Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 217

அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள்

னநாயக உச்சி மாநாடு” என்ற பெயரில் எதிர்வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் அமெரிக்கா நடத்த இருக்கும் மாநாட்டுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
“ஜனநாயகம்” – அமெரிக்காவுக்கு உயிராதாரமான சொல்லல்லவா ?
உயிராதாரமான சொல் என்றால் ஜனநாயகத்தை உயிர் அளவிற்கு நேசிப்பது என்ற பொருளில் புரிந்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துத் தான் பிற நாடுகள் மீது போர்தொடுத்து அந்த நாடுகளை கபளீகரம் செய்து, அங்கு தனது பொம்மை அரசாங்கங்களை நிறுவி அந்த நாடுகளைக் கொள்ளையடித்துக் கொழுத்துள்ளது.
அதன் காரணமாகத்தான் “ஜனநாயகம்” அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற பாகிஸ்தான், இந்துத்துவ மோடியின் கீழ் சிக்கியிருக்கும் இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளை அழைத்த அமெரிக்கா சீனாவையும் ரசியாவையும் அழைக்கவில்லை என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சீனாவிலும், ரசியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், ஜனநாயகம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவிற்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில கேலிச் சித்திரங்கள் விளக்குகின்றன.
அமெரிக்கா ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்த போது எடுத்த படம் …
கந்தலான அமெரிக்க ஜனநாயகத்திற்கு மேற்பூச்சு கொடுக்க முயலும் ஜோ பைடன்
அங்கிள் சாம் : வேறு எந்த நாட்டிற்கு ஜனநாயகத்த ஏற்றுமதி பண்ணனும் ?
அசிஸ்டண்ட் : உள்நாட்டிலேயே அது கிழிஞ்சிதான் தொங்குது. அத முதல்ல சரி பண்ணப் பாருங்க பாஸ் !
சர்வதேச ஜனநாயகக் காப்பாளனின்” உள்நாட்டு ஜனநாயக யோக்கியதையை “Black Lives Matter” போராட்டம் உலகுக்கே அம்பலப்படுத்தியது..
“பயங்கரவாதத்தை” எதிர்த்து “ஜனநாயகத்துக்காக” போராடும் சர்வதேச பயங்கரவாதி அமெரிக்கா !
வளர்ந்திருக்கும் கண்காணிப்பு அரசு தான் அமெரிக்காவை இன்று “ஜனநாயகமாக” பராமரித்துக் கொண்டிருக்கிறது
ஒரு நாட்டைச் சுரண்டி, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு துண்டு ரொட்டியைப் பிச்சையாகப் போடுவதை கருணை முகமாகக் காட்டுவதுதான் “ஜனநாயகத்தை” நிலைநாட்டுவது.
“அமெரிக்கன் ஸ்டைல்” ஜனநாயகத்தின் சமீபத்திய உதாரணம்
கேலிச்சித்திரங்கள் : குளோபல் டைம்ஸ் மற்றும் இணைய வெளியில் எடுக்கப்பட்டவை
தொகுப்பு : கர்ணன் 

ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு

திருச்சியில் கடந்த நவம்பர் 21-ம் தேதியன்று இரவு ஆடு திருடும் கும்பலை விரட்டிப் பிடிக்கச் சென்ற போலீசு சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பூமிநாதனை, ஆடு திருடும் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கும்பலில் சிறுவர்களும் அடங்கும் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இந்த நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேதிரபாபு திருச்சியில் உள்ள பூமிநாதனின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திப் பேசினார். தனது உரையில் பூமிநாதனின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அவர், இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசுத் துறையினர் கையில் ஆறு புல்லட்டுடன் கூடிய கைத்துப்பக்கியை எடுத்துச் செல்லுமாறும் ஆபத்து ஏற்பட்டால் சுடுமாறும் அதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளது என்றும் “போலீசுக்கே” சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக தோழர்கள் போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டங்களிலோ கைதாகும் சமயத்தில், சட்டப்படி தமக்கு இருக்கும் உரிமைகள் குறித்து போலீசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால், “போலீசுக்கே சட்டம் சொல்லித் தர்றியா?” என்று பாய்வார்கள் அதிகாரிகள். அந்த அளவிற்கு சட்டம் தெரிந்த போலீசாருக்கு டிஜிபி சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
படிக்க :
♦ காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?
♦ “யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?
கொள்ளையர்களை துரத்திப் பிடிப்பது போன்ற துணிகரமான சம்பவத்தில் ஒரு போலீசு ஈடுபட்டு, சமூக விரோதிகளால் அந்த அதிகாரி கொல்லப்படும் சமயங்களில் இத்தகைய பேச்சுக்கள் சமூகத்தின் அங்கீகாரத்தை உடனே பெற்றுவிடுகின்றன. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இதனை அறியாதவர் அல்ல. அந்த வகையில் அரசின் ஒடுக்குமுறைக் கருவியான போலீசுக்கு, ஆயுதத்தை தாராளமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை  சரியான நேரம் பார்த்து வழங்கியிருக்கிறார் டி.ஜி.பி.
எஸ்.ஐ. தரத்திற்கு மேல் இருக்கும் போலீசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே கைத்துப்பாக்கியை கையாளும் உரிமை இருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழக டிஜிபி அழுத்திக் கூறுவதன் பொருள் என்ன ?
அந்நிகழ்வில் பேசிய டிஜிபி கூடுதலாக அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் போலீசாருக்கு கைத்துப்பாக்கி, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிற போலீசாருக்கும் அந்த பயிற்சி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசு நிலையத்தில் கொடூரமாகத் தாக்கி படுகொலையை நிகழ்த்தியது கொரோனா ஊரடங்கு ரோந்து போலீசுதான். மதுரையில் விவேகானந்தக் குமார் எனும் இளைஞரை அடித்துக் கொன்றதும் ரோந்துப் போலீசுதான்.  இவர்கள் கையில் துப்பாக்கி இல்லாத போதே இத்தனைப் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், இத்தகைய போலீசுகளிடம் கைத்துப்பாக்கியை ஏந்திச் செல்ல  அறிவுறுத்துகிறார்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையில் கூட போலீசு நிலையத்தில் போய் அடித்த காட்சியைக் கண்ட சக பெண் போலீசு ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தால் அந்தப் போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இனி அந்தப் பிரச்சினையும் போலீசுக்கு இல்லை. பார்த்த இடத்திலேயே ‘சம்பவம்’ செய்துவிட்டு சர்வ சாதாரணமாக உயிருக்கு ஆபத்து நேர்ந்தது, அதனால் சுட்டேன் என்று கூறிவிட்டு மறுவேலையைப் பார்க்கச் செல்லலாம்.
எல்லாப் போலீசாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லையே என்றோ, உண்மையான கிரிமினல்களை பிடிக்கச் செல்லும் போலீசுக்கு என்ன பாதுகாப்பு என்றோ கேள்வி எழலாம். உண்மையான கிரிமினல்களைப் பிடிக்கச் செல்லும் நேர்மையான போலீசாரின் பாதுகாப்பிற்கு பல வழிகள் உள்ளன. கூடுதலாக போலீசை உடன் அழைத்துப் போகச் சொல்லலாம். பிற போலீசாருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செல்லலாம். சட்டையில் பொருத்தும் கேமராவோடு கூட ரோந்துக்குச் செல்லச் சொல்லலாம். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கையில் ரிவால்வரை எடுத்துக் கொடுப்பது என்பது, போலீசின் அதிகாரத்தை வரம்பற்றதாக்குவதோடு ’நல்ல’ போலீசுகளின் எண்ணிக்கையை ’கெட்ட’ போலீசுகளின் எண்ணிக்கையோடு சேர்த்துவிடும்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் வளர்ந்து வரும் சூழலில் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கப்படும் மேலதிக சலுகைகள் தான் பாசிஸ்ட்டுகள் அரியணையில் ஏறி அமர துணை புரிகிறது என்பதுதான் வரலாறு. இங்கு டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவித்துள்ள துப்பாக்கிச் ‘சலுகை’, முற்போக்காளர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரானது என்பது அல்ல பிரச்சினை. போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் – பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!
தமிழக டிஜிபி ரோந்து செல்லும் போலீசார் கைய்டில் துப்பாக்கி ஏந்திச் சரியான அணுகுமுறையா ?
அவசியமான அணுகுமுறை
அபாயகரமான அணுகுமுறை
முடிவெடுக்க முடியவில்லை
வாக்களிப்பீர் !!
கருத்துக் கணிப்பில் பங்கேற்க :

 

யூடியூபில் வாக்களிக்க : இங்கே அழுத்தவும்

டிவிட்டரில் வாக்களிக்க:

காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மரணம் குறித்தே ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. மனோகர் மல்கோங்கரின் The Men Who killed Gandhi, தூஷார் காந்தியின் Let’s Kill Gandhi ஆகியவை இதில் மிக முக்கியமானவை. அதிலும் Let’s Kill Gandhi புத்தகம் மிகவும் விரிவானது. இந்த இரண்டையும் படித்துவிட்டாலே, காந்தி கொலைக்கான பின்னணி, சூழல், சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில், காந்தியின் கொலை குறித்து புதிதாகச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோதம்ராஜு எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் The Murderer The Monarch and The Fakir புத்தகம் தேசப்பிதாவின் கொலை குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
படிக்க :
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
காந்தி கொலையில் நாதுராம் கோட்ஸே, வி.டி, சாவர்க்கர், ஆப்தே உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் சாவர்க்கர் மட்டும் தப்பித்துவிட மீதமுள்ளவர்கள் தண்டனை பெற்றார்கள்.
ஆனால், இந்தக் கொலையில் வேறு சிலரின் தொடர்பும் இருந்திருக்கிறது. அதில் ஒருவர் ஆல்வாரின் மகாராஜாவான தேஜ் சிங் பிரபாகரும் ஒருவர். காந்தியைக் கொலை செய்யப் பயன்பட்ட ப்ரெட்டா பிஸ்டல், மகாராஜாவின் ஆயுத சேகரிப்பிலிருந்து வந்தது என அப்புவிடம் குறிப்பிடுகிறார் ஒரு மூத்த அதிகாரி.
இதிலிருந்து தன் தேடலை துவங்குகிறார் அப்பு. காந்தி கொலை குறித்த பல்வேறு தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மறுபடியும் புரட்டுகிறார். பிறகு இந்தத் தேடலில் பிரியங்காவும் இணைந்து கொள்கிறார்.
இந்தத் தேடல் முடியும் புள்ளி, வி.டி. சாவர்க்கர். காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம்.
ஆனால், உண்மையில் அந்த சதித்திட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் பங்கேற்று, முழுமைப்படுத்தியவர் சாவர்க்கர் என்ற முடிவுக்கு இந்தப் புத்தகம் வருகிறது.
தேசத்தந்தை கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்படுவதற்கான சித்தாந்தத்தை சாவர்க்கர் தருகிறார். அதற்காக நபர்களை ஒருங்கிணைக்கிறார். திட்டம் நிறைவேறிய பிறகு விலகிக்கொள்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் விறுவிறுப்பான, அட்டகாசமான புத்தகம் இது. கண்டிப்பாக படியுங்கள்.
நூலின் உட்தலைப்புகள் :
Book I : The Murderer
1. The August Conspiracy
2. The Accidental Breakthrough
3. The Recruit
4. The Beretta Gun that killed Gandhi
Book II : The Monarch
1. The Open Secret
2. Alwar and the Princely Affair
3. The Militarization of the Hindus
Book III : The Fakir
1. Imagined Enemies
2. The Idea of Hindutuva
3. Hindu Khatre Mein Hai
4. The Cult of Godse
வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ்.
நூலாசிரியர்கள் : அப்பு எஸ்தோஸ் சுரேஷ் , பிரியங்கா கொடம்ராஜூ
விலை: ரூ. 399.
முகநூலில் : K Muralidharan
disclaimer

விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !

மோடி விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சித்த போது… || பாகம் 2

பாகம் 1 :

மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரியும் டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய அரச வன்முறை வெறியாட்டங்களில் சில.. இங்கே கருத்துப்படங்களாக !

கருத்துப் படங்கள் :

(முற்றும்)

வினவு கேலிச்சித்திரங்கள்

 

 

ஆர்.எஸ்.எஸ்-க்கு தரகு வேலை செய்யும் ராமதாஸ் கும்பல் !

NEW DELHI, OCT 10 (UNI):-PMK Founder President S Ramadoss and his son and Rajya Sabha Member Anbumani Ramadoss calling on Prime Minister Narendra Modi, in New Delhi on Thursday. UNI PHOTO CH 2 U
ன் நியூஸ் தொலைக்காட்சியில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடத்தப்பட்ட விவாத மேடை நிகழ்ச்சியில் பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு, “வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் தீண்டாமை என்ற ஒன்றைத் தவிர பொருளாதாரரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லை.” என்று கூறினார்.
அவர் கூறியது 100% உண்மை. வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையிலும் பெரும்பான்மையானோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் பாசிச திட்டங்களான 8 வழிச்சாலை முதல் ஹைட்ரோகார்பன், பாரத் மாலா வரை அனைத்து திட்டங்களிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
நாயக்கர், படையாட்சி, வன்னியர், வன்னிய கவுண்டர், பந்தல் வன்னியர், அரசு வன்னியர் இப்படி பல பிரிவுகளாக இருக்கும் இந்த சாதியை ராமதாஸ் மருத்துவராக இருந்தபோது துவங்கி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வன்னியர் சங்கமாக ஒருங்கிணைக்க முயற்சி செய்தனர்.
இந்தச் சாதிகளில் நாயக்கர்கள் படையாட்சிக்கோ, படையாட்சிகள் வன்னிய கவுண்டருக்கோ பெண் கொடுப்பது கிடையாது. ஏனெனில் அதற்குள்ளும் இவர்கள் படிநிலை வைத்திருக்கின்றனர். இந்தத் தீண்டாமையையும் உள்ளடக்கியதுதான் “வன்னியர் ஒற்றுமை”.
000
1987 இட ஒதுக்கீடு போராட்டம், அதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் மாறி மாறி  அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நாறிப் போன பிறகும் ராமதாஸ் எப்படி வன்னியர் மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார்?
ராமதாஸ் தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒன்றுமில்லாத பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் மட்டுமே உயிர் வாழக் கூடிய ஒரு பிராணி.
2002 ஆம் ஆண்டு செல்வாக்கு சரிந்த நேரத்தில், ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிக்கிறார் என்ற மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டு, பாபா திரைப்பட பெட்டிகள் திருடப்பட்டன, எரிக்கப்பட்டன, தியேட்டர் அதிபர்கள் கடத்தப்பட்டார்கள். அந்த வேலைகளில் முக்கியமாக ஈடுபட்டது இன்றைய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் அன்றைய ராமதாஸின் முக்கிய நம்பிக்கையாக இருந்த வேல்முருகன்.
இப்படிப் பல மொக்கையான காரணங்களை பூதாகரமாக்கித்தான் வன்னியர் சமூகத்தினரின் மீதான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால் ஒருபோதும், வன்னியர் சாதி மக்களுடைய பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி உரக்கப் பேசியது கிடையாது.
தற்போதும் சீண்ட ஆளின்றி செல்வாக்கு சரிந்திருக்கும் நேரத்தில், ஜெய்பீம் படத்தை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, வன்னியர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து போன ராமதாசுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதுபோன்ற குறுகிய சாதி ஆதிக்க பிரச்சினையை கிளப்பிவிட்டு தன்னை ஒரு அரசியல் தலைவராக எப்போதும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் வன்னியர் சாதி இளைஞர்களை சாதிவெறியூட்டி கலவரங்களில் ஈடுபடுத்துவதும் ராமதாசு கும்பலின் ஒரு வழக்கமாக இருக்கிறது.
000
ன்னியர் சங்கத்தின், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்பது ராமதாசை பாதுகாப்பதுதான். இதைத் தாண்டி வேறு எதுவும் எப்போதும் இருந்ததில்லை .
வன்னியர் சங்கத்தில் இருப்பவர்கள் ஆகட்டும், பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் ஆகட்டும் அவர்களை ராமதாஸ் எப்படி வைத்திருக்கிறார் என்பதற்கு சில சான்றுகள்.
தற்பொழுது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய அருள்மொழியின் தம்பி இளங்கோவன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியே போனபோது இளங்கோவனை மிகவும் ஆபாசமாக வசை பாடி போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஒரு காலத்தில் ராமதாசுக்கு, புரட்சி சாயம் பூசிய தீரனுக்கு இதைவிட மிக மோசமான நிலைமை இருந்தது. தீரன் மீண்டும் பாமகவிற்கு வந்து வந்துவிட்டார்.
தலித் ஒருவரை எப்போதும் பொதுச் செயலாளராக வைத்திருப்பேன் என்று கூறிய ராமதாஸ், தன்னை எவ்வாறு அவமானப்படுத்தினார் என்பதை கண்ணீர் விட்டு அழுதார் தலித் எழில்மலை.
வீரப்பனை வைத்து நாடகம் எடுத்து, வீரப்பன் பெயரைச் சொல்லி வன்னிய இளைஞர்களை சாதிவெறியேற்றி பெரும்பணம் சம்பாதித்த ராமதாஸ் இடம் சென்று “எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் கொடுங்கள்” என்று கேட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி துரத்தி அடிக்கப்பட்டார் தைலாபுரத்தில் இருந்து.
ராமதாசுக்காக பல கலவரங்களை செய்து புகழ்பெற்ற காடுவெட்டி குரு, மருத்துவம் பார்க்க வழி இல்லாமல் கிடந்ததும் அதற்காக அவர்கள் குடும்பத்தினர் தைலாபுரத்தில் வாசலில் காத்துக் கிடந்ததும், அவர்களையும் துரத்தியடித்தவர் தான் இந்த ராமதாஸ் .
வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வன்னியர்களை வன்னியர் சங்கம் தண்டிக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் 3 பேரை உயிரோடு எரித்த வன்னியர்களை வன்னியர் சங்கம் கண்டிக்கவில்லை.
வன்னியர் சங்கத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியிலும் கடுமையாக உழைக்கும் யாருக்கும் எப்பொழுதும் எம்எல்ஏ, எம்.பி சீட்டு கிடைப்பதில்லை. மாறாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் பினாமிகளுக்கே சீட் கொடுக்கப்படுகிறது. இது எல்லாம் வன்னியர் சங்கத்தில் இருக்கும் நபர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நபர்களுக்கும் தெரியாதா?
தெரியும். சாதி என்று வந்து விட்டால் எல்லா அநியாயங்களும் அக்கிரமங்களும் புனிதம் ஆகிவிடும் என்பதற்கு ராமதாசு ஒரு எடுத்துக்காட்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கூட சாதி பாசத்தால் பாமகவிற்கு ஓட்டு போட்டனர், ஓட்டு கேட்டனர்.
ஆர்எஸ்எஸ் எப்படி சித்தாந்த ரீதியாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது இந்த அடிமைகளை உருவாக்கி வருகிறதோ அதே போல ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்கள் சாதி சங்கத்தை அடிமைகளுக்காகவே உருவாக்கி வருகிறார்கள்.
000
ஒதுக்கீடு – உள்ஒதுக்கீடு என்ற ஏமாற்று!
1987 இட ஒதுக்கீடு போராட்டத்தின் விளைவாக, ஏறத்தாழ 108 சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு
20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் ஏறத்தாழ 15 சதம் வரை அவர்களே அனுபவித்தனர்.
திடீரென்று உள்ஒதுக்கீடு ஒரு பிரச்சினை என்று கூறி ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றார். இது உருவாக்கும் பொழுது சட்டத்தின் முன் நிற்காது தோற்றுவிடும் என்று ராமதாஸ் உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தாலும் வன்னியர் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அதை உருவாக்கினார்.
இந்த உள் ஒதுக்கீடு கோரிக்கையை கூட முதலில் ராமதாஸ் வைக்கவில்லை. சி.என். ராமமூர்த்தி என்பவர் இது தொடர்பாக பல ஆண்டுகள் வழக்கு நடத்தி அதற்கான தீர்ப்பையும் பெற்றார். அதன்படி உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் பொழுது ராமமூர்த்தி பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவிகிதத்தைப் பெற்றார். அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகி விட்ட பிறகு ஒதுக்கீடு வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை .
இன்றைக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என ஆனபிறகு அதை வைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினர் மீதும் தலித்துகள் மீதும் அவதூறு பரப்புவதையே முக்கிய வேலையாக கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்-ம் வன்னியர் சங்கமும் :
சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தே கிராமங்கள்தோறும் உள்ள வன்னியர் சங்க கிளைகள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பொருளாதாரரீதியாக படிப்படியாக முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறி வரும் பொழுது அவர்கள் இதுவரை தங்கள் பழக்க வழக்கத்தில் இல்லாத பல பார்ப்பனிய சடங்குகளில் மூழ்கிப் போய் கிடக்கின்றார்கள்.
குறிப்பாக, திருமணங்களில் பார்ப்பனர்களை அழைக்கும் வழக்கம் வன்னியர்களுக்கு இல்லை. இப்பொழுது ஏனைய மற்ற சாதிகளைப் போலவே வன்னியர்கள், பார்ப்பனர்களை அழைப்பதை ஒரு முக்கியமான விதி ஆக்கியிருக்கிறார்கள்.
ராமதாஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவுமே வன்னியர் சங்கத்தை பார்ப்பனியத்திடம் அடகு வைத்திருக்கிறார் .
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் பாடும் உரிமைக்காகப் போராடிய ஆறுமுகசாமி பிறப்பால் வன்னியர் சாதியை சேர்ந்தவர். அவருடைய தமிழ் பாடும் உரிமைக்காக போராடி அவரை சிற்றம்பல மேடையில் ஏறி பாட வைத்தது நக்சல்பாரி கம்யூனிஸ்ட் அமைப்புகள் தலைமையிலான கூட்டமைப்புதான். இந்தப் போராட்டத்தில் பாமகவின் பங்கு என்ன? பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதும் என்பதைத் தாண்டி என்ன இருக்கிறது?
தன்னுடைய சாதியை இழிவு படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள் என்பதற்காகவும் ராமதாஸ் சொன்னதைக் கேட்கவில்லை என்பதற்காகவும் ராமதாசை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட கலவரங்கள் , போராட்டங்களின் தன்மையோடு வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடிய நதிநீர் பிரச்சினை, விவசாய பிரச்சனை, அடிப்படைப் பொருளாதார பிரச்சினைக்கு ராமதாஸ் என்ன செய்தார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் அப்போதுதான் ராமதாஸின் உண்மை முகம் தெரியும்.
படிக்க :
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுவதால், பெட்ரோல் விலை உயர்வால், சிலிண்டர் விலை உயர்வால், ஜி.எஸ்.டி.-யால் வன்னியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா?
அதற்கெல்லாம் வெறுமனே ஒரு அறிக்கையோடு நின்றுவிடும் ராமதாசு, ஜெய்பீம் படத்தை வைத்து ஆடுவதற்கு காரணம் என்ன?
மக்கள் பாதிக்கப்படக்கூடிய அடிப்படை பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினால் அது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போய் முடியும். ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறிவிட்ட ராமதாசும் அவரது குடும்பமும் இழந்த சொர்க்கத்தை மீட்டு எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தங்கள் தேவைக்காக வன்னியர் சாதி மக்களை அடகு வைக்கிறார்கள். கொம்பு சீவி விடுகிறார்கள். இது எல்லாம் வன்னியர் சங்கத்தினருக்கு தெரிந்த போதும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
பாமகவுடன்  கூட்டணி வைக்க 500 கோடி வாங்கினார் என்றும், எங்கையா யாரு கூட எப்ப வேணா கூட்டணி வைப்பார் என்றும், பெருமையாக பேசிக் கொண்டு திரிபவர்களைத் தானே ராமதாஸ் உருவாக்கி இருக்கிறார் .
இது சரியோ அதற்காக போராட வேண்டும் இது நியாயமோ அதற்காக உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி எவன் நம் ஜாதியோ அவனுக்காக இருக்கவேண்டும் என்ற இழிவான ஒரு பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன, சாதி சங்கங்கள். இது ஆதிக்க சாதி சங்கங்களின் மட்டுமல்ல தற்போது தலித் சாதி சங்கங்களிலும் பரவி வருகின்றது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தாங்களும் மன்னர் பரம்பரை ஆதிக்கசாதி பெருமை பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றே இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி.
10.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏற்கெனவே இதுவரை முரண்பாடே ஏற்பட்டிராத சாதிகளுக்குள்ளும் முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
000
ஜெய்பீம் படத்தில் அக்கினிச்சட்டி காலண்டர் இருக்கின்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அடுத்ததாக குருவின் பெயர் உள்ளது என்றும் அதற்குப் பிறகு வன்னியர்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும் அதற்கடுத்து வன்னியர்களை மொத்தமாக அவமதித்து விட்டார்கள் என்றும் ஒரு நீண்டகால திட்டத்தோடு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன .
சேலம் தெற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருள் என்பவர் சேலம் மாவட்டம் முழுவதும் சூர்யாவுடைய திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் திரையிடக்கூடாது என்று மிரட்டல் கடிதம் அனுப்புகிறார் .
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரான பாலு, ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தால் வன்னியர் மக்களின் உணர்வுகள் ‘வேறு’ மாதிரி இருந்திருக்கும் என்று மிரட்டுகிறார்.
ராமதாஸ் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள காடுவெட்டி குருவின் மருமகன் அக்னி கலசத்தை அவமானப்படுத்தி விட்டார்கள், அது வன்னியர்களின் சின்னம் என்று கூறுகிறார்.
