Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 757

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்

“இரட்டை வேடம் போடும்
‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்!

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!”

– தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டங்கள்!

முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசைவழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ம.உ.பா.மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, “முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகிய தேசிய கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாகவும், தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகமிழைக்கும் மத்திய அரசை எதிர்த்தும், கேரள உழைக்கும் மக்கள் தமிழனுக்கு எதிரி அல்ல என்பதை உணர்த்தியும் 12.12.2011 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகே இவ்வமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கேரளத்தின் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பா.ஜ.க. இந்துவெறிக் கும்பல், காங்கிரசு துரோகிகள் ஆகியோரின் உருவப்படம் கொண்ட முகமூடியணிந்தவர்கள் வெறியூட்டி குதூகலிப்பது போலவும், தமிழக விவசாயி தண்ணீரின்றித் தத்தளிப்பதைப் போலவும் காட்சி விளக்கத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இதேநாளில்,  செங்கொடிகளுடன் இப்புரட்சிகர அமைப்புகள்  திருச்சி, மதுரை, கடலூர், தருமபுரி, நாமக்கல், உடுமலை, சீர்காழி ஆகிய இடங்களில் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்,  தமிழக பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற உண்மை நிலையை விளக்கும் குறுந்தகடு பரபரப்பாக விற்பனையாகியது.  டிசம்பர்14 அன்று ஓசூரிலும், 16 அன்று வேதாரண்யத்திலும், 28 அன்று கரூரிலும் இப்புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உசிலம்பட்டியில், 9.12.2011 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை வி.வி.மு; பு.ஜ.தொ.மு; அமைப்புகள் இணைந்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் பங்கேற்று தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்;  கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க அறைகூவினர்.

விருத்தாசலத்தில் “தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் மத்திய அரசைப் புறக்கணிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகியவற்றைத் தோலுரிப்போம்! தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே, பதவி விலகுங்கள்!”, என்ற முழக்கத்துடன் ம.உ.பா.மையத்தினர் “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற குறுந்தகட்டை பொதுமக்கள் மத்தியில் ஃப்ரொஜக்டர் வைத்து ஒளிபரப்பி தெருமுனைப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, 21.12.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்தில் ம.உ.பா.மையத்தின் தலைமையில் கேரளா செல்லும் குருவாயூர் விரைவுவண்டியை  மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் உணர்வோடு கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாலையைக் கழற்றி எறிந்த ஐயப்ப பக்தர் ஒருவர்  உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் ம.உ.பா.மையத்தினர் துண்டுப் பிரசுரங்களுடன் வீதியெங்கும் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக 22.12.2011 அன்று தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். முன்னணியாளர்கள் 30 பேரைக் கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

திருச்சி ம.உ.பா. மையத்தினர் 22.12.2011 அன்று திருவரங்கம் தொடர்வண்டி நிலையத்தில் முன்னறிவிப்பின்றி குருவாயூர் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்த முயன்றனர்.  இதையறிந்த போலீசு, திருவரங்கத்துக்கு முந்திய ரயில் நிலையத்திலேயே விரைவு வண்டியை நிறுத்திவிட்டது. ரயில்வண்டி  வராத நிலையில் முழக்கமிட்டபடியே ம.உ.பா.மையத்தினர் மறியலில் ஈடுபட்டபோது, போலீசு அனைவரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தது. பின்னர், குருவாயூர் விரைவுவண்டி ஒருமணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

மதுரையில் ம.உ.பா.மையத்தினர் டிசம்பர் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவப் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தி,  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் குவிமையமான தேனி மாவட்டத்தில் டிசம்பர் தொடக்கத்திலிருந்து தன்னெழுச்சியாகப் பெருகிய மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல அறைகூவியும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் திரைகிழித்தும் சுவரொட்டிப் பிரச்சார இயக்கத்தை வி.வி.மு. மேற்கொண்டது. போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு”வைக் கட்டியமைத்த வி.வி.மு, இக்கூட்டமைப்பின் சார்பில் கூடலூரில் டிசம்பர் 15ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தியது. பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 16 முதலாக தொடர்ந்து 5 நாட்களுக்கு தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை இக்கூட்டமைப்பின் சார்பில் வி.வி.மு. முன்னெடுத்துச் சென்றது. முல்லைப் பெரியாறு அணையை நோக்கி  ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது  தடியடி நடத்திய தமிழக போலீசின் அடக்குமுறையை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை நடத்திய வி.வி.மு, தமிழகம் வந்த பிரதமரை எதிர்த்து “மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!” என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. மன்மோகன் வருகையை எதிர்த்து தேவாரத்தில் பல பகுதிகளில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. போடியிலிருந்து கேரளாவுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது எனப் பிரச்சாரம் செய்து சாலை மறியல் போராட்டத்தை வி.வி.மு. தொடங்கிவைத்தது. இதையொட்டி வி.வி.மு. தோழர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த மக்கள், மறுநாளிலிருந்து தன்னெழுச்சியாக மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புரட்சிகர அமைப்புகளின் அரசியல் முழக்கங்களே மக்களின் முழக்கங்களாக எங்கும் எதிரொலித்தன.

காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, பாலாற்று நீர் உரிமை, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உரிமை  என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தியும் போர்க்குணத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் எதிரி யார், துரோகிகள் யார் என்பதை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைப்பதாக அமைந்தன.

——————————————————-

போராட்டக் காட்சிகள் சில

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

197

“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.

அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்ஈழப்பிரச்சினையின் போது கூட பிரபாகரன் படத்தையும் பொய்ச் செய்தியையும் போட்டு ஏராளமாக கல்லா கட்டிய நக்கீரன் அதற்கு தோதாக பாதிரி ஜகத் கஸ்பரின் புரட்டு தொடரைப் போட்டு ஏமாற்றியது. இப்படி இழவு வீட்டிலும் ஆதாயம் பார்ப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.

கடந்த தி.மு.க ஆட்சியின் போது நக்கீரன் பத்திரிகை அடித்த ஜால்ராவினாலேயே அதன் நம்பகத்தன்மை இழந்து விட்டிருந்தது. அதன் விநியோகமும் வெகுவாகக் குறைந்திருந்தது. தற்போது நக்கீரனை பிடிக்காத ஜெயா ஆட்சிக்கு வந்திருந்தாலும் முன்பு போல அதன் வீச்சு பொது மக்களிடம் எடுபடவில்லை.

இந்நிலையில்தான் சசிகலா நீக்கம் நடக்கிறது. இதையும் அரசியல் ரீதியாக பார்க்காமல் போயஸ் தோட்டத்து படுக்கையறை இரகசியம் போல கடந்த ஒரு மாதமாக எழுதிக் குவித்து வருகிறது நக்கீரன். இதில் சசிகலாவே நேரடியாக நக்கீரனுக்கு விளக்கமளிப்பது போல அட்டைப்படத்திலேயே போட்டு ஏமாற்றியது. ஜூவியும் கூட சசிகலா நீக்கத்தை அரசியல் அற்ற மர்மக் கதை போல சொல்லி வந்தாலும், நக்கீரன் மட்டும் போட்டி கருதி இன்னும் மலிவாக எழுதி வந்தது.

நக்கீரன் பத்திரிகைக்காக கொழும்பிலிருந்து எழில், தில்லியிலிருந்து சிந்துஜா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராகவன், அண்டார்டிகாவிலிருந்து ஆண்டியப்பன் என்ற பெயர்கள் போட்டு எழுதப்படும் கட்டுரைகளும் சரி, எல்லா அரசியல் தலைவர்களது வீட்டுக்குள்ளிரிருந்தும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் நேரில் பார்த்து எழுதுவது போன்ற பாவனைகளும் சரி, இந்த டூப்பு மேட்டரில் நக்கீரனை விஞ்சுவதற்கு ஆளில்லை.

தாக்கப்பட்ட நக்கீரன் அலுவலகம்

அப்படித்தான் சசிகலா நீக்கம் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்தார்கள். உண்மையில் சசிகலா நீக்கம் குறித்து எப்படி பார்க்க வேண்டும் என்று வினவில் இரு கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதையும் நக்கீரன், ஜூவி கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானல் இவர்களது தரத்தையும், விற்பனை நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

சசிகலா நீக்கம் குறித்து ஏராளமான திகில் செய்திகளையெல்லாம் வெளியிட்ட போது ஏதாவது அ.தி.மு.கவிலிருந்து மிரட்டல், அடிதடி வரும், அதை வைத்து இமேஜை தூக்கி காசாக்கலாம் என்று நக்கீரன் திட்டமிட்டே செயல்பட்டது. அப்படி ஒன்றும் வரவில்லை என்பதால் இப்போது மாட்டுக்கறி மாமி மேட்டரை எம்.ஜி.ஆர் சொன்னதாகவும், அதை நக்கீரனது இன்றைய நிருபர் டைம் மெஷினில் பின்னோக்கி சென்று கேட்டு எழுதியதாகவும் தெரிகிறது.

மற்ற எதனையும் பற்றி கவலைப்படாத ஜெயாவின் மயிலாப்பூர் கும்பல் இந்த மாட்டுக்கறி மேட்டரை பார்த்து ‘கொலவெறி’ அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று ஒரு செய்தியைப் பார்த்தால் துக்ளக் சோவும், சு.சாமி மாமாவும் எவ்வளவு வெறியுடன் கோபம் அடைந்திருப்பார்கள் என்று நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம். அந்த கோபம்தான் அ.தி.மு.க குண்டர் படை வரை வந்து ஜானி ஜான் கான் ரோட்டிலிருக்கும் நக்கீரனது அலுவலகத்தை தாக்கியிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கடையில்தான் மாலையில் மாட்டுக்கறி வருவல் விற்பனை செய்யப்படும். இங்கு வந்து விரும்பிச் சாப்பிடுபவர்களில் அ.தி.மு.கவினரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது வந்து அட்டாக் பாண்டி போல ஆடியிருக்கிறார்கள்.

பார்ப்பன விழுமியங்களில் கொழுத்து திரியும் ஜெயாவின் மயிலாப்பூர் கும்பலுக்கு வெறியை வர வைத்து ஆதாயமடைய வேண்டும் என்று நக்கீரன் கவனமாகத்தான இதை வெளியிட்டிருக்கிறது. இப்போது இந்த அடிதடியை வைத்து எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவார்கள். தற்போது அ.தி.மு.கவும் இதற்காக நக்கீரனது மேல் வழக்கு போட்டிருக்கிறது. தமிழகத்தில் எதெல்லாம் அரசியல் என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும், வருகிறது பாருங்கள்!

பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய பத்திரிகைகள் இப்படி கிசுகிசு செய்திகளை வைத்து எழுதி கல்லா கட்டும் போது நாம் என்ன செய்வது?

பாசிச ஜெயாவை நாம் எதிர்த்துப் போராடும் போது, இந்த கிசுகிசு பத்திரிகைகளையும் புறக்கணிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழி?

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான  டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால்  சகித்துக் கொள்ள முடியவில்லை.  டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து  நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான்   வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ்  அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது  நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர்.  காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல்,  தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா  என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால்  அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது.  எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

நிர்வாக அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக சிவனடியார்கள் விழுப்புரம் இணை ஆணையரிடம் முறையீடு செய்தனர். ஆறு மாதமாக சிவனடியார்கள் அலைந்தது தவிர  எந்த பலனும் ஏற்படவில்லை. மனம் தளராத சிவனடியார்கள் இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்திடம் வந்து சேர்ந்தனர். ஆறு மாதமாக கோயிலில் இசைக்காமல் சிவனடியார்கள் சோர்வுற்றுள்ளனர். மனுவைத் தூக்கிக் கொண்டு இனிமேலும் எங்களால் அலைய முடியாது. ஆருத்ரா தரிசனம் அன்று (08.01.2012) சாமி புறப்படும் முன்பு நாங்கள் வாசிக்க வேண்டும். காவல் துறை கைது செய்தாலும் பரவாயில்லை. நாங்கள் இறை தொண்டிற்காக சிறை செல்லவும் தயார்.  மனித உரிமை பாதுகாப்பு மையம் எங்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆதரவு கொடுத்தோம்.

நேற்று ஆருத்ரா தரிசனத்தின் போது சிவாச்சாரியார்கள் சாமி பல்லக்கை தூக்கி புறப்பட்டனர். சிவனடியார்கள்  இசைக்ருவிகளை வாசிக்க துவங்கியவுடன் ஆத்திமடைந்த சிவாச்சாரியார்கள் நடராஜர் சாமியை கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் வழியிலேயே அப்படியே கீழே இறக்கி வைத்து விட்டு, சிவனடியார்கள் வாசிப்பதை நிறுத்தினால்தான் சாமி புறப்பாடு என கூறி தரையில் அமர்ந்து கொண்டனர். சிவனடியார்களும் பல்லக்கு புறப்பட்டால் வாசிப்போம் என உறுதியாக நின்றனர்.

போலீசார், கோவில் நிர்வாக ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு ஆதரவான ஜால்ராக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் சிவனடியார்கள் பின்வாங்காமல் உறுதியாக இருந்தனர். நின்றிருந்த பொதுமக்கள் சிவனடியார்கள் வாசிக்கலாம் எனவும் பிரச்சனை வேண்டாம் சாமிக்கு வழிவிடுங்கள் எனவும் இரண்டாக பிரிந்தனர். பிரித்தது மனித உரிமை பாதுகாப்பு மையம். சுமார் இரண்டு மணி நேரம் நடராஜர் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாச்சாரியார்களுக்கு பின்பு பல்லக்கிலே காத்திருந்தார்.

அ.தி.மு.க நகர செயலாளர்கள் பா.ம.க கவுன்சிலர், ஒயின்ஷாப் ஓனர் ஆகியோர் சிவனடியார்களை பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், காசி விசுவநாதன், மற்றும் நிர்வாகிகள்  தடுத்தனர்.  வேடிக்கை பார்க்கும்  போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர். நிருபர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால் கைகலப்பு கட்டுப்பாட்டோடு நின்றது. திராவிட கழக நகர செயலாளர் இளந்திரையன் ஆகியோர் வந்தவேலை முடிந்ததா என அ.தி.மு.க வை கண்டித்தனர். சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்கவும் தங்களை பலவந்தமாக அப்புறப்படுத்திய அ.தி.மு.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாக படுத்து போராட்டம் நடத்தினர். இச்சூழலில்தான் பல்லக்கு புறப்பட்டு சென்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், காவல் துறை அதிகாரியிடம் இசைக்கருவிகளின் மூலம் இறைவனை வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதற்கு யாரும் தடையும் விதிக்க முடியாது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இதே கருவிகள் வாசிக்கப்படுகிறது அதற்கு அரசு சம்பளமும் கொடுக்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வாசிக்கப்படுகிறது. அங்கெல்லாம் பொதுமக்களுக்கு ஏற்படாத இடையூறு விருத்தாசலம் கோவிலில் மட்டும்  இடையூறு என்று நிர்வாக அதிகாரியின் உத்தரவு ஒருதலைபட்சமானது உள்நோக்கம் உடையது. சிவனடியார்கள் செய்வது தவறு என்றால் காவல் துறை கைது செய்யட்டும். அ.தி.மு.க வினர் தலையீடை அனுமதிக்க முடியாது  என வாதிட்டனர்.

அருகிலிருந்த சிவாச்சாரியார்கள்  இந்த கோயிலின் ஆகமபடி இந்த இசைகருவிகள் வாசிக்க கூடாது என வாதிட்டனர். ஆறு வருடங்களாக தடுக்காத ஆகமம் இன்று ஏன் தடுக்கிறது. நீங்கள் ஆகமத்தை மீறிவிட்டார்கள் என  புகார் கொடுங்கள் அதையம் பார்த்து விடுவோம் என வழக்கறிஞர்கள் பேசினர். காவல் துறையினரும், கோயில் நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலரும், செய்வதறியாது நின்றனர். விழித்துக் கொண்ட காவல் துறை சிவனடியார்கள் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க உதவும் படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டது. இசைக்கருவிகளுடன் சிவனடியார்களின் உள்ளிருப்பு போராட்டம் மனித உரிமை பாதுபாப்பு மையத்தின் ஆதரவுடன் இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் அ.தி.மு.க வை சேர்ந்த ஆர்.டி.அரங்கநாதன் கோயில் நிர்வாகிகள், சிவனடியார்கள், என பல தரப்பில் பேசி இன்றைக்கு  வாசிக்க வேண்டாம்,  நாளை கோட்டாச்சியர் தலமையில் அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்வோம். மீறி இசைத்தால் கோயில் நிர்வாகம் எதிராக போகும் என எச்சரித்தார். அவர் ஒரு கோயிலுக்கு சொந்தக்காரர். அதோடு கரகாட்டம் ஆடும் பூசாரியும் ஆவார்.  சிவனடியார்களோ சிறுவர்களாக இருந்தாலும் இசைக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என உறுதியுடன் வாசித்த பிறகுதான் கோயில் சாத்தப்பட்டது.

சிவனடியார்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லையென்றால் எங்களை இன்று தூக்கி வெளியே போட்டிருப்பார்கள் என மனம் நெகிழ்ந்தனர். போராட்ட செய்தி கேள்விபட்டு அருகாமை ஊரில் உள்ள சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று  இரவு பூஜைக்கு வந்து சேர்ந்தனர். இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை அனைத்து சிவனடியார்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. தொடந்து விருத்தாசலம் கோவிலில் இசை்கருவிகளை வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட  போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். எனவே விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.

இந்த இசைக்கருவிகளை வாசிப்பதில் தலித், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளனர். இவர்களையும், இவர்களது இசைக்கருவிகளையும் பார்ப்பன சிவாச்சாரியர்கள் இழிவாகவும், மட்டமாகவும் கருதுவதில் வியப்பில்லை. ஏதாவது ஒரு சாக்கினைச் சொல்லி தடுத்து விடலாம், நடப்பது மயிலாப்பூர் மாமியின் ஆட்சி என்று அவர்கள் நினைக்க அது போலவே மாமியின் அடியாட்படையான அ.தி.மு.கவும் உதவிக்கு வந்தது. ஆனால் இளைஞர்கள் உறுதியாக இருக்கவே அந்த உறுதிக்குப் பின்னால் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அரணாக இருக்கவே பார்ப்பன சூழ்ச்சி பலிக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்த ஆத்திகர்கள் நாத்திகர்களின் உதவியை ஏன் நாடுகிறார்கள் என்பதிலிருந்தே இந்து மதம் என்பது பார்ப்பன ஆதிக்க சாதியினரது மதம் என்பதையும், இதே உதவியை ஆர்.எஸ்.எஸ் இடம் கேட்டால் கிடைத்திருக்காது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ஒடுக்கும் இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்படுபம் ‘இந்துக்களுக்கு’ நாம்தான் பாதுகாப்பு!

—————————-

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!

43

டதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பட்டியல், இறுதியானவை அல்ல. ஏனெனில், பல பதிப்பகங்கள் இன்னமும் விலைப்பட்டியலை கொண்டு வரவில்லை. சிலர் அச்சுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார்கள். வேறு சிலர், விலைப்பட்டியலை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றார்கள். ‘நீங்களாக பார்த்து விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்…’ என்பதே பல பதிப்பகங்களின் பதிலாக இருந்தது.

இந்த நடைமுறை சிக்கலுடனேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதால், விடுப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, பாதுகாக்க வேண்டிய சில நூல்களை கொண்டு வந்த பதிப்பகங்கள், பொருளாதாரம் அல்லது வேறு காரணங்களால் இந்தக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் போடவில்லை. பதிலாக, தாங்கள் வெளியிட்ட நூல்களை பிற பதிப்பகங்களில் வைத்து விற்க முடிவு செய்திருக்கிறார்கள். முடிந்தவரை அப்படி விற்கப்படும் நூல்களின் விவரங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை படிக்கும்படி தோழர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். விடுப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை மறுமொழியில் தெரியப்படுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!கண்காட்சி நடக்கும் இடம், மொத்தம் 10 சாலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையின் தொடக்கத்திலும், முடிவிலும் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பட்டியலும் சாலைகளின் எண்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதேபோல் அரசியல், வரலாறு, தத்துவம், கலை இலக்கியங்கள், அறிவியல்… என்றெல்லாம் பிரித்து வகைப்படுத்தாமல், பதிப்பகம் அல்லது விற்பனையகம் சார்ந்தே நூல்களின் விவரங்களை தந்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் 90%, ‘கீழைக்காற்றுஅரங்கில் கிடைக்கும்.

