13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு:
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?
25.06.2022
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி : ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை!
தேவை மன நல ஆலோசகரா? மாணவர் நலன் கொண்ட அரசா?
கடந்த ஜூன் 20-ம் தேதி 10,12-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைவாகப் பெற்றதாலும் விரக்தியடைந்த மாணவ, மாணவிகள் ஜுன் 21 அன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
பத்து நாட்களுக்கு முன்புதான் ஆந்திராவில் இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து 34 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை மீண்டும் நம் முன்னால் நிறுத்துகிறது தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
இதுபோக, பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வில் தமிழில் 47 ஆயிரம் பேரும் கணிதத்தில் 83 ஆயிரம் பேரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த நிலைமைகளைப் பற்றியெல்லாம் அமைச்சர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் மனநல ஆலோசகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தவறான முடிவு எடுக்க வேண்டாம்” என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்தப்பேச்சு எதைக் காட்டுகிறதென்றால், மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதாக மாணவர்கள்மீது பழியைப்போட்டு கல்வித்துறையின் நடவடிக்கைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பரிசீலிக்காமல் மூடிமறைத்து தங்களை கருணை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவதற்கான வேடத்தைத்தான்.
படிக்க :
♦ குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
♦ ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !
அமைச்சரின் பேச்சை கண்டித்து பெரிய அளவில் கண்டன குரல்கள் எழும்பாதது வேதனைக்குரிய விஷயம். இந்த எதிர்ப்புக் குரல்கள் இல்லாததால்தான் இவர்களால் கூச்சநாச்சம் இல்லாமல் இப்படியெல்லாம் மாணவர்கள்மீது பழியைப் போட முடிகிறது.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்வதே பெரிய அளவில் தடைபட்டது. ஆன்லைன் வகுப்புகள் பெரிய அளவில் பயன்தரவில்லை. பெரும்பாலான பெற்றோர்களால் ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர முடியவில்லை. மக்களின் வறுமைநிலை காரணமாக மாணவர்களும் கிடைக்கும் வேலைக்கு செல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுபோக கஞ்சா போதை பழக்கங்களுக்கும் ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையாகினர். கல்வியிலிருந்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் விலகி நின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அன்று வேடிக்கை பார்த்தது அரசு.
அதன்பிறகு கொரோனா காலகட்டம் முடிந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கொரோனா ஊரடங்கால், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளை தேடி, பெற்றோரும், மாணவர்களும் வருகின்றனர். அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்.
கொரோனா காலச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதியதாக 5.80 இலட்சம் உயர்ந்துள்ளது. இப்படி தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி இலட்சக்கணக்கான மாணவர்கள் வந்துள்ளனர். இந்த நிலைமைக்குப் பொருத்தமாக இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதன்பிறகு, மாணவர்களின் கற்றல் குறைபாட்டைப்போக்க இல்லம்தேடி கல்வி கொண்டுவருவதாக திட்டத்தை அறிவித்தார்கள். ஆசிரியர்கள், பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை காட்டிலும் இல்லம்தேடி கல்விக்கு மேற்பார்வையிட அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசால் நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் பள்ளிக் கல்வி பாதியில் பரிதவித்தது.
இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் ஒரு பக்கம் மாணவர்கள் வருகை அதிகம்; இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆசிரியர்களை மாற்று வேலைக்கு அனுப்பியது; இதெல்லாம் மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்பதுதான் எதார்த்தம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அதன்பிறகு தேர்வு நடத்துவதைப் பற்றி எந்த முடிவும் செய்யாமல்; அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கணிதம் போன்ற படத்தில் இவ்வளவு பேர் தோல்வி அடைந்து இருப்பது எதைக் காட்டுகிறது என்றால் மாணவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதுதான் எதார்த்தமாக தெரிகிறது.
இதுபோக, மாணவர்களின் நிலைமையை கணக்கில் கொள்ளாமல் கடினமான வினாத்தாள்கள் தேர்வில் கொடுக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் இந்தக் கல்வித் துறையின் அவலங்களை எழுந்து வந்து கேள்வி கேட்கப்போவதில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவர்களுக்கோ மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் அதற்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு கல்வித்துறை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத இந்த அரசுக்கு யார் மனநலஆலோசனை சொல்வது.
மனநல ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறுவதெல்லாம், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் கவனமாக பார்க்க வேண்டும்; பெற்றோர்கள் கவனமாக பார்க்க வேண்டும். இதுதான். அரசின் நடவடிக்கை பற்றி பேசுவதில்லை. பாதிப்பை ஏற்படுத்துபவனுக்கு ஆலோசனை இல்லை பாதிக்கப்படுபவர்களுக்குதான் ஆலோசனை என்ன மண்ணாங்கட்டி மனநல ஆலோசனையோ தெரியவில்லை!
தற்போதைய சூழலில் கல்வி என்பது மதிப்பெண் அடிப்படையிலேயே உள்ளது. அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தனி நபர் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும் அதைப்பற்றி ஏன் அரசு அக்கறை கொள்வதில்லை என பார்க்க மறுக்கிறார்கள்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கைகளை அரசு அனுமதித்த பிறகு கல்வி என்பது காசுக்காக விற்கப்படும் ஒரு பொருளைப்போல் ஆகிவிட்டது. அரசும் படிப்படியாக கல்வியில் இருந்து ஒதுங்கி கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல எங்கும் முளைத்துள்ளன. கடும் போட்டா போட்டியில் இறங்கி தங்கள் பள்ளிகள் இலாபம் சம்பாதிக்க கடும் போராட்டங்களை நடத்துகின்றனர். அதில், முக்கியமானதுதான் மதிப்பெண். மதிப்பெண்களை காட்டியே பெற்றோர்களை தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கின்றனர்.
பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணங்களை வசூல் செய்கின்றனர். தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும் அவர்களின் மதிப்பெண் முறையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு இதுநாள் வரை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தி வந்துள்ளது அரசு.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
இந்த ஒட்டுமொத்த போட்டாபோட்டியில் மக்களுக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் என்பதே முக்கியமானது என்ற சிந்தனையை ஆழப் பதிய வைத்துள்ளனர்.
