங்களின் கோரிக்கைக்காகவும் போராட வேண்டும் என்பதை உணர்ந்து தங்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதில் முன்னேறி வருகின்றனர் விவசாயிகள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து 2022 மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக பங்கேற்றுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 24 நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெய் ஜவான் ஜெய் கிசான் (வாழ்க இராணுவவீரர், வாழ்க விவசாயி) என்ற முழக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க : மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

ஆகஸ்ட் 8 அன்று மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பானது, மின்சாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களோடு இணைந்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

உபி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க பிரச்சாரம் செய்தது விவசாயிகள் சங்கங்களின் முக்கிய நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை முறியடிக்காமல் நாம் வாழ முடியாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராடும்போதே அக்கும்பலை முறியடிக்க முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

சரியான திசைவழியில் முன்னேறிச் செல்கிறார்கள் விவசாயிகள். இந்த திசையில் அவர்கள் தொடர்ச்சியாக முன்னேறி செல்வதும், பிற பகுதி விவசாயிகளும் மற்றும் பாசிசக் கும்பலின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பிற வர்க்கங்களும் அவர்களுடன் ஒன்றிணைவதும் பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் போக்காகும்.


அமீர்

ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ

ந்த ஃபோர்டு ஆலையை கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் மூடுவதாக சொன்னார்கள். ஆனால் மூடுவது பற்றி தமிழக அரசிடம் எந்த விதமான அறிவிப்பும் கொடுக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த வேலை நிச்சயம் எங்களுக்கு வேண்டும். நம் மக்களின் விவசாய நிலங்களின் ஆலை அமைத்துக்கொண்டு, 15 வருடம் மக்கள் வரிப்பணத்தில் வரி சலுகை பெற்றுக்கொண்டு செயல்படுகிறது இந்த ஆலை.

இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் 15 வருடம் முடிந்த பிறகு எங்களின் உழைப்பை சுரண்டி விட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதில் தமிழக அரசு தலையிடவேண்டும். என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

செப்டம்பர் 26 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ் மின்ட் செய்தி ஊடகம் பதிவு செய்து வெளியிட்டுள்ள காணொலியை இங்கு பகிர்கிறோம்.

ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

நன்றி : Tamilmint

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

1

ள்ளலாரின் 200 ஆம் ஆண்டை “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணை என அறிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அன்னதானங்கள் வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டு முழுவதும் 52 வாரங்களும் அன்னதானங்களும் சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படும் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்போது, வள்ளலார் – தனிப்பெரும் கருணை அதற்காக அன்னதானம் என பேசி முடித்துக் கொண்டனர் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள். தப்பி தவறி கூட வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றியும், சாதி, மதம், சமயங்களை விட்டொழிக்க வேண்டும்; அதுவே மேன்மை அடைய வழி என பேசியும் வாழ்ந்தும் வந்தார் என்பது பற்றியும் எங்கும் பேசவில்லை.

பல்லக்கு தூக்கும் பிரச்சினையிலும், சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையிலும்  இதுபோன்று பலவற்றிலும் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்ட திமுக எப்படி பார்ப்பனிய எதிர்ப்பு மரபினை உயர்த்தி பிடிக்கும்? எப்படி பேச முடியும்?

படிக்க : மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

வள்ளலார் பிறந்து 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பேச முடிந்த பார்ப்பனிய எதிர்ப்பை இவர்களால் இன்று பேச முடியவில்லை. காலம் மாறிவிட்டது என எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்றும் கூட இந்து ராஷ்டிரத்தையும் அதில் உள்ள சாதிய வருணாசிரமத்தையும் மீட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதற்கு சி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உயர்ந்தவன் – பிராமணன், தாழ்ந்தவன் – சூத்திரன் என்று கற்பித்து வருவது ஒரு மிக சிறந்த உதாரணம்.

இதுபோக, வேத கல்வி வாரியம் என வைத்துக்கொண்டு மனுஸ்மிருதி, வேதங்கள், உப நிடதங்கள் மற்றும் சாதிய வர்ணாசிரமத்தை முதன்மை பாடமாக கற்றுக் கொடுத்து அந்த மாணவர்களை இன்று பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இணைக்கப் போகிறார்கள்.