இனி –

———————-

சாலை எண்: 1

. அலைகள் (எண்: 22)

1. சியாங் சிங்: ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம் – ஜாஃபியா ராயன் – ரூ. 70/- (இந்த சியாங் சிங், தோழர் மாவோவின் துணைவியார்)

2. தத்துவத்தின் வறுமை – காரல் மார்க்ஸ் – ரூ. 135/-

3. மதம் பற்றி – லெனின் – ரூ. 70/-

4. சோசலிசமும் போரும் – லெனின் – ரூ. 50/-

5. மகாத்மா புலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 100/-

6. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – தமிழில் ஆ.சீனிவாசன் – ரூ. 750/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது. கடைசி இரு அத்தியாயங்கள் மட்டும் குருசேவ் கால திரிபுவாத கருத்துக்களை கொண்டவை. எந்தெந்த காலகட்டத்தில் மார்க்ஸ், என்னென்ன நூல்களை, எந்தச் சூழலில் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்)

7. இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு – சுகுமால்சென் (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 450/-

8. கறுப்பு அடிமைகளின் கதை (UNCLE TOM’S CABIN) – ஹேரியட்பீச்சர் ஸ்டவ் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 280/-

9. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 50/-

10. வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் – எம்.ஆர்.அப்பன் (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 230/-

11. இந்திய மக்கள்: மதம் – பழக்க வழக்கங்கள் – நிறுவனங்கள் – அபே.ஜெ.எ.துபுவா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 260/-

12. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் – நா.வானமாமலை – ரூ. 100/-

13. தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் – நா.வானமாமலை – ரூ. 30/-

14. பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பெளத்தமும் – நா.வானமாமலை – ரூ. 35/-

15. இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா.வானமாமலை – ரூ. 25/-

16. மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை – ரூ. 35/-

17. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி – நா.வானமாமலை – ரூ. 40/-

18. வரலாறும் வக்கிரங்களும் – ரொமிலா தாப்பர் (தமிழில் நா.வானமாமலை) – ரூ. 35/-

19. கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா? – ரொமிலா தாப்பர் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

20. ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள் – அசோக்ருத்ரா (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 30/-

21. பெளத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும் – உமா சக்கரவர்த்தி (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

22. அறிவியல், தத்துவம், சமுதாயம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: அ.குமரேசன்) – ரூ. 35/-

23. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்: திருமலை) – ரூ. 35/-

24. உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு (தமிழில்: ரா.கிருஷ்ணையா) – ரூ. 250/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருக்கிறது)

25. இந்தியத் தத்துவ இயல் – ஓர் எளிய அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 150/-

26. மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் – கான்ராட் உட் (தமிழில்: மு.இக்பால் அகமது) – ரூ. 130/-

27. இந்தியாவில் பெண்கள் இயக்கம் 1940 – 1950 – ரேணு சக்கரவர்த்தி (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 50/-

28. பிரெடெரிக் எங்கெல்ஸ் – டாக்டர் ஸ்தெபானாவா (தமிழில்: வ.சண்முகசுந்தரம்) – ரூ. 100/- (எங்கெல்சின் வாழ்க்கை வரலாறு)

29. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: வெ.கோவிந்தசாமி) – 125/-

30. உழைக்கும் மக்களின் முன்னணிப் படை – ஏ.ஷாஜின் (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 30/-

31. தொழிற்சங்கங்களைப் பற்றி காரல் மார்க்ஸ் – ஏ.லாவோவஸ்கி (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) – ரூ. 70/-

32. சீன வானில் சிவப்பு நட்சத்திரம் (RED STAR OVER CHINA) – எட்கர் ஸ்நோ (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 375/-

33. மாயையும் எதார்த்தமும் – டி.டி.கோசாம்பி (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 110/-

34. நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி – ஆ.ரைஸ்வில்லியம்ஸ் (தமிழில்: பூ.சோமசுந்தரம்) – ரூ. 140/-

35. வரலாறு என்றால் என்ன? – ஈ.எச்.கார் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

36. ஆதிசங்கரரின் மக்கள் விரோதக் கருத்துக்கள் – கன்னடம்: பகவான் (தமிழில்: முனைவர் சி.சண்முகம்) – ரூ. 55/-

37. மாவோவின் நெடும்பயணம் (THE LONG MARCH) – DICK WILSON (தமிழில்: நிழல் வண்ணன்) – ரூ. 175/-

38. மார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் – தொகுப்பு: சி.இளங்கோ – ரூ. 40/-

39. சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே.வீரராகவன் (தமிழில்: ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) – ரூ. 150/-

40. இளமையின் கீதம் (சீன நாவல்) (THE SONG OF YOUTH) – YANG MO (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 300/-

41. சூறாவளி (சீன நாவல்) (THE HURRICANE) – CHO LI – P0 (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 200/-

42. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹிண்டன் (தமிழில்: கி.இரமேஷ்) – 100/- (கலாச்சார புரட்சி குறித்த வரலாறு)

43. இராணுவமும் அரசியலும் (ஜாக் வோடிஸ் எழுதிய நூலின் சுருக்கம்) – நா.தர்மராஜன் – ரூ. 50/-

முதல் பாதையின் முடிவில் திராவிடர் கழக பதிப்பகத்தின் கடை உள்ளது. இங்கு தந்தை பெரியாரின் நூல்களை வாங்கலாம்.

———

சாலை எண்: 2

. கீழைக்காற்று (எண்: 404 / 405)

1. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… – கணேசன் (அய்யர்) – ரூ. 130/-

2. பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – ஆவணங்கள் தொகுப்பு: சமன்லால் (பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) தமிழில்: எஸ்.சம்பத் – ரூ. 15/-

3. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன் – ரூ. 15/-

4. நக்சல்பாரி புரட்சியின் இடிமுழக்கம் – ரூ. 12/-

5. தெராய் பிராந்திய விவசாயிகள் இயக்கம் பற்றிய அறிக்கை செப்டம்பர், 1968 – தோழர் கனுசன்யால் – ரூ. 15/-

6. மக்களிடையே நமது பணிகள் – கதீப் அன்சாரி – ரூ. 12/-

7. ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மாசேதுங் – ரூ. 50/-

8. கட்சி அமைப்பு பற்றி – ஸ்டாலின், காகனோவிர், டிமிட்ரோவ், மாவோ – ரூ. 50/-

9. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம் – செள என் லாய் – ரூ. 10/-

10. முரண்பாடு பற்றி – மாவோ – ரூ. 40/-

11. கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக் – ரூ. 7/-

12. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன் – ரூ. 40/-

13. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின் – ரூ. 75/-

14. சினிமா: திரை விலகும்போது… – புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா விமர்சனங்கள் – ரூ. 70/-

15. மீண்டும் தொழிலாளி வர்க்கம் (வினவு, புதிய கலாச்சாரம் கட்டுரைகள்) – ரூ. 80/-

16. அருந்ததிராய் – கரண்தபார் விவாதம் – தமிழில்: அனாமதேயன் – ரூ. 10/-

17. விடுதலைப் போரின் வீரமரபு – (புதிய கலாச்சாரம் காலனியாதிக்க எதிர்ப்பு சிறப்பிதழ் கட்டுரைகளின் தொக்கு) ரூ. 65/-

18. ஈராக் வரலாறும் அரசியலும் – கலையரசன் – ரூ. 15/-

19. நினைவின் குட்டை நதி (சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்) – ரூ. 70/-

20. நிஜத்தின் உரைகல்லில் சினிமா (வினவு, புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த திரை விமர்சனங்கள்) – ரூ. 110/-

21. ஆகஸ்டு 15, 1947: அதிகாரமாற்றம்: உண்மையா… சடங்கா? – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 25/-

22. பரமக்குடி துப்பாக்கிச் சூடு செப்.11, 2011, உண்மை அறியும் குழு அறிக்கை – ரூ. 15/-

23. நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் – ரூ.

24. ’பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன் – ரூ.50

25. பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன் – ரூ.40

26. ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன் – ரூ. 50/-

27. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? – ரூ. 25/-

28. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவத்துக்கு சவுக்கடி! (அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும் – ரூ.30/-

29. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை – ரூ. 7/-

30. கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு – புதிய கலாச்சாரம் கட்டுரைகள் ரூ. 25/-

31. இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினிய பார்வை – புதிய ஜனநாயகம்- ரூ. 30/-

32. சட்டக்கல்லூரி கலவரம்: சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்! – வினவு – ரூ. 35/-

33. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு – ரூ. 25/-

34. ஐ.டி.துறை நண்பா… – வினவு – ரூ. 35/-

35. மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு- ரூ. 35/-

36. ஜெயமோகன், சாரு நிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் இலக்கிய மொக்கைகள் – வினவு – ரூ. 25/-

37. எண்டோசல்பானையும் பி.டி.கத்திரிக்காயையும் விரட்டி அடிப்போம்! – ரூ. 10/-

38. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – வினவு -ரூ. 55/-

39. இமாலய சாகசம்: 1962 இந்திய சீனப் போர்: காரணங்களும் விளைவுகளும் – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 30/-

40. இசை: போதை பொழுதுபோக்கு போராட்டம் – புதிய கலாச்சார கட்டுரைகள் – ரூ. 40/-

41. இந்தியாவில் சாதிகள் (பாவை வெளியீடு) – அண்ணல் அம்பேத்கர் – ரூ. 30/-

. தோழமை (எண்: 385)

1. மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்னைகளும் – ஸ்டாலின் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 130/-

2. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் – லெனின், க்ளாரா ஜெட்கின் உரையாடல் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 100/-

. பொன்னி (எண்: 397)

1. வீரத்தெலங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும் – சுந்தரய்யா (தமிழில்: தியாகு) – ரூ. 400/-

2. சிறைக் கடிதங்கள் (கம்பிகளுக்குள்ளிருந்து இயற்கையை நேசிக்க வைக்கும் கடிதங்கள்) – ரோசா லக்சம்பர்க் – ரூ. 50/-

3. இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு (புரோகித ஆதிக்கத்தில் புதையுண்ட இந்திய வரலாறு) – தர்மகீர்த்தி அடிகள் (தமிழில்: வெ.கொ.பாலகிருஷ்ணன்) – ரூ. 120/-

4. அம்பேசிவம் (கூர்மைப்படுத்தப்பட்ட நாத்திகவாதக் கட்டுரைகள்) – குத்தூசி குருசாமி – ரூ. 50/-

5. வால்மீகி இராமாயணம் (மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்) – குருவிக்கரம்பை வேலு – ரூ. 100/-

6. பூமணியின் 5 நாவல்கள் (பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள்) – ரூ. 300/-

7. அம்பாரம் (பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு) – பூமணி – ரூ. 225/-

—————-

சாலை எண்: 3

. அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்

1. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆக்கங்களும் 37 தொகுதிகளாக தமிழில் கிடைக்கிறது. கைவசம் பிரதிகள் இல்லாததால் தொகுதி 8, 11, 22 ஆகிய மூன்றும் விற்பனைக்கு இல்லை. மீதமுள்ள 34 தொகுதிகளையும் ரூ. 1400/-க்கு வாங்கலாம். ஒருவேளை சில தொகுதிகள் பேப்பர் பேக் ஆக இருந்தால், இந்தத் தொகை உயரும்.

. காலச்சுவடு (எண்: 11 / 12)

1. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 100/-

2. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய் (தமிழில்:க.பூர்ணச்சந்திரன்) – ரூ. 145/-

3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – ரூ. 100/-

4. மணல்மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

5. கோவில் – நிலம் – சதி – பொ.வேல்சாமி – ரூ. 90/-

6. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி – ரூ. 180/-

7. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் – ரூ. 150/-

8. மந்திரமும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 150/-

9. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

10. தமிழகத்தில் அடிமைமுறை – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 80/-

————

சாலை எண்: 4

. விடியல் (எண்: 306 / 307)

1. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 350/-

2. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு – அருந்ததிராய் – ரூ. 30/-

3. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: நிழல்வண்ணன்) – ரூ. 70/-

4. வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன் பஸ்கர் காட்டில் தங்கிய அனுபவம்) – சத்நாம் – ரூ. 130/-

5. இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் – ரூ. 500/-

6. கோபுரத்தை உலுக்கிய காற்று மற்றும் அதிகாலை பெருவெள்ளம் – ஹேன்சூயின் – (இரு நூல்களும் சேர்த்து) ரூ. 1000/-  (எட்கர் ஸ்நோ எழுதிய நூல்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட தோழர் மாவோவின் வாழ்க்கை வரலாறு. அதன் வழியாக சீனாவின் வரலாறு)

7. நீண்ட புரட்சி – எட்கர் ஸ்நோ – ரூ. 175/- (‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலை ஸ்நோ, 1930களின் இறுதியில் எழுதினார். அதன் பிறகு அவர் மாவோவை 1970களில் சந்தித்தபோது எழுதிய நூல் இது)

8. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 80/-

9. மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 100/-

10. முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 75/-

11. சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்:  ) – ரூ. 25/-

(ஜார்ஜ் தாம்சனின் இந்த நான்கு நூல்களையும் வாசித்தால் ஓரளவு மார்க்சியத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளலாம்.)

12. மாஓ சேதுங்: தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் – ரூ. 200/-

13. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (1) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: சிங்கராயர்); இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (2) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில் நிழல்வண்ணன்) – இரு தொகுதிகளும் சேர்த்து ரூ. 600/-

14. தத்துவம்: பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: மு.வசந்தகுமார்) – ரூ. 35/-

15. சீனாவின் வரலாறு – வெ.சாமிநாதசர்மா – ரூ. 150/-

16. ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் – ஆனந்த் டெல்டும்ப்டெ (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 135/-

17. மனிதன் – ஆர்.இராமநாதன் – ரூ. 65/- (62 ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட நூல் இது. மனித குலத்தின் வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட நூல் இது)

18. ஹோசிமின் – யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்) – ரூ. 150/-

19. சீனாவும் சோஷலிசமும்: சந்தை சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும் – மார்ட்டின்ஹார்ட் – லேண்ட்ஸ்பர்க் பால்பர்க்கட் (தமிழில்: க.செங்கோடன்) – ரூ. 100/-

20. 1942 ஆகஸ்ட் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி – ரூ. 100/-

21. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா.முருகவேள்) – ரூ. 150/-

22. உயிரினங்களின் தோற்றம் (சுருக்கப்பட்ட வடிவம்) – சார்லஸ் டார்வின் (தமிழில்: ராஜ்கெளதமன்) – ரூ. 65/-

23. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஸெத்கின் – ரூ. 50/-

24. உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் (தமிழில்: வசந்தகுமார் – நிழல்வண்ணன்) – ரூ. 175/-

. அடையாளம் (எண்: 322 / 323)

1. எண்ணெய் அரசியல் – கேர்ரி ரீச் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 170/-

2. காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன் பாசு (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

3. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்ஜினியர் (தமிழில்: ஐ.இசக்கி) – ரூ. 150/-

4. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – ரூ. 425/-

5. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா – ரூ. 120/-

6. பதி பசு பாகிஸ்தான் – எஸ்.வி.ராஜதுரை – 80/-

7. இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை – ரூ. 115/-

. பாரதி புத்தகாலயம் (எண்: 18 / 19)

1. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்ப ஆண்டுகள் (1920 – 33) தொகுதி 1 – ரூ. 180/-

2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – குவான் யான்சி (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) – ரூ. 140/-  (Foreign Languages Press, Beijing, China, 1992ல் வெளியிட்ட  MAO ZEDONG MAN, NOT GOD, By Quan Yanchi என்ற நூலின் தமிழாக்கம். மாவோவின் மெய்க்காப்பாளராக பல ஆண்ட்கள் பணிபுரிந்த லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்)

3. ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் – உலக வங்கி – சூசன் ஜார்ஜ் – ரூ. 130/-

4. மார்க்சின் மூலதனம் பற்றி… – எங்கெல்ஸ் – ரூ. 70/-

5. சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம் – என்.எம்.சுந்தரம் (தமிழில்: இலக்குவன்) – ரூ. 60/-

6, நிதி நெருக்கடி ஒரு புரிதல் – அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்) – ரூ. 50/-

———-

சாலை எண்: 6

. சிலிக்குயில் (எண்: 277)

பிற பதிப்பகங்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக மனிதன் பதிப்பகம்சார்பில் வெளிவந்த தோழர் கிஷன்ஜி‘, ‘தோழர் ஆசாத்உட்பட மாவோயிஸ்ட்டுகளின் நூல்களை இங்கு வாங்கலாம்.

தவிர, முகம் பதிப்பகம் வெளியிட்ட வரலாற்றில் கிறிஸ்தவம் (புரூனோ பெள்வரும் பழைய கிறிஸ்தவமும், பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி, பின் இடைக்கால ஜெர்மனியில் திருச்சபை சீர்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) – பிரெடரிக் எங்கெல்ஸ் – நூலும் இங்கு கிடைக்கிறது. இதன் விலை: ரூ. 65/-

———–

சாலை எண்: 8

. தமிழ்ப் புத்தகாலயம் (எண்: 209 / 210)

1. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல்ஜி – ரூ. 350/-

2. பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல்ஜி – ரூ. 35/-

3. கலையும் இலக்கியமும் – மாசேதுங் – ரூ. 12/-

4. யுத்தம் வேண்டாம் – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 25/-

5. லெனினுடன் சில நாட்கள் – மாக்ஸிம் கார்க்கி – 24/-

6. அமெரிக்காவிலே… – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 45/-

7. எது நாகரீகம்? – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 30/-

8. தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக் – ரூ. 55/-

. நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (எண்: 53 / 54)

1. உலகாயதம் பண்டைய இந்தியாவின் ஆரம்பகால பொருள்முதல்வாத சிந்தனைகள் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 500/-

2. மதமும் சமூகமும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிசுபாலன்) – ரூ. 100/-

3. தமிழகத்தின் பொருளாதார வரலாறு – தேவ.பேரின்பன் – ரூ. 55/-

4. என் வாழ்க்கை – கே.என்.பணிக்கர் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 150/-

5. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம் – கார்த்திகேசு சிவதம்பி – ரூ. 130/-

6. மனித சமுதாயம் (வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்த எளிமையான விளக்கம்) – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு) – ரூ. 150/-

7. இந்துத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம்… ஆகிய ராகுல்ஜியின் நூல்கள் ரூ. 50/- முதல் ரூ. 70/-க்குள் தனித்தனியாக கிடைக்கின்றன.

8. மார்க்சிய மெய்ஞானம் – ஜார்ஜ் பொலீட்ஸ்கர் (தமிழில் ஆர்.கே.கண்ணன்) – ரூ. 55/-  இவை தவிர முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட பழைய ரஷ்ய நாவல்களில் பல, இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளன. பல முக்கிய நூல்களை தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள குறை.

———

சாலை எண்: 10

. கருப்புப் பிரதிகள் (எண்: 119)

1. காசு ஒரு பிசாசு – கலையரசன் – ரூ. 75/-

2. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – ரூ. 180/-

————

இவை தவிர –

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு (ரூ. 180/-), நிரஞ்சனா எழுதிய நினைவுகள் அழிவதில்லைநாவல் (விலை: ரூ. 60/-) உட்பட சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்கள் அனைத்தும் கீழைக்காற்றுமற்றும் பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

அதுபோலவே –

அருணன் எழுதி மதுரையிலுள்ள வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள –

1. தமிழரின்  தத்துவ மரபு (1) – ரூ. 170/-

2. தமிழரின் தத்துவ மரபு (2) – ரூ. 100/-

3. காலந்தோறும் பிராமணியம் (வேதகாலம் முதல் சோழர் காலம் வரை) (1) – ரூ. 150/-

4. காலந்தோறும் பிராமணியம் (சுல்தான்கள் + முகலாயர்கள் காலம் (2 & 3) – ரூ. 350/-

5. காலந்தோறும் பிராமணியம் (கிழக்கிந்திய கம்பெனி காலம்) (4) – ரூ. 150/-

6. காலந்தோறும் பிராமணியம் (பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம்) (5) – ரூ. 350/-

7. காலந்தோறும் பிராமணியம் (நேரு காலம்) (6) – ரூ. 250/-

ஆகிய நூல்களும் கீழைக்காற்றுமற்றும்பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

முடிவாக,

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியில் வாயிலாக பொதுவான இடதுசாரி அரசியல், பொருளாதாரம், இந்திய, தமிழக வரலாறு, சமூகம், சாதி, மதம் குறித்த ஆரம்ப அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். ஆசான்கள் தவிர்த்த நூல்களில் சில கராறான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒரு அறிமுகம் என்ற வகையில் படிக்கலாம் என்பதால் அதையும் சேர்த்துள்ளோம்.

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

11

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனத்துக்கு காரணமாகவும் துணையாகவும் இருப்பவர்கள் ‘தேசிய’ கட்சிகள் என்று அழைக்கப்படும் காங்கிரசு, பாஜக, மற்றும் சிபிஎம்.

காங்கிரசு, பாஜகவின் தேசிய முகமூடி காவிரி நதி நீர் பிரச்சனையிலேயே கிழிந்து விட்டது. கர்நாடகாவில் ஓட்டுப் பிடிக்கும் போட்டியில், வெளிப்படையாகவே கன்னட இனவெறி முழக்கங்களை முன் வைத்து காவிரி பிரச்சனையில் குட்டையைக் குழப்பியவர்தான் எடியூரப்பா. 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் ஒகனேக்கல்லில் படகு விட்டு தனது தைரியத்தை கர்நாடக மக்களுக்கு நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் ஏறினார். ரெட்டி சகோதரர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டது போல இதையும் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்கள், இந்து தேசிய பாஜகவினர்.

இன்றைக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவரான ஐநா சபையில் வேறு நாட்டு அமைச்சரின் உரையைப் படித்துப் புகழ் பெற்ற எஸ் எம் கிருஷ்ணா, 1980களில் டெலிபோன் ஒட்டுக் கேட்பு தில்லுமுல்லு புகழ் இப்போதைய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, சமீபத்தில் இறைவன் அடி சேர்ந்த பங்காரப்பா என்று பலவகையான காங்கிரசு முதலமைச்சர்கள், காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் நியாயமான உரிமையை மறுப்பதில் தீவிரத்தைக் காட்டிதான் கர்நாடகாவில் தேர்தல் அரசியல் நடத்தினார்கள். அதற்கு அகில இந்திய காங்கிரசு தலைமையின் ஆசீர்வாதமும் முழுமையாக இருந்தது.

“காங்கிரசும் பாஜகவும் பிற்போக்கு கட்சிகள், அவர்கள் அப்படித்தான் அரசியல் செய்வார்கள், சிபிஐ(மார்க்சிஸ்டு) என்ற பெயரில் இயங்கும் கட்சி அறிவியல் பூர்வமாக நியாயத்தின் சார்பாக பேசும்” என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். “88 வயதிலும் மக்கள் பணி ஆற்றி வரும் வி எஸ்  அச்சுதானந்தனைப் போல, அவருடன் உட்கட்சி லாவணி நடத்தும் பினரயி விஜயனைப் போல ‘மார்க்சிசத்தைக்’ கரைத்துக் குடித்த காம்ரேடுகள், ‘நம்ம மாநிலம், நமக்கு ஓட்டு’ என்ற குறுகிய பார்வையை விடுத்து, அறிவியல் நோக்கில் உண்மைகளை ஆராய்ந்து விவசாயிகளின் நலனுக்குத் துணை நிற்பார்கள்” என்று நினைத்திருக்கலாம்.

