Monday, August 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 185

இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்

இந்திய சுயசார்பு அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள்: எதார்த்தமும் வாய்ஜாலங்களும்
பாகம் – 1
பிரதமர் மோடி, கடந்த சில வருடங்களாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூரில் புதிதாக கட்டப்படவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கண்டுபிடிப்புகளில் புதுமை (innovation), நேர்மை, மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்குதல் முதலானவை தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவுபவையாகும்” [1] என்று கூறினார். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையெனினும், இதை நடைமுறைபடுத்த ஆளும் பாஜக அரசு என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது என்பதை பரிசீலித்தால் பிரதமரின் பேச்சுக்கள் வெறும் வெற்று சவடால்கள் என்பது எளிதில் புலப்படும்.
இதுமட்டுமல்ல, இதே போல் பல தருணங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவை (ஆத்மநிர்பார்) கட்டியெழுப்ப வேண்டும் என்றும் மோடி பேசியுள்ளார். தேசியக் கல்விக்கொள்கையை(NEP) ஆதரிக்கும் பாஜக ஆதரவாளர்கள், பேராசிரியர்கள், முதலாளிகள் உள்ளிட்ட பலர், NEP ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துவதை உள்ளடக்கமாக கொண்டுள்ளதாகவும் NEP-ன் முடிவுகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தினால் 5 ட்ரிலியன் பொருளாதாரத்தை நாம் எட்ட முடியும் என்றும் கதையளக்கின்றனர்.
இது போன்ற ‘மங்கிபாத்’ சவடால்கள், நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைகள் மோடியின் ஆதரவாளர்களை திருப்தியடைய செய்யலாமே ஒழிய, பல ஆண்டுகள் உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு கல்வி பெற்று எப்படியேனும் சமூகத்தில் முன்னேறி விடலாம் என்று கனவுகளோடு காத்திருக்கும் (முதல் தலைமுறை) பட்டதாரிகளுக்கும் சமூக-பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய பிரிவினருக்கும் இது போன்ற சவடால்களால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.

படிக்க :

சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் வெளிவரும் மாணவர்கள் இனி தொழில் முனைவோர்களாக ஆகப்போகிறார்கள் என்று துணைவேந்தர்கள் பேசுகின்றனர். ஆராய்ச்சியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டு, NIRF மற்றும் QS தரவரிசையில் முன்னிலை என்று தனியார் கல்லூரிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.
மத்திய அமைச்சரோ, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் உள்ளது, ஏராளமான அந்நிய முதலீடு வருகிறது, Global innovation index-ல் இந்தியா முன்னேறியுள்ளது என்று பேசுகிறார். முதலாளிகளோ green energy, electrical vehicle, Robotics/Automation ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்போகிறோம் என்கின்றனர். இவர்களின் பேச்சுகளை கேட்டும் ஒரு கல்லூரி மாணவருக்கு, இன்னும் ஒருசில வருடங்களில் இந்தியா அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் முன்னணியான நாடாக வளர்ந்துவிடும் என்ற தோற்றத்தை என்ற பிம்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் உண்மையோ இவர்கள் பேசுவதற்கு நேரெதிராக உள்ளது.
இந்தியாவினுடைய சுயசார்பு தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலையின் குறுக்குவெட்டு தோற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்ட இரண்டு உதாரணங்களை(துவக்கநிலை நிறுவனங்கள் (startups) மற்றும் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (5G technology)) மட்டும் இம்முதல் பாகத்தில் தருகிறோம்.
துவக்கநிலை நிறுவனங்கள் குறித்து
சமீபகாலமாக துவக்கநிலை நிறுவனங்கள் (startups) குறித்து பலரும் பேசக் கேட்டிருப்போம். தொலைக்காட்சி விவாதங்கள், வணிக பத்திரிக்கைகள், மற்றும் பல்கலைக்கழக கருத்தரங்களில் பல நேரங்களில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவதும் துவக்கநிலை நிறுவனங்கள் பற்றியதாக தான் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, “துவக்கநிலை நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டியுள்ளது. அவைகள் நம் நாட்டின் புது வகையான நிதி திரட்டும் அமைப்புகள். அவைகள் தங்களுக்கே உரித்தான பாணியில் தங்களுக்கான திட்டங்களை தாங்களே வகுத்து முன்னேறுகின்றன. இனி வரும் பத்து ஆண்டுகளில் துவக்கநிலை நிறுவனங்களுக்கு ஏற்ற சிறந்த சூழலை இந்தியா ஏற்படுத்தி கொடுக்க பாடுபடும்” [2].
மேலும், Startup India திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்கவிழாவில் பேசிய மோடி “இந்திய வளர்ச்சிக்கான முதுகெலும்பே துவக்கநிலை தொழில்கள்தான்” என்றும் பேசினார். ஆனால் துவக்கநிலை தொழில்களின் தற்போதைய நிலை குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்: நம்மிடம் ஏகப்பட்ட செயலிகள் (startup apps) உள்ளன, அனால் இந்திய ஒன்றியத்திற்கென்று சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும்படியான புதிய கண்டுபிடிப்புகள் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை.
எதார்த்தத்தில், இந்த செயலிகள் பலகோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்திய சில்லறை வர்த்தக சந்தையை (மருந்து விற்பனை, உணவு விற்பனை, தங்கும் விடுதிகள், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மளிகை பொருட்கள்) வெளிநாட்டு நிதி நிறுவனங்களினால் வளர்க்கப்படும் ஒரு சில துவக்கநிலை நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டவை.
இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் கூட ஏகாதிபத்திய நாடுகளின் தயவுகளிலிருந்து கிடைப்பவை தான். துவக்கநிலை தொழில்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அந்நிய முதலீடுகள் (2021 ஆம் ஆண்டில் மட்டும் 28 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்சம் கோடி ருபாய்) இந்தியாவிற்குள் வந்தது உண்மைதான் [3], ஆனால் அதன் நோக்கம் இந்தியாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோ, அக்கண்டுபிடிப்புகளை கொண்டு மக்களுக்கு பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதோ அல்ல. மாறாக, மிக குறுகிய காலத்தில் மிக அதிக லாபத்தை பங்குச் சந்தையிலிருந்து ஈட்டுவதும், இந்திய சில்லறை வர்த்தக சந்தையை தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்கமைப்பதும் தான்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒரு நாடு பெற்றிருக்கும் அறிவுசார் பலமே அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தானியங்கி கார்களை ஆய்வுசெய்து நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள், திறன் கைபேசியின் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ சேவை துறையிலிலுள்ள பழைய தொழில்களை செயலிகள் மூலம் புதிய வடிவத்தில் செய்கிறார்கள்.
உதாரணமாக, நாம் அனைவரும் ஓட்டலுக்கு சென்று உணவு உண்டோம், ஆனால் இப்போது சுவிக்கி, சொமோட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து உண்ணுகிறோம். உண்மையில், இந்திய ஒன்றியம் தனது மனிதவளத்தை இது போன்ற செயலிகளை உருவாக்க செலவளிக்க வேண்டுமா அல்லது இந்தியாவிற்கான் சுயசார்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் செலவுசெய்ய வேண்டுமா?
இந்தியாவில் 5G தொழில்நுட்பம்
5G தொழில்நுட்பம் என்பது தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் ஏற்பட்ட ஐந்தாம் தலைமுறை (5th generation) தொழில்நுட்ப வளர்ச்சி ஆகும். இதை சுருக்கமாக 5G தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது நாம் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 4G தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பமாகும். உதாரணத்திற்கு, 4G தொழில்நுட்பத்தால் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 100 கோடி (1GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஆனால், 5G தொழில்நுட்பத்தால் ஒரு நொடியில் அதிகபட்சமாக 2000 கோடி (20 GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய இயலும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. இந்த தொழில்நுட்பத்தை இதுவரை 65 நாடுகளின் சேர்ந்த 1,662 நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 65 நாடுகளில் அதிகபட்சமாக சீனாவில் மட்டும் 376 நகரங்களில் 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதையடுத்து அமெரிக்காவில் 284 நகரங்களிலும், பிலிபைன்ஸ் நாட்டில் 95 நகரங்களிலும் 5G சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது [4]. ஆனால் 140 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இதுவரை 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை!
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோகமாக வளர்ந்துள்ள Jio, Airtel ம் 5G அலைவரிசைக்கு தேவையான தொழில் நுட்பத்தை சொந்தமாக வைத்துள்ளனரா? இதற்கான ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான IIT மற்றும் IISc ன் பங்களிப்பு என்ன?

சுயசார்பு 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் பங்களிப்பு
இந்தியாவில் 23 இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) உள்ளன. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மனிதவள மேம்பாட்டு துறை (MHRD) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 1.18% மாணவர்கள் மட்டுமே ஐஐடிக்களில் பயிலுகின்றனர். ஒட்டுமொத்த உயல்கல்விக்கு ஒன்றிய அரசு செலவு செய்யும் தொகையில் 26.96% தொகையை இந்த சிறு விழுக்காடு (1.18%) மாணவர்களுக்கு மட்டுமே செலவு செய்கின்றது [5].
130 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் வெறும் ஒரு விழுக்காட்டிற்கு சற்று அதிகமான மாணவர்கள் மட்டுமே பயிலும் ஐஐடிக்களுக்கு செலவு செய்யும் தொகையானது இந்தியாவில் உயர்கல்வி பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கு செலவு செய்யும் தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாக இந்திய அரசு செலவு செய்கிறது எனும் பட்சத்தில் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவைகளின் பங்கு என்ன என்பது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் தவிர்க்கமுடியாத கேள்வியாகிறது. இந்த கேள்விக்கான பதிலை ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவின் சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்காலத்தை குறித்து வருத்தமே மிஞ்சுகிறது!
23 ஐஐடிக்களில் ஐஐடி சென்னை, ஐஐடி ஐதராபாத் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய மூன்று ஐஐடிக்கள் சேர்ந்து “5G சோதனை மேடை” (5G test bed) என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர் [6]. இந்த முன்னெடுப்புக்கான நிதியை 2018 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா [7]. மேலோட்டமாக பார்த்தால் இது சிறந்த முன்னெடுப்பு தான் என்று தோன்றலாம்.
ஆனால் பிற நாடுகளை சாராமல் முழுக்க முழுக்க இந்திய மனிதவளத்தை கொண்டு இந்திய ஒன்றியத்துக்கே உரித்தான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும், அவற்றை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவானதல்ல இந்த முன்னெடுப்பு. உலக அளவில் 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்போக்கை பார்த்தோமானால் இந்த தொழில்நுட்பம் குறித்து 2012-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையின் துணை நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union (ITU)) திட்டங்களை வகுத்துள்ளது [8].
இந்த திட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதன் நாட்டிலுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சர்ரே பல்கலைக்கழகத்திற்கு (University of Surrey) நிதி ஒதுக்கீடு செய்து 5G தொழில்நுட்பத்தை உருவாக்க ஊக்குவித்தது [9]. இதே போன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கான முன்னெடுப்புகளை துவங்கின. அனால் 2012-களில் 5G குறித்த எந்த விவாதங்களும் இந்திய அரசாலும், இந்திய தொழில்நுட்பக் கழகங்களாலும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் 5G தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலகம் முழுக்க சந்தைப்படுத்த தயாராக இருக்கும் தருணத்தில் இந்திய அரசும், இந்திய தொழில்நுட்ப கழகங்களும் 5G தொழில்நுட்பம் குறித்து கவலை கொள்ளுகின்றன! அப்படியானால் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இந்த முன்னெடுப்பு வெறும் கண்துடைப்பு இல்லையா? 2012-இல் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்பம் குறித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நமது 23 ஐஐடிக்களில் வெறும் 3 ஐஐடிக்கள் தான் கவலை கொள்கின்றன என்றால் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இந்த இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இருப்பிற்கான தேவை தான் என்ன?
5G தொழில்நுட்பமும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களும்
5G தொழில்நுட்பம் குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தும் முனைப்பும் இந்திய முதலாளி வர்க்கத்திடம் இல்லை. அப்படியான முனைப்பு இருந்திருந்திருக்குமானால் 5G தொழில்நுட்பம் குறித்து சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) விவாதிக்க துவங்கிய காலத்திலேயே இந்திய முதலாளிகளும் அரசும் அதற்குரிய ஆய்வுக்கான முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள்.
ஆனால் இந்திய முதலாளிகளுக்கோ இந்தியாவிற்கான சுயசார்பு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நலன்களுக்கு ஊழியம் செய்வது, அதன் மூலம் தங்கள் லாபத்தை பெருக்கிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். தற்போது 5G தொழில்நுட்பத்தினை சீனாவிடமிருந்து வாங்குவதா அல்லது அமெரிக்காவிடமிருந்து வாங்குவதா ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே போன்று, மின்சார வாகனங்கள் குறித்து முன்னேறிய நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரங்களில் இந்திய அரசும் ஆளும்வர்க்கமும் உயர்கல்வி நிறுவனங்களும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் மின்சார வாகன தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில் இந்திய ஒன்றிய அரசும், முதலாளிகளும், தொழில்நுட்ப கழகங்களும் தங்கள் கனவு நிலையிலிருந்து விழித்துக்கொண்டு இத்தொழில்நுட்பங்களைக் குறித்து பேசிவருகின்றனர்.

படிக்க :

6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !

பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?

உற்பத்தி துறையில் சமகாலத்தில் பரவலாக பேசப்படும் சூரிய மின்சாரம், மின்வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல (battery) உற்பத்தி, ஐந்தாம் தலைமுறை (5G) தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், திறன்-கைபேசிகள் (smart phones) உற்பத்தி, குறை-கடத்திகள் (semiconductor) சார்ந்த உற்பத்தி, மருந்துகளுக்கான மூல பொருட்கள் தயாரிப்பு, நான்காவது தொழில்புரட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பல்பொருள் இணையம் (Internet of Things) ஆகிய துறைகளுக்கு தேவையான இந்திய ஒன்றியத்திற்கே உரித்தான சுயசார்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மற்றும் அவை சார்ந்த துவக்கநிலை தொழில்களில் இந்திய ஆளும்வர்க்கம் செய்துள்ள முயற்ச்சிகள் என்ன?
உண்மையில், இதற்கான பதில் மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில், இந்தியா தனக்கான அறிவியல்/தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொள்ள போதுமான மனிதவளத்தை பெற்றிருந்தாலும் தனக்கான அறிவியல்/தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளையே நம்பியுள்ளது.
எதார்த்தம் இவ்வளவு கேலி கூத்தாக இருக்கும் பட்சத்தில் மோடி தனது உரைகளில் Make in India, சுயசார்பு இந்தியா போன்ற சவடால்களை அள்ளி வீசுகிறார். 5G அலைக்கற்றையோ, சூரியஒளி மின் உற்பத்தியோ (solar), மின்சார வாகன உற்பத்தியோ அல்லது துவக்க-நிலைத் தொழில்களோ, இவற்றுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான நிதி ஆகியவற்றுக்கு ஏகாதிபத்திய நாடுகளை இந்திய ஆளும்வர்க்கம் சார்ந்துள்ளது. இதனை அடுத்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தொடரும்
நாஞ்சில் திராவிடன்     ராஜன் (CCCE)
ஆதாரம் :
[1] Innovation, integrity, inclusion will help to build atmanirbhar bharat 
[2] Startups are the new wealth creators || Modi calls startups backbone of new india
[3] vc investments jump 4 times to hit record 28.8 billion in 2021
[4] 5g-services-have-reached-1-662-cities-worldwide
[5] IITs IIMs NITs have just 3% of total students but get 50% of government funds
[6] 5G Testbed at IIT Hyderabad
[7] Financial-grant-approved-for-5g-test-bed-project-by-iits-iisc
[8] 5G – Fifth generation mobile technologies
[9] Surrey university 5G research centre plans unveiled
 

ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ?? || கருத்துப்படம்

சமூக விரோத தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராஜர் கோவிலை மீட்டெடுப்போம் !