இதனால் தேர்வுக்கு முன்பே அதிக மதிப்பெண் எடுக்க சொல்லி நிர்பந்தம் கொடுக்கிறார்கள். மதிப்பெண் எடுத்தால் மட்டும்தான்; இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு மாணவர்களைத் தள்ளியுள்ளியது தனியார்மயமும் அதை தீவிரமாக அமல்படுத்திய அரசும்.
கொரோனா காலகட்டம் இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது என்பதைத்தான் 12 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மாணவர்களின்மீது வன்முறையை நிகழ்த்தியுள்ள தனியார்மயத்தின்மீது நாம் வன்முறையை நிகழ்த்தும்போதுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை அமல்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசை தூக்கி எறிந்து மக்கள் நலன் கொண்ட அரசை நிறுவுவதன் மூலமே கல்வியை சேவையாக மாற்ற முடியும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கல்வியாளர்களின் கோரிக்கையும் கல்வி என்பது சேவை அது அனைவருக்கும் இலவசம் என்பதை உயர்த்திப் பிடிப்பதுதான். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கொண்ட கூட்டணியை உருவாக்கி எதிர்த்துப் போராடுவோம்.

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ
2002-ம் ஆண்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கலவரத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக; அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடி அவர்களின் பங்கு குறித்து விசாரிப்பதற்கென; தொடர்ச்சியாக ஒரு போராட்டத்தை, அந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜாஃப்ரியின் மனைவியும்; Communalism Combat என்ற மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகையை திறன்பட நடத்திவந்த திஸ்தா செதல்வாட் அவர்களும்; சட்டரீதியான தொடர் போராட்டங்களை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார்கள்.
அதன் இறுதியான போராட்டமாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் கலவரத்தில் மோடியுடைய பங்கு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவானது அறிக்கையை முன்வைத்ததை கீழமை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திருமதி ஜஃப்ரி அவர்களும் தீஸ்தா செதல்வாட்-ம் தொடர்ந்திருந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அவ்வாறு எஸ்.ஐ.டி என்ற சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது சரிதான்; இதில் மோடி அவர்களை அவசியமற்று பொய்யான முறையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதை பயன்படுத்தி நேற்றையதினம் குஜராத் காவல்துறை உடனடியாக ஒரு எஃப்.ஐ.ஆர்.-யை போட்டு தீஸ்தா செதல்வாட்-யும் முன்னால் டி.ஜி.பி.யும் நானாவதி கமிஷனில் மோடி அவர்களின் பங்கு குறித்து பிரமாண வாக்குமூலம் அளித்த ஸ்ரீகுமார் அவர்களையும் அவர்கள் கைது செய்துள்ளார்கள்.
அதேபோன்று ஏற்கனவே இக்கலவரத்தை முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்துவதை தடுக்க வேண்டாம் இந்து கரசேவகர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி கூறியதாக பிரமாண வாக்குமூலம் அளித்த சஞ்சிவ் பட், ஏற்கனவே பல ஆண்டுகளாக அவர் மீது புனையப்பட்ட ஒரு வழக்கில், மோடியை எதிர்த்தார் அமித்ஷாவை எதிர்த்தார் என்ற காரணத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதும் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு சிறையில் வைத்து இந்த வழக்கில் கைதுசெய்யவுள்ளதாக இன்றைய தினம் இந்த வழக்கை விசாரித்துவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு காவல்துறையின் அதிகாரி பேட்டியளித்திருக்கின்றார்.
குஜராத் கலவர வழக்கு தொடர்பான பல்வேறு விபரங்களை இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்
26.06.2022
குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது!
பத்திரிகை செய்தி
குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
படிக்க :
♦ தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
♦ தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?
இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது.
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
படிக்க :
♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
♦ தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்
இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன.
இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள், தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாடு மீளமுடியாத காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை கருத்திலும் களத்திலும் மோதி முறியடிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியதே உடனடிப்பணியாக இருக்க வேண்டும் என்றும் இதற்காக மக்கள் அணிதிரண்டு முன்வர வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
9962366321.
கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ
மோடி அரசு அக்னிபாத் என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய இராணுவத்தில் இளம் ரத்தத்தை பாய்ச்சுவது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற பெயரில் முழுக்க முழுக்க இராணுவத்தில் ஒரு காண்டிராக்ட் முறையை திணிக்கின்றது.
இந்த காண்டிராக்ட் முறை என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் காண்டிராக்ட் முறை என்பது இன்றைக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நிரந்த வேலை என்பதை நிரந்தரமாக ஒழிச்சிக்கட்டும் வேலையை இந்த மோடி அரசு செய்து வருகிறது. அதன் ஒரு நீட்சியாகத்தான் இன்று இராணுவத்திலும் நிரந்தரவேலை என்பதை ஒழித்துவிட்டு, காண்டிராக்ட் முறையில் ஆட்களை எடுப்பது என்ற முடிவிற்கு அரசு வந்துள்ளது. அதற்கு அக்னிபாத் என்ற ஒரு பெயரை வைத்துள்ளது.
நாடெங்கிலும் காண்டிராக்ட் முறை என்பது மோடி உருவாக்கிய திட்டமா என்றால் இல்லை. இது தனியார்மய தாராளமய உலகமய கொள்கையின் பின்புலத்தில் நடக்கிறது. இதில் உலக வங்கி உலக வர்த்தகக் கழகம் போன்ற நிறுவனங்களின் மூலம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றதோ அதைத்தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்தி வருகிறார்கள்.
இராணுவம் ஏதோ நாட்டுப்பற்று கொண்ட பணி என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அது நிரந்தர பணி அப்பளவுதானே தவிர, அதில் நாட்டுப்பற்று எல்லாம் ஒன்றும் கிடையாது.
உண்மையான நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் இராணுவங்கள் தற்போது எங்கும் இல்லை. ஆனால், முன்பு சோவியத் ரஷ்யாவிலும், மாசேதுங் சீனாவிலும் இருந்திருக்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது. பாசிச இட்லரை மண்ணைக்க வ்வ வைத்த போல்சுவிக் இராணுவம் அது.
இன்று, இராணுவங்கள் சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவதற்கும், அன்னிய நாட்டு மக்களை ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இது ஆளும்வர்க்கத்தின் வன்முறைகருவி அப்பளவுதான்.
அக்னிபாத் திட்டத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.
காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!
இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்: வெற்றிலையில் மை தடவினால் வெற்றி கிட்டுமா?