மார்க்சிசம் என்பது கட்சியின் பெயரில் மட்டும்தான், கம்யூனிசம் என்பது நிதி திரட்டவும், ஓட்டுப் பிடிக்கவும் பயன்படுத்தும் வெற்றுச் சொல்தான் என்ற போலி கம்யூனிஸ்டு கொள்கையில் தேறி விட்டிருக்கும் காம்ரேடுகள் அத்தகைய ‘மாயை’களுக்குள் சிக்கியிருக்கவில்லை.

1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு நீரில், தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஆண்டுகளில் சிபிஎம் முதலமைச்சர்களாக பி கே வாசுதேவன் நாயர், ஈ கே நாயனார், வி எஸ் அச்சுதானந்தன் என்று மாற்றி மாற்றி ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். ‘சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு நடைமுறை தரவுகளை ஆராய்ந்து அறிவியல் பூர்வமாக உழைக்கும் மக்களது நலனுக்காக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்’ என்பதை எல்லாம் மறந்து விட்ட அந்தப் போலி கம்யூனிஸ்டுகள், முல்லைப் பெரியாறு பிரச்சனையை உருவாக்கி உயிரோடு வைத்திருப்பதன் மூலம் தமது தேர்தல் அரசியல் ஆதாயங்களை உறுதி செய்து கொள்கிறார்கள்.  காங்கிரசுடன் ஓட்டுப் பொறுக்குவதில் போட்டி போடும் அரசியலில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கடந்த ஒரு மாதமாக கேரள சிபிஎம் தலைவர்களின் தேர்தல் அரசியலையும், மத்திய பொலிட்பீரோவின் இரட்டை முகத்தையும் அம்பலப்படுத்திய சில செய்திகளைப் பார்க்கலாம்.

நவம்பர் மாத இறுதியில் கேரளாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

‘அப்படிக் குறைத்தால் அணை நீரைச் சார்ந்து விவசாயம் செய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாலைவனமாகி விடும்’ என்ற எளிய உண்மையைக் கூட எடுத்துச் சொல்லத் முடியாமல் மந்தையோடு பள்ளத்தில் குதித்தார்கள் போலி கம்யூனிஸ்டுகளின் கேரள தலைவர்கள்.

அதைத் தொடர்ந்து, ‘மத்திய அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தலையிட்டு ஒத்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் பினராய் விஜயன் வலியுறுத்தினார். (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

அணை பாதுகாப்பாக இருக்கிறது அல்லது பாதுகாப்பாக இல்லை என்ற கேள்வியில் பேச்சு வார்த்தை நடத்தவோ, சமரசம் செய்யவோ என்ன இருக்கிறது. அணை பாதுகாப்பானது என்று பல்வேறு வல்லுனர் குழுக்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை இடிவதற்கு வாய்ப்பில்லை, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

‘சனி பகவானுக்கு திருநள்ளாறில் பூசை செய்தால் உக்கிர பார்வை குறைந்து பிழைத்துப் போகும்படி விட்டு விடுவார்’ என்று பக்தர்கள் நம்புவது போல போல, இரண்டு மாநிலங்களிலும் ஓட்டுக்கு பங்கம் வந்து விடாமல் அறிவியலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த பிரதம மந்திரியை அழைப்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் விஞ்ஞானப் பார்வை. ‘கொஞ்சம் பேச்சு வார்த்தை நடத்தி அறிவியலை ‘சமரசம்’ செய்து கொள்ள வைத்தால் கேரளத்தில் இன்னும் சில ஆயிரம் ஓட்டுக்களை தேத்தலாம் என்ற நப்பாசைதான்’ இந்த ஒத்தக் கருத்தை ஏற்படுத்த விளையும் ஆர்வத்தின் பின்னணி.

மக்களிடையே பயத்தைப் பரப்பி பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி சிபிஐ சட்டசபை உறுப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார். (தி ஹிந்து, நவம்பர் 27, 2011)..

இங்கே முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமைக்காக தமிழக காம்ரேடுகள் உண்ணா நோன்பிருக்கிறார்கள். இப்படி உண்ணவிரதமிருந்து சண்டை போடுவதற்கு பதில் ஆளுக்கொரு குண்டாந்தடியோடு சண்டை போட்டால் அது பொருத்தமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்குள் சென்று கலவரம் நடத்தும் கும்பலில் கலந்து கொண்டு தமது மார்க்சிய தகுதிகளை நிரூபித்துக் காட்டினார்கள் கேரள சிபிஎம் உறுப்பினர்கள்.  முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடந்த தர்ணாவிலும் கலந்து கொள்ள மறக்கவில்லை. (ஐபிஎன் லைவ், நவம்பர் 29, 2011)

இல்லை என்றால் கம்யூனிச அகிலத்திலிருந்து இவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் அபாயம் இருந்தது.

இதற்கிடையில் சிபிஎம் பொலிட்பீரோ கூடி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெண்டைக்காய் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக போன்ற புரட்சிகர கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு சில பல உள்ளாட்சி பதவிகளைக் கைப்பற்றி பூரித்திருந்த தமிழ்நாடு கிளையினர் அந்த ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் வாதிட, கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பே பிடிக்கும் வாய்ப்பிருப்பதை கெடுத்துக் கொள்ளாமல் அந்த கிளை வாதாட, இயற்கையுடன் பேரம் பேசி கடைசியாக தீர்மானம் ஒரு முடிவு எடுத்தார்கள். (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 3, 2011)

அணையின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக வைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பொலிட்பீரோ சொன்னது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் சிபிஎம்மின் நிலை இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குகுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தொடர்ந்து தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் 116 ஆண்டு அணையின் பாதுகாப்பு. ஆனால் டிசம்பர் 13ம் தேதிக்குள் இந்த நிலைப்பாடு ‘இரண்டு மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கியிருக்கும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்கு அணையின் பாதுகாப்பையும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதையும் கருத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்’ என்று மாறியது. (ஐபின் லைவ், டிசம்பர் 19, 2011)

‘முல்லைப்பெரியாறு அணையின் வலுவைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் பிரதம மந்திரி தலையிட்டு சுமுகமாக பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்’ என்று பொலிட்பீரோ சொன்னது. பினராயி விஜயன் அணை விவகாரத்தில் சிபிஎம் கேரள அரசுக்கு முழு ஆதரவை அளித்திருப்பதாகச் சொன்னார். சில சக்திகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ‘சிபிஎம் பொலிட்பீரோ கேரளாவின் கோரிக்கைகளுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது’ என்ற கேள்விக்கே இடமில்லை என்று உறுதியளித்தார். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

‘கேரள அரசு சூரியன் மேற்கே உதிக்கிறது’ என்று சொன்னால் கூட அதற்கு எதிரான நிலைப்பாட்டை பொலிட் பீரோ எடுத்து விட முடியுமோ! ஒரு மாநிலத்தில் வோட்டுப் பொறுக்கி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன!

இதற்கிடையில் கேரள அட்வகேட் ஜெனரல் ‘முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்ற உண்மையை கேரள உயர்நீதிமன்றத்தில் சொல்லி விட்டார்.

‘கேரள உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் அணை உறுதியாக இருப்பதாக சமர்ப்பித்த அறிக்கையை ஆதரித்தது ஏன்’ என்று அமைச்சர்  திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனை கேள்வி கேட்டார் விஜயன். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

அது எப்படி 2+2=4 என்று சொல்லியிருக்கலாம் ‘அவரை சட்டசபைக்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சாமியாடினார். சட்டசபைக்கு அழைத்து விட்டால் 2+2=4.5 என்று மாற்றிச் சொல்ல வைத்து விடலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதுதான் என்று உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் கே பி தண்டபாணி கருத்து சொன்னதற்கு பொறுப்பேற்று வருவாய்த் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் வி எஸ் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்தார்.

அறிவியலைக் கூட கிளாசை கட் அடித்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று விட்டு விடலாம், ‘பொலிட் பீரோ எடுத்த முடிவுக்கு எதிராக மற்ற உறுப்பினர்கள் பொதுவில் பேசக் கூடாது’ என்று கீழ்மட்டத் தொண்டனுக்கும் எளிதாகப் புரியக் கூடிய ஒழுக்கத்தைக் கூட காற்றில் பறக்க விட்டார் வி எஸ் அச்சுதானந்தன்.

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பொலிட்பீரோ தனது நிலையை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்’ என்று அன்று கோரிக்கை விடுத்தார். (தி எகனாமிக் டைம்ஸ், டிசம்பர் 6, 2011).

மாநிலக் குழு உறுப்பினர் டி சிவதாச மேனன், அவருக்கு வேப்பிலை அடித்து, ‘தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் கொடுக்கணும்’ கொடுத்தாதானே அங்கு நாலு ஓட்டு வாங்கி கட்சி வளர முடியும் என்று ஆறுதல் சொல்லி சர்வதேசியத்தை நிறுவினார்.

பினரயி விஜயன் இரண்டு நாட்கள் கழித்து ‘முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க வைக்கும் நேரம் தாண்டி விட்டது’ என்று அறிவித்தார். வல்லுனர்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் அணை பலவீனமாக இருப்பது தெரியவந்துள்ளதாக சொன்னார்.

திருமணப் பொருத்தம் பார்க்க ஜோசியரிடம் போய் ஒருவர் பொருத்தம் இல்லை என்று சொன்னால், இன்னொருவரிடம் போய், ‘எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, எப்படியாவது பொருத்திக் கொடுத்து விடுங்க’ என்று சொல்வது போல தமது ஓட்டரசியலுக்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கும் வல்லுனர் குழுவைப் பிடித்திருக்கிறார்கள். இவரும் நினைவாக ‘அணை மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று சொன்னார்.

அவ்வளவு முயற்சி செய்தும் உள்ளூர் கட்சிகளின் நம்பிக்கையை பெற்று விடவில்லை சிபிஎம்.

சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் ‘உண்மைக்கு’ ஆதரவு தந்தால் பிரச்சனையை உடனே தீர்த்து விடலாம் என்று தனது நம்பிக்கையை வெளியிட்டார் கே எம் மணி (ஐபிஎன் லைவ், டிசம்பர் 11, 2011).

உண்மையை விழுங்கி எவ்வளவோ சிரமத்துக்குப் பிறகு தீர்மானம் என்ற வஸ்துவை வெளியேற்றிய பொலிட்பீரோவின் சிரமம் புரியாமல் அது இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று மனசாட்சியே இல்லாமல் கேள்வி தொடுத்தார் அவர்.

‘சிபிஎம் முல்லை பெரியாறு விவகாரத்தில் இரட்டை முகம் காட்டுவதாகவும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல’ என்றும் சொன்னார் கேரளா காங்கிரஸ் (பி) தலைவர் ஆர் பாலகிருஷ்ண பிள்ளை.  ‘மாநிலத் தலைவர்கள் தேசியத் தலைவர்களை புதிய அணை தேவை என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இடது சாரி தலைவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சூழ்ச்சி செய்கிறார்கள். கடந்த ஆறரை ஆண்டுகளாக புதிய அணை கட்டும்படி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது வரை போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத இடது சாரி தலைவர்கள் இப்போது போராட்டங்கள் நடத்துவது சந்தேகத்துக்குரியது’ என்றார் பிள்ளை. (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 11, 2011)

அன்று வி எஸ் அச்சுதானந்தன் ஒரு குட்டிக்கரணம் அடித்தார். உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் பேசி விட்டதாகவும் பொலிட்பீரோவுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியதாகவும் சொல்லி விட்டார். அச்சுதானந்தனின் அறிக்கை பற்றி தனது வருத்தத்தை பொலிட்பீரோ பினரய் விஜயன் மூலம் அச்சுதானந்தனுக்கு தெரிவித்தது. வருத்தத்தை தெரிவித்திருந்தாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று பொலிட் பீரோ  தெளிவுபடுத்தி விட்டது.  (ஐபிஎன் லைவ், டிசம்பர் 19, 2011) 

‘பொலிட்பீரோவுக்கே உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை, அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லை’ என்று தெரியாமல் இத்தனை வருஷம் கட்சியில் என்ன குப்பை கொட்டினாரோ!

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்த கட்சி, டிசம்பர் 21 அன்று புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முழு மனதாக கலந்து கொண்டது.

புதிய அணை கோரி கேரள சட்டசபை நிறைவேற்றும் மூன்றாவது தீர்மானம் இது. முதல் தீர்மானம் 1993ல் கே கருணாகரன் முதலமைச்சராக இருந்த காங்கிரசு அரசின் தலைமையிலும், இரண்டாவது தீர்மானம் சிபிஎம் முதலமைச்சரான வி எஸ் அச்சுதானந்தன் தலைமையிலும் நிறைவேற்றப்பட்டன. ‘புதிய அணை கட்டப்படும் வரை அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் உம்மன் சாண்டி தீர்மானத்தைப் படித்த போது எல்லா உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் மேசைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். (ஓமன் டிரிபியூன், டிசம்பர் 21, 2011)

இது ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க எப்படி உதவி செய்யும்’ என்று யாரும் விளக்க முயற்சிக்கவில்லை.

கடைசியாக இந்து நாளிதழில் ஜனவரி 3ம் தேதி எழுதிய கட்டுரையில் இடது சாரி அரசாங்கத்தில் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த என் கே பிரேமச்சந்திரன் ‘கேரளா எப்போதுமே நீதித் துறையை மதித்து வந்திருக்கிறது, அதன் தீர்ப்புகளை தவறாமல் பின்பற்றி வந்திருக்கிறது’ என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் ‘பிப்ரவரி 27, 2006 உத்தரவில் உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை உறுதிப்படுத்திய பிறகு அதை 152 அடிக்கு உயர்த்தவும் உத்தரவிட்டது’ என்ற தகவலைக் குறிப்பிடுகிறார். உச்ச நீதிமன்றத்தை மதித்த கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, ‘கேரள-நீர்ப்பாசனம்-மற்றும்-சேமிப்பு-சட்டம்-2003 ஐ திருத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது’ என்று அவரே தொடர்ந்து எழுதுகிறார்.

‘இப்போது இருக்கும் அணையை அப்படியே வைத்து விட்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் போவதை நிறுத்தாமல், புதிய அணை கட்டுவோம்’ என்றும் அதே கட்டுரையில் எழுதுகிறார். அப்படி என்றால் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடியாகவும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளாமல். நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்கச் சொல்வது என்ன அடிப்படையில்?

இப்படி ஒரே பத்திக்குள் முரண்பாடுகளைக் கூச்சமில்லாமல் எழுதிக் கொடுப்பது போலி கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ஆட்சி புரிந்த போதுதான் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆக, கேரளத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக சாமியாடி, வேப்பிலை அடித்து, இனவெறியை, துவேசத்தை கிளப்பி மக்களை பீதியாக்கி ஓட்டுப் பொறுக்கும் அரசியலை செய்வது சாட்சாத் காம்ரேடுகள்தான். இவர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள், பேசுவார்கள் என்று தெரிந்தும் பொலிட்பீரோவும் அதற்கு பங்கம் வராமல் எல்லாம் மன்னு மோகன்சிங் பார்த்துக் கொள்வாரென்று கை கழுவி விட்டதையும் பார்த்தால் இவர்களை விட தே.மு.தி.க கட்சியும், பவர் ஸ்டார் சீனிவாசனும் மேலென்று தோணவில்லையா?

செழியன்.

மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை

8

புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சுட்டிக் காட்டி, மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இலட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார். இதன் மூலம் பலரது மயக்கத்தை தெளிய வைத்திருப்பார்.

பின்னே… ஏதோ, தனியார் கல்லூரிகள் மட்டுமே உள் கட்டமைப்பு இன்றி இருப்பதாகவும், மாணவர்களிடம் இலட்சம் இலட்சமாக கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும், பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து இயங்குவதாகவும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே…

எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த எண்ணமே கடைந்தெடுத்த பொய். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் நான் அரசு கல்லூரி அல்ல; மத்திய அரசின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகம்!!!

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். என் பெயர், ‘கடல்சார் பல்கலைக்கழகம்‘. இந்திய அரசுதான் என் அப்பா, அம்மா. இந்திய ஜனாதிபதிதான் எனது பாதுகாவலர். அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.

நான் பிறந்தது 2006ம் ஆண்டில். அதற்கு முன்புவரை கடல்சார் பல்கலைக்கழகம் என்று எதுவும் தோன்றவில்லை. பதிலாக, கொச்சி, கொல்கத்தா, மும்பை உட்பட நாட்டின் பல இடங்களில், பல கல்லூரிகளில், கடல்சார் பட்டப் படிப்புகள் என்னும் மெரைன் கோர்ஸ் அல்லது டிப்ளமோ வகுப்புகள் என்ற பெயரில் உயிரணுக்களாக சிதறிக் கிடந்தேன். என்னை சிசுவாக மாற்றியதில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நாட்டை சூறையாடும் மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு பெரும் பங்குண்டு.

காரணம், கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது அதன்பிறகுதான். கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்ட – வழங்கப்படும் – மாதச் சம்பளத்தின் தொகை, உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை வாய் பிளக்கச் செய்தது. எனவே புற்றீசல் போல் தோன்ற ஆரம்பித்த ‘கீத்துக் கொட்டாய்’ தனியார் கல்லூரிகளில், கடல்சார் படிப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டால் போதும்… உடனே தங்கள் வாழ்நாள் சேமிப்பை தாரை வார்த்து அந்தப் படிப்பில் தங்கள் வாரிசுகளை சேர்க்க முண்டியடித்தார்கள்.

உண்மையிலேயே கப்பல்களில் பயிற்சி அளிக்கிறார்களா… லேப் வசதி இருக்கிறதா… கற்றுத் தரும் பேராசிரியர்களின் தகுதி என்ன… என்று எதைக் குறித்தும் ஆராய நடுத்தர வர்க்கம் தயாராக இல்லை. சான்றிதழ் கிடைத்தால் போதும் என திருப்தி அடைந்தார்கள்.

ஆனால், அந்தச் சான்றிதழ்களை ஏற்க கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனங்கள் குறைவு. எனவே தனியாருக்கு சொந்தமான – குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான – கப்பல்களில்தான் பணிக்கு சேர வேண்டும். அந்த நிறுவனங்கள்,  இந்தச் சான்றிதழ்களை தங்கள் மலத்தை துடைக்கக் கூட பயன்படுத்த மறுத்தன. இதனால் கடல்சார் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. புதிதாக இப்படிப்புக்கு சேர வந்தவர்களும் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

இப்படியே போனால், பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் கடல்சார் படிப்புத் துறையை தங்கள் கல்லூரிகளில் இருந்தே நீக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்பதை உணர்ந்த தனியார் கல்லூரிகள், இந்தப் படிப்புக்கு என்று ஒர் அரசு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். அப்படியொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை ஏற்பதாக தனியார் கப்பல் நிறுவனங்களும் அறிவித்தன.

இதனை தொடர்ந்துதான் 2006ம் ஆண்டு நான் குறை பிரசவத்தில் பிறந்தேன். நியாயமாகப் பார்த்தால் என்னை இன்குபேட்டரில் வைத்து பராமரித்திருக்க வேண்டும். உரிய மாதங்கள் முடியும் வரை என்னை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறை செய்யவேயில்லை. பதிலாக, குறை மாதங்களில் அறுத்து எடுத்த என்னை, சென்னை கடலோரம் வீசி எறிந்துவிட்டார்கள். இதற்கு காரணம், அப்போது மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. வட மாநிலங்களில் என் பிறப்பு நிகழாமல், தென் மாநிலத்தில் – குறிப்பாக தமிழகத்தில் – நான் பிறந்தது அவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திமுகவும் தேர்தல் அறிக்கைகளில் இதனை மாபெரும் வரலாற்று நிகழ்வாக குறிப்பிடுகிறது.

உண்மையிலேயே என் பிறப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? என் பிறப்பு மூலம் தமிழகம் ஜொலிக்கிறதா? சத்தியமாக இல்லை. கேழ்வரகில் எப்படி ஒருபோதும் நெய் வடிவதில்லையோ அப்படி கடல்சார் பல்கலைக்கழகமாகிய என்னை தமிழக மக்களின் நலன் கருதி டி.ஆர்.பாலு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிறக்கச் செய்யவில்லை.

டி.ஆர். பாலு – துணை வேந்தர் விஜயன்

டி.ஆர்.பாலுவின் சம்பந்தி நடத்தும் ‘சாய்ராம் பொறியியல் கல்லூரி’யில் என் தொடர்பான கோர்ஸ் இருக்கிறது. அதுமட்டுமா… ரவுடித்தனம் செய்யும் ஐசரி கணேஷுக்கு சொந்தமான ‘வேல்ஸ்’ கல்லூரியில், நடிகர் விவேக் உரிமையாளராக இருக்கும் காலேஜில்… என திமுகவுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வேண்டப்பட்டவர்கள் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஏதோவொரு வகையில் என் சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ‘அங்கீகாரம்’ வழங்கத்தான் என்னை வலுக்கட்டாயமாக சென்னையில் பிறக்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு எந்த பொடலங்காய் சாதனைகளும் காரணமில்லை. அதாவது, ஜெயலலிதாவின் ஆட்சியில் பால்வாடி எல்லாம் எப்படி அரசு சுகாதார நிலையங்களாக ஒரே இரவில் உருமாறியதோ அப்படித்தான் சூல் கொண்ட மறு விநாடியே என் பிறப்பு நிகழ்ந்தது.

”இது நல்ல கதையாக இருக்கிறதே… வேண்டுமென்றே டி.ஆர்.பாலுவின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறாய். திமுகவின் மீது இப்படி அவதூறு கிளப்ப ஜெயலலிதாவிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினாய்…” என சில சில்லுண்டிகள் கேட்கக் கூடும். அவர்களுக்காகவே விஜயனை அறிமுகப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது.

இந்த விஜயன் வேறுயாருமல்ல, எனது உப பாதுகாவலர்தான். வைஸ் சான்சிலர் என்று அழைக்கப்படும் இவர், உண்மையில் விசி ஆக இருக்கவே தகுதி இல்லாதவர். பொதுவாக மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுபவர், சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். அதிலும் என்னைப் போன்று குறிப்பிட்ட படிப்பை சார்ந்த பல்கலைக்கழகமாக இருந்தால், அது குறித்த கல்வியறிவும் அனுபவமும் அவசியம்.