“இந்துக்களே வாருங்கள்…” என்று அழைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஜெயசீலா விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ? பார்ப்பனிய சனாதனமே இந்துத்துவத்தின் நியதி ! அதுவே ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவு!

000

ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ??

கருத்துப்படம் : வேலன்

தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !

0
லகை ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவமே மண்டியிடும் ஒரே இடம் பங்குச் சந்தை தான். அந்தப் “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய” முறைகேடு ஒன்று சமீபத்தில் இந்தியாவில் அம்பலமாகியிருக்கிறது.
இந்தியாவில் இரண்டு மிகப்பெரிய பங்குச் சந்தைகள் இருக்கின்றன. அவை மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE). இதில் மும்பையின் தலால் வீதியில் அமைந்திருக்கும் மும்பை பங்குச் சந்தை தான் நாட்டிலேயே பழமையான பங்குச் சந்தை.
1992-ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை மோசடி நடைபெற்றது, இந்த மும்பை பங்குச் சந்தையில் தான். அதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் துவங்கிய சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய பங்குச் சந்தை (NSE). கணிணிமயப் படுத்தப்பட்ட சேவைகளை அறிமுகப்படுத்தி படிப்படியாக உலக அளவில் கவனிக்கப்படத்தக்க பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்நிறுவனம்.
தேசிய பங்குச் சந்தையில் அன்றாடம் நடைபெறும் வர்த்தகம், இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாள் செயல்பாடு முடங்கினாலே, இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பங்குச் சந்தையை ஒரு இமயமலைச் சாமியார் கட்டுப்படுத்தினார் என்று சொன்னால் அதனை நம்ப முடிகிறதா?  யார் அந்த இமயமலைச் சாமியார்?
இந்த விவகாரம் எப்படி அம்பலமானது என்பதன் ஊடாக இந்தச் சாமியாரைப் பற்றி பார்க்கலாம்.
படிக்க :
திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு
தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பங்குச் சந்தைகளையும் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனங்களையும் கண்காணிக்கும் அமைப்பான செபி (SEBI) நிறுவனத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் ஆனந்த் சுப்பிரமணியன் என்ற ஒரு அதிகாரிக்கு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியமர்த்தியது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. செபியின் வழிகாட்டுதல்களை மீறி, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் ஆலோசனை அதிகாரியாக ஆனந்துக்கு பணி நியமன ஆணை வழங்கியது மற்றும் பாரதூரமான அளவிற்கு சம்பள உயர்வு அளித்ததற்கு விளக்கம் கேட்டு விசாரணையை துவங்குகிறது செபி.
நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் பங்குச் சந்தை நிறுவனங்கள் இருப்பதால், செபியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தான் பணி நியமனம் முதல் சம்பள உயர்வு வரை அனைத்தும் செய்யப்பட வேண்டும்.
ஆனால், அந்த நியமன வழிமுறைகளை மீறி தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு தனிச் சலுகை வழங்கி பணி நியமனம் முதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு வரை கொடுத்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஆனந்த் சுப்ரமணியன் எனும் ஒரு அதிகாரி தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
ஆண்டுக்கு வெறும் ரூ.15 இலட்சம் சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியன், கிட்டத்தட்ட 1000% ஊதிய உயர்வுடன் ஆண்டுக்கு ரூ.1.68 கோடி சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணன் தலைமைச் செயலதிகாரியாக தொடர்ந்த காலகட்டத்தில் ஆனந்த் சுப்பிரமணியனின் சம்பளம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி, 2.3 கோடி என படிப்படியாக அதிகரித்து 2016-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சுப்பிரமணியன் வெளியேற்றப்படும்போது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு ரூ.4 கோடி.
மேலும், ஏப்ரல் 2013 அன்று நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஏப்ரல் 2015-ல் மொத்த தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் குழும செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இப்படி அதிகமான சம்பளமும், பதவி உயர்வும் ஏன் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையோடு, மற்றொரு புகார் தொடர்பான விசாரணையும் கடந்த 2018-ம் ஆண்டு முடுக்கிவிடப்படுகிறது.
அதாவது தேசிய பங்குச் சந்தையில் பங்குகளை வர்த்தகம் செய்யும் தரகர்கள் இணையம் மூலமாக, தேசிய பங்குச் சந்தையின் விற்பனைப் புள்ளிகள் குறித்த விவரத்தைப் பெறுவதற்கான இணைப்பை எடுப்பதில், சில தரகர்களுக்கு மட்டும் விற்பனைப் புள்ளி வேகமாகப் போய்ச் சேரும் வகையில் தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், அதற்கு தேசிய பங்குச் சந்தையின் உள்ளிருக்கும் அதிகாரிகள் சிலர் உடந்தை என்பதையும் கடந்த 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் மூன்று எழுத்துப் பூர்வமான புகார்களை மறைமுகமாக செபிக்கு அனுப்பியிருந்தார்.
அந்த விசாரணையையும் சேர்த்து கடந்த 2018-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணனின் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விசாரித்த செபிக்கு அதிர்ச்சியே பதிலாகக் கிடைத்தது.
தனது பதவிக் காலகட்டத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட முடிவுகள் எடுப்பதற்கான விவகாரங்களில், குறிப்பாக, பங்குச் சந்தை நிதி தொடர்பான விவகாரங்கள், தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள், பணி நியமன விவகாரங்கள் ஆகியவை குறித்து மின்னஞ்சல் மூலம் ஒரு ஆசாமியிடம் கருத்து கேட்டு முடிவு எடுத்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.
“ரிக்யஜூர்சாம” என்ற பெயரிலான (rigyajursama@outlook.com) ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு இரகசிய விவரங்களை எல்லாம் அனுப்பி கருத்து கேட்டிருக்கிறார். அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த உத்தரவுகளை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் தான் ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இந்த கடிதப் பரிமாற்றம் 2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரையில் தொடர்ந்திருக்கிறது.
இதைத்தான் செபி நிறுவனம், “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய செயல்” என்று அதிர்ச்சி தெரிவித்திருந்தது. இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டிலேயே சித்ரா ராமகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டது.
அந்த கேள்விகளுக்கு சித்ரா ராமகிருஷ்ணன் அளித்த பதில்களைப் படித்தால் இவரை நம்பியா தேசத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டது என ஆச்சரியம் ஏற்படும் அளவிற்கு அந்தப் பதில்கள் இருந்தன.
தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் விவகாரங்களை வெளியில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டது நிறுவன மற்றும் செபியின் விதிமுறைக்கு எதிரானது என்பது குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், தலைமையில் இருப்பவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னர், தங்களது பயிற்சியாளர்களிடமோ, ஆதர்ச நாயகர்களிடமோ கலந்தாலோசிப்பது வழக்கமானதுதான் என்று கூறியிருக்கிறார். மேலும், இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இங்கு இயற்கையாகவே ஆன்மிக ரீதியில் இருப்பதாக அவர் குறிப்பிடுவது அந்த ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தமக்கு வழிகாட்டும் அந்த இமயமலை சித்த புருஷர் / யோகியின் அருள்வாக்கைத் தான்.
அந்த நபரின் இருப்பிடம் குறித்து செபி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலை முழுவதும் எங்கும் நிறைந்திருக்கும் அவருக்கு இருப்பிடம் என ஒன்று அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் இமயமலை சாமியாருக்கும் இடையிலான மின்னஞ்சல் போக்குவரத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் நகல் இணைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்ய, செபியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், எர்ன்ஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனத்தை தேசிய பங்குச் சந்தை நிறுவனம் பணியமர்த்தியது. அந்நிறுவனத்தின் ஆய்வின் படி ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சலை இயக்கியது ஆனந்த் சுப்பிரமணியன் தான் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதன் முக்கியப் பொறுப்புகளில் இருந்து செய்யப்படும் சிறு சிறு தகிடுதத்தங்கள் கூட, முதலீடு செய்யும் பல இலட்சம் நடுத்தர வர்க்கத்தினரின் பேரிழப்பிற்கு வழிவகுக்கக் கூடியவையே.
1980-களின் இறுதியில் செபி நிறுவனத்தின் நிறுவன அமைப்பு விதிகளை உருவாக்கும் கமிட்டியில் இடம்பெற்று, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராக இருந்து அதன் தலைமைச் செயலதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ஒரு பெண், ஏதோ ஒரு சாமியாரின் அருள்வாக்கை“முட்டாள்தனமாக” நம்பி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்ற கேள்விதான் மற்றெல்லாவற்றையும் விட விஞ்சி நிற்கிறது.
படிக்க :
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !
புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி
சித்ரா இராமக்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகமாகவே இது தெரிகிறது. 2018-ம் ஆண்டு வெளியான இந்த விசயங்கள் அனைத்துமே சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கமுக்கமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன. செபி நிறுவனம், தேசிய பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றோடு, சி.பி.ஐ.-யும் சேர்ந்து சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட இந்தக் கூட்டுக் களவானிகளைப் பாதுகாத்து வந்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர இதனை மூடி மறைக்க வேறு ஒரு நல்ல காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பனக் கும்பலின் களவானித்தனங்கள் என்றுமே நீர்த்துப் போகச் செய்யப்படுவதுதானே காலங்காலமாக இந்தியா கண்டுவந்துள்ள நியதி.
இந்த முறைகேடுகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற உத்தியையும் மிகச் சரியாகவே, இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையின் நடைமுறையில் இருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். 2018-ம் ஆண்டில் செபியின் விசாரணைக்கு அவர் அளித்துள்ள பதிலே அதற்குச் சாட்சி.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அந்நியர் ஒருவரின் மின்னஞ்சலுக்கு அலுவலக விவகாரங்களைப் பகிர்ந்தது பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிகரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதிக்கு நடுவே நள்ளிரவில் “தானாகத் தோன்றிய” ஒரு சிலை தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு மசூதி இடிப்புக்கு வித்திட்ட நீதிமன்றம், முதலாளித்துவத்தின் சித்தத்திற்கு அப்பாற்பட்ட பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் “இயற்கையான ஆன்மிக ரீதியான” சக்திதான் தன்னிடம் பேசியதாக சித்ரா ராமகிருஷ்ணன் ஏன் கருதியிருக்கக் கூடாது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ளாமலா போகும்?

சரண்
செய்தி ஆதாரம் : அவுட்லுக் இந்தியா

கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்!

பா.ஜ.க. தலைவர்களுக்குப் பிறகு தமிழக மக்களால் மிகவும் வெறுக்கப்படும் நபராக ஒருவர் இருப்பாரென்றால், அவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியாகத்தான் இருக்கும். சமீபத்தில் பண மோசடி வழக்கில், சிறையிலடைக்கப்பட்ட அவரை உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணையில் விடுவித்துள்ளது.
ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவர் உதவியாளர்கள் உட்பட நால்வர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 32 பேர் இதுவரை போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக, ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது.
அன்று முதல் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கிரிமினல்களின் துணையுடன்  தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசு தேடி வந்த நிலையில், 19 நாட்கள் கழித்து கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டு, திருவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மக்களோ ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.
படிக்க :
மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த, ஊழல் பேர்வழியான ராஜேந்திர பாலாஜியை அடித்து இழுத்துச் செல்லாமல் எல்லாவிதமான மரியாதையுடன் போலீசு கைது செய்தது என்பதே உண்மை. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி ‘கைது செய்யப்பட்ட விதம்’ தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் மீது தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா? மேலும் அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம், உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா! உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நாங்கள்தான் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒருநாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம்” என்று அந்த அமர்வு கூறியது.
தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தமிழக போலிசிடம் பிடிபட்ட காட்சி.
சாதாரண ஆள் கைது செய்யப்பட்டிருந்தால், தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு பொங்கி இருக்கப்போவதில்லை. கைது செய்யப்பட்டது மோடியின் செல்லப் பிள்ளை அல்லவா?
பீமாகோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 83 வயதான ஸ்டான் சுவாமி, நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவர் தண்ணீரை உறிஞ்சி குடிக்க ஒரு ஸ்ட்ராவுக்காகவும் தன்னை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் நீதிமன்றத்திடம் எத்தனை முறை மன்றாடினார். கடைசியில், நீதிமன்றமும் சிறைத்துறையும் அவரை கொன்றேவிட்டன.
அப்போதெல்லாம் செத்த பிணமாக இருந்த நீதித்துறை, அர்னாப் கோஷ்வாமி, மாரிதாஸ் வரிசையில், தற்போது ராஜேந்திர பாலாஜிக்கு உள்ள தனிமனித உரிமையைப் பற்றி கவலைப்படுகிறது. இதே உச்ச நீதிமன்றம், 90% உடல் அசைவற்றவராகவும் (மாற்றுத்திறனாளி) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுமுள்ள பேராசிரியர் சாய்பாபாவை, இதுவரை பிணையில் விடமுடியாதென இறுமாப்புடன் இருந்துவருகிறது. ஆனால் ஒரு கொள்ளைக்காரனுக்காக கோதாவில் இறங்குகிறது.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாத நிலையிலும் கைது செய்யப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை மறுத்த நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்காக தனிமனித உரிமையைப் பற்றி தமிழக அரசுக்கு ஏன் வகுப்பு எடுக்கிறது?
படிக்க :
ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!
ஆர்.எஸ்.எஸ் அடியாளான ராஜேந்திர பாலாஜி ஊழல் பேர்வழிமட்டுமல்ல, ரவுடித்தனமும் பொறுக்கித்தனமும் நிறைந்தவர் என்பதை தனது பேச்சுக்களின் வழியாக பலமுறை நிரூபித்துள்ளார். தலைமறைவாவதற்கு சில நாட்கள் முன்புகூட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகவும் இழிவாகப்பேசினார். தான் என்ன செய்தாலும், பேசினாலும் தன்னைக் காப்பாற்ற மோடி இருக்கிறார் என்ற துணிச்சல்; அவரே சொல்லியது போல, “மோடி அவரது டாடி” அல்லவா?
மோடியின் பிள்ளைகளான மாரிதாஸ், கல்யாண ராமன், ராஜேந்திர பாலாஜி போன்றோரை பாதுகாப்பது பா.ஜ.க.வின் கடமை. அதற்கு நீதிமன்றங்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித்து ஊழல்வாதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் தான் மட்டுமே சிறந்த புகலிடம் என்பதை அறிவிக்கின்றன.
இனியும் நீதிமன்றங்கள், “மக்களின் கடைசி புகலிடம்” என்று கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு கேலிக்கூத்தானது. மக்கள் விரோதிகளையும் பாசிஸ்டுகளையும் மக்களே தண்டிக்கும் ஒரு சூழலை உருவாக்காமல் இருக்கும் வரை, இத்தகைய நீதிபரிபாலனங்களை நாம் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும்.