18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்துகொள்ள ஜப்பான் உள்ளிட்ட 13 அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 11 அணிகள் தகுதிசுற்று மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்காக கடந்த சில வாரங்களாக தகுதிசுற்று போட்டிகள் நடைபெற்றன.
தகுதிசுற்றில் டி பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் கொலம்பியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்று இருந்தன. கொல்கத்தாவில் உள்ள சால்ட் கால்பந்து மைதானத்தில் தகுதிசுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய அணிகளை எளிதில் வீழ்த்தியது.
மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 4-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதியையும் இந்திய அணி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்று இந்தியா சாதனை படைத்ததாக, இந்திய கால்பந்து ரசிகர்களும் இந்திய கால்பந்து சம்மேளனம் கடந்த சில வாரங்களாக பெருமை பேசி வருகின்றன.
படிக்க :
♦ திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு, தற்போது இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சில செயல்பாடுகளால் மிகுந்த நகைக்கக்கூடியதாக உள்ளது. இச்செயல்பாடுகள் சர்வதேச அளவில் இந்தியா கால்பந்து அணியை தலைகுணிய வைத்துள்ளதாக இந்திய கால்பந்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அப்படி என்னதான் செய்தது இந்திய கால்பந்து சம்மேளனம் என்று கேள்வி எழலாம். அதற்கான பதில் இதோ! கடந்த வாரம் பெற்ற இந்திய கால்பந்து அணியின் வெற்றி என்பது வீரர்களின் தகுதியாலோ; திறமையாலோ; பயிற்சி அளித்த பயிற்சியாளர்களின் உழைப்பாலோ கிடைக்க வில்லையாம். கால்பந்து அணிக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஒரு ஜோசியரின் உந்து சக்தியால்தான் இப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஒரு ஜோதிடர்தான். சுமார் ரூ.16 இலட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்தான் இந்திய கால்பந்து வீரர்களுக்கு உற்சாகமூட்டும் பல செயல்களில் ஈடுபட்டார். அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பால்தான் இந்தியா இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருக்கிறது என்றார். மேலும் அவர் அந்த பதவிக்கு நியமனம் செய்யும்போது அவர் ஜோசியர் என்பது தெரியாது என்றும் பின்னர்தான் அவர் ஜோசியர் என தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இத்தகைய செயலைகண்டு வருத்தமடைந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் தனுமாய் போஸ், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் இத்தகைய செயல் என்பது உலக அரங்கில் இந்தியாவை மிகப்பெரிய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி உள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் இருந்ததும் பல கால்பந்து தொடர்களை முடக்கியதும்தான் இந்திய கால்பந்து சம்மேளனம் செய்த சாதனை. தற்போது ஜோதிடர்களின் கைகளில் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை சம்மேளனம் ஒப்படைத்துவிட்டது என்பது நகைப்புக்குரியது. மேலும் இந்திய கால்பந்து கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்முறைகேடுகள் அறங்கேற்றப்பட்டு வருகிறது. அது தொடர்பாக கேள்வி கேட்பவர்கள் இந்திய கால்பந்து அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலின் உச்சம் பெற்ற ஒரு நடவடிக்கைதான் கால்பந்து போட்டியின் ஆலோசகராக ஒரு ஜோதிடரை நியமனம் செய்த விவகாரம் என்று கூறினார்.
இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான். கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது அயல்நாட்டு சொகுசு பயணத்திற்காக இந்த பணத்தை பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய கால்பந்து ஜோசியர் நியமிக்கப்படுவது என்பது இது ஒன்றும் புதியதல்ல; டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ஒன்று பாபா என்ற ஒரு சாமியாரை நியமித்தது டெல்லி அணி வெற்றி பெற்ற பிறகு அவரால்தான் இந்த வெற்றி நடந்தது என்று அந்த கிளப் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்று கூறினார் போஸ்.
உலகத்தில் உள்ள கால்பந்து சம்மேளனங்கள் அனைத்தும் தங்களது அணி வெற்றிபெற அறிவியலையும், தொழில்நுட்பங்களையும், தீவிர பயிற்சிகளையும்தான் நம்பி உள்ளன. அதன்மூலம் மட்டுமே ஒரு அணியின் வெற்றி அமையும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான செயல்பாடுகளில்தான் அனைத்து கால்பந்து அணியினரும் இருக்கின்றனர். ஆனால் இந்தியா அணிக்கான தலைமை ஜோதிடரை நியமித்து வெற்றிக்காக வெற்றிலையில் மை தடவி பாத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் இப்போது ஜோசியர் நியமனம் என்ற கூமுட்டை தனத்தைப்பற்றி கவலையும் அடைந்து வருகிறார்கள்.
ஏற்கனவே இதுபோன்ற ஓர் கூமுட்டை சம்பவம் உ.பி.யில் அரங்கேற்யுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 2,500 டன் தங்கப்புதையல் இருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற போலி சாமியார் கூறினார். அதைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவு செய்து அந்த இடத்தில் தோண்டி பார்க்கும்போது அங்கு கல்லும் மண்ணையும் தவிர வேறுஒன்றும் கிடைக்கவில்லை.
படிக்க :
♦ கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.
இதற்குமுன் ஸ்ரோ ஏவிய ராகேட்டில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து அனுப்பிய இந்திய அரசின் கூமுட்டை தனத்தை நாம் அறிந்திருப்போம். தற்போது விளையாட்டு துறையில் ஜோதிடரை நியமித்து விட்டார்கள். இனி விஞ்ஞானம், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இதுபோன்ற அறிவியல் அறிவற்ற ஜோதிடர்கள் நியமனம் செய்யப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரங்களில் உள்ள அறிவிளிகளின் கூமுட்டை தனங்களை முறியடிக்க, பகுத்தறிவு – முற்போக்கு எனும் ஆயுதங்களை ஏந்துவதை தவிர வேறுவழி ஒன்றும் இருக்க முடியாது.

வினோதன்
ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !
திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தில் இருந்து சென்ற முதல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடி மக்கள் எஃகு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களுக்காக அரசின் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலை விவசாயிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கும் பகுதிதான் திங்கியா. கடந்த பத்தாண்டுகளில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ (POSCO) மற்றும் இப்போது ஜிண்டாலுக்கு சொந்தமான JSW உட்கல் ஸ்டீல் லிமிடெட் (JUSL) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக விளங்குகிறது திங்கியா.