ஆனால், விஜயனிடம் இந்தத் தகுதிகள் எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இவர், ஏதோ மெரைன் கோர்ஸில், தான் பழம் தின்று கொட்டை போட்டதாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் இவர் ஆசிரியராக பணிபுரிந்து கற்றுத் தந்த நிறுவனம் எது தெரியுமா? ‘மன்னார் அண்ட் மன்னார்’ கம்பெனி! ஐடிஐ என்று கூட சொல்ல முடியாத ஒரு நிறுவனத்தில், அதுவும் அங்கீகரிக்கப்படாத இன்ஸ்டிடியூட்டில், பேராசிரியராக இருந்தாராம்.

உடனே, ‘மத்திய அரசின் கடல்சார் பல்கலைக்கழகமே இப்போதுதானே வந்திருக்கிறது? எனவே அனுபவம் வாய்ந்த விசி கிடைப்பது கடினம்… இருப்பவரை வைத்து தொடங்கியதை தவறு என்று சொல்ல முடியாது…’ என சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இராமச்சந்திரன் என்னும் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர், வைஸ் சான்சிலருக்கு என்று யூஜிசி குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதிகளும் பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், விசி ஆக நியமிக்கப்படுபவரை 3 பேர் கொண்ட குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். விஜயன் விஷயத்தில் இதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம், ஒருவர் கூட இவரை பரிந்துரை செய்யவில்லை. அப்படியிருந்தும் சட்டத்துக்கு புறம்பாக, கொல்லைப்புறம் வழியாக, விஜயனை விசி ஆக அமர வைத்து அழகு பார்த்தவர் – பார்க்கிறவர் – யார் தெரியுமா?

சாட்சாத் டி.ஆர்.பாலுவேதான். காரணம், விஜயன், நம்பர் ஒன் அல்லக்கை. டி.ஆர்.பாலுவின் பினாமி. தவறாமல் கப்பம் கட்டும் நேர்மையாளர். இந்தத் தகுதிகள் இராமச்சந்திரனிடம் இல்லை. அதனால் அவருக்கு எனது உப பாதுகாவலர் பதவி வழங்கப்படவில்லை.

சொந்தமாக வீடு இருக்கும் வைஸ் சான்சிலர், வீட்டு வாடகை என அரசிடமிருந்து எந்தத் தொகையையும் வாங்கக் கூடாது என்பது விதி. ஆனால், விஜயன், சொந்த வீட்டில் வசித்தபடி அதற்காக மாதா மாதம் அரசிடமிருந்து வாடகை வசூலித்து வருகிறார். ஒரு கார் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு விதி. இதையும் 3 கார்கள் வைத்தபடி மீறுகிறார் விஜயன். இந்த 3 கார்களுக்கும் 3 ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்க எனது உப பாதுகாவலர் என்ன பைத்தியக்காரரா? அதுதான் வருடந்தோறும் தவறாமல் வரி கட்டும் மக்கள் இருக்கிறார்களே… எனவே அரசு அந்த 3 ஓட்டுநர்களுக்கும் மாத ஊதியம் வழங்குகிறது. ஜேப்பியாருக்கு சொந்தமான செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்கும் எனது உப பாதுகாவலரின் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் இந்த ஓட்டுநர்களில் ஒருவரது பணி.

எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கக் கூடியவர்கள் யாரும் பணியிலும் இல்லை. ஊழியர்கள் அனைவருமே ஒன்று விஜயனின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது ஊர்க்காரர்கள்.

எனவே விஜயன் கொட்டமடிக்கிறார். அது எந்த அளவுக்கு என்றால், மாணவர்களின் எதிர்காலத்தையே கால்பந்தாக விளையாடும் அளவுக்கு…

குறை பிரசவமாக இருந்தாலும் நானும் அரசு பல்கலைக்கழகம் தானே? எனவே என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம் என எனது பெற்றோரான இந்திய அரசாங்கம், நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 350! ஆமாம், கிட்டத்தட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மாணவர்களை விஜயன் சேர்த்திருக்கிறார்.

அப்படியானால் அதிகப்படியான மாணவர்களுக்கு எப்படி சான்றிதழ் வழங்க முடியும்..? என சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்காதீர்கள். 1991 – 96ல் பாசிச ஜெயலலிதாவின் காட்டாட்சியில் காளான் போல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் முளைத்ததே நினைவிருக்கிறதா? அவை எப்படி செயல்பட்டனவோ, அப்படித்தான் நான் இப்போது இயங்குகிறேன்.

அதாவது முதலில் 180 மாணவர்களுக்குத்தான் அவர்களது படிப்பு முடிந்ததும் சான்றிதழ் கிடைக்கும். மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த பேட்ச்சில் வழங்கப்படும். இப்படி ரிலே ரேஸில்தான் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறன. எனவே படிப்பு முடிந்தாலும் சான்றிதழ் கிடைக்கும் வரை மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும், வாய் திறக்கக் கூடாது. தங்கள் பெற்றோர்களிடம் கூட இது குறித்து பகிர்ந்துக் கொள்ளக் கூடாது…

இந்த இடத்தில், ”அஸ்கு புஸ்கு… பட்டப்படிப்பு என்றால், குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா? அப்படியிருக்க, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை எப்படி சேர்க்க முடியும்? விட்டால் எங்கள் காதைச் சுற்றி ஒரு பூந்தோட்டத்தையே அமைத்து விடுவாய் போலிருக்கிறதே…”

என்ற கேள்வி எழுந்தால் –

கேட்பவரை கட்டிப் பிடித்து முத்தம் தர தயாராக இருக்கிறேன். சரியான வினாவை எழுப்பியவரை வேறு எப்படி பாராட்ட?

ஆனால் –

எப்படிச் சொல்வது… என்னவென்று புரிய வைப்பது? பட்டப் படிப்பு என்று எதுவும் என்னிடம் இல்லையே… 2 ஆண்டுகள் அல்லது ஒரு வருட சான்றிதழ் கோர்ஸ்தானே நடத்தப்படுகின்றன..?

ஆமாம் ஐயா ஆமாம்… மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகமாகிய நான், ஒரு ஏசி மெக்கானிக், டிவி மெக்கானிக் இன்ஸ்டிடியூட் போலத்தான் இயங்குகிறேன். அப்படி நடக்கும்படிதான் அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் பட்டப்படிப்பு? அதற்குத்தான் சாய்ராம், வேல்ஸ்… முதலிய கல்லூரிகள் இருக்கின்றதே… அவர்களுக்கு போட்டியாக பட்டப்படிப்பை நானும் நடத்தினால், அந்தக் கல்லூரிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்? அந்தக் கல்லூரி தாளாளர்களால் எப்படி பிழைக்க முடியும்?

இந்த விஷயம் பெற்றோர்களுக்கும் தெரியும். படிக்கும் மாணவர்களும் அறிவார்கள். ஆனாலும் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் நேரடியாக படிப்பதென்றால் – அது 2 ஆண்டுகளோ அல்லது ஓராண்டோ – ஒரு ‘இது’தானே? அதுவும் மற்ற மாணவர்களுடன் தொடர்பற்ற, சமூகத்துடன் துண்டித்த அபூர்வமான படிப்பு என்னும்போது இதுமாதிரியான ‘சில்லரை’ விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியுமா?

இந்த மனநிலையைத்தான் எனது உப பாதுகாவலரான விஜயன் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் வழங்கும் கோர்சுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 3 இலட்சம். இதில், ஒரு இலட்சம் விடுதிக் கட்டணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், உடனடியாக கப்பலில் வேலை, கைநிறைய சம்பளம்… என நடுத்தர வர்க்கத்தினர் கனவில் மிதப்பதால், சாதாரண டிப்ளமோ கோர்சுக்கு இவ்வளவு பெரிய தொகையா… அதுவும் அரசு பல்கலைக்கழகத்திலா என்று யோசித்து மூளைக்கு வேலை தராமல் இருக்கின்றனர். இந்த மயக்கம்தான் எனது உப பாதுகாவலர், அரசுக்கு செலுத்தும் மாணவர் கட்டணம் வேறு… மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணம் வேறு… என்பதை அறிந்துக் கொள்ளாமலேயே இருக்கச் செய்கிறது.

உண்மை தெரிந்ததும் வயிறு எரிகிறதல்லவா..? இன்னும் விஷயங்கள் இருக்கின்றன. தலா 2 இலட்சம் ரூபாயை பயிற்சி வகுப்புக்காக எனது உப பாதுகாவலர் வசூலிக்கிறார் என்று முன்பே சொன்னேன். ஆனால், அதற்குறிய உள்கட்டமைப்பு வளாகத்தில் இல்லவே இல்லை. சுனாமிக்கு பிறகு, சில விதிமுறைகளை அரசாகிய எனது பெற்றோர் வகுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விதிமுறைகள் அனைத்தும் எனது விஷயத்தில் மீறப்பட்டுள்ளன.

விடுதிக் கட்டணமாக ரூபாய் ஒரு இலட்சம் வசூலிக்கப்படுவதும் இதில் சேர்த்தி. அந்தப் பணம், எங்கு செல்கிறது என்பது அந்த பாலுவுக்கே வெளிச்சம். சினிமாவுக்காக செட்டிங்ஸ் போடுவார்கள் இல்லையா? அதுபோல்தான் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் மரத் தடுப்புகள்தான். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்தான் கூரைகள். முன்பு லைலா புயல் வீசியபோது, கூரைகள் எங்கோ பறந்துவிட்டன. அலட்டிக் கொள்ளாமல் பறந்த கூரையை பொறிக்கி வந்து மீண்டும் பொருத்தினார்கள். முகாம்களில் அகதிகள் எப்படி அடைபட்டுக் கிடப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால், என்னைப் பார்க்க வாருங்கள். மாணவர்களை, விடுதிகளில் அப்படித்தான் எனது உப பாதுகாவலர் அடைத்து வைத்திருக்கிறார்.

நான்கு பேர் தங்கக் கூடிய அறையில் 10 பேரும், 2 பேர் தங்கக் கூடிய அறையில் 5 பேரும் தங்குகிறார்கள். உணவை வாயில் வைக்க முடியாது. தண்ணீரை ஒரு சொட்டுக் கூட குடிக்க முடியாது. தாகம் எடுத்தால், கோக்/பெப்சி எடு… கொண்டாடு…

இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அங்கு மாணவர்கள் வசிக்கிறார்கள்; படிக்கிறார்கள். காரணம், கப்பல் வேலை… கை நிறைய சம்பளம் என்ற கனவு.

இதையெல்லாம் மீறி, யாரோ எனது உப பாதுகாவலர் குறித்து புகார் அளித்துவிட்டார். கடமையை சரிவர செய்யும் சிபிஐ அதிகாரிகளும் டக் டக் என பூட்ஸ் ஒலிக்க, டையை தளர்த்தியபடி வந்து சேர்ந்தார்கள். இண்டு, இடுக்கு விடாமல் விஜயனின் இருப்பிடத்தை ஆராய்ந்தார்கள். இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு காட்டாத சொத்துக்களை கண்டுபிடித்தார்கள்.

அப்புறம்?

விழுப்புரம்தான். வேறென்ன? இந்த வழக்கு, அதுபாட்டுக்கு ‘பெண்டிங்கில்’ இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எனது உப பாதுகாவலரை சஸ்பென்ஷனில் வைத்திருக்க வேண்டும். ஆனால், மனிதர் இன்னும் வைஸ் சான்சிலர் ஆக நீடிக்கிறார். சட்டமும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மோப்பம் பிடித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், விஜயனை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார். வைஸ் சான்சிலராக இருக்கவே தகுதியில்லாத ஒரு நபர், அதுவும் சிபிஐ குற்றம்சாட்டியிருக்கும் ஆள், எப்படி விசி ஆக நீடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

இதற்குள் எனது உப பாதுகாவலரின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதை நீட்டிக்கச் சொல்லி விஜயன் வைத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசாகிய எனது பெற்றோர், வேறொருவரை எனது உப பாதுகாவலராக நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஏதோ ’நீதி’ கிடைத்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். எனது மாஜி உப பாதுகாவலரான விஜயனை, சென்னை கேம்பசின் இயக்குநராக புதிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள்! இதுதான் ’நீதி’யின் இலட்சணம்!!

சிம்கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்? அதுபோல் இந்த சமூக அமைப்பில், என்னைப் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களும் இப்படித்தான் பல்லிளிக்கும். தனியார் நிறுவனங்கள் கொழிக்க அரசுத்துறை நிறுவனங்கள் சவலப் பிள்ளைகளாகத்தான் மாற்றப்படுவார்கள்.

‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கழுதையின் படத்தை மாட்டினால் இலாபம் கிடைக்குமோ இல்லையோ, எனது படத்தை மாட்டி ‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்று  எழுதி வைத்தால்,

இலாபம் கிடைக்கிறதோ இல்லையோ மக்களாகிய நீங்கள் மத்திய அரசாலும், தனியார் கல்வி முதலாளிகளாலும் மொட்டையடிக்கப்படுவது புரியும்.

-வினவு செய்தியாளர்

தகவல் உதவி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), சென்னை.

மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!

8

தெலுங்கு மொழிப் படங்கள் என்று சொன்னவுடனே நமக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு என கலர் கலர் காஸ்ட்யும்கள், காமாசூத்ராவை ஞாபகப்படுத்தும் நடன அசைவுகள், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து போடும் சண்டை, குத்துப் பாட்டு இவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இந்திய அரசையே நடுங்கச் செய்த விவசாயிகள் புரட்சி நடந்த தெலுங்கானா மக்கள் வாழும் மாநிலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டும் உன்னத படமும் தெலுங்கில் வந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

1945-1951 காலகட்டத்தில் இன்றைய ஆந்திராவில் உள்ள தெலுங்கானாவில் (அன்றைய நிஜாம் சமஸ்தானம்) நடந்த விவசாயிகளின் புரட்சியையும், அவர்களின் ரத்தமும் சதையுமான போராட்ட வரலாற்றையும், இந்திய அரசும், போலி கம்யுனிஸ்டுகளும் தெலுங்கானா மக்களுக்கு இழைத்த துரோகத்தையும் நேர்மையாக பதிவு செய்த திரைப்படம்தான் ‘மாபூமி’(எங்கள் நிலம்). இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது.

விவசாயிகளின் அவல நிலை:

இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தெலுங்கானா நிஜாம் மன்னர்களின்  கீழ் ஐதரபாதை தலைநகரமாகக் கொண்டு தனி சமஸ்தானமாக இருந்தது.

மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக விவசாயிகளைக் கொண்ட இந்தப் பகுதியில், விவசாயிகள் கூலிகளாகவும், அடிமைகளாகவுமே நிலப்பிரபுக்களின் கீழ் வாழ்ந்து வந்தனர். பெரும் நிலச்சுவன்தார்கள் சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் ஏக்கர்கள் வரை  தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். ஆளும் அரசு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. பெரும்பான்மை சட்டங்களும், காவல் துறையும், ராணுவமும், நிலப்பிரபுக்களுக்கு சாதகமாக வாலை ஆட்டிக்கொண்டு வேலை செய்தன. ஜமீன்தார்களின் அடியாட்களான ரஜாக்கர்கள் எனும் ரவுடிகளும் மக்களை கொடுமைப்படுத்தி வந்த்னார்.

நாளெல்லாம் உழைப்பு, படிப்பு கிடையாது, போதுமான மருத்துவம் கிடையாது, அரை வயிறு கால் வயிறு கஞ்சி, ஆனால் மாடு மாதிரி உழைக்க வேண்டும். போதாக்குறைக்கு நிலப்பிரபுக்களுக்கும் நிஜாம் மன்னனுக்கும் வரி கட்ட வேண்டும். எதற்கு வரி? அனைத்திற்கும் வரி; உழும் கருவிகளுக்கு வரி, திருமண வரி, பெண் வயதுக்கு வந்தால் வரி, பிறப்புக்கும் வரி, இறப்புக்கும் வரி. ஊரில் ஒரு பெண் வயதுக்கு வந்தாலோ, புதிதாக திருமணமாகி பெண் வந்தாலோ ஜமீன்தார்  படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். தெலுங்கானா விவசாயியைப் பொருத்தவரை பிறக்க வேண்டும், மாடாக ஜமீன்தாரருக்கு உழைக்க வேண்டும், அனைத்தையும் ஜமீன்தாரரின் சந்தோஷத்திற்குக் கொடுக்க வேண்டும், இறுதியாக இறக்க வேண்டும்.

அப்படியிருந்த தெலுங்கானா பகுதியில் உள்ள நல்கொண்ட மாவட்டத்தில் சிரிபுரம் எனும் ஊரில் இருக்கும் ஒரு ஏழை விவசாயியான வீரைய்யா, அவன் மகன் ராமையா இவர்களிடமிருந்து கதை தொடங்குகிறது.

ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வும் அதன் குறியீடும்தான் இந்த ராமைய்யா. வளர் இளம்பருவத்தில் அவனை அந்த ஊர் ஜமீன்தாரின் வீட்டில் வேலையாளாக இழுத்து சென்றுவிடுகிறார்கள் ரஜாக்கர்கள். ராமையா சிறுவனாக, ஆடிப்பாடி விளையாடி கல்வி கற்க வேண்டிய வயதில் எருமைத் தொழுவத்தில் கடுமையாக வேலைகள் செய்வதிலிருந்து படம் தொடங்குகிறது.

அந்த ஊரில் மொத்த நிலங்களையும் வைத்திருக்கும் ஜமீன்தார் வைத்தது தான் சட்டம். ஊர் மக்கள் அவருக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். சிறு வயது முதலே அவர் கொடுக்கும் சிறு கூலிக்கு வேலை செய்ய வேண்டும். மீறினால் அவரின் அடியாள் படை அடிக்கும், திமிறினால் கொன்றுவிடும். ராமையா அந்தச் சூழலில் வளருகிறான். சமூகம் புரிய ஆரம்பிக்கிறது, தன் சூழலில் இயல்பான கோபக்கார இளைஞனாக மாறுகிறான். கோபம்தான் வருகிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் தாழ்த்தப்பட்ட தலித் வேறு.

சந்திரி எனும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த ஊரில் பெண்கள் நிலைமையோ மிகக் கொடுமையாக இருக்கிறது. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கச் செல்ல வேண்டுமென்றால் கூட அந்தப் பெண் ஜமீன்தாரின் அடியாளிடம் தன் மார்பைக் கசக்கி பால் பிழிந்து காண்பித்தால்தான் அனுமதி. வயதுக்கு வந்த பெண்கள் ஜமீன்தாரின் படுக்கைக்கும், நிஜாமின் அதிகாரிகளுக்கும் விருந்தாக வேண்டும். சமூகக் கைதியாக போராட முடியாமல் எல்லாப் பெண்களையும் போல் சந்திரியும் ஜமீன்தாரின்  படுக்கைக்குச் செல்ல, ராமைய்யா கோபம் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஊரை விட்டே செல்கிறான். பல இன்னல்கள் தாண்டி ஐதரபாதில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேருகிறான்.

அங்கே கம்யுனிஸ்ட் ஒருவருடன் ராமையாவிற்கு தொடர்பு ஏற்படுகிறது. வரலாறு முழுவதும் ஒடுக்கும், ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டமாகவே உள்ளதையும், அரசு என்பது ஒடுக்குபவர்களின் கைப்பாவையாக இருப்பதையும் அறிந்துகொள்கிறான். பாட்டாளிகளின் தலைமையில் அரசைக் கைப்பற்றும் கம்யுனிஸ புரட்சி ரஷ்யாவில் நடந்திருப்பதையும் அப்படி இந்தியாவிலும் கைப்பற்றி மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்கிறான். போராடத் துவங்குகிறான்.

தொழிற்சாலை போராட்டம் ஒன்றிற்காக சிறை செல்லும் ராமைய்யா அங்கே தன் சொந்த ஊர்க்காரரை சந்திக்கிறான். ஊரில் நிலைமை மோசமாகி எங்கும் கலவரமாக இருக்கிறது எனத் தெரிந்துகொள்கிறான். காரணம் ஊரில் புதிதாகத் தோன்றியிருக்கும் ’சங்கம்’.

’நான் ஒரு தலித்’ எனக்கு விடுதலை கிடைத்தால்தான் புரட்சி என்பதே சாத்தியம் என்றெல்லாம் ராமையா பின்நவீனத்துவமாக முதலாளிகளுக்கு சாதகமாக யோசிக்கவில்லை, அது 1945 என்பதால் மட்டுமில்லை, புரட்சியில்தான் தன் விடுதலையும் அடங்கியுள்ளது என்று தெரிந்ததாலும் இல்லை, அப்படி ஒரு கேள்விக்கான பதிலும் அவன் கண் முன்னே கிராமத்தில் காத்திருந்தது தான் காரணம். தன் கிராமம் நோக்கிப் பயணமாகிறான்.

சங்கம்:

ஜமீன்தார்களின் ஆட்டமும், நிஜாமின் அடக்குமுறையும் எல்லை மீறி விட்டது. அதனால் அது இனி தொடரமுடியவில்லை. அங்கே  கம்யூனிசம் பேரிடியாக இறங்கியது. நிஜாம் மன்னனையும் நிலப்பிரபுக்களையும் குலை நடுங்க செய்தது.

பெருவாரியான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த ஜமீன்தார்கள் ஆட்டம் ஆடினார்கள். அந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் விவசாயிகளுக்கென சொந்த நிலம் ஏதுமில்லை,   பார்ப்பனீய முறையில் சாதிகளாக பிரிந்திருந்தனர். சுரணடல் பல்வேறு படிநிலையாக, பல்வேறு வர்க்கமாக இருப்பது தான் சாதி. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வர்க்கம் குழப்பமாக பல்வேறு படிநிலையாக இருக்கும். அதிலும் இங்கே பார்ப்பனீயம் அதற்கு  தத்துவத்தையும், நடைமுறையில் ஹிந்து மதத்தையும் கொண்டு மக்களை அறியாமையில் ஆழ்த்தி சுரணையற்றவர்களாக்கி இருந்தது.

