Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 144

தமிழகத்தின் கிராமங்கள் வரை ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி! | ஜவாஹிருல்லா | வீடியோ

மிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்கள் பேசிய உரையில், தமிழகத்திலே பாசிசத்திற்கு எதிராக, கார்ப்பரேட் கொடுங்கோன்மைக்கு எதிராக தொடர்ச்சியாக, சிறப்பான பரப்புரைகளை, மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து பல்வேறு போராட்டங்களை உங்கள் அமைப்புகளின் சார்பாக எடுத்துள்ளீர்கள்.

ம.க.இ.க-வின் சார்பாக வெளியிடப்பட்ட காவி இருள், அசுரகானம் ஆகிய ஒலிப்பேழைகளை மறக்க முடியாது. உங்கள் அமைப்பின் மாநாட்டில் பேச வாய்ப்பளித்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இங்கு பாசிசம் என்றால் என்ன? பாசிசத்தின் வடிவம் என்றால் என்ன? என்றும் இங்கே பேசியவர்கள் பேசியுள்ளனர். “பிரதமர் நரேந்திர மோதியும் அம்பேத்கரும்” என்ற புத்தக வெளியீடு விழாவில் ராம்நாத்கோவித் பேசுகிறார். அதில் பிரதமர் மோடிதான் உண்மையாக பின்பற்றுபவர் என்று நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சான்றிதழை கொடுக்கிறார்.

பாசிசம் பொய்மைகளை உண்மையாக நம்ப வைத்து மக்களை தன் வயப்படுத்த கூடிய ஒரு செயல்திட்டம் உடையது. பாபா சாகேப் அம்பேத்கர் வர்ண பேதங்களுக்கு எதிராக போராடினாரோ, அதற்கு நேரதிரான கொள்கையை மோடியை உண்மையிலேயே பின்பற்ற கூடியவர் என்று சொல்கிறார்.

மோடி அவர்களின் ஆட்சியில் 2021 ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் 7818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. உ.பி.யில் மட்டும் தலித்துக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை வழக்குகள் 61,000 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றது. ஹத்ராஸ் 19 தலித் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நிதியில்லை. அப்படிப்பட்ட மோடியை அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர் என்று சொல்கிறார்கள் சங்கிகள்.

தமிழ்நாடு என்பது பெரியார் மண்தான். மாற்று கருத்தில்லை. ஆனால், கிராமங்கள் வரை பாசிசம் ஊருடுவியிருக்கிறது. விழுப்புரத்தில் ஆய்விற்கு சென்றபோது, ஒரு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் உங்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கிறது என்று விசாரித்தோம். 100 வேலைத்திட்டத்திற்கு பெயர் என்ன? யார் கொண்டு வந்தது என்று கேட்டால்? அந்த பெண்கள் மோடி கொண்டு வந்தார் என்கின்றனர். அவர்கள் எப்படி கிராமப்புறங்களில் கூட ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

பாசிஸ்டுகளின் நோக்கம் உயர்சாதி, ஆதிக்கச் சாதிகளை தவிர மற்றவர்களை அடிமையாக்குவதுதான். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்ட வேண்டும். பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் களைந்து நன்கு ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும். மனித நேய மக்கள் கட்சி உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம் நன்றி என பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பேரிடர்கள் ஆண்டுக்கு ஆண்டு புதிய உச்சநிலைகளை எட்டிவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜூன் – ஆகஸ்டு மாதங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் பல நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது, குறிப்பாக ஐரோப்பா பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி, வெப்ப அலை, காட்டுத் தீ, வெள்ளப்பெருக்கு எனத் தொடர் பேரிடர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன ஐரோப்பிய நாடுகள்.

உயிர்களைக் குடித்த ‘வெப்பப் புயல்’!

ஐரோப்பாவின் முதல் வெப்ப அலை ஜூன் மாதத் தொடக்கத்தில் வீச ஆரம்பித்தது. அடுத்து ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கிய இரண்டாவது வெப்ப அலை வடக்கே இங்கிலாந்து வரை பரவியது; ஆகவே இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரான்ஸ் முதலிய பல நாடுகளில் 40 முதல் 43 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல்களே வெப்பம் காரணமாக உருகியதென்றால், அங்கு நிலவிய வெப்ப அளவை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியதால் விமானச் சேவை முடங்கியது; கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெருநகரமான ஸ்டாக்போர்ட்டில் பரபரப்பாக இருக்கும் சாலையின் ஒரு பகுதி உருகி திரவமாகத் தேங்கி நின்றதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதால், அதை சமாளிக்க முடியாமல் அந்நாட்டின்  தீயணைப்பு துறையே திணறிப்போனது. ஒரு நாளைக்கு சுமார் 2,600 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தீயணைப்பு துறைக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருந்தது ஜூலை 19 அன்றுதான் என இலண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

ஜூன் 14 முதல் 20 வரை வீசிய முதல் வெப்ப அலையால் ஜெர்மனியில் 1,636 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் வெப்ப அலையின் காரணமாக ஸ்பெயினில் 679 பேரும், ஜெர்மனியில் 6,502 பேரும் உயிரிழந்துள்ளனர். இறுதியாக ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய மூன்றாவது வெப்ப அலையால் ஐரோப்பிய வனப் பகுதியில் சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவு காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியது.

எப்போதும் போலல்லாமல், வெப்ப அலையானது இம்முறை வெப்பப் புயலாக (Heatwave Storm) மாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகில் முதன்முறையாக ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு “ஜோ” (Zoe) எனப் பெயரிட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்பப் புயல் காரணமாக இதுவரை 12,000 பேர் இறந்துள்ளனர்.

ஐந்து நூற்றாண்டுகளில் காணாத வறட்சி

ஏற்கெனவே பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சியோடு, தற்போது வீசிய இந்த வெப்ப அலைகளும் சேர்ந்துகொள்ள அதன் தாக்கம் மிக மோசமானதாக மாறியது. வரலாறு காணாத வறட்சி ஐரோப்பாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது.

டெவோன், கார்ன்வால், சோலண்ட், சவுத் டவுன்ஸ், கென்ட் உள்ளிட்டு இங்கிலாந்தில் மொத்தம் ஒன்பது நகரங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது அந்நாட்டு அரசு. இதன் காரணமாக அந்நாட்டில் ‘குழாய் தடை’ (hosepipe ban) அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை அறிவிக்கப்பட்ட இடங்களில், குழாய்கள் மூலம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதோ, கார் கழுவுவதோ, நீச்சல் குளங்களை நிரப்புவதோ செய்யக் கூடாது என்பது விதியாகும். பல்பொருள் அங்காடிகளில் ஒரு நபர் 3-5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.

படம் 1: லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியது. | படம் 2 : இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல் வெப்பம் காரணமாக உருகியது.

பல இடங்களில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்தில் சுமார் 1.5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தேம்ஸ் நதியும், ஜெர்மனியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ரைன் நதியும் வற்ற ஆரம்பித்ததுள்ளது. வடக்கு இத்தாலியின் மிகப்பெரிய ஏரியான கார்டாவும், மிக நீளமான நதியான போவும் சுத்தமாக வறண்டே போய் விட்டன.

இது அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய இயலாததால் 50 சதவிகித பயிர்கள் வீணாகியுள்ளன. மேலும் எண்ணெய் விதைகளை விதைக்க வேண்டிய இக்காலத்தில் மண்ணில் ஈரப்பதம் வற்றிப் போனதால், விதைக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விலையேற்றமடைந்துள்ள தாவர எண்ணெய்கள் இதனால் மேலும் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.

வறட்சியைத் தொடர்ந்துவந்த பெருவெள்ளம்

வெப்ப அலையால் தவித்து வந்த ஐரோப்பிய மக்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் கனமழை தாக்கத் தொடங்கியது. இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மின்னல்கள் தாக்கின. பிரான்சின் கோர்சிகாவில் மழையினால் மரங்கள் மற்றும் வீட்டின் கூரைகள் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். லண்டன், பாரிஸ், மார்செய் போன்ற பெருநகரங்களை மழை நீர் சூழ்ந்தது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இப்பெருவெள்ளம் ஏற்கெனவே நிலவிய கடும் வறட்சியை சரிசெய்யப் போதுமானதாக இல்லையெனவும், அக்டோபர் மாதம்வரை வறட்சி நிலை நீடிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பா போலவே மற்ற உலக நாடுகளும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறன. பிப்ரவரி மாதம் பிரேசிலில் இருக்கும் ரியோ டி ஜெனிரோ-வில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 233 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதம் பிலிபைன்ஸ் நாட்டில், மெகி என்னும் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 167 பேர் இறந்துள்ளனர். ஜூன் மாதத்தில் வீசிய வெப்ப அலையால் அமெரிக்காவின் கேன்சாசில் 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயின.

ஜூன் மாதம் சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வெள்ளப் பேரிடர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முதல் கடுமையான வெப்ப அலைகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய நதியான யாங்சே வறண்டு வருகிறது. வேளாண் உற்பத்தி, மின்சார உற்பத்தி ஆகியவையெல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

முன்னிலைக்கு வந்துவிட்ட சூழலியல் நெருக்கடி!  