அப்படியானால் இந்த இந்துராஷ்ட்டிர பாசிச பேரபாயத்திற்கு எதிராக வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை முன்பை விட அதிகரித்துள்ளது.

வள்ளலார் ராமலிங்கர் 1823-இல் சிதம்பரம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் சைவ மத பற்றாளராக தமிழகம் முழுவதும் வளம் வந்துள்ளார். பின்பு அவரே கூறும் போது “சைவம், வைணவத்தை நம்பாதீர்கள். அது உண்மையை சொல்லாது. ஒரு காலத்தில் நானும் சைவத்தை நம்பினேன். எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால் அப்போது எனக்கு அறிவு கொஞ்சம் தான் இருந்தது” என்றார்.

வைதீக மரபின் முதன்மையான (பிரஸ்தான) மூன்று உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. இவை அனைத்துமே கொல்வதைத் தர்மமாக கூறியது; சூது சொல்லித் தந்தது  என அம்பலப்படுத்தினார்.

இதற்கு மாறாக, வள்ளலார் கொல்லாதே. உணவு ஊட்டுவதும், உயிர்காப்பதும்தான் கடமை என்கிறார். கொல்வதை தர்மமாக பேசும் பார்ப்பனியத்திற்கு எதிராக உயிர் காக்க வேண்டும், உணவளிக்க வேண்டும் என்று களமாடினார் வள்ளலார். திமுக அரசோ வள்ளலார் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி எல்லாம் பேசாமல் வள்ளலாரை  உணவு வழங்கும் பிதாவாக மட்டும் கட்டமைக்கும் வேலையை செய்கிறது.

வைதீகத்தை, பார்ப்பனியத்தை ஏந்தி வரும் சமஸ்கிருதம் போன்ற அனைத்து வாகனங்களின் கடையாணிகளையும் பிடுங்கி எறிந்தார். பகவத்கீதைக்கு மாற்றாக திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முன்வைத்தார்.

உயிரும், உள்ளமும் நோகும் வகையில் ஒற்றை கடுஞ்சொல் கூட பயன்படுத்தாத வள்ளலாரை ஒரு பார்ப்பனர் கூட ஆதரிக்கவில்லை. ஏனென்றால் அவர் பார்ப்பனிய கருத்தியலுக்கு -அமைப்பு முறைக்கு- எதிரான கருத்தியலையும் -அமைப்பு முறையையும்- முன் வைத்தார்.

பார்ப்பன கும்பல் மடத்தை கட்டி வைத்துக்கொண்டு அங்கு பெண்கள் வரக்கூடாது என்றது. வள்ளலார் சங்கத்தை நிறுவி அதில் ஆண் பெண் அனைவரும் சமம்; அனைவரும் பங்கேற்க வேண்டும்; விவாதிக்க வேண்டும் என பார்ப்பனியத்துக்கு எதிரான அமைப்பு முறையை முன் வைத்தார்.

வைதீகம் கேள்வி கேட்காதே நம்பிக்கைகொள் என்கிறது. வைதீக மரபிற்கு நேர் எதிராக வள்ளலார் இருந்தார். பகுத்தறிவு கேள்விகளை அன்றே எழுப்பினார். காது, மூக்கில் எதற்கு பொத்தல் போட்டு அணி கலன் அணிய வேண்டும்? பொத்தல் போடுவது அவசியம் என்றால் 9 ஓட்டைகளை வைத்த கடவுள் காதிலொன்றும், மூக்கிலொன்றும் போட்டிருக்கமாட்டானா? தலையில், கன்னத்தில் முளைக்கும் முடி ஏன் நெற்றியில் முளைப்ப தில்லை? என்று மக்களிடம் கேட்டவர் வள்ளலார். “கேட்டறியாத கேள்விகளை கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே” என்றார்.

