Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 146

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளே நடத்தி வந்த நிலையில், தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காகவும் கூடுதலாக ஒரு தொலைக்காட்சியை அமைப்பதற்காகவும் முதன்மை செயல் அலுவலரை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில், ஊரறிந்த சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனல் இணை நிறுவனரும் அவரது நண்பருமான சங்கி மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது திமுக ஆதரவாளர்கள் மத்தியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்தும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்ய கோரியும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்தே, தற்போது மணிகண்ட பூபதியின் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

***

கல்வித் தொலைக்காட்சிக்கான முதன்மை செயல் அலுவலரை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளைக் கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

70 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 16 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதி நேர்காணலில் பங்கேற்ற 3 பேரில், சங்கியான மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்நியமனத்திற்கு எதிர்ப்பு எழத் தொடங்கியது. நடிகர் கவிதா பாரதி உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் “ரிசைன் அன்பில் மகேஷ்” (#Resign_Anbil_Mahesh) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள்தான் என்றும், தீவிர திமுகவினர் இதில் பங்கேற்றனர் என்றும் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறினர். பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா; எஸ்.டி.பி,ஐ. கட்சியின் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் மூத்த பத்திரிகையாளரும் அரசு நடத்திய நேர்காணலில் பங்கேற்றவருமான திருஞானம் என்பவர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஸ்டாலினுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். “பல்வேறு முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும்; ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை போன்ற கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டுக் காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?” – என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை, இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்” என்றும் எழுதியுள்ளார்.

***

முதன்மை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த 70 பேரில், தேர்வு செய்யும் குழுவால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மணிகண்ட பூபதி பிரபல சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் மூளையாகச் செயல்பட்டவர். பல ஆண்டுகள் தினமல(ம்)ர் பத்திரிகையிலும், தந்தி, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளிலும் வேலை செய்தவர். குறிப்பாக ரங்கராஜ் பாண்டே தான் கூறிய பொய்யினால் அம்பலப்பட்டு மூலையில் ஒதுக்கப்படும் போதெல்லாம், மணிகண்ட பூபதி ஓர் மீட்பரைப் போல பாண்டே-வை காப்பாற்றி மறுவாழ்வு அளித்திருக்கிறார்.

தோழர் செங்கொடி ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்தபோது தினமலரில் வேலைப் பார்த்த பாண்டே, அவர் காதல் விவகாரத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தார். பின்னர் அது பொய் தகவல் என்று நிரூபிக்கப்படவே தினமலரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போது பாண்டே-வை தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தார் மணிகண்ட பூபதி. சமீபத்தில் தந்தியும் பாண்டே-வை ஓரங்கட்டிய போது அவருடன் சேர்ந்து யூடியூப்-இல் “சாணக்யா” சேனலை நடத்தி வந்தார்.

“சாணக்யா” என்பது மற்ற யூடியூப் சேனல்களைப் போன்றதல்ல. அது ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சார ஊடகம். இச்சேனலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு காணொளிகளின் தொடக்கத்திலும் திருவள்ளுவரின் சித்திரத்தைப் பட்டையும் கொட்டையும் அணிந்துகொண்டு காவி ஆடை உடுத்தியிருப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள்.

போலித் தகவல்களை அடுக்கிவைத்து, பொய் பிரச்சாரங்களை உண்மை போன்றே சித்தரிக்கும் வேலையை அச்சேனல் தொடர்ந்து செய்துவருகிறது. மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது, நம் பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்று நமக்கு தெரிய வேண்டாமா? என்றும் காஷ்மீரிகளுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கும் நமக்கு முகவட்டு வித்தியாசம் தெரியாது என்றும் அதற்காகத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்தது சாணக்யா.

நீட்-க்கு ஆதரவாக போலியான புள்ளிவிவரங்களை அடுக்கி பிரச்சாரம் செய்வது, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஆதரவாக கருத்து பிரச்சாரம் செய்வதையே முதன்மை கடமையாக ஏற்று செய்யும் சங்கி சேனல் சாணக்யா. ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தத்திற்கு சேவை செய்யும் சேனலின் இணை நிறுவனராக இருந்த மணிகண்ட பூபதியைத்தான் பள்ளி குழந்தைகள் படிக்கும் தொலைக்காட்சியில் அரியணையிட்டு அமரவைத்தது திமுக அரசு.

ஒருவேளை மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், கல்வி தொலைக்காட்சியிலும் திருவள்ளுவர் காவியிலேயே காட்சி தந்திருக்கக் கூடும்; தமிழ் பாட வேளையில் ராமாயணமும் மகாபாரதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும், அறிவியல் பாடத்தில் விநாயகருக்கு யானை தலையை வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

***

இந்த ஆபத்துக்களுக்கு எதிராக தமிழக ஜனநாயக சக்திகள் குரல்கொடுத்து முறியடித்துள்ள போதும் திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் மணிகண்ட பூபதியின் நியமன விவகாரத்தில் கூட திமுகவை நோகாமல் விமர்சனம் செய்ய எண்ணுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் நகைக்கத் தக்கதாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்களே மணிகண்ட பூபதியை நியமித்திருப்பார்கள், எனவே இந்நியமனம் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது; திமுக எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்; இது குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும்; கல்வித்துறை அமைச்சர்தான் பிரச்சனை – என்று பேசுகின்றனர்.

திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போகிறது என்று முற்போக்காளர்களில் ஒரு பிரிவினரும் புரட்சிகர சக்திகளும் விமர்சனம் வைக்கும் போதெல்லாம் இதே வகையான வாதங்களே கிளப்பிவிடப்படுகின்றன. எனில் ஒரு கேள்வி எழுகிறது, ஸ்டாலினைத் தவிர திமுகவில் அனைவரும் சங்கிகளா, திராவிட உணர்வு ஒருவருக்குமே இல்லையே?

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், “ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் திமுக குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது” என்று கூறினார். ஆனால் மணிகண்ட பூபதியின் நியமனம் குறித்து திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன? “பாண்டே என்னுடனும்தான் வாட்சப் தொடர்பில் உள்ளார்; அதற்காக நான் என்ன அந்த சித்தாந்தம் உடையவனா? ஒருவருடைய செயல்பாடுதான் முக்கியம்” என்றார்.

இதுதான் சமரசமற்ற போக்கிற்கு சான்றா? கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகுதான், நான் பெரியாரின் வாரிசு.. கலைஞரின் வாரிசு! திமுக இவ்விசயத்தில் ஏமாறாது, மணிகண்ட பூபதி நியமனம் குறித்து விசாரணை நடத்துகிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.

நமக்கு வெளிப்படையாக தெரிந்தவகையில் மட்டும் திமுக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அரசுப் பொறுப்பில் அமர்த்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பச்சை சங்கி ராமசுப்ரமணியன் என்பவர் அறநிலையத் துறைக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கோவில்களை மேம்படுத்தவும் புனரமைக்கவும் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் தலைமைக்குழுவில் சங்கியான ராமசுப்ரமணியன் ஓர் உறுப்பினர்.

ராமசுப்பிரமணியன் முன்னாள் பாஜக ஆதரவாளர். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் கட்ட முதல் செங்கல் வாங்கி கொடுத்தவன் நான்” என்று தன்னை பெருமைக்குரிய சங்கியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மீது கருத்து முரண்பாடு கொண்டதாக காட்டிக்கொண்டு தனது பேட்டிகளில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று திமுக ஆதரவாளராக யூடியூப் சேனல்களில் பேட்டியளித்துவருகிறார்.

ஆனால் பாஜகவை விமர்சித்தாலும்கூட இன்றும் தன்னை பல்வேறு பேட்டிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராகவே கூறிக்கொள்கிறார். வீடு தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் சிறந்த முறையில் சேவையாற்றுவார்கள் என்று கூறியது, தில்லை சிற்றம்பல மேடையில் பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுத்த விவகாரத்தில், அப்பட்டமாக தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசியது ஆகியவற்றை முன்பே நாம் புதிய ஜனநாயகத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யாரும் ராமசுப்ரமணியன் விவகாரத்தைக் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் பாஜக எதிர்ப்பாளராகவும் திமுக ஆதரவாளராகவும் காட்சி தருகிறார். மணிகண்ட பூபதியும் அப்படி ஒரு மருவை வைத்துக் கொண்டு வந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளச் சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் விவகாரம், காந்தியைச் சுட்டது கோட்சே என்று சொல்லக்கூடாது என்று கோவை போலீசு மிரட்டிய விவகாரம், இந்து முன்னணி கோரிக்கையை ஏற்று வாணியம்பாடி உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை உள்ளிட்டு பல்வேறு விவகாரங்களில் அரசுக்கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் கூறிவந்தனர். அது உண்மைதான் என்றபோதும் தனது வாதங்களில் திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போவதை மறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!

தற்போது ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!

இந்த விசயத்தில் திமுக-வை இஸ்லாமியக் கட்சிகள் கண்டித்ததே தவிர வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கூட்டணிக் கட்சிகள் யாரும் கண்டிக்கவில்லை. எங்கு விமர்சனம் வைத்தால் கூட்டணிக்கு கேடு வந்துவிடுமோ, இல்லை ஆர்.எஸ்.எஸ்-பாஜக எதிர்ப்பின் பலம் குறைந்துவிடுமோ என்று கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற தருணங்களில், திமுக-வை விமர்சிக்காமல் போவதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு சாதகமாகப் போய்விடும். ஒருவேளை மணிகண்ட பூபதி நியமனத்தை எதிர்த்து புரட்சிகர-ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திமுக-வின் தவறுகளையும் சமரசங்களையும், எந்த அளவிற்கு அம்பலப்படுத்தி புரட்சிகர – ஜனநாயக சக்திகள் கேள்வி எழுப்புகின்றனவோ அந்த அளவிற்குதான் ஆர்.எஸ்,எஸ்-பாஜக-வின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். திமுக-வில் ஒரு பிரிவினரையும் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு செய்யத் தவறினால் அது ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் வெற்றிக்கே வழிவகுக்கும்.


துலிபா

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

26.09.2022

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும்
பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! முறியடிப்போம் !

பத்திரிகை செய்தி

டந்த சில தினங்களுக்கு முன் பி.ஜே.பி.யின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்த நாள் முதல் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பி.ஜே.பி பாசிச சக்திகளின் வீடுகள், அலுவலகங்கள் என சில இடங்களில் பெரிதும் சேதமுறாத வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதைக் காரணமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் குறிப்பாக எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்ட உடனேயே கோவையில் அதிரடிப்படை போலீசு உள்ளிட்ட 3000 பேர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் தீவிரப்படுத்தப் படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக இந்து மற்றும் இசுலாமிய தலைவர்களிடம்  பேசிக் கொண்டிருப்பதாகவும் சமுதாய நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இப்பிரச்சினை தொடர்பாக 250 பேரிடம் விசாரணை செய்வதாகவும் நேற்று மாலைக்குள் (25.09.2022) குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். அவர் கூறியபடியே  கோவையில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரும் சேலத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பேருமே எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நிர்வாகிகள்.

ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்து முன்னணி ஆகியோரது வீடுகளில் முசுலீம்கள்தான் பெட்ரோல் குண்டு வீசியிருப்பார்கள் என்று முன் முடிவின் அடிப்படையில் தொடங்கிய திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை என தமிழ்நாடு முழுவதுமே எஸ்.டி.பி.ஐ கட்சியினர், இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டும் போலீசால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் சுய விளம்பரத்துக்காக பெட்ரோல் குண்டுகளை தனக்குத்தானே வீசிக்கொண்டு பலமுறை அம்பலப்பட்டு இருக்கிறார்கள். இந்த கோணத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணியைச் சேர்ந்த எத்தனை பேரிடம் போலீசு விசாரணை செய்தது?

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களையும் எஸ்.டி.பி.ஐ மீது என்.ஐ.ஏ நடத்திய சோதனைகளையும் இணைத்து டிஜிபி சைலேந்திரபாபுவால் அளிக்கப்பட்ட அறிக்கையே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிச திட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றது.