கடந்த ஆறு மாதங்களில், எஃகு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 60 பேரை போலீசு கைதுசெய்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை போலீசு ஏவி வருகிறது. இதனால் அப்பகுதி தொடர்ந்து பதட்டமான சூழலே நிலவுகிறது. இராணுவப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள், தங்கள் மனித உரிமைக்கு தொடர்ந்து அச்சுருத்தல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திங்கியாவில் அரசின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள், கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பழங்குடி மக்கள்மீது தடியடி நடத்தியுள்ளனர். பல ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.
***
ஜிண்டால் குழுமத்தால் ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் ஒருங்கிணைந்த எஃகுத் திட்டம் அமைக்கப்படுவது என்பது பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்கின்றனர் ஆர்வலர்கள்.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
♦ திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
இக்கிராமங்களில் இதற்குமுன், ரூ.52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் திறன் கொண்ட எஃகு திட்டத்தை அமைக்க போஸ்கோ (POSCO) திட்டமிட்டிருந்தது. 2011-ம் ஆண்டில் கோபிந்த்பூர், திங்கியா மற்றும் நுகாவ்ன் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் வன உரிமைச் சட்டத்தின்படி, நிலத்தை போஸ்கோ (POSCO) நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தென் கொரிய எஃகு நிறுவனம் (POSCO) அதிகாரப்பூர்வமாக எஃகுத் திட்டத்திலிருந்து வெளியேறியது.
ஜிண்டால் பிரதிரோத் பீதாமதி சுரக்ஷா சமிதி (ஜிண்டால் எதிர்ப்புக்குழு)-வின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே, “கடந்த ஆறு மாதங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். போஸ்கோ (POSCO) எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற 2,500 பேர் மீது 400-க்கும் மேற்பட்ட பொய்யான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது, ஜிண்டால் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்கு எதிராக பலர் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் மீது குறைந்தது 72 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய தலைவர் தேபேந்திர ஸ்வைன் உட்பட ஏழு தலைவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், குனி மாலிக், சுமந்த நாயக் மற்றும் திலிப் ஸ்வைன் உள்ளிட்ட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று பைக்ரே கூறினார்.

மேலும், “கடந்த 2021 டிசம்பர் முதல், திங்கியா பாரிய உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போலீசு கட்டுப்பாட்டில் உள்ளது. திங்கியாவில் மட்டும் இரண்டு படைப்பிரிவு போலீசார் உள்ளனர். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை; நாங்கள் பொதுநல வழக்கு ஒன்றின்மூலம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இருப்பினும், வழக்கு முடித்து வைக்கப்பட்டு, கலெக்டர் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்” என்று பைக்ரே கூறினார்.
போலீசின் நோக்கம் மக்களை நீண்ட காலம் சிறையில் அடைப்பதும், பழைய வழக்குகளை மீண்டும் செயல்படுத்துவதும், அனைத்து போராட்டங்களையும் ஒடுக்குவதும்தான். இரண்டு பெண் ஆர்வலர்களும் சிறையில் வாடுகின்றனர். ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முர்மு இதற்கு முன்பு பாஜக சார்பில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
“பழங்குடியினரின் உரிமைகள் பற்றி முர்மு ஒருபோதும் பேசியதில்லை. அவர் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஒரு கைப்பாவையாக மட்டுமே இருப்பார். அவர் மீது நாங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?” என்று கூறுகிறார் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டணியின் (NAPM) பிரஃபுல்லா சம்ந்தா.
படிக்க :
♦ ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
♦ ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
மேலும், “தேபேந்திர ஸ்வைனின் குடும்பத்தைப் பார்க்க வந்த மேதா பட்கர் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசு இடைவிடாமல் திங்கியா மக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது. இங்கு யாருக்கும் மனித உரிமை இல்லை; யாருக்கு பேச உரிமை இல்லை. தினமும், இடைவிடாத கைதுகள் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதில் இளைஞர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார் பிரஃபுல்லா சமந்தா.
இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒடிசா மாநிலத்தின் பழங்குடி மக்களை, அரசு தன் கொடுங்கரங்களினால் ஒடுக்கி வருகிறது. திரௌபதி முர்மு ஜனாதிபதியானால் மட்டும் இந்த அடக்குமுறைகள் குறைந்துவிடுமா என்ன? அவர் பாசிச அரசின் இன்னொரு பாசிஸ்டாக இருப்பாரே தவிர பழங்குடி மக்களுக்கு ஒருபோது உதவமாட்டார்.
ஜிண்டா நிறுவனத்திற்காக பழங்குடி மக்களை ஒடுக்கும் பாசிச அரசின் கொடுங்கரங்களை உடைத்தெறிய வேண்டியது அவசியம். இயற்கை வளங்களை கார்ப்பரேட் கழுகுகளிடமிருந்து பாதுகாக்க, தொடர்ந்து போராடிவரும் ஒடிசா பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

காளி
ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழ் வெளியிட்ட அறிக்கை, 71 சதவித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் பேர் சத்துக்குறைவான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
உலக மக்கள் தொகையில் 42% பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்று “இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை 2022 : புள்ளிவிவரங்களில்” என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் உணவில் போதுமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து குறைவான உணவு உட்கொள்ளப்படுவதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் 200 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 168.7 கிராம் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் குறைந்தபட்ச பரிந்துரை ஒரு நாளைக்கு 300 கிராம் ஆகும்.
படிக்க :
♦ ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
♦ மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவின் விலை ஒரு நபரின் வருமானத்தில் 63 சதவிதத்தை விட அதிகமாக இருந்தால் அது கட்டுப்படியாகாது என்று கருதப்படுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழின் அறிக்கை, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் கடந்த ஆண்டில் 327 சதவிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு – நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டை உள்ளடக்கியது – அதே காலகட்டத்தில் 84 சதவிதம் உயர்வைக் கண்டது. இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவிதமாக உயர்ந்தது.
Down to Earth இதழின் நிர்வாக ஆசிரியர் ரிச்சர்ட் மஹாபத்ரா, “உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சர்வதேச பயிர்களின் விலை உயர்வு மற்றும் தீவிர வானிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவற்றால் உணவுப் பணவீக்கத்தின் தற்போதைய உயர் நிலைகள் உந்தப்பட்டிருக்கின்றன. உண்மையில், CRISIL (Capital market company) தரவுகளின் பகுப்பாய்வு 2022 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக விகிதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு” நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. நாட்டுமக்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், மக்களின் உடல்நலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.