வைதீகத்திற்கு எதிராக தோன்றிய தமிழ் சமயம் (எ) சைவ சமயம், ஆகம மரபு மக்களுக்கு என்ன செய்தது? வேதத்திற்கு பதிலாக ஆகமத்தை படிக்கச் சொன்னது. அது மட்டமானது எனது சமயம் உயர்வானது என்று வெறிபிடித்து பேசுகிறது. எனவே, வேதமும், ஆகமும் வேண்டாம். நிறுவனப்பட்ட சமயம் எதுவும் தேவையில்லை. பொதுநெறிக்கு வா என்றார் வள்ளலார்.

உலகில் எல்லோரும் சமம். உலகை பொதுவில் நடத்துகிற நிலை வர வேண்டும் என்றார். மேல்வருணம், தோல்வருணம் கண்டாரில்லை. நான் பேசுவது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றார்.

படிக்க : தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் உறுப்பினராக சேர ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவ ஒழுக்கம் என்றால் ஆண், பெண், சாதி, மத, சமய, ஆசிரம, சூத்திர, கோத்திர, குல, சாஸ்திர, சம்பந்த, தேச, மார்க்க வேறுபாடுக் கூடாது. ஆன்ம ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் தலைவன் ஆண்டவன் அருட்பெரும்ஜோதி. ஜீவன்களுக்குள் வேற்றுமை பார்க்கக்கூடாது. இவை இரண்டையும் கடைப்பிடித்தால் சங்க உறுப்பினராகலாம் என்றார். இப்படியாக சங்கம், சாலை (சோறு போடும் இடம்), சபை (கூடுகிற இடம்) என்ற அமைப்புகளை உருவாக்கினார்.

“சாதிமதம் சமயமெனும் சங்கடம் விட்டறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்…” (3319-வது பாடல்)

என சாதி மத சமயங்களைச் சங்கடமாகவும், சஞ்சலமாகவும் கருதுகின்றார்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளைய யாட்டே…” (4174-வது பாடல்)

என பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தியலை முன்வைக்கிறார்.

வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம். வள்ளலார் 200 இந்த அடிப்படையில் மக்களிடம் பறந்து விரிந்த அளவில் கொண்டு சென்று மக்களை அமைப்பாக்க வேண்டியது, காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக நிற்கக்கூடிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரின் கடமையாகும். அதுவே வள்ளலார் கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை அடைய தடைக்கல்லாக இருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்துவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.


ரவி

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

ந்து மத வேதம் மக்களை நான்கு வர்ணங்களாக்கி தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன், அழுக்கில் பிறந்தவன் பஞ்சமர் என்றும் மக்களை இழிவுபடுத்தி வைத்தது இந்து மத மனுவே, இதை அம்பலப்படுத்தியதில் என்ன தவறு?

ஆ.ராசா சொல்வது பொய் என்று கூறலாமே ஏன் இழிவுபடுத்தினர் என்று சொல்கிறார்கள்?

இப்போது கலவரத்தை தூண்டுகிற பாசிச சக்திகள் ஆ.ராசா சொல்வது பொய் இந்து மதம் இதைதான் சொல்கிறது இதோ ஆதாரம் என்று அவர்கள் ஆதாரப்பூர்வமாக உண்மையை கூறலாமே?

தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, தேவதாசி முறை, ஆணவப் படுகொலை இந்த குற்றங்களை எல்லாம் சரி என்று கூறுவதே மனு சாஸ்திரம். இதெல்லாம் மனு சாஸ்திரம் கூறவில்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்!

யூதர்களுக்கு எதிராக நாசிக் கோட்பாட்டை ஹிட்லர் அறிமுகப்படுத்தினார். அதுபோல இங்கிருக்கும் உழைக்கும் மக்கள் மீது இந்துத்துவ கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது இந்து மத மனுஸ்மிருதி.

படிக்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று ‘வேசி மகன்’. (source: மனுஷ்ரிமிதி அத்.8 சு.415)

சூத்திரர்கள் மற்ற மூன்று உயர் சாதிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் அவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் (source: Aitreya Brahmana of the Rig Veda 1992).

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும் தமிழகத்தில் எப்பொழுது பார்ப்பனியம் காலூன்றியதோ அப்போதிலிருந்தே அதை எதிர்ப்பது வழக்கமாக ஆரம்பித்தது அதற்கு சான்றுதான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறள்.