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் இயேசு அல்ல ஓரளவுக்குத்தான் அமைதி காப்போம். பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் பி.ஜே.பி.யின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்கிறார் ஒன்றிய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அது குறித்து இன்று (26.09.2022) உளவாளி ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்பது தலைப்புச் செய்திகளில்  இடம்பெறுகின்றது. இவை அனைத்தும் எதேச்சையானவை அல்ல; மாறாக திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்றே வருகின்றன.

காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் கோட்ஸே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததும் தற்போதைய நடவடிக்கைகளும் வேறுவேறல்ல.

***

இப்பிரச்சினை தொடர்பாக இந்து – இசுலாமியர்கள் மத்தியில் மத நல்லிணக்கக் கூட்டம் நடத்துவதாக கோவை ஆட்சியர் சமீரன் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பெரும் சேதமுறாத பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் என்பதை இந்து மற்றும்  இசுலாமிய மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்ற முனைகிறார் மாவட்ட கலெக்டர். பெட்ரோல் குண்டு வீசியது இசுலாமியர்கள்தான் அவர்களுக்கு ஆதரவாக இசுலாமிய மக்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தையே இது உருவாக்குகிறது.

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பதே இதுவரை முடிவாகாத நிலையில்  திட்டமிட்டு இசுலாமியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகளின் திட்டத்தை நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது தமிழ்நாடு போலீசு.

எங்கள் கட்சியினர் மீது பெட்ரோல் குண்டு வீசியது எஸ்.டி.பி.ஐ.தான் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்வதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் போலீசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போலீசு நிலையத்தில் முறையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை போலீசு கைது செய்திருக்கிறது.

கோவையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட போலீசை குவிப்பதன் நோக்கம் என்ன? ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் கோவை உள்ளிட்ட இடங்களில் கலவரங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதையும் அதற்கு தடையாக எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்பினர் இருப்பார்கள். ஆகவே அவர்களை ஒடுக்கி அரசியலில் இருந்து அகற்றுவது என்ற நோக்கத்திற்காகவே என்.ஐ.ஏ சோதனை முதல் அக்கட்சி நிர்வாகிகள் கைது வரையிலான சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – தமிழ்நாடு போலீசின் கூட்டு நடவடிக்கைகளை 1998 கோவை குண்டு வெடிப்பு கலவரத்தின் போதே நாம் கண்டோம். மாமூல் பிரச்சினையில் கொல்லப்பட்ட போலீசின் பிணத்தை வைத்துக்கொண்டு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை குறிவைத்து தாக்கியதையும் அப்போது தமிழ்நாடு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை வேட்டையாடியதையும் யாரும் மறந்துவிடப் போவதில்லை.

“தமிழ்நாட்டில் தேசத்திற்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவர வெறும் அரை மணி நேரம் போதும். அடுத்த இரண்டு நாள் பார்ப்போம் போலீசுத்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம்” என்று கலவரம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று மிரட்டல் விடுத்த அண்ணாமலை இதுவரை கைது செய்யப்படவில்லை.

போலீசு பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் மீது கலவரம் நடத்துவதற்கான அனைத்துவித ஏற்பாட்டையும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்துவிட்டதையே அறிய முடிகிறது. அதற்கு தோதாக தமிழ்நாடு போலிசுத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இசுலாமியர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை ஏற்படுத்தி அதன்மூலம் கோவை போன்ற பகுதிகளில் தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த முடியும். இதை சாக்காக வைத்து திமுக ஆட்சியை கலைத்து தனது சொர்க்கத்தை மீட்டுவிட முடியும். கலவரம் நடைபெறவில்லை என்றாலும் இதை சாக்காக வைத்துக்கொண்டு ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தபடி இசுலாமிய, புரட்சிகர அமைப்புகளை கட்சிகளை தடை செய்ய வைப்பதும் அக்கட்சியினரை கைது செய்ய வைப்பதும் அதன் மூலம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் கலவரங்களுக்கு முன்தயாரிப்பு வேலை செய்ய முடியும். கலவரம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் வெற்றி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளுக்கே.

நடப்பதோ திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியில் நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே திராவிட ஆட்சிக்கு எதிரானதாக மாறிவிடுமே என்று பலரும் எண்ணுகின்றனர். உலக அளவில் இருந்த பாசிச நிறுவனங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் என்பது மட்டும்தான் 100 ஆண்டுகள் அனுபவம் பெற்றது.

கடந்து நூறு ஆண்டுகளில் உலகில் உள்ள பல்வேறு பாசிச நிறுவனக்களின் அனுபவம் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, இந்தியாவில் நிலவும் அரசமைப்பில் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் போலீசு, ராணுவம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் தனது ஆட்களை நிரப்பி எவ்வித தடையுமின்றி இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அப்படிப்பட்ட அமைப்பு தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழ்நாட்டை இறுக்கக்கட்டி நெரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த அரசும் போலீசும் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. பெரியார் திடலில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சியின்போது, தோழர்கள் அனைவரும் சென்ற பிறகு போலீசின் வழிகாட்டுதலில் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கூட கருப்புச்சட்டை அணிந்தவர்கள் மீதுதான் போலீசு தாக்குதல் நடத்தியது; இந்து மதவெறி பாசிஸ்டுகள் மீதல்ல.

ஆளுனர் ஆர்.என்.ரவி என்ற உளவாளி மூலம் தமிழ்நாட்டின் போலீசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. யார் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சியே நிரலுக்கு வரும். அது இன்று ஒருவேளை தள்ளி போகலாம் என்றாலும் நாளை நிச்சயம் நடக்கும். ஒரு போதும் தவிர்க்க முடியாது, பாசிஸ்டுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழிஇல்லை.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

நாம் வீழ்த்த வேண்டிய இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசம்தான். அதை எப்போதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை முதலில் அடி என்றார் பெரியார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகள்தான் மக்களின் எதிரி, அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை மக்களின் இயல்பாக ஒன்றாக மாற்ற வேண்டும்.

ஆப்பரேசன் சவுத் என்ற திட்டத்தின் அடிப்படையில் தெலுங்கானாவும் தமிழ்நாடும்தான் முதற்கட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்குகள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிரான நடவடிக்கையை மக்களை திரட்டி மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!


தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

In the first round of the popular uprising (May 9), Mahinda Rajapaksa stepped down as the Prime Minister and hid himself secretly. The second wave of the uprising had hit exactly after two months. During the July 9 uprising, the mass took over the Presidential Palace and Gotabaya was driven out of the country. Gotabaya, who has been an international refugee with no country to seek refuge, has been facing people’s protests everywhere he goes including Maldives and Singapore. These protests had also frightened the fascists of other countries also.

On the other hand, the Western imperialists including the US, and the Indian ruling classes, which wanted to oust the Rajapaksa clique from power and install their puppet Ranil in that place, accomplished their goal against this backdrop of the uprising. Ranil crowned himself as the interim President.

Also Read : A few remarks on the attitude of the proletarian party in paying Salute and Tribute

But the people’s agitation did not subside. Although the struggle began with the demand “Gota Go Home”, it was guided to the next level by the political front-liners with demands such as “New Constitution”, “Government with people’s participation”. The protests began to turn towards Ranil. Following the Presidential Palace, the Prime Minister’s Office was also besieged by the people. Moreover, the people rushed towards the parliament with the intention of besieging it.

Within hours of the Prime Minister’s Office being attacked, Ranil described the popular uprising as follows:

“We must end this fascist threat to democracy. We can’t allow the destruction of State property. Those who are in my office want to stop me from discharging my responsibilities as acting President. We can’t let them tear up our Constitution”.

Ranil’s speech signals that the ruling class was fearful of the popular uprising advancing towards its next goal. So it had openly stepped out to suppress the uprising. The police and the military were given the ultimate power to forcibly suppress the uprising.

Sensing this, the front-liners of the protests asked the people who had taken over the President’s Office and other government buildings to leave. People left the Presidential Palace with discipline and order.

Meanwhile, for the first time in the history of Sri Lanka, Presidential election took place inside the parliament. People knew that Ranil negotiated a deal with the Rajapaksa gang and considered him as the protector of the corrupt assets of the Rajapaksa clique. Hence the people called upon the political parties to defeat him. But the parliamentary pigs endorsed the will of the ruling class.

As Ranil Wickremesinghe’s main rival Sajith Premadasa withdrew his presidential candidacy at the last minute, Ranil easily won the presidential elections by defeating Dullas Alahapperuma and Anura Kumara by securing 134 votes.

Ranil does not even win a single seat. But Rajapaksa’s Sri Lanka Podujana Peramuna (SLPP), which has the highest number of seats in the parliament, assisted the victory of Ranil. Moreover, Ceylon Workers’ Congress and a few Tamil groups including Tamil People’s National Alliance also supported Ranil Wickremesinghe.

The Tamil National Alliance (TNA), which had the largest number of seats among the Tamil parties, said that it will be supporting Dullas Alahapperuma. But later, it was reported that a faction of the party voted for Ranil. According to unconfirmed reports, the Deputy High Commissioner of the Indian High Commission had attended a meeting convened by the TNA on the night before the elections and requested it to support Ranil. Furthermore, it is to be noted that the Ceylon Workers’ Congress, which has the vote bank of Malaiyaha Tamils (Indian Tamils), also has close ties to the Indian ruling classes.

Ranil Wickremesinghe had sworn in as President on July 21. In the early morning of the very next day (July 22), the Galle Face protest camp was hunted down by the army. The army, which suddenly surrounded the ground in large numbers, smashed the camps. The protestors were indiscriminately attacked and driven away. The journalists gathered there also were not spared. The army even stopped an ambulance that had arrived to transport the injured. Ranil showed who he was within 24 hours.

When he took charge as Prime Minister under Gotabaya’s regime, Ranil expressed himself as a supporter of the Galle Face protest. But, it had now been exposed that his intention was to drive out the Rajapaksas and hold on to the throne.

A day before ransacking by the military, Ranil had announced that he would allot the Viharamahadevi Park to the protesters instead of the Galle Face ground, where the Presidential Secretariat is located. Moreover, a section of the protesters had formally announced that they would end the protest and leave. In this context, the Galle Face attack, which took place without prior notice, was a deliberately orchestrated fascist operation to intimidate the people.

The Ranil government not only suppressed the struggle but also demeaned the struggle with its filthy slanders. A rumour was spread that crores of rupees was suddenly credited to the bank accounts of some of the front-liners of the agitation by some people from outside to sustain the Galle Face protests. Sri Lankan intelligence itself had declared that it was fake information. However, slandering by the stooges continue.

Ranil is appointing many people under the name of all-party government. MP Dinesh Gunawardena, who was Ranil’s school friend, was appointed as the Prime Minister. He is known to be closely associated with the Rajapaksas. Ranil has re-appointed many persons who were part of the previous cabinet formed by Gotabaya Rajapaksa.

An all-party government is a government that is formed in consultation with all the political parties which have representation in the parliament and thereby ensuring equal participation of all the parties. But, Ranil is appointing the persons of his choice. Ranil is refusing to follow even the usual shams of the bourgeois democracy.

On one hand, the army and the police are hunting down the protesters. The Ranil government is engaged in the treacherous task of arresting the front-liners and suppressing the protests. On the other hand, Gotabaya had fled. And the ruling class is campaigning that continuing the protests will only intensify the economic crisis. The US had urged the Sri Lankan government to work quickly to achieve ‘political stability’.

Also Read : NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

What is Ranil really going to do? He is going to follow the same recolonizational path which led to the bankruptcy of Sri Lanka. He will travel on this path by actively carrying out the dictates laid down by the IMF and the World Bank. That is why, the US is keen on maintaining ‘political stability’ in Sri Lanka.

The uprising of the working people of Sri Lanka has to move forward without the fear of repression and without falling prey to the slander and diversion tactics.

Ranil’s anti-people arrangement of an ‘all-party government’ must be overthrown. And, as the Galle Face Declaration put forward, ‘a provisional government with the participation of the representatives of the protesting people’ must be established immediately. That will be the beginning of the path to dawn. The first two uprisings drove away the Rajapaksas. The international proletariat is looking forward for the third round of the uprising to drive Ranil out of the country.

Editorial Team,
New Democracy.
26.07.2022

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்காவிற்கு வெற்றியா?