இயக்குனர் வ. கௌதமன் வன்னிய குடியே தமிழகத்தில் மிகப்பெரிய குடி. அதை அவமானப்படுத்துகிறார்கள், திராவிடர்கள் திட்டமிட்டு தமிழ் சாதிகளுக்குள் சண்டையை மூட்டி விடுகிறார்கள் என்று புதுக்கரடி விடுகிறார். சீமானோ, அக்னி கலசத்தை திட்டமிட்டு வைத்ததாக கூறுகிறார்.
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்து ஒவ்வொரு வன்னியர்கள் வீட்டிலும் செங்கல், சிமெண்ட், நகையாகவும் பணமாகவும் பெற்ற பல கோடி ரூபாய் வன்னியர் அறக்கட்டளையாக இருந்தது. வன்னியர் அறக்கட்டளையை தற்பொழுது ராமதாஸ் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார். தமிழகத்திலேயே மிகப்பெரிய குடியான வன்னிய குடியை ஏமாற்றிய ராமதாஸ் மீது கவுதமனுக்கு கோபமில்லை .
கௌதமன் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்காக இருந்தாரா ? இல்லை, அவர் அதிகாரவர்க்கத்தின் வன்னியர்களுக்கான நபராகவே இருந்திருக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நாடகம் எடுத்த வ. கௌதமன், பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யாததை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் அவர் யோக்கியதை.
சமீப கால வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றிலாவது வன்னியர்களுக்கு ராமதாஸ் ஏதாவது உதவி செய்திருக்கிறாரா ? உபத்திரவம் தான் செய்திருக்கிறார். அதற்கான உதாரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிவிரைவு படை
பழங்குடியின மக்களையும் வன்னியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த காலம் அது. பள்ளி கட்டிடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் சித்திரவதை செய்வதற்கென்றே தனி இடம் இருந்தது.
அதில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களையும் பழங்குடியின மக்களையும் கொண்டுவந்து போலீசை சித்திரவதை செய்வார்கள். ஜன்னல்களில் கையை கட்டி போட்டு தண்ணீரை தட்டில் வைப்பார்கள் நாய்போல நக்கித்தான் குடிக்க வேண்டும்.
அங்கே தங்கியிருந்த அதிரடிப்படைக்கு எதிராக , வன்னியர் சாதி மக்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக ஒருநாள்கூட வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியோ போராட்டம் நடத்தியதில்லை.
வீரப்பன் படுகொலை செய்யப்பட்டபோது, இன்றைக்கு வீரப்பனுடைய படத்தை பெருமையாக போட்டுக்கொண்டு திரியும் எந்த வன்னியர் சங்கமும் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. போலீசின் அடக்குமுறைக்கு எதுவும் பேசாமல் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்த வேலையைத்தான் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்தது.
தேவாரத்திற்குப் பிறகு அதிரடிப் படைக்கு பொறுப்பு ஏற்று செயல்பட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வன்னியரான கோபாலகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி வன்னியர் சாதி மக்களையும் பழங்குடியின மக்களையும் செய்த சித்தரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே வீரப்பன், கோபாலகிருஷ்ணனுக்கு குறிவைத்ததும் கோபாலகிருஷ்ணன் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னம் ஆனதும் அனைவரும் அறிந்ததே.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான தோழர் கொளத்தூர் மணி தன்னுடைய பேட்டியில் , “எங்களுடைய ஊரில் இருந்து இரண்டு பேருந்துகள் நிறைய மக்கள் அதிரடிப்படை வன்னியர்களை சித்திரவதை செய்வது தொடர்பாக தைலாபுரத்தில் சென்று முறையிட்டார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் ராமதாஸ் செய்யவில்லை” என்பதையும் “வன்னியர் என்றாலே அவர்களை கைதுசெய்து அதிரடிப்படை போலீஸார் கடும் சித்திரவதைகள் செய்தனர்” என்பதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த வன்னியர் மக்களின் அத்தாரிட்டி ஆக தன்னைக் கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் யோக்கியதையை தெரிவிப்பதற்காகவே மேற்கண்ட சில சம்பவங்களை கூறவேண்டி உள்ளது.
000
சூர்யா நடமாட முடியாது என்று கூறும் காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் வன்னியர் சொத்துக்களான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றிய ராமதாஸ் வீட்டின் முன் நின்று பேசுவதற்காகவாவது வக்கிருக்கிறதா ? இவர்கள் எல்லோரும் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் பிராணிகள்.
ராமதாஸ் போல தங்களால் வன்னியர் சாதி மக்களை கொள்ளையடிக்க முடியவில்லையே, அதிகாரத்தை செலுத்த முடியவில்லையே என்பதுதான் இவர்களின் ஏக்கம். அதனால்தான் ராமதாஸுக்கு எதிராக இருந்தாலும் ராமதாஸின் திட்டத்தில் இவர்களெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள்.
படிக்க :
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !
வன்னியர் அறக்கட்டளை மூலமாக எத்தனை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து உள்ளார்கள்?
செங்கல்வராய நாயக்கர் என்ற வன்னியர் சாதியைச் சேர்ந்தவர் தன்னுடைய சொத்துக்களை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். செங்கல்வராய நாயக்கர் ட்ரஸ்டின் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு பாமக முயற்சிசெய்தது, செங்கல்வராய நாயக்கர் டிரஸ்ட்டை ஆய்வு செய்ய வந்த நீதிபதியை கொலை செய்யவும் முயற்சி செய்தது.
அக்னி கலசம் வன்னியர்களின் சின்னமா?
உலகத்தில் எந்த ஒரு ஜாதியும் பிறக்கும்போதே குறிப்பிட்ட சின்னத்தோடு பிறப்பதில்லை. அந்த சாதிக்காக உருவாவதாக, உருவாக்கியதாக சொல்லப்படக்கூடிய கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு சின்னத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த சின்னத்தை கேலி பேசினாலே அது ஒட்டுமொத்த ஜாதியும் இழிவுப்படுத்துவதாக பேசுகிறார்கள்.
அக்கினி கலசம் என்பது வன்னியர்களின் சின்னம் அல்ல . அது மாறாக ராமதாசுடைய வன்னியர் சங்க சின்னம் தான் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவரான திருமால்வளவன் ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவிக்கிறார். 1980-களில் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தின் சின்னம் எப்படி ஒட்டுமொத்த வன்னியர்களின் சின்னமாக இருக்க முடியும்?
ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிப் பெருமையைப் பறைசாற்றுவதற்காக பார்ப்பனர்களின் அடிமையாக இருப்பதை நிரூபிப்பதற்காக பல்வேறு புராணங்களையும் கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள். அதன்படி புராணம் கொண்ட ஒரே சாதி வன்னியர் சாதிதான் என்ற பெருமையோடு வன்னியர் பெருமை தொடங்குகிறது.
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றியில் இருந்த வியர்வையை யாககுண்டத்தில் விட்டு அதிலிருந்து பிறந்தார்கள் வன்னியர்கள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்க ராமதாசு, கௌதமன் போன்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு ஒவ்வாததை புறந்தள்ள வேண்டும் என்பதே மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான விதியாகும். ஆனால் யாககுண்டத்தில் இருந்து பிறந்தார்கள் என்ற ஒரு அறிவியலுக்குப் புறம்பான ஒன்றை அவர்கள் நம்புகிறார்கள் என்றால் அது அவர்களின் உரிமை. ஆனால் அதைத்தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்று திணிப்பது எவ்விதத்தில் நியாயம்? டி.என்.ஏ டெஸ்ட் செய்தால் தெளிந்துவிடும் நெருப்பிலிருந்து வந்தார்களா இல்லையா என்று?
திண்டுக்கலில் கிறித்துவ வன்னியர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கிறார்கள். அவர்களும் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வந்தார்களா என்ன? விவிலியத்தில், உலகத்தை இயேசு உருவாக்கிய கட்டுக்கதைகளை, கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் அதை கேலிக்குள்ளாக்குபவர்கள் மீது வன்மத்தோடு பாய்வதில்லை. ஏனென்றால் உலகம் ஒரு கோள வடிவமானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற சார்லஸ் டார்வினின் கோட்பாடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் மருத்துவமனைக்கு தான் சொல்கிறார்கள். கோயிலுக்குத் தூக்கி செல்பவர்களை உலகமே மூட நம்பிக்கையாளர்கள் என்று கேலி பேசிக்கொண்டிருக்கிறது.
இச்சூழலில் நாங்களெல்லாம் யாககுண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று வன்னிய சாதிவெறியர்கள் சொல்வதற்கும், நாங்களெல்லாம் சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருந்து நேரடியாக வந்தோம் என்று தீட்சிதர்கள் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நாங்கள் பிறப்பிலேயே சிறந்தவர்கள் , மேன்மையானவர்கள் என்ற மூடநம்பிக்கை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்மூலம் இயல்பிலேயே தங்கள் ஆதிக்கம் நியாயமானதுதான் என்பதை கூறுகிறார்கள்.
000
எதைப்பற்றி யாரும் விமர்சனம் செய்தாலும் எங்கள் இனம், எங்கள் சாதி, எங்கள் மதம் புண்பட்டு விட்டது என்றால் எதைத் தான் பேச முடியும் ? பெருமாள்முருகன் ஒரு கதையை எழுதினார் என்பதற்காக தங்கள் மனம் புண்பட்டதாகச் சொல்லி, கவுண்டர் சாதிவெறியர்கள் மிரட்டி உருட்டி அவரை ஊரைவிட்டே துரத்தினார்கள்.
ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் அரசியல் ரீதியாக இருக்கவேண்டுமே, ஒழிய தங்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று பேசுவதாக இருந்தால் யாரும் எதையும் உருவாக்க முடியாது படைக்க முடியாது. அப்படிப்பார்த்தால் வ. கௌதமன் எடுத்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் தொடர்பான நாடகங்கள் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகச் சொல்லலாமல்லவா ?
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் வன்னியர் சாதி மக்களின் எண்ணிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராமதாசுக்கு ஓட்டு போடுவதில்லை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கலவரம் செய்வதற்காக ஒரு கும்பலை உருவாக்கியிருக்கிறார். அதன்மூலம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றியும் பெற்றுள்ளார். ராமதாஸின் இடத்தைப் பெறுவதற்கு தான் அனைத்து சாதிக் கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் குறித்து அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுதினார். இதுகுறித்து பதில் கடிதம் எழுதியுள்ள அன்புமணி, வில்லனுக்கு பின்புறம் அக்னிசட்டிக்கு பதிலாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அல்லது தீரன் சின்னமலையின் படம் இருந்தால் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். தலித் சாதி மட்டுமல்லாமல், ஏனைய பிற ஆதிக்க சாதிகளுடனும் முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் வன்னியர் சாதி மக்களை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு ராமதாஸ், அன்புமணி கும்பல் தீவிரமாக இறங்கி இருக்கிறது .
10.5 சதவீத சதவிகித உள் ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு இருந்து மற்ற சாதியினர் உடனான முரண்பாட்டை ராமதாஸ் கும்பல் தொடர்ச்சியாக வளர்த்து வருகிறது.
இதன் மூலம் இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்ய ராமதாஸ் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் தற்பொழுது களமிறங்கி இருக்கிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டில் சாதி மதம் இவற்றிலிருந்து பெரும்பான்மையான மக்கள் ஓட்டு போடுவதில்லை. ஆனால் அதை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலுள்ள தமிழ் இன உரிமைக்கான போராட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகத்தான் தமிழ் நாட்டை அடிமைப்படுத்த முடியும் என்பதில் மோடி ஆர்எஸ்எஸ் கும்பல் தெளிவாகவே இருக்கிறது. அதற்கு ஒரு வாய்ப்பாகவே ஜெய்பீம் படப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
வட மாவட்டங்களிலும் வன்னியர் சங்கம் அசாதாரணமான வளர்ச்சி பெற்றது எவ்வாறு என்பதற்கான பதிலை காடுவெட்டி குரு கொடுக்கிறார். “வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் “, என்று கூறியிருக்கிறார்.
வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பற்றி எழுந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காக வன்னியர் சங்கத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது, ஊக்குவித்தது. நக்சல்பாரி இயக்கத்தின் தியாகி தோழர் பாலன் தலைமையில் எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை அழித்து ஒழிக்கப்பட்டதோ, சாதி வேற்றுமை களையப்பட்டதோ அங்கெல்லாம் வன்னியர் சங்கம் மூலம் மீண்டும் தீண்டாமைக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
000
இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. நாட்டின் உழைக்கும் மக்களை சுரண்டி ஓட்டாண்டியாக்குகின்ற தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும் அதற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய நம் முன்னுள்ள கடமை. அதற்குத் தடையாக இருக்கக்கூடிய பார்ப்பனிய இந்து மத வெறியையும் அதற்கு அடிப்படையாக உள்ள சாதி வெறியயும் ஒழித்துக்கட்டுவதும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய பணியாகும்.
2024-ம் ஆண்டு காவி கார்ப்பரேட் பாசிச அரசை நிறுவ வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் மோடி – ஆர்.எஸ்.எஸ்.-க்கு தமிழகத்தை கூறுபோட்டாக வேண்டும் என்பது லட்சியம்.
மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காக அவர்களை வர்க்கமாக அணிதிரட்டி காவி கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக நிறுத்துவது என்ற பணியை நாம் தீவிரமாக முன்னெடுக்கா விட்டால், பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இன ஓர்மையை ஒழித்துக்கட்டி சாதி ரீதியாக பல கூறுகளாக தமிழகத்தை பிரித்து வைக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேறி விடும் என்பது மட்டும் உண்மை .
மருது
மக்கள் அதிகாரம்