இந்து மத நூலான மனுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் முடிந்தால் அவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறுங்கள் பார்ப்போம்?

அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்புடையவர்கள் இவர்களெல்லாம் இந்துக்களின் விரோதியா?

இந்த பாசிச கும்பல்களின் கடையடைப்பு முதல், கலவரங்கள், கையெழுத்து இயக்கம் (அதாவது மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்) இப்பொழுது திருச்சியில் போடப்பட்டிருக்கும் தடை உத்தரவு வரை நமக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவது என்னவென்றால் இந்த பாசிச கும்பல் தமிழ்நாட்டிலும் காலூன்றியுள்ளது என்பதுதான்.

இவை அனைத்தும் நடைமுறையில் எங்கே இருக்கிறது ஏன் இவர்கள் இல்லாததை சொல்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நம் கண் முன்னே தினந்தினம் தீண்டாமை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் இரு பிள்ளைகளை கடைக்காரர் தின்பண்டங்களை தொடக்கூடாது என்று சொன்னது, கிராமங்களில் சேரி மக்களை கோவிலுக்கு உள்ளே விடாமல் தடுப்பது, இதெல்லாம் untouchability act-இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்! ஆனால் “கோவில் கருவறைக்குள்ளே நீங்கள் போகக்கூடாது பிராமணர்களை தொடக்கூடாது” இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் வரும்?

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

உழைக்கும் மக்களை நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், அவர்களின் பிள்ளைகள் தான் படிக்க வேண்டும் என மனு நீதி, ஆகம விதி என்று வரையறுத்து மக்களை இழிவு படுத்துவது நீ(மனு ஸ்மிருதி, பார்ப்பனியம்)! ஆ.ராசா அல்ல!!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

எனவே, இந்த பாசிச கும்பல்களை விரட்டியடிக்க நாமும் பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்க வேண்டியது அவசியமாகும்!!


ஆசாத்

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளே நடத்தி வந்த நிலையில், தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காகவும் கூடுதலாக ஒரு தொலைக்காட்சியை அமைப்பதற்காகவும் முதன்மை செயல் அலுவலரை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில், ஊரறிந்த சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனல் இணை நிறுவனரும் அவரது நண்பருமான சங்கி மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது திமுக ஆதரவாளர்கள் மத்தியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்தும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்ய கோரியும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்தே, தற்போது மணிகண்ட பூபதியின் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

***

கல்வித் தொலைக்காட்சிக்கான முதன்மை செயல் அலுவலரை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளைக் கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

70 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 16 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதி நேர்காணலில் பங்கேற்ற 3 பேரில், சங்கியான மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்நியமனத்திற்கு எதிர்ப்பு எழத் தொடங்கியது. நடிகர் கவிதா பாரதி உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் “ரிசைன் அன்பில் மகேஷ்” (#Resign_Anbil_Mahesh) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள்தான் என்றும், தீவிர திமுகவினர் இதில் பங்கேற்றனர் என்றும் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறினர். பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா; எஸ்.டி.பி,ஐ. கட்சியின் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் மூத்த பத்திரிகையாளரும் அரசு நடத்திய நேர்காணலில் பங்கேற்றவருமான திருஞானம் என்பவர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஸ்டாலினுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். “பல்வேறு முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும்; ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை போன்ற கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டுக் காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?” – என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை, இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்” என்றும் எழுதியுள்ளார்.

***

முதன்மை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த 70 பேரில், தேர்வு செய்யும் குழுவால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மணிகண்ட பூபதி பிரபல சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் மூளையாகச் செயல்பட்டவர். பல ஆண்டுகள் தினமல(ம்)ர் பத்திரிகையிலும், தந்தி, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளிலும் வேலை செய்தவர். குறிப்பாக ரங்கராஜ் பாண்டே தான் கூறிய பொய்யினால் அம்பலப்பட்டு மூலையில் ஒதுக்கப்படும் போதெல்லாம், மணிகண்ட பூபதி ஓர் மீட்பரைப் போல பாண்டே-வை காப்பாற்றி மறுவாழ்வு அளித்திருக்கிறார்.