இம்ரான் கான் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், அவர் தலைமையிலான ஆட்சியும் அமெரிக்காவின் முற்றுமுழுதான ஆதிக்கத்துக்கு தோதானது அல்ல. அதாவது இரஷ்ய-சீனக் கூட்டணிக்கு ஷெபாஸ் ஷெரீப் எதிரானவரல்ல.

இம்ரானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சி நீங்கலாக இருபெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளாக உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீம் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே சீனாவுடன் நல்லுறவைப் பேணும் கட்சிகளே. பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் நீண்டகால அரசியல்-பொருளாதார உறவுகள் இருந்துவருவதைப் போலவே, சீனாவுடனும் இருந்துவருகின்றன.

தற்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீஃப் முன்னர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்தவர். அவரது ஆட்சியில் அம்மாகாணத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனாவின் பொருளாதார உதவியைப் பெற்றே நிறைவேற்றினார். ஆட்சிக்கு வந்த பிறகு புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இம்ரான் கானை விட ஆர்வமாக செயல்படுகிறார் ஷெரீப்.

படிக்க : புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

பிறகு, இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் அமெரிக்க ஆதரவு ஆளும் வர்க்க கும்பல் சாதித்தது என்ன? இதற்கான பதிலை சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. “சீனாவுடனான நட்பிலோ, அதன் அனைத்துவகையான போர்தந்திர ஒத்துழைப்பிலோ பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருப்பின் அத்தகைய உறவுகளை எந்தக் கட்சி சிறப்பாக நிலைநிறுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது” – என்று குயென் ஃபெங் என்ற அரசியல் பகுப்பாய்வாளர் கூறுவதை எடுத்துக் காட்டுகிறது குளோபல் டைம்ஸ்.

குயென் ஃபெங் கூறுவதைப் போல, சீனாவுடனான போர்தந்திர ஒத்துழைப்பில் மற்ற கட்சிகளை விட அதிகம் சிறப்பாக செயல்பட்ட கட்சி இம்ரான் கானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சிதான். மேலும் இம்ரான் கான், தீவிர இரஷ்ய-சீன சார்பாளராக இருந்தார். அவர் வெளிப்படையாகவே அமெரிக்காவை விமர்சித்தார். ஆனால், மற்ற இரு ஆளும் வர்க்க கட்சிகளோ சீனாவுடன் ஒத்துழைத்த போதிலும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவில்லை; அந்நாட்டுடனான அரசியல்-பொருளாதார உறவுகளைத் தளர்த்திக் கொள்ளவில்லை; இரஷ்யாவுடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இதையெல்லாம் இம்ரான் கான் செய்தார். அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக இரஷ்யாவும் சீனாவும் கூட்டணிக் கட்டிக் கொண்டு முன்னேறும்போது, அக்கூட்டணியின் பொருத்தமான விசுவாசியாக இம்ரான் கான் இருந்தார். அவரது ஆட்சியை கவிழ்த்துள்ளதன் மூலம் சுவாசிப்பதற்கான அவகாசத்தைப் பெற்றுள்ளது அமெரிக்கா. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அமெரிக்காவையும் ‘அனுசரித்துப் போவார்’ என்று கூறப்படுகிறது.

***

ஆப்கானிஸ்தான்

20 ஆண்டுகாலப் போரைவிடக் கொடுமையான துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது ஆப்கான். அமெரிக்க – நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது; வரலாறு காணாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுவதால் வறுமையும் பட்டினிச் சாவுகளும் கோரத்தாண்டவம் ஆடுகின்றன.

ஆப்கான் “பசி சுனாமி”யை சந்தித்து வருவதாக கூறுகிறது ஐ.நா. பெரும்பாலான குடும்பங்களில் உண்பதற்கோ, சமைப்பதற்கோ எதுவும் இல்லை. தன்னார்வக் குழுக்கள் அளிக்கும் ரொட்டியும், சர்க்கரை இல்லாத தேநீருமே அம்மக்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில், 13,700 பச்சிளங் குழந்தைகள் பட்டினியால் மடிந்திருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆப்கானில் 19.7 மில்லியன் மக்கள், அதாவது 50 சதவீத மக்கள் தொகையினர் பட்டினியால் வாடுகின்றனர். 95 சதவீத ஆப்கானியர்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர்.

கையில் பணம் இல்லாததால், பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்று குடும்பத்தின் உணவுக்கு பணம் திரட்டுகிறார்கள் ஆப்கான் மக்கள். வீதிக்கு வீதி சிறுநீரகத்தை விலைக்கு வாங்கும் மருத்துவக் கூடாரங்களை சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இதனோடு கூட தங்கள் குடும்பத்து பெண் குழந்தைகளை விற்கும் அவலமும் அரங்கேறுகிறது; “ஒரு குழந்தையை விற்றாவது, மற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்கள் தங்கள் குழுந்தைகளை விற்பனை செய்யும் பெற்றோர்கள்.

கடந்த ஆண்டின் மூன்றாவது கால்பகுதியில் மட்டும் சுமார் 5 லட்சம் ஆப்கானியர்கள் வேலையிழந்திருப்பதாகக் கூறுகிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. இந்த ஆண்டின் மத்தியில் அது 7 முதல் 9 இலட்சமாக உயரலாம் என்றும் பெண்களின் வேலைவாய்ப்பு 21 சதவிகிதம் குறையலாம் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இச்சூழல் ஒருபுறம் எனில், மதவாதக் கழிசடைகளான தாலிபான்களின் ஆட்சி பேயாட்சியாக இருக்கிறது. பெண் குழந்தைகள் கல்வி பயிலத் தடை, பெண்கள் கார் ஓட்டக் கூடாது, புர்கா அணியாமாலும் ஆணின் துணையில்லாமலும் வெளியே வரக்கூடாது – என 90களுக்கு பிறகு மீண்டும் கடும் பிற்போக்கு பேயாட்சி தலைவிரித்தாடுகிறது. ஆப்கானைப் பற்றி பேசும் எந்தவொரு முதலாளித்துவ ஊடகங்களும் தாலிபான்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ‘சுவாரசியமான’ பல கட்டுரைகளை எழுதித்தள்ளுகின்றன.

ஆனால், பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவிக்கும் ஆப்கானியர்களின் துயரத்தைப் பற்றியோ, அவர்களின் இந்நிலைக்கு யார் காரணம்? என்பது பற்றியான கேள்விகளுக்குள்ளோ அவர்கள் செல்வதில்லை. ஏனெனில் அதற்குள் சென்றால், இந்த துயரங்களுக்கு காரணமாக இருக்கிற அமெரிக்காவின் மேலாதிக்க வெறி அம்பலப்பட்டுவிடும்.

ஆம்! படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதும் 20 ஆண்டுகாலப் போரைவிட கொடுமையான மறைமுகப் போரை ஆப்கானுக்கு வெளியிலிருந்து நடத்திவருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

***

புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, ஆப்கான் மத்திய வங்கிக்குச் சொந்தமான 7 பில்லியன் டாலர்களை முடக்கி வைத்துள்ளது அமெரிக்கா. ஆப்கானில் பச்சிளங் குழந்தைகளும், சிறுவர்களும் பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் போதும் நிதியை விடுவிக்கவில்லை மேலாதிக்க வெறி கொண்ட பைடன் அரசு. சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளிடம் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 3.5 பில்லியன் டாலர்களை மட்டும் விடுவித்தது. இந்த சொற்ப நிதி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவவில்லை.

தொடர்ச்சியாக ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக இருந்த ஆப்கான், தனக்கென சுயேட்சையான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்ளாத நாடு. 20 ஆண்டுகால உள்நாட்டுப் போர் காலத்தில், அந்நிய நிதி உதவிகள் மட்டுமே ஆப்கான் பொருளாதாரத்தில் பெரும்பங்குவகித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாலிபான்கள் அரசமைப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்நிய நிதி உதவி மட்டுமே ஆப்கானின் ஜி.டி.பி.யில் 42.9 சதவிகிதமாக இருந்தது. அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகு இந்நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுதான் அனைத்து நெருக்கடிக்களுக்கும் அடிப்படை.

2021 – 2024 காலகட்டத்தில் ஆப்கானுக்கு வழங்குவதாக இருந்த 1.2 பில்லியன் யூரோ நிதி உதவியை நிறுத்திவிட்டது ஐரோப்பிய ஒன்றியம். 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை ஆப்கானுக்கு மேம்பாட்டு நிதியாக வழங்கி வந்தது உலக வங்கி, அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் சுமார் 65 பில்லியன் அந்நிய நாடுகளின் நிதி உதவியை பெற்றிருக்கிறது ஆப்கான். இதில் பெரும்பங்கு அமெரிக்காவினுடையது.

அமெரிக்கா உள்ளிட்ட நன்கொடை நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை ஆப்கானின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் பொது சேவைகளை பராமரிப்பதற்காகவும் கொடுத்துக் கொண்டிருந்த நிதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் திணறிவருகிறது தாலிபான் அரசு.

சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கானின் அவசரகால இருப்பாக உள்ள 460 மில்லியன் டாலரை விடுவிக்கக் கோரிய தாலிபான் அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது சர்வதேச நாணய நிதியம். “தாலிபான் அரசை சட்டப்பூர்வமாக அமைந்த அரசாகத் தாங்கள் கருதவில்லை” என்று அதற்கு காரணம் கூறுகிறது.

ஆப்கானிஸ்தான் மீதான அரசியல் – பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக இராணுவ ரீதியான நெருக்கடிகளையும் கொடுத்துவருகிறது அமெரிக்கா. ஆப்கானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில், கடந்த மே மாதத் தொடக்கத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front) என்ற ஆயுதக் குழுவினர் தாலிபான்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இவர்கள் வடக்கு கூட்டணி (Northern Alliance) என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமியக் குடியரசை நோக்கமாகக் கொண்ட பிற தாலிபான் எதிர்ப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய, அமெரிக்காவின் ஆசி பெற்ற புதிய ஆயுதக் குழுவாகும்.

***

ஆப்கானின் மெஸ் அய்னக் பகுதியில் சீன நிறுவனங்கள் அமைத்துள்ள தாமிரச் சுரங்கம்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, இரஷ்யாவும் சீனாவும் உள்நுழைவதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுடன் அரசியல் – பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொள்வதில் இரஷ்யாவும் சீனாவும் தீவிர கவனம் செலுத்துகின்றன.

கடந்த மார்ச் இறுதியில், காபூலில் தாலிபான்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் சீனா, இரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானின் தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கு இக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

மற்றொரு தருணத்தில், சீனாவின் புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை ஆப்கானிஸ்தான் வரை விரிவுப்படுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. தாலிபான் இடைக்கால அரசாங்கத்தின் துணை பிரதமர் முல்லா அப்துல் ஹானி பராதர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி ஆகியோர் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு சீனாவுடன் ஒத்துழைப்பு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கானில் மெஸ் அய்னக் (Mes Aynak) என்ற பகுதியில் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தாமிரத்தை வெட்டி எடுக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது தாலிபான் அரசு. 2008-ஆம் ஆண்டிலேயே அப்போதைய ஹர்மித் கர்சாய் தலைமையிலான அரசால் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாமிரச் சுரங்கம் அமைப்பதற்காக வேலைகளை விரைவுப்படுத்தியிருக்கின்றன சீன நிறுவனங்கள். இத்திட்டத்தின் நிறைவேற்றத்தை மேற்பார்வையிடுவதற்காக, ஷாபுதீன் தில்வார் என்பவரை சுரங்கம் மற்றும் பெட்ரோலியத் துறையின் பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளது, தாலிபான் அரசு.

மேலும் 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சுரங்கப் பணிகளைத் தொடங்குமாறு சீன நிறுவனங்களுடன் கடந்த ஆறு மாதங்களாக காணொளி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2008-இல் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்காக சீன நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு காபூல் வரவிருக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள 19.5 சதவிகித இராயல்டி விதிப்பை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது சீனாவின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இச்சுரங்கம் அமைப்பதன் மூலம் தாலிபான் அரசிற்கு ஆண்டிற்கு 250-300 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். எனவே இச்சுரங்கப் பணிக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதியளிப்பது தாலிபான்கள் தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வதற்கான பொருளாதார அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால், சீன நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

படிக்க : ஜார்க்கண்டில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த மகேந்திரா நிறுவனம்!

மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் நாடுகளும் தற்போதைய இரஷ்ய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலங்களுமான துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்காணிக்கவும் அச்சுறுத்தவும் ஆப்கானில் தனது பிடி தளராமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா. ஆனால், ஆப்கானில் இடைக்கால அரசமைத்துள்ள தாலிபான்கள் இரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்கள்.

இத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானில் இரஷ்யாவும் சீனாவும் மேலாதிக்கம் பெறுவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகும். ஆகவே, இதை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாகவே தாலிபான் அரசு மீது நேரடி மற்றும் மறைமுக நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது அமெரிக்கா.

***

அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது. இவர்களின் மேலாதிக்கப் போட்டிகளுக்கிடையில் பலியாகிக் கொண்டிருப்பதோ அப்பாவி உழைக்கும் மக்கள்தான். இந்தப் பின்னணியில் தங்கள் நாட்டு நெருக்கடிகளை புரிந்துகொள்வதானது, மேலாதிக்கங்களுக்கு எதிராக தெற்காசியப் பிராந்திய உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டியமைப்பதில் முக்கியமானது.

(முற்றும்)

அப்பு

தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

0

25.09.2022

அக்டோபர் 2 : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்!

புமாஇமு கண்டன அறிக்கை !

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதற்கு உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

சாலையின் இடது புறம் செல்ல வேண்டும், சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது, காயம் ஏற்படுத்தக் கூடிய கம்பு, ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது என்ற பல்வேறு விதிமுறைகளை சொல்லி போலீசுத்துறை அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால் நிச்சயம் கலவரத்தை திட்டமிட்டு நடத்துவார்கள். இது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால், தமிழகத்தில் அது ஒரு கருப்பு நாள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்கத்துக்கான பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். முற்போக்கு, புரட்சிகர ஜனநாயக சக்திகள் பலரும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சூத்திரர்கள் – வேசி மக்கள் என்று சொல்லும் மனுதர்மத்தை வைத்து நம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வரும் பார்ப்பன சனாதன கும்பலுக்கு எதிராக இந்து மதத்தைவிட்டு வெளியேறுவோம் என்று சொன்ன ஆ.ராசாவை, மனுதர்மத்தை இழிவாக பேசிவிட்டார் என்று அவருக்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றியது இந்து முன்னணி உள்ளிட்ட காவி பாசிச கும்பல்.

அதில் ஒரு பகுதியில் இந்து முன்னணியின் கடை அடைப்பு நாடகத்திற்கு ஒத்துழைக்காத முஸ்லீம்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கடைகளையும் வீடுகளையும் அடித்து நொறுக்கினார்கள் என்பது சமீபத்தில் நாம் கண்க்கூடாக பார்த்தோம்!

ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மலையளவு விநாயகர் சிலைகளை வைத்து முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை நடத்துவார்கள். இந்த காவி பாசிச கும்பலை தமிழகத்தில் பேரணி நடத்துவதன் நோக்கம் தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தாக மாற்றும் முயற்சியின் முதல் படியே. இதற்கு ஒருபோதும் முற்போக்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது! சாதி, மதப் பிரிவினைகளை ஏற்படுத்தி உழைக்கும் மக்களை மோதவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க துடிக்கும் இந்துமதவெறி பாசிச கும்பலை விரட்டியடிப்போம்!


இவண்,
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.

‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?

‘நீட் விலக்கு மசோதா’ ஓட்டுக்கட்சிகளின் நீட் தேர்வு விலக்கு நாடகமும் நீட் தேர்வை விலக்குவதற்கான உண்மையான வழியும்..

செப்டம்பர் 22-இல் இருந்து (22-09-2022) மருத்துவப் படிப்புகளில் (MBBS & BDS) சேர்வதற்கான விண்ணப்பமும் தொடங்கப்பட்டுவிட்டது.

அதிமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருகிறோம் என்று சொல்லியே பா.ஜ.க.வின் ஒரு கிளைக்கழகமாகவே இருந்து தங்களுடைய ஆட்சியை நடத்திவிட்டு சென்றது. அதற்கு அடுத்த ஆட்சிக்கு வந்த திமுகவோ, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தருவோம் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது.

நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தொடங்கி, நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாகியே வருகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த மாணவி லக் ஷனா ஸ்வேதா என்பவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

படிக்க : நீட் என்னும் அயோக்கியத்தனம்

இந்த தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது என்பதை பின்வரும் நீட் தேர்வின் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

***

  • கடந்த 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்துத் தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள், நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். ஆனால், மூன்றாவது நீதிபதியாகிய ஏ.ஆர்.தவே அவர்கள் மட்டும் நீட் தேர்வு தேவை எனத் தீர்ப்பளித்தார்.
  • பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வு குறித்து மறுசீராய்வு மனு ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவைப் பாரதிய ஜனதா அரசு அமைத்தது. நீட் தேர்வு குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கிவிட்டது.
  • நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்பு தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே அவர்கள், இந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றது சரியல்ல என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. பிறகு, ஒன்றிய அரசின் நல்வாழ்வுத் துறை சார்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழுவுக்கு நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது.
  • 08/03/2016 அன்று அக்குழு நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்தது. இது நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92 ஆவது அறிக்கையாகும். இந்திய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மிகத் தெளிவாக நிலைக்குழு பரிந்துரைத்தது.
  • பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுந்தபோது, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02/05/2016 அன்று (Modern Dental College Case) பின்வருமாறு தீர்ப்பு வழங்கியது.
  • “அரசமைப்புச் சாசனத்தின் படி மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலச் சட்டப் பேரவைக்கும் உண்டு ஒன்றிய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது” என அத்தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிட்டது.
  • இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு, அறமற்ற முறையில் ஒன்றிய பா.ஜ.க அரசால் திணிக்கப்பட்டது. இவ்வகையில் நீட் தேர்வு “முதல் கோணல், முற்றிலும் கோணல்” என்பது தெளிவு.
  • மேலும் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியானது, நெருக்கடி காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒத்திசைவு பட்டியல் என்றால் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்துதான் கல்வி பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.
  • ஆனால் அப்படிப்பட்ட ஜனநாயக முறை இருக்கிறதா என்றால்? அப்படியெல்லாம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாநிலங்களின் கல்வி உரிமையைப் புதுதில்லியில் இருக்கக் கூடியவர்கள் தீர்மானிப்பது, ஜனநாயகத்துக்கு எதிரானது.
  • பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்கின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் அவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாய சூழல் நிலவுகிறது. இது அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். படிப்பது ஒன்றில், தேர்வு எழுதுவது மற்றொன்றில் என்ற கேவலமான சூழல் எந்த நாட்டிலும் இல்லை.
  • இவ்வகையான நியாயமற்ற அணுகுமுறையால், 2017 ஆம் ஆண்டில் அனிதாவின் உயிர் காவு வாங்கப்பட்டது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்துச் சாதனை படைத்த அனிதா, தனக்குத் தொடர்பில்லாத சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை.
  • அனிதாவைப்போல் பல மாணவர்கள் இன்று வரை நீட் தேர்வால் இறந்து வருகின்றனர். மாநிலப் பாடத்திட்டத்தில் மிகச்சிறந்த சாதனைகள் படைக்கும் மாணவர்கள், நீட் தேர்வால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வது இன்றும் தொடர் கதையாகி வருவது மிகப்பெரும் அவலம். நீட் தேர்வு என்பது மாணவர்கள் மீது ஏவப்பட்ட கொடூரமான வன்முறையாகும்.
  • அனிதாவின் அநியாயமான மரணத்திற்கு நீதிகேட்டுத் தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
  • மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதற்குத் தனிப்பயிற்சி கட்டாயம் தேவை. அப்படிப்பட்ட தனிப் பயிற்சி பெறுவதற்குப் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்கள் கொட்டி அழ வேண்டியுள்ளது. ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தனிப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று ஆயத்தமானால் தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். கிராமங்களிலுள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களால் இலட்சக்கணக்கான ரூபாய்களை நீட் தனிப்பயிற்சிக்காகச் செலுத்தவே முடியாது.
  • நீட்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அப்படி அதிக மதிப்பெண் பெறுவதற்காகத்தான் தனிப்பயிற்சி என்ற தூண்டிலை வணிக நிறுவனங்கள் கையில் வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. நீட் பயிற்சி என்பது பணம் கொட்டும் வணிகம் ஆகிவிட்டது.
  • பள்ளியில் படிப்பது தேவையில்லாத ஆணி நீங்கள் நேரடியாக மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேருங்கள் என்ற விளம்பரத்தை மட்டும்தான் கோச்சிங் சென்டர்கள் இன்னும் செய்யவில்லை. கூடிய விரைவில் அதையும் செய்து விடுவார்கள் போல.

  • இப்படிப்பட்ட தனிப்பயிற்சி வணிகத்தின் ஆண்டு வருமானம் பல கோடியைத் தாண்டும் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரும் வணிக நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. Allen, Aakash, FIITJEE, BYJUS போன்ற பெரும் வணிக நிறுவனங்கள், இத்துறையில் ஆண்டுதோறும் கோடிகளை அள்ளுகின்றன. நீட் தேர்வு என்பது முற்றிலும் வணிகமயத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருப்பவர்களுக்கு தான் மருத்துவக்கல்வி என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. ஏழைகள் மருத்துவ படிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
  • கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பா.ஜ.க தலைமையிலான அரசு.
  • தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கு அன்றைய அ.தி.மு.க அரசு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்த மசோதாவின் நிலையே 12 மாதங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது.
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசு மூலமாகதான் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுதான் கல்லூரிகளுக்கான அனைத்து வித செலவுகளையும் செய்து வருகிறது.
  • 100 சதவீத இடங்களை நிரப்புவதைப் பற்றிய முடிவை எடுப்பதற்கு கூட மாநில அரசுக்கு உரிமை உண்டு.
  • ஆனால் வெறும் 7.5% இட ஒதுக்கீடுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய அநீதி. இந்த 7.5% இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்ததே நாங்கள்தான் என்று பீத்திக் கொள்கிறது அடிமை அ.தி.மு.க.
  • அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க.வானது, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், இந்த நீட் தேர்வு காரணமாகச் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழு அமைத்தது. அந்த குழுவும் ஆய்வு நடத்தி, பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. அந்த கருத்துக்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அரசுக்குத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நீட் தேர்வு பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தைக் குறைத்துள்ளது என்றும், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தைப் போல, மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
  • தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • இதனிடையே, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
  • ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பின் ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினார். தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக சட்டப்பேரவை தலைவருக்குத் திருப்பி அனுப்பினார்.
  • இதனையடுத்து, நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாகச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
  • இதன்படி, பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • கடைசியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஆளுநர் மாளிகையில் இருந்து கிடைத்துள்ளது.
  • தற்போது வரை 7 மாதங்கள் ஆகியும் நீட் விலக்கு மசோதா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

***

அ.தி.மு.க நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தரவில்லை என்று சொல்லிவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருவோம் என்று சொல்லிய தி.மு.க.வாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தர முடியவில்லை.

இதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கும் குறுகிய அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் அதிக அதிகாரமும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். திமுக ஆட்சி முடிந்து ஒருவேளை வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்பது அனுபவ உண்மையாக உள்ளது.

படிக்க : கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

ஏனென்றால் நீட் என்பது பல ஆயிரம் கோடிகளை முதலாளிகளுக்கு வாரி வழங்கும் வணிகமாகும். இப்படி இலாபம் தரும் ஒரு வணிகத்தை விட்டுக் கொடுப்பது என்பது முதலாளிகளுடைய கனவிலும் அவர்கள் நினைத்து பார்க்க முடியாதது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்பை மட்டுமல்ல ஒட்டு மொத்த மருத்துவத்துறையையும் தனியார்மயமாக்குவதில் பங்குபெறும் ஒரு முக்கிய ஆயுதமாகும். எனவே இந்த தங்க முட்டையிடும் வாத்தை என்ன நேர்ந்தாலும் பாதுகாத்தாக வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள்.