காலநிலை மாற்றம் காரணமாக இன்று பரவும் கொரோனா, குரங்கு அம்மை போன்ற பெருந்தொற்று நோய்களில் 58 சதவிகித நோய்கள் வேகமாகப் பரவுகின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்” இதழில் இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் காலநிலை மாற்றம் காரணமாகச் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாற்றங்களே நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவ வழிவகுக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் ஆகும். புவியின் சராசரி வெப்ப நிலையானது 1.5 டிகிரியைத் தாண்டினால் அதனுடைய விளைவுகள் மீள முடியாததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு 48 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் வைத்திருப்போம் எனச் சென்ற ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற cop26 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் தீர்மானம் போட்டார்கள். அத்தீர்மானத்தின்படி, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, இயற்கையை மேலும் தீவிரமாகச் சுரண்டும் வேலையிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

படிக்க : செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

cop26 மாநாட்டிற்குப் பிறகும், பல புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது; அதேபோல பிரேசிலின் அமேசான் முதல் காங்கோ வரை 11.1 மில்லியன் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகின் நுரையீரலாக அறியப்படும் அமேசான் மழைக் காடுகளில், நியூயார்க்-இன் 5 மடங்கைவிட பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த முதாளித்துவ அரசுகளுக்கு இயற்கைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

சுற்றுச்சுழல் சீர்கேடும் அதனால் உருவான காலநிலை மாற்றமும், ஆளும்வர்க்க ஊடகங்கள் காட்டுவதைப் போல தனிநபர்களின் முறையற்ற செயல்பாடுகளினால் நடைபெறுவதல்ல. தன் லாப நோக்கத்திற்காக இயற்கையை வரன்முறையின்றி சூறையாடும் முதலாளித்துவ உற்பத்தி முறையினால் விளைந்த கேடாகும்.

முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவிலும் மற்ற உலக நாடுகளிலும் ஏற்படும் பேரழிவுகள் இதனையே நமக்கு உணர்த்துகின்றன. இலாபவெறி கொண்ட முதாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவது பெருந்திரளான உழைக்கும் வர்க்கத்திற்கான விடுதலை என்பதோடு, இப்புவிப்பரப்பை காப்பதற்கே அது இன்றியமையாதது என்றாகிவிட்டது.


மதி

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0

வாராணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யா பீடம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர், டாக்டர் மிதிலேஷ் குமார் கவுதம் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

“நவராத்திரி காலங்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது என்றும், இவ்வாறு படிப்பது பயத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும். ஜெய் பீம்” என்று சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் பேராசிரியர் பதிவு செய்த கருத்து, இந்து விரோத கருத்து என்று கூறி அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி போராட்டத்தில் ஈடுப்பட்டது. அவரை உடனடியாக பல்கலைக் கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற் கூறி துறைத்தலைவரின் அறைக்கு முன்னால் சென்று ‘ஜெய் ஸ்ரீராம், மாதா கி ஜெய்’ என்று வெறிக்கூச்சல் போட்டனர்.

மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கு சென்று பேராசிரியர் கவுதம், இரண்டு மணி நேரத்தில் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நிமிடமே பல்கலைக் கழகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறபிக்கிறது.

படிக்க : 1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக் கழக பதிவாளர் சுனிதா பாண்டே, “கவுதம் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல. மதங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், இதுபோன்ற கருத்துகள் வெளியிட யாருக்கும் உரிமையில்லை. ஒரு ஆசிரியர் எப்போதும் இப்படியான கருத்துகளை கூறக் கூடாது” என்று கூறியுள்ளார். கல்லூரியில் மாணவர்கள் மனம் புண்பட்டுள்ளதாகவும் எனவே அவரை பணிநீக்கம் செய்கிறோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கவுதம், “நாங்கள் தலித் என்ற காரணத்திற்காகவே பாசிச கும்பலால் குறிவைத்து தாக்கப்படுகிறோம். துறைத்தலைவர் தலித் என்பதற்காகவே அவரையும் தாக்குகிறார்கள். இந்துத்துவ மாணவர் கும்பலின் அழுத்தம் காரணமாகவும், உயர்சாதி பிரிவினரின் அழுத்தம் காரணமாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இதேபோன்று சில பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கல்வித்துறை தலைவர் சுசில் கவுதம் மீது தாக்குதல் நடத்தினார்கள். கிருபாசங்கர், ஜெய்சங்கர் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் கும்பல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அச்சத்தை வெளிபடுத்தி உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களை தாக்கினார்கள். தற்போது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதலை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக வளாகத்தில் என்றும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகி வருகிறது என கூறினார்.

பல்கலைக் கழகங்களில் முஸ்லீம்கள், தலித்துகள், சமூக செயற்பாட்டாளர்கள் சமீப காலங்களாக இந்துத்துவ கும்பல்களால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

படிக்க : வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

கடந்த மே மாதம், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர், ரவிகாந்த் சாந்தன், ஒரு ஊடக நிகழ்ச்சியில் ஞானவாபி மசூதி குறித்து வரலாற்று புத்தகத்தில் இருந்து ஒரு மேற்கோள் எடுத்து கூறினார். புத்தகத்தில் உள்ள மேற்கோள்களை எடுத்து கூறியதையே, இந்து விரோத கருத்து என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் ஏ.பி.வி.பி மாண குண்டர்கள்.

தற்போது பேராசிரியர் கவுதம் தாக்கப்பட்டுள்ளார். அவர் தெய்வங்களை கேலி செய்யவில்லை. தவறாக பேசவில்லை. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் பேசவில்லை. ஆனாலும், பாசிச கும்பலால் வேட்டையாடப்பட்டு வருகிறார்.

நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

பல்கலைக் கழகங்களில் செயல்பட்டு வரும் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவாரி கும்பலிடமிருந்து பல்கலைக் கழகங்களை மீட்டெடுக்க களமிறங்க வேண்டியது அவசியமாகியது.


தங்கபாலு

Saffron Fascism oppressing the Minorities!

In 2014, when Modi was announced as the Prime Ministerial candidate, the most popular rhetoric was ‘the Gujarat Model’. The fraudulent claim that Modi had developed Gujarat to be on par with Europe became viral. In real, Modi’s Gujarat was the hunting ground for the corporates; a laboratory of the RSS that seeks to establish a Hindurashtra. It was only after the 2002 Gujarat pogrom that Modi was adopted by the Brahmin-Baniya corporates including Ambani and Adani.

In that way, the Modi-led BJP government has nationalized the Gujarat model. It is only in places where the RSS orchestrated various religious riots, the BJP had gained foothold and had captured power. The sangh parivar mob had orchestrated almost 10,000 riots over a period of eight years.

The condition of the Muslims

The RSS has been campaigning for over hundred years that Muslims are the biggest threat to the nation and the majoritarian Hindus. The saffron mob is working in numerous ways only to construct riots against the Muslims. The reasons they say include beef, love jihad, religious conversion, conspiracy against the country, etc. They have established many violent outfits such as gau rakshas, anti-Romeo squads, etc in congruence with these issues.


Also Read : The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!


The 52-year old Akhlaq was lynched to death in 2015 in Uttar Pradesh by alleging that he was in possession of beef. In 2017, Pehlu Khan, a dairy farmer from Haryana, was beaten to death by the Hindu-fanatic mob. They claimed that he was smuggling cows. According to a report by Human Rights Watch in 2019, at least 44 people were killed by the cow vigilantes between May 2015 and December 2018.

In 2018, an 8-year old Muslim girl was gang-raped and murdered in Kathua in Kashmir. The BJP conducted a procession by carrying national flag in support of the perpetrator, only because of the fact that the victim is a Muslim and the perpetrator is a Hindu.

The fascist BJP vehemently repressed the protests in Shaheen Bagh, JNU and Jamia Millia Islamia against the Citizenship Amendment Act, which envisions in making the Muslims fourth-class citizens. 50 people were massacred in a planned riot by the saffron mob in Delhi.

As in states like Gujarat and Uttar Pradesh, the RSS is expanding its Hindutva laboratories in Uttarakhand, Assam, Tripura and Karnataka.

It is to be noted that when riots broke out in various states during Ram Janmabhoomi movement, Tripura was among the states that remained undisturbed. But after the saffron mob assumed power, in last November last year, mosques were smashed and the houses of the Muslims were set ablaze. In Karnataka, there were continuous oppressions against Muslims such as Hijab ban and halal jihad which were unprecedented in the state.

If the Muslims fight against these injustices thrust upon them, the saffron regime bulldozes their houses. During the Ram Navami riots and during protests against Nupur Sharma’s comments on Prophet Muhammad, the protests were suppressed with bulldozers. The courts also supported these illegal demolitions. The bulldozer demolitions should be viewed on par with Israeli Jewish religious-fanatic government’s oppression on Palestinians.

Rajasthan’s Kanhaiya Lal, who posted on social media in support of Nupur Sharma, was killed by two Muslims. After that, a few Bajrang Dal and Vishva Hindu Parishad members who participated in a Hindutva Mahapanchayat in Haryana had clamoured “Will repeat Gujarat if situation demands”, “Hindu Rashtra will demand sacrifice and we are ready to give it”.

At last, it was found that the murderers of Kanhaiya Lal were stooges of the BJP. Their conspiracy to orchestrate a big religious riot was exposed.

At a global summit held virtually, experts and researchers working on hate speech and genocide said that the process of genocide is already underway in India. Jason Stanley, a professor of philosophy who participated in this summit said “The CAA (Citizenship Amendment Act) looks frighteningly similar to the Nuremberg laws”.

Before this, in an event called ‘Dharma Sansad’ at Haridwar, the saffron fascists openly called for the genocide of the Muslims in order to establish a Hindu Rashtra.

The condition of the Dalits

In 2016, in Gujarat’s Mota Samadhiyala village of Una taluka in Gir-Somnath district, dalit youths were tied and thrashed for skinning dead cows.

In 2017, a dalit girl in Unnao was gang-raped by a BJP MLA Kuldeep Singh Sengar of that constituency along with his henchmen.

In 2020, in Hathras, the police did not even handover the body of the dalit girl who was gang-raped; instead burnt it illegally in the middle of the night.

Atrocities against dalits such as untouchability offenses, rape and murder take place more in BJP-ruled states. The reason for this is the reactionary tendency of these states. The second important reason is that the saffron mob, which is in power, is legally protecting the dominant caste caste-fanatics. According to the statistics released by the National Crime Records Bureau, 25.3% of the total attacks on dalits took place in Yogi’s Uttar Pradesh alone.

The caste fanatics among the caste-Hindus naturally become partners with the Hindu religious fanatics. In a riot in Ponparappi, vanniyar caste-fanatics along with Hindu Munnani ransacked the houses of the dalits.