தோழர் செங்கொடி ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்தபோது தினமலரில் வேலைப் பார்த்த பாண்டே, அவர் காதல் விவகாரத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தார். பின்னர் அது பொய் தகவல் என்று நிரூபிக்கப்படவே தினமலரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போது பாண்டே-வை தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தார் மணிகண்ட பூபதி. சமீபத்தில் தந்தியும் பாண்டே-வை ஓரங்கட்டிய போது அவருடன் சேர்ந்து யூடியூப்-இல் “சாணக்யா” சேனலை நடத்தி வந்தார்.

“சாணக்யா” என்பது மற்ற யூடியூப் சேனல்களைப் போன்றதல்ல. அது ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சார ஊடகம். இச்சேனலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு காணொளிகளின் தொடக்கத்திலும் திருவள்ளுவரின் சித்திரத்தைப் பட்டையும் கொட்டையும் அணிந்துகொண்டு காவி ஆடை உடுத்தியிருப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள்.

போலித் தகவல்களை அடுக்கிவைத்து, பொய் பிரச்சாரங்களை உண்மை போன்றே சித்தரிக்கும் வேலையை அச்சேனல் தொடர்ந்து செய்துவருகிறது. மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது, நம் பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்று நமக்கு தெரிய வேண்டாமா? என்றும் காஷ்மீரிகளுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கும் நமக்கு முகவட்டு வித்தியாசம் தெரியாது என்றும் அதற்காகத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்தது சாணக்யா.

நீட்-க்கு ஆதரவாக போலியான புள்ளிவிவரங்களை அடுக்கி பிரச்சாரம் செய்வது, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஆதரவாக கருத்து பிரச்சாரம் செய்வதையே முதன்மை கடமையாக ஏற்று செய்யும் சங்கி சேனல் சாணக்யா. ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தத்திற்கு சேவை செய்யும் சேனலின் இணை நிறுவனராக இருந்த மணிகண்ட பூபதியைத்தான் பள்ளி குழந்தைகள் படிக்கும் தொலைக்காட்சியில் அரியணையிட்டு அமரவைத்தது திமுக அரசு.

ஒருவேளை மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், கல்வி தொலைக்காட்சியிலும் திருவள்ளுவர் காவியிலேயே காட்சி தந்திருக்கக் கூடும்; தமிழ் பாட வேளையில் ராமாயணமும் மகாபாரதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும், அறிவியல் பாடத்தில் விநாயகருக்கு யானை தலையை வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

***

இந்த ஆபத்துக்களுக்கு எதிராக தமிழக ஜனநாயக சக்திகள் குரல்கொடுத்து முறியடித்துள்ள போதும் திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் மணிகண்ட பூபதியின் நியமன விவகாரத்தில் கூட திமுகவை நோகாமல் விமர்சனம் செய்ய எண்ணுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் நகைக்கத் தக்கதாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்களே மணிகண்ட பூபதியை நியமித்திருப்பார்கள், எனவே இந்நியமனம் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது; திமுக எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்; இது குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும்; கல்வித்துறை அமைச்சர்தான் பிரச்சனை – என்று பேசுகின்றனர்.

திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போகிறது என்று முற்போக்காளர்களில் ஒரு பிரிவினரும் புரட்சிகர சக்திகளும் விமர்சனம் வைக்கும் போதெல்லாம் இதே வகையான வாதங்களே கிளப்பிவிடப்படுகின்றன. எனில் ஒரு கேள்வி எழுகிறது, ஸ்டாலினைத் தவிர திமுகவில் அனைவரும் சங்கிகளா, திராவிட உணர்வு ஒருவருக்குமே இல்லையே?

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், “ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் திமுக குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது” என்று கூறினார். ஆனால் மணிகண்ட பூபதியின் நியமனம் குறித்து திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன? “பாண்டே என்னுடனும்தான் வாட்சப் தொடர்பில் உள்ளார்; அதற்காக நான் என்ன அந்த சித்தாந்தம் உடையவனா? ஒருவருடைய செயல்பாடுதான் முக்கியம்” என்றார்.