தெலுங்கானா பகுதி இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் கம்யுனிஸ்டுகள் திட்டமிட்ட பரப்புரையை மேற்கொண்டனர். நிலப்பிரபுக்களுடனான பல்வேறு பிரச்சனைகளால் கூலி விவசாயிகளும், தாழ்த்தப்பட்டவர்களும் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். பலர் ஊரைவிட்டே ஓடிப் போய் நகரத்தில் தஞ்சமடைகிறார்கள். நகரத்தில் பாட்டாளியாக சாதி மதம் இனம் தாண்டி கம்யுனிஸ்டாகி கிரமத்திற்குப் பலர் திரும்புகிறார்கள். கிராமத்தில் ஏதுமற்ற கூலி விவசாயிகள் சாதியைக் கடந்து உழைப்பாளர்களாக ஒன்றுபடுகிறார்கள்.

எந்த சாதியாக இருந்தாலும் கூலி விவசாயிக்கு வரும் பிரச்சனை ஒன்று தான். ஜமீன்தாரின் கொடுமை, அடியாட்களான ரஜாக்கர்களின் கொடுமை, கையில் பணமில்லை, பசி அவர்களை ஒன்றாகத் திரட்டுகிறது. பல கோபக்கார இளைஞர்கள் போராடுகிறார்கள். சிறு சண்டைகள் உடனடி தீர்வுகளை தருகின்றன. அது பின்னர் போராட்டமாகவும், சங்கமாகவும் விரிகிறது.

ஒரு நிலத்தில் அறுவடை சமயத்தில் கூலி விவசாயிகளை ஜமீன்தாரின் ஆட்கள் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். விவசாயிகள் சாதியை மீறி ஒன்று திரண்டு அடியாட்களை அடித்துத் துரத்துகிறார்கள். அந்த நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள். தங்கள் கண் முன் தங்களின் ஒற்றுமையின் பலம் தெரிய சாதியை விடுத்து ஊர் முழுவதும் சங்கமாக சேருகிறார்கள். இப்படிப் பல சங்கங்கள் ஒன்றிணைகின்றன.

மக்கள் திரளாக போராடுகிறார்கள்.  அவர்கள் இவர்களுக்கு உதவுவது என பாட்டாளி சங்கங்கள் கிராமம் கிராமமாக ஒன்றிணைகின்றன. அனைவரின் எதிரி ஒருவன்தான் எனும் போது எதிரியை எதிர்த்துப் பிரிந்து போராடினால் தோல்விதான் வரும். சேர்ந்து எதிர்த்தால் வெற்றி வரும். மனித சமூகம் ஆதியில் கற்ற பாடம்தான், சில நாட்கள் மறந்து போயிருந்தது, மீண்டும் இந்த விவசாயிகளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.

விவசாயிகளின் எழுச்சி நிஜாமை கோபப்படுத்துகிறது. நிஜாமின் போலிஸும் ராணுவமும் சங்க ஆட்களை நோக்கி இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைகிறார்கள். மக்கள் அதன் தொடர்ச்சியாக ஆயுதத்தை கையிலெடுக்கிறார்கள். மக்களே தடிகளையும், கட்டைகளையும் கொண்டு எதிர்க்கிறார்கள். கைப்பற்றும் துப்பாக்கிகளை உபயோகிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இயல்பான மக்கள் திரள், தம்மை காப்பாற்றிக்கொள்ள உயர்ந்த கலக வடிவமான ஆயுதப் போராடத்தைத் தொடுக்கிறார்கள்.

ராமையா ஊருக்கு திரும்பும் நேரம் அதுதான். ஆண்கள் முதல் பெண்கள் வரை கையில் துப்பாக்கியேந்தி போராடிக் கொண்டிருக்கும் நேரம். பல ஊர்களில் இருந்து ஜமீன்தார்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். நிலங்கள் மக்களால் கைப்பற்றப்பட்டு சங்கத்தால் மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

அவ்வாறே ராமய்யாவும் சொந்த ஊர் சங்கத்தில் ஈடுபட்டு புரட்சிக்கு வேலை செய்கிறான். நகரத்தில் கற்றிருந்த போராட்ட முறைகள் அவனுக்கு உதவுகின்றன. தங்கள் ஊரில் உள்ள ஜமீன்தாரைத் தாக்கி அவரின் வீட்டையும் நிலத்தையும் கைப்பற்றுகிறார்கள். சங்கம் நிலத்தை பங்கிடுகிறது. ஊருக்கே பங்கிடும் ராமையாவிடம் அவன் அப்பா ஏக்கமாக கொஞ்சம் நிலத்தை  கேட்கிறார். நமக்கு கடைசியில் தான் என்கிறான் ராமைய்யா, ஆனால் சங்கத்தின் தலைவர் ராமையாவின் அப்பாவிற்குநிலத்தை சரியாக பகிர்ந்து தருகிறார். இத்தனை நாள் அடிமையாக இருந்த அவர் முதல் முறை சொத்தாகக் கிடைத்த தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய மகிழ்சியுடன் செல்கிறார்.

போலி கம்யுனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்:

இந்தியாவைப் பொருத்தவரை போலி கம்யுனிஸ்டுகள் பில்டிங் ஸ்ட்ராங் தான் ஆனால் பேஸ்மெண்ட் வீக். இந்தியா முழுவதிலும் காலனியாதிக்கத்திற்க்கு எதிரான தேசிய எழுச்சி, மும்பை கப்பல் கலகம் முதல் தெலுங்கானா, கீழைத்தஞ்சை, மேற்கு வங்கம் வரை விவசாயிகளின் எழுச்சி என சகலமும் கம்யுனிஸ புரட்சிக்குத் துணையாக இருக்க மக்களும் தயாராக இருக்க, அதை எப்படி வழிநடத்த வேண்டும் என்று போலி கம்யுனிஸ்டுகளின் தலைமைக்குத் தெரியவில்லை.

அவர்கள் எந்திரகதியாக முதலாளித்துவம் முற்றிய ரஷிய மக்களின் பேரெழுச்சி பாதையைக் கொண்டே இந்தியாவில் புரட்சியை திட்டமிடுகிறார்கள். ஆனால் நாடு முழுவதும் சீரான வளர்ச்சியில்லாத போதும், அரை நிலப்பிரபுத்துவமாக இருக்கும் போதும் மார்க்ஸிய லெனினிய பார்வையில் இந்தியாவில் புதிய ஜனநாயக புரட்சிதான் செய்ய வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றவே இல்லை. இந்தியாவின் சமூக நிலைமைகளை சரியாக ஆராய்ந்து கண்டுணராத தலைமை மேலும் காங்கிரசின், காந்தியின் வாலாகவும் செயல்பட்டு தேய்ந்து போனது.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சமகாலத்து கட்சியான சீன கம்யுனிஸ்ட் கட்சி இந்தப் பாதையை சரியாக கணிக்கிறது மாவோ, அதற்குத் தலைமையேற்று நடத்துகிறார், ஆனால் உலகத்தில் பாஸிஸத்தை வீழ்த்தி, சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய கம்யுனிஸமோ இந்தியாவில் தொளதொள தன்மையால் நீர்த்துப் போகிறது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைமை சந்தர்ப்பவாதமாக மாறி மொத்த மக்கள் போராட்டத்தையும் காவு கொடுக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து, ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடன் சேர்ந்து கொண்டிருக்க, காஷ்மீர் மற்றும் நிஜாம் சமஸ்தானம் இந்திய ராணுவம் கொண்டு மக்களை அடக்கி இந்தியாவுடன் இணைக்கப்படுகின்றன. தெலுங்கானாவில் மக்கள் எழுந்தனர், ஆயுதம் தாங்கினர், நிலத்தைக் கைப்பற்றினர், சரிதான். அடுத்து அதை எப்படி வழிநட்த்த வேண்டும் என்று தெரியாமல், தாங்கள் அம்பலம்படுத்த வேண்டிய காங்கிரஸின் பிரதிநிதிகளாகவே மாறி போலி கம்யுனிஸ்ட்டுகள் துரோகம் இழைக்கிறார்கள்.

நிஜாமோ விவசாய எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல். நேருவிடம் நாட்டை விற்றுவிட்டுச் செல்ல, நேரு இந்திய ராணுவத்தை அனுப்பி மக்களை அடக்கி தெலுங்கானாவை இந்தியாவுடன் இணைத்துக் கொள்கிறார். போலி கம்யுனிஸ்டுகளின் துரோகம் அவர்களின் அறியாமையால் மாத்திரம் வரவில்லை, அவர்களில் பலர் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் வந்தது. பின் நாட்களில் அவர்கள் ஓடுகாலிகளாக போய்விட்டார்கள். நேருவின் மீட்சிக்குப் பின் காங்கிரஸ் ரவுடிகளும் போலி கம்யுனிஸ்டுகளூம் இணைந்து மக்களிடமிருந்து நிலங்களை மீட்டு ஜமீன்தாரர்களுக்குக் கொடுக்கிறார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என தொளதொள மசோதா நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் போராட்டம் காயடிக்கப்படுகிறது. ஒரு போராட்டத்தின் வீழ்ச்சி என்பது பிற்போக்கு  சக்திகளை பலம் பெற செய்துவிடும். அது தான் நடக்கிறது.

போலி கம்யுனிஸ்டுகளின் சதியால் இந்த மாபெரும் விவசாய எழுச்சி துரோகமிழைக்கப்பட்டு, பிற்போக்கு சக்திகளிடம் செல்கிறது. (இந்தக் காட்சிகள் இணையத்தில் இருக்கும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது). ஆனால் ஒரு மாற்றமும் இல்லை, நாளும் போராடுகிறவனை துரோகம் என்ன செய்துவிடும்?  பின் நாட்களில் ’வசந்தத்தின் இடிமுழக்கமென’ நக்சல்பாரிகளாக எழுந்தனர். இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். புரட்சியில் இடைக்காலத் தோல்வியென்பது வரலாறு தான். ரஷியாவிற்க்கு 1905 போல் சீனவிற்கும் உண்டு, அது இந்தியாவிற்கும் உண்டு, ஆனால் வரலாற்றில் பாடங்கள் படித்து தன் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவது தான் மனித சமுகத்தின் இயல்பு, அது தான் விஞ்ஞானமும், அது தான் மார்க்ஸிய லெனினியமும்.

தெலுங்கானா படிப்பினைகளிலிருந்து இந்தியப் புரட்சிக்கு ரஷிய பாதை சரியாகாது என்ற படிப்பினையும் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி செய்து கொள்ள வேண்டிய சுய விமர்சனமும் செய்துகொண்டு முன்னேற வேண்டும். அது தான் ரஷியாவின் 1917. தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடி, நமக்கு அறிவைக் கொடுத்து வரலாறாக நிற்கும் எண்ணற்ற தெலுங்கானா போராளிகளுக்கு  வீரவணக்கம்.

ஹீரோயிசமும் மக்கள் திரளும்:

கடந்த 40 வருடங்களாக வரும் இந்திய சினிமாக்களின் இயல்பான கதைக்களம் தான் இது, ஒரு ஊர், வில்லன், அவதிப்படும் மக்கள், அவர்களைக் காப்பாற்றும் ஹீரோ என அரதப்பழசாகிவிட்ட இந்தக் கதையை இப்பொழுது இந்தப் படத்தில் பார்க்க முதலில் நமக்குக் கசக்கும். ஆனால் இந்தப் படத்தில் தனி நபர் ஹீரோயிசம் இல்லை, மாறாக எப்பொழுதும் உண்மையான ஹீரோவான மக்கள் திரளே இதில் ஹீரோ. ராமையா என்ற கதாபாத்திரம் கூட ஏற்கனவே சொன்னது போல் ஒரு குறியீடுதான் ஒழிய ஹீரோ இல்லை. எண்ணற்ற போராளிகளின் அந்த கிராமத்துப் பிரதிநிதிதான் ராமையா. வில்லனும் இதில் ஜமீன்தார் மாத்திரமில்லை, சந்தர்ப்பவாத கம்யுனிஸ்டுகளும் இந்திய அரசும் வில்லன்கள்தான்

இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின்  கலை ஆவணம்தான் இந்தப் படம். கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.

– ஆதவன்.

இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்கள்!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள தி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் காசி என்பவரை விசாரிக்க சென்ற போது அவர் மட்டும் அல்லாது ஐந்து பெண்கள் உட்பட உறவினர்கள் அனைவரையும் இரவில் வேனில் திருக்கோவிலூர் போலீசார் ஏற்றி சென்று ஆண்களை காவல் நிலையத்தில் அடைத்துவிட்டு 4 பெண்களை இரவு 12 மணியளவில் அருகில் உள்ள தைலத்தோப்பில் காவல்துறையினர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட போலீசார் 5 பேரை சஸ்பெண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா லட்சம் இழப்பீடு வழங்கி தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்து அவர்களின் சொத்தான 10 பவுன் நகை, பணம் ரூபாய் 2000,   4 செல்போன் அதன் சார்ஜர் என அனைத்தையும் திருடியுள்ளனர். இரவில் பெண்களை கைது செய்ய கூடாது, பெண்களை விசாரிக்கும் போதும் கைது செய்யும் போதும் பெண் போலீசார் கூட இருக்க வேண்டும் போன்ற நீதிமன்ற உத்திரவுகளை எல்லாம் மயிருக்கு சமமாக கூட போலீசார் மதிப்பதில்லை. எங்கு திருட்டு நடந்தாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க வக்கற்ற போலீஸ் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே தொழிலாக கொண்டுள்ளது. சில காவல்துறையினர் அதிகார திமிரோடு இருளர் பெண்கள் பெரிய அழகியா? பாலியல் வன்முறை நடக்க வாய்பில்லை என வக்கிரமாக பேசுகின்றனர். நடக்காத குற்றத்திற்கா தமிழக முதல்வர் 5 லட்சம் இழப்பீடு கொடுத்தார்?

பழங்குடியின இருளர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் கருகுவது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? கரும்பு வெட்ட அழைத்து சென்று குறைந்த கூலி கொடுத்து இடை தரகர்கள், இருளர்களின் உழைப்பை அட்டையாக உறிஞ்சுவதும், வாழும் இடங்களில் விலங்குகளுக்குள்ள சமத்துவம் கூட இல்லாமல் ஆற்றோரத்திலும், ஒதுக்கு புறத்திலும் மாட்டு கொட்டகைக்கும் கீழாக வீடு கட்டி வாழும் இருளர் இன மக்களை இன்றும் குற்றப் பரம்பரையாக கருதி போலீசார் வேட்டையாடுவதை நாம் அனுமதிக்க முடியுமா?

வீரப்பனை பிடிக்கிறேன் என்று தேவாரம் தலைமையிலான அதிரடி படை போலீசார் மலைவாழ் மக்களை வேட்டையாடியதும் பெண்களை பாலியல் வன்முறை செய்ததும் நீதிபதி சதாசிவம் கமிஷன் முன்பு வாக்குமூலங்களாக நிருபிக்கப்பட்ட பிறகும் எத்தனை போலீசார் தண்டிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு பதவி உயர்வுகளையும் பணம் வீட்டுமனை என மக்கள் வரிபணத்தை சன் மானங்களாக வாரி வழங்கியவர்தான் ஜெயா. 1992-ல் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை அனைரும் சேர்ந்து காட்டு மிராண்டி தனமாக பெற்ற தாய்மார்கள் கண் முன்பாகவே 13 வயது பள்ளி சிறுமி உட்பட 18 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்தார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட இவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததோடு உணவு தானியங்களை தீ வைத்து கொளுத்தியும், குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெயை கொட்டியும் நாசப்படுத்தினர். 15 நாட்களுக்கு பிறகே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தது. 19 ஆண்டுகள் இழுத்தடித்துஅனைவரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டனர்.

சிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், அந்தியூர் விஜயா வழக்காகட்டும், திண்டிவனம் ரீட்டாமேரி வழக்காகட்டும், போலீசோ, அரசோ நீதிமான்களாக நின்று விசாரணை செய்து குற்றவாளி போலீசாரை தண்டிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், பழங்குடியின பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி கட்சிகள், புரட்சிகர அமைப்புகள் என அனைவரும் இறங்கி போராடியதுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி, இறங்கியதால் பெற்ற தீர்ப்புகள். இவை அனைத்திலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் குற்றவாளி போலீசாரை பாதுகாக்கவே செய்தனர்.

பரமக்குடியில் தலித்துகள் மீதான போலீசு துப்பாக்கி சூடு படுகொலையை ஜெயா சட்டமன்றத்தில் ஆதரித்து பேசினார். சி.பி.ஐ. விசாரிக் வேண்டும், இழப்பீடு தரவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் 1 லட்சம் வழங்கிய ஜெயா இன்று 4 லட்சம், இறந்தவர் வீட்டில் ஒருவருக்கு வேலை என அறிவித்துள்ளார். படுகொலைக்கு காரணமான போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மண்டபம் பகுதி இருளர் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி போலீசார் ஒருவரின் பெயர் கூட இல்லை. கைது செய்யப்படவும் இல்லை. உயர் அதிகாரியிடம் முறையிட வந்த பாதிக்கபட்ட பெண்களை இரவு முழுவதும் பெண் போலீசை வைத்து தூங்க விடாமல் உளவியல் சித்ரவதை செய்து, நடந்த சம்பவத்தை இல்லை என சொல்ல கட்டாய படுத்தியுள்ளனர். பழங்குடியின இருளர்கள்தானே, ஒருவேலை சோத்துக்கு அலையும் ஏழைகள் தானே என்ன செய்யமுடியும்? என்ற ஆதிக்க மனோபாவம்.

போலீசின் அத்துமீறல்கள் எங்கு நடந்தாலும் அரசுக்கு எதிராக ஓட்டு கட்சிகள் தயவின்றி பல்வேறு அமைப்புகள் போராடுவதுடன் நீதிமன்றத்தின் எந்த படிக்கட்டுக்கும் சென்று போலீசுக்கு எதிராக வழக்கு நடத்தி தண்டணை வாங்கித்தருகிற இந்த காலத்தில், திருக்கோவிலூர் போலீசார் இரவு12 மணிக்கு தைல மரத்தோப்பில் வீட்டு ஆண்களை லாக்கப்பில் போட்டு விட்டு 3 மாத கர்ப்பிணி உட்பட 4 பெண்களை கும்பலாக பாலியல் வன்முறை செய்து விட்டு அதிகாலை அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றால் திடீரென எதிர்பாராமல் போலீசு செய்யவில்லை. கிரிமினல் மயமான போலீசு துறையின்  வெளிபட்ட சீழ்கட்டிகள்தான் மண்டபம் பாலியல் வன்முறை.

போலீசு சட்ட பூர்வ கிரிமினல் கும்பல் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். பத்திரிக்கையாளர்கள், அனைத்து போலீசையும் எப்படி கூறமுடியும் என கேட்டதற்கு ஒரு கூடை அழுகிய மீன்களில் ஒரு நல்ல மீனை தேடும் முட்டாளல்ல நான் என பதிலளித்தார். ஏட்டு முதல் எஸ்.பி. வரை சிவகாசி ஜெயலட்சுமியை வைத்திருந்தார்கள் அதுபோல் காவல் துறையில் வேறுபாடு இல்லாமல் லஞ்ச ஊழல் முறைகேடுகள் அழுகி நாறுவது அனைவரும் அறிந்ததே  கூலிப்படையுடன் கூட்டு வைத்து கொலை செய்வது வழிபறி கொள்ளையில் ஈடுபடுவது, பொய் வழக்கு போடுவதற்கு ஒருரேட்டு, வழக்கு போடாமல் இருப்பதற்கு தனி ரேட்டு, குற்ற வாளிகளை கைது செய்வதற்கு, கைது செய்யாமல் இருப்பதற்கு, ஒரு ரேட்டு இவை அனைத்தும் போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே ஊரறிய நடக்கிறது. உரிமைக்காக போராடும் மக்களை கண்காணிக்க எண்ணற்ற உளவுப்போலீசார். இதை கண்காணிக்க மறுப்பதேன்?

கிரிமினல் மயமான போலீசை வைத்துதான் தலித்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொல்ல முடியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்கவும், சிறையில் அடைக்கவும் முடியும். எதிர்ப்பு குரல் கொடுக்கும் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளரை ஒடுக்கமுடியும். விசாரணை என்ற பெயரில் சாதாரண மக்களை, லாக்-அப் கொலை செய்து ஏனைய மக்களை அச்சுறுத்த முடியும். சட்டம், நியாயம், நீதி, என்று பாராமல் கடி என்றால் கடிப்பதற்கும் பிடி என்றால் பிடிப்பதற்கும், குற்றவாளி போலீசாரை பாதுகாப்பதும், கிரிமினல் மயமான போலீசும்தான் ஜெயாவுக்கு அவசியம்.

போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.

குற்றபரம்பரையாக கருதி இருளர் இன மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் போலீசின் அடக்கு முறையை முறியடிப்போம். 5 லட்சம் அல்ல 50 லட்சம் கொடுத்தாலும் நம் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு பாலியல் வன் கொடுமை நடந்தால் நாம் என்ன செய்ய நினைப்போமோ அதை செய்வோம் வாரீர்.

தமிழக அரசே !

பாலியல் வன்முறைக்கு காரணமான குற்றவாளி போலீசாரை கைது செய்.

வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிடு!

பழங்குடியின மக்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய் !

_____________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – கடலூர், திருவண்ணாமலை மாவட்டம் – வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்.

_____________________________________________________________

ஆர்ப்பாட்டம்!

திருக்கோவிலூர் மண்டபம் பகுதியை சார்ந்த இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் காவல் துறை போலீசை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5.12.2011 மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் தலைமை தாங்கினார். இருளர் இன மக்கள் உழைத்தும் எளிமையாக வாழ்கின்றார்கள். அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சந்தேகத்தின் பேரில் ஆண்களை மட்டும் அல்லாமல் 5 பெண்களையும்  இரவில் வேனில் அழைத்து சென்றுள்ளனர். திருக்கோவிலூர் போலீசாரின் இச்செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்பாவி பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்த போலீசை கைது செய்ய கோரி கண்டித்து பேசினார். மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைவர் சுப்புரமணி மத்திய, மாநில போலிசார் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்டது என்றும் மணிப்பூரில் மலை வாழ் மக்களையும் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்றும் கண்டித்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் செந்தில், செல்வகுமார், குணசேகரன், திருவண்ணாலை மாவட்டத்தை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் சுப்புரமணி, விழுப்புர மாவட்டத்தை சேர்ந்த பு.மா.இ.மு. தோழர். செல்வகுமார். வி.வி.மு. தங்கராஜ், ஆகியோர் பேசினார்கள்.

பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்கள் 4 பேரையும் பெண் போலீசு இன்றி கைது செய்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய போலீசு மீது புகார் கொடுக்க சென்ற, மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் 12 பெண்  போலிசார் மிரட்டி பயமுற செய்து 18 மணி நேரம் இரவு முழுவதும் தூங்க விடாமல் மன சிதைவு ஏற்பட செய்து தங்களுடைய ஆண்களை திருட்டு வழக்கில் இருந்து காப்பாற்றத்தான் அவ்வாறு கூறினோம் என்று பொய் வாக்கு மூலம் பெற்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை. குற்றவாளி போலிசார்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்து தமிழக அரசு தற்போது வழங்கிய 5 லட்சம் இழப்பீட்டு தொகையை போலீசாரின் சொத்துகளை பறிமுதல் செய்து அளிக்க வேண்டும். போலீசு துறையே கிரிமினல் மயமாகி விட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் பாலியல் வன்முறை,  சிறை கொட்டடிச்சாவு, பரமக்குடி துப்பாக்கி சூடு படுகொலை, போலி என்கௌண்டர் கொலைகளை செய்யும், போலீசு ராஜ்ஜியத்தை உடனடியாக தடுத்து நிறுத்திட ஜனநாயக அமைப்புகளும்,  மனித உரிமை அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து மக்கள் அணி திரள வேண்டும். மேலும் சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி மலைவாழ் மக்கள், அந்தியூர் விஜயா, திண்டிவனம் ரீட்டாமேரி, ஆகிய வழக்குகளில் மக்கள் போராடியதால் தான் குற்றவாளி போலீசாருக்கு தண்டனை கிடைத்தது. எங்கும் திருட்டு நடந்தாலும் இருளர் மக்கள் மீது பாயும் போலீசார் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி அமைச்சர்கள் இல்லையா? குற்றவாளி IAS, IPS  அதிகாரிகள் இல்லையா? குற்றவாளி வருவாய் துறை அதிகாரிகள் இல்லையா? பொது சொத்துகளை கொள்ளையடிக்கும் குற்றவாளி முதலாளிகள் இல்லையா? அவர்கள் மீது போலீசு வழக்கு போட்டு கைது செய்ய வேண்டியதுதானே.  எங்களிடம் 10 நாள் விஜிலன்ஸ் துறையை எங்களிடம் கொடுத்தால் மாவட்டத்தில் பாதி போலீசாரை சிறைக்கு அனுப்பி விடுவோம். பொது இடத்தில் ஒருவர் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்தால் அனைவரும் சேர்ந்து அடிக்கிறோம். அது போல் இருளர் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்த போலீசாரை கட்டி வைத்து உதைத்தால் தான் கிரிமினல் போலீசின் அத்துமீறல்களை தடுக்க முடியும்.  என்று மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு விரிவான கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளாக 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பார்வையாளராக 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன உரைக்கு ஆதரவு அளித்தனர்.

தகவல்:
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!

13

ஐக்கிய முன்னணி அரசின் சாதனைகளில் ஒன்றாக போற்றப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் நடக்கும் குளறுபடிகளை வெளியில் கொண்டு வந்து ஊழலற்ற ஜனநாயகத்தை கட்டி அமைக்கிறார்கள் என்று பத்திரிகைகளும் ஆளும் கட்சி பேச்சாளர்களும் வியந்தோதுகிறார்கள். நடைமுறையில் அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த நேரடி அனுபவம் ஒன்று:

‘சார் அடுத்த திங்கள் கிழமை மாநில தகவல் ஆணையர் அலுவலகத்துக்கு என்னை வரச் சொல்லி லெட்டர் வந்திருக்கு சார். தப்புத்தப்பா தகவல் தந்தாங்கன்னு நான் அனுப்பிய புகாரை விசாரிக்க வரச்சொல்லியிருக்காங்க. நான் கிளம்பி வருகிறேன்’.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!
நன்றி www.thehindu.com

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக பல தொண்டு நிறுவனங்கள் பெருமளவு ஊழல் செய்து விட்டதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்டியதாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம் உண்மையில் 2178 வீடுகள்தான் கட்டினார்கள் என்றும், கட்டப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்குப் புறம்பாக காப்பீடு செய்யயாமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்த கனகசபை சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். ஆதாரங்களாக பத்திரிகைச் செய்திகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய மனுக்கள், போராட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

தொலைபேசியில் மேல் விபரங்கள் கேட்டுக் கொண்டோம். ‘பலபேருக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக கணக்கு எழுதி காசு அடித்து விட்டாங்க சார், இன்சூரன்சு செய்யாமலேயே இன்சூரன்சு செய்ததாக காட்டிவிட்டாங்க, பெரிய ஊழல் நடந்திருக்கு. இதற்கு ஒரு தீர்வு காணாமல் விட மாட்டேன்’ என்று சொன்ன அவர், சொன்னதற்கு ஏற்ப விடாமல் வாரத்துக்கு இரண்டு முறை தொலைபேசி விபரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரது தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு கட்டமாக மாவட்ட நிர்வாகம் தவறான தகவல் கொடுத்ததாக அவர் அனுப்பிய புகாரின் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மாநில தகவல் ஆணையத்தில் நடக்கவிருக்கும் விசாரணைக்கு அவருடன் போவதாக ஒத்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை மதியவாக்கில் தொலைபேசினார்.

‘இன்னைக்குக் சாயங்காலம் கிளம்பி வாரேன் சார், நீங்கதான் உதவி செய்யணும். காலையில ஒம்பதரை மணிக்கு தேனாம்பேட்டையிலை தியாகராயர் சாலையில் இருக்கும் தகவல் ஆணைய அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. கோயம்பேட்டில் இறங்கியதும் உங்களுக்கு போன் செய்கிறேன்’.

ஒன்பதரை மணிக்கு தேனாம்பேட்டை தியாகராயர் சாலையில் இருக்கும் மாநில தகவல் ஆணைய அலுவலகத்துக்குப் போய் விட்டோம். புதிய கட்டிடம். நவீன கார்பொரேட் அலுவலகம் போல இருந்தது. உள்ளே நுழைந்தால் வரவேற்பு பகுதியில் நாற்காலிகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் கனகசபை யார் என்று தெரியவில்லை. அவரது தொலைபேசியை அழைத்தால் பதில் இல்லை. இன்னொரு தொலைபேசி இணைப்பே இல்லை. ஒவ்வொருவரையும் இவராக இருக்குமா அவராக இருக்குமா என்று பார்த்துக் கொண்டு நின்றேன். செக்யூரிட்டியிடம் ‘இப்படி வந்தவர் எங்கு காத்திருப்பார்’ என்று கேட்டால் இங்குதானாம்.

எல்லோரையும் பதிவேட்டில் பெயர் எழுதி கையெழுத்து போட்டு விட்டு மேலே முதல் மாடிக்குப் போகச் சொன்னார்கள். குள்ளமாக, சிவப்பாக, சட்டை டக் இன் செய்து, இடுப்பில் மொபைல் செருகி ஸ்டைலாக ஒருவர் வந்தார்.  ஒரு கையில் சில கோப்புகளும், இன்னொரு கையில் அடக்கமான பயணப்பையும். வெளியூர்க்காரர் போலத் தெரிந்தார்.

‘நீங்கதான் கனகசபையா?’ என்று விசாரித்தோம்.

‘கையில அரசாங்க பைல் வைச்சிருக்கேன், ஏன் அப்படி கேட்கறீங்க’ என்று கடுப்பானார்.

‘சாரி சார், கனகசபை என்று ஒருவரைப் பார்க்க வந்தோம். தொலைபேசியில்தான் பேசியிருக்கிறோம், நேரில் பார்த்ததில்லை, அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் அதான்’ என்று வருத்தம் தெரிவித்தேன். ‘நீங்க இங்கதான் வேலை பார்க்கிறீர்களா’ என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.

பின்னர்தான் தெரிந்தது அவர்தான் பிரதிவாதி. தவறான தகவல் கொடுத்ததாக கொடுத்த புகார் பற்றிய விசாரணைக்கு பதில் சொல்வதற்கு மாவட்ட அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவரில் ஒருவர் இவர். கனகசபையை இன்னும் காணவில்லை. மணி 9.45 ஆகி விட்டிருந்தது. அவர் உள்ளே போய் விட்டிருந்தால் முடித்து விட்டு வரட்டும், நாம் காத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

அப்போது கனகசபை தொலைபேசியில் அழைத்தார். அலுவலகத்துக்கு முன்பு நிற்கிறாராம். எங்கோ கோயிலுக்குப் போயிருந்தாராம்.

‘கறுப்பு கலர் பேகும், துணிக்கடை பையும் வைத்திருப்பேன்’ என்று அடையாளம் சொன்னார்.

இரண்டு கைகளில் இரண்டு பைகளோடு வந்தார். கறுப்பான, உயரமான, உறுதியான உடல் வாகு. கண்கள் தூக்கமின்மையால் சிவந்திருந்தன. கைகளில் வைத்திருந்த பைகளின் கனம் பார்க்கும் போதே தெரிந்தது. துணிக்கடை பை நிறைய ஆவணங்கள். அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள், அவற்றிற்கு கிடைத்த பதில்கள், பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள், தபால் வந்த உறைகள் என்று எல்லாவற்றையும் பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார்.

அவர் ஒரு ஓட்டுனர். லாரி ஓட்டுனர் வேலை செய்கிறாராம். முன்பு இந்தியா முழுவதும் ஓட்டப் போவார். இப்போது, உள்ளூரில் மட்டும்தான் ஓட்டுகிறார். ஊர்த்தலைவராக இருந்தார். சுனாமி சமயத்தில் அவர்தான் தலைவர். அவரது வீடு கடற்கரையிலிருந்து 800 மீட்டரில்தான் இருக்கிறதாம். சுனாமி அன்று முதலில் தண்ணீர் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் வரை வந்திருக்கிறது. என்ன என்று பார்க்கப் போய் பாலத்துக்கு அப்பால் போன பிறகு மீண்டும் தண்ணீர் உள்ளே வந்து வீட்டை எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அவரது தங்கை மகள் மரத்துக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார்.

ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து வந்து குழந்தைகளை போட்டோ எடுத்துக் கொண்டு போவார்கள். மாதா மாதம் அது நடக்கவே அந்த வீட்டுக் காரர்கள் இவரிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள்.  ‘போட்டோ எடுத்து அதை வைத்து காசு பார்க்கிறாயா, இவங்களுக்கு அதை கொடுக்கணும் இல்லை என்றால் போட்டோ எல்லாம் திரும்பிக் கொடு’ என்று அவர்கள் பைக்கை பிடித்து வைத்துக் கொண்டாராம். அவன் போய் போலீஸில் புகார் கொடுத்து இவர் மீது போலீஸ் கேஸ் ஒன்று போட்டு 15 நாட்கள் சிறையில் வைத்து விட்டார்கள். 6 மாதம் போய் கையெழுத்து போட்டு விட்டு வந்தார். இவரை சிறையில் வைத்து விட்டு வீட்டுக்கு 50 போலீஸ் காரங்க வந்து ரெயடு. அதையெல்லாம் பார்த்துட்டு ஊர் மக்கள் பயந்து ஒதுங்கி விட்டார்கள்.

இந்தப் போராட்டத்தில் இப்போது அவருக்கு யாரும் ஆதரவு இல்லை. வீட்டில் குழந்தைகள் வேறு வேலை இல்லையா என்று திட்டுகிறார்கள். இரண்டு பையன்கள் படித்து வேலை பார்க்கிறார்கள்.

இரவு முழுவதும் பேருந்து பயணம் செய்து காலையில் தெருவோர குழாயில் குளித்து தயாராகி, அரசு அலுவலகத்துக்குப் போவதற்கான மிடுக்குடன் தயாராகியிருந்தார். கீழே வருகைப் பதிவில் பெயர் எழுதி கையெழுத்து போடச் சொல்லி விட்டு முதல் மாடிக்குப் போனோம். காத்திருக்கும் பகுதி நவீனமாக வசதியான நாற்காலிகள் போடப்பட்டு விசாலமாக இருந்தது. மேலே மின்விசிறி, குடிதண்ணீருக்கு பிளாஸ்டிக் பாட்டில் டிஸ்பென்சர் என்று இருந்தது. முன்பே வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

அழைப்பு வந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். ‘நீங்கள் தகவல் கேட்ட மனுவுக்கு தவறான தகவல் தந்தது குறித்த விசாரணைக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வரவும்’ என்று கடிதம். ‘10.30க்கு விசாரணை. அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விட வேண்டும்.’ அலுவலக உதவியாளர் வந்து வருகை பதிவு செய்து கொண்டு, படிவத்தை நிரப்பி வைத்துக் கொள்ளச் சொன்னார். செல்பேசியை அணைத்து விட வேண்டும்.

அவரது ஆவணங்களைப் பார்த்ததில் தகவல் மனுவில் கேட்ட கேள்விகளில் இரண்டு தவறான தகவல்கள்.

1. கிராமத்தில் தொண்டு நிறுவனம் எத்தனை வீடுகள் கட்டியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு 50 வீடுகள் என்று பதில் சொல்லியிருந்தார்கள். உண்மையில் 23 வீடுகள்தான் கட்டப்பட்டிருந்தன. இன்னொரு ஆவணத்தில் அந்த தகவல் வந்திருந்தது.

2. வீடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டது என்று தகவல். நிரந்தர வீடுகளுக்கு காப்பீடு கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. ஆனால் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு இழப்புத் தொகை தரவில்லை. கேட்டால் சுனாமிக்கு மட்டும்தான் காப்பீடாம்.

மீனவர்களுக்கு கட்டுமரம் நிவாரணம் வழங்குவதில் பொய்யான பெயர்களைச் சேர்த்து கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஒரே ஆளுக்கு இரண்டு மூன்று தடவை நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ‘இதைச் சொல்ல முடியாது, இந்த விசாரணையில் தவறான தகவல் கொடுத்ததை மட்டும்தான் பேச முடியும்’.

சரியாக 10.30க்கு அழைத்து விட்டார்கள். விசாரணைக் கூடம் 1க்குள் போக வேண்டும். உள்ளேயிருந்து ஒரு அம்மா வந்து ஊரிலிருந்து வந்திருந்த அதிகாரிகளுடன் பேசி உட்கார வைத்தார். நானும் கனகசபையும் நின்று கொண்டிருந்தோம். உயரமாக, 50 வயதுகளில் ஆணையர், விசாரணை கூடத்துக்கு உள்ளே போயிருந்தார். எவ்வளவு நேரம் நிற்பது போய் உட்காரலாம் என்று நாற்காலிக்குப் போனதும் அழைத்தார்கள்.

முதலில் நாங்கள் இரண்டு பேரும் போனோம். மேடை போன்ற இடத்தில் உயரமான இருக்கையில் ஆணையர். கீழே இரண்டு பக்கமும் நாற்காலிகள், நடுவில் குறிப்பெடுப்பவரின் இருக்கை. ஆணையருக்கு வலது புறம் வாதிகள்,  நாங்கள் இரண்டு பேரும் போய் உட்கார்ந்தோம். இடது புறத்தில் பதில் சொல்ல மூன்று அரசு அதிகாரிகளும் வந்தார்கள். ஒருவர் முதலில் பார்த்த குள்ளமான சிவப்பான இளைஞர், இன்னொருவர் திராவிட கறுப்பில் ஒல்லியாக நடுத்தர வயதினர். இன்னொருவர் குண்டான ஒரு அம்மா.

சொல்லுங்க‘ என்று எங்கள் பக்கம் கேட்டார் ஆணையர்

ஐயா நிறைய முறைகேடு நடந்திருக்குங்க, பொய்யான தகவல்களை தந்திருக்காங்க‘ என்று ஆரம்பித்தார்.

‘அலிகேஷன் எல்லாம் சொல்லக் கூடாது. அப்படி எல்லாம் பேசினா வெளியேற்றி விடுவேன். என்ன தகவல் தவறு என்று மட்டும்தான் நான் விசாரிக்க முடியும். எந்த மனு குறித்து புகார் சொல்லப் போறீங்க என்று தெளிவா புரிஞ்சுக்கோங்க. சுனாமி நிவாரண பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது என்று எனக்கும் தெரியும், ஆனால அதை எல்லாம் இங்கே விசாரிக்க முடியாது. தகவல் தருவதில் இருந்த தவறுகள் மட்டும்தான் விசாரணை.  எந்த மனுவைப் பற்றி பேசுறீங்க? 21 கேள்விக்கான மனுதான் விசாரணைக்கு’  என்று ஒரு போடு போட்டார்.

‘சரிங்கய்யா, சரிங்கய்யா’ என்று கையெடுத்து கும்பிட்டார்.

21 கேள்விகளுக்கு பதில் அனுப்பியிருந்த மனுவை எடுத்து கையில் கொடுத்தோம். முதல் கேள்விக்கு 50 வீடுகள் கட்டியிருப்பதாக தகவல்.

‘ஐயா, அது தவறுதலா ஆகிப் போச்சு. இன்னொரு சேவை நிறுவனம் கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை இவங்க கட்டினதா சொல்லிட்டோம். இதற்கு முன்பு இன்னொரு மனுவுக்கு சரியான தகவல் சொல்லியிருக்கிறோம்’ என்று அதைக் காட்டினார் சிவப்பாக குள்ளமாக இருந்தவர்.

‘என்னய்யா பேசுறீங்க, தவறா எப்படி தகவல் கொடுப்பீங்க. இங்க என்ன விளையாடிட்டு இருக்கீங்களா‘ என்று சரமாரியாக அவர்களைத் திட்டித் தீர்த்தார்.

கனகசபை ‘ஐயா இத்தோடு தொடர்புடையது, 4 வது விடையில்…’ என்று ஆரம்பித்ததும் முறைத்தார். நான் ஒவ்வொரு கேள்வியாகத்தான் பார்ப்பேன். இடையிடையே பேசக் கூடாது என்று ஒரு மிரட்டல். மாவட்டம் முழுவதும் 2173 வீடுகள்தான் கட்டியிருப்பதாக தகவல் கொடுத்திருந்தார்கள். ஆனால், தொண்டு நிறுவனம் 3500 வீடுகள் கட்டியதாக பலகை வைத்திருக்கிறார்கள். இந்த நூலைப் பிடித்துக் கொண்டு இழுத்தால் அந்த விவகாரமும் வெளியில் வரும் என்பதைச் சொல்ல விடவில்லை.

அடுத்த கேள்வி காப்பீடு குறித்து, ‘காப்பீடு இருக்கிறது என்று பதில். அது சரிதானா? சரி என்றால் காப்பீடு செய்த விபரங்கள் காண்பியுங்கள்’ என்று அதிகாரிகளைக் கேட்க கொண்டு வந்திருக்கவில்லை.

மூணு பேர் எதுக்குய்யா வந்தீங்க, இங்க கத்திரிக்கா விளையுதுன்னு பறிச்சுட்டுப் போக வந்தீங்களா? பேப்பர்ஸ் இல்லாம ஏன் வந்தீங்க’ என்று காய்ச்சி எடுத்தார்.’அலுவலகத்தில் இருக்கிறது, தொண்டு நிறுவனத்திடம் இருக்கிறது‘ என்று சமாதானம்.

கனகசபை வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் வந்து பேருந்து பிடித்து இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் கார்பொரேசன் குழாயில் குளித்து விட்டு பை நிறைய ஆவணங்களோடு வந்திருக்கிறார். பயணச்செலவுக்கு லாரி ஓட்டி சம்பாதித்த காசை செலவழிக்கிறார். இந்த மூன்று அதிகாரிகளும் அரசு செலவில் பயணப்படி, தங்கும் செலவு வாங்கிக் கொண்டு கையில் ஒரே ஒரு தாளுடன் நிற்கிறார்கள். தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் இல்லை.

‘மூணுபேர் எதுக்குய்யா வந்தீங்க! மூணு பேர் ஏன் வந்தீங்கன்னு சொல்லுங்க’ என்று இன்னொரு அதட்டல்.

தொண்டு நிறுவனங்கள் கட்டும் வீடுகளுக்கு காப்பீடு கட்டாயம் வேண்டும் என்று அரசாணை இருப்பதாக பின்னால் ஒரு பதில் இருந்தது. ஆனால், தீ விபத்துக்குள்ளான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஏனென்றால் காப்பீடு சுனாமிக்கும் நிலநடுக்கத்துக்கும் மட்டும்தான், தீவிபத்துக்கு இல்லை.

‘உங்களுக்கு இன்சூரன்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா குறிப்பிட்ட நிகழ்வுக்குத்தான் இன்சூரன்ஸ் எல்லாத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது’ என்று கனகசபைக்கு ஒரு மிரட்டல்.

அரசாணைப் படி முழுமையான காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பேச தயாராக இல்லை. ‘காப்பீடு விண்கல் தாக்குவதற்கு மட்டும்தான் என்று செய்திருந்தால் இன்னும் செலவு குறைந்திருக்கும்’ என்று அடுத்த தடவைக்கு யாராவது தொண்டு நிறுவனத்துக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்.

வரிசையாக ஒவ்வொரு கேள்வியாக டிக் அடித்துக் கொண்டே வந்தார். ‘மேல் முறையீடு விபரங்கள் இல்லை. மேல் முறையீடு செய்து விட்டுதான் நீங்க வந்திருக்க வேண்டும்‘ என்று ஒரு மிரட்டல். கடைசியில் சுனாமி நடந்த தேதியில் ஆணையராக இருந்தது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கவில்லை.