இந்திய அரசோ இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் கை அசைவிற்கு வாலாட்டும் ஒரு செல்லப்பிராணி. செல்லப்பிராணி என்று இருந்தால், தன் எஜமானருக்கு எதுவும் நேராமல் பாதுகாக்கத் தானே செய்யும். எனவே இந்திய ஆளும் வர்க்கத்தினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நீட் தேர்வை தக்க வைத்துக் கொள்வார்கள்; அதனை எதிர்த்து  இந்த அமைப்பிற்குள் பதவியை வைத்திருக்கும் எவராலும் செயல்பட முடியாது.

“நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம்” என்று கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஓட்டு கட்சிகளின் தேர்தல் நாடகமே. செல்லாக்காசான நீட் விலக்கு மசோதா சாதித்து என்வென்றால் நீட் தேர்வை தி.மு.க போன்ற ஓட்டுக்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நிரூபித்தது தான்.

ஆக, தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!

அய்ன்ஸ்டைன்

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற ஆட்சி வரலாற்றில், இதுவரை எந்த பிரதமர்களும் தங்களது ஐந்தாண்டு கால ஆட்சியினை முழுமையாக நிறைவுசெய்தது கிடையாது. இதுவரை பாகிஸ்தானை ஆட்சி செய்த 29 பிரதமர்களுள் 18 பிரதமர்கள் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளும் கூட்டணிக்குள்ளான முரண்பாடுகள் மற்றும் நேரடி இராணுவத் தலையீடுகளின் மூலமாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பிரதமர்கள் அடுத்த தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பாளர்களாகவோ அல்லது எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவோ இடைக்காலமாக நியமிக்கப்பட்டவர்கள்.

எனினும் பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் ஆட்சி பறிக்கப்பட்டவர் இம்ரான் கான் மட்டுமே.

342 நாடாளுமன்ற இருக்கைகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனவே அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் பதவி பறிக்கப்பட்டார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தவிடாமல் அவர் மேற்கொண்ட முயற்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தகர்க்கப்பட்டது.

இம்ரான் கான் மீதான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, பண வீக்கம் – அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு – அந்நிய செலாவணி தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி சூழல், இராணுவத் தளபதி குவாமர் ஜாவீத் பஜ்வா-வுடனான மோதல் போக்கு ஆகியவையே காரணங்களாக கூறப்படுகின்றன.

ஆனால், அமெரிக்க அரசுதான் தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக திட்டமிட்ட சதியை அரங்கேற்றியதாக இம்ரான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு சதியின் மூலம்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததாகவும் இதற்காக பெருமளவில் பணம் வாரியிறைக்கப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியிருந்தார்.

படிக்க : உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

இந்தச் சதியில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளரான டொனால்டு லு என்பவர் ஈடுபட்டிருப்பதாக இம்ரான் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்க தரப்பிலிருந்து தன்னை மிரட்டும் வகையில் இரகசிய கடிதம் ஒன்று வந்ததாக கூறினார்.

அமெரிக்கா இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது. “பொதுவாகவே பாகிஸ்தான் மக்களிடம் அமெரிக்கா தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகிறது என்ற கருத்து இருக்கிறது; அதை தன்னுடயை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் இம்ரான்” – என்று வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

பாகிஸ்தான் இராணுவ கும்பலுடனான அமெரிக்காவின் உறவு

தனது தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு, இம்ரான் கான் ஏற்பாடு செய்து நடத்திய மாபெரும் பேரணி.

பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிந்ததிலிருந்து அந்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் நெருங்கிய உறவு இருந்துவருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்தை அமெரிக்கா தன்னுடைய விசுவாச கும்பாலகவே மாற்றிவைத்திருந்தது. இந்த விசுவாச கும்பல்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக அரசாங்கத்தில் தலையிட்டு, பல்வேறு ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது.

பனிப்போர் காலத்தில், இரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு தெற்காசியாவில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய அடியாளாக இருந்தது பாகிஸ்தான். 1947-லிருந்து இதுவரை 72 பில்லியனுக்கும் அதிகமாக பாகிஸ்தானுக்கு நிதிவழங்கியுள்ளது அமெரிக்கா.

1979 முதல் 89 வரையில் ஆப்கானில் சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற அரசைத் தூக்கியெறிவதற்காக, பாகிஸ்தானுடன் கூட்டுவைத்துக்கொண்டுதான் முஜாகிதீன்களை வளர்த்துவிட்டது அமெரிக்கா. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் பல்வேறு இராணுவ உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர், 2001 செப்டம்பர் இரட்டைக்கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவுடனான உறவு வலுப்பட்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில், ஆப்கான் மீது அமெரிக்க – நேட்டோ படைகள் படையெடுத்தது தொடங்கி (2001), கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் படைவிலக்கிக் கொள்ளப்பட்டது வரையில், 32.5 பில்லியனுக்கும் அதிகமான சிவில் மற்றும் இராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இப்போரில், பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி பெறும் நாடுகளின் பட்டியலின் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் மேற்கூறிய சிவில் மற்றும் இராணுவ உதவிகள் எவையும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுவரவில்லை; அந்நாட்டை அமெரிக்கா தனது மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு உகந்த வகையில், தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்திவந்தது. பாகிஸ்தானின் இராணுவ மற்றும் உளவுத்துறை உதவி தேவையில்லாமல் போகும்போதெல்லாம் நிதியுதவியை அமெரிக்க நிறுத்தியிருக்கிறது.

சான்றாக, 1989-இல் முஜாகிதீன்களோடு நடத்திய போரில் பின்னடைவைச் சந்தித்து சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வெளியேறிய பின்னர், ஓராண்டு கழித்து பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா. அதன் பிறகு பல ஆண்டுகள் இராணுவ நிதி உதவி வழங்கப்படவில்லை.

2001 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மீண்டும் பாகிஸ்தான் தயவு தேவைப்பட்டது. மீண்டும் இராணுவ உதவி வழங்கப்பட்டது.

ஆனால், 2011 ஆண்டிற்கு பின்பு, இந்த இராணுவ நிதி உதவியும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில், டிரம்ப் ஆட்சியின்போது, இந்த இராணுவ நிதி உதவிகள் மொத்தமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய அப்போதைய அதிபர் டிரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர் உதவிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கியுள்ளதாகவும், உண்மையில் அந்நாடு அமெரிக்காவுக்கு வஞ்சகம் புரிந்துவிட்டு, பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழ்வதாகவும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரமுற்ற அப்போதைய பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா அசீஃப், ஆப்கானில் தனது சொந்த தோல்வியிலிருந்து திசைதிருப்புவதற்காகவே டிரம்ப் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவதாகத் தெரிவித்திருந்தார். அதைப் போலவே 2020 ஆம் ஆண்டு பிப்ரவரில் போடப்பட்ட தோஹா ஒப்பந்தம் மூலம் அமெரிக்க-நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இவ்வாறு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவில் விரிசல் தோன்றியிருக்கும் போதுதான், 2018 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

இம்ரான் கான்: இரஷ்ய – சீனக் கூட்டணியின் உறுதியான கூட்டாளி

இரஷ்ய-சீனக் கூட்டணியானது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேசச் சூழலில், அந்நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவு வலுப்பெற்றது; இரஷ்ய-சீனக் கூட்டணியின் உறுதியான கூட்டாளியாக இருந்தார் இம்ரான் கான்.

சீன பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி.

2015 ஆம் ஆண்டு தொடங்கி, பாகிஸ்தானில் சீனாவின் புதிய பட்டுப்பாதைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சீன – பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டம் (China Pakistan Economic Corridor) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்திலிருந்து மேற்கு சீனா வரை எரிவாயு எண்ணெய் குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இத்திட்டத்திற்காக 62 பில்லியன் டாலர்கள் வரை சீனா முதலீடு செய்திருக்கிறது.

இம்ரான் ஆட்சியில், கடந்த பிப்ரவரி மாதம் சீன – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத்தின் கீழ் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான தொழில் கூட்டு ஒப்பந்தம் (Industrial Co-operation Agreement) கையெழுத்தானது. இது அத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்று அழைக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இரஷ்ய இராணுவம் பயிற்சியளிக்கத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு இரஷ்யாவின் உதவியுடன் பாகிஸ்தானின் வடக்கிலுள்ள லாகூர் நகரையும் தெற்கேயுள்ள கராச்சி நகரையும் எரிவாயுக் குழாய் மூலம் இணைக்கும் 1,100 கி.மீ நீளம் கொண்ட “பாகிஸ்தான் எரிவாயுக் குழாய் திட்டம்” (Pakistan Stream Gas Pipeline Project) போடப்பட்டது.

டாலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு நாணயங்களில் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உதவிகளை மேற்கொள்ள இருதரப்பு நாணய பரிமாற்று முறை (Bilateral Currency Swap) இரஷ்யா மற்றும் சீனாவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு, சீனாவுடன் இத்தகைய நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது பாகிஸ்தான். இம்ரான் ஆட்சிக்கு வந்த 2018 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு 475 பில்லியனாக இருந்த இவ்வொப்பந்தத்தின் கீழான நாணயப் பரிமாற்றம், 2021 ஆம் ஆண்டு 731.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதன் மூலம் டாலரின் ஆதிக்கம் கேள்விக்குள்ளானது.

2021 ஆண்டு டிசம்பரில், இரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக அமெரிக்காவின் ஒருங்கிணைப்பில் ஜனநாயகத்துக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்காக அவ்விரு நாடுகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் இம்ரான் கான் அம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், இரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுக்கும் சூழல் நிலவியபோது, இம்ரான் கான் இரஷ்யாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டம் வைத்திருந்தார். இதை இரத்து செய்யச் சொல்லி அமெரிக்கா வலியுறுத்தியதை இம்ரான் புறக்கணித்தார். அவர் மாஸ்கோவில் இருந்தபோதே, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுத்தது.

ஐ.நா.வில் இரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்டு 22 நாடுகள் பாகிஸ்தானுக்கு கூட்டுக் கடிதம் எழுதின. “மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் அடிமையில்லை” என்று அதைக் காட்டமாக விமர்சித்து ஒதுக்கினார் இம்ரான். இரஷ்ய எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்தது பாகிஸ்தான்.

முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபயஸ் அகமது மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா

இரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியபோது, “இந்தியா எந்த வல்லாதிக்க நாடுகளுக்கும் அடிபணியாத ‘இறையாண்மையுள்ள’ நாடு” என்று இந்தியாவைப் புகழ்வதுபோல, மறைமுகமாக அமெரிக்காவைத் தாக்கினார் இம்ரான்.

பாகிஸ்தானின் சுதந்திர வெளியுறவுக் கொள்கைகளை பொறுக்கமாட்டாமல்தான் அமெரிக்கா தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துள்ளது என குற்றஞ்சாட்டினார் இம்ரான் கான். இதையே “தனது கீழ்படியாமைக்காகத்தான் இம்ரான் கான் தண்டிக்கப்பட்டுள்ளார்” – என அமெரிக்காவை மறைமுகமாக சாடினார் இரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர்.

ஆளும் வர்க்கத்தில் பிளவும் ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவக் கும்பலின் தலையீடும்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வாவுடன் இம்ரான் கான் மோதல் போக்கைக் கடைபிடித்தது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. பல்வேறு முதலாளித்துவப் பத்திரிகைகளுமே இதுகுறித்து வெளிப்படையாக எழுதிவிட்டன.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.இன் தலைவர் ஃபயஸ் அகமதை மாற்றிவிட்டு, அதன் புதிய தலைவராக ஜெனரல் ஹகீம் அஞ்சுமை நியமித்தார் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா. அரசாங்கத்தின் சார்பாக இதனை அங்கீகரிக்க வேண்டிய இம்ரான் கான் மூன்று வாரங்கள் அறிவிப்பை வெளியிடாமல் தாமதப்படுத்தினார். ஏனெனில், ஃபயஸ் அகமது இம்ரான் கானுக்கு நெருக்கமானவராக இருந்தார்.

இம்ரான் கானின் அரசியல் எதிரி நவாப் ஷரீஃபை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்ததிலும் இம்ரான் கான் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் அவரது பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை அப்பொறுப்பிலேயே நீட்டிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார்.