The attack on Christians

The saffron mob is accusing that the Christian voluntary organizations (NGOs) are getting funds from foreign countries and are using it for religious conversions and indulge in widespread attacks.

During last year’s Christmas Eve, there were attacks on churches in many states including Uttar Pradesh, Haryana and Karnataka by members of Bajrang Dal and Vishva Hindu Parishad. The effigy of Santa Claus was burnt. Christian schools were also attacked.

Churches were attacked in southern districts of Tamil Nadu during the suicide issue of Ariyalur student Lavanya. Hindu Munnani had involved in ruckus several times against the Christian schools in Tiruppur by accusing them of religious conversion.

The tyrannical Hindurashtra government

After the fascists gained influence in national politics, the percentage of Muslim MPs in the parliament, which was 9.3% in 1976, had shrunk to 5% in 2019.

Majority of the vote-bank political parties fear to have electoral alliance with Muslim parties. They think that they would be attacked by the Hindu-fanatic fascists if they do so. Even the big political parties, which were allying with the Muslim parties traditionally, are also not allocating general constituencies to them. Muslim candidates are put forward in Muslim majority areas only as a means to get the popular votes. This shows the influence gained by the Hindu-fanatic politics in the mainstream.

According to the “Status of Policing in India Report 2019” by the NGO “Common Cause”, about 50% of the police personnel hate Muslims and consider them to be naturally prone at committing violence. Moreover, the report further says that they pay no attention to the complaints filed by the Muslims.


Also Read : Saffron-Corporate coalition regime looting the country!


Union minister Smiti Irani’s written reply in the Lok Sabha showed that the government has reduced the funds allocated for many minority schemes over the last three years and the number of beneficiaries under them has declined.

The entire State structure is being casted against Muslims and in favour of saffron fascist mob. No one is daring enough to speak about democratic and secular India. In order to pick up votes, these political parties speak up in the tone of soft Hindutva.

The fascist attacks that are executed through legal means include Cow Protection Law, Anti-Love Jihad Law, Anti-Conversion Law, Prevention of Damage to Public Property Act, Citizenship Amendment Act, ban on offering Namaz (prayers) in public places in Uttar Pradesh, court order prohibiting wearing of hijab in Karnataka.

Democracy, Equality and Secularism have become slogans in the anti-fascist protests. That is, they have become demands. The meaning of this is that “the existing State structure has been changed in conducive to the tyrannical Hindurashtra rule. Now, there is no solution within the existing framework”.


Chandrasekhar

இந்து ராஷ்டிரம் நிலைநாட்டப்பட்டு வருகிறது, அதை வீழ்த்த ஒன்றிணைவோம்! | பாலன் | வீடியோ

மிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பேசிய உரையில், பாசிச அரசமைப்பு மக்கள் ஒடுக்குகிறது. யாருக்கு சேவை செய்கிறது. இந்த மாநாட்டின் 32 தீர்மானங்கள் இந்த ஆட்சியின் ஒடுக்குமுறையை எடுத்து கூறுகிறது. நீதித்துறையின் நடவடிக்கைகளும், பாராளுமன்றத்தின் கொண்டுவரும் சட்ட மசோதாக்களும், நடக்கும் கைதும், ஒடுக்குமுறைகளும் பாசிசம் வளர்ந்து ஆட்சியை கைப்பற்றி நாட்டிற்கு ஒரு பேரிடரை தோற்றுவித்து கொண்டிருக்கிறது என்பதை கண்ணுற்று வருகிறோம்.

கடந்த 30 ஆண்டுகாலமாக உங்கள் அமைப்பு எதிர்த்து வந்திருக்கிறது. பல்வேறு தீவிர பிரச்சாரங்களையும் செய்து வந்துள்ளீர்கள். கருவறை நுழைவு போராட்டம் முதல் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறீர்கள்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதம் இன்று நடைமுறையில் இருக்கிறது. அரச கட்டமைப்பு இயக்கும் சித்தாந்தமாக இருக்கிறது. இந்துத்துவ தேசியமாக மாறியுள்ள சூழலில் மிகவும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை ஏன் முறியடிக்க முடியவில்லை என்பதை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி?

இஸ்லாமிய இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தனித்தனியாகதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பொது மேடை ஏன் நாம் உருவாக்க முடியவில்லை? இதற்கான கேள்வியை எழுப்பி விடைக்காணும் வகையில் மக்கள் மத்தியில் சென்றால்தான் அவர்களை முறியடிக்க முடியும். சில குறிப்பிட்ட முதலாளிகளுக்குதான் மோடி கும்பல் வேலை செய்கிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கைக் கோர்ப்போம்! பாசிசத்தை முறியடிப்போம்! என்று பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

பாருங்கள்! பகிருங்கள்!!

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

0

ர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வடஇந்தியாவிற்கு வெளியே, குறிப்பாக கேரளா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது.

***

கடந்த செப்டம்பர் 21-23 முதல், ஆர்.எஸ்.எஸ்.ன் சிந்தனைக் குழுக்களின் துணை அமைப்பான பிரஜ்னா பர்வா, அஸ்ஸாமில் மூன்று நாள் சிம்போசியம் – ‘லோக்மந்தன்’ ஏற்பாடு செய்தது. இந்திய துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், அசாம் கவர்னர் ஜெகதீஷ் முகி, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செப்டம்பர் 24 முதல் இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றிருந்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரிபுரா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘மாநில விருந்தினராக’ அகர்தலாவுக்குச் சென்றார்.

இந்தியாவின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்கள், இந்தியாவின் ‘அரசியல் ஆய்வுக்கூடமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்எஸ்எஸ்.ன் மாற்று உத்தியின் மற்றொரு முன்மாதிரியாகச் செயல்படுகின்றன.


படிக்க : பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!


வடகிழக்கு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்

வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆரம்பகால தூண்கள் தாதாராவ் பர்மார்த், வசந்த்ராவ் ஓக் மற்றும் கிருஷ்ணா பரஞ்ச்பே. அக்டோபர் 27, 1946இல், அவர்கள் பிரிக்கப்படாத அஸ்ஸாமிற்கு வந்து அங்கிருந்து குவஹாத்தி, திப்ருகார் மற்றும் ஷில்லாங்கில் முதல் ஷாகாக்களை நிறுவினர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மக்கள் தொகை 34 சதவிதம் முஸ்லிம்கள், மற்ற ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவர்கள். வடகிழக்கில் இந்துக்கள் இல்லாதது, இந்து தேசியவாத சித்தாந்தம் பரவுவதற்கு ஆரம்பக் காலங்களில் தடையாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் தனது பல்வேறு திட்டங்களின் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களை வென்றெடுக்க முயற்சித்து வருகிறது. ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம், ராஷ்ட்ர சேவிகா சமிதி, வித்யா பாரதி மற்றும் விவேகானந்த கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம் வடகிழக்கு இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் தீவிரமாக செயல்படுகின்றனர்.

மாநில அரசின் உயர்தர கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அதனை ஆர்.எஸ்.எஸ் தனது இலக்கை அடைய பயன்படுத்திக் கொள்கிறது. முன்னதாக, இப்பகுதியில் உயர்தர தனியார் கல்வி கத்தோலிக்க பள்ளிகள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் வரலாற்று ரீதியாக பழங்குடி சமூகங்களில் பல்வேறு சேவைகளை புரிந்துள்ளது.

மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில், கிறிஸ்தவர்கள் 70 சதவிதத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். வடகிழக்குக்கு வெளியே டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற கல்வி மையங்களில் கூட, வடகிழக்கு மாணவர்களுக்காக திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்துகிறது. இடதுசாரிகளின் நீண்டகால ஆட்சியை கொண்ட திரிபுரா போன்ற மாநிலங்களில், பாஜக ஆதரவைப் பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், முதல் தலைமுறை வாக்காளர்களை, பாஜகவை ஆதரிக்கச் செய்வதே ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் பொதுவாக செல்வாக்கு மிக்க அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணைய விரும்பும் இளைஞர்களை ஈர்த்துக்கொள்கிறது.

பழங்குடி சமூகங்களுக்கிடையேயான உள் சண்டைகள், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ் ஊடுவர வாய்ப்பை அமைத்து தருகிறது. வடகிழக்கில் உள்ள பெரும்பான்மையான பழங்குடியின சமூகங்கள் தற்போது உள் சண்டைகளின் மோதிக்கொண்டிருக்கின்றன. மேலும் ஆர்எஸ்எஸ் அவர்களின் கோரிக்கைகளை சங்கத்தின் இலக்குகளுடன் இணைக்க முற்படுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் இப்பகுதியின் இளைஞர்களை செல்வாக்கு செலுத்துவதில் நரேந்திர மோடியின் பிரபலத்தால் பயனடைந்துள்ளன.

வடகிழக்கில், பாஜக ஒரு இந்து மேலாதிக்கக் கட்சி என்ற கருத்தையும் அகற்றியுள்ளது. பழங்குடி மற்றும் கிறிஸ்தவ பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கில் இந்துத்துவா நற்சான்றிதழ்கள் புறக்கணிக்கப்படுவதால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர்கள் அக்கட்சிக்கு ‘பாரதிய இயேசு கட்சி’ என்றும் பெயரிட்டுள்ளனர்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பை 1942 ஆம் ஆண்டு கேரளாவில் முதன்முதலில் பதிவுசெய்தது. இருப்பினும் அதன் செயல்பாடுகள் முக்கியமாக பல ஆண்டுகளாக மலபார் பகுதியில் மட்டுமே இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளை கோழிக்கோடு மீனவ சமூகங்கள் மூலம் தொடங்கியது. தாழ்த்தப்பட்ட சாதி படிநிலை காரணமாக, இந்த சமூகங்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் அவர்களை வரவேற்றன.

திருவனந்தபுரத்தில் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டவர்கள் இளம் மாணவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள் அல்ல. மறுபுறம், மலபாரில் உள்ளூர் மக்களிடையே ஊடுருவியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.