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 20
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
வரலாற்றுக் கதைகள்
ரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.
ஐவர் ராஜாக்கள் கதை
பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், ‘நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள்.
எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை . குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள்.
படிக்க :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை, கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
ராமப்பய்யன் கதை
திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான்.
செஞ்சிக் கோட்டை
தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப் பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.
இரவிக்குட்டிப்பிள்ளை
இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம் முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள்.
படிக்க :
மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1637லும், 1639லும் நடைபெற்றவை.
தேசிங்குராஜன் கதை
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்?
இலட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம்

திர்வரும் டிசம்பர் மாதம் முதல் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஏற்ப வாகனங்களை மாடுகளுக்கான ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளைத் துவக்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் !

கொரோனாவில் மொத்த மாநிலமே கதிகலங்கி நின்றது. மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டு பற்றாக்குறை, கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்தது, கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட கொரோனா சடலங்கள் என உத்தரப் பிரதேசத்தின் மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை கொரோனா அம்பலப்படுத்தியது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களை எடுத்துச் செல்ல வண்டியில்லாமல் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட நிலைமையை சீர்படுத்துவது குறித்து எதுவும் பேசாத யோகி, மாடுகளுக்கு  ஆம்புலன்ஸ் தருகிறார்.

இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!

கருத்துப்படம் :

கருத்துப்படம் : மு. துரை

மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்

“மூன்று வேளாண் சட்டங்களை பெருவாரியான விவசாயிகள் ஏற்றுக் கொண்டார்கள். சிறு பிரிவினர் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை” என்று கடந்த நவம்பர் 19, 2021 அன்று தொலைக்காட்சியில் தோன்றி கூறிய மோடி, 3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்வதாக அறிவித்தார்.
3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம். இதே போன்ற எண்ணற்ற நிகழ்வுகளே மோடியின் முயற்சிகளின் அடையாளங்கள்.
நாடெங்கும் உள்ள மோடியின் அடிமைகள், இந்தச் சட்டம் பின்வாங்கப்பட்டதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கீழ்கண்ட விதத்தில் தங்களுக்கு  விவசாய சட்டங்களை ‘புரிய வைக்க’ முயற்சித்த மோடிக்கு விவசாயிகள் தங்களது வழிமுறையில் விரைவில் வர்க்கக் கோபம் என்றால் என்ன என்பதை அறியத் தருவார்கள்.

(தொடரும்)