தமிழ்

இலங்கை : கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள் | நதீஷா அத்துகோரல | ரிஷான்

கொரோனா எமது வாழ்க்கைக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அநேகம். மருத்துவமனைக் கட்டில்களில் ஒக்ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனிதர்களால் பிணவறைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் கண்ட அளவுக்கு பெருமளவான கொரோனா சடலக் குவியல்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும், இங்கும் ஒரு நாளைக்கு மயானத்துக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்களின் எண்ணிக்கை முந்நூறைக் கடந்திருக்கிறது.
இரவுகளில் அனைத்து வைத்தியசாலைகளிலிருந்தும் சவப்பெட்டி ஊர்வலங்கள் எவ்வித இறுதிச் சடங்குச் சோடனைகளோ, நில விரிப்புகளோ, தோரணங்களோ, மலர் வடங்களோ எதுவுமில்லாமல்தான் மயானங்களை நோக்கிச் செல்கின்றன. அது மாத்திரமல்லாமல் அநேகமான சடலங்கள் உறவினர் நண்பர்களோ, தமது அன்புக்குரியவர்களோ இறுதியாக முகத்தைக் கூடப் பார்க்காத நிலையில்தான் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
எவ்வித இறுதி மரியாதைகளோ, இறுதி முத்தங்களோ இல்லாமல் படுக்கையிலேயே பொலிதீன் உறைக்குள் உங்கள் இறுதி யாத்திரை நிகழக் கூடும் என்பதை கொரோனா ஒவ்வொருவருக்கும் இந்தக் கணத்தில் கற்றுத் தந்திருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் கூட இலங்கையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடமாக இருப்பது மருத்துவமனைகளிலிருக்கும் கொரோனா சிகிச்சையறைகளும், பிணவறைகளும், மயானங்களும்தான்.
படிக்க :
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்
ஒரு வறிய ஏழையையும், அரண்மனைச் செல்வந்தனையும் ஒரே நேரத்தில் பாரபட்சமே பாராமல் கொரோனா அரக்கன் எப்போது வேண்டுமானாலும் மரணம் நோக்கி அழைத்துச் செல்லலாம்.
பொலிதீன் உறையில் நிகழும் இறுதி யாத்திரைகளைக் கண்டு ஒரு பிணவறையின் முன்னால் எத்தனை ஆயிரம் பேர் தினந்தோறும் அழுது புலம்புகிறார்கள். காலி, கராப்பிடிய நகரத்தின் பிணவறையின் முன்னால் நான் கண்ணுற்ற சடலங்களின் ஊர்வலம் ஒரு கணம் மனதைத் துணுக்குறச் செய்தது. அப்போது மாலை நேரம், சரியாக ஐந்து மணி முப்பது நிமிடங்கள்.
“இன்று மாத்திரம் கொரோனா சடலங்கள் இருபத்தைந்து. செய்தியறிக்கைகளில் கொரோனா மரணங்களின் அளவு குறைந்திருப்பதாகச் சொன்னாலும், உண்மையில் மரணங்களில் பெரிதாக எவ்விதக் குறைவும் இல்லை. அனைத்தும் அரசாங்கத்தின் நடிப்பு. உண்மையில் எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும் அவர்களது இறுதி யாத்திரை இங்கிருந்துதான்” என்று பிணவறை ஊழியர் ஒருவர் சொல்லிக் கொண்டே போனார்.

This slideshow requires JavaScript.

ஏழை, பணக்காரன் என்ற பேதமேதுமற்று, அந்தப் பிணவறையின் முன்னால் மக்கள் அழுது புலம்பும் விதம், தரையில் அமர்ந்திருந்து நிலத்தில் புரண்டழும் விதம் ஆகியவை மனித வாழ்க்கை எவ்வளவு கையறு நிலைக்குள்ளாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இலங்கையின் எந்தவொரு பிணவறைக்கு முன்னால் நீங்கள் போனாலும் அந்த வேதனையை, அந்தக் கையறு நிலையை உங்களுக்கும் உணர்த்தும்.
பணம் படைத்தவர்கள், இல்லாதவர்கள், பிரபலமானவர்கள், உயர் குலத்தவர்கள், தாழ் குலத்தவர்கள் என்ற பேதமேதுமற்று அனைத்து சடலங்களையும் ஒன்று போலவே பொலிதீன் உறையில் பொதிந்து சீல் செய்து பிணவறையின் குளிர்ந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரும் போது உயிரோடிருப்பவர்கள் எவ்வளவுதான் அழுது புலம்பினாலும் கடைசியில் இவ்வளவுதானா என்று உங்களுக்குத் தோன்றும். அவ்வாறானதோர் சூழலை நெருங்கும்போது மனதில் தோன்றும் உணர்வுகளைக் குறித்து புதிதாக விவரிக்கத் தேவையில்லை. அந்தச் சூழலில் கேட்கக் கூடிய ஒரே ஓசை அழுகையும், ஒப்பாரிகளும் மாத்திரம்தான்.
அங்கு புன்னகை பூத்த முகங்களைக் காணவே முடியாது. பிணவறையின் விறாந்தைகளில் தள்ளுவண்டிகளின் மீது அமைதியாகக் கைகளைக் கோர்த்தவாறு படுத்திருப்பவர்களின் வாழ்நாளில் எவ்வளவு பந்தங்கள் இருந்திருக்கும்? அவர்கள் எவ்வளவு நண்பர்கள், சொந்தங்களுடன் பழகியிருப்பார்கள்? எவ்வளவு கனவுகள், எதிர்பார்ப்புகள், இலக்குகள்  அவர்களுக்கு இருந்திருக்கும்? தமது துணையின், அம்மாவின், அப்பாவின், பிள்ளையின், உறவினர், நண்பர்களின் முகங்களைக் கூட இறுதியாகப் பார்க்க முடியாமல் இறுதிப் பயணத்தைப் போக நேர்ந்த எத்தனை பேர் அந்தப் பொலிதீன் உறைகளுக்குள் இருக்கக் கூடும்?
“எனது கணவருக்கு மரணிக்கும் அளவிற்கு எவ்வித வியாதியும் இருக்கவில்லை. இப்போதுதான் அவருக்கு முப்பத்தொன்பது வயதாகிறது. அவர் பணி புரிந்து வந்த இடத்திலிருந்து அவருக்குக் கொரோனா தொற்றியதைக் கேள்விப்பட்டதும் எனக்கும், குழந்தைக்கும், அம்மாவுக்கும் தொற்றி விடுமோ என்று பயந்து மிகவும் அழுதார். நாங்கள் பாதுகாப்பாக இருந்த போதிலும் எம்மையும் கொரோனா தொற்றியது. இன்றோடு எமக்குக் குணமடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.
அம்மா மிகவும் வயதானவர். அவருக்கு சுவாசிக்கச் சிரமமானதும் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில் இல்லாததால் அம்மாவின் உயிர் தள்ளுவண்டியிலேயே பிரிந்தது. அம்மாவின் மரணம் குறித்து அப்போது கணவரிடம் நாங்கள் தெரிவிக்கவில்லை. அப்போது அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஒன்பது நாட்கள் அவ்வாறு இருந்த பிறகுதான் கணவருக்குக்குக் குணமானது.
அம்மாவின் மரணம் குறித்து கணவர் வீடு திரும்பிய பிறகுதான் அவரிடம் கூறினோம். ‘அம்மாவின் பேரில் மூன்றாம் மாத அன்னதான நிகழ்வைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார். வீடு திரும்பி பதினைந்து நாட்களின் பின்னர் கணவருக்கு இருமல் ஏற்பட்டது. இருமலுடன் மீண்டும் சுவாசிக்கச் சிரமப்பட்டார். கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கூட்டி வந்த போது ‘ஆஸ்துமாவினால் வந்திருக்கும்’ என்றார்கள். நேற்று மாலை நேரமும் என்னோடு நன்றாகக் கதைத்துக் கொண்டிருந்தார். ‘இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குத் திரும்பி விடலாம்’ என்றும் கூறினார்.
இரவு வேளையில் மருத்துவமனையிலிருந்து என்னை அழைத்து கோவிட் நியூமோனியாவின் காரணமாக கணவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. கொரோனா குணமாகி வீட்டுக்கு வந்தவருக்கு என்ன நேர்ந்தது? ஒரே ஒரு தடவை எனக்கு கணவரின் முகத்தைப் பார்க்க அனுமதித்தார்கள். குழந்தைக்கு இப்போதுதான் இரண்டு வயது. அதனால் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு வர வேண்டாம் என்றார்கள்.
அம்மா காலமாகி இருபது நாட்களில் எனது கணவரும் இறந்து விட்டார். அழுவதற்கு இப்போது என்னிடம் கண்ணீர் கூட இல்லை. இவ்வாறானதொரு துயரம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவிடமிருந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். நான் மீண்டும் ஒரு தடவையாவது எனக்கு என்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கிடைக்குமா என்றுதான் இப்போது இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு பெண்மணி அழுது புலம்பினார். அவர் இந்தப் பிணவறையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண். அவரது அழுகை ஓலம் பிணவறை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அதே கராப்பிட்டிய மருத்துவனையின் பிணவறை ஊழியர் ஒருவர் தனது அனுபவத்தை என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“இரவாகும்போது எனது மொத்த உடலும் வலிக்கும். கொரோனா சடலங்களைத் தள்ளுவண்டியில் நானேதான் தூக்கி வைக்க வேண்டியிருக்கும். கொரோனா சடலங்களைத் தொட்டுத் தூக்கக் கூட யாரும் அருகில் வருவதில்லை. நோய் தொற்றி விடும் என்ற பயம்தான் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இருபது, இருபத்தைந்து கொரோனா சடலங்கள் தவறாமல் இங்கு வரும். ஒரு நாள் நாற்பது சடலங்கள் வந்தன.
நான் இங்கு பிணங்களை அறுப்பதைச் செய்து வருகிறேன். அன்று மாத்திரம் நான் தனியாக இருபத்தைந்து சடலங்களை அறுக்க நேர்ந்தது. எப்படியும் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து, பன்னிரண்டு சடலங்களை நான் அறுக்க வேண்டியிருக்கும். கோவிட் நியூமோனியாவினால் மரணிக்கும் இளம் வயதுடையவர்களின் சடலங்களைக் கட்டாயமாக அறுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். நான் ஒவ்வொரு சடலத்தை அறுக்கும் முன்பும் கடவுளுக்கு பூ வைத்து பூஜை செய்து, விளக்கேற்றி விட்டுத்தான் அறுக்கிறேன்.

This slideshow requires JavaScript.

கடந்த பதினான்கு வருடங்களாக நான் பிணவறையில் பிணங்களை அறுக்கும் வேலையைச் செய்து வருகிறேன். எனது வறுமையின் காரணமாக இந்த பிணம் அறுக்கும் வேலையைச் செய்கிறேனே ஒழிய விருப்பத்தோடு நான் இதைச் செய்வதில்லை. இது மிகவும் சாபம் பிடித்த தொழில்.
நான் கொரோனா சடலங்களை அறுப்பதனால் எனது குழந்தைகளின் முகங்களைப் பார்த்தே ஐந்து மாதங்களாகின்றன. வீட்டுக்குப் போகவேயில்லை. என்னைக் காணும்போது நெருங்கிய நண்பர்கள் கூட பின்னால் நகர்ந்து போய் விடுகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் கூட என்னைத் தள்ளியே வைத்திருக்கிறார்கள். அவற்றை யோசித்துப் பார்க்கும்போது மிகுந்த கவலை தோன்றுகிறது.
எனது தொழிலில் மிகவும் மோசமான காலத்தை இப்போது கடந்து கொண்டிருக்கிறேன். இதுவரையில் கொரோனா தொற்றி மரணித்த ஆறு குழந்தைகளை நான் அறுத்திருக்கிறேன். எத்தனை வருட கால அனுபவம் இருந்த போதிலும், ஒரு குழந்தையொன்றின் சடலத்தைக் கைகளில் ஏந்தியதும் எனது கை கால்கள் வலுவிழந்து போய் விடுகின்றன. மிகுந்த மன உளைச்சலை உணர்வேன்.
நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றி மரணித்த இருபத்தெட்டு வயதான நிறைமாத கர்ப்பிணித் தாய் ஒருவரின் சடலத்தை இங்கு கொண்டு வந்தார்கள். பிரசவம் நிகழ்ந்திருக்கவில்லை. அந்தத் தாயின் வயிற்றுக்குள் பூரண வளர்ச்சியடைந்த குழந்தை இருந்தது. அதைக் கையில் எடுத்த பிறகு வேறு இடத்தில் வைக்க எனக்கு மனம் இடமளிக்கவில்லை. அந்தக் குழந்தையைத் தாயின் கால்களிரண்டின் அருகிலேயே வைத்திருந்தேன்.
அந்தச் சடலத்தைப் பொறுப்பேற்க ஒரு இளைஞர் வந்தார். அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவேயில்லை. சடலத்தைக் காண்பித்ததும் என்னையும் தள்ளிக் கொண்டு போய் கால்களருகே வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கையிலேந்தி அரவணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருந்தார். ‘கிருமியிருக்கும், முத்தமிடாதீர்கள்’ என்று நான் கத்தினேன். அவர் அந்தச் சடலங்களிரண்டையும் பார்த்து அழுது புலம்பியதைக் கண்டு நான் செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். எனது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
வேறு வியாதிகள் தொற்றி மரணிப்பதைக் காட்டிலும் இவ்வாறான திடீர் மரணங்கள் மிகுந்த கவலையைத் தருபவை. வீட்டிலிருந்து பத்திரமாக பிரசவத்துக்காக வந்த பெண் கடைசியில் பிணவறையில் துணிப்பொதி போல கிடைக்கிறார். அந்த இளைஞர் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அப்போது சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்கும் வேலை மாத்திரமே மீதமிருந்தது. திருமணத்தின் போது தனது மனைவி கட்டியிருந்த சேலையை அந்தச் சடலத்துக்கு அனுவிக்க முடியுமா என்று கேட்டார்.
நான் அதையும் செய்து கொடுத்தேன். அந்தச் சடலத்துக்கு ஆடையணிவித்து, குழந்தைக்கும் அழகான ஆடையொன்றை அணிவித்தேன். நான் ஆடையணிவித்து முடிக்கும்வரை அந்த இளைஞர் அழுது கொண்டே தனது மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கிருப்பவை கொரோனா மரணங்கள் என்பதால் யாரையும் உள்ளே நுழைய நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், அவருக்கு அனுமதியளிக்காதிருக்க எனது மனம் அன்று இடமளிக்கவில்லை.
அதன் பிறகு வந்த இரண்டு நாட்கள் எனக்கு உறக்கம் வரவேயில்லை. இப்போதும் எனக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா தொற்றிய முதியவர்களது சடலங்களே நிறைய வந்தன. இப்போது இளைஞர்களது சடலங்கள் நிறைய வருகின்றன. சில நாட்கள் இந்தப் பிணவறையில் சடலங்கள் கொசுக்களைப் போல நிறைந்திருக்கும்.
குடும்பத்தவர்கள் இந்த இடத்தில் அழுது புலம்புவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சிலர் சடலத்தைப் பார்த்து விட்டு இந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்கள். மிக அண்மையிலும் அவ்வாறானதோர் சம்பவம் நடந்தது. கொரோனா தாக்கி மரணித்த கணவனைப் பார்க்க மனைவியும், மகளும் வந்திருந்தார்கள். கணவனின் முகத்தைப் பார்த்ததுமே மனைவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டார். திடீர் மாரடைப்பால் அந்தத் தாய் மரணமடைந்திருந்தார். மகளுக்குப் பத்து வயது.
நதீஷா அத்துகோரல
இவற்றையெல்லாம் காணும் அளவிற்கு நான் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பத்தே வயதான அந்தச் சிறுமி தனது அம்மாவினதும், அப்பாவினதும் சடலங்களுக்கு முன்னால் எந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும்? இவற்றையெல்லாம் கண்டு கண்டே இரவில் தூக்கம் வருவதேயில்லை. பசியை நான் உணர்வதேயில்லை. எனது வறுமையின் காரணமாகத்தான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்” என்றார்.
மற்றுமொரு பிணவறை ஊழியர் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“பெரும்பாலான நாட்களில் இரவாகும்போது என்னைக் காய்ச்சல் பீடித்தது போல உணர்வேன். இந்தச் சடலங்களைத் தூக்கித் தூக்கியே தாங்க முடியாத அளவு உடல் வலியெடுக்கும். கொரோனா சடலங்கள் என்று பார்க்காமல் அந்தச் சடலங்களையும் குளிப்பாட்டித் தூய்மையாக்கித்தான் பிணப்பெட்டியில் நாங்கள் இடுவோம். சில சடலங்கள் பல நாட்களாக இங்கேயே கிடப்பதால் அவற்றின் தோல் தனியாகக் கழன்று வந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இங்கு குளிர்பதன வசதியும் குறைவாகவே இருக்கிறது. சில சடலங்களை யாருமே உரிமை கோர மாட்டார்கள்.
அண்மையில் பாடசாலைக்குப் போகும் சிறுமியின் சடலமொன்று வந்தது. கொரோனா தாக்கி மரணமடைந்த சடலம் அது. அதன் தாய் அவளது குழந்தைப் பராயத்திலேயே மரணித்து விட்டிருந்தார். தந்தைதான் கைக்குழந்தையிலிருந்தே அவளை வளர்த்து வந்திருக்கிறார். அந்தச் சடலத்தை அறுக்க நேர்ந்தது. அறுத்துப் பார்த்து, குளிப்பாட்டித் தூய்மையாக்கி, பெட்டியில் இட முன்பு தூர இருந்தே பிள்ளையைப் பார்த்து விட்டுப் போய் விடுமாறு தந்தையிடம் கூறியதும் அவர் சடலத்தைப் பார்த்து நிலத்தில் விழுந்து புரண்டு ஓலமிட்டு அழுதார். பொலிதீன் உறையால் சடலத்தை மூட முற்பட்ட போது ஓடி வந்து சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்.
படிக்க :
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
அவர் அழுததைக் கண்டு எனக்கும் அழுகை வந்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்தத் தந்தையின் கவலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கொரோனா சடலங்களின் அருகில் யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று எமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். இருந்தாலும் நான் அந்தத் தந்தைக்கு வேண்டிய மட்டும் தனது மகளின் அருகில் இருக்க இடமளித்தேன். அந்தத் தந்தை தனது மகளின் தலையைத் தடவித் தடவி என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்க முற்பட்ட வேளையில், திரும்பவும் அவர் ஓடி வந்து என்னிடம் அவரது புகைப்படமொன்றைத் தந்தார்.
“என்னுடைய மகள் ஒருநாளும் தனியாகத் தூங்கியதில்லை ஐயா. அம்மா காலமானதிலிருந்து நான் இவளைத் தனியாகத்தான் வளர்த்து வந்தேன். இருந்தாலும் இந்த நோயிடமிருந்து இவளை என்னால் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது. நான் சாகும்வரை இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பேன். நான் சாகும்வரைக்கும் அவளுடைய தனிமையைப் போக்க இவற்றை அவளின் நெஞ்சின் மீது வைத்து மூடுங்கள்” என்று கூறி என்னிடம் அவரது புகைப்படம் ஒன்றையும், கரடி பொம்மையொன்றையும் ஒப்படைத்தார். இது எனது இந்தத் தொழில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் சம்பவமாகும்.
நான் எவ்வளவுதான் சடலங்களை அறுத்திருந்த போதிலும், இங்கு அனுபவிக்க நேரும் சில சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியாத வேளைகளில் ஒரு ஓரமாகப் போய் அழுது தீர்த்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. இந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் நாங்கள் இவையனைத்தையும் செய்து வருகிறோம். தொழிலொன்று இல்லாமல் வாழ முடியாது என்பதனால்தான் உண்மையிலேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். தமது சொந்தங்களை கொரோனா அரக்கன் பறித்துக் கொள்ளாதவரைக்கும் இந்த நோயின் பயங்கரத்தையும், அந்த வலியையும் எமது மக்கள் உணர்வதேயில்லை” என்றார்.
(கட்டுரையாளர் குறிப்பு :- நதீஷா அத்துகோரல, இலங்கையைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரான நதீஷா அத்துகோரல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். கொழும்பு நகரத்தைக் குறித்து ஆய்வு செய்து நூலொன்றை எழுதி வருகிறார்.)
கட்டுரையாளர் : நதீஷா அத்துகோரல
புகைப்படங்கள் : திரு. லஹிரு ஹர்ஷன
தமிழில் : எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!