‘சரி, நீங்க வந்தீங்க! இந்த இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களை அவங்க ஆபிசில் போய் பார்க்க அனுமதி தரச் சொல்லி உத்தரவு போடுகிறேன். அதுக்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாம். என்றைக்குப் போக முடியும்’. எழுத்தரை நோக்கி, ‘இந்தாம்மா எழுதிக்கோ, இனம் 4ல் குறிப்பிட்ட இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களைப் போய்ப் பார்க்க மனுதாரருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இனம் 19ல் கேட்கபட்ட ஆணையரின் பெயரை தெரிவிக்க வேண்டும். இந்த லெட்டர் உங்களுக்கு வந்து விடும். போய்ப் பாருங்க’

‘ஐயா, கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை தவறாக சொன்னது குறித்து எதுவும் ஆர்டர் இல்லையா’

‘அதுதான் சொல்லிட்டாங்களே, தப்பாக் கொடுத்துட்டோம் என்று. இன்னொரு ஆவணத்தில் சரியா சொல்லியிருக்காங்க. இல்லைன்னா அவங்களை காய்ச்சி எடுத்திருக்கலாம்’

‘இல்லைங்கய்யா, முழுப்பூசணியை சோத்தில மறைக்கப் பார்க்கிறாங்க. மாவட்டம் முழுக்க பல நூறு வீடுகள் கட்டாமலேயே கட்டினதா கணக்குக் காட்டியிருக்காங்க. அதில் ஒரு பகுதிதான் இந்த கிராமத்தில் நடந்த விவகாரம். இதில் எப்படியாவது நியாயம் வேணும் அய்யா. இதன் மூலமா நீங்க ஒரு உத்தரவைப் போட்டு விஷயங்களை வெளியில் கொண்டு வர முடியாதா’

‘அதெல்லாம் முடியாதுங்க! சுனாமியில எவன் எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும். நானும் அந்த மாவட்டத்துக்காரன்தான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி, பேர் சொல்ல மாட்டேன், மாவட்ட அதிகாரியா இருந்தார் என்று கூடச் சொல்கிறேன், முடிஞ்சா கண்டு பிடிச்சுக்கோ. சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும். தகவல் அறியும் உரிமையில் தகவல் தெரிவிப்பதையும் அதில் நடந்த தவறுகளையும்தான் விசாரிக்க முடியும். சமூகத்தையே திருத்தி விட முடியாது’

‘இதை நான் விடப் போவதில்லை சார். எப்படியாவது ஒரு முடிவு காணாம விடப்போவதில்லை’ என்று சொல்லி விட்டு கனகசபை மாலை பேருந்தை பிடித்து ஊர் திரும்ப தயாராகிறார். அது வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வெளியில் வந்து அவருக்கு ஒரு காபி வாங்கிக் கொடுத்து விட்டு வரும் போது மூன்று மாவட்ட அதிகாரிகளும் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்து ஆட்டோ ஒன்றில் ஏறுகிறார்கள். பெண் அதிகாரியை அழைத்துப் போக இரு சக்கர வண்டியில் ஒருவர் வந்திருக்கிறார். மாநகரில் செய்ய வேண்டிய மற்ற பணிகளை முடித்து விட்டு அவர்களும் மாலை அல்லது அடுத்த நாள் முன்பதிவு செய்யப்பட்ட, ரயில் பயணத்தை மேற்கொண்டு ஊர் திரும்பி விடலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆணையர் அலுவலகம் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

( பாதுகாப்பு காரணமாக பெயர், ஊர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.)

வினவு செய்தியாளர்.

சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாருடைய தலையீடும் இல்லாத, நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியை ஜெயலலிதா தருவார் என்று பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் கடந்த ஆறு மாதங்களுக்குள்  உடைந்து நொறுங்கிவிட்டது. ஜெயாவின் ஆட்சி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல்  சீர்கேடைந்துள்ளது என இந்தியா டுடே போன்ற ஊடகங்களே குறிப்பிடுகின்றன. ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை மூடிமறைத்தும், கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடியும் நேற்றுவரை பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பனப் பத்திரிகைகள், இப்போது  சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதும்,  ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின்  தலையீடு காரணமாகவே ஊழல்கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள் பெருகியதாகவும், ஜெயாவுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும், ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை உத்தமராகக் காட்டி ஒளிவட்டம் போடுகின்றன.

சசிகலா வெளியேற்றப்பட்டதை மாபெரும் புரட்சி போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், இனி தலையீடற்ற, ஊழலற்ற நிர்வாகம் தொடங்கப் போவதாகவும், ஜெயாவின் அற்புதமான ஆட்சியில் இருந்த ஒரேயொரு குறையும் அகற்றப்பட்டுவிட்டது போலவும் சித்தரிக்கின்றன. ஜெயலலிதா மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டதாகவும், தொண்டர்களிடம் நிலவி வந்த அதிருப்தி நீங்கிவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன.  அன்றைய ரஷ்யப் பேரரசி ஜாரினிக்கு ஒரு ரஸ்புடீன் இருந்ததைப் போல, ஜெயாவுடன் ஒட்டியிருந்த மன்னார்குடி கும்பல் இலஞ்சஊழல், நியமனங்கள், வெளியேற்றங்கள் அனைத்தையும் ஜெயாவுக்குத் தெரியாமல் செய்ததாகச் சித்தரிக்கும் பார்ப்பன  ஊடகங்கள், ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் அம்மா எதுவும் தெரியாத களிமண் என்பதை எதிர்மறையில் ஒப்புக் கொள்கின்றன.  இவர்கள் கூறும் களவாணிக் கும்பலால் கடந்த 20 ஆண்டுகளாக ‘ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை’யை வேறென்னவென்று அழைப்பது?

சொந்த சிந்தனை முறையில் ஜெயா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. அந்த வகையில்  அவரது தலைமையிலான அ.தி.மு.க. என்ற பொறுக்கி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதும் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்தது. எனினும், ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார். தொடக்கம் முதலே ஜெயாவின் ஊழல்கொள்ளையை மறைக்க இந்தக் கும்பல் மீது பழிசுமத்திப் பார்ப்பன ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. கட்சியிலுள்ள எதிர்கோஷ்டிகளும் சசிகலா கும்பலின் தலையீட்டினால்தான் அமைச்சர்களேகூட அம்மாவை நெருங்க முடியாமல்,  கட்சிக்கும் ஆட்சிக்கும்  கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருத்தை உருவாக்கின.

ஜெயாவையும் அவரது கட்சியையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் அரசியல் விமர்சகராகக்  காட்டிக் கொள்ளும்  துக்ளக் சோ, இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட எவ்வித அதிகார மையமும் செயல்படாமல் முடக்கும் தீர்மானகரமான நடவடிக்கை என்று சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆலோசகரான துக்ளக் சோவின் உறவினர்களும், பார்ப்பனக் கூட்டமும் போயஸ் தோட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கிசுகிசு ஏடுகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. குஜராத்தின் மோடி பாணியில், “ஊழலற்ற நல்லாட்சி’’, “சிறந்த அரசாளுமை” முதலான முழக்கங்களை முன்வைத்து 2014இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்து கார்ப்பரேட் சேவையில் புதிய அத்தியாயம் படைக்கவும், ஏற்கெனவே ஊழல்கொள்ளைக் கூட்டமாக அம்பலப்பட்டுப் போயுள்ள சசிகலா கும்பலின் மீது பழி போட்டு  தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ளவும்தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

உலகவங்கி எடுபிடிகளான மன்மோகன் சிங் பிரதமராகவும், அலுவாலியா திட்டக் கமிசன் துணைத்தலைவராகவும், தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமித் மித்ரா மே.வங்க நிதியமைச்சராகவும் இருப்பதைப் போல, மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கார்ப்பரேட் சேவைக்கேற்ற வகையில் அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும், நிபுணர்களும், வல்லுநர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும்; வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற பிரச்சாரத்துடன், நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இயங்கிய தமது விசுவாசக் கும்பல்களை வைத்துக் கொண்டு இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற இயலாது என்பதால், அந்த இடத்தில் கார்ப்பரேட் சேவைக்கேற்ற ஆலோசகர்களை ஆளும் கட்சிகள் அமர்த்தி வருகின்றன.

மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத  பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

அண்ணா ஹசாரே: பானி பூரி முதல் பரதநாட்டியப் போர் வரை!

7

நாடாளுமன்றம் லேட்நைட் ஷெட்யூல் போட்டுக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, தில்லியின் குளிர் தாங்காத பயத்தில் மும்பைக்கு முகாம் மாற்றிக் கொண்டு 11 லட்ச ரூபாய் வாடகையில் உண்ணாவிரத மைதானம் ஏற்பாடு செய்து போராட்டத்தைத் தொடங்கிய கையோடு முடித்துள்ள அண்ணா ஹசாரே அலையின் தெறிப்புகள் நாடெங்கும் சிதறியிருக்கின்றன. அவை பற்றிய பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். இவை எதுவும் எமது கற்பனை அல்ல.

1. முதலில் ஆகஸ்டில் நடந்த உண்ணாவிரதம் – சீசன் 2ல் ‘ஆதரவாளர்களுக்கு விருந்துச் சாப்பாடு’ என்ற செய்தி

ராம்லீலா மைதானத்தில் அண்ணாவின் உண்ணாவிரதம் ஆறாவது நாளை நுழையும் போது , கூடியிருந்த ஆதரவாளர்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். டெம்போக்களில் வந்து இறங்கிய பிரெட் பக்கோடா, கச்சோரி, சமோசா, ஆலூ பூரி, பரோட்டா, ரசகுல்லா, தேநீர், பிஸ்கட்டுகள், அரை டசன் வகையான நொறுக்குத் தீனிகள் என்று எது வேண்டுமானாலும் வாங்கித் தின்னும் வாய்ப்பு ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆரோக்கியத்தைப் பேண விரும்புகிறவர்களுக்கு வாழைப்பழங்களும் மாம்பழ ஜூசும் கூட கிடைத்தன. பாதி உண்டு வீசப்பட்ட பேப்பர் தட்டுகளால் குப்பைக் கூடைகள்  நிரம்பி வழிந்தன.

‘எவ்வளவு சாப்பிட முடியும், என் வயிறு நிரம்பி விட்டது’ என்று மறுத்தார் ஆதரவாளர் விஜய் ஆனந்த். ஆர்வலரோ விடாமல் ஒரு தட்டு நிறைய கச்சோரிகளை நிரப்பிக் கொடுத்து, ‘இது பிரசாதமுங்க, வேணாம் என்று சொன்னால் விடப்போவதில்லை’ என்றார். ‘இதைத் தூக்கித்தான் போட வேண்டும்’ என்றார் ஆனந்த்.

மைதானத்தின் ஒரு மூலையில் பட்டம் விட்டுக் கொண்டு தீனிகளையும் குளிர்பானங்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள். ‘அண்ணாவைப் பற்றிக் கேள்விப்பட்டு என் நண்பர்களுடன் இங்கு விளையாட வந்தோம்’ என்றான் ஒரு சமோசாவை சுவைத்துக் கொண்டிருந்த தரியா கஞ்சிலிருந்துந்து வந்திருக்கும் 12 வயது சுஹைல்.

அண்ணா ஹசாரே - பானி பூரி முதல் பரதநாட்டிய போர் வரை

2. ‘அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக நடனம் ஆடிய நடிகை சொர்ணமால்யா’

டிசம்பர் 11 அன்று அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடிகை சொர்ணமால்யா குழுவினரின் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடிக்கப்பட்டது. அப்போது ஊழலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் எழுப்பினார்கள்.

3. மும்பையில் மையம் கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே புயல் சென்னையிலும் மழை பெய்விக்க நட்சத்திர பலமாக ரஜினிகாந்த் ஆதரவு

அண்ணா குழுவின் போராளிகள் சென்னையில் ஏற்பாடு செய்யும் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தனது கல்யாண மண்டபத்தை இலவசமாக விடுவதாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

“மண்டபத்தை இலவசமாக வழங்கிய ரஜினிகாந்த் அது நாட்டுக்காகத் தான் செய்யும் தொண்டு என்று தெரிவித்தார்” என்றார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன். “அவர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதை எப்போதுமே வரவேற்கிறோம், ஆனால் அதைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை”

4. ரஜினியின் கல்யாண மண்டபம் என்ற கவர்ச்சி கூட போதுமான கூட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பது நாட்டுப் பற்றுள்ளுவர்களுக்கு கவலை தரும் செய்தி. தென் மாவட்டங்களைச் சேர்ந்த திரைப்படப் புகழ் தமிழ் எழுத்தாளர் தனது குழுவினருடன் கலந்து கொண்டிருந்தால் இன்னும் 20 பேர் தேறியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வேலை நாளாக இருப்பதால் கூட்டம் குறைவு என்று சொல்லப்பட்டாலும் 29 பேர் உண்ணாவிரதம் இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாணவர்கள் கூட்டம் கூட தென்படவில்லை. “மக்கள் ஏன் உண்ணாவிரத மண்டபத்துக்கு வரவில்லை என்று புரியவில்லை. சிறை நிரப்பும் போராட்டத்தை நினைத்து மாணவர்கள் பயந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அவர்களுக்கு நல்லபடியாக எடுத்துச் சொல்லி பங்கேற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்” என்று ஒரு தன்னார்வலர் சொன்னார்.

ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் இணைய தளத்தில் 1,500 பேர் சென்னையிலிருந்து ஆதரவு தெரிவித்து பதிவு செய்திருந்தாலும் மண்டபத்தில் சுமார் 200 பேர்தான் கூடியிருந்தார்கள்.

‘இயக்கத்தின் சென்னை பிரிவுக்கு பிரபலமான தலைவர் ஒருவர் இல்லாததால்தான் கூட்டம் கூடவில்லை’ என்று தமிழ்மணி என்ற திரைப்பட இயக்குனர் கருத்து சொன்னார். ‘முல்லைப் பெரியாறு, கூடன்குளம் போன்ற பிரச்சனைகளில் ஆழ்ந்திருக்கும் மக்கள் ஊழலைப் பற்றி கவலைப்படவில்லை’ என்றும் அவர் நினைக்கிறார்.

‘சென்னையில் சரிவர பிரபலப்படுத்தாதுதான் கூட்டம் வராததற்கு காரணம்’ என்று சில நடுத்தர வயதினர் கருத்து தெரிவித்தார்கள். பிரகாஷ் குலேச்சா ஜெயின் என்ற சமூகஆர்வலர் ‘மும்பையில் அண்ணா உண்ணாவிரதம் பற்றி தெரியும். ஆனால் சென்னையில் எந்த இடம் என்று இன்று காலை வரை தெரிந்திருக்கவில்லை’ என்று குறைப்பட்டார்.

“சென்னையில் மொழி வெறி பெரிதாக இருக்கிறது. அண்ணா இந்தியில் மட்டும் பேசுகிறார். போன வாரம் அவர் வந்து போன பிறகு நகரத்தில் இயக்கம் சூடுபிடித்து விட்டது” என்று உபேந்திரன் என்ற மென்பொருள் ஊழியர் தெரிவித்தார்.

5.  வெளிநாட்டு இந்தியர்களுக்கான விழா நடைபெற இருப்பதை ஒட்டி ஜெய்பூரின் அண்ணா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஊர்வலம் நடத்தவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர் உண்ணாவிரதம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. கலெக்டரேட் சர்கிளுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி கிடைத்தது. மாலையில் நூற்றுக்கணக்கான இளம் ஆதரவாளர்கள் ஸ்டேடஸ் சர்கிள் அருகில் கூடி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.

6. அடுத்ததாக போராட்டத்தின் மையமான மும்பையின் MMRDA மைதானத்தில் சைதன்யர் ஒருவரைப் பார்க்கலாம்.

அண்ணாவின் சமையலறை என்ற பெயரில் 50,000 பேருக்கு சாப்பாடு வழங்குவதற்காக ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து ஜன்சேவா சன்ஸ்தானின் தன்னார்வலர்கள் வந்திருந்தார்கள். 60 சமையல்காரர்கள் நடு இரவு வரை உணவு வழங்கத் தயாராக வேலை செய்கிறார்கள். பூரி, கூட்டு, பருப்பு, சோறு சாப்பாட்டுக்கும், தாளித்த அவல்+தேநீர் சிற்றுண்டிக்கும் வழங்கப்படுகின்றன.

இதே பணியில் சூரத்தைச் சேர்ந்த சிறீ கிரிராஜ் சேவா சமிதியும் ஈடுபட்டிருந்தது. “முதலில் பகவான் கிருஷ்ணனுக்குப் படைத்து விட்டுதான் ஆதரவாளர்களுக்கு வினியோகிக்கிறோம்” என்றார் சுவாமி பரம் சைதன்யா. “பலர் தானம் செயதார்கள். யாரிடமும் பணம் வாங்குவதில்லை. சிலர் எண்ணைய், அரிசி, கோதுமை மாவு கொடுத்தார்கள். கடவுளின் அருளால் பற்றாக்குறையே ஏற்படவில்லை” என்று சுவாமி சைதன்யா தெரிவித்தார். “சமைப்பதற்கு பிராண்டட் சமையல் எண்ணையும் மசாலாக்களும் பயன்படுத்துகிறோம்” என்றும் உறுதியளித்தார்.

சுபாஷ் குப்தா என்ற இன்னொரு தன்னார்வலர் “50,000 பேருக்கு உணவளிக்கத் தேவையான உருளைக்கிழங்குகள், கோதுமை, அரசி கைவசம் இருக்கிறது. தீரத் தீர கொண்டு வருகிறோம்” என்றார்.

‘நான் அண்ணா ஹசாரே’ தொப்பி அணிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தட்டுகளில் – பூரி, உருளைக்கிழங்கு-பட்டாணி, சோறு, பருப்பு என்று கிடைத்த உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டார்கள். மூன்று வேளை உணவு பரிமாறப்பட்டது.

“எல்லோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. காலையிலிருந்து எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கில்லை” என்று ஒரு ஊழியர் தெரிவித்தார். தட்டு நிறைய உணவைக் குவித்து வைத்திருந்த ஒருவர் “சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது, நாங்க வெகு தூரத்திலிருந்து அண்ணாவை ஆதரிக்க வந்திருக்கிறோம். வெயிலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்றார். தனது நண்பர்களுடன் மைதானத்துக்கு வந்திருந்த சங்கேத் மேத்தா என்ற பிசினஸ் மேன், “உணவு மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. அருகில் எதுவும் சாப்பாட்டு கடைகள் இல்லாததால் இது நல்ல ஒரு முயற்சி” என்று பாராட்டினார்.

7. மும்பை மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் ஒரு இளம் போராளியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கொஞ்சம் தள்ளியிருக்கும் புனேவை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுவோம்.

புனேவின் ஆர்பிஐ சதுக்கத்தில் அண்ணாவைப் போன்று வேடமிட்ட டாக்டர் கோபால் பேலே உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். பேலேவுக்கு அண்ணாவுக்கும் 12 ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது. ஹோமியோபதி மருத்துவராக பணி புரியும் பேலே, அண்ணாவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நகரக் கிளையின் தலைவராகவும் இருக்கிறார்.

சென்ற முறை கலந்து கொண்ட 13 பேரிலிருந்து இந்த முறை எண்ணிக்கை 17 பேராக உயர்ந்திருக்கிறது. இளைஞர்களை மையமாகக் கொண்ட இயக்கம் என்று அண்ணா சொல்லியிருந்தாலும் இந்த முறை போராட்டத்தில் ஒரு இளைஞரைக் கூடப் பார்க்க முடியவில்லை.

‘பிற வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் இளைஞர்கள் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று ஊழலுக்கு எதிரான இந்தியா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் லாஞ்சேவர் கருதுகிறார். “அதனால்தான் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களில் பெரும்பகுதியினர் ரிட்டையர்ட் ஆனவர்களாக இருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்க விரும்பிய பல இளைஞர்களை வேறு வேலைகளுக்கு அனுப்பி விட்டதால் அவர்களால் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

8. ஒரு பள்ளி மாணவனே உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறான் மும்பையில்.

அண்ணா ஹசாரேவின் 3 நாட்கள் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள தனது தந்தையுடன் MMRDA மைதானத்துக்கு வந்திருக்கிறான் 8ம் வகுப்பு படிக்கும் பிரதீக்.

தனது பள்ளிப் பையுடனும் மூன்று நாட்களுக்கான மாற்று உடைகளுடனும் உண்ணாவிரத மைதானத்துக்கு வந்திருக்கும் பிரதீக்கின் அப்பா ரமேஷ் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வேலை இழந்தவர். ‘கல்வியை ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று உறுதி செய்யும் கல்வி பெறும் உரிமை சட்டத்தை அரசு இயற்றியிருக்கிறது ஆனால் என் பையன் படிக்கும் பள்ளிக்  கூடம் பள்ளிக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. பள்ளியை நடத்துவது மேலும் மேலும் கஷ்டமாகி வருவதாக பள்ளி நிர்வாகம் சொல்கிறது. ஆனால் ஆங்கில வழி வகுப்புகளை நன்கு நடத்தி வருகிறது’

பிராதிக் மராத்தி வழி வகுப்பில் படிக்கிறான். அவனது அம்மா அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து மாதம் 2,000 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு 3,000 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கிறது. “என்னைப் போன்ற மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு வேண்டும்” என்று சொல்லும் பிராதிக் ஒரு எஞ்சினியர் ஆகி ராணுவத்தில் சேர விரும்புகிறான்.

உண்ணா விரதம் இருப்பதன் மூலம், பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாததால் மற்ற மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது வெளியில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படும் தனது நிலைமைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறான்.

உணவு பாதுகாப்பு சட்டம், உயர்கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் சட்டம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்று வரிசையாக ‘மக்கள் நல்வாழ்வு’ திட்டங்கள் காத்திருப்பதும் அதைப் பற்றி லோக்பாலும் அண்ணா ஹசாரேயும் பேசப் போவதில்லை என்பதும் பிரதீக்குக்கும் அவனது குடும்பத்தினருக்குக்கும் தெரிய வாய்ப்பில்லை!

9. மீண்டும் சென்னையில். ஊழலுக்கு எதிராக பரதநாட்டியம் ஆடிய சுவர்ணமால்யாவின் தங்கை ராதிகா கணேஷ்.