கருத்துப்படம்

இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கியிருக்கிறன. நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலுமான பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா காலத்தில் முறையான பள்ளிப்படிப்பைப் பெற முடியாத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான ஆறு மாதகாலத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
‘‘இல்லம் தேடிவரும் கல்வி’’ என்றும் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் மூலம், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாலை ஐந்து முதல் ஏழு மணி வரை குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கு, பள்ளி செல்லாத காலத்தில் விடுபட்ட பாடங்களை நடத்துவது, தற்போது பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கான இடைவெளியை நிரப்புவது என்பதை நோக்கமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் இரண்டு ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவது, கல்வித்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும், சோதிக்கவும் பொறுப்பேற்பது என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் அதிகாரிகளே மாநில அளவில் தலைமை தாங்குவார்கள் எனவும், இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாயை மாநில அரசே ஒதுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரந்தோறும் குறைந்தது ஆறு மணிநேரம் கற்பித்தல் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் கொடுக்கவிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
படிக்க :
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
புதிய கல்விக்கொள்கையைப் புறவழியாகத் திணித்து பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் திட்டம், ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவ வாய்ப்பளிக்கும் திட்டம் என்ற விமர்சனங்களை மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் இத்திட்டத்தின் மீது முன்வைத்துள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ‘சமூகநீதி’ சான்றிதழ் வழங்கி வந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் கூட, ‘‘ஆர்.எஸ்.எஸ் அபாயம் கொண்ட திட்டம்’’, ‘‘புதிய கல்விக் கொள்கையைத் துண்டு துண்டாக நடைமுறைபடுத்தும் திட்டம்’’ என்று விமர்சித்திருக்கிறார்.
000
2020 மார்ச் இறுதியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலம் முதல் 2021 அக்டோபர் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் தமது இயல்பான பள்ளிக்கூட படிப்பை இழந்து விட்டனர். ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்குமே இக்காலகட்டம் பெரிய இழப்பு மட்டுமல்ல, பாடம் பயிலும் மனநிலையில் பெரும் பாதிப்பு, வேலைகளுக்குச் செல்ல வேண்டிய குடும்பச்சூழல் போன்ற நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது.
இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளவும், மாணவர்களை பள்ளிச்சூழலுக்கு மீண்டும் தயார்படுத்தவும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், எதிர்க்கட்சிகளும் இதுநாள் வரை எந்தவிதமான ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை. அதே நேரத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடர்ந்து இப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்து வந்தது.
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலை பரவிய காலகட்டத்தில், 2021 மே மாதம் முதலே, பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், பட்டதாரி இளைஞர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி, குடியிருப்புப் பகுதிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் திட்டத்தை பு.மா.இ.மு முன்வைத்தது. இதன் மூலம், மாணவர்களை பள்ளிச்சூழலுக்குத் தயார்படுத்த வேண்டுமென வலியுறுத்தியது. சில கல்வியாளர்களும் இப்பிரச்சினை குறித்து பேசியிருக்கின்றனர். அப்போதெல்லாம் காதுகொடுக்காத தமிழக அரசு, நிலைமை சீராகிவிட்ட பின்னர், பள்ளிகள் எல்லாம் திறக்கப்பட்ட பின்னர், இல்லம் தேடி கல்வி இயக்கத்தை அறிவித்திருப்பது எதற்காக?
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு மேல் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக இவ்வாண்டு வந்துள்ளதாக தமிழக அரசே கூறியிருக்கிறது. அப்படியெனில், மாணவர்களின் கற்றல் இடைவெளியை நிரப்புவதில் ‘அக்கறை’ கொண்ட அரசு செய்ய வேண்டிய உடனடிக் கடமைகள் என்ன?
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஓராசிரியர், ஈராசிரியர் தொடக்கப்பள்ளிகளில், வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருக்க வேண்டும். ஆசிரியர், வகுப்பறைகள், குடிநீர், கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கை அடிப்படையில், பள்ளிக்கு வெளியே தன்னார்வலர் மூலம் கற்பித்தல் முறையைத் திணித்திருக்கிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதாகவும், தமிழகத்திற்கென புதிய கல்விக்கொள்கையை உருவாக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் சொல்லிக் கொண்டே, கொல்லைப்புற வழியாக புதிய கல்விக்கொள்கையைத் திணிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. அதனால்தான், தி.மு.க.வின் கழக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று சதாசர்வகாலமும் பேசிவரும் பார்ப்பன தினமலர் பத்திரிகை ‘‘புதிய கல்வி கொள்கைக்கு செயல் வடிவம் − இல்லம் தேடி கல்வி’’ என இத்திட்டத்தைப் பாராட்டுகிறது; பா.ஜ.க.வோ திமுக அரசின் இத்திட்டத்தை வரவேற்கிறது.
புதிய ஜனநாயகம் மாத இதழ் சந்தா :
‘‘இல்லம் தேடி கல்வி’’ இயக்க அறிவிப்பு வந்துள்ள அதே நேரத்தில்தான், ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான வித்யா பாரதி, ‘‘கல்வித்துறையில் சேவைபுரியும் ஆர்.எஸ்.எஸ்−ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, பாரதிய பண்பாட்டு வகுப்பு என்பது பள்ளியிலும் பொது தளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பாரதிய பண்பாட்டு வகுப்பில், வளரும் நமது குழந்தைகளுக்குத் தேவையான ஹிந்து சமய கதைகள், ஆன்மிக பெரியோர் வரலாறு, ஹிந்து வாழ்வியல் நெறிமுறை, பாரத நாட்டின் வீர வரலாறு, பண்புக் கதைகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இந்த வகுப்பை தங்கள் பகுதியில் நடத்த ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக சேவை எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள் தேவை…’’ என்ற அறிவிப்பைச் செய்துள்ளது. இதே வகையிலான தன்னார்வலர்களைத்தான் இல்லம் தேடி கல்வி இயக்கமும் தேடிக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், காவி கும்பலின் இலக்குப் பகுதிகளான கொங்கு மண்டலம், தென் தமிழகம் ஆகியவற்றில், பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு மனதில் இந்த காவி கும்பல் இந்துமதவெறி நஞ்சை விதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை திமுக அரசு நன்கு உணர்ந்திருந்தும், காவி கும்பலின் ‘சமூக’ சேவை அமைப்புகளுக்கு இந்தத் திட்டத்தில் இடமில்லை என்று அறிவிக்கவில்லை. இதுதான், ‘‘சமூக நீதி’’, ‘‘மத நல்லிணக்கம்’’, ‘‘பாசிச எதிர்ப்பு’’ பேசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் உண்மை முகம்.
இந்தத் திட்டம் மட்டுமல்ல, 3, 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வை, ‘‘கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12−ம் தேதி நடைபெற உள்ளது’’ என மத்திய அரசு அறிவித்ததை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது திமுக அரசு. ஏற்கெனவே, 2018−19 கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு திணிக்க முயற்சி செய்தபோது, அதைக் கடுமையாகச் சாடியது திமுக. இப்போதோ, ‘அடிமை’ எடப்பாடி வழியில் வீறுநடை போடுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதிய கல்விக்கொள்கையை மட்டுமல்ல சமஸ்கிருதத் திணிப்புக்கும் வழிவகை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. பார்ப்பனிய கலை வடிவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கலைவிழாக்களை, ‘கலா உத்சவ் – 2021’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் மட்டத்தில் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் அடிமை அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நடத்தப்படுவது தான் என சில ‘திடீர்’ உடன் பிறப்புக்கள் திமுக−வுக்கு முட்டுக் கொடுக்கக்கூடும்.
படிக்க :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
புதிய ஜனநாயகம் நவம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய கல்விக்கொள்கையை நிராகரிப்பதாக தமிழக முதல்வர் மேடையில் பேசிவிட்டு இறங்கும் நேரத்திலேயே, அதற்கு எதிரான அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அறிவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், ‘‘தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக’’ தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது எட்டுக் கட்ட பயிற்சி என்றும், அதன் முதல்கட்டம் வருகின்ற நவம்பர் 15 முதல் 7 வரை இணையவழியில் பயிற்சிப் பட்டறை நடக்கவிருப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் தொழிற்கல்வி இணை இயக்குனர் 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தப் பயிற்சியை தில்லியைச் சேர்ந்த கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (Centre for Cultural Resources and Training) அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இந்த கலை மற்றும் கலாச்சாரப் பயிற்சியை நடத்த உத்தரவு போடுகிறது திமுக அரசு.
தொகுப்பாக சொன்னால், காவிகளால் இந்த நாட்டுக்கு ஆபத்து என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது திமுக. மாணவர் விரோத புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும், மாற்றுக் கல்விக்கொள்கை உருவாக்கவிருப்பதாகவும் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். அதே கட்சி, அதே முதல்வர்தான், இப்போது புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்கள், வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையை காவி–கார்ப்பரேட் கும்பலுக்குத் திறந்து விடும் ‘கரசேவை’யை, ‘‘கல்வியில் நடக்கும் மாபெரும் புரட்சி’’, ‘‘மறுமலர்ச்சி’’ என வர்ணிக்கிறார் முதலமைச்சர்.
சமூகநீதி, திராவிடம் ஆகியவற்றின் எல்லை எதுவென காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தால், ‘கேப்பையில் நெய் வடியும்’ என சத்தியம் செய்தவர்கள், தி.மு.க.வின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள், தி.மு.க. அரசு கல்வியில் செய்துவரும் ‘கரசேவைக்’ குறித்து மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
புதிய ஜனநாயகம்

சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 19
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை

சமூகக் கதைப் பாடல்கள்

மூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.

முத்துப்பட்டன் கதை

முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.

முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.

படிக்க :

தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.

இத்தகை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

நல்லதங்காள் கதை

நல்லதங்காள் கதை, தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள்.

இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான்.

அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காரி. குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடு படுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி.

தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது என்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.

இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமை யில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமை யற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.

படிக்க :

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

சின்ன நாடான் கதை

சின்ன நாடான் கதை. சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று, அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள்.

குழந்தை மனைவி பெரியவளானவுடன், ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை . கடைசியில் வஞ்சகத்தால்
அவனைக் கொன்றுவிட்டனர்.

சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான் என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.

கௌதலமாடன் கதை

மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கௌதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும். நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.

கௌதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்தி வந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான்.

ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது கௌதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது.

தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கௌதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கௌதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.

இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்பத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கௌதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.

வெங்கல ராசன் கதை

ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து விட்டான்.

வெங்கலராசன் கதையை விளக்கும் கல்வெட்டு

தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.

மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.

அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்ப வில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்று மறியாத குடிமக்களும், மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான்.

பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.

சமூகக் கதைகள் பற்றிய கருத்து

இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.
சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே.

இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப் பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளி யெறிப்பட்டன.

தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.

(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்

PP Letter head

முன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவிப்பு ! விவசாயிகளின் தொடர்போராட்டத்திற்கு பணிந்தது, பாசிச மோடி அரசு!

பத்திரிகை செய்தி 

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மோடி அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி ஓராண்டு நிறைவுறும் நிலையில் இதற்கு எதிரான போராட்டமும் வரும் நவம்பருடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இன்று (19.11.2021) பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாகவும், குறிப்பாக இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை விளைவிப்பதாக இருந்தாலும் சில விவசாய சங்களுக்கு தங்களால் புரியவைக்க முடியாத காரணத்தால் இந்த சட்டத்தை வாபஸ்பெறுவதாக கூறியுள்ளார், மோடி.

விவசாயிகளின் போராட்டத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மறைத்துக்கொண்டு தாங்கள் இப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள்தான் என்று நாடகமாடுகிறார், பாசிச மோடி. பிரதமரின் இந்த அறிவிப்பை கூட நம்ப முடியாது என்று சில விவசாய சங்கங்கள் வரும் நவம்பர் 29ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதிகாரபூர்வமாக சட்டமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் பாசிச மோடி அரசை விவசாயிகளின் போராட்டம் பணியவைத்துள்ளது என்பதே உண்மை.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் என்பது இந்திய விவசாயிகள் போராட்டத்தில் முத்திரை பதித்த மாபெரும் போராட்டம். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உபி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும், கொரானா பெருந்தொற்று காலகட்டத்திலும் தனது உயிரை துச்சமாக மதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தில் இதுவரை 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது இன்னுயிரை ஈந்துள்ளனர். இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகள், அமைப்புகள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் போட்டுள்ளன மத்திய மாநில அரசுகள்.

படிக்க :

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

11 முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகள் மீதே பழி போட்டு ஈவு இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது ஒன்றிய அரசு.
எதற்கும் பணியாத விவசாயிகள் அம்பானி அதானியின் கிடங்குகளை பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டு போராடினர், பா. ஜ. கட்சியினரை, அமைச்சர்களை விவசாயிகளின் அனுமதியின்றி ஊருக்குள் நுழைய விடாமல் அரியானாவில் பெரும் போராட்டம் நடந்தது. இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது.

பல மாநில அரசுகள் இந்த விவசாயிகளின் ஆதரவாக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றின. இந்த நெருக்கடியை தாங்கமுடியாமல் கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்படும் பாசிச மோடி அரசு, அடாவடியாக நடந்துகொண்டது. இந்த ஆத்திரத்தில்தான் உபி லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி நசுக்கி கொல்லும் அளவிற்கு தனது ஆத்திரத்தை காட்டியது பாஜக பாசிச கும்பல்.

அரியானாவில் பாஜகவினரை ஊருக்குள், கோயிலுக்குள், நுழைய விடாமல் நடந்துவரும் போராட்டங்கள், நடக்க இருக்கும் மூன்று மாநில் தேர்தல்கள், ஓராண்டு போராட்டம் நிறைவுறும் நிலையில் அடுத்தடுத்த விவசாயிகளின் போராட்ட அறிவிப்புகள் பாசிஸ்ட்டுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதுதான் மோடி அரசு இச்சட்டத்தை திறும்ப பெறுவதாக அறிவித்துள்ளதற்கு காரணம்.
வீரம் செறிந்த தொடர் போராட்டம் மட்டுமே பாசிஸ்டுகளை பணியவைக்கும் என்பதற்கு இப்போராட்டம் ஓர் படிப்பினை.

தேர்தல் மூலம் மட்டுமே பாசிஸ்டுகளை முறியடிக்க முடியும் என்று ஒரு புறமும், தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்தினால் மட்டுமே பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும் என்று மறுபுறம் கதைப்பதும் தவறானது என்பதை நிரூபிக்கும் படிப்பினை ஆகும். விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும், புதிய புதிய முறைகளிலும் எந்த அளவிற்கு நாம் போராடுகிறோமோ அந்த அளவிற்குதான் வெற்றி கிடைக்கும், முன்னேற முடியும் என்பதை இப்போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்-ற்கு எதிரான போராட்டம், பெட்ரோல் – டீசல், கேஸ் விலைவுயர்வுக்கு எதிரான போராட்டங்கள் உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம்!

விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் தியாகத்தையும், போராட்ட வழிமுறைகளையும் உயர்த்தி பிடிப்போம்.!

காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும்வரை போராடுவோம்..!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
கைப்பேசி : 99623 66321

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை :
விவசாயிகள் போராட்டத்தை இரத்தச் சேற்றில் மூழ்கடிக்க காவி பாசிஸ்ட்டுகள் செய்யும் சதி!
பாசிஸ்டுகளின் ஆட்சியில் படுகொலைகளுக்கா பஞ்சம் வேண்டும்! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுச்சியோடு முன்னேறிய போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 2020−ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியையே கலவரக் காடாக்கினார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்தனர்.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்திரப்பிரதேசம் − என இந்துத்துவத்தின் செல்வாக்கு மண்டலங்களையே கிட்டத்தட்ட ஓராண்டாக உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் பாசிஸ்ட்டுகளின் ஆத்திரத்தை தூண்டாமலா இருக்கும்? உ.பி மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை, அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு.
000
கடந்த செப்டம்பர் 25−ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள சம்பூர்ண நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துப் பேசினார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா.
இதைக் கண்டித்து, லக்கிம்பூருக்கு அருகிலுள்ள பகுதியில் அக்டோபர் 3-ஆம் தேதியன்று, மல்யுத்தப் போட்டியைத் துவக்கி வைக்க வந்த அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அஜய் மிஸ்ரா ஆகியோருக்குக் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
படிக்க :
உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
அப்போராட்டத்தில் பங்கேற்று அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீதுதான் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வெறித்தனமாக காரை ஏற்றி 4 விவசாயிகளை நசுக்கி படுகொலை செய்தான். இச்சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.
‘‘இது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என ஓட்டுக் கட்சித் தலைவர்களே அதிர்ச்சியடையும் வண்ணம், தாங்கள் தான் செய்தோம் என்று தெரிய வேண்டுமென்பதற்காகவே பட்டப்பகலில் துணிச்சலோடு இப்பச்சைப் படுகொலையை அரங்கேற்றியுள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
இச்சம்பவம் நாட்டிலுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கிய நிலையில் விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் இப்படுகொலைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் நடத்தி வருகின்றன.
அனைத்தையும் வெளிப்படையாக நிகழ்த்திவிட்டு, ‘‘ஆதாரம் இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என திமிரோடு பதிலளித்த யோகி ஆதித்யநாத் அரசு, இப்படுகொலைகளை ‘‘துரதிருஷ்டவசமானது’’ எனக் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கேலி செய்திருக்கிறது.
இந்தப் படுகொலைகளைக் கண்டு நாடே கொந்தளித்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தானே முன்வந்து விசாரிக்கிறது. இப்படுகொலை தொடர்பாக ‘‘உ.பி அரசின் விசாரணை திருப்திகரமாக இல்லை’’ என்று கண்டிப்பது போன்ற தோரணையைக் கொடுக்கிறது. இதற்கு முன்னர், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம், குஜராத் படுகொலை வழக்கு என காவி பாசிஸ்டுகள் நடத்திய எல்லா வன்முறைகளிலும் அவர்களின் கையாளாகச் செயல்பட்டதுதான் இந்த உச்ச நீதிமன்றம் என்பதை நாம் நினைவில் கொண்டே இதனைப் பார்க்க வேண்டும்.
உ.பி-யின் போராடிய விவசாயிகள் மீது பா.ஜ.க. அமைச்சரின் மகன் காரை ஏற்றி நான்கு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக் குற்றவாளி ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் (AISA) கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போராடிய மாணவிகளின் பிறப்புறுப்புகளில் எட்டி உதைத்து தனது வக்கிரத்தையும் பொறுக்கித்தனத்தையும் காட்டியுள்ளது டெல்லி போலீசு. இப்படி நீதிகேட்டு போராடுபவர்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது, காவி ஆட்சி.
அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது தற்போது நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை, பாசிஸ்டுகளின் தற்செயலான தாக்குதல் அல்ல. சுமார் 11 மாதங்களாக போர்க்குணமிக்க வகையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் ‘‘டெல்லி சலோ’’ போராட்டத்தை, இரத்தச் சேற்றில் மூழ்கடித்து, ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் காவி பாசிஸ்டுகள் களமிறங்கியிருக்கிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் காட்டுகின்றன.
லக்கிம்பூர் படுகொலையின் பின்னணி
லக்கிம்பூர் படுகொலையை காவிகள் முன்னறிவித்து செய்தார்கள் என்பது முக்கியமானது. சம்பூர்ண நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அஜய் மிஸ்ரா ‘‘இங்குள்ள மக்களுக்கு எனது வரலாறு தெரிந்திருக்கும், நான் நினைத்தால் விவசாயிகளின் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைப்பேன்’’ என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துப் பேசினார். அதைத் தொடர்ந்துதான் விவசாயிகள் கோபமுற்று, அஜய் மிஸ்ராவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அப்போராட்டத்தில்தான், அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா விவசாயிகளை கார் ஏற்றிப் படுகொலை செய்கிறான்.
அஜய் மிஸ்ரா மட்டுமல்ல, அதற்கடுத்த நாள் சமூக வலைதளங்களில் அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள மனோகர் லால் கட்டார், பா.ஜ.க.வின் விவசாயப் பிரிவு கூட்டமொன்றில் பேசிய காணொலி வெளியானது. அதில் ‘‘அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் 700 முதல் 1,000 தன்னார்வலர்களைத் திரட்டி குழுக்கள் அமைக்க வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் அக்குழுக்களை இறக்கிவிட வேண்டும். இதற்காக கட்டைகளைக் கையிலெடுங்கள். சிறை செல்வது, ஜாமீன் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று தங்களது திட்டத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், அரியானாவில் விவசாயிகள் நடத்திய ஒரு முற்றுகைப் போராட்டத்தின்போது, ‘‘பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்’’ என்று கர்னால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் உத்தரவிட்டதை தற்போது நினைவில் கொள்வோம்.
காவி பாசிஸ்டுகளின் இத்தகைய மிரட்டல் பேச்சுக்களை வெறும் வாய்ச்சவடால்கள் என்றோ, அவர்கள் நடத்தும் தாக்குதல்களை அந்தந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் நிகழ்பவை என்றோ நாம் பார்க்க முடியாது. கடந்த ஆண்டில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களை, குறிப்பாக டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை இந்தப் பாசிசக் கும்பல் வன்முறையை ஏவிவிட்டுக் கலைக்க முயன்றதைப் போலவே விவசாயிகள் போராட்டத்திலும் செய்ய விரும்புகிறார்கள். அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.
விவசாயிகள் போராட்டத்தின் மீதான காவி பாசிஸ்டுகளின் அணுகுமுறை
‘‘காலிஸ்தானிகளின் போராட்டம்’’, ‘‘பாகிஸ்தான் பின்னணி’’, ‘‘மாவோயிஸ்டு தூண்டுதல்’’ என்பது போன்ற தமது வழக்கமான அவதூறு பிரச்சாரங்களையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் ‘‘டெல்லிச் சலோ’’ முற்றுகைப் போராட்டமாக வளர்ந்ததையும், உலகம் முழுவதும் கவனம் பெற்ற போராட்டமாக மாறியதையும் காவிகள் எதிர்பார்க்கவில்லை.
கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விவசாயிகள் மக்கள் உறவினர்கள்.
‘குடியரசு’ தினத்தன்று விவசாயிகள் நடத்திய அணிவகுப்பின் போது, தனது ஐந்தாம் படையை அனுப்பி செங்கோட்டையில் கொடியேற்ற வைத்து, ‘‘விவசாயிகள் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள்’’ என்று காவி கும்பல் நடத்திய நாடகமும் அம்பலப்பட்டுப்போனது. விவசாயிகளது போராட்டத்தை தனிமைப்படுத்தி ஒழித்துவிட வேண்டும் என்ற சங்க பரிவாரக் கும்பலின் பல்வேறு முயற்சிகளும் பயனற்றுப் போயின.
மத்தியில் ஆளும் காவி பாசிசக் கும்பலின் நெருக்கடிகளையும் தாண்டி சுமார் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நீடிப்பது மகத்தான விஷயம்தான் என்றபோதும், அப்போராட்டம் தற்போது எதிர்கொண்டிருக்கும் தேக்கநிலையையும் நாம் பரிசீலித்தாக வேண்டும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தனியார் கொள்முதலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் (அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகமாக கொள்முதல் செய்யும் மாநிலங்கள்) போராடும் விவசாயிகளைப் போல நாட்டின் மற்ற மாநில விவசாயிகள் கிளர்ந்தெழவில்லை, விவசாய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அடையாளப் போராட்டங்களை நடத்துகிறார்கள்.
இச்சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஓர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு விவசாயிகளின் போராட்டத்தை இரத்தச் சகதியில் மூழ்கடிக்கவும், அதன் மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது, காவி பாசிச கும்பல். இந்த நிகழ்ச்சி நிரலின் தொடக்கம்தான் லக்கிம்பூர் தாக்குதல்.
பாசிச மயமாகி வரும் அரசு எந்திரமும்;
போராட்டத்தின் மீதான அவற்றின் எதிர்நிலைப் போக்கும்
காவி − கார்ப்பரேட்  நலனுக்கான திட்டங்களை உழைக்கும் மக்கள் எதிர்த்துப் போராடும் போதெல்லாம், காவி பாசிஸ்டுகள் தமது சொந்த பலத்தை வைத்து மட்டுமே அப்போராட்டங்களை ஒடுக்குவதில்லை. போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசுக் கட்டமைப்புகளை தமது காவி − கார்ப்பரேட் பாசிச நலனுக்கு ஒத்திசைவாக சேவை செய்யக்கூடிய அடியாள் படையாக மாற்றியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டத்தின் மீது சட்டப்பூர்வமான அடக்குமுறையைச் செலுத்தி, அதை விரைந்து முடித்து வைக்கும் நரித்தனத்தை உச்ச நீதிமன்றம் ஆரம்பம் முதலே செய்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் ஒருகட்டத்தில், அம்பானியின் ஜியோ டவர்களை நொறுக்குவது, ஜியோ சிம்கார்டுகளை எரிப்பது − புறக்கணிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றி கட்டணங்களை ரத்து செய்வது, ஆளும் கட்சித் தலைவர்களின் அலுவலகங்களை முற்றுகையிடுவது என ஆளும் வர்க்கங்களை அச்சமுறச் செய்வதாக மாறியபோது விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கைத்தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ‘‘விவசாயிகள் போராடுவதில் நியாயம் இருக்கிறது’’ என்று கூறி விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல தோரணை காட்டியது உச்ச நீதிமன்றம். போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி அமைப்பதாகவும், அதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு வேளாண் சட்டங்களையும் இடை நிறுத்தமும் செய்தது.
உச்ச நீதிமன்றம் நியமித்த இப்பேச்சுவார்த்தைக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்கள் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்பதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தின. இக்கமிட்டியின் யோக்கியதையைக் கேள்விக்குள்ளாக்கிய விவசாயிகள் அதைப் புறக்கணித்து உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர்.
இன்று, ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலோடு சேர்ந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்தை பகிரங்கமாக எதிர்த்து பேசி வருகிறது உச்ச நீதிமன்றம். சமீபத்தில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அனுமதி கேட்டபோது, ‘‘விவசாயச் சட்டங்களுக்குத்தான் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே, இன்னும் ஏன் போராடுகிறார்கள்?’’ என்று நியாயவாதம் பேசியது உச்ச நீதிமன்றம். மேலும், தலைநகர் டெல்லியின் குரல்வளையை நெறிக்கிறீர்கள், நெடுஞ்சாலைகளையும் முடக்கியுள்ளீர்கள்; அமைதிப் போராட்டமா நடக்கிறது? குடிமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களது சொத்துக்கள் சேதப்படுத்தப் படுகின்றன’’ என சங்கப் பரிவாரங்களின் குரலில் பேசியிருக்கிறது.
தேசிய மனித உரிமை ஆணையமோ இன்னும் ஒருபடி மேலே சென்று, தொழில்துறை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக பதிலளிக்கக் கோரி டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, விவசாயிகள் போராட்டத்தைக் கலைப்பதற்கான முகாந்திரத்தை சட்டரீதியாக உருவாக்கிக் கொடுக்கிறது.
‘‘போக்குவரத்து முடங்கியுள்ளது, நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என நீலிக்கண்ணீர் வடிக்கும் மனித உரிமை ஆணையத்திற்கு, இப்போராட்டத்தில் இதுவரை 605 விவசாயிகள் பலியானதும், விவசாயிகள் மீதான போலீசின் கொடூர தாக்குதல்களும் கண்ணிலேயே படுவதில்லை. கர்னால் தாக்குதல், லக்கிம்பூர் படுகொலைகள் எல்லாம் மனித உரிமை மீறலாகவும் தெரிவதில்லை.
உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே மோடி அரசைப் பணியவைக்கும்
டெல்லி சலோ − விவசாயிகள் போராட்டம் என்பது தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் நடக்கும் ஒரு முக்கியத்துவமிக்க மக்கள்திரள் போராட்டமாகும். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இம்மியளவும் இறங்கி வரவில்லை, இந்தக் காவிக் கும்பல் கார்ப்பரேட்டுகளின் தீவிரமான விசுவாசமிக்க அடியாள் படை என்பதால் இனியும் இறங்கிவர வாய்ப்பில்லை.
படிக்க :
திருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
மக்களிடையே எழும் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் பரிசீலித்துப் பார்க்கும் ஜனநாயகப் பண்பை நாம் பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்கவும் கூடாது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.
ஆனால் ‘‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்’’ என்ற ஒரே முழக்கத்தின் கீழ் ஒரு சில வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே தீவிரமாக பங்குபெறும் இப்போராட்டத்தினால் இதை நாம் சாதித்துவிட முடியாது. தொழிலாளர் சட்டங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், நீட் − புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் − ஆசிரியர்கள், மீன்வளச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் மீனவர்கள், பொதுத்துறை தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், காவி பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் சிறுபான்மையினர் − தாழ்த்தப்ட்ட மக்கள், ஊபா − என்.ஐ.ஏ போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களும் ஓரணியில் திரட்டப்பட வேண்டும்.
‘‘காவி−கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்ற பொதுக் கோரிக்கையின் கீழ் அனைவரும் அமைப்புரீதியாகத் திரண்டு போராடுவதே அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்கான பாதை. தனித்தனியாக தமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்ற மக்களிடம் இதை பிரச்சாரமாக எடுத்துச் செல்வது, அவர்களை அணிதிரட்டுவது என்ற மாபெரும் கடமை காவி − கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கின்ற அனைத்தும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் நிற்கிறது.