ஒருப்புறம், மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க முடியாத இந்த பாசிச மோடி அரசு, பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, விலைவாசி உயர்வை ஏற்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை விதித்து, மானியங்களை குறைத்து, மக்கள் மீது வரிக்குமேல் வரியை போட்டு சுரண்டி வருகிறது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகள், மோடி அரசின் உதவியுடன் உழைக்கும் மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்களையும் சூரையாடி தனது சொத்து மதிப்பை பெருக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளையும், காவி அரசையும் ஒழிக்காத வரை ஊட்டச்சத்து என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

புகழ்
“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !
பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு உடனடியாக மருத்துவ ஜாமீன் வழங்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள பல சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் கூட்டாக கடிதம் மூலம் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை வலியுறுத்தின.
மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பேராசிரியரின் விடுதலைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து “கடுமையான கவலையை” வெளிபடுத்துகின்றனர்.முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் 90 சதவித உடல் ஊனமுற்றவர் என்றும் இரண்டுமுறை கொரோனா தொற்று சோதனை செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். தற்போது நாக்பூரில் உள்ள ‘ஆண்டா செல்லில்’ தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை படிப்படியாக இழந்து வருகிறார். தற்போது “அவரது ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாறியுள்ளது” என்று தெரிவித்தனர்.
படிக்க :
♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
♦ சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !
கடந்த ஜூலை 2021-ல் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 84 வயதில் இறந்த தந்தை ஸ்டான் சுவாமியை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் எல்கர் பரிஷத் – மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் மருத்துவத்திற்காக காத்திருந்தபோது கொரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
“நீங்கள் உடனடியாக பதிலளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, அதனால் நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த கதி பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஏற்படாது. அவரது பரோல் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ ஜாமீன் விண்ணப்பம் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தலையிட்டு, பேராசிரியர் ஜி.என்.சாய்பாவுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். உடனடியாக, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரை தனிமை சிறையில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தக்கூடிய அறைக்கு மாற்ற வேண்டும். பின்னர் அவரை மருத்துவ ஜாமீனில் விடுவித்து, சிகிச்சைக்காக பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று கையொப்பமிட்டவர்கள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
Scholars At Risk (USA), PEN America (USA), Freedom Now (USA), The Free Saibaba Coalition-US, Stitching the London Story (The Netherlands), India Solidarity Germany (Germany) போன்ற சர்வதேச குழுக்கள் கையொப்பமிட்டவர்களில் அடங்கும். மேலும், இந்திய நீதித் திட்டம் (ஜெர்மனி), அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (அமெரிக்கா), இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் நலச் சங்கம் (யுகே), இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா), ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி (யுகே), அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள் (கலிபோர்னியா, அமெரிக்கா), பாஸ்டன் தெற்காசிய கூட்டணி (அமெரிக்கா), இந்தியா சிவில் வாட்ச் இன்டர்நேஷனல் (அமெரிக்கா), மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (அமெரிக்கா) ஆகிய சர்வதேசக் குழுக்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.
பேராசிரியர் சாய்பாபாவை, கழிவறை-குளியல் அறைகளில் சிசிடிவி கேமராக்களை வைப்பதுபோன்ற பல்வேறு முறைகளில் சிறைக்குள் சித்திரவதை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பேராசிரியரை போன்ற அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் பாசிச கொடுங்கரங்களில் இருந்து மீட்க, நாம் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது அவசியம்.
சந்துரு
ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு.
பங்கு மதிப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தால், அது தொடர்பான தகவல்களை (Price Sensitive Information) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செபி (SEBI) எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு புதிய முதலீடு வரப்போகிறதெனில், எந்த நிறுவனம் முதலீடு செய்யப்போகிறது, எவ்வளவு முதலீடு, எந்த தேதியில் முதலீடு, முதலீட்டின் மற்ற விவரங்களை எவ்வளவு விரைவாக தெரிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக செபிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ஊடகங்களில் ஊகமாக பரவும் செய்திகள் பங்கு மதிப்பை பாதிக்கக்கூடும். உள்பேர வர்த்தகத்திற்கும் (Insider Trading) இது வழிவகுக்கலாம். ஊடகங்களில் ஊகமாக வரும் தகவல்கள் (Price Sensitive Information) பங்கு மதிப்பை கூட்டவோ, குறைக்கவோ உதவும். அன்றைய நாளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை கூட இதுபோன்ற தகவல்கள் பாதிக்கும். அது பங்குச்சந்தையின் போக்கையே மாற்றும் திறன் பெற்றது.
முகேஷ் அம்பானி பங்குச் சந்தையை தன் போக்கிற்கு ஆட வைப்பதில் கில்லாடி. எவ்வளவுதான் மோசடிகள் செய்தாலும், ஹர்ஷத் மேத்தா போன்று, ஒருபோதும் அம்பானி சிக்கமாட்டார். அப்படியே சிக்கினாலும், செபி அம்பானியை சிறையில் தள்ளாது. மாறாக மாலை போட்டு வாழ்த்தி அனுப்பும். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
வாட்சப் செயலி வழியாக சிறு தொழில்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பேஸ்புக் நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய முனைகிறது. 2020-ம் ஆண்டில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபடுபட்டன. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி (5.7 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக் பேஸ்புக் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி (புதன்கிழமை) அறிவித்தது. பேஸ்புக்கின் இந்த முதலீட்டால் கோடி ரூபாய் இலாபத்தில் திளைத்தார் அம்பானி.
படிக்க :
♦ கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
♦ தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர். “இந்தியா மீதான எங்களுக்குள்ள உறுதிபாட்டை இந்த முதலீடு காட்டுகிறது; மேலும் நாட்டில் ஜியோ ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என ஃபேஸ்புக் (ஏப்ரல் 22 2020) அன்று அக மகிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 10.20 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. அதுவல்ல விஷயம்.