‘மோகன்தாஸ், ஒரு மனிதனின் உண்மை கதை’ என்ற புத்தகத்தைக் கையில் பிடித்த படி நின்றிருந்தார் 24 வயதான ராதிகா கணேஷ். லண்டனின் பிரையன் மூரல் நிறுவனத்தில் வெளித்தொடர்பாளராக வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பி அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் ராதிகா. ‘இந்த அளவிலான புரட்சியை வாழ்க்கையில் நான் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதனால் அதில் பங்கேற்க விரும்புகிறேன்’.

வழக்கறிஞராக வேலை செய்யும் அம்மா மாலினி கணேஷ், அக்கா நடிகை சுவர்ணமால்யா இவர்களின் ஆதரவுடன் வந்திருக்கும் ராதிகா, “இந்தப் போராட்டம் நம் ஒவ்வொருவரது போராட்டம். லண்டனில் நானும் நண்பர்களும் இந்தியாவின் நிகழ்வுகளை கவனித்து வந்தோம். ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கள் விவாதங்களில் தவறாமல் இடம் பிடிக்கும். நண்பர்கள் இயக்கம் வெற்றி பெற விரும்பினார்கள். ஆனால் நான் இன்னொரு படி எடுத்து வைத்து இந்தியாவுக்குத் திரும்பி இயக்கத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்”.

10. கடைசியாக ‘அண்ணா வின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மீது எனக்கு ஏன் அக்கறையில்லை’ என்று சொல்லும் மணீப்பூரைச் சேர்ந்த ரோனித் சிங்கன்பம் என்ற இசையமைப்பாளர்

‘மணிப்பூரில் அரசாங்கத்தின் அட்டகாசங்களுக்கும் போராட்டங்களுக்கும் நடுவில் நான் வளர்ந்தேன். தில்லிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்க்கை எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்று புரிந்தது. இம்பாலுக்கு வெளியில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று புரிந்தது. வடகிழக்கு மாநில மக்கள் இந்தியர்களாகவே நடத்தப்படுவதில்லை.’

அதே போன்ற நிலையில் வாழும் பழங்குடி மக்கள், தலித்துகள், காஷ்மீரிகளின் போராட்டங்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.

‘எனது இசை நான் அறிந்த மனித வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான வாழ்க்கையை அடைந்த பிறகுதான் ஊழல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க முடியும். இந்த நாட்டினால் பழிவாங்கப்படுபவனாக நான் உணர்கிறேன். மணிப்பூரில் வாழும் மக்கள் எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்லப்படலாம் என்று பயத்தில் வாழ்கிறார்கள். அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்த பிறகுதான் பிற பிரச்சனைகளைப் பற்றி நான் கவலைப்பட முடியும். அதனால் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.’

அண்ணா ஹசாரேவின் கீழ் அணி திரளும் பாரத ஞானமரபு சிக்கிமுக்கு சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்து கொடுப்பதோடு நின்று விடுகிறது. மணிப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ அது உத்தரவாதம் அளிப்பதில்லை.

ஆக மொத்தத்தில் இந்த செய்திகளைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? பானி பூரி நன்கு விற்பனையாகிறது! பரத நாட்டியம் அரங்கேறுவதற்கு ஒரு மேடை கிடைத்திருக்கிறது!

ஜெய் அண்ணா ஹசாரே! ஜெய் ஜன்லோக்பால்!

செய்தித் தொகுப்பு: அப்துல்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

இந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.

நியாயமான மாநில உரிமைக்காகவும் தேசிய இன உரிமைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களை பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் இந்திய தேசியத்தையும்  ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்பது பாரதீய ஜனதா, காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. என்றபோதிலும்,  நதிநீர்ப் பங்கீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற மாநிலங்களுக்கிடையிலான  தகராறுகளில் நியாயஅநியாயங்களைப் பரிசீலித்து, இவர்கள் நிலைப்பாடு எடுப்பதில்லை. மாறாக, ஓட்டுப் பொறுக்குவதற்காக மாநிலவெறி, இனவெறியைத் தூண்டுவதுதான் இந்தத் தேசியக் கட்சிகளுடைய மாநிலப் பிரிவுகளின் நடைமுறையாக இருந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்இக்கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமைகள், பிராந்திய நலன்களைக் கைவிட்டுச் சுமுகமாகப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவில் உபதேசிக்கின்றன. அதேநேரத்தில்,  சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் இரு மாநிலப் பிரிவுகளையும் தனித்தனியே தூண்டிவிடுகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்களிடம் நிலவும் தமிழக விரோதப் போக்கை மட்டுமின்றி, அவர்களால் விதந்தோதப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான  சந்தர்ப்பவாதத்தையும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்திய தேசியத்தையே தனது பார்வையாகக் கொண்ட அல்லது அதற்கு விலைபோய்விட்ட ஊடகங்களும், “தேசிய மொழியாக” ஆங்கிலத்தை வரித்துக் கொண்டுள்ள ஊடகங்களும் அந்தந்த மாநிலங்களுக்குத் தகுந்தாற்போன்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் பத்திரிகை நடத்தும் இந்துவும் எக்ஸ்பிரசும், ஏன், சன் தொலைக்காட்சி குழுமமும், இடத்துக்கும் மொழிக்கும் ஏற்ப எழுதியும் பேசியும், தேசியவாத சமரச நாடகமாடுகின்றன. இங்கே தமிழகத்துக்கு ஆதரவாக சண்டப்பிரசண்டம் செய்யும் தினமணி, இந்தியாடுடேயின் முதலாளிகள், கேரளத்தில் வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலையாள இந்தியா டுடேயில் வேறு மாதிரி எழுதுகின்றனர்.  அந்தந்த மாநில ஆசிரியர் குழுக்களின் “சுதந்திரம்’’, “உரிமை” அல்லது சமரசவாதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.

காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல; தேசியவாதத்தை வரித்துக் கொண்டுள்ள போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுச் சண்டை மற்றும் ஊழல் அரசியலில் மூழ்கி நாறும் போலி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன்தான் கேரளத்தில் இனவெறித் தலைவராக முன்னின்று தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு அரசியல்  ஆதாயம் அடைய எத்தனிக்கிறார்.  கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையில் தமிழர் எதிர்ப்பு தரும் ஆதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்அச்சுதானந்தனின் இனவெறி நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, மத்தியத் தலைமை. தமிழகத்திலுள்ள போலி மார்க்சிஸ்ட் தலைமையோ துரோகத்தனமான மௌனம் சாதிக்கிறது. இங்கே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளும் இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையோ, அச்சுதானந்தனின் தமிழர் எதிர்ப்பு இனவெறிப் பிரச்சாரம் குறித்தும், அதற்கு அங்குள்ள வலது, இடது  போலிகளின் ஆதரவு குறித்தும் மூடிமறைத்துக் கொண்டே  தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகின்றன.

1970களின் இறுதியில் இடுக்கி அணை  கட்டப்பட்ட பிறகுதான் இப்பிரச்சினை தொடங்கியது. அந்த அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், அதன் முழுத்திறனில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்குத் திருப்பி விட வேண்டும் என்பதற்காகவே, “மலையாள மனோரமா” நாளேட்டுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு புரளியை கிளப்பிவிட்டார் அச்சுதானந்தன். 1979இல் நடந்த நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதென்றும், அது உடைந்தால் 5 மாவட்டங்களில் பேரழிவும் 60 இலட்சம் மலையாளிகளின் உயிருக்குப் பேராபத்தும் நேரிடும் என்ற பீதியை அச்சுதானந்தன் தலைமையிலான இனவெறிக் கும்பல் கிளப்பி வருகிறது.

இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கிளப்பப்பட்ட  பீதி,  இடுக்கி அணைக்கான நீர்த் தேவைக்காக கேரளம் கொடுத்து வந்த நிர்ப்பந்தம் ஆகியவற்றை முகாந்திரமாகக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியும் அதன் மலையாள அதிகாரிகளும் சதித்தனமாக கேரளாவுக்குப் பல சலுகைகளைத் தந்தனர். அணையின் பாதுகாப்பு பொறுப்பு கேரள அரசுக்கு அளிக்கப்பட்டது. நீர்த்தேக்கப் பகுதிக்கான நில வாடகை, மின் உற்பத்திக்கான குத்தகை ஆகியவற்றை உயர்த்தவும், இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவதும் ஒப்பந்தமானது. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டது . நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால், கம்பம் பள்ளத்தாக்கின் 40 சதவீத நீர்ப்பாசனமும் 40 சதவீத விவசாய உற்பத்தியும் குறைந்தன.  இவ்வளவு சலுகைகளைப் பெற்ற பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையையும் அதன் ஒரு பகுதியான பேபி அணையையும் வலுப்படுத்திய பிறகு, வல்லுநர்கள் ஆய்வு செய்து பரிந்துரைத்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கு ஒப்புக் கொண்டது, கேரள அரசு.

இதன்படி, தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னும், போலி மார்க்சிஸ்டுகள் மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசுகளும் ஊடகங்களும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தைத்தான் தொடர்ந்து வருகின்றனர். பேபி அணையைப் பலப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகளைத் தடுத்தும் வந்தனர். கேரள திரையுலகைச் சேர்ந்த கதாசிரியர் வாசுதேவன் நாயர் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய இனவெறிப் போக்கைக் கண்டித்திருக்கின்றனர். அணையின் உறுதிப்பாடு குறித்த வல்லுநர் குழுவின் ஆய்வு முடிவுகளை ஏற்ற உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்ட பிறகு 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும், தமிழகத்துக்கு உரிமை வழங்கியது. அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்ததோடு, போலி மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன் தலைமையிலான கேரள கூட்டணி அரசு அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. “முல்லைப் பெரியாறு உட்பட கேரளாவில் உள்ள 22 அணைகளின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் செயல்பாட்டில் வேறு எந்த அரசும் நீதிமன்றங்களும் தலையிடவோ  குறுக்கிடவோ முடியாது” என்று கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதோடு, உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக முல்லைப் பெரியாறு மற்றும் அதன் பேபி அணையை வலுப்படுத்தவும், அவற்றை நிர்வகிக்கவும் தமிழகத்துக்குள்ள உரிமையைச் செயல்படுத்தும் தமிழக அதிகாரிகளையும் தாக்கித் தடுத்தது.

கேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பா.ஜ.க. முதலிய இந்திய தேசியவாதக் கட்சிகள் அச்சுதானந்தன் அரசின் இந்த அடாவடிகளுக்கு ஒத்துழைத்து ஆதரவளித்தன. உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவை கிடப்பில் போட்டு, அதன் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்த கேரள அரசைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முன்வராமல் சமரச நாடகமாடத் தொடங்கியது.

கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; குறிப்பாக, இரு மாநில ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் 2006ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கேரள அரசும் வழக்குத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பைப் புதைகுழியில் போட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக வழக்குகள் வந்ததைப் போல விசாரணையைத் தொடங்கியது. அதன் பரிந்துரையின்படி நடந்த இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை முறிந்தது. அதன் பிறகு, இரு மாநில  மத்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரத்துடன் கூடிய உயர்மட்டக் குழுவை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்தது, உச்ச நீதிமன்றம். அது, அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. மொத்தத்தில், மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சக்கரத்தைச் சுற்றவிட்டது.

இதற்கிடையே அணை வலுவிழந்துவிட்டது என்று காட்டும் நோக்கில் மத்திய இராணுவ அமைச்சரும் கேரளத்தைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோணி மூலம் கடற்படைக் குழு, ரூர்கி ஐ.ஐ.டி.யிலிருந்து நில அதிர்ச்சி பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு ஆகியவற்றை வைத்துத்  தனக்குச் சாதகமான ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை வைத்து கேரள அரசு ஒருபுறம் வழக்காடியது. மறுபுறம், குறும்படங்கள், பிரச்சாரங்கள் மூலம் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என பீதி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழு அறிக்கையும் தீர்ப்பும் தனக்குச் சாதகமாக இராது என்ற அச்சம், வரவிருக்கும் பிரவம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை காரணமாக இந்தப் பொய்ப்பிரச்சாரம் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ‘தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு’ என்ற  நயவஞ்சகமான நோக்கம் கொண்ட ஒரு முழக்கத்தை வைத்துப் புதிய அணை கட்டும் திட்டம் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பெருமளவில் உள்ள தமது இனத்தவர்களை வைத்து புது அணைக்கான ஆதரவும் திரட்டப்படுகிறது.

இவர்களின் பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரம் காரணமாக வெறிபிடித்த அணிகள், கேரளத்துக்குத் தோட்ட வேலை செய்யப் போன தமிழகத் தொழிலாளர்களைத் தாக்கி, பெண்களைச் சிறைபிடித்து அவமானப்படுத்தியிருக்கின்றனர். சபரிமலைக்குப் போன பக்தர்களையும் தாக்கியுள்ளனர். காங்கிரசின் கேரள அமைச்சர் உண்ணாவிரதமிருந்து மேலும் வெறியேற்றினார். “தண்ணீர் கொடுத்த கேரள மக்களுக்கு தமிழர்கள் துரோகம் செய்து விட்டனர் ” என்று அச்சுதானந்தன் நஞ்சு கக்கினார். காங்கிரசு, பா.ஜ.க. வினர் அணையைத் தாக்கவும் செய்தனர்.

இவற்றின் காரணமாகக் கொதித்துப்போன தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழக போலீசின் வடநாட்டு அதிகாரிகள் தடுத்தும் தடியடி நடத்தியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. அன்றாடம் பல ஆயிரம் மக்கள் கேரள எல்லை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். மூன்று வாரங்களுக்கு மேலாகப் போராட்டம் நீடிக்கிறது. பல நாட்கள் எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கேரளத்தில் காய்கறி விலைகள் உயர்ந்தன. தமிழக மக்களுடைய கொதிப்பின் சூடு தெரியத்தொடங்கியவுடனே, சபரிமலை பக்தர்களை வரவேற்பது போன்ற நாடகங்களை கேரள அரசு அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்அதேநேரத்தில் அணையின் உறுதியைச்  சோதிப்பதற்காக தற்போது வந்திருந்த உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடமும் கேரள அதிகாரிகள் அடாவடித்தனம் செய்திருக்கின்றனர். தமக்கு சாதகமான முடிவு வராத வரை, எத்தகைய நடுநிலை வல்லுநர்களின் முடிவுக்கோ, தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட முடியாது என்பதே கேரள அரசின் நிலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 1979இல் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையைத் தகர்ப்பதன் மூலம், வனவளமிக்க அப்பகுதியைத் தமது சுற்றுலாக் கொள்ளைக்கு விழுங்கிக் கொள்ள முனைகிறார்கள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள். சொல்லப்போனால், பழைமையான அரை வட்ட வடிவிலான 500 மீட்டருக்கும் மேல் உயரமான இடுக்கி அணைதான் ஒப்பீட்டளவில் அபாயகரமானதும், அவர்கள் அச்சுறுத்துவதைப் போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் உடையக்கூடியதும் ஆகும். எனினும், இந்த உண்மைகள் எதுவும் காதில் ஏறாத அளவுக்கு கேரள மக்கள் மத்தியில் திட்டமிட்டே பீதி பரப்பப்பட்டிருக்கிறது.

ஏறக்குறைய 60 இலட்சம் மலையாளிகள் தமிழகத்திலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கேரளத்திலும் வாழ்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் ஆகப்பெரும்பான்மையினர் தமிழ் மக்களே. வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியான  பொதுநலன்களையும் நீண்ட எல்லையையும் கொண்டுள்ள இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு ரீதியில் தீர்த்துக் கொள்ளக் கூடியதே. இதனைப் பகைமையானதாகவும் நிரந்தரமானதாகவும் மாற்றுவதற்கு இரு இனங்களிலும் உள்ள இனவாதச் சக்திகள் மேற்கொள்ளும் எத்தணிப்புகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.

தமிழகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுதான் பெரியாறு என்ற போதிலும், இந்தத் தண்ணீர் ‘கேரளம் தமிழகத்துக்குக் கொடுக்கும் தானம்’ என்ற கண்ணோட்டம் அச்சுதானந்தன் உள்ளிட்ட மலையாள இனவெறியர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதற்கும், அணையை உடைப்போம் என்று மிரட்டுவதற்கும் இந்தக் கருத்துதான் அடிப்படை.  இதனை முறியடிக்க வேண்டுமானால் உணவு, காய்கறி, இறைச்சி, பால் ஆகிய அனைத்துக்கும் கேரளம் தமிழகத்தைச் சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்ய கேரளத்துக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கேரளத்துடனான எல்லைகள் அனைத்தையும் தமிழக அரசே மூடவேண்டும். இப்பிரச்சினையில் நயவஞ்சக நாடகம் நடத்துவதற்கு திமுக, அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அனைத்திந்திய அரசமைப்பின் அதிகாரத்துக்கு கேரளம் கட்டுப்படாதபோது, தமிழகமும் கட்டுப்படக்கூடாது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தமிழக மக்கள் சகித்துத்தான் தீரவேண்டும். இல்லையேல், தமிழகம் பாலைவனமாகும். இத்தகைய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தமிழகம் நீதியைப் பெற முடியாது.

2006 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரளத்துக்கு எதிரான பொருளாதாரத் தடை மட்டுமின்றி, மைய அரசின் அதிகாரத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளையும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும்.  நிபந்தனையற்ற முறையில் இத்தீர்ப்பினை அமல்படுத்த கேரளம் சம்மதித்தால், கேரள மக்களிடம் பரப்பப்பட்டிருக்கும் பீதியை அகற்றத் தமிழகம் ஒத்துழைக்கலாம். இந்திய அல்லது சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு அணையின் வலிமையைச் சோதித்து உறுதி செய்து கொள்ள அனுமதிக்கலாம். ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுதான் நமது நோக்கம். கேரள மக்களின் உயிரைப் பலியிட்டு தம் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை. அது கேரள இனவெறியர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம்.

காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! -

புதிய ஜனநாயகம் ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்  மறியல் போராட்டங்கள்!
  2. மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல்: பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி!
  3. முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
  4. தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன்!முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
  5. புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
  6. “காமவெறி பயங்கரவாத போலீசைத் தண்டிப்போம்!”புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!!
  7. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
  8. “கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்!”
  9. ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
  10. கருத்துரிமைக்குக் கல்லறை!
  11. சில்லறை வர்த்தகத்தில் அந்திய முதலீடு:இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
  12. மாருதி சுசுகி, வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் கற்றுத்தரும் பாடம்:“புரட்சிகர அரசியலே தீர்வு!” பு.ஜ.தொ.மு.வின் அரங்கக் கூட்டங்கள்
  13. விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்
  14. மாணவர் விடுதியா?அரசின் வதைமுகாமா?பு.மா.இ.மு. தலைமையில் மாணவர்களின் மறியல் போராட்டம்!!
  15. “பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!”
  16. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்களின் போராட்டம்!!
  17. இந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்!
  18. குஜராத்: மோடியின் கொலைக்களம்!

புதிய ஜனநாயகம் ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், “தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.” என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!இதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை  மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.  அதில், “சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன் பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்குக்” காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, “தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய  இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தது.

கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனம் ஒருபுறமிருக்க, பாக். நீரிணையிலும் கச்சத் தீவையொட்டியுள்ள கடற்பகுதியிலும் காலங்காலமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க உரிமையை மறுப்பதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது என்பதைத்தான் இவ்வாக்குமூலம் எடுத்துக் காட்டுகிறது.  சிங்களக் கடற்படை இந்தியாவைப் பார்த்து, “நண்பேன்டா” எனக் குத்தாட்டம் போடுவது நமது மனக்கண் முன் விரிகிறது.

தமிழக  மீனவர்கள் இந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறக் கோரித் தமிழகக் கடலோரப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்தும்;  தமிழக அரசு இந்த வாக்குமூலத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்தும் கடலோரக் காவல் படை இவ்வழக்கு தொடர்பாக புதிய வாக்குமூலமொன்றை டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்தது.

கடலோரக் காவல்படை உண்மையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டு புதிய வாக்குமூலப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை.  தமிழகத்தையொட்டியுள்ள இந்திய  இலங்கை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற அதனின் அடாவடித்தனமான ஆலோசனையை மட்டும் நீக்கிவிட்டு, தமிழக மீனவர்களை கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தீய எண்ணத்தோடுதான் அப்படையின் புதிய வாக்குமூலப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சிங்களக் கடற்படை தங்களைத் தாக்கும்பொழுது, அது பற்றி உடனடியாகத் தங்களிடமுள்ள வீ.எச்.எஃப். என்ற தகவல் தொடர்புக் கருவி மூலம் கடலோரக் காவல்படைக்குத் தமிழக மீனவர்கள் தகவல் கொடுப்பதில்லை.  ஆனால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள் எனக் கூறும் காவல்படை, கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபருக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 17,102 படகுகள் எல்லைதாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்திருப்பதாக சிங்கள அரசு கூறி  வருவதையே தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறது.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக் கொள்வோம்.  இக்‘குற்றம்’ பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது?  இந்திய  இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இதுவரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே?  தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் ‘ஆதாரங்கள்’ குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.

சிங்களக் கடற்படை எல்லை தாண்டிவந்து தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு.  சிங்களக் கடற்படையினரின் அக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கத்தோடுதான் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதாக ஊதிப் பெருக்குகிறது, கடலோரக் காவல்படை.  1974  இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்குத் தடையேதும் கிடையாது என ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இன்னொருபுறம் அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதை எல்லைத் தாண்டிச் செல்லும் கிரிமினல் குற்றமாகக் காட்ட முயலுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனமாகும்.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.  இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு,  தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழி போடுகிறது, கடலோரக் காவல்படை.  தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்?

500  க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குத் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் காரணமென்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், அதாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதன் மூலம்தான் இப்படுகொலைகளைத் தடுக்க முடியும் என்ற இந்திய அரசின் வாதம், அதன் நயவஞ்சகத்தை மட்டுமல்ல, இந்திய ஆளும் கும்பலின் தமிழின வெறுப்பையும் எடுத்துக் காட்டிவிட்டது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012