வெண்பா

முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !

நெல் கொள்முதலை தாமதப்படுத்தி விவசாயிகளை நட்டத்திற்குள் தள்ளும் தமிழக அரசே ! துரிதமாக நடவடிக்கை எடு !

மழை வெள்ளம் ..
கொள்முதல் தாமதம்..
அறுவடை நெல் முளைவிட்டது !
விவசாயி வாழ்க்கை கருகிவிட்டது !

கருத்துப்படம் :

0-0-0

பி.எஸ்.பி.பி முதல் சின்மயா வித்யாலயா வரை அம்பலமாகும் சங்கிப் பள்ளிகளின் பாலியல் வன்முறைகள் !

 

நாட்டுப்புறப் பாடல்களும் சமூக சரித்திரமும் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 18
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
யல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப்பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆர்க்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புதுமுறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தாரி முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டி விடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர்.
ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நிலப்பிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசியத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று. பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது.

படிக்க :

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?

இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்களையும் நாம் நோக்க வேண்டும்.
நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப் பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
1. இதிகாசத் துணுக்குகள்
2. கிராம தேவதைகளின் கதைகள்
3. சமூகக் கதைகள்
4. வரலாற்றுக் கதைகள்.
இதிகாசங்கள்
இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப் பொருளாகக் கொண்ட பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனும், பீமனும் மக்களுக்குத் தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்று கிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும் மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.
அல்லியரசாணி
பாரத கதாபாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள், அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள், அல்லி, பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அருச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அருச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன் – சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

பவளக்கொடி மாலை

இக்கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை, அல்லியோடு சிறிது நாள் தங்கியிருந்து விட்டு அருச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான்.
அருச்சுனன் பவளம் தேடி பவளக்கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக் காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். இப்படி ருசிகரமாகக் கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக் காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.

படிக்க :

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

பொன்னுருவி மசக்கை
மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும், கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.
ஏணி ஏற்றம்
நான்காவது கதை, ஏணியேற்றம். இது அஞ்ஞாத வாச காலத்து நிகழ்ச்சியொன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள தனது சகமனைவி அல்லியிடம் சரண்புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள்.
காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ்நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப் போலப் பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன.
அல்லி ஏணியை பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்களைச் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவது போல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்டபொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.
 “இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்
பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்த இது
போது மிவனை இன்னும் என்ன செய்யப்போகின்றீர்”
என்று தருமர் கேட்கிறார்.
இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதிவைத்திருக்க வேண்டும். இக்கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றனர் என்றாலும், கதையின் கருத்துக்கள் பழந்தமிழ்நாட்டில் நிலவியவைதாம்.
இவற்றைப் போன்று பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக்கதா பாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள். எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதாபாத்திரங்களை விட தமிழ் நாட்டுக் கற்பனைக் கதா பாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றன. ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப்பட்டுள்ளன.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