இராணுவத்தின் உயரடுக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு கும்பலுக்கும் இம்ரான் கானை ஆதரிக்கும் இரஷ்ய-சீன ஆதரவு இராணுவக் கும்பலுக்கும் இடையிலான முறுகல் நிலையின் வெளிப்பாடாகவே இச்சம்பவம் வெளிப்பட்டது. இதில் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா, அமெரிக்க ஆதரவுப் பிரிவை பிரதிநிதித்துவப் படுத்தினார்.

இம்ரான் கானின் தொடர்ச்சியான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை இராணுவத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு பிரிவு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியமான காரணம். இதனால் அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு பிரிவு இராணுவக் கும்பல், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டும் எதிர்கட்சிகளுடன் கூட்டுசேர்ந்தும் மறைமுகமாக இம்ரான் கானை வீழ்த்தியது. இதை அமெரிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் இதழே வேறு வார்த்தையில் ஒப்புக்கொள்கிறது.

படிக்க : நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

இரஷ்ய-சீன ஆதரவு நிலைப்பாடு எடுத்து, அமெரிக்கா நடத்திய ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டை புறக்கணித்தற்காக, இம்ரான் கானை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் பாகிஸ்தான் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் கம்ரான் கான். சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சுட்டிக்காட்டி, இம்ரான் கான் பெய்ஜிங்கிடம் இஸ்லாமாபாத்தை அடகுவைத்துவிட்டார் என்று அவர் பேசினார்.

“இராணுவ உயரடுக்கிலிருந்து கையசைக்காமல், ஒரு பத்திரிகையாளர் பிரதமரை விமர்சித்து இவ்வாறு பேச முடியாது” என்று எழுதியது நியூயார்க் டைம்ஸ். மேலும் “பாகிஸ்தானின் இராணுவத் தளபதிகள் பொதுவாகவே ஜனநாயகத்தின் மீது சிறிதளவு அன்பு கொண்டவர்கள் அல்லது அமெரிக்கா விசயத்தில் நேச சக்திகள்” எனவும் எழுதியது.

‘அந்நிய சதி’ என்று நேரடியாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டிய இம்ரான் கான், மறந்தும் கூட பாகிஸ்தானின் இராணுவத்தை நேரடியாக குற்றம் சாட்ட மறுத்தார். அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு கைக்கூலி வேலை பார்க்கிற இராணுவத்தின் யோக்கியதை அம்பலப்படுத்தப்பட்டால், உழைக்கும் மக்களிடையே அது ஏற்படுத்தும் கோபம் தனது ஆதாரத்தளமான இரஷ்ய-சீன ஆதரவு கும்பலுக்கும் சேர்த்து பிரச்சினையை உண்டு பண்ணும் என்று எண்ணினார் இம்ரான்.

அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் கேடான நடவடிக்கைகள்தான் தாம் வெளியேற்றப்படுவதற்கு காரணம் என மறைமுகமாக குவாமர் ஜாவித் பாஜ்வாவை விமர்சித்த இம்ரான் கான்; அதேநேரம் நான் அந்த நிறுவனத்தை குற்றம்சொல்லவில்லை, அதிலுள்ள ஒருசிலர்தான் பிரச்சினை என்றார்.

(தொடரும்…)


அப்பு

தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ

.ராசா சொன்னதில் என்ன தவறு! ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று பாடத்தில் வருகிறது. இதை சொன்னால் கைது பன்னுவீங்களா.. தற்போது ஆ.ராசா சொன்னது என்ன? ஒரு பைத்தியக்காரன் ஒன்னும் ஒன்னும் மூனு என்று எழுதி வைத்துள்ளான் ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று சொன்னார்.

இந்துக்களை வேசி மகன் என்று அவர் சொன்னாறா? அவர் சொன்னது என்ன? இந்துக்களாக இருக்கும் வரை தீண்டத்தகாதவன் என்ற இந்த இழிவை நாம் சுமந்து கொண்டுதான் திரியவேண்டும் என்று சொன்னார், இதில் என்ன தவறு இருக்கிறது. மனு தர்மத்தில் இப்படி இல்லையா? மனுதர்மத்தில் என்ன இருக்கிறது என்று விவாதிப்போமா…!

மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

த்தரப் பிரதேசத்தில் போலீசுத்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வேன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தலைநகர் லக்னோவில் நடந்தது.

இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் “உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் கலவரமும், ரவுடிகளின் அராஜகமுமாகதான் இருந்தது. ரவுடிகளின் அட்டகாசம் மாநிலத்தில் அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது சட்ட ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன” என்றும்,

“தற்போது உத்தரப்பிரதேசத்தில் பின்பற்றப்படும் சட்ட ஒழுங்கு நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. முன்பு போல் இப்போது இல்லை. சட்ட ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியின் போது குற்றவாளிகளை தப்ப விடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இங்கு சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்காக போலீசுத்துறையை நவீனமயமாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.

படிக்க : உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் சட்ட ஒழுங்கு

உ.பி.யில் 2017-இல் ஆட்சிக்கு வந்த யோகி ஆதித்யநாத் தன் ஆட்சியில் குற்றம் குறைவாக உள்ளது அதனை மேலும் குற்றம் இல்லாத, சமூக சீரழிவு இல்லாத, குற்றவாளிகள் தப்பித்து ஓடாத நிலைக்கு உயர்த்தும் அளவுக்கு போலீசித்துறை நவீனமாக்கப்படும் என்று பிதற்றுகிறார், ஆனால் உண்மை என்னவென்றால் யோகி ஆட்சிக்கு வந்தவுடன் தான் அதிக குற்றமும், அதிக சமூக சீரழிவும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்ற தனது பாசிச கொள்கைக்காக மத கலவரங்களை தூண்டிவிடுவது, முஸ்லீம்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்ற பிம்பத்தை மக்களிடம் பரப்பிவிடுவது, தாழ்த்தப்பட்டவர்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு நாட்டையே சீரழித்து கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முஸ்லீம் மக்கள் தங்கள் இறை தூதராக கருதும் நபிகள் நாயகத்தை அவதூராக பேசியவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிய முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்தி கொண்டது பாசிச யோகி அரசு.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பட்டியலிலும் இந்த பாசிஸ்ட் யோகி ஆளும் உ.பி. தான் முதலிடம் பிடித்திருக்கிறது.

2021-இல் 24 கோடி பேரோடு, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசம் 56 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளுடன் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் கடந்த செப் 16 அன்று கூட உ.பி.யில் உள்ள லக்கீம்பூரில் தாழ்த்தப்பட்ட 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கொண்டுதான் வருகிறது.

ரௌடிகளையும், குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களை தப்பிக்க விட மாட்டோம் என்று போலீசுத்துறையை நவீனமாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறோம் என்று சொல்கிறார் யோகி. ஆனால் பெரும்பாலான ரௌடிகளையும், குற்றவாளிகளையும் தனது கட்சிக்குள்ளேயே வைத்திருப்பது மட்டுமின்றி முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மீதும் தாக்குதல் நடத்த புதிதாக ரவுடிகளை
உருவாக்குவாதே இந்த பாசிச யோகி அரசுதான்.

படிக்க : உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

ஆக! இந்த பாசிஸ்ட் கூறுவது என்னவென்றால் இந்துத்துவதிற்கு சேவை செய்யும் போலீஸையும் சட்டத்தையும் கொண்டு உழைக்கும் மக்களை ஒடுக்கும்
உ.பி.யின் சட்ட ஒழுங்குதான் இந்த நாட்டிற்கும், உலகிற்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதுதான்.

ஆம்! இன்றைய உண்மையும் கூட அதுதான்! ஏற்கனவே உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.

இந்த பாசிஸ்ட்களின் சட்ட ஒழுங்கு என்றுமே உழைக்கும் மக்களாகிய நம்மை பிளவுபடுத்தி ஒடுக்கி சுரண்டுவதையே நோக்கமாக வைத்திருக்கும். எனவே உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றாக சேர்ந்து இந்த மதவெறி ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி.யை வீழ்த்தாமல் நமக்கு வாழ்வில்லை!!!

அகல்யன்

நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

0

நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான `ஹெராயின்’ போதைப் பொருள் பறிமுதல்!

தனியார் துறைமுக அதானிகளும் போதைப் பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான `ஹெராயின்’ என்ற போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் நவசேவா துறைமுகத்துக்கு கடத்தி வரப்படுவதாக டெல்லி போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததின் பேரில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் முந்திரா துறைமுகம் உட்பட பல தனியார் துறைமுகங்களில் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நமது நாட்டின் பல இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த தனியார் துறைமுகங்களும் போதைப் பொருள் மாஃபியாக்களும் அடங்கிய கூட்டணி. அதானியின் மீதோ முந்த்ரா துறைமுகத்தின் மீதோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது மோடி அரசின் கீழ் கூடுதல் சிறப்பு.

படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

அதானியின் முந்த்ரா துறைமுகம் போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரம்!

போதைப்பொருள் கடத்தல் தொழிலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது குஜராத். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அங்கே 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பிடிபட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதிகூட அங்கே ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் சிக்கியிருக்கிறது.

ஆப்கன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து குஜராத்துக்குக் கடத்திவரப்படும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படும் முக்கிய இடமாக இருப்பது அதானியின் முந்த்ரா துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள்தான். கடந்த ஜூலையில் முந்த்ரா துறைமுகம் அருகே சுமார் 376.5 கோடி ரூபாய் மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஜவுளி சரக்குப் பெட்டகம் என்று மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு கன்டெய்னரை சோதித்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சரக்கு இருந்தது; அதுவும் ஜவுளி அல்ல…. போதைப்பொருள் மூட்டைகள்!

கடந்த ஆண்டு, செப்டம்பரில் சுமார் 21,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் இதே துறைமுகத்தில் பிடிபட்டிருக்கிறது. அதே ஆண்டு, ஜூன் மாதம் இரானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பித்து வெளியில் சென்றிருக்கிறது. இதை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து ஆண்டுகளில், குஜராத்தில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. இது குஜராத்தின் ஆண்டு பட்ஜெட்டைவிட அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகம், போதைப்பொருள் கடத்திக்கொண்டு வர பிரதான நுழைவு வாயிலாக இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான போதைப்பொருளில் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானிலிருந்தே சப்ளையாகிறது. இப்படி ஆப்கனில் உற்பத்தியாகும் போதைப்பொருள்களை, இலங்கைக்குக் கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கடத்துவதைத்தான் கடத்தல்காரர்கள் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவந்தது இலங்கை அரசு. இதனால் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்தியாவின் மீது அதிகமாக கவனத்தை குவிக்க ஆரம்பித்து விட்டனர் போதைப் பொருள் மாஃபியாக்கள்.

இந்த மாஃபியாக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரானிலிருந்து போதைப்பொருளை நேரடியாக இந்தியாவுக்குள் கடத்திக்கொண்டு வந்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பிரித்து அனுப்புகின்றனர். குஜராத்துக்கு கப்பல்கள் மூலம் மட்டுமல்ல, நள்ளிரவு நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து படகு வழியாக போதைப்பொருள் கடத்திவரப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்.

இப்படி போதைப்பொருள் சர்ச்சையில் தொடர்ச்சியாக சிக்கியதையடுத்து, ஆப்கன், இரான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாள மாட்டோம் என்று முந்த்ரா துறைமுகம் தெரிவித்தது. இருந்தாலும், போதைப்பொருளை இரானிலிருந்து அனுப்பாமல் துபாயிலிருந்து அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர் மாஃபியாக்கள்.

மோடியின் குஜராத்திலோ போதைப் பொருள் தொழிற்சாலைகள் குஜராத் உள்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

படிக்க : பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்

இயல்பாகவே தனியார் துறைமுகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு தனியார் முதலாளிகளின் கையில் குவிந்திருக்கிறது. அதிலும் அதானி தான் ஒட்டுமொத்த துறைமுகங்களிலும் அதிகமான துறைமுகங்கள் வைத்துள்ள மிகப்பெரிய கார்ப்பரேட். இங்கு இவர்கள் வைத்தது தான் சட்டம் எனும் போது போதைப் பொருள்களை கடத்தி வருவதும் இங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்புவதும் இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதிப்பதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

முந்த்ரா துறைமுகத்தின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது ஒட்டுமொத்த அரசமைப்பின் இலட்சணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக போதை பொருள்களை பிடித்து விட்டு கணக்கு காட்டும் அதிகாரிகளால் அதானியை இதுவரை ஒன்றும் கிழிக்க முடியவில்லை.