டந்த ஜனவரி 5-ம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடைபெற இருந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியின் கார், விவசாயிகளின் போராட்டத்தால்  மோகா – ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியானவுடனேயே காவி கும்பல்களும் ஜால்ரா ஊடகங்களும் “பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு”, “பிரதமர் உயிருக்கு ஆபத்து” என்று ஒன்றுமில்லாத நிகழ்வை ஊதிப் பெருக்கின.
உ.பி. முதல்வர் ரவுடி சாமியார் யோகி, “பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதமரைக் கொல்ல திட்டமிட்ட சதி” என்று பொங்கினார். மத்தியப் பிரதேசம், அசாம் மாநில முதல்வர்கள் உட்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் மோடியின் ஆயுள் நீடிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்ததன் மூலம் தாங்கள் கட்டமைத்துக் கொண்டிருந்த திரைக்கதைக்கு சுவை சேர்த்தனர்.
70,000 நபர்கள் கலந்துகொள்வதாக இருந்த பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டத்தில் வெறும் 500 நபர்களே வந்திருந்த காரணத்தால்தான் மோடி தனது நிகழ்ச்சியை இரத்துசெய்துவிட்டு கிளம்பினார். தனக்கு நேர்ந்த அவமானத்தை மறைப்பதற்காகவே “பாதுகாப்பு குறைபாடு” என்று நாடகமாடுகிறார் என்று ஆரம்பத்தில் மோடியை விமர்சித்தார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. பா.ஜ.க.வினரின் ஆர்ப்பாட்டங்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்திலும் இந்நிகழ்வை ஊதிப்பெருக்கி நடந்த விவாதங்கள் என ஒருசுற்று முடிந்த பின்பு அதே சரண்ஜித் சிங் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்த நாடகத்தின் வீச்சு இருந்தது.
படிக்க :
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமோ இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஒன்றிய அரசின் இரு விசாரணைக் குழுக்களையும் களைத்துவிட்டு ‘நடுநிலையாக’ தானே ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மோடிக்கு மகுடி வாசித்த ஊடகங்களும்!
காலிஸ்தானிகளாக்கப்பட்ட பஞ்சாப் விவசாயிகளும்!
புல்வாமா தாக்குதலை ஒட்டிய தேசவெறிப் பிரச்சாரம்; பீமாகொரேகான் நிகழ்ச்சியை ஒட்டி கிளப்பிவிடப்பட்ட “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி” என்ற பிரச்சாரம் ஆகியவை போன்று தற்போதைய பஞ்சாப் விசயத்திலும் மைய ஊடகங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள், மக்களிடையே எதை கருத்துருவாக்கம் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினார்களோ அதை சிரமேற்கொண்டு செய்து தந்திருக்கின்றன.
“அணு ஆயுத அரசின் தலைவரான பிரதமர் மோடி சாலையில் 15 நிமிடங்கள் காத்திருப்பதும் பாதுகாப்பு ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பதும் மிகப்பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதையேக் காட்டுகிறது… ஏற்கெனவே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்களை கொன்றது போல் மீண்டும் ஒரு தவறு நடக்கக் கூடாது” என்று பீதியை உருவாக்குகிறது, தி பிரிண்ட் ஆங்கில இணையப் பத்திரிகை.
“இந்திய ஜனநாயக நிறுவனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களில் பிரதமர் அலுவலகமும் ஒன்று. பிரதமர் அலுவலகம் அச்சுறுத்தலுக்குள்ளாவது என்பது இந்திய நாடே அச்சுறுத்தலுக்குள்ளாவதாகும். யார் பிரதமராக இருக்கிறார் என்பதெல்லாம் ஒருபொருட்டல்ல” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.
ஃபெரோஸ்பூரில் மோடி பங்குபெற இருந்த பொதுக்கூட்தத்தில், வெறிச்சோடிக் கிடந்த நாற்காலிகள்.
“தேசத்தில் மிக அதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய பொறுப்பான பதவி பிரதமருடையது. அது தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது… பிரச்சாரத்தைத் தடுக்கும் அமைப்புகளை சட்டரீதியாக அடக்குவதும் ஒடுக்குவதும் அகற்றுவதும் மாநில அரசின் கடமை” என்று தலையங்கம் எழுதியது தினமணி.
“நன்கு குறிபார்த்து சுடுபவராலோ, ஆளில்லா டிரான் மூலமோ, கையெறி ஏவுகணை (Grenade-launcher) அல்லது நாட்டு வெடிகுண்டு மூலமோ பிரதமரின் கார் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருந்திருக்கிறது…” என்றும் “இந்தியப் பிரதமர் ஒரு தனிமனிதல்ல, நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பூர்வ அலுவலகம் மற்றும் நிறுவனம். அதேபோல் அவரது பாதுகாப்பு என்பது தனிநபரின் பாதுகாப்பல்ல நிறுவனத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு” என்று விசயத்தை தேசவெறிக்கு மடைமாற்றியது இந்தியா டுடே.
மொத்தத்தில், மக்கள் விரோத மோடிக்கு எதிரான சொந்த நாட்டு மக்களின் போராட்டத்தை, “பாதுகாப்பு குறைபாடு”, “பிரதமரைக் கொல்ல சதி” “மீண்டும் 1984 – (இந்திரா கொல்லப்பட்ட ஆண்டு)” என்று கூவியதன் மூலம் போராடிய பஞ்சாப் விவசாயிகள் அனைவரையும் “தீவிரவாதிகள்” என மறைபொருளில் பிரச்சாரம் செய்தன ஊடகங்கள்.
இவையன்றி, மோடியின் பயணத்தில் நடந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு “நீதிக்கான சீக்கியர்கள்” என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஒரு செய்தியும் பரப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டிலிருந்து அந்த அமைப்பின் தலைவர் பேசியதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
மோடி சென்றதோ தேர்தல் பிரச்சாரத்திற்கு; பயணித்த பாதையில் மறியல் செய்தவர்களோ விவசாயிகள்; அதுவும் முன்னறிவித்து செய்யப்பட்ட போராட்டம் – நடந்தது இதுதான். இவ்வாறிருக்க ஏதோ தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டதைப் போல இதற்கு ‘பொறுப்பேற்கிறேன்’ என காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் பேசுவதாக காணொலி ஒன்று புறப்படுகிறது எனில், இதன் பின்னணியில் யாரோ ஒரு திருவிளையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது.
‘பாதுகாப்பு குறைபாடு’ எனும் நாடகம்
ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடியின் பயணத் திட்டமென்பது பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஃபெரோஸ்பூர் செல்வதாகும். ஆனால் வானிலை சரியில்லாததால் ஹெலிகாப்டர் பயணம் இரத்துசெய்யப்பட்டது. திடீரென்று பயணத் திட்டம் மாற்றப்பட்டு சாலை வழியாக பதிண்டாவிலிருந்து ஃபெரோஸ்பூர் வரை கிட்டத்தட்ட 100 கி.மீ காரில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம்.
ஆனால், ஃபெரோஸ்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றதால் பியரினா என்ற கிராமத்தில் மோடி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, 15-20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 70,000 நபர்கள் கலந்து கொள்வதாக இருந்த கூட்டத்தில் வெறும் 700 நபர்களே கலந்து கொண்டதால் மோடியின் தேர்தல் பேரணியும் இரத்து செய்யப்பட்டது.
“என்னை உயிருடன் திருப்பியனுப்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” என்று தான் திரும்பிச் செல்லும்முன் பஞ்சாப் விமான நிலைய அதிகாரிகளிடம் வசனமொழி பேசினார் மோடி. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிரச்சாரத் திட்டத்திற்கு கொடியசைப்பாக அமைந்தது.
பஞ்சாபிற்கு மோடி வரும் நாளில், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வோம் – என்று முன்பே அறிவித்திருந்தது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா. போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவிற்கு முன்பே மோடியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
மோடியின் காரை சுற்றி சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இயந்திர துப்பாக்கிகளுடன் நின்றிருப்பதும் காருக்கு அருகாமையில் “நரேந்திர மோடி வாழ்க” என்ற பதாகைகளுடன் பா.ஜ.க.வினர்தான் குழுவாக நின்று முழக்கமிட்டார்கள் என்பதும் சமூக ஊடகங்களில் வெளியான காணொலியில் தெளிவாகத் தெரிகிறது. எனவே போராடிய விவசாயிகளால் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது வடிகட்டிய பொய்யாகும்.
மேலும் மோடியின் பயணத்தில் இடையூறு ஏற்படுவது, அதாவது பா.ஜ.க.வினரின் மொழியில் சொன்னால் ‘பாதுகாப்பு குறைபாடு’ ஏற்படுவதென்பது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் அசோக் நகரில் நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு மக்கள் மோடியை நெருங்கினர். 2018-ம் ஆண்டு, சிறப்பு பாதுகாப்பு குழுவையும் மீறி ஆள்மாறாட்டப் பேர்வழி ஒருவர் மோடி இருந்த மேடைக்கே சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு, நொய்டாவில் போலீஸ் பாதுகாவலர்களே மோடி சென்ற காரை போக்குவரத்து நெரிசலில் சிக்கும்படி செய்திருக்கின்றனர். அப்போதெல்லாம் ‘பாதுகாப்பு குறைபாடு’ என்று கூச்சலிடாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பரிவாரங்கள் தற்போது மட்டும் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்று கூச்சலெழுப்புவதை சாதாரண விசயமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது.
ஐந்து மாநிலத் தேர்தலுக்கான நாடகமா, அடக்குமுறைக்கான சாதனமா!
பா.ஜ.க.வை, மோடியைப் பற்றித் தெரிந்த பல்வேறு முற்போக்காளர்களும் முற்போக்கு -லிபரல் ஊடகங்களும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது புல்வாமா தாக்குதலை வைத்து ‘தேசபக்தி’ அலையை எழுப்பி ஓட்டு அறுவடை செய்துகொண்ட உத்தியைப் போன்றதுதான் தற்போதைய ‘பாதுகாப்பு குறைபாடு’ நாடகமும்; இதன் மூலம் தன் மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி ஓட்டு அறுவடை செய்யப் பார்க்கிறார் மோடி என்கின்றனர்.
ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எந்த அளவிற்கும் இறங்கி வேலை பார்ப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பஞ்சாப் விசயத்தையொட்டி காவி கும்பல் செய்துவரும் பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மையை, சில விசயங்களை தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் மூலம் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
முதலாவதாக, தலைகீழே நின்று தண்ணீர் குடித்தாலும் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறப் போவதில்லை. இது பா.ஜ.க.வினருக்கும் நன்கு தெரியும். ஏனெனில் மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பஞ்சாப் மக்களை மோடி எதிர்ப்பு – பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலுடன் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் உள்ள சிறு குழந்தை கூட மோடி என்றால், இழிசொல்லால் வசைபாடும்.
தற்போது மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும் அவை பஞ்சாப் விவசாயிகளை சமாதானப் படுத்திவிடவில்லை. சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மோடி அரசு அச்சட்டங்களை திரும்பப் பெறவில்லை. விவசாயிகளுடன் போராட்டத்தை தற்காலிகமாக கலைத்துவிடவும்; தங்களது இந்து முனைவாக்கத்தைக் கடந்து, “விவசாயிகள்” என்ற வர்க்க ஒற்றுமை, இப்போராட்டத்தின் விளைவாக பஞ்சாபைத் தாண்டி மேலும் விரிவடைந்து விடக் கூடாது என்பதற்காகவும்தான் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்தது மோடி அரசு. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது.
கார்ப்பரேட் தாசனான மோடிக்கு வேளாண் சட்டங்களை நிரந்தரமாக திரும்பப் பெறும் நோக்கம் எதுவும் இல்லை. அதனை சட்டங்களைத் திரும்பப் பெற்ற அன்று மோடி ஆற்றிய உரையிலேயே காணலாம். “நாட்டின் பெரும்பான்மை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வேளாண் சட்டங்களை ஒரு சிறுபிரிவினருக்கு புரியவைக்க முடியவில்லை என்பதற்காக திரும்பப் பெறுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில், “சிலருக்கு பிடிக்காத காரணத்தால்தான் வேளாண் சட்டங்கள் பின்வாங்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. அரசு ஓரடி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் முன்னோக்கிச் செல்லும்” என்று பேசினார் வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர். ஆக, மீண்டும் இச்சட்டங்களை கொண்டுவருவதற்கான உகந்த சூழ்நிலையை எதிர்நோக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. காத்திருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமானால் பஞ்சாபை அடக்கி ஒடுக்குவது முன்நிபந்தனையாகிறது. ஏனெனில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள் மட்டும் போராடவில்லை. அவர்களைப் போல வீச்சு இல்லாவிட்டாலும் நாட்டின் பிற பகுதி விவசாய அமைப்புகளையும் போராட வைத்தார்கள்.
அனைத்து மாநில மக்களிடத்திலும் தங்கள் போராட்டத்தின் நியாய உணர்வை அங்கீகரிக்க – ஆதிரிக்கச் செய்தார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்குள் பொதிந்திருக்கும் கார்ப்பரேட் இலாப வெறியை தங்களின் போராட்ட முறைகளின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
சுருக்கமாகவும் சரியாகவும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மதிப்பிட வேண்டுமானால், “இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் மறுகாலனியத் திட்டத்திற்கெதிரான போராட்டத்திற்கு என்ஜினாக செயல்பட்டார்கள்” என்று சொல்லலாம். நாட்டின் மற்ற மாநிலங்களில் ஏற்கெனவே தனியார் கொள்முதல்தான் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பெருமளவு அரசுக் கொள்முதலை சார்ந்திருப்பது பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் மட்டுமே. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு இம்மாநிலங்கள் முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான காரணம் இதுதான்.
இதை நம்மைவிட காவி பாசிஸ்டுகள் நன்கு மதிப்பிட்டுள்ளார்கள். எனவே பற்றி எரியும் பஞ்சாபை பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி அடக்கி ஒடுக்குவதன் மூலம் வேளாண் துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான நாடுதழுவிய கொதிப்பை அடக்கிவிடலாம் என்ற திட்டத்துடன் காய்நகர்த்தி வருகிறார்கள். அதற்கான நியாயவாதங்களை உருவாக்கும் முயற்சிதான் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்ற பிரச்சார இயக்கம்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
இத்துடன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராக அதிகரித்த நடவடிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் விசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். பஞ்சாபை பொறுத்தவரை கிட்டத்தட்ட பாதி மாநிலம் இந்த விரிவாக்க நடவடிக்கையின் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது. இதுதொடர்பாக, அப்போதே டிசம்பர் 2021 புதிய ஜனநாயகம் இதழில், “எல்லைப் பாதுகாப்பு படைவிரிவாக்கம்: தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் பஞ்சாபை பற்றி மேற்கொண்டுவரும் பிரச்சாரம் என்பது வெறுமனே தேர்தலுக்காக அனுதாபம் தேடும், ஓட்டுப் பொறுக்கும் முயற்சியல்ல. அது ஒரு சதிகார நோக்கம் கொண்டது. இது புல்வாமா மாதிரி அல்ல; பீமாகொரேகான் மாதிரி. அதன் நோக்கம் அடக்குமுறையே. “பாகிஸ்தான் அருகிலுள்ள மாநிலம்”, “காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நிறைந்த மாநிலம்” என பிரச்சாரம் செய்வது, பஞ்சாபின் மீது தான் கட்டவிழ்த்துவிடத் துடிக்கும் அடக்குமுறைக்கு மக்களிடையே நியாயவாதம் தேடும் முயற்சிதான்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் “சதி நாடகம்” முற்போக்கு – ஜனநாயக சக்திகளால் மக்களிடையே புஸ்பானமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், இப்பிரச்சாரம் அடக்குமுறைக்கான சாதனம் என்ற வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை. இவ்வாறு புரிந்துகொள்ளப்படுவது அவசியம். ஏனெனில் பஞ்சாப் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. நகர்த்தும் காய்கள் அடுத்தடுத்து இதை நோக்கித்தான் செல்லும்.
செவ்வந்தி

நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்

நசியா எரம் எழுதிய MOTHERING A MUSLIM – நூல் குறித்து தோழர் இ.பா. சிந்தன் சமூக வலைத்தளத்தில் ஆற்றிய உரையை மையப்படுத்தி :

ந்த ஒரு இனப்படுகொலையும் ஒரு சில வெறியர்களால் மட்டுமே சாத்தியமாகி விடுவதில்லை. பெரும்பான்மை மக்களின் மனதில் வெறியைப் புகுத்தி, அவர்களை வைத்தே நடத்த முடிந்தால்தான் எந்தவொரு இனப்படுகொலையும் சாத்தியப்படும். ஹிட்லர் காலத்தில் துவங்கி இன்றுவரையில் அதுதான் உலகெங்கிலும் நடந்து வந்திருக்கிறது.

இன்னமும் நம்முடைய குழந்தைகளுக்கு அரசியல் வேண்டாம் என்றும், ஒழுங்காகப் படித்து மதிப்பெண் வாங்கினாலே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால், இன்னொரு பக்கத்தில் அவர்களை இனப்படுகொலைக்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு கும்பல்.

படிக்க :

ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்

கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !

இந்தியாவில் ஒரு இசுலாமியக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஒரு தாயாக நசியா எரம் எழுதிய “Mothering A Muslim” நூல் குறித்து முகநூலில் தோழர் இ.பா. சிந்தனின் நூல் திறனாய்வு உரையாற்றியுள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த முக்கியமான நூலைப் பற்றி இ.பா. சிந்தன் உணர்வுப்பூர்வமான ஒரு உரையைத் தந்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட 40 கோடி குழந்தைகளின் உலகத்தைப் பற்றி நாம் பெரிதும் யோசிப்பதில்லை. ஆனால் அந்த உலகத்தில் பாசிச மதவெறி நஞ்சு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், குடும்பங்களிலும் எப்படி அணுஅணுவாக வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை இந்த நூலைப் பற்றிய திறனாய்வில் குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பிஞ்சுக் குழந்தைகள் மதவெறி நஞ்சூட்டப்பட்ட மற்ற குழந்தைகளால் அவமானப்படுத்தப்படுகின்றனர். புறக்கணிக்கப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர்.

85% முஸ்லீம் குழந்தைகள் தன் மதம் சார்ந்த காரணத்திற்காகவே ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏ பாக்கிஸ்தானி, ஏ டெரரிஸ்ட், பாக்கிஸ்தானுக்குப் போ இந்த வார்த்தைகளெல்லாம் சர்வசாதாரணமாக பள்ளிகளில் புழங்குகிறது என்கிறார் நூலாசிரியர். சீக்கியர்களை அவமானப்படுத்த எப்படி சர்தார்ஜி ஜோக்ஸ் பயன்படுத்தப்பட்டதோ, தற்போது முஸ்லீம் ஜோக்ஸ் என்பது பள்ளிகளில் பிரபலம்.

ரைக்கா, ஒமர், சையது, ரஃபத், சமைரா, சாய்ரா இந்த குழந்தைகளின் அனுபவங்கள் எல்லாம் நம்மை அச்சம் கொள்ள வைக்கின்றன. இவற்றை நாம் இயல்பாக கடந்து சென்று விட முடியாது.

உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா?
உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா?
அவங்க கிட்ட பிரச்சினை வச்சுக்காத, உங்க மீது பாம் போட்டிருவான்.

இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் (குறிப்பாக டெல்லி) ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.

நூலாசிரியர் குறிப்பாக குறிப்பிடுவது என்னவென்றால், பி.ஜே.பி 2014-ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் இந்த அளவுக்கு மதவெறி குழந்தைகள் மத்தியிலும் சமூகமயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பாசிசம் எப்படிப் பற்றிப் படர்ந்திருக்கிறது என்பதையும், சமூகம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை நாம் உணராமல் இருப்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது. நம் நெஞ்சை உலுக்கும் இந்த உரையை அவசியம் கேளுங்கள்! வாய்ப்புள்ளவர்கள் இந்த ஆங்கில நூலை வாங்கிப் படியுங்கள் !

இனியன்

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

28.01.2022

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

1. பற்றிப்படரும் காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில், முதலாளித்துவ முறைகளில் இருந்து மீட்டு மார்க்சிய – லெனினிய விதிப்படி செயல்படும் அமைப்பாகவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற கொள்கையை முன்வைத்து அதற்கேற்ற அமைப்பு முறை – விதிகள், கொடி மாற்றம் ஆகியவற்றை வகுத்து தன்னை ஒரு கம்யூனிச அமைப்பாக மக்கள் அதிகாரம் பிரகடனப்படுத்திக் கொள்வதை மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வாழ்த்தி வரவேற்கிறது.
2. வேளாண் திருத்தச்சட்டங்களை கொண்டு வந்த பாசிச மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராக இந்திய விவசாயிகள் கடந்த ஓராண்டாக நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தில் கடும் குளிலும், வெயிலிலும், பனியிலும், கார் ஏற்றியும் கொல்லப்பட்ட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மக்கள் அதிகாரத்தின் இம்மாநாடு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
3. மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த ஓராண்டில் இறந்த தோழர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் இம்மாநாடு சிவப்பஞ்சலியை செலுத்துகிறது.
படிக்க :
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
4. 2020-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பில் சீர்குலைவு சக்திகளால் உருவாக்கப்பட்ட சதிகளையும் துரோகத்தையும் முறியடித்து சீர்குலைவுவாதிகள், சதிகாரர்கள், முதலாளித்துவ சக்திகளை வெளியேற்றியதை வரவேற்று அங்கீகரிப்பதுடன் அமைப்பை பாதுகாக்க பாடுபட்ட தோழர்கள் அனைவரையும் மக்கள் அதிகாரம் முதலாவது இம்மாநாடு வாழ்த்துகிறது.
5. மண்டலங்கள், வட்டங்கள், கிளைகள், மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என புதிதாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் மக்கள் அதிகாரம் இம்மாநில மாநாடு வாழ்த்துகிறது.
6. தற்போது நமது நாட்டில் அரங்கேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசமானது அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற குஜராத்தி, மார்வாடி, இராஜஸ்தானி, பார்ப்பன பனியா சிந்தி கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை அரங்கேற்றவும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மீண்டும் அடிமைப்படுத்துவதையும் நூறு ஆண்டுக்கால கொடிய பயங்கரவாத பாரம்பரியம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சங்க பரிவார கும்பலின் பார்ப்பன சனாதன இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதையும் நோக்கமாக கொண்டு சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத வழியில் கொண்டு வருகின்ற நவீன பாசிசம் என்று இந்த மாநாடு வரையறுக்கிறது.
7. மோடி – அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  தலைமையிலான பாசிசக் கும்பலானது, ஆகமிகமோசமான, படு பிற்போக்கான, ஆகமிக ஆரிய பார்ப்பன இனவெறியும் பகிரங்கமான பயங்கரவாதத் தன்மை கொண்ட மத, சாதிய ஒடுக்குமுறையும் இன, மொழி ஒடுக்குமுறையும் கொண்ட பாசிசத்தை நிறுவ முயல்கிறது. இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளின் வர்க்க உள்ளடக்கத்தையும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் தன்மையையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களை திரட்டி இதனை வீழ்த்தும் பணியானது நம்முன்னுள்ள கடமைகளில் முதன்மையான அரசியல் கடமையாகும் என்பதை இம்மாநாடு வரையறுக்கிறது.
8. காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகள் அனைத்து அரசுத்துறைகளிலும் ஊடுருவி தனக்கான ஆட்சியை நிறுவுவதை நோக்கி படுவேகமாக செல்கின்றன. இந்த அரசமைப்புக்கு அப்பால் பல இந்து மதவெறி அமைப்புக்கள் மூலம் லட்சக்கணக்கானோரை ஆயுதபாணியாக்கியுள்ளன. ஆகவே, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது மக்களை திரட்டியே வீழ்த்த முடியும் என்பதால் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
9. ஊபா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் சிறுபான்மை மக்கள் – தலித் மக்கள் – கம்யூனிஸ்டுகள் – ஜனநாயக சக்திகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் கருப்புச் சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்காக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10. சாதிவெறி, மதவெறி சக்திகள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவர்களின் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11. அனைத்து தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து மத, இன, மொழி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மக்களை அணி திரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
12. மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக குற்றம் புரிந்த அனைத்து மக்கள் விரோதிகளையும் மதவெறியர்களையும் பகிரங்கமாக விசாரித்து உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. மறுகாலனியாக்கக் கொள்கைகளால் முதன்மையாகப் பாதிக்கப்படும் வர்க்கங்களான, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு – குறு தொழில் நிறுவனங்கள், சிறு – குறு வணிகர்கள் ஆகியோரின் பொருளாதார, வர்க்க நலன்களுக்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
14. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்வதற்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
15. கல்வி நிலையங்களில் கொண்டு வரப்படும் புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட மறுகாலனியாக்க மற்றும் பார்ப்பனியக் கொள்கைகளை ஒழித்துக்கட்டப் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
16. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க மக்கள் உடனடியாக களத்தில் இறங்கிப் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு  அடிப்படையான நிலப்பிரபுத்துவ பிற்போக்கு பண்பாட்டையும் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டையும் ஒழித்துக்கட்ட பகுத்தறிவு, சமதர்மக் கருத்துக்களை பரப்ப வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
17. புத்தர், சித்தர்கள், ஆசீவகர்கள் போன்றோரின் பார்ப்பனிய எதிர்ப்பு பாரம்பரியமிக்க இம்மண்ணில் தோன்றிய வள்ளலார், நாராயண குரு, ஐயா வைகுந்தர், அயோத்திதாசர், ஜோதிபா பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களின் கருத்துக்களை பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் மக்களிடம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
படிக்க :
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
18. ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி., அம்பானி – அதானி போன்ற நச்சுப் பாம்புகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் போராட்டத்தை  முன்னெடுத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்துப் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
19. உலக மேலாதிக்க வெறிப்பிடித்த அமெரிக்காவையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
20. உழைக்கும் மக்கள், ஒடுக்கப்படும் நாடுகள், தேசங்கள் மீதான அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்; புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போலீசின் கொட்டடிக் கொலைகள் : தீர்வு என்ன ?