ரிலையன்ஸும் பேஸ்புக்கும் அதற்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டன. எனினும் முகேஷ் அம்பானி இது குறித்து செபியிடம் மூச்சு கூட விடவில்லை. ஆனாலும் ஊடகங்களில் பேஸ்புக் – அம்பானி ஒப்பந்தம் குறித்த தகவல்கள் கசிந்தன; அதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 5 சதவிதத்திற்கும் அதிகமான ஏற்ற இறக்கங்களை 8 வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது. மார்ச் மாதத்தின் மொத்த வர்த்தக நாட்கள் 18. அதனைத் தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் பங்கு விலை 31 சதவிதம் அதிகரித்தது. இதுபோன்ற திடீர் ஏற்ற இறக்கங்கள் பங்குச்சந்தையை வெகுவாக பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே செபிக்கு ரிலையன்ஸ் தெரிவித்திருக்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் டிஜிட்டல் யூனிட்டில் முதலீடு செய்த தகவல்கள் நாளேடுகள், இணையதளங்கள், சேனல்களில் செய்தியாக வெளியாகின.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இதை அதிகாரபூர்வமாக செபி அமைப்பிடம் தெரிவிக்கவில்லை. ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இடையே எந்தமாதிரியான நிதி ஒப்பந்தங்கள் நடந்துள்ளன; பங்கு கைமாற்றம், பங்குவிற்பனை ஆகியவை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
செபி திங்கள் (ஜுன் 20, 2022) இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பங்குப் பரிமாற்றம், விலைநிலவரம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அது குறித்து தெளிவுபடுத்தவும் இல்லை. நாளேடுகள், உள்ளிட்ட பிற வாய்ப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்த பின்பும் கூட ரிலையன்ஸ் விளக்கமளிக்கவில்லை. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது பொறுப்பை துறந்தது தெரியவருகிறது. ஆதலால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இரு அதிகாரிகளுக்கும் சேர்த்து ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
2020 நடந்த இந்த விதிமிறல் நிகழ்வை விசாரித்த செபி, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதித்திருக்கிறது. 17 இலட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 30 இலட்சம் அபராதத்தைக் கண்டு பயந்து நடுங்கும் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.
முறையாக தகவல்களை தெரிவிக்காமல் பல ஆயிரம் கோடிகளை ரிலையன்ஸ் சம்பாதித்திருக்கலாம். ஆனால், செய்த மோசடிக்கு பெற்ற அபராதமோ வெறும் 30 இலட்சம். ரிலையன்ஸ் ஏமாற்றுகிறது, மயிலிறகால் தடவிக் கொடுக்கிறது செபி. இந்த மோசடியான பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்து பணக்காரர்களாக மாற நடுத்தர வர்க்க மக்களை தூண்டில்போட்டு இழுக்கின்றனர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளம்பரதார நடிகர்கள்.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?
செபியின் விதிமுறைகளை மீறீயதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 கோடி அபராதமும், 2021 ஆண்டில் 25 கோடி அபராதமும் செபி முகேஷ் அம்பானிக்கு விதித்தது.
இத்தனை முறை தன் வயிற்றுப் பசிக்காக ஒருவர் திருடி இருந்தாலும், அவர் மீது குண்டர் சட்டமோ, தேசப் பாதுகாப்பு சட்டமோ பாய்ந்திருக்கும்.
ஆனால், இப்படி செபியையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவது முகேஷ் அம்பானிக்கு புதிதல்ல. அதேபோல் ஒவ்வொரு முறையும் முகேஷ் அம்பானி முறைகேட்டில் ஈடுபடும்போதும், செபி மயிலிறகால் தடவிக் கொடுக்க தவறுவதில்லை.
எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது. நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்.
சு.விஜயபாஸ்கர்
ஆதாரம் : Economictimes, Businesstoday, indianexpress, Businesstoday2, Economictimes2
உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !
சமீபத்தில் கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு, நகராட்சி சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 22 அன்று தெரிவித்துள்ளது.
வீடுகள் புல்டோசரால் இடக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத இடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உத்தரப்பிரதேச அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
***
ஜூன் மாத தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், நபிகள் நாயகத்தைப் பற்றிய இரண்டு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் இழிவான கருத்துக்களுக்கு எதிராகப் போராடி முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது.
அதில், பிரயாக்ராஜில் உள்ள ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீடும் இடிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தைப் பற்றிய பா.ஜ.க.வின் அவதூரு கருத்துக்களை எதிர்த்து நகரில் வன்முறைப் போராட்டங்களை நடத்த சதி செய்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
படிக்க :
♦ முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
♦ காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம், சட்டவிரோத கட்டுமானம் குறித்து முகமதுவுக்கு மே 10 அன்று நோட்டீஸ் கொடுத்ததாகக் கூறியது. ஆனால், முகமதுவின் குடும்பத்தினர் எந்தத் தகவலையும் பெறவில்லை என்று கூறுகிறார்கள். பல இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்ட நாள் அன்று நோட்டீஸ் கொடுத்த சில மணி நேரத்திலேயே வீடுகளை இடிக்கத்தொடங்கிவிட்டன காவி புல்டோசர்கள்.
பிரயாக்ராஜ் இடிப்பு வழக்கில், அது ஒரு குடியிருப்பு கட்டிடமாக இருந்ததாகவும், எனினும் அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. “மே 10, 2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் – காரண அறிவிப்பிற்கு பதிலளிக்கத் தவறியதால் – ஜூன் 10-ம் தேதி இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று அறிக்கை கூறியது.
ஜூன் 11 அன்று, மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார். “புல்டோசர்களின் நிழலில் வீடுகள் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கற்களை எறிய மாட்டார்கள்” என்று கூறினார்.
ஜூன் 4 அன்று, கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் இடிக்கப்படும் என்று கூடுதல் போலீசுத்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இருப்பினும், கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையங்கள், சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகள் என்றும், உ.பி நகர்ப்புறத்திற்கு ஏற்ப, அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத்தான் அவர்கள் இடிப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
வளர்ச்சித்துறை அதிகாரிகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதாக அரசு கூறினாலும், ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஆதித்யநாத், “புல்டோசர் நடவடிக்கையை தொடருங்கள்” என்று அதிகாரிகளுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதே கருத்துக்களைதான் மூத்த அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பல்வேறு வடிவங்களிலும், சமூக ஊடகங்களிலும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு. பாஜகவிற்கு எதிராக போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, எப்படி அதுநாள் வரை சட்டப்பூர்வமாக இருந்த வீடுகள் சட்டவிரோத வீடுகளாகவும், ஆக்கிரமிப்பு வீடுகளாகவும் மாறியது என்று கேள்வியெழுகிறது. எனவே இந்த ‘புல்டோசர் நீதி’ என்பது காவி பாசிஸ்டுகளின் ஓர் புதிய நடைமுறை. இந்த புதிய நடைமுறையைதான் சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சித்து வருகிறது பாசிச யோகி ஆதித்யநாத் அரசு.