அவசரநிலை, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுதியான காலூன்ற அனுமதித்த மற்றொரு காரணியாகும். இந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஏமாற்றமடைந்த இளம் மார்க்சிஸ்டுகளை ஈர்ப்பதற்காக, ‘மார்க்சிசத்திலிருந்து மனிதநேயம் வரை’ என்ற நன்கு அறியப்பட்ட கவர்ச்சி முழக்கத்தை பயன்படுத்தியது.

கேரளாவில் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. தபஸ்யா, பாரதிய விசார் கேந்திரா மற்றும் பாரதிய வித்யா நிகேதன் போன்ற நிறுவனங்கள் மூலம் கலாச்சார மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தனது ஆதரவை விரிவுபடுத்தியது.

மாநிலத்தில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாவிட்டாலும், 2019 லோக்சபா தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 2014இல் 10.85% இருந்து 15.2% ஆக உயர்ந்தது. கூடுதலாக, அதன் இந்து தேசியவாதத்தின் மூலம் சில இந்துக்களையும் ஈர்க்க முடிந்தது. மாநிலத்தின் சாதி மற்றும் மத உணர்வுகளில் இந்துக்களைத் தூண்டிவிடுவதில் இந்த அமைப்பு வெற்றி பெற்றது.

2017 ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 ஷாகாக்கள் நடைபெறும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ், தன்னுடன் இணைந்த அரசியல் அமைப்புகள் அப்பகுதியில் நிலைநிறுத்தத் தவறிய போதிலும், இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் வெற்றி பெற்றுள்ளது.


படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!


ஆகஸ்ட், 2018இல் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கியது. 300-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை அமைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அமைப்பில் 1.20 லட்சம் பேரை இணைந்து பணியாற்றினர்.

சபரிமலை விவகாரம் போன்ற அரசியல்-மதப் பிரச்சினைகளில் மோதல்கள் மூலம், கேரளாவின் ஆளும் சிபிஐ(எம்) அரசின் மீதான எதிர்கருத்தை விதைத்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கும் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு யதார்த்தமானதாகவும், இலக்கை நோக்கியதாகவும் இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் முன்னேறி வருகிறது என்ற கேடுகெட்ட அரசியலைப் பார்க்கும்போது, ​​அதை ‘மக்கியாவெல்லியன்’ என்று வர்ணிப்பது மிகையாகாது.

***

உழைக்கும் மக்களிடையே இந்து தேசியவாத சித்தாந்தத்தின் மூலம் ஊடுருவிவரும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சங் பரிவார கும்பல்களை உழைக்கும் மக்களிடையே படையை கட்டி வீத்துவது மட்டுமே நம் ஒரே பணியாகும்.


சந்துரு
செய்தி ஆதாரம்: தி வயர்

செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

த்திய அரசின் மொத்த வரி வருவாயில், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத சர்சார்ஜ் மற்றும் செஸ் வரியானது கடந்த 10 ஆண்டுகளில் 10.4 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், மொத்த வரி வருவாயில் மாநில அரசுகளின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது.

செஸ் வரி என்றால் என்ன, எவ்வளவு சதவிகிதம் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது, செஸ் வரி மூலம் மோடி அரசானது மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளையடிக்கிறது, செஸ் வரியை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் நோக்கம் என்ன போன்ற கேள்விகள் நம் மனதில் இயல்பாக எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

ஒவ்வொரு தனிநபரின் வருமானத்தின் மீதும் அல்லது அவர்கள் வாங்கும் பொருட்களின் மீதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரு விதிக்கப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வரிகளின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிதான் செஸ் வரி. அதாவது ஏற்கெனவே விதிக்கப்படும் வரிக்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரியே செஸ் வரி.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

மத்திய அரசானது குறிப்பிட்ட திட்டத்தையோ அல்லது வேறெதேனும் காரணங்களின் அடிப்படையிலோ செஸ் வரியை விதித்துக் கொள்ளலாம். சாலை மேம்பாட்டிற்கு, கல்விக்கு, மருத்துவத்திற்கு, வேளாண்மைக்கு எனப் பல்வேறு துறைகளுக்காக இந்த செஸ் வரி விதிக்கப்படும். தூய்மை இந்தியா திட்டம் கூட இந்த செஸ் வரி விதிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டமே. இதன் மூலம் ஈட்டப்படும் வரி வருவாயை மாநில அரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ளத் தேவையில்லை.

தற்போதைய மோடி அரசு மட்டும் கிடையாது, இதற்கு முன்பிருந்த எல்லா மத்திய அரசுகளும் செஸ் வரியின் மூலம் தங்கள் சுரண்டலை மக்கள் மேல் திணித்தே வந்துள்ளனர். ஆனால், மோடி ஆட்சியின் கீழ் இந்த செஸ் வரி விதிப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செஸ் வரி விதிப்பு என்று எந்த வரைமுறைகளும் அளவும் கிடையாது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் செஸ் வரியின் மூலம் மத்திய மோடி அரசிற்கு அதிகப்படியான வருமானம் வருகிறது. 2021 பிப்ரவரி நிலவரப்படி, மத்திய அரசின் பெட்ரோல் மீதான கலால் வரி (அடிப்படைக் கலால் வரி + செஸ் வரி) 32.90 ரூபாய்.

இதில் அடிப்படைக் கலால் வரி 1.40 ரூபாய் மட்டுமே. சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 18 ரூபாய், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2.50 ரூபாய், சிறப்புக் கூடுதல் கலால் வரியாக 11 ரூபாய் என மொத்தம் 31.50 ரூபாய் செஸ் வரியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கலால் வரியைப் போல, செஸ் வரியின் கீழ் வசூலிக்கப்படும் இப்பெருந்தொகையை மாநிலங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

2017 ஏப்ரலில் அடிப்படைக் கலால் வரி 9.48 ரூபாயாகவும், செஸ் வரி 12 ரூபாயாகவும் இருந்தது. 2021 பிப்ரவரியில் அடிப்படைக் கலால் வரி 1.4 ரூபாயாகக் குறைந்து, செஸ் வரி 31.5 ரூபாயாக அதிகரித்தது. இதன் விளைவாக மாநில அரசிற்கான நிதிப் பங்கீடு குறைந்ததோடு, மத்திய அரசின் வரி வருவாய் மட்டுமே பேரளவு கூடியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசானது செஸ் வரியின் மூலம் மட்டும் 28 லட்சம் கோடி வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டிய அவசியமில்லாத செஸ் வரி உயர்ந்துகொண்டே செல்கிறது, மறுபுறம் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட வேண்டிய கலால் வரியைத் திட்டமிட்டே குறைத்துவருகிறது. இதன் மூலம் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் குடுமியை தன் கையில் வைத்துக் கொள்வதோடு, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்குப் பெருந்தொகைகளை சலுகைகளாகவும் கடன்களாகவும் வழங்குவதற்கு நிதி ஆதாரத்தையும் குவித்துக் கொள்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் (கலால் வரியில்) ஒரு சிறு தொகையைக் குறைத்துவிட்டு, மாநில அரசுகளைப் பார்த்து வாட் வரியைக் குறைக்கச் சொல்லி அறைகூவுகிறது மோடி அரசு. பாஜக ஆளும் மாநிலங்கள், தங்களது வாட் வரியை குறைத்ததன் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

2021 நவம்பரில் அடிப்படைக் கலால் வரியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்துள்ளது. அதே போல் 2022 மே மாதத்தில் அடிப்படைக் கலால் வரியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. மத்திய அரசு ஒரு ரூபாய் கலால் வரியைக் குறைத்தால் அதில் 41 பைசா மாநிலங்களுக்குச் சொந்தமானது. அதாவது ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 59 பைசாவும், மாநில அரசு 41 பைசாவும் குறைப்பதாகவே பொருள்.

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

மாநிலங்களுக்கு பிரித்து வழங்க வேண்டிய வரித்தொகையில், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு – குறிப்பாக தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு அற்பமான தொகைகளையும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக தொகைகளையும் வரிப் பகிர்வாக வழங்குகிறது மோடி அரசு. இந்நிலையில் வாட் வரியைக் குறைக்காமல் எதிர்கட்சிகள் மக்கள் மீது சுமையை ஏற்றுகின்றன என்று நயவஞ்சகமாகப் பிரச்சாரம் செய்கிறது பாஜக.

மாநில அரசுகளை தமது காலனிகளைப் போல நடத்துகின்றது மோடி அரசு. இந்த ஒடுக்குமுறைக்கு ஏற்பவே நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பும் உள்ளது பாசிஸ்டுகளுக்கு தோதாக உள்ளது. மாநில அரசுகள் மீது சட்டப்பூர்வமாகவே நடத்தப்படுகின்ற இப்பாசிச தாக்குதல்களை, எதிர்கட்சிகள் ஆளும் அரசுகள் வெறுமனே கடிதம் எழுதிக் கொண்டிருப்பதன் மூலம் முறியடித்துவிட முடியாது.

ஒன்றுக்கும் உதவாத சடங்குப் பூர்வமான எதிர்ப்புகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, பாசிச பாஜகவின் அக்கிரமங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும், களப் போராட்டங்களின் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதுமே நம்முன் உள்ள வழி. இவ்வழிக்குப் பெருந்திரளான மக்களையும் எதிர்கட்சிகளையும் கொண்டுவரும் அரசியல் திராணி புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளிடமே உள்ளது.

குப்பு

காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்

ந்தை பெரியார் 1933 ஆம் ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வெளியான குடியரசு பத்திரிகையின் தலையங்கத்தில் காந்தி ஜெயந்தியை பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளார். அதனை இங்கே வெளியிடுகிறோம்.

***

கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள் கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

……அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான்களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடுவதற்கு அறிகுறியாய் காந்தி ஜெயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவதென்றால் இதன் அக்கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை.

காந்தியாருக்கு இன்று ஜெயந்தி கொண்டாடுவதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜெயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜெயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜெயந்தி கொண்டாடத்தக்க “பெரியோர்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜெயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர்,
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக்கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்திவாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்தி ஜெயந்தி.