போலீசு உங்கள் நண்பன்” என்பது ஏட்டளவிலும் சாலையோரத் தட்டிகள் அளவிலும் மட்டுமே நிற்கும் வாசகமாகும். நடைமுறையில் போலீசு சாதாரண மக்களுக்கு விரோதியாகத்தான் செயல்பட்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையான சம்பவங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டும் அம்பலமாகிக் கொண்டும் இருக்கின்றன.
கடந்த ஜனவரி 14 அன்று நள்ளிரவில் மருந்தகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று கொடுங்கையூர் போலீஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தரதரவென போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று உள்ளாடையோடு நிற்கவைத்து கடுமையாக பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியுள்ளனர்.
வலி தாங்காமல் கீழே விழுந்த ரஹீமை செருப்புக் காலால் உதைத்துள்ளனர். ரஹீம் சட்டம் படித்த மாணவன் என்பதால் சில சட்டங்களை பேசியுள்ளார். நான் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறேன், சமூக இடைவெளியை கடைபிடித்து தான் நிற்கிறேன் என்னை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “எங்களிடமே சட்டம் பேசுறியா, சட்டம் படித்தால் பெரிய மயிரா?” என்று போலீசு திமிரை காட்டியுள்ளனர்.
படிக்க :
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ரஹீமை மதத்தின் பெயரைச் சொல்லி மிகவும் இழிவான முறையில் நடத்தியுள்ளனர். பூட்ஸ் காலால் உதைத்ததில் கண்ணின் ஓரத்தில் இருந்து கொட்டிய இரத்தத்தை ரஹீமின் சட்டையை கழட்டி அழுத்தித்துடை என்று சித்திரவதை செய்துள்ளனர். தன்னை இவர்கள் கொலைசெய்ய போகிறார்கள் என்று பயந்த ரஹீம் செல்போனில் தனக்கு நடந்த போலீஸ் வெறியாட்டங்களை வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
சமூக வலைதளங்களில் வெளிவந்து போலீசின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்ட வீடியோவைப் பார்த்து பயந்துபோன போலீசோ, ரஹீமிடம் போலீசு என்னை அடிக்கவில்லை கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதென வீடியோ பதிவு செய்துவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீசுத்துறை பெயரளவில் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதேபோல, கடந்த ஜனவரி 8-ம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற மாற்றுத்திறனாளியை திருடன் என்று கைது செய்து, போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள போலீசு குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று காணாமல்போன 140 பவுன் நகையைத் திருடியதாக வலுக்கட்டயமாக ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரின் மனைவியின் முன்பு மாற்றுத்திறனாளி என்று கூடப் பாராமல் கடுமையாக அடித்துள்ளனர். அவரின் ஆணுறுப்பில் அடித்ததில் வலிதாங்காமல் அழுதுள்ளார். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போலீசு தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் முருகேசன். அவரின் மனைவியையும் இரண்டு நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4, 2021 அன்று நள்ளிரவில் நண்பர்களுடன் வண்டியில் வந்து கொண்டிருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவன் போலீசு நிற்கச் சொல்லியும் நிற்காமல் சென்றதால் மணிகண்டனை விரட்டிச்சென்று பிடித்து போலீசு நிலையத்திற்கு அடித்து தரதரவென வழிநெடுகில் இழுத்து வந்துள்ளனர் போலீசு அதிகாரிகள். போலீசு நிலையத்திலும் வைத்து அடித்துள்ளனர்.
மணிகண்டனின் உடல்நிலை மோசமாகவே மாணவனின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகனை உடனே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். போலீசு நிலையத்திற்கு வந்த மணிகண்டனின் உறவினர்கள் அவரின் உடல்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர் வெளிகாயம் தெரியாமல் மாணவனைத் தாக்கியுள்ளனர்.
வீட்டிற்கு சென்று ஐந்து மணிநேரத்தில் படுக்கையில் இறந்த நிலையில் மணிகண்டன் பிணமாகக் கிடந்துள்ளார். போலீசு தாக்கியதால்தான் என் அண்ணன் இறந்தான் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார் மணிகண்டன் தம்பி.
சேலம் மாவட்டத்தில் கருந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் தற்காலிக போலீசு நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த எஸ்.ஐ. பெரியசாமி அந்த வழியில் குடிபோதையில் வந்த முருகேசனை ரோட்டில் வைத்து வெறித்தனமாக அடித்துள்ளார். அடிதாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் முருகேசன்.
***
மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பொதுவெளியில் அம்பலமான கொட்டடிக் கொலை / சித்திரவதை சம்பவங்கள். அம்பலமாகாத கொட்டடி சித்திரவதைகள் இன்னும் பன்மடங்கு இருக்கும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள நிலைமைதான்.
கடந்த ஜீலை 19, 2020-ம் தேதியன்ன்று இரவு கடையை திறந்து வைத்திருந்ததால் போலீசு அடித்து இழுத்துச் சென்று ஆசன வாயில் லத்தியை செருகி கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ், பென்னிஸ்) கொலைச் சம்பவம் நாடு தழுவிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசின் அதிகாரத்தையும் திமிர்த்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால், இன்றுவரை அந்தக் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படவில்லை.
தமக்கு அளிக்கப்பட்டுள்ள வானளவு அதிகாரத்தைக் கொண்டுதான் அப்பாவி மக்களை விசாரணை என்று அழைத்துச் சென்று அவர்களுக்கு தோன்றியபடி வழக்குப் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி கொலைசெய்து கொண்டிருக்கிறது போலீசு.
மனித உரிமை ஆணையத்தின் கூற்றுப்படி, கடந்த 2021-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் இந்தியாவில் 1,067 நபர்கள் போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தினசரி ஐந்து நபர்கள் நீதிமன்றக் காவலிலும் தடுப்புக் காவலிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை [NATIONAL COMPAIGN AGAINST TORTURE (NCAT)] 2021 அறிக்கையின்படி, 62 சதவீத மரணங்கள் போலீசால் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நடைபெறுகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2018 முதல் 2019 வரை நீதிமன்றக் காவலில் 1,797 மரணங்களும், தடுப்புக் காவலில் 126 மரணங்களும், 2019 முதல் 2020 வரை நீதிமன்றக் காவலில் 1,584 மரணங்களும், தடுப்புக் காவலில் 112 மரணங்களும், 2020 முதல் 2021 வரை நீதிமன்றக் காவலில் 1,840 மரணங்களும் தடுப்புக் காவலில் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் நீதிமன்றக் காவலில் 5,221 மரணங்களும் தடுப்புக் காவலில் 248 மரணங்களும் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சிறைச்சாலையின் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு கைதிகள் விசாரணை கைதிகளாவர். 2019 சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை (NCAT)-இன் தரவு, தடுப்புக் காவலில் இறந்த 125 நபர்களில் 60 சதவீதம் பேர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அழைத்துச் சென்று நீதிபதிகள் முன் பெயரளவில் மட்டும் ஆஜர்படுத்தி போலீசு அதிகாரத்தைக் கொண்டு வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளிவிடுகின்றனர் என்று கூறுகிறது.
குற்றம் செய்யும் போலீசு அதிகாரிகளை விசாரிப்பதற்கு பெயரளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையமும் போலீசு அதிகாரிகளைக் கொண்டே அமைக்கப்படுகிறது. இப்படி அமைக்கப்பட்ட ஆணையம் மூலம் பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவது கிடையது. கொட்டடிக் கொலைகளுக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட குணத்தை குறைப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது.
திருடனைப் பிடிக்கத் திருடனை நியமிக்கும் கதைதான். அவர்களை தண்டிப்பதற்கு சட்டங்கள் இந்தக் கட்டமைப்பில் கிடையாது, சஸ்பெண்ட் செய்துவிட்டால் வீட்டில் இருந்து வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கத்தான் போகிறார்கள்.
படிக்க :
தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், “பணிச்சுமை காரணமாகத்தான் போலீசார் இப்படி தவறு செய்கிறார்கள்” என்றும் “ஒருசில போலீசு கரும்புள்ளிகள் செய்யும் தவறுகளால் போலீசு துறையையே குற்றம் சொல்லக் கூடாது” என்றும் “அவர்களுக்கு மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் புளித்துப் போன வாதங்கள் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன.
ஆனால், ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்களுக்கும் ரஹீமைத் தாக்கியவர்களுக்கும் மனநிலை ஒன்றுதான். “தன்னை எதிர்த்து யாரும் கேள்விக் கேட்கக் கூடாது தன்முன் யாரும் பேசக் கூடாது” என்ற அதிகார திமிர்தான் அந்த மனநிலை. தன்னை யாரும் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் முடியாது என்ற ஆணவம்தான் அந்த மனநிலை.
மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக இத்தகைய ஆணவத்தை உடையவர்களாகவே ஆளும்வர்க்கங்களால் வார்க்கப்பட்டு, அரசியல்சாசனத்தால் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்படும் போலீசை தண்டிக்க இந்த அரசமைப்பில் சாத்தியம் இல்லை என்பதே நடைமுறை அனுபவங்கள் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். தனிப்பட்ட போலீசின் மனநிலைக்கான சிகிச்சையல்ல, ஒட்டுமொத்த அரசமைப்புக்குமான அறுவை சிகிச்சையே இன்றைய தேவை.

அகிலன்

தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க – விருதையில் ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
தொடரும் நீட்! ; கர்நாடகத்தில் ஹிஜாப்-க்குத் தடை!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தைக் கட்டியமைப்போம்!!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!!!
என்ற முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 14 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் அனைத்து இடதுசாரி கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் தோழர் அசோக் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

சி.பி.ஐ. எம்.எல். லிபரேசன் கட்சியின் தோழர் ராஜசேகர், சி.பி.ஐ. எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் தோழர் ராமர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் (RMPI) தோழர் கோகுல்கிருஷ்டிபன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ராமலிங்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோழர் ராஜந்திரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தகவல் :

மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
9791286994.

இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்திய தேர்வில், மோசடி நடைபெற்றதாக புகார் கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டங்களில் ஈட்டுபட்டனர். கடந்த ஜனவரி 24 தொடங்கி ஆர்ப்பாட்டங்கள், இரயில் மறியல், தீவைப்புகள் என இவை மிகக் கொதிப்பானவையாக இருந்தன.
எல்லா அரசுத் துறைகளையும் போல, அரசுத் தேர்வுத் துறையும் ஊழல், மோசடி என்ற எண்ணெயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் சகித்துக் கொண்டுதான் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். பணம் கட்டிக்கூட எப்படியாவது உள்ளே போய்விட வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். இவையெல்லாம் சமூகத்தில் இயல்புநிலையாக இருக்கின்றன.
ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெடித்தெழுந்த இரயில்வே தேர்வெழுதிய மாணவர்களின் உக்கிரமான போராட்டங்கள், நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.
000
படிக்க :
TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !
ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
இரயில்வே தேர்வு வாரியம் (RRB) சார்பில் ஜூனியர் கிளார்க், இரயில் உதவியாளர், கூட்ஸ் கார்டு, நேரக் காப்பாளர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற தொழில்நுட்பம் சாராத (NTPC – Non Technical Popular Categories) 35,281 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 35,281 பணியிடங்களில், 11,000 பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது. மீதமுள்ள பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தகுதி போதும். எனினும் முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்பட சுமார் 1.25 கோடிக்கும் அதிகமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 60 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 7 இலட்சம் (7,05,446) விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தனர். அவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 மற்றும் 18-ம் தேதிகளில் இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “2019-ம் ஆண்டில், தேர்வுக்கான விதிமுறைகளை அறிவித்தபோது இரண்டு நிலைகளாக தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகையால் தற்போது இரண்டாம் நிலைத்தேர்வு என்று சொல்வதே முறைகேடு” என்று குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராடுவதாக பெரும்பாலான பத்திரிகைகள் எழுதுகின்றன.
இரயில்வே தேர்வு வாரியம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, 2019 குறிப்பாணையை காட்டி இரண்டு நிலைத் தேர்வை முன்பே குறிப்பிட்டதாக கூறுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, மாணவர்கள் போராடுவதற்கான காரணமாக வேறு ஒரு பிரச்சினையை குறிப்பிட்டு எழுதுகிறது. அதில் 2019-ம் ஆண்டில், தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்ட இரயில்வே தேர்வு வாரியம் அதில் ஒரு புதிய விதியை சேர்த்ததும் அதை அமல்படுத்தியதிலும்தான் பிரச்சினை என்று கூறுகிறது.
இரயில்வே தேர்வு வாரியம், தனது அந்த புதிய விதியில், போட்டியை அதிகரிக்கும் வகையில், காலி பணியிடங்களை விட 20 மடங்கு நபர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு (இறுதிநிலைத் தேர்வு) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 7,05,446 பேர் தேர்வுசெய்யப்பட்டது என்பது உண்மையில் 20 மடங்காக இல்லை.
விசயம் என்னவென்றால், 12-ம் வகுப்புவரை படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் என காலிப் பணியிடங்கள் இரண்டு வகைகளில் அமைந்துள்ளன. 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதும் என்ற பணியிடங்களுக்கு ஒரு பட்டதாரி மாணவரும் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பல மாணவர்கள் இரண்டு, மூன்று பணிகளுக்கு விண்ணப்பித்தும் உள்ளார்கள். விண்ணப்பங்களை விட்டுவிட்டு நபர்களின் அடிப்படையில் பார்த்தால், 3.84 இலட்சம் பேர் மட்டுமே இரண்டாம் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இது அறிவிப்புக்கு முரணானதாகும்.
எனவே இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மட்டுமே அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் நிரப்பப்பட்டுவிடுவார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் போராடும் மாணவர்கள். தங்களது வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவர்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக, பீகாரில் போராட்டங்கள் வீச்சாக நடந்தன. சிதாமர்ஹி எனும் இடத்தில் இரயில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு.
அரா மற்றும் கயா ஆகிய நகரங்களில் இரயில் பெட்டியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தார்கள். தெற்கு பீகார் விரைவு இரயில், கயா – ஜம்லாப்பூர் பயணிகள் இரயில், கயா – ஹவுரா விரைவு இரயில் மற்றும் பாட்னா – வாரணாசி விரைவு இரயில் ஆகியவை போராட்டச் சூழல் காரணமாக இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. ஜெகனாபாத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
தேர்வர்களின் போராட்டங்கள் காரணமாக பிப்ரவரி 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் நிலைத் தேர்வு காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது இரயில்வே தேர்வு வாரியம். அத்துடன், போராட்டங்களைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட தேர்வர்கள் போட்டித் தேர்விலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிரட்டியுள்ளது.
மேலும் யூடியூப் சேனலில் வெளியிட்ட காணொலியின் மூலம் போராட்டத்தை தூண்டியதாக, பீகாரில் பிரபல பயிற்சி மையத்தை நடத்திவரும் ஆசிரியர் கான் சார் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், “குறுகிய காலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வு நடத்துவதனால் மாணவர்களால் தயாராக முடியாது. அரசு மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது” என்ற பொருளில்தான் ஆசிரியர் கான் சார் அந்த காணொலியில் பேசியிருந்தார்.
இக்கைதுகளின் மூலம் அரசுத் தேர்வெழுதிய மாணவர்களின் போராட்டங்களை வதந்தியால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களைப் போலவும் மாணவர்கள் புரிதல் இல்லாமல் போராடுவதைப் போலவும் சித்தரிக்க முயல்கின்றன பீகாரின் நிதிஷ்குமார் அரசும் மோடி அரசும்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு தாக்குதலுக்கு எதிராக காங்கிரஸ், சாம்ஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. நடைபெறக்கூடிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், இதைவைத்து தங்களுக்கு சாதகமாக ஓட்டு அறுவடை செய்துகொள்ள அக்கட்சிகள் முயல்கின்றன.
000
சமூகத்தில் மற்ற பிரிவு மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதைப் போல அரசுத் தேர்வுக்கு படிப்போர் பொதுவாக பங்கெடுப்பதில்லை. தங்களது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வழிசெய்துகொள்ள வேண்டும்; அதற்காக கஷ்டப்பட்டு படித்து ஏதேனும் ஒரு அரசுப் பணிக்கு சென்றுவிட வேண்டும்; ஆகையால், எந்தப் ‘பிரச்சினையிலும்’ தலையை நுழைத்துவிடக் கூடாது என்று கருதுபவர்கள்.
படிப்புக்கேற்ற வேலையின்மை, தனியார் நிறுவனங்களில் உத்திரவாதமற்ற, நிலையற்ற வேலை மற்றும் தேவைக்கேற்ற ஊதியமின்மை ஆகியவற்றால் நாளுக்குநாள் அரசு வேலைவாய்ப்புகாக முயலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுகளுக்காக படிப்பதையே பலர் முழுநேரத் தொழிலாக செய்துவருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நூலகங்கள், கோயில்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பார்க்க முடியும். ஒரு தேர்வு இல்லையென்றால் இன்னொன்று என்று எழுதி வரும் இவர்கள் “எந்த தேர்விலாவது பணி வாய்ப்பு கிடைத்துவிடாதா” என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள்.
இன்று அந்த பிரிவினரே வீதியில் இறங்கி போராடுவது, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தீவிரத்தையே காட்டுகிறது. வெறும் 35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதும் எங்கே தமக்குச் சேர வேண்டிய (12-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய) காலி பணியிடங்களை பட்டதாரி மாணவர்கள் தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற அச்சமுமே இதை நமக்கு துலக்கமாக காட்டுகின்றன.
1990-கள் தொடங்கி அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக விவசாயத்துறை திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. விவசாயம் இலாபகரமான தொழிலற்றதாக மாறிப் போனதால் தொழில் வளர்ச்சியடைந்த நகரங்களில் அத்துக் கூலிகளாக துரத்தியடிக்கப்பட்டார்கள் கிராமப்புற மக்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அவர்களைத்தான் அழைக்கிறோம். அவ்வாறு மொத்த இந்தியாவிலும் பரவியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுள் பீகாரிகளே அதிகம். இதன் பின்னணியில் தற்போது பீகாரில் நடைபெற்ற தேர்வர்களின் போராட்டத்தை பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஜனவரி 26, 2022-ன் கணக்கின்படி இந்தியாவில் சராசரி வேலையின்மை 6.8 சதவீகிதமாகும். வேலையின்மை வீதம் கிராமங்களில் 6.1 சதவீதமாகவும், நகரங்களில் 8.2 சதவீதமாகவும் இருக்கிறது. இந்திய மாநிலங்களில், வேலையில்லா திண்டாட்டத்தில் ராஜஸ்தான் (27.1%), ஜார்கண்ட் (17.3%) மற்றும் பீகார் (16%) ஆகியவைதான் முதன் மூன்று இடங்களில் இருக்கின்றன.
விவசாயமும், சுரங்கத் தொழிலும்தான் பீகாரின் முக்கியத் தொழில்களாகும். பீகாரில் 3-ல் 2 நபர்களுக்கு முறையான வேலையில்லை. 2020 கொரோனா ஊரடங்கின்போது நாடுதழுவியை வேலையின்மை சராசரியைவிட (24%) பீகாரில் இருமடங்கு (46%) அதிகமாக இருந்தது. இதனால் படிக்காத இளைஞர்கள் பிழைப்புக்காக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வருகின்றனர். படித்த இளைஞர்களோ அரசு வேலையையே ஒரே வாய்ப்பாக கருதுகிறார்கள்.
படிக்க :
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
இதன் காரணமாகத்தான் கடந்த 2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பீகாரில் ஓட்டுக்கட்சிகளின் முக்கிய வாக்குறுதியாக “வேலைவாய்ப்பு” இருந்தது. இன்று பீகாரை ஆளும் ஐ.ஜ.த – பா.ஜ.க. கூட்டணி அரசு, அரசு வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் உயர்த்துவோம் என்றும் 19 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வாய்சவடால் அடித்தது.
பீகார் மட்டுமல்ல. நாடு முழுக்க வேலைவாய்ப்பின்மை, வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியினைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.