“பண்டோரா ஆவணங்கள்” : கருப்புப் பண மாஃபியாக்களின் பிறப்பிடம் உலக முதலாளித்துவம்!
வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி., தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலான உலகின் பிரபலமான 150 ஊடகங்களைச் சேர்ந்த 600−க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருக்கும் “சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு” (International Consortium of Investigative Journalists (ICIJ − ஐ.சி.ஐ.ஜே) வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்து சொத்து குவித்துள்ள ‘பிரபலமானவர்களின்’ பட்டியலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் − இந்நாள் அதிபர்கள், பிரதமர்கள், உயர் அதிகாரிகள், பெரும் கோடீஸ்வரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் எவ்வாறு தாங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணத்தை சொந்தப் பெயரிலும் பினாமி பெயரிலும் வெளிநாடுகளில் சொத்துக்களாக வாங்கிக் குவித்துள்ளார்கள் என்பதை அப்புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள “பண்டோரோ பேப்பர்ஸ்” அம்பலப்படுத்தியிருக்கிறது.
2016-ஆம் ஆண்டில் பனாமா பேப்பர்ஸ், 2017-ஆம் ஆண்டில் பாரடைஸ் பேப்பர்ஸ் என இதற்கு முன்னரும் இதேபோல சட்டவிரோதமாக சொத்து சேர்த்த கருப்புப் பண முதலைகளைப் பற்றிய ஆவணங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பண்டோரா ஆவணங்கள் அவற்றைவிட பலமடங்கு விரிவான விவரங்களை − மோசடிகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சுமார் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.
“பண்டோரா” என்ற பெயரில் இந்த ஆவணங்கள் வெளியாகியிருக்கிறது. விவிலியத்தில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணான ஏவாளைப் போல கிரேக்க புராணங்களில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணின் பெயர்தான் பண்டோரா. சியூஸ் எனும் கடவுள் பண்டோராவுக்கு ஒரு ஜாடியை பரிசளித்து அதை எப்போதும் திறக்கக் கூடாதென்று சொல்கிறார். ஆனால் ஆர்வமிகுதியால் பண்டோரா அந்த ஜாடியைத் திறக்கிறாள். ஜாடிக்குள் அடைபட்டிருந்த தீமைகள் அனைத்தும் உலகில் பரவிவிடுகின்றன. இக்கதையை ஒட்டி, ஏதேனும் ஊழல் அல்லது இரகசியங்கள் வெளிப்படும் போது “பண்டோரா பெட்டி திறந்துவிட்டது” என்று சொல்லும் வழக்கம் தோன்றியது.
படிக்க :
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
தற்போது “பண்டோரா” பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருப்பது உலகப் பிரபலங்களின் ஊழல் மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் யோக்கியதையையும்தான். ஊழல், மோசடி, திருட்டு, கருப்புப்பணம் என அனைத்திற்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்தான் என்பதை பனாமா, பாரடைஸ் ஆகிய ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. தற்போது பண்டோரா ஆவணங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் கருப்புப் பணப் பரிவர்த்தனைக்கான கட்டமைப்பே, முதலாளித்துவம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான்.
ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
பண்டோரா ஆவணங்கள், இதுநாள் வரை ஊர்மெச்சும் உத்தமர்களாக பேசப்பட்ட ‘பிரபலங்களை’ ’அம்மணமாக்கி’யிருக்கிறது. முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களும் அரசு அதிகார வர்க்கமும் முதலாளிகளுக்குச் சேவை செய்து அவர்களிடம் கிம்பளம் பெறும் பேர்வழிகள்தான் என்ற உண்மையையும் வெளிக் கொணர்ந்திருக்கிறது.
“ஊழலை ஒழிப்பேன்”… “வெளிப்படையான ஆட்சியைக் கொண்டுவருவேன்” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலின்ஸ்கி, கென்யா ஜனாதிபதி உகுறு கென்யாட்டா, செக் நாட்டு அதிபர் ஆண்ட்ரே பாபிஸ், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் முதலானோரை, வரியில்லா புகலிடங்களில் அவர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துக்களின் விவரங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது பண்டோரா ஆவணங்கள். இவர்களுள் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், வரியில்லா புகலிடங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வாய்கிழியப் பேசி வந்தவர் என்பதுதான் இதில் உள்ள நகைமுரண்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அஜர்பெய்ஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், கட்டார் சர்வாதிகாரியின் மனைவி மொஸா பின்ட் நாசர், உக்ரைன் நாட்டின் பெரும் பணக்காரர் இகோர் கொலோமொவ்ஸ்கி, மாபியா கும்பல் தலைவன் ரபேல் ஆமட்டோ, ஜெர்மனியைச் சேர்ந்த மாடலான கிளாடியா ஷிபர், கொலம்பியாவின் பெண் பாடகர் சகீரா, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜ பக்ஷேவின் மைத்துனர் நடேசனின் மனைவி − என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.
இப்பட்டியலில், இந்திய முதலைகளும் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறார்கள். வங்கிகளில் வாங்கிய ரூ.2,672 கோடி கடனைக் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர் நிலேஷ் பரேக், பஞ்சாப் தேசிய வங்கியில் தான் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி, மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சில் ஆஸ்வால், ரூ.88,000 கோடி கடனை திருப்ப செலுத்தாமல் ஏமாற்றிய கபில் வதவான் மற்றும் தீரஜ் வதவான், வங்கிகளுக்கு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்த ‘ரஃபேல்’ இழிபுகழ் அனில் அம்பானி, கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் − என பலரும் வரியில்லா புகலிட நிறுவனங்களின் அதிபர்திகளாக உள்ளனர்.
அண்மையில், உலக வங்கி செய்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் வரி ஏய்ப்புச் செய்யப்படுகிற தொகை சுமார் 6௦௦ பில்லியன் டாலர். இது, அமெரிக்க அரசின் மொத்த வரி வருமானத்தில், அந்த நாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தும் வரியைப்போல மூன்று மடங்கு. இந்திய மதிப்பில் சொன்னால், இது சுமார் ரூ.45 லட்சம் கோடிக்கு சமம். இந்திய அரசின் 202௦-ஆம் ஆண்டுக்கான ஒட்டு மொத்த வரி வருமானமே 23.61 லட்சம் கோடியாக உள்ள நிலையில், இது இந்தியாவின் வரி வருமானத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
வரியில்லாச் சொர்க்கங்கள் எனும் உலகளாவிய கருந்துளைகள்
வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோதமான வழிகளில் சொத்து சேர்ப்பவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை பிற நாடுகளுக்கு பாதுகாப்பாக எப்படி கடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு வரியில்லா புகலிட நாடுகளே பதிலாக அமைகின்றன. உலகிலுள்ள இருநூறு நாடுகளைச் சேர்ந்த “முக்கியஸ்தர்கள்” சுமார் 29,000 நிறுவனங்கள் மூலம் தங்களது கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்க நாடுகளில் பதுக்கியிருப்பதாக பண்டோரா ஆவணங்கள் கூறுகின்றன.
உலகின் சில நாடுகள் மற்றும் பல நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகள், தங்களது நாட்டில் / பகுதிகளில், பதிவு செய்துள்ள நிறுவனங்களின் வருமானத்திற்கோ, அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதிக்கோ, அவற்றின் பரிவர்த்தனைக்கோ வரி விதிப்பதில்லை அல்லது மிகவும் குறைவான வரியையே விதிக்கின்றன. மேலும், தங்களது நாட்டில் / பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களையோ, அவர்களின் சொத்து மதிப்புகளையோ பிற நாடுகளுக்கு கொடுப்பதில்லை. இதுபோன்ற நாடுகள் / பகுதிகள் தான் “வரியில்லா புகலிடங்கள்” (Tax Havens) அல்லது “வரியில்லா சொர்க்கங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
“உலகின் பெரும் பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் வரி ஏய்ப்பின் மூலம் அடிக்கும் கருப்புப் பணத்தை எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் உலகளாவிய கருந்துளைகளாக (Black holes) வரியில்லா புகலிடங்கள் இருக்கின்றன” என முதலாளித்துவ பத்திரிகைகளே வருணிக்கின்றன.
உதாரணத்திற்கு, பனாமா நாட்டில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனைவரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டவர் அல்லது தனிநபர்களின் விவரங்களை அரசுக்கு கொடுக்கத் தேவையில்லை; சர்வதேச வெளிப்படைத்தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாததால், அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்துள்ளவர்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுமில்லை.
சட்ட விரோத நிதியை சட்டப்பூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். அதாவது கருப்பை வெள்ளையாக மாற்றுவது. சிறந்த வரியில்லாப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா, நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். ஆகவேதான் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடாக பனாமா உள்ளது.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாகவும், முதலாளித்துவம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிதி சம்பந்தப்பட்ட சட்ட ஓட்டைகள் தொடர்பாகவும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி கோடிகளைச் சுருட்டுவதற்கென்றே பல வல்லுனர்களை பணிக்கமர்த்தியிருக்கும் பல்வேறு நிறுவனங்கள் பனாமாவில் இயங்கிவருகின்றன.
பனாமா மட்டுமல்ல, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேமன் தீவுகள், வெர்ஜின் தீவுகள், ஜெர்சி தீவுகள்; அமெரிக்காவின் டகோட்டா, டெக்சாஸ் முதலான மாகாணங்களின் சில பகுதிகள்; சுவிட்சர்லாந்து, துபாய் முதலான நாடுகளின் சில பகுதிகள் என உலகில் மொத்தம் 133 வரியில்லா புகலிடங்கள் செயல்படுவதாக 2020-ஆம் ஆண்டில் வரி நீதி வலையமைப்பு (Tax Justice Network − TJN) என்ற சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது.
வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை
சொந்த நாடுகளில் சட்டவிரோதமாக சேர்க்கப்படும் கருப்புப் பணம், வெளிநாடுகளில் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்றப்படுகிறது. இப்படி மாற்றப்படும் கருப்புப் பணத்தின் மதிப்பு 5.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து 32 லட்சம் கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடுகிறது சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு. மேலும், இந்தக் கருப்புப் பணம், ஏதேனும் ஒரு வரியில்லா புகலிடங்களில் சொத்துக்களாக முடங்கிவிடுவதில்லை. சட்டப்பூர்வ மூலதனமாக உருமாற்றம் பெற்று வேறு நாடுகளுக்கோ அல்லது அவை கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளுக்கே கூட செல்லலாம். அந்த மூலதனம் அங்கு குட்டிபோட்டு தன்னை மீண்டும் கருப்புப் பணத்தை உருவாக்கி இந்த வரியில்லா புகலிடங்களை நோக்கி பாயும்.
உதாரணமாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வரியில்லா புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்வர். வரியில்லா புகலிட நாடுகளில் இதற்கு இறக்குமதி வரி இருக்காது அல்லது மிகவும் குறைவு. பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள்.  இதனால், அந்த பினாமி நிறுவனம் பெரும் நிதியை இலாபமாகத் திரட்டும். பின்னர், இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்ற முகமூடியுடன் இந்தியாவிற்குத் திரும்பும். அன்னிய முதலீடுகளுக்காக ஏங்கிக்கிடக்கும் நம் நாட்டு அரசோ அம்முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளை வாரிவழங்கும். வரியில்லா புகலிடங்களின் மூலமாக மோசடியும், வரி ஏய்ப்பும் செய்து கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
ஏப்ரல் 2010−ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2019−ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குள் பாய்ந்த அன்னிய முதலீடுகளில் 87 சதவிகிதம் உலகின் முன்னணியான பத்து வரியில்லா புகலிடங்களில் இருந்து வந்தவையே.
இப்படி, கருப்புப் பணத்தை சட்டப்பூர்வ மூலதனமாக மாற்றிக் கொடுப்பதன் மூலம் மிகப்பெரும் இலாபத்தை ஈட்டுபவர்கள் ஏதோ முகம் தெரியாத மாஃபியாக்கள் அல்ல; ஏற்கெனவே நாம் அறிந்த, உலகின் பிரபலமான பல்வேறு முன்னணி நிதி நிறுவனங்கள் தான். சரியாகச் சொல்லவேண்டுமெனில், நிதியாதிக்க மாஃபியா கும்பல்கள்.
ஹெச்.எஸ்.பி.சி. (HSBC), யூ.பி.எஸ். (UBS), சிட்டி குரூப் (Citigroup), பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு (Standard Chartered), ஐ.என்.ஜி. (ING), பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley), கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) முதலான முன்னணி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சொந்தமாகவே பல்வேறு வரியில்லா புகலிடங்களை உருவாக்கி வைத்துள்ளன.
அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி என்ற பிரபல நிதி நிறுவனம், வெர்ஜின் தீவுகளில் உள்ள ஆல்கொகல் எனும் நிதி தரகு நிறுவனத்தின் மூலம் மட்டும் 312 வாடிக்கையாளர்களுக்கு கருப்புப் பணத்தை ஒளித்து வைப்பதற்கான இரகசிய நிறுவனங்களை அமைத்துக் கொடுத்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளது.
கள்ளத்தனமாக ஆயுதங்களைக் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், விபச்சாரத் தொழில் மாஃபியாக்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வரியில்லா புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர்.
ஒரு நாட்டின் அரசை தங்களுக்கு சாதகமாக வளைப்பதற்காக இலஞ்சம் கொடுக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியில்லா புகலிடங்கள் வசதியானவையாக இருக்கின்றன.  நைஜீரியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கு, உலக எரிபொருள் கார்ப்பரேட்டுகள் அந்நாட்டின் எரிபொருள் துறை அமைச்சருக்கு வரியில்லா புகலிடங்களில் ஏராளமான சொத்துக்களை இலஞ்சமாக வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு இதற்கு ஒரு சான்று.
இத்தகைய வரியில்லாச் சொர்க்கங்கள், ஏழை நாடுகளின் வளங்களையும், உழைக்கும் மக்களையும் ஏகாதிபத்தியங்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் ஆட்சியாளர்களையும் அந்நாடுகளின் அதிகாரிகளையும் இலஞ்சம் மூலம் குளிப்பாட்டுவதற்கு வசதியான தளங்களாகச் செயல்படுகின்றன.
முதலாளித்துவத்தை ஒழிக்காமல் கருப்புப் பண மாஃபியாக்களை ஒழிக்க முடியாது
நியாயமாக சமூகத்திற்கு சேரவேண்டிய சொத்துக்களை கருப்புப் பணமாக பதுக்கி ஒருசிலர் பருத்து கொழுத்துக் கொண்டிருக்கையில், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களோ நாள்தோறும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 40,000 குழந்தைகள் உலகெங்கிலும் பட்டினியால் மடிகின்றன. 2015-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி, 15 கோடி மக்கள் எந்தவகையான குடியிருப்பும் அற்ற பிளாட்பாரவாசிகளாகவும் 160 கோடி மக்கள் போதிய தங்குமிட வசதியற்றவர்களாகவும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 9.2 சதவிகிதம் பேர் கொடுமையான வறுமை நிலையில் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சமீபத்தில் உலக பட்டினிக் குறியீட்டில், 116 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 101-ஆவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பணக்காரர்களின் (பில்லினியர்களின்) எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
பணம் எங்கிருந்தும் காய்ப்பது இல்லை, உழைப்பிலிருந்து உற்பத்தியாகி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. அது எங்கிருந்து எடுக்கப்பட்டு, எங்கு குவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த சமூகக் கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பு பணத்தை வரியாக, விலைவாசி உயர்வாக, அடிமாட்டுக் கூலிக்கான உழைப்பாக என பல்வேறு வழிகளில் ஏழைகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு சலுகைகளாக, வங்கியின் வாராக் கடன்களாக அள்ளிக் கொடுக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பீடுதான் அதற்கு நிகழ்கால உதாரணம்.
படிக்க :
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
இந்த ஏற்றத்தாழ்வை உற்பத்தி செய்வதுதான் முதலாளித்துவம். இந்த ஏற்றத்தாழ்வில்தான் முதலாளித்துவம் வாழ்கிறது. ஏழைநாடுகளின் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் ஊழல்படுத்தவும், அதன் மூலம் அந்த நாட்டை மொட்டையடிக்கவும் ஏகாதிபத்தியங்களுக்கு இந்தக் வரியில்லா சொர்க்கங்கள் அவசியப்படுகின்றன. இவை இல்லையெனில் அவை ஏகாதிபத்தியங்களாக நீடிப்பது கடினம்.
ஆகவே பனாமா, பாரடைஸ், பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், எந்த நாட்டின் அரசும் இந்த வரியில்லாச் சொர்க்கங்களை கட்டுப்படுத்தவோ, மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. அவற்றால் செய்யவும் முடியாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.
முதலாளித்துவத்தை முறியடித்து உழைக்கும் மக்களின் தலைமையில் சோசலிசம் நிலைநாட்டப்பட்ட அன்றைய ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளிகள் கிடையாது. ஆகவே ஊழலும் கிடையாது, கருப்புப் பணமும் கிடையாது. ஏனெனில் அங்கு முதலாளித்துவம் கிடையாது.
சுரண்டலற்ற அத்தகைய சோஷலிச சமூகத்தை நிர்மாணிக்கும் திசையில், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் நாடுகளில், புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்கும்போதுதான் கருப்புப் பண வரியில்லாச் சொர்க்கங்களின் ஊற்றான முதலாளித்துவத்தை முறியடித்து மக்களுக்கான நல்லரசை உருவாக்க முடியும். பண்டோரா ஆவணங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான்.

டேவிட்