…….தவிர, காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் காந்தியவர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. வருணாச்சிரம தர்மத்தை ஆதரிப்பதினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பனரல்லாதார் நிலை என்னவாகின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப்படாதவர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படி இருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்து வரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரம தர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9-ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக் கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜெயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமையானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜெயந்திக்கு ஒரு உதாரணமாகும்”.

குடியரசு – தலையங்கம் – 15.10.1933

பாசிசத்தை வீழ்த்த அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும்! | கே.பாலகிருஷ்ணன் | வீடியோ

SKM-யின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையில், உங்கள் மாநாடு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது. எங்கிருந்து தொடங்குவது, நிலை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து துறைகளும் சீரழிந்துவிட்டது. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் தரைமட்டமாகிவிட்டது. இந்த பொருளாதார சீரழித்தது இந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட நம் பண்பாட்டை சிதைத்து, மனித குலத்திற்கு விரோதமான சனாதன பண்பாட்டை இன்று புகுத்திக் கொண்டிருக்கிறது இந்த காவி – கார்ப்பரேட் கும்பல்.

இந்தியாவின் நீதித்துறை, ரிசர்வ் வங்கி, போன்றவற்றையெல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்கள். இந்தியாவில் உள்ள எதிர்கட்சியை அழிப்பது, கார்ப்பரேட்களிடமும் இலஞ்சத்தை வைத்து எதிர்கட்சியை அழிப்பது. வருமானவரித்துறையை ஏவிடுவது. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியா பாரம்பரியமிக்க கோட்பாடு, அதை அழித்து மொழி, இனம், சாதி மோதல்களை ஏற்படுத்தி ரத்தக்காடாக இந்தியாவை மாற்றியுள்ளார்கள்.

இவற்றை அம்பலப்படுத்த வேண்டும். மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தனிநபர்கள் விரும்பினால், கௌரி லங்கேஷ் போன்றோர் கொலை செய்கிறார்கள். அமைப்பாக இருந்தால் கைது செய்து வெளியே வர முடியாமல் செய்கிறார்கள். பாசிச கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடியை எப்படி ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுக்கு சாலை, விமான நிலையம், வங்கிகள், எல்.ஐ.சி என எல்லாவற்றையும் விற்கிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் விளக்கி கூறினார். அனைவரையும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

பாருங்கள்! பகிருங்கள்!!

இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

0

01.10.2022

இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில்
திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை!

புமாஇமு கண்டனம்!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கன அள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் காலாண்டு தேர்வில் கணிதத் தேர்வு (28.09.2022 அன்று) எழுதிவிட்டு வந்துள்ளார்கள்.

அந்த மாணவர்களை வழிமறித்து கணிதம் தொடர்பான கேள்விகள் எழுப்பியதாகவும் அதில் மாணவர்களுக்கு கணித அறிவு இல்லை எனவும், காரணம் மாணவர்களே சொன்ன அடிப்படையில், ஆசிரியர் விடைகளை கரும்பலகையில் எழுதி விட்டார் என்பதுதான் அது.

அதனால் மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வியில் சீரிய முறையில் கற்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கும் மல்லுப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த சுற்றறிக்கையின் கீழ்ப்பகுதியில் எந்தெந்த மாணவர்களிடம் ஆய்வு நடத்தினோம் என  பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட சுற்றறிக்கை என்பதே கடும் கண்டனத்திற்குரியது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கணிதத்தில் திறன் இல்லை என்றால் அது மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் உற்சாகமூட்டக்கூடிய கல்விச்சூழல் சார்ந்தது. இதை மேம்படுத்துவது எப்படி என அரசு யோசிக்காமல் இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்றை இடையில் நுழைக்கிறது.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு ஏராளமான பணிகளை செய்கிறார்கள்; அவர்களால் முடியும்போது ஏன் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் முடியாது? என சிலர் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள். பல்வேறு கணக்கெடுப்பு பணிகள், நிர்வாகப் பணிகள் என செய்து கொண்டு சரியாக கற்பிக்க முடியாதா? என கேட்பதுதான் அதன் சாரம்.

படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

தனியார் பள்ளிகளில் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கட்டாயம் சென்று விடுவார்கள். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மேற்கண்ட பணிகளின் போது வகுப்புக்கு செல்ல முடியாது. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியை எடுத்துக் கொண்டால் ஒருவர் அலுவல் வேலையாக சென்றால் கூட ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கற்பித்தல் தடைபடும்.

இங்கேயே ஆசிரியர்கள் மாணவர்கள் இடையிலான தொடர்ச்சி விட்டுப் போகிறது. இந்த நிர்வாக வேலைகளை குறைப்பதற்கோ இல்லை ஆசிரியர்களிடம் கற்பித்தலில் குறைபாடு இருக்கிறது என்றால் அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது பற்றியோ இந்த அரசு யோசிக்கவில்லை.

உற்சாகமூட்டும் கற்பித்தல் முறையும் பள்ளி சூழலும் இருக்க வேண்டும். அது மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தும். ஆனால் உற்சாகமூட்டும் கற்பித்தல் முறையை பற்றி அரசு சிந்திப்பதில்லை. பள்ளிகளில் முறையான கட்டிட வசதிகள்,  போதுமான ஆசிரியர்கள் எண்ணிக்கை, சுகாதாரமான வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறைகள்,  சுகாதாரமான குடிநீர் வசதி, முறையான விளையாட்டு மைதானங்கள், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் என அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்கள் உற்சாகமான மனநிலை என்பது இல்லாமல் உள்ளது.

சமீபத்தில் கூட 5,583 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட குழு அமைக்க வேண்டும் என செய்திகள் வெளிவந்தன.

இவ்வளவு மோசமாக கட்டிடங்களை வைத்துக்கொண்டு அதை கவனிக்காத அதிகாரிகளின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? இல்லை தற்போது மாணவர்களின் பெயர்களை வெளியிட்டார்கள் அதுபோல அதிகாரிகளின் பெயரை வெளியிட்டிருப்பார்களா? கட்டிடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் படுகொலைகள் செய்யப்படுவது இல்லாமல் நின்றுவிட்டதா என்ன?

இப்படித்தான் பல்வேறு அரசு துறைகளும் சீரழிந்து போய் கிடக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்றை ஆரம்பித்தற்கான காரணம் மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் கல்வியில் இருந்து பாதிக்கப்பட்டார்கள் அதை முறைப்படுத்த தான் என்றார்கள். அதற்கு ஆறு மாதம் செலவாகும் என்றார்கள். தற்போது ஒரு வருடத்திற்கு மேலாக இல்லம் தேடிக் கல்வி என்ற ஒன்று நீண்டு கொண்டே செல்கிறது.

படிக்க : பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுதான் அரசுப் பள்ளிகளை ஒழித்து விடத் தொடங்கும் புதிய கல்விக் கொள்கையின் தொடக்கம். இந்த செயலை எனது புமாஇமு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசுப் பள்ளிகளையும் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஒட்டுமொத்தமாக தனியார்மயத்தையும் கார்ப்பரேட்மயத்தையும் ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை உழைக்கும் மக்களின் மாணவர்களை ஒட்டுமொத்தமாக கல்வியில் இருந்து அப்புறப்படுத்தக் கூடியது.

இல்லம் தேடிக் கல்வியின் மூலம் புதிய கல்விக் கொள்கையை ஊக்கப்படுத்துவதையும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கைகளையும் தடுத்து நிறுத்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கொண்ட கூட்டமைப்புகளை உருவாக்குவோம்! கல்வி என்பதை சேவையாக அனைவருக்கும் இலவசமானதாக மாற்றி அமைக்கும் போராட்டங்களை முனனெடுப்போம்.


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

2015 ஆம் ஆண்டு இன்னொரு செய்தி சேகரிப்பிற்கான அவனிடம் மீண்டும் விரிவாகப் பேச வேண்டி இருந்தது. அந்த வழக்கைப்பற்றி நான் எதுவும் எழுதப்போவதில்லை என்றாலும் திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைகளை முழுமையான உணர்வதற்காக முழுமையாக் கேட்டறிந்தேன்.

மூன்று ஆண்டுகள் கழித்து கொலம்பிய பல்கலைக் கழகத்தில் பத்திரிகையியலில் பட்டம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது அவனுடைய பயோடேட்டாவையும் அனுப்பி வைத்தேன். இந்துத்துவ போராளிகளும் இந்தியா முழுமையுமான அவர்களின் செயல்பாடுகளும் என்ற தலைப்பிற்கு தேவையான கண்ணோட்டத்தை நான் பிரேமியிடமிருந்து பெற முடியும் என்றே தோன்றியது. என்னுடைய கோரிக்கை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் ஒரு இந்து வாகன ஓட்டுனர், இந்து உதவியாளர் ஆகியோரை கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்தக் கட்டுரையானது 2020 ஏப்ரலில் வயர்ட் இதழில் வெளியாகியது.

பிரேமியும் அவனது கூட்டாளிகளும் என்னை எனக்கான இடத்திலேயே வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். முசுலீம்களைப் பற்றிய இந்து மேலாதிக்க கருத்துக்களை அவனுடன் பல சுற்றுக்கள் பேசிய பின்னரே அறிய முடிந்தது. 16 ஆம் நூற்றாண்டு, முகலாய அரசர் பாபர் காலத்திலிருந்து இந்து வன்முறை – இசுலாமிய ஏகாதிபத்தியம் தொடங்கப்பட்டது.