வாகை சூடி

தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.
ல்கலைக்கழக மானியக் குழு (UGC), பொது மக்களின் கருத்துக்கேட்பதற்காக பட்டப்படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைப் படி, கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த  இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான (BA, BSc, MA, MSc BE/BTech, ME/MTech) படிப்புகளில் கொண்டுவரபோகும் மாற்றங்கள் குறித்த இந்த வரைவு அறிக்கை (தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF)) மீதானக் கருத்தை பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அனுப்புமாறு UGC கூறியுள்ளது.
அதில், தற்போது நடப்பில் உள்ள பட்டப் படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளது. உதாரணமாக தற்போது BSc படிப்பு மூன்று ஆண்டுகள் (ஆறு பருவங்கள்) கட்டாயம் படிக்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது. அதை
BSc – சர்டிபிகேட் (ஓராண்டு + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – டிப்ளமோ (ஈரண்டாண்டுகள் + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – (மூன்றாண்டுகள்)
BSc – ஹானர்ஸ் (நான்காண்டுகள்)
BSc – ஆராய்ச்சி (நான்காண்டுகள், அதில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்) என்று பிரிக்கப் போவதாக வரைவு அறிக்கை கூறுகிறது.
படிக்க :
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
BSc என்ற ஒரு பட்டப் படிப்பு ஐந்து படிப்புகளாக, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி BSc – வேதியியல் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் வேலைக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் BSc சர்டிபிகேட் அல்லது BSC டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம். மேற்படிப்பு படிக்க வேண்டு விரும்பினால் BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) நான்காண்டுகள் படிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு படிப்பில் பயிலும் மாணவர் பெற்றிருக்க வேண்டிய கற்றல் பண்புகள் (Graduates attributes) குறித்தும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை Level 5-லிருந்து Level 10 வரை பிரித்துள்ளனர். உதாரணமாக, BSc சர்டிபிகேட் படிக்கும் மாணவருக்கு அவர் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடப்பிரிவு சார்ந்து வேலை செய்வதற்கு தேவையான திறனை கற்றிருக்க வேண்டும். இது Level 5 என்று வரையறுத்துள்ளனர். அதேபோல, BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) படிக்கும் மாவணர் தான் தேர்ந்தேடுத்த பாடப் பிரிவில் ஆராய்ச்சி செய்வதற்கான முழுத்திறமையை பெற்றிருக்க வேண்டும். இது Level 8 என்று வரையறுத்துள்ளனர். இதனொடு சேர்ந்து Constitutional, Humanistic, Ethical and moral values சார்ந்தவைகளும் பாடமாக படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
இதன் விளைவுகள்
1. இந்த வரைவு அறிக்கை கலை – அறிவியல் படிப்புகளையும் பொறியியல் / தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் ஒரே பார்வையில் அணுகுகிறது. உதாரணமாக BE/BTech மின்னனுப் பொறியியல் (Electrical Engineering) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பிற்கு பிறகு BE-டிப்ளமோ முடித்து வேலைக்கு செல்கிறார் என்றால் BA (தமிழ்/வரலாறு) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பான BA-டிப்ளமோ முடித்துவிட்டு என்ன வேலைக்கு செல்ல முடியும்?
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் இளங்கலை மாணவர்கள் தங்கள் முதல் வருடத்திலோ அல்லது இரண்டாம் வருடத்திலோ தங்களின் படிப்பை துறந்து வேலைக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் என்ன படிப்பை தற்போது படித்துக் கொண்டிருந்தார்களோ அதே துறையில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு உண்டு..
உதாரணமாக, ஒரு இளங்கலை கட்டிட கலை தொழில் கல்வி (Civil Engineering) படிக்கும் மாணவன் தன்னுடைய படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்வதாக இருந்தால் தனக்கான கட்டிடக்கலையை தேர்ந்தெடுப்பார், இதுவரை தான் படித்த கல்வி அவருக்கு உதவக்கூடும், ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவன் தன் இளங்கலை படிப்பை முதல் அல்லது இரண்டாம் வருடத்தில் படிப்பை துறந்தால் அவர் எந்த வேலைக்கு செல்லவது?
இந்திய அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் 27.1 சதவிகிதம் உள்ளது. இது மற்ற வளரும் நாடுகளை விட (BRICS countries) மிகக் குறைவு. இந்தியாவிலுள்ள மொத்தக் கல்லூரிகளில் 60.1 சதவிகித கல்லூரிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன.  இச்சூழலில் இளங்கலைப் படிக்கும் மாணவர்கள் முதல் இரண்டாண்குக்குள்ளாகவே சர்டிபிகெட்/டிப்ளமோ மூலம் வேலைக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவானால் இது கிராமப்புற மற்றும் சமுதாயப் பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய நிலைகளிலிருந்து வரக்கூடிய மாணவர்களை மேற்படிப்புகளை நோக்கி செல்வதற்கு பெரிய தடையாகவே அமையும்.
இவ்வழிகாட்டுதலானது கலை மற்றும் அறிவியல் கல்லூரி கற்கும் மாணவர்களை கூலி தொழிலாளர்களாகவும் சுமாடோ/பிக்பாஸ்கட் போன்றவற்றில் கிக் தொழிலாளியாகவே மாற்றுவதற்கான பரிந்துரையாகவே இது இருக்கும் எனக் கருதுகிறோம்.
2. தற்போதைய பாடத்திட்டங்கள் இளங்கலை/முதுகலைப் படிப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ளவை. உதாரணமாக BA/BSc பட்டப் படிப்பில் ஏதாவதொரு பாடப்பிரிவில் படிக்கும் மாணவரின் பாடத்தினை எடுத்துக் கொண்டால் முதல் வருடம் அப்பாடப்பிரிவின் அடிப்படை கல்வி குறித்த பாடங்களும் இரண்டாம் வருடத்தில் அப்பாடத்தின் வளர்ச்சி குறித்த பாடங்களும் மூன்றாம் வருடத்தில் அப்பாடப்பிரிவில் சமீபத்திய வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் என பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி ஒரு கல்லூரியில் உள்ள ஒரு துறைக்கான இளங்கலை படிப்பிற்கு (அது இயற்பியலோ/ வேதியியலலோ/ தமிழோ/ பொருளாதாரமோ/ கட்டிடப் பொறியிலோ) ஐந்து பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கும்.
இதுபோல ஒவ்வொரு துறைக்கும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் குறைந்த பட்சம் இரண்டு டிப்ளமோ படிப்புகளையாவது நடந்த வேண்டும். கூடவே ஆராய்ச்சிக்கு தகுதியான அளவிற்கு மாணவர்களையும் உருவாக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த தகுதியான மற்றும் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்களும் கட்டமைப்பு வசதிகளும் நிதி ஒதுக்கீடும் தேவை.
AISHE அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் 80 சதவிகிதம் தனியார்களாலும் 20 சதவிகிதம் அரசினாலும் நிர்வகிக்கப்படுபவை. உயர்கல்விக்கென ஒதுக்கப்படும் மத்திய மாநில அரசின் நிதியும் படிப்படியாக குறைக்கப்பட்டு அதனிடத்தில் தனியார்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக அரசு கல்லூரிகள் பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் நிதி ஒதுக்கீடு குறைவாலும் ஊழல் முறைகேடுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளோ இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு அனைத்து விதிமீறல்களுடன் தான் இயங்குகின்றன.
உயர்கல்வியின் இந்த சீரழிந்த நிலையை கொரேனா ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இச்சூழலில் UGC-ன் மேற்கண்ட வழிகாட்டுதல்களானது உயர்கல்வியை மேலும் சீரழிப்பதுடன் உயர்கல்வியில் தனியார்களை மேலும் வலுவடையவேச் செய்யும்.
3. வேலைவாய்ப்புக்கு தேவையான திறனுள்ள மாணவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். அதற்காக பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என வாதிடுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேவையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது அரசின் தரவுகளிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
மேலும் உருவாக்கப்பட்ட வேலைகளும் படிப்புக்கேற்ற வேலைகளாக இல்லை (Under employment). CMIE அறிக்கையின் படி 2018-ல் 4.7 சதவிதமாக இருந்த வேலையின்மை விகிதம் (Unempolyement rate) 2021-ல் 7.9 சதவிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வேலையின்மையால் 18-30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் MGNREGA திட்டத்தில் கிராமப்புற வேலைகளுக்கு செல்லவது அதிகரித்துள்ளது (last five years average ~8% of total MGNREGA registration). இது அரசின் பொருளாதாரக் கொள்கையின் விளைவு.
கூடவே தற்பொது உயர்கல்வியில் பரவலாக்கப் பேசப்படும் கண்டுபிடுப்புகள் & ஸ்டாடப் என்பதெல்லாம் IIT & IIM-களில் மட்டுமே பிரதானமாக உள்ளது. எனவே மாணவர்கள் போதிய திறமைகள் இல்லாமல் இருப்பதினால்தான் வேலை கிடைக்கவில்லை என்பது வடிகட்டியப் பொய்.
படிக்க :
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
எனவே தேசியக் கல்விக் கொள்கையோ, தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு அறிக்கையோ அல்லது அதிகாரிகளோ மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காகவே பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கிறோம் என்று சொல்வது எதார்த்தத்திற்கு முரணாகவே உள்ளது.
4. Avademic Credit Bank, Blended learning பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றின் மூலம் வருங்காலங்களில் இணையவழிக் கல்வி முறையானது உயர்கல்வியின் ஒரு அங்கம் என UGC அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்றல் – கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இணையவழி கற்றல் – கற்பித்தலை ஊக்குவித்து வருகின்றன. இது தனியார் edutech நிறுவனங்களை ஊக்குவிக்கவே பயன்படும் எனக் கருதுகிறோம்.
எனவே, மேற்சொன்ன காரணங்களினால், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF) அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்படுத்தும் என்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கருதுகிறது. எனவே இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
ccce.eduall@gmail.com

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா

ன்றைக்கு சோசலிசம் பற்றி கற்பான வாதத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டுமானால் அதற்குரிய அறிவியல் பூர்வமான வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நிலைநாட்டினார்கள். அதைப்போல இன்றைக்கு மா.லெ-விற்கு எதிரான அனைத்து வகையான நடைமுறைகளை களைந்து பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பாக அறிவித்திருக்கும் மக்கள் அதிகாரம் சரியான வழியில் பயணிப்பதற்கான திசையை காட்டுவதாக இருக்கின்றது.
கலைப்புவாதிகளின் ஊளைச் சத்தம் நம் செவிகளில் மங்கிய ஒலியில் கேட்கிறது. நாங்கள் தான் பெருபான்மை, நாங்கள் தான் பெரும்பான்மை என சொல்லி கொள்ளட்டும். அந்த உரிமையை பறிக்க நமக்கு அதிகாரமில்லை.
மகத்தான நவம்பர் 7, 1917 சோசலிசப் புரட்சிக்கு சில மாதங்கள் வரை சோவியத்தின் மத்தியில் போல்ஷ்விக்களும் சிறுபான்மை தான். ஆனால் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்கு தான் புரட்சியை சாதித்தார்கள்.
அப்படிப்பட்ட போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
விருதையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் முதல் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா ஆற்றிய உரையின் காணொலியை பதிவிடுகிறோம்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