காவிகள் இனி முஸ்லீம் மக்களை உ.பி.யில் வாழவே விடமாட்டார்கள் என்பதுதான் யோகி ஆதித்யநாத் அரசின் பாசிச செயல்பாடுகள் நமக்கு உணர்த்து செய்தி!

புகழ்
‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!
மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், ஜூன் 21 அன்று ‘புல்லி பாய்’ & ‘சுல்லி டீல்ஸ்’ வழக்குகளில் இன்னும் காவலில் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் இப்போது ஜாமீனில் உள்ளனர்.
கடந்த ஜூலை 2021-ல் வெளிவந்த ‘Sulli Deals’ – GitHub என்ற உள்ளடக்கப் பகிர்வு தளமான GitHub-ல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. முக்கிய முஸ்லீம் பெண்களின் ஒப்புதலின்றி, அவதூறான கருத்துக்களுடன் அவர்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களை இணையத்தில் ஏலம் விடும் செயலை அரங்கேற்றியது.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில், ‘புல்லி பாய்’ ‘சுல்லி டீல்ஸ்’ உடன் இணைந்த முக்கிய முஸ்லீம் பெண்களுக்கான ஏலங்களையும் நடத்தியது. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு போலீசார் இரண்டு வழக்குகளிலும் முதல் கைது செய்தனர்.
இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஔம்காரேஷ்வர் தாக்கூர் என்பவன் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவன். நீரஜ் பிஷ்னோய் என்பவன் ‘புல்லி பாய்’ செயலியை உருவாக்கியவன். இவர்களுடன் விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங், மயங்க் அகர்வால் மற்றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
படிக்க :
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
♦ டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஜா, சிங் மற்றும் அகர்வால் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, தாக்கூர் மற்றும் பிஷ்னோய் ஆகியோருக்கு பாந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த இரண்டு செயலிகளையும் உருவாக்கியவர்களுக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், மும்பையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீசு காவலில் இருந்தனர்.
***
தற்போது கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.பி. சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.50,000 ஜாமீன் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு ஒன்று அல்லது இரண்டு ஜாமீன்களுடன் சேர்த்து விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள் மாதாந்திர சைபர் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
வழக்கறிஞர் சிவம் தேஷ்முக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், ஜாமீன் வழங்குவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படும் குற்றங்களைச் செய்யவில்லை என்றும் விண்ணப்பம் வாதிட்டது; அவர்கள் செயலியை உருவாக்கியவர்கள் அல்ல; வெறுமனே பின்பற்றுபவர்கள்; எனவே இது ஒரு குற்றமாகாது; மேலும் குற்றங்களுக்கான தண்டனை மூன்று வருடங்களுக்கும் குறைவாக இருப்பதால் சிறை தேவையற்றது. அவர்கள் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணை குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் விண்ணப்பம் வாதிட்டது. இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர் ‘மரியாதைக்குரிய’ குடும்பங்களைச் சேர்ந்தவர் என்றும், கூறப்படும் செயல் ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ என்றும் விண்ணப்பம் வாதிட்டது.
அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், இந்த வாதங்களில் பெரும்பாலானவற்றை எதிர்த்தார். இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ளது என்று வாதிட்டார். மேலும், அவர்களின் செயல்கள் தேசத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது என்று அவர் கூறினார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த போதிலும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்மால் உணர முடியும். முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த நீதிமன்றம் உள்ளிட்ட பாசிச அரசு கட்டமைப்பிற்கு எதிராகவும், சங் பரிவார – கிருமினல் மாஃபியா கும்பல்களுக்கு எதிராகவும் நாம் களமிறங்க வேண்டியது அவசியம்.
காளி
இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியிருந்தது. அரசி, பருப்பு, காய்கறிகள், பால் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் விண்ணை முட்ட விலை உயரத்தொடங்கின. எரிபொருட்களைப் பொருத்தவரை மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள் நிரப்பும் மையங்களில், பல மணிநேரங்கள் மக்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருந்தது.
இலங்கையில் மின்சாரமானது பெருமளவு எரிபொருட்களைச் சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. டீசல் இல்லாததால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இரண்டு ஆலைகளைத் தவிர, மற்ற அனைத்து மின் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்களுக்கு மேலாகவாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான இன்ட்யூபேஷன் கருவிகள் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் தீர்ந்துபோய்விட்டன; இறக்குமதி செய்வதற்கு அரசிடம் பணம் இல்லாததால், மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளைக் குறைக்கத் தொடங்கின. காகிதங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலையில், பள்ளி-கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியின் சுமைகள் தாளமுடியாமல், மக்களில் ஒருபிரிவினர் நாட்டைவிட்டே வெளியேறினர். பல ஈழத் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கினர். அதேநேரம் அரசை எதிர்த்த போராட்டங்களோ சிறுசிறு தீப்பொறிகளாகக் கிளம்பி, நாட்டின் பலப் பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தன. தொடக்கத்தில், அவை எதிர்க்கட்சிகளின் அடையாளப் போராட்டங்களாகவே இருந்தன. பின்னர் மக்கள் போராட்டங்களாக தீவிரமடைந்தன.