இது இந்துக்களின் அடையாளங்களை அழித்தது, பலரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தது. அனைத்து முசுலீம்களும் இந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக ரகசிய ஜிகாத்தை மேற்கொள்கின்றனர். சுனார் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த பிரேமி, சாதி உருவாக்கமே இசுலாமியமயத்தால் உருவானது என்ற கருத்தையும் கொண்டிருக்கிறான்.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

ஒருமுறை அவன் மற்றும் அவனது நண்பனான ராணாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ராணா “அலி ஜி, நீங்கள் ஏன் உங்கள் சமூகமான முசுலீம்களைப் பற்றிப் பேசுவதில்லை? இந்த நாட்டில் அவர்கள் பதட்டத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் தாய் நாட்டை வணங்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதில்லை” நெருப்பு தெறிக்க அவன் பேசினான்.

இன்னொருவனோ “இங்கே பெரும்பாலான கிரிமினல்கள் முசுலீம்களாக இருக்கின்றனர். அவர்கள் இந்துக்களுக்கு வெறுப்பினை உண்டாக்குகிறார்கள். முடிந்த அளவுக்கு நாங்கள் அமைதியாகவே இருக்கிறோம். நாங்கள் எதாவது எதிர்வினையாற்றினால் மதசார்பற்ற ஊடகங்களோ எங்கள் மீது பழி சுமத்துகின்றன.”

என்னை முசுலீம் சமூகத்தின் செய்தித்தொடர்பாளரைப் போன்று அணுகி இத்தகைய கேள்விகளைக் கேட்டனர்.

”முசுலீம்கள் இங்கே எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இங்கே வாழ வேண்டும் என்றால் பெரிய சகோதரர்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது பெரிய சகோதரர்களின் கடமையாகிவிடும்.” திடீரென ராணா தன் குரலை உயர்த்தியபடியே கத்தினான்” அவர்கள் இங்கே வாழ்கிறார்கள், ஆனால் பாகிஸ்தானுக்காக பிரார்த்திக்கிறார்கள், இங்கே உணவருந்துகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் நலனுக்காக பாடுகிறார்கள்.”

இப்படிப்பட்ட அசாதாரணமான சூழல்களில் நான் தலைகுனிந்துவிடுவேன் என்னுடைய ஆற்றாமையை எண்ணி. தலை குனிந்து, என்னுடைய உணர்ச்சிகளை சோதித்தவாறே அனைத்தையும் குறிப்பேட்டில் பதிவு செய்வேன். பல நேரங்களில் என் போனை எடுக்கும்போது பிரேமி “ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ராமனைப்போற்று” என்பான். நானும் சில நேரம் நகைச்சுவைக்காக “ஜெய் ஸ்ரீ ராம்” என்பேன். இந்த வார்த்தைகளைத் தான் இந்து வெறியர்கள் கூட்டு கும்பல் தாக்குதல்களின் போது ஆக்ரோஷமாக முழங்குவார்கள்.

அந்த வெறுப்பானது மொத்த முசுலீம் மக்களின் மீதானது மட்டும் அல்ல; தனிநபர் மீதானதும் தான். என்னாலொரு பத்திரிகையாளனாக இதைக் கூறமுடியும். அதே நேரத்தில் பிரேமி மற்றும் அவனது கூட்டாளிகளுடனான நல்லுறவை என்னால் கைவிட முடியவில்லை. ஒருபுறம் அவர்களை புரிந்துகொள்ளவும் அவர்களின் எண்ணங்களையும் ஆழமாக உணரவும் நான் நிர்பந்திக்கப்பட்டேன்.

இன்னொரு முறை அவனை சந்திக்கும் போது “இந்தியாவை இந்து அடிப்படைவாத நாடாக்குவதற்கு இந்துத்துவ போராளியாக வேலை செய்கிறாய்” என்று கூறியிருக்கிறேன்.

இன்னொரு புறமோ, என்னுடைய அறிக்கையை ஆச்சரியப்படத்தக்க வகையில் நான் வித்தியாசமானதாக்க வேண்டும் அப்போது தான் அதை படிப்பவர்கள் விரும்புவர். புகழ்பெற்ற அமெரிக்க இதழில் என்னுடைய கட்டுரை வெளியாக வேண்டும். இது எம்மாதிரியான விளைவை சமூகத்தில் ஏற்படுத்தும்? பிரேமி இன்னமும் புகழ் பெற்றவனாவானா? அவனை நியாயப்படுத்தும் ஒன்றாகிவிடுமா?

சர்வதேச ஊடகங்களைப் பொறுத்தவரை, பிரேமியிடம் நான் மேற்கொண்ட புலனாய்வனதுதான் இந்து வலதுசாரி அமைப்பின் உள்ளார்ந்த நடவடிக்கைகளை விளக்கும் முதல் கட்டுரையாக இருக்கும். பிரேமி தொடக்கம் முதலே இக்கட்டுரை எப்படிப்பட்ட எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். பதிப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்த புகாரையும் அவனே தெரிவித்தான்.

ஆனால் , பிரபலமடைந்ததற்காக பஜ்ரங் தள் தொண்டர்களால் அக்கட்டுரை மிகவும் மகிழ்ச்சியாக பரவலாக ஷேர் செய்யப்பட்டது. முகநூலில் இக்கட்டுரைக் குறித்த ஒரு கமெண்ட் இவ்வாறு வந்திருந்தது ”பிரேமியைப் போன்ற சிங்கங்கள் ட்ரம்பின் அமெரிக்காவில் கூட நமது கொடியை பறக்க விட்டிருக்கிறார்கள்” என்று.

வயர்ட்-ல் கட்டுரையானது பதிப்பிக்கட்ட பின்னர் இந்தியாவில் விதைக்கப்பட்ட வெறுப்புணர்வு குறித்த பிரச்சினையானது வெளிச்சத்துக்கு வந்தது. முசுலீம்கள் பாதிக்கப்பட்ட பிரச்சினை குறித்து பல இடங்களில் பேசினேன். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் நான் அசாதாரணமான சூழலில் இருப்பதாக உணர்ந்தேன்.

ஓவ்வொரு நாளின் முடிவிலும் அவர்களின் அபாயகரமான நடவடிக்கைகள் குறித்து அச்சமடைந்தேன். வன்முறை மிகுந்த இந்துத்துவ தத்துவத்தை அதன் இயக்கத்தவர்களோ மனிதமயமாக்கல் என்று கூறுகின்றனர். ஊடகங்களோ வன்முறை நிகழ்ச்சிகளுக்காக ஏங்குகின்றன.

இக்கட்டுரைய உருவாக்க எத்தனை தடைகளை, இழுத்தடிப்புகளை தாண்டி வந்திருக்கின்றேன்.ஆனாலும் நான் குற்ற உணர்வுடனும் வெட்கமாகவும்தான் உணர்கின்றேன். மீண்டும் இதுகுறித்து எழுதுவதற்கு எவ்வித விருப்பமின்றிப்போனேன்.

சமீபத்தில் Condé Nast  என்ற நிறுவனம் என் கட்டுரை குறித்து டாகுமெண்டரி படம் எடுக்க விருப்பம் தெரிவித்தது. பிரேமி இதை விரும்புவான எனத்தெரியாமல், அவனுக்கு இச்செய்தியை அனுப்பினேன். அவனோ கிஸ்ஸிங் எமோஜிகளை எனக்கு அனுப்பினான்.

முடிவுற்ற உணர்வு

2017-ல் இந்து மதவெறியர்களுக்கு எதிராக குரல்கொடுத்த காரணத்தால் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார். இச்செய்திக்குப் பிறகு எனக்கு முதல் இந்து அமைப்பினரிடம் இருந்து கொலைமிரட்டல் வந்தது. முதல் கொலைமிரட்டல் வந்ததும் வீட்டை மாற்றினேன். நடந்து செல்வதை தவிர்த்தேன். தொடர்ந்து ஒரு மாநிலத்தில் வசிப்பது பற்றி கவலையுற ஆரம்பித்தேன்.

பொது மக்களிடையில் நடந்து செல்லும்போது அடிக்கடி திரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு திரும்பி வந்த பின்னர் பூட்டினை பலமுறை சோதனை செய்தேன். ஏன் நான் டெல்லியிலிருந்து நியூயார்க் சென்ற பின்னரும் கூட நடு இரவில் எழுந்து பலமுறை பூட்டினை சோதித்துக் கொண்டு இருந்தேன். சர்வ்வல்லமை பொருந்திய யாரோ என்னை தாக்குவதற்காக பின் தொடர்கிறார்கள் என்ற அச்ச உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது.

பிரேமி என்னுள் இருந்த அத்தியாவசியமான ஒன்றை நொறுக்கிவிட்டான். நான் இந்தியாவிடம் இருந்து அன்னியப்பட்டு இரண்டாம் தர குடிமகன் என்ற நம்பிக்கையே என்னுள் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக இருக்கும் போது பிரேபி சொன்னான் “அலிஜி ஒரு நாள் வரும். உங்கள் சந்ததியினர் இங்கு வாழ வேண்டும் என்றால் அனைவரும் மதம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைவரும். அதை காண நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அது கண்டிப்பாக நடக்கும்.”

பிஜேபி மேலும்மேலும் வளர்ந்து தன் பலத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. செய்தி சேனல்களோ தங்களது வணிகத்திற்காக வெறுப்பு செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றன.

முசுலீம்கள்  குறிவைக்கப்பட்டு அவர்கள் மீதான அமைப்பாக்கப்பட்ட தாக்குதல்களும் மைக்ரோ அளவிலான முரட்டுத்தனமான சம்பவங்களும் மென்மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.

ப்ரேமியும் அவனது கும்பலும் சொன்னவை எல்லாம் நடந்துவிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் ஆதரவற்று இருக்கிறேன். பிரேமியினுடைய மற்றும் அது போன்ற வீடியோக்கள் சாதாரண இந்து குடும்பங்களின் வாட்ஸ் அஃப்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. ஒரு சராசரி இந்து பிரேமி மற்றும் அவனது கும்பல் போல எப்படி மாறுவான் என்பதை நினைக்கையில் என் இதயம் வெடித்து சிதறுகின்றது.

இந்தியாவில் சுயமரியாதையுடனும் கவுரவத்துடனும் கூடிய வாழ்க்கையை வாழ்வோம் என்ற கனவு இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.