உலக அளவில் இரண்டாவது பணக்காரராக மாறி இருக்கும் அதானியின் சொத்தில் நமது நாட்டு இளைஞர்களின் பல பின்தங்கிய ஏழை நாடுகளின் இளைஞர்களின் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் மோடிஅரசுதான் பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகங்களை அதானிகளுக்கு விற்று இன்று அதானிகளை உலக பணக்காரர் பட்டியலில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் நமது மாணவர்களையும் இளைஞர்களையும் போதையில் ஆழ்த்தி வேலையில்லா திண்டாட்டம்,கல்வி பறிக்கப்படுவது, பசி, பட்டினி போன்ற எதைப் பற்றியும் கேள்வி எழுப்ப விடாமல் மழுங்கடித்து கொண்டுள்ளனர்.

போதையை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த காவி கார்ப்பரேட் பாசிச கும்பலையும் சேர்த்தே ஒழித்தாக வேண்டும்.

ரவி

நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்

கழிவறை இருக்கை – நூல் அறிமுகம்:

சிக்கு உணவும், வேட்கைக்கு தண்ணீரும், கண்ணுக்கு உறக்கமும் கட்டாயம் தேவை என்பது போலவே பாலியல் உறவான கலவியும் இருபாலருக்கும் அடிப்படையான தேவை. ஆனால் பெரும்பாலும் உடலுறவின்போது ஆண் மட்டுமே முழுமை அடைகிறான். பெண்ணைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை என்பதை விட அறியாமையிலேயே இருக்கிறான். பெண்களும் இதனைப் பற்றி ஆண்களிடம் கூறுவதில்லை. இதனால் ஆண் கொடுக்கப்படுபவனாகவும், பெண் ஏற்கப்படுபவளாகவும் இருக்கிறாள்.  இதற்கு காரணம் கற்பு, ஒழுக்கம், பத்தினி, குடும்ப குத்துவிளக்கு என்று பெண்ணை பேச விடாமல் செய்ததுதான்.

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணை தன் உடைமையாகவும், போகப் பொருளாகவும் பார்ப்பதன் விளைவாகவே பெண்களுக்கு எதிரான பல பிரச்சினைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. கற்பு என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? அப்படி கற்பு என்ற ஒன்று இருந்தால் ஏன் அது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டும்? அந்த கற்பை ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

காமம் என்ற வார்த்தை ஏன் பேசக் கூடாத வார்த்தையாக உள்ளது? காமத்தை பற்றி ஏன் பொதுவெளியில் யாரும் பேசுவதில்லை? காதலும் காமமும் ஏன் குழப்பிக் கொள்ளப்படுகிறது? காதல் எப்படிப்பட்டது? பாலியல் கல்வி ஏன் அவசியம்? காமத்தில் உச்சம் என்றால் என்ன? சுய இன்பம் சரியா? தவறா?

இப்புத்தகம் காதல், காமம், சுய இன்பம், திருமணம், நட்பு, ரகசியம், ஆண் அகந்தை, பாலியல் கல்வி, சமூக கட்டமைப்புகள், நல்லுறவிற்கான சில விதிமுறைகள், காதல் மற்றும் காமம் குறித்தான கட்டுக் கதைகள் போன்ற அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகளை 32 கட்டுரைகளாக தொகுத்துள்ளது.

படிக்க : இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு

காமம் என்ற வார்த்தை தகாத வார்த்தை அல்ல. காமம் தான் மனிதர்களை உலகிற்கு அளித்துள்ளது. காமத்தில் இருந்து பிறந்தவை எல்லாம் புனிதமானவை என்றால், காமம் மட்டும் எப்படி அசுத்தமாக முடியும். காமம் குறித்த உரையாடல்கள் வெளிப்படையாக இருக்குமேயானால் நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்புணர்வுகளை, பாலியல் தொந்தரவுகளை குறைக்கவும் வருங்கால சந்ததியினரை இம்மாதிரியான உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளிலிருந்து காக்கவும் முடியும்.

மாற்றங்கள் சிறிது சிறிதாக அடைந்து வந்தாலும் இச்சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே உள்ளது. பெண்ணை ஒரு பொருளாக, தன்னுடைய உடமையாகவே பார்க்கின்றனர். பெரிய பெரிய கவிஞர்களும், புலவர்களும் பெண்களை பூ, நிலம், ஆறு, நிலவு போன்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அவளை ஒரு உடைமை என்றே வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு ஒப்பிடுவதால் நம்மை அறியாமலே நமக்குள் பெண்ணே ஒரு பொருளாக பார்க்கும் எண்ணம் தோன்றிவிடுகிறது.

காமத்தை பற்றி பொதுவெளியில் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஆண் காமத்தை பற்றி பேசினால் பெரிதாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் பெண் காமத்தை பற்றி பேசினால் (சாதாரணமான அடிப்படை விஷயமாக இருந்தால் கூட) அவளுக்கு நடத்தை கெட்டவள் என்று பட்டம் சூட்டப்படுகிறது. மேலும் அவள்  யாருடன் வேண்டுமானாலும் படுக்கைக்கு செல்வாள் என்ற எண்ணம் வந்து விடுகிறது.பெண்களின் நடத்தையில் தான் குடும்ப மானம், கௌரவம் உள்ளது. ஆனால் ஆண் என்ன செய்தாலும் இந்த மானம், கௌரவத்திற்கு குறைவு ஏற்படுவதில்லை.

நம்மில் எத்தனை பேர் காமத்தை பற்றி பேச தயாராக உள்ளோம்? காமம் குறித்தான கல்வி பதின்ம பருவ குழந்தைகளுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. இல்லையேல் காமத்தை பற்றிய புரிதல் இல்லாமல் காமத்தை தவறாக புரிந்து கொள்ளும் சாத்தியம் உண்டு. சில பிள்ளைகள் எப்படியாவது மற்றோருக்கு தெரியாமல் ஓரளவிற்கு புத்தகம் படித்தோ, நண்பர்களுடன் பேசியோ, நீலப்படங்கள் பார்த்தோ, இல்லை இன்னும் கொஞ்சம் தைரியம் இருக்கும் பிள்ளைகள் நேரடியாக கலவியில் ஈடுபட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

பெருவாரியான ஆண்களுக்கு படுக்கையில் பெண் என்பவள் தன்னை போல் உணர்வுகள் கொண்ட ஒரு இணையர் இல்லை. அவனுக்கு தன் விந்துவை உந்தித் தள்ள ஒரு துவாரம் வேண்டும். அதற்காகவே தன் காதலியோ, மனைவியோ பிறவி எடுத்து காத்திருப்பதாக ஒரு எண்ணம். ஆக அவனை பொறுத்தவரை அவன் அமர்ந்து விந்துவை வெளியேற்ற அவள் ஒரு கழிவறை இருக்கை மட்டுமே!

ஓர் ஆண் தன் வேலை முடிந்ததும் களைப்பாகி திரும்பப் படுத்து உறங்க ஆரம்பிக்கும் வேலையில்தான் ஒரு பெண்ணிற்கு கிளர்ச்சியே தொடங்குகிறது. ஆனால் அப்பெண் தனக்கு முழுமை அடையவில்லை என்று கூறினால் ஆணின் கௌரவம் குறைந்துவிட்டதாக எண்ணிவிடுவான். மேலும் அவன் தன் மனைவியை வேறொருவருடன் தொடர்பில் உள்ளால் என்று சந்தேகப்படுவான். ஏக்கத்துடன் படுத்து உறங்குவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை.  இதுதான் ஒரு பெண்ணிற்கு உடலுறவை பொருத்தவரை இந்தத் திருமணம் கொடுக்கும் பரிசு.

காமம் காதலின் உச்சத்தின் வெளிப்பாடாக இருந்தால் தான் அது காமத்திற்கு அழகும் கூட. காமம் என்பது கரைபுரண்டோடும் காதலின் விளைவே! அதுவே காதலின் உச்சகட்ட வெளிப்பாடு‌. காமத்தின் தேவை உடல் ரீதியான கிளர்ச்சியை விட, உணர்வுபூர்வமாகவும், உள்ள ரீதியாகவும் கிளர்ச்சி அடைவதிலேயே அதிகமாக உள்ளது என்று Alain de Botton தன் How To Think More About Sex என்ற நூலில் தெளிவாக கூறியுள்ளார்.

காமத்தில் உச்சம் என்ற நிலை உள்ளது. அது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதால் நிகழ்கிறது. இந்த உச்சநிலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அடைகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் உச்சம் அடைவதில்லை‌. பெண்களுக்கும் உச்சம் உண்டு என்று அறியாமல் உள்ளனர். அறிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உச்சத்தை அடைகின்றனர் ஆண்கள். சில பெண்களும் இந்த உச்சம் பற்றி அறியாமல் உள்ளனர். இப்படி பெண்களின் உடலுறவின் தேவையான உச்சத்தை பற்றி அறியாமலோ அல்லது அறிந்தும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஆண்களாலேயே திருமணம் தாண்டிய உறவுகளில் பல பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்த காதலும் (அன்பும்)
மணல்மேல் எழுப்பிய மாளிகை போன்றது
-Ella Wheeler Wicox

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

நட்பின் அழகே நாம் ஒரு நண்பரை நமக்கே நமக்கானவராக நம் உடமையாக சொந்தம் கொண்டாட மாட்டோம் என்பதே. அவர்களை தனி ஒரு மனிதராக நாம் மதிப்போம். ஆனால் ஒரு கணவன் – மனைவி உறவிலோ, காதலர்கள் உறவிலோ இது பொதுவாக சாத்தியப்படுவதில்லை. நட்பு நம்மை சிறைப்படுத்துவதில்லை, நம்மை விடுதலைப்படுத்துகிறது. நம் மீது எதையும் திணிப்பதில்லை. எனக்கு மட்டுமே நீ என வசனம் பேசுவதில்லை. ஏன், நட்பு நிலைக்க வேண்டும் என்று கூட திணிப்பதில்லை.

நட்பே அடித்தளமாகட்டும் எந்த வகையான உறவு முறையாக இருப்பினும்: காதலர்கள், இணையர்கள், பெற்றோர் – பிள்ளைகள், ஆசிரியர் – மாணவர்கள், உடன் பிறந்தவர்கள், எதுவாக இருப்பினும்.

நம் சமுதாயம் ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பெயரில் ஏனோ ஆணையும் பெண்ணையும் பிரித்து வைக்கும் முயற்சியே மேற்கொண்டு இருக்கிறது. ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை நிறுவ வேண்டும்? ஏன் இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிக் கொண்டிருக்கிறது? இந்த தடுப்புச் சுவரானது இருவருக்கும் இடையே ஒருவரைப் பற்றி இன்னொருத்தருக்கான ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த ஆர்வமானது எதிர்பாலினத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் நிறைய திருட்டுத்தனங்களை செய்யத் தூண்டுகிறது. இயற்கையாக இருபாலரும் ஒருவருடன் ஒருவர் பழகி கலந்து வாழும் சூழ்நிலை இருந்தால் இம்மாதிரியான மனக் குழப்பங்கள் வராதிருக்கும்.

நமக்கு திருமணம் ஆகி குடும்பம் என்று ஆகிவிட்டால் நாம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறோம். வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெறுதலிலே ஒருவரின் கடமையாகாது. ஒரு குடும்பத்தை உருவாக்க பெண்ணுக்கு ஒரு ஆணும், ஆணுக்கு ஒரு பெண்ணும் தேவையாக உள்ளனர். திருமணம் என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடும் இரு தனி மனிதர்களின் சேர்க்கை ஆகும். திருமணம் என்பது ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தி உரிமை கொண்டாடுவதற்கான களம் இல்லை.