ட்சிப் பொறுப்பேற்றவுடன், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவது உறுதி” என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரியணை ஏறியவுடன், ‘எதார்தத்தை’ புரிந்துகொண்டு “முடிந்த அளவிற்கு முயற்சிப்போம், சட்டப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று மாற்றிப் பேசியது.
எப்படியும் தி.மு.க. நீட் தேர்வை இரத்துசெய்துவிடும் என்று தொடக்கத்தில், பலர் நம்பினார்கள். ஆனால் நீட் தேர்வும் சட்டப் போராட்டமும் ஒருசேர தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முடிந்தபாடில்லை. அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. சட்டப் போராட்டத்தை மூர்க்கமாக நடத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் மட்டுமே ஒருக்காலமும் நீட்டை இரத்து செய்ய முடியாது. இதை நாம் சொல்லவில்லை  சட்டப் போராட்ட அனுபவமே போதிக்கிறது!
000
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று மோடி அரசு அறிவித்தது. “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும்” என்று அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். நீட்டை இரத்துசெய்வோம் எனச் சொல்லிவிட்டு இப்படிப் பேசுகிறாரே என விமர்சனம் எழுந்தபோது, “நாங்கள் என்ன 24 மணிநேரத்தில் நீட்டை இரத்துசெய்வோம் என்றா வாக்கு கொடுத்தோம்” என்று பேசினார்.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்தது. நீட் தேர்வும் ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியாவதும் ஒரே காலத்தில் நடக்கிறது.
முந்தைய அ.தி.மு.க. அரசைப் போல சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீட் தேர்வை முறியடித்துவிட முடியாது என்ற அனுபவத்திலிருந்துதான் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆய்வுக் குழுவை அமைத்தது தி.மு.க. அரசு.
பின்னர், நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். நீட்டுக்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில், அடுத்தநாளே சட்டமன்றத்தில் பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு தனிச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதி (2021) நீட் தேர்வின் மூலம் சமூகநீதி பறிபோகின்றது, எனவே நீட்டை இரத்துசெய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை இணைத்து கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மாதக்கணக்கில் நிலுவையில் வைத்துக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியது.
4 மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்றுவரை மசோதா குடியரசுத் தலைவரின் அலுவலகத்தை சென்று சேரவில்லை தமிழக சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை. கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஒருமுறையும் நவம்பர் 27-ம் தேதி மற்றொருமுறையும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநரை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றும் அசையவில்லை.
கடந்த ஆட்சியில் நடந்ததைப் போலவே தேர்வு நடந்த அன்றைய நாளும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து மாணவர்களின் தற்‘கொலை’ செய்திகளை நிரப்பியது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது போராட்டக்களமாக மாறும் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எந்த பெரிய கள எதிர்ப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது.
எடப்பாடி ஆட்சிக் காலத்தில், நீட்டுக்கு எதிராகப் போராடிய பெரும்பாலான ஜனநாயக சக்திகள் தி.மு.க.வின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.
அ.தி.மு.க.வின் “சடங்குத்தனமான சட்டப் போராட்டத்தை” ஒப்பிடும்போது தி.மு.க. நடத்துகின்ற “உணர்வுப்பூர்வமான சட்டப் போராட்டம்” நீட் தேர்வை இரத்துசெய்யப்  போதுமானது என்ற மயக்கம் நம்மவர்களை பீடித்திருந்தது. இதனால், அநீதியான நீட் தேர்வு இந்தமுறையும் நம் மாணவர்களின் குருதியைக் குடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
000
நீட் தேர்வு ‘இனிதே’ முடிந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர்.
டிசம்பர் 28-ம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, ராஷ்டிரபதி பவனிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரின் இல்லத்தில் காத்திருந்தனர். கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித்ஷா. ஆனால் அவர்களை அலைக்கழித்த அமித்ஷா, கிட்டத்தட்ட 10 நாட்கள் காத்திருந்தும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை; சந்திக்க முடியாதது குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை.
இதுகுறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, “அமித்ஷாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” என்றார். “மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது ஜனநாயக விரோதம்” என்றார் மு.க.ஸ்டாலின்.
நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் போதுதான், ஜனவரி 05-ம் தேதி நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் துவக்க நாளில், ஆர்.என்.ரவியை தங்களது கொள்கைப் பிரகடன அறிக்கையை “ஆளுநர் உரையாக” வாசிக்கவைத்தது தி.மு.க. அதில் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என அரசு உறுதியாக உள்ளது” என ஆர்.என்.ரவி முழங்கினார். தி.மு.க. ஆதரவு ஊடகங்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் “சம்பிரதாய” ஆளுநர் உரையை, ‘தமிழ்நாட்டு ஆளுநரை தி.மு.க. பணியச் செய்துவிட்டது போல’ மிகைப்படுத்திக் காட்டி, “பார்த்தீர்களா, தி.மு.க.வின் பராக்கிரமத்தை” என சிலாகித்தார்கள்.
அதே சட்டமன்றக் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனவும் ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் தெரிவித்து ஆளுநரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் வி.சி.க.வினர்.
அதேநாளில், மூன்றாவது முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக 7 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் காத்திருந்தனர். அன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டி.ஆர்.பாலு, “அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்றார்.
அடுத்ததாக, ஆளுநருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனவரி 08-ம் தேதி மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க. அதில் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதையும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட்டை இரத்து செய்வது குறித்து பேசும்போது, “சட்டப்போராட்டம் தொடரும்” என்று சொல்லி தீர்மானத்தை முடித்துக் கொண்டார்கள்.
இங்கே நாம் ஒரு விசயத்தைப் பரிசீலிக்க வேண்டும். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுக்குழு அறிக்கை; சட்டமசோதா; அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்; ஆளுநர், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் என பல வழிகளில் மூர்க்கமான சட்ட வழி போராட்டங்கள் நடத்தியாயிற்று. இனியும் சட்டப் போராட்டத் தொடர்கதையா?..
அமித்ஷாவை சந்திப்பதற்காக, டெல்லி சென்று நாட்கணக்கில் காதிருக்கும் தமிழக எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
“சட்டப்போராட்ட வழிமுறைகள் குறித்து வல்லுநர்களை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவெடுப்போம்” என்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக்கூட மதிக்காத பாசிஸ்டுகளிடம்போய் சட்டப்போராட்டம் நடத்துவதன் மூலம் நம்மால் எதை சாதித்துவிட முடியும். இதுவரை 13 மாணவர்களை பலிவாங்கியிருக்கிறது இந்த சட்டப்போராட்டப் பாதை. இன்னும் சட்டப் போராட்டப் பாதைக்கு எத்தனை பேரை பலி கொடுக்கப்போகிறோம்? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? அனிதா இறந்தபோது துடித்துப் போர்க்கோலம் பூண்ட தமிழகம், இப்போது எங்கே?
சட்டவழியில் தி.மு.க. எடுக்கும் முயற்சிகளுக்கு அமித்ஷாவும், பாசிஸ்டு படையணியின் உளவாளி ஆர்.என்.ரவியும் முட்டுக்கட்டை போடுவதும் அவமதிப்பதும், தி.மு.க. என்ற ஒரு கட்சிக்கான அவமானம் அல்ல. தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். இனியும் சட்டப் போராட்டப் பாதையை மட்டுமே தொடருவோம் என்பதற்கு, இந்த இழிவுகளை மேலும் சுமப்போம் என்பதே பொருள்.
தற்போது நீட் விசயத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, த.வா.க. போன்ற கட்சிகளின் அழுத்தம், இன்றளவும் கருத்தியல்ரீதியாக தமிழக மக்கள் நீட்டை வெறுப்பது, தொடர்ச்சியாக தேர்வுகளின்போது மாணவர் தற்கொலைகள் நடைபெறுவது ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த சட்டப்போராட்ட முயற்சிகளைக்கூட தி.மு.க. எடுத்திருக்கிறது.
படிக்க :
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
ஆனால் இந்த நிலைகூட இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. திமுக-வைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியை பிரச்சினை இல்லாமல் ஓட்டுவதற்கு உட்பட்டதுதான் அனைத்தும்.
நீட்டைப் போலவே, “புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்” என ஆரம்பத்தில் முழங்கியது தி.மு.க. பின்னர் “அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வோம்” என தாளம் மாறிப்பேசினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “எட்டுவழிச் சாலையை நிராகரிப்போம்” என்று பேசினார்கள், “நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோபித்துக் கொண்டவுடன் “வாருங்கள் ஒத்துழைக்கிறோம்” என வரிந்துகட்டிக் கொண்டு பதில் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு என்ற கிராமத்தில், மக்களை விரட்டியடித்துவிட்டு, சிப்காட்டின் மூலம் ‘வளர்ச்சியை’க் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகள் சட்டப்போராட்டப் பாதையில் தி.மு.க.வை நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதை கைவிட்டுவிட்டு களப்போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, டெல்லிச் சலோ பாதையில் போராட்டங்கள் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டிற்கே உரிய சிறப்பு அதுதான்!

துலிபா

ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?

கொரோனா தொற்று – லாக்டவுன் காரணமாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரினர். இவற்றுக்கு தீர்வாக அரசு ஆன்லைன் மூலமாக வகுப்புகள், தேர்வுகள் நடத்த அனுமதி அளித்தது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பை தங்களின் கட்டணக் கொள்ளைக்கான வாய்ப்பாக பயன்படுத்தின அல்லது அத்தனியார் நிறுவனங்களின் நலனில் இருந்து அரசு இந்த அறிவிப்பை விடுத்தது என்றுகூட சொல்லலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்ல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வினாத்தாளை ஆன்லைனில் அனுப்பி, மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுத அனுமதித்தன. மாணவர்களும் மகிழ்ச்சியாக ஆன்லைனில் தேர்வுகளை எழுதினர்.
2021 லாக்டவுனிற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. ஆகவே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தன. ஓரளவுக்கு கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. அரசு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாகத்தான் நடக்கும் (ஆஃப்லைனில்) என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.
படிக்க :
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, சென்னை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் அரசின் அறிவிப்புக்கு எதிராக போராடத் தொடங்கினர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தியது போல், செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.
பல்வேறு கல்வியாளர்களும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி, தேர்வு எழுதினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும், மாணவர்கள் படிக்காமல், புத்தகங்களை பார்த்தோ, அருகில் உட்கார்ந்துக் கொண்டு விவாதித்தோ எழுதுகின்றனர். ஆகவே நேரிடையாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும் மாணவர் போராட்டாங்களின் விளைவு, அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்த முறையும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அறிவிப்பு கொடுத்தது.
மாணவர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று தேர்வுக்கு தயாராகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை வைத்து பார்த்து எழுதுவது, ஒன்றாக உட்கார்ந்து விவாதித்து எழுதுவது, வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொண்டு பதில் எழுதுவது என்றெல்லாம் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
கல்வியாளர்கள் சொல்வதுபோல் இத்தகைய ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு முறை மாணவர்களின் கற்றல் திறனை குறைத்துவிடும், இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒன்றிரண்டு தலைமுறையே கல்வியறிவற்றவர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
அனைவருக்குமான கல்வி மறுப்பும், ஆளும் வர்க்கத்தின் நோக்கமும்:
இதற்கு பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலன், கல்வி என்பதை சரக்காக மாற்றி கொள்ளையடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் அனைவருக்கும் கல்வியை கொடுப்பது, சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்பதற்கோ, ஏழை, உழைக்கும் வர்க்கங்களை சார்ந்த குழந்தைகளுக்கும் கல்வியறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஆளும் வர்க்கங்களின் உற்பத்திக்கு, பல்துறை அறிவு பெற்றவர்கள் தேவைப்படுவதற்கு ஏற்ப, அவர்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு, குறைந்த கூலிக் கொடுப்பதற்கு, சமூகத்தில் இருந்து அவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்வதற்கு கல்வி, பயிற்சி பெற்ற வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் தேவைப்படுகிறது.
அத்தகைய சூழல் எப்பொழுதும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மிகவும் அவசியமாகும். ஆனால் அவற்றின் தேவையைவிட, மிதமிஞ்சிய வகையில் சமூகத்தில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர்கள் இந்த உற்பத்தி முறைக்கு தேவையற்றவர்களாக, சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களாக, பெரும் சுமையாக ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் உள்ள வாக்கியத்தை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். “ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாத படி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாகியிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும்…”
ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற அவசியம் கூட இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு தேவையில்லாததாக மாறி வருகிறது. இவற்றின் விளைவு இலவச கல்வி, அனைவருக்கும் கல்வி போன்றவைக் கூட தேவையற்றதாகின்றன. ரிசர்வ் பட்டாளம் கூட மிதமிஞ்சி அவர்கள் வாழத்தகுதி இல்லாதவர்களாக்கப்பட்டு வருகிறார்கள். முறையான கல்வி இல்லை, வேலையின்மை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மை, மனசோர்வு, தனிமை உணர்வு, சாராயம், கஞ்சா போதை (கஞ்சா மிக வேகமாக பரவி வருகின்றது.), செல்பேசியில் மூழ்குவது என்கிற நிலைக்கு குறிப்பிட்ட பிரிவு மாணவ – இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இவர்களை ‘வேண்டாத சதைப் பிண்டமாக, வெட்டியெறிய வேண்டியவர்களாக’ ஆளும் வர்க்கம் கருதுகிறது.
ஆன்லைன் தேர்வும், மாணவர்களின் மனநிலையும்:
ஆன்லைன் தேர்வுக்காக மாணவர்களின் போராட்டம், ஆளும் வர்க்கத்தின் நலனில் இருந்து இன்றைய சமூக சூழலில் இளைஞர்கள், மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். இத்தகைய சூழலில் மாணவர்களின் மனநிலையை பரிசீலிப்போம்.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை பார்த்து எழுத வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர், திட்டமிடுகின்றனர். யாரும் கண்காணிக்கவில்லை என்றாலும், சுய ஒழுக்கத்துடன் படித்து தேர்வை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அதைவிட முக்கியமான விசயம், மாணவர்களிடம் எந்த ஓரு குற்றவுணர்வோ, தாம் செய்வது தவறு என்ற உணர்வோ கடுகளவுக்கூட இல்லை.
இது இன்று மட்டும் நடக்கவில்லை, ‘பிட்’ அடிப்பது, வினாத்தாளை மாற்றிக்கொண்டு எழுதுவது, புத்தகத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு எழுதுவது, காப்பி அடிப்பது போன்றவை நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அப்பொழுதுக்கூட குற்றவுணர்வு, தவறானவைதான் என்கிற எண்ணங்கள் இருந்தன. அத்தகைய எந்த குற்றவுணர்வுமின்றி இன்றோ மகிழ்ச்சியாக, உற்சாகமாக திட்டமிட்டு புத்தகங்களை பார்த்து ஆன்லைனில் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்களிடம் சுய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டதா, இத்தகைய மாணவர்கள் நாளை சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? சமூகம் சீரழிந்து விடாத? என்றெல்லாம் கேள்விகளும், ஆதகங்களும் வெளிப்படாமல் இல்லை. இத்தகைய கேள்விகளுக்கு மாணவர்கள் சார்பாக நாம் பதிலளிப்போம். ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது என்று.
இந்த சமூகம் மாணவர்களுக்கு எதை கற்றுத்தந்ததோ அதையே திருப்பி அளிக்கின்றனரே தவிர, வேறோன்றுமில்லை. இங்கு குற்றவாளி இந்த சமூகமும், இத்தகைய நிலைக்கு காரணமான ஆளும் வர்க்கமும்தான். மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல.
வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
சுயநலமாக வாழ வேண்டும், தன்னுடைய நலனுக்காக எதையும் செய்யலாம், வேலை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற தமக்கு முன்னிற்பவரின் காலையும் வாரலாம், மற்றவர்களை சுரண்டலாம், அடக்கலாம், ஒடுக்கலாம் போன்றவற்றையே இந்த முதலாளித்துவ சமூகம் கற்றுத்தருகிறது.
போட்டி தேர்வுகளில் 1000 இடங்களுக்கு, 10 லட்சம் பேர் போட்டி. இதில் தான் 1000-த்தில் ஒரு இடத்தை பெற்றுவிட வேண்டும், வேலை கிடைக்காமல் போகிறவர்களைப் பற்றி எந்த கவலையும் தேவையில்லை. இதைதானே இளைஞர்களுக்கு இச்சமூகம் கற்றுத்தருகிறது.
இவைதான் இந்தச் சமூகத்தின் பண்பாடாக, ஒழுக்கமாக, விழுமியமாக இருக்கும்போது, மாணவர்கள், இளைஞர்கள் மட்டும் தேர்வுகளை சுய ஒழுக்கத்துடன் எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். அப்படியென்றால் இவற்றை ஆதரிக்கிறீர்களா என்று விதண்டாவாதமாக எதிர்வாதம் புரியக்கூடாது.
படிக்க :
பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
இச்சமூகத்திலும் குறைந்தப்பட்சம் நியாய உணர்வோடு வாழ்பவர்களில் சாதாரண உழைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு மற்றவர்களை சுரண்டுவதற்கு வாய்ப்பு இல்லையென்பதால் அல்ல, இவர்களின் யாதார்த்தமான வாழ்க்கை இதர ஒடுக்கும் மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதால்.
கல்விமுறையும், சமூகமும் மாணவர்களுக்கு “சமூக நலன், மக்கள் நலன், தேச நலன்” போன்றவற்றை என்று பிரதானப்படுத்துகிறதோ, அத்தகைய பண்பாட்டில் வளர்ந்து வரும் சமூகத்தில் மாணவர்களை யாரும் வெளியிலிருந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
அத்தகைய பண்பாடு, சுரண்டலை மையமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் கொஞ்சம் கூட இவை சாத்தியமில்லை. ஆகவே பாட்டாளி வர்க்கம் தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக்கொள்ளும் சமூகத்தில், சோசலிச உற்பத்தி முறையில் சமூக, தேசிய நலனை பிரதானப் படுத்தும் பண்பாடு தழைத்தோங்கும்.
ஆகவே, இத்தகைய சீரழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது ஆளும் வர்க்கங்களே தவிர, மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல! இன்றைய சீரழிந்த சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் சமூக உணர்வையே மாணவர்கள் பெறுவார்கள். அத்தகைய பணியை முன்னெடுப்போம்.

கந்தசாமி