மோடியின் இந்தியாவின் முசுலீம்கள் வாழ்வது என்பது கனவுதான். முசுலீம் ஊடகவியலாளர்கள்தான் இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதில் முன்வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் நினைத்தபடி எதையும் எழுத முடியாது. ஏனென்றால் அதுதான் அவர்களின் விதி.

பல முசுலீம் ஊடகவியலாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கின்றனர். அவர்கள் தங்கள் அடையாளத்தை காட்ட முயன்றால் அவர்களின் அடையாளம் சிதைக்கப்படும். என்னால் இந்த உண்மைகளை வெளிப்படையாகவும் உரத்தும் சொல்ல முடியும். ஏனெனில் மோடியின் கட்டைவிரல் ரேகையின் ஆட்சிக்குக்கீழ் இருக்கக்கூடிய இந்திய ஊடகத்துறையில் நான் இனி பணியாற்றப் போவதில்லை.

சில முசுலீம் பத்திரிகையாளர்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுகிறார்கள், வலிமிகுந்த இருண்ட காலத்தில் வாழ்ந்த படியே. ”இந்திய ஊடகங்கள் பெருந்தொற்று காலத்தில் மோடி அரசின் தவறான நிர்வாக நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்கான வெண்டிலேட்டராக செயல்படுகின்றன” என்று எனக்கு அளித்த பேட்டியில் சி.என்.ரானா அயூப்  தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்தை பல பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் ஆதரித்தாலும், பல பார்ப்பன பத்திரிகையாளர்கள் அவரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். பெரும் அச்சுறுத்தல் மற்றும் அபாயங்களுக்கு மத்தியில் சில வருடங்களாகவே மோடி ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்திய ஊடகங்களானவை, அதிகார தாழ்வாரத்தையே உறுதியாகப் பிரதிபலிக்கின்றன. அவை ஆதிக்கச் சாதி ஆண்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இப்போது சில தளவுகள் இருக்கலாம். ஆனால் ரானா மற்றும் தலித்துகள், முசுலீம்கள், ஆதிவாசி பத்திரிகையாளர்கள் குறைவான அளவில் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். மீடியாக்களோ மோடியின் நல்லாசிகளின்றி உயிர் வாழ முடியாத நிலையில் இருக்கின்றன.

சுதந்திர சிந்தனை மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்க்ள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் முசுலீம்கள் மீதான படுகொலைகளைக் கண்டிக்கின்றனர். அவர்கள் முசுலீம் பத்திரிகையாளர்களுக்கு உரிய இடம் கொடுத்து உண்மைகளை பேச வைக்கின்றனர்.

பல ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளிப்படையாக மோடியை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் மோடியின் தவறான நிர்வாகத்திறனை தங்கள் திறமையால் மூடி மறைத்தனர். வலதுசாரி கும்பலால் ஊடகத்துறை தாக்கப்படுவதற்கு மோடி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

படிக்க : நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சிலநேரங்களில், இந்திய முசுலீம்கள் இந்துராட்டிரம் அல்லது இந்துக்குடியரசில் வாழ்வது பற்றி கனவு காண்கிறார்கள். அந்தக்கனவு நிறைவேற வேண்டுமானால், அது அவர்களின் சுயமரியாதையை இழக்கப்பட்டதால் மட்டுமே இருக்க முடியும்.

காஷ்மீர், அசாம், குஜராத் மாடல்களை ஏற்கனவே இந்திய முசுலீம்கள் கண்டுவிட்டனர். சார்பு, பிரித்தல், வன்முறை ஆகியவற்றை மேற்கொள்ளும் இந்து பெரும்பான்மை வாத எழுச்சியின் போது  எவ்வித உதவியுமற்றிருப்பதை பார்க்க மட்டுமே நம்மால் முடியும். முசுலீம் உடல் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்தான் ஏகாதிபத்தியத்தின் விருப்பமாகும்.

மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். இந்தியாவில் ஒருமுறை கவுரவம் மிக்க வாழ்வை இழந்து விட்டால் மீண்டு வருவது கனவில் கூட சாத்தியம் இல்லை. திரும்பி வருவதற்கான வாய்ப்பே இல்லை.

என்னுடைய நாடும் எப்போது வேண்டுமானாலும் சிதைக்கப்படலாம். என்னுடைய தாய்நாடு அவநம்பிக்கையுடையதாகி விட்டது. நாங்கள் நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை எண்ணுகையில் வலியும் வேதனையும் என்னுள் பெருக்கெடுக்கிறது. நம்பிக்கையின் மரணம் என்றால் என்ன என்பதை கண்டிப்பாக நம்மால் உடனே புரிந்து கொள்ளமுடியாது.

(முற்றும்)

முகமது அலி (இந்து மேலாதிக்கம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.)

India’s transformation under Narendra Modi என்ற புத்தகத்தை எழுதி வருகிறார்.
thebaffler.com என்ற தளத்தில் The Scream என்ற தலைப்பில் வெளியான ஆங்கில கட்டுரை

தமிழாக்கம் : மருது

நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

01.10.2022

நவம்பர் 06 –  தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த பாசிச ஆர்.எஸ்.எஸ்.க்கு
அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

இது தமிழினத்துக்கு விடப்பட்ட சவால்!
பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடுத்து நிறுத்துவோம்!

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அமைப்புகளை தடை செய்
எனும் முழக்கம் தமிழ்நாடெங்கும் பரவட்டும்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தது. தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது பாசிச ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழக்கினை பரிசீலித்த நீதிமன்றம் அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அதே அக்டோபர் 2-ம் தேதி மதநல்லிணக்க பேரணி நடத்துவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். தொல்.திருமாவளவன் அவர்களுடைய அறிவிப்பினை தமிழ்நாடே உளப்பூர்வமாக ஏற்று ஆதரித்தது. தமிழ்நாடு அரசும் சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதித்தது.


படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!


தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ் தொடுத்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பான, வருகின்ற நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு குண்டுவெடிப்புகள், பல்வேறு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டிய ஒரு அமைப்பு.

அப்படிப்பட்ட ஒரு அமைப்புக்கு பேரணி நடத்த அனுமதி கொடுத்ததன் மூலம் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் சாதி – மதக் கலவரங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் எதிராகவும் உள்ள இந்தத் தீர்ப்பை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மேலும் நவம்பர் 6-ம் தேதி பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம்  கேட்டுக்கொள்கிறது.

நீதித்துறை, போலீஸ், ராணுவம் நிர்வாகம் என சகல துறைகளிலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத – ஆரிய –  பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.


படிக்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்


ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்து மதவெறி பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஒருவேளை நீதிமன்ற மிரட்டலால் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை எப்பாடுபட்டாவது தமிழ் நாட்டு மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

ணிரத்தினம் மற்றும் அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் இவர்கள் சம்பாதிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக- ஒரே நோக்கத்திற்காக- எதோ ஒரு கதையை எடுத்து, இந்த கதைதான் தமிழர்களின் வரலாறு என்று காட்டுகிறார்கள்.

இந்த படத்தின் விளப்பரத்தில் ஜெயம் ரவி கூறுவார், நான் சோழ தேசத்தின் காவல்காரன். சோழ மக்களுக்கு வேலைக்காரன் என்று. இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு நியாயமான விசயமாக இருக்கிறதா?

ஒரு மன்னன் எந்த காலத்தில் தன்னை வேலைக்காரன் என்று சொல்லியிருக்கிறான். அப்படி சொல்லியிருந்தால் அவன் மன்னனாக இருக்கமுடியுமா? பொய்யையும் புனை சுருட்டையும் வைத்துக்கொண்டு வரலாற்றை இவர்கள் எழுதுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்த பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஒரு மிகப்பெரிய பிராடு! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அந்த நாவலின் ஒரு மையமாக விசயம் என்னவென்றால், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டுகிறார். அவரை கொன்றது யார் என்பது மிகவும் முக்கியமான அம்சம்.

பார்ப்பனர்களுக்கு ஆதித்த கரிகாலன் கட்டுப்படவில்லை என்ற காரணத்திற்காக பார்ப்பனர்கள் அவரை கொன்றுவிட்டார்கள் என்று பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதனை மறைந்து பாண்டியர்கள் தங்கள் ஒற்றர்கள் மூலம் ஆதித்த கரிகாலனை கொலைசெய்தார்கள் என்ற ஒரு பொய்யை அந்த கதையில் வைத்திருக்கிறார்கள்.

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

இவர்களுக்கு எதிரான வரலாற்றை, வள்ளலார் முதல் பெரியார் முதல் சித்தர்கள் முதல் நமக்காக உருவாக்கி தந்த பல்வேறு வரலாற்றை நாம் பின்பற்றவேண்டும். பொன்னியில் செல்வனை தூக்கி குப்பையில் வீச வேண்டும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை:
‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!

“நாம் பல சமயங்களில் பெண்களை அவமதிக்கிறோம். இந்த மனநிலையை ஒழிக்க நாம் உறுதி ஏற்போமா? நம் தேசத்தின் கனவினை நிறைவேற்ற பெண்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியம். நாம் ‘பெண் சக்தியை’ ஆதரிக்க வேண்டும்”. 76வது போலி சுதந்திர தின நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரை இது.

பெண்களுக்கு மதிப்பளிப்பது குறித்து அவர் பேசிய அதே நாளில், 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலையின்போது, பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான அக்குற்றவாளிகளை ஆரத்தி எடுத்து, ஆரத்தழுவி வரவேற்றதோடு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியது விஷ்வ இந்து பரிஷத்.