தடுக்க முடியாத போராட்டப் பெருவெள்ளம்
மார்ச் 25-ஆம் தேதிக்கு பின்னர் பல்வேறு நகரங்களில், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு போங்கள்”, “கோ கோத்தபயா” போன்ற முழக்கங்கங்களை ஒலித்தபடி, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரெய்ட் அவென்யு (Reid Avenue), வி.எம்.டி பார்க் (VMD Park), நெகம்போ (Negambo), பண்டரகம (Bandaragama), நுகேகொட (Nugegoda), கொஹுவல சந்திப்பு (Kohuwela Junction) ஆகிய பகுதிகளில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இது மெல்ல மெல்ல தென்னிலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
கணக்கீடு ஒன்றின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 தேதிகளுக்குள் மட்டும் நாடு முழுவதும் 304 அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகப்பல தென்னிலங்கையில் நடைபெற்றவை. குறிப்பாக, கொழும்புவைச் சுற்றிமட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. ஒரு சூறாவளியின் கருவைப் போல, போராட்டங்களின் குவிமையமாக கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மாறிக் கொண்டிருந்தன.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், முதன் முதலில் மிகப்பெருமளவு கவனத்தை ஈர்த்த போராட்டமாக அமைந்தது மிரிஹானை (Mirihana) போராட்டமாகும். மார்ச் 31 அன்று, நுகேகொட புறநகர் பகுதியான மிரிஹானையில் கூடிய மக்கள், மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர், அருகாமையில் அமைந்திருந்த கோத்தபய இராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பேரணியாகச் செல்லத்தொடங்கினர். போராட்டம் பிற்பகல் சுமார் ஆறு மணி அளவில் தொடங்கியது. நடு இரவுவரையில் மிரிஹானையை நோக்கி மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்.
மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் அரசை எதிர்த்து வீதிக்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம்தான் காலிமுகத்திடல் போராட்ட முகாமுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் உருத்திரள்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத இராஜபக்சேக்கள், ஆரம்பத்திலேயே இதனை கிள்ளியெறிய முற்பட்டார்கள். ஆனால் தோற்றுப் போனார்கள்.
அதிபரின் வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிறப்பு போலீசுப் படை, வரவழைக்கப்பட்ட போலீசு கும்பல் ஆகியவை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் மக்களை கலைக்க முயற்சித்தது. பதிலுக்கு மக்கள் கையில் கிடைத்தப் பொருட்களை போலீசை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். எனவே போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டங்களை செய்தியாக்க வந்த ஊடகங்களுக்கு அதிபர் மாளிகையிலிருந்து மிரட்டல்கள் குவிந்தன. ஊடகவியலாளர்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப்போராட்டத்தை ஒட்டி, போலீசால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேர்களுள் (ஏப் 2 வரை) ஊடகவியலாளர்களும் அடக்கம்.
இவற்றின் மூலம் கோத்தபயவின் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததே ஒழிய, போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. இரவு முழுவதும் போராட்டச் செய்திகளும் போலீசின் ஒடுக்குமுறைகளும் சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. “கோட்டா கோ ஹோம்” (#Gota Go Home – கோத்தபயவே வீட்டுக்கு போ) – என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இவை இதர பகுதி மக்களுக்கும் கிளர்ச்சியூட்டின. அரசின் அடக்குமுறையைக் கண்டு ஆத்திரமுற்றனர் மக்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே தென்னிலங்கையின் வீதிகள் மக்கள் போராட்டங்களால் மூழ்கத்தொடங்கின.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அவசர நிலை மற்றும் நாடுதழுவிய ஊரடங்கை அறிவித்தது கோத்தபய அரசு. தங்களது ஆட்சிக்கெதிராக ‘தீவிரவாதிகள்’ சதிசெய்ததாகவும்; ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதக் குழுவொன்று, இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் இதனை திட்டமிட்டதாகவும் புலம்பியது அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அறிக்கை.

முகநூல், வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் என அனைத்து வகை சமூக ஊடகங்களும் திடுமென முடக்கப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கியதற்காக, அனுருத்த பண்டார என்பவர் கைதுசெய்யப்பட்டார். ஊரடங்கை மீறியதாக, ஒரே நாளில் 660 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முயற்சிகளின் மூலம் போராட்டங்களை பரவாமல் இருக்கச் செய்யவும், கலைத்துவிடவும் முயற்சித்தது அரசு.
ஆனால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையவே செய்தன. ஒடுக்குமுறைகள் தூள் தூளாக்கப்பட்டன. ஊரடங்கையும் மீறி, வீதிகள் ஆர்ப்பாட்டங்களால் அழகுபடுத்தப்பட்டன. மிரிஹானை போராட்டம் தொடர்பாக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராளிகளை கைதட்டி, முழங்கங்களை முழங்கி ஆரவாரமாக வரவேற்றனர். வழக்கு முடிகின்ற வரை ஒருவர் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியேறவில்லை. காயம்பட்ட போராளிகளுக்கு, மருத்துவர்கள் சிறப்பு கவனமெடுத்து மருத்துவம் பார்த்தனர். நாடு முழுவதிலும் காணப்பட்ட கொதிநிலையை அறிந்துகொண்ட மஹிந்த-கோத்தபய அரசு வேறுவழியே இல்லாத நிலையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. 15 மணிநேரத்திற்கு பிறகு முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் விடுவிக்கப்பட்டன.
கொழும்பு கடற்கரையை நோக்கி தன்னெழுச்சி அலை
மக்கள் போராட்டங்கள் அரசின் அடக்குமுறைகளையும் கடந்து தீவிரமாகி வந்ததால், ஓட்டுக் கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஏப்ரல் 4-ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் பேரணியாக சென்றனர். அன்றைய நாளே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், “அரசின் சில தவறான நடவடிக்கைகள்தான் நெருக்கடிக்கு காரணம்” என்று கூறி கூண்டோடு பதவி விலகினர்.
கோத்தபயவும் மஹிந்தவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுக்கட்சிகளின் கபடநாடகத்தால் மக்கள் கவரப்படவில்லை. போராட்டக்காரர்களில் பலரும் (60 சதவிகிதம் பேர்) எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை; நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களுமே பதவி விலக வேண்டும் என்று கருதுவதாக, “மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 96.2 சதவிகிதம் மக்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; மக்களை கொள்ளையிட்டுச் சேர்த்த அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
***
ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் கொழும்புவைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரள் திரளாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றுவது, “கோட்டா கோ ஹோம்” என்ற முழக்கம் பதித்த அட்டைகளை வீட்டின் மேல் மாட்டுவது, சுவர்களில் எழுதுவது என நாடே போர்க்கோலம் பூண்டது. ஒரு பக்கம் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 ஆம் தேதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு கடற்கரையை நோக்கி திரளத் தொடங்கினார்கள். கொழும்புக் கடற்கரை, அதிபர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காலிமுகத் திடல் மக்கள் கூட்டங்களால் நிரப்பப்பட்டது. பீதியானது அரசு.