என் இணையர் மகிழ்வாக இருக்க வேண்டுமெனில் நான் மகிழ்வாக இருக்க வேண்டும். நான் மகிழ்வாக இருக்க வேண்டுமெனில் என் இணையர் மகிழ்வாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரே கூரையின் கீழ் ஒருவர் மகிழ்வாக இல்லாத போது இன்னொருவர் மட்டும் எப்படி இன்பமாக இருக்க இயலும்?
திருமணங்களில் மேலோட்டமான விஷயங்களான சடங்குகள், தாலி போன்றவையே மனித உணர்வுகளை விட அதிகமாக மதிக்கப்படுகின்றன.

அன்பு என்பது அடுத்தவருக்கான சுதந்திரத்தை கொடுத்து, அவரது வாழ்வை அவர் விருப்பப்படி வாழ செய்வது ஆகும். மற்றவரை உடும்பு போல் பற்றி கொள்ளலாகாது.

கணவன் மனைவி என்பவர் வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும். நட்பு என்பது தம்பதியினர் இடையே நல்ல உறவை ஏற்படுத்தும். உடலுறவு என்பது உடலுறதியானது தான் என்றாலும், அதை முழுமையாக அனுபவிக்க அது மனத்தில் இருந்து தொடங்க வேண்டும். காமம் என்பது உடல் மற்றும் மனத்தின் சேர்க்கையால் உண்டாகும். நம் சமுதாயத்தில் காமம் என்பது இன்றளவும் உடல் ரீதியான ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறது.

காதல் மற்றும் காமம் குறித்து நம்மிடையில் பல கட்டுக் (கற்பனை) கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அவை:

1. ஒருவரின் சமுதாய நிலை, அவரின் உருவத் தோற்றம், அழகு இதை வைத்துத் தான் காதல் வருவதாக!
காதல் என்பது இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அது எப்படி? ஏன்? ஒருவரிடம் தோன்றுகிறது என்பதை ஆராயவோ தெளிவுபடுத்துவோ இயலாது. யாரையும் காதலிக்க வைக்க இயலாது. அது ஒரு உணர்வு அது தானாக தோன்ற வேண்டும்.

2. ஒருவர் நம்மீது சொந்தம் கொண்டாடவில்லையெனில், நம் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை எனில் அவருக்கு நம் மீது அன்பு இல்லை என்று அர்த்தம். உயிரற்ற பொருட்களைத் தான் சொந்தம் கொண்டாட முடியும். உயிருள்ள மனிதர்களை தனி மனிதர்களாக அவருக்கான இடத்தை நாம் அபகரிக்காமல் சுதந்திரமாக இருக்க விடுதலே உண்மையான அன்பாகும்.

3. பெண்ணுடலின் சில பாகங்கள் வெளிப்படும் போது ஆணுக்கு தூண்டுதலை விளைவிக்கும். பெண்ணிற்கு அப்படி ஆணின் உடல் பாகங்கள் வெளிப்படுகையில் தோன்றாது. பெண் பார்வையால் தூண்டப்பட மாட்டாள்.
இது தவறான கருத்து. பெண்ணும் ஒரு மனிதப் பிறவி தானே, அவளுக்கும் உணர்வுகள் உள்ளது. எல்லாம் நம் மூளையில் தான் உள்ளது. இரு பாலருக்கும் மூளை உண்டு தானே?

ஒரு நாள் கூட நகர்வதில்லை எங்காவது ஒரு பாலியல் வன்முறையாவது நடந்த செய்தி கண்ணில் படாமலோ, காதில் கேட்காமலோ. இதில் கொடுமையிலும் கொடுமை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள். இப்படிப்பட்ட வக்கிர செயல்கள் நடப்பதற்கு யார் முக்கிய பொறுப்பு? நாம் தான். தனி மனிதர்களாகவும், மொத்தச் சமூகமாகவும் காரணம். இங்கு காம உணர்வுகளுக்கான சரியான வடிகால்களும் இல்லை, இதற்கான புரிதலும் இல்லை. அதைப்பற்றி யாரும் கண்டு கொள்வதுமில்லை. காமம் பற்றி 12,13 வயதில் புரிதலை ஏற்படுத்தாதது பெற்றோர்களின் தவறே!

ஒரு குழந்தை சாதாரணமாக விளையாடும் போது அடிபட்டால் பெற்றோரிடம் அழுது கொண்டு ஓடி வருவது தானே இயற்கை. ஏன் பாலியல் தொந்தரவுகள் மட்டும் பெற்றோரிடம் குழந்தைகளால் சொல்லப்படுவதில்லை என யாராவது சிந்திக்கிறோமா? குழந்தைகள் சொல்லை நாம் நம்ப மாட்டோம் என அவற்றிற்கு தோன்றி விடுவதே காரணம்.

சிறுவயதிலிருந்தே இரு பாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் (தனித்தனியாக அமர வைக்கும் பள்ளிகளை தவிர்க்கவும்) படிக்க வைப்பதால் இயற்கையான சினேக உணர்வுடன் மற்ற பாலருடன் பழகும் தன்மையை ஏற்படுத்தி விடலாம். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதித்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவும் நம் குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தன் அம்மாவையும், மனைவியையும், சகோதரிகளையும், மகளையும் மதித்து வாழும் ஒரு அப்பா இருக்கும் வீட்டிலும், தன் சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் இழக்கத் தயாரில்லாத ஒரு அம்மா இருக்கும் வீட்டிலும் ஒரு ஆண் பிள்ளை, பெண்களை மதித்தே வளர்வான்.

மொத்தத்தில் இந்தச் சமூகம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மாறிவிடாது.  தற்போதைய ஆணாதிக்க, பெண்ணை பொருளாக என்னும் சமுதாயத்தில் இத்தகைய ஒரு மாற்றம் நிகழுமேயானால், உடலுறவு குறித்த பார்வையிலும், அணுகுமுறையிலும் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை காணலாம்.

இவற்றில் உள்ள அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஏற்புடையதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாதவற்றை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அப்படியும் ஏற்புடையதாக இல்லை எனில் விவாதிப்போம்! விளங்கிக் கொள்வோம்! பேசாப் பொருளை பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

படிக்க : ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

இப்புத்தகம் காமம் குறித்தான அனைத்து பார்வைகளிலிருந்தும் விளக்கம் அளிக்கிறது. மேலும் பல அறிஞர்களின் ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி அறிவியல் ரீதியாகவும் பேசுகிறது. தற்போது நம் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு காரணங்களை கூறுவதோடு, தீர்வையும் எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் ஆண்களை மட்டும் விமர்சனம் செய்யாமல் பெண்களையும் சில இடங்களில் விமர்சனம் செய்கிறது. மேலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதையும், ஆண்கள் எதனால் தவறிழைக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது.

சொத்துடைமை ஆரம்பமானத்திலிருந்து தாய் வழியில் இருந்த சமுதாயம் தந்தை வழி சமூகத்திற்கு மாற்றப்பட்டது. தந்தை வழிச் சமுதாயம் மூலம் சொத்துரிமை  வாரிசுகளுக்கு கடத்தப்பட்டது. இங்கிருந்துதான் பெண்ணடிமைத்தனம் ஆரம்பமாகி இருக்கிறது. இதற்கு பின் வந்த அத்தனை சமுதாய அமைப்புகளிலும் முற்போக்காக முன்னேற்றம் அடைந்து வந்தாலும், பெண்ணடிமைத்தனம் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப நவீனப்பட்டு வந்துள்ளது. இப்படி நவீனப்பட்டதன் விளைவாக பெண்ணானவள் தான் அடிமையாக உள்ளோம் என்பதை அறியாமல் இருக்கிறாள்.

எப்போது சொத்துரிமை என்கிற முறை அடித்து நொறுக்கப்பட்டு மாற்றம் காணுமோ, அப்போதே பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படும். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் தற்போதுள்ள சமூகத்திற்கு பதிலாக காட்டுமிராண்டி (பிரதான பொதுவுடைமை) சமூகமே மேலானது என்கிறார். ஆனால் அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு சமூகமும் பல்வேறு பிற்போக்குத்தனங்களை முறியடித்து தான் நவீனமயமாக்கப்பட்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு விவாதத்திற்கு கருவியாக இப்புத்தகம் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!

நூலின் பெயர்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
பக்கங்கள்: 224
விலை: ரூ 225
வெளியீடு: நோராப் இம்பிரிண்ட்ஸ்
19/5, நவரத்தினம், ருக்மணி சாலை, பெசன்ட் நகர், சென்னை – 600090
தொலைபேசி: 9790919982
மின்னஞ்சல்: mail.knowrap@gmail.com

நூல் அறிமுகம் : Dr. அசுரன்

NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

22.09.2022

NIA raids Popular Front of India (PFI) and SDPI offices!
– People’s Power condemns it

Press Release

The National Investigation Agency (NIA) has unleashed violence in the name of conducting raids at the PFI – SDPI party offices in over hundreds of places in various states across the country.

The repression against the PFI – SDPI by the NIA is a continuation to the repression against the opposition parties and activists who oppose the policies of the fascist RSS – BJP.

These raids should be viewed as foreshadow to ban the democratic and revolutionary forces whose stances are contrary to the fascist RSS – BJP.

The BJP, which started its campaign as “Congress-free India”, is now destroying all other parties both through legal and illegal means.

It is our duty to fight such repression. People’s Power, therefore, strongly condemns the NIA raids on PFI – SDPI.

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power.
Contact : 99623 66321

இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு

புதிய ஜனநாயகம் இதழ் சார்பாக வெளிவந்துள்ள “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற வெளியீடு நமது ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்” மாநாட்டில் வெளியிடப்பட்டது.

கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட இக்கட்டுரை தொகுப்பானது, பொதுவில் நிலவுகின்ற அரசு கட்டமைப்பின் மீதுள்ள மாயையை கலைத்து பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கும் மெய்நிலையை வாசகர்களுக்கு உணர்த்தும்.

அனைவரும் வாங்கி படியுங்கள்..!
ஆதரவு தாருங்கள்..!

தலைப்பு : இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்
நூல் அமைப்பு : கட்டுரை தொகுப்பு

வெளியீடு : புதிய ஜனநாயகம்
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
கைபேசி : 94446 32561

நன்கொடை : ரூ. 120

 

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

22.09.2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில்
தேசிய புலனாய்வு முகமை சோதனை!

மக்கள் அதிகாரம் கண்டனம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் PFI மற்றும் SDPI கட்சி அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  தேசியப் புலனாய்வு முகமை அமைப்புகள் சோதனை என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கொள்கைகளை எதிர்க்கக் கூடிய  எதிரக்கட்சியினர் மற்றும் செயற்பாட்டாளர்களை  ஒடுக்குவதன் தொடர்ச்சியாகவே பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி மீது தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரிலான அடக்குமுறையை மேற்கொண்டிருக்கிறது.

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் உடைய ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளை தடை செய்யும் நோக்கத்தில் முன்னோட்டமாகவே மேற்கண்ட அமைப்புகளின் மீதான சோதனையை காண வேண்டி உள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமையாகும். ஆகவே பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ மீதான தேசிய புலனாய்வு முகமை நடத்தும் சோதனையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ

ரு மனசாட்சி என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? ஒரு மாணவி இறந்துள்ளார் பெற்றோர்கள் போராடுகிறார்கள் என்றால், நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் பலரில், ஒரு சிலர் மட்டும் இப்படி செய்கிறார்கள் என்றால் இது யாருக்கு சார்பாக; அந்த பள்ளிக்கு சார்பாக அந்த குண்டர்படை ஐயோக்கியர்களை காசு கொடுத்து தூண்டிவிட்டுள்ளது. இதனை நாங்கள் ஸ்டெர்லைட்டிலேயே பார்த்தோம்!

அந்த பள்ளிக்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இருக்கிறது. அங்கு சாகாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான குற்றவாளிகளை ஏன் வெளியே விடக்கூடாது என்று கூறுகிறோம் என்றால், அவர்கள் உண்மை ஆதாரங்களை அழித்து விடுவார்கள், சாட்சிகளை அழிப்பார்கள் என்பதால்தான். நக்கீரன் பத்திரிகையாளர்களின் மீதான இவர்களின் தாக்குதல் என்பதே அவர்களின் ஜாமீனை ரத்து செய்வதற்கான போதுவான ஆதாரம் என்று நாங்கள் சொல்கிறோம்!

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!