இதுதான் சமரசமற்ற போக்கிற்கு சான்றா? கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகுதான், நான் பெரியாரின் வாரிசு.. கலைஞரின் வாரிசு! திமுக இவ்விசயத்தில் ஏமாறாது, மணிகண்ட பூபதி நியமனம் குறித்து விசாரணை நடத்துகிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.

நமக்கு வெளிப்படையாக தெரிந்தவகையில் மட்டும் திமுக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அரசுப் பொறுப்பில் அமர்த்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பச்சை சங்கி ராமசுப்ரமணியன் என்பவர் அறநிலையத் துறைக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கோவில்களை மேம்படுத்தவும் புனரமைக்கவும் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் தலைமைக்குழுவில் சங்கியான ராமசுப்ரமணியன் ஓர் உறுப்பினர்.

ராமசுப்பிரமணியன் முன்னாள் பாஜக ஆதரவாளர். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் கட்ட முதல் செங்கல் வாங்கி கொடுத்தவன் நான்” என்று தன்னை பெருமைக்குரிய சங்கியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மீது கருத்து முரண்பாடு கொண்டதாக காட்டிக்கொண்டு தனது பேட்டிகளில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று திமுக ஆதரவாளராக யூடியூப் சேனல்களில் பேட்டியளித்துவருகிறார்.

ஆனால் பாஜகவை விமர்சித்தாலும்கூட இன்றும் தன்னை பல்வேறு பேட்டிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராகவே கூறிக்கொள்கிறார். வீடு தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் சிறந்த முறையில் சேவையாற்றுவார்கள் என்று கூறியது, தில்லை சிற்றம்பல மேடையில் பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுத்த விவகாரத்தில், அப்பட்டமாக தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசியது ஆகியவற்றை முன்பே நாம் புதிய ஜனநாயகத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யாரும் ராமசுப்ரமணியன் விவகாரத்தைக் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் பாஜக எதிர்ப்பாளராகவும் திமுக ஆதரவாளராகவும் காட்சி தருகிறார். மணிகண்ட பூபதியும் அப்படி ஒரு மருவை வைத்துக் கொண்டு வந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளச் சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் விவகாரம், காந்தியைச் சுட்டது கோட்சே என்று சொல்லக்கூடாது என்று கோவை போலீசு மிரட்டிய விவகாரம், இந்து முன்னணி கோரிக்கையை ஏற்று வாணியம்பாடி உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை உள்ளிட்டு பல்வேறு விவகாரங்களில் அரசுக்கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் கூறிவந்தனர். அது உண்மைதான் என்றபோதும் தனது வாதங்களில் திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போவதை மறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!

தற்போது ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!

இந்த விசயத்தில் திமுக-வை இஸ்லாமியக் கட்சிகள் கண்டித்ததே தவிர வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கூட்டணிக் கட்சிகள் யாரும் கண்டிக்கவில்லை. எங்கு விமர்சனம் வைத்தால் கூட்டணிக்கு கேடு வந்துவிடுமோ, இல்லை ஆர்.எஸ்.எஸ்-பாஜக எதிர்ப்பின் பலம் குறைந்துவிடுமோ என்று கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற தருணங்களில், திமுக-வை விமர்சிக்காமல் போவதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு சாதகமாகப் போய்விடும். ஒருவேளை மணிகண்ட பூபதி நியமனத்தை எதிர்த்து புரட்சிகர-ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திமுக-வின் தவறுகளையும் சமரசங்களையும், எந்த அளவிற்கு அம்பலப்படுத்தி புரட்சிகர – ஜனநாயக சக்திகள் கேள்வி எழுப்புகின்றனவோ அந்த அளவிற்குதான் ஆர்.எஸ்,எஸ்-பாஜக-வின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். திமுக-வில் ஒரு பிரிவினரையும் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு செய்யத் தவறினால் அது ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் வெற்றிக்கே வழிவகுக்கும்.


துலிபா