இவர்களின் விடுதலை நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்டு பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 2008 ஆம் ஆண்டு இக்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யு.டி.சால்வி குஜராத் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான முடிவு என 134 முன்னாள் சிவில் அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்; குற்றவாளிகளின் விடுதலையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட 6,000 பேர் உச்சநீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர். சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நியாயமற்றது எனக் கூறி, இந்தியாவின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

படிக்க : காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

இதேநேரத்தில், பில்கிஸ் பானு தற்போது வாழ்ந்துவரும் ரந்திக்பூர் பகுதியில் இஸ்லாமிய மக்கள் வீடுகளை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக பிபிசி கள ஆய்வு கூறுகிறது. நாட்டையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைக் குற்றவாளிகள், சட்டப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது இசுலாமிய மக்கள் மனதில் ஒருவித அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

***

2002 பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் கொளுத்தப்பட்டது. அதில் பயணித்த கரசேவகர்கள் பலரும் பலியாகினர். காவி கும்பலே திட்டமிட்டுச் செய்த இச்சதிச் செயலை இசுலாமியர்கள் மேற்கொண்டதாகக் கூறி, குஜராத் முழுவதும் மிகப் பெரிய இனப் படுகொலையையே நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இக்கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

அக்கலவரத்தின் போது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களில் பில்கிஸ் பானு குடும்பமும் ஒன்று. காவி குண்டர்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணி என்றும்கூட பாராமல், கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவரது தாய் உட்பட குடும்பத்தில் இருந்த அனைத்துப் பெண்களும் காவி மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

வன்புணர்ந்து வீசியெறியப்பட்டதில் உயிர்தப்பித்த பில்கிஸ் பானு, காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக விடாப்பிடியாக நடத்திய போராட்டத்தின் விளைவாய் 2008 ஆம் ஆண்டு 11 குற்றவாளிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அவரின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டவர்களைத்தான் தற்போது ‘நன்னடத்தை’ அடிப்படையில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு.

***

2002 ஆம் ஆண்டு அமலிலிருந்த, தண்டனைக் குறைப்புக் கொள்கை 1992-ஐ அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளை விடுதலை செய்ததது குஜராத் அரசு. 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த குற்றவாளியின் விடுதலையைப் பரிசீலிக்கலாம் என்று கூறும் கொள்கைக் குறிப்பில், குற்றப் பின்னணியைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை.

2014ல் உள்துறை அமைச்சகம் இக்கொள்கையில் சில மாற்றங்களைச் செய்து நடைமுறைப்படுத்தியது. அதில் பாலியல் வன்கொடுமை அல்லது கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியற்றவர்களாக வரையறுத்தது. இதன்படி பார்த்தால் அந்த 11 பேரையும் விடுதலை செய்ததே சட்டவிரோதமாகும்.

சட்டத்தை மீறி, அக்கொடூரக் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளதை, தண்டனை வழங்கிய மும்பை நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ கண்டிக்கவில்லை. இந்நிலையில், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (முன்னாள்) என்.வி.ரமணா, 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகளின் விடுதலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததே உச்சநீதிமன்றம்தான் என்பதே உண்மை.

11 குற்றவாளிகளில் ஒருவன் தண்டனைக் குறைப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, கடந்த மே 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றச் சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது; எனவே குற்றவாளிகளின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தகுதியானது குஜராத் அரசுதான்; குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியபோது நடைமுறையில் இருந்த 1992ஆம் ஆண்டு தண்டனைக் குறைப்புக் கொள்கையின் கீழே மனுவை பரிசீலிக்கலாம்” என்று உத்தரவிட்டதே உச்சநீதிமன்றம்தான்.

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு அக்குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று அரசிடம் முன்மொழிந்தது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே காவி கும்பல், உச்ச நீதிமன்றத்தோடு சேர்ந்துகொண்டுதான் அக்காவி பயங்கரவாதிகளை விடுவித்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தனக்கும் அவ்விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் நாடகமாடுகிறது.

***

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவித்திருப்பதை எந்த நாட்டு அரசுகளும் நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளாது. உலக அளவிலேயே, பில்கிஸ் பானு தீர்ப்பு இந்தியாவின் நீதி பரிபாலன முறை பற்றி கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவை இன்னமும் மதச்சார்பற்ற – ஜனநாயக நாடாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமானால் இவ்விடுதலை குறித்து அதிர்ச்சியடையலாம், ஆனால் நம் நாட்டு அரசின் தன்மை எப்போதோ மாறிவிட்டது.

பெயரளவிலான ஜனநாயக ஆட்சியின் கீழ் கூட நாம் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்படாத இந்துராஷ்டிரக் கொடுங்கோல் அரசின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பார்ப்பன பாசிசம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் தோற்றத்திலேயே, கொடும் மனுநீதி நீதி, நீதிபரிபாலனம் செய்துகொண்டிருக்கிறது.

குற்றவாளிகளின் விடுதலையைப் பரிந்துரைத்த ஆலோசனைக் குழுவில் இருந்த பத்து பேரில் ஐந்து பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்; இருவர் பாஜக எம்.எல்.ஏ.க்கள், ஒருவர் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர், இருவர் பாஜகவுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்கள்.

நன்னடத்தையின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அந்த ‘நன்னடத்தை’ என்னவென்று ஆலோசனைக் குழுவில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராகுல்ஜி கூறுவதைக் கேளுங்கள்; இது சாதிக்கொரு நீதி எனும் பார்ப்பன மனுநீதியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று தெரியவரும் :

“அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. அவர்கள் குடும்பத்தின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம் (மதிப்புகளை) உடையவர்கள்” எனக் கூறியுள்ளார் ராகுல் ஜி.

படிக்க : பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

“எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக” என்கிறது மனுநீதி (மனு 8:378). அதுதான் ஆலோசனைக் குழுவால் நன்னடத்தைக்கு உரிய தகுதிப்பாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்துராஷ்டிரத்திற்குள்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லும்போது மிகைப்படுத்திக் கூறவில்லை. இன்று அது எதார்த்த உண்மையாகிவிட்டது.

இதே குஜராத் கலவர வழக்கில், குற்றவாளியான மோடி விடுவிக்கப்பட்டுள்ளார்; மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த காரணத்தினாலேயே சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் கைதுசெய்யப்பட்டுள்ளார்; மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள் என்று கைதுசெய்யப்பட்ட அறிவுத்துறையினரும் செயல்பாட்டாளர்களும் நிரபராதிகள், சதி செய்தது புனே போலீசுதான் என்று அம்பலமான பின்னரும் எந்த நீதிமன்றமும் வாய் திறக்கவில்லை; முகமது ஜுபைர் உள்ளிட்டு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினரை அம்பலப்படுத்திய எண்ணற்ற பத்திரிகையாளர்கள் பொய்வழக்கு போட்டு கைதுசெய்யப்படுகிறார்கள்; இசுலாமியர்களின் வீடுகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்படுகிறது.

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது தனிப்பட்ட நிகழ்வல்ல, இந்துராஷ்டிரத்தில் பெண்களுக்கு இனி இதுபோன்ற நீதிதான் வழங்கப்படும் என்பதற்கான தொடக்கம் இது. இதை நாம் இந்த கண்ணோட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்துராஷ்டிரத்தைத் தகர்த்தெறியாமல் ஜனநாயகமான சமூகத்தில் வாழமுடியாது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.


அறிவு

சனாதனத்தின் வீழ்ச்சியே பாசிசத்தின் வீழ்ச்சி! | தொல்.திருமாவளவன் | வீடியோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய உரையில், இந்தியாவை சூழ்ந்துள்ள பிரச்சினையை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி அடையாளப் படுத்துகிறோம். இந்துத்துவ கருத்துதான் பேராபத்து என்கிறோம். பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.யும் வீழ்த்த வேண்டும். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்.க்கு துணையாக இருக்கும் அம்பானி – அதானியையும் வீழ்த்த வேண்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கதான் இந்த மாநாடு.

பாசிசம் என்பது என்ன? இந்துத்துவம் தானா? இந்துராஷ்டிரம் தானா? சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவர்கள் பரப்பும் அரசியல் தானா? முஸ்லீம் எதிர்ப்பு, கிறிஸ்துவ எதிர்ப்பு? இவை அனைத்தும் உண்டு.

சனாதனம் என்பது தான் பாசிசம். இந்தியாவை பொருத்தவரை பாசிசம் என்றால் சனாதனம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சனாதனம் தானே? எப்படி பாசிசம் என்று கேட்கலாம். ஹிட்லர், ராஜபக்சே, மோடி பின்பற்றும் பாசிசம் எல்லாம் ஒன்று தான்.

ஒரே இனம், ஒரே மொழி அதுதான் ஹிட்லர் வைத்தது. ராஜபக்சே முன் வைத்ததும் அதுதான். சிங்கள மக்களுக்குரியது அதுதான் ஒற்றை ஆட்சி என்றனர். அதுவும் இன அடிப்படையிலான, மத அடிப்படையிலான பாசிசம்.

இவர்களை பின்பற்றிதான் மோடியின் ஆட்சியும் பாசிசம் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி பன்மைத்துவத்திற்கு இடமில்லை. பாகுபாடுகள் நீடிக்கும் அது இறைவன் கட்டளை. பிறப்பின் அடிப்படையில், பாலினடிப்படையில் உள்ள பாகுபாடுகள் நீடிக்கும் என்பவர்கள்தான் இவர்கள். இதை கட்டிக்காப்பது தான் சனாதனம்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிதான் அடிப்படை கொள்கை. பாட்டளி வர்க்கத்தின் விடுதலைதான், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம்தான் அடிப்படை கொள்கை. இது நமக்கு கருத்தியல் முரண் இல்லை, கருத்து முரண்தான்.

மார்க்சிய இயக்கங்களும், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் ஈடுபடாத கட்சிகளாக இருந்தாலும் நமது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, நமது உடனடி பகை, நிறைய முரண் இருக்கலாம், நிறைய பகை இருக்கலாம். அடிப்படை முரணாகவும், பிரதான முரணாகவும் சனாதனமே இருக்கிறது என்பதை கூறினார். பாசிச எதிர்ப்பில் உங்களோடு கைக்கோர்த்து நிற்போம் என்ற உறுதியை தந்து விடைப்பெறுவதாக கூறினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!